Showing posts with label world. Show all posts

 


அமெரிக்காவில் நியூயார்க் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோஹ்ரான் மம்தானி பல வகையிலும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1892ஆம் ஆண்டுக்குப் பிறகு நகரத்தின் இளைய மேயர், அதன் முதல் முஸ்லிம் மேயர் மற்றும் ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர் என்ற சிறப்புகளை அவர் பெறுகிறார்.


முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் சில்வா ஆகியோரை எதிர்த்து அவர் பெற்றுள்ள வெற்றி குறிப்பிடத்தக்கது.


அதற்கும் மேலாக, ஜனநாயகக் கட்சியின் இடதுசாரிகளில் பலர் பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதியை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.


இளமை, ஆளுமை மற்றும் அவரது தலைமுறைக்கே உரித்தான சமூக ஊடக இணக்கம் ஆகியவற்றை அவர் கொண்டிருக்கிறார்.


அவரது இனம் கட்சியின் அடித்தளத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அவர் ஒரு அரசியல் போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை. அத்துடன், இலவச குழந்தை பராமரிப்பு, பொது போக்குவரத்து விரிவாக்கம் மற்றும் தடையற்ற சந்தை கட்டமைப்பில் அரசாங்க தலையீடு போன்ற இடதுசாரி கருத்துகளை அவர் ஆதரித்துள்ளார்.


விளம்பரம்


நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images

சமீபத்தில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு முன்னுரிமையாக இருந்த பொருளாதாரப் பிரச்னைகளில் கவனம் செலுத்தும் திறனையும் மம்தானி வெளிப்படுத்தியுள்ளார். அவர் இடதுசாரிகளின் கலாசாரக் கொள்கைகளை மறுக்கவில்லை.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்கா

நியூயார்க் மேயராக முதன் முறையாக முஸ்லிம் தேர்வு: டிரம்ப் எதிர்ப்பை மீறி வென்றவர் முன்னுள்ள சவால்கள்

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு

கோவை பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை சுட்டுப் பிடித்தது எப்படி?

அப்பா, மாதவிடாய், Pads for Dads, ஆண்கள்

மாதவிடாய் பற்றி மகள்களிடம் அப்பாக்களும் பேசுவது அவசியம் - ஏன் தெரியுமா?

ஆந்திர கூட்ட நெரிசல், ஸ்ரீகாகுளம் கோட்டா நெரிசல், கோவில் கூட்ட நெரிசல் 

'திருப்பதியில் முழுமையான தரிசனம் கிடைக்காததால் தனியே கோவில் கட்டினேன்' - யார் இவர்?

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால் பரந்துபட்ட அமெரிக்காவில் இத்தகைய வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட முடியாதவர் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். தன்னைத் தானே சோசலிஸ்ட் என்று கூறிக் கொண்டவரை ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி முகமாக குடியரசுக் கட்சியினர் மாற்றியுள்ளனர். ஆனாலும், செவ்வாய்க்கிழமை இரவு நியூயார்க் நகரில், அவர் ஒரு வெற்றியாளராக இருந்தார்.


மேயர் தேர்தலில் மம்தானியின் பரப்புரை மிகப்பெரிய அளவில் ஊடக கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்திற்கான மேயர் தேர்தலைக் காட்டிலும் ஒருவேளை இது அதிகமாக இருக்கலாம்.


மேயராக, அவரது வெற்றிகள் மற்றும் தோல்விகள் உன்னிப்பாக ஆராயப்படும் என்பதையும் இது குறிக்கிறது.


12 ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரத்தின் பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும் ஒரு தளத்தில் மேயர் பதவிக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பில் டி ப்ளாசியோ வெற்றி பெற்றார். மம்தானியைப் போலவே, இடதுசாரி அமெரிக்கர்களும் அவரது நிர்வாகம் திறமையான தாராளமய நிர்வாகத்திற்கு ஒரு தேசிய எடுத்துக்காட்டாக இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர்.


இருப்பினும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலகிய டி ப்ளாசியோ பரவலாக பிரபலமடையவில்லை. புதிய கொள்கைகளை செயல்படுத்த தனது மேயர் அதிகாரத்தின் வரம்புகளுடன் அவர் போராட வேண்டியிருந்தது.


மம்தானியும் அதே வரம்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் போராட வேண்டியிருக்கும்.


சக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், மம்தானியின் லட்சிய திட்டங்களுக்கு நிதியளிக்க வரிகளை உயர்த்துவதை எதிர்க்கிறேன் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.


போதுமான நிதி இருந்தாலும், மம்தானியால் ஒருதலைப்பட்சமாக திட்டங்களை செயல்படுத்த முடியாது.


நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images

ஆனால் அதெல்லாம் பிற்காலத்திற்கான பிரச்னை. இப்போதைக்கு, பொது வெளியில் தமது பிம்பத்தை வரையறுக்கும் பணியை தனது எதிரிகளுக்கு முன்பாக மம்தானி தொடங்க வேண்டும்.


பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பு, அமெரிக்க மக்களில் 46% பேர் நியூயார்க் மேயர் தேர்தலை "நெருக்கமாகப் பின்தொடரவில்லை" என்று சுட்டிக்காட்டியுள்ளது. இது மம்தானி மற்றும் அமெரிக்க இடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பையும் சவாலையும் வழங்குகிறது.


அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் உள்ள பழமைவாதிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரை ஒரு சோசலிச அச்சுறுத்தலாக சித்தரிக்க முயற்சிப்பார்கள். "அதன் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகள் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்திற்கு அழிவைக் கொண்டுவரும், நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஆபத்தை ஏற்படுத்தும்" என்று அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கலாம்.


ஒவ்வொரு தடுமாற்றத்தையும் ஊதிப் பெருக்கி, ஒவ்வொரு எதிர்மறை பொருளாதார குறிகாட்டியையும் அல்லது குற்ற புள்ளிவிவரத்தையும் அவை முன்னிலைப்படுத்தும்.


நியூயார்க்குடன் தனிப்பட்ட தொடர்பைக் கொண்ட டிரம்ப், மம்தானியுடன் ஒரு அரசியல் மோதலை வரவேற்பார் என்பது உறுதி. புதிய மேயரின் வாழ்க்கையை சிக்கலாக்க அவருக்கு ஏராளமான வழிகள் உள்ளன.


நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images

இருப்பினும், மம்தானிக்கு உள்ள வாய்ப்பு என்னவென்றால், பிரசாரத்தின் போது அவரது அரசியல் எதிரிகள் அவருக்கு எதிராகப் பயன்படுத்த முயன்ற அவரது கடந்த காலம் அவருக்கு சுமையாக இல்லை.


ஜனவரியில் அவர் பதவியேற்கும் போது, ​​புதிதாக அரசியல் நற்பெயரை உருவாக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அவருடன் டிரம்ப் பகைமை கொண்டால் மம்தானிக்கு அவர் ஒரு பெரிய தளத்தை வழங்குவதாக அமையும்.


மம்தானியின் அரசியல் திறமையும் திறன்களும் அவரை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளன. இது சிறிய சாதனையல்ல. ஆனால் வரும் ஆண்டுகளில் அவருக்கு காத்திருக்கும் சோதனைகளுடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை.


நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images

ஸோஹ்ரான் மம்தானியின் இந்திய பின்னணி

(பிபிசி இந்தி சேவை வழங்கிய கூடுதல் விவரங்கள்)


ஸோஹ்ரான் குவாமே மம்தானி 1991ஆம் ஆண்டு உகாண்டா தலைநகரான கம்பாலாவில் பிறந்தார். புரட்சியாளரும் கானாவின் முதல் பிரதமருமான குவாமே நக்ருமாவின் நினைவாக மம்தானியின் தந்தை அவருக்கு குவாமே என்ற நடுப் பெயரைச் சூட்டினார்.

புகழ் பெற்ற இந்திய-அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயர் மற்றும் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மஹ்மூத் மம்தானி ஆகியோரின் மகன்தான் இந்த ஸோஹ்ரான் குவாமே மம்தானி.

ஆரம்ப நாட்களை கம்பாலாவில் கழித்த அவர், 5 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானியின் தந்தை மஹ்மூத் மம்தானி, கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். 1848 ஆம் ஆண்டு கேப்டவுனில் நிறுவப்பட்ட தென் ஆப்ரிக்காவின் பழமையான செயின்ட் ஜார்ஜ் கிராமர் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

மம்தானிக்கு 7 வயதாக இருக்கையில் அவரது குடும்பம் நியூயார்க் குடிபெயர, அங்கே பிராங்க்ஸ் உயர்நிலை அறிவியல் பள்ளியில் அவர் பயின்றார்.

2014ஆம் ஆண்டு,போடன் கல்லூரியில் ஆப்பிரிக்க ஆய்வுகளில் அவர் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு 2018-இல், மம்தானி அமெரிக்க குடிமகன் ஆனார்.

 


🔴 சமாதான உடன்படிக்கை அமுலில் இருக்க, கடந்த 12 மணித்தியாலங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காஸாவில் நூற்றுக்கணக்கானோர் பலி என தகவல்!



 


கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு அழைத்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனி அறைகளில் த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

 

 

தொடர்ந்து அவர்களின் மருத்துவ செலவு, கல்வி செலவு மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு உதவுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

 



 அமெரிக்கா தீவிரவாதி என்று அறிவித்த முதல் நபர்,


உலகில் நடக்கும் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்-களின்‌ பிதாமகள்.,


கருப்பின மக்களை கல்வி மற்றும் கவிதை மூலம் வெள்ளையர்களின் இன வெறி -க்கு எதிரான புரட்சியை விதைத்தவர்.


கொலையாளி என்று பொய் குற்றச்சாட்டில் பல ஆண்டுகளாக அமெரிக்கா சித்திரவதை செய்தது!


அவர் இறக்கும் தருவாயில் இருந்த போது மக்கள் ஒன்றிணைந்து அவரை சிறையில் இருந்து காணாமல் போக செய்தனர்.


பல மாதங்களுக்கு பிறகு அவர் கியூபா-வில் உயிருடன் இருப்பதாக தெரிய வந்ததும்!


அவரை அமெரிக்காவின் முதல் தீவிரவாதியாக அறிவித்து அவரின் உயிருக்கு 2 மில்லியன் டாலர் தொகையை அறிவித்தது!


அவரின் புத்தகங்கள் உலகின் பல போராட்டங்களை ஒருங்கிணைக்க உதவும் அகராதி!


கடைசி வரை அவரை அமெரிக்காவினால் நெருங்க முடியவில்லை!


தோழர். Assata Shakur..,

நேற்றுடன் தான் சிந்தப்பதை நிறுத்திக் கொண்டார்!



 

இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது. 

வீரர்கள் நட்பு போட்டியொன்றில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பக்திகா மாகாணத்தில் உள்ள உர்குனிலிருந்து ஷரானாவுக்கு பயணித்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) தெரிவித்துள்ளது. 

"உர்குனில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்கள் ஒன்று கூடல் ஒன்றின் போது குறிவைக்கப்பட்டனர்" என்று தெரிவித்த ACB, அதனை "பாகிஸ்தான் ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்" என்று விபரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, கொல்லப்பட்ட மூன்று வீரர்களையும் கபீர் (Kabeer), சிப்கத்துல்லா (Sibghatullah) மற்றும் ஹாரூன் (Haroon) எனப் பெயரிட்டுள்ளதுடன், இந்தத் தாக்குதலில் மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

இருப்பினும், சில ஊடக அறிக்கைகளின்படி, கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 



Norway 🇧🇻 vs 🇮🇱 கால்பந்து ⚽ போட்டியில் கிடைத்த மொத்த வருமானம் $ 350,000 (3.5 lakhs)-யை காசாவில் இயங்கும் Doctor's Without Border அமைப்புக்கு வழங்க உள்ளது நார்வே நாடு!


போட்டி நடைபெற்ற அன்று Oslo முழுவதும் பாலஸ்தீன் ஆதரவாக மக்கள் Stadium 🏟️-யை‌ பாலஸ்தீன கொடியும் பெருமளவில் கூடி விட்டனர்.


பிரச்சனை பெரிதாகி விடும் என்று அஞ்சிய காவல்துறை போட்டி துவங்கும் முன்னரே நுழைவாயிலை அடைத்து விட்டது!


இதில் Ticket 🎫 வைத்திருந்தவர்கள் கூட உள்ளே செல்ல முடியவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது

 


31 வருடங்களுக்கு பிறகு இஸ்ரேல் சித்திரவதை முகாமில் இருந்து Hamas 🇵🇸 காப்பாற்றிய Mohammed Issa


இவரை 13 வருடங்கள் ஒற்றை நபராக தனிமை சிறையில் அடைத்து வைத்து கொடுமை படுத்தி உள்ளது இஸ்ரேல்!

 இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த  சுமார் 2,000 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகளை ஏற்றிச் சென்ற 38 பேருந்துகள் காஸா பகுதிக்குள் நுழைந்துள்ளதாக பலஸ்தீன கைதிகள் தகவல் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.




எதிர் பார்க்கும் நாளுக்கு முன்பே தங்களின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக வெனிசுவேலா தரப்பு கூறுகிறது!

நாட்டின் மக்கள் தொகை 2.8 கோடி அதில் 85 லட்சம் பேர்.., கல்லூரி மாணவி முதல் முதியோர் வரை ஆயுத பயிற்சி எடுத்து வருகின்றனர்.

 


Day - 734


🇵🇸va🇮🇱🇺🇲


* காசா போர் நிறுத்தம் 

* உணவுப் பொருட்கள் தடையின்றி விநியோகம்

* போர் கைதிகள் பரிமாற்றம் 

* ஆக்கிரமிப்பு படைகள் வெளியேற்றம் 


ஆகியவற்றை முன் வைத்து இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீன் ஏற்கிறது!


- Hamas 🇵🇸

 


பிரித்தானியாவின் பிரைட்டன் அருகே பீஸ்ஹெவன் நகரில் உள்ள மசூதியில் இரு மா்ம நபா்கள் தீவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய மற்றும் யூத வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

முகமூடி அணிந்த இருவா் மசூதிக்குள் நுழைய முயன்றதாகவும், அது முடியாததால் அவா்கள் படிக்கட்டுகளில் பெற்றோலை ஊற்றி தீ வைத்ததாகவும் மசூதி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

 

இந்தச் சம்பவத்தின்போது மசூதிக்குள் பலா் இருந்ததாகவும் வெடிப்பு சத்தம் மற்றும் பிரதான நுழைவாயிலில் தீப்பிழம்புகளை கண்டு அவா்கள் தப்பினா் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 



 Washington Post

அமெரிக்க யூதர்கள் 61% பேர் காசா போரை தவறான முறையில் அனுகி போர் குற்றம் புரிந்து விட்டது இஸ்ரேல் என்று தெரிவித்துள்ளனர்.


10-ல் 4 யூதர்கள்....,

இஸ்ரேல் செய்வது இனப்படுகொலை தான் என்று உறுதியாக நம்புகின்றனர்.


- அமெரிக்க யூதர்கள் 61% பேர் காசா போரை தவறான முறையில் அனுகி போர் குற்றம் புரிந்து விட்டது இஸ்ரேல் என்று தெரிவித்துள்ளனர்.


10-ல் 4 யூதர்கள்....,

இஸ்ரேல் செய்வது இனப்படுகொலை தான் என்று உறுதியாக நம்புகின்றனர்.


- Washington Post

 பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட பலஸ்தீன ஆதரவுக் குழுவுக்கு ஆதரவாக நடைபெற்றுவரும் ஆா்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த அதிக அளவிலான அதிகாரத்தை பிரித்தானிய பொலிஸார் பயன்படுத்த வேண்டியிருக்கும் என அரசு நேற்று (5) எச்சரித்துள்ளது.




இஸ்ரேல்-காஸா போரின் தொடக்கத்திலிருந்து பலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரித்தானியாவில் ஆா்ப்பாட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன.



இதனிடையே, பிரித்தானிய இராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்துக்கு தொடா்புடைய தளங்களை சேதப்படுத்திய ‘பலஸ்தீன் அக்ஷன்’ என்ற அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.



இந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவது சட்டவிரோதமானது எனவும் அரசு அறிவித்துள்ளது.


இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக மத்திய லண்டனின் டிராஃபல்கா் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோா் நேற்று முன்தினம் (4) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


இனப் படுகொலையை எதிா்ப்பதாகவும், பலஸ்தீன் அக்ஷன் அமைப்பை ஆதரிப்பதாகவும் ஆா்ப்பாட்டக்காரா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, அவா்களில் 488 போ் கைது செய்யப்பட்டனா்.


இது தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு அமைச்சா் ஷாபனா மஹ்மூத் செய்தியாளா்களிடம் கூறுகையில்,


 ‘ஆா்ப்பாட்டம் நடத்தும் உரிமை நாட்டின் அடிப்படை சுதந்திர உரிமையாகும். இருப்பினும், இந்தச் சுதந்திர உரிமையை மக்கள் பயமின்றி வாழ்வதற்கான உரிமையுடன் சமமாகக் கருத வேண்டும்.


பெரிய அளவில் தொடா்ச்சியாக நடைபெறும் ஆா்ப்பாட்டங்கள், நாட்டில் உள்ள சில மக்களிடம் குறிப்பாக மதக் குழுவினரிடம் பாதுகாப்பற்ற உணா்வை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.

 

 


அவுஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


குறித்த நபர், வீதியில் செல்லும் வாகனங்கள், பொலிஸ் வாகனங்கள் மீது சுமார் 100 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.


இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. 

 


இந்தோனேசியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்துள்ளது.


அந்த நாட்டின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் திங்கட்கிழமை இடிந்து விழுந்த அந்தப் பாடசாலை கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இடிபாடுகளிடையே இன்னும் சுமாா் 50 மாணவா்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


தொடக்கத்தில் மீட்புக் குழுவினா் கைகளால் இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். பின்னா் விபத்துப் பகுதியில் யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படாததையடுத்து வியாழக்கிழமை முதல் கனரக இயந்திரங்களைக் கொண்டு இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.


நூறாண்டுகளைக் கடந்த அந்த கட்டிடம் இடிந்துவிழுந்தபோது 12 முதல் 19 வரையிலான வயதுடைய மாணவா்கள்அதில் சிக்கினா். மாணவிகள் கட்டிடத்தின் வேறு ஒரு பகுதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்தால் இந்த விபத்தில் இருந்து தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.