(க.கிஷாந்தன்)
பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக 11 பேர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பதுளை, பஸ்ஸர பிரதேசத்தில் வெல்கொல்ல பாடசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரண்டு வீடுகள் மண் சரிவினால் முழுமையாக சேதமமைந்துள்ளன.
மண் சரிவு ஏற்பட நொடி பொழுதிற்கு முன்னர் அந்த வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் வெளியேற்றியமையினால் உயிர் தப்பியுள்ளனர்.
வீடுகள் இரண்டும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய பிரதேச செயலகத்தின் கண்கானிப்பின் கீழ் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்த குடும்பத்தில் அங்கிருந்து வெளியேறி நொடிப்பொழுதுகளில் பாரிய மண் சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் இரண்டு வீடுகளும் முழுமையான சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பிரதேச செயலகம் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment
Post a Comment