Showing posts with label education. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


அகில இலங்கை YMMA பேரவையின் ஏற்பாட்டில் பொத்துவில் அக்/ அஸ் -
ஸாதிக் வித்தியாலய மாணவர்கள் 450 பேருக்கு இன்று (16) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சி. சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட YMMAகளின் ஒன்றியச் செயலாளரும், YMMA பாலமுனை தலைவருமான ஐ. அஹமட் ஸிறாஜ்,  சிவேட் சிறிலங்கா தலைவர் எஸ்.எல்.எம். அப்துல் காதர், லங்கா தமிழ் பிரதானி ஆசிரியர் பௌசான் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை YMMA பேரவையின் அனர்த்த பிரிவின் ஏற்பாட்டில் இப்பாடசாலையின் கல்வி கற்கும் 450
மாணவர்களுக்கு இன்றைய தினம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


 காத்தான்குடியைச்சேர்ந்த மாணவன் யாழ்பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் உயர் தேர்ச்சியில் தங்கபதக்கம் பெற்றார்

காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது அஷ்ரஃப் றுஸ்னி அஹ்மத் Eng, நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் பொறியியல் பீடத்தில் உயர் தேர்ச்சி பெற்று தங்கபதக்கம் பெற்றார்.
ا
இவர் காத்தான்குடி 05 முஸ்தபா ஹாஜியார் வீதியில் வசிக்கும் முகம்மது அஷ்ரப் ரிஹானா தம்பதிகளின் இரண்டாவது புதல்வராவார்.
இவர் ஆரம்பக் கல்வியை மட்/ அல்ஹிறா மஹா வித்தியாலயத்தில் கற்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் வெற்றி பெற்று கல்வி பொதுத் தராதர சாதாரண பரிட்சையில் 9A சித்தி பெற்று காத்தான்குடி மத்திய கல்லூரியில் உயர்தரக் கணித பிரிவில் கல்வி கற்றார்..
பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கிளிநொச்சியில் உள்ள அதன் வளாகத்தில் பொறியியல் மாணவராக கற்று முதன்மையான இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

 


2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


 (வி.ரி.சகாதேவராஜா)


தம்பிலுவில் கிராமத்தில் முதலாவது மருத்துவத் துறை பேராசிரியரான கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் குடும்ப நலத்துறை பேராசிரியர் வைத்திய கலாநிதி டாக்டர் கந்தசாமி அருளானந்தம் அவர்களுக்கு நேற்று பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தம்பிலுவில் விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் அதன் பணிப்பாளர் கண. இராஜரத்தினம் கண்ணன் தலைமையில் இவ் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அண்மையில்
குடும்ப நலத் துறை பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற  தம்பிலுவிலைச் சேர்ந்த டாக்டர் கந்தசாமி அருளானந்தம் வரவேற்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

குருகுல மாணவர்களும் கலந்து கொண்டனர்.

 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா!


இன்று, நாளை, நாளை மறுதினம் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. 


2 ஆயிரத்து 873 பேருக்குப் புதிதாக பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. 


 நூருல் ஹுதா உமர்


பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில்,
12.03.2024 அதாவது இன்று நண்பகல் 12.00  மணியிலிருந்து நாளை புதன்கிழமை 13.03.2024ஆம் திகதி வரை தொடர்ச்சியான ஒன்றரை நாட்கள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றிறு  நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப் படுகின்றன.

குறித்த திடீர் வேலைநிறுத்த போராட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் கல்விசார ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் அவர்களது தலைமையிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின்  செயலாளர் எம்.எம். முகமது காமிலின் வழிகாட்டலிலும் இடம்பெறுகின்றன.

நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சடுதியாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய முடியாத நிலையில் எமது நீண்டகால சம்பள முரண்பாடுகளை சீர்செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாகவும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்விசாரா ஊழியர்கள் மேற்குறித்த இந்த ஒன்றரை நாட்கள் தொடர்ச்சியான அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்கின்றனர்.

மேற்குறித்த அடையாள வேலை நிறுத்தத்தில் அனைத்து விதமான சேவை வழங்கும் உத்தியோகத்தர்களும் தங்களது கடமைகளில் இருந்து விலகி இருக்குமாறும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கடமை மட்டுப்படுத்தப் பட்டுள்ளதுடன் அவசியமான அல்லது அவசியம் என கருதும் இடங்களில் மாத்திரம் தங்களது சேவையை வழங்க முடியும் என்பதுடன் குறித்த கடமையின் நிமித்தம் சீருடைகளை அணியாது சாதாரண உடையில் (Casual Dress) கடமையாற்ற உள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகள், சாரதிகள், மின்சாரம் மற்றும் நீர் வளங்கள் பகுதியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் தங்களது கடமைகளில் இருந்து பூரணமாக விலகி இருத்தல் வேண்டும் என்றும் கோரப்பட்டது.

 


( வி.ரி. சகாதேவராஜா)


அரச கரும மொழிகள் திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற 150 மணித்தியாலங்களைக் கொண்ட சிங்கள கற்கை பாடநெறி நிறைவு விழா  சம்மாந்துறையில் நேற்று முன்தினம் (10) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வு சம்மாந்துறை வலய சிங்கள பாட வளவாளர் ஏ.எச்.நாஸிக்அஹ்மத் தலைமையில் சம்மாந்துறை அல்அர்சத் மகாவித்தியாலயத்தில்  நடைபெற்றது.

 பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா, கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான பிஎம்வை.அறபாத், ஏஎல்.அப்துல் மஜீத், கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ.நஸீர், உதவிக் கல்விப்  பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, அதிபர் எம்ஏ.றஹீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

 சிங்கள கற்கை நெறியின் விரிவுரையாளர் சனத் ஜெயசிங்க கலந்து கொண்டு இரு மொழிகளிலும் உரையாற்றியதோடு அவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

 சம்மாந்துறை வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முகாமைத்துவ உதவியாளர்கள் என்று 106 பேர் இந்த 150 மணி நேர பயிற்சி நெறியில் கலந்து கொண்டு நிறைவு செய்துள்ளனர்.

பயிலுனர்களின் ஆடல் பாடல் நாடகம் என்பனவும் மேடையேறின.

விழா முழுக்க முழுக்க சிங்கள மொழியில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


(நூருல் ஹுதா உமர்)

மருதமுனைப் பாடசாலைகளின் கல்வி மேம்பாடுகளை ஒருநிலைப்படுத்தி, மாணவர்களை ஒழுக்க விழுமியங்களை நோக்கி திசைமுகப்படுத்தும் நோக்கில் மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் நிமித்தம் "மருதமுனை பாடசாலைகளின் மேம்பாட்டு பேரவை" என்ற அமைப்பானது மருதமுனையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளின் மேற்பார்வையுடன் மருதமுனைப் பாடசாலை அதிபர்களின் கூட்டிணைவில் இதற்கான ஆரம்பக் கூட்டம் (10) மருதமுனை அல்-ஹம்றா  வித்தியாலயத்தில் கல்முனை  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி நிருவாகத்திற்குப் பொறுப்பான  பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பிரதிக் கல்விப் பணிப் பாளர்களான எம்.எச்.றியாஸா(கல்வி முகாமைத்துவம்), பீ. ஜிஹானா ஆலிப் (கல்வி அபிவிருத்தி) உள்ளிட்ட அதிகாரிகளுடன்  மருதமுனையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், அதிபர்கள், பிரதி அதிபர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

மருதமுனை கல்வி மேம்பாடு மற்றும்  மாணவர்களின் ஒழுக்கச் சீராக்கம் ஆகியன தொடர்பில் விரிவான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. இதன் போது நோன்புகால வணக்க வழிபாடுகள் கருதி சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

அதில், நோன்பு 20 வரை உயர்தரம் தவிர்ந்த ஏனைய மாணவர்களின் பாடசாலை நேரசூசி வகுப்புக்கள் மதியம் 12 மணிக்கு  முன்னர் முடிக்கப்பட வேண்டும் என்றும் ரமழான் பிந்திய பத்தில் அதாவது நோன்பு 20 முதல் பெருநாள் முடியும் வரை எந்த மேலதிக வகுப்புக்களையும் நடத்த முடியாது. தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு பாடசாலைகளில் மேலதிக வகுப்புக்கள் எதனையும் நடத்துவதில்லை. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

மேலும் வீடுகளிலும், பிரத்தியேக நிலையங்களிலும் மேலதிக வகுப்புக்களை நடத்துகின்றவர்கள் மதியம் 12 க்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும். இவ் அறிவுறுத்தல்களை மீறி வகுப்புக்களை நடத்தும் பாடசாலை ஆசிரியர்கள் இனங்காணப்பட்டு அதிபர்களினூடாக அவர்களுக்கான  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தரம்  10, 11  மாணவர்களுக்கு  திங்கள் முதல் வியாழன் வரை பாடசாலைகளின் மேலதிக வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும். அவை மதியம் 12 மணிக்கு முன்னர் நிறைவு செய்யப்பட வேண்டும். பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களில் இடையூறாக செயற்படும் மாணவர்களை விஷேட ஆசிரியர் செயலணி மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுத்தல், பள்ளிவாசல்களினூடாக குத்பாக்களில் அல்லது  குத்பாக்களின் பின்னர் மாணவர்களுககான குறுகிய நேர வழிகாட்டல் ஆலோசனைகளை ஏற்பாடு செய்தல் (பொருத்தமான வளவாளர்களைக் கொண்டு)

மாணவர்களின் நடத்தைகள் பொது இடங்களிலும்  அவதானிக்கப்பட்டு அவை மாணவர் தலைவர், வகுப்புத் தலைவர்  தெரிவுகளில் கருத்தில் கொள்ளப்படல், நோன்பு காலத்தில் ஆசிரியர்களின் செயற்பாடுகள்  சமூகத்திற்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதை ஆசிரியர்களுக்கு பாடசாலை மட்டத்தில் வலியுறுத்தல்

மேற்படி விடயங்களை அவதானித்து  நோன்பு 10 இல் பேரவை கூடி அதன் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்தல், பேரவையின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இதனை முன்னேற்பாடாகக் கொண்டு ஏனைய கிராமங்களிலும் கல்வி மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுக்க முடியும் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் தமது உரையில் தெரிவித்தார்.

நோன்பு விடுமுறை முன்னெடுப்புக்கள் தொடர்பாக  எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் பள்ளிவாசல்களினூடாக அறிவிக்கப்படுவதுடன் மருதமுனை உலமா சபையினரின் கவனத்திற்கு இவற்றைக் கொண்டு வருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது

மருதமுனையி்ன் கல்வி மற்றும் மார்க்க விழுமியங்களை சீராக்கம் செய்தல் என்கின்ற எண்ணக்கருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மருதமுனை பாடசாலைகளின் மேம்பாட்டுப் பேரவையின் இலக்குகளை அடைய மருதமுனையின் மார்க்க அமைப்புக்கள், புத்திஜீவிகள்,பொதுநிறுவனங்கள்,பொதுமக்கள் ஆகியோர் ஒத்துழைப்புக்களை வழங்க.வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது


 நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இருந்து கடந்த 2023 இல் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் "Glittering Scholars-2024" (மின்னும் புலமைகளுக்கு புகழாரம்) நிகழ்வு பாடசாலை அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (09) நடைபெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புலமையாளர்களை பாராட்டி கௌரவித்தார். ஒவ்வொரு வருடமும் கணிசமான மாணவர்களை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்யச் செய்யும் நூற்றாண்டுகளுக்கு மேல் வரலாற்றை கொண்ட இந்த பாடசாலையின் மாணவர்களை கௌரவிக்கும் விதமாக சாய்ந்தமருது பிரதான வீதியூடாக வேண்ட வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

புலமையாளர்களை பாராட்டி கௌரவித்த இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். மேலும், கல்முனை வலயக்கல்வி பணிமனை கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், சாய்ந்தமருது கல்வி கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக உத்தியோகத்தர்கள், பாடசாலை பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், வர்த்தக பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின்  விஞ்ஞான  ஆய்வுகூட திறப்பு விழா மற்றும் கண்காட்சி நிகழ்வுகள்
அதிபர் எம்.ஐ.அப்துல் றசாக் தலைமையில், பிரதி  அதிபர் எம்.ஆர்.முஹம்மது  நௌசாதின் நெறிப்படுத்தலில் பாடசாலையில் 2024.03.06ம் திகதி இடம்பெற்றது.

மாணவர்களின்  ஆக்கங்களைக்  கொண்டு ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இவ் விஞ்ஞான  ஆய்வுகூடம் ஒழுங்கமைக்          கப்பட்டு  திறந்து வைக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக  இரு  நாட்கள்  கண்காட்சி  நிகழ்வுகளும்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எச்.எம்.றஸீன் முஹம்மட்,  கௌரவ  அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.றியாஸா,  கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்  எம்.எஸ். ஸஹ்துல்  அமீன் ஆகியோரும்,  விசேட  அதிதிகளாக 
பிரதி அதிபர் எம்.வை.எம்.
ஸாதீக், உதவி அதிபர்களான எம்.எஸ்.நிஹால் முஹம்மட், இஸட் ரீ.ஸியாம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு மாணவர்களால்  பரிசோதனைகள்  செய்து  காட்டப்பட்டு  விளக்கங்களும்  வழங்கப்பட்டது.

 


இலங்கையில் 60 வீதத்திற்கும் அதிகமான சிறுவர்கள் கையாள முடியாத அளவு புத்தகப் பையை சுமந்து செல்கின்றமை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக வைத்தியர் கபில ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்

 


 ( வி.ரி.சகாதேவராஜா)


தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவன் ஸயானுக்கு இறக்காமத்தில் நேற்று ஊர் பூராக சரமாரியாக பொன்னாடை போர்த்தி பாராட்டுக்கள் குவிந்தன.

சம்மாந்துறை வலயத்திலுள்ள இறக்காமம்  அல்-அஷ்றப் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இல் தரம் 7ல் கல்வி கற்கும் மாணவன் எம்.கே. யூசுப் ஸயான் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற  அகில இலங்கை தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இப் பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின.

அதனைத் தொடர்ந்து இறக்காமம் பூராக மாணவன் ஸயான் ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டார். படி வாகனத்தில் வரவேற்கப்பட்டார். கோலாகலமாக இப்பாராட்டு நிகழ்வு ஊர் பூராக நேற்று இடம் பெற்றது.

செல்லுமிடமெல்லாம் சாதனை மாணவன் ஸயானுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பரிசுகளும் வழங்கினார்கள்.

இறக்காமம் பிரதேச செயலகம் பிரதேச சபை   கோட்ட பாடசாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கடைகள்
அனைத்திலும் இக் கௌரவம் வழங்கப்பட்டது.

 இவ்வெற்றி இப்பாடசாலைக்கும் இறக்காமத்திற்கும் கிடைத்த ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. 

குறித்த சாதனை செல்வன் யூசுப் ஸயான் எஸ்.எல்.எம். குத்தூஸ் ஆசிரியர், எஸ்.எல். பஸ்மியா ஆசிரியை ஆகியோரின் சிரேஷ்ட புதல்வருமாவார்.

வலயம் சார்பில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.வை.அறபாத் எ.எல்.எம்.மஜீத் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம். நிஷார் ஆசிரிய ஆலோசகர் எஸ்எல்ஏ.முனாவ்  ஆகியோர் சமுகளித்திருந்தனர்.


 ( வி.ரி. சகாதேவராஜா)


தேசிய போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் கல்வி அதிகாரிகள் பாடசாலைக்கு சென்று வாழ்த்தினார்கள்.


இச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.


அகில இலங்கை தேசிய சமூக விஞ்ஞான போட்டி-2023பெறுபேறுகள் நேற்று வெளியானது. இதில் சம்மாந்துறை வலயத்தில் மூன்று மாணவர்கள் சாதனைபடைத்தனர்.


 சம்மாந்துறை வலயத்தில் உள்ள மஜீத் புரம் மகா வித்தியாலய மாணவி  கே.எம்.எவ்.  அசீமா,(தரம்12/13), விவேகானந்த மகா வித்தியாலய மாணவி எஸ்.குகதர்சனா,(தரம்-09),இறக்காமம் அஷ்ரப் ம.கல்லூரி  எம்.கே..யூசுப்சயான்(தரம்-07) ஆகியோர் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.


அவர்களை குறித்தபாடசாலைக்குச்சென்று வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் வாழ்த்தி கெளரவித்தார்கள்.


பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.வை.அறபாத் எ.எல்.எம்.மஜீத் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம். நிஷார் ஆகியோர் பாராட்டச் சென்றிருந்தனர்.


 (வி.ரி. சகாதேவராஜா)


கல்முனை தமிழ்ப் பிரிவு கோட்டக் கல்வி பணிப்பாளர் சண்முகம் சரவணமுத்து தனது 36 வருட கல்வி சேவையில் இருந்து இன்று(29) வியாழக்கிழமை ஓய்வு பெற்றார்.

 இன்று 29ஆம் தேதி கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் அவருக்கான கௌரவம் வழங்கப்பட்டது.


பாண்டிருப்பைச் சேர்ந்த சேர்ந்த சரவணமுத்து  1988 இல் நியமனம் பெற்று மத்திய முகாம் நாலாம் கொலனி வாணி வித்தியாலயத்தில் கற்பித்து பின்னர் அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலயம் நாலாம் கொலனி வாணி வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராக இருந்து பின்னர் நாவிதன்வெளி கோட்ட கல்வி பணிப்பாளராக நான்கு வருடமும் இறுதியாக கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்வி பணிப்பாளராக 5 வருடமும் கடமையாற்றி நேற்றைய தினம் ஓய்வுபெற்றார் .

நாளை முதலாம் தேதி அவரது அறுபதாவது பிறந்த தினம் .
மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் 91 /92 அணியைச் சேர்ந்த இவரது புலன நண்பர்களின் ஒன்று கூடலும் இடம்பெற இருக்கிறது.


நூருல் ஹுதா உமர் 


எதிர்வரும் 2024.02.29 ஆம் திகதி இடம்பெறவுள்ள 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும் பல்கலைக்கழக நினைவுச் சின்னத்திற்கு முன்பாகவுள்ள திறந்த வெளியில் மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் 2024.02.26 ஆம் திகதி இடம்பெற்றது.

உள்ளூர் தனியார்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், நூலகர், பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்கள் பிரதி நிதியாளர் என பலரும் கலந்து கொண்டிருந்த நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

2024.02.29 ஆம் திகதி இடம்பெறவுள்ள “Digital Transformation for a Sustainable Future” எனும் தொனிப்பொருளில் குறித்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு க்கு பிரித்தானியாவின் Gloucestershire பல்கலைக்கழகத்தின் Head of School of Computing and Engineering பேராசிரியர் கமால் விச் கோம் அவர்கள் பிரதான பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளார். 

குறித்த மாநாட்டில் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


இணைந்த கரங்கள் அமைப்பினால் கிளிநொச்சி பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைப்பு.


நூருல் ஹுதா உமர் 


இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்று பாடசாலை அதிபர் ஜெயலட்சுமி மாணிக்கவாசகம் தலைமையில் பாடசாலையின் மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான எல். கஜரூபன், எம். காந்தன், ஆர். ஜெகனாதன், அவுஸ்ரேலியாவில் இருந்து வருகைதந்த தி. ஜெயந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.


இப்பாடசாலை தேசிய சுற்றாடலுக்கான "சுவசர தக்சலாவ" ஜனாதிபதி விருதினை தொடர்ச்சியாக 2015, 2016, 2017 என மூன்று முறை பெற்றுள்ளதுடன் பொலித்தீன் அற்ற பாடசாலையாகவும் காணப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

[7:05 pm, 25/02/2024] Rep/NoorulWhatsup: நற்பிரஜைகளாக திகழ கல்வியோடு சமூக சிந்தனையும் அவசியம் : இளைஞர்கள் மத்தியில் எஸ்.எம். சபீஸ். 


நூருல் ஹுதா உமர் 


இளைஞர்கள் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு நேரம் கிடைக்கும் வேளைகளில் சமூகப் பணிகளிலும் சமூக சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ்  தெரிவித்தார். 


மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோன்று சமூக சிந்தனையும் முக்கியமாகும்.  காரணம் ஒரு சிலர் இனவாதத்தையும், மற்றவர்களை குறைகூறி மக்களை முட்டாளாக்கி அதிகாரத்துக்கு வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களால் எமது சமூகம் எந்தவேளையிலும் முன்னேறவில்லை.

 

அதனால் நாம் ஒட்டுமொத்த சமூகமும் அறிவார்ந்த சமூகமாக முன்னேற தேவையான திட்டங்களையும், எமது இளைஞர்கள் புதிய தொழில் முயற்சியாளர்களாக வளரக்கூடிய வழிவகைகளையும், நமது மக்களின் ஏற்றத்தாழ்வினை சீர்செய்யக்கூடிய பொருளாதார திட்டங்களையும், அவர்களின் வாழ்வியல் உறுதிப்பாட்டிற்கான வழிவகைகளையும் எவ்வாறு முன்கொண்டு வரலாம் என்ற சிந்தனையோடு கல்வி பயிலுங்கள் நிச்சயம் எமது சமூகமும், நாடும் முன்னேறும் என தெரிவித்தார்

 



(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் மற்றும் காரைதீவு கோட்டங்களைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களுக்கு  இலவச சீருடையும் இலவசப் புத்தகங்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு கடந்த 20 ம் திகதி நடைபெற்றது.

நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் பாடசாலை கலாச்சார மண்டபத்தில்  பாடசாலை அதிபர் எம்.டீ.நௌபல் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு நிந்தவூர் பிரதேச  ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி  எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான சீருடை மற்றும் புத்தகங்களையும் வழங்கி வைத்தார்.

கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றியாஸா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம் சஜித் , இணைப்புச் செயலாளர் பீ.எம்.எம்.ஜஃபர் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் கோட்டமும் காரைதீவு தமிழ் கோட்டங்களைச் சேர்ந்த 41 பாடசாலை மாணவர்களுக்கு இவ் விநியோக நடவடிக்கைகள் இடம்பெற்றன.

பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரது பங்கேற்புடன் நடைபெற வேண்டுமென்ற கல்வியமைச்சின்  பணிப்புரைக்கமைய நிந்தவூர் மற்றும் காரைதீவு  பாடசாலைகளுக்கான இலவச சீருடை மற்றும் இலவச நூல் விநியோக நிகழ்வு  இங்கு இடம்பெற்றது.

 


அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமாக கௌரவ A,C.றிஸ்வான் அவர்கள் கடந்த 2024.01.01 கடமையேற்றதன் பின்பு அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன.

நீதிமன்றின் நீண்ட காலமாக ஓட்டடை ஒடிசல் விழுந்து காணப்பட்டிருந்த  வாகனத் தரிப்பிடம் சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில், புணரமைக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற, திறந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கான,புதிய திரைச்சீலை வசதிகள், புதிய சிறைக்கூண்டு,  போன்றவையும்,  இலட்சக் கணக்கான ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று நீதின்ற நுழைவாயிலில், இதுகாறும் இருந்து வந்த  பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, புத்தம் புதிய நவீன பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதி வசதிகளை, அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகள் ஒதுக்கியிருந்தன.


இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட  வாகனத் தரிப்பிடம் இன்றைய தினம் அக்கரைப்பற்று, மாவட்ட, நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதியுமான றிஸ்வான் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அதேவேளையில், மேலதிக மாவட்ட நீதிபதியும், கௌரவ நீதிபதியுமாகிய திருமதி தெசீபா ரஜீவன் புதிய பெயர்பலகையினை திறந்து திரை நீக்கம் செய்து வைத்தார். 

அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க மூத்த துணைத் தலைவர், சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எல்.ஏ. றசீத் அவர்கள், அங்குரார்ப்பண உரையினை நிகழ்த்தும் போது, பல தசாப்தகாலமாக புணரமைக்கப்படாமல் காணப்பட்டிருந்த, அக்கரைப்பற்று நீதிமன்று,கடந்த 2024.01.01 கௌரவ  நீதிபதியாக  ஏ.சி. றிஸ்வான் அவர்கள் கடமையேற்றதன் பின்பு, பல்வேறுபட்ட மாற்றங்களகை் கண்டு வருகின்றது என்பதாகத் தெரிவித்தார்.அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன என்பதுடன், அதற்கு ஒத்துழைப்பு நல்கிய உள்ளுராட்சிமன்றங்களக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான கௌரவ  ஏ.சி. றிஸ்வான் அவர்கள் உரைநிகழ்த்தும் போது, குறுகிய காலத்தில் இப் பணிகளைச் செய்து முடிக்க அரும்பணியாற்றிய, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகளுக்கும், களப்பணியில் ஈடுபட்ட சமூதாயஞ்சார் பணியாளர்களுக்கும், நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கும், மிகக் குறுகிய காலத்தில் சிறப்பான திறப்பு விழாவினைச் செய்து கொடுத்த அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

 இன்றைய நிகழ்வில் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள்,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் றயிசுல் ஹாதி, நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர். 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.