Showing posts with label education. Show all posts



 நூருல் ஹுதா உமர்


தென்கிழக்கு பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையமும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் (NILET) இணைந்து நடாத்திய சிங்களம் மொழி (இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழி) கற்கை நெறியைப் பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் கலை நிகழ்ச்சியும் பலகலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர்கூடத்தில் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எச்.எம். நிஜாம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். கற்கை நெறியின் இணைப்பாளர் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபாரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் கயன் பொதுப்பிடிய கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டார்.

விசேட அதிதிகளாக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலிம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் ஷேய்க் எம்.எச்.ஏ. முனாஸ், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் முன்னிலை அதிதிகளாக தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அலுவலர் தேசகீர்த்தி தங்கராஜ் கல்யாணி மற்றும் வளவாலர்கலான ஜெ. ஏ. சனத் ஜயசிங்க, சரோஜா தேவநாயகம், எம். யசோதர்னி ,ஜெ. கல்பணி மற்றும் எஸ்.எம். ஜுவல்லரியின் உரிமையாளர் எஸ்.எம். றிப்னாஸ், எஸ்.எம்.எம். அப்சார்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

"அரசகரும மொழிக் கொள்கை ஊடாக இலங்கை பிரஜைகளுக்கு மகிழ்ச்சிகரமான சேவை " எனும் தொனிப்பொருளின் கீழ் பல்கலைக்கழக ஊழியர்கள் தங்கள் கடமைகளை இலகுவில் ஆற்றும் பொருட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து இவ்வாறான கற்கை நெறிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

வி.சுகிர்தகுமார்          

 திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட மட்டத்திலான அகில இலங்கை தமிழ் மொழி தினப்போட்டிகள் இன்று (15) அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியலாயத்தில் நடைபெற்றது.
பிரதிக்கல்வி பணிப்பாளரும் கோட்டக்கல்விப்பணிப்பாளருமான க.கமலமோகனதாசன் தலைமையில் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.குலேந்திரன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற தமிழ் மொழி தின அரங்க போட்டி நிகழ்வுகளில் வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள் பாடசாலைகளின் அதிபர்கள் நடுவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு இடம்பெற்றதுடன் இறைவணக்கம் தமிழ்மொழி வாழ்த்துப்பா தமிழ் வாழ்த்துப்பா பாடப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இதன் பின்னராக போட்டியின் நடைமுறைகள் மற்றும் நடுவர்களின் தீர்ப்புகள் தொடர்பில் பிரதிக்கல்விப்பணிப்பாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதேநேரம் தமிழ்மொழி தினத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் பாடசாலைகளில் இருந்து எழுமாறாக மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது தவிர்க்கப்பட்டு முறையாக போட்டிகள் நடாத்தி சிறந்த மாணவர்களை கோட்டமட்ட போட்டிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு அதிபர்கள் முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார்.
ஆங்கில மொழிக்கு வழங்கும் முக்கியத்தும் அதிகமாகவும் தமிழ் மொழிக்கு வழங்கும் முக்கியத்துவம் குறைந்து வருவதையும் தற்காலத்தில் அவதானிக்க முடிகின்றது. இது தவறான விடயமாகும். எப்போதும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இறுதியாக எழுத்தாக்கம் மற்றும் அரங்க நிகழ்வுகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் உடன் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, நேற்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் ஆரம்பமானது.

ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் பதில் உபவேந்தர் யூ.எல்.மஜீத் தலைமையில் சனி, மற்றும் ஞாயிறு இரு தினங்களாக நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில் ஆறு அமர்வுகளில் 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர்.

சனிக்கிழமை முதலாம் நாள் முதல் அமர்வில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கொடகொட பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இரண்டாம் அமர்வில் களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியர் கலாநிதி சீதா.பி. பண்டாரவும், மூன்றாவது அமர்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானியும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

முதல் நாளில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 172 மாணவர்களும், பொறியியல் பீடத்திலிருந்து  82 மாணவர்களும், தொழினுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாணவர்களும், கலை கலாச்சார பீடத்திலிருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இன்று இரண்டாம் நாள் முதல் அமர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல்  வசந்த குமாரவும் இரண்டாம் அமர்வில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ துறையின் பேராசிரியர் கலாநிதி மனோஜ் சமரதுங்கவும் மூன்றாவது அமர்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ரீ. வேல்நம்பியும் கலந்துகொண்டனர்.

இதன்போது முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திலிருந்து 378 மாணவர்களும் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் (FAC & FMC) 687 மாணவர்களுமாக 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர் என பதில் பதிவாளர் எம்.ஐ. நெளபர் தெரிவித்தார்.


 சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் மாணவனின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. 


இந்த சம்பவத்தால் தங்களது விரிவுரையாளர்கள் சம்மேளனம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளரும், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க கருத்து வௌியிடுகையில், இந்த துயர சம்பவத்திற்கு பகிடிவதையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்



 நூருல் ஹுதா உமர்


வெளியான க.பொ.த உயர்தர (2024) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் அருட். சகோ. ச. இ. ரெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையில் (30) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களை மாணவத்தலைவர்கள் மாலை அணிவித்து வரவேற்றதுடன் அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததோடு மாணவர்கள் அவர்களின் அனுபவப் பகிர்வினை கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

குறித்த மாணவர்களின் வெற்றிக்கு  உறுதுணையாக நின்று உழைத்த  ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு ஆசிரியர்களோடு இணைந்து செயற்பட்ட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு  இரவு பகல் பாராது அனைவரையும் வழி நடத்திய எமது அதிபருக்கும் விசேட நன்றிகளை  தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ் வெற்றிக்கு பக்கபலமாக நின்ற  பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சிய, அவுஸ்திரேலிய கிளைகளுக்கும், எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், Jubilee குழு உறுப்பினர்கள்  அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை  தெரிவிப்பதோடு இவ் பெறுபேற்றை பெற்று தந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.



 நூருல் ஹுதா உமர் 


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 2025.05.03 மற்றும் 2025.05.04 ஆம் திகதிகளில் ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் நடைபெறவுள்ளதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீதின் தலைமையிலும் வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையிலும் இடம்பெறும், இரண்டு நாட்களைக் கொண்ட குறித்த ஆறு அமர்வுகளைக்கொண்ட பட்டமளிப்பு விழாவில் 2077 மாணவர்கள் தங்களது பட்டங்களைப்பெற்று வெளியேறவுள்ளனர்.

நடைபெறவுள்ள ஒவ்வொரு அமர்விலும், முன்னணி அறிவியல்சார் நிபுணர் ஒருவர், முக்கிய உரையை ஆற்றவுள்ளனர். இதில் முதலாம் நாள் முதல் அமர்வில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி கௌரவ யசந்த கொட்டகொடவும் இரண்டாம் அமர்வில் களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கலாநிதி சீதா பி பண்டாரவும் மூன்றாவது அமர்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் மாண்புமிகு காலித் ஹமூத் அல்-கஹ்தானியும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இரண்டாம் நாள் முதல் அமர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத்தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல் வசந்த குமாரவும் இரண்டாம் அமர்வில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ துறையின் பேராசிரியர் கலாநிதி மனோஜ் சமரதுங்கவும் மூன்றாவது அமர்வில் யாழ் பலகலைக்கழகத்தின் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ரீ. வேல்நம்பியும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இடம்பெறவுள்ள பட்டமளிப்பு நிகழ்வில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து 172 மாணவர்களும் பொறியியல் பீடத்திலிருந்து 82 மாணவர்களும் தொழினுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்திலிருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திலிருந்து 378 மாணவர்களும் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் (FAC & FMC) 687 மாணவர்களுமாக 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.




 நூருல் ஹூதா உமர்


கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கான "Mindfulness" நினைவாற்றல் வாண்மை விருத்திச் செயலமர்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு வளவாளராக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் யூ.எஸ்.சபீல் கலந்து கொண்டார்.

பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஜெம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இக்கருத்தரங்கில்  பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் கலந்து பயன் பெற்றனர்.

 


நூருல் ஹுதா உமர்


மாணவர்களிடையே சனநாயக மரபுகளை மதித்தல் மற்றும் தலைமைத்துவ ஆற்றல்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட சமூக விஞ்ஞான பாடத்தின் இணைப்பாடவிதான செயற்பாடான மாணவர் பாராளுமன்றத்தை உருவாக்கும் பொருட்டு மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.சி.நஸ்லின் றிப்கா அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில் மாணவர் பாராளுமன்றத்திற்கு பொறுப்பான ஆசிரியர் அமீர் ஹுசைன் அவர்களின் தலைமையில் மிக நேர்த்தியாக இடம்பெற்றது. இச்செயற்பாட்டினை பாடசாலையின் சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள் சிறப்பாக திட்டமிட்டு நடாத்தினர்.

இந்த தேர்தல் நடவடிக்கையினை வலயத்தின் வலய பாராளுமன்ற இணைப்பாளர் ஆசிரிய ஆலோசகர் ஐ.எம். மௌசூர், சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர்களான முஹம்மட் தையூப், ஜுலூல் மற்றும் ஆங்கில பாடத்துக்கான வலய இணைப்பாளர் எம்.ஆரிப் அவர்களும் கண்காணிப்பு செய்தனர் .

இத்தேர்தல் நடிவடிக்கை செயற்பாடுகளுக்கு பிரதி அதிபர். ஐ எம். எஃப். மர்சுனா, உதவி அதிபர் அப்துல் கபூர் அவர்களும் ஏனைய ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கி மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்தனர்.



 ( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி 104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். 

 அவர்களில் மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும்,  நான்கு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்  என்று கல்லூரி அதிபர் ம.சுந்தரராஜன் தெரிவித்தார்.

அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு வந்து அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களை சந்தித்து நன்றிகளை பகிர்ந்து கொண்டார்கள். மாணவர்கள் மாலை சூட்டப்பட்டு வரவேற்கப் பட்டார்கள். பாராட்டப்பட்டார்கள்.

மருத்துவத் துறைக்கு மாணவர்களான எல். சரண் 3 ஏ,  ரி.கஜினி  ஏ 2பி ஜே.ஹேசுதன் 2 ஏபி பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள் .

பொறியியல் துறைக்கு என். தனுசாந்த் 3 ஏ, வி.விருட்சிகன் 3 ஏ,  ரி.யுகேஷன் ஏபிசி, ஆர்.மோனிஷன் 2 பிசி சித்திகளைப் பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள்.

கலைத் துறையில் என்.ஹீனுஸ்திகா கே.நிதுராஜ் ஆகியோர் 3 ஏ சித்திகளையும் பெற்றுள்ளார்கள்.

 


நூருல் ஹுதா உமர் 


புவியியல் தரவுகளை சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பான அடிப்படை கருத்துகள், கருவிகள் மற்றும் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தும் குறுகிய காலப் கற்கைநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (29) புவியல்த்துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் தலைமையில் இடம்பெற்றது.

பிராந்தியத்தின் கல்வி மேன்பாட்டில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பல்வேறு குறுங்கால கற்கை நெறிகளையும் முன்னெடுத்துவரும் சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழகத்தின் மூத்த பீடங்களில் ஒன்றான கலை கலாச்சார பீடமும் பல்வேறு குறுங்கால கற்கைநெறிகளை முன்னெடுத்து வருகின்றது. 

அதன் அடிப்படையில் புவியல்த்துறை ஆரம்பித்துள்ள Short course in Geo-Informatics கற்கைகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் இந்நிகழ்வுக்கு பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீதின் ஆலோசனையின் கீழ் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

நிகழ்வின்போது Short course in Geo-Informatics இன் இணைப்பாளர் விரிவுரையாள ஏ.எல். ஐயூப், சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம். கலில், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச். முகம்மட் றினோஸ், ஆகியோரும் துறைசார்ந்த உரைகளை நிகழ்த்தினர்.

விரிவுரையாளர் எம்.எச்.எவ். நுஸ்கியாவின் நன்றியுரையுன் முடிவுற்ற குறித்த நிகழ்வில் சமூகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் எஸ்.எம். ஐயூப், புள்ளிவிபரவியல் மற்றும் பொருளாதார துறையின் தலைவர் விரிவுரையாளர் எஸ். சந்திரகுமார், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல். பௌசுல் அமீர், கலாநிதி ஐ.எல். முகம்மட் சஹீர், எம்.என். நுஸ்கியா பானு சிரேஷ்ட உதவு பதிவாளர் எம்.ரீ. அஹ்மட் அஷ்ஹர் ஆகியோருடன் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களும் பங்குகொண்டிருந்தனர்.

 



நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முழுக்க முழுக்க மாணவர்களின் பங்களிப்புடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பகுதிகளை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு மாணவ பேரவையின் தலைவர் ஆர். ஹனாஸ் தலைமையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய  கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்-ஷேய்க் எம்.எச்.ஏ. முனாஸ் ஆகியோர் கலந்து கொண்டு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பகுதிகளை திறந்து வைத்ததுடன் மாணவர்களால ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் பங்கு கொண்டனர்.

இஸ்லாமிய  கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் புனரமைக்கப்பட்ட பெயர்ப்பலகை, சுற்றுச்சூழல் அழகுபடுத்தல், கட்டிடங்களுக்கான நிறப்பூச்சு, பீடத்துக்கு என அழகிய கூட்ட மண்டபம், புனரமைக்கப்பட்ட பீடாதிபதியின் காரியாலயம், பீடத்தின் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் என்பன மாணவர்களால்  புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய மாணவ பேரவையின் தலைவர் ஆர். ஹனாஸ், குறித்த வேலைத்திட்டங்களை தாங்கள் முன்னெடுப்பதற்கு ஒத்துழைத்த அத்தனை தனிநபர்களுக்கும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் குறிப்பாக ஒத்துழைப்பு வழங்கி பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் விஷேடமாக பூரண ஒத்துழைப்பு வழங்கிய பீடாதிபதி அஷ்-ஷேய்க் எம்.எச்.ஏ. முனாஸ் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். இவ்வாறான பணிகளை ஏனைய பீடங்களும் கையாண்டு தங்களது பீடங்களை அழகுபடுத்த முனைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



சப்றாஸ் நவாஸ், பேராசிரியர் எஸ்.எம்.எம். மஷாஹிர், பேராசிரியர் அஹ்மத் சர்ஜூன் ராசிக், பேராசிரியர் ஏ.எல்.எம். றியால், பேராசிரியர் ஏ.ஜௌபர் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர், பதில் நிதியாளர் சி.எம்.வன்னியாராச்சி, திணைக்களங்களில் தலைவர்கள் கலாநிதி ஏ. எம். றாசிக், கலாநிதி எஸ். எம்.எம். நபீஸ், ஐடியூ ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.ஏ. ரியாத் ரூலி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம்  சிரேஷ்ட, கனிஷ்ட விரிவுரையாளர்கள் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபார், வேலைப்பகுதி பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில், கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம். அஹமட் முனாஸ், மாணவ சங்கத்தின் நிர்வாகிகள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர









 பற்றிமாவின் 125 வது ஆண்டு நிறைவு நிகழ்வில் புதியதொரு உதவும் திட்டம் 
( வி.ரி.சகாதேவராஜா)

 கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 
 125 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான Helping a needed School நிகழ்வானது வெகு சிறப்பாக நேற்று முன்தினம் (26/04/2025) சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பற்றிமா மாணவர்களின் திறமையை மாத்திரம் வளர்க்காது பௌதிக வளம் குறைந்த வேறு பாடசாலை மாணவர்களுக்கு உதவும் வகையிலும் அவர்களின் திறமையை வளர்க்கும் விதத்திலும் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடே இந்நிகழ்வாகும்.

இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட வீரச்சோலையில் அமைந்துள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு காணப்பட்ட பௌதீக வளத்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான ஓர் நிகழ்வு அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் வழிகாட்டலில் இடம் பெற்றது. 

இதன்போது பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியருக்கான ஒரு வருடத்திற்கான ஊக்குவிப்பு தொகை வழங்குவதற்கு முதற்கட்டமாக முதல் மாதத்திற்கான ஊக்குவிப்பு பணம் கொடுக்கப்பட்டது.
 இந்த ஊக்குவிப்பு தொகையினை பாண்டிருப்பை சேர்ந்த பற்றிமா பழைய மாணவர் தற்போது லண்டனில் வசிக்கும் த. குமுதன் 2004 சாதாரண தரம் கல்வி பயின்ற மாணவரால் வருடத்திற்கு வழங்கப்பட இருக்கின்றது. 

மேலும் பற்றாக்குறையாக உள்ள சில விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான தளபாடங்கள் மற்றும் மாணவர்களின் கற்றலுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 குறித்தநிகழ்வை சிறப்பாக  ஒழுங்கமைத்த 125ஆவது ஆண்டு நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும்,உதவிகளை வழங்கிய நல்லுள்ளங்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும்  பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்தது.




 ( வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி 128  மாணவர்கள்  பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

07 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் 13 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை வலயத்தில் தனி ஒரு பாடசாலை இவ்வாறு  கூடுதலாக பெற்றது இப் பாடசாலையில் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி அதிபர் அருட்சகோ. எஸ்.இ.றெஜினோல்ட் கூறுகையில்..
எமது பாடசாலையில் இதுவரை 128 மாணவர்கள்  பல்கலைக்கழகத்திற்கு தகுதி  பெற்றுள்ளார்கள். 
அதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள் கூறுகிறேன்
என்றார்.


நூருல் ஹுதா உமர்


இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் 10 மாணவிகள் மருத்துவ பீடத்துக்கு செல்ல தகுதி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட 1,4,28,35,37,43,49,60,63,67 ஆகிய நிலைகளை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகள் பெற்றுள்ளனர். 

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நேற்று (26) வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மருத்துவ பீடத்துக்கு 10 மாணவிகளும், பொறியியல் பீடத்துக்கு 03 மாணவிகளும், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பம் 16 மாணவிகளும், வர்த்தக பீடத்துக்கு 12 மாணவிகளும், முகாமைத்துவ பீடத்துக்கு 08 மாணவிகளும் கலை கலாசார பீடத்துக்கு 48 மாணவிகள்  மற்றும் ஏனைய பீடங்கள் உள்ளடங்களாக சிறந்த சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் எமது பாடசாலைக்கு அதி சிறப்புச் சித்திகளை பெற்று பெருமை சேர்த்த மாணவிகளுக்கும், சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிகளில் அனைத்து வழிகளிலும் வழிகாட்டியாக இருந்து செயற்பட்ட கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS), பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், மேலதிக கருத்தரங்குகள் கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக  நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
 

 


நம்பிக்கை தொடங்கும் இடத்தில் கவலை முடிகிறது 👍

மருத்துவர் ஷாஃபியின் மகள் ஜெய்னாப் மூன்று 'ஏ' மதிப்பெண்கள் பெற்று மருத்துவ பீடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்டத்தில் 12வது இடத்தைப் பிடித்தார். குழந்தையாக இருந்தபோது பல போராட்டங்களைச் சந்தித்த அவர், நாட்டில் பெரும்பாலான மக்கள் தனது தந்தை மற்றும் குடும்பத்திற்கு எதிராக இருந்த காலத்தில் வளர்ந்தார்.


எல்லா கஷ்டங்களையும் மீறி, இன்று அவர் அவர்களைத் தாண்டி உயர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இதுதான் தைரியம் மற்றும் விடாமுயற்சியின் உண்மையான அர்த்தம். அல்லாஹ் அவளுக்கு மேலும் வெற்றி, மகிழ்ச்சி மற்றும் பலத்தை வழங்கி அவளை தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக

 


யாழில் சாதனை!


சற்றுமுன் வெளியாகியுள்ள கபொத உயர்தர பரீட்சை 2024பெறுபேறுகளில் யாழ் மருத்துவர் ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்கள் சாதனை!


இருவரும் உயிரியலில் 3A பெற்று மாவட்ட ரீதியில் 1ஆம், 2ஆம் இடங்களையும், நாடு தழுவிய ரீதியில் 3ஆம், 5ஆம் இடங்களையும் பெற்றுள்ளனர்.

 


2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 

www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிடலாம் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 



நூருல் ஹுதா உமர்


ஆசிரியர்கள், மாணவர்களின் கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளில் உளரீதியான மனப்பாங்குகளை மாற்றமடையச் செய்யும் நோக்குடன் வருடா வருடம் நடத்தப்படும் வகுப்பறைக் கவின் நிலை போட்டி கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவு கவின் கலை போட்டி  விதிமுறைகளுக்கு அமைவாக தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை நடைபெற்ற இப்போட்டியில் பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.அப்துல் ரஹ்மான், ஆரம்பப் பிரிவு வளவாளர் எம்.எம்.ஏ.ஹபீழ் ஆகியோர் பார்வையிட்டு மதிப்பீடுகளில் ஈடுபட்டனர்.

மேலும்  பாடசாலையின் கவின்கலை போட்டி இணைப்பாளர்களான ஆசிரியர் எம்.சீ.ஹிஜாஸ், ஆசிரியர் ஏ.ஆர். பைறூஸ் கான் ஆகியோரின் நெறிப்படுத்தல், மற்றும் ஒருங்கிணைப்பிலும் இந்நிகழ்வு நடைபெற்றது. பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ரீ.ஏ.முனாப்,  மற்றும் பாடசாலை முகாமைத்துவ குழு வின் சிரேஷ்ட ஆசிரியர் திரு. முஜிப்டீன்  ஆகியோர் இணைந்து இந் நிகழ்வை ஆரம்பித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.



#மாகாண_மட்டப்_போட்டியில் 3 #ஆம்_இடம் #பெற்றார்_அக்கரைப்பற்று_முஸ்லிம்_மத்திய #கல்லூரி_மாணவன்!!!!!

மாணவர்களின் வானியல் கல்வி தொடர்பான ஆர்வத்தை மேம்படுத்தும் பொருட்டு வானியல் ஒலிம்பியாட்  போட்டி நிகழ்வுகள் இவ்வருடம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன அந்தவகையில் எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் தரம் 9 இரு மொழிக் கற்கைப் பிரிவில் கல்வி பயிலும்  மாணவன் #N.#ஹுமைதி_அகமட்  அவர்கள் இன்று 19/04/2025 நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான இரு மொழிப் பிரிவு  வானியல் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வில் 3 ஆம் இடம் பெற்று எமது பாடசாலைக்கு பெருமையினைத் தேடித்தந்துள்ளார்.


இம்மாணவனை இந்நிகழ்வுக்காக தயார்படுத்திய எமது பாடசாலை #வானியல் #கழக பொறுப்பாசிரியர்களான #ALM.#நவாஸ்.#I.#அப்ரோஜ் #கானம்,#MM.#நைரூஸா ஆகியோருக்கும் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள் மற்றும் வலயக்கல்விப் பணிமனையின் விஞ்ஞானப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்,ஆசிரிய ஆலோசகர் ஏனைய விஞ்ஞானப் பாட மற்றும் வானியல் கழக பொறுப்பாசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் #AL.#நஸீபா_இக்பால்- SLPS அவர்க

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.