ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சில நாட்களாக கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நூற்றுக்கணக்கான கப்பல்கள் உள்ளன. ஆனால், அவற்றில் பலவும் வரைபடத்தில் தவறான இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. விண்ட்வார்டில் மூத்த கடல்சார் புலனாய்வு ஆய்வாளராக இருக்கும் மிஷெல் வைஸ் போக்மேன், இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் அருகே இருந்த வணிகக் கப்பல்களின் நேரடி இருப்பிடங்களைச் சரிபார்க்கும்போது இதைக் கவனித்தார்.
ஹோர்முஸ் நீரிணை மற்றும் அருகிலுள்ள கடல்வழிகளின் வரைபடத்தைப் பார்க்கும்போது சுமார் 35 அசாதாரண தொகுப்புகளை அவர் கண்டார். வரைபடத்தில், இந்தத் தொகுப்புகள் பல கப்பல் சின்னங்களால் ஆன வட்டங்களாகத் தோன்றும். ஒவ்வொரு குறியீடும் ஓர் உண்மையான கப்பலைக் குறிக்கும்.
ஆனால், கப்பல்கள் பொதுவாக இதுபோன்ற சரியான வட்டங்களில் கூடுவதில்லை. இந்தத் தொகுப்புகளில் சில நிலத்தில்கூடத் தோன்றும். இது கப்பல்களைப் பொறுத்தவரை சாத்தியமற்றது. இதன் பொருள் அவற்றின் நிலைகளைக் காட்டும் ஜிபிஎஸ் சிக்னல்கள் இடையூறு செய்யப்பட்டு, அவற்றின் உண்மையான இடங்களை மறைக்கின்றன.
நவீன மோதல்களில், போர்கள் துப்பாக்கிகள், குண்டுகளால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. மின்னணு சிக்னல்களும் இந்த மோதலில் பங்காற்றுகின்றன. ஜிபிஎஸ் ஜாமிங் எனப்படும் ஒரு நுட்பம் வழிசெலுத்தல் சிக்னல்களில் தலையிடுகிறது. இது தொடர்பு அமைப்புகளைச் சீர்குலைத்து ஆபத்தான விபத்துகளுக்குக்கூட வழிவகுக்கும்.
சமீபத்திய ஆண்டுகளில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் பயன்படுத்தும் விமானம் உள்பட, ஐரோப்பாவில் உள்ள விமானங்களையும் இந்த ஜிபிஎஸ் ஜாமிங் பாதித்துள்ளது. யுக்ரேனில் நடக்கும் போரிலும் இது வழக்கமாக நடந்து வருகிறது. இப்போது மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதால், இந்த வகையான மின்னணு போர் மேலும் பல பகுதிகளுக்குப் பரவி வருகிறது.
விளம்பரம்
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கப்பல்களை இப்போது பாதிக்கும் சிக்னல் குறுக்கீடு பிரச்னையை மிஷெல் வைஸ் போக்மேன் காண்பது இது முதல் முறையல்ல. கப்பல்களின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) செயல்பாட்டை ஜிபிஎஸ் ஜாமிங் பாதிக்கிறது என அவர் முன்பு கவனித்துள்ளார்.
இஸ்ரேல், இரான் இடையிலான குறுகிய மோதலின்போது கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் இதே பிரச்னை ஏற்பட்டது. பால்டிக் கடலிலுள்ள கப்பல்களும் இதேபோன்ற மின்னணு குறுக்கீட்டை எதிர்கொண்டன. ஆனால், இந்த முறை, நிலைமை மிகவும் தீவிரமானது என்று போக்மேன் கூறுகிறார்.
இது கப்பல்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்குப் பெரிய ஆபத்தை உருவாக்குவதாக அவர் எச்சரிக்கிறார். பாகிஸ்தான் தேசிய ஹைட்ரோகிராஃபிக் அலுவலகமும், பிராந்தியத்தில் உள்ள கப்பல்களை சிக்னல் குறுக்கீடு பாதிப்பதாக எச்சரித்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
வீட்டு சிலிண்டர்
சமையல் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளதா? - தமிழக மக்களின் கருத்து
கோவை, பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் இறுதிச்சடங்கு முடிந்த நிலையில் 'உயிருடன்' திரும்பி வந்த நபர் - என்ன நடந்தது?
முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்
டி20 உலகக் கோப்பையை கோவிலுக்கு எடுத்துச் சென்ற இந்திய கேப்டன் – ஏன் விவாதம்?
இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்
அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவங்களுக்கு சவால் தர இரான் பயன்படுத்தும் 'வியூகம்'
End of அதிகம் படிக்கப்பட்டது
கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதைத் தவிர்க்க ஏ.ஐ.எஸ்-ஐ ஓரளவு பயன்படுத்துகின்றது. சுமார் 300 மீட்டர் நீளம் கொண்ட பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள், அதிகளவு எண்ணெயை சுமந்து செல்லக் கூடியவை. அவற்றால் விரைவாகத் திரும்பவோ, நிறத்தவோ முடியாது. திசையை மாற்றிய பிறகு, அவை தமது பாதையை முழுமையாக சரிசெய்யாமல் பல கிலோமீட்டர்கள் பயணிக்கக்கூடும்.
ஜிபிஎஸ் ஜாமிங்: மத்திய கிழக்கில் நடந்து வரும் மறைமுக போரின் விளைவுகள்பட மூலாதாரம்,AFP via Getty Images
படக்குறிப்பு,வளைகுடா பகுதியில் நடைபெறும் சிக்னல் குறுக்கீடுகள், கப்பல்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதைத் தவிர்க்கப் பயன்படுத்தும் அமைப்பில் இடையூறு ஏற்படுத்தியுள்ளன
கப்பல் குழுவினரால் பிற கப்பல்கள் எங்கு அமைந்துள்ளன என்பதைத் தெளிவாகக் காண முடியாவிட்டால், குறிப்பாக இரவில் அல்லது மோசமான வானிலையில் இது மோதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலன் உட்வோர்ட் விளக்குவது போல, ஒரு கப்பலைச் சுற்றியுள்ள பிற கப்பல்கள் எங்கு செல்கின்றன என்பதை அறியாமல் இருப்பதே முக்கியமான ஆபத்து.
ஜிபிஎஸ் ஜாமிங்குக்கு யார் காரணம் என்பது குறித்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. இருப்பினும், கப்பல்களின் வழிசெலுத்தல் அமைப்புகளைச் சீர்குலைப்பதற்கு இரான் காரணமாக இருக்கலாம் என்று பல ராணுவ நிபுணர்கள் நம்புகின்றனர். ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலையும் தாக்கக்கூடும் என்று இரான் எச்சரித்துள்ளது.
ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தாமஸ் விடிங்டனின் கூற்றுப்படி, இரான் பயன்படுத்தும் ஜிபிஎஸ் ஜாமிங் கருவிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது ரஷ்யா அல்லது சீனாவில் இருந்து பெறப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.
மேலும், இப்பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் தங்கள் ராணுவ தளங்கள், வீரர்கள் மற்றும் கப்பல்களை செயற்கைக்கோள் வழிசெலுத்தலை நம்பியிருக்கும் ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்களில் இருந்து பாதுகாக்க இதேபோன்ற ஜாமிங் அமைப்புகளைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.
இதுகுறித்துக் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களுக்காகக் குறிப்பிட்ட ராணுவ அமைப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை பிபிசியிடம் கூறியது.
ஜிபிஎஸ் ஜாமிங்: மத்திய கிழக்கில் நடந்து வரும் மறைமுக போரின் விளைவுகள்பட மூலாதாரம்,Zephr.xyz
படக்குறிப்பு,ஷான் கோர்மன், ஜிபிஎஸ் குறுக்கீட்டைக் கண்டறியப் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளார்
இதற்கிடையில், Zephr.xyz தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷான் கோர்மன், யுக்ரேன் போன்ற இடங்களில் ஜிபிஎஸ் ஜாமிங் குறித்து ஆய்வு செய்து வருகிறார். வழக்கமாக, விமானங்களில் இருந்து வரும் தரவுகள் ஜிபிஎஸ் ஜாமிங்கை கண்டறிய உதவுகின்றன. ஆனால், இரான் மீதுள்ள வான்வெளி தற்போது மூடப்பட்டிருப்பதால், கோர்மன் வேறு முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
சமீபத்தில், இரானில் ஜாமிங்குக்கான அறிகுறிகளைக் கண்டறிய ஒரு செயற்கைக்கோளில் இருந்து ரேடார் தரவுகளைப் பயன்படுத்தினார். பிபிசி இந்தத் தரவை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் ஜாமிங் சாதனங்கள் ரேடார் சிக்னல்களில் சிறிய இடையூறுகளை ஏற்படுத்துவதாக கோர்மன் கூறுகிறார். இந்த சிக்னல்களை ஆராய்வதன் மூலம், நாடு முழுவதும் ஜிபிஎஸ் ஜாமிங் ஏற்படக்கூடிய இடங்களை அவரால் அடையாளம் காண முடியும்.
கடந்த 2024ஆம் ஆண்டில், ஷான் கோர்மனும் அவரது குழுவினரும் யுக்ரேனில் ட்ரோன்களை பயன்படுத்தி ஜிபிஎஸ் ஜாமிங் பற்றி ஆய்வு செய்தனர். அவர்கள் ட்ரோன்களுடன் ஸ்மார்ட்போன்களை இணைத்து சுற்றியும் பறக்கவிட்டனர். அவை பறக்கும்போது ஸ்மார்ட்போன்கள் ஜிபிஎஸ் சிக்னல்களை பதிவு செய்தன. இது ஆராய்ச்சியாளர்களுக்கு சிக்னல் குறுக்கீட்டைக் கண்டறிய உதவியது. பல ஸ்மார்ட்போன்களில் இருந்து ஜிபிஎஸ் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஜாமிங் சாதனத்தின் சரியான இடத்தை அவர்களால் மதிப்பிட முடிந்தது.
ஜாமிங் எவ்வளவு வலிமையானது மற்றும் பரவலாக இருந்தது என்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதாக கோர்மன் கூறுகிறார்.
ஜிபிஎஸ் ஜாமிங்: மத்திய கிழக்கில் நடந்து வரும் மறைமுக போரின் விளைவுகள்பட மூலாதாரம்,Advanced Navigation
படக்குறிப்பு,அட்வான்ஸ்ட் நேவிகேஷன், ஜிபிஎஸ்-க்கு மாற்றாக இருக்கவல்ல தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது
இன்று, ஜிபிஎஸ் ஜாமிங்கில் இருந்து அமைப்புகளைப் பாதுகாக்கப் பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. சில அமைப்புகள் தானாகவே குறுக்கீட்டைக் கண்டறிந்து பாதிக்கப்படாத மற்றொரு சிக்னல் அதிர்வெண்ணுக்கு மாறலாம்.
உதாரணமாக, ரேதியோன் யுகே என்ற பாதுகாப்பு நிறுவனம் லேண்ட்ஷீல்ட் என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சாதனம் மிகச் சிறியது. இதை கார்கள், விமானம் போன்ற பல வகையான வாகனங்களில் நிறுவ முடியும். இந்த "ஜாமிங்-எதிர்ப்பு ஆன்டெனா அமைப்பு" ஜாமிங்கின்போதுகூட வழிசெலுத்தலை வேலை செய்ய வைக்கப் பல சிக்னல்களை கொண்ட சேனல்களை பயன்படுத்துகிறது என்று அந்த நிறுவனம் கூறுகிறது. அலெக்ஸ் ரோஸ்-பார்ஃபிட்டின் கூற்றுப்படி, ஜாமிங் எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது.
மற்றொரு நிறுவனமான அட்வான்ஸ்ட் நேவிகேஷன், ஒரு வித்தியாசமான தீர்வை உருவாக்கியுள்ளது. ஜிபிஎஸ்-ஐ மட்டும் நம்புவதற்குப் பதிலாக, அவர்களின் அமைப்பினால் கைரோஸ்கோப்புகள் மற்றும் முடுக்கமானிகள் (accelerometers) போன்ற சென்சார்களை பயன்படுத்தி கப்பலின் நிலையைக் கண்டறிய முடியும். இவை ஸ்மார்ட்போன்களில் இயக்கத்தைக் கண்டறிய அல்லது தொலைபேசி பக்கவாட்டில் திருப்பப்படும்போது பயன்படுத்தப்படும் அதே வகையான சென்சார்கள். இது ஜிபிஎஸ் சிக்னல்கள் தடைபட்டாலும் வழிசெலுத்தலைத் தொடர அனுமதிக்கிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அட்வான்ஸ்ட் நேவிகேஷனின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ் ஷா, ஜிபிஎஸ் சரியாக வேலை செய்யாதபோதும் தனது நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால் வாகனத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும் என்கிறார்.
சுற்றியுள்ள பகுதியின் படங்களை செயற்கைக்கோள் படங்களுடன் ஒப்பிட்டு இருப்பிடத்தை அடையாளம் காண்பது, ஒருமுறை. கணினி மென்பொருளைப் பயன்படுத்தி வானத்திலுள்ள நட்சத்திரங்களின் நிலைகளைப் பகுப்பாய்வு செய்வது, மற்றொரு முறை. இதற்குப் பயன்படுத்தப்படும் பட செயலாக்க தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டது எனக் கூறுகிறார் ஷா. இருப்பினும், நட்சத்திர-மேப்பிங் மலிவானது என்றாலும் மிகவும் துல்லியமானது இல்லை. இதன் காரணமாக, இருப்பிடத்தைக் கண்டறிவதற்கான பல்வேறு முறைகளை ஒன்றாகப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.
சிறந்த பாதுகாப்பு இல்லாமல், ஜிபிஎஸ் தாக்கப்படுவது எளிது. ஜிபிஎஸ் பயன்படுத்தும் சிக்னல்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. இது அவற்றைத் தடுப்பதை அல்லது இடையூறு விளைவிப்பதை எளிதாக்குகிறது. இருப்பினும், ராணுவ படைகள், எம்-கோட் எனப்படும் தனித்துவமான, பாதுகாப்பான ஜிபிஎஸ் பதிப்பைப் பயன்படுத்துகின்றன. இது என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளதால் ஜாம் செய்வது மிகவும் கடினம்.
இரானுக்கு அருகிலுள்ள ஜிபிஎஸ் ஜாமிங் கடலில் விபத்துகளின் அபாயத்தை அதிகரிப்பதாக ராயல் நேவிகேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த ராம்சே ஃபராகர் எச்சரிக்கிறார். ஜாமிங் மிகவும் பொதுவானதாகி வருவதால், எதிர்காலத்தில் புதிய, மிகவும் பாதுகாப்பான வழிசெலுத்தல் அமைப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் நம்புகிறார்.
இந்தச் சூழ்நிலையை அவர் வை-ஃபை இணைப்பின் ஆரம்ப காலத்துடன் ஒப்பிடுகிறார். அப்போது நெட்வொர்க்குகள் திறக்கப்பட்டிருந்தன. யார் வேண்டுமானாலும் வை-ஃபை இணைப்பை அணுகும் விதத்தில் இருந்தன. பின்னர் அவை கடவுச்சொற்களால் பாதுகாக்கப்பட்டன. அதேபோல், எதிர்காலத்தில் மக்கள் இன்றைய திறந்த ஜி.என்.எஸ்.எஸ் சிக்னல்களை திரும்பிப் பார்த்து, வலுவான பாதுகாப்பின்றி அவை ஏன் பயன்படுத்தப்பட்டன என்று சிந்திக்கக்கூடும் என்று அவர் கருதுகிறார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், ஈரான் முன்வைக்கும் மூன்று முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்த நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் அடிப்படையில்,
தெஹ்ரானின் இறையாண்மை மற்றும் அதன் சட்டபூர்வமான உரிமைகளை சர்வதேச சமூகம் முழுமையாக அங்கீகரிக்க வேண்டும்.
இதுவரை ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
வருங்காலத்தில் மீண்டும் இத்தகைய ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் நடைபெறாது என்பதற்கு பலமான மற்றும் உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும்.
"இந்த அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே இப்பகுதியில் நிலையான அமைதி என்பது சாத்தியமாகும்," என ஜனாதிபதி பெசெஷ்கியான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதல்களில் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி மற்றும் பிற உயர்மட்ட ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். மேலும் முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுமே ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகச் சமிக்ஞை அளித்துள்ளன. மேலும் இரானியர்கள் தங்கள் அரசாங்கத்தைத் தூக்கியெறியுமாறு வலியுறுத்துகின்றன.
ஆயினும், இரானின் ஆட்சியானது நீடித்திருக்கக்கூடிய மற்றும் எளிதில் வீழ்த்தப்பட முடியாத ஓர் அதிகாரக் கட்டமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அதன் வலிமைக்கு என்ன காரணம்? மத்திய கிழக்கின் பிற நாடுகளில் இருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது?
புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமனெயி
பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
படக்குறிப்பு,மொஜ்தபா காமனெயி, தனது தந்தையின் கடுமையான ஆட்சியைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'அழிக்க முடியாத அமைப்பு '
இரானின் முடியாட்சியை வீழ்த்தியதில் இருந்து, இஸ்லாமியக் குடியரசு அதிர்ச்சிகளைத் தாங்கி நீடித்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓர் அரசியல் அமைப்பைப் படிப்படியாகக் கட்டியெழுப்பியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், கருத்தியல் போதனைகள், தலைமைகளின் ஒற்றுமை மற்றும் சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஆகியவை இதற்கு காரணமாகும்.
"இது அழிக்க முடியாத அமைப்பு. நீங்கள் ஒரு தலையை வெட்டினால் புதிய தலைகள் மீண்டும் வளரும்," என்கிறார் பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய உலக அரசியல் நிறுவனத்தின் மத்திய கிழக்கு ஆய்வாளர் செபாஸ்டியன் பூசோயிஸ்.
இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்
அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவங்களுக்கு சவால் தர இரான் பயன்படுத்தும் 'வியூகம்'
டெத் பாட், ஏஐ, மரணம்
இறந்தவர்களுடன் 'பேச' உதவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
இந்தியா - இரான், மத்திய கிழக்கு, காஷ்மீர் பிரச்னை, அமெரிக்கா
இந்தியா - பாகிஸ்தான் போர்களில் இரான் யாரை ஆதரித்தது? இரு நாட்டு உறவு பற்றிய ஒரு பார்வை
End of அதிகம் படிக்கப்பட்டது
ஞாயிற்றுக்கிழமையன்று, அலி காமனெயியின் மகன் மொஜ்தபா காமனெயி, அவரது தந்தை கொல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இரான் அதிஉயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தனது தந்தையின் தீவிரமான மற்றும் கடுமையான ஆட்சியைத் தொடருவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று, அலி காமனெயியின் மகன் மொஜ்தபா காமனெயி, அவரது தந்தை கொல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் அவருக்குப் பின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பட மூலாதாரம்,Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS
'பன்முனை சர்வாதிகாரம்'
துனிசியா, எகிப்து மற்றும் சிரியா போன்ற பிற நாடுகளில் தலைவர்கள் தூக்கியெறியப்பட்டதைப் போலல்லாமல், இரான் அதன் கருத்தியல் ரீதியிலான பாதுகாப்பு கட்டமைப்பின் காரணமாக அழுத்தங்களை சிறப்பாக எதிர்கொள்ள முடிந்தது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இரான் ஒரு தனி நபரை மையமாகக் கொண்ட ஒரு பொதுவான சர்வாதிகாரத்தின் கீழ் இயங்குவதற்குப் பதிலாக, ஒரு 'பன்முனை சர்வாதிகாரத்தைக்' கொண்டுள்ளது.
இது ''அரசியல் இஸ்லாத்தின் ஆதரவாளர்களுக்கும் தீவிர இரானிய தேசியவாதத்திற்கும் இடையிலான ஒரு கூட்டணி" என்கிறார் டெஹ்ரானை சேர்ந்த இரானுக்கான பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பெர்னார்ட் ஹூர்கேட்.
மதகுருமார்களின் அமைப்புகள், ஆயுதப் படைகள் மற்றும் முக்கிய பொருளாதார அமைப்புகள் எனப் பல மையங்களில் அதிகாரம் பரவிக் கிடக்கிறது.
ஒற்றைத் தலைமை கொண்ட சர்வாதிகாரத்தை விட இந்த அமைப்பை வீழ்த்துவதை இது மிகவும் கடினமாக்குகிறது.
சட்டங்களை நிராகரிக்கும் அதிகாரம், தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆய்வு செய்ய அதிகாரம் கொண்ட பாதுகாவலர்கள் சபை போன்ற பிற அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது.
இது, எந்தவொரு தனிப் பிரிவினரும் அரசுக்கு ஒரு தீவிர சவாலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
இரான் எதேச்சதிகார ஆட்சி முறை கொண்ட நாடாக பரவலாகக் கருதப்பட்டாலும், அது இரானியர்களுக்கு அதிபர் தேர்வு உள்ளிட்ட சில தேர்தல்களில் வாக்களிப்பதற்கான அடையாளப்பூர்வ வாய்ப்பை வழங்குகிறது.
இருப்பினும், இந்த செயல்முறை மிகவும் இறுக்கமாக நிர்வகிக்கப்படுகிறது. இஸ்லாமியக் குடியரசின் மீதான அர்ப்பணிப்பு உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் பாதுகாவலர்கள் சபையால் வேட்பாளர்கள் ஆய்வு செய்யப்படுகிறார்கள்.
இரானின் ராணுவத்திற்குள் ஒரு மேலாதிக்க சக்தியாக விளங்கும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை
பட மூலாதாரம்,NurPhoto via Getty Images
புரட்சிகர காவல்படையின் மையப் பங்கு
அரசு நிறுவனங்கள் இந்த ஆட்சிமுறையின் அடிப்படை அமைப்புகளாகச் செயல்படுகின்றன என்றால், பாதுகாப்புப் படைகள் அதன் வலிமையாகக் கருதப்படுகின்றன.
வழக்கமான ராணுவத்துடன் இணைந்து செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, பெரும்பாலும் "ஆட்சியின் முதுகெலும்பாக" கருதப்படுகிறது என்று ஹூர்கேட் கூறுகிறார்.
தனது ராணுவப் பங்கிற்கு அப்பாற்பட்டு, இது ஒரு அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது.
முக்கியமாக, தொடர்ச்சியான அமைதியற்ற சூழ்நிலைகளின் போதும் பாதுகாப்புப் படைகள் ஒற்றுமையாகவே இருந்துள்ளன. இந்த விசுவாசத்தை கருத்தியலுடன் பூசோயிஸ் தொடர்புபடுத்துகிறார்.
"ஷியாக்கள் [இஸ்லாத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளில் ஒன்றைப் பின்பற்றுபவர்கள்] மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொலா போன்ற குழுக்களிடையே காணும் இந்த தியாக கலாசாரம், வாழ்வின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.
தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்காக ஒவ்வொரு இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளபதிக்கும் அடுத்து வரக்கூடிய மாற்று தளபதிகள் தயாராக இருப்பதாக இரானின் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரெசா தலையினிக் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.
இரானின் பரவலாக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, 2003-இல் அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகளின் படையெடுப்பின்போது இராக் படைகள் சரிந்ததிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களால் உருவானது என்று 'அணுசக்தி இரானுக்கு எதிராக ஒன்றுகூடல்' அமைப்பின் காவல்படை ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் கஸ்ரா ஆராபி கூறுகிறார்.
மேலும், இந்த ஆட்சி நீடித்தால், "காவல்படையினர் இன்னும் முக்கியமான பங்கைக் கொண்டிருப்பார்கள்." என்று அவர் கருதுகிறார்.
1979-ஆம் ஆண்டு புரட்சி, இரானின் ஆட்சியாளர்களை அதிகாரத்திற்குக் கொண்டு வந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவர்கள் இப்போது தங்களின் மிக மோசமான தருணத்தை எதிர்கொள்கின்றனர்.
பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
படக்குறிப்பு,இரானின் அதிகாரக் கட்டமைப்பு, அந்த ஆட்சிமுறை தொடர்ச்சியான பல அதிர்ச்சிகளைத் தாங்கி நிற்பதற்கு வழிவகுத்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆதரவு வலையமைப்புகள் மற்றும் உயரடுக்கு ஒற்றுமை
இரான் பொருளாதாரத்தின் பெரும்பகுதிகள் 'போனியாட்ஸ்' போன்ற அரசுடன் தொடர்புடைய அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இவை பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்ட அறக்கட்டளைகளாக உருவெடுத்துள்ளன.
இந்த வலைப்பின்னல்கள் ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் பிரிவினருக்கு வேலைகளையும் ஒப்பந்தங்களையும் வழங்குகின்றன.
காதம் அல்-அன்பியா கூட்டு நிறுவனம் உள்ளிட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வணிக சாம்ராஜ்யம், இந்த வணிக "ஆதரவு" முறையை வலுப்படுத்துகிறது.
மேற்கத்திய நாடுகளின் தடைகள் இரானின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ள போதிலும், இந்த வலைப்பின்னல்கள் முக்கிய உயரடுக்கினரைப் பாதுகாக்கவும், இந்த ஆட்சிமுறை நீடிப்பதில் அவர்களுக்குள்ள பங்கினை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த அமைப்பு "மிகவும் உறுதியானது, இதில் பிளவுகள் ஏற்பட்டு வெளியேறுபவர்களை நாம் காண்பதே இல்லை," என்று பூசோயிஸ் கூறுகிறார்.
சித்தாந்தமும் புரட்சியின் மரபும்
அதிகாரத்தைத் தக்கவைப்பதில் மதமும் ஒரு வலிமையான பங்கினை வகிக்கிறது.
இரான் புரட்சியானது மத, அரசியல் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒரு நிலையான வலைப்பின்னலை உருவாக்கியது. இது இன்றும் அரசின் உலகளாவிய பார்வையை வடிவமைத்து வருகின்றது.
"கருத்தியல், அதிகாரத்துவ மற்றும் நிர்வாக ரீதியான இந்த மிகப்பழமையான, மிகவும் சக்திவாய்ந்த கட்டமைப்பு இந்த அமைப்பை வலுவாக்குகிறது," என்று கூறும் பூசோயிஸ், இந்தக் கருத்தியலானது "ஒற்றுமை, தொழில்முறை அர்ப்பணிப்பு மற்றும் ஆள்சேர்ப்புக்கான உண்மையான ஆதாரமாகச் செயல்படுகிறது," என்றும் குறிப்பிடுகிறார்.
இரானியர்கள் அதிபரைத் தேர்ந்தெடுப்பது உட்பட சில தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
பட மூலாதாரம்,KHOSHIRAN/Middle East Images/AFP via Getty Images
பிளவுபட்ட எதிர்க்கட்சி
வரலாற்று ரீதியாக, இரானின் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு காணப்படுகின்றன.
அவற்றில் சீர்திருத்தவாதிகள், முடியாட்சி ஆதரவாளர்கள், இடதுசாரி குழுக்கள், இரானின் தேசிய எதிர்ப்பு கவுன்சில் போன்ற புலம்பெயர்ந்தோர் இயக்கங்கள் மற்றும் பல்வேறு இன அமைப்புகள் அடங்கும்.
இந்த பிளவு நீண்டகாலமாக நிலவி வருவதாக பிரிட்டனைச் சேர்ந்த ஐரோப்பிய வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் என்ற சிந்தனைக் குழுவின் மூத்த கொள்கை ஆய்வாளர் எல்லி கெரன்மயே கூறுகிறார்.
புரட்சிக்குப் பிறகு, அரசியல் கட்சிகளை உருவாக்குவது குறித்த விவாதம் ஓரங்கட்டப்பட்டது என்றும் 1980-இல் துவங்கி எட்டு ஆண்டுகள் நீடித்த இராக் உடனான போர் ஒரு காரணமாக கூறப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.
பல்வேறு காலகட்டங்களில் மிதவாத பிரிவினர் ஆட்சி அதிகாரத்தாலும் கடும்போக்காளர்களாலும் "ஒதுக்கப்பட்டனர், இழிவுபடுத்தப்பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர்," என்று கெரன்மயே விளக்குகிறார்.
கடந்த காலங்களில் 2009-ஆம் ஆண்டின் கிரீன் மூவ்மெண்ட் மற்றும் 2022-இல் மஹ்சா அமினியின் மரணத்தால் வெடித்த போராட்டங்கள் என ஆட்சிக்கு எதிராகப் பெரிய அளவிலான போராட்ட இயக்கங்கள் தோன்றின.
ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு ஒரு மையத் தலைமை இல்லை, மேலும் அவை அரசின் கடுமையான ஒடுக்குமுறையை எதிர்கொண்டன.
இருப்பினும், இந்த ஆண்டு இறுதியில் துவங்கிய சமீபத்திய போராட்ட அலைகள், மறைந்த ஷா மன்னரின் வெளிநாட்டில் வாழும் மகனின் "உலகளாவிய செயல்பாட்டு தினத்திற்கான" அழைப்பைத் தொடர்ந்து நிகழ்ந்தன.
இரான் இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. தொடர்ந்து இணைய முடக்கம் செய்தல், செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணித்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள செயல்பாட்டாளர்களைக் குறிவைக்கும் இணையப் பிரிவுகள் ஆகியவற்றையும் அது இயக்குகிறது.
இரானை எளிதாக வீழ்த்த முடியாதது ஏன்? பட மூலாதாரம்,Getty Images
எச்சரிக்கை என்ன?
ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கத் தலைமையிலான தலையீடுகளின் விளைவுகளைக் கண்ட பிறகு, பல ஆண்டுகளாக பல இரானியர்கள் ஆட்சி மாற்றத்திற்காக அழுத்தம் கொடுக்கத் தயங்கினர் என்று கெரன்மயே கூறுகிறார்.
மேலும், அரபு எழுச்சிகளின் பின்விளைவுகள் இந்த எச்சரிக்கை உணர்வை மேலும் ஆழப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால், வேலை வாய்ப்பு முதல் சுத்தமான குடிநீர் வரை அடிப்படைத் தேவைகளைக் கூட அரசால் இனி வழங்க முடியாது என்றும், அதே சமயம் எதிர்ப்பை ஒடுக்க மிருகத்தனமான சக்தியைப் பயன்படுத்துவதாகவும் பல இரானியர்கள் கருதுவதால், இப்போது இந்த கணக்கீடு மாறியுள்ளதாக அவர் கூறுகிறார்.
புதியதாக உருவான போராட்ட அலைக்கு எதிராக ஜனவரியில் நடைபெற்ற கடுமையான அடக்குமுறையும், நாட்டில் இதுவரை காணப்பட்ட மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக இருந்த அந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதும், இந்த மாற்றத்தை மேலும் வேகப்படுத்தியது என்று அவர் கூறுகிறார்.
உயர் கல்வி கற்றவர்கள், உலகளாவிய தொடர்புகளைக் கொண்டவர்கள் மற்றும் சமூக ஊடகங்களால் ஈர்க்கப்பட்ட இளைய தலைமுறை இரானியர்கள், இந்த ஆட்சிமுறையை "ஊழல் நிறைந்தது, ஒடுக்குமுறையானது மற்றும் தங்கள் கனவுகளுக்கு தொடர்பற்றது" என்று கருதி நிராகரிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.
இரானியர்களுக்கும் ஆட்சிமுறை குறித்த அவர்களின் அணுகுமுறைக்கும் இடையே ஒரு "தலைமுறை இடைவெளி" இருப்பதாக ஹூர்கேட் கூறுகிறார்.
பட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் இரானின் முக்கிய உள்கட்டமைப்பு தளங்களைக் குறிவைத்துள்ளன.
'ஒவ்வொரு ஆட்சியும் இறுதியில் முடிவடைகிறது'
மக்கள் திரள் போராட்டம், ஆளும் உயரடுக்கினரிடையே பிளவு மற்றும் பாதுகாப்புப் படைகளின் விலகல் ஆகிய மூன்று நிலைகளும் ஒன்றிணையும் போதுதான் சர்வாதிகார ஆட்சிகள் வீழ்ச்சியடையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில், இரான் பெரும்பாலும் முதல் நிலையை அனுபவித்துள்ளது, ஆனால் மற்ற இரண்டையும் சந்திக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாமியக் குடியரசின் முடிவு தவிர்க்க முடியாதது, ஆனால் அது உடனடியானது அல்ல என்று ஹூர்கேட் கருதுகிறார்.
"ஒவ்வொரு ஆட்சிமுறையும் இறுதியில் முடிவுக்கு வரும். உண்மையான கேள்வி அதன் காலம்தான்." என்று கூறும் அவர், காமனெயியின் மரணம் இந்த ஆட்சிமுறைக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்று குறிப்பிடுகிறார்.
"அவரைப் போன்ற ஒருவர் இனி இருக்க மாட்டார். அவருக்குப் பின் வருபவருக்கு காமனெயிக்கு இருந்த அதிகாரம் ஒருபோதும் இருக்காது" என்கிறார்.
ஆனால் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சி என்பது உறுதிப்படுத்த முடியாத ஒன்று என பூசோயிஸ் கூறுகிறார்.
ஒருவேளை அது நிகழ்ந்து, அதற்கு வெளிநாட்டு ராணுவத் தலையீடு காரணமாக இருந்தால், அதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கலாம் என்று அவர் விளக்குகிறார்.
முன்னாள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்தது போன்ற ஒரு "சரியான சூழலே" இரானுக்கும் அமையும் என்று டிரம்ப் முன்பு நியூயார்க் டைம்ஸிடம் கூறியிருந்தார்.
ஆனால், இதற்கு நேர்மாறாக "வடகொரியா அல்லது கியூபாவில் இருப்பது போல ஆட்சி மேலும் வலுவடையலாம்.'' என்கிறார் பூசோயிஸ்.
இரானிய அதிகாரிகள் நீண்டகால மோதலுக்குத் தயாராக இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி அமெரிக்க, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளைப் பலவீனப்படுத்துவதாகவும் பிராந்தியத்தில் அவர்களின் நிதி மற்றும் தளவாடச் செலவுகளை அதிகரிப்பதாகவும் தெரிகிறது.
இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வழக்கமான ராணுவ மேலாதிக்கத்தை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட இரானின் நீண்டகால சமச்சீரற்ற போர் கோட்பாட்டைப் பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இரானுக்குள்ளும் உலகளவிலும் இந்த மோதலின் விளைவாக ஏற்படும் பொருளாதார விளைவுகள், போர் எவ்வளவு காலம் நீடிக்க முடியும் என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கக்கூடும்.
இரானிய அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கூறுவது என்ன?
இரானிய அதிகாரிகள் நாடு ஒரு நீண்ட மோதலுக்குத் தயாராக இருப்பதாகத் தொடர்ந்து கூறிவருகின்றனர். இது நீண்ட போருக்கு ஏற்ற வகையில் தயார்நிலையில் இரான் இருக்கிறது என்ற செய்தியை வெளிப்படுத்துகிறது.
உச்ச தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் அலி லாரிஜானி மார்ச் 2ஆம் தேதி இரானின் நீண்ட கால மோதலுக்கான தயார் நிலையை அறிவித்தார். அப்போது, "அமெரிக்காவை போலன்றி, இரான் ஒரு நீண்ட போருக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுள்ளது" என்று அவர் கூறினார். அதோடு, பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பையும் அவர் நிராகரித்தார்.
"ஆக்கிரமிப்புக்கு" இரானின் பதிலடி, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவால் கட்டுப்படுத்தப்படவில்லை எனவும், மோதல் பல மாதங்கள் அல்லது அதற்கு மேலும் தொடரக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
"நாங்கள் நிச்சயமாக போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. ஆக்கிரமிப்பாளரை தண்டிக்க வேண்டும்," என்று நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கபிபாஃப் மார்ச் 8ஆம் தேதி கூறினார். இரான், இஸ்ரேலுடன் இருப்பை தக்க வைப்பதற்கான போரில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ரெசா தலாய்-நிக், இரானால் "எதிரி எதிர்பார்ப்பதைவிட பல மடங்கு நீண்ட காலம் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பை" தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றார்.
இரான் தனது ஆயுதங்களைப் பயன்படுத்தும் விதத்தை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். தனது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உடனடியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் தனது மேம்பட்ட ஆயுதங்களில் சிலவற்றைப் போரின் பிந்தைய கட்டங்களுக்காகச் சேமித்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்பட மூலாதாரம்,Reuters
படக்குறிப்பு,பஹ்ரைனில் இரானிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு கட்டடம் தீப்பிடித்து எரிந்தது.
இரான் பயன்படுத்தும் உத்தி என்ன?
அட்ரிஷன் என்ற உத்தியை இரான் பயன்படுத்துவதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் பொருள் விரைவாக வெற்றி பெறுவதற்குப் பதிலாகக் காலப்போக்கில் எதிரியை மெதுவாகப் பலவீனப்படுத்த முயல்வதாகும்.
இஸ்ரேலிய இலக்குகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இரான் ஏவுகிறது. இந்தத் தாக்குதல்களில் பல இலக்குகள் குறிவைக்கப்படுகின்றன.
முதலாவதாக, அவை அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி உள்ளே நுழையும் ஏவுகணைகளைத் தடுக்க கட்டாயப்படுத்துகின்றன.
எம்.ஐ.எம்-104 பேட்ரியாட், தாட் போன்ற அமைப்புகள் மிகவும் மேம்பட்டவை. ஆனால், அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன.
பெரும்பாலும், தாக்குதலை நிறுத்தப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், அவை அழிக்கும் ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளைவிட அதிக விலை கொண்டவை.
இரண்டாவதாக, தொடர்ச்சியான தாக்குதல்கள் எதிரியின் ஆயுத விநியோகம், போக்குவரத்து அமைப்புகள், ராணுவ தயார்நிலையில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மோதலின் முதல் வாரத்துக்குள் அமெரிக்க படைகள் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையிலான துல்லியமான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதாக தி வாஷிங்டன் போஸ்டின் செய்தி கூறுகிறது.
இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்பட மூலாதாரம்,
இரானிய அதிகாரிகள் தங்கள் ஆயுத விநியோகம் நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள். தற்போதைய விகிதத்தில் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தங்கள் ராணுவம் அதிக தீவிரம் கொண்ட போரைத் தொடர முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இரானிய தளபதிகள் தங்கள் ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுப் பல உற்பத்தித் தளங்களில் அதிக எண்ணிக்கையில் சேமித்து வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார்கள்.
இதன் காரணமாக, இரான் காலப்போக்கில் அதன் தாக்குதல்களைப் பரவலாக்கி வருவதாகத் தெரிகிறது. இது அதன் எதிரிகளை ஒரேயொரு பெரிய தாக்குதலை எதிர்கொள்வதற்குப் பதிலாகத் தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு கட்டாயப்படுத்துகிறது.
இந்த உத்தி, இரான் பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் ராணுவ அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். இரான் - இராக் இடையிலான போருக்குப் பிறகு, இரான் சமச்சீரற்ற போருக்கு தயாராகும் வகையில் அதிகளவில் முதலீடு செய்தது. இந்த வகையான போர், பாரம்பரிய வழியில் போராடாமல் வலுவான ராணுவங்களுக்கு சவால் விடக்கூடிய முறைகளில் கவனம் செலுத்துகிறது.
ஒரு வலுவான எதிரியை நேரடியாகத் தோற்கடிப்பது அவர்களின் இலக்கு அல்ல. மாறாக, போரை நீண்டதாகவும், செலவுமிக்கதாகவும், கடினமானதாகவும் அவர்களுக்கு மாற்றுவதே ஆகும்.
பொருளாதார பாதிப்புகள் எவை?
ஒரு நீண்ட போர் இரானிலும் உலகெங்கிலும் கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
அதில் முக்கியக் கவலை எரிசக்தி விநியோகம். உலகின் எண்ணெயில் பெரும்பகுதி பொதுவாக ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. இது உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு.
போர் ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியதில் இருந்து, இந்தக் குறுகிய பாதை வழியாகக் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இது உலகளவில் மக்கள் மற்றும் தொழில்களுக்கான எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகளை உயர்த்தக்கூடும்.
பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் மூடப்பட்ட வான்வெளியும் இந்தப் பகுதியில் வர்த்தகப் பாதைகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன.
இரானுக்குள்ளும் பொருளாதார அழுத்தம் உள்ளது. பல ஆண்டுகளாக சர்வதேச தடைகளால் அந்த நாடு ஏற்கெனவே பலவீனமடைந்துள்ளது. அரசாங்கம் ராணுவத்துக்கு அதிக பணம் செலவிட வேண்டியிருப்பதாலும், தேசிய நாணயம் நிலையற்றதாக இருப்பதாலும், வர்த்தகம் மற்றும் சேவைகள் சீர்குலைவதாலும் போர் ஏற்கெனவே நிலவும் நிலைமையை மேலும் கடினமாக்குகிறது.
போர் நீண்டகாலம் தொடர்ந்தால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும், நாட்டுக்குள் பொதுமக்களின் கோபம் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறும் நிபுணர்கள், இது நாட்டின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர்.
இரான் அரசாங்கம், குடிமக்களை போர் முயற்சிகளை ஆதரிக்க ஊக்குவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு உதவுவது ஒரு தேசிய கடமை எனக் கூறி, அரசுக்கு பொதுமக்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள முயல்கிறது.
அரசியல் சிக்கல்கள்
போர் நீண்டகாலம் தொடர்வது, அனைத்து தரப்பினருக்கும் அரசியல் அபாயங்களைப் பெரிதாக அதிகரிக்கும்.
குறிப்பாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கவலை கொண்டுள்ளன. இரான் இந்தப் பகுதியில் "ஆக்கிரமிப்பாளர்களின் சொத்துகள் மற்றும் தளங்கள்" என்று தான் அழைப்பதைக் குறிவைத்து வருகிறது. இதன் காரணமாகப் பல வளைகுடா நாடுகள், இந்த மோதல் ஒரு பெரிய பிராந்திய போராக மாறி கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சுகின்றன. இந்த நாடுகளில் சில ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளன.
அதே நேரத்தில், போர் பிராந்தியத்தில் அரசியல் உறவுகளை மாற்றக்கூடும். சில அண்டை நாடுகள் இரானின் எதிரிகளாக மாறக்கூடும்.
இரானை பொறுத்தவரை, போரைத் தொடர்வது என்பது அதன் ராணுவ திட்டங்களை அதன் பொருளாதாரத்தை நிலையானதாக வைத்திருப்பது மற்றும் உள்நாட்டில் ஆதரவைப் பேணுவது ஆகியவற்றுடன் சமநிலைப்படுத்த முயல்வதாகும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பொறுத்தவரை, சவால்கள் வேறுபட்டவை. அவர்கள் தங்கள் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர வேண்டும், அதே நேரத்தில் ஒரு நீண்ட போரின் நிதிச் சுமை, அரசியல் அழுத்தம், உலகளாவிய விளைவுகள் ஆகியவற்றையும் கையாள வேண்டும்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், அங்கு வாழ்வாதாரத்திற்காகச் சென்றுள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அரசாங்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் குறிப்பிட்டாலும், போர் இடம்பெறும் நாடுகளில் உள்ள இலங்கையர்கள் துயரத்தையும் தினசரி மரண அச்சத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
'நான் பார்த்த தெஹ்ரான் இதுவல்ல'
இரானின் தலைநகர் தெஹ்ரானில் வாகனச் சாரதியாகப் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் (பாதுகாப்பு கருதி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது), அங்குள்ள தற்போதைய கோரமான சூழலை பிபிசி தமிழுக்கு விவரித்தார்.
"நாங்கள் இவ்வளவு காலம் பார்த்த தெஹ்ரான் இப்போது இல்லை. எங்கு பார்த்தாலும் குண்டுத் தாக்குதல்களின் அழிவுகளையே காண முடிகிறது. குடியிருப்பு வீடுகள், வர்த்தக நிலையங்கள் என அனைத்துமே ஏவுகணைத் தாக்குதலில் சிதைந்து போயுள்ளன," என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதை உணர முடிகிறது. இவ்வாறான அழிவுகளில் நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதே தெரியவில்லை. இறைவன் எம்மோடு இருப்பான் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.''
விளம்பரம்
இரான், இஸ்ரேல், சௌதி, துபையில் வசிக்கும் இலங்கை மக்கள் பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,துபையில் தாக்குதலுக்கு பிறகு எழுந்த புகை
இஸ்ரேல் - 'வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல்'
இலங்கையில் 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, குடும்ப வாழ்வாதாரத்திற்காக இஸ்ரேல் சென்ற சமிந்த, அங்கிருந்து தனது இக்கட்டான சூழலை விவரித்தார்.
"இலங்கையில் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாத காரணத்தினாலேயே கஷ்டப்பட்டு இங்கே வேலைக்கு வந்தேன். ஆனால் தற்போது இங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கும் யுத்த சூழலில் நிம்மதியாகச் சம்பாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் பாதுகாப்பு பலமாக இருந்த போதிலும், தற்போது பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நான் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அண்மையிலேயே ஏவுகணைகள் விழுந்துள்ளன. எம்மை குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது," என்கிறார் சமிந்த.
தொடர்ந்து பேசிய அவர், "வடக்கு இஸ்ரேலில் இருந்து ஏனைய பாதுகாப்பான பகுதிகளுக்கு மக்களை அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தூதரகத்தின் ஊடாக எம்மைப் பாதுகாக்கும் முயற்சிகள் நடந்தாலும், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியாத சூழல் உள்ளது. எனது குடும்பத்தினர் என்னை எப்படியாவது வரவழைக்க முயற்சி செய்கின்றனர். அவர்களின் வேதனையை என்னால் விளங்கிக்கொள்ள முடிகின்றது, ஆனால் இப்போதைக்கு இங்கேயே பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்," எனத் தெரிவித்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டிடம் முக்கியமான ஆயுதங்கள் “கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் உள்ளன” என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா - இரானின் ஆயுத கையிருப்பு குறைந்தால் போர் எப்படி மாறும்?
அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் தொடர்ச்சியான கூட்டு வான்வழித் தாக்குதல்கள் இரானின் ராணுவத் திறன்களைக் கணிசமாகக் குறைத்துள்ளதாகக் கூறுகின்றன.
அமெரிக்காவை வெல்ல முடியாது என தெரிந்தும் இரான் போரை தொடர்வது ஏன்?
தோனி முதல் ஷோயப் அக்தர் வரை அனைவரும் கௌதம் கம்பீரின் ரசிகர்களானது எப்படி?
தோனி முதல் ஷோயப் அக்தர் வரை அனைவரும் கம்பீரின் ரசிகர்களானது எப்படி?
இரான் - அமெரிக்கா, இரான், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா
இஸ்ரேலை விட சௌதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது இரான் அதிக ஏவுகணைகளை ஏவியது ஏன்?
End of அதிகம் படிக்கப்பட்டது
இரானில் ஏற்பட்ட பாதிப்பு பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரானில் ஏற்பட்ட பாதிப்பு
ஜோர்டான் - 'வானில் ஏவுகணைகள் மாறி மாறிப் பறக்கின்றன'
மத்திய மாகாணத்தின் கந்தப்பளையைச் சேர்ந்த மதுசான், ஜோர்டானில் இருந்து தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.
"இங்கே நிலைமைகள் சாதரணமாகத் தெரிந்தாலும், எமது இருப்பிடங்களில் இருந்து பார்க்கையில் வானில் ஏவுகணைகள் செல்வதை தெளிவாகப் பார்க்க முடிகின்றது. இஸ்ரேல் - இரான் நாடுகளின் ஏவுகணைகள் மாறி மாறி வானில் பறப்பதைக் காண முடிகின்றது. இதனால் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருக்கின்றது. யுத்தம் நிகழும் ஏனைய நாடுகளில் உள்ள எமது உறவுகளை நினைக்கையில் நிம்மதியை இழந்தவர்களாகவே நாமும் உள்ளோம்," என்கிறார் மதுசான்.
"எங்கள் தலைக்கு மேலே ஏவுகணைகள் சீறுகின்றன": மத்திய கிழக்கு போர்முனையில் தவிக்கும் இலங்கையர்களின் நேரடி சாட்சியங்கள்பட மூலாதாரம்,Madushan
படக்குறிப்பு,மதுசான்
சௌதி அரேபியா மற்றும் துபையில் பரவும் பதற்றம்
ரியாத்தில் பணியாற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த மொஹம்மத் ரிகாஸ் கூறுகையில், "பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கே கடுமையாக்கப்பட்டுள்ளன. எண்ணெய் குதங்கள் மற்றும் தூதரகங்கள் மீதான தாக்குதல் முயற்சி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த யுத்தம் முடியும் வரை நிம்மதியாக வாழ முடியாது என்பதை உணர முடிகிறது," எனத் தெரிவித்தார்.
இதேவேளை, துபையின் பால்ம் ஜுமேரா பகுதியில் பணியாற்றும் இலங்கையர் ஒருவர், "கடந்த ஒரு வாரமாகத் தூக்கத்தைத் தொலைத்து மிகுந்த அச்சத்துடன் விழித்திருக்கிறோம். நான் பணிபுரியும் பகுதியில் மிகப்பாரிய சத்தத்துடன் தீ பரவியது. அந்த அதிர்ச்சி எம்மை மனதளவிலும் உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தியுள்ளது," எனத் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தாக்குதலுக்கு பிறகு எழுந்த புகைபட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தாக்குதலுக்கு பிறகு எழுந்த புகை
தூதரகங்கள் சொல்வது என்ன?
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தற்போதைய கள நிலவரம் குறித்துக் கூறுகையில், "இங்கு போர்ச் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது. குறிப்பாக வடக்கு இஸ்ரேல் பகுதிகள் கடும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்," எனத் தெரிவித்தார்.
மேலும், "இதுவரை ஓர் இலங்கையர் காயமடைந்து சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளார். ஏனையோருக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்ற போதிலும், இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால், அவர்களுக்கான விசா மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளையும் தூதரகம் செய்து கொடுத்துள்ளது," என அவர் உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இலங்கை தூதர் அருஷா குரே, இலங்கையர்களுக்குப் பாதிப்புகள் இல்லை என்றும், விமானச் சேவைகளின் மட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாதுகாப்பான பயணங்களை உறுதிப்படுத்த தூதரகம் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
லெபனானின் உள்ள 7,500 இலங்கையர்களில் 22 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
"எங்கள் தலைக்கு மேலே ஏவுகணைகள் சீறுகின்றன": மத்திய கிழக்கு போர்முனையில் தவிக்கும் இலங்கையர்களின் நேரடி சாட்சியங்கள்பட மூலாதாரம்,Arusha Cooray
படக்குறிப்பு,அருஷா குரே
ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தரவாதம்
மத்திய கிழக்கு நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, "வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிந்த மற்றும் பதியாத சுமார் 10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்தால், இராஜதந்திர உறவுகளின் ஊடாக அவர்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன," எனக் குறிப்பிட்டார்.
"எங்கள் தலைக்கு மேலே ஏவுகணைகள் சீறுகின்றன": மத்திய கிழக்கு போர்முனையில் தவிக்கும் இலங்கையர்களின் நேரடி சாட்சியங்கள்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
நாடு வாரியாக இலங்கையர்களின் விபரங்கள்
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மத்திய கிழக்கின் முக்கிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை விபரங்களை முன்வைத்தார்.
அதற்கமைய குவைத்தில் 3,22,437 பேரும், சௌதி அரேபியாவில் 2,43,593 பேரும், கத்தாரில் 2,03,182 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1,70,468 பேரும், ஓமனில் 36,812 பேரும், இஸ்ரேலில் 27,472 பேரும், ஜோர்டானில் 24,182 பேரும், பஹ்ரைனில் 14,374 பேரும், லெபனானில் 7,925 பேரும், இராக்கில் 641 பேரும், ஏமனில் 16 பேரும், இரானில் 10 பேரும், சிரியாவில் 7 பேரும் பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.
இதுவே அரசாங்கத்திடம் உள்ள உத்தியோகபூர்வ எண்ணிக்கையாகும் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"எங்கள் தலைக்கு மேலே ஏவுகணைகள் சீறுகின்றன": மத்திய கிழக்கு போர்முனையில் தவிக்கும் இலங்கையர்களின் நேரடி சாட்சியங்கள்பட மூலாதாரம்,Vijitha Herath
படக்குறிப்பு,அமைச்சர் விஜித ஹேரத்
மேலும், "இந்த யுத்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள சகல தரப்பினரும் மோதல்களைக் கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு," என அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.
சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் , பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது வீசப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550-ஐத் தாண்டியுள்ளது.
ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் குறித்த எண்ணிக்கையை ஓமன் வெளியிடவில்லை. இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசியுள்ளன.
இரானிய அதிபர் மசூத் பெஸெஷ்கியன் வளைகுடா நாடுகள் மீதான இந்தத் தாக்குதல்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். அந்த நாடுகளின் நிலப்பகுதி இரான் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படாவிட்டால், இரானும் அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.
பிபிசியின் உலக விவகாரங்களுக்கான ஆசிரியர் ஜான் சிம்ப்சன் கூறுகையில், பெஸெஷ்கியன் அமைதிக்கான செய்தியை அளித்திருந்தாலும், அவருடைய வார்த்தைகளை இரானிய தலைமையின் நிலைப்பாடாகக் கருத முடியுமா என்பதுதான் கேள்வி எனத் தெரிவித்துள்ளார்.
இரானின் பாதுகாப்புத் திறன்களில் பாலிஸ்டிக், குரூயிஸ் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளன. இரானிடம் டிரோன்களும் உள்ளன. ஆனால் அது தனது உத்தியை இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு மாற்றியிருப்பதாகத் தெரிகிறது.
இந்த ஏவுகணைகளைப் பற்றி நாம் அறிந்தது என்ன?
இஸ்ரேலுக்கு எதிராக முன்பு நடந்த போர்களுடன் ஒப்பிடும்போது இந்த முறை என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது, இரான் தனது ஆயுதங்களை எந்த அளவிற்கு நம்பியிருக்க முடியும்?
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டிடம் முக்கியமான ஆயுதங்கள் “கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் உள்ளன” என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா - இரானின் ஆயுத கையிருப்பு குறைந்தால் போர் எப்படி மாறும்?
அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் தொடர்ச்சியான கூட்டு வான்வழித் தாக்குதல்கள் இரானின் ராணுவத் திறன்களைக் கணிசமாகக் குறைத்துள்ளதாகக் கூறுகின்றன.
அமெரிக்காவை வெல்ல முடியாது என தெரிந்தும் இரான் போரை தொடர்வது ஏன்?
அட்டைகள் நம் ரத்தத்தை குடிக்கும்போது வலியே தெரியாதது ஏன்?
வலியே தெரியாமல் ரத்தம் உறிஞ்சும் 'அட்டைகள்' - நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
தோனி முதல் ஷோயப் அக்தர் வரை அனைவரும் கௌதம் கம்பீரின் ரசிகர்களானது எப்படி?
தோனி முதல் ஷோயப் அக்தர் வரை அனைவரும் கம்பீரின் ரசிகர்களானது எப்படி?
End of அதிகம் படிக்கப்பட்டது
இரான் ஏவுகணைகளைப் பற்றி நாம் அறிந்தது என்ன?
இரான் - அமெரிக்கா, இரான், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியாபட மூலாதாரம்,Wisam Hashlamoun/Anadolu via Getty Images
படக்குறிப்பு,அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு இரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசுகிறது
இரான் குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூரம் பாயும் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. ஜனநாயக நாடுகளின் பாதுகாப்புக்கான அறக்கட்டளைப் படி, இரானின் குறுகிய தூர ஏவுகணைகள் 300 முதல் 1,000 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை.
இந்த ஏவுகணைகள் வளைகுடா நாடுகள் உட்பட பல அண்டை நாடுகளை தாக்க வல்லவை.
நடுத்தர தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆயிரம் முதல் இரண்டாயிரம் கிலோமீட்டர் வரை பாய்ந்து இஸ்ரேலை சென்றடையக் கூடியவை.
இரான் 8 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வைத்துள்ளது.
ஷஹாப் 1: 300 கிலோமீட்டர்
ஃபதே 110: 300-500 கிலோமீட்டர்
ஷஹாப் 2: 500 கிலோமீட்டர்
சுல்ஃபிகார்: 700 கிலோமீட்டர்
கியாம் 1: 750 கிலோமீட்டர்
ஷஹாப் 3: 2000 கிலோமீட்டர்
ஆதாரம்: பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம்
இரானின் மிக முக்கியமான ஆயுதம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும், இவை அதிக உயரத்தை எட்டக்கூடியவை மற்றும் அங்கிருந்து ஒரு வில் போன்ற பாதையில் இலக்குகளை நோக்கி செல்லக்கூடியவை.
ஜனநாயக பாதுகாப்பு அறக்கட்டளையின்படி, இரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை பாதிப்பை ஏற்படுத்துவதற்கான மிக சக்தி வாய்ந்த ஆயுதமாகவும், விமானப் படைக்கு மாற்றாகவும் கருதுகிறது.
தடைகள் காரணமாக இரானால் வழக்கமான ஆயுதச் சந்தைகளை அணுக முடிவதில்லை, இதனால் அதன் விமானப் படை பலவீனமான நிலையில் உள்ளது.
குரூயிஸ் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறைந்த உயரத்தில் பறக்கின்றன. அவை தங்கள் இலக்குகளை அடைய ஜெட் அல்லது புரொப்பல்லர் உதவியைப் பயன்படுத்துகின்றன.
இரானிய ஏவுகணைகள் பயன்பாடு உத்தி எவ்வாறு மாறியது?
இரான் - அமெரிக்கா, இரான், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியாபட மூலாதாரம்,Reuters
படக்குறிப்பு,பஹ்ரைனில் இரானிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.
இரான் தற்போது இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் என இரு தரப்புகள் மீதும் தனது ஏவுகணைகளை வீசி வருகிறது. இது முந்தைய போரிலிருந்து மாறுபட்ட ஒரு அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்பு, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கத்தாரின் அல்-உதெய்த் தளத்தை மட்டுமே இரான் தாக்கியிருந்தது.
அமெரிக்க கொள்கை ஆராய்ச்சி மையமான அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டின் கீழ் இயங்கும் 'கிரிட்டிக்கல் த்ரெட்ஸ் ப்ராஜெக்ட்' தகவல்படி, போரின் முதல் நான்கு நாட்களில் இரான் சுமார் 36 முறை இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது.
அதிகபட்சமாக முதல் நாளில் 20 முறை ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில் ஒவ்வொரு முறையும் சராசரியாக இரண்டு முதல் மூன்று ஏவுகணைகள் வீசப்பட்டன.
இந்தப் போக்கு இரண்டாம் நாளில் தலைகீழாக மாறியது.
தினசரி ஏவுகணை வீச்சுகளின் எண்ணிக்கை இரண்டாம் நாளில் நான்காகவும், மூன்று மற்றும் நான்காம் நாட்களில் ஆறாகவும் குறைந்தது.
அதே நேரத்தில், ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளின் சராசரி எண்ணிக்கை இரண்டாம் நாளில் 9 முதல் 30 வரை அதிகரித்தது.
டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவன , போர் தொடங்கியதிலிருந்து மார்ச் 4 வரை இரான் 128 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, வியாழக்கிழமை காலை வரை நடந்த இந்தத் தாக்குதல்களில் 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் வீரர்கள் யாரும் காயமடையவில்லை.
இரான் தான் ஏவிய ஏவுகணைகளின் துல்லியமான எண்ணிக்கையை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், புரட்சிகர காவல் படையின் (பஸ்தரன்-இ-இன்கிலாப்) கூற்றுப்படி, போரின் ஐந்தாம் நாளான மார்ச் 4 மதியம் வரை, வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது 17 முறை ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய மதிப்பீடுகளின்படி, தற்போது நடந்து வரும் போர் மற்றும் முந்தைய போர்களின் போது இரான் தனது ஏவுகணை ஏவுதளங்களில் சுமார் பாதியை இழந்துவிட்டது.
முக்கியமான அச்சுறுத்தல்கள் திட்ட (Critical Threats Project) உதவி இயக்குநர் நிக்கோலஸ் கார்ல் கருத்துப்படி, இது ஏவுகணை அலகுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை பலவீனப்படுத்தியுள்ளதுடன், அவற்றை இடைமறிப்பதையும் எளிதாக்கியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏவுகணைகளை ஏவும் குழுக்களை அவை ஏவப்படும் முன்போ அல்லது ஏவும் போதோ குறிவைப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இன்னும் எத்தனை ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன என்று சொல்ல முடியாது என்றாலும், அவை அதிகமாக இல்லை என்று கூறிய கார்ல், "இது இரான் ஒரே நேரத்தில் வீசக்கூடிய ஏவுகணைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துகிறது"என்பதை குறிப்பிட்டார்.
இருப்பினும், அவரது கருத்துப்படி, இது இஸ்ரேலுக்கு இரானிய ஏவுகணைகளால் ஏற்படும் அச்சுறுத்தலைக் குறைக்காது. அதே சமயம், இந்தத் தாக்குதல்களைத் திறம்பட ஒருங்கிணைப்பது இரானுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.
வளைகுடா நாடுகள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல்
இரான் - அமெரிக்கா, இரான், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியாபட மூலாதாரம்,Fadel Senna/AFP via Getty Images
படக்குறிப்பு,மார்ச் 1, 2026 அன்று துபாயில் நடந்ததாகக் கூறப்படும் இரானிய தாக்குதலுக்குப் பிறகு ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து எழும் புகையைக் கடந்து செல்லும் மெட்ரோ ரயில்.
இரான் "வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்கள்" என்று தான் கருதும் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளுடைய பாதுகாப்பு அமைச்சகங்களின் தரவுகளின் அடிப்படையில், நான்கு நாட்களில் இரான் வளைகுடா நாடுகள் மீது 551 ஏவுகணைகளை வீசியுள்ளதாக பிபிசி கணக்கிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை முந்தைய போரை விட அதிகமாகும்; அப்போது 12 நாட்களில் இஸ்ரேல் மீது இரான் சுமார் 500 ஏவுகணைகளை ஏவியிருந்தது.
இந்த நாடுகள் இரானிய தாக்குதல்களைத் தங்களது "இறையாண்மை மீதான ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்" என்று கண்டித்துள்ளன, சிவிலியன் இலக்குகளும் குறிவைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஓமன் கடற்கரைக்கு அப்பால் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இராக் மற்றும் சிரியாவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகள் இதுவரை இரான் மீது எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ராஜ்ஜீய அழுத்தங்களில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?
நிக்கோலஸ் கார்ல் கூற்றுப்படி, வளைகுடா நாடுகளைக் குறிவைக்கும் முடிவு, முந்தைய மோதல்களில் பயன்படுத்த பொருத்தமற்றதாக இருந்த ஆயுதங்களைப் பயன்படுத்த இரானுக்கு வாய்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், "இஸ்ரேலை சென்றடையக் கூடிய ஆயுதங்களை மட்டுமே இரான் பயன்படுத்தி வந்தது. இப்போது அது குறுகிய தூர ஏவுகணைகளையும் பயன்படுத்த முடியும், அதாவது கடந்த ஆண்டு பயனின்றி இருந்த அனைத்து ஏவுதளங்களும் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன" என்று அவர் கூறுகிறார்.
இரான் தொடர்ந்து 'ஷாஹெட்' டிரோன்களையும் பயன்படுத்தி வருகிறது. அதாவது, அது இன்னும் பல செயல்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது என்பது தான் இதன் பொருள்.
போரின் முதல் நாளுடன் ஒப்பிடும்போது இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் 86 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க ஜெனரல் டீன் கெய்ன் தெரிவித்தார்.
அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்த வீழ்ச்சி 23 சதவீதம் என்று தெரிவித்துள்ளது.
இரான் - அமெரிக்கா, இரான், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியாபட மூலாதாரம்,Reuters
படக்குறிப்பு,இரானிய தாக்குதலால் பஹ்ரைனில் ஒரு கட்டடம் சேதமடைந்தது.
டிரோன்களை அதிகமாக நம்பியிருக்கும் இரான்
பிபிசி பகுப்பாய்வின்படி, வளைகுடா நாடுகளின் மீதான இரானின் தாக்குதல்களில் ஏவுகணைகளை விட டிரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மார்ச் 4-ஆம் தேதி பிற்பகல் வரை, வளைகுடா நாடுகள் மீது 1,493 டிரோன்களும் 551 ஏவுகணைகளும் வீசப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 12 நாள் போரின் போது இஸ்ரேல் மீது இரான் செலுத்திய 1,100 ட்ரோன்களை விட அதிகமாகும்.
கார்ல் கருத்துப்படி, வளைகுடா நாடுகளை பின்வாங்கச் செய்வதன் மூலம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது அழுத்தத்தை அதிகரிப்பதே இரானின் உத்தியாக இருக்கலாம்.
அமெரிக்க ஜெனரல் டீன் கெய்ன் கூற்றுப்படி, போரின் முதல் நாளுடன் ஒப்பிடும்போது இரானிய டிரோன் தாக்குதல்கள் 73 சதவீதம் குறைந்துள்ளன. தொடர்ந்து உற்பத்தியை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இரான் தனது கையிருப்பை பாதுகாக்க முயற்சிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இரான் - அமெரிக்கா, இரான், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இரான் தொடர்ந்து எவ்வளவு நாள் ஏவுகணைத் தாக்குதலை தொடர முடியும்?
போருக்கு முன்பு இரான் வசம் சுமார் 2,500 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்ததாக இஸ்ரேல் மதிப்பிடுகிறது. இரான் மாதத்திற்கு சுமார் 100 ஏவுகணைகளை உற்பத்தி செய்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகிறார். இந்த மதிப்பீடுகளைத் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியாது.
கார்ல் கருத்துப்படி, இரானின் கையிருப்பு ஒரு கட்டத்தில் ஆபத்தான நிலைக்குக் குறையத் தொடங்கும், ஆனால் இது எப்போது நடக்கும் என்று சொல்வது கடினம்.
இரான் தற்போதைய உத்தியைத் தொடரும், அதாவது இப்பிராந்தியத்தில் பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் கருதுகிறார்.
இதனைக் குறித்து விளக்கிய அவர், "தங்கள் ஏவுகணைகளில் பல எதிரிகளின் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்படும் என்பதை இரானியர்கள் அறிவார்கள். ஆனால் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளை ஏவுவதன் மூலம் தங்கள் எதிரிகளின் இடைமறிப்பு ஏவுகணை கையிருப்பை குறைக்க அவர்கள் விரும்புகிறார்கள்" என்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிடம் "வரம்பற்ற ஆயுதங்கள்" இருப்பதாகக் கூறுகிறார். அதே நேரத்தில் இரானின் பாதுகாப்பு அமைச்சகம் "அமெரிக்கா திட்டமிட்டதை விட நீண்ட காலம் போராடும்" திறன் தங்களுக்கு இருப்பதாகக் கூறுகிறது.
இரான் - அமெரிக்கா, இரான், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியாபட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,முதல் நான்கு நாட்களில், அமெரிக்கா இரண்டாயிரம் தாக்குதல்களை நடத்தியது, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தியது.
அமெரிக்கா - இஸ்ரேலிய தாக்குதல்கள்
அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது வான்வழி தாக்குதலை முதன்மையாகப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா நிலம் மற்றும் கடல் வழியிலிருந்தும் ஏவுகணைகளை ஏவி வருகிறது.
அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் கூற்றுப்படி, போரின் முதல் நான்கு நாட்களில், அமெரிக்கா 2,000 தாக்குதல்களை நடத்தியதுடன் 2,000-க்கும் மேற்பட்ட ஷெல் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மார்ச் 4 வரை 600 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த காலகட்டத்தில், இஸ்ரேலிய விமானப்படை மொத்தம் 5,000 குண்டுகளை வீசியுள்ளது.
இரானிய செம்பிறை அமைப்பின் (ஹிலால்-இ அஹ்மர்) தகவல்படி, இந்தத் தாக்குதல்களில் 175 குழந்தைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உட்பட 1,045 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் போரின் முதல் நாளில் மினாப்பில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இந்த எண்ணிக்கையில் புரட்சிகர பாதுகாப்புப் படை அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டிடம் முக்கியமான ஆயுதங்கள் 'கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் உள்ளன' என்று கூறியுள்ளார்.
மறுபுறம், அமெரிக்கா திட்டமிட்டதை விட நீண்ட காலம் 'எதிரியை எதிர்த்து நிற்கும் திறன்' எங்களிடம் உள்ளது என்று இரானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆயுத கையிருப்பு மற்றும் விநியோகம் மட்டும் இந்த மோதலின் முடிவை தீர்மானிக்காது. யுக்ரேன் நீண்ட காலமாக ரஷ்யாவைவிட குறைந்த வீரர்கள் மற்றும் குறைந்த ஆயுதங்களுடனும் போராடி வருகிறது. இருப்பினும் ஆயுதங்கள் ஒரு முக்கிய அம்சமாகும்.
தொடக்கத்திலிருந்தே இந்த ராணுவ நடவடிக்கைகளின் வேகம் மிக அதிகமாக உள்ளது. உற்பத்தி செய்யப்படுவதை விட வேகமான விகிதத்தில் இரு தரப்பினரும் ஏற்கனவே தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
டெல் அவீவை சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மதிப்பீட்டுப்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே 2,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒவ்வொரு தாக்குதலிலும் பல்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
விளம்பரம்
இரான் ஏற்கனவே 571 ஏவுகணைகளையும் 1,391 டிரோன்களையும் ஏவியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியது. அவற்றில் பல இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கலாம்.
போர் நீண்ட காலம் நீடிக்கும் பட்சத்தில், இரு தரப்பிற்கும் இந்த அளவிலான மோதலை தொடர்ந்து பராமரிப்பது கடினமான ஒன்றாக மாறும்.
அமெரிக்கா - இரான் ஆயுத கையிருப்பு குறைந்தால் போர் எப்படி மாறும்? பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரானில் பாதிப்பை காட்டும் படம்
இரான் நிலை என்ன?
இரான் ஏவும் ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை ஏற்கனவே கவனித்துள்ளதாக மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் தொடர்ச்சியான கூட்டு வான்வழித் தாக்குதல்கள் இரானின் ராணுவத் திறன்களைக் கணிசமாகக் குறைத்துள்ளதாகக் கூறுகின்றன.
அமெரிக்காவை வெல்ல முடியாது என தெரிந்தும் இரான் போரை தொடர்வது ஏன்?
இரான் - அமெரிக்கா, இரான், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா
இஸ்ரேலை விட சௌதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது இரான் அதிக ஏவுகணைகளை ஏவியது ஏன்?
அட்டைகள் நம் ரத்தத்தை குடிக்கும்போது வலியே தெரியாதது ஏன்?
வலியே தெரியாமல் ரத்தம் உறிஞ்சும் 'அட்டைகள்' - நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
டி20 உலகக் கோப்பை சாம்பியன்
இந்தியாவின் வெற்றி தருணங்களை காட்டும் 10 புகைப்படங்கள்
End of அதிகம் படிக்கப்பட்டது
போரின் முதல் நாளில் நூற்றுக்கணக்கில் இருந்த ஏவுகணைகள் தற்போது டஜன் கணக்காக குறைந்துள்ளன.
போருக்கு முன்னதாக, இரானிடம் 2,000-க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் கையிருப்பில் இருந்ததாக மதிப்பிடப்பட்டது.
எதிரிகளை குழப்பத்தில் வைத்திருப்பதற்காக இத்தகைய புள்ளிவிவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், எந்தவொரு ராணுவமும் தங்களிடம் உள்ள ஆயுதங்களின் துல்லியமான எண்ணிக்கையை வெளியிடுவதில்லை.
இந்த போர் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28 முதல் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல்கள் 86% குறைந்துள்ளதாக அமெரிக்க மூத்த தளபதி ஜெனரல் டான் கெய்ன் புதன்கிழமையன்று கூறினார்.
போருக்கு முன்னதாக பல்லாயிரக்கணக்கான 'ஷாஹெத்' டிரோன்களை இரான் தயாரித்ததாகக் கருதப்படுகிறது.
இந்த வடிவமைப்பு ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது
ரஷ்யா தனது சொந்த ஷாஹெத் பதிப்பை பயன்படுத்தி யுக்ரேனில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா கூட இந்த வடிவமைப்பை நகலெடுத்துள்ளது.
ஆனால் மோதல் தொடங்கிய முதல் நாளில் இருந்து இரானின் டிரோன் ஏவுதல்கள் 73% குறைந்துள்ளதாக கெய்ன் கடந்த வாரம் கூறினார். இரான் தனது செயல்பாடுகளின் வேகத்தை தக்கவைக்க போராடி வருவதாகத் தெரிகிறது.
இந்த வியத்தகு சரிவு, கையிருப்புகளை பாதுகாக்கும் ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். ஆனால் உற்பத்தியைத் தொடர்வது இனி கடினமாகவே இருக்கும்.
ஆயுதக் கையிருப்பு குறைந்தால் இரான் மோதலில் எத்தகைய தாக்கம் ஏற்படும்?பட மூலாதாரம்,Anadolu via Getty Images
படக்குறிப்பு,இரானில் பாதிப்பை காட்டும் படம்
வான்வழி தாக்குதல் வரம்புகள்
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் இப்போது இரான் மீது வான்வழி ஆதிக்கத்தை பெற்றுள்ளன. இரானின் பெரும்பாலான வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது இரான் விமானப்படையும் வலிமையாக இல்லை.
போரின் அடுத்த கட்டம் இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்களை அழிப்பது மற்றும் ஆயுதக் கிடங்குகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அழிப்பதில் கவனம் செலுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது.
இரானின் போர் புரியும் திறனைக் குறைப்பது இப்போது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எளிதாக இருக்கலாம். ஆனால் அதன் அனைத்து ஆயுதக் கிடங்குகளையும் அழிப்பது கடினமாக இருக்கும்.
இரான் ஒரு பெரிய நாடு. ஆயுதங்களை மறைக்க இன்னும் வாய்ப்புகள் உள்ளன. சமீபத்திய வரலாறு வான்வழியாக நடத்தப்படும் போர்களின் வரம்புகளையும் காட்டுகிறது.
இராண்டு ஆண்டுகள் நடத்திய தீவிர குண்டுவீச்சுக்கு பிறகும் காஸாவில் ஹமாஸை இஸ்ரேல் ராணுவம் இன்னும் அழிக்கவில்லை.
ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஒரு வருட கால அமெரிக்க குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தப்பிப்பிழைத்தனர். அவர்களின் சில ஆயுதங்களும் அவ்வாறே தப்பின.
இரான் தாக்குதலால் குவைத்தில் ஏற்பட்ட பாதிப்பு பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரான் தாக்குதலால் மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்ட பாதிப்பு
அமெரிக்கா
அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவமாகத் தொடர்கிறது. அதன் ஆயுத கையிருப்பு மற்ற எந்த நாட்டையும் விட அதிகமானதாக இருக்கும்.
ஆனால் அமெரிக்க ராணுவம் பெரும்பாலும் விலையுயர்ந்த நவீன ஆயுதங்களையே நம்பியுள்ளது. அவை குறைந்த அளவில் தயாரிக்கப்படுகின்றன.
உற்பத்தியை விரைவுபடுத்துமாறு வலியுறுத்துவதற்காக பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களை டிரம்ப் சந்தித்தார். இந்த போர் அமெரிக்க ஆயுத வளங்களில் அழுத்தத்தை உண்டாக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும்.
அமெரிக்காவிற்கு இப்போது நெருக்கமான தூரத்தில் இருந்து தாக்குதல்களை நடத்துவதற்கு சுதந்திரம் கிடைத்துள்ளதால், அந்த அழுத்தம் ஓரளவு குறைந்திருக்கலாம்.
டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகள் போன்ற அதிக விலை கொண்ட மற்றும் அதிநவீன நீண்ட தூரம் செல்லும் ஆயுதங்களான "ஸ்டாண்ட்-ஆஃப் ஆயுதங்களை" பயன்படுத்துவதை அமெரிக்கா ஏற்கனவே நிறுத்திவிட்டதாக கெய்ன் கூறினார்.
அமெரிக்க விமானப்படை இப்போது குறைந்த விலையிலான "ஸ்டாண்ட்-இன்" ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. அதாவது, இவை இலக்கின் மீது நேரடியாக வீசக்கூடிய ஜே.டி.ஏ.எம் குண்டுகள் போன்றவை.
மார்க் கான்சியன் என்ற முன்னாள் அமெரிக்க கடற்படை கர்னல், உத்தி மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்.
''ஆரம்பத்தில் தொலைதூரத்திலிருந்து தாக்குதல் நடத்திய பிறகு, இப்போது அமெரிக்க ராணுவம் அதிக விலை உள்ள நீண்ட தூர ஆயுதங்களுக்கு பதிலாக குறைந்த செலவான ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை பயன்படுத்த முடியும்.'' என்றார் மார்க் கான்சியன்
அமெரிக்காவால் இந்த அளவிலான போரை "கிட்டத்தட்ட காலவரையின்றி" தொடர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
போர் நீண்ட காலம் நீடிக்கும் போது, இலக்குகளின் பட்டியலும் சிறியதாகிறது. அதாவது செயல்பாடுகளின் வேகம் படிப்படியாகக் குறையும்.
இரான் தாக்குதலால் பஹ்ரைனில் ஏற்பட்ட பாதிப்புபட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரான் தாக்குதலால் பஹ்ரைனில் ஏற்பட்ட பாதிப்பு
வான் பாதுகாப்பு
அமெரிக்காவிடம் பல்லாயிரக்கணக்கான ஜே.டி.ஏ.எம் குண்டுகள் இருப்பதாகவும், ஆனால் விலையுயர்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளின் இருப்பு குறைவாக இருப்பதாகவும் கான்சியன் கூறுகிறார்.
மோதலின் ஆரம்ப கட்டங்களில், இரானின் பதிலடி தாக்குதல்களின் அச்சுறுத்தலை முறியடிக்க அவை அவசியமாக இருந்தன.
பேட்ரியாட் ஏவுகணைகளுக்கு அதிக தேவை உள்ளது. அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அதன் அரபு நட்பு நாடுகளுக்கும் யுக்ரேனுக்கும் கூட அதிகமான தேவை உள்ளது.
ஒவ்வொரு இடைமறிப்பு ஏவுகணையும் 4 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவாகும்.
மேலும் அமெரிக்கா தற்போது ஆண்டுக்கு சுமார் 700 ஏவுகணைகளை உற்பத்தி செய்வதாக நம்பப்படுகிறது.
இரானால் இன்னும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ முடிந்தால், அது இந்த வரையறுக்கப்பட்ட கையிருப்புகளை குறைக்கும்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அமெரிக்காவிடம் சுமார் 1,600 பேட்ரியாட் ஏவுகணைகள் கையிருப்பில் இருக்கலாம் என்று கான்சியன் மதிப்பிடுகிறார்.
ஆனால் சமீப நாட்களில் அவை பயன்படுத்தப்பட்டதால் குறைந்து இருக்கலாம்.
வானிலிருந்து தரையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலை அமெரிக்கா "நீண்ட காலம்" தொடர்ந்து நடத்த முடியும் என அவர் கூறுகிறார்.
ஆனால் எதிரியின் தாக்குதலில் இருந்து காக்கும் வான்வழி பாதுகாப்பு என்பது "சற்றே உறுதியற்றதாக" உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"அதிபர் டிரம்ப் பேட்ரியாட் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்த முடிவெடுத்தால், இரானியர்களை விட அமெரிக்காவால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இதனைச் செய்வதில் ஒர் அபாயம் உள்ளது. அப்படி செய்தால், பசிபிக் பகுதியில் ஏற்படக்கூடிய மற்றொரு சாத்தியமான மோதலை சமாளிக்க அமெரிக்காவிடம் குறைவான பேட்ரியாட் ஏவுகணைகளே இருக்கலாம்''
ஆனால்,"இரானால் எங்களை விட நீண்ட காலம் நீடிக்க முடியாது" என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிபடக் கூறுகிறார். இதுகுறித்து அவர் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம்.
தமிழ்நாடு தேர்தல் 2026 - உங்கள் பகுதியில் உள்ள சாதிய பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள்
தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தளத்தை பிபிசி தமிழ் வழங்குகிறது.
உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடா? தீண்டாமை பிரச்னை குறித்து குரல் எழுப்பியும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
உங்கள் பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள். அவற்றை செய்தியாக்கி அரசிடம் கொண்டு சேர்க்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மீண்டும் ஒரு போரைத் தொடங்கியுள்ளது. அந்தப் பிராந்தியம், நீண்டகாலமாக அமெரிக்காவின் ராணுவ தலையீடுகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் தலையீடு எதிர்பார்த்த முடிவைக் கொடுத்ததா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில்.
இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 28 அன்று இரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்நாட்டின் அதிஉயர் தலைவர் அலி காமனெயி கொல்லப்பட்டார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகவும் கூறும் அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கிய இலக்குகளில் ஒருவராக அவரும் இருந்தார்.
இந்தப் பிராந்தியத்தில் இதற்கு முன்னரும் பல அமெரிக்க அதிபர்கள் தலையிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் டிரம்புக்கு முன்னோடியாக இருப்பவர்கள், அமெரிக்காவின் அதிபராக இருந்த சீனியர் புஷ் மற்றும் ஜூனியர் புஷ், ஒபாமா ஆகியோர். இராக்கில் சதாம் உசேன், லிபியாவில் முஅம்மர் அல் கடாஃபி ஆகியோருக்கு எதிராக ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து அவர்களை வீழ வைத்தது, அந்த நாடுகளுக்கு ஜனநாயகத்தையோ அல்லது சுதந்திரத்தையோ மீட்டுத் தரவில்லை. அதுமட்டுமின்றி, இன்று வரை நீடிக்கும் உள்நாட்டுப் போர் மற்றும் நிலையற்றத் தன்மையையே அது ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உதவியது. ஆனால் 2024இல் அசத் வீழ்ச்சிக்குப் பிறகு, பிற இஸ்லாமிய குழுக்கள் அங்கு அதிகாரத்தை கைப்பற்றின. ஆப்கானிஸ்தானில் சுமார் இரண்டு தசாப்த அமெரிக்க தலையீட்டிற்குப் பிறகு, 2021இல் தாலிபன் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
ஒபாமா காலத்தில் ராஜ்ஜீய தூதராகவும் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணிபுரிந்த ஃபிலிப் கோர்டன், 2015ஆம் ஆண்டு எழுதிய பிரபலமான ஒரு கட்டுரையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தலையீடுகளை பின்வருமாறு சுருக்கமாக விவரிக்கிறார்:
"இராக்கில், அமெரிக்கா தலையிட்டு அந்நாட்டை ஆக்கிரமித்தது; அதன் முடிவு பெரும் இழப்பை ஏற்படுத்திய பேரழிவு. லிபியாவில், அமெரிக்கா தலையிட்டாலும் ஆக்கிரமிக்கவில்லை. இருப்பினும் இந்தத் தலையீடு பெரும் இழப்பை ஏற்படுத்திய ஒரு பேரழிவாகவே இருந்தது. சிரியாவில், அமெரிக்கா தலையிடவும் இல்லை ஆக்கிரமிக்கவும் இல்லை என்றாலும் அதன் முடிவும் பெரும் இழப்பை ஏற்படுத்திய ஒரு பேரழிவே."
இந்த இழப்பு அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்குமானது என நிபுணர்கள் கருதுகின்றனர். கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணிபுரியும் இப்ராஹிம் அவாத்திடம் பிபிசி பேசியது. அவர், "இந்தப் பிராந்தியத்தின் நிலையற்ற தன்மைக்கு வெளிநாட்டுத் தலையீடுகளே முக்கியக் காரணம்" என்று விளக்குகிறார்.
இராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா அல்லது ஏமன் போன்ற நாடுகள் மோசமான ஆட்சி நிர்வாகம் அல்லது சர்வாதிகார ஆட்சிகளைக் கொண்டிருந்தாலும், இவை "வெளிநாட்டுத் தலையீட்டின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல" என அவாத் கருதுகிறார்.
கடந்த தசாப்தங்களில், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளது. சிலவற்றில் பிரதான பங்கு வகித்த வேளையில், சிலவற்றில் கூட்டணியின் ஓர் அங்கமாகவும் அமெரிக்கா செயல்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவற்றை இங்கு பார்ப்போம்.
இராக் (1991 மற்றும் 2003-2011)
கடந்த சில தசாப்தங்களில், இராக்கிற்கு எதிராக அமெரிக்கா பலமுறை ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு, சதாம் உசேன் தலைமையிலான இராக், குவைத்தின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவும், தனது பிராந்திய ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் அந்த நாட்டின் மீது படையெடுத்தது. அப்போது, அமெரிக்காவின் தலைமையில் ஐநா-வின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட ராணுவ கூட்டணி, 'ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம்' எனப் பெயரிடப்பட்ட போரின் மூலம் தனது மாபெரும் ராணுவ மேலாதிக்கத்தை வெளிப்படுத்தியது.
தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துரிதமான தரைவழித் தலையீடுகள் மூலம், அந்தக் கூட்டணி சில வாரங்களிலேயே குவைத்தை விடுவித்து இராக்கியர்களை வெளியேற்றி வெற்றி பெற்றது. இருப்பினும், சதாம் உசேன் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்த நிலையில், சர்வதேச தடைகளை எதிர்கொண்ட இராக், பிரிவினைவாத மோதல்கள் மற்றும் உள்நாட்டில் நிலையற்ற தன்மையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை மீட்டெடுக்கும் வெற்றிகரமான ஒரு ராணுவ செயல்பாடாகக் கருதப்பட்டது. பெர்லின் சுவர் வீழ்ச்சி மற்றும் பனிப்போரின் முடிவுக்குப் பிறகு நடந்த முதல் போர் என்பதால், இந்த வளைகுடா போர் அமெரிக்க ராணுவ தலையீடுகளின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தது. இது அமெரிக்காவுக்கு நிகர் யாரும் இல்லாத ஒரு 'புதிய உலக ஒழுங்கை' நிலைநாட்டியது.
பின்னர் 2003ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைமையிலான கூட்டணி இராக் மீது படையெடுத்தது. சதாம் உசேன் அரசிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், பயங்கரவாதத்துடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறி இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது.
ஒரு சில வாரங்களிலேயே அந்தக் கூட்டணி பாக்தாத் நகரைச் சென்றடைந்தது; சதாம் உசேன் கைது செய்யப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டார். ஆனால், தேடப்பட்ட அந்த ஆயுதங்கள் ஒருபோதும் கண்டறியப்படவில்லை.
அதற்குப் பிறகு சன்னி, ஷியா மற்றும் குர்துகளுக்கு இடையிலான மோதல்கள், கிளர்ச்சிகள், தீவிரவாதக் குழுக்களின் எழுச்சி என நாடே நெருக்கடியில் மூழ்கியது. இதன் உச்சகட்டமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உருவானது. இந்த அமைப்பு 2014 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலத்தில் இராக்கின் மூன்றில் ஒரு பங்கு நிலப் பரப்பையும், சிரியாவின் பாதி நிலப் பரப்பையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
படையெடுப்பிற்குப் பிறகு என்ன செய்வது என்பது குறித்த முறையான திட்டம் இல்லாததும், இராக் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைக் கலைத்தது போன்ற மூலோபாய தவறுகள் இராக்கில் ஏற்பட்ட நிலையற்ற நிலைக்கு முக்கியக் காரணங்களாக மாறின. ஆயுதம் ஏந்திய ஆயிரக்கணக்கான வீரர்கள் வேலையிழந்த நிலையில், அவர்களில் பலர் கிளர்ச்சிக் குழுக்களில் இணைந்தனர். இது இன்றும் அந்த நாட்டை உலுக்கி வரும் சீர்குலைவுக்கு வழிவகுத்தது.
கடந்த 2003 முதல் இராக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு வரும் 'இராக் பாடி கவுன்ட்' என்ற திட்டத்தின்படி, கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் நேரடி விளைவாக பொதுமக்கள் மற்றும் போராளிகள் எனக் குறைந்தது 3,00,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என பிற அமைப்புகள் கருதுகின்றன.
அமெரிக்காவின் இந்தத் தலையீடு பற்றிப் பேசிய இப்ராஹிம் அவாத், "இது இராக்கை சமூக ரீதியாகத் துண்டுதுண்டாகச் சிதறடித்தது. இது ஒரு ஜனநாயக, நவீன மற்றும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இதன் விளைவாக ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகள் உருவாவதற்கும் இதுவே காரணமாக அமைந்தது" என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான்
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டபோது, ஆயிரக்கணக்கான மக்கள் காபூலை விட்டு வெளியேற முயன்றனர்
2001ஆம் ஆண்டு, அமெரிக்கா மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுடன் இணைந்து, ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு எதிராக 'ஆபரேஷன் என்டியூரிங் ஃப்ரீடம்' என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
கடந்த 1996இல் அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கம், 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பென்டகன் மீது தாக்குதல் நடத்திய அல்-கொய்தா குழுவின் தலைவர் ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க மறுத்துவிட்டது. இதன் காரணமாகவே ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க அமெரிக்கா முடிவு செய்தது.
இந்தத் தலையீடு சில வாரங்களிலேயே தாலிபன் ஆட்சியை வீழ்த்துவதிலும், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவுவதிலும் வெற்றி பெற்றது. ஆனால் இது போரை முடிவுக்குக் கொண்டு வரவில்லை.
அமெரிக்காவின் தலையீட்டால் தாலிபன்கள் பின்னடவைச் சந்தித்தாலும், அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போரிட்டதால், இந்த மோதல் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.
2020ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மையான பகுதிகளை தாலிபன்களிடம் இழந்த அமெரிக்கா அந்நாட்டில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கிய அமெரிக்கப் படைகள் வெளியேற்றம், 2021 ஆகஸ்ட் மாதத்தில் தாலிபன்கள் காபூலை கைப்பற்றிய பிறகு துரிதப்படுத்தப்பட்டது.
2003இல் தொடங்கிய இராக் போர், அமெரிக்காவின் கவனத்தையும் ராணுவ வளங்களையும் ஆப்கானிஸ்தானில் இருந்து திசை திருப்பியது.
மேலும், அமெரிக்காவின் முதன்மை நோக்கம் அல்-கொய்தாவை அழிப்பதில் இருந்து "தேசக் கட்டமைப்பு" என்ற திட்டத்திற்கு மாறியது. ஆனால் இராக்கை போலவே, இங்கும் அந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த தெளிவான உத்தியோ அல்லது ஒருமித்த கருத்தோ திட்டமிடப்படவில்லை.
தாலிபன்களின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய ராணுவம் மற்றும் காவல் படைகள் மிகவும் பலவீனமாக இருந்தன. அவை முற்றிலும் மேற்கத்திய நாடுகளின் நிதி மற்றும் ஆதரவையே நம்பியிருந்தன. இதன் விளைவாக, மேற்கத்திய படைகள் வெளியேறியவுடன் அவை விரைவாகச் சரிந்தன; மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முன்னேறி வந்த தாலிபன்களின் முன்னேற்றத்தை எதிர்கொள்ளத் தவறியபோது அவை விரைவாகச் சரிந்தன, இறுதியில் அடிப்படைவாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தின் போர் செலவுகள் திட்டத்தின் தரவுகள்படி, ஆப்கானிஸ்தானில் நடந்த 20 ஆண்டுக்கால அமெரிக்க தலையீடு மற்றும் அந்த மோதலுடன் தொடர்புடைய வன்முறைகளின் நேரடி விளைவாக, பொதுமக்கள், ஆப்கானிய வீரர்கள், தாலிபன்கள், மேற்கத்தியப் படைகள் என 1,76,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கணக்கீடு, போரினால் ஏற்பட்ட உறுதியற்ற தன்மையால் ஏற்படும் நோய் அல்லது பஞ்சத்தால் ஏற்படும் இறப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பிற அளவுகோல்களின்படி பார்த்தால், உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
லிபியா
2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ராணுவ தலையீட்டிற்குப் பிறகு பதவியிறக்கப்பட்ட மற்றொரு சர்வாதிகாரி லிபிய தலைவர் முஅம்மர் அல் கடாஃபி ஆவார்.
அவரது வீழ்ச்சி அரபு வசந்தம் போராட்டங்களின் ஒரு பகுதியாகும். 1969 முதல் இரும்புக்கரம் கொண்டு கடாஃபி நடத்தி வந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள் ஒடுக்குமுறையை சந்தித்தன. இதைத் தொடர்ந்து, அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே வெடித்த மோதல் நாடு முழுவதும் பரவியது.
இதற்குப் பதிலடியாக, ஐநா பாதுகாப்பு கவுன்சில் லிபிய வான்பரப்பை 'பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக' அறிவித்தது. கிளர்ச்சியாளர்களுக்கு உதவவும், பொது மக்களைப் பாதுகாக்கவும், அரசாங்கப் படைகளின் மீது குண்டுவீச்சு நடத்தவும் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நேட்டோ கூட்டாளிகளுடன் அமெரிக்காவும் இணைந்தது. உண்மையில் இந்த ராணுவ நடவடிக்கைக்கான முயற்சியை பிரான்ஸ்தான் முன்னெடுத்தது.
கிளர்ச்சியாளர்கள் திரிபோலி நகரைக் கைப்பற்றி, 2011 அக்டோபரில் கடாஃபியை பிடித்துக் கொன்றனர். ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நடந்தது போலவே, லிபியாவிலும் மோதல் முடிவுக்கு வரவில்லை.
கடாஃபியின் வீழ்ச்சி மாபெரும் அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றிடத்தை நிரப்ப கூட்டணி நாடுகளிடம் எந்தத் தீர்வும் இல்லை. இது பல்வேறு ஆயுதமேந்திய குழுக்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது.
இராக் அல்லது ஆப்கானிஸ்தானை போல மற்றுமொரு நீண்டகால மற்றும் செலவு மிகுந்த போரில் ஈடுபட விரும்பாத சர்வதேச படைகள், கடாஃபியின் மரணத்திற்குப் பிறகு தங்களது நேரடிப் போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன. அதற்குப் பதிலாக, ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்குவதோடு, ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதுடன் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டன.
கெய்ரோவிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரியும் இப்ராஹிம் அவாத் கூறுகையில், "அமெரிக்காவின் லிபிய தலையீடு நாட்டை நிர்வகிப்பதற்கான எந்தத் திட்டமும் இன்றி செய்யப்பட்டது; இது உள்நாட்டுப் போருக்கே வழிவகுத்தது" என்றார். லிபியா ஒரு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும், புலம்பெயர்ந்தோரை ஏற்கும் நாடாகவும் இருந்ததால், இது கடுமையான பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியது.
இன்று வரை லிபியா பிளவுபட்டும், ஸ்திரமற்ற நிலையிலுமே உள்ளது. திரிபோலியில் தேசிய ஒற்றுமை அரசாங்கம் நிறுவப்பட்டு சர்வதேச அங்கீகாரத்துடன் செயல்படுகிறது, ஆனால் அது முழு நாட்டையும் கட்டுப்படுத்தவில்லை, அதிகாரம் பல்வேறு குழுக்களிடையே சிதறிக் கிடக்கிறது.
சிரியா
கடந்த 2011இல் சர்வாதிகார ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி பல அரபு நாடுகளில் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களான அரபு வசந்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நாடு சிரியா. பஷர் அல்-அசத்தின் அரசாங்கம் அமைதியான முறையில் நடந்த போராட்டங்களை ஒடுக்கியது. இது 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. இன்று அசத் ஆட்சி வீழ்ந்த போதிலும், அந்தப் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
சிரியாவின் போரானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் கலந்த ஒரு பன்முக மோதலாக மாறியது. அரசாங்க ஆதரவுப் படைகள், மிதவாத கிளர்ச்சியாளர்கள், குர்துப் படைகள், அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அடிப்படைவாதக் குழுக்கள் எனப் பல தரப்பினர் நிலப்பரப்பைக் கைப்பற்றப் போட்டியிட்டனர். இது நாட்டின் அதிகார வரைபடத்தைத் தொடர்ந்து மாற்றியமைத்தது.
ரஷ்யாவும் இரானும் அசத் அரசாங்கத்திற்கு ராணுவ ரீதியாக ஆதரவளித்தன. அதே நேரம், அரசாங்கப் படைகளுக்கு எதிராகப் போராடிய சன்னி கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்கள், பயிற்சி மற்றும் நிதி உதவியை துருக்கி வழங்கியது.
2014ஆம் ஆண்டில், அமெரிக்காவும் இந்த மோதலில் இணைந்தது. சிரியாவின் பாதி நிலப்பரப்பையும், இராக்கின் மூன்றில் ஒரு பங்கையும் கட்டுப்படுத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை எதிர்ப்பதே அதன் முதன்மை நோக்கமாக இருந்தது.
அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள், ஆயுதக் குழுக்களை பலவீனப்படுத்துவதில் வெற்றி பெற்றன, அவர்கள் சிரியாவின் பிராந்திய கட்டுப்பாட்டை இழந்தனர். அவர்களின் படை பலம் முழுமையாக அழிக்கப்படாவிட்டாலும், கணிசமாகக் குறைக்கப்பட்டன.
டொனால்ட் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில், 2017-ஆம் ஆண்டில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறி பஷர் அல்-அசத் அரசின் மீது அமெரிக்கா டொமாஹாக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
2013இல் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி அசத் அரசாங்கம் தனது சொந்த மக்கள் மீதே ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய போது, ஒபாமா வலுவான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
ரஷ்யாவின் உதவியால் அசத் ஆட்சியில் நீடித்தார். ஆனால் 2024இன் இறுதியில், அகமது ஷாரா தலைமையிலான 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' என்ற கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸை அடைந்தபோது, அசத் ஆட்சி சீட்டுக்கட்டு போலச் சரிந்தது.
அமெரிக்க ராணுவ தலையீடு, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அல்-கொய்தாவின் ஒரு கிளையாக இருந்து பின்னர் அதிலிருந்து பிரிந்த அல்-நுஸ்ரா முன்னணியின் முன்னாள் தலைவரான அல்-ஷாரா தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கத்துடன் அமெரிக்கா தற்போது உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் இவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதியை அமெரிக்கா அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வன்முறையின் அளவு குறைந்திருந்தாலும், அந்த நாடு இன்னும் பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, நிலையற்றதாகவே இருக்கிறது.
ஏமன்
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு, அரேபிய தீபகற்பத்திலுள்ள அல்-கொய்தா கிளைக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா பலமுறை ஏமனிலும் தலையிட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில், இரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவை கைப்பற்றிய பிறகு, ஏமன் உள்நாட்டுப் போரில் மூழ்கியது. 2015இல் செளதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டணி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தலையிட்ட போது, அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததோடு, தளவாடம் மற்றும் உளவுத் தகவல்களையும் வழங்கியது. இருப்பினும், அது தரையில் தனது படைகளை நிலைநிறுத்தவில்லை.
ஹூதி கிளர்ச்சிக் குழு என்பது தற்போது ஏமனின் சுமார் 30% நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தும் ஷியா பிரிவைச் சார்ந்த ஓர் இயக்கமாகும். ஏமனில் அடிப்படைவாத மற்றும் அடக்குமுறை ஆட்சியை நிறுவியுள்ள இந்த இயக்கத்தின் மீது கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
காஸா போரின் பின்னணியில், இந்தக் குழு செங்கடலில் கப்பல்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து, கடல்வழிப் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, அமெரிக்கா தனது கூட்டாளியான பிரிட்டனுடன் இணைந்து ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.
மத்திய கிழக்கிலேயே மிகவும் ஏழ்மையான நாடான ஏமன், பல ஆண்டுகளாக நீடிக்கும் ஸ்திரமற்ற தன்மையால் மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரசாரம் என்ற அமைப்பின் தகவல்படி, 2023 வரை 3,77,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள், மோதலின் மறைமுக விளைவுகளான பசி, நோய் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அணுகல் இல்லாமையால் ஏற்பட்டவை.
ஐநா தரவுகளின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் சுமார் 80% பேர் உயிர் வாழ மனிதாபிமான உதவியையே நம்பியுள்ளனர். 40 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.