வரலாற்று வெற்றியை தனதாக்கியது,மொட்டு


இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரலாற்று ரீதியிலான வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

68 லட்சத்து 53 ஆயிரத்து 690 வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

225 ஆசனங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுகொள்ளும் நோக்குடன் களமிறங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அதனை அண்மித்த வாக்குகளை பெற்றுகொள்ள முடிந்துள்ளது.

150 ஆசனங்களை பெற்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுகொள்ள முடியும் என்ற நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 145 ஆசனங்கள் கிடைத்துள்ளன.


    எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 27 லட்சத்து 71 ஆயிரத்து 980 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

    இதன்படி, ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

    தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களை தனதாக்கிக் கொண்டது.

    தேசிய மக்கள் சக்திக்கு 4 லட்சத்து 45 ஆயிரத்து 958 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, அந்த கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

    இலங்கை தமிழரசு கட்சி 3 லட்சத்து 27 ஆயிரத்து 168 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன், தமிழரசு கட்சிக்கு 10 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

    ரணில் விக்ரமசிங்க
    படக்குறிப்பு,

    ரணில் விக்ரமசிங்க

    முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இந்த முறை தேர்தலில் என்றும் இல்லாதவாறான தோல்வியை சந்தித்தது.

    இதன்படி, 2 லட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை மாத்திரமே பெற்றுகொண்டுள்ளது.

    ஏனைய கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்:

    ஜாதிக்க ஜன பலவேகே - 2

    ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2

    தேசிய காங்கிரஸ் - 1

    ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1

    அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1

    தமிழ் மக்கள் தேசியக் கட்சி - 1

    தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 1

    ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1

    முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு - 1