Showing posts with label world. Show all posts

 


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஒர்லேண்டோ நகரிலிருந்து புறப்படத் தயாரான விமானத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த 294 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.



 காஸா போரில் பாதிக்கப்பட்ட ​சிறுவனின் படம் 2025ஆம் ஆண்டின் உலக பத்திரிகை புகைப்பட விருதை(World Press Photo of the Year) வென்றுள்ளது.


நியூயார்க் டைம்ஸுக்காக பாலத்தீன புகைப்படக் கலைஞர் சமர் அபு எலூஃப் என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்தார். இந்தப் படத்தில் இருப்பது, மார்ச் 2024இல் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இரு கைகளையும் இழந்த 9 வயது சிறுவன் மஹ்மூத் அஜ்ஜூர்.


இரண்டு புகைப்படங்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தன.


ஒன்று, அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் குடியேற்றத்தின் சவாலான யதார்த்தங்களை காட்டுகிறது.


மற்றொரு புகைப்படம், ஒரு காலத்தில் படகில் சென்றடையக்கூடியதாக இருந்த இடத்தில் தற்போது வறட்சியாக காணப்படும் அமேசான் கிராமத்தில் ஒரு இளைஞன் தனது தாய்க்கு உணவு கொண்டு செல்வதைக் காட்டுகிறது.


141 நாடுகளைச் சேர்ந்த 3778 புகைப்படக் கலைஞர்களின், 59320 புகைப்படங்களிலிருந்து இந்த ஆண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


உலக பத்திரிகை புகைப்படக் கண்காட்சி 2025, மே 23 முதல் ஆகஸ்ட் 25 வரை லண்டனில் நடைபெறும்.


📷 1. Samar Abu Elouf, The New York Times

📷 2. John Moore, Getty Images

📷 3. Musuk Nolte, Panos Pictures, Bertha Foundation

📷 4. Marijn Fidder


📷 1. Samar Abu Elouf, The New York Times
📷 2. John Moore, Getty Images
📷 3. Musuk Nolte, Panos Pictures, Bertha Foundation
📷 4. Marijn Fidder

 


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


சான் டியாகோவிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் இருக்கும் ஜூலியன் பகுதி, நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


மக்கள் குறைவாக வசிக்கும் இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் லேசான பொருட்சேதங்கள் ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், கலிபோர்னியாவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 வீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும், இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த 2ஆம் திகதி அமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவைத் தவிர, அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் தற்போது 10% உலகளாவிய வரி விதிக்கப்படும் என வௌ்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி வழங்கும் வகையில் சீனா இன்று அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பை அமுல்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா சீன பொருட்களுக்கான வரியை ​125 வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது சீனா 84% வரி விதித்துள்ளது. 


இது நாளை (10) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி வழங்கும் வகையில் சீனா இந்த வரி விதிப்பை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

34% வீதமாக இருந்த வரியையே சீனா இவ்வாறு 84% ஆக அதிகரித்துள்ளது. 

சீனப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி, 104% வரிகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

 


இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பரஸ்பர வரி விதிப்பை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து அப்பிள் நிறுவனம் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

 


இதன் ஒருபகுதியாக, அப்பிள் நிறுவனம் தனக்குச் சொந்தமான 5 விமானங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை இடமாற்றம் செய்துள்ளது .

 

டொனால்ட் ட்ரம்ப், அதிக வணிகத்தை மேற்கொள்ளும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார்.


 

அதிக வரி வசூலிக்கும் இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு 10% பரஸ்பர வரி விதிப்பை ஏப். 5 முதல் அமுலுக்குக் கொண்டுவந்தார்.



இதன்படி இந்த நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.

இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் தற்காலிகத் தீர்வை அப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்ல அப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.



திருத்தப்பட்ட வரி விதிப்பால் சர்வதேச வணிகக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க சந்தைகளில் சில்லறை விற்பனையில் எந்தவித மாற்றங்களையும் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதற்காக அப்பிள் நிறுவனம் இந்த முயற்சியை எடுத்துள்ளது.



இது தற்காலிகத் தீர்வாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக அமையாது எனவும் அப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

 


 (வி.ரி.சகாதேவராஜா)

இந்திய சுதந்திர தியாகிகளை போற்றும் வகையில் இந்தியாவில் 108 இடங்களில் தியாக பெருஞ்சுவர் அமைக்கும் செயல்திட்டம் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்  சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவை போற்றும் தியாகப் பெருஞ்சுவர் அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது சிறப்பாக நடைபெற்றது.

 மகாராஷ்டிராவில் இடம் பெற்ற நிகழ்வில் முதல்வர் உட்பட ஹிந்தி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


 விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் உயர்திரு பட்னவிஸ் மற்றும் மகராஷ்டிரா அமைச்சர்கள் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி சட்டப்பேரவை தலைவர் திரு ஏம்பலம் செல்வம் அவர்கள் கலந்து கொண்டார் விழாவை சக்ரா பவுண்டேஷன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தது திரைப்பட இயக்குனரும் சக்ரா பவுண்டேஷன் தலைவருமான திரு சக்ரா ராஜசேகர் நன்றி கூறினார்

 


எதிர்க்கட்சியினரின் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.


இந்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.


கிஷண்கஞ்ச் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான, காங்கிரஸைச் சேர்ந்த முகமது ஜாவேத் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசாதுதீன் ஓவைசி ஆகிய இருவரும் இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


கடந்த வாரத்தில் வக்ஃப் மசோதாவை தாக்கல் செய்த போது, இஸ்லாமிய அமைப்புகளும் தலைவர்களும் அதற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.


விளம்பரம்


வக்ஃப் வாரியத்தின் கட்டமைப்பு, சொத்துரிமை மற்றும் நீதி செயல்முறை போன்ற முக்கிய அம்சங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


வக்ஃப் சொத்துகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்றல் போன்றவற்றை ஏற்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் தேவை என்று அரசாங்கம் கூறுகிறது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியினர் இது மத சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.


நாடாளுமன்ற உறுப்பினர் ஜாவேத் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் அனஸ் தன்வீர் பிபிசி இந்தியிடம் இது குறித்து பேசும் போது, "இந்த திருத்த சட்டத்தின் அடிப்படையானது இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 25 (டி) மற்றும் 26 ஆகியவற்றை மீறுவதாக அமைந்துள்ளது. இந்த சட்டத்திற்கு பிறகு வக்ஃப் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடு அதிகமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.


வக்ஃப் என்றால் என்ன? வக்ஃப் சட்டத்திருத்த மசோதா கூறும் மாற்றங்கள் என்ன?

2 ஏப்ரல் 2025

வக்ப் சட்டத்தில் பரிந்துரைக்கப்படும் திருத்தங்கள் - இஸ்லாமியர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

30 நவம்பர் 2024

சட்டத்தில் சர்ச்சைக்குரிய அம்சங்கள் என்ன?

இந்த சட்டத்தின் பல்வேறு அம்சங்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.


வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சில் போன்றவற்றின் கட்டமைப்பை மாற்றியுள்ளது அரசாங்கம். இஸ்லாமியர் அல்லாதவர் அந்த குழுவில் அங்கம் வகிப்பதற்கான வாய்ப்பை இந்த சட்டம் உருவாக்கியுள்ளது.


வக்ஃப் சொத்துகளை கணக்கெடுப்பதற்கான உரிமை வக்ஃப் ஆணையரிடம் இருந்து பறிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.


அரசாங்கம் ஆக்கிரமித்திருக்கும் நிலம் தொடர்பாக சர்ச்சைகள் ஏற்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவே இறுதியானது.


இதற்கு முன்னதாக சொத்துகள் சம்பந்தமாக வக்ஃப் தீர்ப்பாயம் எடுக்கும் முடிவே இறுதியானதாக கருதப்பட்டது. தற்போது, இந்த முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாட இயலும்.


மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் சொத்துக்கள் (Waqf by User) இனி வக்ஃபாக கருதப்படாது. புதிய சட்டத்திருத்தத்தில் இதற்கான பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.


அதாவது மசூதி, கல்லறை உள்ளிட்ட மதம் மற்றும் சேவை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் சொத்துகள் முறையாக வக்ஃப் என்று அறிவிக்கப்படவில்லை என்றாலும் அது வக்ஃப்வாக கருதப்பட்டு வந்தது. ஆனால் புதிய சட்டத்தின் கீழ் இனி அவ்வாறு கருதப்பட மாட்டாது.


இறைத்தொண்டுக்காக ஒருவர் சொத்தை வக்ஃபாக வழங்க வேண்டும் என்றால் அவர் கடந்த ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றும் நபராக இருந்திருக்க வேண்டும்.


திருச்சியில் வக்ஃப் நிலம்: 'நீங்கள் சொன்னது கட்டுக்கதை' – நாடாளுமன்றத்தில் சவால் விட்ட ஆ.ராசா

3 ஏப்ரல் 2025

வக்ஃப் சொத்து என்றால் என்ன? சட்டத்திருத்த மசோதாவை தமிழக அரசு எதிர்ப்பது ஏன்?

4 ஏப்ரல் 2025

வக்ஃப் திருத்தச் சட்டம், நாடாளுமன்றம், பாஜக அரசாங்கம், சிறுபான்மையினர் நலன் பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,நாடாளுமன்றத்தில் பல இஸ்லாமிய எம்.பிக்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர்

வக்ஃப் வாரியம் மற்றும் கவுன்சிலில் இஸ்லாமியர் அல்லாதோருக்கு இடம்

திருத்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள திருத்தங்களில் பலத்த எதிர்ப்பைப் பெற்றது வக்ஃப் கட்டமைப்புகளில் கொண்டுவரப்பட்ட மாற்றம்.


இதற்கு முன்னதாக வக்ஃப் சட்டம் 1995-ன் கீழ், மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களாக இருக்க இயலும்.


ஆனால் இது தற்போது மாற்றப்பட்டுள்ளது. வருங்காலங்களில் அரசாங்கமே இந்த இரண்டு அமைப்புகளுக்கான உறுப்பினர்களை நியமிக்கும். வாரியங்கள் மற்றும் கவுன்சிலில் குறைந்தது இரண்டு இஸ்லாமியர் அல்லாதோர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த கைரானா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இக்ரா ஹாசன் இந்த மாற்றம் தொடர்பாக, "இஸ்லாமியர் அல்லாதோர் வக்ஃப்-க்கு நன்கொடை வழங்க இயலாது. ஆனால் வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியத்தின் உறுப்பினராக முடியுமா," என்ற விமர்சனத்தை முன்வைத்தார்.


அரசு சார்பில் இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த மாற்றம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் எத்தகைய இடையூறையும் ஏற்படுத்தாது என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.


உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஃபுசால் அஹ்மது அயூபி இது தொடர்பாக பேசிய போது, "சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் பெரும்பான்மையாக இருப்பார்கள்," என்று நம்புவதாக தெரிவித்தார்.


முந்தைய சட்டத்தில் அமைச்சர் தவிர்த்து கவுன்சில் மற்றும் வாரியங்களில் இஸ்லாமியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க இயலும். ஆனால் திருத்தச் சட்டத்திற்கு பிறகு, மத்திய வக்ஃப் கவுன்சிலில் 22 உறுப்பினர்களில் 12 பேரும், மாநில வக்ஃப் வாரிய உறுப்பினர்களில் 11-ல் 7 பேரும் இஸ்லாமியர் அல்லாதோர் இடம் பெறக் கூடும். இது குறித்த கவலையை சில இஸ்லாமிய அமைப்புகள் வெளிப்படுத்தின.


பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்ன? கப்பல் வரும் போது எவ்வாறு வழிவிடும்?

6 ஏப்ரல் 2025

டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை

6 ஏப்ரல் 2025

வக்ஃப் திருத்தச் சட்டம், நாடாளுமன்றம், பாஜக அரசாங்கம், சிறுபான்மையினர் நலன் பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,வக்ஃப் சட்டம் 1995-ன் படி அமைச்சர் தவிர்த்து கவுன்சில் மற்றும் வாரியங்களில் இஸ்லாமியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க இயலும்

வக்ஃப், நன்கொடை, பயனர்களால் அளிக்கப்பட்ட வக்ஃப் மீது எழும் கேள்விகள்

இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, வக்ஃப் என்பது சேவைகளுக்காக வழங்கப்படும் நன்கொடையாக கருதப்படுகிறது. மசூதி, கல்லறை, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வறியவர்களுக்கு உதவுவது போன்ற காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது.


வக்ஃப் சொத்தை நன்கொடையாளர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, மசூதியின் பராமரிப்பு தேவைகளுக்காக ஒருவர் இடத்தை நன்கொடையாக வழங்குகிறார் என்றால் அந்த நிலத்தை வேறெந்த தேவைகளுக்காகவும் பயன்படுத்தக் கூடாது.


ஆனால் தற்போது இந்த அம்சமும் கேள்விக்குறியாகியுள்ளது. "வக்ஃப் சொத்துகளில் மோசடிகள் நடைபெற்றுள்ளன. குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்குவது மற்றும் விற்பனை செய்வது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது," என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.


பயன்பாட்டின் அடிப்படையிலான வக்ஃப் (Waqf by User) என்ற பிரிவு, மத தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட சொத்து வக்ஃபாக கருதப்படுவதை உறுதி செய்தது. ஆனால் புதிய திருத்தச் சட்டத்தின் படி, இதுபோன்ற சொத்துகளில் பிரச்னை ஏற்பட்டால் அதற்கான தீர்வு கிடைக்கும் வரை அந்த சொத்து வக்ஃபாக கருதப்படாது.


"இது தொடர்பாக ஏற்கனவே, எம்.சித்திக் vs சுரேஷ் தாஸ் வழக்கில், 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தெளிவான விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் தற்போது இந்த பிரிவு நீக்கப்பட்டிருக்கிறது," என்று அனஸ் தன்வீர் கூறினார்.


'காந்திய' சோஷலிசத்தை பாஜக ஏற்றுக் கொண்டது எப்படி? ஒரு வரலாற்று பார்வை

3 மணி நேரங்களுக்கு முன்னர்

மனைவியை கொன்றதாக கணவர் கைது: ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு உயிரோடு வந்த மனைவி - என்ன நடந்தது? இன்றைய டாப் 5 செய்திகள்

6 ஏப்ரல் 2025

வக்ஃப் திருத்தச் சட்டம், நாடாளுமன்றம், பாஜக அரசாங்கம், சிறுபான்மையினர் நலன் பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, வக்ஃப் என்பது சேவைகளுக்காக வழங்கப்படும் நன்கொடையாக கருதப்படுகிறது.

ஆட்சியருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் குறித்த குற்றச்சாட்டு

இதற்கு முன்னதாக வக்ஃப் சொத்தை கணக்கெடுக்கும் பொறுப்பு வக்ஃப் ஆணையரிடம் இருந்தது. தற்போது திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.


சர்ச்சைக்குரிய வகையில் இருக்கும் வக்ஃப் சொத்துகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால், மாவட்ட ஆட்சியரின் முடிவே இறுதியானதாக கருதப்படும்.


அரசாங்கத்தின் சொத்துகள் ஏதேனும் வக்ஃப் என்று அடையாளம் காணப்பட்டால், அது வக்ஃபாக கருதப்படாது என்று திருத்தச் சட்டம் கூறுகிறது.


தீர்க்கமான முடிவு இதில் எட்டப்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அந்த சொத்து யாருக்கு சொந்தம் என்று முடிவு செய்து அது தொடர்பான அறிக்கையை மாநில அரசாங்கத்திற்கு சமர்ப்பிப்பார்.


உச்ச நீதிமன்றத்தில், வழக்கறிஞர் மஹமூத் ப்ரச்சா இது தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பினார். "வருவாய் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஒரு வாதியாக இருக்கும் போது, அவர் எப்படி நடுநிலைத் தன்மையுடன் செயல்படுவார்? எந்த ஒரு நிலத்தையும் வக்ஃபாக அறிவிப்பதற்கு முன்பு, நிலத்தை அளவீடு செய்யும் அரசாங்க ஊழியர் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் 'நோட்டீஸ்' அனுப்பிவைப்பார். அதில் ஏதேனும் பிரச்னை இருக்கும் போது அது சரி செய்யப்படும்" என்று அவர் கூறினார்.


புதிய திருத்தச் சட்டத்தின் கீழ், வக்ஃப் தீர்ப்பாயத்தின் முடிவு இறுதியானது அல்ல. தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். இது வழக்கில் தீர்ப்பு கிடைப்பதை மேலும் தாமதப்படுத்தும்.


இருப்பினும், முன்பும் தற்போதும் உயர் நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் அங்கே மேல் முறையீடு செய்ய இயலும் என்று இஸ்லாமிய அமைப்புகள் தெரிவிக்கின்றன.


நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் வக்ஃப்

வக்ஃப் திருத்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பிரிவு, ஒருவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் சொத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அவரால் அந்த சொத்துக்கு உரிமை கோர இயலும் என்பதாகும்.


இந்த பிரிவு இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ரச்சா இது குறித்து பிபிசி இந்தியிடம் பேசிய போது, "ஒரு சமூகத்தின் பொது நிலமே வக்ஃபாகும். இது போன்ற ஒரு பிரிவு அரசாங்க நிலத்திற்கு எப்படி பொருந்தாதோ அப்படியே வக்ஃப் சொத்துகளுக்கும் பொருந்தாது," என்று தெரிவித்தார்.


இது நாள் வரை வக்ஃப் சொத்துகள் நில உச்ச வரம்பு சட்டத்திற்கு வெளியே இருந்தன. அதாவது எப்போது வக்ஃப் வாரியம், ஒரு சொத்து அதற்கு உரியது என்று கண்டுபிடிக்கிறதோ அப்போது அந்த சொத்திற்கு உரிமை கொண்டாடும் நபர்களை அங்கிருந்து வெளியேற்ற வழக்கு பதிவு செய்ய இயலும்.


ஆனால் இந்த புதிய பிரிவு காராணமாக, ஒருவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் சொத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தால் அவர் அந்த சொத்திற்கு உரிமை கொண்டாட இயலும்.


டிரம்புக்கு எதிராக 50 மாகாணங்களில் போராட்டம் – சில மாதங்களிலேயே மக்கள் ஆதரவு சரிந்துள்ளதா?

7 ஏப்ரல் 2025

காத்தவராயன் வரலாறு: நாட்டார் தெய்வங்கள் சாதி ஆணவக் கொலையால் உதித்தவையா? ஓர் ஆய்வு

4 மணி நேரங்களுக்கு முன்னர்

வக்ஃப் திருத்தச் சட்டம், நாடாளுமன்றம், பாஜக அரசாங்கம், சிறுபான்மையினர் நலன்  பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,ஏற்படுத்தப்பட்ட திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் - மோதி

அரசாங்கம் கூறுவது என்ன?

இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில், வக்ஃப் நிர்வாகத்தை புதுமைப்படுத்தி சிறப்பான மேலாண்மையை ஏற்படுத்தவே இந்த திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக அரசு கூறுகிறது.


இரண்டு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்த தருணத்தை மிகவும் முக்கியமானது என்றும் சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கிய மேம்பாட்டை நோக்கி எடுத்துவைக்கப்படும் மிகப்பெரிய அடி இது என்றும் வர்ணித்தார் பிரதமர் நரேந்திர மோதி.


"பல ஆண்டுகளாக வக்ஃப் அமைப்பானது வெளிப்படைத்தன்மை அற்றும், பொறுப்புக்கூறல் இல்லாத ஒன்றாகவும் இருந்தது. இஸ்லாமிய பெண்கள், வறிய இஸ்லாமியர்கள் மற்றும் பஸ்மந்தா இஸ்லாமியர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். தற்போதைய திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும்," என்று எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டி

 


காஸாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18ஆம் திகதி காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

 

இதற்கிடையே நேற்று காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.

 

இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்தது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் காஸா முழுவதும் நேற்று இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 43 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்குமிடம் தற்காலிக கூடாரங்கள் மீது அதிக தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பகுதிகள் மீது காஸாவிலிருந்து ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் சுமார் 10 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

 

 

கடலோர இஸ்ரேலிய நகரமான அஷ்டோட்டை நோக்கி சரமாரியாக ரொக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது. ரொக்கெட் தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையே மத்திய காஸாவில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் கட்டாய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்திக்க உள்ள நிலையில் மறுபுறம் காஸாவில் பெண்கள், குழந்தைகள் தங்கியிருக்கும் தற்காலிக தங்குமிடங்கள் குறிவைக்கபடுவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.


 


இந்தியா - இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 Day - 541


🇵🇸vs🇮🇱+🇺🇲


நேற்று இரவு...,

மேலும் ஒரு MQ-9 வகை அமெரிக்க Drone ஒன்றை வீழ்த்தி உள்ளது Yemen 🇾🇪 Ansarullah.


இந்த Drone பற்றி முதல் முறை படிப்பவர்களுக்கு:-

 $ 32 Million இதன் விலை!

 மியான்மரின் மையப் பகுதியை தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளனர், 732 பேர் காயமடைந்துள்ளனர்.


பிபிசியின் பர்மிய சேவை அளித்த தகவலின்படி இந்த எண்ணிக்கை மியான்மரின் ராணுவ தலைவர் மின் ஆங் ஹெலாய்ங்கிடமிருந்து வந்தது.


தாய்லாந்தில், ஒரு பெரிய கட்டடம் சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.


நில நடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.


சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.


அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பர்மிய நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. இந்த பகுதி தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


மியான்மரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நிமிடங்களே ஆன நிலையில், மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் 6.4 ஆக பதிவானது. இதன் மையம், சர்காயிங்கிற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


நேபிடோவில் சாலைகள் சிதைந்திருப்பதை படங்கள் காட்டுகின்றன. நாட்டின் ராணுவ அரசு ஆறு பகுதிகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மியான்மர்பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஒரு கட்டடத்தின் கூரை மீது இருந்த தண்ணீர் தெறித்து பல தளங்களை தாக்கி இறுதியாக கீழே தெருக்களில் ஊற்றியது.


பிபிசி குழுவினர் பாங்காங்கில் கட்டடங்கள் அசைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


நில அதிர்வு தலை சுற்றலை தருமளவு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


பாங்காக்கில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.


இதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக  தாய்லாந்தில் உள்ள தேசிய அவசர கால மருத்துவ சேவை மையம் தெரிவித்துள்ளது.  முன்னதாக 43 பேரை காணவில்லை என தெரிவித்திருந்தது.


கட்டடம் இடிந்து விழுந்தபோது சுமார் 320 தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்ததாகவும், மின் தூக்கியில் 20 பேர் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் முகநூல் பதிவொன்றில் தெரிவித்திருந்தது.


உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து தெளிவில்லாத நிலையில், சம்பவ இடத்திலேயே ஒரு கள மருத்துவமனை அமைக்கப்பட்டு மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மியான்மர்பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,மியான்மர் தலைநகரில் இடிந்து விழுந்த கட்டடம்

'நூற்றுக்கணக்காணவர்கள் இறந்திருக்கலாம்'

மியான்மரின் மண்டலேவில் இருக்கும் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சேதம் மிகப் பெரியது என பிபிசியிடம் தெரிவித்தார்.


''உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகம். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதால் இப்போதைக்கு எங்களால் இவ்வளவுதான் சொல்லமுடியும்," என்று அவர்கள் கூறுகின்றனர்.


''உயிரிழந்தவர்கள் எவ்வளவு பேர் என்பது சரியாக இன்னமும் தெரியவில்லை,ஆனால் பல நூறு பேர் இறந்திருப்பார்கள்"


மியான்மர்பட மூலாதாரம்,Getty Images

'நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்தேன்'

மியான்மரின் மிகப்பெரிய நகரான யாங்கானில் வசிக்கும் சோ லிவின் நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்ததாக தெரிவித்தார்.


நாட்டின் முன்னாள் தலைநகரான இந்த நகரில் பரவலாக சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை என அவர் தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் இதைவிட பெரிய நிலநடுக்கம் ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


மியான்மர்பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,மியான்மரில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள்

விமான நிலையத்தில் பதற்றமான நிலை

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் மியான்மரின் மண்டலே விமானநிலையத்தில் எடுக்கப்பட்டதாக தோன்றும் உறுதிசெய்யப்படாத காணொளி வெளியாகியுள்ளது.


அதில் மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு தார்சாலையில் அமர்ந்திருக்கின்றனர். பின்புலத்தில் ஜெட்விமானம் ஒன்று காணப்படுகிறது.


''அமருங்கள், ஓடாதீர்கள்'' என்ற குரல்கள் எழுவதை கேட்கமுடிகிறது.


ஆன்லைனில் வெளியாகும் வீடியோக்களின் நம்பக்கத்தன்மையை உறுதி செய்ய பிபிசி முயற்சி செய்துகொண்டிருக்கிறது.


மியான்மர்பட மூலாதாரம்,Myanmar's military regime

படக்குறிப்பு,மியான்மர் தலைநகர் நேபிடோவில் சாலைகள் சிதைந்துள்ளன

மியான்மரிலிருந்து தகவல்களை பெறுவது ஏன் கடினம்?

மியான்மரில் 2021ஆம் ஆண்டு முதலே ராணுவம் ஆட்சி செய்து வருவதால், தகவல் பெறுவது கடினமாக இருக்கிறது. உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துகிறது.


இணைய சேவை பயன்பாடும் கட்டுபாட்டுக்கு உட்பட்டது.


தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பிபிசியால் அடிமட்டத்தில் இயங்கும் உதவி முகமைகளை அணுகமுடியவில்லை.


மியான்மர்பட மூலாதாரம்,Reuters

தாய்லாந்து நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இல்லை என்பதுடன் அங்கு அபூர்வமாக உணரப்படும் அனைத்து நிலநடுக்கங்களும் அண்டை நாடான மியன்மாரில் ஏற்படுகின்றன.


பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தாங்ககூடியவகையில் வடிவமைக்கப்பட்டவை அல்ல என்பதால், கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்பு தீவிரமானதாக இருக்கலாம்.


நிலநடுக்கம் ஏற்பட்ட போதுதான் வீட்டில் சமைத்துக்கொண்டிந்ததாக பாங்காங்கில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் புய் து பிபிசி உலக சேவையின் நியூஸ்டே நிகழ்ச்சியில் தெரிவித்தார்.


"நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன், நான் அச்சமடைந்திருந்தேன்," என்கிறார் அவர். "அது என்னவென்றே எனக்கு தெரியவில்லை, ஏனென்றால், பாங்காங்கில் இது போன்ற ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்."


"எனது அபார்ட்மெண்டில் சுவர்களில் சில வெடிப்புகளை மட்டும் பார்த்தேன், நீச்சல் குளங்களிலிருந்து தண்ணீர் வெளியே தெளித்தது, மற்றும் மக்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.


பின்னதிர்வு ஏற்பட்டவுடன் அவர் மேலும் பலருடன் சேர்ந்து தெருவுக்கு ஓடினர். "என்ன நடந்தது என புரிந்துகொள்ள நாங்கள் முயன்றுகொண்டிருந்தோம்," என்கிறார் அவர்.


"பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும்வகையில் கட்டமைக்கபடவில்லை, எனவே பெரிய அளவு சேதம் இருக்கப் போகிறது என நான் நினைக்கிறேன்,

 


பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு. 


தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





காஸாவில் போர் நிறுத்தம் பிறகு நடக்கும் தாக்குதல்கள் 


ஜனவரி 19, 2025 அன்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், மார்ச் 18, 2025 அன்று முறிந்தது. இஸ்ரேல், மார்ச் 18 அன்று இரவு முதல் காஸா மீது மீண்டும் கடுமையான வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தொடங்கியது. இதில் 400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  


இஸ்ரேல் ஏன் மீண்டும் தாக்குதலை தொடங்கியது?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று அறிவித்துள்ளார். ஜனவரியில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் மீது புதிய நிபந்தனைகளை விதிக்க இஸ்ரேல் முயற்சித்ததாகவும், ஹமாஸ் அதை ஏற்க மறுத்ததால் தாக்குதல் தொடங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இஸ்ரேல் இந்த தாக்குதல்களை "ஹமாஸை அழுத்துவதற்காக" செய்வதாக கூறியுள்ளது.  


காஸா மக்களின் நிலை:

இரண்டு மாத அமைதிக்கு பிறகு, மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியதால், காஸா மக்கள் உயிருக்கு பயந்து ஓடி ஒளியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மார்ச் 21, 2025 அன்று வெளியான தகவல்களின்படி, இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களில் 91 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இடமின்மையால் பலருக்கு சிகிச்சை கிடைக்கவில்லை.  


உலக அரங்கின் பதில்:

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (UN OCHA), மார்ச் 18 அன்று, "காஸாவில் மீண்டும் ஒரு போர் நிறுத்தம் தான் பொதுமக்களை பாதுகாக்கும் சிறந்த வழி" என்று அறிவித்தது. ஆனால், இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதால், மனிதாபிமான உதவிகள் மற்றும் பொருட்கள் காஸாவுக்குள் செல்வது மீண்டும் தடைபட்டுள்ளது.  


ஹமாஸின் நிலைப்பாடு:

ஹமாஸ், இஸ்ரேலின் தாக்குதல்களை கடுமையாக எதிர்த்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால், இஸ்ரேல் விதிக்கும் புதிய நிபந்தனைகளை ஏற்க மறுத்து, தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது.


உங்கள் பார்வை என்ன?

அன்பு நண்பர்களே, காஸாவில் மீண்டும் தொடங்கிய இந்த தாக்குதல்கள் உலக அமைதியை பாதிக்குமா? இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மீண்டும் ஒரு போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? உங்கள் எண்ணங்களை கமென்டில் பகிருங்கள்!

 



லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் விமான நிலையம் முழுமையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த தீ விபத்தின் காரணமாக விமான நிலையத்துக்கான மின்சார விநியோகம் முழுமையாக தடைப்பட்டுள்ளமையின் காரணமாக  விமான நிலையத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



குறித்த விமான நிலையமானது உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகக் காணப்படுவதோடு விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளதால், 1,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பட்டுள்ளதுடன்  பல்லாயிரக்கணக்கான பயணிகளும் நெருக்கடியை சந்தித்துள்ளனா்.



விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் வரை பயணிகள் எந்த சூழ்நிலையிலும் விமான நிலையத்திற்கு பயணிக்கக்கூடாது என்றும் மேலதிக தகவல்களுக்காக தங்கள் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஹீத்ரோ விமான நிலைய அதிகாரிகள் மேலும் அறிவித்துள்ளனா்

 


Yemen 🇾🇪 Ansarullah சற்று முன் வெளியிட்ட அறிக்கையில் :-


18 Ballistic Missile 🚀 மற்றும் Drone -கள் கொண்டு....,

அமெரிக்க போர் கப்பல் Harry Truman மீது நடத்தப்பட்டதாக கூறியுள்ளது Ansarullah 🇾🇪

 


Yemen 🇾🇪 :-

USA 🇺🇲 

UK 🇬🇧 நடத்திய போர் விமான தாக்குதலில் 09 பேர் உயிரிழப்பு!

09 பேர் படுகாயம்!!

அனைவரும் பொதுமக்கள்!!!


~இனி..,

USA,UK கப்பல்கள் மூழ்கும் செங்கடலில்!


Ruby Mar கப்பல் வாரக்கணக்கில் கடலில் கரைந்ததை உலகமே ஒளிபரப்பு செய்ததே மறந்து விட்டார்களா வெள்ளை நிற வெறியர்கள்!6

 


வட கடல் பகுதியில் திங்கட் கிழமை காலையில் இரண்டு கப்பல்கள் நடுக்கடலில் மோதிக் கொண்டன. இரண்டு கப்பல்களும் கிழக்கு யார்க்ஷர் கடற்கரையில், பிரிட்டனில் உள்ள கிரிம்ஸ்பீ பகுதிக்கு அருகே மோதிக் கொண்டன.


ஸ்டெனா இம்மாகுலேட் கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்ற போது, வட கடலில் சோலாங் சரக்கு கப்பலால் மோதி விபத்துக்கு விபத்துக்குள்ளானது.


எண்ணெய் எடுத்துச்சென்ற கப்பல் மற்றும், வேதிப்பொருட்களுடன் சென்ற சோலாங் என இரண்டிலும் ஏற்பட்ட தீ இரண்டாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.


பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் என்ற டேங்கர் கப்பல் நங்கூரமிட்டிருந்த போது, போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட சோலாங் எனப்படும் கன்டேய்னர் கப்பலால் மோதப்பட்டதாகத் தெரிகிறது.


அமெரிக்க நிறுவனமான க்ரோவ்லி, ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலின் ஆபரேட்டர் மற்றும் இணை உரிமையாளர் ஆகும். ஃப்ளோரிடாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த விபத்தில் தீ பற்றி எரிந்தது மற்றும் ஜெட் எரிபொருள் கப்பலில் இருந்து வெளியானது. கப்பலில் பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலில் இருந்தவர்கள் அதனை விட்டு வெளியேறினர். தற்போது ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் கணக்கிடப்பட்டுள்ளனர்", என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Play video, "வட கடலில் இரு கப்பல்கள் மோதல் - கடும் தீ", கால அளவு 0,32

00:32


காணொளிக் குறிப்பு,வட கடலில் இரு கப்பல்கள் மோதல் - கடும் தீ

இரு கப்பல்களில் இருந்த 36 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் போக்குவரத்து செயலாளரிடம் பேசிய பிறகு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கிரஹாம் ஸ்டூவர்ட் தெரிவித்தார்.


இப்போது அனைவரும் கரைக்கு வந்துவிட்டனர். ஆனால் இதனால் ஏற்பட இருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலைப்படுவதாகவும் அவர் கூறினார்.


கப்பலில் இருந்தவர்களைத் தேடும் பணி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ள போதிலும், ஒருவரை காணவில்லை என்பதை எச்.எம். கடலோர காவல்படை உறுதி செய்துள்ளது. காணாமல் போனவர் சோலாங் கப்பலின் ஊழியர் ஆவார்.


ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலில் இருந்த ஜெட் எரிபொருள் அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமானது. அமெரிக்க அரசு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 10 எண்ணெய் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றாகும். மோதல் சமயங்களில் அமெரிக்க ராணுவத்துக்கு எரிபொருட்கள் கொண்டு செல்லவும், தேசிய அவரச காலங்களில் எரிபொருட்கள் கொண்டு செல்லவும் இந்த கப்பல் பயன்படுத்தப்படுகிறது.


டேங்கரில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறியதாகவும், பெரிய அளவில் தீ பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும் இந்த விபத்து குறித்த வீடியோக்கள் காட்டுகின்றன.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதிவேகமாக வந்து மோதிய கப்பல்

இம்மாகுலேட் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர் பிபிசியிடம் சிய போது, சோலாங் கப்பல் சுமார் 16 நாட்ஸ் வேகத்தில் வந்து மோதியதாகவும், கப்பலில் இருந்த பணியாளர்கள் கைகளில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு உயிர் காக்கும் படகுகளில் ஏறி தப்பியதாகவும் கூறினார்.


சுற்றுச்சூழலில் இந்த மோதல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும், இம்மாகுலேட் கப்பலில் இருந்து ஜெட் எரிபொருள் கடலில் கலந்திருப்பதாகவும் ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் உறுதி செய்துள்ளது.


North Sea, Ship Collision, கப்பல்கள் மோதல், வடக்கு கடல், பிரிட்டன் , அமெரிக்க கப்பல், எண்ணெய் கப்பல் மோதல்

படக்குறிப்பு,கப்பல்கள் மோதல் நிகழ்ந்த இடம்

கப்பல்கள் பற்றிய விவரங்களைக் கண்காணிக்கும் மேரைன் டிராஃபிக்கின் தரவுகளின்படி, ஸ்டெனா இம்மாகுலேட் 183 மீட்டர் நீளம் (600 அடி) கொண்ட அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் மற்றும் ரசாயன டேங்கர் கப்பல் ஆகும். ஸ்டெனா இம்மாகுலேட் கிரேக்க துறைமுகமான அகியோய் தியோடோராய் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டு, பிரிட்டனில் உள்ள ஹல்லுக்கு செல்ல இருந்தது.


மார்டைம் ஆப்டிமா வலைத்தளத்தின்படி, இந்தக் கப்பல் 2017 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, மேலும் அதன் எடை கிட்டத்தட்ட 50,000 டன்கள் ஆகும்.


North Sea, Ship Collision, கப்பல்கள் மோதல், வடக்கு கடல், பிரிட்டன் , அமெரிக்க கப்பல், எண்ணெய் கப்பல் மோதல்

சோலாங் போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட கன்டேய்னர் கப்பல் ஆகும். இது 2005 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, மேலும் 9,500 டன் சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது என்று மரைன் ஆப்டிமா வலைத்தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


சோலாங் கண்டேய்னர் கப்பல், ஸ்காட்லாந்து துறைமுகமான கிரேன்ஜ்மவுத் என்ற இடத்திலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாமிற்கு சென்றுக்கொண்டிருந்தது


மேரைன் டிராஃபிக்கின் தரவுகள், விபத்து நடந்தபோது ஒரு கப்பல் நகர்ந்து கொண்டிருந்ததையும், ஒன்று கிட்டத்தட்ட நிலையாக இருந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.