Showing posts with label world. Show all posts



நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஒரு விமானம் புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலா தளமான போகராவுக்கு செல்லும் சவுர்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் 19 நபர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.

பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில், சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் மற்றும் 2 விமானிகள் இருந்துள்ளனர்.

நெருப்பு மற்றும் புகை சூழ்ந்திருக்கும் விமானத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.


 



அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜோ பைடனின் விலகலால் அதிபர் தேர்தலில் புதிய சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகியிருக்கும் நிலையில், தனது ஆதரவை துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸுக்கு வழங்கியுள்ளார்.


எனினும் உடனடியாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகிவிட முடியாது. ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகளின் முறையான ஆதரவு அவருக்குத் தேவைப்படும்.


கமலா ஹாரிஸுக்கு ஆதரவு (கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் சிறப்பாக பணியாற்றினார் என ஏற்றுகொண்டோரின் விகிதம்) குறைவாகவே உள்ளது.


அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு துணை அதிபர் பதவி காலத்தில் அவர் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாரா என்ற சந்தேகமும் உள்ளது.




கமலா ஹாரிஸ் அரசியலுக்கு வந்தது எப்படி?

2020 அதிபர் தேர்தலுக்கு பிறகு துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ், இந்தப்பதவியில் அமர்ந்த முதல் பெண்மணி, முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் ஆசிய வம்சாவளியினர் உள்ளிட்ட பெருமைகளை பெற்றார்..


2021 நவம்பரில் ஜோ பைடன் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது அவர் 75 நிமிடங்கள் அதிபர் பொறுப்பை வகித்தார்.



கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியாவின் ஓக்லாண்டில், இந்தியாவில் பிறந்த தாய் மற்றும் ஜமைக்காவில் பிறந்த தந்தை ஆகிய இரு புலம்பெயர்ந்த பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார்.


அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது பெற்றோர் விவாகரத்து செய்தனர். அதன் பிறகு கமலா முக்கியமாக அவரது தாயார் ஷியாமளா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார். ஷியாமளா, புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.


ஓக்லாண்டின் கறுப்பின சமூகத்தில் தன்னையும் தனது தங்கை மாயாவையும் தன் தாய் முழுமையாக இணைத்ததாக கமலா ஹாரிஸ் கூறுகிறார்.


"இரண்டு கறுப்பின மகள்களை தான் வளர்த்து வருவதை என் அம்மா நன்றாக புரிந்து கொண்டார்" என்று அவர் தனது சுயசரிதையான ’தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்’ புத்தகத்தில் எழுதினார்.


"தாய்நாடாக தான் தேர்ந்தெடுத்த நாடு, மாயாவையும் என்னையும் கறுப்பினப் பெண்களாகப் பார்க்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். மேலும் நாங்கள் தன்னம்பிக்கையுள்ள, பெருமைமிக்க கறுப்பினப் பெண்களாக வளர்வதை உறுதி செய்தார்,” என்று கமலா குறிப்பிட்டுள்ளார்.


கமலா ஹாரிஸ் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். இது நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான கறுப்பின கல்லூரிகளில் ஒன்றாகும். அங்கு அவர் தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான மற்றும் அமெரிக்காவில் இன உறவுகள் போன்ற அரசியல் பிரச்னைகளை எதிர்கொண்டார்.


கமலா ஹாரிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவின் ஓக்லாண்டில் உள்ள அலமேடா கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் தனது சட்டப்பணி வாழ்க்கையைத் தொடங்கினார்

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹேஸ்டிங்ஸ் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான அவர், கலிஃபோர்னியாவில் உள்ள பல்வேறு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகங்களில் பணிபுரிந்தார்.


2010 இல் கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக உயர்ந்தார். 2016 இல் அம்மாகாணத்தின் அமெரிக்க செனட்டராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


2020 ஆம் ஆண்டில் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தான் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே போட்டியிலிருந்து வெளியேறினார்.


இருப்பினும் அதிபர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட ஜோ பைடன் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தார்.


"கமலா புத்திசாலி, உறுதியானவர், அனுபவம் வாய்ந்தவர், கடுமையாக போராடக்கூடியவர்,” என்று பைடன் கமலா பற்றிக் குறிப்பிட்டார்.


இருவரும் இணைந்து அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸை தோற்கடித்தனர்.


பிரசாரத்தின்போது கமலா ஹாரிஸ் பைடனின் பின்னணியில் இருந்தாலும் கூட, அவர் ஒரு பெண் மற்றும் கறுப்பினத்தவர் என்ற அடையாளம் அவர்களின் வெற்றியில் பெரும் பங்கு வகித்திருக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு கறுப்பின பெண்களால் அளிக்கப்பட்ட 90% வாக்குகள் கிடைத்தன.



துணை அதிபராக கமலா ஹாரிஸ் என்ன செய்தார்?

அமெரிக்க துணை அதிபர் என்ற நிலையில் கமலா ஹாரிஸ் அமெரிக்க செனட்டின் தலைவராகவும் உள்ளார். மசோதாக்களில் வாக்குகள் சமமாக இருக்கும்போது அவர் தன் வாக்கை அளிக்க முடியும்.


அமெரிக்காவின் வரலாற்றில் வேறு எந்த துணை அதிபரையும் விட அதிகமாக 32 முறை அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் சாதனை படைத்துள்ளார்.


"அறையின் கடைசி குரலாக ஒலிக்கும் கமலா, அனுமானங்களை சவால் செய்வார் மற்றும் கடினமான கேள்விகளைக் கேட்பார்," என்று பைடன் தனது துணை அதிபர் பற்றிக் கூறினார்.


கருக்கலைப்பை அமெரிக்காவின் முழு உரிமையாக்கிய ‘ஜேன் ரோ vs ஹென்றி வேட்’ தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, இனப்பெருக்க உரிமைகளை பாதுகாப்பதற்காக 2022 முதல் நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்தார்.


கமலா ஹாரிஸ், மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவின் தெற்கு எல்லையை கடக்கும் குடியேறிகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை

எவ்வாறாயினும் ஹாரிஸ் துணை அதிபராக இருந்த காலம் முழுவதும் அவருக்கு ஆதரவு (கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் சிறப்பாக பணியாற்றினார் என ஏற்றுகொண்டோரின் விகிதம்) குறைவாகவே இருந்தது.


51% அமெரிக்கர்கள் அவரது செயல்திறனை ஏற்கவில்லை எனவும் 37% பேர் மட்டுமே அவரது பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர் எனவும் 'ஃபைவ் தெர்டி எயிட்' தொகுத்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


அமெரிக்க தெற்கு எல்லையில் குடியேற்றத்தை குறைப்பதே அதிபர் பைடன் துணை அதிபருக்கு வழங்கிய முக்கிய பணி என்றும், அந்த சிக்கலை சரிசெய்ய அவர் பெரும்பாலும் தவறிவிட்டார் என்றும் பிபிசியின் அமெரிக்க சிறப்பு செய்தியாளர் கேட்டி கே கூறுகிறார்.


கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதனால் பாகிஸ்தானுக்கு ரூ.58,000 கோடிகடன் வழங்க சர்வதேச செலாவணி நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.


பென்சில்வேனியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் முகம் சுளித்தபடி, அவரது வலதுபுற காதில் கை வைத்திருப்பதை சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. டிரம்பின் இந்த பொதுக்கூட்டத்தின் போது பலமுறை துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது.

டிரம்ப் தரப்பிலிருந்து அவர் நலமாக உள்ளதாகவும் உள்ளூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடனே அவர் விரைவில் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சூழப்பட்டார். அங்கிருந்து உடனடியாக அவருக்காகக் காத்திருந்த வாகனத்திற்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டார். காரில் ஏற்றப்பட்டபோது அவர் தனது முஷ்டியை வெளியே உயர்த்திக் காட்டினார்.

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?பட மூலாதாரம்,GETTY IMAGES
டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது?
டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் இட்டிருந்த பதிவில், தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக அவரது செய்தித் தொடர்பாளர், டிரம்ப் “நலமாக இருப்பதாகவும்” உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

“ஏதோ தவறு இருப்பதாக நான் உடனடியாக அறிந்தேன். அப்போது உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தமும் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக தோட்டா ஒன்று என் தோலைக் கிழித்துச் சென்றதை உணர்ந்தேன்,” என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ரத்தப்போக்கு அதிகமாவதைக் கண்டவுடன், என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துவிட்டேன்,” என்றும் எழுதியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்பை சூழ்ந்து அழைத்துச் செல்லும்போது அவரது காது மற்றும் முகத்தில் வடிந்திருந்த ரத்தம் தெளிவாகத் தெரிந்தது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்லீல்மி தெரிவித்துள்ளார். அதோடு, “துப்பாக்கிச் சூட்டில் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்த பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

படுகாயமடைந்த இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஆல்லிஜெனி பொது மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சட்ட அமலாக்க வட்டாரங்கள் பிபிசியின் அமெரிக்க தொழில் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம், “இந்தத் தாக்குதலை நடத்திய ஆண் துப்பாக்கி ஏந்தியிருந்ததாகவும், மைதானத்திற்கு வெளியே சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள உயரமான அமைப்பிலிருந்து சுட்டதாகவும்” கூறியுள்ளனர். அதோடு, இந்தத் தாக்குதல் ஒரு படுகொலை முயற்சியாகவே கருதப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் டிரம்பின் செய்தித் தொடர்பாளர் குக்லீல்மி கூறினார்.

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
துப்பாக்கிச்சூடு எப்படி நடந்தது?
நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், வெற்றியைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் பட்லர் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றத் தொடங்கிய சில நிமிடங்களுக்கு உள்ளாகவே இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் பேசியபோது, டிரம்ப் பேசிய மேடையின் வலதுபுறத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

சம்பவத்தை நேரில் கண்ட கிரெக், டிரம்ப் மேடையில் ஏறுவதற்கு சுமார் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு கட்டடத்தின் கூரையில் சந்தேகத்திற்கிடமான தோற்றத்தில் ஒரு நபர் “கரடி போல் தவழ்ந்து சென்றதை” கண்டதாக பிபிசியிடம் கூறினார். அந்த நபரை காவல்துறையிடம் சுட்டிக் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

“அந்த நபரின் கையில் துப்பாக்கி இருந்தது. அவர் துப்பாக்கியுடன் இருப்பதை எங்களால் தெளிவாகக் காண முடிந்தது. அதை நாங்கள் சுட்டிக்காட்டியபோது போலீசார் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை,” என்று கிரெக் கூறினார்.

இதை நேரில் கண்ட மற்றொரு நபரான ஜேசன், பிபிசியிடம் ஐந்து முறை துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்டதாகக் கூறினார்.

“டிரம்பை பாதுகாக்க ரகசிய சேவை ஏஜென்டுகள் மேடையில் குதிப்பதை நாங்கள் கண்டோம். கூட்டத்தில் இருந்த அனைவரும் மிக வேகமாகக் கீழே இறங்கினார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு டிரம்ப் எழுந்து நின்று தனது முஷ்டியை மேலே தூக்கிக் காட்டினார்,” என்றார் அவர். மேலும் அங்கு தோட்டா சத்தம் கேட்டதும் குழப்பம் நிலவியதால் அனைவரும் தரையில் படுக்கத் தொடங்கியதாகவும் ஜேசன் தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் இருந்த டிம் என்பவர் பேசியபோது, சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சத்தத்தைக் கேட்டதாக கூறுகிறார்.

"அதிபர் டிரம்ப் கீழே விழுந்ததைத் பார்த்தோம். என்ன செய்வதென்று யாருக்கும் புரியாததால் உடனே எல்லோரும் தரையில் படுக்கத் தொடங்கினார்கள்." என்றார் டிம்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த வாரன் மற்றும் டெபி, குறைந்தது நான்கு முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக பிபிசியிடம் கூறினார்கள். சத்தம் கேட்டவுடன் தரையில் படுத்துவிட்டதாகவும், கூட்டத்தினூடாக மேடைக்கு வந்த ரகசிய சேவை ஏஜென்டுகள், மேடையில் இருந்தவர்களை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர் என்றும் கூறினார்.

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?பட மூலாதாரம்,GETTY IMAGES
அதிபர் ஜோ பைடன் கூறியது என்ன?
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிரம்ப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாக” தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை என்று தெரிவித்த பைடன், “நாம் ஒரு தேசமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை நாம் கண்டிக்க வேண்டும்,” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டொனால்ட் டிரம்புடன் அதிபர் ஜோ பைடன் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், இருவரும் என்ன பேசினார்கள் என்பதை வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவிக்கவில்லை.

ஜோ பைடன் பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, பட்லர் நகரத்தின் மேயர் பாப் டாண்டோய் ஆகியோருடனும் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.




 பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது. தற்போது பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சூனக் தனது பதவியை இழக்கிறார். தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தொழிலாளர் கட்சி தலைவர் கியர் ஸ்டாமர் பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ்-ஐ பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்தார். இதையடுத்து, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு பிரிட்டன் அரசர் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தில் ஸ்டாமர் உரை நிகழ்த்தினார். முதல் பிரிட்டிஷ் ஆசிய பிரதமராக இருந்த ரிஷி சூனக்கின் பணிகளையும் அவர் பாராட்டினார்.

 



குப்பைகள் நிறைந்த பலூன்களை   வட கொரியா அனுப்பத் தொடங்கியதிலிருந்து,தென்கொரியாவின் Incheon விமான நிலையத்தில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


கடந்த வாரம் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் நடைபெற்ற ராணுவ தாக்குதலுக்கு ஆளான மேலும் இரண்டு பாலத்தீனியர்கள், இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அவர்களை வற்புறுத்தி, ஜீப்பின் முன்புறம் ஏற்றிக் கொண்டு மிகவும் வேகமாக, கிராமப்புற சாலைகளில், ஓட்டிச் சென்றதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.


23 வயதான இளைஞரை இஸ்ரேல் ராணுவ ஜீப்பின் முன் பகுதியில் படுக்க வைத்து விரைவாக ஓட்டிச் சென்ற வீடியோ வைரலான சூழலில் இந்த இரண்டு பாலத்தீனியர்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.


கடந்த சனிக்கிழமையன்று, ஜெனின் புறநகர் பகுதியான ஜபாரியத்தில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் இதே போன்று பாதிக்கப்பட்டதாக கூறும் இந்த இரண்டு பாலஸ்தீனியர்களிடம் பிபிசி உரையாடியுள்ளது.


ஜபாரியத் தாக்குதலின் போது, இஸ்ரேல் ராணுவ வீரர்களால் முதுகில் சுடப்பட்டு, தரையில், சில மணி நேரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதாக குறிப்பிடுகிறார் சமீர் தபாயா. 25 வயது மதிக்கத்தக்க சமீர் தற்போது ஜெனினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


ரத்த வெள்ளத்தில் கிடந்த தாம் உயிருடன் இருப்பதை உணர்ந்த ராணுவத்தினர், ஜீப்பின் முன் பகுதியில் தூக்கிப் போடும் முன், துப்பாக்கி கொண்டு தாக்கியதாக குறிப்பிடுகிறார் ஜமீர்.


"என்னை அவர்கள் அரை நிர்வாணப்படுத்தினார்கள். நான் ஜீப்பை பிடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் அவ்வாறாக செய்யக் கூடாது என்று கூறி ராணுவ வீரர் ஒருவர் என் முகத்தில் தாக்கினார். பின்பு, அவர்கள் ஜீப்பை வேகமாக இயக்கினார்கள்," என்று கூறிய ஜமீர் தன்னுடைய மரணத்திற்காக அன்று காத்திருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.


வாட்ஸ்ஆப்

பாதுகாப்பு கேமராவில் பதிவான, மிகவும் வேகமாக இயக்கப்படும் ஜீப் ஒன்றின் முன்பகுதியில் அரை நிர்வாணமாக அவர் படுத்திருக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்றை ஜமீர் நம்மிடம் காட்டினார்.


வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இடம், ராணுவ நடவடிக்கை நடைபெற்ற இடத்தோடு பொருந்திப்போகிறது. எனினும், அந்த வீடியோவில், நாள், நேரம் போன்றவை ஏதும் இல்லை.


இதே போன்ற தாக்குதலுக்கு ஆளான மற்றொரு பாலத்தீனியரான ஹேஷம் இஸ்லெய்ட், இஸ்ரேல் ராணுவத்தினர் தம்மீது இரு முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுகிறார். ஜபாரியத்தில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட அவரையும் ஜீப்பின் முன் பகுதியில் கிடத்தி ராணுவ வீரர்கள் அதனை வேகமாக இயக்கியதாக கூறினார் ஹேஷம்.


"அனைத்து பக்கத்தில் இருந்தும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது," என்று குறிப்பிட்ட அவர், அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயன்ற போது ராணுவத்தினர் அவரை காலில் சுட்டதாக கூறினார். அதன் பிறகு ராணுவத்தினர் அவரையும் மற்றொரு நபரையும் அழைத்துக் கொண்டு சென்றது என குறிப்பிட்டார்.


"எங்களை நிற்க வைத்து, நிர்வாணப்படுத்தி, ஜீப்பின் முன் பகுதியில் ஏற வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்," என்றார் ஹேஷம்.


அந்த ஜீப் மிகவும் சூடாக இருந்தது. நெருப்பில் இருப்பதைப் போல் உணர்ந்தேன் என்று கூறிய ஹேஷம் அதன் பின் நடந்த நிகழ்வுகளை விவரித்தார்.


"ஆடைகள் ஏதுமின்றி, வெறுங்காலில் நின்றிருந்தேன். என்னுடைய கையை ஜீப்பின் மீது வைத்தபோது அது மிகவும் சூடாக இருந்தது. அதை நான் அவர்களிடம் கூறிய போது, நான் சாக வேண்டாம் என்று நினைத்தால் அதில் ஏற வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்," என்றார் ஹேஷம்.


அமெரிக்க அதிபர் தேர்தல்: நேருக்கு நேர் மோதிய பைடன் - டிரம்ப் - விவாதத்தில் என்ன பேசினர்?

28 ஜூன் 2024

லெஸ்டர்: இந்தியர்கள் அதிகம் வாழும் இந்த பிரிட்டன் நகரில் இந்து-முஸ்லிம் மக்களிடையே இருக்கும் ஆறாத வடு

1 ஜூலை 2024

ஜெனின்

படக்குறிப்பு,ஜெனின் முகாமைச் சுற்றியுள்ள சாலைகளின் கீழ் புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள், இந்த வார ராணுவ நடவடிக்கையின் போது வெடித்துச் சிதறியது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேல் ராணுவத்திடம் கேட்ட போது, அவை பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிட்டனர்.


முஜாஹித் அபாதி பாலஸின் வீடியோ குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறிய இஸ்ரேல் ராணுவம், முஜாஹித் அந்த ஜீப்பில் கட்டப்பட்டிருப்பது 'உத்தரவு மற்றும் நடைமுறைகளுக்கு எதிரானது' என்று குறிப்பிட்டது. மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் பதில் அளித்தது இஸ்ரேல் ராணுவம்.


அந்த வீடியோவில் இருக்கும் ராணுவ வீரர்களின் செயல்பாடுகள் ஐ.டி.எஃப்.- ன் மதிப்புகளுக்கு எதிராக உள்ளது என்றும் எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டிருந்தது ராணுவம்.


மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முஜாஹித், அந்த தாக்குதலில் இருந்து பிழைப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று பிபிசியிடம் கூறினார். வேகமாக ஓடும் ஜீப்பின் முன்னால் கட்டப்பட்ட நிலையில் இருந்த அவர் தன்னுடைய இறுதி பிரார்த்தனைகளை கூறியதாக குறிப்பிடுகிறார்.


அவரின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அவரை ஜீப்பில் தூக்கி எறியும் காட்சி அடங்கிய ஒரு வீடியோவை பிபிசிக்கு காட்டினார் முஜாஹித்.


அவர்கள் என்னிடம் ஆயுதம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, என்னுடைய முகம், தலை மற்றும் காயம்பட்ட இடங்களில் தாக்கினார்கள். என் கால் மற்றும் கைகளை பிடித்து, இடப்புறம் வலப்புறமாக ஆட்டி கீழே வீசினார்கள். கீழே விழுந்த அவரை மீண்டும் தூக்கி, இவ்வாறாக ஆட்டி கீழே தூக்கிப் போட்ட பின்பு ஜீப்பின் முன்னே வைத்து, ஒரு வீட்டிற்கு, வேகமாக ஓட்டிச் சென்றனர் என்றார் முஜாஹித்.


குற்றவாளிகளை பிடிக்க கடந்த வாரம் ஜபாரியத் சென்றதாக கூறும் இஸ்ரேல் ராணுவம், அங்கு தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தியதாக கூறியது.


இந்தியாவுக்கு வங்கதேசம் வழியாக புதிய ரயில் போக்குவரத்து வசதி - எப்படி செயல்படும்? பலன் யாருக்கு?

27 ஜூன் 2024

பொலிவியா: ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி முறியடிப்பு, சதி செய்த ராணுவத் தலைவர் கைது

27 ஜூன் 2024

ஹேஷம்

படக்குறிப்பு,தன்னை துப்பாக்கியால் சுட்டு பின்னர் ஜீப்பின் முன்னால் கட்டியதாகக் கூறுகிறார் ஹேஷம்.

ஹேஷமும் முஜாஹிதும் ஹேஷமின் நண்பரும், பக்கத்து வீட்டுக்காரருமான மஜித் அல்-அஸ்மிக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்ததாக கூறுகின்றனர் அவர்கள். கடந்த வாரம் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போது மஜீத் கைது செய்யப்பட்டு இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார்.


பாதிக்கப்பட்ட மூன்று நபர்களிடமும் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்றும், சோதனைக்குப் பிறகு ராணுவத்தினர் அவர்களை விடுவித்தனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


இஸ்ரேல் மனித உரிமைகள் அமைப்பான பெத்சேலம் (Btselem) இந்த வழக்குகளை பின் தொடர்ந்து வருகிறது.


அதன் செய்தித்தொடர்பாளர், ஷாய் பர்னேஸ் இது குறித்து பேசும் போது, அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, மேற்கு கரையில் இருக்கும் பாலத்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் குடியேறிகள் நடத்தும் வன்முறைகள் புதிய அளவை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.


இந்த வன்முறைகள் தீவிரமானவை, கொடூரமானவை, மிகவும் மோசமானவை என்று கூறிய அவர், "அக்டோபர் 7ம் தேதிக்குப் பிறகு, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனிய நகரங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன" என்றும் குறிப்பிட்டார்.


ஜெனின்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அக்டோபர் 7ம் தேதிக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது ஜெனின் நகர்

அக்டோபர் 7ம் தேதிக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது ஜெனின் நகர். குடிமக்கள் மற்றும் கலக அமைப்புகளை சேர்ந்தவர்கள் என 120க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர்.


ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் ஆதரவுகளை பெற்ற கலகக்காரர்கள் உள்ள ஜெனின் முகாமில் ஆயுதமேந்திய ராணுவத்தினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கே வாழும் மக்கள், போர் முடிவுக்கு வருவதற்கான ஒரு சமிக்ஞையும் இல்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.


"எதிர்ப்பு மனதில் விதைக்கப்பட்டுள்ளது என்பது ராணுவத்தினருக்கு தெரியவில்லை. இந்த போர் முடிவுக்கு வராது. ஒருவர் கொல்லப்பட்டால் அவரின் இடத்தை ஐந்து பேர் நிரப்புவார்கள்" என்று ஜெனினை சேர்ந்த பாலஸ்தீனியர் ஒருவர் கூறினார்.


ஜெனின் முகாமைச் சுற்றியுள்ள சாலைகளின் கீழ் புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள், இந்த வார ராணுவ நடவடிக்கையின் போது வெடித்துச் சிதறியது. அதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயம் அடைந்தனர்.


இந்தச் சண்டைகள் காஸா போருக்கு முன்பே துவங்கி விட்டன. போர் ஏற்பட்ட பிறகு அதன் உத்திகள் மட்டுமே மாறத் துவங்கியுள்ளன.


காஸாவோடு ஒப்பிடும் போது இது மிகவும் வேறுபட்ட பிராந்தியம். ஆனால் பரந்துபட்ட போரில் ஒரே எதிரிகள்தான்.


(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



 


சீனா-பிரான்ஸ் இணைந்து ஏவிய ரொக்கட் விபத்திற்ககுள்ளான நிலையில், நேற்று ஏவிய Jielong - 3 ரொக்கட், நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.

 

#Rep/SparkMedia.

சென்னை வழியாக இஸ்ரேலுக்கு ரகசியமாக ராக்கெட்கள், வெடிபொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துவருவது அம்பலமாகியுள்ளதாக Al Jazeera நிறுவனம் செய்தியறிக்கை வெளியிட்டுள்ளது!

🔹கடந்த மே 15 அன்று, சென்னையில் இருந்து வந்த Borkum என்ற சரக்குக் கப்பல் ஸ்பெயின் துறைமுகத்தை அடைய முற்பட்ட போது, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் கப்பலாக இருக்கக்கூடும் என சந்தேகித்து ஸ்பெயின் இடதுசாரி கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர் 🔹கப்பலை ஸ்பெயின் அரசு ஆய்வு செய்ய வேண்டும் என இடதுசாரி எம்பிக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ஸ்பெயின் துறைமுகத்தை அடையும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு ஸ்லோவேனிய நாட்டை நோக்கி நகர்ந்ததாக Al Jazeera கூறியுள்ளது 🔹Al Jazeera மேற்கோள்காட்டும் ஆவணங்களின்படி, இந்தியாவில் இருந்து ஆயுதங்களை ஏற்றிவந்த Borkum கப்பல் இஸ்ரேலின் Ashdod துறைமுகத்திற்கு செல்ல முற்பட்டதாக கூறியுள்ளது 🔹கடந்த ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு, செங்கடல் வழியாக செல்வதைத் தவிர்த்து ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்ததாகவும் கடல் கண்காணிப்பு தளங்கள் காட்டுவதாக Al Jazeera தெரிவித்துள்ளது 🔹Borkum கப்பலில் 20 டன்கள் ராக்கெட் என்ஜின்கள், 12.5 டன்கள் வெடிக்கும் திறன் கொண்ட ராக்கெட்டுகள், 1,500 கிலோ வெடிபொருட்கள் மற்றும் 740 கிலோ பீரங்கிகளுக்கான உந்துபொருட்கள் இருந்ததாகவும் 🔹சென்னை துறைமுகத்தில் இருந்து வந்த மற்றொரு சரக்குக் கப்பலான Marianne Danica, இஸ்ரேலுக்கு இராணுவ பொருட்களை ஏற்றிச் செல்ல முயன்றதாக தெரிவித்து மே 21 அன்று ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்தது 🔹அமைதி பேச்சுவார்த்தைக்கு வாதிட்டு வந்த இந்தியா, காசா போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வந்தது இது எடுத்துக்காட்டுவதாக Al Jazeera செய்தி நிறுவனம் விமர்சனம் செய்துள்ளது

தைவானுக்குப் புறப்பட்ட விமானத்தின் pressurization system என்ற இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால், நடுவானில் இருந்து 26,900 அடி விமானம் கீழே சரிந்து சென்றதால்,அதில் பயணித்த 17 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 


இந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் இன்று காலை 7.11  மணிக்கு  5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

#indonesia #Earthquake

 


தமிழகம் #கள்ளக்குறிச்சி கருணாபுரம் வீதியெங்கும் மரணஓலம்!


மரணவீட்டில் கள்ளச்சாராயம் குடித்த 38பேர் பரிதாபமாக பலி!


70க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு.


#திமுக அரசு மீது கட்சிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு.


உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்.

\

 


பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு!

தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி நேற்று பயணம் செய்த போது அவரது கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #NarendraModi #Varanasi #UttarPradesh #SparkMedia

 குவைத் தீ விபத்தில் சிக்கி 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு

🔹தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 இந்தியர்கள் உயிரிழப்பு 🔹கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான அந்த கட்டிடத்தில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்துள்ளனர் 🔹இரு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்திய தூதரகத்தை தமிழ்நாடு அரசு அணுகியுள்ளது

 


தேதி: பிப்ரவரி 5, 2024


இடம்: மக்களவை, இந்திய நாடாளுமன்றம்


காட்சி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்


பேச்சாளர்: பிரதமர் நரேந்திர மோதி


வசனம்: "சபாநாயகர் ஐயா, நான் புள்ளிவிவரங்களுக்குள் வரவில்லை. நாட்டின் மனநிலையைப் பார்க்கிறேன். இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும். பாஜக மட்டும் 370 இடங்களைப் பெறும்."


தேதி: ஜூன் 4, 2024


காட்சி: லோக்சபா தேர்தல் முடிவுகள் -


பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கு 20-க்கும் அதிகமான இடங்கள் பின்தங்கியுள்ளது.


மக்களவைத் தேர்தலில், கடந்த பத்து ஆண்டுகளில், காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.


19-ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி, "ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் எந்த அரசாங்கமும் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்க முடியாது," என்று கூறினார்.


இந்தியாவின் முதல் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஜவஹர்லால் நேரு, 52 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1962-இல், தொடர்ந்து மூன்று பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.


2024 பொதுத்தேர்தல் முடிவுகள், நரேந்திர மோதி மூன்றாவது முறையாகப் பிரதமராக முடியும் என்பதைக் காட்டுகிறது. ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களைப் போல, இந்த முறை அவரால் பெரும்பான்மை எண்ணிக்கையைத் தொட முடியவில்லை.


இந்தத் தேர்தலில் '400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்' என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கூறியது தவறு என நிரூபிக்கப்பட்டது.

 


இந்திய மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது. இதில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும் இந்தியா கூட்டணி 233 இடங்களிலும் முன்னிலை பெற்றது.


இதில் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறங்கிய சினிமா பிரபலங்கள் பலரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.


அதில் முதல்முறை போட்டியிட்டதிலேயே வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத். இவர் தனது சொந்த ஊரான மண்டி தொகுதியில் (ஹிமாசலப் பிரதேசம்) போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


கங்கனா ரணாவத்


இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விட 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கங்கனா 5,37,022 வாக்குகள் பெற்றார். விக்ரமாதித்ய சிங் - 4,62,267 வாக்குகள்.


தனது வெற்றிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கங்கனா ரணாவத் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அன்பையும், நம்பிக்கையையும் கொடுத்து தனக்கு ஆதரவு அளித்த மண்டி தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது உங்களுடைய வெற்றி. பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீதான நம்பிக்கையின் வெற்றி. இது சநாதனத்துக்கான வெற்றி. மண்டி தொகுதிக்கு கிடைத்த பெருமை என கங்கனா குறிப்பிட்டுள்ளார்.


அருண் கோயல்


ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் ராமராக நடித்து பலரின் கவனம் பெற்றவர் அருண் கோயல். இவர் இம்முறை பாஜக சார்பில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜவாதி கட்சியை விட 10,585 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.


வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பச் சுற்றுகளில் பின்னடைவில் இருந்த இவர், 5,46,469 வாக்குகள் பெற்றார். இவரிடம் தோற்ற சமாஜவாதி கட்சியின் வேட்பாளர் சுனித வெர்மா 535884 வாக்குகள் பெற்றார்.


வெற்றிக்கு பிறகு பேசிய அருண் கோயல், தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் நன்றி. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வேன் என உறுதியளித்தார்.


ஹேமமாலினி


ஹிந்தி சினிமாவின் கனவு கன்னியாக இருந்த ஹேமமாலினி, அரசியலிலும் தனது மூன்றாவது வெற்றியின் மூலம் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடித்துள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹேமலாலினி, 2,93,407 வாக்குகள் என்ற பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முகேஷ் தாங்கர் 2,16,657 வாக்குகள் பெற்றார்.


வெற்றிக்கு பிறகு பேசிய அவர், மூன்றாவது முறையாக மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. மதுரா மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இடைநின்ற பணிகளை தொடர்வதற்காக எனக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.


சத்ருகன் சின்ஹா


பிகாரில் பிறந்த சத்ருகன் சின்ஹா தனது நடிப்புக்காக பல்வேறு விருதுகளைப் பெற்று ரசிகர்களின் அங்கீகாரம் பெற்றவர். மக்களவைத் தேர்தலில் தனது வெற்றியின் மூலம் அரசியலிலும் தற்போது அங்கீகாரம் பெற்றுள்ளார்.


மேற்கு வங்க மாநிலம் ஆசன்சோல் மக்களவைத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் இவர் போட்டியிட்டார். இவர் பாஜக வேட்பாளர் சுரேந்திரஜீத் சிங்கை விட 59,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சத்ருகன் 6,05,645 வாக்குகளைப் பெற்றார்.


இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மனோஜ் திவாரி


போஜ்புரி சூப்பர் ஸ்டார் மனோஜ் திவாரி, 3வது முறையாக தொடர்ந்து தனது வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.


தில்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். தனக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கன்னையா குமாரை விட 1,38,778 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். மனோஜ் திவாரி 8,24,451 வாக்குகளைப் பெற்றார்.


வெற்றிக்கு பிறகு பேசிய அவர், என் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தில்லி 7 தொகுதிகளையும் எங்களுக்கு (பாஜக) கொடுத்துள்ளது. தில்லி மக்களுக்காக நாங்கள் உழைப்போம். இது மிகவும் கடினமாக தேர்தல். இது மக்களின் வெற்றி. காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் ஏமாற்றியதால் அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.


ரவி கிஷண்


திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ரவி கிஷண், இம்முறை நடந்த மக்களவைத் தேர்தலில் 1,03,526 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ரவி கிஷண், 5,85,834 வாக்குகளைப் பெற்றார். சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த காஜல் நிஷாத் 4,82,308 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.


சுரேஷ் கோபி


தேர்தலில் வென்ற பிரபலங்களின் பட்டியலில் இணைந்துள்ளார் கேரள நடிகர் சுரேஷ் கோபி. அதுவும் கேரளத்தில் முதல் பாஜக எம்.பி. என்ற வரலாற்று சாதனையுடன் வென்றார்.


கேரள மாநிலம் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி, இடதுசாரி வேட்பாளரை விட 74,686 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுனில் குமார் 3,37,652 வாக்குகளைப் பெற்றார். சுரேஷ் கோபி, 4,12,338 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.


2016 முதல் 2022 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பெங்காலி நட்சத்திரங்கள்


பெங்காலி திரைப்படத் துறையில் இருந்து நடிகர் தேவ் அதிகாரி, ஹிரன் சாட்டர்ஜி, லாக்கெட் சாட்டர்ஜி, ரச்னா பானர்ஜி, ஜுன் மலியா மற்றும் சதப்தி ராய் ஆகியோர் மக்களவைத் தேர்தல் மூலம் அரசியலில் அறிமுகமாகினர்.


போஜ்புரி நடிகர் பவன் சிங், பிகார் மாநிலம் காரகட் தொகுதியில் போட்டியிட்டார். எனினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராஜாராம் சிங்கால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.


வெற்றியோ, தோல்வியோ சினிமா துறையிலிருந்து அவர்கள் அரசியலில் கால் பதித்துவிட்டனர் என்பதை இந்தத் தேர்தல் நிரூபிக்கிறது.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.