Showing posts with label Eastern Sri Lanka. Show all posts

 


உலக  சுற்றாடல் தினநிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் ஏற்பாட்டில்  பிரதேச செயலாளர்  தலைமையில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது....


ஜே.கே.யதுர்ஷன்..


 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உலக  சுற்றாடல் தின  முன்னிட்டு   திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச  செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பலன் தரும்  மரக்கன்றுகள் நடுகை  நிகழ்வும் இடம்பெற்றது....


 இன் நிகழ்வில் பொலித்தின் பிளாஷ்ரிக் பாவனைகள் கட்டுப்படுத்தல்  பற்றி விழிப்புணர்வும்  சுற்றுச்சுழல் பாதுகாப்பு ,சுற்றாடல் தினம்  பற்றிய உரைகளும் இடம்பெற்றது....



 இவ் நிகழ்வில் திருங்கோவில் விநாயகபுரம் சிவன் ஆலய பிரதம குரு   பிரதேச செயலக உதவித்திட்ட மிடல் பணிப்பாளர் மற்றும் கிராம  சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்  கிராம அபிவிருத்தியோத்தர்கள் திருக்கோவில் பொலிஸ்நிலைய உத்தியோத்தர் மற்றும்  விளையாட்டுகழக உறுப்பினர்கள்  பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்....



 நூருல் ஹுதா உமர்


சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை மையமாக கொண்டு டயகோணியா மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி என்பனவற்றின் அனுசரணையில் இன்று ஐந்தாம் திகதி விழிப்பூட்டல் ஊர்வலமும், கருத்தரங்கும் கல்முனையில் நடைபெற்றது.

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.ஏ. றிசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.எல்.எம். முதர்ரீஸ், வலய ஆணையாளர் எம்.எம். சியாம், சுற்றாடல் அதிகார சபை உயர் அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னோடி மாணவர்கள், கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். 

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயம், மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயம், கல்முனை ஆர்.கே.எம். வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்- அக்ஸா மகா வித்தியாலயம், சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயம் ஆகியவற்றின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஏனைய பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்கள் போன்றோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவது, அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமான விடயங்கள் தொடர்பான விடயங்களை கருத்தரங்கின் வளவாளர் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப்பணிப்பாளர் எம்.எ.சி.எம். றியாஸ் நிகழ்த்தினார்.

மேலும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மாவட்ட இணைப்பாளர் யூ.எல். ஹபீலா உட்பட முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 



பாறுக் ஷிஹான்

திருக்கோவில் பிரதேசத்தில் நீண்ட காலம் நிலவி வரும் கட்டாக்காலி மாடுகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள தவிசாளர் சசிகுமார் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
,
இதற்கமைய அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கால்நடை  உரிமையாளர்களுக்கு  திருக்கோவில் பிரதேச சபை   திருக்கோவில் பொலிஸ் நிலையம்  மற்றும் திருக்கோவில் மிருக வைத்தியசாலை என்பன  இணைந்து  இன்று (05) நடாத்திய கலந்துரையாடலின் போது  திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த  05 மாதங்களுக்குள்  கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்ட வீதி விபத்துக்களினால்   02 மரணங்களும் அதிகளவான பொருட்சேதங்களும் இடம் பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி  அறிக்கை  சமர்ப்பித்துள்ளார்.

எனவே   கட்டாக்காலி மாடுகளை உரிமையாளர்கள்  உரிய இடங்களில்  கட்டி  வீதிகளில் நடமாடுவதை  தடுப்பதற்கான  உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  திருக்கோவில் பிரதேச சபை  தவிசாளர் சசிகுமார் அறிவித்துள்ளார்.

அத்துடன் 2025.06.05 தொடக்கம் 2026.06.12 ஆம் திகதி வரை திருக்கோவில் மிருக வைத்தியசாலையில் தங்களது  மாடுகளை அடையாளப்படுத்தி அவற்றினை உடனடியாக சட்டரீதியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் அவ்வாறு பதிவு செய்யப்படாத கட்டாக்காலி மாடுகள்  பிடிக்கப்பட்டால்   10 ஆயிரம்  ரூபாவுக்கும் அதிகமான தண்டப்பணம் அறவிடப்படும் என்பதையும் 03 நாட்களுக்குள் மீட்க்கப்படாத கட்டாக்காலி மாடுகள்  அனைத்தும் சட்டரீதியாக அரச உடமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 


வி.சுகிர்தகுமார்                   


 திருக்கோவில் பிரதேச சபைத்தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் பதவியேற்றதன் பின்னர் இன்று முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைவாக பிளாஸ்டிக் மூலமான மாசுபடுத்தலை முடிவுக்கு கொண்டுவரல் எனும் கருப்பொருளுக்கமைய உலக சுற்றாடல் தினம் வாரத்தின் இறுதி நாளான இன்று 05ஆம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதனை முன்னிட்டு பெரிய முகத்துவாரம் களப்பினை அன்மித்த களப்பு பூங்கா மற்றும் அதனோடிணைந்;த, கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்று(05) இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில்; இடம்பெற்ற பூங்கா மற்றும் அதனோடிணைந்;த, கரையோரப் பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் பிரதேச சபை உபதவிசாளர் செயலாளர் சீ.திவாகரன் வைத்தியர் மோகனகாந்தன் பிரதேச செயலக அதிகாரிகள் பொலிசார் பிரதேச சபை ஊழியர்கள் அரச திணைக்களங்கள், பொது சமூக நலன் தன்னார்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்களால்; பாவனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கழிவுகளாக ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் யாவும் அகற்றப்பட்டுச் சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அகற்றப்பட்ட கழிவுப்பொருட்கள் பிரதேச சபை வாகனங்களின் உதவியுடன் கழிவுகள் அகற்றப்பட்டன.
இதேநேரம் களப்பின் கரையோரங்களில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதன் பின்னராக கருத்து தெரிவித்த தவிசாளர் புவி வெப்பமாதலை தடுக்கும் நடவடிக்கையின் பிரகாரம் பிளாஸ்டிக் பாவனையை தடுத்து சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையோடு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இதற்காக அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 


நூருல் ஹுதா உமர்


வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை நிலைப்படுத்தும் நோக்கில் கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தினால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று (04) கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை கால்நடை வைத்தியர்  திருமதி நிவர்த்திகா அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அம்பாறை காரியாலய பிரதிப்பணிப்பாளர் எம்.ஜே. நௌசாத் ஜமால்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட 50 பண்ணையாளர்களுக்கு தலா 16 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கோழிக்குஞ்சிகளை வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண குறிப்பிட்ட மேம்பாட்டு மானியம் (PSDG) நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட இந்த உதவி மூலம் பண்ணையாளர்கள் பயனடைந்துள்ளனர். இந்நிகழ்வில் கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 



நூருல் ஹுதா உமர்


கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான கலந்துரையாடலுக்காக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமைத்துவ சபையும், உச்ச பீடமும் நாளை கொழும்பில் கூடவுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து வெளியிடுகையில், சமீபத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எங்களை சந்தித்து கலந்துரையாடினோம். அத்துடன் கொழும்பு மாநகர முன்னாள் மேயர் திருமதி ரோஸி சேனநாயக்க உடனும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க வையும் சந்தித்து கலந்துரையாடினோம். அதுபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.

எல்லோருடனும் எங்களுடைய கொள்கைகளை விளக்கியுள்ளோம். யாருக்கு ஆதரவளிப்பது என்பதை நாளை கூடி தீர்மானிக்க உள்ளோம் என்று  தெரிவித்தார்.
 

 


நூருல் ஹுதா உமர்


தரம் 6 மற்றும்  7 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு HPV தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் இன்று 2025.05.08 இடம் பெற்றது.

இதன்போது 1 தொடக்கம் 5 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அப்பாடசாலையின் ஆசிரியர்களுக்கு தொற்றா நோய் தடுப்பு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இச் செயற்பாடானது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.  மதன் அவர்களின்  தலைமையில் இடம் பெற்றதுடன் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,  மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது, பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள்  மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


( வி.ரி. சகாதேவராஜா)


 மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின்  ஏற்பாட்டில் வருடாந்தம் சிறப்பான முறையில்  மேற்கொள்ளப்படும் இரத்ததான நிகழ்வானது  தொடர்ச்சியாக இவ்வருடமும்  8வது தடவையாக ஒழுங்கு செய்து இன்று திங்கட்கிழமை நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன்   இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வானது இன்று திங்கட்கிழமை (21.04.2025) மு.ப  8.30 மணி தொடக்கம்  பிரதேச செயலாளர்  உ. உதயஶ்ரீதர் தலைமை  மற்றும் வழிகாட்டுதலில்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

விளையாட்டு கழகங்கள், இளைஞர்  கழகங்கள் , கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள் என நூற்றுக்கும்  அதிகமானோர் இவ் உன்னதமான நிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


அடிக்கடி யானை தாக்குதலை சந்தித்து வரும் சம்மாந்துறை கல்வி வலய வாங்காமம் கமு/சது/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) சுற்றுமதில் நிர்மாணிக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 45 லட்சம் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுமதில்  நிறைவுப்பணிகளை கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் பார்வையிட்டார்.

கமு/சது/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் யூ.எல். பயாஸ் அவர்களிடம் பாடசாலை கல்வி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் மாணவர்களின் கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள், ஆளணி மற்றும் மௌதீக வள விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தியதுடன் குறைகளை நிபர்த்திக்க தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கினார்.

மேலும் இவ் விஜயத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் ஏ.ஜீ.எம். அன்வர் நௌஸாத், மக்கள் தொடர்பாடல், ஊடக விவகார செயலாளர் நூருல் ஹுதா உமர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பாடசாலை சமூகத்தினர், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இப்பாடசாலைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 3.5 லட்சம் பெறுமதியான அலுவலக தளபாடங்கள், இயந்திரங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


வி.சுகிர்தகுமார்      


 அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமம் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயம் நேற்று(15) மாலை திறந்து வைக்கப்பட்டது.
ஆலைடியவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட 10ஆம் வட்டார வேட்பாளர் கே.இராஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற காரியாலய திறப்பு விழாவில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் வேட்பாளருமான ஆர்.ரதீசன் ஆலய முன்னாள் தலைவர் ம.கந்தசாமி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் இணைந்து கட்சி காரியாலயத்தை திறந்து வைத்தனர்.
இதன்போது கட்சியின் இணைப்பாளர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டை நேசிக்கும் நாம் நாட்டினை சிறப்பாக வழிநடத்திவரும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதுடன் ஆளுமைமிக்க நேர்மையானவர்களை கொண்ட பிரதேச சபையினை உருவாக்கி  அதனூடாக உண்மையான அபிவிருத்தியை அடைய அனைவரும் முன்னின்று உழைக்கவேண்டும் என கட்சியின் இணைப்பாளர் இங்கு கோரிக்கை விடுத்தார்.
ஆலையடிவேம்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மூன்று கட்சிகள் மற்றும் சுயேட்சை குழு ஒன்று அடங்கலாக நான்கு தரப்பினர் போட்டியிடுகின்றனர்.
10 வட்டாரங்களில் இருந்து வட்டார ரீதியாக 10 உறுப்பினர்களும் மேலதிக ஆசனங்கள் 06 அடங்கலாக 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மொத்தமாக 76 பேர் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


பாறுக் ஷிஹான்
 
சம்மாந்துறை பிரதேச சபை சுயேட்சை குழு 3 அலுவலகம் திறந்து வைப்பு


2025  ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபை சுயேட்சைக் குழு 3 அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இரவு உத்தியோக பூர்வமாக சிப்கா சமூக சேவை அமைப்பின் ஸ்தாபகரும் சுயேட்சைக் குழு தலைவருமான எஸ்.எல்.ஏ நஸார்  மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் முதன்மை வேட்பாளருமான யு.எல்.அஸ்பர் ஜே.பி  ஆகியோரால்  நாடா வெட்டி  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது நிகழ்வில்    கிறாஅத் ஓதப்பட்டதுடன் அறிமுக உரையினை இச்சுயேச்சை குழுவின் ஊடக செயற்பாட்டாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர்  எம்.சி. அஹமட் புர்கான்  ஜே.பி  மேற்கொண்டார்.


பின்னர் தொடர்ந்து வேட்பாளர் அறிமு கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று ஸலவாத்துடன் நிகழ்வ யாவும் நிறைவடைந்தன.

மேலும் சம்மாந்துறை பிரதேச சபையில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக வானொலி பெட்டி விளங்கும் என சம்மாந்துறை பிரதேச சபை சுயேட்சைக் குழு 3 வின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

சம்மாந்துறை மண்ணும்இ மக்களும் இன்று ஏதிலிகளாக உள்ளார்கள். காரணம் கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட கட்சிக்காரர்கள் எமது மண்ணையும்இ மக்களையும் தொடர்ந்தேச்சையாக ஏமாற்றி வந்துள்ளார்கள். இனியும் ஏமாற்ற காத்திருக்கின்றார்கள்.எமது மண் மாட்சி பெற வேண்டும். எமது மக்கள் மீட்சி பெற வேண்டும். அதற்கு காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட கட்சிக்காரர்களின் சூழ்ச்சிகளில் இருந்து விடுபட வேண்டி உள்ளது. ஆகவேதான் எமது மண்ணையும்இ மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற சமூக நோக்கத்தை முன்னிறுத்தி பிரதேச சபைக்கு சுயேச்சையாக போட்டியிடுகின்றோம்.சம்மாந்துறை தொகுதி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய கூடிய அளவுக்கு வாக்கு வலிமையை கொண்டது. ஆனால் சம்மாந்துறை தொகுதிக்கு அண்மைய காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்ச்சியாக கிடைப்பதாக இல்லை.

ஆனால் எமது மக்களின் வாக்குகளை வைத்து வேறு தொகுதிகளை சேர்ந்தவர்கள் எம். பிகளாக வருகின்றனர். அவர்கள் எமது மண்ணையும்இ மக்களையும் கண்டு கொள்வதே இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மாற்றம் ஒன்றே முன்னேற்றத்துக்கான வழி.அந்த அரசியல்வாதிகள்தான் நாம் இன்று தேர்தல் கேட்பதற்கான காரணம் ஆவர். சம்மாந்துறை பிரதேச சபையில் இருந்து மாற்றம் உருவாக வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. சம்மாந்துறை பிரதேச சபையில் ஆட்சியை தீர்மானிக்கிற சக்தியாக வானொலி பெட்டி விளங்கும்.

நாட்டு மக்கள் ஒருமித்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் திசைகாட்டிக்கு வாக்களித்தார்கள். அதே போல சம்மாந்துறை பிரதேச மக்கள் ஒருமித்து வானொலி பேட்டிக்கு வாக்களிக்கின்ற பட்சத்தில் எம்மால் பிரதேச சபையில் ஆட்சியை உருவாக்கி நடத்தவும் முடியும் என சுயேச்சை குழு - 03 இன் தலைமை வேட்பாளர் சமூக சேவையாளர் எஸ். எல். ஏ. நஸார் தெரிவித்தார்.

எமது சம்மாந்துறை மண்ணினதும் அதன் மக்களினதும் பூர்வீகம்இ இறைமைஇ பண்பாடுஇ கலைஇ கலாச்சாரம்இ நாகரீகம்இ போன்ற இன்னோரன்ன எமது மண்ணுக்கே உரித்தான தனித்துவ அடையாளத்தை நமது எதிர்கால சந்தியிளருக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பும் தார்மிகக் கடமையும் என்றென்றும் நமக்கான பணியாகும்.'மாற்றமில்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லைஸி' என்ற துார நோக்குடனான புதிய அரசியல் கலாச்சாரத்தை நாம் உருவாக்கி அதற்காக அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டியுள்ளது.கடந்த பொதுத் தேர்தலில் மைது சம்மாந்துறை   கற்றுக்கொண்ட பாடமும் பெற்றுக் கொண்ட தோல்வியும் நம்மை வழிநடாத்திய பேரினவாத கைக்கூலிகளுக்கும் தனித்துவ அரசியல் பேசிய தரகர்களுக்கும் இப்பிரதேச சபைத் தேர்தலின் மூலமாக நிச்சயமாக பாடம் கற்பித்தேயாக வேண்டும்.அந்தவகையில் சமூக சிந்தனையும்இ துணிச்சலும்இ ஆளுமை மிக்கவர்களையும் இப்பிரதேச சபைத் தேர்தலில் களமிறக்கி இருக்கின்றோம். உங்கள் ஆதரவை எமக்கு வழங்குகின்ற போது எம்மால் அதனை திறன்பட செய்துகாட்ட முடியுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது என சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் முதன்மை வேட்பாளருமான யு.எல்.அஸ்பர் ஜே.பி குறிப்பிட்டார்.


சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியை நாம் கைப்பற்றினால் கொத்தராத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து துாரநோக்குடனான வேலைத்திட்டங்களை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்.சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிகாரிகளை தனது கை பொம்மைகளாக வைத்திருந்த எமது முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் அதிகார துஷ்பிரயோகத்திற்குட்பட்ட அரச காணிகள் இனங்காணப்பட்டு அவற்றை நிரந்தர வதிவிடம் இல்லாமல் ஒத்துக்குடியாட்டமாக வாழ்து கொண்டிருப்பவர்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஊடாக மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் குடியிகுப்புக் காணிகள் மற்றும் நிரந்தர வீடுகளை அமைந்துக் கொடுப்பதற்கான வேலைத் திட்டம் முன்னெடக்கப்படும்.

செந்நெல் கிராமத்தில் அரை குறையாக தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள பொதுச் சந்தையை பூரணமாக அமைத்து பொது மக்களிடம் கையளித்தலுடன் அதிக விலை கொடுத்து மருந்துப் பொருட்களை வாங்குவதற்கு அவதியுறும் மக்களுக்காக  அரச மருந்தகமான (ஒசுசல என்ற அரச மருந்து விற்பனை நிலையத்தினை சம்மாந்துறையில் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள எம்மால் நடவடிக்கை எடக்கப்படும்.முழு இலங்கையிலும் போதையற்ற பிரதேசம் சம்மாந்துறையே என்ற நன்மதிப்பை எமது மண்ணுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளோம் என  சுயேச்சை குழுவின் ஊடக செயற்பாட்டாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர்  எம்.சி. அஹமட் புர்கான்  ஜே.பி தெரிவித்தார். 


 மாளிகைக்காடு செய்தியாளர்


காரைதீவு பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான  எம்.எச்.எம். இஸ்மாயில் தலைமையில் நேற்று (12) மாளிகைக்காட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், காரைதீவு பிரதேச சபையின் மரச்சின்ன வேட்பாளர்களான எம்.எச்.எம். நாசர், எப்.எம்.ரௌபி, பட்டியல் வேட்பாளர்கள் மற்றும் மாளிகைக்காடு பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


 நூருல் ஹுதா உமர்


கடந்த சுனாமி பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட மருதமுனை பிரான்ஸ் சிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள உள்ளக வீதிகள் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்றதாக குண்டும், குழியுமாக இருந்ததை தொடர்ந்து அந்த வீதிகளை கொங்கிரிட் இட்டு செப்பனிட முன்னாள் இராஜாங்க அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டி-100 திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பிரதேச உள்ளக வீதிகள் பல  கொங்கிரிட் வீதிகளாக புனரமைக்கப்பட்டுள்ளது.

மேலும்,மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத் திட்டத்தின் மேட்டுவட்டை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மையவாடி வீதி பாவனைக்கு பொருத்தமற்றதாக மக்களால் சுட்டிக்காட்டியதையடுத்து அவ்வீதியை சீரமைக்க  முன்னாள் இராஜாங்க அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டி-100 திட்டத்தின் கீழ் சுமார் 5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவ்வீதியின் புனரமைப்பு பணிகளும் மக்களின் பாவனைக்கு ஏற்றாற்போல சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் தனது இணைப்பாளர்கள் சகிதம் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது அப்பிரதேச மக்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் சேவைக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

 


மாற்றுக் கட்சிக்காரர் சபையைக் கைப்பற்றினால் நிதி பெற முடியாது என ஆளும் தரப்பினர் பொய்பிரச்சாரம் செய்கிறார்கள் : வேட்பாளர் கே.எல். சமீம்



 ( வி.ரி.சகாதேவராஜா)


"ஒரு பிடி மண் – விவசாய நிலத்துக்கு” வளமான சிறுபோகம் வளமான எதிர்காலம் – 2025 எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட, விவசாய உற்பத்தி முயற்சியாளர்களை ஒன்றிணைக்கும் சந்தை நாள் நிகழ்வு காரைதீவு விவசாய விரிவாக்கல் அலுவலகத்தில் நேற்று  சனிக்கிழமை (05) இடம்பெற்றது.

விவசாய ஊக்குவிப்பு செயற்றிட்டத்திற்கு அமைவாக, அம்பாறை பிரதி விவசாயப் பணிப்பாளர் அதிகார பிரதேசங்களில், 
அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தில் பணிபுரியும் மகளிர் விவசாய விரிவாக்கல் பிரிவினால் நடாத்தப்பட்டு வருகிறது .

அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் (மாகாண ) கலாநிதி கே.ஏ.கே.எஸ் லக்மால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், நிந்தவூர் வலய உதவி விவசாயப் பணிப்பாளர் ருக்மன் சோமரத்ன,
காரைதீவு விவசாய விரிவாக்கல் நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி பி. பிரதீப் மற்றும் அம்பாறை மாவட்ட மகளிர் விவசாய விரிவாக்கல் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி ஜீவிதா 
 சம்மாந்துறை, தம்பிலுவில், அட்டாளைச்சேனை வலயங்களுக்கான உதவி விவசாயப் பணிப்பாளர்கள், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி  மற்றும் விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் மற்றும் கமநல சேவை உத்தியோகத்தர் கரையோர விவசாய விரிவாக்கல் நிலையங்களுக்கு உட்பட்ட விவசாய உற்பத்தி முயற்சியாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கலந்து கொண்ட விவசாய உற்பத்தி முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


வி.சுகிர்தகுமார்        


 அக்கரைப்பற்று தூய நல் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இன்று (23) இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
தூய நல் ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் அருட்தந்தை ஜெய நிக்சன் தலைமையில்  பங்கு தூய வின்சன் டி பவுல் சபையின் அனுசரணையுடனும்,  பங்கு இளைஞர்கள் மற்றும்  துனை பங்கு இளைஞர்களும் இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று காலை இடம்பெற்ற வழிபாட்டினை தொடர்ந்து தூய நல் ஆரோக்கிய அன்னை ஆலயம் மற்றும் துணை பங்கு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் உறுப்பினர்களால் நாம் தவக்கால ஒறுத்தல் முயற்சியாக, நடைபெற்ற இரத்ததான முகாமில் பெருந்திரளானவர்கள் கொண்டு இரத்தத்தினை தானமாக வழங்கி வைத்தனர்.
வைத்தியசாலைகளில் நிலவும் இரத்த தட்டுப்பாடு மற்றும் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் எனும் தொனிப்பொருளுக்கமைய கலந்து கொண்டவர்கள் குருதிக்கொடையினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி. சகாதேவராஜா)


எமது தமிழினத்தின் உரிமை மற்றும் இருப்பை அழிக்கும் அபிவிருத்தி  என்ற மாயை எமக்கு தேவையில்லை. தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் .

இவ்வாறு ,இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் வேட்பாளரும் ,காரைதீவு முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  இன்று (22) சனிக்கிழமை காரைதீவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்  தெரிவித்தார் .

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ..

நடைபெற உள்ள உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி வீட்டு சின்னத்தில்  வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது.

 அம்பாறையில் உள்ள 7 உள்ளூராட்சி மன்றங்களில் 6 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் எந்த இடத்திலும் நிராகரிக்கப்படவில்லை.

 சபைகளிலும் எமது கட்சி ஆட்சி அமைக்கும். சில சபைகளில் தமிழ் பேசும் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க இருக்கிறோம்.


தேர்தல் வந்தால் அபிவிருத்தி என்றுகூறி பணத்தின் பின்னால் அலையும் கொள்கை இல்லாதவர் நம் மத்தியில் இருக்கிறார்கள்.
 அவர்கள் சொந்த ஊரையே காட்டிக் கொடுப்பார்கள். அவர்களுக்கு காரைதீவில் இடமில்லை. காரைதீவு படித்த மண் வீரம் செறிந்த மண். இங்கு தேர்தல் வியாபாரிகளுக்கு இடமில்லை.

காரைதீவில் எமக்கு போதிய ஆசனம் கிடையாது விட்டால் எமது இருப்பு பாதிக்கப்படும் .
இதற்கு எந்த ஒரு தமிழ் மகனும் துணை போக மாட்டான் .
எனவே தமிழ் மக்கள் அனைவரும் தாய்க் கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்.

தமிழன் தமிழரசு கட்சியின் பக்கம் சாயாமல் வேறு கட்சியின் பக்கம் எதற்காக சாய்
கிறான் என்ற உண்மை இந்த பணம் தான்.

இதனை மக்கள் அறிந்தும் அறியாமல் இருக்கின்றீர்களா என்னவென்பது உண்மைக்கு புறம்பாகவே உள்ளது.
 நான் நினைக்கின்றேன் தமிழரசு கட்சியின் பக்கம் சாய்ந்தால் பணம் கிடைக்காது. அதன் அடிப்படையில் மாற்றுக் கட்சியின் பக்கம் சாய்ந்தால் நிறைய பணம் கிடைக்கும் என்பதற்காக .
மக்களை ஏமாற்றும் கூட்டம் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது .நீங்கள் உதாரணமாக சிந்தித்துப் பாருங்கள் நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கட்சியின் பின்னால் முக்கியமான பெரும் தலைகள் கூட்டம் கூட்டமாக மக்களின் மண்டையை கழுவி ஏமாற்றுகிறார்கள். பொக்கட்டை நிரப்புகிறார்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 88 வாக்குகளை எமது தமிழ் மக்கள் அளிக்காவிட்டிருந்தால் எமக்கு ஆசனமே இல்லை. அந்த நிலைமை உள்ளாட்சி சபையிலே கடைசி வரைக்கும் வராது இவர் தமிழ் மக்கள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

 அந்த வகையில் தமிழரசுகட்சி எந்த பணத்திற்காகவும் எவர்பக்கமும் சாயவில்லை .தமிழ் இனத்தின் விடிவுக்காக கொள்கை மாறாமல் திடமாக நிற்கின்றார்கள். உண்மையில் தமிழ் மக்களாகிய நாங்கள் எப்பயாவது ஒரு கணம் ஆலோசித்து பார்த்ததுண்டா?
 தேர்தல் முடிந்தால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் முடிந்துவிட்டது. பாமர மக்களை ஏமாற்றும் மாற்றுக் கட்சிக்கு துணை போகும் ஆதரவாளர்கள் பணத் தொகையை பெற்றுக்கொண்டு காலாகாலம் தொட்டு ஏமாற்றி வருகின்றார்கள். இதில் பல குற்றச்சாட்டுகள் தமிழரசு கட்சியின் மீது வைக்கின்றார்கள். செய்த தவறுகள் அனைத்தும் அவர்களே.

எனவே தேசிய சிங்கள கட்சிகளுக்கு எந்த விதத்திலும் நம் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்பதனை உள்ளூராட்சி சபையிலே காட்ட வேண்டும் . வடக்கு கிழக்கில் அனைத்து தமிழ் சபைகளையும் தமிழரசுக் கட்சியே ஆட்சி அமைக்கும் .இது நம்பிக்கை
என்றார்.

 


(பாறுக் ஷிஹான்)


கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த  பாரிய  படகினை கடும் போராட்டத்தின்  மத்தியில் கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள் அணியினர்  மீட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை  (18) காலை இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த  பாரிய  படகு ஒன்று திடிரென கடம் காற்று காரணமாக   கடலில் மூழ்கியிருந்தது.இச் சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய கடல் பகுதியில்  இடம்பெற்றிருந்ததுடன்  குறித்த பாரிய  படகினை மீட்டு  கடற்கரைப் பகுதிக்கு  இழுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் எடுக்கப்பட்டிருந்தன.

குறித்த  படகானது கடற்கரையில் நங்கூரமிட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு  இயந்திரம் உட்பட வலைகளுடன்  கடலில் விழுந்து மூழ்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள்  எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான்   குறிப்பிட்டனர்.இவ்வாறு மூழ்கிய    படகு சுமார் 65 லட்சத்துக்கும் பெறுமதியானதுடன் இப்படகு  கல்முனை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.

தொடர்ந்து  கடற்கரைப்பகுதில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ள குறித்த படகினை மீட்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இலங்கை கடற்படையினரின் உதவியும் கோரப்பட்ட பொதிலும் அவர்களின் உதவி கைகூடவில்லை.இருப்பினும் நோன்புடன் கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணியினர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பாரிய படகினை மீட்டு கடற்கரை பகுதிக்கு மாலை  இழுத்து வந்தனர்.பின்னர் கரைக்கு இழுத்து வரப்பட்ட குறித்த படகு கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை அப்பகுதி மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
 
மேலும் குறித்த படகில்  பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் வலைகள் உட்பட பல உபகரணங்கள் இருந்த நலையில் அவை  சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


 பாறுக் ஷிஹான்


உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள்ள  தேர்தல் அலுவலத்தில் இன்றைய தினம்(18)  அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றன.

இதற்கமைய உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பாக காரைதீவு பிரதேச சபை வேட்பு மனுக்களுக்கான கட்டுப்பணம் இன்று (18) அம்பாறை மாவட்ட  தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது.

இதன் போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் கலாநிதி ஹக்கீம் செரீப் உட்பட  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.  அகுவர்  ஆகியோர் இணைந்து கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.

மேலும் எதிர்வரும் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் தமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் சரீப் ஹக்கீம் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தார்.

 


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்ட அரிசி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.

கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவு அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு கடந்த (16) ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சங்கத்தின் தலைவர் ஏ.எல்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில்  ஆதம்பாவா எம்.பி.தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் நெல் மற்றும் அரிசி உற்பத்தியில் அம்பாறை மாவட்டம் பிரதான பங்கு வகிக்கிறது. நெல்லை அரிசியாக மாற்றி இந்தப் பிராந்தியத்துக்கும், நாட்டுக்கும் வழங்கும் அரிசி உற்பத்தியாளர்களின் பணி பாராட்டத்தக்கது.

நாட்டில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் சகல வழிகளிலும் பெரும் பங்களிப்புக்களை செய்து வருகின்றனர். அவர்கள் நாட்டுக்குரிய வர்த்தகர்களாக மாத்திரமில்லாமல் உற்பத்திகளை வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடியவர்களாக மாற வேண்டும்.

இன்னும் ஓரிரு வருடங்களில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்று எமது நாடும் மாற்றமடையும்.இதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா தெரிவித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.