Showing posts with label education. Show all posts

 


(சியாத்.எம்.இஸ்மாயில்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடந்த பல வருடங்களாக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் (Accident & Emergency Unit ) கடமையாற்றும் டாக்டர். பர்ஸானா நௌஷாட் அவர்கள் மருத்துவ நிர்வாகத்துறை தெரிவு பரீட்சையில் (Selection Examination of MSc Administration) சித்தியடைந்து மேற்படிப்புக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


களனி பல்கலைக்கழக மருத்துவ பட்டதாரியான இவர், அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவரும், அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒய்வுபெற்ற ஆசிரியை முகம்மது பழில் உம்முஹபீபா மற்றும் மர்ஹும் அபூபக்கர்லெவ்வை சீனி முகம்மது தம்பதியரின் புதல்வியுமாவார்.


இலங்கை தேசிய வைத்தியசாலையில் நரம்பியல் மற்றும் இருதய பிரிவில் கடமையாற்றியுள்ளதுடன் மருத்துவ நிர்வாகத்துறைக்கு தெரிவுபட்டவர்களுள் ஒரே ஒரு முஸ்லிம் பெண்மணி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 2023/2024 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள், 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 2026 மே 08 ஆம் திகதி வரை அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளன.


நேர்முகப்பரீட்சைக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றின் பெண் ஆளுமைகளில் ஒருவரும் சிறந்த முன்மாதிரியான பெண் அதிபர்களில் ஒருவருமான #_Mrs_Faishana_Harudeen அவர்களின் பிரியாவிடை நிகழ்வு பாடசாலை சமூகத்தின் பங்களிப்புடன் கல்லூரி மண்டபத்தில் மிகவும் 2026.4.12 அன்று அக்கரைப்பற்றில்  அரங்கேறியுள்ளது.

அக்கரைப்பற்று ஆயிசா மகளிர் கல்லுாரி சில முதற்தரம் வாய்ந்த அதிபர்களைக் கண்டுள்ளது. ஆயினும் பெண் அதிபராக கடமையே்ற்று அக்கரைப்பற்று ஆயிசா மகளிர் கல்லுாரியின் கீர்த்தியினைச் சீர்த்தி பெறச் செய்தவர் இவர்.

“மனிதர்கள் வயதாகிவிடுவதால் விளையாடுவதை நிறுத்திக்கொள்வதில்லை. அவர்கள் விளையாடுவதை நிறுத்திக்கொள்வதால்தான் வயதாகிறது,” என்றார் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கவிஞர் ஒலிவர் வெண்டல் ஹோம்ஸ். விளையாட்டு என்று அவர் சொன்னது விளையாட்டு மட்டுமாகாது, படைப்பு, வாசிப்பு, உழைப்பு என்று பன்முக ஈடுபாடாக விரிவுபடுத்திப் புரிந்துகொள்ளலாம்.

 மிகப் பலரும் கிடைக்க வேண்டும் விரும்புகிற, கிடைத்தபின் இனி என்ன செய்வது என்று அலுத்துக்கொள்கிற ஒன்று இருக்கிறது. ஏதோ வேதாந்தமாகப் பேசுவது போல் இருக்கிறதா? வேறொன்றுமில்லை, அதுதான் ஓய்வு!

அன்றாட வேலைகளிலிருந்து சிறு பொழுது ஓய்வை உடலும் உள்ளமும் நாடுவது இயல்பு. அலுவலகத்தில் அல்லது தொழிலகத்தில் பல ஆண்டுகள் வேலை செய்த பின், சட்டப்படியே விடைகொடுத்து அனுப்பப்படுகிற பணி ஓய்வு வேறு வகை. சொந்தத் தொழில் மேற்கொள்வோரும் கூட, நெடுங்கால ஈடுபாட்டைத் தொடர்ந்து வயது முதிர்ந்த காலத்தில், பொறுப்புகளை வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வாய் இருக்கத் திட்டமிடுகிறார்கள். பணி ஓய்வுக்காலத்திற்கென்றே காப்பீட்டு நிறுவனங்கள் தனித் திட்டங்கள் வைத்துள்ளன.

இந்த ஏற்பாடுகள் இருந்தும் பலர் ஓய்வுக்காலத்தில் ஒரு மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள். தன்னைத் தானே சார்ந்திருக்கக்கூடிய வகையில் ஒரு வருவாய் வழி இருப்பவர்கள் மட்டுமல்லா மல், போதிய பொருளாதாரப் பின்புலம் உள்ளவர்களும் கூட அந்தச் சோர்வைச் சந்திக்கிறார்கள்.

ஓய்வு என்பது ஓய்ந்து கிடப்பதல்ல, ஓய்வு நிலை Faishana_Harudeen அதிபரே! உங்களுக்கான களப் பணிகளும்,  சமூகஞ்சார் கல்விப் பணிகளும் நிறைந்து கிடக்கின்றன.

உங்களது ஆற்றல், அறிவு அனுபவம். ஆளுமை போன்றவற்வை இனி வருங்காலங்களிலும் அக்கரைப்பற்று மண் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை கீற்றுக்கள் என்னுள் தென்படுகின்றது.

அயராது உழைத்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபரின் எதிர்காலம் சிறக்கbஎனது_வாழ்த்துகளும்_பிரார்த்தனைகளும்.

இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்

 


இணைந்த சேவைகளின் அலுவலர்களின் 𝟐𝟎𝟐𝟔 வருடாந்த இடமாற்றங்கள் அவசியம் நடைமுறைப்படல் வேண்டும்!


​கட்டாயம்:-


2026 வருடாந்த இடமாற்றம் பெற்றுள்ள அலுவலர்களை, பிரதியீட்டு அலுவலர் (Replacement) வரும்வரை தடுத்து வைக்காமல், உரிய திகதியில் விடுவிக்க வேண்டியது அந்தந்த நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும்.


​அதிகார வரம்பு:-


அரசாங்க சேவைகள் ஆணைக்குழு எடுத்த இடமாற்றத் தீர்மானங்களை நிறுத்தவோ, மாற்றியமைக்கவோ அல்லது பிற்போடவோ நிறுவனத் தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பது மீண்டும் நினைவுறுத்தப்பட்டுள்ளது.


​இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத நிறுவனத் தலைவர்கள், அது தொடர்பான விளைவுகளுக்கு அவர்களே தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக்கூற வேண்டும்.


​ஏற்கனவே இடமாற்ற தீர்மானம் கிடைக்கப்பெற்றுள்ள அலுவலர்கள் தொடர்பாக, மீண்டும் இணைந்த சேவைகள் பிரிவிற்கு சமர்ப்பிக்கப்படும் எவ்வித மேன்முறையீடுகளும் இனிமேல் பரிசீலிக்கப்பட மாட்டாது.


​கட்டாயம்:-


2026 வருடாந்த இடமாற்றம் பெற்றுள்ள அலுவலர்களை, பிரதியீட்டு அலுவலர் (Replacement) வரும்வரை தடுத்து வைக்காமல், உரிய திகதியில் விடுவிக்க வேண்டியது அந்தந்த நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும்.


​அதிகார வரம்பு:-


அரசாங்க சேவைகள் ஆணைக்குழு எடுத்த இடமாற்றத் தீர்மானங்களை நிறுத்தவோ, மாற்றியமைக்கவோ அல்லது பிற்போடவோ நிறுவனத் தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பது மீண்டும் நினைவுறுத்தப்பட்டுள்ளது.


​இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத நிறுவனத் தலைவர்கள், அது தொடர்பான விளைவுகளுக்கு அவர்களே தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக்கூற வேண்டும்.


​ஏற்கனவே இடமாற்ற தீர்மானம் கிடைக்கப்பெற்றுள்ள அலுவலர்கள் தொடர்பாக, மீண்டும் இணைந்த சேவைகள் பிரிவிற்கு சமர்ப்பிக்கப்படும் எவ்வித மேன்முறையீடுகளும் இனிமேல் பரிசீலிக்கப்பட மாட்டாது.

 



நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் கமு/கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 51 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் வாய்ப்பை அடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

நிந்தவூர் கல்விக் கோட்டத்தில் அதிகளவான பல்கலைக்கழக அனுமதிகளைப் பெற்ற பாடசாலையாக இப்பாடசாலை முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை முன்னிட்டு மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி பாடசாலை அதிபர் ஏ.சி. ஹாமிது தலைமையில் கலாநிதி அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பெறுபேறுகளின் படி, மருத்துவத் துறைக்கு 03 மாணவிகளும், பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக பொறியியல் துறைக்கு 01 மாணவியும் தெரிவாகியுள்ளனர். மேலும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 22 மாணவிகளும், வர்த்தகப் பிரிவில் முகாமைத்துவத்திற்கு 09 மாணவிகளும், வர்த்தகத்திற்கு 05 மாணவிகளும், கலைப் பிரிவில் சட்டத் துறைக்கு 01 மாணவியும், ஏனைய துறைகளுக்கு 10 மாணவிகளும் தெரிவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

நிகழ்வில் உரையாற்றிய அதிபர் ஏ.சி. ஹாமிது, பாடசாலை அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், கல்முனை கல்வி வலயத்தில் முன்னணி பாடசாலையாக திகழ்கின்றதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு உயர்தரப் பெறுபேறுகளில் 300 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இந்த சாதனைக்கு காரணமாக இருந்த மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள், நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து தொடர்புடையோருக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் பொறியியலாளர் ஏ.எம். ஹைகல், முன்னாள் அதிபர் திருமதி ஹானியா சித்தீக், பாடசாலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர் திருமதி எம்.வை. நஜிமுன்நிஷா, முன்னாள் சிரேஷ்ட ஆசிரியர் எஸ்.எம். ஜின்னாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா  தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று  திங்கட்கிழமை (06) காலை 
பாடசாலையின் அதிபர் ஜே.ஆர். டேவிட் அமிர்தலிங்கம்  தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில், அனைத்து துறைகளிலிருந்தும்  பல்கலைக்கழகத்திற்குதெரிவுசெய்யப்பட்ட 73  க்கு மேற்பட்ட மாணவர்கள்  கௌரவிக்கப்பட்டார்கள்.

 விசேடமாக 05 மாணவர்கள் மருத்துவப் பீடத்திற்கு தெரிவாகியிருந்தனர். 

மேலும், மருத்துவத் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ரமேஷ் தேட்ஷித் இப் பாடசாலையை  சேர்ந்தவர். 

அத்துடன் வர்த்தகப் பிரிவில் மாவட்ட நிலைகளில் 3 மற்றும் 8ஆம் இடங்களையும் மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இதனடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயம் மாகாண அளவில் 3ஆம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.


இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார், பிரதிக் கல்விப் பணிப்பாளர். ஏ. நசீர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ. செல்வம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.


அத்துடன் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க (SDC) உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர்.

 

சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி விசேட போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்க போக்குவரத்து அதிகாரிகள்

தீர்மானித்துள்ளனர்.


எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் இந்த விசேட திட்டங்கள் அமுலுக்கு வருகின்றன.

இலங்கை போக்குவரத்துச் சபை ஏப்ரல் 9 முதல் விசேட பேருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

தூர இடங்களுக்குச் செல்வோருக்காக நாளொன்றுக்கு சுமார் 250 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.


 ஊர்களுக்குச் செல்வதற்காக ஏப்ரல் 09 முதல் 13 வரை மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக  ஏப்ரல் 17 முதல் 21 வரை தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை உடனடியாக சேவையில் இணைப்பதற்கும் தயார் நிலையில் உள்ளதாக சபை அறிவித்துள்ளது.


தனியார் பேருந்து சேவைகளை ஒழுங்குபடுத்தும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் விசேட நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது. பயணிகளின் வருகை மற்றும் தேவைக்கேற்ப போதுமான அளவு மேலதிக பேருந்துகளை வழங்க ஆணைக்குழு இணங்கியுள்ளது.


பேருந்துகளுக்கு இணையாக புகையிரத திணைக்களமும் விசேட சேவைகளை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும்.

கரையோர மார்க்கம், வடக்கு மார்க்கம் மற்றும் பிரதான மார்க்கங்களில் தற்போதுள்ள புகையிரதங்களுக்கு மேலதிகமாக இந்தச் சேவைகள் இடம்பெறவுள்ளன.


பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும் இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பயணிகள் முன்கூட்டியே தங்களது ஆசனங்களை பதிவு செய்துகொள்வதன் மூலம் பயணச் சிரமங்களைத் தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 


நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை பிரதேச புதிய வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த மாணவன் செல்வன் ரவிச்சந்திரன் பவதாருணன், இவ்வாண்டு வெளியான கல்விப் பொது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பொறியியல் துறைக்கு தெரிவாகி, தனது கிராமத்தின் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளார்.

திரு. இரவிச்சந்திரன் – திருமதி. மனோகரி தம்பதிகளின் புதல்வனான இவர், அம்பாறை மாவட்டத்தில் 14ஆம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 840 ஆம் இடத்தையும் பெற்று சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் புதிய வளத்தாப்பிட்டி வரலாற்றில் முதல் முறையாக பொறியியல் துறைக்கு தெரிவாகும் மாணவனாக அவர் விளங்குகிறார்.

இந்த சாதனை, கிராமத்தின் கல்வி முன்னேற்றத்திற்கும் எதிர்கால மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில், சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த் அவர்கள், மாணவன் பவதாருணனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை பாராட்டியதுடன், பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து கௌரவித்தார்.

சாதனை குறித்து கருத்து தெரிவித்த மாணவன் பவதாருணன், “இரவு பகலாக நேரத்தை ஒதுக்கி கடின உழைப்புடன் கல்வியில் ஈடுபட்டதே இந்த வெற்றிக்கு காரணம். எனது பெற்றோர் மிகுந்த சிரமங்களுக்கிடையிலும் என்னை ஊக்குவித்து துணைநின்றனர். மேலும், சம்மாந்துறை வீரமுனை பகுதியைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் மூத்தவர்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்தனர்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்னை கல்வி கற்றுக் கொடுத்த கல்முனை கர்மேல் பற்றிமா கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர், ஆசிரியர்கள், மற்றும் தனிப்பட்ட வகுப்பாசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றியை தெரிவித்தார்.
புதிய வளத்தாப்பிட்டி மண்ணின் இந்த வரலாற்றுச் சாதனை, அப்பகுதி மக்களிடையே பெருமையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 


நூருல் ஹுதா உமர்


அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மாகாண தரப்படுத்தலில், கிழக்கு மாகாணத்தில் கல்முனை கல்வி வலயம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டில் 7ஆவது இடத்தில் இருந்த கல்முனை வலயம், இவ்வாண்டு 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இம்முன்னேற்றம் பல்வேறு கல்விசார் அளவுகோள்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மொத்த சித்தி வீதம் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், 3A பெறுபேறு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 76 ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 88 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, 3S தரப்படுத்தல் கணிப்பிலும் முன்னேற்றம் காணப்பட்டதுடன், “W” (தோல்வி) பெறுபேறுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதும் கல்வி தர உயர்வை சுட்டிக்காட்டுகிறது.

இந்த முன்னேற்றம், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம். எஸ். ஸஹதுல் நஜீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைவாகும் எனக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வலய மட்டத்தில் நடத்தப்பட்ட தரிசிப்பு நிகழ்ச்சிகள், பாடசாலைகளின் கல்வி செயல்திறனை மதிப்பீடு செய்யும் வெளிவாரி கண்காணிப்பு முறைகள், மற்றும் ஆசிரியர்-மாணவர் செயல்திறன் மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவை இம்முன்னேற்றத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

இதனையடுத்து, வலய கல்விப் பணிப்பாளர் அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் கல்வியலாளர்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். மேலும், 2026ஆம் ஆண்டில் கல்முனை வலயம் இன்னும் உயர்ந்த நிலையை அடைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் தொடர்ந்து வலுப்பெற்றால், எதிர்வரும் ஆண்டுகளில் கல்முனை வலயம் மாகாண மட்டத்தில் முன்னணி இடத்தைப் பெறும் என்பதில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 ( வி.ரி. சகாதேவராஜா)


அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில்  முதனிலை பெற்ற தமிழ் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா, கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், நேற்று  (4) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஆலோசகரும், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இவ்விழா கல்முனை நெற் தலைமையகத்தில் நடைபெற்றது.

முன்னொருபோதுமில்லாத வகையில், இம்முறை மாவட்டத்தில் முதலிடத்தை  பெற்ற நான்கு தமிழ் மாணவர்களான
உயிரியல் விஞ்ஞான துறையில் செல்வன். ரமேஷ் தேட்சித்( அக்கரைப்பற்று), பௌதீக விஞ்ஞான துறையில் செல்வன். ஜெகதீஸ்வரன் லதுர்ஷாந்( கல்முனை), பொறியியல் தொழில்நுட்ப துறையில் செல்வன். பிரபாகரன் ஹரிநர்த்தனன்( மண்டூர்) மற்றும் கலைத் துறையில் செல்வி.பத்மநாதன் வைஷ்ணவி
(பெரியநீலாவணை) ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகளான, மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்ட, சிவகுமார் மிருதுவி மற்றும் சாந்தகுமார் தில்க்ஷிகா ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

 முன்னதாக சாதனை மாணவர்கள் அறுவரும் கல்முனை நெற் குடும்பத்தினரால் மாலை சூட்டி வரவேற்கப்பட்டனர். கூடவே பெற்றோர்களும் வரவேற்கப்பட்டனர்.

பின்னர் தலைமையகத்தில் கௌரவிப்பு விழா நடைபெற்றது.

சாதனை மாணவர்கள் அனைவரும் அதிதிகளால்,  பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

நினைவுச் சின்னங்களை தாராள உள்ளம் அறக்கட்டளை நிறுவனப் பணிப்பாளர் ஜி. ஜெயபிரகாஷ் அன்பளிப்பு செய்திருந்தார்.
முதனிலை மாணவர்களுக்கான நிதி அன்பளிப்பை எஸ்எஸ்கே நிருமாண நிறுவன பணிப்பாளர் சு.சசிகுமார் அன்பளிப்பு செய்திருந்தார்.

உவெஸ்லி கல்லூரி முன்னாள் அதிபர் வி.பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார்.

சாதனை மாணவர்கள் அறுவரும் தமது அனுபவங்களை, உரையாக வழங்கினர். பெற்றார் சார்பில் ஆசிரியர் எஸ்.பிரபாகரன்  நன்றியுரை வழங்கினார்.

கல்முனை நெற் சார்பில் உறுப்பினர் வி.கோகுலராஜன் நன்றியுரை வழங்கினார்.

இம்முறை, அம்பாறை மாவட்ட முதனிலை தமிழ் கல்விச் சாதனையாளர்கள் அனைவருக்கும் முதன்முதலில் ஓரிடத்தில் வழங்கப்பட்ட முதல் கௌரவிப்பு விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 


சுகிர்தகுமார்   

 அக்கரைப்பற்று ஸ்ரீ  இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அனைத்து துறைகளிலிருந்தும் 73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகைமை பெற்றுள்ளதோடு விசேடமாக 5 மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளனர் என பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
விசேடமாக மருத்துவதுறையில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினை பெறமுடிந்துள்ளதுடன்  வர்த்தக பிரிவிலும் மாவட்ட மட்டத்தில் 3,ஆம் 8ஆம் நிலையினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் திருக்கோவில் கல்வி வலயம் மாகாணத்தில் 3 ஆம் இடத்தையும் மாவட்ட அடிப்படையில் 1 ஆம் இடத்தையும் முன்னோக்கி நகர முடிந்துள்ளதாகவும் மகிழ்ச்சி வெளியிட்டார்.
அத்தோடு தமது பாடசாலையும் 75 வீதத்திற்கும் அதிகமான சித்தி வீதத்தை பெற்று 73 இற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதியை பெற்று வலயத்தின் இத்தகைய முன்னேற்றத்துக்கு ஏனைய பாடசாலைகளைப்போல் கணிசமான பங்களிப்பு செய்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை என சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சாதனை தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்டதல்ல. குழு ரீதியான அர்ப்பணிப்பணிப்பின் மூலமே  சாதிக்க முடிந்துள்ளது. இதற்காக திட்டமிட்டு உழைத்த வலயக் கல்வி பணிப்பாளர்,பிரதிக் கல்வி பணிப்பாளர்கள்,கோட்டக் கல்வி பணிப்பாளர்கள்,உதவிக் கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,வளவாளர்கள்,அனுசரணையாளர்கள்,ஆசிரியர்கள், அதிபர்கள்,பிரதி அதிபர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழு பழைய மாணவர் சங்கம் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் பாடசாலை சார்பில் தெரிவித்துகொள்வதாகவும்; குறிப்பிட்டார்.

 


நூருல் ஹுதா உமர்


நாடளாவிய ரீதியில் தேசிய கல்விக் கல்லூரிகளின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட நிபுணர் குழுவில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும் இடம்பெறாதது தொடர்பாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சங்க ஆலோசகரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல். முகம்மட் முக்தார் கருத்துத் தெரிவிக்கையில், கல்வி அமைச்சு முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தேசிய கல்விக் கல்லூரிகளின் தற்போதைய கட்டமைப்புகளை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்காக இந்நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவரின் கூற்றுப்படி, இக்குழுவில் மூன்று சிங்கள பேராசிரியர்கள், ஒரு தமிழ் பேராசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் கல்விச் சேவையாளர் இடம்பெற்றுள்ளதுடன், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும் சேர்க்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாததாகும் எனக் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் உள்ள தமிழ் மாணவர்களை கருத்தில் கொண்டு தமிழ் பேராசிரியர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அட்டாளைச்சேனை மற்றும் தர்காடவுண் போன்ற பகுதிகளில் அதிகளவு முஸ்லிம் மாணவர்கள் பயிலும் தேசிய கல்விக் கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்த முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் சேர்க்கப்படாதது கல்வி அமைச்சின் தவறாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதற்கு முன்னர் கல்விச் சபை அமைப்பில் முஸ்லிம் பிரதிநிதி இல்லாமை குறித்து பாராளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்புகளுக்குப் பின்னர் தான் ஒருவர் நியமிக்கப்பட்ட சம்பவத்தையும் நினைவூட்டிய அவர், இவ்வாறான விடயங்கள் முஸ்லிம் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான புறக்கணிப்பு காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றதாகவும், இதற்கான பின்னணியில் சில தரப்புகள் செயல்படுகின்றனவா என்பதையும் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக உரிய கவனம் செலுத்தி சமநிலையான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன

 


(வி.ரி.சகாதேவராஜா)


நாவிதன்வெளி அன்னமலை 2 கிராமத்திலிருந்து அன்பழகன் பிரஜித் உயிரியல் பிரிவில் 3 பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று (3A) அம்பாறை மாவட்ட ரீதியாக 27வது இடத்தை பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் முஜீப்,
 ஆசிரியர்  கே. கண்ணதாசன் 
நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன், யாழ்பல்கலைக்கழக மாணவன்  எஸ். பிதுர்சன் ஆகியோர் கலந்துகொண்டு சாதனை மாணவனை பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.

 நாவிதன்வெளியை சேர்ந்த இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் உயர்தரம் கற்றவராவார்.

நாவிதன்வெளியின் இரண்டாவது மருத்துவ மாணவராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


கல்வி அமைச்சின் உதவியினால், கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு நவீன ஸ்மார்ட் போர்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தேவையுடைய பல பாடசாலைகள் இருந்தபோதிலும், இப்பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். ரிசாத் மற்றும் நிர்வாகத்தினரின் விடாமுயற்சியினால், பல சிரமங்களை கடந்து இந்த வசதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டமை, மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி சூழலை உருவாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்விற்காக ஒத்துழைப்புகளை வழங்கிய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும், பாடசாலை நிர்வாகம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள புதிய கல்வி வசதி, மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

 


நூருல் ஹுதா உமர்


கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சிறப்பு சித்தி பெற்று மாவட்ட ரீதியில் 27ஆம் இடத்தைப் பெற்று வைத்தியத் துறைக்கு தெரிவான மாணவன் அன்பழகன் பிரஜித் அவர்களுக்கு நாவிதன்வெளி பிரதேச பொதுமக்கள் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவர் அடைந்துள்ள இச்சிறப்பான சாதனை அவரது உறுதியான இலக்கு, அயராத உழைப்பு மற்றும் தளராத தன்னம்பிக்கையின் விளைவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வெற்றி அவரது குடும்பத்தினர், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வி கற்ற பாடசாலை மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய சாதனைகள், எதிர்கால இளம் தலைமுறைக்கு சிறந்த முன்னுதாரணமாகவும், கல்வி நோக்கில் ஊக்கமளிக்கும் சக்தியாகவும் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மாணவன் அன்பழகன் பிரஜித் அவர்கள் தனது எதிர்கால உயர்கல்வி மற்றும் சமூகப் பணிகளில் மேலும் பல சாதனைகள் படைத்து உயரங்களைத் தொட வேண்டும் எனவும், அவரது கல்விப் பயணம் தொடர்ந்தும் சிறக்க இறையருள் கிடைக்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாவிதன்வெளி தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதை முன்னிட்டு, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட கல்வியியல் குழுவினருக்கு கெளரவிப்பு நிகழ்வு ஒன்று இன்று (02) சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் உறுப்பினர்கள் பாடசாலைக்கு வருகை தந்து, மாணவர்களின் சாதனைக்கு பின்னால் அயராத முயற்சிகளை மேற்கொண்ட அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர்.

இதன்போது, அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மகத்தான கெளரவம் வழங்கப்பட்டதுடன், நினைவுப் பரிசில்களும் அளிக்கப்பட்டன. மேலும், நிகழ்வின் நிறைவாக இனிப்புப் பண்டங்கள் பரிமாறப்பட்டன. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அயராத முயற்சிகளை மேற்கொள்ளும் கல்வியாளர்களை கௌரவிக்கும் இத்தகைய நிகழ்வுகள், கல்வி துறையில் ஊக்கத்தை அதிகரிக்கும் முக்கியமான முயற்சிகளாகக் கருதப்படுகின்றன.

இந்நிகழ்வு பாடசாலை சமூகத்திற்குள் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியதோடு, எதிர்கால கல்வி சாதனைகளுக்கான உற்சாகத்தையும் உருவாக்கியுள்ளது.

 


சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்திற்கு நவீன மின்விளக்கு தொகுதிகள் வழங்கல்


நூருல் ஹுதா உமர்


பின்தங்கிய மாணவர்கள் அதிகம் கல்வி பயிலும் சம்மாந்துறை கமு/சது/ அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் கல்வி சூழலை மேம்படுத்தும் நோக்கில், ரூபாய் நான்கு இலட்சம் பெறுமதியான நவீன மின்விளக்கு தொகுதிகள் இன்று (02) வழங்கப்பட்டன.


இத்தொகுதிகளை சம்மாந்துறை “வன் என் வன்” டிரான்ஸ்போர்ட் சங்கத்தின் பிரதிநிதிகள், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.


யானை தாக்குதலில் இருந்து பாடசாலையை பாதுகாக்கவும் பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், மாணவர்கள் சிறந்த கல்வி சூழலில் பயிலும் வகையிலும் இந்த நவீன மின்விளக்கு தொகுதிகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிகழ்வில் தொடர்புடைய தரப்பினரும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். பாடசாலையில் இந்த நவீன மின்விளக்கு தொகுதிகளை சம்மாந்துறை பிரதேச சபை ஊடாக பொருத்தும் நோக்கில் இந்த மின்விளக்கு தொகுதிகள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளாரிடம் கையளிக்கப்பட்டது 


இத்தகைய சமூகப் பொறுப்புணர்வு செயல்கள் கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன என்பதையும், எதிர்காலத்திலும் இதுபோன்ற உதவிகள் தொடர வேண்டும் என்பதையும் கல்வி வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.

( Rep/ Yathursan)

க.பொ.த.உயர்தர பரீட்சையில் (2025)  உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ  இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவன் ரமேஸ் தேத்சித் அவர்களை  பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான ஆதம்பாவா ,  தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்பாளரும் கௌரவ பிரதேச சபை உறுப்பினருமாகிய ரதீசன் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் தங்கேஸ்வரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்


 அகில இலங்கை ரீதியில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் மொஹமட் சுபைதீன் மொஹமட் ஃபர்தான் வர்த்தகப் பிரிவில் முதலிடம் !!


மனமார்ந்த வாழ்த்துகள் மத்திய கல்லூரி மாணவன் மொஹமட் சுபைதீன் மொஹமட் ஃபர்தான் வர்த்தகப் பிரிவில் முதலிடம் !!


மனமார்ந்த வாழ்த்துகள்

 அகில இலங்கை ரீதியில் கிளிநொச்சி வரலாற்று சாதனை!


கபொத உயர்தரம் 2025ல் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.