Showing posts with label world. Show all posts

 

மத்திய கிழக்கில் இரான் - இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் பல ஏவுகணைகளை ஏவியது. இந்தத் தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இது "முழு வாரத்திற்கும் தொடர்ச்சியான தாக்குதல்களின்" ஆரம்பம் என்று அது கூறியுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல் நடத்திய வேளையில், இரானின் இந்தத் தாக்குதலும் நடைபெற்றது.


பெய்ரூட் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஐஆர்ஜிசி, இஸ்ரேல் மீண்டும் "ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில்" ஈடுபட்டால், அதற்கான பதிலடி "மிகப் பெரியதாக" இருக்கும் என்றும், அப்பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் "அனைத்து" இலக்குகளும் அதில் அடங்கக்கூடும் என்றும் எச்சரித்தது.


விளம்பரம்


இதற்குப் பதிலடியாக, மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி மற்றொரு அலையாக ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும் ஏமனில் இருந்தும் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை ஏவப்பட்டதை கண்டறிந்திருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் (IDF) தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?


ஹைஃபாவுக்கு தென்கிழக்கே உள்ள ரமத் டேவிட் விமானப்படை தளத்தைத் தாக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி)கூறியது.


ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக இரான் குற்றம் சாட்டியுள்ளது.


"ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின்" வடக்குப் பகுதியில் உள்ள பல "இராணுவ நிலைகள்" மீது தங்கள் படைகள் தாக்குதல் நடத்தியதாக இரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அமெரிக்கா, இரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏப்ரல் மாதம் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் "தொடர்ந்து மீறப்பட்டதைத்" தொடர்ந்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியது. இரானின் தெற்குப் பகுதியில் இரானியக் கப்பல்கள் மற்றும் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களும் இந்த மீறல்களில் அடங்கும்.


ஏப்ரல் 17 முதல் அமலில் உள்ள போர்நிறுத்தம் பெயரளவில் மட்டுமே உள்ளது. இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய இரு தரப்பினரும் அதைத் தொடர்ந்து மீறி வந்துள்ளனர்.


வார இறுதியில் இரானிய இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கடந்த வாரம் கூறியது. அதேவேளையில், அதற்குப் பதிலடியாக அமெரிக்கத் தளம் ஒன்றை இலக்கு வைத்ததாக இரான் கூறியது.


இரான் தனது பாதுகாப்பையும் தேசிய நலன்களையும் காத்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறியது. லெபனான் அல்லது இரான் மீது தாக்குதல் இஸ்ரேல் நடத்தினால், அதற்கு "வலுவான மற்றும் சக்திவாய்ந்த பதிலடி" கொடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.


லெபனானில் பெய்ரூட்டின் தெற்குப் பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், டெஹ்ரானில் அரசாங்கத்திற்கு ஆதரவாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


புகைப்படங்களில் காணப்பட்ட பல போராட்டக்காரர்கள், இரானின் கொடிகளையும், இரானின் ஆதரவு பெற்ற லெபனானிய அரசியல் மற்றும் இராணுவ அமைப்பான ஹெஸ்பொலாவின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.


டிரம்ப் கூறியது என்ன?

அமெரிக்கா, இஸ்ரேல் - இரான், மத்திய கிழக்குபட மூலாதாரம்,Kevin Dietsch via Getty Images

படக்குறிப்பு,இனி எந்தத் தாக்குதல்களையும் காண விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு இரானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.


அதிபர் டிரம்ப் பேசுகையில்: "அவர்கள் ஏற்கனவே தங்கள் ஏவுகணைகளை ஏவிவிட்டார்கள், போதும் என்ற நிலை வந்துவிட்டது. நாம் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி ஓர் ஒப்பந்தத்தை எட்டுவோம்." என்று கூறியதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.


இரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் பல அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களிடம் பேசியுள்ளார்.


இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசுவதற்கு முன்னதாக, இரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டாம் என்று நெதன்யாகுவை வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகமான 'ஆக்சியோஸ்' (Axios)-இடம் டிரம்ப் கூறினார்.


'டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' (Times of Israel) செய்திப்படி, "இன்றிரவு இனி எந்தத் தாக்குதல்களையும்" பார்க்க விரும்பவில்லை என்று கூறி, இஸ்ரேலின் 'சேனல் 12' (Channel 12) செய்திச் சேனலிடமும் அமெரிக்க அதிபர் அதே கருத்தை வலியுறுத்தினார்.


"இரானின் தாக்குதல்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இரு தரப்பினரும் தங்கள் வேலையைச் செய்தனர். இஸ்ரேல் தாக்கியது, இரானும் தாக்கியது. இப்போது நமக்கு மேலும் தாக்குதல்கள் தேவையில்லை." என்று டிரம்ப் கூறியுள்ளார்.


தான் "இப்போதே" நெதன்யாகுவை அழைத்து, "பதிலடி தாக்குதல் நடத்த வேண்டாம்" என்று கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறினார்.


முன்னதாக, 'பைனான்சியல் டைம்ஸ்' (Financial Times) உடனான உரையாடலில், இரானுடனான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு வேறு "வழியில்லை" என்று டிரம்ப் கூறியிருந்தார்.


"இஸ்ரேலில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழல்" காரணமாக, ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும்.


அனைத்து அமெரிக்க அரசு ஊழியர்களும் "தங்கள் இடத்திலேயே இருக்குமாறும், பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறத் தயாராக இருக்குமாறும்" அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் என்ன செய்கிறது?

அமெரிக்கா, இஸ்ரேல் - இரான், மத்திய கிழக்குபட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,இரான் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய அதிகாரிகள் இடிபாடுகளை அகற்றுகின்றனர்.

தலைமைத் தளபதி (Chief of General Staff) நிலைமையை ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் (IDF) தங்களது டெலிகிராம் (Telegram) பக்கத்தில் தெரிவித்தன.


"உத்தரவு கிடைத்தவுடன் முழு உறுதியுடன் எதிரியைத் தாக்குவோம்" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஐயல் ஜமீர் (Eyal Zamir) கூறியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.


இரான் பொதுமக்களின் மீது "தொடர் தாக்குதல்களை" நடத்துவதை இஸ்ரேலிய ராணுவம் அனுமதிக்காது என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் (Efi Defrin) செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.


"மேலும் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகளுக்கு" இஸ்ரேல் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.


நாடு முழுவதும் வான் பாதுகாப்பு அமைப்புகள் "நிறுவப்பட்டுள்ளதாகவும்", தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி "நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும்" டெஃப்ரின் மேலும் கூறினார்.


"லெபனான் முழுவதும் இஸ்ரேலிய ராணுவம் தனது நடவடிக்கைகளைத் தொடரும்; ஹெஸ்பொலா பயங்கரவாத அமைப்பின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தும்." என்று அவர் தெரிவித்தார்.


இதற்கிடையில், மோதல் குறித்த அச்சம் அதிகரித்த நிலையில், திங்கள்கிழமை காலை ஆசியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.


உலகளாவிய அளவுகோலான 'பிரெண்ட்' (Brent) கச்சா எண்ணெய் விலை 2.6% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 95.50 டாலராகவும், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை 2.5% உயர்ந்து 92.75 டாலராகவும் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதிலிருந்து, எரிபொருள் விலைகளில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டுள்ளன.


இரானுக்கு இஸ்ரேல் பதிலடி

மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.


"சற்று நேரத்திற்கு முன்பு, இஸ்ரேலிய விமானப்படை மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள இரானிய பயங்கரவாத ஆட்சிக்குச் சொந்தமான இராணுவ இலக்குகளைத் தாக்கியது," என்று இஸ்ரேலிய ராணுவம் (IDF) தனது டெலிகிராம் பக்கத்தில் கூறியுள்ளது.


உயிரிழப்புகள் அல்லது தாக்குதல்கள் நடந்த சரியான இடம் குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.


இரானிய அரசு தொலைக்காட்சி தகவல்

இஸ்ரேல் ராணுவ அறிவிப்பைத் தொடர்ந்து, மூன்று நகரங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக இரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


"டெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹானில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டன," என்று அரசு தொலைக்காட்சி தனது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. மத்திய நகரமான கராஜுக்கு அருகிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


மத்திய மற்றும் மேற்கு இரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், டெஹ்ரானின் நகர்ப்புறப் பகுதிகள் குறிவைக்கப்படவில்லை என்று இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


டெஹ்ரான் தீயணைப்புத் துறையை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, திங்கட்கிழமை அதிகாலையில் இரானியத் தலைநகரின் மேற்குப் பகுதிகளில் குறைந்தது இரண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.


சேதத்தின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


இஸ்ஃபஹானில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பிற பகுதிகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


ஏமனில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதாக இஸ்ரேல் தகவல்

ஏமனில் இருந்து இஸ்ரேலியப் பகுதியை நோக்கி ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் (IDF) தெரிவித்துள்ளது.


அந்த அச்சுறுத்தலை இடைமறித்துத் தடுப்பதற்கான வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாக அது கூறியுள்ளது.


ஜெருசலேம், டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலின் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளதாக 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' செய்தி வெளியிட்டுள்ளது.


"சூழலை மதிப்பிட்ட" பிறகு, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் இப்போது "பாதுகாப்பான இடங்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்" என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.


அமெரிக்கா, இஸ்ரேல் - இரான், மத்திய கிழக்குபட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,ஜெருசலேம் நகருக்கு மேலே இரானிய ஏவுகணை ஒன்றை இஸ்ரேல் இடைமறித்தபோது எழுந்த புகை

இரானில் மற்றொரு ஏவுகணை அலை - இஸ்ரேல்

இரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி மற்றொரு அலையாக ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் (IDF) தெரிவித்துள்ளது.


வான் பாதுகாப்பு அமைப்புகள் "அச்சுறுத்தலை இடைமறித்துத் தடுக்கச் செயல்பட்டு வருகின்றன" என்று இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எச்சரிக்கை அறிவிப்பு வந்தால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நாடிச் செல்லுமாறு அது வலியுறுத்துகிறது.


 பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (8) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதன் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.


அந்த நாட்டில் உள்ள மிண்டானாவ் தீவுப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக களத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.


மேலும், சுனாமி பேரலை எழலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

 


ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் பல ஏவுகணைகளை ஏவியது. இந்தத் தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது "முழு வாரத்திற்கும் தொடர்ச்சியான தாக்குதல்களின்" ஆரம்பம் என்று அது கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல் நடத்திய வேளையில், இரானின் இந்தத் தாக்குதலும் நடைபெற்றது.

 


காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், திடீரென காஸா மீது இஸ்ரேலிய படைகள் கடந்த நேற்று (03) நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.


காஸாவில், போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 936 பேர் கொல்லப்பட்டதாக, காஸாவின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


 அபுதாபி​யில் குடி​யிருப்​பு​கள், வணிக மற்​றும் தொழில்​துறை சார்ந்த சொத்துகளுக்​கான வாடகை உயர்வை அடுத்த அறி​விப்பு வரும் வரை அரசு முடக்கி வைத்​துள்​ளது.


இதன்​படி வீட்டு உரிமை​யாளர்​கள் தற்​போதுள்ள வாடகைதாரர்களுக்கு வாடகையை உயர்த்​தவோ அல்​லது இதற்கு முன்பு வாடகைக்கு விடப்​பட்ட சொத்துகளில் குடியேறும் புதிய வாடகை​தா​ரர்​களிடம் அதிக கட்​ட​ணம் வசூலிக்கவோ அனுமதிக்கப்பட மாட்​டார்​கள்.


அபு​தாபி​யின் ரியல் எஸ்​டேட் ஒழுங்​கு​முறை அமைப்​பான அபுதாபி ரியல் எஸ்டேட் மையம் இந்த முடிவை அறி​வித்​துள்​ளது. மேலும் இது உடனடி​யாக அமுலுக்கு வருவ​தாக தெரிவிக்கப்பட்டுள்​ளது. 


ஈரான் - அமெரிக்க போர் காரண​மாக அதி​கரித்து வரும் செல​வு​களைச் சமாளிக்க பல குடும்​பங்​களும் வணி​கர்​களும் போராடி வரும் வேளை​யில் இந்த மாற்​றம் உடனடி நிதிப் பாது​காப்பை வழங்​கு​கின்றது.


ஐக்​கிய அரபு அமீரகத்​தில் வசிக்​கும் புலம்​பெயர்ந்த குடும்பங்களுக்கு மாதத்​தின் மிகப்​பெரிய செல​வாக பெரும்பாலும் வாடகையே இருக்​கின்றது. அந்​நாட்​டின் மிகப்​பெரிய வெளி​நாட்​டுச் சமூகங்​களில் ஒன்​றாக விளங்​கும் இந்தியர்களுக்கு, இந்த வாடகை முடக்​கம் கணிச​மான சேமிப்பாக மாறும். இது அபு​தாபி​யில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்​தி​யக்​ குடும்​பங்​களுக்​கு நிம்​ம​தி​யை அளித்துள்ளது.


 


குவைத்தின் விமான நிலையம் மீது நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


புதன்கிழமை நடைபெற்ற தாக்குதல்களை "இரானின் கிரிமினல் அத்துமீறல்" என குவைத்தின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்ட நிலையில் தூதரகங்கள் சேதமடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


விமான நிலைய தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுத்த இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி), அமெரிக்க ஏவுகணை இடைமறிக்கும் அமைப்பில் ஏற்பட்ட பிழையால் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கிறது.


இந்தக் கூற்றை தவறு எனக் கூறிய அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்), விமான நிலையத்தை "வேண்டுமென்றே, திட்டமிட்டு, நியாயமற்ற முறையில்" இரான் தாக்கியதாகவும் கூறுகிறது.



இரானிய எண்ணெய் கப்பல் மற்றும் கெஷ்ம் தீவு மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்கு வைத்ததாக புரட்சிகர காவல்படை முன்னர் தெரிவித்திருந்தது.


இரான் மீது தற்காப்பு தாக்குதல்களை நடத்தியதாக கூறும் அமெரிக்கா குவைத் மற்றும் பஹ்ரைனை நோக்கி வந்த இரானிய ஏவுகணைகளை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கிறது.


அதோடு புதன்கிழமை ஓமன் வளைகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படை கப்பலை இலக்கு வைத்ததாக இரான் தெரிவித்த நிலையில் சென்ட்காம் அதனை மறுத்துள்ளது.


சமீபத்திய மோதல்கள் ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருக்கும் அமெரிக்கா - இரான் போர்நிறுத்தத்தை அச்சுறுத்துகிறது.


இந்த நிலையில் குவைத் விமான நிலையம் மீதான இரானிய தாக்குதலில் உயிரிழந்தவர் இந்தியக் குடிமகன் என்பது பின்னர் தெரியவந்தது.


இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளது. மேலும் பல இந்தியக் குடிமகன்கள் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.


"இத்தகைய தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரையும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்," என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இரானிய ராஜதந்திரிகள் இருவர் 24 மணி நேரத்தில் நாட்டைவிட்டு வெளியேறுமாறு குவைத் வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் இரான் தூதருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.


முன்னதாக, கெஷ்ம் தீவு மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் தான் மேற்கொண்ட நள்ளிரவு தாக்குதல்கள் "மத்திய கிழக்கில் இரான் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடி" என்று தெரிவித்தது. மேலும் இந்தத் தாக்குதல்கள் இரானிய ராணுவத்தின் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தை இலக்கு வைத்தது என்றும் குறிப்பிட்டிருந்தது.


மேலும் "பிராந்திய கடற்பகுதியை முறையாக கடந்து வந்த சிவிலியன் மரைனர்களை" நோக்கி இரான் செலுத்திய மூன்று தாக்குதல் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவிக்கிறது.


குவைத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகளையும் பஹ்ரைனை நோக்கி மூன்று ஏவுகணைகளையும் இரான் செலுத்தியதாக கூறும் சென்ட்காம் அவை அனைத்தும் சுட்டுவீழ்த்தப்பட்டது அல்லது இடைமறிக்கப்பட்டதாகக் கூறுகிறது.


ஒரு "பிராந்திய நாட்டில்" ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட பதிலடி தாக்குதலில் அமெரிக்க தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கியதாக இரான் தெரிவிக்கிறது.


முன்னதாக, ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கிய ஹோர்மூஸ் நீரிணையின் மீதான அமெரிக்க முற்றுகையின் ஒரு பகுதியாக இரானை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ஏற்றப்படாத எண்ணெய் கப்பலை தான் தாக்கி செயலிழக்கச் செய்தததாக சென்ட்காம் கூறியிருந்தது.


போட்ஸ்வானா கொடி ஏந்திய எம்/டி கப்பல் குழுவினர் "அடுத்தடுத்த எச்சரிக்கையை புறக்கணித்ததால்" அந்தக் கப்பலின் என்ஜின் அறையை நோக்கி ஹெல்ஃபயர் ஏவுகணையை ஓர் அமெரிக்க விமானம் செலுத்தியதாகவும் சென்ட்காம் தெரிவித்தது.


இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என உடனடியாக எதிர்வினையாற்றிய ஐஆர்ஜிசி, "ஹோர்மூஸ் நீரிணையின் பாதுகாப்பை பாதிப்பது அமெரிக்க ராணுவத்திற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்கும்." என்று தெரிவித்தது.


ஏஎஃப்பி செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி, இரான் மீது நடத்தப்பட்ட இரவு நேர தாக்குதலுக்கான நேரடி மற்றும் மன்னிக்க முடியாத பொறுப்பு குவைத் மற்றும் பஹ்ரைனின் தலைவர்களுக்கும் இருக்கிறது என இரான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.


அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள பஹ்ரைன் மற்றும் குவைத் மீது இரான் தொடர்ந்து இலக்குகளைத் தாக்கியுள்ளது.


அமெரிக்கா மற்றும் இரான் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் முடங்கி போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்படாத நிலையில் இந்த தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது.


குவைத், பஹ்ரைன், இரான், அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரானின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியும் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். (கோப்புப் படம்)

தன்னுடைய விமர்சகர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க வேண்டும் எனக் கூறிய டிரம்ப், இரான் ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புவதாகவும் அது அமெரிக்காவுக்குச் சிறந்த ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.


முன்னதாக, போர்நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாக விவாதிக்க மூத்த அதிகாரிகளைச் சந்தித்த பிறகு, சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தின் விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு டிரம்ப் கோரியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிதன.


இந்த மாற்றங்கள் ஹோர்முஸ் நீரிணை, அதிகம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நீக்குவது மற்றும் இரானின் அணுசக்தி திட்டம் மீதான பேச்சுவார்த்தைகளை மீண்டு தொடங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


திங்கட்கிழமை இது தொடர்பாக பேசிய இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்லாயில் பாகேய், இவை விவாதிக்கப்பட்டது என்கிற செய்தியை மறுத்துள்ளார்.


மேலும் அமெரிக்க "தனது பார்வை தொடர்ந்து மாற்றி வருகிறது என்றும் புதிய அல்லது முரணான கோரிக்கைகளை முன்வைக்கிறது" என்றும் தெரிவித்தார்.


புதன்கிழமை வெளியான நேர்காணல் ஒன்றில் பேசிய டிரம்ப், "அணு ஆயுதம் வைத்துக் கொள்ளப்போவதில்லை என இரான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டு விட்டதாக தெரிவித்திருந்தார்.


இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரானின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியும் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.


"நாங்கள் இருவரும் நன்றாகப் பழகி வருகிறோம் போலிருக்கிறது," என்றார் டிரம்ப்.


குவைத், பஹ்ரைன், இரான், அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் பேசினார்.

மொத்ஜபா காமனெயியைச் சந்திப்பீர்களா என்கிற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "நான் அவரைச் சந்திக்க ஆசைப்படுகிறேன். எல்லாம் எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்து, நாங்கள் ஒருவேளை எப்போதாவது சந்திப்போம்." என்றார்.


செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பதற்குப் பதிலாக இரானுக்கு பொருளாதார தடைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.


"தற்போது அவர்களிடம் விவாதிக்கப்படுவதெல்லாம், பொருளாதார தடைகளில் அளிக்கப்படும் விலக்குகள் அனைத்தும் நிபந்தனைகளைப் பொருத்தது தான். அவை அந்தப் பொருளாதார தடைகள் எதனால் முதலில் விதிக்கப்பட்டன என்கிற காரணத்துக்கு மாற்றாகவே அவை அமைய முடியும். அந்தக் காரணம் அவர்களின் அணுசக்தி திட்டம் தான்," என்கிறார் மார்கோ ரூபியோ.


மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் உத்தி பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "போர் முடிந்துவிட்டது." என்று தெரிவித்தார்.

 


நேற்று நள்ளிரவு அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு மற்றும் அமெரிக்க வான்படைத் தளம் ஆகியவற்றை, தான் இலக்கு வைத்ததாக இரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.


அமெரிக்கா தங்களது தொலைத்தொடர்பு ஆண்டெனா மற்றும் இரானிய எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல் ஆகியவற்றை இலக்கு வைத்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஆர்ஜிசி கூறுகிறது.


இதற்கிடையில், இரானின் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைத் தான் இடைமறித்து அழித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.


பிபிசி பெர்சியன் செய்தியின்படி, "பிராந்தியம் முழுவதும் தாக்குதல் நடத்த இரான் மேற்கொண்ட முயற்சிகளுக்குப்" பதிலடியாக, கெஷ்ம் தீவில் உள்ள சில இலக்குகளுக்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியதாக செண்ட்காம் கூறியுள்ளது.


இதற்கு முன்பு இரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு காலியான எண்ணெய் கப்பலைத் தான் இலக்கு வைத்ததாக அமெரிக்கா கூறியிருந்தது.


போட்ஸ்வானா கொடியுடன் சென்ற எம்/டி கப்பலின் எஞ்சின் அறையை நோக்கி அமெரிக்க விமானம் ஒன்று ஹெல்ஃபயர் ஏவுகணையை வீசியதாக செண்ட்காம் கூறியுள்ளது.


"ஆக்கிரமிப்பு நடந்தால் அதற்கான பதில் நடவடிக்கை வேறுபட்டதாகவும், மிகவும் கடுமையானதாகவும் இருக்கும் என்று நாங்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்தோம், அதன்படியே நாங்கள் செயல்பட்டுள்ளோம்," என்று ஐஆர்ஜிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஏப்ரல் 13 முதல் ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள இரானிய துறைமுகங்களுக்குச் செல்லக்கூடிய மற்றும் அங்கிருந்து வரக்கூடிய அனைத்துக் கப்பல்களுக்கும் அமெரிக்க ராணுவம் முற்றுகை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

உடலில் வாயு வெளியேறும்போது துர்நாற்றம் வீசுவது ஏன்? சரிசெய்ய முடியுமா?

நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?


ஒரு மடத்தில் சந்தித்து பின் காதல் மணம் புரிந்த இளம் கன்னியாஸ்திரிகள்

இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து ராணுவத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தாலும், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளை அவர்கள் கைவிடவில்லை.

இரான் போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் விரும்பினாலும் அது சாத்தியமாகாதது ஏன்?

இளையராஜா, மணிரத்னம் கூட்டணியில் உருவான படங்கள்

'மன்றம் வந்த தென்றலுக்கு': இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில் பிடித்த பாடல்களை பகிரும் திரை பிரபலங்கள்

End of அதிகம் படிக்கப்பட்டது

சென்ட்காம் என்ன கூறியது?

குவைத் மீது வீசப்பட்ட இரண்டு ஏவுகணைகள் இலக்குகளை அடைவதற்கு முன்பே நொறுங்கி விழுந்தன அல்லது அழிக்கப்பட்டன என்றும், பஹ்ரைன் மீது வீசப்பட்ட மற்ற மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகளால் விரைவாக இடைமறிக்கப்பட்டன என்றும் அமெரிக்கா கூறியது.

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,மத்திய கிழக்கில் இரான் நடத்திய தாக்குதல்களை முறியடித்ததாக அமெரிக்கா கூறுகிறது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளை நோக்கி இரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாகவும், ஆனால் அவற்றில் எதுவும் தங்களின் இலக்குகளை அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளது.


குவைத் மீது வீசப்பட்ட இரண்டு ஏவுகணைகள் இலக்குகளை அடைவதற்கு முன்பே நொறுங்கி விழுந்தன அல்லது அழிக்கப்பட்டன என்றும், பஹ்ரைன் மீது வீசப்பட்ட மற்ற மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகளால் விரைவாக இடைமறிக்கப்பட்டன என்றும் அமெரிக்கா கூறியது.


பிபிசி பெர்சியன் செய்தியின்படி, குவைத்தில் குறைந்தது மூன்று வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், அமெரிக்காவின் ஒரு பேட்ரியாட் அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் இரானிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


"இந்தப் பகுதி வழியே கடந்து செல்லும் சிவிலியன் கப்பல்களை நோக்கி இரான் ஏவிய மூன்று தற்கொலை டிரோன்களை செண்ட்காம் படைகள் சுட்டு வீழ்த்தின," என்றும் சென்ட்காம் அறிக்கை தெரிவித்தது.


கெஷ்ம் தீவில் உள்ள இரானிய ராணுவத்தின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை அமெரிக்க ராணுவம் தற்காப்புக்காகத் தாக்கியதாக செண்ட்காம் கூறியுள்ளது.


இது ஐஆர்ஜிசி -இன் அறிக்கையுடன் ஒத்துப்போகிறது.


கெஷ்ம் தீவுக்குத் தெற்கே உள்ள ஒரு தொலைத்தொடர்புக் கோபுரத்தை இலக்கு வைத்ததே, அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு தலைமையகத்தின் மீதான தாக்குதலுக்குக் காரணம் என அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.


அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த மோதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் யாரும் காயமடையவில்லை.


தற்போதைய போர்நிறுத்தத்தின் போது தங்களது படைகள் விழிப்புடன் இருக்கும் என்றும், "இரானின் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பை" முறியடிக்க முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.


எண்ணெய் கப்பலை குறிவைத்த அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணையில் வாஷிங்டன் விதித்துள்ள கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, இரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு காலியான எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பலைத் தான் தாக்கி, "செயலிழக்கச்" செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம்,X/US Central Command

படக்குறிப்பு,இரானிய எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் காட்சிகளை அமெரிக்கா வெளியிட்டது.

ஹோர்மூஸ் நீரிணையில் வாஷிங்டன் விதித்துள்ள கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, இரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு காலியான எண்ணெய் கப்பலைத் தான் தாக்கி, "செயலிழக்கச்" செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


போட்ஸ்வானா கொடியுடன் சென்ற எம்/டி கப்பலின் எஞ்சின் அறையை அமெரிக்க விமானம் ஒன்று ஹெல்ஃபயர் ஏவுகணையால் தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.


செண்ட்காம் கூற்றுப்படி, அக்கப்பலின் பணியாளர்கள் "தொடர்ச்சியான எச்சரிக்கைகளைப் புறக்கணித்தனர்."


எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீதான தாக்குதல் தொடர்பானதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகளையும் செண்ட்காம் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து இரான் இதுவரை பகிரங்கமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.


இரானிய துறைமுகங்களுக்குள் நுழையக்கூடிய மற்றும் அங்கிருந்து வெளியேறக்கூடிய அனைத்துக் கப்பல்களுக்குமான முற்றுகையை ஏப்ரல் 13 முதல் அமெரிக்க ராணுவம் அமல்படுத்தத் தொடங்கியது.


"கார்க் தீவை நோக்கி சர்வதேச கடல் பகுதியில் போட்ஸ்வானா கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்/டி லெக்சி கப்பலுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொண்டன" என்று செண்ட்காம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


செண்ட்காம் கூற்றுப்படி, இந்த முற்றுகை விதிக்கப்பட்டதில் இருந்து மொத்தம் ஆறு வணிகக் கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன மற்றும் 122 கப்பல்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.


அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ 

பட மூலாதாரம்,Tom Williams/CQ-Roll Call, Inc via Getty Images

படக்குறிப்பு,செவ்வாயன்று, ரூபியோ அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவைச் சந்தித்தார்.

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டாலும், இரானின் மீதான தடைகள் நீக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.


இருப்பினும், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் தடைகளை நீக்குவது ஒரு முக்கியப் பிரச்னையாக இருந்து வருகிறது.


பிபிசி உருது செய்தியின்படி, அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில், "ஒரு மாதத்திற்கு முன்போ அல்லது ஒரு வருடத்திற்கு முன்போ இரான் குறிப்பிடாத, அதன் அணுசக்தி திட்டத்தின் அம்சங்கள்" குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ரூபியோ கூறினார்.


மேலும், "ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் ஒப்பந்தம் எட்டப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை," என்றும் அவர் தெரிவித்தார்.


செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்க செனட் வெளியுறவு குழுவின் முன்னிலையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்த ரூபியோ, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசியதுடன், அவை "மிகவும் வெற்றிகரமானவை" என்றும் குறிப்பிட்டார்.


"ஆபரேஷன் எபிக் ஃபியூரி அதன் ராணுவ நோக்கங்களை அடைவதில் வெற்றி பெற்றுள்ளது, இரானின் பாதுகாப்புஅமைப்பை பலவீனப்படுத்தியுள்ளது" என்று அவர் கூறினார்.


"இன்று இரானிடம் கடற்படை இல்லை" என்றும் தெரிவித்த மார்கோ ரூபியோ, ஹோர்மூஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டாலும், இரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அமெரிக்கா நீக்காது என்று கூறினார்.


"எந்த விவாதமும், எந்த முன்மொழிவும் முன்வைக்கப்படவில்லை," என்று அமெரிக்க செனட் உறுப்பினர்களிடம் ரூபியோ கூறினார்.


இருப்பினும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் அணுசக்தித் திட்டம் தொடர்பான அம்சங்களை இரான் கைவிட்டால், 'நிபந்தனைகளுக்கு உட்பட்டு' தடைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


 


டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


முன்னதாக, தெற்கு டெல்லியில் உள்ள டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (DDMA) சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்(SDM) ஜிதேந்திர குமார், நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் 7 முதல் 8 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.


இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அனைத்துப் பிரிவுகளும் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டதாக ஜிதேந்திர குமார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.


இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பிரதமரின் அலுவலகம் (PMO), எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் அறிவித்துள்ளது.


அந்த பதிவில், "டெல்லியின் மாளவியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் நிகழ்ந்த மரணங்கள் துயரமானவை" என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.


விளம்பரம்


மேலும்,"தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகின்றனர்." என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


மாளவியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஜிதேந்திர குமார் கூறுகையில், "கட்டடத்திற்குக் கீழே ஒரு உணவகம் இயங்கி வந்தது, தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அந்த உணவகமே தீ விபத்தை ஏற்படுத்தியிருக்க அதிக வாய்ப்புள்ளது. எங்களிடம் சரியான விவரங்கள் இல்லை. ஆனால் இதுவரை நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த ஏழு அல்லது எட்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்." என்றார்.


இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜிதேந்திர குமார் தெரிவித்தார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

உடலில் வாயு வெளியேறும்போது துர்நாற்றம் வீசுவது ஏன்? சரிசெய்ய முடியுமா?

நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?


ஒரு மடத்தில் சந்தித்து பின் காதல் மணம் புரிந்த இளம் கன்னியாஸ்திரிகள்

இளையராஜா, மணிரத்னம் கூட்டணியில் உருவான படங்கள்

'மன்றம் வந்த தென்றலுக்கு': இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில் பிடித்த பாடல்களை பகிரும் திரை பிரபலங்கள்

இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து ராணுவத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தாலும், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளை அவர்கள் கைவிடவில்லை.

இரான் போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் விரும்பினாலும் அது சாத்தியமாகாதது ஏன்?

End of அதிகம் படிக்கப்பட்டது

அவர் மேலும் கூறுகையில், "சட்டவிரோதமாகச் செயல்படுபவர்கள் மற்றும் மற்றொரு உரிமத்தின் பெயரில் ஹோட்டல்களை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நான் உத்தரவிடுவேன். சிலர் தங்கள் அறைகளிலிருந்து வெளியே குதித்துள்ளனர். ஒரே ஒரு கட்டடத்தில் மட்டுமே தீப்பிடித்துள்ளது." என்றார்.


மருத்துவமனை அறிக்கை என்ன சொல்கிறது?

இதற்கிடையில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் , "தீவிபத்தில் சிக்கி மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட 39 நோயாளிகளில், 18 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் " 15 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளனர். 5 பேருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன, அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்," என்று கூறப்பட்டுள்ளது.


ஆனால் டெல்லி காவல்துறை தகவலின்படி இந்த பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.


டெல்லி உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு பட மூலாதாரம்,ANI

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


"மாளவியா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதால் நான் மிகவும் சோகமடைந்துள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து பற்றி தகவல் கிடைத்த உடன் டெல்லி தீயணைப்புத் துறை, காவல்துறை, டிடிஎம்ஏ, கேட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசர சேவை முகமைகள் சம்பவ இடத்திற்குச் உடனடியாக அனுப்பப்பட்டன.


அவர்களின் துரித நடவடிக்கையால் பலரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளையும் வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம்." என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.


டெல்லி துணை நிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து, இந்த விபத்து மிகவும் சோகமானது எனத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மாளவியா நகரில் உள்ள விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் நான் மிகவும் சோகமடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என அனைவருடனும் இணைந்து பிரார்த்திக்கிறேன். காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு படைகள் களத்தில் வேலை செய்து வருகின்றன. உடனடியாக மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரணங்கள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்தச் சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.


தீயணைப்புத் துறை அதிகாரி கூறியது என்ன?

டெல்லி, தீ விபத்து பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,தீயணைப்புத் துறை அதிகாரி ஏகே மாலிக் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசினார்.

தீயணைப்புத் துறை அதிகாரி ஏகே மாலிக் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் காலை 08:50 மணிக்கு கிடைத்தது. தொடக்கத்தில் ஏழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதன் பின்னர் தேவையான அனைத்து வாகனங்களும் அனுப்பப்பட்டன. சம்பவ இடத்தை அடைந்த உடனேயே கட்டடத்தில் இருந்து 37 பேரை பாதுகாப்பாக மீட்டோம். விபத்து நடைபெற இடம் கீழ் தளம், தரைத் தளம் மற்றும் அதற்கு மேல் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடம்." என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "சம்பவ இடத்தில் இருந்த மக்களை கேள்வி கேட்டதில் இருந்து அந்தக் கட்டடம் வெறும் குடியிருப்பு வளாகமாக மட்டும் பயன்படுத்தப்படவில்லை என்று தெரியவந்தது. அங்கு தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அருகில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் அல்லது உடன் வந்தவர்களாக இருந்தனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு தங்கியுள்ளனர். தீ விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது கட்டடம் முழுவதையும் காலி செய்து அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்." என்றும் தெரிவித்தார்.


 ஈரான் நடத்திய ட்ரோன் (ஆளில்லா விமான) தாக்குதலில் குவைத் சர்வதேச விமான நிலையம் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


விமான நிலையத்தின் பிற வசதிகளுக்கும் இத்தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்தாக்குதலைத் தொடர்ந்து, குவைத் தனது விமானச் சேவைகள் மற்றும் விமான நிலைய செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.


இன்று (03) காலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் காயமடைந்தவர்களும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான வி மோகனா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார். இவரின் நியமனம் பல்வேறு வழிகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

இவருடன் சேர்த்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைந்த 5 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தது. கோவை அரசு சட்டக் கல்லூரி பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பார்.

  • தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகும் 2வது பெண் இவர்.
  • சுதந்திர இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் 12வது பெண் இவர்.
  • உயர் நீதிமன்ற நீதிபதியாக அல்லாமல் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகும் 11வது நபரும், 2வது பெண்ணும் இவரே.
உச்ச நீதிமன்றம், நீதிபதி வி மோகனா

பட மூலாதாரம்,SCI

தமிழ்நாட்டில் இருந்து இவருக்கு முன்பாக ஆர் பானுமதி என்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார்.

பார் அன்ட் பென்ச் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இவருக்கு முன்னதாக இந்து மல்ஹோத்ரா என்பவர் பெண் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இவரும் முன்னாள் நீதிபதி இந்து மல்ஹோத்ராவும் வழக்கறிஞர்களாக இருந்தபோது ஒன்றாக பணியாற்றியதாக பார் அன்ட் பென்ச் செய்தி தெரிவிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் பிவி நாகரத்னா மட்டுமே பெண் நீதிபதியாக உள்ளார். தற்போது இவரின் நியமனத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 2 ஆக உயர்கிறது.

வழக்கறிஞர்கள் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகலாமா?

உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கான விதிகளை இந்திய அரசமைப்பு விளக்குகிறது.

அரசமைப்பு பிரிவு 124(3)-இன் படி

  • குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்திருக்க வேண்டும் அல்லது
  • குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்திருக்க வேண்டும் அல்லது
  • குடியரசு தலைவரின் கருத்தில் புகழ்மிக்க சட்ட நிபுணராக இருக்க வேண்டும்
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

End of அதிகம் படிக்கப்பட்டது

உச்ச நீதிமன்றம், நீதிபதி வி மோகனா

பட மூலாதாரம்,SCI

இவரின் பின்னணி என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கோவை அரசு சட்டக்கல்லூரியில் 1988-ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த இவர் கோவை மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

அதன் பின்னர் டெல்லிக்கு குடிபெயர்ந்த இவர் முன்னாள் நீதிபதி இந்து மல்ஹோத்ரா உடன் இணைந்து பணியாற்றினார்.

1996-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று அங்கு பணியாற்றத் தொடங்கினார். உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்களில் இவர் வாதாடியுள்ளார்.

பாதுகாப்பு படைகளில் பெண்களுக்கு நிரந்தர பணி, மூத்த குடிமக்கள் சொத்துரிமை மற்றும் கர்நாடகா ஹிஜாப் போன்ற பல முக்கியமான வழக்குகளில் இவர் ஆஜரானதாக பார்ச் அன்ட் பெஞ்ச் செய்தி தெரிவிக்கிறது.

உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறைக்கு மாற்றாக தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்கும் சட்டத்தை 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியிருந்தது.

இந்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தேசிய நீதித்துறை நியமன ஆணையம் அரசமைப்புக்கு விரோதமானது எனக் கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக மோகனா ஆஜரானதாக தி லீஃப்லெட் இணையதளம் தெரிவிக்கிறது. வழக்கறிஞர்களுக்கு அறைகளை ஒதுக்கும் உச்ச நீதிமன்றத்தின் விதிகளுக்கு எதிராகவும் இவர் வாதாடியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

நீதிபதி மோகனா உடன் பிறந்தவர்கள் 8 சகோதரர்கள், 4 சகோதரிகள் என மொத்தம் 13 பேர். 13 குழந்தைகளில் 11வது குழந்தையாக பிறந்தவர் நீதிபதி மோகனா.

அவரது இளைய சகோதரியும் வழக்கறிஞருமான ராஜேஸ்வரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் குடும்பத்தில் இன்று பல வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் முதல் முதலாக சட்டத் துறைக்குள் நுழைந்தது என் சகோதரிதான். அவரைப் பின் தொடர்ந்துதான் நான் வழக்கறிஞர் ஆனேன்." என்றார்.

கோவையில் சிறிய அளவில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய அவர் இன்று உச்ச நீதிமன்ற பதவியை அலங்கரிப்பார் என எதிர்பார்க்கவில்லை என கூறும் ராஜேஸ்வரி, "ஆனால் அவருடைய கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகத் தான் இதைப் பார்க்கிறோம். நாங்கள் கல்வி பெற வேண்டும் என்பதில் எங்கள் பெற்றோர்கள், குறிப்பாக அப்பா உறுதியாக இருந்தார். அவருடைய உந்துதலில்தான் என் அக்கா சட்டம் படித்தார்." என்றும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம், நீதிபதி வி மோகனா

பட மூலாதாரம்,Friday Group Seshagiri Rao

நீதிபதி வி மோகனாவின் கணவர் பத்மநாபன் மத்திய அரசுப் பணியில் இருந்ததால் திருமணத்துக்குப் பிறகு டெல்லிக்கு குடிபெயர்ந்தார் என்கிறார் அவருடைய உறவுமுறை சகோதரியான சுபஶ்ரீ.

"கல்லூரி படித்தபோது அவரின் குடும்பம் ஈரோட்டில் இருந்ததால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதியில் தங்கி கல்லூரி படிப்பை மேற்கொண்டார். டெல்லியில் மிக இளம் வயதிலே மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் மூத்த வழக்கறிஞர் ஆனதைப் பார்ப்பதற்கு முன்பாகவே அவரின் தாய் இறந்துவிட்டார். துறை ரீதியாகவும் சரி தனிப்பட்ட முறையிலும் சரி உதவும் மனப்பான்மை கொண்டவர். அவருடைய மகன் கார்த்திக்கும் தற்போது வழக்கறிஞராக உள்ளார்." என்றார்.

பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வாதாடிய அனுபவம் கொண்ட மோகனா கேரள அரசு வழக்கறிஞராகவும் இருந்துள்ளார் என்கிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞரான ஶ்ரீதர்.

"1988 முதல் 1992 வரை விசாரணை நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை நடத்தி வந்தார். டெல்லி சென்ற பிறகு முதலில் சிஎஸ் வைத்தியநாதன் அலுவலகத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் இந்து மல்ஹோத்ரா உடன் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து சுயாதீனமாகவும் வழக்குகளை நடத்தினார்.

சிவில் வழக்குகள் தான் அவரின் நிபுணத்துவம் என்றாலும் கிரிமினல் மற்றும் அரசமைப்பு வழக்குகளிலும் ஆஜராகி வாதாடிய அனுபவம் அவருக்கு உண்டு. தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு வழக்குகளில் வாதாடியுள்ளார். அரசுப் பணியில் இருந்தாலும் அவருடைய கணவர் பத்மநாபன் மிகவும் உதவியாக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரும் சட்டப்படிப்பை முடித்துள்ளார்," எனத் தெரிவித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.