Showing posts with label education. Show all posts

 ( வி.ரி. சகாதேவராஜா)

 காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 40 வருட நிறைவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட "விபுலவிருட்சம்" KSC@40 என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

காரைதீவு விளையாட்டு கழகத் தலைவர் ரொட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன்  தலைமையில் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்  கலந்து சிறப்பித்தார்.

முதற் பிரதியை தலைவர் சாந்தன் பிரதம அதிதி மகேசனிடம் வழங்கி வைத்தார்.

ஏனைய அதிதிகளான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்    காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்ட அதிதிகளுக்கும் அவர் வழங்கி வைத்தார்.

மலர் ஆசிரியர் முன்னாள் தலைவர் த.தவக்குமார் நூலாக்ககுழு ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா செயலாளர் எஸ்.கிருசாந் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.

 


(வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவில் நடப்பாண்டின் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

காரைதீவு விளையாட்டு கழகத்தின் 41 வது வருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குறித்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 கழகத் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கபொத சாதாரண தரத்தில் 9ஏ பெற்ற மற்றும் கபொத உயர்தர பரீட்சையில் 3ஏ சித்தி பெற்ற மாணவர்கள் 29 பேர் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றோரால் பாராட்டப்பட்டார்கள்.

பிரதம அதிதியான விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்
ஏனைய அதிதிகளான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்    காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் 
கழக போசகர்களான  வே.இராஜேந்திரன், வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டு கௌரவித்தனர்.


 கடந்த 2024.04.23 திகதி இடம்பெற்ற PPA புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம்...

________________________________

தலைவர் ALM.பாயிஸ் (Pr)   

உப தலைவர் ARM.சாதிக் (Lec)

செயலாளர்  MSM. இக்ராம் (CCO)    

உப செயலாளர்  AL .நூபைஸ் (Tr)

பொருளாளர்  MSM. பாஹிம் (Pr)     

உப பொருளாளர் AL.நளீம்        

கணக்கு பரிசோதகர் SM.ஹுஸ்ரி (FA)   

குழு உறுப்பினர்கள்

1.AM. அஸ்மி (Pr)

2.KM. அக்ரம் (Tr)

3.AM.அர்பான் 

4.MALM.றிஸ்வான் (SDO)

5.Uk.முஸம்மில் (Tr)

6.S.சிஹாப்தீன் (Sec)

7.AL.பௌஸர் 

8.MS.ஜெனிஸ் 

9.ASM.உவைஸ் (Mps)

10.AM.நபீஸ்தீன் (DO)

11.I.முனாஸ் (Law)

12.IL.ஹாரூன்

 




அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இணைப்பாட விதான அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய 42 வகையான குழுக்கள் உருவாக்கம்

....................................


எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு கழகங்கள்/சங்கங்கள்/படையணிகள் என 42 வகையான குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன்‌ அவர்களுக்கான கடமைப் பொறுப்புக்களும் இன்று 24/04/2024 கையளிக்கப்பட்டது.


இக்கடமைப் பொறுப்புக்கள் யாவும் அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்களின் பணிப்புரைக்கமைவாக‌ இணைப்பாடவிதான விதான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான‌ பிரதி அதிபர் லெப்டினன் NM.முஹமட் ஸாலிஹ் (SLPS) அவர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதற்கிணங்க இக்குழுக்கள் யாவும் குறித்த பொறுப்பாசிரியர்களுடன் எமது மாணவச் செல்வங்களின் பல்வேறு நலன்சார் விடயங்களுக்காக (மாணவ உறுப்பினர்களுடன்) தொடர்ச்சியாக பயணிக்கவுள்ளது.

 


#Rep/Firthowze.

SLPS -3, SLTES -3, SLEAS - 3 ஆகிய மூன்று போட்டிப் பரீட்சைகளிலும் சித்தி பெற்ற சாதனை சகோதரி #ரஹிமாவுக்கு வாழ்த்துக்கள்!


வடமத்திய மாகாணத்தில் இருந்து இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 SLPS -3, இலங்கை ஆசிரிய கல்வியில் சேவை தரம் 3. SLTES -111, இலங்கை கல்வி நிர்வாக சேவை SLEAS -111 ஆகிய மூன்று போட்டிப் பரீட்சைகளிலும் சித்தி அடைந்து நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவாகியுள்ள அளுத்கம தாருல் ஸலாம் வித்தியாலய அதிபர் மொஹமட் பாரூக் சல்மத்துல் ரஹீமாவின் சாதனை  இம் மாகாணத்தில் இதுவரை எட்டப்படாத ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இச்சகோதரியின் சாதனைப் பயணத்தை நாமும் மனதார வாழ்த்துவோம்!


 நூருல் ஹுதா உமர் 


1971 யில் மஹ்மூத் மகளிர் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை (2024) 53 வருட கால கல்வி செயற்பாட்டில் இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் மஹ்மூத் மகளிர் கல்லூரியானது முஸ்லிம் பெண்கள் கல்வி வளர்ச்சியில் தனக்கு என்று தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளது. 

இதன் பின்னணியில் இக்கல்லூரியின் நீண்ட கால தேவையாகவும் வரலாற்று நிகழ்வுகளை தற்கால இளம் மாணவ சமூகத்தவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் கல்லூரி முதல்வரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்களில் ஒன்றான இக்கல்லூரியில் அதிபர்களாக கடமையாற்றியவர்களின் பெயர்கள் மற்றும் காலங்களை உள்ளடக்கிய "மஹ்மூத் அதிபர் பெயர் பலகை" உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (17) கல்லூரியின் நிர்வாக கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பெயர் பலகையினை இக்கல்லூரியின் பழைய மாணவியும் தற்போதைய 17வது அதிபரும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முதலாவது இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியுமான அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இக்கல்லூரி வரலாற்றில் (1971-2024) இன்றுவரை 17 அதிபர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர் 


கல்முனைக் கல்வி வலயத்தில் மிக நீண்ட காலமாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் விஞ்ஞானப்பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ். ஸஹுதுல் அமீன் அவர்களை சேவை நலன் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (17) கல்முனை கமு/கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எஸ். ஸஹுதுல் அமீன் அவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

 


KWT

தேசிய மட்ட கணித ஒலிம்பியட் போட்டிக்கு காரைதீவு சண்முகா சார்பாக 04 மாணவர்கள் தெரிவு !!!

கமு/கமு/சண்முக மகா வித்தியாலயம் சார்பாக தேசிய மட்ட கணித ஒலிம்யாட் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட J. Mirzahan, S. Sharavin, S. Jaswigan, L. Ovishan ஆகிய 04 மாணவர்கள் பாடசாலையில் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
காரைதீவு கோட்டம் சார்பாக கூடிய மாணவர்களை தேசிய மட்ட கணித ஒளிம்யாட் போட்டிக்கு அனுப்பும் பாடசாலையாக சண்முக மகா வித்தியாலயம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.



நூருல் ஹுதா உமர் 

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் மூன்று கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றுச் செல்லும் இரு ஆசிரிய ஆலோசகர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (09) கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையில் வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. 

இடமாற்றம் பெற்றுச் செல்லும் மூன்று கல்வி நிருவாக சேவை அதிகாரிகளான பீ. ஜிஹானா ஆலிப் (கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்வி பணிப்பாளர்), யூ.எல். சாஜித் (உதவிக்கல்விப் பணிப்பாளர்-உடற் கல்வி மற்றும் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர்), என்.எம்.ஏ.மலீக்(உதவிக் கல்விப் பணிப்பாளர்- ஆங்கிலம் மற்றும் சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர்) ஓய்வு பெறும் இரு ஆசிரிய ஆலோசகர்களான சீ. செல்வராஜா (விவசாயம்), எம்.எஸ். சஹ்துல் அமீன் (விஞ்ஞானம்) ஆகியோர் பாராட்டி, நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபிர், எம்.எச். றியாஸா, என். வருண்யா, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. சன்ஜீவன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு விஷேட உரைகளையும் ஆற்றினர்.

நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நடந்தேறிய இந் நிகழ்வினை ஆசிரிய ஆலோசகர் ஏ.றாஸிக் நெறிப்படுத்தியத்துடன் ஆசிரிய ஆலோசகர்களான ரீ.கே. பத்திரன, எம். லக்குணம் ஆகியோரும் விடைபெறும் அதிதிகள் தொடர்பில் சிறப்புரையாற்றினர்


 ( வி.ரி.சகாதேவராஜா) 


சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் வருடாந்த அமுலாக்க திட்டம்( follow me) என்ற நூல் வெளியீட்டுவிழா திட்டமிடல் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நுஸ்ரத் நிலோபரா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

பிரதமஅதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் செய்யட் உமர் மௌலானா கலந்து சிறப்பித்தார்.

இந்நூல் வெளியீட்டுவிழாவில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான யசீர் அரபாத் மொகைடீன் ,திருமதி நிதர்சினி மகேந்திரகுமார், அப்துல் மஜீத், எச் .நைரூஸ்கான்,கோட்டக் கல்விப்பணிப்பாளர்களான ஏ.நசீர், பி.பரமதயாளன், யூஎல்.மகுமூட்லெவ்வை, கணக்காளர் சீ.திருப்பிரகாசம், ஆசிரியர் பயிற்சி நிலைய முகாமையாளர் எஸ்.சிவேந்திரன், பாடசாலை வேலைகள் அதிகாரி இ.ஏகாம்பரநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

 வலய வருடாந்த அமுலாக்கத்திட்ட கைநூல் வெளியிட்டுவைக்கப்பட்டது. 

விழாநிகழ்வுகளை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.

விழாவில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் வளவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


இலங்கை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது.

தளத்தைப் பார்வையிடும் பயனர்களுக்கு ஹெக்கர் பின்வரும் செய்தியை பதிவிட்டுள்ளார்.

 

தளத்தைப் பார்வையிடும் பயனர்களுக்கு ஹெக்கர் பின்வரும் செய்தியை பதிவிட்டுள்ளார்.

 


"அறிவுச் சுரங்கம்" போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய ரீதியில் முதலிடம்"

ANCHOR - COLOMBO COMMODITIES இன் பூரண அனுசரனையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் புனித ரமழானை முன்னிட்டு வருடா வருடம் நடாத்தும் அறிவுச் சுரங்கம் போட்டிகளின் தேசிய மட்ட அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இன்று (04) வியாழக்கிழமை கொழும்பு அல்-ஹிதாயா கல்லூரியில் ஆரம்பமானது.
இன்றைய அரை இறுதிப் போட்டிகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி, ஹெம்மாத்துகம முஸ்லிம் கல்லூரி, திருகோணமலை வெள்ளை மணல் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் போட்டியிட்டன.
அரையிறுதியில் திருகோணமலை வெள்ளை மணல் முஸ்லிம் மகா வித்தியாலயம் "B பை" சந்தர்ப்பத்தைப் பெற முதலாவது போட்டியில் ஹெம்மாத்துகம முஸ்லிம் கல்லூரியை எதிர்த்து காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் போட்டியிட்டனர். இதில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் 92 புள்ளிகளையும் ஹெம்மாத்துகம முஸ்லிம் கல்லூரி மாணவர்கள் 64 புள்ளிகளையும் பெற்றனர். இதன்படி அரையிறுதியில் மேலதிக 28 புள்ளிகளால் வெற்றி பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியில் திருகோணமலை வெள்ளை மணல் முஸ்லிம் மகா வித்தியாலயத்தை எதிர்த்துப் போட்டியிட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் 69 புள்ளிகளைப் பெற வெள்ளை மணல் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் 30 புள்ளிகளைப் பெற்றனர். இதன்படி மேலதிக 39 புள்ளிகளினால் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று முதலிடத்தை தட்டி வரலாற்று சாதனையை நிலைநாட்டினர்.
இச்சாதனையை நிலைநாட்டிய
FRM. Munshif தலைமையிலான
MRM. Usama Nusaith, MNM.Shafir ஆகிய மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூபாய். 50,000 பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும் அனுசரனை வழங்கிய ANCHOR - COLOMBO COMMODITIES நிறுவனத்தினரால் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஆரம்பம் முதல் இவர்களை ஊக்கமளித்து வழிகாட்டிய பாடசாலை அதிபர் அல்ஹாஜ் MA. நிஹால் அஹமட் B.sc அவர்களுக்கும் இணைப்பாட விதானத்துக்குப் பொறுப்பான பிரதி அதிபர் ஜனாப். MNM. பெளஸான் அவர்களுக்கும் ஏனைய பிரதி அதிபர்களுக்கும் பயிற்றுவித்த உயர்தர விஞ்ஞான பிரிவு பகுதி தலைவர் ஜனாப். J. இஸ்ஸடீன் உட்பட ஏனைய ஆசிரியர்களுக்கும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இம்மாணவர்களை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் ஜனாப். KM. அன்ஸார் அவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 


மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


அலரி மாளிகையில் இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.


2320 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதன் போத நியமனம் வழங்கப்பட்டதோடு ஜனாதிபதி அடையாள ரீதியில் சிலருக்கு நியமனங்களை வழங்கி வைத்தார்.


ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றுகையில், எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


கௌரவமான தொழிலான ஆசிரியத் தொழிலின் மரியாதையை அழிக்கும் வகையில் ஒருபோதும் செயற்படக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, ஆசிரியர்கள் எப்பொழுதும் பாட அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:


நீங்கள் ஒரு வகுப்பறையை மாத்திரம் பொறுப்பேற்கவில்லை. அந்த வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை தான் நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள். 05 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவர்கள் உங்களுடன் தான் தமது நேரத்தை செலவிடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் வீட்டில் இருந்து பெறும் வழிகாட்டுதலைப் போன்றே பாடசாலையிலிருந்து அவர்கள் பெறும் வழிகாட்டுதலும் மிகவும் முக்கியமானது. அந்தப் பொறுப்பை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். மாணவர்களுக்கு பாட அறிவை மட்டும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த மாணவர்களின் வாழ்க்கையை நீங்கள்தான் வடிவமைக்க வேண்டும்.


இன்று, இணையத்தில் பாட அறிவை பெறலாம். ஆனால் மாணவர்களின் குணாதிசயத்தை கட்டியெழுப்ப இணையத்தால் முடியாது. நம் அனைவரின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதில் பெற்றோரிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலைப் போன்றே ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. அதனால்தான் ஆசிரியர் தொழில் உயர் தொழிலாகக் கருதப்படுகிறது. அந்த மரியாதையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் ஆசிரியர்களாகிய உங்களது அறிவு மிகவும் முக்கியமானது. இன்று நாளுக்கு நாள் அறிவைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சமூகம் உள்ளது. எனவே, கடந்த காலங்களில் பாட அறிவை அதிகரிக்காமல் ஆசிரியர்கள் பணியாற்றுவது சாத்தியமாக இருந்த போதிலும், இன்று அவர்களால் அவ்வாறு செய்ய முடியாது. உங்கள் அறிவு இன்னும் 10, 20 ஆண்டுகளில் போதுமானதாக இருக்குமா என்று சிந்தியுங்கள். எனவே, ஆசிரியர்கள் பாட அறிவை மேம்படுத்த எப்போதும் பாடுபட வேண்டும்.


இன்று 2300 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகிறது. மேலும் 700 நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. வெற்றிடங்களுக்கு ஏற்ப மேலும் 1000 ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த வருடத்தில் சுமார் 4000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த நியமனங்களை வழங்க முடிந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக இந்த நியமனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன.


நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறைப்பெறுமானத்தை எட்டியது. ஆனால் அரசாங்கம் மேற்கொண்ட சரியான பொருளாதார முகாமைத்துவத்தினால் ரூபாயின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது. எனவே, இன்று இந்த நியமனங்களை வழங்குவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.


கடந்த ஆண்டு டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 370 ஆக இருந்தது. இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 300 ஆக உள்ளது, எதிர்காலத்தில் அதை 280 ரூபாவாகக் குறைக்க எதிர்பார்க்கிறோம். அப்போது அரசாங்க செயற்பாடுகளுக்கான  பணத்தைத் தேட வேண்டியுள்ளது. இன்று நாம் கடினமான பாதையில் சென்றாலும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியும். இதன் போது அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடிந்தது. அத்துடன், சிங்களத் தமிழ்ப் புத்தாண்டுக் காலத்தில் நெல்லுக்கு சிறந்த விலையை வழங்க முடிந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்ததாவது:


ஆறு மாதங்களுக்கு முன்னரே இந்த நியமனங்களை வழங்கியிருக்க வேண்டும். ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த வருட இறுதியில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்தேன். அதன் பிரகாரம் உடனடியாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக மேல் மாகாண சபையினால் பரீட்சை நடத்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக ஏனைய மாகாணங்களில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக நேர்முகத் தேர்வு நடத்திய போது சிலர் நீதிமன்றத்திற்குச் சென்றனர். நீதிமன்ற நடவடிக்கைகளால், ஆசிரிய நியமனம் வழங்குவது தாமதமானது.


பாடத்துடன் இணைந்ததாகவே ஆசிரியர்களை நியமிப்பதற்காக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்றும் இந்த நடைமுறையின் கீழ் ஆசிரியர்  நியமனம் வழங்குகையில் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்து வருகின்றனர். எனவே 2019ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க  முடியவில்லை. ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இப்படி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மேலதிகமாக எதிர்காலத்தில் மேலும் பல நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.


மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார் ரொஷான் குணதிலக்க குறிப்பிட்டதாவது:


மேல் மாகாணத்திற்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும். ஆசிரியர் பற்றாக்குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.இந்த நியமனங்களை முறையாக வழங்க வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட சவால்கள் காரணமாக ஆசிரியர் நியமனம் தாமதமானது. பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் படிப்படியாக அதிகரித்தன. ஆசிரியர் பற்றாக்குறையை நாட்டிற்கோ கல்வித்துறைக்கோ தாங்க முடியாது. ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் நன்றி.


இன்று இந்த ஆசிரியர் நியமனம் பெறும் நீங்கள் வெறும் தொழிலை மட்டும் செய்யவில்லை. நீங்களும் நாட்டுக்கு சேவை செய்யக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.மாணவர்களுக்கு இரண்டாவது வழிகாட்டி ஆசிரியர்கள். ஆசிரியர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றார்.


அமைச்சர் நளின் பெர்னாண்டோ,இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, சிசிர ஜயகொடி, அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர்கள்,பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, மேல் மாகாண பிரதம செயலாளர் தம்மிக்க விஜயசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


 


2018-2020 கல்வியாண்டில் தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்த 303 பயிற்சி டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரிய சேவையின் தரம் 3-1 (b) க்கு ஆட்சேர்ப்பு செய்யும் நிகழ்வு இன்று தேசிய கல்வி நிறுவனத்தில் இடம்பெற்றது.


Rep)Thaahir

கொழும்பு மஹரகம 

தேசிய கல்வி நிறுவகத்தில் 

தேசிய மட்டத்தில் நடைபெற்ற 

மாணவர் பாராளுமன்றத் தேர்வில் 

#அக்கரைப்பற்று_கல்வி_வலயத்தின் ஆலங்குளம் ரஹ்மானியா வித்தியாலய 

#Miss_Mahroof_Anafa_எனும்_மாணவி 

தேசிய மட்டத்தில் மாணவர் பாராளுமன்ற    #பெளதீகவள_விருத்தி_மற்றும்_அனர்த்த_முகாமைத்துவ_அமைச்சராகத்_தெரிவு_செய்யப்பட்டுள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ்


இம்மாணவியினுடைய சிறந்த தலைமைத்துவம், பேச்சாற்றல், விவாதிக்கும்திறன், ஆக்கபூர்வமான சிந்தனை, மொழிவளம், முன்வந்து செயலாற்றும் தன்மை போன்றன 

விஷேட அம்சமாகும்.

அம்மாணவிக்கு எங்களது வாழ்த்துக்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர், அவருடைய பெற்றோர்கள், வலயத்தின் இணைப்பாளர் ஆகியோருக்கும் விசேட வாழ்த்துக்கள்

 


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளராக   மூதூரைச் சேர்ந்த ஜவாத் (நழீமீ) நியமிக்கப்பட்டுள்ளார்.


அத்துடன்  (25) ந் திகதி இவர் பதவியேற்கவுள்ளார்.

 


(எஸ்.அஷ்ரப்கான்)


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வு இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எச்.யூ. சுசந்தவின் நெறிப்படுத்தலில் 2024.03.24 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பசின்டு குணரத்ன, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இவர்களுடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, அம்பாறை Superintend of Police ஜெ.எச்.எம்.என். ஜெயபத்மா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான சமிக்க அமரசிங்க, இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை பிராந்திய பிரதிப்பணிப்பாளர் கங்கா சகரிக்க தமயந்தி, கிழக்கு மாகாண பிரதிப்பணிப்பாளர் மஜீட், இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளரும் பிரதிப்பணிப்பாளருமான ஏ.ஹமீர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் சிங்களம் உள்ளிட்ட கற்கைநெறிகளை பூர்த்திசெய்த 300  மாணவர்கள் தாங்களுக்கான சான்றிதல்களைப் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களுடன் அவர்களது பெற்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.