Showing posts with label world. Show all posts





அகமதாபாத்: குஜராத்தில் பல்கலைக் கழக விடுதியில் தொழுகை நடத்திய வௌிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அகமதாபாத்தில் குஜராத் அரசு பல்கலைக் கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், இலங்கை உள்பட பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்களில் 75 சதவீதம் பேர் பல்கலைக் கழக விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த வௌிநாட்டு மாணவர்கள் ரமலான் நோன்பையொட்டி நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விடுதி வளாகத்துக்குள் நுழைந்த 25 பேர் அடங்கிய குழுவினர் தொழுகை செய்து கொண்டிருந்த மாணவர்களை தடுத்து, மசூதிக்கு சென்று தொழுகை நடத்துமாறு கூறினார்.

தொடர்நது வௌிநாட்டு மாணவர்கள் மீது கற்களை வீசி அந்த குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த இலங்கை மற்றும் தஜிகிஸ்தானை சேர்ந்த 2 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



 இத்தனை நாள் காத்திருந்து ரமலான் நோன்பு ஆரம்பிக்கும் நாளன்று குடியுரிமைச் சட்ட அமலாக்கம் என்பது எவ்வளவு கொடிய வன்மமான மனத்தின் வெளிப்பாடு இது

*புண்ணிய தேசத்தின் ஞானிகளும், ஞானமும் இவர்களுக்கு இதைத் தான் கற்றுக் கொடுத்திருக்கா?*
பாஜக இந்த தேசத்தின் அவமானச் சின்னங்கள்.🔥🔥🔥🔥🔥இத்தனைநாளா ரமலான் வாழ்த்து சொன்னது சாதாரணம். இந்த ரமலான் வாழ்த்து நாங்க சொல்றது வேறலெவல்.
வெறித்தனமா இருக்கும்


#Bangalore. 

பெங்களரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், வாகனங்கள் கழுவுவதற்கும் குடிநீரைப் பயன்படுத்தினால், ரூ 5,000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின்படி, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும், கட்டுமானப் பணிகளுக்கும், வாகனங்களை சுத்தம் செய்யவும், மற்றும் இதர பொழுதுபோக்கு விஷயங்களுக்கும் மறு-சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அனைவரும் கூடுமானவரை குடிநீரை சேமிக்கும்படியும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 33 நீர் தொட்டிகளில் சுமார் 130 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் கிடைக்கிறது. இதைத்தவிர, தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் தினமும் 60 கோடி லிட்டர் அளவிலான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருக்கிறது. இவையே, குடிநீர் தவிர இதர பணிகளுக்கு போதுமானதாக இருக்கும்,” என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறினார்.

திங்கள்கிழமை பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் ஒரு மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதன்மூலம் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களுக்குத் தேவையான மறு-சுத்திகரிக்கப்பட்ட நீரை வாங்கிக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

 


அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்கு பறக்க முற்பட்ட விமானத்தின் ஒரு டயர் கழன்றதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி லாஸ் ஏன்ஜல்ஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.


 பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. அந்த கட்டத்தில் மேலும் சில உணவகங்கள், துணிக்கடைகள் செயல்பட்டு உள்ளன.


35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கித் தவித்த 75 பேரை மீட்டனர். அதில் 42 பேர் மயக்க நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 22 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.


 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் சற்று முன் காலமானார்.


சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சற்றுமுன்னர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




தாய் மடி தேடி, தாயகம் நோக்கி புறப்பட்டார் சாந்தன்.


உயிரற்ற உடலாக சிறப்பு முகாமில் இருந்து நிரந்தர விடுதலை பெற்றார் சாந்தன். 


உயிரோடு வந்தவனை உயிரற்ற பிணமாக தாயகம் அனுப்புகிறது தமிழகம்.


நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது...

 


கடலில் வீசிய தங்கத்தை தேடும் பணி தோல்வி! 


இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டு வேதாளை கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தேடிய பணியை கடலோர காவல் படையினர், தங்கம் கிடைக்காததால் நிறுத்தவுள்ளனர். 


 "இனப்படுகொலைக்கு நான் இனி உடந்தையாக இருக்க மாட்டேன்"

எனக்கத்தியபடி... அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இளைஞர் #AaronBushnell வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு முன் தீக்குளித்து மரணம்.

 


தமிழில் வெளியான தளபதி, ரோஜா, இருவர், உயிரே, ராவணன், துப்பாக்கி உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ் சிவனுக்கு Pierre Angenieux என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 


இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் போக்குவரத்து ஒழுங்கை சரிசெய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

 


தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின உரிமையியல் நீதிபதியாக திருமிகு. ஸ்ரீபதி அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவுமளிக்கிறது. 


பல தடைகளைக் கடந்து, கல்வியின் துணையோடு கடின உழைப்பால் சாதித்திருக்கும் அவர், தந்தை பெரியார் இட்டுச்சென்ற சமூகநீதிப் பாதையில் மற்றுமொரு மைல்கல்லாக இருப்பார். 


 


சரியான முகவரியினைச் சொல்வதற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என பெரியவர் ஒருவர் எழுதி வைத்துள்ள விளம்பரத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

 


காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுத்து வரும் தாக்குதல்களால் பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசியத் தேவைகளுக்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் காஸா மக்களின் வாழ்க்கையில் ஒரு இளம் விஞ்ஞானி ஒளியேற்றியிருக்கிறார். 

15 வயதான ஹுசாம் அல் - அத்தார் (Hossam Al-Atta) காஸாவின் நியூட்டன் என செல்லப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார். 

தாக்குதல்களால் நிலைகுலைந்திருக்கும் காஸாவில் கிடைத்த பொருட்களைக் கொண்டு இச்சிறுவன் மின்சாரம் தயாரிக்கிறார். 

பாலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்து, முகாமிட்டிருக்கும் இடங்களில் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழிவகைகளை இச்சிறுவன் செய்துகொடுத்துள்ளார். 

''போரினால் மின்சாரம் இல்லாமல் இருந்த இடத்தை ஔிமயமாக்க விரும்பினேன். சந்தைக்கு சென்று டைனமோ (Dynamo) வாங்கினேன். டைனமோவை சுழற்றும் போது அது மின்சாரத்தை உருவாக்கும். எனவே, அதனை கூரை மேல் வைத்தேன். Blade Fan ஒன்றை வாங்கி அதன் மேல் இணைத்தேன். இரவிலோ பகலிலோ எப்போதும் காற்று வீசும். அதனால் எந்நேரத்திலும் மின்சாரம் கிடைக்கும். மின்கலங்கள் (Batteries) இருந்தால் மின்சாரத்தை சேமிக்கலாம் என நினைத்தேன். எனது யோசனை பயனளித்தது. எனது சகோதரனுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். சில நேரங்களில் அவர்கள் கண் விழிக்கையில், அறை இருட்டாக இருக்கும். இப்போது அவர்கள் எப்போது கண் விழித்தாலும் வௌிச்சம் இருக்கும். மீண்டும் உறங்கி விடுவார்கள். அவர்கள் இனி பயப்பட மாட்டார்கள். எங்களிடம் போர்வைகள் இல்லை. தரையில் தான் படுக்கிறோம். நாங்கள் வடக்கில் இருந்து ரஃபா நோக்கி நடந்துகொண்டிருக்கிறோம். எங்களிடம் உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறொன்றுமில்லை. இரவில் விமானங்களின் சத்தம் குழந்தைகளை பயமுறுத்துகிறது. நாங்களும் பயத்தில் தான் வாழ்கிறோம். அரபு நாடுகளிடமும் ஏனைய உலக நாடுகளிடமும் இந்த போரை முடிவிற்கு கொண்டு வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,'' 

என அச்சிறுவன் அல்-ஜசீரா செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் காஸாவை இருளில் மூழ்கடித்திருக்கும் வேளையில், இந்தச் சிறுவனின் முயற்சி கும்மிருட்டில் பிரகாசமாகத் தெரிகிறது. 

இணையதளங்களிலும், அல்-ஜசீரா போன்ற பெரிய ஊடகங்களிலும் இவரது வெளிச்சம் வலம் வருகிறது. 

நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என அச்சிறுவன் கூறியுள்ளார்.

தனது மகன் சிறுவயதிலிருந்தே திறமையானவன் எனவும், இந்த சமுதாயத்திற்கு உதவும் பல கண்டுபிடிப்புகளை அவன் நிகழ்த்துவான் எனவும் அவனது தாயார் தெரிவித்துள்ளார். 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.