Showing posts with label education. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் சமூக சேவைகள் அமைப்புகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தவிர்க்குமாறு சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 20 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன மற்றும் ஒழுங்கற்ற சிகை அலங்காரங்களைச் செய்யாமல் இருப்பதற்கு சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



 சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் ஆராதனை மண்டப திறப்பு விழா  !


நூருல் ஹுதா உமர்

சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மாணவர்கள் அதிகமாகக் கொண்டுள்ள சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் புதியதாக அமைக்கப்பட்ட ஆராதனை மண்டபத்தின் திறப்பு விழாவும் வருடாந்த இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்வும் இன்று (15) பாடசாலை அதிபர் எம்.எஸ். ஆரிப் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், மாணவர்களின் ஆன்மீக மற்றும் ஒழுக்க வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆராதனை மண்டபம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மேலும் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி அஸ்மா அப்துல் மலிக், மட்டக்களப்பு கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம். அஸ்மி, ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், ஏனைய பாடசாலை அதிபர்கள், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் போது ரமலானின் ஆன்மீக முக்கியத்துவம், கல்வியின் அவசியம் மற்றும் சமூக ஒற்றுமையின் மதிப்பு குறித்து மார்க்க சொற்பொழிவை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சாய்ந்தமருது கிளை செயலாளர் மௌலவி நப்ராஸ் ஹனிபா நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் இப்தார் நோன்பு திறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பின்தங்கிய சூழ்நிலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆன்மீகமும் ஒழுக்கமும் சார்ந்த சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த ஆராதனை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மாணவர்களின் கல்வி மற்றும் நல்லொழுக்க வளர்ச்சிக்கு ஆதரவாக சமூகத்தின் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற

 


நூருல் ஹுதா உமர்

 
நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தொடரின் 9வது சபை அமர்வு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நாவிதன்வெளி பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கு. புவனரூபன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் பா. சதீஸ்கரன் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

அமர்வின் போது உரையாற்றிய தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்கள் விகிதாசார அடிப்படையில் பங்கீடு செய்து வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் நாவிதன்வெளி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அவர்களின் விகிதாசாரத்தில் படி அவர்களுக்கான ஒதுக்கீடுகளை நாம் செய்ய தயாராக இருக்கிறோம். தாம் இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிரானவர் என்றும், மக்களின் நலனே தமக்கான பிரதான குறிக்கோள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் போது நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை மீண்டும் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் சேர்க்க வேண்டுமெனும் பிரேரணையும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.நளீர் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

அந்தப் பிரேரணையில், நாவிதன்வெளி பிரதேசம் கல்வி, போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் குறைவாக காணப்படும் சவாலான பிரதேசமாக இருப்பதாகவும், இப்பகுதியில் அமைந்துள்ள பல பாடசாலைகள் முன்னர் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

அவ்வாறே, அவை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் இப்பகுதியில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் வெளியூரிலிருந்து தினசரி பயணம் செய்து வந்து கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

போக்குவரத்து சிரமங்கள், தூர இடைவெளி மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை காரணமாக கல்வி நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன் சில பாடங்கள் முறையாக கற்பிக்கப்படாமல் உள்ளதாகவும், மாணவர்கள் கல்வியில் பின்தங்கும் அபாய நிலையும் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே மேற்கண்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகளை மீண்டும் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் சேர்த்து, தேவையான ஆசிரியர் நியமனங்கள் மற்றும் தொடர்புடைய சலுகைகளை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கும் பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

மேலும் இப் பிரேரணைக்கு விரைவான மற்றும் சாதகமான நடவடிக்கை எடுத்து, நாவிதன்வெளி பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஆராய்ந்த சபை இந்த பிரேரணையை முன்னிறுத்தி ஆளுநர், உரிய அதிகாரிகள், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்றவற்றில் கோரிக்கை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது.

 

(வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில்,  சிரேஸ்ட மாணவ தலைவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் சின்னம் சூட்டும் நிகழ்வும் பாடசாலையின் அதிபர் அருட்.சகோ.ச.இ.ரெஜினோல்ட் FSC  தலைமையில் நேற்று (11) புதன்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது. 

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் பி.பற்குணன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.

சிரேஸ்ட மாணவர் தலைவர்களுக்கு கௌரவிப்பு மற்றும் சின்னம் சூட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதியை மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும், வருடாந்த இப்தார் வைபவமும் பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடத்தில் இன்று (10) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து மாணவர்களுக்குக் கையளித்தார்.

இதன் போது உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம், கல்முனை கல்வி வலயம் கடந்த காலங்களில் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதன் விளைவாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் மாணவர்கள் பல்வேறு கல்விச் சாதனைகளைப் பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும், மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதும் வலயக் கல்வி அலுவலகத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த புனரமைப்பு திட்டம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு மேலும் உந்துதலாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் தலைவருமான ரஹ்மத் மன்சூர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுடீன், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜே.டி. சில்வா, பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், வரணியா சாந்தரூபன், எம்.என்.எம்.ஏ. மலிக், அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், உதவி கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் அனுசரணையில் சிறப்பு இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமழான் மாதத்தின் ஆன்மிகச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்தனர். இதன்போது கணித ஒலிம்பியாட் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய தரம் 11 மாணவரான எம்.என்.எம். அன்சிப் தேசிய மட்டத்துக்கு தெரிவானமையை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.ம், வருடாந்த இப்தார் வைபவமும் பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடத்தில் இன்று (10) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து மாணவர்களுக்குக் கையளித்தார்.

இதன் போது உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம், கல்முனை கல்வி வலயம் கடந்த காலங்களில் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதன் விளைவாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் மாணவர்கள் பல்வேறு கல்விச் சாதனைகளைப் பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும், மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதும் வலயக் கல்வி அலுவலகத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த புனரமைப்பு திட்டம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு மேலும் உந்துதலாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் தலைவருமான ரஹ்மத் மன்சூர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுடீன், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜே.டி. சில்வா, பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், வரணியா சாந்தரூபன், எம்.என்.எம்.ஏ. மலிக், அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், உதவி கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் அனுசரணையில் சிறப்பு இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமழான் மாதத்தின் ஆன்மிகச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்தனர். இதன்போது கணித ஒலிம்பியாட் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய தரம் 11 மாணவரான எம்.என்.எம். அன்சிப் தேசிய மட்டத்துக்கு தெரிவானமையை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும், வருடாந்த இப்தார் வைபவமும் பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடத்தில் இன்று (10) நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து மாணவர்களுக்குக் கையளித்தார்.


இதன் போது உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம், கல்முனை கல்வி வலயம் கடந்த காலங்களில் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதன் விளைவாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் மாணவர்கள் பல்வேறு கல்விச் சாதனைகளைப் பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.


மேலும் பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும், மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதும் வலயக் கல்வி அலுவலகத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த புனரமைப்பு திட்டம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு மேலும் உந்துதலாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் தலைவருமான ரஹ்மத் மன்சூர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுடீன், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜே.டி. சில்வா, பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், வரணியா சாந்தரூபன், எம்.என்.எம்.ஏ. மலிக், அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மேலும் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், உதவி கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


நிகழ்வின் இறுதியில் ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் அனுசரணையில் சிறப்பு இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமழான் மாதத்தின் ஆன்மிகச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்தனர். இதன்போது கணித ஒலிம்பியாட் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய தரம் 11 மாணவரான எம்.என்.எம். அன்சிப் தேசிய மட்டத்துக்கு தெரிவானமையை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


 நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன் தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு


நூருல் ஹுதா உமர்

2026 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி கடந்த 07ஆம் திகதி திருகோணமலை சென் மேரீஸ் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரிவு III (தரம் 9, 10, 11) பிரிவில் கலந்து கொண்ட நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் மாணவன் எஸ். அப்லி ஹுமைத் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாணவனின் இந்த சாதனைக்கு அவரது பெற்றோர், பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர், கணிதப் பாட இணைப்பாளர் எம்.ஐ.நவாஸ், ஆசிரியர்களான எஸ்.எம்.சஜிதா பானு, கே.எல்.. ஃபைசா, ஏ.வாஹேசன், ஐ.எல்.இஸ்திகார் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொண்ட உதவி அதிபர் எம்.எம்.எம்.உவைஸ் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் வாழ்த்துச் செய்தியை  வெளியிட்டு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளது.

 


நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட “ஸ்மார்ட் வகுப்பறை, அதிபர் காரியாலயம் மற்றும் நூலக திறப்பு விழாவும்” புனித ரமழான் மாதத்தின் ஆன்மிக நன்மை நிறைந்த தருணத்தை முன்னிட்டு வருடாந்த இப்தார் நிகழ்வும் இன்று 2026.03.07 ஆம் திகதி பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பறை, நூலகம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அதிபர் காரியாலயம் அடங்கிய கல்வி வசதிகளை திறந்து வைத்து மாணவர்களுக்குக் கையளித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து விருந்தினர்களையும் வரவேற்று நன்றியைத் தெரிவித்தார். கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரின் சிபாரிசின் பேரில் PSC திட்டத்தின் கீழ் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலைக்கான ஸ்மார்ட் லேர்னிங் சென்டர், நூலகம் மற்றும் அதிபர் காரியாலயம் ஆகியவை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு பாடசாலையின் அபிவிருத்தியில் சமூக நலன்விரும்பிகள், கல்வி அதிகாரிகள் மற்றும் பல தரப்பினரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக இருப்பதாகவும், இவ்வாறான உதவிகள் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக அமைகின்றன என்றும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்திலும் இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ரமழான் மாதத்தின் புனிதமான தருணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இப்தார் நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், நோன்பு மனிதர்களின் உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் ஒரு ஆன்மிகப் பயிற்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை மற்றும் தியாகம் போன்ற உயர்ந்த பண்புகளை நோன்பு மனிதர்களுக்கு கற்றுத் தருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கொண்டு வரும் ஒரு திறமையான தலைமை ஆசிரியராக அவர் விளங்குகிறார் என்றும் அவர் பாராட்டினார்.

எல்லைப்புறப் பகுதிகளில் உள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக இவ்வாறான பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்குவது கல்வி நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும், எதிர்காலத்திலும் இத்தகைய பாடசாலைகளுக்கு அபிவிருத்தித் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கணக்காளர் கந்தையா லிங்கேஸ்வரன், பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபீர், வரணியா சாந்தரூபன், ஏ.எம். ஹஸீன்,யூ.எல். றியால், எம்.எல்.எம். முத்தரிஸ், அஸ்மா அப்துல் மலிக் மற்றும் ஆனந்தகுமாரசாமி சஞ்சீவன் ஆகியோர் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். முக்தார், உதவி கல்விப் பணிப்பாளர்கள், சக பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மார்க்க சொற்பொழிவை கலாச்சார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எம். தௌபீக் (நளீமி) நிகழ்த்தினார்
நிகழ்வின் இறுதியில் சிறப்பு இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமழான் மாதத்தின் ஆன்மிகச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்தனர்


 ( வி.ரி.சகாதேவராஜா)


 அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில்  வெற்றி ஈட்டிய  சம்மாந்துறை வலய றாணமடு இந்துக் கல்லூரி மாணவர்களான ரி. கிறிஸாந்த் மற்றும் வி. றுஸானன் ஆகியோரை பாராட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர்  கே. கதிரைநாதன் தலைமையில் நேற்று 2026.03.06 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .

இதில் சிறப்பு அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகர்  எஸ். எல். அப்துல் முனாப் கலந்து சிறப்பித்தார். 

மேலும் இம்மாணவர்களுக்கு கற்பித்த வழி நடாத்திய ஆசிரியர்களான  வி. தேவேந்திரன் திருமதி ஆர். கவிதீஸன் ரூபினி ஆகியோரையும் கல்லூரி சமூகம் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை  முன்னிட்டு, பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில், அல்-அர்சாத் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று  நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.பீ.எம். ரஸாட்  விசேட வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், அல் - அர்சாத் மகா வித்தியாலய அதிபர் எம். அப்துல் றஹிம், சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் திருமதி யூ.எஸ்.எம்.சதாத், நிதி உதவியாளர் ஐ.கே.சித்தி நஜீமா,  பாடசாலையின் பிரதி அதிபர் எம்.சவாஹிர், ஆசிரியர் மெளலவி ஐ.எல்.அப்துல் மனாப், சம்மாந்துறை பிரதேச செயலக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை உத்தியோகத்தர் ஏ.ஜே.எம். இக்றாம், மாணவர்கள், பெற்றோர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

 


அஸ்லம் எஸ். மெளலானா, நூருல் ஹுதா உமர்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை இம்முறை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர (A/L) புதிய வகுப்புகள் எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபை தனது ஆன்புல எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு கண்டிப்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

பெற்றோர்கள் மற்றும் பொது நல அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மாணவர்களின் மனநலம் மற்றும் உடல் ஓய்வு தேவைகளை முன்னிறுத்தி இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தெரிவித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த உடனேயே, க.பொ.த. உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்காக சில தனியார் கல்வி நிலையங்கள் போட்டியிடுகின்றன எனப் பெற்ற முறைப்பாடுகள் மாநகர சபைக்கு கிடைத்துள்ளன. இதனால் மாணவர்கள் ஓய்வின்றி கல்விச் சுமைக்கு உள்ளாகின்றனர் என்ற கவலையும் எழுந்துள்ளது.

மேலும், இவ்விடயத்தில் முன்னர் வழங்கப்பட்ட ஆலோசனைகளைப் பொருட்படுத்தாமல் சில கல்வி நிலையங்கள் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது கவலைக்குரிய ஒன்றாகும் என மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மார்ச் 25ஆம் திகதிக்கு முன்பாக A/L வகுப்புகளை ஆரம்பிக்கும் கல்வி நிலையங்களின் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.

மாணவர்களின் நலனை முன்னிறுத்தி பெற்றோர்களும் கல்வி நிலையங்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.



(வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த H.N.D. in English பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பட்டதாரிகள், தங்களுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படாததைத் தொடர்ந்து,  தமக்கு நியமனம் வழங்க கோரி அமைச்சரிடம் அதிகாரப்பூர்வ மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒன்றிய தலைவர் கணேசராஜா கேதிக்ஷன் அது தொடர்பான மகஜரை, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் குறித்த பாடநெறியில் கல்வி பயின்ற மாணவர்கள், நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டங்களையும் பயிற்சிகளையும் முழுமையாக நிறைவு செய்து, 2024 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றுள்ளனர். எனினும், நிர்வாக தாமதங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக அவர்களுக்கு இதுவரை அரசாங்க நியமனம் வழங்கப்படவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரசு ஆங்கில ஆசிரியர் விண்ணப்பங்களை கோரி கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2024  இல் போட்டி பரீட்சை வைத்து ஒரு தொகுதியினருக்கு நியமனம் வழங்கியது. பின்னர் பட்டதாரிகளுக்கு மாத்திரம் 2024  இல் நியமனம் வழங்கியது .

இவற்றில் நாங்கள் பாதிக்கப்பட்டோம்.

நீண்டகாலமாக கல்வி பயின்று தகுதி பெற்றுள்ள டிப்ளோமா பட்டதாரிகள் நாம் வேலைவாய்ப்பு இன்றி இருப்பது அவர்களின் பொருளாதார நிலைமைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், வயது ஏறி வருவதாகவும்,குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், நாட்டின் கல்வித்துறையில் ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கான தேவைகள் அதிகரித்து வரும் இந்நிலையில், தங்களது தகுதிகளை பயனுள்ளதாக பயன்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பயின்று தகுதி பெற்றுள்ள டிப்ளோமா பட்டதாரிகள் நாம் வேலைவாய்ப்பு இன்றி இருப்பது அவர்களின் பொருளாதார நிலைமைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், வயது ஏறி வருவதாகவும்,குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 நிறைவு செய்த அனைத்து டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் விரைவாக நியமனம் வழங்க கல்வி அமைச்சர் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. தேவையெனில் நிபந்தனையுடன் பட்டப்படிப்புக்கான தேவையை பூர்த்தி செய்யவும் தயாராக இருக்கிறோம். 


இவ்விடயம் தொடர்பாக சாதகமான தீர்வு கிடைக்கும் என பட்டதாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


இலங்கை ஆசிரியர் சேவையின் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்கும் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலில் (2026.02.02) சில தகுதிக்கான காலப்பகுதிகள் தற்போது திருத்தப்பட்டுள்ளன.

முக்கிய திகதி மாற்றங்கள்:

1. தகைமை பூர்த்தி செய்ய வேண்டிய திகதி

கல்வி மற்றும் ஏனைய தகைமைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டிய கடைசி திகதி 2026 மார்ச் 05 வரை நீடிக்கப்பட்டுள்ளது. (முன்னர் இது 2025.06.30 ஆக இருந்தது) .

விண்ணப்பதாரிகள் 10.02.2023 அன்றைய திகதியில் தமக்குரிய வயது எல்லையை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

2. 10.02.2023 அன்று அரச சேவையில் இருந்த பட்டதாரிகளுக்கு பின்வரும் நிபந்தனைகளின் கீழ் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது:

-தற்போது சேவையில் உள்ளவர்கள்: 10.02.2023 அன்று 40 வயதை தாண்டாதவர்கள் மற்றும் 2026.03.05 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

-விலகியவர்கள்: 10.02.2023 அன்று அரச சேவையில் இருந்து, பின்னர் முறையான அனுமதியுடன் விலகியவர்களும் 2026.03.05 இற்கு முன்னர் பட்டப்படிப்பை முடித்திருந்தால் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.

மாகாண ரீதியான நியமனங்கள்:
விண்ணப்பதாரிகள் தமது நிரந்தர வதிவிட மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மாகாணத்திற்கு வெளியே நியமனம் பெறுபவர்களுக்கான நிபந்தனைகளை அந்தந்த மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தீர்மானிக்கும்.

பாடங்களுக்கான வெற்றிடங்கள்:
விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் (ICT), தொழில்நுட்பவியல் மற்றும் ஆலோசனை வழிகாட்டல் போன்ற பல்வேறு பாடங்களுக்காக மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் அடங்கிய புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.



 ( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தின், நாவிதன்வெளி பிராந்தியத்தில் முதல் சட்டத்தரணியாக  ஜனுஷா விக்னராசா தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கற்று சிறப்பு சித்தியெய்தி முதல் சட்டத்துறை மாணவியாக ஜனுஷா விக்கினராசா தெரிவாகி இருந்தார்.

நாவிதன்வெளி ஏழாம் கிராமத்தைச் சேர்ந்த செல்வி ஜனுஷா,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை  நிறைவு செய்து சட்டத்துறையில் பட்டம் பெற்ற முதல் மாணவியாக 7ம் கிராமத்துக்கும், நாவிதன்வெளி பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவருக்கு பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவரது சாதனையையொட்டி சரமாரியாக வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

 


ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டதற்காக, கலைப் பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஃபஸீஹா அஸ்மிக்கு பேராதனைப் பல்கலைக்கழகம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


இந்த சிறப்புமிக்க நியமனம், அவரது சிறந்த புலமை, தலைமைத்துவம் மற்றும் பொது சேவைக்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், நமது பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பெருமைமிக்க தருணமாகும். இந்த முக்கியமான இராஜதந்திரப் பணிக்காக மிகவும் தகுதியான நபரைத் தேர்ந்தெடுத்ததற்காக இலங்கை அரசாங்கத்தை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், இலங்கையை சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் பேராசிரியர் ஃபஸீஹா அஸ்மிக்கு அனைத்து வெற்றிகளையும் வாழ்த்துகிறோம்.

வாழ்த்துகள் மற்றும் நல்வாழ்த்துக்கள்!

 


நூருல் ஹுதா உமர், ஜெஸ்மி மூஸா


கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ. முகம்மட் ஆரிப் அவர்கள் 35 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அதேபோன்று, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.எம். ஜவ்பர் அவர்கள் 28 வருட சேவைக்குப் பின் ஓய்வு பெற்றுள்ளார்.

இரு அதிகாரிகளுக்கும் கௌரவமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, ஓய்வு பெறும் அதிகாரிகளின் நீண்டகால அர்ப்பணிப்பையும் நேர்மையான சேவையையும் பாராட்டிப் பேசினார். அவர்களின் சேவை கல்வித் துறைக்கு அளித்த பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் எனக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் கணக்காளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் பங்கேற்று, தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம். ரியாசத் அவர்கள் ஓய்வாளர்களை வாழ்த்தி சிறப்புப் வாழ்த்துப்பா வினை வடித்து வாசித்தார். இந்த நிகழ்வின் நிறைவாக, ஓய்வு பெற்ற அதிகாரிகள் இருவரும் பொன்னாடை போர்த்தி, பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களின் ஓய்வு வாழ்க்கை ஆரோக்கியத்துடனும் அமைதியுடனும் அமைய அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 


2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாடு முழுவதும் இன்று (17)  ஆரம்பமாகின்றன.


இம்முறை பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள் மற்றும் பரீட்சார்த்திகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வருமாறு:


பரீட்சை விபரங்கள்


பரீட்சை நிலையங்கள்: 3,545

மொத்த பரீட்சார்த்திகள்: 451,463

நேரம்: காலை அமர்வு 8.30 மணிக்கும், மதிய அமர்வு 1.30 மணிக்கும் ஆரம்பமாகும்.


பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே நிலையங்களுக்கு வருகை தர வேண்டும்.


பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள விசேட அறிவிப்பின்படி, கடந்த வருடங்களை விட இம்முறை 5, 6, 7 மற்றும் 8 ஆம் நாட்களில் பாட ஒழுங்கமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான அட்டவணைகளை நம்பாமல், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது பேஸ்புக் பக்கத்தில் உள்ள அட்டவணையை மாத்திரம் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


பரீட்சார்த்திகளுக்கான முக்கிய விதிமுறைகள்

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் கட்டாயம். (தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்திய தற்காலிக அட்டை அனுமதிக்கப்படும்).


கைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், புளூடூத் சாதனங்கள் மற்றும் எவ்விதமான குறிப்புகளும் கொண்டு வரக்கூடாது.

விடைத்தாளில் 'திப்பெக்ஸ்' (Tipp-Ex) பயன்படுத்தக் கூடாது. தவறு நேர்ந்தால் ஒரு கோட்டினால் குறுக்காக வெட்டிவிட்டு எழுத வேண்டும்.


முகம் தெளிவாகத் தெரியும் வகையில் (அடையாளம் காணக்கூடியவாறு) பரீட்சை நிலையத்திற்கு வர வேண்டும்.


  • வினாத்தாளைப் பெற்றவுடன் அறிவுறுத்தல்களைத் தெளிவாக வாசித்து, அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • பரீட்சை சுட்டெண்ணைத் (Index Number) துல்லியமாகக் குறிப்பிட வேண்டும்.
  • கையெழுத்துத் தெளிவாக இருப்பதுடன், விடைத்தாள்களைச் சரியாக நூலால் கட்டி ஒப்படைக்க வேண்டும்.
  • ஏனைய பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால், பரீட்சைப் பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


பரீட்சார்த்திகள் அனைவரும் பதற்றமின்றி, நேர முகாமைத்துவத்துடன் பரீட்சைக்குத் தோற்றுமாறு பரீட்சை திணைக்களம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய கெடட் (Cadet) பிரிவு மாணவர்கள், தேசிய கெடட் படையணி (NCC) 38வது படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஒரு நாள் பயிற்சி முகாமில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களை பாடசாலை அதிபர் கே.எல்.ஏ.ஜஃபர், பிரதி அதிபர்கள் எம்.எச். லாபீர் மற்றும் ஏ.பி.ரோஷன் டிப்ராஸ், தரம் 11 பகுதி தலைவர் ஏ.எல்.எம்.இர்ஷாத், பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம்.நுஸ்கி ஆகியோர் நேரில் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். மாணவர்களின் தன்னம்பிக்கைமிக்க முயற்சிக்கு அவர்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

பயிற்சி முகாமின் முக்கிய அம்சங்களாக தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்துதல், இராணுவ ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நேர மேலாண்மை திறனை வளர்த்தல் மற்றும் உடல் வலிமையை உயர்த்தும் பல்வேறு களப்பயிற்சிகள் இடம்பெற்றன. இப்பயிற்சிகள் அனைத்தும் தேசிய கெடட் படையணியின் 38வது படைப்பிரிவினரால் திறம்பட முன்னெடுக்கப்பட்டன.

மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட பொறுப்பாசிரியர் மேஜர் எம்.எஸ்.எஸ்.சிப்லி அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.

நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்./ அஸ்ரப் வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு குழு மீளமைப்பும் அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் விமரிசையாக வியாழக்கிழமை (12) நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீனின் வழிகாட்டலில், பிரதி அதிபர் எப்.எம்.ஆர்.ஹாதிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பாடசாலையின் ஒழுக்கம் மற்றும் வழிகாட்டல் ஆலோசனைப் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம். றிபாஸ் அவர்கள் நிகழ்வை முழுமையாக நெறிப்படுத்தினார்.

நிகழ்வின் தொடக்கத்தில் உரையாற்றிய பிரதி அதிபர், தற்போதைய சவால்கள் நிறைந்த சமூக சூழலில் மாணவர்களின் பாதுகாப்பையும் ஒழுக்கத்தையும் பேணுவதில் சிறுவர் பாதுகாப்பு குழுவின் முக்கியத்துவத்தை விளக்கினார். மாணவர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வ. குகராஜ் அவர்கள் கலந்துகொண்டு, சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்பு முறைகள், தற்காப்பு நெறிமுறைகள் மற்றும் சுய பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கினார்.

நிகழ்வின் இறுதியில் 2026 ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு குழுவின் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் எதிர்வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகளில் முன்னணி வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் யூ.எல்.என். ஹுதா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நூருல் ஹுதா உமர்


கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்கள் பகுதிக்கான புதிய நுழைவாயில் திறப்பு விழா பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு 2000 ஆம் ஆண்டு சாதாரண தரம் எழுதிய இப்பாடசாலை மாணவர் குழுவும், 2003 ஆம் ஆண்டு உயர்தரம் எழுதிய மாணவர் குழுவும் பூரண அனுசரணை வழங்கியிருந்தனர். அவர்களின் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக கல்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தின் கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் 2003ஆம் ஆண்டு மாணவர் குழுவினரும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.