கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
நூருல் ஹுதா உமர்
தேசிய போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் கல்வி அதிகாரிகள் பாடசாலைக்கு சென்று வாழ்த்தினார்கள்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.
அகில இலங்கை தேசிய சமூக விஞ்ஞான போட்டி-2023பெறுபேறுகள் நேற்று வெளியானது. இதில் சம்மாந்துறை வலயத்தில் மூன்று மாணவர்கள் சாதனைபடைத்தனர்.
சம்மாந்துறை வலயத்தில் உள்ள மஜீத் புரம் மகா வித்தியாலய மாணவி கே.எம்.எவ். அசீமா,(தரம்12/13), விவேகானந்த மகா வித்தியாலய மாணவி எஸ்.குகதர்சனா,(தரம்-09),இறக்காமம் அஷ்ரப் ம.கல்லூரி எம்.கே..யூசுப்சயான்(தரம்-07) ஆகியோர் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களை குறித்தபாடசாலைக்குச்சென்று வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் வாழ்த்தி கெளரவித்தார்கள்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.வை.அறபாத் எ.எல்.எம்.மஜீத் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம். நிஷார் ஆகியோர் பாராட்டச் சென்றிருந்தனர்.
நூருல் ஹுதா உமர்
இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்று பாடசாலை அதிபர் ஜெயலட்சுமி மாணிக்கவாசகம் தலைமையில் பாடசாலையின் மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான எல். கஜரூபன், எம். காந்தன், ஆர். ஜெகனாதன், அவுஸ்ரேலியாவில் இருந்து வருகைதந்த தி. ஜெயந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இப்பாடசாலை தேசிய சுற்றாடலுக்கான "சுவசர தக்சலாவ" ஜனாதிபதி விருதினை தொடர்ச்சியாக 2015, 2016, 2017 என மூன்று முறை பெற்றுள்ளதுடன் பொலித்தீன் அற்ற பாடசாலையாகவும் காணப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.
[7:05 pm, 25/02/2024] Rep/NoorulWhatsup: நற்பிரஜைகளாக திகழ கல்வியோடு சமூக சிந்தனையும் அவசியம் : இளைஞர்கள் மத்தியில் எஸ்.எம். சபீஸ்.
நூருல் ஹுதா உமர்
இளைஞர்கள் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு நேரம் கிடைக்கும் வேளைகளில் சமூகப் பணிகளிலும் சமூக சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோன்று சமூக சிந்தனையும் முக்கியமாகும். காரணம் ஒரு சிலர் இனவாதத்தையும், மற்றவர்களை குறைகூறி மக்களை முட்டாளாக்கி அதிகாரத்துக்கு வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களால் எமது சமூகம் எந்தவேளையிலும் முன்னேறவில்லை.
அதனால் நாம் ஒட்டுமொத்த சமூகமும் அறிவார்ந்த சமூகமாக முன்னேற தேவையான திட்டங்களையும், எமது இளைஞர்கள் புதிய தொழில் முயற்சியாளர்களாக வளரக்கூடிய வழிவகைகளையும், நமது மக்களின் ஏற்றத்தாழ்வினை சீர்செய்யக்கூடிய பொருளாதார திட்டங்களையும், அவர்களின் வாழ்வியல் உறுதிப்பாட்டிற்கான வழிவகைகளையும் எவ்வாறு முன்கொண்டு வரலாம் என்ற சிந்தனையோடு கல்வி பயிலுங்கள் நிச்சயம் எமது சமூகமும், நாடும் முன்னேறும் என தெரிவித்தார்
நீதிமன்றின் நீண்ட காலமாக ஓட்டடை ஒடிசல் விழுந்து காணப்பட்டிருந்த வாகனத் தரிப்பிடம் சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில், புணரமைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற, திறந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கான,புதிய திரைச்சீலை வசதிகள், புதிய சிறைக்கூண்டு, போன்றவையும், இலட்சக் கணக்கான ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீதின்ற நுழைவாயிலில், இதுகாறும் இருந்து வந்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, புத்தம் புதிய நவீன பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதி வசதிகளை, அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகள் ஒதுக்கியிருந்தன.
இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம் இன்றைய தினம் அக்கரைப்பற்று, மாவட்ட, நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதியுமான றிஸ்வான் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அதேவேளையில், மேலதிக மாவட்ட நீதிபதியும், கௌரவ நீதிபதியுமாகிய திருமதி தெசீபா ரஜீவன் புதிய பெயர்பலகையினை திறந்து திரை நீக்கம் செய்து வைத்தார்.
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க மூத்த துணைத் தலைவர், சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எல்.ஏ. றசீத் அவர்கள், அங்குரார்ப்பண உரையினை நிகழ்த்தும் போது, பல தசாப்தகாலமாக புணரமைக்கப்படாமல் காணப்பட்டிருந்த, அக்கரைப்பற்று நீதிமன்று,கடந்த 2024.01.01 கௌரவ நீதிபதியாக ஏ.சி. றிஸ்வான் அவர்கள் கடமையேற்றதன் பின்பு, பல்வேறுபட்ட மாற்றங்களகை் கண்டு வருகின்றது என்பதாகத் தெரிவித்தார்.அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன என்பதுடன், அதற்கு ஒத்துழைப்பு நல்கிய உள்ளுராட்சிமன்றங்களக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான கௌரவ ஏ.சி. றிஸ்வான் அவர்கள் உரைநிகழ்த்தும் போது, குறுகிய காலத்தில் இப் பணிகளைச் செய்து முடிக்க அரும்பணியாற்றிய, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகளுக்கும், களப்பணியில் ஈடுபட்ட சமூதாயஞ்சார் பணியாளர்களுக்கும், நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கும், மிகக் குறுகிய காலத்தில் சிறப்பான திறப்பு விழாவினைச் செய்து கொடுத்த அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள்,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் றயிசுல் ஹாதி, நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர்.