Showing posts with label Slider.Sports. Show all posts


 இந்தியாவில் மின்சார வாகனங்கள் தற்போது பிரபலமடைந்து வருகின்றனவா? இந்த மாற்றம் அதிகரித்து வருவதை பல விஷயங்கள் உணர்த்துகின்றன.


2026ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில், மின்சாரக் கார்களின் சந்தை 25 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே வேளையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்கள் 5 சதவீதம் என்ற முக்கிய எல்லையைத் தாண்டின.


"இந்த மாற்றம் இனி வெறும் திசை சார்ந்தது மட்டுமல்ல, மாறாக அது கணிசமானது" என்று இந்தியாவின் வாகன விநியோகஸ்தர்கள் சங்கம் சமீபத்தில் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


குறிப்பாக பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிக விலையுள்ள பெரிய ரகக் கார்களில் மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.


விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு 10 வாகனங்களிலும் ஒன்று இப்போது மின்சார வாகனமாக உள்ளது. மின்சார மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஏற்கனவே அவற்றின் பிரிவுகளில் முறையே 30 சதவீதத்திற்கும் மற்றும் 15 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனையைப் பதிவு செய்துள்ளன.


விளம்பரம்


கடந்த சில மாதங்களில், குறிப்பாக மத்திய கிழக்கு மோதலின் பின்னணியில், மின்சாரக் கார்கள் மீதான ஆர்வம் கணிசமாக உயர்ந்துள்ளது.


இந்தியா தனது கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலைகள் 50 சதவீதம் வரை உயர்ந்ததால், கடந்த நான்கு ஆண்டுகளாக எரிபொருள் விலைகளை ஓரளவிற்கு நிலையாக வைத்திருந்த அரசு எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள், தற்போது எரிபொருள் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.


எரிபொருளைச் சேமிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோதியும் இந்தியர்களைக் கார்களைப் பகிர்ந்துகொள்ளுமாறும் , பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும், வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

மனித உடலில் அக்குளில் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

DMK, Appavu, MLA, 2016, Case, Victory

10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்ட அப்பாவுக்கு என்ன பலன் கிடைக்கும்?

வைபவ் சூர்யவன்ஷி, ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்திய ஆண்கள் டி20 அணி, ஸ்ரேயாஸ் ஐயர்

சச்சின் சாதனையை சூர்யவன்ஷி தகர்ப்பாரா? ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்திய டி20 அணி விவரம்

கொச்சி, மட்டஞ்சேரி, யூத நகரம், யூதர்கள் 

கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்றார்கள்?

End of அதிகம் படிக்கப்பட்டது

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

" அதிகரித்து வரும் இந்த நிச்சயமற்ற தன்மையும், உயர்ந்த எரிபொருள் விலைகளும் மின்சார வாகனங்களுக்கான தேவையை வலுப்படுத்தும் கூடுதல் காரணியாகச் செயல்படுகின்றன" என்று ஜப்பானிய தரகு நிறுவனமான நோமுரா கூறுகிறது.


ஆனால் இந்த உடனடித் தூண்டுதல்களுக்கு அப்பாற்பட்டு, மேலும் பல நீண்டகால காரணிகளும் கார் வாங்குபவர்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன.


அவற்றில் மிக முக்கியமானது, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வந்து 2032 மார்ச் வரை நடைமுறையில் இருக்கத் திட்டமிடப்பட்டுள்ள சிஏஎப்ஃஈ - 3 என்று அறியப்படும் வரவிருக்கும் ஒழுங்குமுறை விதிகளாகும்.


இவை "ஒழுங்குமுறைகளை அர்த்தமுள்ள வகையில் கடுமையாக்குவதோடு மின்சார வாகன பயன்பாட்டில் மிகவும் வெளிப்படையான வேகத்தையும் ஏற்படுத்தக்கூடும்" என்று பெர்ன்ஸ்டீன் நிறுவனத்தின் ஆய்வாளர்களான வேணுகோபால் கர்ரே மற்றும் பரம் ஷா ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


இந்த சிஏஎப்ஃஈ - 3 வரைவு விதிகள், கார்களில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வை 2032 ஆம் ஆண்டுக்குள் 113 கிராமிலிருந்து 76 கிராமாகக் குறைக்க முயல்கின்றன. இது 33 சதவீத வீழ்ச்சியாகும்.


மேலும், வாகன பாகங்களை உற்பத்தி செய்யும் எட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட சுமார் ஒரு பில்லியன் டாலர் அபராதம் இதுவரை வசூலிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால், எதிர்வரும் காலத்தில் தற்போதைய சூழ்நிலையைப் போலல்லாமல், "சிஏஎப்ஃஈ - 3 இன் அபராதங்கள் வசூலிக்கப்படலாம்" என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறது.


இவை அனைத்தும் மின்சார வாகனங்களுக்கான தேவையை முன்னெடுத்துச் செல்லும்.


நாட்டில் மிக அதிகமான மாசடைந்த பகுதிகளில் ஒன்றான டெல்லி போன்றவை, பெட்ரோல் டீசல் வாகனங்களை படிப்படியாக நிறுத்தவும், 2027க்குள் இந்த வகை புதிய வாகனங்களின் பதிவை நிறுத்தவும் முன்மொழியும் லட்சிய வரைவுக் கொள்கைகளைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளன.


இந்தியா தற்போது தனது மின்சார வாகனங்களுக்கான சலுகைகளைக் கடுமையான இலக்குகள் அல்லது அபராதங்களுடன் இணைக்கவில்லை, ஆனால் CAFE-3  (சிஏஎப்ஃஈ - 3 ) விதிகள் இதைக் கட்டாயமாக்கும் என்று கர்ரே மற்றும் ஷா கூறுகின்றனர்.

பட மூலாதாரம்,Bloomberg via Getty Images

படக்குறிப்பு,அதிகமான புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாலும், சாதகமான ஒழுங்குமுறைகளாலும் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"தொடர்ச்சியாக புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படவிருப்பது" மற்றொரு சாதகமான காரணியாக இருக்கும் என்று நோமுரா கூறுகிறது.


இது 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்களின் பங்களிப்பு 9 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கிறது.


இருசக்கர வாகனப் பிரிவிலும் கூட, புதிய மலிவு விலை மாடல்களின் வருகையால் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதே நேரத்தில் 2030க்குள் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை, மின்சாரம் அல்லாத பிற வாகனங்களின் விற்பனையை விட அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது; இது இந்த மாற்றத்தை மேலும் வேகப்படுத்தும்.


"இந்தியாவின் இந்த மாற்றம், மூன்று சக்கர வாகனங்கள் போன்ற அதிகப் பயன்பாடு கொண்ட, அதே சமயம் விலை குறைவான பிரிவுகளில் அதிகமாகக் குவிந்துள்ளது. இது இந்த மாற்றத்தின் வளர்ச்சி சீரற்றதாக இருக்க வாய்ப்புள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.


விலை மலிவாகும் போதும் , சார்ஜிங் உள்கட்டமைப்பு விரிவடையும் போதும், கொள்கை ரீதியான ஆதரவு வலுவடையும் போதும் காலப்போக்கில் பயணிகள் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு வேகமெடுக்கும்" என்று நோமுரா கூறுகிறது.


இருப்பினும், இத்தகைய ஊக்கமளிக்கும் அறிகுறிகள் இருந்தபோதிலும், மின்சார வாகனப் பயன்பாட்டில் முக்கிய உலகளாவிய பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கியே உள்ளது.


நோமுரா தரவுகளின்படி, பயணிகள் கார்களில் சீனாவின் மின்சார வாகனங்களின் பயன்பாடு , 2020 இல் வெறும் 5.7 சதவீதமாக இருந்ததிலிருந்து கடந்த ஆண்டில் 53.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதத்திலும், அமெரிக்கா 8 சதவீதத்திலும் உள்ளன.


மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகச் சார்ஜிங் உள்கட்டமைப்பு இன்னும் நீடிக்கிறது.


பொது சார்ஜிங் நிலையங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 2,000-லிருந்து 10,000 க்கும் அதிகமாக வளர்ந்துள்ளன, இருப்பினும் இந்தியாவின் 28 மாநிலங்களில் வெறும் நான்கு மாநிலங்கள் மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகமான சார்ஜர்களைக் கொண்டுள்ளதால், பிராந்தியங்களுக்கு இடையே இத்தகைய உள்கட்டமைப்பு சீரற்றதாகவே உள்ளது.


மேலும், சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள இடைவெளி மிக வியக்க வைக்கிறது. சீனா இப்போது 20 மில்லியன் பொது சார்ஜிங் பாயிண்டுகளைக் கொண்டுள்ளது; ஆனால் இந்தியாவிடம் உள்ள சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கை வெறும் 10,000 மட்டுமே ஆகும்.


சார்ஜிங் செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளின் விளைவாக, "ரேன்ஜ் ஆன்சைட்டி" அதாவது ஒருமுறை சார்ஜ் செய்தால் பயணம் முழுவதையும் முடிக்க பேட்டரி போதுமானதாக இருக்குமா என்ற கவலை நுகர்வோருக்கு ஒரு முக்கியத் தடையாக நீடிக்கிறது என்று நோமுரா கூறுகிறது.


உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், கேபிஎம்ஜி நிறுவனத்தின்படி, லித்தியம் மற்றும் கோபால்ட் சுத்திகரிப்பில் சுமார் 70-80 சதவீதத்தையும், அரிய கனிமங்களைப் பிரித்தெடுப்பதில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தையும் சீனாவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

பட மூலாதாரம்,NurPhoto via Getty Images

படக்குறிப்பு,கடந்த மூன்று ஆண்டுகளில் பொது சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கை 2,000-லிருந்து 10,000-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விநியோகச் சங்கிலியில் உள்ள இடைவெளிகள் ஆய்வாளர்களின் மற்றொரு முக்கியக் கவலைக்குரிய புள்ளியாகும்.


பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படும் அரிய கனிமங்களின் உலகளாவிய விநியோகத்தை இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது.


உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், கேபிஎம்ஜி நிறுவனத்தின்படி, லித்தியம் மற்றும் கோபால்ட் சுத்திகரிப்பில் சுமார் 70-80 சதவீதத்தையும், அரிய கனிமங்களைப் பிரித்தெடுப்பதில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தையும் சீனாவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.


இவை இந்த மாற்றத்தில் உள்ள உலக அரசியல் சூழல் சார்ந்த அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


மேலும் இவை இரண்டும் "இந்தியாவின் மின்சார வாகன அறிமுகத்தைத் தாமதப்படுத்தலாம் மற்றும் அதன் விலை போட்டித்தன்மையைப் பாதிக்கலாம்" என்று அந்த ஆலோசனை நிறுவனம் சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


இந்தச் சவாலுக்கு உடனடித் தீர்வுகள் எதுவும் இல்லை. சுரங்கத் தொழிலில் இருந்து பேட்டரி பேக் அல்லது காந்தத் தயாரிப்பு வரையிலான ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியைக் கட்டமைக்க பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகலாம் .


இந்தியாவிற்குப் பாதுகாப்பான விநியோகத்திற்கான "குறுகிய கால நடவடிக்கைகளும், உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீண்ட கால முயற்சிகளும்" தேவைப்படும் என்று கேபிஎம்ஜி கூறுகிறது.


இருப்பினும், வாங்குபவர்களின் பார்வையில் இருந்து பார்க்கும்போது, சிஏஎப்ஃஈ - 3 ஒழுங்குமுறை விதிகளைச் சரியான நேரத்தில் செயல்படுத்துவது ஒரு முக்கிய உந்துசக்தியாக இருக்கும் என்று அரசின் சிந்தனைக் குழுவான நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் சமீபத்தில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் எழுதியுள்ளார்.


கடந்த மூன்று ஆண்டுகளாக விவாதத்தில் இருந்தபோதிலும் இதன் இறுதி வரைவு மிக விரைவில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.


"ஒழுங்குமுறை சார்ந்த தெளிவு இல்லாத நிலையில், உற்பத்தியாளர்கள் தங்களின் முதலீட்டு முடிவுகளைத் தள்ளிப்போடுகிறார்கள், விநியோகச் சங்கிலிகள் மிக மெதுவாகவே உருவாகின்றன, மேலும் ஒட்டுமொத்த சூழலும் நிச்சயமற்றதாகவே நீடிக்கிறது" என்று எழுதியுள்ள காந்த், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை வேகப்படுத்துவது கொள்கை தொடர்பான உறுதி தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


4 வருடங்​களுக்கு ஒரு முறை நடை​பெறும் உலகக் கோப்பை கால்பந்து திரு​விழா வரும் 11ஆம் திகதி கோலாகல​மாக தொடங்​க​வுள்​ளது.


கால்பந்து விளை​யாட்​டில் மாபெரும் திரு​விழா என்று அழைக்கப்படும் ஃபிஃபா (உலக கால்​பந்து சம்​மேளனம்) நடத்​தும் கால்​பந்து உலகக் கோப்பை வரும் 11ஆம் திகதி தொடங்கி ஜூலை 19ஆம் திகதி வரை மிக​வும் பிர​ம்மாண்​ட​மான முறை​யில் நடை​பெறவுள்​ளது. 


ஒலிம்​பிக் போட்​டிகளைப் போலவே மிக பிரம்மாண்ட​மான முறை​யில் நடை​பெறும் போட்​டிகளில் இது முக்கி​யத்​து​வம் வாய்ந்த போட்​டி​யாகக் கருதப்​படு​கிறது.


வழக்​கத்​துக்கு மாறாக இந்த முறை 32 அணி​களுக்​குப் பதிலாக மொத்​தம் 48 அணி​கள் பங்​கேற்​கும் இந்த உலகக் கோப்பை கால்​பந்து திரு​விழாவை அமெரிக்​கா, கனடா, மெக்​ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்​துகின்​றன. 


3 நாடு​களில் மொத்​தம் 16 மைதானங்​களில் போட்டி நடை​பெறும். போட்​டிகள் இந்​திய நேரப்​படி நள்​ளிரவு 12.30 மணி, அதி​காலை 3.30 மணி, காலை 6.30 மணி, 9.30 மணி ஆகிய நேரங்​களில் நடை​பெற உள்​ளன.


குழு சுற்​றின் முடி​வில், ஒவ்​வொரு குரூப்​பிலும் முதல் 2 இடங்​கள் பிடிக்​கும் அணி​கள் மற்​றும் குழுக்களுக்கிடையில் இடம்பெறும் 8 அணி​களும் அடுத்த சுற்​றுக்கு தகுதி பெறும். அதன்​பின்​னர் கால், அரை, இறு​திச் சுற்​றுப் போட்​டிகள் இடம்பெறும். 


104 போட்டிகள்


மொத்​தம் 104 ஆட்​டம், 16 நகரங்​களில் மிக பிர​மாண்​ட​மாக அமைந்​துள்ள மைதானங்​களில் விளை​யாடப்​பட​வுள்​ளன. இறு​திப் போட்​டி, ஈஸ்ட் ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள ‘மெட்​லைஃப் ஸ்டேடி​யத்​தில்’ நடை​பெறும். 


இத்​தொடர் 16 வெவ்​வேறு நகரங்​களில் அமைந்​துள்ள 16 மைதானங்​களில் நடை​பெறவுள்​ளது. 


அமெரிக்​கா​வில் அமைந்​துள்ள 11 மைதானங்​களில் ஒன்​றான, நியூ ஜெர்​சி​யின் ஈஸ்ட் ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள மெட்​லைஃப் மைதானம் 82,500 பார்​வை​யாளர்​கள் அமரும் திறன் கொண்​டது.


கலி​போர்​னி​யா​வின் இங்​கிள்​வுட்​டில் அமைந்​துள்ள சோஃபி மைதானத்​தில் 70,240 பேரும், டெக்​சாஸின் ஆர்​லிங்​டனில் உள்ள ஏடி அன்ட் டி மைதானத்​தில் 80,000 பேரும், டெக்​சாஸின் ஹூஸ்டனில் உள்ள என்​ஆர்ஜி மைதானத்​தில் 72,220 பேரும், மிசவுரி​யின் கன்​சாஸ் நகரில் உள்ள ஏரோஹெட் மைதானத்​தில் 76,416 பேரும், ஜோர்​ஜி​யா​வின் அட்​லாண்​டா​வில் உள்ள மெர்​சிடிஸ் பென்ஸ் மைதானத்​தில் 71,000 பேரும் ரசிக்கலாம்.


மேலும், ஃபுளோரி​டா​வின் மியாமி கார்டன்ஸில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்​தில் 64,767 பேரும், கலிபோர்​னி​யா​வின் சாண்டா கிளா​ரா​வில் உள்ள லெவிஸ் மைதானத்​தில் 68,500 பேரும் பென்​சில்​வேனி​யா​வின் பிலடெல்பியா​வில் உள்ள லிங்​கன் ஃபை​னான்​சி​யல் ஃபீல்ட் மைதானத்​தில் 69,796 பேரும் வாஷிங்​டனின் சியாட்​டிலில் உள்ள லூமன் ஃபீல்ட் மைதானத்​தில் 68,740 பேரும், மாசாசூசெட்​ஸின் ஃபாக்​ஸ்​பரோ​வில் உள்ள ஜில்​லெட் மைதானத்​தில் 65,878 பேரும் போட்​டியை ரசிக்​கலாம்.


கனடா நாட்​டில் 2 மைதானங்​களில் போட்​டிகள் நடை​பெறும். 


பிரிட்​டிஷ் கொலம்​பி​யா​வின் வான்​கூவரில் அமைந்​துள்ள பிசி பிளேஸ் மைதானத்​தில் 54,500 பேரும், டொராண்​டோ​வில் உள்ள பிஎம்ஓ ஃபீல்ட் மைதானத்​தில் 45,736 பேரும் அமர்ந்து போட்​டியைக் கண்​டு​களிக்​கலாம். 


மெக்​ஸிகோ​வில், எஸ்​டாடியோ அஸ்​டெகா மைதானத்​தி​லும், (87,523 இருக்​கைகள்), குவாடலஜா​ரா​வில் உள்ள எஸ்​டாடியோ அக்​ரான் மைதானத்​தி​லும் (49,850 இருக்​கைகள்), மான்​டோரி​யில் உள்ள எஸ்டாடியா பிபி​விஏ மைதானத்​தி​லும் (53,500 இருக்​கைகள்​) போட்​டிகள்​ நடை​பெறும்​.


குழுவில் இடம்பெற்றுள்ள அணிகள் விவரம்


குழு ‘ஏ’: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, செக் குடியரசு


குழு ‘பி‘: கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா, கட்டார், சுவிட்சர்லாந்து


குழு‘சி’: பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்கொட்லாந்து


குழு ‘டி’: அமெரிக்கா, பராகுவே, அவுஸ்திரேலியா, துருக்கி


குழு ‘இ‘: ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வாடோர்


குழு ‘எஃப்: நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், துனிசியா


குழு ‘ஜி’: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து


குழு ‘ஹெச்’: ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே


குழு ‘ஐ’: பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே


குழு ‘ஜே’: அர்ஜெண்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்


குழு ‘கே’: போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா


குழு ‘எல்’: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா



PTA இன் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், சுஹைல் விடுவிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றில் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 வயது மாணவர் தொடர்பான வழக்கு இன்று (ஜூலை 9) நீதிமன்றத்தில் கல்கிசை நீதிமன்றில் நடைபெற்றது. 


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 9 மாதங்களாக காவலில் வைக்கப்பட்டிருந்த 21 வயது சிறுவனின் வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது, அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை கூறியது. 

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு குறித்த கோப்புக்கள் அனுப்பட்டுதால், அங்கிருந்து ஆலோசனைகள் கிடைக்கப் பெறும் வரை பிறிதொரு தவணை வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு இழப்பீடு வழங்குவது அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவது குறித்து காவல்துறை அமைதியாக இருந்தது.



மாவனெல்லாவைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து மாணவர் முகமது ரிஃபாய் முகமது சுஹைல், இஸ்ரேலியக் கொடி மிதிக்கப்படுவதைக் காட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய பின்னர் 2024 அக்டோபரில் கைது செய்யப்பட்டதாக பிபிசி சிங்களம் செய்தி வெளியிட்டுள்ளது.


தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லத் தவறியதற்காக இஸ்ரேலிய தூதரக அலுவலகம் அருகே தெஹிவாலா காவல்துறையினரால் அவர் முதலில் காவலில் வைக்கப்பட்டார், பின்னர் ஆவணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது விடுவிக்கப்பட்டார்.


இருப்பினும், இன்ஸ்டாகிராம் வீடியோ தொடர்பாக சுஹைல் மீண்டும் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ரிமாண்ட் செய்யப்பட்டார், இருப்பினும் நீதிமன்றம் முன்பு அவரை ஜாமீன் இல்லாமல் விடுவித்தது. அவரது வழக்கறிஞர், முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தடுத்து வைக்கப்படுவதை ஆதரிக்க காவல்துறையினரால் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்.


நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது உரிமைகள் குழுக்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றிலிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளது, இது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சுஹைலை உடனடியாக விடுவிக்கக் கோரி அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்



 ( வி.ரி.சகாதேவராஜா )

திருக்கோவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் நியமிக்கப்பட்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டுள்ளார்.

உதவி தவிசாளராக தங்கராசா வரதராஜன்
நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் போட்டியின்றி அறுதிப் பெரும்பான்மையுடன் தெரிவான  ஒரேயொரு தவிசாளர் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் ஆவார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனியொரு சுயேட்சை அணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது திருக்கோவில் பிரதேச சபையில் மாத்திரமே என்பது இவ்வண் குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் 
சுயேட்சைக்குழு ஒன்றின் அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார்  தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்திருந்தது.

மொத்தம் 10 வட்டாரங்களில் 08 வட்டாரங்களில்  சுயேட்சை குழு அமோக வெற்றியை ஈட்டியிருந்தது.

வரலாற்றில் முதல் முறையாக திருக்கோவில் பிரதேச சபை சுயேச்சை அணி வசமாகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது 

திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சை அணி ஒன்று 08 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 06 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேச்சை அணி தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தமை தெரிந்ததே..

16 ஆசனங்களில் 50 வீதமான 08 ஆசனங்களை சசிகுமார் தலைமையிலான சுயேச்சை அணி பெற்றிருந்தது.

எனவே அங்கு  சுயேட்சை அணித் தலைவரான பிரபல தொழிலதிபரும்,  கல்முனை ரோட்டரி கழக முன்னாள் தலைவருமான  சுந்தரலிங்கம் சசிகுமார் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த மே மாதம் 22 ந் திகதி, டெய்லி மெயில் பத்திரிகையில், போதைப் பொருள் வைத்திருந்த சந்தேக நபர்-Charlotte May Lee,சிறைச்சாலையிலிருந்து பேசும் வீடியோவினை வெளியிட்டிருந்தார். இது சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது.

வெலிக்கடை  சிறைச்சாலைக்குள் இங்கிலாந்து போதைப்பொருள் சந்தேக நபர் படமாக்கப்பட்ட வீடியோவை அடுத்து, சிறை அதிகாரிகளை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

பார்வையாளர் ஒருவர் மறைக்கப்பட்ட பொத்தான் கேமராவைப் பயன்படுத்தி காட்சிகளை ரகசியமாகப் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் நடைபெற்றபோது சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபரான பிரித்தானிய யுவதியை மன்றில் ஆஜர்ப்படுத்தியிருந்தார். யுவதியின் பயணப்பைகளிலிருந்து மீட்கப்பட்ட 46 கிலோ குஷ் போதைப் பொருள் மன்றில் சமர்பிக்கப்பட்டதுடன் அதனை நீதிமன்றத்தின் வழக்கு பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படும் அறையில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

இதன்போது சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி சம்பத் பெரேரா மன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்தார்.  அண்மையில் சிலர் தம்மை ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு  எனது சேவை பெறுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு  சென்று காணொளி ஒன்றை பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். 

இதன் ஊடாக எனது சேவை பெறுநர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சிறந்த உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள், குறித்த யுவதியின் நண்பர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் வருகை தந்து அவரை பார்வையிட அனுமதி கோரினர். சாதாரண நடைமுறையின் கீழ் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கினோம். அதில் ஒருவர் பொத்தான் வடிவில் உள்ள சிறிய கமராவை பயன்படுத்தி அங்கு நடந்த விடயங்களை காணொளியாக பதிவு செய்துள்ளார் எனக்கூறினர்.

இதற்கமைய இரு தரப்பு விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திறந்த மன்றில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடும் தரப்பினர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு  சிறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். 


இந்த சந்தேகநபரை பார்வையிட வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தார். இந்த வழக்கு மீண்டும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


#DailyMailUk/DMSriLanka 22/5/2025


 


அம்பாறை நகர சபை மைதானத்தில் புதிதாக  அமைக்கப்பட்ட     டென்னிஸ் விளையாட்டு கூடம் (  tennis court ) இன்று  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


மேற்குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்  திலக் ராஜபக்ச, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா  அதிபர் (DIG)  எச்.ஏ.என்.கே.  தமயந்த விஜய சிறி, இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தவிசாளர் இக்பால் பின்  இஸ்ஹாக் , இலங்கை  இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின்  கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி, உள்ளிட்ட  அதிதிகள்  இணைந்து   புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் திடல் பெயர் பலகை திரைநீக்கம் செய்து வைத்தனர்.

அத்துடன்   அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா  அதிபர் (DIG ) எச்.ஏ.என்.கே.  தமயந்த விஜய சிறி உள்ளிட்ட அதிதிகள்   டென்னிஸ் விளையாட்டு கூடத்தை   பார்வையிட்டதுடன் டென்னிஸ் விளையாட்டிலும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.  

தொடர்ந்து    வரவேற்புரை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு திடல் தொடர்பிலான பெட்டக காட்சி அத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய டெனிஸ் திடல் அம்பாறை நகர சபை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டதுடன் டென்னிஸ் விளையாட்டு துறையின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்தும் இதன்போது  விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,   உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் ,  கிழக்கு மாகாண  முப்படை உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார் ,பொதுமக்கள்,  என பலரும் கலந்து கொண்டனர்.

இது தவிர டென்னிஸ் மைதானத்தை நிர்மாணிப்பதற்கான பணியாளர்களை இலங்கை இராணுவம் இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் பங்களிப்புகளை வழங்கி இருந்தது.இந்த மைதானத்தை நிர்மாணிப்பதற்காக அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.என்.கே.  தமயந்த விஜய ஸ்ரீ முன்னின்று வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.