Showing posts with label world. Show all posts

 


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது.


இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி தெரிவித்துள்ளார்.


இந்த போர் நிறுத்தம், "காஸாவில் நடைபெறும் சண்டையை நிறுத்தும், பாலத்தீன மக்களுக்கு மிகவும் தேவையான மனிதநேய உதவிகளை அதிகரிக்கும், பணயக்கைதிகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். அதே நேரம் இதை 'ஊக்குவித்ததற்காக' அமெரிக்க அதிபர் பைடனுக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்தார். ஹமாஸ் தலைவர் காலில் அல்-ஹய்யா இது பாலத்தீனத்தின் "மீண்டு எழும் திறனின்" விளைவாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.



பாலத்தீனர்கள் பலரும், இஸ்ரேல் பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் இந்த செய்தி அறிந்து கொண்டாடினர். ஆனால், காஸாவில் போர்முனையில் பதற்றம் குறையவில்லை.


கத்தார் அறிவிப்பைத் தொடர்ந்து, இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. இதில் காஸா நகரில் உள்ள ஷேக் ரத்வான் குடியிருப்புப் பகுதியில் இருந்த 12 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்திடமிருந்து இதுகுறித்து உடனடியாக பதில் ஏதும் இல்லை.


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், "போரினால் ஏற்பட்ட அதிகப்படியான பாதிப்பை" சரி செய்வதே முதல் வேலை என்று தெரிவித்தார். பாலத்தீனர்களுக்கான உதவிகளை மேலும் அதிகரிக்க ஐக்கிய நாடுகள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பயங்கரவாத அமைப்பு என்று இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.


அப்போது முதல் காஸாவில் 46,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. அங்குள்ள 23 லட்சம் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. மனிதநேய உதவிகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், உணவு, எரிபொருள், மருந்து, உறைவிடம் ஆகியவற்றுக்கான கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.



காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஒப்பந்தத்தின் சில விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்

ஜப்பான்: 56 ஆண்டுகள் போராடி தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய அக்கா

2 மணி நேரங்களுக்கு இல்

குளித்த பிறகு பயன்படுத்தும் துண்டை வாரத்திற்கு எத்தனை முறை, எப்படி துவைக்க வேண்டும்?

14 மணி நேரங்களுக்கு இல்

இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து விலகும்

ஹமாஸ் 94 பணயக்கைதிகளை கொண்டிருப்பதாகவும், அதில் 34 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுவதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. மேலும், போருக்கு முன்பாக இஸ்ரேலை சேர்ந்த நான்கு பேர் கடத்தப்பட்டுள்ளனர், அதில் இருவர் இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கிறது.


ஆறு வார கால முதல் கட்ட போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக, இருபுறத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இந்த போர் நிறுத்தத்தின்போது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், மக்கள் அதிகமாக வாழும் காஸாவின் பகுதிகளிலிருந்து விலகி கிழக்கு திசையில் இஸ்ரேல் படை நகரும். இடமாற்றம் செய்யப்பட்ட பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர், மக்களுக்குத் தேவையான உதவிகளை கொண்டு வரும் நூற்றுக்கணக்கான லாரிகள் ஒவ்வொரு நாளும் உள்ளே வர அனுமதிக்கப்படும்.


காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்த ஒப்பந்தம், பணயக்கைதிகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் என, ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை இலங்கையில் மீள் குடியேற்ற புதிய திட்டம் - நாளிதழில் வெளியான 5 முக்கிய செய்திகள்

14 ஜனவரி 2025

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்? என்ன சொல்கின்றனர்?

13 ஜனவரி 2025

அடுத்த கட்ட போர் நிறுத்தத்தின்போது என்ன நடைபெறும்?

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் இன்று (ஜனவரி 16ம் தேதி) தொடங்கவுள்ளன. இந்த போர் நிறுத்தத்தின்போது மீதமுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, இஸ்ரேல் படைகள் முழுவதுமாக விலகி, அந்த பகுதியில் 'நீடித்த அமைதி' நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மூன்றாவது மற்றும் கடைசி கட்ட போர் நிறுத்தத்தின்போது காஸாவின் மறுகட்டமைப்பு நடைபெறும் - இதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். மேலும், மீதமுள்ள பணயக்கைதிகளின் உடல்கள் இருந்தால் அவை திருப்பி கொடுக்கப்படும்.


இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ள 'தெளிவான நடைமுறை' இருப்பதாக, ஷேக் முகமது தெரிவித்தார். இதன் "விவரங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, ஓரிரு நாட்களில்" ஒப்பந்தம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், ஒப்பந்தத்தின்படி தங்கள் பொறுப்புகளை சரியாக மேற்கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்ய, இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உதவிய கத்தார், அமெரிக்கா, எகிப்து ஆகியவை கூட்டாக வேலை செய்யும்.


"இதுவே போரின் கடைசி பக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமல்படுத்த அனைத்து தரப்பும் ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம்" என்றார் ஷேக் முகமது.

 



தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரான யூன் சுக் யோல் சற்று முன் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தென் கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவரை கைது செய்ய இரண்டாவது முறையாக அதிகாரிகள் இன்று முயற்சி செய்தனர். முதல் முறையைப் போலவே, இம்முறையும் அவரது பாதுகாப்புப் பிரிவினர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். வீட்டை சுற்றிலும் யூன் சுக் யோலின் பாதுகாப்பு சேவையால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் வேறு வழியின்றி, சில அதிகாரிகள் ஏணிகளைப் பயன்படுத்தி அவரது வீட்டுக்குள் நுழைந்ததாக யோன்ஹாப் என்ற தென் கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.

யூன் சுக் யோலை கைது செய்து அவரது இல்லத்தில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் அழைத்து சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "புலனாய்வு அதிகாரிகள் யூனை கைது செய்ய வழங்கப்பட்டிருந்த உத்தரவை நிறைவேற்றிவிட்டதாக", தென் கொரியாவின் ஊழல் புலனாய்வு அலுவலகம் (CIO) தெரிவித்துள்ளது




அமெரிக்காவில் கோரமான காட்டுத்தீயின் 7ஆவது நாள் இன்று. காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது 24ஆக உயர்ந்துள்ளதாகவும், குறைந்தது 16 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.


தற்போது 3 இடங்களில் உள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறை போராடிவருகிறது. மற்ற காட்டுத்தீ கட்டுக்குள் வந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


எனினும், லாஸ் ஏஞ்சலிலிஸில் காட்டுத்தீயை தீவிரப்படுத்திய பலத்த காற்று இந்த வாரம் மீண்டும் வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


நகரின் எதிரெதிர் பகுதிகளில் எரிந்துவந்த இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீயான பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் தீயை கட்டுப்படுத்துவதில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


சமீபத்திய தகவலின்படி, 23 ஆயிரம் ஏக்கருக்கு மேல் எரிந்துவரும் மிகப்பெரிய தீயான பாலிசேட்ஸ் 13% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆயிரம் ஏக்கருக்கு மேல் எரிந்துவரும் ஈட்டன் 27% கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. உள்ளூர் தீயணைப்பு வீரர்களுக்கு உதவ சக மாகாணங்கள், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்தும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.


அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பொருட்சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீ சம்பவங்களில் ஒன்றாக இந்த காட்டுத்தீ இருக்கும்.


தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான அக்குவெதர், காட்டுத்தீயால் ஏற்பட்ட நிதி இழப்புகள் $250 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் $275 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.


தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறை முயற்சி செய்து வந்தாலும் எதிர்வரவிருக்கும் தீவிர காற்று சாத்தியமான பேரழிவு நிலைமைகளுக்கு வழிவகுக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதால் லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டி முழுவதும் தீ குறித்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. எனினும் இதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டி ஷெரிஃப் ராபர்ட் லூனா தெரிவித்தார்.


செவ்வாய்க்கிழமை தீவிர தீ பரவுவதற்கான எச்சரிக்கையை தேசிய வானிலை சேவை விடுத்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 04:00 மணி முதல் புதன்கிழமை நண்பகல் வரை இது நீடிக்கும்.




 அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.


கோஸ்டல் பொலிசேட்ஸில் ஏற்பட்ட தீ சுமார் 11 வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும், அல்தடேனா பகுதியில் காட்டுத் தீ இன்னும் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொந்தளிப்பான காட்டுத்தீ காரணமாக, அப்பகுதியில் உள்ள 100,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.


 மேலும், லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக 10,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.



லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் பெரும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு அபாயம் ஏற்படும் வகையில், இந்த காட்டுத்தீ பரவி உள்ளது என்று லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புத் துறை அறிவித்துள்ளது.


மேலும், பொதுமக்கள் அனைவரும் ஹாலிவுட் ஹில்ஸ் உட்பட பல முக்கியமான பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


1 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஏற்கனவே அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹாலிவுட் நட்சத்திரங்கள் அதிகமாக வசித்து வரும் பகுதிகளிலும் தீ பரவி வருகின்ற சூழல் காரணமாக, பிரபலங்கள் பலரும் தங்களின் சொந்த வீடுகளை இழந்துள்ளனர்.



லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் பெரும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: வீடுகளை இழந்த பொதுமக்கள் - புகைப்படத் தொகுப்புபட மூலாதாரம்,Reuters

சலில் சிக்கி 6 பேர் மரணம் - வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகளை வாங்கச் சென்றபோது நிகழ்ந்த அசம்பாவிதம்

9 ஜனவரி 2025

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: வீடுகளை இழந்த பொதுமக்கள் - 


படக்குறிப்பு,கலிஃபோர்னியா ஆளுநர் காவின் நியூசம், இந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புத் துறையை சேர்ந்த 1,400 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

தீக்கிரையான பிரபலங்களின் வீடுகள்

பாரிஸ் ஹில்டன், பில்லி கிறிஸ்டல் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பலரின் வீடுகள் தீக்கிரையாகியுள்ளது.



செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) அன்று, முதன்முறையாக பசிஃபிக் பலிசடேஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில், காட்டுத்தீ ஏற்பட்டது. அதன் பிறகு, லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புத் துறையின் தகவல்களின் படி, பலிசடேஸ், பசதேனா, சைல்மர், மற்றும் ஹாலிவுட் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது. இந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


கலிஃபோர்னியா ஆளுநர் காவின் நியூசம், இந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புத் துறையினர் 1,400 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: வீடுகளை இழந்த பொதுமக்கள் - புகைப்படத் தொகுப்புபட மூலாதாரம்,Caroline Brehman/EPA

படக்குறிப்பு,தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறையினர்

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: வீடுகளை இழந்த பொதுமக்கள் - புகைப்படத் தொகுப்புபட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,செவ்வாய்க் கிழமை அன்று, முதல்முறையாக பசிஃபிக் பலிசடேஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில், காட்டுத்தீ ஏற்பட்டது.

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: வீடுகளை இழந்த பொதுமக்கள் - புகைப்படத் தொகுப்புபட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் ஜனவரி 8ம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் தீ பரவ துவங்கியது

மதுரை டங்ஸ்டன் திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு அறிவிப்பு வந்த பின்னரும் போராட்டம் ஏன்? பிபிசி கள ஆய்வு

8 ஜனவரி 2025

சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு?

8 ஜனவரி 2025

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: வீடுகளை இழந்த பொதுமக்கள் - புகைப்படத் தொகுப்புபட மூலாதாரம்,Mike Blake/Reuters

படக்குறிப்பு,முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்

ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ

ஆக்டோன் பகுதியில் ஏற்பட்டுள்ள தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் ஜனவரி 8ம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் தீ பரவ தொடங்கியது.


பொதுமக்கள் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறிய பிறகு, முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.


இரண்டு மணிநேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழந்து காணப்பட்டது.


லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: வீடுகளை இழந்த பொதுமக்கள் - புகைப்படத் தொகுப்புபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தீயை அணைப்பதில் சவால்களை சந்தித்து வருவதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


8 ஜனவரி 2025

'விடாமுயற்சி' தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

4 ஜனவரி 2025

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: வீடுகளை இழந்த பொதுமக்கள் - புகைப்படத் தொகுப்புபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தீக்கிரையாகி காட்சி அளிக்கும் பனை மரங்கள்

தண்ணீரை அளவாக பயன்படுத்த அறிவுறுத்தல்

இரண்டாவது நாளாக தொடர்ந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தீயணைப்புத் துறையினர்.


தற்போது தீயை அணைக்கப் போதுமான தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முன் அனுபவம் ஏதுமின்றி உள்ள தீயணைப்பு துறையினர் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


மேலும், புதன்கிழமை காலையில் பேசிய அதிகாரிகள், நெருப்பை அணைக்கும் பணியால் நகரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் அளவாக நீரை பயன்படுத்தவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: வீடுகளை இழந்த பொதுமக்கள் - புகைப்படத் தொகுப்புபட மூலாதாரம்,US Department of Defense

படக்குறிப்பு,தீயணைப்புத்துறையினர் இதுவரை 3,624 அவரச உதவி அழைப்புகளுக்கு பதில் அளித்துள்ளனர்

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: வீடுகளை இழந்த பொதுமக்கள் - புகைப்படத் தொகுப்புபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,24 மணிநேரத்தில் அவர்களுக்கு வந்த அழைப்புகளின் சராசரி எண்ணிக்கை 1,500 என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: வீடுகளை இழந்த பொதுமக்கள் - புகைப்படத் தொகுப்புபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,நகரத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது

தீயணைப்புத்துறையினர் இதுவரை 3,624 அவரச உதவி அழைப்புகளுக்கு பதில் அளித்துள்ளனர். 24 மணிநேரத்தில் அவர்களுக்கு வந்த அழைப்புகளின் சராசரி எண்ணிக்கை 1,500 என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


நகரத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீக்கிரையான பிரபலங்களின் வீடுகள்

பாரிஸ் ஹில்டன், பில்லி கிறிஸ்டல் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பலரின் வீடுகள் தீக்கிரையாகியுள்ளது

 


லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் பெரும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு அபாயம் ஏற்படும் வகையில், இந்த காட்டுத்தீ பரவி உள்ளது என்று லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புத் துறை அறிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் அனைவரும் ஹாலிவுட் ஹில்ஸ் உட்பட பல முக்கியமான பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஏற்கனவே அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹாலிவுட் நட்சத்திரங்கள் அதிகமாக வசித்து வரும் பகுதிகளிலும் தீ பரவி வருகின்ற சூழல் காரணமாக, பிரபலங்கள் பலரும் தங்களின் சொந்த வீடுகளை இழந்துள்ளனர்.

தீக்கிரையான பிரபலங்களின் வீடுகள்

பாரிஸ் ஹில்டன், பில்லி கிறிஸ்டல் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பலரின் வீடுகள் தீக்கிரையாகியுள்ளது.


 


திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 130 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00​ மணியளவில் (01:00​ GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 


அமெரிக்கா, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி ஆகிய மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


சாலைகளில் நிலைமைகள் ஏற்கனவே மோசமடைந்துள்ளன, பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சில விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன.


மிசிசிப்பி மற்றும் புளோரிடா போன்ற கடுமையான குளிரை இதுவரை எதிர்கொள்ளாத அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட, வானிலை மோசமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இந்தப் புயல் கிழக்கு நோக்கி நகரும்போது, இன்னும் மிகக்குறைந்த வெப்பநிலையை அமெரிக்கர்கள் எதிர்கொள்வார்கள் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர்.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆர்க்டிக் பகுதியைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் ஒரு பகுதியான துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர வானிலை ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


வாஷிங்டன் டி.சி-இல் 5 முதல் 9 அங்குலம் வரையிலான பனிப்பொழிவு உள்ளது.


அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பெற்ற வெற்றிக்கு சான்றளிக்க அமெரிக்க நாடாளுமன்றம், திங்கள்கிழமை (ஜனவரி 6) பிற்பகலில் கூடவுள்ளது.


ஆனால் மோசமான வானிலை காரணமாக சில உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளிலிருந்து தலைநகருக்கு பயணிப்பதில் சிக்கல் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ், அண்டை நாடுகள் கவலை - இந்தியா கூறுவது என்ன?

4 மணி நேரங்களுக்கு முன்னர்

அதிபர் பதவியின் கடைசி கட்டத்தில் இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்க பைடன் முடிவு

5 ஜனவரி 2025

13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி ஆகிய மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது

கிழக்கு நோக்கி நகரும் புயல்

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் தொடங்கிய இந்த புயல் அடுத்த ஓரிரு நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என்று தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது.


2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மிகவும் குளிரான ஒரு ஜனவரி மாதத்தை அமெரிக்கா எதிர்கொள்ள இது வழிவகுக்கும் என்று 'அக்யூவெதர்' முன்னறிவிப்பாளர் டான் டிபோட்வின் கூறினார்.


"மிகவும் குறைவான வெப்பநிலை, ஒரு வாரத்திற்கு நீடிக்கக்கூடும்" என்று அவர் கூறினார்.


இந்த பனிப்புயலுக்கு காரணமான துருவச் சுழல் (Polar Vertex), பொதுவாக வட துருவத்தைச் சுற்றியே இருக்கும். ஆனால் அது நகர்ந்து விரிவடையவும் கூடும். அவ்வாறு நகர்வதால், தெற்கு பகுதிகளில் வழக்கத்தை விட மிகக் குறைவான வெப்பநிலை நிலவும்.


சனிக்கிழமை (ஜனவரி 4) மாலை பனிப்புயல் தாக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே, சமீப நாட்களாக துருவ சுழல் அமெரிக்காவில் விரிவடைந்து வந்தது.


இது வரும் நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் மோசமான பனிப்பொழிவு மற்றும் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை நிலவக்கூடும்.


கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் பயணிப்பதை முடிந்தளவு தவிர்க்குமாறும், அமெரிக்காவின் வழக்கமான திங்கட்கிழமை காலை போல இருக்காது என்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரியில், சராசரி வெப்பநிலை -1 செல்ஸியஸாக இருந்தது. அந்த ஆண்டிற்குப் பிறகு இந்த வருடம்தான், மிகவும் குளிரான ஒரு ஜனவரி மாதத்தை அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கிறது.


2011-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பல பனிப்புயல்கள் வடகிழக்கு அமெரிக்காவைத் தாக்கின, இதனால் நியூயார்க் நகரம் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு இருந்தது.


அமெரிக்க அதிபராக தயாராகும் டிரம்புக்கு ஆபாசப் பட நடிகை வழக்கில் என்ன தண்டனை? நீதிமன்றம் புதிய அறிவிப்பு

4 ஜனவரி 2025

தென் கொரியா: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரை ஏன் கைது செய்ய முடியவில்லை - தடுப்பது யார்?

5 ஜனவரி 2025

13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் தொடங்கிய இந்த புயல் அடுத்த ஓரிரு நாட்களில் கிழக்கு நோக்கி நகரும்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.


கான்சஸ் மற்றும் மிசௌரி முதல் பென்சில்வேனியா மற்றும் நியூ ஜெர்சி வரை பல மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மாற்றத்திற்கான நிபந்தனைகளின் முழு பட்டியலையும் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.


கண்காணிப்பு வலைத்தளமான ஃப்ளைட்அவேர் படி, 2,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. அமெரிக்காவிற்கு உள்ளே வரக்கூடிய மற்றும் வெளியே செல்லக்கூடிய 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


கான்சஸ் நகர சர்வதேச விமான நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கிருந்து புறப்படக்கூடிய 86% விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 


அமெரிக்காவின் நியூ ஆர்லீன்ஸ் நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே ஒருவர் டிரக்கை விட்டு மோதியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. டிரக் ஓட்டுநர் வேண்டுமென்றே டிரக்கை விட்டு மோதியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

நியூ ஆர்லீன்ஸ் நகரின் பிரபலமான போர்பன் ஸ்ட்ரீட்டில் புத்தாண்டு பரபரப்புகளுக்கு இடையே, மக்கள் மத்தியில் டிரக் மோதியதில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

மேலும், தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் டிரக்கின் பின்புறத்தில் ஐஎஸ் ஆயுதக் குழுவின் கொடி கண்டுபிடிக்கப்பட்டதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் "பயங்கரவாத செயலாக" இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

 



ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்துல்-ஹாதி சபா கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.. சமீபத்திய ட்ரோன் தாக்குதலில் அப்துல் ஹாதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.


கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி கிபுட்ஸ் நிர் ஓஸ்-இல் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை அப்துல் ஹாதி சபா வழிநடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நுக்பா படைப்பிரிவு தளபதி தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் வைத்து கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்த எக்ஸ் தள பதிவில், "இஸ்ரேல் பாதுகாப்பு படையின் உளவுத்துறை மற்றும் ஐ.எஸ்.ஏ. தாக்குதலில் நுக்பா படைப்பிரிவு தளபதியான அப்துல் ஹாதி சபா கொல்லப்பட்டார்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.


கொல்லப்பட்ட அப்துல் ஹாதி சபா இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை வழிநடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பின்புலமாக இருந்த அனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

 


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார். அவருக்கு வயது 100. சமாதானத்திற்கான நொபல் பரிசை 2002 இல் பெற்றவர்.


கார்டரின் இறப்பை அவரது அறக்கட்டளையான கார்டர் சென்டர் உறுதிப்படுத்தியுள்ளது.


''ஜார்ஜியாவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க கார்டர் அமைதியாகக் காலமானார்'' என கார்டர் சென்டர் தெரிவித்துள்ளது.


''எனது தந்தை ஒரு ஹீரோ. எனக்கு மட்டுமல்ல அமைதி, மனித உரிமை, தன்னலமற்ற அன்பு ஆகியவற்றை நம்புவர்களுக்கு அவர் ஒரு ஹீரோ'' என ஜிம்மி கார்டரின் மகன் சிப் கார்டர் கூறியுள்ளார்.


விளம்பரம்


அமெரிக்காவின் 39ஆவது அதிபராக 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்டர் பதவி வகித்தார். 100 வயதான அவர், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த முன்னாள் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார்.


அவரது பதவி காலத்தில் வெளியுறவுக் கொள்கை தொடர்பாகப் பல பிரச்னைகளை எதிர்கொண்டார்.


ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், மீண்டும் அதிபராகும் முயற்சியில் ரொனால்ட் ரீகனிடம் தோல்வியடைந்தார்.


மெலனொமா எனும் தோல் புற்றுநோய் அவருக்கு இருந்தது. மெலனோமா அவரது கல்லீரல் மற்றும் மூளைக்குப் பரவியது. கடந்த ஆண்டு அவரது மருத்துவச் சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து, அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்டது.


ஜிம்மி கார்டர்பட மூலாதாரம்,The Carter Center/X

படக்குறிப்பு,சக ஜனநாயக கட்சி உறுப்பினரான கார்டரை "அன்புள்ள நண்பர்" என்று அழைத்த பைடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்

தனது மனிதாபிமான செயல்களால் நோபல் பரிசை ஜிம்மி கார்டர் பெற்றார். அமெரிக்க அதிபராக அவரது பதவி காலம் முடிந்தபிறகு நோபல் பரிசை பெற்றார்.


100 வயதில் காலமான முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரை "கொள்கை, நம்பிக்கை மற்றும் பணிவு கொண்டவர்" என்று கூறி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.


சக ஜனநாயக கட்சி உறுப்பினரான கார்டரை "அன்புள்ள நண்பர்" என்று அழைத்த பைடன், வாஷிங்டன் டிசியில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என தெரிவித்தார்.


அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், ஜிம்மி கார்டருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.


''நம் நாட்டிற்கு ஒரு முக்கியமான நேரத்தில் வந்த சவால்களை ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி எதிர்கொண்டர். மேலும் அவர் அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். அதற்காக, நாம் அனைவரும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.'' என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

  


அவுஸ்திரேலியா கடற்கரையில் இன்று (28) சுறா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

கிழக்கு அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து கடற்கரையில் குடும்ப உறுப்பினர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இந்த சம்பவத்தில் கழுத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இந்த ஆண்டு இதுவரை அவுஸ்திரேலியா கடல் பகுதியில் குறைந்தது நான்கு சுறா தாக்குதல்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை 90% நிறைவடைந்துள்ளது, ஆனால் இன்னும் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது என்று இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாலத்தீன மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஃபிலடெல்பி பாதையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து இருப்பது முழு போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

தெற்கு காஸாவின் எகிப்து எல்லையில் உள்ள இந்த ஃபிலடெல்பி பாதையானது, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

தோஹாவில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் விவரங்களை பாலத்தீன மூத்த அதிகாரி ஒருவர் பகிர்ந்து கொண்டார். இதில் காஸாவுடனான இஸ்ரேலின் எல்லை முழுவதும், பல கிலோமீட்டர் அகலத்தில் ஒரு ராணுவ மோதலற்ற மண்டலத்தை உருவாக்குவதும் அடங்கும்.

  'மோசமான ஆட்சியாளர்' அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் என கூறியுள்ள கிளர்ச்சி படைகள், நாடு 'விடுவிக்கப்பட்டது' எனவும் அறிவித்துள்ளன.


ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று டெலிகிராம் செயலியில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது.



ஹயத் தஹ்ரிர் அல் ஷாம், அதன் தாக்குதலை ஒன்றரை வாரத்திற்கு முன்பு தொடங்கியதில் இருந்து, அவர்கள் சிரியாவின் முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.


இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


விளம்பரம்


பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்படும் தலைநகர் டமாஸ்கஸின் மையப் பகுதியில் உள்ள உமையாத் சதுக்கத்தில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.


''ஆசாத்தின் அரை நூற்றாண்டு ஆட்சியில் சிரியாவில் இருந்து இடம்பெயர்ந்த அல்லது சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் இப்போது தாயகத்திற்கு மீண்டும் வரலாம். இது ஒரு புதிய சிரியாவாக இருக்கும், இங்கு அனைவருக்கும் அமைதி மற்றும் நீதியும் கிடைக்கப்பெறும்" என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தெற்கு சிரியாவின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் - சிக்கலில் சிரிய ராணுவம்

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரத்தை கைப்பற்றிய கிளர்ச்சிக்குழு யார்? - திடீர் தாக்குதலை தொடங்கியது ஏன்?

சிரியா: உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் என்ன சிக்கல்? அமெரிக்கா, ரஷ்யா செய்வது என்ன?

சிரியா: போரால் சிதைந்த அலெப்போ நகரில், மீண்டும் ஒன்றுகூடும் குடும்பங்கள்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரதமரின் மேற்பார்வையில்

1970களின் தொடக்கத்தில் இருந்து கடந்த 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் சிரியாவில் ஆட்சி புரிந்து வந்தது.


ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி, ஆட்சி மாற்றம் நடைபெறும் வரை அனைத்து அரசு துறைகளும் பிரதமரின் மேற்பார்வையில் இருக்குமென தெரிவித்துள்ளார்.


மேலும் டமாஸ்கஸில் உள்ள அரசு துறைகளுக்கு ராணுவம் செல்ல தடை விதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்


இதற்கிடையே சிரியாவின் பிரதமர் மொஹமத் காஸி அல்-ஜலாலி தான் டமாஸ்கஸில் இருப்பதாகவும், மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


அசாத் அரசு விரைவாக வீழ்ந்தது எப்படி?

சிரியாவில் அசாத்தின் ஆட்சி வெறும் சில நாட்களில் வீழ்ந்தாலும், அதன் பின்னணியில் பல முக்கிய காரணிகள் உள்ளன.


பல ஆண்டுகளாக நடக்கும் உள்நாட்டு போரில் அதிபர் அசாத்தின் ராணுவம், மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளது என மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானி டாரா கான்ட்யூட் கூறுகிறார். இவர் சிரியா விவகாரங்களின் நிபுணர்.


அசாத்தின் முக்கிய கூட்டாளிகளான ரஷ்யா, இரான் மற்றும் ஹெஸ்பொலா ஆகியவை தங்களது சொந்த மோதல்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன என்கிறார் டாரா


''அசாத் தற்போது பலவீனமான நிலையில் உள்ளார்'' என்கிறார் அவர்.


நேற்று இரவு நடந்தது அசாத்தியமான செயல் என்றும் அவர் கூறினார்.


அசாத்பட மூலாதாரம்,Getty Images

வெளியேறிய அதிபர்

முன்னதாக சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் நுழைவதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.


"எங்கள் படைகள் டமாஸ்கஸுக்குள் நுழைய தொடங்கிவிட்டன", என்று தங்களின் டெலிகிராம் செயலி கணக்கில் கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.


"ஒவ்வொரு பகுதியாக டமாஸ்கஸ் நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிக்கொண்டு வருகின்றனர்", என்று பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமாக சிபிஎஸ்ஸிடம் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.


ஹோம்ஸ் நகரை "முழுமையாக விடுவித்த" பிறகு டமாஸ்கஸ் நகரை நோக்கி கிளர்ச்சியாளர்கள் வந்தனர்.


இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுவான ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் இதனை ஒரு "வரலாற்று சிறப்பு மிக்க தருணம்" என்று விவரித்துள்ளது.


இதனையடுத்து, சிரிய அதிபர் பஷார் அல் அசாத் டமாஸ்கஸ் நகரை விட்டு விமானத்தின் மூலம் புறப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இரண்டு சிரிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.


டமாஸ்கஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் விமானத்தில் அதிபர் அசாத் ஏறி சென்றிருக்கலாம் என்றும் விமானம் புறப்பட்ட பின்னர், விமான நிலையத்தில் இருந்த சிரிய அரசின் பாதுகாப்புப் படைகள் வெளியேறினர் என்றும் தி சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ் தெரிவித்தது.


வங்கதேசம்: மீண்டும் தீவிர அரசியலில் இறங்கும் ஷேக் ஹசீனா - இந்தியாவுக்கு என்ன சிக்கல்?

7 டிசம்பர் 2024

விஜய், ஆதவ் அர்ஜூனா பேச்சு: நெருக்கடி திமுகவுக்கா, விசிகவுக்கா?

5 மணி நேரங்களுக்கு முன்னர்

சிரியா: டாமஸ்கஸ்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சிரிய அதிபர் பஷர் அல் அசாத் டமாஸ்கஸ் நகரை விட்டு புறப்பட்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது

மேலும் டமாஸ்கஸ் நகரின் மையப்பகுதியில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.


கிளர்ச்சியாளர்களின் படைகள், பார்சேவுக்கு அருகே இருப்பதாகவும், அங்கு மோதல்கள் நடைபெறுவதாகவும் அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


"மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, இணைய சேவை மிகவும் குறைவாக உள்ளது, மக்கள் தங்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்", என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.


"மிகவும் சத்தமாக துப்பாக்கிச் சூடு நடந்தது அது எங்கிருந்து வருகிறது என்பது உடனடியாகத் தெரியவில்லை", என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அப்பகுதியில் வசிக்கும் இருவரை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.


சிரியா: டமாஸ்கஸ்பட மூலாதாரம்,Getty Images

சிரியாவில் என்ன நடக்கிறது?

சிரியா அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலை கிளர்ச்சிக்குழுக்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கின.


சிரியாவில் நடக்கும் மோதலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும், இஸ்லாமிய ஆயுதக் குழுவான 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham- HTS)' தலைமையில் இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.


ஏற்கனவே கடும் பதற்றம் நிலவி வந்த சூழலில், கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ மற்றும் இட்லிப் பகுதிகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.


அலெப்போ மற்றும் தலைநகர் டமாஸ்கஸுக்கும் நடுவே ஹமா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியினை டிசம்பர் 5-ஆம் தேதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.


இது அதிபர் அசாத்திற்கு இரண்டாவது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது.


மேலும் கிளர்ச்சிபடைகள் ஹோம்ஸ் நகரையும், தெற்கு சிரியாவின் டெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளையும் கைப்பற்றினர்.


இதனையடுத்து அவர்கள் இன்று (டிசம்பர் 8) தலைநகர் டாமஸ்கஸையும் கைப்பற்றியுள்ளனர்.


2011 இல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக தெற்கில் புரட்சி தொடங்கியது. அதைத் தொடந்து, அங்கு அமைதியின்மை நிலவத் தொடங்கியது.


சிரியா: டாமஸ்கஸ்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு தாக்குதலை தொடங்கியதில் இருந்து, சிரியாவின் முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு யார்?

2011 இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக 'ஜபத் அல்-நுஸ்ரா' (Jabhat al-Nusra) என்ற வேறு பெயரில் 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' அமைக்கப்பட்டது.


இஸ்லாமிய அரசு (IS) என தன்னை தானே அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ராவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார்.


சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களில், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கொடிய குழுவாக இது கருதப்பட்டது.


ஆனால் அதன் புரட்சிகரக் கொள்கையை விட, 'ஜிஹாதி சித்தாந்தம்' அக்குழுவின் உந்து சக்தியாக கருதப்படுகிறது.


2016-ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பைப் பகிரங்கமாகப் பிரிந்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார்.


ஒரு வருடம் கழித்து, இதே போன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' என்ற பெயரை இக்குழுப் பெற்றது.



#India 

திருவண்ணாமலை தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று, கடந்த திங்கள் கிழமையன்று (டிசம்பர் 2) உடைந்து விழுந்தது. அதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

நீர் வெளியேற்ற அளவைவிட அதிக வெள்ளம் ஏற்பட்டதால், பாலத்தில் சேதம் ஏற்பட்டதாக நெடுஞ்சாலைத்துறை கூறுகிறது.

பாலத்தின் கட்டுமானத்தில் முறையாக கவனம் செலுத்தியிருந்தால் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் குறைவு, என்கின்றனர் பொறியியல் நிபுணர்கள்.




இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருக்கும் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதிகள் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளனர்.

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்த இஸ்ரேலின் மேல்முறையீட்டை சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணை பிரிவு (pre trial chamber - குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் விசாரணை பிரிவு) நிராகரித்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோகவ் கேலண்ட் மற்றும் ஹமாஸின் ராணுவ தளபதி முகமது டெய்ப் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் சர்வதேச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கரீம் கான், நெதன்யாகு, கேலண்ட் மற்றும் டெய்ப் மற்றும் (கொல்லப்பட்ட) இரு ஹமாஸ் தலைவர்களான இஸ்மாயில் ஹனியே மற்றும் யாஹ்யா சின்வாருக்கும் எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரினார்.

மேலும், ஜூலை மாதம் காஸாவில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் முகமது டெய்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறிய நிலையில் அவருக்கு எதிராகவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு எதிராக நடைபெறும் போரில், போர் குற்றஙகள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இம்மூவரும் "பொறுப்பானவர்கள்" என்ற குற்றச்சாட்டுக்கு "நம்பத்தகுந்த ஆதாரங்கள்" உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த பிடிவாரண்டை அமல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த முடிவு, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளை தவிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தின் 124 உறுப்பினர் நாடுகளையும் பொறுத்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம்தான் இவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க கோரும் மனுவுக்கு அடிப்படையாகும்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. இதில், காஸாவில் குறைந்தது 44,000 பேர் கொல்லப்பட்டதாக, ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


  நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது.

நடிகர் விஜய், மாநாட்டுக்கு வந்து, திடலில் இருக்கும் ரசிகர்களைச் சந்தித்தார். அதன்பின், கட்சியின் கொள்கைகளை விளக்கும் ஒரு காணொளி திரையிடப்பட்டது. அதில் கட்சி ‘மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்’ கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பின், விஜய் தனது கட்சியின் கொடியை பட்டன் அழுத்தி ஏற்றினார். மாநாடு நடக்கும் இடத்தில் என்ன நடக்கிறது? நிலவரம் என்ன?

 


இரான் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரான் தலைநகரான தெஹ்ரானில் குண்டுவெடிப்புகளின் பலத்த சத்தம் கேட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


“இரானில் உள்ள ஆட்சி மற்றும் பிராந்தியத்தில் அதன் கூட்டாளி அமைப்புகள், 2023 அக்டோபர் 7ஆம் தேதி முதல் இடைவிடாமல் இஸ்ரேலை தாக்குவதால், உலகிலுள்ள மற்ற எந்த சுதந்திரமான, சுயாட்சியுள்ள நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் அதற்குப் பதிலடி கொடுக்கும் உரிமையும் கடமையும் இருப்பதாக” இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “தங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம்,” என்று தெரிவித்துள்ளார்.



தலைநகர் தெஹ்ரானில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக இரான் அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.


விளம்பரம்


இரானின் வான் பாதுகாப்பு அமைப்பைச் செயல்படுத்தியதன் காரணமாக இந்தச் சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று இரானிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக இரான் அரசுத் தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.


இருப்பினும், இரானில் எந்த வகையான ராணுவ தளங்களை இஸ்ரேல் குறிவைத்துள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


இரான் தனது வான்வெளியை மூடியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக இரான் சிவில் ஏவியேஷன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.


இரானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தங்களுக்குத் தெரியும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.


“அக்டோபர் 1ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தற்காப்புக்காக இரானிலுள்ள ராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்காவில் பிபிசியின் செய்தி கூட்டாளரான சி.பி.எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.


மோதி - ஷி ஜின்பிங் சந்திப்புக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் வெவ்வேறு கருத்துகளை கூறியது ஏன்? என்ன முரண்பாடு?


தெஹ்ரான் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளார் டேனியல் ஹகாரி (கோப்புப் படம்)

பிபிசியின் மத்தியக் கிழக்கு பிராந்திய ஆசிரியர் செபாஸ்டியன் அஷரின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல்கள் ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி என்று நம்பப்படுகிறது. அந்தத் தாக்குதலில் இஸ்ரேல் மீது இரான் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது.


இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பது இஸ்ரேலின் உரிமை மட்டுமின்றி கடமையும்கூட என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.


இந்நிலையில், இரானிய புரட்சிகர காவலர் படைக்கு நெருக்கமான ஒரு செய்தி நிறுவனம், மேற்கு மற்றும் தென்மேற்கு தெஹ்ரானில் உள்ள சில ராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது.


இருப்பினும், எந்தெந்த இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது இன்னும் தெரியவில்லை.


சிரியாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள சில ராணுவ தளங்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்பட, அவர் இந்தத் தாக்குதலின்போது ராணுவ தலைமையகத்தின் செயல்பாட்டு மையத்தில் இருப்பதாகக் காட்டுகிறது.


ரஷ்யாவில் 12 வயது மகள் வரைந்த ஓவியத்தால் சிறையிலிருந்த தந்தை விடுதலை - என்ன நடந்தது?


இரான் எதிர்த் தாக்குதல் நடத்துமா?

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று, இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகிறது என்பதை சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.


இரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களையோ அதன் எண்ணெய் நிலையங்களையோ இஸ்ரேல் குறிவைப்பதைத் தான் ஆதரிக்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு எந்தத் தொடர்பும் இல்லையென்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். மேலும், இந்த நடவடிக்கை குறித்து வாஷிங்டனுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


தற்போது இரானிய அரசு ஊடகம் வழக்கம் போல தாக்குதலின் வீரியத்தைக் குறைத்துக் காட்டுவதாக பிபிசி நியூஸ் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அசாடே மோஷிரி கூறியுள்ளார்.


மேலும், இந்தக் கட்டத்தில் சில முக்கியக் கேள்விகள் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவை,


இந்தத் தாக்குதலில் இரானுக்கு உண்மையில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது?

ஹமாஸ் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியே இரானிய மண்ணில் கொல்லப்பட்டது, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை என இந்த ஆண்டில் தொடர்ச்சியான அவமானங்களைச் சந்தித்திருக்கும் சூழலில், தன்னை ஆதரிக்கும் ஆயுதக்குழுக்கள் வலுவிழந்துள்ள நிலையில், இரான் பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறதா?

மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் அதிகரிக்கவும் நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதற்கும் வித்திடக்கூடிய மற்றுமொரு தருணமாக இது இருக்குமா?

ஹமாஸை இயக்கிய இந்த 6 தலைவர்களும் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு என்ன ஆனார்கள்?


இரானிய அரசு ஊடகம் சொல்வது என்ன?

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: தெஹ்ரானில் என்ன நடக்கிறது? இரான் பதிலடி கொடுக்குமா?பட மூலாதாரம்,Reuters

“இரானிய ஊடகங்களில் வெளியாகும் படங்களும் வீடியோக்களும் அமைதி நிலவுவது போன்ற செய்தியைச் சித்தரிக்க முயல்கின்றன. ஆனால், அந்நாட்டில் சமூக ஊடகங்களில் நிலை முற்றிலும் வேறாக உள்ளது” என்று ஜனநாயக பாதுகாப்பிற்கான அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் பெஹ்னம் பென் தலேப்லு பிபியிடம் கூறுகிறார்.


பிபிசி பாரசீக சேவையைச் சேர்ந்த பஹ்மான் கல்பாசி, இரானில் தற்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.


இரானிய அரசு ஊடகங்கள் தற்போது இந்தத் தாக்குதல்கள் உண்மையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவை தோல்வியுற்றதாகவும் கூறுவதாக அவர் தெரிவித்தார். தாக்குதலுக்கு உள்ளாகும்போது இரான் வழங்கும் பொதுவானதொரு பதில் இது என்றும் கல்பாசி கூறினார்.


“இந்த அணுகுமுறை, பழி வாங்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வழியாக இருக்கக்கூடும். ஆனால், சேதத்தின் அளவைக் காட்டக்கூடிய உறுதியான ஆதாரம் இருந்தால், உயிரிழப்புகள் ஏற்பட்டால், இந்த அணுகுமுறை சிதைந்துவிடும்,” என்கிறார் கல்பாசி.

 


தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும் போது உடனிருந்த யூடியூபர் இர்ஃபான் என்பவர், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதோடு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக இர்ஃபான் மீது காவல்துறையில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகளின் இணை இயக்குநர் புகார் அளித்துள்ளார்.


குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய முந்தைய விவகாரத்தைப் போல அல்லாமல், இம்முறை அவர் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சர்ச்சைக்குரிய வீடியோ அவரது யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? அவரது செயல் குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?


விளம்பரம்


என்ன நடந்தது?

இர்ஃபான் - ஆசிஃபா தம்பதிக்கு கடந்த ஜூலை 24-ஆம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.


குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை தனது யூட்யூப் சேனலில் இர்ஃபான் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் வீட்டில் இருந்து புறப்படுவதில் துவங்கி, குழந்தை பிறந்ததற்கு பிந்தைய தருணம் வரை இடம்பெற்றிருந்தது.


விரைவிலேயே இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகளின் இணை இயக்குநர் சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார்.



"மன்னிப்புக் கேட்டாலும் விடமாட்டோம்"

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "அவரது குழந்தையின் தொப்புள் கொடியை அவரே வெட்டியுள்ளார். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்று தொப்புள் கொடியை வெட்டியிருப்பது ஏற்க முடியாதது. தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் பிரிவு 34, செக்ஷன் 1 -2ஐ மீறக்கூடிய செயல் இது. இந்த மருத்துவ சட்ட விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, அவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அவரை அறுவை சிகிச்சை அரங்கிற்குள் அனுமதித்த மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. யூடியூபர் மீது என்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.


இர்ஃபான் நடத்தும் யூட்யூப் சேனலை 50 லட்சம் சந்தாதார்ரகள் (subscribers) இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பாக, தனது மனைவி கருவுற்றிருக்கும் போது, ஸ்கேன் செய்து பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை அறிவித்தார். அப்போதே இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.


இது தொடர்பாக தமிழக மருத்துவத் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தார் இர்ஃபான். அந்தத் தருணத்தில் அவர் அரசியல் செல்வாக்கால்தான் நடவடிக்கையில் இருந்து தப்பித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.


ஆனால், அதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுத்திருக்கிறார். "கடந்த மே மாதம் இர்ஃபான் தனது குழந்தை ஆணா, பெண்ணா என்பதை துபாயில் ஸ்கேன் செய்துள்ளார். அங்கு இதுபோல சட்டங்கள் இல்லை. அதற்குப் பிறகு இங்கே வந்து தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். மருத்துவ சேவைகள் இயக்குநரகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவர் மன்னிப்புக் கோரினார். துபாயில் ஸ்கேன் செய்ததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த முறை மன்னிப்புக் கேட்டாலும் விடமாட்டோம்", என்று தெரிவித்திருக்கிறார்.


யுவான் சுவாங்: அரசின் தடையை மீறி 4,500கி.மீ பயணித்து இந்தியாவுக்கு வந்த சீன பயணி

20 அக்டோபர் 2024

பகல்-இரவு இல்லாத உலகில் வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுவது ஏன்?


"மகப்பேறு அறுவை சிகிச்சை பல சிக்கல்களை உள்ளடக்கியது"

ஆனால், இது முழுக்கமுழுக்க தவிர்க்க வேண்டிய நடவடிக்கை என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் அமைப்பின் செயலாளர் டாக்டர் சாந்தி.


"இந்த விவகாரத்தில் நாம் பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தை வழக்கமான முறையிலும் அறுவை சிகிச்சை முறையிலும் பிறக்கிறது. வழக்கமான முறையில் பிறக்கும்போது பெண்ணின் உறவினர் ஒருவர் உடனிருக்க இந்தியாவிலும் அனுமதிக்கிறார்கள். உறவினருக்குப் பதிலாக கணவரும் உடனிருக்கலாம். அறுவை சிகிச்சையில் குழந்தை பிறக்கும்போது, பொதுவாக உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அறுவை சிகிச்சையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நெருக்கடியால் (Emergency) அறுவை சிகிச்சை செய்வது. இரண்டாவது, தேர்வுசெய்து (Elective) அறுவை சிகிச்சை செய்வது. வெளிநாடுகளில் தேர்வுசெய்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால் அப்போது உள்ளே இருக்க அனுமதிக்கிறார்கள்.அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும் போது உறவினரை அனுமதிக்கக் கூடாது என சட்டமில்லை என்றாலும், பொதுவாக இந்தியாவில் அனுமதிப்பதில்லை. எப்படிப் பார்த்தாலும் அது ஒரு அறுவை சிகிச்சை. பல சிக்கல்களை உள்ளடக்கியது." என்று அவர் கூறினார்.


மேலும் தொடர்ந்த அவர்,"திடீரென ரத்த அழுத்தம் குறையலாம். உடன் கணவர் இருந்தால், அதைக் கவனிக்கும் மருத்துவர், சத்தம் போட்டு அதை சொல்லலாமா என யோசிப்பார். அல்லது வேறு கவனச் சிதறல்கள் வரலாம். தவிர, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும்போது தொப்புள் கொடியை வெட்டுவது என்பது, அந்த அறுவை சிகிச்சையின் ஒரு பகுதி. அந்த நேரத்தில் கணவர், மற்ற மருத்துவர்களை விலக்கிவிட்டு, தான் வெட்டுவதாக சொல்லக்கூடாது. மற்ற அறுவை சிகிச்சைகளோடு, பிரசவத்திற்கான அறுவை சிகிச்சைகளை ஒப்பிட முடியாது. எந்த சின்ன பிரச்னையும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அறுவை சிகிச்சை செய்யும் குழுவின் நோக்கம் இந்த அறுவை சிகிச்சையை சரியாகச் செய்து, குழந்தையை வெளியில் எடுப்பதுதான். தாய்க்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது. இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருக்கக் கூடாது. எவ்வித கவனச்சிதறலும் இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு நிலையில், இதுபோல கணவர் தொப்புள் கொடியை வெட்டுவது, அதை ஒருவர் படம்பிடிப்பது ஆகியவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்றார்.


தஞ்சை: மராட்டிய மன்னர்களின் கொடூர தண்டனை முறை - கல்வெட்டு கூறும் முக்கிய தகவல்கள்


தொப்புள் கொடியை மருத்துவர் அல்லாத ஒருவர் வெட்டுவதால் என்ன பிரச்னை?

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் மகப்பேறு மருத்துவரான ஷர்மிளா அய்யாவு. "இர்ஃபானை பொருத்தவரை, அவர் முறையாக கையுறை அணியவில்லை. அதேபோல, அவர் அணிந்திருந்த மேலாடையும் முழுமையாக இல்லை. தவிர, அறுவை சிகிச்சையின் போது உறவினரை அறுவை சிகிச்சை நடக்கும் பகுதிக்குள் அனுமதிக்க மாட்டடார்கள். அங்கு ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியம். கருப்பையை வெட்டுவதால், ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். எவ்வளவு சீக்கிரம் தொப்புள் கொடியை வெட்டிவிடுகிறோமா அவ்வளவு நல்லது. அந்தத் தருணத்தில், இன்னொருவரை அழைத்து வெட்டச் சொல்வதெல்லாம் மிகவும் ரிஸ்க். திடீரென ரத்தம் வெளியேறுவது அதிகரித்தால் என்ன ஆகும்? தேவையில்லாத பிரச்னை இது" என்கிறார் டாக்டர் ஷர்மிளா.


ஆனால், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதுபோல அனுமதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டும் மகப்பேறு மருத்துவரான உமா ராம், "அங்கெல்லாம் கணவரும் மருத்துவரைப் போலவே உடையணிந்து, கிருமி நீக்கம் செய்யப்பட்டு அறுவை சிகிச்சை அறைக்குள் வருவார்கள். ஏனென்றால், இது ஒரு அறுவை சிகிச்சை. சற்று தவறினாலும் தொற்று ஏற்பட்டுவிடும். ஆகவே மிகக் கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார்.


இர்ஃபான் தரப்பு கூறியது என்ன?

2019 ஆம் ஆண்டின் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் பிரிவு 34ல், "மாநிலப் பதிவேட்டிலோ, தேசியப் பதிவேட்டிலோ மருத்துவராக பதிவுபெறாதவர்கள் தகுதி பெற்ற மருத்துவரைப் போல மருத்துவம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது" எனக் குறிப்பிடுகிறது. தற்போது மாநில அரசு இந்தப் பிரிவின் கீழ்தான் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க முயல்கிறது.


இது தொடர்பாக இர்ஃபானின் கருத்தைப் பெற முயன்றபோது, அவர் தரப்பில் பேசியவர்கள் இர்ஃபான் வெளிநாட்டில் இருப்பதாகவும் விரைவில் தொடர்புகொள்வார் என்று மட்டும் தெரிவித்தனர். தற்போது அந்த வீடியோ, அவரது யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட மருத்துவமனை இதுவரை இதுதொடர்பாக எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.