கணிணி தொகுதி அன்பளிப்பு
பாறுக் ஷிஹான்
இரு தினங்களும் சராசரி 500 க்கு மேற் பட்ட பயனாளிகள் கலந்து பயன் பெற்றார்கள். 100 க்கு மேற்பட்ட கண்ணில் வெண்புரை உள்ள நோயாளிகள் அடையாளம் காணப் பட்டு மேலதிக சிகிச்சைக்கான உதவிகள் வழங்கப் பட இருக்கிறது. 200 க்கு மேட்பட்ட்டவர்களுக்கு கண்ணாடி வழங்கப் பட இருக்கிறது
திருகோணமலை ரோட்டரி கழக அங்கதவுர்களும் மற்றும் உதவியாளர்களும் பங்கு பற்றினார்கள் இது மாதிரியான இலவச கண் சிகிச்சை முகாம் சமீபத்தில் இப் பகுதியில் நடத்தப படவில்லை என பங்கு பற்றியவர்கள் கூறினார்கள்
நேற்றிரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை உள்ள உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சிகள் காணப்படுவதாக பயணிகளால் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.
இதன்போது, சுகாதார பிரிவினரால் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்பட்ட, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை, சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில் உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சிகள் காணப்படுவதாக சுகாதார பிரிவினரால் தெரிவிக்கப்பட்டன..
கண்டுபிடிக்கப்பட்ட நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
நூருல் ஹுதா உமர்
தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் தேசிய நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சிக்கு அமைவாக டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும், நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலில் இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில் இடம்பெற்றது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பைசால் முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நிர்வாகத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள், சுகாதார ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய நிர்வாக பிரதேசங்களில் இடம்பெற்ற கள ஆய்வு விஜயத்தின் போது டெங்கு பரவும் இடங்கள் அழிக்கப்பட்டதுடன், காணி உரிமையாளர்களுக்கு ஆலோசனைகளும், சிலருக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்ட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர், காலநிலை மாற்றம் காரணமாக மழைகாலம் ஆரம்பமாக உள்ளதனால் நுளம்பு பெருகுவதனை குறைக்கவும், எங்கள் பகுதியில் டெங்கு பரவுவதைத் தடுக்கவும், தினமும் காலை குறைந்தது 10 நிமிடங்கள் உங்கள் சுற்றுச்சூழலைப் நுளம்பு பெருகும் இடங்களை அகற்றி டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மேலும் பொதுமக்களாகிய அனைவரும் எமது பிரதேசத்திலிருந்து டெங்கை ஒழிக்க உதவுமாறும் தனியே சுகாதாரத் துறையினரால் மாத்திரம் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை சகலரும் அறிவீர். பொதுமக்கள் தமது வீடு வளவுகளில் தினமும் நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்கள் மற்றும் இடங்களை அகற்றுங்கள் அல்லது நீர் தேங்கி நிற்காதவாறு கவனியுங்கள் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் கேட்டுக்கொண்டார்.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் இஸ்ஸதீன் நியமனம்!
அபு அலா -
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக பொத்துவிலைச் சேர்ந்த
வைத்தியர் அப்துல் மஜீத் முஹம்மது இஸ்ஸதீன் (MBBS) தனது கடமைகளை இன்று (14) பொறுப்பேற்றுக்கொண்டார்.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பதவி கடந்த பல மாதங்களாக வெற்றிடமாக
காணப்பட்டு வந்தது. இந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில் அவருக்கான இடமாற்றக் கடிதத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசல குணவர்தனவினால் வழங்கி வைக்கப்பட்டு இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்துல் மஜீத் முஹம்மது இஸ்ஸதீன் 1998 பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து மருத்துவராக வெளியேறிய இவர் 1998 - 2002 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றிவந்த நிலையில், 2002–2004 நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு
மாவட்ட வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2004 – 2008 பொத்துவில் மாவட்ட வைத்தியசாலைக்கு மாவட்ட வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டு 2008 - 2010
கோமாரி CDMH வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரியாகவும், 2010–2012 பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், 2013–2017 பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவும், 2018–2019 பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், 2019–2020 திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.
பின்னர் 2021-2022 பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த நிலையில், 2023.02.14 ஆம் திகதி அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
வைத்தியர் அப்துல் மஜீத் முஹம்மது இஸ்ஸதீன் சமூக சேவைகள் அமைப்பு, லயன்ஸ் கிளப் தலைவர், பொத்துவில் அருகம்பை புனர்வாழ்வு அதிகாரி, MLYF அமைப்பின் ஆலோசகர் போன்ற பல பதவிகளில் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.