Showing posts with label world. Show all posts

 பிரிட்டன் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் பதவிகளிலிருந்து விலகுவதாக கியர் ஸ்டாமர் அறிவித்துள்ளார்.


10 டவுனிங் தெருவில் தனது முடிவை விளக்கிய அவர், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்தத் தான் மிகவும் பொருத்தமானவரா என்பது குறித்துத் தனது கட்சி கேள்வி எழுப்பி வருவதாகக் கூறினார்.


இந்தக் கேள்விக்குத் தனது கட்சி அளித்துள்ள பதிலை தான் "கேட்டிருப்பதாகவும்", "அந்தப் பதிலை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும்" அவர் கூறியுள்ளார்.


தான் எடுத்த ஒவ்வொரு முடிவும், "தான் நேசிக்கும் தனது நாட்டை முதன்மைப்படுத்துவது குறித்தே அமைந்திருந்ததாக" அவர் கூறியுள்ளார்.


தான் பதவி விலகும் முடிவைத் தெரிவிப்பதற்காக, திங்கள்கிழமை காலையில் அரசரிடம் பேசியதாக ஸ்டாமர் கூறினார்.



விளம்பரம்


தலைமைப் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 9-ஆம் தேதி தொடங்கி, கோடை விடுமுறைக்குள் அப்பணிகள் நிறைவடையும் வகையிலான கால அட்டவணையை வகுக்குமாறு அவர் தொழிலாளர் கட்சியின் தேசிய செயற்குழுவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


அதாவது, செப்டம்பரில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் முன்பே ஒரு புதிய தலைவர் பதவியேற்பார் என்பதாகும்.


அதுவரை, தான் பிரதமர் பதவியில் நீடிப்பேன் என அவர் கூறியுள்ளார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

 வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா ஏ vs இலங்கை ஏ

சூர்யவன்ஷியின் சாதனை ஆட்டத்திற்குப் பின் சஞ்சய் மஞ்சரேக்கர் ட்ரோல் செய்யப்படுவதுஏன்?

தாங்கள் சகோதரிகள் என அறிந்த பிறகு தங்களைப் பிரிக்க முடியாது என நடாஷா, ஜெம்மா மற்றும் ஹெலன் தெரிவிக்கின்றனர். 

ஒரே விந்து கொடையாளருக்குப் பிறந்த 3 பெண்கள் பிற்காலத்தில் சந்தித்துக் கொண்டது எப்படி?

வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா - இலங்கை, லிஸ்ட் ஏ கிரிக்கெட் 

11 பந்துகளில் அரைசதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி: இலங்கை ஏ அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட ஆரம்பகட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடரும்.

'நேர்மறையான முன்னேற்றம்'; அமெரிக்க-இரான் பேச்சுவார்த்தையின் முதல் சுற்று குறித்து மத்தியஸ்தர்கள்

End of அதிகம் படிக்கப்பட்டது

ஸ்டாமர் இந்த முடிவை எடுத்தது ஏன்?

கியர் ஸ்டாமர் 

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கால அட்டவணையை வகுக்குமாறு கியர் ஸ்டாமர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரான ஆண்டி பர்ன்ஹாமிடம் தலைமையை ஒப்படைப்பதற்கான திட்டத்தை அறிவிக்குமாறு, கியர் ஸ்டாமரை வலியுறுத்தும் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


ஆனால், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வேன் என்றும், "பின்வாங்கப் போவதில்லை" என்றும் பிரதமர் உறுதியாகக் கூறினார்.


தொழிலாளர் கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டி இருக்குமா என்பது தெளிவாக இல்லை.


உதாரணமாக, ஜூலை 9-ஆம் தேதி போட்டி தொடங்கும்போது ஆண்டி பர்ன்ஹாம் போட்டியின்றி வெற்றி பெற்றால், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பிறகு அவர் தொழிலாளர் கட்சியின் தலைவராகலாம்.


கியர் ஸ்டாமர் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; பொதுத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டு ஜூலை 5 அன்று பிரதமரானார்.


அவர் பதவி விலகும் முடிவால், 2016-ம் ஆண்டிலிருந்து பிரிட்டன் விரைவில் தனது ஏழாவது பிரதமரைக் காணவிருக்கிறது.


பதவி விலகலை அறிவிப்பதற்கு முன்பாக என்ன கூறினார்?

டவுனிங் ஸ்ட்ரீட்டில் தனது மனைவி விக்டோரியாவை ஆரத்தழுவிய ஸ்டாமர் பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,டவுனிங் ஸ்ட்ரீட்டில் தனது மனைவி விக்டோரியாவை ஆரத்தழுவிய ஸ்டாமர்

பதவி விலகலை அறிவிப்பதற்கு முன், "அரசியல், நிதி மற்றும் தார்மீக ரீதியாக முற்றிலும் சீர்குலைந்திருந்த" தொழிலாளர் கட்சிக்கே தான் பொறுப்பேற்றதாக ஸ்டாமர் கூறினார்.


"இந்தக் கட்சி முடிந்துவிட்டது" என்று தன்னிடம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டதாகவும், ஆனால் அந்தக் கருத்து தவறானது என்பதைத் தாம் நிரூபித்ததாகவும் அவர் கூறினார்.


"யூத வெறுப்பு எனும் நஞ்சை அகற்றுவதன்" மூலம் தான் கட்சியை மாற்றியமைத்ததாக அவர் கூறினார்.


"இது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தது," என்று அவர் மேலும் கூறினார்.


அதிகாரப் பரிமாற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்யத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாகவும், தனக்கு அடுத்து பதவிக்கு வருபவருக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாகவும் கியர் ஸ்டாமர் கூறினார்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வலிமையான மற்றும் நியாயமான ஒரு பிரிட்டனுக்கே தான் பொறுப்பேற்கவிருக்கிறோம் என்பது தனக்குத் தெரியும் என்று அவர் கூறினார்.


கடந்த ஆறு ஆண்டுகளாகத் தன்னுடன் இருந்து வரும் நண்பர்கள் மற்றும் சகாக்களுக்கும், பிரதமர் அலுவலக ஊழியர்கள் மற்றும் "சிறப்பான குடிமைப் பணியினருக்கும்" ஸ்டாமர் நன்றி தெரிவித்தார்.


கடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சியின் மோசமான செயல்பாடே கியர் ஸ்டாரின் பதவி விலகலுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது; ஆனால், இதைத் தவிர ஸ்டாமர் மீதான அழுத்தத்தை அதிகரித்த வேறு பல காரணங்களும் இருந்தன.


நிதி சார்ந்த சவால்கள்

ஸ்டாமரின் செல்வாக்கு மதிப்பீடுகள், சில சமயங்களில் பிரிட்டன் பிரதமர்களுக்கான மிகக் குறைந்த அளவை நெருங்கும் அளவுக்குச் சரிந்துள்ளன.பட மூலாதாரம்,Downing Street / EPA

படக்குறிப்பு,ஸ்டாமரின் செல்வாக்கு மதிப்பீடுகள், சில சமயங்களில் பிரிட்டன் பிரதமர்களுக்கான மிகக் குறைந்த அளவை நெருங்கும் அளவுக்குச் சரிந்துள்ளன.

கியர் ஸ்டாமரின் பதவிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே சிக்கல்களுக்கான அறிகுறிகள் தென்பட்டன.


பிரதமராகப் பதவியேற்ற மூன்று மாதங்களிலேயே, அப்பதவியை ஏற்ற பிறகு தனக்குக் கிடைத்த பரிசுகள் மற்றும் உபசரிப்புகளுக்கான (டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சிக்குரிய டிக்கெட்டுகள் உட்பட) 6,000 பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்பிலான தொகையை அவர் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது.


எந்த விதிகளும் மீறப்படவில்லை என்றாலும், அமைச்சர்கள் இலவசங்களைப் பெற்றுக்கொண்ட செய்தி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது; குறிப்பாக, பொருளாதாரம் மந்தமாக இருந்த சூழலிலும், சீர்திருத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் அரசின் திறன் குறித்த கேள்விகள் எழுந்திருந்த நிலையிலும் இச்செய்தி அதிருப்தியை உருவாக்கியது.


பசுமை முதலீட்டுக்கான வாக்குறுதிகளைக் கைவிட்டது, நலத்திட்ட உதவிகளில் மாற்றங்கள் மற்றும் பரம்பரை சொத்து வரி தொடர்பான கொள்கை மாற்றங்கள் உள்ளிட்ட பல கொள்கை நிலைப்பாட்டு மாற்றங்களுக்காக கியர் ஸ்டாமர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.


பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டவிரோதமாகக் கடந்து வரும் குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அவர் வலதுசாரிகளாலும் விமர்சிக்கப்பட்டார்.


கியர் ஸ்டாமர் மக்களிடையே மிகவும் செல்வாக்கற்றவராக மாறிவிட்டதை கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டின. சில சமயங்களில், அவரது செல்வாக்கு விகிதங்கள் பிரிட்டிஷ் பிரதமர்களுக்கு இதுவரை பதிவான மிகக் குறைந்த அளவுகளுக்கு மிக அருகில் சரிந்திருந்தன.


எப்ஸ்டீன் மற்றும் தூதர்

லார்ட் மண்டல்சன் (இடதுபுறம்) மற்றும் எப்ஸ்டீன்பட மூலாதாரம்,HOUSE OVERSIGHT COMMITTEE

படக்குறிப்பு,லார்ட் மண்டல்சன் (இடதுபுறம்) மற்றும் எப்ஸ்டீன்

அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதரான லார்ட் பீட்டர் மண்டல்சனின் பெயர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஆவணங்களில் இடம்பெற்றது, பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரின் பதவிக்காலத்தில் எழுந்த மிகப்பெரிய சர்ச்சைகளில் ஒன்றாகும்.


டோனி பிளேரின் பதவிக்காலத்தில் சிறந்த அரசியல் வியூகவாதியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட லார்ட் மண்டல்சன், முன்னதாக சர்ச்சைகளுக்கு மத்தியில் இருமுறை தொழிலாளர் கட்சி அரசாங்கங்களிலிருந்து விலகியிருந்தார்.


சிறார் ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட பின்னரும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் நட்பைத் தொடர்ந்தவர் என்பது தெரிந்திருந்தும், பிரிட்டனின் மிக முக்கியமான கூட்டாளியான அமெரிக்காவில் தனது பிரதிநிதியாக லார்ட் மண்டல்சனை கியர் ஸ்டாமர் நியமித்தார்.


ஜனவரி மாதம் அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட ஆவணங்கள், எப்ஸ்டீன் மற்றும் லார்ட் மண்டல்சன் ஆகியோருக்கு இடையிலான தொடர்புகள் குறித்த புதிய விவரங்களை வெளிப்படுத்தின.


லார்ட் மண்டல்சன், எப்ஸ்டீனுடன் அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம் என்பதைக் குறிக்கும் ஆவணங்கள் அல்லது தகவல்கள் குறித்துக் காவல்துறை விசாரணை நடத்த இது வழிவகுத்தது.


லார்ட் மண்டல்சன் அந்த மின்னஞ்சல்கள் குறித்து பகிரங்கமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை; இருப்பினும், தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், நிதி ஆதாயம் ஏதும் பெறும் நோக்கம் தமக்கு இருக்கவில்லை என்றும் அவர் கூறி வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


செப்டம்பர் மாதத்தில் ஸ்டாமர் லார்ட் மண்டல்சனை அவரது பதவியிலிருந்து நீக்கினார்; ஆனால், இந்த விவகாரம் முழுவதுமே பிரதமரின் முடிவெடுக்கும் திறன் குறித்துக் கேள்விகளை எழுப்பியதுடன், ஒரு நிலையான மற்றும் திறமையான தலைவராகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் பலவீனப்படுத்தியது.


டிரம்புடனான உறவு

ஸ்டாமர் பதவி விலகுவார் என்று டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஸ்டாமர் பதவி விலகுவார் என்று டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்

லார்ட் பீட்டர் மண்டல்சனை அமெரிக்காவுக்கான பிரிட்டனின் தூதராக நியமித்ததற்கு கியர் ஸ்டாமர் கொண்டிருந்த முக்கிய காரணங்களில் ஒன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நெருக்கமான உறவை அவரால் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஆகும்.


அமெரிக்க மற்றும் பிரிட்டன் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் ஆரம்பத்தில் சுமூகமாக இருந்தபோதிலும், இரானுக்கு எதிரான போரில் இணைய கியர் முதலில் மறுத்தபோது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான 'சிறப்பு உறவு' என்று அழைக்கப்படும் அந்த உறவு படிப்படியாகச் சிதைவடைந்தது.


பின்னர் பிரதமர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இரானின் ஏவுகணைத் தளங்கள் மீது "தற்காப்புத்" தாக்குதல்களை நடத்துவதற்காக அமெரிக்க ராணுவம் பிரிட்டிஷ் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்தார்.


ஆனால், இந்த நிலைப்பாடு கூட டிரம்புக்குத் திருப்தி அளிக்கவில்லை. அவர் கியர் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தினார்; அதேவேளையில், மோதலில் எந்தவிதமான ஈடுபாட்டையும் அவர் எதிர்த்தது பாரம்பரியத் தொழிலாளர் கட்சி ஆதரவாளர்களையும் கோபமடையச் செய்தது.


பிரதமரின் சில விமர்சகர்களுக்கு, இந்த முடிவு அவரது தலைமைப் பாணியின் அடையாளமாக மாறியது. ஸ்டாமர் அடிக்கடி பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்துவதால், அது இறுதியில் இரு தரப்பினரையும் கோபப்படுத்துகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.


உண்மையில், கியர் பதவி விலகுவதற்கான சாத்தியக்கூறை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பே உணர்ந்திருந்ததாகத் தெரிகிறது.


ஞாயிற்றுக்கிழமையன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில், கியர் "பிரதமர் பதவியிலிருந்து விலகுவார்" என்று கூறிய டிரம்ப், குடியேற்றம் மற்றும் எரிசக்தி கொள்கை விவகாரங்களில் அவர் "மிக மோசமாகத் தோல்வியடைந்துவிட்டதாக" குற்றம் சாட்டினார்.


"அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!" என்று டிரம்ப் தனது பதிவை நிறைவு செய்தார்.


விபத்து

பர்சான் எரிவாயு ஆலையில் விபத்து
கத்தார் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் உள்ளூர் எரிவாயு விநியோக ஆலையில், செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த விபத்து நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்பொழுது தீயைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களின் முழு விபரம் இன்னும் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை.

உலகில் இயற்கை எரிவாயு


முக்கிய LNG சுத்திகரிப்பு வளாகமான ராஸ் லஃப்பானில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்திற்குப் பிறகு ஆலையில் பணியாற்றிய 14 ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கத்தார் நாட்டு உள்துறை அமைச்சகம் எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த உள் வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 


www.ceylon24.comமாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள்மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்." - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

#CMVijay | #MKStalin | #HBDVijay | #HBDCMJosephVijay

 


இரான் புரட்சிகர காவல்படையின் கடற்படைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், "ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்த அறிவிப்பில் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களை சுட்டிக்காட்டியுள்ள இரான் ராணுவம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ச்சியாக போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறிவருவதாக குற்றம் சாட்டியுள்ளது.


நீரிணையை நோக்கி வரும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ஒன்றில்,"ஹோர்மூஸ் நீரிணையை நெருங்க வேண்டாம். மீறினால் உங்களின் பாதுகாப்பு சமசரம் செய்துகொள்ளப்படும்" என கூறப்பட்டுள்ளது.


வான்ஸ் கூறுவது என்ன?

இரானின் கூற்றிலிருந்து முரண்பட்டாலும், ஹோர்மூஸ் நீரிணை முழுமையாகத் திறந்தே இருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.


"இரானியர்கள் ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் நாங்கள் காணவில்லை," என்று வான்ஸ் கூறினார்.


"உண்மையில், நேற்று ஹோர்மூஸ் நீரிணை வழியாக 16 மில்லியன் பீப்பாய் எண்ணெய் வெளியே கொண்டுவரப்பட்டது," என்று கூறிய வான்ஸ், "எனவே, அந்த கப்பல்கள் நகர்வதை நீங்கள் பார்க்க முடிகிறது," என்றும் குறிப்பிட்டார்.


நாளை பேச்சுவார்த்தை

அமெரிக்க மற்றும் இரானியப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்த்தைகள், ஜூன் 21 அன்று சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நடைபெறும் என பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரானிய இராணுவம் அறிவித்ததைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாட்டினரும் இதில் கலந்துகொள்வார்கள் என்றும், பாகிஸ்தான் மத்தியஸ்தராக இந்தச் செயல்முறைக்கு உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.


14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் "எட்டப்பட்ட புரிதல்களை முன்னெடுத்துச் செல்வதே" இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கம் என்றும் அது மேலும் கூறுகிறது.


துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கலந்துகொள்ளவிருந்த சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகள், இந்த வாரத் தொடக்கத்தில் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் "எளிமையானதாகவோ அல்லது கணிக்கக்கூடியதாகவோ" இல்லை என்று வெள்ளை மாளிகை கூறியிருந்தது.


வெள்ளை மாளிகை தனது அறிக்கையை வெளியிடுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டதாக ஹெஸ்போலாவுடன் தொடர்புடைய லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


பேச்சுவார்த்தை குறித்து இரான் கூறுவது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் தங்கள் நாடு பங்கேற்பதன் நோக்கம், "எதிர் தரப்பு தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவதே" ஆகும் என்று இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க மற்றும் இரான் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் (Bürgenstock) நகரில் நாளை நடைபெறும் என்று மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் முன்னதாகத் தெரிவித்திருந்தது.


இந்த வாரத் தொடக்கத்தில் கையெழுத்தான அமெரிக்கா-இரான் இடையிலான 14 அம்ச ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பாகாய், "அந்த ஒப்பந்தத்தின் 1, 4, 5, 10 மற்றும் 11-வது பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் செயல்படுத்தப்படத் தொடங்கி, தொடர்ந்து நிறைவேற்றப்படும்போது மட்டுமே இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்" என்று கூறினார்.


தற்போதைய சூழல் அவ்வாறு இல்லை என்று கூறிய அவர், வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் "வலியுறுத்தும்" என்றும் தெரிவித்தார்.


லெபனானில் என்ன நடக்கிறது?

இஸ்ரேலுக்கும் ஹெஸ்போலாவுக்கும் இடையே புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதாக இரான் அறிவித்துள்ளது.


தொடர்ச்சியான மோதல்கள், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தைப் பாதிக்கும் என்ற கவலைகளைத் தொடர்ந்து, இஸ்ரேலும் ஹெஸ்போலாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஒரு அமெரிக்க அதிகாரி நேற்று தெரிவித்தார்.


போர் நிறுத்தம் அமலில் உள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியது, ஆனால் பின்னர் ஒரு செய்தித் தொடர்பாளர், தங்கள் படைகள் "உடனடி அச்சுறுத்தல்களை அகற்றும் பணியைத் தொடரும்" (லெபனானில்) என்று கூறினார்.


வெள்ளிக்கிழமை பிற்பகல் அமெரிக்க அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும், லெபனானுக்குள் சுதந்திரமாக செயல்படுவதற்கான இஸ்ரேலிய நோக்கத்தை நிராகரிப்பதாகவும் ஒரு ஹெஸ்போலா அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.


இன்று முன்னதாக, லெபனானில் உள்ள நபாத்தியா மாவட்டத்தில் 16 பேரும், அண்டை மாவட்டமான சைடாவில் ஏழு பேரும் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


அப்பகுதியில் இஸ்ரேலியப் படைகள் மீது ஹெஸ்போலா குழு 50-க்கும் மேற்பட்ட எறிகணைகளை வீசியதைத் தொடர்ந்து, "டஜன் கணக்கான" ஹெஸ்போலா இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.


இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளும் (IDF) ஹெஸ்போலாவும் இன்று பரஸ்பரம் போர் நிறுத்தத்தை மீறியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளன.

கொங்கோ, உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு 200யை கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.


இப்புதிய வகை தொற்றுப் பாதிப்பில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் கொங்கோவின் கிழக்கு மாகாணமான இதுரியிலேயே பதிவாகியுள்ளன. மேலும், இத்தொற்று அண்டை நாடான உகாண்டாவுக்கும் பரவி, அங்கு 19 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.


இத்தொற்று பாதிப்பு கடந்த வாரத்தைவிட தற்போது 38 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதுவரை 894 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முந்தைய பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஆரம்பக் கட்டத்திலேயே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய அலையாக இது பதிவாகியுள்ளது.


தற்போது பரவி வரும் எபோலா பாதிப்பு ‘பண்டிபுக்யோ’ எனும் அரிய வகையால் ஏற்பட்டுள்ளது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான மருந்துகளோ இன்னும் கண்டறியப்படவில்லை. அதேபோல் தொடர் உள்நாட்டு மோதல்கள், அடர்ந்த காடுகள் நிறைந்த புவியியல் அமைப்பு காரணமாக, நோய் தடுப்புப் பணிகள் பெரும் சவாலாக மாறியுள்ளன.


இச்சூழலை எதிா்கொள்ளப் போதிய நிதியும், மருத்துவப் பணியாளர்களும் இல்லாதது நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது. இந்த எபோலா ஒழிப்புப் பணிகளுக்காக உலக நாடுகளால் உறுதியளிக்கப்பட்ட 90 கோடி டொலர் நிதியில், இதுவரை 9 கோடி டொலர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புதன்கிழமை அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமானது ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதைக் குறிக்கிறது.


அதே வேளையில், மற்ற அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் தொடரும்.


பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நீண்ட செய்தியாளர் சந்திப்பில், இதனைத் தன்னுடைய நாட்டுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகக் குறிப்பிட்டார்.


புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புதன்கிழமை அன்று மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டு, தற்போது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக இரு நாடுகளும் பின்னர் உறுதிப்படுத்தின.


இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல்களின் படி, இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கும் டிரம்பின் இலக்கை அடைவதற்கான ஒரு விரிவான மற்றும் இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.


,ஒப்பந்தத்திற்குப் பதிலாக இரானுக்கு அமெரிக்கா எந்தப் பணமும் தராது என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வாங்கவோ, உருவாக்கவோ, அல்லது உற்பத்தி செய்யவோ முடியாது என்பதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.


ஆனால், பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகளால் வாசிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூல உரையானது, ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட அந்தக் கூற்றுக்கு இணையானதாக இல்லை என தெரிகிறது.


அதற்குப் பதிலாக, போர்நிறுத்தத்தை நீட்டிக்கும் இந்த ஒப்பந்தம், அடுத்த 60 நாட்களுக்குள் நிரந்தர அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இரு எதிரி நாடுகளுக்கும் இடையிலான முயற்சிகளைத் துரிதப்படுத்துவதாகத் தோன்றுகிறது.


இரானுக்கான 300 பில்லியன் டாலர் திட்டம் என்பது என்ன?

இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சிபட மூலாதாரம்,Iranian Foreign Ministry / Handout/Anadolu via Getty Images

படக்குறிப்பு,இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஜூன் 16 அன்று தெஹ்ரானில் இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து தூதர்கள் மற்றும் ராஜீய பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

தற்போது, இந்த ஒப்பந்தத்தின் உரை, சர்வதேச அணுசக்தி முகமையின் மேற்பார்வையின் கீழ் இரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை குறைந்த சுத்திகரிக்கப்பட்ட தரத்துக்கு குறைக்கும் என்பதை மட்டுமே உறுதி செய்கிறது.


புதன்கிழமை, மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் இதனை இரானின் "ஒரு குறிப்பிடத்தக்க சலுகை" என்று குறிப்பிட்டார்.


ஆனால் இதைச் செய்வதற்கான வழிமுறை மற்றும் இதனுடன் தொடர்புடைய காலக்கெடு போன்ற தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.


இந்த விவகாரங்களில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான முயற்சிகள், அடுத்த 60 நாட்கள் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் மேற்கொள்ளப்படும்.


இந்த பேச்சுவார்த்தைகள், வெள்ளிக்கிழமை முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்த கையெழுத்துக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.


இரானுக்கு அமெரிக்கா எந்தப் பணமும் தராது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


2016 ஆம் ஆண்டில் ஒபாமா நிர்வாகத்தால் இரானுக்கு வழங்கப்பட்ட 1.7 பில்லியன் டாலர் தொகையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்ததால், இது அவருக்கு ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது.


தனது அரசியல் பாரம்பரியத்தை மனதில் வைத்து, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒப்பந்தத்தை விட தனது இரான் ஒப்பந்தம் சிறந்தது என்பதைக் காட்ட டிரம்ப் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.


இரானுக்கு எதிராகத் தான் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை நிரூபிக்க, பணம் கொடுக்கும் இந்த விவகாரத்தையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.


ஆனால் ஒப்பந்த உரையின் படி, இரானை மறுசீரமைக்க உதவுவதற்காக குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான இறுதி மற்றும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்க, பிராந்திய கூட்டாளிகளுடன் அமெரிக்கா ஒத்துழைக்கும்.


டிரம்பின் ஒப்பந்தம் குறித்து ஏன் கேள்விகள் எழுப்பப்படுகின்றன?

இந்த ஒப்பந்தம் இரானுக்கு ஒரு டாலர் கூட வழங்குமாறு அமெரிக்காவைக் கட்டாயப்படுத்தவில்லை என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.


ஆனால் ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி மிகவும் தெளிவற்றதாக உள்ளது, மேலும் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டால், எதிர்காலத்தில் அமெரிக்கா இரானுக்கு சில தொகையை வழங்குவதற்கான வாய்ப்பு இதில் உள்ளது.


இது டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோருக்கு ஒரு பெரிய அரசியல் பிரச்னையாக மாறக்கூடும்.


எந்தவொரு புதிய "முடிவற்ற போர்களையும்" தொடங்க மாட்டோம் என்று அவர்கள் இருவரும் தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்திருந்தனர்.


மற்றொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடும் கொள்கையைக் கொண்ட 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' ஆதரவாளர்களும் இந்த ஏற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும்.


இரானுக்கான எந்தவொரு பொருளாதார உதவியும் அமெரிக்காவிலிருந்து நேரடியாக வராது என்றாலும் இந்த எதிர்ப்பு எழலாம்.


டிரம்பின் சொந்த குடியரசுக் கட்சிக்குள்ளும் கூட, இந்த ஒப்பந்தத்தின் மீதான விமர்சனங்கள் வேகமாக அதிகரித்துள்ளன.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த ஒப்பந்தம் மற்றும் இதனுடன் தொடர்புடைய நிச்சயமற்ற தன்மைகள் குறித்து டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து விரிவான தகவல்களையும் விளக்கங்களையும் கோரி வருகின்றனர்.


குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரும் இந்த ஒப்பந்தம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர், மேலும் முன்னணி குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் ஒருவர் இதை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். டிரம்ப் இரானுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளார், ஆனால் அதற்குப் பதிலாகப் போதிய பலனைப் பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


பதவி விலகும் லூசியானா செனட் உறுப்பினர் பில் காசிடி, டிரம்ப் ஆதரித்த எதிர்ப்பாளருக்கு எதிரான முதன்மைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.


"இரான் அதன் அணுசக்தி லட்சியங்களிலிருந்து திறம்பட தடுக்கப்படவில்லை. மேலும், ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது அல்லது அச்சுறுத்துவது போன்ற உத்திகள் வேலை செய்கின்றன என்பதை இரான் கற்றுக்கொண்டுள்ளது, மேலும் எதிர்காலத்தில் இதை இரான் பயன்படுத்திக்கொள்ள முயலும்" என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.


மேலும், "இது பல ஆண்டு காலங்களில் செய்யப்பட்ட மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைத் தவறு" என்றும் அந்த குடியரசுக் கட்சித் தலைவர் கூறியுள்ளார்.


வேறு பல முக்கிய விவகாரங்களுக்கும் இந்த ஒன்றரை பக்க ஒப்பந்தத்தில் மிகக் குறைந்த இடமே ஒதுக்கப்பட்டுள்ளது.


ஹெஸ்பொலாவின் நிதி உதவியை நிறுத்த முடியுமா?

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் உள்ள பகைமை ஒழிப்பு பிரிவு ஹெஸ்பொலா அமைப்பிற்கும் பொருந்தும். 

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹெஸ்பொலா அமைப்புக்கான நிதியுதவியைத் தடுப்பதும் டிரம்ப் நிர்வாகத்தின் ஒரு முக்கிய குறிக்கோள் ஆகும்.

போர் தொடங்கியபோது, இப்பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொலா போன்ற அதன் கூட்டாளிகள் அல்லது பிரதிநிதி குழுக்களுக்கு இரான் நிதியுதவி வழங்குவதைத் தடுப்பதே தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என்று டிரம்ப் கூறியிருந்தார்.


அமெரிக்காவுடன் இணைந்து போரைத் தொடங்கியிருந்த இஸ்ரேலுக்கும் இது ஒரு முக்கிய கவலையாக இருந்தது, மேலும் அது லெபனானில் இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலாவுக்கு எதிராக ஒரு தனி ராணுவ நடவடிக்கையையும் தொடங்கியிருந்தது.


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் உள்ள பகைமை ஒழிப்பு பிரிவு ஹெஸ்பொலா அமைப்புக்கும் பொருந்தும். இருப்பினும், இதைத் தவிர இந்த ஒப்பந்தத்தில் அந்த அமைப்பைப் பற்றி வேறு எந்தக் குறிப்பும் பெரிதாக இல்லை.


அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், ஹெஸ்பொலா மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற பிரதிநிதி குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு இரானுக்கு அழுத்தம் கொடுக்குமா என்பதும் தெளிவாக இல்லை.


புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தின் உரையில் இரானின் ஏவுகணைத் திட்டம் குறித்தும் விரிவாகக் குறிப்பிடப்படவில்லை.


போரின் தொடக்கத்தில் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தங்களது முன்னுரிமைகளாகக் குறிப்பிட்ட முக்கிய விவகாரங்களில் இதுவும் ஒன்றாகும்.


இந்த வாரம் ஜெனீவாவில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், ஒரு இறுதி மற்றும் விரிவான ஒப்பந்தத்துக்கு வழிவகுக்குமா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.


இந்த ஒப்பந்தம், இரு தரப்பினரும் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.


ஆனால் தேவைப்பட்டால் இந்த காலக்கெடுவை நீட்டிக்க முடியும் என்றும் அது கூறுகிறது.


இவ்வளவு குறுகிய காலத்தில் இன்னும் விரிவான மற்றும் நீடித்த ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்பதில் இரு நாடுகளுமே முழு நம்பிக்கையுடன் இல்லை என்பதை இது உணர்த்தக்கூடும்.


ஜி-7 உச்சிமாநாட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, இரானுடன் நீடித்த அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து டிரம்ப் அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.


" 60 நாட்களில் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்குவோம்" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

 


மனநலம் சார்ந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் திருமண மற்றும் விவாகரத்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட அடையாள விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மனைவி மீதான மனநல பாதிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு கணவர் தாக்கல் செய்திருந்த விவாகரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனு ஒன்றை தள்ளுபடி செய்த மதுரை உயர் நீதிமன்ற கிளைவு, 'ஒருவரின் மனநலம் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தனிநபரின் கண்ணியம், தனியுரிமை மற்றும் சமூக வாழ்வில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்' என்றும் சுட்டிக்காட்டியது.


"பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் பெண்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்பது 'மனநலம்' தொடர்பானதாகவே இருக்கும். தீர்ப்பு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வழங்கப்பட்டாலும் கூட, இந்த குற்றச்சாட்டுகள் அவர்களை வாழ்க்கை முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும், எனவே இந்த உத்தரவு மிகச் சிறந்த முன்னெடுப்பு" என வழக்கறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.


அதேசமயம், ஒருவர் விவாகரத்து பெற்றவரை திருமணம் செய்யும்போது அவரது பின்புலம் குறித்தோ அல்லது முந்தைய திருமண உறவு குறித்தோ அறிந்துகொள்ளும் வகையிலும் வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்பதையும் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.


நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ஆர்.ஆர்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய மதுரை உயர் நீதிமன்ற கிளை விவாகரத்து தொடர்பான ஒரு மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்தது.




இந்த வழக்கில், கணவர் தாக்கல் செய்த மனுவில், திருமணத்துக்கு முன்பே மனைவிக்கு ஸ்கிசோஃப்ரேனியா (Schizophrenia - ஒருவித மனநல ஒருங்கின்மை) இருந்ததாகவும், அந்த விவரம் மறைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு அவர் விவாகரத்து கோரியிருந்தார்.


ஆனால் அவரது மனுவை தஞ்சாவூர் குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்.


கணவரது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் போதுமான மருத்துவ ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறிய நீதிமன்றம், 'மருத்துவ பரிந்துரைகள் மற்றும் மருந்துச் சீட்டுகள் மட்டும் ஒருவருக்கு ஸ்கிசோஃப்ரேனியா இருப்பதை நிரூபிக்க போதுமானதல்ல' என்றும் கூறியது.



பெயர்களை வெளியிடுவதால் என்ன பாதிப்பு?


'மனநலக் குறைபாடு குறித்த குற்றச்சாட்டுகள் பின்னர் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டாலும், அதனால் ஏற்படும் சமூக அவப்பெயர் பல ஆண்டுகள் நீடிக்கக்கூடும்' என நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


"திருமண வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், சமூக உறவுகள் மற்றும் தனிநபரின் கண்ணியம் ஆகியவற்றில் இத்தகைய குற்றச்சாட்டுகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்."


"ஒருவரின் பெயருடன் 'மனநல நோயாளி' என்ற முத்திரை இணைக்கப்படுவது அவருடைய வாழ்நாள் முழுவதும் அவரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும் என்பதை பாதிக்கக்கூடும்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற வழக்குகளில் எதிர்காலத்தில்,


கணவன், மனைவி ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்படக் கூடாது.

முகவரி, குடும்ப விவரங்கள் உள்ளிட்ட அடையாளம் காண உதவும் தகவல்கள் நீக்கப்பட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளில் தரப்பினரை "X" மற்றும் "Y" போன்ற குறியீட்டு பெயர்களால் குறிப்பிட வேண்டும்.

மனநலக் குறைபாடு தொடர்பான விவாகரத்து மற்றும் குடும்பநல வழக்குகளில் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய வழக்குகளில் மனுக்கள், உத்தரவுகள், தீர்ப்புகள் உள்ளிட்ட பொதுமக்கள் அணுகக்கூடிய நீதிமன்ற ஆவணங்களில் அடையாள விவரங்கள் வெளியிடப்படக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


"மனநலக் குறைபாடு குறித்த கடுமையான குற்றச்சாட்டுடன் கூடிய திருமணம் சார்ந்த வழக்குகள் அதிகரித்துள்ளதாலும், வழக்கு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் அடையாளம் அவர்களின் வாழ்நாளின் எஞ்சிய நாட்களில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலும், இதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.


இந்த உத்தரவு அனைத்து விவாகரத்து வழக்குகளுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் கூறவில்லை. மனநலக் குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் இடம்பெறும் திருமண மற்றும் குடும்பநல வழக்குகளை மையமாகக் கொண்டே இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


விவாகரத்து வழக்குகள், மதுரை உயர்நீதிமன்ற அமர்வு, பெண்கள், மனநலம் 

படக்குறிப்பு,சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை

ஏன் இந்த உத்தரவு முக்கியமானது?

"இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடுவதற்கு ஏற்கெனவே சட்டத் தடை உள்ளது. ஆனால், மனநலக் குறைபாடு குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெறும் குடும்பநல வழக்குகளில் பெயர்களை மறைக்க வேண்டும் என்ற தெளிவான நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அரிதாகவே உள்ளன. அப்படியிருக்க இதை வரவேற்க வேண்டும்" என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ்.


தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் கையாண்ட ஒரு வழக்கை மேற்கோள் காட்டிய அவர், "சில வருடங்களுக்கு முந்தைய அந்த விவாகரத்து வழக்கில், பெண் தரப்பில் நான் வாதாடினேன். தனது பெயர் கொண்ட தீர்ப்பு அல்லது உத்தரவு நகல்கள், விவாகரத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் பொதுவெளியில் இருப்பது தனது எதிர்கால வாழ்க்கையை, வேலைவாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என அவர் கருதியதால், அவரது அடையாளத்தை வழக்கு விசாரணையில் வெளிப்படுத்த வேண்டாம் என நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்தோம். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது" என்கிறார்.


இங்கு ஒருவர் மீது, குறிப்பாக திருமணம் சார்ந்த வழக்குகளில் எளிதாக குற்றச்சாட்டுகள் வைத்துவிடலாம், அதுவும் மனநலம் சார்ந்த குற்றச்சாட்டு எனும்போது அது பிற்காலத்தில் 'பொய்' என நிரூபிக்கப்பட்டாலும் கூட, அது அவர்களுக்கு ஒரு களங்கமாகவே இருக்கும் என குறிப்பிடுகிறார் ராஜீவ் ரூஃபஸ்.


'சமூகம் என்னை மனநோயாளியாக பார்க்கிறது'

விவாகரத்து வழக்குகள், மதுரை உயர்நீதிமன்ற அமர்வு, பெண்கள், மனநலம் 

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

திருநெல்வேலியைச் சேர்ந்த 60 வயதான, பெயர் குறிப்பிட விரும்பாத பெண் ஒருவர் திருமண உறவு சார்ந்த ஒரு வழக்கில் தனது கணவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் மிகவும் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.


பிபிசி தமிழிடம் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவையும் வரவேற்றார்.


"எனது 30 வருட திருமண வாழ்வின் இறுதியில் நான் மனநல நோயாளியாக மாற்றப்பட்டேன்" என்கிறார் அவர்.


"திருமண வாழ்க்கையில் தொடர்ந்து உடல் மற்றும் மனநலம் சார்ந்த சித்திரவதைகள், அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். எங்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி, எனது கணவர் இரண்டாம் திருமண உறவின் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டார். அதையும் பொறுத்துக்கொண்டேன்."


"எனக்கு மனரீதியாக ஏதோ ஒரு பிரச்னை உள்ளது என ஒரு மனநல மருத்துவர் மூலம் நம்பவைத்து, சில மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வைத்தார். என்னுடைய நகைகள், சொத்துகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு, எனது 54வது வயதில் என்னை கைவிட முயற்சித்தபோது, என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எங்கள் ஊர் நீதிமன்றத்தில் 'குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின்' கீழ் வழக்கு தொடர்ந்தேன்" என்கிறார் அப்பெண்.


தொடர்ந்து பேசிய அவர், "ஆனால் என் கணவர் எனக்கு தீராத மனநோய் உள்ளது, அதனால் நான் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறினார். இறுதியில் எனக்கு எந்த மனநல பிரச்னைகளும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து எனது கணவர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், அங்கும் எனக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது" என்கிறார்.


அவர் கூறிய வழக்கு விவரங்களை அவரது வழக்கறிஞரிடம் பேசி பிபிசி தமிழ் உறுதி செய்துகொண்டது.


தீர்ப்புகள் சாதகமாக வந்தாலும் சமூகம் மற்றும் உறவுகள் தன்னைப் பார்க்கும் பார்வை மாறவில்லை என்கிறார் அப்பெண்.


"இங்கு ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதை மட்டும் தான் சமூகம் கவனிக்கும், அவை பொய் என நிரூபிக்கப்படுவதை பலரும் கவனிப்பதில்லை." என்கிறார் அவர்.


கூடுதல் வழிகாட்டுதல்கள்

"குடும்ப நல வழக்குகளில் மனநலப் பிரச்னைகள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தடுக்கும் வகையில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவு அமைந்துள்ளது" என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தகுமாரி.


"அதேசமயம், 'மனநோயாளிகளை' மனிதாபிமானத்தோடு அணுகும் ஒரு உத்தரவு இது. பொதுவெளியில் அவர்களை அடையாளப்படுத்துவது தவறு என்பதை இது அழுத்தமாக வலியுறுத்துகிறது" என்றும் அவர் கூறுகிறார்.


இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், திருமண உறவு சார்ந்த சில வழக்குகளில் தங்களது அல்லது எதிர்தரப்பின் பெயர் வெளியாவது அவசியம் என நினைப்பவர்கள் அதற்கான சிறப்பு அனுமதியை நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேகா.


"அதேபோல, ஒருவர் மறுமணம் செய்துகொள்ளும்போது, அவர் முந்தைய திருமண உறவிலிருந்து எதற்காக விலகினார் என்பதை துணையாக வருபவர் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினால், அதற்கு சட்டத்தில் எளிய வழிகள் இருக்க வேண்டும்."


"தனிப்பட்ட நபரின் பெயர் கொண்ட ஆவணங்கள் பொதுவெளியில் இருக்காது எனும்போது, சிறப்பு அனுமதி மூலம் தகுதியான காரணத்துடன் ஒருவர் அதை அணுகுவதற்கான வழிகாட்டுதல்களை நீதிமன்றங்கள் அளிக்க வேண்டும்" என்றும் கூறுகிறார் வழக்கறிஞர் சுரேகா.

 


Iran - USA 

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்..,

Tehran -ல் இருந்து ஈரான் 🇮🇷 அதிபர் Pezeshkian கையெழுத்திட்டார்.

Washington DC -ல் இருந்து அதே ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.


இருவரின் கையெழுத்தும் உள்ள Digital பரிமாற்ற ஆவணத்தை காட்டும் ஈரான் அதிபர்!

 


MoU -வில் ஈரான்-க்கு Strait Of Hormuz -ல் சர்வதேச அங்கீகாரம் கிடைத்து விடும்!


இனிமேல் நினைக்கும் போதெல்லாம் அவர்கள் மூடலாம் திறக்கலாம்!


- அமெரிக்க உளவுத்துறை!

 


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வட பகுதியில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



அமெரிக்க நேரப்படி காலை 11:20 மணியளவில், எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்திலிருந்து இந்த விமானம் புறப்பட்டுள்ளது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எதிர்பாராதவிதமாக விமானம் விபத்தில் சிக்கியது.


விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அவசரக்கால மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.



அமெரிக்க விமானப்படையின் மிக முக்கிய மற்றும் வலிமைமிக்க போர் ஆயுதமாக இந்த B-52 ரக விமானங்கள் கருதப்படுகின்றன. 


1950-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க விமானப்படையில் இந்த நீண்ட தூர உத்திசார் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.எரிபொருள் நிரப்பாமல் தொடர்ந்து 8,800 மைல்கள் வரை பறந்து சென்று இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது.சாதாரண வெடிகுண்டுகள் மட்டுமின்றி, அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் படைத்தது.


வியட்நாம் போர், வளைகுடாப் போர், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சமீபத்திய ஈரான் உடனான மோதல்கள் வரை பல்வேறு முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் இந்த B-52 விமானங்கள் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


 அமெரிக்கா - இரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாக மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.


அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவுக்கும் இரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர்.


இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் நிகழ்ச்சி ஜூன் 19, வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெறும். மோதலுக்கு இராஜதந்திர ரீதியிலான தீர்வைக் காண்பதில் காட்டிய உறுதிப்பாட்டிற்காக அமெரிக்கா மற்றும் இரான் இஸ்லாமியக் குடியரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் அவர், "இந்த ஒப்பந்தத்தை எட்டுவதில் ஆதரவளித்த, மத்தியஸ்த முயற்சியில் எங்கள் சகோதரர்களாகத் திகழும் கத்தார் நாட்டின் சிறந்த தலைமைத்துவத்திற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் பெரும் பங்காற்றிய சௌதி அரேபியா மற்றும் துருக்கி குடியரசின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்கும் நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன்.


மத்தியஸ்தர்கள் இந்த வாரம் தொடர்ச்சியான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வார்கள். இந்தச் செயல்பாட்டிற்கு முந்தைய விவாதங்கள், தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் நிகழ்வுக்கான அடித்தளத்தை அமைக்கும்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.


விளம்பரம்


அமெரிக்கா - இரான் அமைதி ஒப்பந்தம், பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு, ஹொர்மூஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலைபட மூலாதாரம்,Getty Images

இரானுடன் ஒப்பந்தம் - டிரம்ப் உறுதிப்படுத்தினார்

அமெரிக்கா- இரான் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்ற பாகிஸ்தானின் தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.


"இரான் இஸ்லாமியக் குடியரசுடனான ஒப்பந்தம் இப்போது முழுமையடைந்துள்ளது," என்று அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் எழுதியுள்ளார்.


"ஹோர்மூஸ் நீரிணை வழியே கட்டணமில்லா கப்பல் போக்குவரத்து தொடங்கவும், அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை உடனடியாக நீக்கவும் ஆவன செய்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

கோழி முட்டையை சிறிதாகவும், அதன் ஓட்டை மெல்லியதாகவும் மாற்றும் வெப்ப அலை - முட்டையில் சத்துகள் குறையுமா?

கோழி முட்டையை சிறிதாகவும், அதன் ஓட்டை மெல்லியதாகவும் மாற்றும் 'வெப்ப அலை' - அதில் சத்துகளும் குறையுமா?

நீங்கள் அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் விழித்தால் மீண்டும் தூக்கம் வரவில்லையா? நன்றாக தூங்க 4 டிப்ஸ்


நீங்கள் அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் விழித்தால் மீண்டும் தூக்கம் வரவில்லையா? நன்றாக தூங்க 4 டிப்ஸ்

आर्यन

ஆமதாபாத் விமான விபத்தை வீடியோவில் பதிவு செய்த சிறுவன் நகரை விட்டு விரைவில் வெளியேறியது ஏன்?

ஆணுறுப்பு ஏன் ஆண்களின் ஆரோக்கியத்தின் அளவீடாக இருக்கிறது?

ஒரு ஆணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் அளவுகோலாக ஆணுறுப்பு திகழ்வது எப்படி?

End of அதிகம் படிக்கப்பட்டது

"கப்பல்களே, உங்கள் இயந்திரங்களை இயக்கத் தொடங்குங்கள். எண்ணெய் பாயட்டும்!"


வெள்ளிக்கிழமை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதும் 'எண்ணெய் சந்தைக்குள் தாராளமாக வரும்' என்று டிரம்ப் கூறுகிறார்


அமெரிக்கா - இரான் அமைதி ஒப்பந்தம், பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு, ஹொர்மூஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலைபட மூலாதாரம்,Getty Images

மற்றவர்கள் தோல்வியடைந்த இடத்தில் தான் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்கா-இரான் ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அடுத்ததாக மேலும் ஒரு பதிவை இட்டுள்ளார்.


"இந்தச் சிறந்த ஒப்பந்தம் இப்பகுதி முழுமைக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு வரும்," என்று அவர் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் எழுதியுள்ளார்.


"பல அதிபர்கள் இரானுடன் அமைதியை ஏற்படுத்த முயன்றனர், ஆனால் எனக்கு முன் அனைவரும் தோல்வியடைந்தனர். உண்மையான அமைதியை அடையத் தங்களுக்கு உதவக்கூடிய ஒரு அதிபரை இப்பகுதித் தலைவர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்."


"வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானதும், கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக அந்த நீரிணை (Strait) திறக்கப்படும்; இதனால் இப்பகுதிக்கும் உலகிற்கும் மீண்டும் இரு முனைகளிலிருந்தும் எண்ணெய் விநியோகம் நடைபெறும்!"


இரான் தரப்பில் கூறப்படுவது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என்றும் அரசுத் தொலைக்காட்சியில் பேசிய இரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி (Kazem Gharibabadi) உறுதிப்படுத்தினார்.


"லெபனான் உள்ளிட்ட பல்வேறு முனைகளில் நடைபெற்று வரும் போர் மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு உடனடி மற்றும் நிரந்தரமான முடிவு இன்று இரவு அறிவிக்கப்படும்," என்று அவர் கூறினார்.


இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையும் இன்று இரவு நீக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக, கத்தார் நாட்டு மத்தியஸ்தர்கள் டெஹ்ரானில் "சுமார் 14 முதல் 15 மணிநேரம் வரை நீண்ட பேச்சுவார்த்தைகளை" நடத்தியதாக காசெம் கரிபாபாடி தெரிவித்தார்.


அரசு ஊடகத்திடம் அவர் பேசுகையில்"இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' வாசகம் குறித்த விவாதங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்க, கத்தார் நாட்டுப் பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்று டெஹ்ரானில் இருந்தது.


"சுமார் 14 முதல் 15 மணிநேரம் வரை நீண்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன; அப்போது, ​​அந்த ஒப்பந்த வாசகத்தில் இரான் இஸ்லாமியக் குடியரசு முன்வைத்த இறுதித் திருத்தங்களை நாங்கள் சமர்ப்பித்தோம். இயல்பாகவே, அந்தத் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாசகம் இறுதி செய்யப்பட்டது."


அமெரிக்கா - இரான் அமைதி ஒப்பந்தம், பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு, ஹொர்மூஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலைபட மூலாதாரம்,Getty Images

இறுதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் 60 நாள் காலப்பகுதியில் நடைபெறும் என்றும், இதில் இரான் "பல விவகாரங்கள் குறித்துத் தீர்வு காண வேண்டியுள்ளது" என்றும், குறிப்பாகத் தங்கள் நாட்டின் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குவதே மிக முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என்றும் துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி கூறினார்.


ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் வான்ஸ் பங்கேற்பார் - ஏஎஃப்பி (AFP)

ஜெனிவாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், டிரம்பும் இதில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகவும் ஏஎஃப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


ஒப்பந்தத்தில் நேரில் கையெழுத்திடச் செல்லக்கூடிய நபராக வான்ஸ் இருப்பார் என்றும், அந்த நிகழ்வு வியன்னாவில் நடைபெறும் என்றும் கடந்த சில நாட்களாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனால், துணை அதிபரின் பயண நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க விமானங்களின் நிலைப்பாடு ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிக்கும் சூழல் ஏற்பட்டது.


புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 14 அம்சங்கள் - இரானிய அரசு ஊடகம் தகவல்

அமெரிக்கா - இரான் இடையிலான 14 அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவு விவரங்கள் என்று கூறப்படுபவற்றை இரானிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.


இந்தக் குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து இரு நாடுகளும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.


அந்த ஒப்பந்தத்தில் இடம்பெறும் அம்சங்களாக இரானின் அரசு தொடர்புடைய செய்தி நிறுவனமான 'மெஹர்' (Mehr News Agency) குறிப்பிட்டுள்ள 14 அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் நிரந்தரமான போர் நிறுத்தம்

இரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்ற அமெரிக்காவின் உறுதிமொழி

30 நாட்களுக்குள் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்குதல்

இரானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல்

"இரானின் ஏற்பாடுகளின் கீழ்" 30 நாட்களுக்குள் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறத்தல்

குறைந்தது 300 பில்லியன் டாலர் மதிப்பிலான இரானுக்கான மறுசீரமைப்புத் திட்டங்களை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வழங்குதல்

இரானிய எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்கள் மீதான தடைகளை நீக்குதல்

அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்ற இரானின் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துதல்

இப்பகுதியில் படைகளை அதிகரிக்க மாட்டோம் மற்றும் புதிய தடைகளை விதிக்கமாட்டோம் என்ற அமெரிக்காவின் உறுதிமொழி

அமெரிக்கா - இரான் அமைதி ஒப்பந்தம், பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு, ஹொர்மூஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலைபட மூலாதாரம்,Reuters

"இரானின் முடக்கப்பட்ட நிதியில் பாதி விடுவிக்கப்பட்டு, எண்ணெய் மீதான தடைகள் இடைநிறுத்தப்பட்டு, கடற்படை முற்றுகை நீக்கப்படும் வரை இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்காது" என்றும் மெஹர் செய்தி வெளியிட்டுள்ளது.


இறுதி ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் மூலம் அங்கீகரிக்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.

 


அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம், அசாமின் ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இரண்டு இன்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தில் பயணித்த விமானப் படையின் ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர்.






இது தொடர்பாக இந்திய விமானப் படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அசாமின் ஜோர்ஹட்டில் இன்று காலை சுமார் 10 மணி அளவில் வழக்கமான பயணத்தின்போது இந்திய விமானப் படையின் ஏஎன்-32 விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளும் ஆரம்பகட்ட விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.






ஆரம்பகட்ட முடிவுகள் வரும் வரை ஊகங்களை தவிர்க்குமாறு இந்திய விமானப் படை கேட்டுக்கொள்கிறது. உயிரிழப்புகளுக்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதோடு, துயரமான இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உறுதுணையாக நிற்கிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.






இதையடுத்து, விமானப் படை வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘விமான விபத்தில் ஐந்து வீரர்கள் உயிரிழந்ததற்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. ஸ்க்வாட்ரன் லீடர் பிரசாந்த் சிங், பிளைட் லெப்டினன்ட் சுபம் குமார், சார்ஜென்ட் ஜிதேந்திர சர்மா, அக்னிவீர் வாயு வீரர் கேமராம் குமாவத், அக்னிவீர் வாயு வீரர் தானிஷ் ஆலம் ஆகியோர் தங்கள் கடமையின்போது இன்னுயிரை நீத்தனர்.






உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய விமானப் படை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் துயரமான இந்த தருணத்தில் ஆவர்களுடன் உறுதுணையாக நிற்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


மத்திய கிழக்கு பிராந்திய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்றிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 


தனது 'X' சமூக ஊடக கணக்கில் பதிவொன்றையிட்டு பிரதமர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக தாம் இருதரப்புடனும் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


இந்த மோதல்கள் நிலவிய காலம் முழுவதும் இரு நாடுகளுக்கும் இடையில் பிரதான மத்தியஸ்தராக செயற்பட்ட பாகிஸ்தான் பிரதமர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, "இதற்கு முன்னர் எப்போதும் அமைதி இந்த அளவிற்கு நெருக்கமாக இருந்ததில்லை" என்பதாகும்.


 அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னதாக, இரான் மீது "கடுமையான" தாக்குதல் நடத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்குத் தெஹ்ரான் "மிகவும் அதிக நேரம்" எடுத்துக்கொள்வதாக டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, இரவோடு இரவாகத் தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல்கள், தங்களின் இரண்டாவது தொடர்ச்சியான "தற்காப்புத் தாக்குதல்கள்" என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் (சென்ட்காம் - Centcom) தெரிவித்துள்ளது.

 


அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களிலேயே, ஈரானில் உள்ள பல முக்கிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் அதிரடி நள்ளிரவுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.



ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நேரப்படி, நேற்று நள்ளிரவுக்குப் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து ‘X’ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவில்:


"ஈரானின் தேவையற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அதிரடி அறிவிப்பு ஒன்றை ஈரானின் இராணுவ கட்டளையகம் இன்று (11) வெளியிட்டுள்ளது.


உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ‘ஹோர்முஸ் நீரிணையை’ உடனடியாக மூடுவதாக ஈரான் பிரகடனப்படுத்தியுள்ளது.


ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


வணிகக் கப்பல்கள், எண்ணெய் விநியோகக் கப்பல்கள் உட்பட எந்தவொரு கப்பலும் இந்த நீரிணையைக் கடக்க அனுமதி இல்லை.


இந்தத் தடையை மீறி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலின் மீதும் எவ்வித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கிச் சூடு அல்லது நேரடித் தாக்குதல் நடத்தப்படும்.


அமெரிக்காவின் நள்ளிரவுத் தாக்குதலும், அதற்குப் பதிலடியாக உலகையே அச்சுறுத்தும் வகையில் ஈரான் கடல் எல்லையை மூடியுள்ளதும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயரக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.