#இந்தியாவில் 1 லட்சம் மரணங்கள்


 


இந்தியாவில் கொரோனா வைரஸ் மரணங்கள் ஒரு லட்சத்தை எட்டவுள்ளது. உலகளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு பிறகு கொரோனா மரணங்களில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி காலை நிலவரப்படி இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் காட்டுகின்றன.

செப்டம்பர் மாதம்தான் மிகவும் மோசமானதாக இருந்தது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,100 இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர்.

ஒரு சில மாநிலங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க, இந்தியா முழுக்க கொரோனாவின் வீரியம் குறையவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.