Showing posts with label world. Show all posts

 இரான் மற்றும் கத்தாரில் உள்ள எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தாம் டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் அமீருடன் பேசியதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தெரிவித்தார்.


" எரிசக்தி மற்றும் நீர் விநியோக நிலையங்கள் போன்ற சிவிலியன் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவது நமது பொதுவான நலன்களுக்கு உகந்தது.


பொதுமக்கள் மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகளின் பாதுகாப்பும், அதே போல் எரிசக்தி விநியோகமும் ராணுவ மோதலில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்" என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.


வளைகுடா நாடுகளின் உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்

ஃபிராங்க் கார்ட்னர், பாதுகாப்புச் செய்தியாளர், தோஹா, கத்தார்


ராஸ் லஃபான் கத்தாரின் எரிவாயு உள்கட்டமைப்பின் மணிமகுடமாகத் திகழ்கிறது, எனவே இயல்பாகவே அந்நாட்டு அரசாங்கம் மிகுந்த கோபத்தில் உள்ளது.


சுமார் 18 நாட்களுக்கு முன்பு போர் தொடங்கும் வரை, கத்தாருக்கும் அதன் வளைகுடா அண்டை நாடான இஸ்லாமிய குடியரசுக்கும் (இரான்) இடையிலான உறவுகள் பொதுவாக நல்லுறவாகவே இருந்தன.


இரு நாடுகளும் சவுத் பார்ஸ் எரிவாயு வயலைப் பகிர்ந்துகொள்கின்றன, இது இந்த சிறிய வளைகுடா நாட்டுக்கு முன்னெப்போதும் இல்லாத பொருளாதார செழிப்பைக் கொண்டு வந்துள்ளது.


கத்தார் அமைச்சர்கள் தெஹ்ரானுக்குச் சென்றுள்ளனர் மற்றும் போரை எதிர்த்த நாடுகளில் கத்தாரும் ஒன்றாக இருந்துள்ளது.


இரான் இப்போது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் வெடிக்கும் ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. அரபு வளைகுடா நாடுகளுக்கும் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையிலான நம்பிக்கை எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.


வளர்ந்து வரும் மோதல்

இரான் போர் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகின்றன, இதுவரை இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம்,EPA-EFE/REX/Shutterstock

படக்குறிப்பு,இரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் மரணத்தை புதன்கிழமை இரான் அரசு உறுதிப்படுத்தியது (கோப்புப் படம்).

இரான் போர் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகின்றன, இதுவரை இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


இரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை அன்று தெரிவித்தார். முன்னதாக, பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லரிஜானியும் கொல்லப்பட்டிருந்தார்.


இரானிய மூத்த அதிகாரிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கையைத் தாங்கள் மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இஸ்மாயில் கதிப்பின் கொலையை ஒரு "கோழைத்தனமான கொலை" என்று இரானிய அதிபர் பெசெஷ்கியன் வர்ணித்துள்ளார், அதே நேரத்தில் நாட்டின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி பழிவாங்கப்போவதாக சபதம் செய்துள்ளார்.


ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, மொஜ்தபா காமனெயி ஒரு எழுத்துப்பூர்வ செய்தியில், "சிந்தப்பட்ட ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு" என்று கூறியுள்ளார்.


போரின் ஆரம்பகட்டத் தாக்குதல்களில் தனது தந்தை அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றிய மொஜ்தபா காமனெயி, இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை.


கோம் நகரில் உள்ள ஒரு மதத் தலத்தில் லரிஜானி அடக்கம் செய்யப்படுவார் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


"எரிவாயு வயல் முழுவதையும் தகர்த்துவிடுவோம்" - இரானை எச்சரித்த அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் பட மூலாதாரம்,EPA/ Shutterstock

புதன்கிழமை இரவு இரானின் சவுத் பராஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.


அந்த தாக்குதலுக்கு எதிர்வினையாக இரான் கத்தாரின் ராஸ் லஃபான் எனும் தொழில் துறை பகுதி மீது தாக்குதல் நடத்தியது. அப்பகுதியில் தான் உலகின் மிகப்பெரிய எல்என்ஜி எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.


டிரம்ப் தன்னுடைய பதிவில் இஸ்ரேலிய தாக்குதல் குறித்து "அமெரிக்காவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது" என்றும் இரான் மீண்டும் கத்தாரை தாக்கினால் நிலைமை தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளார்.


"மத்திய கிழக்கில் நிகழ்ந்தவற்றின் மீதான கோபத்தினால்," இஸ்ரேல் "வன்முறையுடன் தாக்கியது" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.


"இந்த குறிப்பிட்ட தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை; மேலும், கத்தார் நாடு இத்தாக்குதலில் எந்த வகையிலும், எவ்வித வடிவிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை — இத்தாக்குதல் நிகழப்போகிறது என்பது பற்றிய எவ்விதத் தகவலும் அந்நாட்டுக்குத் தெரிந்திருக்கவும் இல்லை."


ஆனால் கத்தாரின் ராஸ் லஃபான் மீதான அதன் பதிலடித் தாக்குதல்கள் "நியாயமற்ற முறையிலும் அநீதியாகவும்" மேற்கொள்ளப்பட்டன என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



"இரான் விவேகமற்ற முறையில் வேறொரு நிரபராதி நாட்டின் மீது (கத்தார்) தாக்குதல் நடத்தத் தீர்மானிக்காத வரையில்," இஸ்ரேல் இரானின் 'சவுத் பார்ஸ்' (South Pars) எரிவாயு வயல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இரான் மீண்டும் கத்தார் மீது தாக்குதல் நடத்தினால், "இரான் இதற்கு முன் ஒருபோதும் கண்டிராத அளவிலான வலிமையுடனும் ஆற்றலுடனும், சவுத் பார்ஸ் எரிவாயு வயல் முழுவதையும் அமெரிக்கா மிகக் கடுமையாகத் தகர்த்துவிடும்" என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.


இரானுக்கான "நீண்டகால விளைவுகள்" காரணமாக, "இந்த அளவிலான வன்முறை மற்றும் அழிவை" அங்கீகரிக்க தான் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ள அவர், "ஆனால், கத்தாரின் எல்என்ஜி எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் தாக்கப்பட்டால், அவ்வாறு செய்ய நான் தயங்கமாட்டேன்." என்றார்.

 


ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் இனி தாக்குதல் நடத்தாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு (LNG) வசதிகளின் ஒரு பகுதியைத் தாக்கி ஈரான் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலியத் தாக்குதல் குறித்து வாஷிங்டனுக்கு முன்னரே எந்தத் தகவலும் தெரியாது என்றும், இந்தத் தாக்குதல் பற்றி கத்தாருக்கு "எந்தத் தகவலும் தெரியாது" என்றும் டிரம்ப் வலியுறுத்துகிறார்.

 


தற்போதைய செய்தி:

துபாய் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஈரான் "மேம்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை" ஏவியதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரவு வானில் பத்துக்கும் மேற்பட்ட இடைமறிப்பு ஏவுகணைகள் பாய்ந்ததாக துபாயிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் அச்சுறுத்தலை இடைமறிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டன.

தொடர்பில் இருங்கள், @MOSSADil-ஐப் பின்தொடருங்கள்.

 


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தேனீர் குடித்துக் கொண்டே பேசுவது போல் வெளியிடப்பட்டுள்ள காணொளி போலியானது என்று எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் க்ரூக் கூறியுள்ளது.


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திவிட்டோம், இதில் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை, இறந்திருக்கலாம் என்று ஈரான் அறிவித்தது. ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.


நெதன்யாகு உயிருடன் தான் இருக்கிறார், நலமாக உள்ளார் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தொடர்ந்து மறுத்து வருகின்றது. தமது மறுப்பை மெய்ப்பிக்கும் வகையில் கையில் தேனீர் அருந்தியபடியே பேசும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்றை இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.


அவர் உயிருடன் தான் உள்ளார் என்று இஸ்ரேல் அறிவித்து இருக்கும் நிலையில், அந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து உலக நாடுகள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன. இந்நிலையில், இந்த காணொளி உண்மையானது தானா? என்று எக்ஸ் வலை தள பக்கத்தில் க்ரூக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த க்ரூக், நெதன்யாகு தேனீர் குடித்தபடி பேசும் காணொளி ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று அறிவித்துள்ளது. 


இந்த வீடியோ ஏஐ-யால் உருவாக்கப்பட்டது. தேனீர் கடையில் வெகு சாதாரணமாக ஈரான், லெபனான் பற்றி பேசுவது ஒரு போலியான காணொளி ஆகும். இந்த வீடியோவில் உண்மையான நிகழ்வு இருப்பது போன்று தெரியவில்லை.என க்ரூக் தெரிவித்துள்ளது.


 


ஈரானிய ட்ரோன்கள் ஈரானிய ட்ரோன்கள் ஈரானிய ட்ரோன்கள் டுபாய் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து தாக்கியதை தொடர்ந்து குறித்த விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


அவசரகால குழுக்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.த்தை குறிவைத்து தாக்கியதை தொடர்ந்து குறித்த விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


அவசரகால குழுக்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலையத்தை குறிவைத்து தாக்கியதை தொடர்ந்து குறித்த விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


அவசரகால குழுக்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காயமடைந்துள்ளார் எனவும் அவர் கொல்லப்பட்டுவிட்டார் எனவும் சில தகவல்கள் பரவின.


நெதன்யாகு இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதைப் போல் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் இந்தப் புகைப்படம் ஏஐ உதவியினால் உருவாக்கப்பட்டது எனவும் அவர் காயமடைந்ததற்கான தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டது.


இந்நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதுவும் ஆகவில்லை. அவர் நலமுடன் உள்ளார். இது பொய்யான தகவல் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.


 


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நிச்சயம் கொல்லாமல் விடமாட்டோம் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக ஈரான் இராணுவம் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.


குழந்தைகள், சிறுவர்களை நெதன்யாகு கொலை செய்து வருகிறார்.


இந்நிலையில் முழு பலத்துடன் தாக்குதல் வேட்டை தொடரும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது. 

 


அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது. 


இந்நிலையில் உலக சந்தையில் பிரதானமாக எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.


இதனால் உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. 


இந்நிலையில் ஈரானுக்கு ஆதரவாக உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு பப் அல் - மண்டெப் நீரிணையை மூடுவதாக அச்சுறுத்தியுள்ளனர்.


இதன் காரணமாக உலக கடல்வழி எரிசக்தி மற்றும் வர்த்தகத்தில் 30 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


இந்த வழியானது, ஆசியா - ஐரோப்பா வர்த்தகத்துக்கு முக்கியமானதாகும். 


அதுமட்டுமின்றி ஈரான் மற்றும் ஓமானுக்கிடையில் 33 கிலோமீட்டர் அகலத்தில் இந்த நீரிணை அமைந்துள்ளது. 


மேற்கூறிய இரண்டு நீரிணைகளும் மூடப்பட்டால் ஆசியா-ஐரோப்பா வர்த்தகக் கப்பல்கள் தென் ஆபிரிக்காவின் கேப் ஆப் குட் ஹோப் வழியாகச் செல்ல 10 முதல் 15 நாட்கள் கூடுதலாகப் பயணிக்க நேரிடும். 


இதனால் எரிபொருள் செலவுகள் அதிகரித்து மசகு எண்ணெய் விலை மேலும் உயரும்.


 Tik Tok -வாசிகள் நேரடியாக ஈரானிடம் இஸ்ரேலுடைய இராணுவ முக்கிய பகுதிகளை காட்டி இங்கு தாக்குதல் நடத்துங்கள் என்கிறார்கள்.

~ இவை முன்பே ஈரானுக்கு தெரியாமல் இல்லை! ஆனால்., உலகம் முழுவதும் மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு ஈரான் 🇮🇷 பக்கம் திரும்பி உள்ளது என்பதை இது கண் கூடாக காட்டுகிறது!


 ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் அமெரிக்கா கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.


 


ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலும், அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களைத் தூண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.


ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளில் சுமார் 90% கொண்ட ஏற்றுமதி முனையமான கார்க் தீவில் உள்ள ஈரானின் முக்கிய எண்ணெய் மையம் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஹெலிகொப்டர் தளத்தை இலக்கு வைத்து இன்று பாரிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


ஈராக் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயமான 'கிரீன் சோன்' பகுதியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து தூதரக வளாகத்திற்குள் இருந்து கரும்புகை வெளியேறியதை அங்கிருந்த சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது கட்டடச் சேதங்கள் குறித்து பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. எனினும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கடும் பதற்றம் நிலவுகிறது.


வடகொரியா இன்று பலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது, 


ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏவுகணை கடலில் வீழ்ந்துவிட்டதாகவும், அது ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக நம்பப்படுவதாகவும் அமைச்சு கூறியது.

 

ஜனவரி 27 அன்று இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா ஏவியதன் பின்னர் , அணு ஆயுதம் ஏந்திய வடகொரியாவின் முதல் ஏவுகணை இதுவாகும்.

 


போர்களில் தெளிவான வெற்றியாளர்களை நிர்ணயிப்பது அரிது. மாறாக, சாதாரண மக்களே பெரும்பாலும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். உலகளாவிய எரிசக்தி சந்தைகளும் விநியோகச் சங்கிலிகளும் தற்போது சீர்குலைந்துள்ளதால், உலகம் முழுவதுமுள்ள பல நாடுகள் கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. இருப்பினும், இந்த குழப்ப நிலைக்கு மத்தியிலும் சில நாடுகள் ஆதாயமடையக்கூடிய புதிய வாய்ப்புகளைக் கண்டடையக்கூடும்.


அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இரானுக்கு எதிராக முன்னெடுக்கும் போர், அந்தப் பிராந்தியத்திலும் உலகளவிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இது வளைகுடா நாடுகளில் நிலையற்ற சூழலை உருவாக்கியுள்ளதுடன், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களைத் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறவும் நிர்பந்தித்துள்ளது.


போர் நடைபெறும் இடத்தில் இருந்து வெகுதொலைவில் அமைந்துள்ள நாடுகள்கூட இதன் தாக்கத்தை உணர்கின்றன. கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வளைகுடா பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது வணிக நிறுவனங்களுக்கும், சாதாரண நுகர்வோருக்கும் செலவுகளை அதிகரித்து வருகிறது.


இந்தச் சூழலின் விளைவாக, இரண்டு முக்கியமான கேள்விகள் எழுகின்றன. இந்த நெருக்கடியால் எந்தெந்த நாடுகள் மிக அதிகமான இழப்புகளைச் சந்திக்கப் போகின்றன? அதேவேளையில், எந்த நாடுகள் இதன் மூலம் பயனடையக்கூடும்?



ரஷ்யா

இரான் ரஷ்யாவின் ஒரு முக்கியமான நட்பு நாடு மற்றும் ராணுவக் கூட்டாளி. இரானின் அதிஉயர் தலைவர் அலி காமனெயி கொலை, ரஷ்யாவுக்கு மற்றொரு ராஜதந்திர பின்னடைவாகும். முன்னதாக, சிரியாவில் பஷர் அல்-அசத் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டது, வெனிசுவேலாவில் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்டது ஆகியவற்றின் மூலமாக, ரஷ்யா ஏற்கெனவே இரண்டு நெருங்கிய கூட்டாளிகளை இழந்திருந்தது.


விளம்பரம்


இருப்பினும், மத்திய கிழக்கில் நடந்த போர், யுக்ரேனுக்கு எதிரான அதன் சொந்த போரில் ரஷ்யாவுக்கு இன்னும் சில நன்மைகளைத் தரக்கூடும். ஏனெனில், இந்த மோதல் அமெரிக்காவை யுக்ரேனுக்கு பதிலாக மத்திய கிழக்கிற்கு அதிக ராணுவ தளவாடங்களையும் ஆயுதங்களையும் அனுப்ப கட்டாயப்படுத்துகிறது.


அதற்கொரு முக்கியமான உதாரணம், பேட்ரியாட் ஏவுகணை அமைப்பு இடைமறிப்பான்களின் பயன்பாடு. இந்த ஏவுகணைகள் உள்நுழையும் ராக்கெட்டுகள், ட்ரோன்களை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த இடைமறிப்பான்களில் பல இப்போது மத்திய கிழக்கில் இரானிய தாக்குதல்களைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பொருள், யுக்ரேன் தன்னைத் தற்காத்துக்கொள்ளக் குறைவான அளவிலேயே அவற்றை வைத்திருக்கலாம் என்பதாகும்.


சர்வதேச அரசியல் படிப்புகளுக்கான பாரிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நிக்கோல் கிராஜெவ்ஸ்கி இதுகுறித்து விளக்கியபோது, "பேட்ரியாட் ஏவுகணைகளின் அதிகப் பயன்பாடு ரஷ்யாவுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அது யுக்ரேன் பெறக்கூடிய வான் பாதுகாப்பு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது" என்றார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

அபிஷேக் ஷர்மா - டி20 உலகக் கோப்பை

சஞ்சு சாம்சனுக்கு கிடைக்காத ஆதரவு அபிஷேக் ஷர்மாவுக்கு கிடைத்தது ஏன்?

இரானில் போரின் பாதிப்புகளை காட்டும் ஒரு புகைப்படம் 

போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன?

டிரம்ப் அழைத்தும் இரானில் ஏற்படாத எழுச்சி - இராக்கில் அமெரிக்கா செய்த விஷயம்தான் காரணமா?

இரான் எழுச்சிக்கு டிரம்ப் அழைப்பு – இராக்கில் அமெரிக்கா செய்தது இப்போது பின்னடைவு தருமா?


'அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்' - இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து

End of அதிகம் படிக்கப்பட்டது

அதேநேரத்தில், இரானுக்கு சொந்தமாக ட்ரோன்கள் தேவை அதிகரித்து வருவது ரஷ்யாவை பெரிதாகப் பாதிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். முன்னதாக யுக்ரேன் போரின்போது, ரஷ்யாவுக்கு ஷாகிட் ட்ரோன்கள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை இரான் வழங்கியது. ஆனால், இப்போது ரஷ்யா தனது சொந்த நாட்டிற்குள் இந்த ட்ரோன்களை எவ்வாறு தயாரிப்பது என்பதைக் கற்றுக்கொண்டுள்ளது.


இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல் - ஹோர்முஸ் நீரிணைபட மூலாதாரம்,Anadolu via Getty Images

படக்குறிப்பு,இரானிய அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயியின் படுகொலை, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு மற்றொரு ராஜதந்திர பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுத பரவல் தடை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஜன்னா நோட்டேவின் கூற்றுப்படி, ரஷ்யா இந்த ட்ரோன்களுக்கு இனி இரானை சார்ந்திருக்க வேண்டியதில்லை. ரஷ்யா இப்போது அவற்றைத் தானே தயாரித்து, இரானின் உதவியின்றி யுக்ரேனில் தனது போரைத் தொடர முடியும்.


எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை இரான் மூடியுள்ளது. இதன் விளைவாக, எரிசக்தி ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.


இந்த நிலைமை உண்மையில் ரஷ்யாவுக்கு நிதிரீதியாக உதவக்கூடும். யுக்ரேனுடனான போர் காரணமாக ரஷ்யா பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. ரஷ்ய அரசாங்கம், எண்ணெய் விற்பனையில் இருந்து வரும் வருவாயைப் பெரிதும் நம்பியுள்ளது. மேலும், அதன் தேசிய பட்ஜெட் எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 59 டாலர் என்பதை அடிப்படையாகக் கொண்டது.


இருப்பினும், மோதல் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் பெரிதும் அதிகரித்துள்ளன. ஒரு கட்டத்தில் பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 120 டாலர்கள் என்னும் அளவை எட்டியது. மேலும், வளைகுடாவில் சில பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இது சீனா, இந்தியா போன்ற பெரிய சந்தைகளுக்கு அதிக எண்ணெயை விற்க ரஷ்யாவை அனுமதிக்கும்.


எரிசக்தி நுண்ணறிவு நிறுவனமான ஆர்கஸ் மீடியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் டேவிட் ஃபைஃப், "இந்தியா முன்னதாக ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் குறைக்க ஊக்குவிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் அமெரிக்கா தற்காலிகமாக இந்தியாவை சுமார் ஒரு மாதத்திற்கு மீண்டும் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதித்துள்ளது," என்று தெரிவித்தார்.


உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் சிக்கல்களைக் குறைக்க ரஷ்ய எண்ணெய் மீதான சில தடைகளைத் தளர்த்துவது குறித்து விவாதங்கள் நடந்து வருவதாகவும் ஃபைஃப் கூறுகிறார்.


இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல் - ஹோர்முஸ் நீரிணை

சீனா

இதுவரை, இரானை உள்ளடக்கிய போர் சீனாவின் மீது பெரியளவிலான உடனடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், சீனா சில பொருளாதார அழுத்தங்களை உணரக்கூடும்.


'உலகளாவிய எரிசக்தி கொள்கை மையத்தின்' தகவல்கள்படி, சீனா இறக்குமதி செய்யும் எண்ணெயில் சுமார் 12% மட்டுமே இரானில் இருந்து வருகிறது. சீனாவிடம் பல மாதங்களுக்குப் போதுமான பெரிய எண்ணெய் இருப்புகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு தேவைப்பட்டால், ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெயை அதனால் வாங்கிக்கொள்ள முடியும்.


ஆனால், சீனாவுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை அதன் ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் பொருளாதாரம்தான். சீன பொருளாதாரத்தின் பெரும்பகுதி, "பிற நாடுகளுக்குப் பொருட்களை விற்பனை செய்வதையே சார்ந்துள்ளது" என்கிறார் ஃபைஃப். ஒரு நாடு உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பான 'மொத்த உள்நாட்டு உற்பத்தியில்', சீனாவுக்கு அதன் ஏற்றுமதிகள் மட்டுமே சுமார் 20 சதவிகிம் பங்கு வகிக்கின்றன. சீனாவின் பொருளாதாரம் ஏற்கெனவே வீழ்ச்சியடைந்து வரும் சொத்து விலைகள் மற்றும் உள்நாட்டிலேயே குறைந்து வரும் நுகர்வோர் செலவினம் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், இந்த ஏற்றுமதித் துறை தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.


ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள கப்பல் போக்குவரத்துச் சிக்கல்கள் சீனாவுக்கு ஒரு பெரிய பிரச்னையாக அமையவில்லை. இருப்பினும், மேற்கத்திய சந்தைகளுக்குச் செல்லும் கப்பல் வழித்தடங்கள் சீனாவின் ஏற்றுமதிக்கு மிகவும் அவசியமானவை.


மற்றொரு வழித்தடமான 'பாப் அல்-மண்டேப்' நீரிணையும் இதில் முக்கியமானது. இது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்கு இடையிலான வர்த்தக வழித்தடங்களை இணைக்கிறது. இரானின் ஆதரவு பெற்ற, ஏமனில் இருந்து இயங்கும் ஹூத்தி என்னும் ஆயுதக் குழுவின் தாக்குதல்களை இந்தப் பகுதி சந்தித்து வருகிறது.


இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல் - ஹோர்முஸ் நீரிணை

இந்த அபாயங்களின் விளைவாக, ஆசியாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்கள் செங்கடலை தவிர்த்துச் செல்லக்கூடும். "அதற்கு மாற்றாக, அவை தென்னாப்பிரிக்காவை சுற்றி, 'நன்னம்பிக்கை முனை' வழியாகப் பயணித்து அட்லான்டிக் பெருங்கடலை அடையக்கூடும். நெடுந்தொலைவைக் கொண்ட இந்த மாற்றுப் பாதை, மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் சீன பொருட்களுக்கான பயண நேரத்தையும் கப்பல் போக்குவரத்துச் செலவுகளையும் அதிகரிக்கச் செய்கிறது" என்று ஃபைஃப் பிபிசியிடம் கூறினார்.


மத்திய கிழக்கில் ஆபத்தைத் தவிர்க்க நீண்ட கடல் பாதையில் பயணிப்பது மிகவும் விலை உயர்ந்தது. சாத்தம் ஹவுஸில் உள்ள மத்திய கிழக்கு நிபுணரான நில் குயிலியம், "அதற்கு அதிக செலவாகும்" என்று விளக்குகிறார்.


ஆபத்தான பகுதிகளைத் தவிர்க்கும் கப்பல்கள் செங்கடல் வழியாகக் குறுகிய பாதைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தென்னாப்பிரிக்காவை சுற்றி நீண்ட பாதையில் பயணிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, "இது பயணத்தில் 10 முதல் 14 நாட்களைக் கூடுதலாக அதிகரிக்கிறது. மேலும், பொருட்களைப் பொறுத்து, சராசரியாக ஒரு கப்பலுக்கு, சுமார் 2 மில்லியன் டாலர்கள் கூடுதல் செலவாகும்."


அதேநேரத்தில், இரான் சம்பந்தப்பட்ட போர் சீனாவுக்கு சில ராஜதந்திர வாய்ப்புகளையும் வழங்கக்கூடும். அமெரிக்காவுக்கு எதிராகத் தன்னை "பொறுப்பான எதிர் சமநிலையாக" சீனா காட்டிக்கொள்ள முயலக்கூடும் என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிலிப் ஷெட்லர்-ஜோன்ஸ் கூறுகிறார்.


ஷி ஜின்பிங், அமைதியான மற்றும் நிலையான உலகளாவிய தலைவராகத் தன்னைத் தொடர்ந்து காட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. டொனால்ட் டிரம்பிடன் ஒப்பிடும்போது அவர் மிகவும் கணிக்கக் கூடியவராகத் தோன்றுவதற்கு இது உதவும்.


இந்த மோதல், பிற உலகளாவிய பதற்றங்களுக்கு டிரம்ப் எவ்வாறு எதிர்வினையாற்றக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள சீனாவுக்கு உதவக்கூடும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, தைவான் தன்னைத்தானே ஆட்சி செய்துகொள்ளும் ஒரு தீவு. ஆனால், சீனாவால் உரிமை கோரப்படுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல்களுக்கு அமெரிக்கா எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பார்க்க சீனா தற்போதைய சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனிக்கலாம்.


இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல் - ஹோர்முஸ் நீரிணைபட மூலாதாரம்,AFP via Getty Images

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம்

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகள் மத்திய கிழக்கில் இருந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெரிதும் நம்பியுள்ளன. போர் காரணமாக, இந்த நாடுகள் பல கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் பொருளாதார சேதத்தைக் குறைக்கவும் சில அரசுகள் ஏற்கெனவே கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.


வியட்நாமில், போர் தொடங்கியதில் இருந்து டீசலின் விலை 60% அதிகரித்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க, அரசாங்கம் மக்களை முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்கிறது.


பிலிப்பின்ஸில், நாட்டின் கச்சா எண்ணெயில் சுமார் 95% மத்திய கிழக்கில் இருந்து வருகிறது. அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகளின் விளைவாக, அவசர சேவையில் பணியாற்றுவோர் தவிர, அரசு ஊழியர்கள் இப்போது வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள்.


பாகிஸ்தானும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பல ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்கப்படுகிறார்கள். மேலும் பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தத் தொடங்கியுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளில் சேர்க்கப்படாத ஒரே முக்கிய நிறுவனங்கள் வங்கிகள் மட்டுமே.


தொலைக்காட்சி உரையில், ஷெபாஸ் ஷெரீஃப், "நாட்டின் எரிபொருள் இருப்புகளைப் பாதுகாத்து கவனமாக மதிப்பிடுவது முக்கியம்" என்று கூறினார்.


இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல் - ஹோர்முஸ் நீரிணைபட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் தென்படத் தொடங்கியுள்ளன

வங்கதேசத்தில், மக்கள் பீதியுடன் எரிபொருள் வாங்கத் தொடங்கியுள்ளனர். இது பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அரசாங்கம் எரிபொருள் வரம்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கார்கள் ஒரு நாளைக்கு 10 லிட்டர் மட்டுமே வாங்க முடியும், இருசக்கர வாகனங்கள் நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் மட்டுமே வாங்க முடியும்.


இருப்பினும், போரின் விளைவுகள் எரிசக்தி பற்றாக்குறையையும் தாண்டிச் செல்லக்கூடும். மேலும் பல நாடுகள் பரந்த பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.


உலகெங்கும் உள்ள விவசாயிகள் மண்ணில் முக்கியமான ஊட்டச்சத்துகளைச் சேர்க்க உரங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஊட்டச்சத்துகள் பயிர்கள் சரியாக வளர்வதற்கு உதவுவதோடு, மோசமான வானிலைக்கு எதிராகவும் அவற்றை வலிமையாக்குகின்றன. இந்த உர விநியோகம் தடைபட்டால், அது உலகின் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.


சாத்தம் ஹவுஸை சேர்ந்த நீல் குயிலியம் நிலைமையை இவ்வாறு விளக்குகிறார்: "உரமாகச் செல்லும் தீவனப் பங்கான உலகின் யூரியாவில் 30% ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. யூரியா பெட்ரோ கெமிக்கல்களில் இருந்து வருகிறது. இது கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் செயல்முறையில் இருந்து கிடைக்கிறது. எனவே நீங்கள் சர்வதேச சந்தைகளில் இருந்து 30% யூரியாவை எடுத்துவிட்டால், அது உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்."


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஹோர்முஸ் நீரிணை பல ஆற்றல் மற்றும் ரசாயனப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு முக்கிய வழித்தடமாக உள்ளது. உரங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் யூரியா, கச்சா எண்ணெயில் இருந்து வரும் பெட்ரோ கெமிக்கல்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.


உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒருவரும், உரப் பொருட்களின் முக்கிய உற்பத்தியாளருமான கத்தார் எனர்ஜி, அதன் சில கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஃபோர்ஸ் மேஜூர் என்று அறிவித்தது. இதுவொரு அவசரக்கால நடவடிக்கையாகும். இது எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும்போது நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் விநியோகங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு அனுமதிக்கிறது.


இதன் விளைவுகள் உடனடியாகத் தெரியாமல் போகலாம் என்று குயிலியம் எச்சரிக்கிறார். "ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, பணவீக்கத்தின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்பின் அடிப்படையில் இதன் தாக்கத்தை நாம் காணக்கூடும்," என்கிறார் அவர்.


மேலும் அவர், "இது இன்னும் நிகழாமல் இருக்கலாம். ஆனால், பயிர்கள் போராடும்போது அல்லது விவசாயிகள் தங்களுக்கான உரத்தைப் பெறுவதற்குப் போராடும்போது, நீண்டகால தாக்கத்தை நாம் காணப் போகிறோம்," என்றார்.


எளிமையான சொற்களில் கூறுவதெனில், விவசாயிகளுக்குப் போதுமான உரம் கிடைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் பயிர் உற்பத்தி குறையக்கூடும். இது உணவின் விலைகளை உயர்த்தக்கூடும் மற்றும் உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.


 இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.


விபத்துக்குள்ளான கேசி-135 விமானத்தைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும், இந்த விமானம் வீழ்த்தப்பட்டதில் எதிரிகளின் தாக்குதலோ அல்லது தவறுதலான நட்பு நாடுகளின் தாக்குதலோ காரணமல்ல என்றும் முன்பு அமெரிக்கா கூறியது.

இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகளில் இந்த எரிபொருள் நிரப்பும் விமானம் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு விமானங்களில் இது ஒன்று என்றும் சென்ட்காம் தெரிவித்துள்ளது.


மேலும், இரண்டாவது விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்று அமெரிக்கா கூறியது.



இராக்கில் நெருங்கிய அமெரிக்க விமானத்தை தாக்கியது  இரானா? பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,(கோப்புப் படம்)

இரான் கூறியது என்ன?

போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள், நடுவானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டவை.


இவை அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. போர் விமானங்கள் பறக்கும் தூரத்தை அதிகரிப்பதற்காக முதல் வளைகுடா போரின்போது இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.


கேசி-135 விமானத்தில் வழக்கமாக ஒரு விமானி, ஒரு துணை விமானி மற்றும் விமானத்தின் எரிபொருள் நிரப்பும் பகுதியை இயக்குவதற்குப் பொறுப்பான ஒரு பூம் ஆபரேட்டர் (boom operator) என குறைந்தது மூன்று பணியாளர்கள் இருப்பார்கள்.


இந்த விபத்து நட்பு நாடுகளின் வான்பரப்பில் நடந்ததாக சென்ட்காம் விவரித்துள்ளது. இருப்பினும், இராக்கின் இந்தப் பகுதியில் இரான் ஆதரவு போராளிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல் - ஹோர்முஸ் நீரிணை

இரான் மீதான போரினால் ஆதாயமடையும் நாடுகள், பாதிக்கப்படும் நாடுகள் யாவை?

அபிஷேக் ஷர்மா - டி20 உலகக் கோப்பை

சஞ்சு சாம்சனுக்கு கிடைக்காத ஆதரவு அபிஷேக் ஷர்மாவுக்கு கிடைத்தது ஏன்?

இரானில் போரின் பாதிப்புகளை காட்டும் ஒரு புகைப்படம் 

போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன?

டிரம்ப் அழைத்தும் இரானில் ஏற்படாத எழுச்சி - இராக்கில் அமெரிக்கா செய்த விஷயம்தான் காரணமா?

இரான் எழுச்சிக்கு டிரம்ப் அழைப்பு – இராக்கில் அமெரிக்கா செய்தது இப்போது பின்னடைவு தருமா?

End of அதிகம் படிக்கப்பட்டது

ஒரு கூட்டணி குழு ஏவுகணை மூலம் இந்த விமானத்தை இலக்கு வைத்ததாக இரானின் அரசுத் தொலைக்காட்சி கோரியுள்ளது.


இரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் வெடித்ததில் இருந்து, இதுவரை ஏழு அமெரிக்க வீரர்கள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


தற்போதைய போரின்போது அமெரிக்க ராணுவம் இதுவரை குறைந்தது நான்கு விமானங்களை இழந்துள்ளது.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த மாத தொடக்கத்தில், குவைத் வான் பரப்பில் "தவறுதலான நட்பு நாட்டுத் தாக்குதலில்" மூன்று F-15 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அதிலிருந்த ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர்.


போயிங் நிறுவனம் 1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் அமெரிக்க ராணுவத்திற்காக கேசி-135 ஸ்ட்ரேடோடேங்கர் விமானங்களைத் தயாரித்தது.


இது அமெரிக்க ராணுவத்தின் வான்வழி எரிபொருள் நிரப்பும் பிரிவின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. மேலும், போர் விமானங்கள் தரை இறங்க வேண்டிய அவசியம் இல்லாமல் நீண்ட தூரப் பணிகளை மேற்கொள்ள இது அனுமதிக்கிறது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.