Showing posts with label education. Show all posts


 நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும் அமைப்புகளும் பாராட்டுக்குரிய பங்களிப்பை தற்போது வழங்கி வருவருகின்றன. அவ்வாறு பங்களிப்புச் செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தாராள மனப்பான்மை கொண்ட நன்கொடையாளர்களின் நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அரசாங்கத்தினால் சில வங்கிக் கணக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதிப் பங்களிப்புகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் அமைச்சுக்கள் நேரடியாகப் பொறுப்புக்கூரும்.

 

நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வேறு எந்தவொரு அமைப்பு அல்லது தனியாரின் வங்கிக் கணக்குகளுக்கு இந்த அமைச்சு அனுமதியோ,அங்கீகாரமோ வழங்கவில்லை. அத்தகைய நிதிப் பங்களிப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் அல்லது தனிநபர்களே ஏற்றுக்கொள்வார்கள்.

 

இந்தக் இக்கட்டான தருணத்தில் மக்கள் வழங்கி வரும் பங்களிப்பைப் பாராட்டும் அதே வேளை, மாணவர்களுக்கான நிதிப் பங்களிப்புகளை பெற்றுக்கொடுக்கும் போது, அதன் நம்பகத்தன்மை குறித்து மக்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

அரசாங்கத்தின் வங்கிகணக்குப் பற்றிய தகவல்களுக்கு பிரவேசியுங்கள் www.donate.gov.lk



 பெய்துவரும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கட்டைபறிச்சான்  -இரால் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீரான இன்று (22) பாய்ந்து செல்கிறது.


இதன் காரணமாக மூதூர் இரால் பாலத்தினூடாக பிரயாணம் செய்யும் பொதுமக்களும் ,வாகனச் சாரதிகளும் சிரமங்களுக்கு மத்தியில் பிரயாணம் மேற்கொண்டு வருவதை காணமுடிந்தது.

 


நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட மாணவர் ஒன்றியம்  ஏற்பாடு செய்திருந்த  FIASTA 25 வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு 2025.11.22 ஆம் திகதி பீடத்தின் பிரதான அரங்கில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஆர். ஹனாஸ் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் ஷேக் எம்.எச்.ஏ. முனாஸ் கலந்து கொண்டு உரையாற்றிய துடன் வெற்றிக்கின்னங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

நிகழ்வின் போது பீடத்தின் அரபு மொழி துறையின் தலைவர் கலாநிதி ஏ.எம். றாசிக், பல்கலைக்கழக பிரதி சிரேஷ்ட மாணவர் ஒழுக்காற்று அதிகாரி எம்.ஏ. ஜி. பெரோஸ் மற்றும் உடற்கல்வி துறையின் பணிப்பாளர் ஐ.எம்.கடாபி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

நிகழ்வை சிறப்பூட்டும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகிகள், விருது பெற்ற மாணவர்கள், போட்டியாளர்கள் மற்றும் மாணவ–மாணவியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பீடாதிபதி அஷ் ஷேக் எம். எச். ஏ. முனாஸ்  மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உற்சாகமூட்டும் விதத்தில் உரையாற்றினார்.

வலியுறுத்தினார்.


பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்பது குறைந்து வருவதை அவர் கவலையுடன் குறிப்பிட்டார். “மாணவர்கள் இலை மறை காய் போல; அவர்களின் மறைந்த திறன்களை வெளிக்கொணர்ந்து தான் நாம் முன்னேற்றம் அடையலாம்” என அவர் எடுத்துரைத்தார்.

மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகத்தை மனதால் நேசித்தால், அவர்கள் எங்கு சென்றாலும் வெற்றியாளர்களாக இருப்பார்கள், நல்ல ஒழுக்கம் மற்றும் புகழ் எங்கும் பறைசாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களது ஒவ்வொரு முயற்சியிலும் ஆதரவளித்த பீடாதிபதி அஷ் ஷேக் எம். எச். ஏ. முனாஸ் அவர்களுக்கு, மாணவர் ஒன்றியம் சார்பில் அவர் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்தார்.“எந்த முயற்சியையும் மறுக்காமல் ஊக்குவித்த தலைவர்,” “எங்களுக்கு உத்வேகம், வழிகாட்டல் அளித்தவர்” என அவர் பாராட்டினார்.

மாணவர்கள் அழுத்தமான சூழல்களில் இருக்கும் போது, அவர்கள் முதலில் செல்லும் இடம் “எங்கள் பீடாதிபதியின் அறை”.அங்கே அவர்கள் பெறும் ஊக்கமும் அன்பும், பல்கலைக்கழகத்தை ஒன்றுபட்டு கட்டியெழுப்ப வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்தார்.



மாலபே, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர்.


மாலபே, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு நேற்று (21) கிடைத்தது.


ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தும் வகையில், பெறுமதிமிக்க மரக்கன்றுகளும் நிறுவனத்திற்கு பரிசாக வழங்கப்பட்டன.


ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட விரிவுரையாளர் கிம்ஹான் சூரியபண்டார, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



ஜே.கே.யதுர்ஷன்

தம்பிலுவில் ...


உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட  06 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது


ஜே.கே.யதுர்ஷன்

தம்பிலுவில் ...


தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு

"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 06 பயனாளிகள் புதிய வீடுகள்அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.


இவ் வீடுகள் அமைப்பதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஒரு மில்லியன் ரூபாயும் ஒவ்வொரு பயனாளர்களால் தலா எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ஆக இவ் வீடுகளின் மொத்த பெறுமதி பதிணெட்டு இலட்சத்து  ஐம்பதாயிரம் பெறுமதியான வீடுகளாகும்


இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை கையளித்தார்  மேலும் இவ் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் Mr சுதா , பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந்த், தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச கிளை உறுப்பினர்கள் ,பிரதேச செயலக தேசிய வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்,கிராமசேவை உத்தியோகத்தர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர்கள் பயனாளர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 


( வி.ரி.சகாதேவராஜா)

சமூகப் பொறுப்புடன் அவுஸ்திரேலியா அரசாங்கமும்  இலங்கை கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சும் இணைந்து செயற்படுத்திய சட்டவிரோதமாக அவூஸ்ரேலியாவிற்கு கடல் மார்க்கமாக  செல்வதற்கு முயற்சிப்பதை தடுக்கும் நோக்குடன்
ஒழுங்கு செய்யப்பட்ட கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலய மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
 
ஓவியப் போட்டியில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை 
பு.சஞ்ஜய்வன், ச.டருஸன், கு.விதுரங்கன் கட்டுரைப் போட்டியில் முறையே முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை சி.நிவோசனா,
கோ.டிலுக்சிகா, க.சதுஸ்சிகா ஆகியோர் பெற்றுள்ளனர்.

இப்பரிசளிப்பு நிகழ்வானது கொழும்பு  பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று முன்தினம் (15/11/2025) நடைபெற்றிருந்தது.

இப்போட்டிக்கான தயார்ப்படுத்தலினை சித்திரப் பாட ஆசிரியர் க. ரவிவர்மன் மேற்கொண்டிருந்தார்



 (  வி.ரி.சகாதேவராஜா)


உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் (கனடா.) நாவிதன்வெளி பிரதேச  06ம் கிராமத்தில்  வசதிகளின்றி வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவருக்கு அவரது கல்வி நடவடிக்கைகளுக்காக துவிச்சக்கர வண்டி மற்றும் மாதாந்த கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மாணவி நாவிதன்வெளி சொறிக்கல்முனை கொலிகுறோஸ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கலைப்பிரிவில் கல்விகற்பவர்.

குறித்த தங்கராசா சுகனிதா என்ற மாணவி 06ம் கிராமத்திலிருந்து சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் பாடசாலைக்கு நடையாகச் சென்று தனது உயர் கல்வியை தொடர்ந்து வந்தார் .

இந் நிலையில் அவ்வாறு சென்று கல்வி கற்பதில்  இடையூறுகள் ஏற்பட்டன.

இது தொடர்பாக உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகரும்,சமூக சேவகருமான விசு கணபதிப்பிள்ளையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது .

அதன் பேரில் கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளர் கனகலிங்கம் புவியின் நிதி உதவி கொண்டு  மாணவிக்கான துவிசக்கர வண்டி மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்த கொடுப்பனவும் வழங்குவதற்கு  தீர்மானிக்கப்பட்டன.

அதன் பிரகாரம் குறித்த மாணவிக்கு துவிச்சக்கரவண்டியும்,2026 ஜனவரி, பெப்ரவரி  மாதங்களுக்கான மாதாந்தர கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டது..

 இந்நிகழ்வில் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் என்.சௌவியதாசன்,  நாவிதன்வெளி பிரதேச  சமூக சேவை உத்தியோகத்தர் குரூஸ் குணரத்தினம் , ஓய்வு பெற்ற உதவிக் கல்வி பணிப்பாளர் கண. வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தனர். 

உதவியை வழங்கிய சமூக சேவையாளர் கனகலிங்கம் புவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும்.  தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கை, மற்றும் பல்வேறுபட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகின்ற தமிழ் பணிசெம்மல்,சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளைக்கும்.  மாணவி, குடும்பத்தினராலும்  மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.



 க.பொ.த. உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் : நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்க

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 


இம்முறை 340, 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.


நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 246 521 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், 94 004 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 340 525 ஆகும். 


உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய சகல மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகளுக்கும் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.


பாடசாலை ஊடாக பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் அவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.


பரீட்சாத்திகள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை கொண்டு வர வேண்டியது கட்டாயமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 ( வி.ரி.சகாதேவராஜா)


 

சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலையின் பவளவிழா இன்று (19) செவ்வாய்க்கிழமை 
அதிபர் எஸ்.ஜதீஸ்வராவின் 
தலைமையில் நடைபெற்றது.

கூடவே,வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரிசையில் சித்தி பெற்ற இரண்டு மாணவிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.

உருத்திரமூர்த்தி சபிக்ஷனா என்ற மாணவி 144 புள்ளிகளையும், ராஜு சஞ்ஷனா என்ற மாணவி 146 புள்ளிகளையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருந்தனர் .

அவர்களுக்கு, அவுஸ்திரேலியா காரைதீவு ஒன்றிய (ஒஸ்கார் ) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் (ராஜன்) வேண்டுகோளின்  பேரில், அதன் ஸ்தாபக தலைவர் பிரபல கட்டடக் கலைஞர் அரசரெத்தினம் மகேந்திரன் இருபதாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். அதனை ஒஸ்கார் இலங்கைப் பிரதிநிதி வி.ரி.சகாதேவராஜா சாதனை மாணவிகளுக்கு வழங்கி வைத்தார்.


 விழாவில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார் கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் யசீர் அரபாத், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா,  முன்னாள் காரைதீவு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோரும் அயல் பாடசாலை அதிபர்களாக எஸ்.கிருபைராஜா( கணபதிபுரம்),  ஆர்.ஜயசிங்கம்( புது நகரம்) 
ஆகியோர் கலந்து கொண்டனர்.

பவளவிழா சிறப்புரையை ஆசிரியர் எஸ்.உருத்திரமூர்த்தி நிகழ்த்தினார்.
சாதனை மாணவிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.



நூருல் ஹுதா உமர்

இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் பாடசாலையின் அதிபர் ஏ.சி. ஹாமித் தலைமையில் (05) நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் கலந்து கொண்டார். இங்கு உரையாற்றிய அவர், கல்முனை கல்வி வலயத்தில் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை பல்வேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டு மிளிர்கின்ற நிந்தவூர் கல்வி கோட்டத்தில் உள்ள முதன்மையான பாடசாலையாகும்.

இதன் பலனாக இன்று இப் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்திலும் மாகாண மற்றும் வலய மட்டங்களிலும் பல்வேறு சாதனைகளை தொடர்ச்சியாக நிலைநாட்டி வருகின்றனர். அண்மையில் இந்திய நாட்டினுடைய இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் இந்த பாடசாலைக்கு வருகை தந்தமை மற்றும் அவருக்கு இந்த பாடசாலையின் உடைய அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் வழங்கப்பட்ட மகத்தான வரவேற்பு,  குறித்த உயர்ஸ்தானிகரை மிகவும் அகமகிழ செய்த ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.

பிரதேசமாகும் ஏனெனில் அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகர் இந்த பாடசாலைக்கு வருகை தந்திருந்தார்.  மிக அண்மையில் இந்த இந்நாட்டின் பிரதமரும் கல்வி உயர் கல்வி அமைச்சருமான பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த ஊருக்கு விஜயம் செய்திருந்தமையும் பாராட்டத்தக்க விடயமாகும்.

அண்மையில் இந்தப் பாடசாலையினால் நடத்தப்பட்ட கண்காட்சி மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இப்பிராந்தியத்தை அரசியல் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல்வாதிகளையும் அழைத்து இந்த மாணவர்களுடைய ஆக்கங்களை ஒரு கண்காட்சியின் ஊடாக எங்களுக்கும் முழு உலகுக்கும் கொண்டுவர நேர்ந்தமையும் இந்த பாடசாலை ஆகும். இதன் மூலம் இப்பாடசாலை இந்த வலயத்துக்கும் மாகாணத்திற்கும் தேசியத்திற்கும் ஆற்றிய அரும் பணி போற்றத்தக்கதாகும் என வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வலயக் கல்வி பணிமனையின் நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம் ஜாபிர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித், நிந்தவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.எல்.எம்.முத்தரீஸ், பாடசாலை, பிரதி உதவி அதிபர்கள், அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் பொறியியலாளர் ஹைக்கல் உட்பட வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றுகின்ற ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 


மீதான அக்கறையானது மிகவும் அபரிதமாக வளர்ச்சி கண்டு வருவது அண்மைக்காலமாக புலப்படுகின்றது.

நிந்தவூர் பிரதேசம் ஒரு வரப்பிரசாதம் மிக்க பிரதேசமாகும் ஏனெனில் அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகர் இந்த பாடசாலைக்கு வருகை தந்திருந்தார்.  மிக அண்மையில் இந்த இந்நாட்டின் பிரதமரும் கல்வி உயர் கல்வி அமைச்சருமான பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த ஊருக்கு விஜயம் செய்திருந்தமையும் பாராட்டத்தக்க விடயமாகும்.

அண்மையில் இந்தப் பாடசாலையினால் நடத்தப்பட்ட கண்காட்சி மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இப்பிராந்தியத்தை அரசியல் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல்வாதிகளையும் அழைத்து இந்த மாணவர்களுடைய ஆக்கங்களை ஒரு கண்காட்சியின் ஊடாக எங்களுக்கும் முழு உலகுக்கும் கொண்டுவர நேர்ந்தமையும் இந்த பாடசாலை ஆகும். இதன் மூலம் இப்பாடசாலை இந்த வலயத்துக்கும் மாகாணத்திற்கும் தேசியத்திற்கும் ஆற்றிய அரும் பணி போற்றத்தக்கதாகும் என வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.


 செய்திருந்தமையும் பாராட்டத்தக்க விடயமாகும்.


அண்மையில் இந்தப் பாடசாலையினால் நடத்தப்பட்ட கண்காட்சி மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இப்பிராந்தியத்தை அரசியல் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல்வாதிகளையும் அழைத்து இந்த மாணவர்களுடைய ஆக்கங்களை ஒரு கண்காட்சியின் ஊடாக எங்களுக்கும் முழு உலகுக்கும் கொண்டுவர நேர்ந்தமையும் இந்த பாடசாலை ஆகும். இதன் மூலம் இப்பாடசாலை இந்த வலயத்துக்கும் மாகாணத்திற்கும் தேசியத்திற்கும் ஆற்றிய அரும் பணி போற்றத்தக்கதாகும் என வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வலயக் கல்வி பணிமனையின் நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம் ஜாபிர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித், நிந்தவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.எல்.எம்.முத்தரீஸ், பாடசாலை, பிரதி உதவி அதிபர்கள், அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் பொறியியலாளர் ஹைக்கல் உட்பட வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றுகின்ற ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 



இலங்கையில் பாடசாலை நேர மாற்றம் அல்லது நேர நீடிப்பு என்பது இன்று ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே வேளை 
அரசாங்கம் பாடசாலை நேர நீடிப்பை வாபஸ் பெற வேண்டும். இன்றேல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க வேண்டி நேரிடும் என அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்து ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை  வரை கால அவகாசம் கொடுத்துள்ளது.

பொதுவாக நோக்கினால் பாடசாலை நேரத்தை அரை மணிநேரம் 
அதிகரித்தால், முழு கட்டமைப்பிலும் 
மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். 
அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தவும்
வேண்டும் என்பதே சகலரினதும் 
எதிர்பார்ப்பாகும்.

அண்மையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய சென்ற இடமெல்லாம் கல்வி சீர்திருத்தம் மற்றும் பாடசாலை நேர மாற்றம் தொடர்பிலேயே உரையாற்றியிருந்தார்.

குறிப்பாக பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் எவ்வித பிரச்சனைகளும் தோன்றவில்லை என் பிரதமர் கூறியிருந்தார். மறுகணம் தொழிற்சாலைகள் அதற்கு பதிலாக நாம் எழுத்து மூலம் அரசுக்கு தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளன.

இந்த நிலை ஆரோக்கியமான ஒன்றல்ல.
அரசும் தொழிற்சங்கங்களும் விடாக்கொண்டன் கொடாக்கண்டன் நிலையில் இருந்து விடுபட்டு இதற்கு நியாயமான தீர்வு காண வேண்டும். 

பாடசாலை என்பது தனி ஒரு கல்விச் சமூகத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. பல சமூகங்களுடன் தொடர்பு பட்டவை. கல்வி அமைச்சு போக்குவரத்து துறை மட்டுமல்ல குடும்பம் என்பதால் சகல துறைகளிலும் சம்பந்தப்பட்டது பாடசாலை ஆகும்.


 நிலைமை ஏற்படும். 

ஆகையால்தான், போக்குவரத்துக்குத் 
தேவையான மாற்றங்களை 
மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைகள் 
மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு 
கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி 
அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பாடசாலை நேரத்தை
30 நிமிடங்கள் நீடிக்க நடவடிக்கை
எடுத்தால், அதற்கான நியாயமான சம்பள
உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்று 
ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

தற்போதைய பாடசாலை நேரம் 
நீடிக்கப்படும் என்று கூறுவதன் மூலம், 
அவர்களுக்கு அதிக கடமைகள் மற்றும் 
பொறுப்புகள் வழங்கப்படும் என்று 
சுட்டிக்காட்டும் ஆசிரியர்கள், 
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட
பொறுப்புகளை நிறைவேற்றுவதில்
நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்றும் 
சுட்டிக்காட்டுகின்றனர்.
“கற்பித்தல் நேரத்தை நீட்டிப்பதன்
மூலம் முன்மொழியப்பட்ட திட்டத்தின்
மூலம் அவர்கள் சில உற்பத்தித்திறனை
எதிர்பார்க்கிறார்கள். பாடசாலை நேரம் 
ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் 
நீட்டிக்கப்படும் என்று கூறுவதன் மூலம், 
ஆசிரியர்கள் மாதத்திற்கு இருபது 
சேவை நாட்களை உள்ளடக்கும்போது 
மாதத்திற்குக் கூடுதலாக பத்து மணிநேரம் 
வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த 
வழியில், இது ஆசிரியர்களின் சம்பளத்தில்
நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்று 
சுட்டிக்காட்டுகின்றனர்.

அதுமட்டுமன்றி, பாடசாலை 
நிறைவடைந்து, மேலதிக வகுப்புகள், 
தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் 
மாணவர்களும் பெரும் சிரமங்களுக்கு 
முகங்கொடுக்கவேண்டிய நிலைமை
ஏற்படும். ஆகையால், பாடசாலை 
நிறைவடைந்து, இன்னும் இரண்டொரு 
மணிநேரத்துக்குப் பின்னரான பயண
ஏற்பாடுகளை மேற்கொள்ளும் 
வகையில் போக்குவரத்தை
மறுசீரமைக்கவேண்டும்.
இதேவேளை, பெரும்பாலான அரச 
பேருந்துகள், சீருடைகளில் நிற்கும் 
மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை. 
அத்துடன், பல தூரபிரதேசங்களில் அரச 
பேருந்து போக்குவரத்து ஒழுங்குமுறையில்
இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. 
குற்றச்சாட்டுகள் என்பதை விட, 
அதுதான் உண்மையாகும். 
ஆகையால், அந்த பிரச்சினையையும் 
நிவர்த்தி செய்ய வேண்டும்.

வருவது உயர்தர பரீட்சை. அடுத்து ஜனவரியில் பாடசாலைகள் ஆரம்பமாகும்.

எனவே அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பு ஆகும்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா 
காரைதீவு 

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ மழ்ஹறுஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய அதிபராக அதிபர் தரம் இரண்டை சேர்ந்த எம்.சி. நஸ்லின் ரிப்கா அன்ஸார் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டு அதற்கான நியமன கடிதத்தை கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலய பிரதி அதிபராக நீண்ட காலம் கடமையாற்றிய இவர்  சாய்ந்தமருது கமு/கமு/ மழ்ஹறுஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய பதில் அதிபராக கடமையாற்றி வந்த நிலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நிரந்தரமான அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமன கடிதத்தை வழங்கி வைக்கும் நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், ஏ. சஞ்சீவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
 



( வி.ரி.சகாதேவராஜா)

தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் 2023(24) மற்றும் 2024(25) இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2025.11.07 ஆம் தேதி வெளியாகும்.

2026 ஜனவரி மாதம் நேர்முகப்பரீட்சை நடைபெறும்.
கல்லூரியில் புதிய மாணவர்களுக்கான பதிவு 2026 பெப்ரவரி மாதம் நடைபெறும்.

பாடநெறியின் பெயர் " Higher National Diploma in Teaching ". (NVQ level -06) "உயர் தேசிய கற்பித்தல் டிப்ளமோ" என மாற்றப்படும். (NVQ நிலை -06) பாடத்திட்டம் மாற்றப்பட்டு, செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்படும்.புதிய பாடங்கள் மற்றும் பாடப் பெயர்களின் மாற்றங்கள் புதிய வர்த்தமானியில் இடம்பெறும்.

தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் இரண்டாம் வருட ஆசிரியப் பயிலுனர்களுக்கான இறுதிப் பரீட்சை 2026.06.08 தொடக்கம் 2026.06.18 வரை நடைபெறும். 2 ஆம் வருட ஆசிரியப் பயிலுனர்களுக்கான கட்டுறுப்பயில்வு 2026.07.18 ஆம் திகதி ஆரம்பமாகும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை கல்வி வலய நாவிதன்வெளி கோட்டத்தின் அகத்தியர் வித்தியாலயத்தில் இருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், நளீர் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ.நளீர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் ஊர் பிரமுகர்கள், பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 


பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு விஜயம்  


பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய கல்விச்சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வுக்காக நேற்று (2025.11.01) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 


புதிய கல்விச்சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விஜயம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் நடமாடும் சேவையிலும் பங்கேற்றார். 


இந்நடமாடும் சேவையின் போது, கல்வி நிர்வாக அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றைத்தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களையும்  வழங்கியுள்ளார். 


வலயக்கல்விப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.ஜவாத் நளீமி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது உதவி, பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர், வலய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

அம்பாறை மாவட்டம் திருக்கோவில்  கல்வி வலய ஆசிரியர்  வாண்மைத்துவ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திருகோவில் கல்வி வலய ஆசிரியர்  வாண்மை விருத்தி நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் திரு. N. சுதாகரன் ( முகாமையாளர், ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் திருக்கோவில்)  அவர்களின் தலைமையில் இடம்பெற்றது...


இதில்E.B 2-I மற்றும் 2-II ஆகிய தரங்களில்  வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையில் சித்திபெற்ற  ஆசிரியர்களுக்கான  சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன..


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின்  வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R.உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்...


மேலும் இந்நிகழ்வில்  கௌரவ அதிதிகளாக திரு. S. விக்னேஸ்வரன் ( விரிவுரையாளர், PDCT - திருக்கோவில்) ,திரு. S. I. M ரபியூஸ் ( விரிவுரையாளர், PDCT - திருக்கோவில்), திருமதி. M. J. றிஷ்மி ( விரிவுரையாளர், PDCT - திருக்கோவில் ஆகியோர் கலந்து கொண்டனர்....

 

இந்நிகழ்வில் 2-I மற்றும் 2-II தரத்தைச் சேர்ந்த 164 ஆசிரியர்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது...



 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்கும் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, இதற்கு இணங்கப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. 


இந்நிலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறக்கும்போது ஆசிரியர்கள் ஒருநாள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


“பாடசாலையின் நேர நீடிப்புக்கான முடிவை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இது எந்தவொரு உளவியல் அல்லது கல்வி ஆய்வு பூர்வமான முடிவும் அல்ல. எனவே பாடசாலை நேர நீடிப்பு குறித்த தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


மேலும் இந்த தீர்மானத்துக்கு சங்கம் எக் காரணம் கொண்டும் இணங்காது என்றும் ஆனால், இதுதொடர்பில் அதிகாரிகள் தரப்புடன் கலந்துரையாடல்களை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 



 பாறுக் ஷிஹான்


இலங்கையின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (29)  இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமு/ கமு/ அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா  பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடசாலைகளுக்கான தளபாடங்களை  வைபவ ரீதியாக கையளித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன், திகாமடுல்ல  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம். ஏ. எம். தாஹிர் , கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம். எஸ். ஸஹதுல் நஜீம்,  பிரதி கல்வி பணிப்பாளர் யூ. எல். எம். சாஜித்  நிந்தவூர் கோட்ட கல்வி பணிப்பாளர் எம் .எல். எம். முதாரிஸ் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.