Showing posts with label education. Show all posts

 


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில்  விரிவுரையாளராக கடமையாற்றும்  M.A Roshni Ahamed என்பவர் தனது 27வது வயதில் அவுஸ்ட்ரேலிய அரசாங்கத்தின் புலமைப்பரிசில் திட்டத்தில் அவுஸ்ட்ரேலிய குயின்ஸ்லான்ட் பழ்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கலாநிதி பட்டத்தை தொடர்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


இவர் காத்தாண்குடி அல் ஹிறா மாகா வித்தியாலயம் மற்றும் காத்தான்குடி  மத்திய கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரும்  5ம் குறிச்சி மார்க்கட் வர்த்தகர் அல்ஹாஜ் A.L.M அஸ்ரப் மற்றும் ஹாஜியானி M.I.M றிஹானா தம்பதிகளின் இரண்டாவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

#வாழ்த்துக்கள்...

 


அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா மற்றும் லரீனா அப்துல் ஹக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.

 


(நூருல் ஹுதா உமர்)

மோட்டி வைரஸ் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் மூன்றாவது மாபெரும் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (03) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப பிரதான அரங்கில் மோட்டி வைரஸ் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.எப் பஸீஹா பர்வீன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி மஹிந்த ரூபசிங்க கலந்து சிறப்பித்த துடன் கௌரவ அதிதிகளாக இலங்கைக்கான பங்களாதேஷ்  நாட்டின் உயர்ஸ்தானிகர் எண்டலிப் எலியஸ் மற்றும் மலேசியா நாட்டின் பிரதி உயர்ஸ்தானிகர் மொஹமட், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் எச்.பி.பி ஜய விக்கிரமசிங்க, கல்வி அமைச்சின் உதவி பணிப்பாளர் எச்.டி.பி.எல் குணதிலக, மோட்டி வைரஸ் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் ஏ.ஆர் எம் சர்ஜுன், மற்றும் பி.தைசீர், எம்.யு.எம். பாயிஸ், உதவி  காணி ஆணையாளர் நாயகம் ஆர். டி .எஸ் சமிந்து லக்ஷ்மன் ஜயரத்ன, NAITA நிறுவனத்தின் முன்னாள் உதவி பணிப்பாளரும், மோட்டி வைரஸ் கல்வி விவகார பணிப்பாளர்  டபலியு.ஏ.கே.எஸ்.குமார, VTA தொழிற்கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சுலங்கனி பெரேரா, இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.தாரக நளின் கம்லத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஆஃப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம். அமீன்,  வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் எம்.எஸ்.எம் இர்பான்,  சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரப், வெல்லஸ்ஸ தொலைக்காட்சி பணிப்பாளர் எம்.எஸ்.பி பண்டார மற்றும் அரச, அரச துறைசார்ந்த பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்.


உளவளத்துணை, தகவல் தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி நெறி , வர்த்தக முகாமைத்துவம், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி, ஆங்கில மொழி, சிங்கள மொழி போன்ற கற்கைநெறிகளுக்கான டிப்ளமோ சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன் சுமார் 400 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். மேலும் இப் பட்டமளிப்பு விழாவில் மலேசியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து கல்விகற்ற மாணவர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

 


2024 உயர்தர மாணவர்களுக்கான விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம்

*Special Career Guidance Program for 2024 A/L  Students*

https://www.guruwaraya.lk/2025/01/special-career-guidance-programme-for.html


*From Education Ministry*


*Covering Below Fields*

* English

* IT

* Literature

* Sports

* Vocational Education 


*Closing Date* 10 Jan 2025


*2024 උසස් පෙළ සිසුන් සඳහා විශේෂ වෘත්තීය මාර්ගෝපදේශ වැඩසටහන*


*2024 உயர்தர மாணவர்களுக்கான விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம்*



SLAS (திறந்த)  நேர்முகப் பரீட்சைக்கு தெரிவாd 204 பேரின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.https://www.pubad.gov.lk, இணையத்தளப் பக்கத்தில் பார்வையிடலாம்

 



( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவைச் சேர்ந்த இளம் பெண் சட்டத்தரணி செல்வி.டிறுக்ஷா தம்பிராஜா சட்டமுதுமானிப் பட்டம் பெற்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தில் பயின்ற அவருக்கான சட்ட முதுமாணி பட்டமளிப்பு விழா அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஓய்வு நிலை முகாமைத்துவ உதவியாளர் தம்பிராஜா மற்றும் ஓய்வு நிலை அதிபர் கலைவாணி தம்பதியினரின் புதல்வி டிறுக்ஷா  என்பது குறுப்பிடத்தக்கது

 



உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கசிந்த மூன்று கேள்விகளுக்கு இலவச புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது .


 பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.



 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்க தீர்மானித்ததன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு வழங்கிய மூன்று பரிந்துரைகளில் ஒன்றை ஏற்கும்படி பரீட்சைகள் ஆணையாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

 




 (வி.ரி. சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 
மகிழூர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலக வளாகத்தில்  கடந்த (27/12/2024)சிறுவர் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினத்தின் ஆலோசனைக்கிணங்கவும், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரனின், வழிகாட்டுதலுக்கு அமைவாகவும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களான  ம. புவிதரன் , செ.சக்திநாயகம்   ஆகியோரின் ஒருங்கிணைப்பினால் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் சிறுவர் நூலகம் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரனினால் திறந்துவைக்கப்பட்டது.

 இச் சிறுவர் நூலகத்தினை சக்தி சிறுவர் கழகத்தினர் பராமரிப்பு  செய்வதற்கு ஒப்படைக்கப்பட்டது.

இன்றைய காலத்தில் சிறுவர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் முறையான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமையினால் வழி தவறிப் போகக்கூடிய வாய்ப்பு அதிகம் காணப்படுவதால் தமது ஓய்வு நேரங்களை வீதியோரங்களில் கழிக்கின்ற நிலமையும், கையடக்க தொலைபேசி பாவனையில் மூழ்கி இருக்கின்ற நிலைமையும் அவதானிக்கப்பட்டதையடுத்து இன் நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இந் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த வருடம் மகிழூர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு நான்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மூலம் சிறுவர் சிநேகபூர்வ முன்மாதிரி கிராமமாக தெரிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்திறப்பு விழாவின் போது சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர், திட்டமிடல் அபிவிருத்திய உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் கழகங்களின் தலைவர் ஏனைய பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள்,   ஆலய பரிபாலன சபையின்  தலைவர், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுவின் தலைவர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர்கள்,   பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 



நூருல் ஹுதா உமர்


திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் கலாச்சார அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய மட்ட கலாசார போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) ரபான் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்று கல்லூரிக்கும் பிரதேசத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், மாணவர்களை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர் எம்.ஐ.எம்.அமீர் அவர்களுக்கும், கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபீர் (SLEAS), பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டி கௌரவித்தனர்




 நூருல் ஹுதா உமர்


கடந்த 2023 ஆம் ஆண்டில் சாதாரண தர பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்று கல்முனை கல்வி வலயம் தேசிய மட்டத்தில் அகில இலங்கை ரீதியில் 2வது இடத்தை பெற்றமைக்காக அந்த உயர்வுக்கு காரணமாக அமைந்த ஆசிரியப் பெருந்தகைகளைப் பாராட்டி நற்சான்றுப் பத்திரங்களை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.

மாணவர்களின் பல்லின கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் பீ. காப்தீபன் அவர்கள் கலந்து கொண்டார்கள். கல்முனை கல்வி வலயம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொள்ள காரணமாக அமைந்த 500 க்கும் அதிகமான ஆசிரியர்கள், அதிபர்கள், பாட இணைப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் எனப்பலரும் நற்சான்று பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாட இணைப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 



Rep/AzarAadam

கிழக்கு மாகாண  ஆசிரியர் சேவைக்குள் 2024 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்டமாக 52 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு  மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இன்று (26) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  


இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குகநாதன்,மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஜே.லியாகத் அலி, மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.ஆர்.ஹசந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

கிழக்கு மாகாண அரச ஆசிரியர் சேவைக்கான முதற்கட்ட ஆட்சேர்ப்பில் நியமனங்களை ஏற்காத மற்றும் சேவைக்கு சமூகமளிக்காதவர்களுக்குப் பதிலாக 52 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் என்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.


.

 பாறுக் ஷிஹான்




2024 தேசிய மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பு மாவட்ட செயல மத்தியஸ்த பிரிவினால்  நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் கனிஷ்ட பிரிவு மற்றும் சிரேஸ்ட பிரிவில் மண்முனை தென் எருவில்பற்று  (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலக பிரிவில் உள்ள பட்டிருப்பு வலயத்தில் உள்ள துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவர்கள் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

இதில் கனிஷ்ட பிரிவில் முதலாவது இடத்தை  சுபராஜ் கிருஸ்டிகாவும் சிரேஸ்ட பிரிவில் இரண்டாவது இடத்தை ற.ஹஸ்தனியும் பெற்றுள்ளனர்.இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தலைமையில்  34 ஆவது  மத்தியஸ்த தின நிகழ்வில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன் , நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் ஆஸாத், நீதி அமைச்சின்   மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.முஹமட் அஜுன்  உட்பட   விசேட காணி மத்தியஸ்த சபை மற்றும் ஏனைய மத்திய சபைகளின தவிசாளர்கள்இமத்தியஸ்தர்கள்இஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இஎனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இக்கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர்   சிவப்பிரியா வில்வரத்னம்,  உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி, நிர்வாக உத்தியோகத்தர், மற்றும்  துறைநீலாவணை மகா வித்தியாலய அதிபர் பிரதி, அதிபர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


 களுவாஞ்சிக்குடி நீதிமன் சமுதாய சீர்சிருத்த வேலை மேற்பார்வையாளர் ருமணன் பணிபுரியும்  (Master of Social Work with Merit Pass)-சமூக வேலைத்துறையில் முதுகலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு www.ceylon24.com தமது வாழ்த்துக்களை காணிக்கையாக்குகின்றது.


 



கல்விப் பொதுத் தராதரப் சாதாரண பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (18) பிற்பகல் அறிவித்துள்ளது.


இவ்வருடத்திற்கான சாதாரணத் தரப்பரீட்சை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

 


நூருல் ஹுதா உமர்


தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வின் போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பயன்பெறும் நோக்கில் ஸ்மார்ட் போர்ட் (Smart Board) வழங்கி வைக்கப்பட்டன.

மேற்குறித்த ஸ்மார்ட் போர்ட் சாதனங்கள் மற்றும் ஆவணங்களை உத்தியோகபூர்மாக கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) கையாளிக்கும் நிகழ்வு இன்று அதிபர் காரியாலத்தில் இடம்பெற்றது.

இச்சந்தர்ப்பத்தில் எமது கல்லூரிக்கு ஸ்மார்ட் போர்ட் பெற்றுத்தருவதாகக் அளப்பரிய பங்காற்றிய கல்முனை முன்னாள் பிரதேச செயலாளரும் தற்போதைய கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருமான ஜே.லியாக்கத் அலி அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர், கல்முனை பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


பாறுக் ஷிஹான்


அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கல்வி இளமானி சிறப்பு கற்கை நெறிக்காக 2022-2025 ஆம் ஆண்டு ஆரம்பப் பிரிவு ஆசிரியர் மாணவர்களால் ஆரம்பப் பிரிவுக்கான விஞ்ஞானம் ( Science for Primary) எனும் தொனிப் பொருளில் 2024. 12.15 ஞாயிற்றுக்கிழமை    கண்காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக  கணேசரத்தினமும்   கௌரவ அதிதிகளாக  ஆரம்பப் பிரிவு ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல் விரிவுரையாளர்களாக கடமையாற்றிய கே. கமலதாசன் மற்றும்  எம்.எச்.எஸ்.ஆர்  மஜீதிய்யா ஆகியோரும்  விசேட அதிகளாக ஏ.எம்.  முபாரக் கே.எல்.எம். பார்சாட் ரி. திலகாராஜா உட்பட  ஏனைய விரிவுரையாளர்களான ஏ.ஜே. வசீல்  ஏ.ஏ.  ரமீஸ்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வுகளுக்கு இணைப்பாளராக எஸ்.என்.ஏ அரூஸ்   கடமையாற்றுகின்றமையும்   குறிப்பிடத்தக்கது.




மாளிகைக்காடு செய்தியாளர்

கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கல்வியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய தலைமுறை கழகத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மாவடிப்பள்ளி கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷரஃப் அவர்களின் ஆலோசனைக்கிணங்க  புதிய தலைமுறை கழகத்தின் மாவடிப்பள்ளி செயற்பாட்டாளர்களினால் பெற்றோர்களை இழந்த பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி உபகரணங்கள் அதிபர், ஆசிரியர்களிர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.  இதன் போது மாவடிப்பள்ளி கல்வி சமூகமும் பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களும் இவ்வாறான உதவும் கரங்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

 


மகாசக்தி பாலர் பாடசாலையின் விடுகை விழா இன்றைய தினம் இடம்பெற்றது..   



அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு  மகாசக்தி பாலர் பாடசாலையின் விடுகை விழா நிகழ்வானது இன்று தினம் அக்கரைப்பற்று மகாசக்தி கட்டத்தில் இடம்பெற்றது ....


இன் நிகழ்வானது மகாசக்தி நிலைய உப தலைவி திருமதி.மங்கையக்கரசி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.....


இன் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் வெளிக்கள உத்தியோத்தர் திரு.மோகனதாஸ் அவர்களும் திருக்கோவில் வலய முன்கல்விக்கான உதவி கல்விப்பணிப்பாளர் திரு.விவேகானந்த ராஜா ஆகியோர் கலந்து கொண்டதுடன் 

 அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மகாசக்தியின் முகாமையாளர் திரு.திலகராஜன் மற்றும் சட்டத்தரணி திரு.N.தமிழினியன் ஆசிரியர்கள் பெற்றோர் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்...


இவ் நிகழ்வில் மகாசக்தி பாலர் பாடசாலையின் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பாலர் பாடசாலையில் இருந்து தரம் ஒன்றுக்கு செல்லும் மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைப்பட்டது அதனை தொடர்ந்து பெற்றோர்களினால் ஆசிரியர்களும் கொளரவிக்கப்பட்டது குறிப்பிடத்ததுக்கது...


ஜே.கே.யதுர்ஷன்

தம்பிலுவில்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.