இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில முதல் பெண்மணியும், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சொரேனின் மனைவியும், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினருமான கல்பனா சொரேன் அவர்களை ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜார்க்கண்டில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், தாழ்த்தப்பட்டோரை மேம்படுத்துதல், மக்கள் மயப்படட முதன்மை கொண்ட அரசியல் பாரம்பரியத்தை தொடர்தல் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் செயல்படும் வலிமையான இரக்கமுள்ள பெண்மணியாக, தலைவியாக தன்னை அடையாளப்படுத்தும், கல்பனா சொரேன் அவர்கள் தனது கணவரும் மரபுத்தலைவருமான முதல்வர் ஹேமந்த் சொரேனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சமூகநீதி, பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் நம்பிக்கையுடன் கூடிய மாற்றத்திற்காக குரல் கொடுக்கும் வலிமையும், இரக்கமும் உள்ள ஜார்க்கண்டின் இரும்புப் பெண்மணியாவார்.
இச் சந்திப்பில் இலங்கையின் கிழக்கு மாகாண மேநாள் ஆளுநரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், மலேசியா இந்திய காங்கிரஸின் துணைத்தலைவரும் மலேசிய நாட்டின் மேநாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீசரவணன், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. மஹீவா மாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கூறியது என்ன?
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை அவரது அவாமி லீக் கட்சி விமர்சித்துள்ளது. நீதிமன்றத்தின் முடிவு "தீங்கிழைக்கும் மற்றும் பழிவாங்கும் நோக்கில் வந்தது" என்று அக்கட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
"வங்கதேச மக்கள், அவாமி லீக் மற்றும் அனைத்து விடுதலை ஆதரவு சக்திகளும் இந்த முடிவுக்கு எதிராக ஓர் இயக்கத்தைத் தொடங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவாமி லீக் கூறியுள்ளது.
இன்று (நவம்பர் 18) நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை அவாமி லீக் அறிவித்துள்ளது. நவம்பர் 19 முதல் 21 வரை நாடு தழுவிய பல்வேறு போராட்டங்களுக்கும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
வங்தேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் தண்டனையை அறிவித்த தீர்ப்பாயம் குறித்தும் அவாமி லீக் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
"தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்குப் பதிலாக, சட்டவிரோதமான, அரசியலமைப்புக்கு விரோதமான, தேர்ந்தெடுக்கப்படாத பாசிச யூனுஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் நாட்டில் சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர் அவர்கள் சர்வதேச கொள்கைகளை மீறி ஒரு சட்டவிரோத தீர்ப்பாயத்தை நிறுவியுள்ளனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இந்த தீர்ப்பாயம் முற்றிலும் சட்டவிரோதமானது, தீங்கிழைக்கக் கூடியது, பழிவாங்கல் மற்றும் மோசமான எண்ணங்களால் தூண்டப்பட்டது, யூனுஸ் சட்டவிரோதமாக கைப்பற்றிய அதிகாரத்தைக் காப்பாற்ற ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார்" என்று அவாமி லீக் விமர்சித்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா
'மனைவி இல்லை, மரியாதை போய்விட்டது'- ரூ.100 லஞ்ச வழக்கில் 39 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டவரின் கதை
இந்தியா - பாகிஸ்தான், எல்லை தாண்டிய காதல், சரப்ஜித் கவுர்
பாகிஸ்தான் சென்று மதம் மாறி காதலரை கரம் பிடித்த இந்திய பெண்ணை அந்நாட்டு காவல்துறை தேடுவது ஏன்?
ஏஐ, கூகுள், சுந்தர் பிச்சை
'செயற்கை நுண்ணறிவு குமிழி வெடித்தால் ஒரு நிறுவனம் கூட தப்பாது' - சுந்தர் பிச்சை கூறியது என்ன?
தமிழ்நாடு, வானிலை, கனமழை எச்சரிக்கை, காற்றழுத்த தாழ்வு நிலை, வடகிழக்கு பருவமழை, வங்கக்கடல்
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
End of அதிகம் படிக்கப்பட்டது
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான விசாரணை 'ஒரு நாடகத்தைத் தவிர வேறில்லை' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை, வங்கதேசம், முகமது யூனுஸ், அவாமி லீக், இந்தியாபட மூலாதாரம்,Getty Images
முகமது யூனுஸ் என்ன சொன்னார்?
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நேற்று (நவ.17) தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
"வங்கதேச நீதிமன்றம் இன்று(நவ.17) வழங்கியுள்ள தெளிவான தீர்ப்பு நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் எதிரொலிக்கிறது" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"குற்றச்சாட்டு மற்றும் தண்டனை ஒரு அடிப்படைக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது: யாரும், எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இந்த முடிவு ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2024 எழுச்சியின் போது பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கும், தங்கள் இழப்புகளால் இன்னும் போராடி வரும் குடும்பங்களுக்கும் நீதியை வழங்குகிறது." என்று அவர் கூறியுள்ளார்.
"பல ஆண்டுகளாக ஒடுக்குமுறையால் அழிக்கப்பட்ட ஜனநாயக நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 1400 பேர் உயிரிழந்தனர் என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிகாரம் பெற்ற குடிமக்கள். நிராயுதபாணியான போராட்டக்காரர்களுக்கு எதிராக ஹெலிகாப்டர் உள்பட எவ்வளவு அதிக பலம் பயன்படுத்தப்பட்டது என்பதை பல மாத சாட்சியங்கள் விவரித்தன. நமது நீதி அமைப்பு குற்றவாளிகளை பொறுப்பேற்க வைக்கும் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது." என்று முகமது யூனுஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை, வங்கதேசம், முகமது யூனுஸ், அவாமி லீக், இந்தியாபட மூலாதாரம்,Getty Images
ஷேக் ஹசீனா கூறியது என்ன?
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஷேக் ஹசீனா ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
"அவாமி லீக்கை ஓர் அரசியல் சக்தியாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கு இடைக்கால அரசாங்கம் பயன்படுத்தும் வழிமுறையே மரண தண்டனை" என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கு ஓர் 'கேலிக்கூத்து' என்று கூறி, தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
மேலும், "சாட்சியங்களை உண்மையின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சோதிக்கக்கூடிய ஒரு முறையான நீதிமன்றத்தில் என் மீது குற்றம் சாட்டுபவர்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறும் அவர் இடைக்கால அரசுக்கு சவால் விடுத்தார்.
ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்
கடந்த ஜூன் மாதத்தில் ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அரசின் தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், "கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 25,000 பேர் காயமடைந்தனர்" என வாதிட்டார். இறந்தவர்களின் பட்டியலையும் அரசு தரப்பு தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.
ஷேக் ஹசீனா உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக 747 பக்க ஆவணமும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மூன்று பேரின் மீதும் கொலை, கொலை முயற்சி, சதி, உதவி செய்தல், உடந்தையாக இருத்தல் என ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
"ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்தபோது, கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், மாணவர்களை 'ரசாக்கர்களின் மகன்கள் மற்றும் பேரன்கள்' என்று கூறி ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்" என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.
வங்கதேசத்தில், ரசாக்கர் என்பது தேசதுரோகி அல்லது துரோகி என்று பொருள்படும் இழிவான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்து கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை குறிப்பிட பயன்படுகிறது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை, வங்கதேசம், முகமது யூனுஸ், அவாமி லீக், இந்தியா
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,2014-ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா அரசு அகற்றப்பட காரணமான போராட்டத்தின் ஒரு காட்சி
இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில், "குற்றம் சாட்டப்பட்ட அசாதுஸ்ஸாமான் கான் கமல் மற்றும் சவுத்ரி அப்துல்லா அல் மாமூல் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலும், உதவியுடனும், சட்ட அமலாக்க முகமைகளும் அவாமி லீக்கின் ஆயுதமேந்திய ஆட்களும் கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் அப்பாவி மற்றும் நிராயுதபாணியான மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பெரியளவில் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் துன்புறுத்த உதவினர்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் இந்தக் குற்றங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தே செய்யப்பட்டவை என்று கூறுகிறது.
ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது, ரங்பூரில் உள்ள பேகம் ரோகையா பல்கலைக்கழக மாணவர் அபு சயீத்தை தூண்டுதலின்றி கொலை செய்ததாகவும், தலைநகரில் உள்ள சங்கர் புல்லில் ஆறு பேரைக் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தவிர, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நாளில் அஷுலியாவில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், அவர்களின் உடல்களை எரித்ததாகவும், ஒருவரை உயிருடன் எரித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பால் சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன.
வெடிப்பு ஏற்பட்ட காரிலும் பயணிகள் இருந்ததாக டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்தார்.
வெடிப்புக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் கார் எங்கிருந்து வந்தது? அதன் உரிமையாளர் யார் என்பன போன்ற விவரங்களை கண்டறியும் முயற்சியில் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பிபிசி பனோரமா ஆவணப்படத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேச்சை எடிட் செய்து பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர்.
தொடர் சர்ச்சைகளும் பாரபட்சமாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளும் பிபிசியை பின்தொடர, ஐந்து ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்த டிம் டேவி நெருக்கடியை சந்தித்து வந்தார்.
2021-ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் நடந்த கேபிடல் ஹில் கலவரங்களைத் தூண்டும் விதமாக டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக பேசியதாகத் தோன்றும் வகையில், அவரது உரையின் இரு பகுதிகள் எடிட் செய்யப்பட்டு பனோரமா நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டதாகக் கசிந்த பிபிசியின் உள் குறிப்பு (internal BBC memo) அடிப்படையில் 'தி டெலிகிராப்' பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இந்த ராஜினாமாக்கள் மாற்றத்திற்கான வழியைத் திறக்கும் என பிரிட்டன் அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேசமயம் டிரம்ப் இதனை வரவேற்றிருக்கிறார்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோஹ்ரான் மம்தானி பல வகையிலும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1892ஆம் ஆண்டுக்குப் பிறகு நகரத்தின் இளைய மேயர், அதன் முதல் முஸ்லிம் மேயர் மற்றும் ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர் என்ற சிறப்புகளை அவர் பெறுகிறார்.
முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் சில்வா ஆகியோரை எதிர்த்து அவர் பெற்றுள்ள வெற்றி குறிப்பிடத்தக்கது.
அதற்கும் மேலாக, ஜனநாயகக் கட்சியின் இடதுசாரிகளில் பலர் பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதியை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இளமை, ஆளுமை மற்றும் அவரது தலைமுறைக்கே உரித்தான சமூக ஊடக இணக்கம் ஆகியவற்றை அவர் கொண்டிருக்கிறார்.
அவரது இனம் கட்சியின் அடித்தளத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அவர் ஒரு அரசியல் போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை. அத்துடன், இலவச குழந்தை பராமரிப்பு, பொது போக்குவரத்து விரிவாக்கம் மற்றும் தடையற்ற சந்தை கட்டமைப்பில் அரசாங்க தலையீடு போன்ற இடதுசாரி கருத்துகளை அவர் ஆதரித்துள்ளார்.
விளம்பரம்
நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images
சமீபத்தில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு முன்னுரிமையாக இருந்த பொருளாதாரப் பிரச்னைகளில் கவனம் செலுத்தும் திறனையும் மம்தானி வெளிப்படுத்தியுள்ளார். அவர் இடதுசாரிகளின் கலாசாரக் கொள்கைகளை மறுக்கவில்லை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்கா
நியூயார்க் மேயராக முதன் முறையாக முஸ்லிம் தேர்வு: டிரம்ப் எதிர்ப்பை மீறி வென்றவர் முன்னுள்ள சவால்கள்
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு
கோவை பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை சுட்டுப் பிடித்தது எப்படி?
அப்பா, மாதவிடாய், Pads for Dads, ஆண்கள்
மாதவிடாய் பற்றி மகள்களிடம் அப்பாக்களும் பேசுவது அவசியம் - ஏன் தெரியுமா?
ஆந்திர கூட்ட நெரிசல், ஸ்ரீகாகுளம் கோட்டா நெரிசல், கோவில் கூட்ட நெரிசல்
'திருப்பதியில் முழுமையான தரிசனம் கிடைக்காததால் தனியே கோவில் கட்டினேன்' - யார் இவர்?
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆனால் பரந்துபட்ட அமெரிக்காவில் இத்தகைய வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட முடியாதவர் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். தன்னைத் தானே சோசலிஸ்ட் என்று கூறிக் கொண்டவரை ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி முகமாக குடியரசுக் கட்சியினர் மாற்றியுள்ளனர். ஆனாலும், செவ்வாய்க்கிழமை இரவு நியூயார்க் நகரில், அவர் ஒரு வெற்றியாளராக இருந்தார்.
மேயர் தேர்தலில் மம்தானியின் பரப்புரை மிகப்பெரிய அளவில் ஊடக கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்திற்கான மேயர் தேர்தலைக் காட்டிலும் ஒருவேளை இது அதிகமாக இருக்கலாம்.
மேயராக, அவரது வெற்றிகள் மற்றும் தோல்விகள் உன்னிப்பாக ஆராயப்படும் என்பதையும் இது குறிக்கிறது.
12 ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரத்தின் பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும் ஒரு தளத்தில் மேயர் பதவிக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பில் டி ப்ளாசியோ வெற்றி பெற்றார். மம்தானியைப் போலவே, இடதுசாரி அமெரிக்கர்களும் அவரது நிர்வாகம் திறமையான தாராளமய நிர்வாகத்திற்கு ஒரு தேசிய எடுத்துக்காட்டாக இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இருப்பினும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலகிய டி ப்ளாசியோ பரவலாக பிரபலமடையவில்லை. புதிய கொள்கைகளை செயல்படுத்த தனது மேயர் அதிகாரத்தின் வரம்புகளுடன் அவர் போராட வேண்டியிருந்தது.
மம்தானியும் அதே வரம்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் போராட வேண்டியிருக்கும்.
சக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், மம்தானியின் லட்சிய திட்டங்களுக்கு நிதியளிக்க வரிகளை உயர்த்துவதை எதிர்க்கிறேன் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.
போதுமான நிதி இருந்தாலும், மம்தானியால் ஒருதலைப்பட்சமாக திட்டங்களை செயல்படுத்த முடியாது.
நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images
ஆனால் அதெல்லாம் பிற்காலத்திற்கான பிரச்னை. இப்போதைக்கு, பொது வெளியில் தமது பிம்பத்தை வரையறுக்கும் பணியை தனது எதிரிகளுக்கு முன்பாக மம்தானி தொடங்க வேண்டும்.
பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பு, அமெரிக்க மக்களில் 46% பேர் நியூயார்க் மேயர் தேர்தலை "நெருக்கமாகப் பின்தொடரவில்லை" என்று சுட்டிக்காட்டியுள்ளது. இது மம்தானி மற்றும் அமெரிக்க இடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பையும் சவாலையும் வழங்குகிறது.
அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் உள்ள பழமைவாதிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரை ஒரு சோசலிச அச்சுறுத்தலாக சித்தரிக்க முயற்சிப்பார்கள். "அதன் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகள் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்திற்கு அழிவைக் கொண்டுவரும், நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஆபத்தை ஏற்படுத்தும்" என்று அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கலாம்.
ஒவ்வொரு தடுமாற்றத்தையும் ஊதிப் பெருக்கி, ஒவ்வொரு எதிர்மறை பொருளாதார குறிகாட்டியையும் அல்லது குற்ற புள்ளிவிவரத்தையும் அவை முன்னிலைப்படுத்தும்.
நியூயார்க்குடன் தனிப்பட்ட தொடர்பைக் கொண்ட டிரம்ப், மம்தானியுடன் ஒரு அரசியல் மோதலை வரவேற்பார் என்பது உறுதி. புதிய மேயரின் வாழ்க்கையை சிக்கலாக்க அவருக்கு ஏராளமான வழிகள் உள்ளன.
நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images
இருப்பினும், மம்தானிக்கு உள்ள வாய்ப்பு என்னவென்றால், பிரசாரத்தின் போது அவரது அரசியல் எதிரிகள் அவருக்கு எதிராகப் பயன்படுத்த முயன்ற அவரது கடந்த காலம் அவருக்கு சுமையாக இல்லை.
ஜனவரியில் அவர் பதவியேற்கும் போது, புதிதாக அரசியல் நற்பெயரை உருவாக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அவருடன் டிரம்ப் பகைமை கொண்டால் மம்தானிக்கு அவர் ஒரு பெரிய தளத்தை வழங்குவதாக அமையும்.
மம்தானியின் அரசியல் திறமையும் திறன்களும் அவரை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளன. இது சிறிய சாதனையல்ல. ஆனால் வரும் ஆண்டுகளில் அவருக்கு காத்திருக்கும் சோதனைகளுடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை.
நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images
ஸோஹ்ரான் மம்தானியின் இந்திய பின்னணி
(பிபிசி இந்தி சேவை வழங்கிய கூடுதல் விவரங்கள்)
ஸோஹ்ரான் குவாமே மம்தானி 1991ஆம் ஆண்டு உகாண்டா தலைநகரான கம்பாலாவில் பிறந்தார். புரட்சியாளரும் கானாவின் முதல் பிரதமருமான குவாமே நக்ருமாவின் நினைவாக மம்தானியின் தந்தை அவருக்கு குவாமே என்ற நடுப் பெயரைச் சூட்டினார்.
புகழ் பெற்ற இந்திய-அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயர் மற்றும் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மஹ்மூத் மம்தானி ஆகியோரின் மகன்தான் இந்த ஸோஹ்ரான் குவாமே மம்தானி.
ஆரம்ப நாட்களை கம்பாலாவில் கழித்த அவர், 5 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்தது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானியின் தந்தை மஹ்மூத் மம்தானி, கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். 1848 ஆம் ஆண்டு கேப்டவுனில் நிறுவப்பட்ட தென் ஆப்ரிக்காவின் பழமையான செயின்ட் ஜார்ஜ் கிராமர் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார்.
மம்தானிக்கு 7 வயதாக இருக்கையில் அவரது குடும்பம் நியூயார்க் குடிபெயர, அங்கே பிராங்க்ஸ் உயர்நிலை அறிவியல் பள்ளியில் அவர் பயின்றார்.
2014ஆம் ஆண்டு,போடன் கல்லூரியில் ஆப்பிரிக்க ஆய்வுகளில் அவர் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு 2018-இல், மம்தானி அமெரிக்க குடிமகன் ஆனார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனி அறைகளில் த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர்களின் மருத்துவ செலவு, கல்வி செலவு மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு உதவுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
அமெரிக்கா தீவிரவாதி என்று அறிவித்த முதல் நபர்,
உலகில் நடக்கும் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்-களின் பிதாமகள்.,
கருப்பின மக்களை கல்வி மற்றும் கவிதை மூலம் வெள்ளையர்களின் இன வெறி -க்கு எதிரான புரட்சியை விதைத்தவர்.
கொலையாளி என்று பொய் குற்றச்சாட்டில் பல ஆண்டுகளாக அமெரிக்கா சித்திரவதை செய்தது!
அவர் இறக்கும் தருவாயில் இருந்த போது மக்கள் ஒன்றிணைந்து அவரை சிறையில் இருந்து காணாமல் போக செய்தனர்.
பல மாதங்களுக்கு பிறகு அவர் கியூபா-வில் உயிருடன் இருப்பதாக தெரிய வந்ததும்!
அவரை அமெரிக்காவின் முதல் தீவிரவாதியாக அறிவித்து அவரின் உயிருக்கு 2 மில்லியன் டாலர் தொகையை அறிவித்தது!
அவரின் புத்தகங்கள் உலகின் பல போராட்டங்களை ஒருங்கிணைக்க உதவும் அகராதி!
கடைசி வரை அவரை அமெரிக்காவினால் நெருங்க முடியவில்லை!
தோழர். Assata Shakur..,
நேற்றுடன் தான் சிந்தப்பதை நிறுத்திக் கொண்டார்!
இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது.
வீரர்கள் நட்பு போட்டியொன்றில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பக்திகா மாகாணத்தில் உள்ள உர்குனிலிருந்து ஷரானாவுக்கு பயணித்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) தெரிவித்துள்ளது.
"உர்குனில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்கள் ஒன்று கூடல் ஒன்றின் போது குறிவைக்கப்பட்டனர்" என்று தெரிவித்த ACB, அதனை "பாகிஸ்தான் ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்" என்று விபரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, கொல்லப்பட்ட மூன்று வீரர்களையும் கபீர் (Kabeer), சிப்கத்துல்லா (Sibghatullah) மற்றும் ஹாரூன் (Haroon) எனப் பெயரிட்டுள்ளதுடன், இந்தத் தாக்குதலில் மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சில ஊடக அறிக்கைகளின்படி, கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நடைபெற்ற அன்று Oslo முழுவதும் பாலஸ்தீன் ஆதரவாக மக்கள் Stadium 🏟️-யை பாலஸ்தீன கொடியும் பெருமளவில் கூடி விட்டனர்.
பிரச்சனை பெரிதாகி விடும் என்று அஞ்சிய காவல்துறை போட்டி துவங்கும் முன்னரே நுழைவாயிலை அடைத்து விட்டது!
இதில் Ticket 🎫 வைத்திருந்தவர்கள் கூட உள்ளே செல்ல முடியவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது
பிரித்தானியாவின் பிரைட்டன் அருகே பீஸ்ஹெவன் நகரில் உள்ள மசூதியில் இரு மா்ம நபா்கள் தீவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய மற்றும் யூத வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்த இருவா் மசூதிக்குள் நுழைய முயன்றதாகவும், அது முடியாததால் அவா்கள் படிக்கட்டுகளில் பெற்றோலை ஊற்றி தீ வைத்ததாகவும் மசூதி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது மசூதிக்குள் பலா் இருந்ததாகவும் வெடிப்பு சத்தம் மற்றும் பிரதான நுழைவாயிலில் தீப்பிழம்புகளை கண்டு அவா்கள் தப்பினா் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Washington Post
அமெரிக்க யூதர்கள் 61% பேர் காசா போரை தவறான முறையில் அனுகி போர் குற்றம் புரிந்து விட்டது இஸ்ரேல் என்று தெரிவித்துள்ளனர்.
10-ல் 4 யூதர்கள்....,
இஸ்ரேல் செய்வது இனப்படுகொலை தான் என்று உறுதியாக நம்புகின்றனர்.
- அமெரிக்க யூதர்கள் 61% பேர் காசா போரை தவறான முறையில் அனுகி போர் குற்றம் புரிந்து விட்டது இஸ்ரேல் என்று தெரிவித்துள்ளனர்.
10-ல் 4 யூதர்கள்....,
இஸ்ரேல் செய்வது இனப்படுகொலை தான் என்று உறுதியாக நம்புகின்றனர்.
- Washington Post
இஸ்ரேல்-காஸா போரின் தொடக்கத்திலிருந்து பலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரித்தானியாவில் ஆா்ப்பாட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, பிரித்தானிய இராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்துக்கு தொடா்புடைய தளங்களை சேதப்படுத்திய ‘பலஸ்தீன் அக்ஷன்’ என்ற அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
இந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவது சட்டவிரோதமானது எனவும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக மத்திய லண்டனின் டிராஃபல்கா் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோா் நேற்று முன்தினம் (4) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இனப் படுகொலையை எதிா்ப்பதாகவும், பலஸ்தீன் அக்ஷன் அமைப்பை ஆதரிப்பதாகவும் ஆா்ப்பாட்டக்காரா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, அவா்களில் 488 போ் கைது செய்யப்பட்டனா்.
இது தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு அமைச்சா் ஷாபனா மஹ்மூத் செய்தியாளா்களிடம் கூறுகையில்,
‘ஆா்ப்பாட்டம் நடத்தும் உரிமை நாட்டின் அடிப்படை சுதந்திர உரிமையாகும். இருப்பினும், இந்தச் சுதந்திர உரிமையை மக்கள் பயமின்றி வாழ்வதற்கான உரிமையுடன் சமமாகக் கருத வேண்டும்.
பெரிய அளவில் தொடா்ச்சியாக நடைபெறும் ஆா்ப்பாட்டங்கள், நாட்டில் உள்ள சில மக்களிடம் குறிப்பாக மதக் குழுவினரிடம் பாதுகாப்பற்ற உணா்வை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.