Showing posts with label world. Show all posts

 அமெரிக்காவின் பல முக்கிய பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை எதிர்த்தும், இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரியும் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


அமெரிக்காவின் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், பல முக்கியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இது அமெரிக்காவின் உயர்கல்வி வளாகங்களைப் புரட்டிப் போட்டுள்ளது.


கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து சுமார் 1,200 பேரைக் கொன்றது. அதற்குப் பதிலடியாக காஸாவின்மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இதுவரை 34,000க்கும் அதிகமான பாலத்தீனர்களை கொன்றிருக்கிறது. காஸாவில் மனிதாபிமான சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


இந்தச்சம்பவங்களைக் கண்டித்தும், காஸாவில் அமைதி வேண்டியும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் நடந்து வருவதால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.


இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளுகக்கு எதிராகப் போராடும் மாணவர்களை 'யூத வெறுப்பாளர்கள்' என்று யூத மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொலம்பியா மற்றும் வேறு சில பல்கலைக் கழகங்களில் உள்ள யூத மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைப் போல் உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.


ஆயினும் பல யூத மாணவர்களும் இஸ்ரேலுக்கு எதிரான இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.


அமெரிக்க மாணவர்கள் போராட்டம், இஸ்ரேல் காஸா போர், பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆஸ்டின் நகரத்தில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் மாணவப் போராட்டக்காரர்கள்

மாணவர்கள் கைது, வன்முறை

முதலில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தத் துவங்கினர்.


பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்ட முகாம்கள் தோன்றின. இதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்தன.


கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டம் நடத்தியதற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரத்தில், போராட்டக்காரர்களை கைது செய்யுமாறு மாகாண துருப்புகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.


அட்லாண்டா நகரத்தில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர்.


இஸ்ரேல் - பாலத்தீன மோதல்: எளிய வடிவில் முழுமையான வரலாறு

9 அக்டோபர் 2023

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தது ஏன்? செயற்கை இனிப்பூட்டிகளால் என்ன ஆபத்து?

25 ஏப்ரல் 2024

ஷெங்கன் விசா: இந்தியர்கள் இனி எளிதில் ஐரோப்பா செல்லும் வகையில் விதிகள் மாற்றம் - முழு விவரம்

25 ஏப்ரல் 2024

போராட்டம் எப்படித் துவங்கியது?

அமெரிக்க மாணவர்கள் போராட்டம், இஸ்ரேல் காஸா போர், பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் கூடாரம் அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

முதலில் போராட்டத்தைத் துவங்கியது நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள். பல்கலைக்கழக வளாகத்தில், பாலத்தீனத்தை ஆதரித்து மாணவர்கள் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடனர். இதனால் இந்தப் பல்கலைக்கழகத்தின்மீது யூத எதிர்ப்புக் குற்றமும் சாட்டப்பட்டது.


கடந்த வாரம் இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் போராட்டத் தளத்தை அகற்றுமாறு போலிசாரிடம் கேட்டதை அடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட மாணவப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.


ஆனால் இந்தக் கைதுகள் மாணவர்களின் போராட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. கைதுகள் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகும் மாணவர்கள் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர்.


அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியான இல்ஹான் ஓமரின் மகளும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்டார். பிபிசியிடம் பேசிய அவர், இந்த இயக்கம் வெகுசில மாணவர்களுடன் தொடங்கியது, ஆனால் இந்தக் கைதுகள் காரணமாக விரைவாகப் பரவியது, என்றார்.


கடந்த வியாழன் அன்று கொலம்பியாவில் பிபிசியிடம், "இது வெறும் 70 மாணவர்களுடன் தொடங்கிய இயக்கம்" என்று கூறினார்.


"கொலம்பியா பல்கலைக்கழகம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்ததால் போராட்டம் இப்போது தேசிய அளவில் பரவியுள்ளது," என்றார்.


இதைத்தொடர்ந்து அமெரிக்கா எங்கிலும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் பாலத்தீன ஆதரவுப் போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். ஹார்வார்ட், யேல், எமரி, தெற்கு கலிபோர்னியா, ஜார்ஜ்டவுன், டெக்சாஸ், நியூயார்க், எமெர்சன் ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பாலத்தீன ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர்.


பிராமண எதிர்ப்பு இயக்கம், பாலியல் கல்வி வழக்குகளில் அம்பேத்கர் முன்வைத்த வாதங்கள் என்ன தெரியுமா?

14 ஏப்ரல் 2024

டைட்டானிக் மூழ்கியபோது பலகையைப் பிடித்துக் கொண்டு தப்பியவர், பிபிசியிடம் விவரித்த பயங்கர நினைவுகள்

17 ஏப்ரல் 2024

பட்டமளிப்பு விழா ரத்து

அமெரிக்க மாணவர்கள் போராட்டம், இஸ்ரேல் காஸா போர், பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அட்லாண்டா நகரத்தில் எமரி பல்கலைக் கழகத்தில் காவல்துறையால் தடுப்புக் காவலில் எடுக்கப்படும் ஒரு மாணவர்

லாஸ் ஏஞ்சல்ஸில் நகரத்தில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of Southern California - USC), பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி எதிர்வரும் மே 10ஆம் தேதி நடக்கவிருந்த முக்கிய பட்டமளிப்பு விழாவை ரத்து செய்துள்ளது.


அந்தப் பல்கலைக்கழகம், ஓர் அறிக்கையில் பட்டமளிப்பு விழா அன்று, வளாகத்திற்கு "பாரம்பரியமாக மாணவர்கள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 65,000 பேர் வருவார்கள். பல்கலைக் கழகத்தால் முக்கிய மேடை விழாவை நடத்த முடியாது," என்று கூறியது.


இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த புதன்கிழமை, அத்துமீறி நுழைந்ததற்காகக் குறைந்தது 93 பேரைக் கைது செய்த போலீசார், போராட்டக்காரர்கள் அமைத்திருந்த முகாமை அகற்ற உத்தரவிட்டனர்.


தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், குறிப்பிடப்படாத பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக முஸ்லிம் மாணவியான அஸ்னா தபஸ்ஸும் நிகழ்த்தவிருந்த பட்டமளிப்பு விழா உரை ரத்து செய்யப்படுகிறது என அறிவித்திருந்தது.


பூமிக்குள் புதைந்து கிடக்கும் தங்கம் விண்ணில் இருந்து எப்படி வந்தது? விடைதேடும் விஞ்ஞானிகள்

12 ஏப்ரல் 2024

நம் உடலுக்கு காபியின் தேவை என்ன? அது அதிகரித்தாலும் குறைந்தாலும் என்ன ஆகும்?

11 ஏப்ரல் 2024

கலவரமாக மாறிய அமைதிப் போராட்டம்

அமெரிக்க மாணவர்கள் போராட்டம், இஸ்ரேல் காஸா போர், பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எமரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர்.

அட்லாண்டா நகரில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், பாலத்தீனத்தினர்களுக்கு ஆதரவாக மட்டுமின்றி, அப்பகுதியில் ஒரு காவல்துறை பயிற்சி மையம் அமையவிருப்பதை எதிர்த்தும் போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தனர். இந்தப் பயிற்சி மையம் அமைவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


வியாழக்கிழமை (ஏப்ரல் 25) அன்று எமரி பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர்.


போராட்டம் நடத்தும் மாணவர்களைக் கட்டுப்படுத்த ரசாயன எரிச்சலூட்டிகளைப் பயன்படுத்தியதாக அப்பகுதியின் காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்படுவதுபோல மாணவர்கள் மீது ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.


போலீசாரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்ட எமரி பல்கலைக் கழகத்தின் தத்துவத்துறைத் தலைவர் நோயல் மெச்-அஃபீ, முதலில் போராட்டம் அமைதியானதாக இருந்ததாகத் தெரிவித்தார். மாணவர்கள் முன்னேறி நடக்கத் துவங்கியதும், காவல்துறையினரும் செயல்படத் துவங்கினர் என்றார். "அமைதியான போராட்டமாக இருந்தது, திடீரென ஒரு நிமிடத்தில் கலவரமாக மாறிவிட்டது," என்றார் அவர்.


கன்னெடிகட் மாகாணத்தில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தின் போராட்டத் தலைவரும் சட்டக்கல்வி மாணவருமான சிஸாடோ மிமுரா, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், தங்கள் பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலரும் காஸாவில் நடக்கும் இன அழித்தொழிப்பிற்கு நிதியும் ஆயுதங்களும் வழங்குவது குறித்து போராட்டக்காரர்கள் மிகவும் கவலையடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.


 


மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் கட்சி அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அதிபர் முய்சுவின் அதிகாரம் மேலும் வலுவாகிறது.


மொத்தம் 93 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவின் மக்களவையில் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பி.என்.சி) 66 இடங்களை வென்றதாக முதற்கட்ட முடிவுகள் சொல்கின்றன.


சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேண முய்சு கடைபிடிக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


சீனாவுக்கு ஆதரவானவர் என்று பரவலாகக் கருதப்படும் முய்சு, மாலத்தீவில் இந்தியா நீண்ட காலமாகச் செலுத்திவரும் செல்வாக்கைக் குறைக்க விரும்புகிறார்.


உள்ளூர் ஊடகங்கள் முய்சுவின் கட்சியின் வெற்றியை ‘சூப்பர் மெஜாரிட்டி’ என்று விவரித்துள்ளன. அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அக்கட்சி பாராளுமன்றத்தில் எட்டியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


‘மாலத்தீவில் அனைத்தையும் கட்டுப்படுத்தும் முய்சு’

பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) 15 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) வாக்கெடுப்புக்கு முன்னர் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கொண்டிருந்தது.


மாலத்தீவு ஆய்வாளரும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருமான அசிம் ஜாஹிர் இதுகுறித்து கூறுகையில், "முய்சுவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை,” என்றார்.


"அரசியல் சார்ந்து பார்த்தால், மாலத்தீவின் அனைத்து அமைப்புகளும் இப்போது முய்சுவின் கட்டுப்பாட்டில் உள்ளன். அவருக்கு மாலத்தீவு நாடாளுமன்றத்தில் போதுமான எண்ணிக்கை இருப்பதால், அவரால் நீதித்துறையையும் கட்டுப்படுத்த முடியும்," என்று ஜாஹிர் கூறுகிறார்.


முய்சு கடந்த ஆண்டு இறுதியில் ஆட்சிக்கு வந்தார். அவரது தேர்தல் பிரசாரம், முந்தைய அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டிருந்தது. அவர் இன்னும் டெல்லிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை.


மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்க, அங்குள்ள அனைத்து இந்தியப் படைகளையும் திருப்பி அனுப்புவதாக அவர் உறுதியளித்துள்ளார்.


சென்னையில் இருந்து ஒரே நாளில் சென்று வரக் கூடிய 5 அருவிகள் - குடும்பத்துடன் செல்லலாம்

21 ஏப்ரல் 2024

இந்தியா: 4.7 கோடி ஆண்டுகள் முன் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி பாம்பு' - எங்கே? எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

21 ஏப்ரல் 2024

பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

18 ஏப்ரல் 2024

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனாவுடன் நெருங்கிய உறவுகளை அடைவதற்கு முய்சு கொண்டிருக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

சீனாவுடனான முய்சுவின் நெருக்கம்

மீட்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக சில வருடங்களுக்குமுன் இந்தியா மாலத்தீவுக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானத்தைக் கொடுத்திருந்தது. அவற்றைப் பராமரிக்கவும் இயக்கவும் சுமார் 85 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் தங்கியிருந்தனர்.


மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டன. அவர்களுக்குப் பதிலாக அங்கு இந்தியாவின் தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இந்திய துருப்புகள் மே 10-ஆம் தேதி மாலத்தீவை விட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய துருப்புகளை திருப்பி அனுப்புவதற்கான முய்சுவின் முடிவு, இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகளை மோசமாக்கிவிட்டது. சீனா இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது போல தோன்றுகிறது.


முய்சு கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்று முதலீடுகளுக்கான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.


தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் விளக்கேற்றி வழிபடும் இந்து கோயில் எங்கே உள்ளது தெரியுமா?

10 ஏப்ரல் 2024

உங்கள் சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்

19 ஏப்ரல் 2024

இரண்டு பேருந்து நீளமுள்ள ராட்சத மீன் பல்லியின் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு

9 மணி நேரங்களுக்கு முன்னர்

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துபாயில் நடந்த ஒரு மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோதியைச் சந்தித்துப் பேசும் முய்சு. ஆனால் இதுவரை முய்சு அரசமுறைப் பயணமான இந்தியா வரவில்லை

‘மாலத்தீவுடனான உறவுகளை இந்தியா பராமரிப்பது முக்கியம்’

சென்ற மார்ச் மாதம் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளிப்பது போன்ற ‘ராணுவ உதவிகளுக்கான’ ஒப்பந்தத்தில் சீனாவுடன் மாலத்தீவு கையெழுத்திட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் முன்பு மாலத்தீவு ராணுவத்துக்குப் பயிற்சி அளித்து வந்தன.


"இப்போது ஒரு சமநிலையான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தியா மாலத்தீவுடனான உறவுகளை நன்றாக நிர்வகிக்காமல், முய்சுவுக்கு உதவ மறுத்தால், அவர் வெளிப்படையாக பெய்ஜிங்கைச் சார்ந்திருப்பார்," என்று ஜாஹிர் கூறுகிறார்.


ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவானதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இது 2019-இல் பதிவான 82% வாக்குகளை விடக் குறைவு.


முதற்கட்டத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான எம்.டி-பி-யின் மூத்த தலைவர் ஒருவர் முய்சுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


"எம்.டி.பி-யின் எம்.பி-க்கள் நமது ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், பொறுப்பான எதிர்க்கட்சியாக அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதற்கும் தயாராக இருப்பார்கள்," என்று அக்கட்சியின் தலைவர் ஃபயாஸ் இஸ்மாயில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

 


மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் கட்சி அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அதிபர் முய்சுவின் அதிகாரம் மேலும் வலுவாகிறது.


மொத்தம் 93 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவின் மக்களவையில் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பி.என்.சி) 66 இடங்களை வென்றதாக முதற்கட்ட முடிவுகள் சொல்கின்றன.


சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேண முய்சு கடைபிடிக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


சீனாவுக்கு ஆதரவானவர் என்று பரவலாகக் கருதப்படும் முய்சு, மாலத்தீவில் இந்தியா நீண்ட காலமாகச் செலுத்திவரும் செல்வாக்கைக் குறைக்க விரும்புகிறார்.


உள்ளூர் ஊடகங்கள் முய்சுவின் கட்சியின் வெற்றியை ‘சூப்பர் மெஜாரிட்டி’ என்று விவரித்துள்ளன. அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அக்கட்சி பாராளுமன்றத்தில் எட்டியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


‘மாலத்தீவில் அனைத்தையும் கட்டுப்படுத்தும் முய்சு’

பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) 15 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) வாக்கெடுப்புக்கு முன்னர் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கொண்டிருந்தது.


மாலத்தீவு ஆய்வாளரும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருமான அசிம் ஜாஹிர் இதுகுறித்து கூறுகையில், "முய்சுவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை,” என்றார்.


"அரசியல் சார்ந்து பார்த்தால், மாலத்தீவின் அனைத்து அமைப்புகளும் இப்போது முய்சுவின் கட்டுப்பாட்டில் உள்ளன். அவருக்கு மாலத்தீவு நாடாளுமன்றத்தில் போதுமான எண்ணிக்கை இருப்பதால், அவரால் நீதித்துறையையும் கட்டுப்படுத்த முடியும்," என்று ஜாஹிர் கூறுகிறார்.


முய்சு கடந்த ஆண்டு இறுதியில் ஆட்சிக்கு வந்தார். அவரது தேர்தல் பிரசாரம், முந்தைய அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டிருந்தது. அவர் இன்னும் டெல்லிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை.


மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்க, அங்குள்ள அனைத்து இந்தியப் படைகளையும் திருப்பி அனுப்புவதாக அவர் உறுதியளித்துள்ளார்.


சென்னையில் இருந்து ஒரே நாளில் சென்று வரக் கூடிய 5 அருவிகள் - குடும்பத்துடன் செல்லலாம்

21 ஏப்ரல் 2024

இந்தியா: 4.7 கோடி ஆண்டுகள் முன் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி பாம்பு' - எங்கே? எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

21 ஏப்ரல் 2024

பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

18 ஏப்ரல் 2024

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனாவுடன் நெருங்கிய உறவுகளை அடைவதற்கு முய்சு கொண்டிருக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

சீனாவுடனான முய்சுவின் நெருக்கம்

மீட்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக சில வருடங்களுக்குமுன் இந்தியா மாலத்தீவுக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானத்தைக் கொடுத்திருந்தது. அவற்றைப் பராமரிக்கவும் இயக்கவும் சுமார் 85 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் தங்கியிருந்தனர்.


மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டன. அவர்களுக்குப் பதிலாக அங்கு இந்தியாவின் தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இந்திய துருப்புகள் மே 10-ஆம் தேதி மாலத்தீவை விட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய துருப்புகளை திருப்பி அனுப்புவதற்கான முய்சுவின் முடிவு, இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகளை மோசமாக்கிவிட்டது. சீனா இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது போல தோன்றுகிறது.


முய்சு கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்று முதலீடுகளுக்கான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.


தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் விளக்கேற்றி வழிபடும் இந்து கோயில் எங்கே உள்ளது தெரியுமா?

10 ஏப்ரல் 2024

உங்கள் சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்

19 ஏப்ரல் 2024

இரண்டு பேருந்து நீளமுள்ள ராட்சத மீன் பல்லியின் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு

9 மணி நேரங்களுக்கு முன்னர்

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துபாயில் நடந்த ஒரு மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோதியைச் சந்தித்துப் பேசும் முய்சு. ஆனால் இதுவரை முய்சு அரசமுறைப் பயணமான இந்தியா வரவில்லை

‘மாலத்தீவுடனான உறவுகளை இந்தியா பராமரிப்பது முக்கியம்’

சென்ற மார்ச் மாதம் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளிப்பது போன்ற ‘ராணுவ உதவிகளுக்கான’ ஒப்பந்தத்தில் சீனாவுடன் மாலத்தீவு கையெழுத்திட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் முன்பு மாலத்தீவு ராணுவத்துக்குப் பயிற்சி அளித்து வந்தன.


"இப்போது ஒரு சமநிலையான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தியா மாலத்தீவுடனான உறவுகளை நன்றாக நிர்வகிக்காமல், முய்சுவுக்கு உதவ மறுத்தால், அவர் வெளிப்படையாக பெய்ஜிங்கைச் சார்ந்திருப்பார்," என்று ஜாஹிர் கூறுகிறார்.


ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவானதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இது 2019-இல் பதிவான 82% வாக்குகளை விடக் குறைவு.


முதற்கட்டத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான எம்.டி-பி-யின் மூத்த தலைவர் ஒருவர் முய்சுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


"எம்.டி.பி-யின் எம்.பி-க்கள் நமது ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், பொறுப்பான எதிர்க்கட்சியாக அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதற்கும் தயாராக இருப்பார்கள்," என்று அக்கட்சியின் தலைவர் ஃபயாஸ் இஸ்மாயில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

 


தனது விருதை காசாவுக்கு அர்ப்பணிப்பதாக, இந்திய நடிகை அறிவிப்பு


சிறந்த நடிகைக்கான  OTT  விருதை வென்ற, நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, தனது விருதை பலஸ்தீனத்திற்கு - காசாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். 


குறித்த விருதை பெற்றுக்கொண்ட பின்னர் அவர் ஆற்றிய சிறு குறிப்பொன்றை பகிர்ந்துள்ள பலஸ்தீன ஊடகங்கள் அவரது உரை உணர்வு மிக்கதாக இருந்ததாக வர்ணித்துள்ளன.

 


இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.


இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது.


இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும்.


இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது.


இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது.


அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.


ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.


இஸ்ரேல் - இரான் இடையே என்ன பகை? நண்பர்கள் பகையாளி ஆனது எப்படி?

36 நிமிடங்களுக்கு முன்னர்

இரான் செலுத்திய ஏவுகணைகள், ட்ரோன்களை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது எப்படி?

15 ஏப்ரல் 2024

பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி

இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது.


பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது.


Instagram பதிவை கடந்து செல்ல

Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.


ஏற்பு மற்றும் தொடரவும்

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Instagram பதிவின் முடிவு

எண்ணெய், தங்கம் விலை உயர்வு

இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன.


வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது.


ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன.






கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.


இரானிய அமைச்சர் எச்சரிக்கை

இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.


"இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தா


இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடக்கிறது
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் இன்று ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடக்கிறது
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் இன்று மக்களைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கிறது
‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம்’ – பிரதமர் மோதி
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது" என்று பதிவிட்டுள்ளார்.

 



பதில் தாக்குதலை நடத்த இஸ்ரேல் முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிக்கை!

🔹இஸ்ரேல் மீது தாக்குதலை தொடரப் போவதில்லை; சிரியாவில் ஈரான் தூதரகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடிக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது
🔹ஈரான் தூதரகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்காத ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை ஈரான் கடுமையாக சாடியுள்ளது
🔹ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடி கொடுக்க முற்பட்டால், அமெரிக்கா அதில் பங்கேற்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
🔹ஈரானின் தாக்குதல் குறித்து ஐநா பாதுகாப்புக் கவுன்சிலிடம் இஸ்ரேல் முறையிட்டுள்ளது; ஐநா பாதுகாப்புக் கவுன்சில் நாளை மதியம் கூடுகிறது
🔹சிரியா, ஈராக், ஜோர்டான், எகிப்து லெபனான் உள்ளிட்ட நாடுகளில் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது

 


இஸ்ரேல் மீதான ஈரானின் ராணுவத் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம்!

இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் பாதுகாப்பிற்கு பிரிட்டன் துணை நிற்கும் - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிக்கை

 


ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அதன் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

‘குறிப்பிட்ட இலக்குகளை’ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிபிஎஸ் செய்திகளின்படி, அமெரிக்கா சில ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், ‘இந்த அச்சுறுத்தல்கள் தேவையான இடங்களில் தடுக்கப்படுகின்றன’ என்று கூறியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

என்ன நடந்தது?
இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?
ஆளில்லா விமானம் இதுவரை இஸ்ரேலை வந்தடைந்ததா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரான் இஸ்ரேலில் இருந்து 1,800 கி,மீ தொலைவில் உள்ளது. அதேநேரம், ஆளில்லா விமானங்களை எங்கு வீழ்த்தியது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல், லெபனான் மற்றும் இராக் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. சிரியா, ஜோர்டான் ஆகியவை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளை எச்சரிக்கைப்படுத்தி வைத்துள்ளன.

ஏப்ரல் 1-ம் தேதி சிரிய துணைத் தூதரகம் தாக்கப்பட்ட பிறகு, இரான் பழிவாங்கும் விதமாகப் பேசியது. இந்தத் தாக்குதலில் உயர்மட்ட தளபதி உள்பட 7 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என இரான் கூறியது. ஆனால், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ இல்லை.

இஸ்ரேல் ராணுவம் கூறுவது என்ன?
இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?பட மூலாதாரம்,ISRAELI PM'S OFFICE
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, “இரான் மண்ணில் இருந்து இஸ்ரேலின் மீது இரான் நேரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது,” என்றார்.

“இரான் இஸ்ரேலை நோக்கி அனுப்பும் கொலையாளி ட்ரோன்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இது மிகவும் தீவிரமானது மற்றும் அபாயகரமானது,” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் வானில் எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இரான் ஆளில்லா விமானத்தை விடுவித்ததைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“தற்காப்பு அல்லது தாக்குதல் என்ற எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் தேசம் பலமானது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வலுவாக உள்ளது. மக்கள் வலிமையானவர்கள்,” என்றார்.

மேலும், அமெரிக்காவுடன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றூம் பல நாடுகளும் எங்களுக்கு ஆதரவளித்து வருவதைப் பாராட்டுவதாக நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?பட மூலாதாரம்,X/@POTUS
இந்த வாரத் தொடக்கத்தில், இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இரான் இஸ்ரேலை தாக்கினால், இரானுக்குள் பதிலடியைக் கொடுக்கும் என்று எச்சரித்தனர்.

இரான் தாக்குதலின் செய்திக்குப் பிறகு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஏட்ரியன் வாட்சன், இஸ்ரேலை பாதுகாப்பதில் அதிபர் பைடன் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

இரானின் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேல் மக்களுடன் அமெரிக்கா நின்று அவர்களைப் பாதுகாக்கும் என்றார்.

“அதிபர் பைடன் தெளிவாக இருக்கிறார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் ஆதரவு உறுதியாக உள்ளது.” என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக், இரானின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, இஸ்ரேல் மற்றும் அதன் அனைத்து பிராந்திய கூட்டாளிகளின் பாதுகாப்பிற்காக நிற்பதாக உறுதியளித்துள்ளார்.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானின் தூதரகம் மீதான தாக்குதல் உட்பட, இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இரானிய ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவான ஐ.ஆர்.ஜி.சி கூறுகிறது.

கவலை தெரிவித்த ஐ.நா.
இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?பட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு,ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்று மாலை இரான் இஸ்லாமிய குடியரசினால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை உடனடியாக நிறுத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் மீது இரானின் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்திற்காக ஞாயிற்றுக்கிழமை கூடும் என்று அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் வனேசா ஃப்ரேசியருக்கு இஸ்ரேல் எழுதிய கடிதத்தில், இந்த தாக்குதல்கள் "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புல்லா மற்றும் ஏமனில் ஹூத்திகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இரான் தனது சர்வதேச கடமைகளை மீறுவதாகவும், "பல ஆண்டுகளாக ஸ்திரமின்மையின் சிற்பியாக" இருப்பதாகவும் அந்தக் கடிதம் குற்றம் சாட்டியுள்ளது.

"தாக்குதல்களின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. மேலும், இது இஸ்ரேலின் இறையாண்மை, சர்வதேச சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அப்பட்டமாக மீறுவதாகும்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரானிய ஆயுதப் படைகளின் முதன்மைப் பிரிவான இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு இஸ்ரேல் கோரியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு இரான் எழுதிய கடிதத்தில், "ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51-வது பிரிவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி தற்காப்புக்காகவும், இஸ்ரேலின் தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாகவும்" செயல்பட்டதாகக் கூறியுள்ளது.

 


அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் கும்பல் கத்தியால் குத்திய இஸ்லாமிய பயங்கரவாதியின் முதல் பலியாக ஒரு தாயும் அவரது குழந்தையும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பல பேர் கொல்லப்பட்டனர்.

 


பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது!

ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோருடன் இணைந்து தொடங்கிய நிறுவனத்தில் ரூ.4.3 கோடி வரை மோசடி செய்ததாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வைபவ் பாண்டியாவை கைது செய்தனர்


 ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் 7 அன்று காஸா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, சுமார் 1200 பேரைக் கொன்றனர், நூற்றுக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இத்தாக்குதல் நடந்து ஆறு மாதங்களாகி விட்டன.


இதற்குப் பதிலடியாக, பணயக் கைதிகளை ஹமாஸ் பிடியிலிருந்து விடுவித்து அவர்களை வீடு திரும்பச் செய்வோம் என்றும் “ஹமாஸை அழித்து ஒழிப்போம்” என்றும் இஸ்ரேல் உறுதியளித்தது.


இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடரும் போரில், குறைந்தது 33,000 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் காஸா பகுதியின் பெரும்பகுதி அழிக்கப்பட்டதாகவும், ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றதுடன், காஸாவில் பூமிக்கடியில் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தும் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பை அழித்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.


பிபிசி வெரிஃபை (BBC Verify) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்தது. மேலும், இஸ்ரேலின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்தது.


உலக சுகாதார தினம்: மன அழுத்தம், மனச்சோர்வை கண்டறிவது எப்படி? அறிகுறிகள் என்ன?

7 ஏப்ரல் 2024

கச்சத்தீவு: இந்திரா காந்தியிடம் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் கூறியது என்ன? இன்றைய ராணி விளக்கம்

6 ஏப்ரல் 2024

போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

யாஹ்யா சின்வார் உட்பட பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் காஸாவில் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.


எத்தனை ஹமாஸ் தலைவர்கள் இறந்தார்கள்?

அக்டோபர் 7 ஆம் தேதிக்கு முன்னர், காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 30 ஆயிரம் பேர் இருந்ததாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தளபதிகளை மேற்கோள் காட்டி கூறப்பட்டது.


ஹமாஸின் மிகப்பெரிய தலைவர் இஸ்மாயில் ஹனியா உட்பட பல மூத்த அரசியல் பிரமுகர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆனால், அதன் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பலர் காஸாவிற்குள் இருப்பதாக நம்பப்படுகிறது.


போர் தொடங்கியதில் இருந்து சுமார் 13 ஆயிரம் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.


கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் தலைவர்களின் பெயர்களையும் இஸ்ரேல் வெளியிட்டது.


அக்டோபர் மாதம் முதல் இதுபோன்ற 113 பேரின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் போரின் முதல் மூன்று மாதங்களில் உயிரிழந்தனர். இதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் வரை காஸாவில் எந்த மூத்த ஹமாஸ் தலைவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை.


மார்ச் 26 அன்று, ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசாவை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.


இஸ்ரேலில் மிகவும் தேடப்படும் நபராகக் கருதப்படும் இசா, இப்போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்தத் தலைவர் ஆவார்.


அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாக அமெரிக்கா கூறியது. ஆனால் ஹமாஸ் இசாவின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை.


கொல்லப்பட்ட மூத்த ஹமாஸ் தலைவர்களின் பெயர்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. ஆனால், இவர்கள் ஹமாஸின் உறுப்பினர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாது.


இப்பட்டியலில் ஹமாஸ் குழுவில் அல்லாதவர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவர்களுள் ஒருவர் ஒருவர் முஸ்தஃபா துரையா. இவர், தெற்கு காஸாவில் சுயாதீன பத்திரிக்கையாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, ​​ஜனவரி மாதம் அவரது வாகனம் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளானது.


மேலும், இப்பட்டியலில் சிலரது பெயர்கள் இருமுறை குறிப்பிடப்பட்டிருந்தன. அதனால், அவர்களின் பெயர்களை மொத்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை.


காஸாவிற்கு வெளியே உள்ள ஹமாஸின் அரசியல் தலைவரான சலே அல்-அரூரி இந்த ஆண்டு ஜனவரியில் பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றது.


எனினும், யாஹ்யா சின்வார் உட்பட காஸாவில் உள்ள பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புவதாக நாங்கள் பேசிய நிபுணர்கள் தெரிவித்தனர்.


“ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களை இஸ்ரேல் ராணுவத்தால் அடைய முடியவில்லை” என, சர்வதேச நெருக்கடிக் குழுவில் இஸ்ரேல்-பாலத்தீன விவகாரங்கள் குறித்த மூத்த ஆய்வாளர் மைரவ் சோன்ஸ்சீன் கூறினார்.


"ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து அப்பிரதேசத்தை விடுவிப்பதையும் இஸ்ரேலால் இன்னும் சாதிக்க முடியவில்லை" என்று அவர் கூறுகிறார்.


தோனி போல் ருதுராஜ் கெய்க்வாட் சாதிப்பதில் உள்ள 3 முக்கிய சவால்கள் என்ன தெரியுமா?

6 ஏப்ரல் 2024

பணம் சேர்க்க சீனர்களின் நூதன வழி - அறிமுகமில்லா நபருடன் பெண்கள் கூட்டு சேர்வது ஏன்?

6 ஏப்ரல் 2024

போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?பட மூலாதாரம்,REUTERS

காஸாவில் எத்தனை பணயக்கைதிகள் எஞ்சியுள்ளனர்?

இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 7 ஆம் தேதி 253 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இவர்களுள், தனித்தனி ஒப்பந்தங்கள் அல்லது கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களின் கீழ் 109 பேர் விடுவிக்கப்பட்டனர்.


மூன்று பேரை இஸ்ரேல் ராணுவம் நேரடியாக ராணுவ நடவடிக்கை மூலம் காப்பாற்றியது.


பணயக் கைதிகள் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்ட மூவரும் இவர்களில் அடங்குவர்.


பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுள் உயிருடன் உள்ளவர்களில், இளையவரின் வயது 18 என்றும், மூத்தவரின் வயது 85 என்றும் கூறப்படுகிறது.


மீதமுள்ள 130 பணயக்கைதிகளில், இஸ்ரேலின் கூற்றுப்படி, 34 பேர் இறந்துள்ளனர்.


இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியாது.


ஹமாஸால் பிடிக்கப்பட்ட இரண்டு இளம் பணயக்கைதிகள் ஏரியல் மற்றும் ஃபிர். இருவரும் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நேரத்தில், முறையே 4 வயது மற்றும் 9 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. இருவரும் இப்போது இவ்வுலகில் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் மரணம் உறுதி செய்யப்படவில்லை.


பணம் சேர்க்க சீனர்களின் நூதன வழி - அறிமுகமில்லா நபருடன் பெண்கள் கூட்டு சேர்வது ஏன்?

6 ஏப்ரல் 2024

தமிழர்களின் மாடுகளை சிங்கள விவசாயிகள் கொல்வதாக குற்றச்சாட்டு - மட்டக்களப்பு மக்கள் போராட்டம்

5 ஏப்ரல் 2024

போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஹமாஸ் தனது சுரங்கப்பாதை வலையமைப்பு 500 கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளதாக கூறுகிறது, எனினும் இதை உறுதிப்படுத்த முடியாது.


ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பு எந்தளவுக்கு அழிக்கப்பட்டது?

ஹமாஸை அழிப்பதாக உறுதியளித்ததோடு, காஸாவில் பூமிக்கடியில் அக்குழுவினரின் மிகப்பெரிய சுரங்கப்பாதை வலையமைப்பையும் அழிப்பதாக இஸ்ரேல் உறுதியளித்தது.


ஹமாஸ் இந்த சுரங்கப்பாதைகள் வழியாக உணவு மற்றும் மக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.


இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், "காஸா முனையை பொதுமக்களுக்கான ஒரு அடுக்கு என்றும், மற்றொரு அடுக்கு ஹமாஸ் என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஹமாஸ் உருவாக்கிய அந்த இரண்டாவது அடுக்கை அடைய முயற்சிக்கிறோம்" என கடந்த அக்டோபரில் தெரிவித்தார்.


காஸாவின் சுரங்கப்பாதை வலையமைப்பு சுமார் 500 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது என்று ஹமாஸ் முன்னதாக கூறியிருந்தது. இருப்பினும், இந்த தகவலை சுயாதீனமாக சரிபார்க்க வழி இல்லை.


இதுவரை எத்தனை சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன, அவை மொத்த எண்ணிக்கையில் எவ்வளவு என்று இஸ்ரேல் ராணுவத்திடம் கேட்டோம். அதற்கு, "காஸாவில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை பெருமளவில் அழித்துள்ளதாக" இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.


ஹமாஸ் சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை இஸ்ரேல் ராணுவம் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டுள்ளது.


எடுத்துக்காட்டாக, காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் அடியில் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியின் வீடியோ காட்சிகளை நவம்பரில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.


இஸ்ரேல் ராணுவத்தின்படி, அது ஹமாஸின் கட்டளை மையமாக பயன்படுத்தப்பட்டது.


இஸ்ரேல் ராணுவம் இதுவரை எத்தனை நீண்ட சுரங்கப்பாதைகளை கண்டறிந்துள்ளது என்பதை அறிய, காஸாவின் சுரங்கப்பாதைகள் தொடர்பாக அக்டோபர் 7, 2023 மற்றும் மார்ச் 26, 2024 வரை அதன் சமூக ஊடக தளங்களிலும், டெலிகிராமிலும் வெளியிடப்பட்ட செய்திகளை பிபிசி சரிபார்த்தது.


இதில், 198 செய்திகளில், சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் இருந்தன. மற்றொரு 141 செய்திகள், சுரங்கப்பாதையை அழித்தது அல்லது செயலிழக்கச் செய்தது குறித்துக் கூறுகின்றன.


இந்த செய்திகளில் பெரும்பாலானவை சுரங்கப்பாதைகளின் இருப்பிடம் தொடர்பான துல்லியமான விவரங்களை வழங்கவில்லை. எனவே, இஸ்ரேல் ராணுவம் எத்தனை சுரங்கங்களை கண்டுபிடித்தது அல்லது அழித்தது என்பதை உறுதிப்படுத்த முடியாது.


காஸாவில் பூமிக்கடியில் உள்ள இந்த வலைப்பின்னல் அமைப்பிலான சுரங்கப்பாதை பாதைகளில் வெவ்வேறு அளவுகளில் அறைகள், அத்துடன் சுரங்கப்பாதை மேற்பரப்பை சந்திக்கும் ஒரு புள்ளி உட்பட பல கூறுகளால் ஆனது.


நாங்கள் பகுப்பாய்வு செய்த செய்திகளில், 36 செய்திகள், மொத்தம் 400 சுரங்கவாயிற்குழிகள் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இஸ்ரேலின் ரீச்மேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சுரங்கப்பாதை வழி போர்களில் நிபுணருமான டாக்டர். டாப்னே ரிச்மண்ட், ஒரு சுரங்கவாயிற்குழியை சுரங்கப்பாதையுடன் ஒன்றாக தொடர்புப்படுத்துவது தவறாக வழிநடத்தும் என்று கூறுகிறார்.


இந்த சுரங்கவாயிற்குழிகளை அழித்த பிறகும் சுரங்கப்பாதை வலையமைப்பு அப்படியே உள்ளது என்று அவர் கூறுகிறார். "இந்தப் போரில் சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.


அமெரிக்கா மோதி அரசை எதிர்க்கிறதா? சிஏஏ, அரவிந்த் கேஜ்ரிவால் விவகாரங்களில் தலையிடுவது ஏன்?

5 ஏப்ரல் 2024

உடலில் பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் நபர் - உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்

5 ஏப்ரல் 2024

போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

காஸாவில் பெரும்பாலான கட்டடங்கள் அழிக்கப்பட்டன.


பாலத்தீனர்களுக்கு ஏற்பட்ட இழப்பு

காஸாவில் வாழும் பாலத்தீனர்கள் இஸ்ரேலின் போர் நோக்கங்களுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று.


ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


ஏப்ரல் 5 அன்று அமைச்சகம் வெளியிட்ட தரவின் படி, கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதைக் காட்டுகிறது.


ஹமாஸ் இலக்குகளை அழிக்க இஸ்ரேலிய படைகளின் முயற்சிகளுக்கு மத்தியில் பலர் இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.


ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காஸாவில் உள்ள 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


குடியிருப்புப் பகுதிகள் பாழடைந்து, பரபரப்பாக இருந்த சாலைகள் தற்போது ஒன்றும் இல்லாமல் ஆகியுள்ளன.


கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.


அக்டோபர் 7 முதல், காஸாவின் 56 சதவீத கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் இடிக்கப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது.


போர் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகும், இஸ்ரேல் தனது போர் நோக்கங்களை அடைந்துவிட்டதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை

 


காஸாவில் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலை தொடுத்தது. சுமார் 1200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. நூற்றுக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகவும் கஹமாஸ் பிடித்துச் சென்றது.


இதற்கு பதிலடியாக, ஹமாஸை ஒழித்துக்கட்டுவோம், ஒருவரையும் விடாமல் வேர் அறுப்போம் என சூளூரைத்த இஸ்ரேல் காஸா மீது போர் தொடுத்தது.


போர் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றதுடன், காஸாவில் பூமிக்கடியில் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தும் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பை அழித்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.


பிபிசி வெரிஃபை (BBC Verify) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்தது. இஸ்ரேலின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள ஆதாரங்களையும் ஆய்வு செய்தது.


அக்டோபர் 7 ஆம் தேதிக்கு முன்னர், காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 30 ஆயிரம் பேர் இருந்ததாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தளபதிகளை மேற்கோள் காட்டி கூறப்பட்டது.


ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா உட்பட பல மூத்த அரசியல் பிரமுகர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆனால், அதன் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பலர் காஸாவிற்குள் இருப்பதாக நம்பப்படுகிறது.


போர் தொடங்கியதில் இருந்து சுமார் 13 ஆயிரம் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.


இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி ஆறு மாதங்களாகி விட்டன. இஸ்ரேலால் ஹமாஸை முழுமையாக ஒழிக்க முடிந்ததா?


ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பை பெருமளவில் அழித்துவிட்டதாக இஸ்ரேல் சொல்வது எந்தளவுக்கு உண்மை? பணயக் கைதிகளின் நிலைமை என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.


 தைவானின் கிழக்குக் கடற்கரையில் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 3-ஆம் தேதி) 7.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தைவான் தீவு மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையத்தின் படி, இந்த நிலநடுக்கத்தின் தோற்றப்புள்ளி, தைவானின் ஹுவாலியன் (Hualien) நகருக்கு தெற்கே 18.கி.மீ. தொலைவில் உள்ளது.


இந்த நிலநடுக்கம், இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு (தைவான் நேரப்படி காலை 07:58 மணி) 15.5 கி.மீ. ஆழத்தில் தாக்கியது. இது ஒன்பது பின் அதிர்வுகளையும் ஏற்படுத்தியது.


ஹுவாலியனில் பல கட்டிடங்கள் பாதி இடந்த நிலையிலும் ஆபத்தான கோணங்களில் சாய்ந்த நிலையிலும் காணப்படுகின்றன.


தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவே என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தைவானிய சிப் தயாரிப்பு நிறுவனமான டி.எஸ்.எம்.சி (TSMC), தனது ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சின்ச்சு (Hsinchu) மற்றும் தெற்கு தைவானில் உள்ள சில தொழிற்சாலைகளை காலி செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அதன் பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும்போல இயங்குகின்றன என்றும் கூறியுள்ளது.


ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான செமிகண்டக்டர்களின் முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,AP

மீட்புப் பணிகள் தீவிரம்

ஹுவாலியன் மற்றும் பிற பகுதிகளில் இடிபாடுகளிலிம் கட்டிடங்களிலும் சிக்கியுள்ள மக்களைச் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


தைவானின் தேசிய தீயணைப்பு முகமையின் கூற்றுப்படி, சுரங்கப்பாதைகளிலும் பலர் சிக்கியுள்ளனர்.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,NATIONAL FIRE AGENCY

ஹுவாலியனில் உள்ள யுரேனஸ் கட்டிடத்தில் இருந்து குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டனர்.


தைபெயில், ஜோங்ஷான் மாவட்டத்தின் ஒரு கட்டிடத்தில் சிக்கிய லிஃப்டில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டனர். நியூ தைபெய் நகரில் ஸிண்டியான் மாவட்டத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர்.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின


இடிபாடுகளின் காட்சிகள்

தைவானின் தலைநகர் தைபெயில் இருந்து பகிரப்பட்ட வீடியோக்கள், கட்டிடங்கள் பலமாகக் குலுங்குவதையும், அலமாரிகளில் இருந்து பொருட்களை தெறித்து விழுவதையும், மேஜை நாற்காலிகள் கவிழ்வதையும் காட்டுகின்றன.


மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. ஆனால் அங்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன என்று இன்னும் தெரியவில்லை.


தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின. மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்படும் காட்சிகளும் காட்டப்பட்டன. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் வாகனங்கள் நொறுங்கிக் கிடப்பதையும், கடைகளில் பொருட்களை கலைந்து கிடப்பதையும் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான டிவிபிஎஸ் (TVBS) ஒளிபரப்பிய காட்சிகள் காட்டுகின்றன.


தைவான் முழுவதும் மின்வெட்டு நிலவுவதாகவும், இணையச் சேவைகள் தடைபட்டிருப்பதாகவும் இணைய கண்காணிப்புக் குழுவான NetBlocks தெரிவித்துள்ளது.


அமெரிக்க கப்பல் விபத்து: ஒரு வாரமாகியும் இந்திய மாலுமிகள் 20 பேரும் வெளியேற முடியாதது ஏன்?

2 ஏப்ரல் 2024

கச்சத்தீவு: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இந்த '300 அடி நிலம்' ஏன் முக்கியம்? எளிய விளக்கம்

2 ஏப்ரல் 2024

இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை - தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு?

2 ஏப்ரல் 2024

தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,RAMESH

படக்குறிப்பு,

தைவான் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ்


தைவான் தமிழர்களின் நிலை என்ன?

பிபிசி தமிழிடம் பேசிய தைவான் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ், தாம் ஸின்ச்சு என்ற பகுதியில் வசிப்பதாகவும், இன்று (புதன், ஏப்ரல் 3) காலை உள்ளூர் நேரப்படி 07:58 மணியளவில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தார். “நிலநடுக்கம் மிகக் கடுமையானதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு அது உணரப்பட்டது,” என்றார்.


தாம் இருக்கும் பகுதி நிலநடுக்கத்தின் மையப்புள்ளியிலிருந்து 200கி.மீ. தொலைவில் இருந்தாலும், அவர்கள் பகுதியிலும் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவித்தார்.


“நாங்கள் வசிக்கும் குடியிருப்புக் கடிடத்தில் அனைத்து வீடுகளிலும் விரிசல் எற்பட்டுள்ளது, ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதுமில்லை,” என்றார்.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,RAMESH

தாய்பெயிலிருந்து ஹுவாலியன் செல்லும் சாலைகள் நிலச்சரிவுகளால் துண்டிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.


மேலும் பேசிய அவர், தாம் தொடர்புகொண்டவரை தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுவாலியனில் குறைந்த அளவே தமிழர்கள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும் அவர் கூறினார்.


தாய்பெய், தாய்ச்சு, ஸின்ச்சு ஆகிய நகரங்களில் தமிழர்கள் அதிகப்படியாக வசிப்பதாகவும் அவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.


அதேபோல், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து தைவானுக்குச் சென்று வசிப்பவர்களுக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் கூறினார்.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,RAMESH

‘தைவானில் நிலநடுக்கங்கள் மிகவும் சாதாரணமானவை’

மேலும் பேசிய ரமேஷ், தைவானில் நிலநடுக்கங்கள் மிகச் சாதாரணமாக நிகழ்பவை என்றார். அங்கு ஆண்டுக்கு சுமார் 300 நிலநடுக்கங்கள் நிகழும் என்றும், ஆனால் அவை அளவில் 3-க்கும் கீழே தான் இருக்கும் என்றும் கூறினார்.


“வாரம் ஒருமுறையாவது நிலநடுக்கத்தை உணர்வோம். இங்கிருக்கும் கட்டிடங்கள் அதற்குத் தகுந்தாற்போல் நிலநடுக்கத்தைத் தாங்குமாறு கட்டப்படுவதால் அவற்றுக்கு பெரும் சேதம் ஏற்படுவதில்லை. அதனால்தான் 7.4 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டும் பெரும் சேதங்கள் ஏற்படவில்லை,” என்றார்.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன


அண்டை நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள்

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 3மீ உயரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் முன்னர் எச்சரித்திருந்தனர்.


ஆனால் அதன்பின்னர், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கையின் தீவிரத்தைக் குறைத்தது. ஆனால் மக்கள் ‘அதே தீவிரத்துடன் பின் அதிர்வுகள் குறித்து விழிப்புடன்’ இருக்குமாறு கேட்டுக் கொண்டது.


நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டது.


பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுனாமி அச்சுறுத்தல் ‘கடந்து விட்டதாக’ கூறியது.


சீனாவின் தென்கிழக்கு புஜியான் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.


"இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு அருகில் உள்ளது. ஆழமற்றதாக உள்ளது. இது தைவான் மற்றும் அதன் தீவுகள் முழுவதும் உணரப்பட்டுள்ளது. இது 25 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்களிலேயே மிகவும் வலுவானது," என்று தைபேயின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் வூ சியென் ஃபூ கூறினார்.


இதற்குமுன், 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தைவானில் 7.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 2,400 பேர் இறந்தனர், 5,000 கட்டிடங்கள் இடிந்தன.


தைவான் நிலநடுக்கம்பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஆப்பிள் நிறுவனத்திற்கான செமிகண்டக்டர்ளை டி.எஸ்.எம்.சி நிறுவனம் தயாரிக்கிறது


உலகப் பொருளாதாரத்தில் தைவானின் முக்கியத்துவம் என்ன?

கணினி சிப் தயாரிப்பு நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (டி.எஸ்.எம்.சி) மற்றும் ஐபோன் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமான தைவான் உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்காற்றுகிறது, என்கிறார் சிங்கப்பூரில் இருக்கும் பிபிசியின் வணிகச் செய்திகள் நிருபர் பீட்டர் ஹாஸ்கின்ஸ்.


ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான குறைகடத்திகளின் (செமிகண்டக்டர்) முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது.


ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிப்பதுடன், அமேசான் கிண்டில், நிண்டெண்டோ மற்றும் சோனி நிறுவனங்களுக்கான வீடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கிறது.


இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டி.எஸ்.எம்.சி நிறுவனம் அதன் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக அதன் சில தொழிற்சாலைகளில் இருந்து அவர்களை வெளியேற்றியதாகவும், தற்பொது அவர்கள் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.


நிலநடுக்கம் அதன் தயாரிப்புச் செயல்பாடுகளில் என்ன தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த விவரங்களை உறுதிப்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பான தகவல்களை பிபிசி கேட்டபோது, அதற்கு ஃபாக்ஸ்கான் பதிலளிக்கவில்லை.


தைவானின் தொழில்நுட்ப நிறுவனங்கள் சர்க்யூட் போர்டுகள் மற்றும் மேம்பட்ட கேமரா லென்ஸ்கள் உள்ளிட்ட பாகங்களையும் உற்பத்தி செய்கின்றன.


நைகி, அடிடாஸ் போன்ற உலகளாவிய ஆடை பிராண்டுகளுக்கும் தைவானில் இருக்கும் நிறுவனங்கள் பொருட்களை விநியோகம் செய்கின்றன.


 




ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தின் கேரு மாவட்டத்தில் கண்ணிவெடியில் சிக்கி நேற்றைய தினம் 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

 இஸ்ரேல், ஹமாஸ், காஸா, பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,EPA-EFE-REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,

இஸ்ரேல் காஸா மீது போர் நடத்திவருகிறது. இந்தப் பின்னணியில் நீண்டகாலமாக இஸ்ரேல் பிரதமராக இருந்துவரும் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகக்கோரி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை முடுக்கியுள்ளனர்


காஸா மீதான போரை நியாயப்படுத்தும் அமைச்சர்கள்

இஸ்ரேலின் இந்தப் போராட்டக்காரர்களும், இஸ்ரேலின் மற்ற நட்பு நாடுகளில் இருக்கும் நெதன்யாகுவின் எதிர்ப்பாளர்களும், நெதன்யாகுவின் அரசாங்கத்தில்தான் ஜனநாயகத்தின் எதிரிகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். நெதன்யாகுவின் அரசு தீவிர தேசியவாத யூதக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்துள்ளது.


நெதன்யாகுவின் அமைச்சரவையில் இருக்கும் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மதவாத சியோனிச கட்சியின் தலைவர். அதன் எம்.பி.க்களில் ஒருவரான ஓஹாட் தால், பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மீதான ராணுவ அழுத்தத்தைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறியிருக்கிறார்.


"பணயக் கைதிகளை ஒப்பந்தத்தின் மூலம் எளிதாகத் விடுவித்து, பின்னர் அதற்கு ஈடாக இஸ்ரேல் விடுவிக்கும் அனைத்து பயங்கரவாதிகளையும் நாமே கொல்ல ஹமாஸ் அனுமதிக்கும் என்று நினைக்கிறீர்களா? அது அவ்வளவு எளிதல்ல,” என்றார் அவர்.


"ஒரே ஒரு பொத்தானை அழுத்துவதன்முலம் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து, எல்லாவற்றையும் சரி செய்ய முடியும் என்றால், ஒவ்வொரு இஸ்ரேலியரும் அந்த பொத்தானை அழுத்துவார்கள். ஆனால் நீங்கள் நினைப்பது போல் இது எளிதானது அல்ல," என்றார்.


பெஞ்சமின் நெதன்யாகு, தான் மட்டுமே இஸ்ரேலை பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடியவர் என்று கூறி வந்தார். பல இஸ்ரேலியர்கள் அவரை நம்பினர்.


இஸ்ரேல், ஹமாஸ், காஸா, பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகு இதுவரை எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை ஆத்திரமூட்டுகிறது


பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பொறுப்பு

பாலஸ்தீனர்கள் கோரும் அமைதி உடன்படிக்கைக்குப் படியாமல், அவர்கள் கோரிவரும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் யூதர்களைக் குடியமர்த்தலாம் என்றும், பாலத்தீனர்களைச் சமாளித்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறி வந்தார்.


ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு எல்லைக் தாண்டி வந்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியபோது எல்லாம் மாறியது.


பல இஸ்ரேலியர்கள், இவ்வளவு பெரிய விளைவுகளுடன் கூடிய தாக்குதல் நடக்கக் காரணமாக இருந்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு நெதன்யாகுவே பொறுப்பு என்கிறார்கள்.


ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் பாதுகாப்புத் தலைவர்களைப் தாம் தவறு செய்ததை ஒப்புக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால் இதுவரை நெதன்யாகு அதுபோல எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை.


இதுவே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை ஆத்திரமூட்டுகிறது.


வலதுசாரி ஆதரவு


கடந்த 40 வருடங்களாக பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.


அவர் பாலத்தீன அரசையும், பாலத்தீனத்தின் விடுதலையையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.


போருக்குப் பிறகு காஸாவில் சுயாட்சி ஏற்படுத்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் திட்டங்களை அவர் கடுமையாக நிராகரித்ததால் தான் இஸ்ரேலின் தீவிர வலதுசாரிகளின் தொடர்ச்சியாக அவரை ஆதரிக்கிறார்கள்.


இஸ்ரேல், ஹமாஸ், காஸா, பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,OREN ROSENFELD

படக்குறிப்பு,

டேவிட் அக்மோன்


‘நெதன்யாகு பலவீனமானவர், பொய் சொல்பவர்’

இஸ்ரேல் பாராளுக்மன்றத்தின்குன் போராட்டம் நடத்தியவர்களில் ஒருவர், இஸ்ரேலிய இராணுவத்தின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரலாக இருந்த டேவிட் அக்மோன். நெதன்யாகு முதன்முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அக்மோன் பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகப் பொறுப்பினை எற்று நடத்தினார்.


"1948-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதுதான் இஸ்ரெலின் மிகப்பெரிய நெருக்கடி. 1996-இல் நான் நெதன்யாகுவின் முதல் தலைமைத் தளபதியாக இருந்தேன். அதனால் எனக்கு அவரை நன்றாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. மூன்றே மாதங்களில் நான் எனது பணியை ராஜினாமா செய்தேன். ஏனென்றால் நெதன்யாகு யார் என்பதை நான் உணர்ந்திகொண்டேன். அவர் இஸ்ரேலுக்கு மிகப்பஎரிய ஆபத்து,” என்றார்.


மேலும், "அவருக்கு முடிவெடுக்கத் தெரியாது. அவர் பயப்படுகிறார். அவருக்குத் தெரிந்தது பேசுவது மட்டுமே. அவர் தன் மனைவியைச் சார்ந்திருப்பதை நான் பார்த்தேன். அவரது பொய்களைப் பார்த்தேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் அவரிடம் ‘உங்களுக்கு உதவியாளர்கள் தேவையில்லை. உங்களது இடத்திற்கு வேறு ஒரு பிரதமர்தான் தேவை’ என்று சொல்லிவிட்டு நான் கிளம்பி வந்துவிட்டேன்," என்றார்.


நெதன்யாகுவின் அரசியல் வாழ்க்கைக்கு சிக்கலா?

தனக்கு எதிராகப் போராட்டம் நடந்துகொண்டிருக்கையிலேயே நெதன்யாகு தேர்தலை முன்கூட்டியே நடத்தும் யோசனையை நிராகரித்தார். மேலும் காஸாவின் ரஃபா பகுதியில் ஹமாஸ் படைகளுக்கு எதிராக ஒரு புதிய தாக்குதலை நடத்தப் போவதாக மீண்டும் உறுதி கூறினார்.


நெதன்யாகு ஒரு வலிமையான அரசியல் பிரசாரகர். அவரது எதிரிகள் கோருவதைப்போல முன்கூட்டியே தேர்தல் நடந்தாலும் அவர் வெல்லக்கூடும் என்று அவர்களது ஆதரவாளர்க்ள் நம்புகிறார்கள்.


ஹமாஸ் அழிக்கப்படவேண்டும் என்பதில் இஸ்ரேலியர்களிடையே கருத்துவேறுபாடில்லை. அதற்கு பெரும் ஆதரவு உள்ளது.


ஆனால் போர் நடத்தப்படும் விதம், பணயக்கைதிகளை மீட்பதில் இருக்கும் தாமதம் ஆகியவை பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் அளவுக்கு அவர் மீது பெரும் அழுத்ததைச் செலுத்தி வருகின்றன.

 

வடக்கு காஸாவில்  நிவாரண பொருட்களுக்காக மக்கள் ஓடும் காட்சி இது. ஆனால் நிவாரண பொருள் கடலில் விழுந்துவிட்டது. கடலில் விழுந்த பொருட்களை எடுக்கும் முயற்சியில் சிலர் நீரில் மூழ்கினர். 12 பேர் கடலில் மூழ்கியும், 6 பேர் நெரிசலில் சிக்கியும் உயிரிழந்ததாக ஹமாஸ் கூறுகிறது.


வடக்கு காஸாவில் 70 சதவீதம் பேர் பசியில் வாடுவதாக உலக உணவுத் திட்டம் கூறுகிறது. இந்நிலையில், காஸாவின் பெய்த் லஹியாவில் வான்வழி நிவாரண உதவிகளைப் பெறும் முயற்சியில் மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 25ஆம் தேதி வான்வழியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதைப் பெறும் முயற்சியில் 18 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் ஹமாஸ் போரால் உணவுப் பஞ்சம் பெரிய பிரச்னையாக உள்ளது. காஸாவுக்குள் தரை வழியாக உணவை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. காஸாவுக்கு  வான்வழியாக நிவாரண உதவி வழங்குவது உணவுத் தேவையை பூர்த்தி செய்யாது என மனிதநேய அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அமெரிக்காவில் கப்பல் விபத்தில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.


நேற்று இரவு 11.30 மணியளவில், தண்ணீரில் உயிருடன் இருப்பவர்களை தேடும் பணியை கைவிட்டு, மீட்பு பணிகளில் ஈடுபட போவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. காணாமல் போன ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. தண்ணீரின் தட்ப வெப்பம், தண்ணீரில் எத்தனை மணி நேரங்கள் இருந்துள்ளனர் என்பதை வைத்து பார்க்கும் போது, அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல்படையின் ரியர் அட்மிரல் ஷானன் கில்ரெத், கூறினார்.


மேலும் தேடுதல் பணி மிகவும் ஆபத்தானதாக தங்கள் வீரர்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். “தண்ணீரின் குளிர்ந்த தன்மை, அதில் உள்ள பாலத்தின் இரும்பு கழிவுகள் -இவற்றால் மீட்புப் பணி மிகவும் சவாலானதாக உள்ளது. இந்த பணியில் எங்கள் வீரர்கள் காயமடைய நாங்கள் விரும்பவில்லை” என்றார்.


அதில் உள்ள கழிவுகள் தண்ணீருக்குள் இறங்கும் ஒரு வீரரின் சுவாசக் குழாயை எளிதாக குத்தி காயப்படுத்தி விடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார். எனவே கட்டுமான பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு, வளைந்த இரும்பு கம்பிகளை கையாள்வது குறித்த வழிகாட்டுதல் பெறப்படும் என்றார்.


பாலத்தில் பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களில் இருவர் க்வாடமாலாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.


அமெரிக்க துப்பாக்கி தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்த நாடு ரூ.83,500 கோடி இழப்பீடு கேட்பது ஏன்?



அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கப்பல் மோதியதில் பாலம் ஒன்று இடிந்து ஆற்றில் விழுந்தது.


பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பாலம் முழுவதுமாக தண்ணீரில் விழுவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது.


இலங்கையின் கொழும்பு நோக்கி புறப்பட்ட கப்பல், துறைமுகத்தை விட்டு கிளம்பிய 20 முதல் 30 நொடிகளிலேயே மின்சக்தி இல்லாமல் போனது. கப்பலின் மின் விளக்குகள் அணைந்துவிட்டன. ஜெனரேட்டர் உடனடியாக கப்பலுக்கு தேவையான சக்தியை கொடுக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து, ஜெனரேட்டர் இயங்கிய போது, கப்பலில் உள்ள விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்தன. ஆனாலும் கப்பலை இயக்குவதற்கான சக்தி ஜெனரேட்டரிலிருந்து கிடைக்கவில்லை.



மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது. 300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த மாலுமிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் இந்தியர்கள் ஆவர்.


போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றி வருவதை விமானப் போக்குவரத்து ராடார்கள் காட்டுகின்றன.


கப்பல் மோதிய போது பாலத்தில் சென்ற வாகனங்கள் என்ன ஆயின? அந்த நேரத்தில் பாலத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் கதி என்ன? மோதல் நிகழ்ந்த போது கப்பல் எப்படி இருந்தது? கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குரூப் நிறுவனம் என்ன கூறுகிறது? என்பது குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.


Play video, "அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது", கால அளவு 1,23


அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது


கப்பலில் இருந்த ஊழியர்களுக்கு காயம் இல்லை

கப்பல் ஊழியர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று நிறுவனம் கூறுகிறது


சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற கன்டெய்னர் கப்பல் மோதியதை கப்பல் நிறுவனமான சினெர்ஜி மரைன் குழு உறுதிப்படுத்துகிறது.


"சம்பவத்தின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று அது கூறுகிறது.


கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்று அது மேலும் கூறுகிறது.


அமெரிக்க கப்பல்பட மூலாதாரம்,REUTERS

பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன?

இது தெளிவாக ஒரு பெரிய சம்பவமாகும். மேலும் அவசர சேவைகள் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன.


உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில், ஒரு பெரிய கன்டெய்னர் கப்பல் இந்த பாலத்தில் மோதியது. பின்னர் என்ந நடந்தது என்பதை காட்சிகள் கூறுகின்றன.


இந்தகப் கப்பல் உண்மையில் சிங்கப்பூரில் கொடியுடன் வந்தது என்பது தெரியவருகிறது. பெரும்பாலும் கன்டெய்னர் கப்பல்களில் வெவ்வேறு நாடுகளின் கொடிகள் உள்ளன - அதாவது, அவை அந்த நாட்டைச் சேர்ந்தவை என்று அர்த்தமல்ல. அவை எங்கிருந்து கண்காணிக்கப்படுகின்றன என்பதை இதன் பொருளாகும்.


பாலம்பட மூலாதாரம்,EPA

மேரிலேண்ட் மாநிலத்தில் அவசரநிலை

பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மேரிலேண்ட் மாநிலத்தில் அவசர நிலையை ஆளுநர் வெஸ் மூர் அறிவித்துள்ளார்.


"பைடன் நிர்வாகத்திலிருந்து மத்திய (Federal) சேவைகளை விரைவாகப் பெறுவம் வகையில் நாங்கள் ஒரு இடைநிலைக் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்." என்று அவர் கூறினார்.


"பாதிக்கப்பட்டோரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும், அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.


மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.


மார்ஸ்க்பட மூலாதாரம்,GETTY IMAGES

மார்க்ஸ் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பல்

பாலத்தில் மோதிய கப்பல் மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.


கப்பல் நிறுவனமான மார்ஸ்க், இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.


"பால்டிமோரில் நடந்தது பற்றி நாங்கள் திகிலடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்," என்று அந்த நிறுவனம் கூறுகிறது.


கப்பலில் மார்ஸ்க் பணியாளர்கள் யாரும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


விபத்து ஏற்பட்டது எப்படி?

பாலத்தில் மோதிய கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குழுமத்திற்கான தகவல்தொடர்புகளை கையாளும் அதிகாரியான பால் ஆடம்சன், "கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுடன் 22 பேர் இருந்தனர்" எனத் தெரிவித்தார்.


கப்பல் குழுவைச் சேர்ந்த ஒருவரது தலையில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஆனால் காயங்கள் ஏதும் இல்லை என்று அவர் கூறுகிறார்.


மியாமி மற்றும் ஓக்லஹோமாவில் இருந்து, நிறுவனத்தின் அமெரிக்க குழுவின் இரண்டு உறுப்பினர்கள் பால்டிமோர் சென்று விசாரித்து வருகின்றனர் அவர் குறிப்பிட்டார்.


அமெரிக்காவில் கப்பல் விபத்துபட மூலாதாரம்,BALTIMORE FIRE STATION

நீருக்குள் மூழ்கிய வாகனங்களின் கதி என்ன?

பால்டிமோர் தீயணைப்புத் தலைவர் கூறுகையில், "எங்கள் சோனார் கருவி தண்ணீரில் வாகனங்கள் மூழ்கி இருப்பதைக் கண்டறிந்துள்ளதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்", ஆனால் எத்தனை வாகனங்கள் உள்ளன என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறுகிறார்.


பணியாளர்கள் இன்னும் கப்பலில் இருப்பதாக அவர் கூறுகிறார். "நாங்கள் கடலோர காவல்படையுடன் தொடர்பு கொண்டுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.


சில தொழிலாளர்கள் இன்னும் பாலத்தில் இருப்பதாக அவரது குழுவிடம் கூறப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


பாலத்தில் பணி செய்த ஒப்பந்ததாரர்கள் என்ன ஆனார்கள்?

அமெரிக்க கடலோர காவல்படையுடன் இணைந்து மேரிலாந்தின் போக்குவரத்துச் செயலர் பால் வைடெஃபெல்ட்டும் செய்தியாளர்களுக்கு தகவல்களை வழங்கினார்.


பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அதில் பணிபுரிந்த ஒப்பந்ததாரர்கள், "கான்கிரீட் தளத்தில் சில பழுது நீக்கும் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்" என்று வைடெஃபெல்ட் கூறினார்.


தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடர்வதால் பால்டிமோர் துறைமுகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


அமெரிக்க கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தண்ணீரில் உயிர் பிழைத்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பதைத் தேடுவதே முதன்மை பணி. சம்பவ இடத்தில் மூன்று சிறிய படகுகள், 87 அடி ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன." என்றார்.


இதுவரை உயிரிழப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று வைடெஃபெல்ட் கூறினார். பாலம் இடிந்து விழுந்ததற்கு என்ன காரணம் என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது என்றும் கூறினார்.


அமெரிக்காவில் கப்பல் விபத்துபட மூலாதாரம்,BALTIMORE FIRE STATION

பாலத்தின் மோதும் முன்பே கப்பல் உந்து சக்தியை இழந்தது

அரசாங்க நிறுவனமான சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செக்யூரிட்டி ஏஜென்சி (CISA )யின் வகைப்படுத்தப்படாத மெமோ, சிங்கப்பூர் கொடியுடன் இருந்த டாலி கப்பல் "உந்து சக்தியை இழந்து" அதன் பின்னரே "பாலத்தின் துணைக் கோபுரத்தில்" மோதியதை உறுதிப்படுத்தியுள்ளது.


கப்பல் நிறுவனம் கூறுவது என்ன?

கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குரூப் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சிங்கப்பூர் கொடி தாங்கிய சரக்கு கப்பல் டாலி, மார்ச் 26ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு இரண்டு மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் தூண்களில் ஒன்றின் மீது மோதியது.


மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களுமே இதற்கு பொறுப்பானவர்கள். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கே, எவ்வித மாசும் ஏற்படவில்லை. சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.


மேலும், இந்த கப்பலில் 22 பணியாளர்கள் உள்ளனர் என்றும் அனைவரும் இந்தியர்கள் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.


அமெரிக்க கப்பல் விபத்துபட மூலாதாரம்,LSEG

படக்குறிப்பு,

கப்பல் விபத்து நிகழ்ந்த பொழுதை காட்டும் வரைபடம்


சினெர்ஜி மரைன் குழும அதிகாரி தகவல்

இதேபோல் சினெர்ஜி மரைன் குழுமத்தின் செய்தி அதிகாரி பகிர்ந்துள்ள தகவலில், "மோதல் காரணமாக பணியாளர்களில் ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது, சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பணியாளர்கள் குழுவினரிடம் ஃபெடரல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 22 பணியாளர்களில் 16 பேருடன் அவர்களின் குடும்பத்தினர் தொடர்புகொள்ள முடிந்தது.


விபத்து குறித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் குழுவினருடன் பேச முடியாத நிலை உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)


 25 மார்ச் 2024

காசாவில் "உடனடியாக போர் நிறுத்தத்தை" அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். இதில் அமெரிக்கா தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இந்தமுறை நடவடிக்கையை வீட்டோ செய்யாமல் தவிர்த்துவிட்டது.


இந்த தீர்மானத்தின் படி அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.


இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வர முடியாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சில முட்டுக்கட்டைகள் இருந்தன.


இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக, அதற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் இடையே வளர்ந்து வரும் கருத்து வேறுபாட்டைக் குறிப்பதாக அமைந்துள்ளது.


இந்த தீர்மானத்தின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களில் அமெரிக்கா தவிர மற்ற நாடுகள் வாக்களிக்க, அமெரிக்கா மட்டும் வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றது.


இதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை ஆதரிக்க முடியாது என்று முன்னர் அவற்றை தடுத்தது அமெரிக்கா.


ஆனால் வியாழனன்று, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தனது சொந்த வரைவு அறிக்கை ஒன்றை முதல்மு றையாக முன்வைத்தது அமெரிக்கா. இது இஸ்ரேல் மீதான அதன் நிலைப்பாடு கடுமையாகியுள்ளதை குறிப்பதாக அமைந்தது.


இஸ்ரேல் - பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

புறக்கணித்தது ஏன்? அமெரிக்க தூதர் விளக்கம்

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் காசா தீர்மானத்தை அமெரிக்கா ஏன் புறக்கணித்தது என்பது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் விளக்கம் அளித்துள்ளார்.


ரஷ்யா மற்றும் சீனாவால் தடுக்கப்பட்ட முந்தைய அமெரிக்க தீர்மானத்தை அவர் முதலில் குறிப்பிட்டார், "அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்க அவர்களால் இன்னும் முடியவில்லை". என்று அவர் கூறினார்.


"இராஜதந்திர முயற்சிகள் மூலம் நீடித்த அமைதியை முன்னெடுப்பதில் அவர்கள் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் காட்டியுள்ளனர்," என்று லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் கூறினார்.


இன்றைய தீர்மானத்தில், "முக்கிய திருத்தங்கள்" புறக்கணிக்கப்பட்டதாக தாமஸ்-கிரீன்ஃபீல்ட் தெரிவித்தார். குறிப்பாக ஹமாஸின் கண்டனம் தெரிவிக்கப்படாதது குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.


"தீர்மானத்தில் உள்ள அனைத்தையும் நாங்கள் ஏற்கவில்லை," என்று அவர் கூறினார். "அந்த காரணத்திற்காக, எங்களால் துரதிருஷ்டவசமாக ஆம் என்று வாக்களிக்க முடியவில்லை."என்றார் அவர்.


அவர் மேலும் கூறுகையில் "இருப்பினும், நான் முன்பு கூறியது போல், இந்த கட்டுப்பாடற்ற தீர்மானத்தில் சில முக்கியமான நோக்கங்களை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். அனைத்து பணயக்கைதிகளின் விடுதலையுடன் எந்தவொரு போர் நிறுத்தமும் வர வேண்டும் என்பதை சபையில் பேசுவதும் தெளிவுபடுத்துவதும் முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் கூறினார்.


இஸ்ரேல் - பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்கா பின்வாங்கியிருப்பதாக இஸ்ரேல் அதிருப்தி

போர் நிறுத்த தீர்மானத்தை வீட்டோ செய்ய அமெரிக்கா தவறியிருப்பது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்நாட்டின் "தெளிவான பின்வாங்கல்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.


காசாவில் ஹமாஸுக்கு எதிரான போர் முயற்சிகளையும், அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள 130க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிகளையும் இது பாதிக்கும் என்று அவர் கூறினார்.


இஸ்ரேல் vs பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுக்குழு பயணம் ரத்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த வாரம் வெள்ளை மாளிகைக்கான இஸ்ரேலிய பிரதிநிதிகளின் பயணத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார்.


ஆன்லைனில் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவே" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


காசாவில் இஸ்ரேலிய தரைவழித் தாக்குதலை எதிர்பார்க்கும் முன் வரும் இந்த விஜயத்தை ரத்து செய்வதாக நெதன்யாகு முன்னர் அச்சுறுத்தியிருந்தார். இதை பைடன் நிர்வாகம் எதிர்த்துள்ளது.


இஸ்ரேல் நடவடிக்கையால் அமெரிக்கா ஏமாற்றம்

இந்த வாரம் அமெரிக்காவிற்கான பயணத்தை இஸ்ரேல் ரத்து செய்ததற்கு அமெரிக்கா ஏமாற்றம் தெரிவித்துள்ளது.


வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், அமெரிக்கா "மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.


இஸ்ரேல் - பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மாதங்களாக நீடிக்கும் போர் ஓயுமா?

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி, இஸ்ரேலின் குண்டுவீச்சினால் 32,000க்கும் அதிகமான மக்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் காஸாவில் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் அதிகரித்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து சமீப காலமாகவே அமெரிக்கா முன்பை விட அதிகமாக இஸ்ரேலை குற்றம்சாட்டி வருகிறது.


காஸாவில் உள்ள மக்கள் அனைவரும் உணவு இன்றி தவிப்பதாக கூறும் அமெரிக்கா, அவர்களுக்கு கூடுதல் மனிதநேய உதவிகளை செய்யுமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.


மனிதநேய உதவிகளை செய்ய இஸ்ரேல் தடையாக இருப்பதாக ஐநா சபை குற்றம் சுமத்தியிருந்தது. அதே சமயம் உதவிகளை விநியோகிப்பதில் ஐநா சரியாக செயல்படவில்லை என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது.


காஸாவை ஆட்சி செய்து வரும் பாலத்தீன இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது முன்னறிவிப்பில்லா தாக்குதலை நடத்தியதில், 1200 பேர் உயிரிழந்தனர். மேலும் 253 பணயக்கைதிகளையும் பிடித்து வைத்துக் கொண்டது. அதனால், அக்டோபர் 7 தொடங்கிய போர் தற்போது வரை நடந்து வருகிறது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.