Showing posts with label education. Show all posts


நூருல் ஹுதா உமர்

அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர (சாதாரண) தரப் பரீட்சையில் (2022) கிழக்கு மாகாணத்தில் 26,874 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் 712 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி அடைந்துள்ளனர். மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 136 மாணவர்களும், கல்முனை கல்வி வலயத்தில், 122 மாணவர்களும், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் 112 மாணவர்களும் என ஆகக் கூடிய எண்ணிக்கையில் 9A சித்தி பெற்றுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் 373 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர். அதில் கிண்ணியா கல்வி வலயத்தில் 54 மாணவர்களும், திருகோணமலை கல்வி வலயத்தில் 50 மாணவர்களும், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் 38 மாணவர்களும், கந்தளாய் கல்வி வலயத்தில் 38 மாணவர்களும், கல்முனை கல்வி வலயத்தில் 25 மாணவர்களும் சகல பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.

மாணவர்கள் சித்தியடைந்த அடிப்படையில் கல்வி வலயங்களின் தரவரிசையில் இம்முறை முதலிடத்தை மட்டக்களப்பு கல்வி வலயம் தனதாக்கி கொண்டுள்ளதுடன் கல்முனை கல்வி வலயம் இரண்டாம் இடத்திலும், மகா ஓயா கல்வி வலயம் மூன்றாவது இடத்திலும், அக்கரைப்பற்று கல்வி வலயம் நான்காவது இடத்திலும், சம்மாந்துறை கல்வி வலயம் 11 வது இடத்திலும் உள்ளதுடன் இறுதி இடமான வலயம் 17 வது இடத்தில் கிண்ணியா கல்வி வலயம் உள்ளது.

 


 (எம்.என்.எம்.அப்ராஸ்) 


கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு நாள் சாரணர் பயிற்சி முகாம் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஆர்.எம்.நௌஸாத் வழிகாட்டலில் இன்று(02) பாடசாலையில் நடைபெற்றது. 

இதில் பிரதம வளவாளர்களாக மேஜர் கே.எம்.தமிம், உதவி மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.எம். இப்றாஹிம்,உதவி மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஏ.சலாம்(தொழிநுட்பம்)ஆகியோரும் பாடசாலை சாரணர் குழு பொருப்பாசிரியர் ஏ.ஜே.எம்.சஸான் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான எம்.ஜே.எம்.முபீத்,
ஏ.ஜே.எம்.சாபித் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

குறித்த சாரணர் பயிற்சி முகாமினை கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் சகுதுல் நஜீம் மற்றும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் யூ.எல்.றியாழ், பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ராஸாக் ஆகியோர் பார்வையிட்டதுடன் மாணவர்களும் ஆலோசனை வழிகாட்டல்களையும் மேற்க்கொண்டனர்.

 


இலங்கையிலுள்ள தேசிய

கல்வியியல் கல்லூரிகள்.

(National College of Education)


தேசிய கல்வி நிறுவனம் NCOE இன் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்புக்கு பொறுப்பாகும்.


பாடத்திட்டங்கள் தயாரித்தல், கற்றல் / கற்பித்தல் மற்றும் மதிப்பீடு.


1. அட்டாளச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி


2. மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி


3. தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரி


4. ஹபிடிகம் தேசியக் கல்வியியல் கல்லூரி


5. யாழ் தேசியக் கல்வியியல் கல்லூரி


6. மகரகம தேசியக் கல்வியியல் கல்லூரி


7. மகாவெலி தேசியக் கல்வியியல் கல்லூரி


8. நில்வல தேசியக் கல்வியியல் கல்லூரி


9. பஸ்துன்ரட்டா தேசிய கல்வியியல் கல்லூரி


10. பேராதனை தேசிய கல்வியியல் கல்லூரி


11. புலதிசிபுர தேசிய கல்வியியல் கல்லூரி


12. ருஹுன தேசிய கல்வியியல் கல்லூரி


13. ருவன்புர தேசிய கல்வியியல் கல்லூரி


14. சரிபுத்த தேசியக் கல்வியியல் கல்லூரி


15. சியான் தேசியக் கல்வியியல் கல்லூரி


16. ஸ்ரீ பாத தேசிய கல்வியியல் கல்லூரி


17. ஊவா தேசிய கல்வியியல் கல்லூரி


18. வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி


19. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரி

 


( வி.ரி.சகாதேவராஜா)

நேற்று வெளியான க. பொ. த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி *காரைதீவு பிரதேச பாடசாலைகளில் மொத்தமாக 24 மாணவர்கள் 9A* சித்திகளை பெற்றுள்ளனர்.

காரைதீவு இ.கி.ச பெண்கள் பாடசாலையில் 17 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

விபுலாநந்த மத்திய கல்லூரியில் 05 மாணவர்களும்
சண்முகா மகா வித்தியாலயத்தில்  02 மாணவர்களும் 9 ஏ சித்தி பெற்றுள்ளனர்.

காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஆ.சஞ்சீவன் சிறப்பு சித்தி பெற்ற 24 மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.


நூருல் ஹுதா உமர் 

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தில் 2023.11.30ஆம் திகதி இடம்பெற்ற பீடத்தினுடைய பேராசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பேராசிரியர், கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சம்

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தினால் அப்பீடத்தினுடைய பேராசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்தமைக்காக நன்றி தெரிவிக்கின்றேன். குறிப்பாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக மிகவும் பிரயத்தனப்பட்ட பீடத்தினுடைய பீடாதிபதி அஷ்ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ் அவர்களுக்கு எனது விசேடமான நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பேராசிரியராகப் பதவி உயர்வு பெறுவதற்கான எனது பயணம் கிட்டத்தட்ட 25 வருடங்கள் கொண்டது. அப்பயணம் மலர்கள் தூவிய அழகிய பயணமாக அமையவில்லை. மாறாக அது கரடுமுரடானதாகவும் பல்வேறு இன்னல்களைத் தரக்கூடியதாகவுமே இருந்தது. 1995இல் நான் தற்காலிக விரிவுரையாளராக இணைந்து கொண்ட போது மிக எளிமையான, அடிப்படை வசதிகள் கூட இப்பல்கலைக்கழகத்தில் இருக்கவில்லை. இஸ்லாமிய கற்கைகள் பாடத்தைப் பொறுத்தளவில் அப்போது இருவர் மாத்திரமே விரிவுரையாளர்களாக இருந்தனர். அதில் மறைந்த துணைப் பேராசிரியர் கே.எம்.எச். காலிதீன் ரஹிமஹூல்லாஹ் அவர்கள் கலை, கலாசாரப் பீடத்தின் பீடாதிபதியாகவும் சிறிது காலத்தின் பின்னர் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் பதில் பீடாதிபதியாகவும் ஒரே நேரத்தில் செயற்பட்டதால் பாடத்தோடு தொடர்பான அனைத்து வேலைகளும் என் மீதே சுமத்தப்பட்டிருந்தது. ஆரம்ப காலத்தில் பேராசிரியர்களோ கலாநிதிகளோ பல்கலைக்கழகத்தில் இல்லாதிருந்ததால் ஆய்வு பற்றிய விழிப்புணர்வோ அது பற்றிய வழிகாட்டல்களோ எனக்குக் கிடைக்கவில்லை. அத்துடன் 2009 வரை இனப் பிரச்சினையால் ஏற்பட்டிருந்த கஷ்டங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியிருந்தது. நான் கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்பதனால் ஒவ்வொரு முறையும் எனது சொந்த ஊருக்குப் போகும் போதெல்லாம் 8 சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அவற்றில் சிலவற்றில் எனது பிரயாணப் பொதிகளைச் சுமந்து கொண்டு சுமார் 200 மீற்றர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டியிருந்தது. இவ்வாறான பல்வேறு துன்பங்களையும் அசௌகரியங்களையும் பொறுமையாக ஏற்றுச் செயற்பட்டதற்குப் பரிசாக இப்பதவி கிடைத்துள்ளதாக நான் நம்புகின்றேன்.

ஒரு பல்கலைக்கழகத்தை, அதன் பீடங்களை அளவீடு செய்வதற்கு அங்குள்ள பேராசிரியர்களின் எண்ணிக்கையும் ஒன்றாகும். அதிகமான பேராசிரியர்களைக் கொண்ட, அவர்களின் ஆய்வு வெளியீடுகளைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகம், பீடம் வளர்ச்சியுற்றதாகக் கருதப்படுகின்றது. அந்த வகையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடமும் எதிர்காலத்தில் மேலும் பல பேராசிரியர்களைக் காண வேண்டும். அதற்காக நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

எனது பேராசிரியர் பதவி உயர்வுக்கு பின்னணியில் இருந்தவர்களுக்கு இந்நிகழ்வில் நன்றி கூறுவது எனது கடமை என நான் நினைக்கின்றேன். முதலில் எனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு வழிகாட்டி, நான் திசை திரும்பிப் போகும் போதெல்லாம் சரியான திசைக்கு என்னை அழைத்துச் சென்ற அல்லாஹ்வுக்கு எனது நன்றிகள் உரியன. அவனே அனைத்துப் புகழ்களுக்கும் உரித்தாளன். அல்ஹம்து லில்லாஹ்.

அடுத்து மண்ணறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது பெற்றோர்களை (ரஹிமஹூமல்லாஹ்) நன்றியோடு நினைவு கூர்கின்றேன். அவர்கள்தான் எனது சிறிய பருவத்திலிருந்து என்னை சீராக வளர்த்து, கல்வி அடைவுகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள்.

எனது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் துணையாக இருந்து, என்னோடு சேர்ந்து பயணிக்கின்ற எனது துணைவி நன்றிக்குரியவர். அவரின் உதவியும் ஒத்தாசையும் இல்லாதிருந்தால் என்னால் இந்த உச்சத்தைத் தொட முடியாதிருந்திருக்கும். அத்தோடு எனது பிள்ளைகளும் நன்றியோடு பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இந்த இடத்தில் ஒரு நபரைக் குறிப்பிடாவிட்டால் இந்த உரை முளுமை பெறாது. அவர்தான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள். அவர் 2015ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தில் உபவேந்தராகப் பதவி ஏற்ற போது ஒரு பேராசிரியர் கூட இங்கு இருக்கவில்லை. அவர் இங்குள்ள முதுநிலை விரிவுரையாளர்களை பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு தூண்டியது மட்டுமன்றி அதற்கான அனைத்து விதமான ஒழுங்குகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர் 2021இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை விட்டுச் செல்லும் போது 17 பேராசிரியர்கள் இங்கு பதவி உயர்வு பெற்றிருந்தனர். தற்போது 30இற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த அடைவுகளுக்கு மூலகாரணமாக பேராசிரியர் நாஜிம் அவர்கள் இருந்துள்ளார்கள்.

இறுதியாக எனது பீடத்தைச் சேர்ந்த சக விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எனது பேராசிரியர் பதவிக்கு பங்காற்றியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகும் என்றார்.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வின்போது பேராசிரியர்களான எஸ்.எம்.எம். மஸாஹிர், ஆர்.ஏ.சர்ஜூன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர்களான எஸ்.எம்.எம். மஸாஹிர், ஆர்.ஏ.சர்ஜூன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வும் பீடத்தின் ஆரம்பம் முதல் இன்றுவரை கடமையாற்றிய பீடாதிபதிகளின் படங்களை ஞாபகார்த்த நிமிர்த்தம் காட்சிப்படுத்தும் நிகழ்வும் பீடாதிபதி, எம்.எச்.ஏ. முனாஸ் தலைமையில் 2023.11.30 ஆம் திகதி பீடத்தின் கேட்போர் கூடத்திலும் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டதுடன் 
வரவேற்புரையை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.எம். நைறூஸ் அவர்கள் நிகழ்த்தினார்.

பீடாதிபதி, எம்.எச்.ஏ.முனாஸ் தனது தலைமையுரையில் கௌரவிக்கப்பட்ட பேராசிரியர்களை வாழ்த்தியதுடன் பல்கலைக்கழகத்துக்கும் பீடத்துக்கும் அவர்கள் ஆற்றிய பணிக்காக நன்றியும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றியபோது தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்களை எடுத்துக் கூறியதுடன் அவைகளுக்கு தீர்வுக்கான புத்திஜீவிகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இங்கு பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர், பேராசிரியர் ஆர்.ஏ.சர்ஜூன் ஆகியோர் தங்களது உரைகளின் போது இவ்வாறான அடைவுகளை தாங்கள் பெற்றுக்கொள்ள உதவிய அத்தனைபேருக்கும் நன்றி தெரிவித்தனர்.

உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்கள் தனது உரையில், கல்வியாளர்கள் தாங்கள் உயர்வு ஒன்றை பெற்றவுடன் அனைத்தும் முடிந்து விட்டது என்று விட்டுவிடாது அவர்களது ஆராய்ச்சி பணிகளை இன்னும் உத்வேகத்துடன் தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தில் மாணவரிடேயே உடை அணியும் விடயத்தில் நல்லதொரு முன்மாதிரி ஏற்பட்டுள்ளதைக் கண்டு பூரிப்படைவதாகவும் தெரிவித்தார்.

நன்றியுரையை உதவிப்பதிவாளர் எஸ். பிரசாந்த் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யு.எல். அப்துல் மஜீத், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ். சபீனா எம்.ஜி.எச்., சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், நூலகர் எம்.எம். ரிபாய்தீன், பல்கலைக்கழக ஊடக பிரிவின் இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எப்.எச்.ஏ.ஷிப்லி, பீடத்தின் ஏனைய முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பீடத்துக்கு புதிதாக இணைந்து கொண்ட மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது


கிராம சேவகர் போட்டிப் பரீட்சை 2023.12.02 ந் திகதி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறுகின்றது. அதற்கான, பரீட்சை எழுதுவதற்பான அனுமதி அட்டைகள், தபாலில் சேர்கப்பட்டுள்ளன. .இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள்  பரீட்சைத் திணைக்கள இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.https://apps.exams.gov.lk/individuals

 


2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார்.

 

அதன்படி பரீட்சை பெறுபேறுகள் அடுத்த 3 நாட்களுக்குள் வெளியிடப்படுமென அவர் தெரிவிள்ளார்



(றிஸ்வான் சாலிஹூ)
பாலமுனையைப்பிறப்பிடமாகவும், அக்கரைப்பற்றில் திருமணம் செய்தவரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய வங்கியல் மற்றும் நிதியியல் துறை விரிவுரையாளருமான ஏ.எச்.றிபாஸ் ( Rifas Bin Abuhuraira ) அவர்கள் இன்று (25) சனிக்கிழமை மலேசியாவின் "மலாயாப்பல்கலைக்கழகத்தில்"
நடை பெற்ற பட்டமளிப்பு விழாவில் தனது கல்வித்துறையின் கலாநிதிப் பட்டத்தை (Doctor of Philosophy) பெற்றுக் கொண்டார்.
இவர் கலாநிதி பட்டத்தை தனது 33ஆவது வயதில் நிறைவு செய்யும் ஓர் இள வயதுடையவராவார்.
இவர், தனது தாய் தந்தையை இவருடைய இளவயதில் இழந்திருந்தாலும், இவருடைய சகோதரர்களின் வியர்வையினால் தனது கல்வியை இடைவிடாது கற்று பல்கலைக்கழக விரிவுரையாளராகி மட்டுமல்லாது, இச்சமூகம் போற்றக்கூடிய அளவில் கலாநிதி பட்டத்தை பெற்றிருப்பது என்பது தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு இவர் ஒரு உதாரணமாவார்.
பாலமுனை பிரதேசத்தின் கல்வியலாளராக இருக்கும் அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் Musthafa Sithy Fathima Anas மற்றும் அதிபர் Musthaffa Ibathullah ஆகியோர்களின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார். இவர் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சஜிதா றிபாஸ் அவர்களின் கணவருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி. சகாதேவராஜா)


சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த ஏ. நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 நிந்தவூரைச் சேர்ந்த ஜனாப். ஏ. நசீர் ஏலவே வலயத்தின் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளராக சிறப்பாக சேவையாற்றி வந்தவராவார்.

அவருக்கான நியமன கடிதத்தை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா நேற்று (20) திங்கட்கிழமை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

 அச்சமயம் பிரதி கல்விப் பணிப்பாளர்களான அரபாத் மொகைடீன் மற்றும்  திருமதி நிரோபரா ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.

ஏலவே சம்மாந்துறை கோட்டக்கல்வி பணிப்பாளராக இருந்த எம்.ஜனோபர்  சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப் பதவி வெற்றிடமாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்தின் கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள்,  வெட்டுப் புள்ளிகளை அண்மித்த மாணவர்கள் மற்றும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரதி அதிபர் எம்.ஆர்.எம். நௌஸாத் அவர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அப்துல் ரஸாக் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது டன் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற டீ, மர்யம் ரஹா- 168,  ஏ.பி. எம்.நாசித்- 162,  எம்.எப். பாத்திமா சாரா- 150, கே.எம். ஹம்தூன்-148 ஆகிய மாணவர்களுக்கு பாடசாலையின் பழைய மாணவரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், இலங்கை உதைப்பந்தாட் சம்மேளனத்தின் முன்னாள் பிரதி பொதுச் செயலாளரும், அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் பொதுச் செயலாளரும், கல்முனை சனிமௌன்ட் விளையாட்டு கழகத்தின் பொதுச் செயலாளருமான எம்.ஐ.எம். அப்துல் மனாஃப் அவர்களின் அனுசரனையில் விசேட பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும்  இம் மாணவர்களுக்கு தரம் 01 முதல் தரம் 05 வரை கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மிகவும் திறன்பட ஆசிரியர்களை வழிப்படுத்தி, மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் ஏ.எம். ஜூனைதீன் ஆசிரியர் அவர்களுக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்திய  பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பாடசாலையின்  அதிபர் அவர்கள் இந்நிகழ்வின் போது நன்றி பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர் 


கல்முனை கல்வி வலயத்தின் கீழுள்ள மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் 65 வருட பூர்த்தியை முன்னிட்டு அடுத்தவருடம் நடைபெறவுள்ள "நீல சபையர் விழா" தொடக்கமும் அது தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடும், இலட்சனை அறிமுகமும் இன்று இரவு கல்லூரி மருதூர்க்கனி அரங்கில் பாடசாலை அதிபர் எம்.எம்.ஹிர்பஹான் தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும், முன்னாள் அதிபருமான ஏ.எல்.ஏ.சக்காப், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை செயலாளர் பி.எம்.அறபாத், பழைய மாணவர் சங்க செயலாளர் சுகைல் ஜமால்தீன், பாடசாலை பிரதி அதிபர் எம்.பி. ராஜி ஆகியோர் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர். 

இங்கு கருத்து வெளியிட்ட அவர்கள், பாடசாலையின் வரலாற்றை மீண்டும் திரும்பிப்பார்க்கும் விதமாக குறித்த "நீல சபையர் விழாவை" ஒழுங்கமைத்துள்ளதாகவும் இந்த பாடசாலையிலிருந்தே முதலாவது நீதவான், நிர்வாக சேவை அதிகாரிகள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் போன்ற இதர முக்கியமான நிலைகளை பழைய மாணவர்கள் அடைந்துள்ளதாகவும் கல்வியிலும், விளையாட்டு, கலை, இலக்கியம் போன்ற பல போட்டிகளில் தேசிய சாதனையாளர்களாக பாடசாலை மாணவர்கள் மிளிர்ந்துள்ளார்கள் அவர்களை திரும்பிப்பார்க்கும் நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது என்றனர். 

மேலும் இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் பழைய மாணவர்களுக்கிடையில் விளையாட்டு போட்டிகள், கவியரங்கம், கண்காட்சி, ஸம்ஸியன் வோக் போன்ற பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் இந்த நிகழ்வினூடாக பல்வேறு இடங்களிலும் உள்ள இப்பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து பாடசாலையை தலைநகரில் உள்ள பிரபல பாடசாலைகளுக்கு நிகராக கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு, பாடசாலை பழைய மாணவர்கள் அமைப்பு என்பவற்றுடன் ஊரின் முக்கிய பல அமைப்புக்களும் நலன்விரும்பிகளும் தயாராக உள்ளதாக தெரிவித்தனர். இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் மாநகரசபை உறுப்பினரும், பாடசாலை பழைய மாணவர்கள் அமைப்பின் உப தலைவருமான எம்.எஸ் உமர் அலி அவர்களும் கலந்து கொண்டார்.

 


( வி.ரி. சகாதேவராஜா)


இலங்கை அதிபர்  சேவை தர மூன்றுக்கு தெரிவான புதிய அதிபர்களுக்கான சேவை முன் பயிற்சி நேற்று முன்தினம் 16 ஆம் தேதி நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது.

 கல்முனை மற்றும் சம்மாந்துறை வலய புதிய அதிபர்களுக்கான சேவை முன் பயிற்சி அங்குரார்ப்பண வைபவம் நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை ஹாசிம் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம் எஸ் சஹுதுல் நஜீம் தலைமை நடைபெற்ற இந்த நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயங்களைச்சேர்ந்த 106 புதிய அதிபர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நாள் காலை வளவாளராக முன்னாள் கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் எஸ்.மனோகரன் கலந்து கொண்டுள்ளார். 

நேற்று முன்தினம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை இப்பயிற்சி நடைபெற இருக்கிறது.

காலை எட்டு  மணி முதல் மாலை ஐந்து  மணி வரை இந்த பயிற்சி தொடர்ச்சியாக வழங்கப்பட இருக்கின்றது .
தினமும் காலை மாலை சிற்றூர் டி மற்றும் மதிய போசனம் வழங்கப்பட்டு வருகிறது.


 பாறுக் ஷிஹான்



மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி காணிப்பத்திரம் கையளிப்புடன் அதிபர் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் நீண்டநாள் தேவையாக இருந்த அதிபருக்கான   காரியாலயம் உத்தியோகபூர்வமாக இன்று(17) திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் முதல்வர் ஐ.உபைதுல்லாஹ்வின்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சகுதுல் நஜீம்,விஷேட விருந்தினராக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் மற்றும் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளன செய்ற்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரும், கௌரவ அதிதியாக கலந்து கொள்ள இருந்த பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலிக்கு பதிலாக காணி உத்தியோகத்தர் ஏ.எச்.எம் கிபாயத்துல்லாவும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன்   மாணவர்களின் கலை கலாசாரத்துடன் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதான நிகழ்வாக பாடசாலைக்கான விடுதி வசதியினை அமைப்பதற்குரிய காணிப் பத்திரம் காணி உத்தியோகத்தர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரினால் பாடசாலை அதிபரிடம் பாடசாலை பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திசபை உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் ஓய்வுபெற்ற அதிபர்கள் ஆகியோரின் முன்னிலையில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் நிகழ்வின் இறுதியில்  அதிபருக்கான பிரத்தியேக காரியாலயம் உத்தியோகபூர்வமாக அதிதிகளால்  திறந்து வைக்கப்பட்டது.

மேலும் அல்- மனார் மத்திய கல்லூரி பழைய மாணவர் அமைப்பின் பொருளாளரும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். வலீத்   மாணவர்களின் எதிர்காலத் தேவைகருதி எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக மருதமுனை-03 கிராம உத்தியோகத்தர் பிரிவில் கமு/அல்-மனார் மத்திய கல்லூரி மாணவர் விடுதி அமைப்பதற்காக 80 பேச்சர்ஸ் விஸ்தீரணமுள்ள அரச காணி வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் கல்முனை பிரதேச செயலாளரிடம் பழைய மாணவர் அமைப்பின் பொருளாளர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து பாடசாலை அதிபர்  ஐ. உபைதுல்லா 23.05.2023 ஆம்திகதி வலயக்கல்வி பணிப்பாளர் ஊடக முன்வைத்த கோரிக்கை 29.05.2023 அன்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதற்கமைய 2023.06.06ம் திகதி இடம்பெற்ற கல்முனை பிரதேச செயலக காணி பயன்பாட்டு குழுவின் தீர்மானத்திற்கு இணங்கவும் 2023.06.21 ஆம்  திகதி நடைபெற்ற அம்பாரை மாவட்ட  காணி பயன்பாட்டு திட்டமிடல்  குழுவின் தீர்மானத்திற்கு அமைவாகவும்  இந்த காணி அல்- மனார் மத்திய கல்லூரிக்கு மாணவர் விடுதியமைக்க வழங்கப்பட்டுள்ளது.

இதுவிடயத்தில் நமது பாடசாலை சார்பாக துரிதமாக காரியமாற்றிய பழைய மாணவர் அமைப்பின் பொருளாளரும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். வலீத், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்அலி,கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஸஹ்துல் நஜீம், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜேகதீசன் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.மேற்படி விடயம் தொடர்பில் கல்முனை பிரதேச செயலக 2023.06.07 ஆம் திகதிய LAN/SUR.REQ/2023 ஆம் இலக்க(நில அளவை வேண்டுகோள் இல:KM/DS/2023/06) கடிதமும்,காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின்அம்பாரை மாவட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் காரியாலயத்தின் LUPPD/13/13/01 ஆம் இலக்க 2023.06.26 ஆம் திகதிய கடித ஆவணங்களும்  தன்னிடம்     கையளிக்கப்பட்டன அதிபர் ஐ.உபைதுல்லாஹ் தனது உரையில்    குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர புதிதாக திறந்து வைக்கப்பட்ட  அதிபர் விடுதி புனரமைப்பிற்காக அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க வலயக்கல்வி பணிப்பாளரின் சிபார்சுக்கமைவாக அல்- மனார் மத்திய கல்லூரியின் அபிவிருத்திச்சபை உறுப்பினரும்  பழைய மாணவர் அமைப்பின் பொருளாளருமான வலீத் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்கவிடம்  நேரடியாக  விடுத்த வேண்டுகோளிற்கமைவாக மாகாண கல்வித்திணைக்களத்தினால் மேற்படி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


#Rep/RiyaadMohideen

அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்று ஆயிஷா பாலிகா மகளிர் தேசிய பாடசாலை சாதனை✅️✅️


தற்போது வெளியாகிய புலமை பரீட்சை முடிவுகளில் அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மகளிர் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் Mohamed Anas Farhath Fathima 190 புள்ளிகளை பெற்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான பரீட்சையில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் நம் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


இவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்திய அதிகாரியும்,  அக்கரைப்பற்று அந் நூர் சமூக கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவருமாகிய Mohamed Abeebullah Anas


மற்றும் அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் தேசிய பாடசாலையில் உயர் தர விஞ்ஞான பிரிவில் ஆசிரியராக கடமை புரியும் Umar Lebbe Zinis ஆகியோர்களின் மூன்றாவது புதல்வியுமாவார்.


அந் நூர் முன்பள்ளி பாடசாலையில் கல்வி பயணத்தை ஆரம்பித்த இம்மாணவி தொடர்ந்தும் அந் நூர் மாலை நேர மதரசாவில் அல் குர்ஆன் கற்கை நெறியினை பூர்த்தி செய்து பின்னர் அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னர்ஸ் அகடமியின் மனன பிரிவில் சேர்ந்து இதுவரைக்கும் 8 ஜூசூக்களையும் மனனம் செய்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


அல்ஹம்துலில்லாஹ்.


இம்மாணவியின் கல்வி பயணத்தில் உறுதுணையாக இருந்து நெறிப்படுத்தி வழிகாட்டிய பெற்றோர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.


அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் அக்கரைப்பற்று கோட்ட மடடத்தில் 


✅️ குறித்த️ ஆயிஷா பாலிகா மகளிர் தேசிய பாடசாலையில் இருந்து 29 மாணவர்களும்


✅️ அல் Munawwara Jc இல் இருந்து 28 மாணவர்களும்


✅️ Zahira Vidyalaya,Akkaraipattu இல் இருந்து 28 மாணவர்களும்


✅️ Ak Boys vidyalaya இல் இருந்து 25 மாணவர்களும்


✅️ As-Siraj Junior Vid இல் இருந்து 22 மாணவர்களும்


✅️ Akkaraipattu Junior Vidyalaya Al-Falah இல் இருந்து 17 மாணவர்களும்


✅️ பள்ளிக்குடியிருப்பு Muhammathiya ஜூனியர் கல்லூரியில் இருந்து 09 மாணவர்களும்


✅️ katheriya வித்யாலயத்தில் இருந்து 03 மாணவர்களும் 


✅️ Hijra வித்யாலயத்தில் இருந்து 03 மாணவர்களும்


✅️ bathur வித்தியாலயத்தில் 01 மாணவரும்


✅️ paddiyadippitty Ar Raheemiya வித்தியாலயத்தில் 01 மாணவரும் 


வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர் என்பதும் இங்கு பாராட்டப்படவேண்டியது.



(சர்ஜுன் லாபீர்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றிலேயே இம்முறை 09 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை ஈட்டிக் கொடுத்ததோடு, வரலாற்று சாதனையையும் படைத்துள்ளனர்.

இதுவரை காலமும்
இப்பாடசாலையில் 4 மாணவர்கள் மட்டுமே பாடசாலை வரலாற்றில் அதிகூடிய சித்தியடைந்த மாணவர்களாக காணப்பட்டனர்.

மாணவர்களையும் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற வைத்து வெற்றபெற வைத்தமை பாராட்டத்தக்க வரலாற்று நிகழ்வாகும்.

 முன்னணி ஆரம்பக் கல்வி பாடசாலையாக திகழும் இப்பாடசாலையின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜிதியாவின் வழிகாட்டலினாலும், பெற்றோர் ,ஆசிரியர் மாணவர்களின் அயராத முயற்சியினாலும் பெறப்பட்டுள்ள இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


மேலும் இப் பாடசாலையில் பெளதீக வள தேவைகள் அதிகமாக காணப்படுவதனால் பாடசாலை அபிவிருத்தி குழு ,பழைய மாணவர் சங்கம்,மற்றும் நலன் விரும்பிகள் கடும் கஷ்டங்களுக்கு மத்தியில் தனவந்தர்கள் மற்றும் பெற்றோர்களை கொண்டு பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
எனவே அதற்கான ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும்  ஊர் நலன் விரும்பிகள் முன்வந்து தந்துதவுமாறு பாடசாலை சமூகம் வேண்டுகோள் விடுக்கின்றது.


 ( காரைதீவு நிருபர் சகா)


இலங்கை அதிபர்  சேவை தர மூன்றுக்கு தெரிவான புதிய அதிபர்களுக்கான சேவை முன் பயிற்சி இன்று 16 ஆம் தேதி வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றது.

 கல்முனை மற்றும் சம்மாந்துறை வலய புதிய அதிபர்களுக்கான சேவை முன் பயிற்சி நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை ஹாசிம் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

இன்று 16ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை இப்பயிற்சி நடைபெற இருக்கிறது.

 இது வதிவிட பயிற்சி நெறி அல்ல.

காலை எட்டு  மணி முதல் மாலை ஐந்து  மணி வரை இந்த பயிற்சி தொடர்ச்சியாக வழங்கப்பட இருக்கின்றது .
இதேவேளை  திருக்கோவில் அக்கரைப்பற்று வலய புதிய அதிபர்களுக்கான சேவை முன் பயிற்சி  அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய பாடசாலையில் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

 


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது. 

மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 591 மாணவர்கள் இம்முறை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். 

2888 பரீட்சை மத்திய நிலையங்களில் இவர்களுக்கான பரீட்சை நடத்தப்பட்டிருந்தன.

 


(வி.ரி.சகாதேவராஜா)


2023 நடைபெற்ற அகில இலங்கை சிறுவர் சித்திரப் போட்டியில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனைக்கு உட்பட  இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும்
அப்துல் முனாப் பாத்திமா நுஸைபா கிழக்கு மாகாண மட்டபோட்டியில் பங்கு பற்றி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதன் மூலமாக இவர் தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

இவர் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் சித்திர பாட வளவாளராக சேவையாற்றும் இறக்காமத்தைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ.முனாவ்வின் புத்திரி ஆவார்.

 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


அம்பாறை மாவட்ட சதுரங்க போட்டியில் 3 வருட காலமாக தொடர் சாம்பியனாக பளில் பாத்திமா இல்மா வெற்றியீட்டி சாதனை புரிந்து தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


இலங்கை சதுரங்க சம்மேளன ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சதுரங்க சம்பியன்சிப்-2023 போட்டிகள் அம்பாறை டி.எஸ் சேனநாயக்கா தேசிய பாடசாலையில்(2023/11/11,12)திகதிகளில் நடைபெற்றது. 


இதில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவி எம்.பளில் பாத்திமா இல்மா 13 வயது பெண்கள் பிரிவு சதுரங்க அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடர்ச்சியாக 3 வருடகாலமாக அம்பாறை மாவட்ட சம்பியன் எனும் பட்டத்தை தக்கவைத்துள்ளார். இவர் கல்முனையை சேர்ந்த எம்.பளில்,அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் தமிழ் பாட ஆசிரியை எஸ்.எல்.எஸ்.மர்ஜூனாஅவர்களின் புதல்வியாவர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.