Showing posts with label world. Show all posts

 


ஹமாஸுடன் மலேசியா தனது உறவுகளைப் பேணுவதாகவும், அந்தக் குழுவை மலேசியா தண்டிக்காது என்றும் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.


பாலஸ்தீன பிரச்சினையை மலேசியர்கள் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கடந்த செவ்வாய் அன்று பாராளுமன்றத்தில் கூறினார்.


ஹமாஸிற்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தடை விதிக்கும் அமெரிக்காவின் சட்ட வரைவிற்கு பதிலளிக்கும்போது பிரதமர் அன்வர் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.


நீண்ட காலமாக பாலத்தீனர்களுக்கான ஆதரவு பரவலாக இருக்கும் மலேசியா போன்ற ஒரு நாட்டில் இது அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் வெளிநாட்டு ஆதரவாளர்களுக்கு தடை விதிக்க கடந்த வாரம் அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்ததை அடுத்து, ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அன்வர் இப்ராஹிமிடம் கேட்டிருந்தார்.


"இது உட்பட எந்த அச்சுறுத்தல்களையும் நான் ஏற்கமாட்டேன்... இந்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது மற்றும் செல்லுபடியாகாது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களாகிய நாங்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் முடிவுகளை மட்டுமே அங்கீகரிக்கிறோம்," என்று அன்வர் கூறினார்.


இஸ்ரேலை அழிப்பதாக மிரட்டும் ஹெஸ்பொலாவின் தலைவருக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு?

8 மணி நேரங்களுக்கு முன்னர்

பாலத்தீனர்களை காஸாவை விட்டு வெளியேற்ற 52 ஆண்டுக்கு முன்பே இஸ்ரேல் ரகசிய திட்டம் - என்ன தெரியுமா?

7 நவம்பர் 2023

இஸ்ரேலை அங்கீகரிக்காத மலேசியா அரசு

முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடான மலேசியா, பாலத்தீனத்துக்கு நீண்ட காலமாக ஆதரவளித்து வருகிறது. இஸ்ரேலை மலேசியா இராஜதந்திர ரீதியாக அங்கீகரிக்கவில்லை மற்றும் இரு நாடுகள் தீர்வு (Two State Solution) நிறைவேற்றப்படும் வரை அத்தகைய அங்கீகாரம் இஸ்ரேலுக்கு வழங்கப்படாது என்று மலேசியா தெரிவித்துள்ளது. மேலும், அதன் தலைநகரான கோலாலம்பூரில் பாலத்தீன பிரச்சனைகள் தொடர்பான மாநாடுகளை அடிக்கடி நடத்தப்படும்.


76 வயதான அன்வர் தனது பல்கலைக்கழக நாட்களில் இருந்தே பாலஸ்தீனர்களுக்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார். உலகின் பல பகுதிகளைப் போலவே, காசா மீதான இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல்கள் மலேசியாவிலும் வெகுஜனக் கூட்டங்களையும் பிரார்த்தனை பேரணிகளையும் தூண்டின.


ஆனால், மலேசியாவில் சிலர் ஹமாஸிற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்திய விதம் சர்ச்சையையும் கிளப்பியது. அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் பாலத்தீன ஆதரவு வாரத்தின் போது, ஹமாஸுக்கு தங்களது ஆதரவைக் காட்டும் வகையில் ​​தீவிரவாதிகளாக உடையணிந்து பொம்மை துப்பாக்கிகளை அணிந்திருந்த ஆசிரியர்களின் வீடியோ டிக்டோக்கில் வைரலானது. இதனையடுத்து பிரதமர் அன்வர் பாலத்தீன ஆதரவு வாரத்தின்போது பள்ளிகளில் நடக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டார்.


கருத்தரிக்காமலேயே தாய்ப்பால் கொடுக்க முடியுமா? மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?

6 நவம்பர் 2023

தக் லைஃப்: கமல் பெயருடன் ஒட்டியுள்ள சாதி - தமிழ் சினிமா சூழலை சீர்கெடுக்கிறதா?

4 மணி நேரங்களுக்கு முன்னர்

மலேசியா பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேலை அங்கீகரிக்காத மலேசியா அரசு


பாலத்தீனத்தை ஆதரிப்பதால் கிடைக்கும் அரசியல் லாபம்

அன்வரின் ஆலோசகராக இருந்த அரசியல் போட்டியாளர் மஹதீர் முகமத், பாலத்தீனத்திற்கு ஆதரவாக வலுவான கருத்துகளை வெளியிட்டார். இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் குறித்து மற்ற நாடுகள் அமைதி காப்பதாகவும் அவர்கள் மீதான தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.


அன்வரின் போட்டியாளரான மஹதீர் இப்படி பேசும்போது, மலேசியாவில் மதப் பழமைவாதம் தலைதூக்கி வரும் இந்த நேரத்தில், பிரதமர் அன்வர் வலுவான கருத்தைக் கொண்டிருக்காவிட்டால் அவருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த சிந்தனைக் குழு (Think Tank) ISEAS-Yusof Ishak நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜூலியா லாவ் மற்றும் பிரான்சிஸ் ஹட்சின்சன் ஆகியோர் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.


பிரதமர் அன்வர் இப்ராஹிமிற்கு உள்நாட்டில் மலாய்-முஸ்லிம் சமூகத்தினர் இடையே ஆதரவு குறைந்து வருகிறது. மலேசிய சிந்தனைக் குழுவான இல்ஹாம் மையத்தின் சமீபத்திய கருத்துக் கணிப்பில் அவர் பாரம்பரிய மலாய் இனத்தவர்களிடையே 24% ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். மாறாக, அவர் மலேசியாவில் வாழும் 88% சீன மக்களின் ஆதரவையும் 81% இந்திய சமூகத்தின் ஆதரவையும் பெற்றுள்ளார்.


அன்வர் இஸ்ரேலுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று முன்னர் விமர்சிக்கப்பட்டார். 2012ல் அவர் அளித்த பேட்டியில், “இஸ்ரேலை மலேசியா பாதுகாக்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில் பாலத்தீனர்களின் நியாயமான நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இரு நாடுகள் தீர்வை குறித்த தனது ஆதரவு நிலைப்பாட்டை இந்தக் கருத்தின் மூலம் தான் மறுக்கவில்லை எனவும் அவர் பின்னர் தெரிவித்தார்.


ஆனால் அன்வர் நடந்து வரும் இஸ்ரேல்-காஸா போருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்பு எடுத்ததை விட கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதாகத் தெரிகிறது.


மேக்ஸ்வெல் நடக்கவே முடியாத நிலையிலும் பை-ரன்னர் வைத்து கொள்ளாதது ஏன்?

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்கா - இஸ்ரேல் இணைபிரியா நட்பின் ரகசியம் என்ன? அமெரிக்காவுக்கு இஸ்ரேல் ஏன் தேவை?

7 நவம்பர் 2023

மலேசியா பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பிரதமர் அன்வர் இப்ராஹிமிற்கு மலாய்-முஸ்லிம் சமூகத்தினர் இடையே ஆதரவு குறைந்து வருகிறது


ஹமாஸிற்காக மேற்கத்திய நாடுகளை பகைக்கும் மலேசியா

ஹமாஸ் ஆயுதக்குழுவை கண்டிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் கொடுக்கும் அழுத்தத்தை அன்வர் இப்ராஹிம் நிராகரித்தார். ஹமாஸ் ஆயுதக்குழுவானது காஸாவைச் சேர்ந்த மக்களால் அந்தப்பகுதியை ஆள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். கடந்த மாதம், பாலத்தீன ஆதரவு பேரணியில், காஸா பகுதியில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை உலகில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம் என்று கண்டித்தார்.


ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களை போராளிகள் என்று அழைக்க வேண்டாம் என்று ஊடகங்களை அவர் வலியுறுத்தினார். தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை முடிவுக்கு கொண்டுவர முயன்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுடன் (ANC) ஹமாஸ் ஆயுதக்குழுவை ஒப்பிட்டு அவர் பேசினார்.


"ANC மற்றும் 1991 முதல் 1997 வரை அதன் தலைவராக பணியாற்றிய நெல்சன் மண்டேலாவையும் பயங்கரவாதி என்றே மேற்குலகம் என சித்தரித்தது. ஆனால் மலேசிய அதிகாரிகள் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளித்தனர்" என அன்வர் கூறினார்.


"மலேசியாவில் விழிப்புணர்வு இருக்க வேண்டும். மலேசிய ஊடகங்கள் பாலத்தீன மக்களின் கவலைகள் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் பாலத்தீனர்களின் நிலம், செல்வம் மற்றும் சுயமரியாதை ஆகியவை தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறது. பாலத்தீன மக்களின் உரிமைகளை மலேசிய ஊடகங்கள் அங்கீகரிக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.


காஸாவில் 4,100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 10,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் பெரும்பாலும் பொதுமக்களான 1,400 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.


 


துனிசியப் பத்திரிகையாளர் பாஸ்சம் பௌனெனி: "இன்று காலை, எனது தொழில்முறை மனசாட்சியின்படி, பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகமான பிபிசியில் இருந்து ராஜினாமா செய்தேன்."

 



மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர்கள் மூலம் ஊடுருவும் ஹமாஸின் உத்தி வட கொரியாவுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.



தங்களிடம் பணயக் கைதியாக உள்ள ஒரு பெண்ணின் காணொளியை ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-காஸம் பிரிகேட்ஸ் வெளியிட்டுள்ளது


தங்களிடம் பணயக் கைதியாக உள்ள ஒரு பெண்ணின் காணொளியை ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-காஸம் பிரிகேட்ஸ் வெளியிட்டுள்ளது.


அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு ஹமாஸ் வெளியிட்ட முதல் பணயக்கைதி வீடியோ இதுவாகும். காஸாவில் 199 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


வீடியோவில், ஒரு இளம் பெண் தனது பெயர் மாயா ஷெம் என்றும், தனக்கு 21 வயது என்றும், இஸ்ரேலில் உள்ள ஷோஹாம் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.


இஸ்ரேலில் நடந்த ஒரு விருந்தில் ஹமாஸால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகக் கூறி, தன்னை விடுவிக்குமாறு அவர் கெஞ்சும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


அதே பெண் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறும் காட்சியும் இதில் அடங்கும்.


ஹமாஸால் மாயா கடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படை அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


பிபிசி பொதுவாக பணயக் கைதிகள் வீடியோக்களை வெளியிடுவதில்லை.


வீடியோவில் இருந்து படங்களை காட்டலாம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

 


காஸா எல்லையில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீராங்கனைகளை பிணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளனர். 


குறித்த வீடியோவில் இடத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீராங்கனைகள் மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகளும் உள்ளனர். 


குண்டு மழை பொழிய அதிரும் கட்டட அறையில், அவர்கள் அஞ்சி நடுங்கும் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது

 


இஸ்ரேல் மீது 7,000 ராக்கெட்டுகளை ஏவிய பாலஸ்தீன ஆதரவு குழு - அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள்

பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தொடர் ராக்கெட் தாக்குதலை இன்று காலை நடத்தியது. ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டோர்ம் (Operation Al-Aqsa Storm) என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் முதல் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. அதைத் தொடர்ந்து, மேலும் 2,000 ராக்கெட்டுகளை ஹமாஸ் ஏவியது. இதில், ஒரு இஸ்ரேலிய பெண் உயிரிழந்தார். ஹமாஸ் குழு மிகப்பெரிய தவறை இழைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் குழுவினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதலை தொடங்கியுள்ளது.

 


பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக்கில் செல்ல முடிவு செய்தார். அதன்படி சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு காரை முந்தி செல்ல வேண்டிய நிலையில், சாகசம் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. டிடிஎஃப் வாசம் பைக்கில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே, அவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவரது லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நண்பர் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில்தான் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.



 



பெருவில் பேருந்து ஒன்று மலைப்பாதையில் இருந்து விலகி சரிவில் கவிழ்ந்ததில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.


உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் (06:30 GMT) விபத்துக்குள்ளானபோது, ​​நாட்டின் தென்-மத்திய பகுதியில் உள்ள Ayacucho வில் இருந்து Junin பிராந்தியத்தின் தலைநகரான Huancayo நோக்கி வடக்கே பேருந்து பயணித்துக்கொண்டிருந்தது

 

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை

இவருக்கு மீரா என்ற மகள் உள்ளார், இவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிர்ச்சிகரமாக வீட்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

 


(நூருல் ஹுதா உமர்)


ஐக்கிய தமிழ் மன்றம் நடத்திய சுதந்திர தின கட்டுரை போட்டியின் முடிவறிவிப்பு மற்றும் பரிசளிப்பு விழா தலைவர் தஸ்தகீர் சுலைமான் தலைமையில் ஒண்டர் பிளஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் முஹம்மது உசைன் நிகழ்ச்சியை தொகுத்து, துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது உவைஸ் வரவேற்புரை யாற்றி, ஊடகப் பிரிவு செயலாளர் ஹாஜா செயல்பாடு அறிக்கை வாசிக்க, பொதுச் செயலாளர் ஷாஹுல் ஹமீது, துணைத் தலைவர் சித்திக் மைதீன், துணைச் செயலாளர் தாஹிர், உறுப்பினர்கள் பஷீர், கமருதீன், அப்துர் ரஹ்மான், முஹம்மது பாரூக், தன்னர்வலர் பாபு ஆகியோர் கலந்து கொள்ள, கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களுடன் அறிவித்த பரிசுத் தொகையும் வழங்கி பாராட்டப்பட்டது. இதில் கட்டுரைப் போட்டியின் மேற்பார்வையாளராக செயல்பட்ட முனைவர் வாசுகி சத்திய பாபு, ஐ.சி.பி.எப். தலைவர் ஷாநவாஸ் பாவா, பொதுச் செயலாளர் வர்கீஸ் போபன், இளைஞர் நல நிர்வாகி ஷமீர் அஹ்மத், ஆலோசனைக்குழு உறுப்பினர் இரா செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் கத்தாரில் உள்ள பேரவைகள், ஜமாத்துகள் மற்றும் சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

 

 


லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 2,300 பேர் கொல்லப்பட்டதாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று டேர்னா நகரில் டேனியல் புயல் தாக்கியபோது 2 அணைகளும் 4 பாலங்களும் இடிந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கிவிட்டன.

எகிப்து உட்பட சில அண்டை நாடுகளில் இருந்து சில உதவிகள் வரத் தொடங்கியுள்ளன, ஆனால் லிபியாவின் அரசியல் சூழ்நிலையால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. நாட்டில் இரண்டு போட்டி அரசாங்கங்கங்கள் ஆட்சி செய்து வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், இத்தாலி, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உதவிகளை அனுப்புவதாகக் கூறியுள்ளன.


லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நகரத்தின் வழியாக வெள்ளத்தின் நதி ஓடுவதைக் பார்க்க முடிகிறது. வெள்ளத்தில் ஏராளமான கார்கள் மிதந்து சென்றன.

ஏராளமான மக்கள் கடலுக்குள் அடித்துச் சென்ற கொடூரமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. மற்றவர்கள் வீட்டின் மேல் தளங்களிலும் மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

"நான் பார்த்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், இது ஒரு சுனாமி போன்றது" என்று லிபியாவின் கிழக்குப் பகுதி அரசைச் சேர்ந்த ஹிஷாம் சிகியோவாட் கூறினார்.

டேர்னாவின் தெற்கே உள்ள அணைகளில் ஒன்று உடைந்ததால் விழுந்ததால் நகரின் பெரும் பகுதிகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக அவர் பிபிசியிடம் கூறினார்.

"ஒரு பெரிய ஊர் அழிந்துவிட்டது - ஒவ்வொரு மணி நேரமும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது"


லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சேதம் காரணமாக நகரத்திற்குள் நுழையும் பெரும்பாலான முக்கிய பாதைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன

உடல்களை மீட்க மீட்புக் குழுக்கள் போராடி வருவதாகவும், கடற்படை மற்றும் நீர்மூழ்கிக் மீட்புக் குழுவினர் கடலில் இருந்து உடல்களை மீட்க முயற்சித்து வருவதாகவும் அல்-திபீபா கூறினார்.

பேய்டா நகரத்தில் உள்ள உதவிப் பணியாளரான காசிம் அல்-கதானி,, "சேதம் காரணமாக நகரத்திற்குள் நுழையும் பெரும்பாலான முக்கிய பாதைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன என்பதால் மீட்புப் பணியாளர்கள் டேர்னாவை அடைவது கடினம்.” என்று பிபிசியிடம் கூறினார்.

“வெள்ளம் ஏன் இத்தகைய பேரழிவை ஏற்படுத்தியது என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, டேர்னா மற்றும் கிழக்கு நகரமான பெங்காசியை மீண்டும் கட்டியெழுப்ப ரூ.4,500 கோடி வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

சௌசா, அல்-மர்ஜ், மிஸ்ரட்டா ஆகிய நகரங்களும் ஞாயிற்றுக்கிழமை புயலால் பாதிக்கப்பட்டன.


லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பெங்காசிக்கு கிழக்கே கடற்கரையோரம் 250 கிமீ தொலைவில் உள்ள டேர்னா, வளமான ஜபல் அக்தர் பகுதியின் அருகிலுள்ள மலைகளால் சூழப்பட்டுள்ளது.

டேர்னா நகரத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள மேல் அணை முதலில் உடைந்தது. அதன் நீரை இரண்டாவது அணையை நோக்கி அனுப்பியதாக நீர் பொறியியல் வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். இந்த அணை டேர்னாவுக்கு அருகில் உள்ளது. .

"முதலில் நாங்கள் கனமழை என்று நினைத்தோம், ஆனால் நள்ளிரவில் ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது, அது அணை உடைந்தது," என்று தனது மனைவி மகளுடன் உயிர் பிழைத்த ராஜா சசி என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பெங்காசிக்கு கிழக்கே கடற்கரையோரம் 250 கிமீ தொலைவில் உள்ள டேர்னா, வளமான ஜபல் அக்தர் பகுதியின் அருகிலுள்ள மலைகளால் சூழப்பட்டுள்ளது.

கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, லிபியாவில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இந்த நகரம் இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு அரசு நிர்வாகத்துடன் தொடர்புடைய கலீஃபா ஹப்தாருக்கு விசுவாசமான படைகளால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

 

அருக்காணி =சுஹாசினி மீசை இல்லாத பாரதி=சுஹாசினி மக்கள் மனதில் நின்ற பெண்...சுஹாசினி 1961 ம் வருடம் ஆகஸ்ட் 15 ம் தேதி பரமகுடியில் பிறந்தார்.. இவரது அப்பா சாருஹாசன் என்பது எல்லோருக்கும் தெரியும்.. சாருஹாசன் யார் என்று யாருக்காவது தெரியாது என்றால்... உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன்.. சுஹாசினி என்பவரே யாருக்காவது தெரியாது என்றால் 😀 அவர் டைரக்டர் மணிரத்னத்தின் மனைவி.. பண்ணிரன்டு வயதுவரை பரமகுடியில் படித்தவர் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.. ஒரு பக்கம் படித்துகொண்டிருந்தாலும் சினிமா சம்பந்தபட்டவர்கள் வீடுமுழுக்க நிரம்பியிருக்கும் போது கவனம் தானாக அந்த பக்கம் திரும்புவது இயல்புதானே முதலில் இவருக்கு வழங்கப்பட்ட பணி கமலுக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதுவது...ரசிகர்களின் போன்கால்களை Attend செய்வது கமல் போட்டோவை கவரில் வைத்து போஸ்ட செய்வது...😀 என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் உறவுகள் பலமாக இருந்த காலம் அது.. அடுத்த கட்ட நகர்வாக அவரது அப்பாவிடம் இருந்த ஒரு கேமரா அவரை கண்சிமிட்டி அழைத்தது அந்த சாதாரண கேமரா மூலம் சுஹாசினி எடுத்த புகைப்படங்கள் அனைவரின் பாராட்டை பெற்றது..😐 பாராட்டு தந்த உற்சாகமும் அவரது சுயஅறிவும் சேர்ந்து திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆகவேண்டும் என்று அவரை முடிவெடுக்க வைத்தது.. ஒளிப்பதிவாளர் அடையாளத்தோடு வலம் வந்த சுஹாசினியிடம் நடிப்பு ஆசையும் இருப்பது கண்டுபிடிக்க பட்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகமானார்.. சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அதில் குறிப்பிட தகுந்தவை தாய்வீடு, சிந்துபைரவி,கோபுரங்கள் சாய்வதில்லை,என் பொம்முகுட்டி அம்மாவுக்கு,மனதில் உறுதி வேண்டும்,தர்மத்தின் தலைவன் இதில் சிந்துபைரவி படத்துக்காக தேசிய விருதும் பெற்றார் 😐 மனதில் உறுதி வேண்டும் படத்தின் கதை பாலசந்தரால் இவருக்காகவே உருவாக்க பட்டது ஒளிப்பதிவாளர் கனவோடு வந்தவர் நடிகையாகி விட்டாலும் அந்த ஆசையை திருமணத்திற்கு பின் இந்திரா என்ற படத்தை இயக்கி நிறைவேற்றி கொண்டார் . இந்த படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் சுஹாசினியின் ஆலோசனைபடியே அவர் செயல்பட்டுள்ளார் 😀 பல்துறை வித்தகரான சுஹாசினிக்கு ஜீனியஸ் மணிரத்னம் கனவராக அமைந்தது இயற்கையான மற்றும் சிறப்பான ஒன்று.. ஆகஸ்ட் பதினைந்தில் பிறந்ததாலோ என்னவோ அவருக்கு சுதந்திர உணர்வு அதிகம் இவரை போன்றவரை ஜீனியஸ் மணிரத்தினத்தால் மட்டுமே கட்டிமேய்க்க முடியும் என்பது தின்னம்


 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் #இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை 

====================================


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றத்திற்காக பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளது 


பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் , பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான்  கடந்த 2018 முதல் 2022 வரை பாக்கிஸ்தானின் பிரதமர் பதவியில்  இருந்த காலப் பகுதியில் தனது பிரதம மந்திரியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, வெளிநாடுகளுக்குச் சென்றபோது கிடைத்த பரிசுப் பொருட்களையும், 140 மில்லியன் பாக்கிஸ்தான் ரூபாய் ($635,000) மதிப்புக்கும் அதிகமாக அரசு உடைமைகளை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட் நிலையில் 


தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வரும் போது காரில் வைத்து இம்ரான்கான் கான் கைது செய்யப்பட்டதாக இம்றான் கானின் வழக்கறிஞர் தகவல் வெளியீட்டுள்ளார்.


தமிழில்

As-sheikh Hafeesul haq (Fathih institute for Higher Education)

 


இந்தியாவின் மணிப்பூர் உரிமைப் போராட்டத்தை அடுத்து வெடிக்கும் #ஹரியானா வண்முறை. 

=====================================


பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் ஏற்கெனவே பழங்குடியல்லாத மற்றும்  பழங்குடி சமூகத்துக்கிடையே மூன்று மாதங்களாக வன்முறை நடந்துகொண்டிருக்கும் நிலையில்  தற்போது பா.ஜ.க ஆளும் இன்னொரு மாநிலமான ஹரியானாவில்  மேவாத் மாவட்டத்தில் உள்ள நூஹ் பகுதியில்  கடந்த திங்கட்கிழமை கலவரம் வெடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பா.ஜ.க மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் என்பவரால் தொடங்கிவைக்கப்பட்ட  #விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணியில் திடீரென இரு தரப்பினரிடையே  ஏற்பட்ட மோதலில்  இதுவரைக்கும் ஆறு பேர் கொல்லப்பட்துடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும்  ஏராளமான கடைகள், வாகனங்கள், மசூதிக்கும் தீவைக்கப்பட்டுள்ளதுடன்

இதுவரைக்கும் 176பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


தற்போது நிலமை கட்டுக்குள் உள்ளதாகவும் மேவாத் பகுதியில் துணை ராணுவம் மற்றும்  ஐ.ஆர்.பி.யின் நிரந்திர பட்டாலியனும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சௌதாலா தெரிவித்துள்ளார். 


தகவல்

As sheikh Hafeesul haq Fathih institute for Higher Education)

 


ஹரியானாவின் மேவாத்தில் திங்களன்று நடந்த வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமின் 57 வது செக்டரில் உள்ள ஒரு மசூதிக்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


"இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் முகமது சாத் உயிரிழந்துவிட்டார்," என்று மசூதியின் நிர்வாகக் குழுவின் தலைவர் அஸ்லம் கான் பிபிசியிடம் கூறினார்.


குருகிராமின் டிசிபி(கிழக்கு) நிதீஷ் அகர்வால், இந்த தாக்குதலை பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.


“மசூதியின் நாயப் இமாம் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.


“மசூதி தாக்கப்பட்ட நேரத்தில் போலீஸ் படைகள் அங்கு ​​​​பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தன. ஆனால் தாக்குதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை போலீசார் சேகரித்துவருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று டிசிபி மேலும் கூறினார்.


முன்னதாக திங்களன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள மேவாத் பகுதியில் சமய யாத்திரையின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 20 பேர் காயமடைந்தனர் மற்றும் இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.


குருகிராமில் உள்ள இந்த மசூதி தாக்குதலுக்கு உள்ளானது. 

படக்குறிப்பு,

குருகிராமில் உள்ள இந்த மசூதி தாக்குதலுக்கு உள்ளானது.



நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்திற்குப்பிறகு குருகிராம் முழுவதிலும் இருந்து வகுப்புவாத வன்முறை பற்றிய வேறு எந்தச்செய்தியும் இல்லை என்று டிசிபி தெரிவித்தார்.


"என் சகோதரரின் முகத்தை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. நாங்கள் இப்போது சவக்கிடங்கில் இருக்கிறோம். கடந்த ஏழு மாதங்களாக இந்த மசூதியின் இமாமாக எனது சகோதரர் இருந்தார். அவரின் வயது வெறும் 22 மட்டுமே,” என்று இமாம் சாத்தின் சகோதரர் ஷதாப் அன்வர் பிபிசியிடம் கூறினார்.


நேற்று இரவு சுமார் 11:30 மணிக்கு சாதிடம் ஷதாப் பேசினார்.


​​”எங்களது பூர்வீகம் பீகார். இன்று என் சகோதரர் வீடு திரும்புவதாக இருந்தது. அவரிடம் டிக்கெட் இருந்தது. நான் அவரை தொலைபேசியில் அழைத்து இப்போது நிலைமை சரியில்லை என்று விளக்கினேன். நிலைமை சீராகும் வரை மசூதியை விட்டு வெளியே வரவேண்டாம் என்றேன். இதுதான் நான் அவருடன் கடைசியாகப்பேசிய வார்த்தைகள்,” என்று ஷதாப் குறிப்பிட்டார்.



மசூதியின் நாயப் இமாம் முகமது சாத்,


’பாதுகாப்பு அளிப்பதாக காவல்துறை உறுதி'

மேவாத்தில் நடந்த வன்முறைக்குப் பிறகு, திங்கள்கிழமை மாலை ஒரு போலீஸ் குழு எங்களை அணுகி எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக நம்பிக்கை அளித்தது," என்று மசூதியை நிர்வகிக்கும் ஹரியானா அஞ்சுமன் அறக்கட்டளையின் தலைவர் முகமது அஸ்லம் கான் பிபிசியிடம் தெரிவித்தார்.


“உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழு எங்களிடம் வந்தது. மசூதியின் பாதுகாப்பை போலீஸார் செய்வார்கள் என்று எங்களிடம் கூறினர். போலீஸ் குழு மசூதியிலேயே இருக்கும் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. மசூதியின் இமாம் மற்றும் இங்கு வசிக்கும் இரண்டு ஊழியர்களைப் பற்றி நாங்கள் பேசியபோது, ​​​​கவலைப்பட ஒன்றுமில்லை என்று போலீசார் தெரிவித்தனர்,” என்கிறார் அஸ்லம் கான் .


​​மசூதி கமிட்டியிடம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக டிசிபி நிதிஷ் அகர்வாலும் பிபிசியிடம் தெரிவித்தார்.


”மக்ரீப் தொழுகையை முடித்துவிட்டு நாங்கள் மசூதியிலிருந்து திரும்பியிருந்தோம். போலீசாரும் உடனிருந்தனர். நள்ளிரவு 12 மணி முதல் 12.30 மணிக்கு இடையே மசூதி திடீரென தாக்கப்பட்டது. முதலில் மசூதியின் கேமராக்கள் உடைக்கப்பட்டன. பின்னர் தீ வைக்கப்பட்டது,” என்று அஸ்லம் கான் கூறினார்.



​​மசூதி கமிட்டியிடம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக டிசிபி நிதிஷ் அகர்வாலும் பிபிசியிடம் தெரிவித்தார்.


“பீகாரை சேர்ந்த மசூதியின் இமாம் சாத், தாக்குதல் நடத்தியவர்களால் கொல்லப்பட்டார். குர்ஷித் என்ற நபர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். மேலும் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


2004 ஆம் ஆண்டில் ஹரியானா அரசு குருகிராமில் 17 கோவில்கள், 2 குருத்வாராக்கள், ஒரு தேவாலயம் மற்றும் ஒரு மசூதி கட்டுவதற்கு நிலம் ஒதுக்கியது.


இந்த மசூதி அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. ந்யூ குருகிராமில் உள்ள ஒரே மசூதி இதுவாகும். அருகில் வசிக்கும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த இங்கு வருகிறார்கள்.


“போலீசார் எங்களை மசூதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. தாக்குதல் நடந்ததற்கான தடயங்கள் இங்கு தெளிவாகத் தெரிகிறது. மசூதி கட்டிடம் நிறைய சேதம் அடைந்துள்ளது” என்று தாக்குதலுக்குப் பிறகு மசூதியை அடைந்த ஒரு செய்தியாளர் பிபிசியிடம் கூறினார்.


விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் இணைந்து திங்கள்கிழமை மேவாத்தில் சமய யாத்திரை மேற்கொண்டன. இந்த யாத்திரையின் போது ​​இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் பல இடங்களில் வன்முறை வெடித்தது.



திங்கள்கிழமை மாலை சோஹ்னாவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதில் தனக்குத்தெரிந்த பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.


குருகிராமில் உள்ள சோஹ்னா பகுதியிலும் திங்கள்கிழமை மாலை வன்முறை ஏற்பட்டது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கடைகள் குறிவைக்கப்பட்டன.


பிபிசி செய்தியாளர் அபினவ் கோயல் சோஹ்னா பகுதிக்குச்சென்றார்.


“சோஹ்னாவில் உள்ள சாலைகளில் தற்போது போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். சாலையின் இருபுறமும் தள்ளு வண்டிகளும், முஸ்லிம்களின் கடைகளும் எரிக்கப்பட்டுள்ளன. ’தி அர்பன் க்ரோசர்’ என்ற கடையும் கொளுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்னும் புகை வெளியேறுவதை பார்க்க முடிகிறது,” என்று அபினவ் கோயல் கூறுகிறார்.


“சாலையின் இருபுறமும் எரிந்துபோன வாகனங்கள் மற்றும் கடைகள் காணப்படுகின்றன. சில கடைகளில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது,” என்றார் அவர்.


"நேற்று மதியத்திற்குப் பிறகு, இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடைகளைத் தாக்கி தீவைக்கத் தொடங்கினர்." என்று பிபிசியிடம் பேசிய சோஹ்னாவில் வசிக்கும் ஜெம்ஷெத் தெரிவித்தார்.


இந்த தாக்குதலில் ஜெம்ஷெத்தின் சித்தப்பா பலத்த காயம் அடைந்தார். “அவரது தலையில் பதினைந்துக்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன. சம்பவத்திற்குப் பிறகு அவர் சோஹ்னாவை விட்டு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டார்,” என்று ஜெம்ஷெத் கூறினார்.


திங்கள்கிழமை மாலை சோஹ்னாவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதில் தனக்குத் தெரிந்த பலர் காயமடைந்துள்ளதாகவும் ஜெம்ஷெத் கூறுகிறார்.


சோஹ்னாவிலிருந்து நூஹ் நோக்கிச்சென்றால் ​​சாலைகள் முற்றிலுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.


“சாலைகள் முற்றிலும் வெறிச்சோடி உள்ளன, ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கு பிறகும் போலீஸ் தடுப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் சாலைகளில் காணப்படுகின்றன. நூஹ் பகுதியில் மத்திய ரிஸர்வ் போலீஸ் படையினர் காணப்படுகின்றனர்,” என்று பிபிசி செய்தியாளர் அபினவ் கோயல் கூறுகிறார்.


சோஹ்னாவிலிருந்து நூஹ் நோக்கிச்சென்றால் ​​சாலைகள் முற்றிலுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன. 

படக்குறிப்பு,

சோஹ்னாவிலிருந்து நூஹ் நோக்கிச்சென்றால் ​​சாலைகள் முற்றிலுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.


'

விஷ்வ ஹிந்து பரிஷத் திங்கள்கிழமையன்று மேவாத்தில் ஒரு சமய யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பேரணியின் மீது அப்பகுதியைச் சேர்ந்த ஜிகாதி விஷமிகள் திடீரென தாக்குதல் நடத்தியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.


“எங்கள் அமைப்பைச் சேர்ந்த பலர் காயமடைந்துள்ளனர். சில உயிரிழப்புகள் பற்றிய செய்திகளும் வந்துள்ளன. இருப்பினும் நாங்கள் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தரவுகளை சேகரித்து வருகிறோம்,” என்று பிபிசியிடம் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சல் தெரிவித்தார்.


​​“நன்கு திட்டமிட்ட சதியின் ஒரு பகுதியாக எங்கள் யாத்திரை மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஏராளமான மக்கள் அங்கு சிக்கிக்கொண்டனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது நள்ளிரவு வரை தொடர்ந்தது,” என்றார் வினோத் பன்சல்.


“எங்கள் ஆட்கள் யாரும் இப்போது அங்கு சிக்கியிருக்கவில்லை. நிர்வாகமும், காவல்துறையும் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டனர்” என்று வினோத் பன்சல் குறிப்பிட்டார்.


மசூதி மீதான தாக்குதல் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பன்சல், “எங்களுக்கு இதுபற்றித் தெரியாது. அது நடந்திருந்தால் அது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இதன் பின்னணியில் சதி உள்ளதா என நிர்வாகம் விசாரிக்க வேண்டும்,” என்றார்.


மறுபுறம் ஹரியானாவில் நடந்த வன்முறைக்குப் பிறகு பேசிய மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், “இந்த அளவுக்கு நடந்துள்ள வன்முறை, திடீரென்று நடந்தது அல்ல. இரு சமூகத்தினரும் நூஹ் பகுதியில் நீண்ட காலமாக அன்புடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு யாரோ விஷத்தை விதைத்துள்ளனர். சிலர் திட்டமிட்டு சதி செய்துள்ளனர். நுழைவாயில் மற்றும் கூரைகளில் கற்கள், ஆயுதங்கள், தோட்டாக்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கும்போது இது திடீரென்று நிகழ்ந்து அல்ல என்றே தோன்றுகிறது,” என்று கூறினார்.


 பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. 


ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 


தற்கொலை படை தாக்குதல் மூலம் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


 வொஷிங்டன் அமெரிக்காவின் "அலாஸ்கா" பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.4 ரிக்டர் ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 


மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (08) நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. வாக்குச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர்.


மேற்கு வங்கத்தில் 3 அடுக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் 73,887 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது. 


22 மாவட்டங்களில் 928 உறுப்பினர்கள், 9,730 பஞ்சாயத்து சமிதிகள், 63,229 கிராம ஊராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில், 2.06 லட்சம் பேர் போட்டியிட்டனர். 5.67 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

 


அரபு நாடுகளில் பக்ரீத் பண்டிகை நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தை கொதிப்படைய செய்யும்படியான ஒரு நிகழ்வு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அரங்கேறி உள்ளது.

அந்த நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் வெளியே, முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் பக்கங்களை ஒரு நபர் கிழித்து போட்டதுடன் அவற்றை தீயிட்டு எரிக்கவும் செய்தார்.

இந்தச் சம்பவத்துக்கு துருக்கி மற்றும் செளதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் (NATO) சேர்வதற்காக ஸ்வீடன் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு துருக்கி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஸ்வீடன் தலைநகரிலேயே குர்ஆன் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டின் மீதான துருக்கியின் கோபத்தை மேலும் கூட்டியுள்ளது.

குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஸ்டாக்ஹோமில் போராட்டம் நடத்த ஸ்வீடன் போலீசார் அனுமதி அளித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராகவும், குர்திஷ் இன மக்களுக்கு ஆதரவாகவும் ஸ்வீடனில் அவ்வபோது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக, அந்நாட்டின் மீது துருக்கி ஏற்கனவே கடும் கோபத்தில் உள்ளது. இதுவே நேட்டோ அமைப்பில் ஸ்வீடனை இணைப்பதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் இணைய துருக்கியின் ஆதரவு அவசியம் என்ற நிலை இருக்கும் போது, பக்ரீத் திருநாளின் போது ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் ஸ்வீடன் மீதான துருக்கியின் ஆத்திரத்தை அதிகரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.



தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவுத்துறை இணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஸ்வீடன் நிகழ்வுக்கு அமெரிக்காவின் கண்டனத்தை பதிவு செய்தார்.

இதனிடையே, குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, ஸ்வீடனில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, ஸ்வீடனுக்கான தமது நாட்டு தூதரை காலவரையின்றி திரும்பப் பெறுவதாக மொரோக்கோ அறிவித்துள்ளது. அத்துடன், தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் படியும் ஸ்வீடன் தூதருக்கு, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.