Showing posts with label education. Show all posts

 


கிழக்கு மாகாண O/L பெறுபேறுகளில் கல்முனை கல்வி வலயம் முன்னிலை : 129 மாணவர்கள் 9A சித்தி பெற்று சாதனை.


நூருல் ஹுதா உமர்


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் கிழக்கு மாகாண வலய வாரியான பெறுபேறு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயம் பல்வேறு குறியீடுகளில் முன்னிலை வகித்து கல்வித் துறையில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.


கிழக்கு மாகாணத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை கல்வி வலயம் 84.5% சித்தி வீதத்துடன் முன்னணி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் கணிதம் மற்றும் தமிழ் ஆகிய இரு பாடங்களுடனும் 6 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்களின் வீதம் 75.1% ஆகப் பதிவாகியுள்ளது.


குறிப்பாக, 129 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 124 மாணவர்களுடனும், மட்டக்களப்பு கல்வி வலயம் 122 மாணவர்களுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்வி வலயமும் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. அக்கரைப்பற்று வலயத்தில் 85.4% சித்தி வீதமும், 55 மாணவர்கள் 9A சித்திகளும் பதிவாகியுள்ளன.


கிழக்கு மாகாண அளவில் மொத்தமாக 25,941 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 25,370 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். அவர்களில் 18,881 மாணவர்கள் கணிதம் அல்லது தமிழுடன் சித்தி பெற்றுள்ளதுடன், மாகாணத்தின் மொத்த சித்தி வீதம் 74.42% ஆகக் காணப்படுகிறது.


மாவட்ட அடிப்படையில் பார்க்கும்போது, அம்பாறை மாவட்டம் 77.79% சித்தி வீதத்துடன் முதலிடத்திலும், மட்டக்களப்பு மாவட்டம் 75.78% சித்தி வீதத்துடன் இரண்டாம் இடத்திலும், திருகோணமலை மாவட்டம் 66.59% சித்தி வீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.


கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையிலான கல்முனை கல்வி வலயத்தின் தொடர்ச்சியான கல்வி முன்னேற்றம், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு அர்ப்பணிப்பின் விளைவாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இந்த பெறுபேறுகள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், எதிர்வரும் ஆண்டுகளிலும் மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்யும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. பெற்று சாதனை.


நூருல் ஹுதா உமர்


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் கிழக்கு மாகாண வலய வாரியான பெறுபேறு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயம் பல்வேறு குறியீடுகளில் முன்னிலை வகித்து கல்வித் துறையில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.


கிழக்கு மாகாணத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை கல்வி வலயம் 84.5% சித்தி வீதத்துடன் முன்னணி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் கணிதம் மற்றும் தமிழ் ஆகிய இரு பாடங்களுடனும் 6 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்களின் வீதம் 75.1% ஆகப் பதிவாகியுள்ளது.


குறிப்பாக, 129 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 124 மாணவர்களுடனும், மட்டக்களப்பு கல்வி வலயம் 122 மாணவர்களுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்வி வலயமும் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. அக்கரைப்பற்று வலயத்தில் 85.4% சித்தி வீதமும், 55 மாணவர்கள் 9A சித்திகளும் பதிவாகியுள்ளன.


கிழக்கு மாகாண அளவில் மொத்தமாக 25,941 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 25,370 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். அவர்களில் 18,881 மாணவர்கள் கணிதம் அல்லது தமிழுடன் சித்தி பெற்றுள்ளதுடன், மாகாணத்தின் மொத்த சித்தி வீதம் 74.42% ஆகக் காணப்படுகிறது.


மாவட்ட அடிப்படையில் பார்க்கும்போது, அம்பாறை மாவட்டம் 77.79% சித்தி வீதத்துடன் முதலிடத்திலும், மட்டக்களப்பு மாவட்டம் 75.78% சித்தி வீதத்துடன் இரண்டாம் இடத்திலும், திருகோணமலை மாவட்டம் 66.59% சித்தி வீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.


கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையிலான கல்முனை கல்வி வலயத்தின் தொடர்ச்சியான கல்வி முன்னேற்றம், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு அர்ப்பணிப்பின் விளைவாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இந்த பெறுபேறுகள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், எதிர்வரும் ஆண்டுகளிலும் மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்யும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இம்முறை அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 11,790 என குறிப்பிட்டார். 


மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளனர்.


அதனடிப்படையில், விஞ்ஞானத்தில் 70.1% மற்றும் கணிதத்தில் 72.03% மாணவர்கள் சித்தியடைந்துள்ளனரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில், கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தின் தரம் 8 மாணவர்களுக்கான நூலக விழிப்புணர்வு மற்றும் வாசிப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பொது நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் மற்றும் நூலக அபிவிருத்தித் திட்டப் பணிகளை முன்னெடுத்து வரும் ஆர்.எம். ஹஸன் ஆகியோர் மாணவர்களிடையே உரையாற்றினர்.

மேலும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (NISD) பல்கலைக்கழக மாணவர்களான எல். நுஸ்லா ரிஸ்னி, எம்.கே.எப். ஸனா அப்ரி மற்றும் ஏ.என்.ஏ. அத்னாப் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம், நூலகப் பயன்பாட்டின் நன்மைகள் மற்றும் அறிவுத் திறன் வளர்ச்சியில் வாசிப்பின் பங்கு குறித்து விளக்கமளித்தனர்.

நிகழ்வின் போது புரொஜெக்டர் வசதியுடன் பல்வேறு காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றதுடன், மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் குழுச் செயற்பாடுகளும் நடத்தப்பட்டன. "வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்" எனும் தொனிப்பொருளில் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் ஒரு அங்கமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்கும், நூலகங்களை திறம்பட பயன்படுத்தும் பண்பை வளர்ப்பதற்கும் முக்கிய பங்காற்றியதாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

 

நூருல் ஹுதா உமர்

மலேசியாவின் ஜென்டிங் ஹைலாண்ட்ஸில் நடைபெற்ற ஜென்டிங் இன்டர்நேஷனல் அபாகஸ் மனக்கணிதப் போட்டி 2026 இல் பங்கேற்ற இலங்கை மாணவர்கள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.


உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ICAM ABACUS நிறுவனத்தின் 38 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கடுமையான போட்டி நிலவிய இந்நிகழ்வில் ICAM மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றிகளைப் பெற்று சர்வதேச மட்டத்தில் தங்களது திறனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

போட்டி முடிவுகளின்படி, 14 முதல் இடங்கள், 17 இரண்டாம் இடங்கள், 24 மூன்றாம் இடங்கள், 10 நான்காம் இடங்கள், 11 ஐந்தாம் இடங்கள் என மொத்தமாக பல விருதுகளை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த வெற்றியானது அபாகஸ் மற்றும் மனக்கணிதக் கல்வித் துறையில் இலங்கை மாணவர்கள் கொண்டுள்ள திறமையையும், சர்வதேச அரங்கில் போட்டியிடும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
மாணவர்களின் இச்சாதனைக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், எதிர்காலத்திலும் சர்வதேச தரத்திலான போட்டிகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்து புதிய சாதனைகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடரும் என ICAM ABACUS நிறுவனம் தெரிவித்துள்ளது.

 


நூருல் ஹுதா உமர்

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் கல்முனை கல்வி வலயம் முன்னேற்றகரமான நிலையை அடைவதற்கு பங்களித்த பாடசாலை அதிபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கல்முனை பற்றிமா தேசிய பாடசாலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையில் அதிபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் (Commendation) வழங்கி வைக்கப்பட்டன.
கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும், மாணவர்களின் கல்வி அடைவுகளை உயர்த்துவதிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பாடசாலைகளின் அதிபர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டும் வகையில் இக்கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், எம்.எச். றியாசா, கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை கல்வி வலயத்தின் கல்வி வளர்ச்சிக்கும், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கும் பாடசாலை நிர்வாகங்களின் அர்ப்பணிப்பான பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக நிகழ்வில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.



 ( எம்.என்.எம்.அப்ராஸ்) 

கமு/கமு அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளின் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை நேற்று (09)பாடசாலையில் நடைபெற்றது. 

வகுப்பாசிரியர்களான எஸ்.எம்.ஏ.றிபாய், ஏ.டப்ளியு.எப்.நிப்றா மற்றும் தேசிய கல்விக் கல்லூரிப் பயிலுனர் ஆசிரியர்களான என்.ஆர்.கீர்த்தனா லக்சி, என்.நஸ்றீனா மற்றும் பெற்றோர்கள் ஆகியோரினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இம்மாதிரிச் சந்தையின் திறப்பு விழாவினை பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் றஸாக்,பிரதி அதிபர் எம்.வை.எம்.சாதீக்,உதவி அதிபர் இஷட்.ரி.ஸியாம் ஆரம்பப்பிரிவின் பகுதித்தலைவி எச்.ஆமினா பேகம் மற்றும் ஏனைய பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தரம் 03 ஆரம்ப பிரிவு மாணவர்கள் தமது கணித அறிவையும்,சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி, வியாபார நுனுக்கங்கள்,என்பவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக குறித்த பாடசாலை மாதிரி சந்தை நிகழ்வு இடம் பெற்றது. 

குறித்த சந்தையில் மாணவர்கள் தமது வீட்டுத்தோட்டத்தில் விழைந்த காய்கறிகள், தேங்காய், கீரை வகைகள்,பழங்கள்,உணவுப் பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர். சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை ஆசிரியர்கள்,பெற்றோர்கள் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.

 

நூருல் ஹுதா உமர்

மலேசியாவின் ஹென்டிங் (Genting) நகரில் நேற்று (04) நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற கல்முனை மாணவன் முஹம்மட் அனாகித் அம்றி இரண்டு போட்டி நிகழ்வுகளிலும் சர்வதேச அபாகஸ் போட்டியில்த்தைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

12 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இச்சர்வதேச போட்டியில், சாய்ந்தமருதில் இயங்கி வரும் தாருல் இல்மு கல்வி நிலையத்தின் ஐகம் அபாகஸ் பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முஹம்மட் ஹனீஸ் முஹம்மட் அனாகித் அம்றி (Level-1) தனது திறமையை வெளிப்படுத்தி இந்த சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

கல்முனை – 05, டாக்டர் ரிஸ்வி வீதியைச் சேர்ந்த எம்.எச். முஹம்மட் ஹனீஸ் மற்றும் ஏ.எம். பாத்திமா இன்ஸிரா தம்பதியினரின் புதல்வரான இம்மாணவர், குறுகிய காலப் பயிற்சியிலேயே சர்வதேச மட்டத்தில் தனது கணிதத் திறனையும் மனக்கணக்குத் திறமையையும் நிரூபித்துள்ளார்.

இந்த வெற்றி இலங்கைக்கும், குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கும், கல்முனை மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையாகப் பாராட்டப்படுகிறது. சர்வதேச அரங்கில் இலங்கை மாணவர்களின் அறிவாற்றலையும் போட்டித்திறனையும் வெளிப்படுத்தியுள்ள இச்சாதனை, இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.

மேலும், கடந்த பல ஆண்டுகளாக தாருல் இல்மு கல்வி நிலைய மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டிற்கும் வழங்கி வரும் பங்களிப்பு கல்வித்துறையில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.


 கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை


ஒரு சாம்பியன் பட்டம், இரு ரன்னர்-அப் வெற்றிகள்; 7 மாணவர்கள் மாகாண மட்டத்திற்கு தெரிவு


நூருல் ஹுதா உமர் 


கல்முனை கார்மல் பத்திமா கல்லூரியில் கடந்த 06.06.2026 அன்று இலங்கை பாடசாலை செஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (KM/KM.G.M.M.S) மாணவர்கள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


இப்போட்டியின் 10 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்ற ஏ.மிஷால் உமைர் சாம்பியன் பட்டத்தை வென்று தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார். அதேவேளை, 6 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.எச்.ஹஸிமா மர்யம் முதல் ரன்னர்-அப் இடத்தையும், 8 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.எச்.முஹம்மது ஹாஸிக் இரண்டாம் ரன்னர்-அப் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மேலும், எம்.எச்.ஹஸிமா மர்யம் (தரம் 1), எம்.எச்.முஹம்மது ஹாஸிக் (தரம் 3), எம்.ஏ.ஏ.அபீக் அஹமட் (தரம் 2), எம்.எஸ்.யூசுப் ஐமான் (தரம் 2), எம்.ரீ.எம். மஹ்தி ஹசன் (தரம் 3), ஏ.மிஷால் உமைர் (தரம் 4), எம்.ஏ.கே. அஹமட் ஸைன் மஹ்தி (தரம் 5) ஆகிய ஏழு மாணவர்கள் மாகாண மட்ட செஸ் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.


இளம் வயதிலேயே செஸ் விளையாட்டில் தமது திறமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள இம்மாணவர்களின் வெற்றி, பாடசாலைக்கும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்விச் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.


இம்மாணவர்களுக்கு வழிகாட்டி ஊக்கமளித்த பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பிரதி அதிபர் யூ.எல். றின்ஸா பர்வின், பயிற்றுவிப்பாளர்களான இஸ்மாயில் அஸ்லம் சுஜா மற்றும் எம்.ஏ.ஏ.அதீப் ஆகியோருக்கும், மாணவர்களின் வெற்றிக்கு பின்னணியில் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

 


2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. A/L) பரீட்சை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 09ஆம் திகதி நடைபெறவுள்ளது.

( வி.ரி. சகாதேவராஜா)

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவிற்கு
உட்பட்ட  அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாண்மைவிருத்தி செயலமர்வு,  தாந்தா மலை முருகனாலய அனுசரணையில்   பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (6) சனிக்கிழமை நடைபெற்றது.

 பட்டிப்பளை உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் செயலமர்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றினார்.

தாந்தா மலை முருகனாலய செயலாளர் எஸ்.சிறிதரன்( ஆசிரியர் )மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் கலந்து சிறப்பித்தனர்.


 15 பாடசாலைகளைச் சேர்ந்த 46 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்நிகழ்வின், ஒருங்கிணைப்பினை பிரதேச செயலக கலை கலாசார உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

உதவி பிரதேச செயலாளர் பார்த்திபன் உரையாற்றுகையில்..
சமய நிறுவனங்கள் சமூக அபிவிருத்தியில் பிரதான பங்காளிகளாக இருக்க வேண்டும் .சமூக ஒழுக்கத்தில் அறநெறி கல்வியின் பங்கு மிக முக்கியமானது. எனவே அறநெறி ஆசிரியர்கள் தங்கள் ஆளுமை விருத்தியை வளர்த்துக் கொள்வதன் மூலம் சமூக ஒழுக்கத்தை கட்டி எழுப்ப முடியும் என்றார்.

மூன்று வளவாளர்கள் கருத்தரங்கை நடாத்தினார்.

 


நூருல் ஹுதா உமர்


உலக சுற்றாடல் தினத்தை (ஜூன் 05) முன்னிட்டு, இயற்கையை பாதுகாப்பது தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் விசேட நிகழ்வு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்கான நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், ஒழுக்காற்று பொறுப்பாசிரியர் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் மூலம் மாணவர்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் சிறப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நூருல் ஹுதா உமர்


இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA) ஏற்பாட்டில் நடைபெற்ற மாகாண மட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் காரைதீவு பிரதேச சபை சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களும் பங்கேற்று தமது கருத்துக்கள் மற்றும் வாதங்களை முன்வைத்தனர். போட்டியின் இறுதியில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் 299 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகித்ததுடன், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் 254 புள்ளிகளைப் பெற்றனர்.

இதன்மூலம் 45 புள்ளிகள் வித்தியாசத்தில் காரைதீவு பிரதேச சபை வெற்றியீட்டியுள்ளது

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அறிவாற்றல், பகுப்பாய்வுத் திறன், பொதுக் கொள்கைகள் தொடர்பான புரிதல் மற்றும் மேடைப் பேச்சுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இவ்விவாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களின் இந்த வெற்றி, சபையின் செயற்பாட்டுத் திறன் மற்றும் உறுப்பினர்களின் விவாத ஆற்றலை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றிக்காக காரைதீவு பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்ற குழுவினருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

நூருல் ஹுதா உமர் 


கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த மல்டி மீடியா ப்ராஜெக்டர் ஒன்று வழங்கி வைக்கும் நிகழ்வு, பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் தலைமையில் (2026.06.03) பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த அன்பளிப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் பொறியியலாளர் திரு. அன்வர் சமீர் அவர்களின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இதற்கான வேண்டுகோளை பாடசாலை அதிபர் முன்வைத்திருந்ததுடன், DP Education நிறுவனத்தின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாண இணைப்பாளர் திரு. எம்.ஜே. மறூஸ் மற்றும் இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். சமீறுல் இலாஹி ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இது சாத்தியமானது.

பாடசாலையின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இந்த Multimedia Projector, அதிகாரப்பூர்வமாக அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்கள், மாணவர்களின் நலன் கருதி தனது வேண்டுகோளை ஏற்று சொந்த நிதியில் இத்தகைய மதிப்புமிக்க உதவியை வழங்கிய பொறியியலாளர் அன்வர் சமீர் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பாடசாலையின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் இந்த உதவி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 


(எம்.என். எம்.அப்ராஸ்) 


 சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ்.ரிசானா தலைமையில் இன்று (04)இடம்பெற்றது. 

கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) பிரதம அதிதியாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார். 

இதன் போது கெளரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் ,அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வெதமுல்ல ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வு சீன இலங்கை சகோதர பாசம் எனும் திட்டத்தின்கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

 மேலும் இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் ஆசியரியர்கள் மாணவர்கள்,பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 ( எம்.என்.எம்.அப்ராஸ்) 


 உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நடைபவனி மற்றும் கருத்தரங்கு மாவட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் இன்று (03/06/2026) இடம் பெற்றது.

இதன் போது பாடசாலை அதிபர் எம்.எம்.ஹிர்பகான், பிரதி அதிபர்களான எம்.எஸ்.நபார்,எம்.ஏ.எம்.சிறாஜ், உதவி அதிபர் ஏ.எம்.பாஹிம், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின்  மாவட்ட  உத்தியோகத்தர் கே.சிவக்குமார், ஆசிரியர்கள் மாணவர்கள்,கடல் சார் சூழல்  பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 சர்வதேச உலக சமுத்திர திமானது ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 08 திகதி உலகளாவிய ரீதியில்  அனுஷ்டிக்கப்படுகிறது. உலக சமுத்திர தினம்,உலக சுற்றாடல் தினத்தை சிறப்பிக்கும் முகமாக சுற்றாடல் அமைச்சானது ஜுன் மாதம் 01தொடக்கம் 08ம் திகதி  வரையான காலப்பகுதியை தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுதியுள்ளது இதனடிப்படையில் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையானது மாணவர்கள் ,பொதுமக்கள், ஏனைய அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கடல் சூழல் மாசடைதல், இதன் பாதிப்புகள், தற்காலத்தில் கடல்  சூழலை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


வி.சுகிர்தகுமார்          

 திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 50ஆம் ஆண்டு நிறைவு ' பொன்விழா' 2026.06.01 ஆம் திகதி சிறப்பாக கொண்டாடப்பட்டது
பாடசாலையின் அதிபர் இராமலிங்கம் தயானந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக  பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.நஸீர் ஏ.எம். நௌபர்டீன் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் ந. சுதாகரன், கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ். செல்வம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக இலங்கை வங்கி, ஒலுவில் கிளை முகாமையாளர் ரி.பிரபாகர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக உண்டியல்களும் வழங்கினார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் இக்கிராமத்தை கட்டிக் காத்து மக்களோடும் பாடசாலையோடும் ஒன்றிணைந்து செயற்பட்ட கிராமத் தலைவர் கிராமத்திற்காக உயிர் நீத்த மயிலாப்போடி அவர்கள் நினைவு கூரப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து திராய்க்கேணிக் கிராமத்தின் முதலாவது ஆசிரியரும் மட்டக்களப்பு வலய முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளருமான அழகையா சுகுமாரனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி தனது கிராமத்தின் பசுமையான பழைய நினைவுகளை மீட்டுப் பார்த்தார்.
இதேநேரம் அதிபர்களாக சேவை ஆற்றிய ஆறு அதிபர்களும் நினைவு கூரப்பட்டதுடன் எஸ். யோகராஜா,   எம். சண்டேஸ்வரன், கே. சுரேந்திரன்,
ஏ.யோககுமார் ஆகிய முன்னாள் அதிபர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
இப்பாடசாலை வரலாற்றில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 163 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவி ஜோகேஸ்வரன் மிதுர்ஷியா பாராட்டப்பட்டதுடன் சாதனை புரிந்த மாணவர்களுக்கான நினைவுச் சின்னம் வழங்கி அவர்களுக்கான பாராட்டுக்களும் இடம்பெற்றன.
பாடசாலையில் பொன்விழாவை நினைவு கூரும் வகையில் மலர் வெளியீடு ஒன்றும் இடம்பெற்றது  குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலை தற்பொழுது தரம் 01 தொடக்கம் 11 வரை தரம் உயர்த்தப்பட்டு மொத்தமாக 64 மாணவர்களைக் கொண்டு காணப்படுகின்றது.
இந்நிகழ்வில் கிராமத்தின் முன்னாள் மற்றும்  தற்போதுள்ள தலைவர்களும், கவிஞர் பாறுக் ( பாலமுனை பாறுக்)  அயல் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டதோடு, திராய்க்கேணி கிராம மக்களும் ஒன்று திரண்டு இந்நிகழ்வை சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.

 


நூருல் ஹுதா உமர்


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் E/24 மாணவர் குழுவினருக்கான கல்வி நிகழ்ச்சித் தொடக்க விழா 2026.06.01 ஆம் திகதி பொறியியல் பீடத்தின் சிவில் பொறியியல் கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்வில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், பதிவாளர் எம்.ஐ. நௌபர், நூலகர் எம்.எம். றிபாவுத்தீன், பேராசிரியர்கள், திணைக்களத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மின் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.ஐ.எஸ். ஜுஹானியா வரவேற்புரையாற்றியதுடன், இயந்திரப் பொறியியல் துறை விரிவுரையாளர் பொறியியலாளர் எச்.பி.ஏ. ஜயமினி  கல்விசார் பணியாளர்கள் சார்பில் உரையாற்றினார். இறுதியாண்டு மாணவர் டபிள்யூ.எஸ். உடவத்த புதிய மாணவர்களை வரவேற்றதுடன், சிவில் பொறியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் எம்.ஐ. இல்ஹாம் ஜெஸீல் சிரேஷ்ட கல்விசார் பணியாளர்கள் சார்பில் உரையாற்றினார்.

பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், புதிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, கல்விசார் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார். E/24 மாணவர்கள் பொறியியல் பீடத்தில் இணையும் 14ஆவது மாணவர் குழுவாக இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் புதிய மாணவர்களை வரவேற்று உரையாற்றுகையில், பல்கலைக்கழக வாழ்க்கை தனிநபர் மாற்றம் மற்றும் தலைமைத்துவ வளர்ச்சிக்கான முக்கிய கட்டமாகும் எனத் தெரிவித்தார்.

“பகிடிவதை ஒரு பாரம்பரியம் அல்ல; அது ஒரு நோய். அது மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சமூகப் புற்றுநோய்” எனக் குறிப்பிட்ட அவர், பகிடிவதை மற்றும் இணைய வழி பகிடிவதைக்கு எதிராக பல்கலைக்கழகம் “Zero Tolerance Policy” கொள்கையை கடைப்பிடிப்பதாக தெரிவித்தார்.

பரீட்சை முறைகேடுகள் தொடர்பிலும் கடுமையான எச்சரிக்கையை விடுத்த அவர், கல்விப் பயணத்தில் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் சொந்த முயற்சியே வெற்றிக்கான அடிப்படை என வலியுறுத்தினார். மேலும், எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்திக்கும் உலகளாவிய சவால்களுக்கும் தீர்வு காணும் பொறியியலாளர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சிரேஷ்ட கல்விசார் பணியாளர்கள் சார்பில் உரையாற்றிய பொறியியலாளர் எம்.ஐ. இல்ஹாம் ஜெஸீல், 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் பீடம் இன்று நவீன ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் நாட்டின் முன்னணி பொறியியல் கல்வி மையங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

 தொழிற்பயிற்சி, களப்பயணங்கள், தொழில்துறை இணைப்புகள் மற்றும் தேசிய மட்டப் போட்டிகள் ஊடாக மாணவர்கள் தொழில்முறை உலகிற்குத் தயார்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்விசார் பணியாளர்கள் சார்பில் உரையாற்றிய பொறியியலாளர் எச்.பி.ஏ. ஜயசிறி, E/24 மாணவர்கள் கடுமையான போட்டியை வென்று பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ள திறமையாளர்கள் எனக் குறிப்பிட்டார்.

 சுயகற்றல், ஒழுக்கம், குழுப்பணி, புதுமை மற்றும் தொழில்முறை பொறுப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக, பொதுக் கருப்பொருள் நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளரும் இயந்திரப் பொறியியல் துறை விரிவுரையாளருமான பொறியியலாளர் எஸ்.எம். சாஹிப் நன்றியுரையாற்றினார். நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

புதிய கல்விப் பயணத்தை ஆரம்பிக்கும் E/24 மாணவர்களுக்கு கல்வியாளர்கள், சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், பகிடிவதை மற்றும் பரீட்சை முறைகேடுகளற்ற ஒழுக்கமான பல்கலைக்கழகச் சூழலை உருவாக்கும் உறுதியுடன் நிகழ்வு நிறைவுற்றது.
 

 


கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்திற்கு கணனித்தொகுதி மற்றும் கதிரைகள் அன்பளிப்பு


நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய கமு/கமு/ அல்-பஹ்ரியா மகா வித்தியாலய பழைய மாணவிகள் சங்கத்தினால் பாடசாலை அலுவலகப் பாவனைக்கான கணனித்தொகுதி அன்பளிப்பும், எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த நவீன கற்கைகள் மண்டபத்திற்காக 50 கதிரைகள் எம்.பீ. முகையதீன் அவர்களின் மகன் எம்.எம். நளீம் முகையதீன் அவர்களினால் அன்பளிக்கும் நிகழ்வும், ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடலும் இன்று (02) எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.


பாடசாலை ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச். றியாஸா, என். வரணியா சாந்தரூபன், எம்.எல்.எம். முத்தரிஸ், அஸ்மா அப்துல் மலீக், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அசீஸ், அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர், கல்முனை பிர்லியண்ட் விளையாட்டுக்கழக பயிற்றுவிப்பாளர் யூ.எல். பழீல் உட்பட பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், பழைய மாணவிகள் சங்க நிர்வாகிகள், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் நலன்விரும்பிகள் மற்றும் அதிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வின் போது பாடசாலை நிர்வாகப் பணிகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக அலுவலகப் பயன்பாட்டிற்கான கணனித்தொகுதி பழைய மாணவிகளினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த நவீன கற்கைகள் மண்டபத்திற்கு 50 புதிய கதிரைகளும் எம்.பீ. முகையதீன் அவர்களின் மகன் எம்.எம். நளீம் முகையதீன் அவர்களின் பிரதிநிதியாக அவரது சகோதரர் நவாஸ் முஹைதீன் அவர்களினால் வழங்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் பெருநாள் சிறப்பு உணவுகளும் பரிமாறப்பட்டன. பாடசாலையின் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கி வரும் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் இந்தப் பணியை அதிபர் உள்ளிட்ட பாடசாலை சமூகம் பாராட்டியதுடன், எதிர்காலத்திலும் இத்தகைய ஒத்துழைப்புகள் தொடர வேண்டும் என நம்பிக்கை வெளியிட்டனர்.

 🚨 **Interview List Released**


📌 *Sri Lanka Planning Service Grade III (Open)*

📌 Interview List 02 Released

📅 Interview Date: 07.06.2026


Check your name in the interview list now.


🔗 https://www.guruwaraya.lk/2026/06/sri-lanka-planning-service-grade-iii.html


🇱🇰 ශ්‍රී ලංකා ක්‍රමසම්පාදන සේවය III ශ්‍රේණිය - සම්මුඛ පරීක්ෂණ ලැයිස්තුව නිකුත් කරයි.


🇱🇰 இலங்கை திட்டமிடல் சேவை தரம் III - நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியீடு.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.