Showing posts with label Accident. Show all posts

 


திருகோணமலை - ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Update : 01.02.2025 - 12.50 pm 

---------------

திருகோணமலை - ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று(01) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேனி

 

கனகராசா சரவணன

மட்டக்களப்பிலிருந்து  தமிழரசு கட்சியின்  மறைந்த தலைவர்  மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்- ஜனா பயணித்த வாகனம் இன்று 1/2/2025 திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருகோணமலை உப்புவெளி  வீதியில் சர்வோதயத்துக்கு முன் உள்ள பாதைசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வாகனத்தை நிறுத்திய போது பின்னால் வந்த அதிக வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்து ,நிறுத்தி வைக்கப்பட்ட வேனில் பின் பக்கம் மோதி விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயம் அடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இது தொடர்பாக உப்புவெளி போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 



ஹபரணை - மின்னேரியா வீதியில் 7ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த நபர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Rep/Saajahaan.

சற்று முன்னர் சேருவில - தங்கநகரின் திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் தரித்து நின்ற சிறிய பட்டா ரக வாகனத்துடன் காத்தாங்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த வேன் மோதி விபத்து

 


வருடம் ஆரம்பித்து முதல் 15 நாட்களில் 65 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், இவ்விபத்துக்களால் 68 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வீதி விபத்துக்களால் 99 பேர் உயிரிழந்துள்ளனர்.


அதேபோல், 2023 ஆம் ஆண்டில், முதல் 15 நாட்களில் 105 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.




கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணர் சங்க தலைவர் உட்பட 3 மாணவர்களுடன் 4 பேர் படுகாயம் பஸ்சாரதி கைது




(கனகராசா சரவணன்)




வந்தாறுமூலை கிழக்;கு பல்கலைக்கழத்தின் முன்னாள் உள்ள பாதை கடக்கும் கோட்டில் வெளளைக் கோட்டில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 10.45 மணியளவில்இடம்பெற்ற பஸ்வண்டி மற்றும் முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்ததுடன் பஸ்சாரதியை கைது செய்துள்ளதாக ஏறாவூ10ர் பொலிசார் தெரிவித்தனர் .



குறித்த பல்கலைக்கழக்தில் கல்விகற்றுவரும் 3 மாணவர்கள் சம்பவதினமான நேற்று இரவு 10.45 மணியளவில் செங்கலடியில் இருந்;து பல்கலைக்கழக விடுதிக்கு முச்சக்கரவண்;டியில் பிரயாணித்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் உள்ள வீதியை கடக்கும்  வெள்ளைக்கோடு பகுதியில் எதிர்பக்கமாக விடுதி பக்கம் முச்சக்கரவண்டியை திருப்பும் போது கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டி முச்சக்கரவண்டியுடன் மோதியதையடுத்து முச்சக்கரவண்டியில் பிரயாணித்த பல்கலைக்கழக மாணவா சங்க தலைவர் உட்பட 3 பேருடன் 4 பேர் படுகாயமடைந்தனர்.



இதனையடுத்து படுகாயமடைந்த அவர்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன்  பஸ்வண்டி சாரதியை கைது செய்தனர்.



இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.



Wasim Nimsi

பொத்துவில் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பொத்துவில் பயணிகளுடன் சென்ற வேன் குஞ்சான் ஆற்றுப் பாலத்திலிருந்து வடக்கு பக்கமாக பிரதான வீதியில் விபத்துக்குள்ளானது.


இதன் போது வாகனத்தில் இருந்த பயணிகள் சிறிய காயங்களுடன் மீட்க்கப்பட்டதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் வாகன மீட்பு பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

 



கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



 ( வி.ரி. சகாதேவராஜா)


 வீதியில் முச்சக்கர வண்டியில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார் .

இச் சம்பவம் பொத்து விலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் இன்று (9) வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளது .

விபத்தில் பலியானவர் கோமாரியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மென்டிஸ்அப்பு விஜயஸ்ரீ ( வயது 71 ) என்பவராவார்.

பல வருடங்களாக அவர் பிரதான வீதியில் கோமாரி மகா வித்தியாலயத்திற்கும் தபாலகத்திற்கும் இடையேயுள்ள மரத்தின் கீழ் முச்சக்கர வண்டியில் நிற்பது வழக்கம். செருப்பு தைப்பதும் குடை திருத்துவதும் தொழிலாக கொண்டிருந்தவர்.

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது..

 இரண்டு கால்களும் இயலாத மாற்றுத் திறனாளியான அவர் இன்று முச்சக்கர வண்டியில் வீட்டிலிருந்து வந்து பிரதான வீதியில் கடை ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு செல்கின்ற பொழுது பின்னால்  வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது மோதியது .
அக் கணத்தில் அவர் தூக்கி எறியப்பட்டார். அந்த இடத்திலேயே அவர் மரணமானார்.

சம்பவ இடத்திற்கு பொத்துவில் போலீசார் விரைந்தனர். மோதிய வர்  அம்புலன்சில் அனுப்பப்பட்டார்.
 பலியானவர் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகளை பொத்துவில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

செய்தி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை சட்டத்தரணி சசிராஜீக்கு நிறைவுற்றுள்ளது. இவர் நேற்றைய தினம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.இவரை இன்றைய தினம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முந்திய செய்தி.

Rep/Mohammed Jahaan, SriHaran.

🔴திங்களன்று { 2025.01.06 } மாலை தம்பட்டையில்  விபத்தில் சிக்கி கடுங்காயமுற்ற  அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் தம்பிலுவிலைச் சேர்ந்த திடீர் மரண விசாரணை அதிகாரியும் சட்டத்தரணியுமான  சசிராஜ் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவர் CT ஸ்கேன் பரிசோதனைகளுக்கான கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கு இன்றிரவ 10.15 இற்கு  மாற்றப்பட்டுள்ளார்.

 இவர் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிள் தம்பட்டை பகுதியில் வைத்து கெண்டர் ஒன்றுடன் மோதியதில் விபத்தூக்குள்ளாகியது.



ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது.


பஸ் சாலையை விட்டு விலகி அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது.


இவ்விபத்தின் போது பஸ்ஸில் 20 முதல் 25 பேர் வரை பயணித்துள்ளனர், அவர்கள் அனைவரும் காயமடைந்து திக் ஓயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


வி.சுகிர்தகுமார், யதுர்சன்


 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூளாவடி சந்திக்கு அன்மித்த பிரதான வீதியில் இன்று(15) காலை டொல்பின்ரக வான் தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்தில் இருந்து காஞ்சிரங்குடா பிரதேசத்தை நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானதுடன் இவ்விபத்தில் தெய்வாதீனமாக உயிர் ஆபத்து இடம்பெறவில்லை.
குறித்த வாகனத்தில் பயணித்த தேவகிராமத்தின் பங்குத்தந்தை ஒருவரும் இரு அருட்சகோதரிகளும் இருந்துள்ளதாக அறிய முடிகின்றது.
அலிக்கம்பை தேவகிராமத்தில் இருந்து திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெறுகின்ற ஆராதனை வழிபாட்டிற்காக சென்று கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தின் குறுக்காக சென்ற மோட்டார் சைக்கிளுக்;கு வழிவிட எத்தணித்த நேரம் குறித்த வாகனத்தில் டயர் காற்றிழந்து வெடித்த காரணத்தினால் வான் குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 அக்கரைப்பற்று  யூனியன் வீதியினால் வந்த கார் பிரதான வீதியைக் கடக்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காரின் பின்புறத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது


 சற்றுமுன் பெரிய கல்லாற்று பாலத்தடியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன

இதில் உயிராபத்துக்கள் எதுவும் இல்லை என தகவல்.

 



அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



. வாழைச்சேனை மியான்குளத்தில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 3 பேர் படுகாயம் லொறி சாரதி கைது-- 



(கனகராசா சரவணன்)


வாழைச்சேனை பொலனறுவை வீதியிலுள்ள மியான்குளம் பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் சேற்று புதன்கிழமை 94) இரவு இடம்பெற்றுள்ளதுடன் லொறி சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.



புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய  கனகசூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணிக்கு பொலனறுவை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த லொறியும் வாழைச்சேனையில் இருந்து புனானை நோக்கி பிரயாணித்த முச்சக்கரவண்டியும் மியான்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மச்சக்கரவண்டியில் பிரயாணித்த 65 வயதுடைய ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.



இந்த விபத்தில் புனானை ஓமனியாமடு பிரதேச்தைச்சேர்ந்த எம.வினோதன், கணவதிப்பிள்ளை யோஹனா மற்றும் ரிதிதென்னையைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான உசனார் மஜிதீன் ஆகியோர் படுகாயமடைந்த  நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்  ஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த லொறிசாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 



இதில் கைது செய்த சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

 



ஜே.கே.யதுர்ஷன்


விநாயகபுரம் பிரதான வீதியில் வாகன விபத்து ..... 


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில்  கார் விபத்து இடம்பெற்றுள்ளது.... 


குறித்த விபத்தானது  2024/12/05 ஆதாவது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது குறித்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....


மேலுக் இவ் விபத்தானத அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் நோக்கி பயத்த சொகுசு கார் ஒன்று விநாயகபுரம் பிரதான வீதியில் தொலைதொடர்பு மின் கம்மத்தில் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது.....இவ் விபத்தில் குறித்த கார் சேதமடைந்ததுடன் அவ் பகுதியில் கடைஒன்றில்  நிறுத்தி வைக்கப்பட்டிந்த மோட்டார் சைகிள்களும் இவ் விபத்தில் சேதடைந்துள்ளது....


இவ் விபத்து பற்றிய மேதிக விசாரனையை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்....


ஜே.கே.யதுர்ஷன்




பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்  உயிரிழந்துள்ளனர்.

 அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த வியாழக்கிழமை(21)  இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில்   பாடசாலை மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.சம்பவ தினமன்று  வேகமாக  நண்பர்களுடன்  மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில்  அம்மாணவன் கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு ஸ்தலத்தில் உயிரிழந்திருந்தார்.இவ்வாறு உயிரிழந்தவர் நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும்  18 வயதுடைய பாரூக் முஹம்மது சீத்  என அடையாளம் காணப்பட்டார்.அத்துடன் இவரது சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு திடிர் மரண விசாரணை அதிகாரியின் பிரசன்னத்துடன் மரண விசாரணை இடம்பெற்று  உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.இது தவிர சடலத்தின் பாகங்கள்  மேலதிக விசாரணைக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு   அனுப்பி வைக்கப்பட்டன.

இது தவிர சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (21) மாலை வீதியில் சென்ற மாடு ஒன்றுடன்  மோதலை தவிர்ப்பதற்காக   மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த  23 வயது மதிக்கத்தக்க மதன் பவி லக்சான் இளைஞன் அருகில் இருந்த  மின்கம்பத்துடன் மோதி  படு காயமடைந்தார்.பின்னர் சிகிச்சைக்காக  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்   சிகிச்சை பலனின்றி  அங்கு உயிரிழந்திருந்தார்.கிராம சேவகரது மகனான இவ்விளைஞன்  வீடு திரும்பும் வழியில்  இந்த விபத்த்திற்கு முகம் கொடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலத்தை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்   பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்டதுடன்  உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.பின்னர் குறித்த பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் இன்று  ஒப்படைக்கப்பட்டது. சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் பதுளை, டன்ஹிந்தவில் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்

 


திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் மற்றும் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.