Showing posts with label Eastern Sri Lanka. Show all posts


வி.சுகிர்தகுமார் 0777113659  


 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின்  கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக 'சமுர்த்தி அபிமானி' புத்தாண்டு சந்தையினை நடாத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில்; சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தையினை இன்றும் நாளையும் (9,10) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ந.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்; மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபி;ர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா நிருவாக கிராம அலுவலர் பரிமளவாணி சில்வெஸ்டார் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் ரி.கமலபிரபா சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான கவிதா கிருதாசன் எஸ்.சுரேஸ்காந் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி பிரிவினரால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்ட அதிதிகள் வியாபார நிலையங்களை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.
பின்னர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டனர்.
இதேநேரம் பல்வேறு உற்பத்தி பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்


நூருல் ஹுதா உமர்

சமூகமாக முன்னேற வேண்டும் என்றால் இளைஞர்கள் தொடர்ச்சியாக அறிவைப்  பெருக்கிக் கொள்வதோடு ஒருமைப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்படுவதிலே தான் நாம் சமூகமாக முன்னேற முடியும் என அக்கரைப்பற்று அனைத்து  பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்

பாலமுனை பிரதேசத்தில் இருந்து கிழக்கின் கேடயத்தில் புதிய அங்கத்தவராக இணைந்து கொண்ட இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைத்த அவர்,

புத்தாக்க கல்வி அறிவை அடித்தளமாக கொண்ட சமூகமாக நாம் வளர வேண்டும். அத்துடன் ஒருமைப்பாட்டுடன் எல்லோரும் சேர்ந்து இயங்கும் முறைமைக்குள் நாம் உள்வாங்கப்படுகின்றபோது நமது சமூகம் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தினை பிரசவித்துக்கொள்ளும். அந்த முறையை கொண்டு வருவதே எங்களது முதல் பணியாகும் என்றார்.

இந்நிகழ்வில் உலமாக்கள், கிழக்கின் கேடயம் பொருளாளர் ஏ.எல்.ருஸ்தி அஹ்மத், கிழக்கின் கேடயத்தின் இணைப்பாளர் சட்டக்கல்லூரி மாணவன் முஹம்மட் அசாம், ஏ.கே. அமீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், கிழக்கின் கேடயத்தின் ஆலோசகருமான சட்டமானி எஸ்.எம்.எம். ஹனீபா, செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.எம்.அர்சாத் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 


 மாளிகைக்காடு செய்தியாளர்


மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலையின் 27 ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலையின் பணிப்பாளரும், மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தலைவருமான எம்.எச்.எம். அஸ்வர் அவர்களின் தலைமையில் மாவடிப்பள்ளி அல்- அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று (09) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மயோன் குரூப் நிறுவனத்தின் பணிப்பாளரும், ரிஸ்லி முஸ்தபா கல்வி மையத்தின் தலைவருமான ரிஸ்லி  முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்களின் வகிபாகம், எதிர்காலத்தில் பிள்ளைகளை சிறந்த தலைவர்களாக உருவாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய பணிகள், எதிர்காலம் மீது உள்ள சவால்கள் தொடர்பில் கருத்துரைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினரும், மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் கலந்து கொண்டார். மாவடிப்பள்ளி ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் ஏ.எல்.எம். மனாப், அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி பீ .எம். றியாத், டலண்ட் பிளஸ் நிறுவனர் அல்ஹாபிழ் ஆர்.எம். சில்ஹான் உட்பட அதிதிகள், பெற்றோர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கடந்த காலங்களில் இப்பாலர் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள், சாதாரண  தரத்தில் அதி திறமை சித்தி பெற்ற மாணவர்கள், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி அதிதிகளினால் மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவு சின்னங்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட அரச சேவைகள் ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 17 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிதியத்தின் தலைவர் அல் ஹாஜ் ஐ. அப்துல் குத்தூஸ் அவர்களது தலைமையில் 202403.09 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் திருமதி என்.வி.எம். லரீப் அவர்களும் சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட ஓய்வூதிய நிதியத்தின் செயலாளர் அல் ஹாஜ் ஏ. உதுமாலெப்பை அவர்களும் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஸான் அவர்களும் CMSO ஏ.சி. முகம்மட் அவர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ. சாஜிதா அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது நிதியத்திலிருந்து மரணித்த அங்கந்தினருக்காக துஆ பிராத்தனை இடம்பெற்றது. பின்னர் நிகழ்வின் தலைவர் முன்னெடுக்கப்படவேண்டிய பல்வேறு திட்டங்கள் தொடர்பில் தனது முன்மொழிவை முன்வைத்தார். இங்கு பிரதம அதிதி மற்றும் சிறப்பு அதிதிகளும் உரையாற்றினர்.
நிகழ்வில் நிதியத்தில் 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்ற எம்.ஐ.ஏ. ஜப்பார் அவர்கள் கௌரவிக்கப்பட்டு அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

இறுதியாக இடம்பெற்ற நிர்வாகிகள் தெரிவின்போது தலைவராக எம்.எம்.எம். இஸ்மாயில் அவர்களும் செயலாளராக ஏ.எல். மீராலெப்பை அவர்களும் பொருளாளராக ஐ.எல். ஹம்ஸா அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவராக யூ.எல்.ஏ. அஸீஸ் அவர்களும் உபசெயலாளராக இசட். ஏ. லத்தீப் அவர்களும் நிர்வாக உத்தியோகத்தர்களாக ஏ.எம். றசீட் மற்றும் எம்.சி. ஜமால்டீன் ஆகியோரும் இசட்.ஏ. முனீர் கணக்கு பரிசோதகராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இங்கு ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தில் அங்கம் வகிப்பதிலுள்ள நன்மைகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டு நிதியத்தில் இதுவரை இணைந்து கொள்ளாதவர்களை புதிய நிர்வாகம் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.


(வி.ரி. சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் எம்.பி.எம்.யூசுப்  தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றதை முன்னிட்டு அங்கு பிரிவுபசார நிகழ்ச்சி இன்று (6) புதன்கிழமை நடைபெற்றது.

 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எ.எல்.எ.மஜீட் ஏற்பாட்டில் கல்விசார் உத்தியோகத்தர்கள்  நலன்புரி ஒன்றியத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் வலயக்கல்விப் பணிமனையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

 அங்கு ஆசிரிய ஆலோசகர் யூசுப்பின் சேவைகள் பற்றி பலரும் பாராட்டி பேசினர் .

இறுதியில் அவருக்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்கள் .

பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான மஜீத், யசீர்அறபாத், நிதர்சினி,நிலோபரா உள்ளிட்ட கல்வி சார் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரிய ஆலோசகர் யூசுப் ஏற்புரை வழங்கினார்.


 (எஸ்.அஷ்ரப்கான்)


அட்டாளைச்சேனை , அல்ஜென்னா பள்ளிவாசலின் புனர்நிர்மாணப் பணிகள்   தற்சமயம் மேற்கொள்ள்ளப்பட்டு வருகின்றது. 

குறித்த பணிகளை நிறைவு செய்யும் பொருட்டு பள்ளிவாசல் நிருவாகத்தினர்  - தனவந்தர்கள், பிரமுகர்கள் என பலரது உதவிகளையும் பெற்றே குறித்த புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொள்கின்றனர். 

அந்தவகையில் ஷாட் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.கே.அமீரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஒரு தொகை சீமெந்து பக்கட்டுகள் கடந்த வாரம் வழங்கிவைக்கப்பட்டது. 

மேலும் குறித்த பள்ளிவாசலின் கோரிக்கையினை பூர்த்தி செய்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வதுடன், அதற்கான ஒத்துழைப்புகளையும் பெறவுள்ளதாக  அவர் கருத்து தெரிவித்தார். 

அத்துடன் எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்திற்கு முன்னர் பள்ளிவாசலின் புனர்நிரமாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு தங்களால் முடிந்த உதவி, ஒத்தாசைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 


(உமர் அறபாத் - ஏறாவூர் )


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜெஸ்டினா முரளிதரனின் ஆலோசனை வழிகாட்டலின்  கீழ், அருவி பெண்கள் அமைப்பின் அணுசரனையில் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விசேட ஊடக செயலமர்வு இன்று காலை  மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விசேட செயலமர்வில் சிரேஸ்ட சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான திருமதி.மயூரி ஜனன் கலந்து கொண்டு நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் குறித்த தெளிவினை பெற்றுக்கொண்டனர்.


(சர்ஜுன் லாபீர், ஐ.எல்.எம்.நாஸீம்)

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட  Harvest-2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று(21) பிற்பகல் 4.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஓய்வு பெற்று சென்ற  மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவித்து நினைவு சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன்  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை,
க.பொ.த(சா/த),(உ/த) பரீட்சைகளில் சித்தியடைந்தஉத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் கெளரவிக்கப்படனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட  அரசாங்க அதிபர் சிந்திக அபேவிக்ரம கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்தோடு கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.யோகதீசன் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி அனீஸ்,பிரதம கணக்காளர் ஏ.எல்.ஆதம்பாவா,பிரதம பொறியியலாளர் ஏ.பி சாஹீர்,மாவட்ட உள்ளக பிரதம கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள்,கணக்காளர்கள்
சம்மாந்துறை பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உத்தியோகத்தர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேரப்பட்டதுடன்,போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசீல்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


( வி.ரி.சகாதேவராஜா)

அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகமானது, காரைதீவு முன்னாள் 
தவிசாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு  சமூக சேவைக்கான மதிப்புறு முனைவர்( Honorary Doctorate) கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

சர்வதேச பட்டமளிப்பு விழா (  International Graduation ceremony) நேற்று முன்தினம் (10) சனிக்கிழமை இரவு கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றபோது மேற்படி விருது வழங்கப்பட்டது.

உலகத் தமிழ் பல்கலைக்கழகம்( World  Tamil university - America)  உள்ளிட்ட 11 அமைப்புக்கள் இணைந்து வருடாந்தம் சமுதாயத்தில் அரசியல் கல்வி கலை வாழ்வியல் வியாபாரம் மற்றும் சமூக சேவைகள் செய்த பிரமுகர்களுக்கு இவ்வாறான மதிப்புறு முனைவர் கலாநிதி பட்டத்தை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இவ் ஆண்டுகான சர்வதேச பட்டமளிப்பு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்ற போது 25 பிரமுகர்களுக்கு இப் பட்டம் வழங்கி வைக்கப்பட்டன. பல்கலைக்கழக வேந்தர் மற்றும் உபவேந்தர் ஒப்பமிட்ட சான்றிதழ் மற்றும்  பதக்கங்களை வழங்கி வைத்தனர்.

காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான கலாநிதி கி.ஜெயசிறில் கிழக்கில் மிகவும் நன்குஅறியப்பட்ட சமூக சேவையாளராவார். இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவராவார்.
 அனர்த்த காலங்களில் கிழக்கு மலையகம் என நேரடியாக சென்று மக்களுக்கு உதவி வருபவர்.

துணிச்சலும் சிறந்த ஆளுமையும் மிக்க பரோபகாரியான இவர் கலாநிதி பட்டத்தை தனது அயராத தொடர் சமூகப் பணிக்காக இள வயதில் (40) பெற்றுள்ளார்.
இவருக்கு கலாநிதி பட்டம் கிடைத்ததையிட்டு இந்திய தமிழகத்தின் சீமான் பழநெடுமாறன் இலங்கையில் இரா.சம்பந்தன் மனோகணேசன் சி.சிறிதரன் மாலை சேனாதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

 இவரது சமூகப்பணி மேலும் தொடர வேண்டுமென பல்வேறு அமைப்புகள் பல்வேறு பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்


மாளிகைக்காடு நிருபர்

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள கல்முனை கமு/கமு/ பஹ்ரியா மகா வித்தியாலயம், சாய்ந்தமருது கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம், நற்பிட்டிமுனை கமு/கமு/ லாபீர் வித்தியாலயம், மருதமுனை - பெரியநீலாவணை கமு/கமு/ அக்பர் வித்தியாலயம், கல்முனை கமு/கமு/ அஸ் ஸுஹரா வித்தியாலயம், கல்முனை கமு/கமு/ அஸ்ஹர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விஜயம் செய்து பாடசாலைகளின் குறைநிறைகளையும், கல்வி மேம்பாட்டு தேவைகளையும் பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டறிந்தார்.  

இந்த விஜயத்தின் போது மாணவர்களிடம் கல்வி மேம்பாடு தொடர்பிலும், எதிர்கால கல்வி நிலைகள் தொடர்பிலும், பாடசாலை கால ஒழுக்க விடயங்கள் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியதுடன் கல்முனை கமு/கமு/ பஹ்ரியா மகா வித்தியாலயம், சாய்ந்தமருது கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம், நற்பிட்டிமுனை கமு/கமு/ லாபீர் வித்தியாலயம், மருதமுனை - பெரியநீலாவணை கமு/கமு/ அக்பர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு கிழக்கு மாகாண சபை ஊடக கிடைக்கப்பெற்ற பாடசாலை புத்தக பைகளையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா உமர், பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகத்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச முக்கியஸ்தர்கள், பாடசாலைகளின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து

 


அம்பாறை அரச அதிபர் வெள்ளப் பாதிப்பை பார்வையிட்டார்.



காரைதீவு பிரதேச செயலக பிரிவில் அண்மையில் இடம்பெற்ற  வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம நேரில் சென்று பார்வை இடுவதனையும் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன்  அந்நிலைமையயை மாவட்ட செயலாளருக்கு எடுத்து விபரிப்பதனையும் காணலாம்.

 


(கு.மாதவன்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணராகப் பணிபுரிந்து,மாற்றலவாகிச் செல்லும் மகப்பேற்று நிபுணரான திரு ஜீரேகா விக்ரமசிங்க அவர்களுக்கான பிரியாவிடை நேற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தயட்சகர் ஜனாப் ரஜாப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள்,வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். 

இவரது சேவை நலனைப் பாராட்டிப் பொன்னாடையும் போர்த்தப்பட்டதுடன் கௌரவிப்பும் இடம்பெற்றது



 (சர்ஜுன் லாபிர்)


கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள்,மகளிர் அபிவிருத்தி சங்கங்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று(16) இஸ்லாமாபாத் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் கல்முனை மகளிர் சகவாழ்வு சங்கத் தலைவி எம்.றிலீபா வேகம் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இக் கலந்துரையாடலின் போது மகளிர் அபிவிருத்தி சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,எதிர் கால திட்டமுன்மொழிவுகள் சங்களின் நடைமுறை  சார் நிர்வாக பிரச்சினைகள்,கட்டிட தேவைகள் என பல்வேறுபட்ட பிரச்சினைகள் சங்க பிரதிநிதிகளால் முன் வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அஸீம்,கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் சப்றாஸ் நிலாம்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல் அர்சத்தீன் உட்பட கிராம மட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்


 நூருல் ஹுதா உமர் 


இன்று உலகம் மாறிவிட்டது அதற்கேற்றால் போல் நாமும் மாறவேண்டும். ஒருகாலம் இருந்தது தலைவர்கள் கட்டளை பிறப்பிப்பவர்களாக இருந்தனர். இன்று தலைவர்கள் நல்லதொரு பயிற்றுவிப்பாளராக உருவாக்கப்பட்டு இருக்கின்றார்கள், அவர்கள் எந்த இடத்தில் யாரை நியமிக்கவேண்டும் என தீர்மானிக்கின்றனர். முன்னர் தனி ஒருவர் தீர்மானங்களை மேற்கொண்டார். இன்று ஒரு குழு இருந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் முறைக்கு உலகம் மாறிவிட்டது என கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகத்திற்கும் அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதானிகள், கல்விமான்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று (06) மாலை நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அதனடிப்படையில் மக்களிடமிருந்தும் கருத்துக்களை எடுத்து சட்டங்களை இயற்றுவதற்கு அரசு இப்போதாவது எத்தனித்துள்ளமையினை இட்டு சந்தோசமடைகின்றோம். நமது நாட்டில் காணப்படும் கல்விமுறையில் உடனடி மாற்றங்களை செய்ய வேண்டும். ஒருமாணவன் தனது முதல் பட்டப்படிப்பை 21 வயதுக்குள் நிறைவு செய்து அவன் ஒரு தொழிலை உருவாக்கி 10 பேருக்கு தொழில் வழங்கும் அளவிற்கு கல்வித்திட்டங்கள் மாற்றம் பெறவேண்டும்.

ஆண்டு ஒண்டு தொடக்கம் பல்கலைக்கழகம் வரை கல்வி கற்றுவிட்டு மீண்டும் அரசாங்கத்தையே ஒரு தொழிளுக்காக காத்திருக்கும் கல்விமுறையை எதற்காக வைத்திருக்கின்றோம். இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் பட்டதாரிகளாக வரவேண்டும். சிறு தேநீர்கடை வைத்திருப்பவர் கூட அக்கடையில் விளம்பரம், களஞ்சியம், கணக்கு, சம்பளம், என எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது. அவைகளை முறையாக செய்வதற்கு அவர்கள் கல்வி அறிவு படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

ஆனால் நாம் குறிப்பிட்ட மாணவர்களையே கலாசாலைகளுக்கு தெரிவு செய்கின்றோம். இந்த முறை பிழையானதாகும். அரசாங்கம் தமது வசதிக்கேற்ப மாணவர்களை இணைத்துக்கொள்ளட்டும். ஆனால் தகுதி வாய்ந்த ஏனைய மாணவர்களும் பட்டப்படிப்பினை மேற்கொள்ள தரமான தனியார் பல்கலைக்கழகங்களை அரசு உருவாக்கவேண்டும், கலாசாலைகள் research, and inquiry, creative, moral leadership, and entrepreneur leadership போன்ற கல்வி முறைகளுக்கு மாற்றம் பெற்று ஒருமைப்பாட்டோடு புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த வேண்டும் அதனூடாக நாடு முன்னேற வேண்டும்.
 
இதற்கு ஆரம்ப கல்வி முறைகளில் மாற்றம் என்பது இன்றியமையாதது ஆரம்ப கல்விமுறையில் genius hour, experiential hour, Bit-size learning, joyful learning and gamification இவ்வாறான மாற்றங்களை கொண்டு வரப்பட வேண்டும்  இதற்கு ஆரம்ப பாடசாலைகளுக்கு double degree பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் நாம் இன்னமும் home guard teacher களை வைத்துக் கொண்டு உற்பத்தித்திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கமுடியாது 
என தெரிவித்தார்

 


நூருல் ஹுதா உமர்  


கமு/அக்/அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் நடாத்தும் அரபா பிரீமியர் லீக் சுற்று தொடருக்கான டீ- சேர்ட் அறிமுக நிகழ்வும் பழைய மாணவர்கள் சங்க சீருடை அறிமுகமும் பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் மற்றும் கிழக்கின் கேடய பிரதானியும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் அப் பாடசாலையின் பழைய மாணவர்களான கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், பொத்துவில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், அப்பாடசாலையின் அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்கள், கல்வி அதிகாரிகள், 300க்கும் அதிகமான பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்


( வி.ரி.சகாதேவராஜா) 

உலகை உலுக்கிய சுனாமி அனர்த்தத்தினை நினைவு கூரும்  தேசிய பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது ஏற்பாடு செய்த பிரதான நிகழ்வானது நேற்று முன்தினம்(26.12.2023) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய முன்றலில் இடம் பெற்றது.

இதனை முன்னிட்டு  அனர்த்தங்களில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து  மக்களுக்காக  பிரார்த்தனை செய்யும் நிகழ்வு
இவ்வாறான இழப்புக்களிலிருந்து  பாதுகாப்பு பெறுவது தொடர்பான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு. எதிர்காலத்தில் சுனாமி அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு  பெறுவதற்கான தயார்ப்படுத்தலை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இந் நிகழ்வு அனர்த்த முகாமைத்துவ சேவை அபிவிருத்தி உத்தியோகத்தரினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

 விசேட நிகழ்வாக மரநடுகை நிகழ்வும்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது பொதுமக்கள், ஆலய பரிபாலன சபையினர், கிராம/மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்,  விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்தது.

 இதில் விசேட அம்சமாக பிரதேச செயலக பிரிவின் 45 கிராம சேவகர் பிரிவுகளிலும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆலயங்களில் விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு கல்முனை மாநகர சபையின் பிரதான திண்ம கழிவகற்றல்  செயற்திட்டத்தில் தன்னை முழுமையாக அர்பணித்து முழு ஈடுபாட்டுடன் இரவு பகல் பாராது நேர்த்தியான முறையில் தனது சேவைகளை வழங்கி வரும் சுகாதார மேற்பார்வையாளர் எம்.எம். முகமது ரிஸ்வான் அவர்களை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தது.

கல்முனையில் அமைந்துள்ள அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி எம். எச். ரிஸ்பின், செயலாளர் எம்.எம்.எம். காமில் மற்றும் அமைப்பின் செயற்குழு, நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை குப்பை பையில் தவறுலாக போட்டு, அதனை குப்பை சேகரிக்கும் வண்டிக்கு அனுப்பிய ஒருவர், பிறகு அந்தப் பணத்தை பெரும் முயற்களின் பின்னர் பெற்றுக் கொண்ட சம்பவமொன்று கல்முனைப் பிரதேசத்தில் நடந்தது. இந்த பணத்தை இழந்தவர் துரிதமாக மீளப்பெற காரணமாக அமைந்திருந்தவர் இந்த பாராட்டை பெற்ற றிஸ்வான் என்பது குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்.


சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடி விற்பனையில் சாய்ந்தமருது பிரதேச செயலகம் கூடுதல் நிதியினை சேகரித்து அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.

இந்த மாவட்ட வெற்றியை கொண்டாடும் நிகழ்வு சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இன்று (22) வியாழக்கிழமை வங்கிச் சங்க கூட்டம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ. சி.ஏ.நஜீம், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஐ.ஹிதாயா, கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, வலய உதவியாளர் எம்.எஸ்.எம். நௌஷாட், கருத்திட்ட உதவியாளர் எம்.எம் எம்.முபாறக், சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத் தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம் உள்ளிட்ட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கேக் வெட்டி வெற்றியின் மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் புதைத்தலுக்கு எதிராக பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் அனுசரணையில் புகைத்தல் எதிர்ப்பு பேரணியும் இடம்பெற்றது.

கொடி விற்பனைக்கு ஒத்துழைப்பு வழங்கிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் நன்றிகளைத் இதன்போது தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடி விற்பனையினை மே-31 தொடக்கம் ஜூன்-14 ஆம் திகதி வரை தேசிய ரீதியில் அமுல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 


 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் கணினி அறிவினை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சுகாதார தகவல் முகாமை பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் ஐ முஜீப் அவர்களினால் கணினிப் பயிற்சி நெறி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.