Showing posts with label Eastern Sri Lanka. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை மாநகர சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் விரிவான டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் இன்று (17) முன்னெடுக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு உதவியாளர்களின் பிரசன்னத்துடன் பல வீடுகள் பார்வையிடப்பட்டு, நீர் தேங்க கூடிய இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் அதேவேளையில் நிவர்த்தி செய்யப்பட்டது.
 
மேலும், டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு, சுத்தமான சூழலை பேணுவதின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

 


நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனைக்கமைவாகவும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஏற்பாடு மற்றும் தலைமையிலும் Unicef நிறுவனத்தின் அனுசரனையுடன் “தடுப்பூசி ஏற்றும் தயக்கத்தை நீக்குதல்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (11) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று கருத்தரங்கில், கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.றிஸ்னி முத்து, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. சிவசுப்ரமணியம், மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர், மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது, பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற்கிச்சையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், சமயத் தலைவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது டாக்டர் எம்.ஐ.றிஸ்னி முத்து அவர்கள் உரையாற்றுகையில், “சமீபகாலங்களில் தடுப்பூசி பற்றிய தயக்கம் எமது பிரதேசத்தில் அதிகரித்து வருவதால், தடுப்பூசி ஏற்றும் செயல்பாடுகள் குறைந்து காணப்படுகின்றன. இதனை மாற்றுவது நம் அனைவரின் கடமை. தடுப்பூசி பற்றிய பொது மக்களின் சந்தேகங்களுக்கு சரியான விளக்கங்களை வழங்கி, ஒரு தடுப்பூசி ஆயிரம் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்பதை மனதில் கொண்டு அனைவரும் தடுப்பூசிகளைப் பெறுதல் மிக அவசியம்” என வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சமயத் தலைவர் அவர்கள் உரையாற்றுகையில், “தடுப்பூசி ஏற்றுவது மதத்தின் போதனைகளுக்கு எதிரானது அல்ல, மாறாக மனித உயிர்களைப் பாதுகாக்கும் கடமையாகும். எனவே அனைவரும் தடுப்பூசிகளை உறுதியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என மதம் சார்ந்த தெளிவான கருத்துக்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. சிவசுப்ரமணியம் அவர்கள் உரையாற்றுகையில், “2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 100% தடுப்பூசி பெற்றவர்களின் விகிதம் காணப்பட்ட நிலையில், 2019க்குப் பின்னர் அது படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனை மீண்டும் உயர்த்துவது அனைவரின் பொறுப்பு. பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.

மேலும், தடுப்பூசி விழிப்புணர்வு தொடர்பான குழு செயல்பாடுகளையும் நடத்தி பங்கேற்பாளர்களின் ஈடுபாட்டை அதிகரித்தார். அதனைத் தொடர்ந்து காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீர் அவர்கள் உரையாற்றுகையில், “தடுப்பூசிகள் நோய்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு தலைமுறையின் ஆரோக்கியத்தையும் உறுதிசெய்கின்றன. சமூகத்தில் பரவி வரும் தவறான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களை மாற்றுவதற்கு ஒவ்வொரு சுகாதார பணியாளரும் முன்னிலையாக வேண்டும். பெற்றோர்களைச் சென்றடையும் வகையில், சுலபமான மொழியில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பரப்புவது மிகவும் அவசியம்” எனவும் வலியுறுத்தினார்.

இறுதியாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்கள் உரையாற்றுகையில், “தடுப்பூசி என்பது ஒரு குழந்தையின் எதிர்காலத்தையும் சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் ஒரு முக்கியமான கருவி. தவறான நம்பிக்கைகளை நீக்கி, உண்மையான சுகாதார அறிவை சமூகத்துக்குள் பரப்புவது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்” என வலியுறுத்தியதுடன், அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் துறைகளின் வழியாக பொதுமக்களிடையே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பரப்ப உறுதியெடுத்தனர்.



ஏ.எல்.எம். சபீக் 

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக “டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் செய்தியறிக்கையிடல் காலத்தில் ஊடகச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு” இன்று (01) சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.


இச்செயலமர்வு சட்ட ஊடக மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி சட்டத்தரணி விரஞ்சன ஹேரத் தலைமையில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது ஊடகவியலாளர்களுக்கு ஊடகச் சட்டம், ஊடக ஒழுக்கநெறி, சமூக ஊடக இடுகைகளுக்கான சட்ட விதிகள், ஊடக கண்காணிப்பு சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், நிகழ்வில் பங்கேற்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் மற்றும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைறூஸ், மேலும் வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியர் ரோபர்ட் அன்டனி உள்ளிட்ட வளவாளராக கலந்து கொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.


ஏ.எல்.எம். சபீக்

 


( வி.ரி.சகாதேவராஜா)


உலக வங்கியின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன .  அதேவேளை சாய்ந்தமருதுக்கு தனியான 
அபிவிருத்தித் திட்டம் அமுலாகும்.

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (18) சனிக்கிழமை இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார்.

வித்தியாலய அதிபர் எம் .ஐ.எம். இல்யாஸ்  தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,

2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எங்களது பிராந்தியத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. 

சாய்ந்தமருது பிரதேசத்திற்கென தனியான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொலிவேரியனுக்கான இரும்புப் பாலம், பழைய வைத்தியசாலை வீதிப் பாலம் மற்றும் கடற்கரைப் பாலம் என்பன மீள் நிர்மாணம் செய்யப்படும். கரைவாகு வட்டை வடிச்சல் நீர் வடிந்து ஓடக்கூடிய வகையில் திட்டம் வகுத்து அபிவிருத்தி செய்யப்படும். கரைவாகு வட்டை தரிசு நிலங்களை நிரப்பி குடியிருப்புக்களை அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படும். என்றார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சகல மாணவர்களுக்குமான பரிசில்களை ஆதம்பாவா எம்.பி. வழங்கி மாணவர்களை கெளரவப்படுத்தினார்.

 


வி.சுகிர்தகுமார்     

திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் தம்பிலுவில் மத்திய சந்தைப்பிரதேசத்திலும் இரு பெரும் நிகழ்வுகள் நாளை (14) இடம்பெறவுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தம்பிலுவில் மத்திய சந்தையில் விவசாய உற்பத்தி பொருட் கண்காட்சியும் புதிய விதைகள் அறிமுகம் மற்றும் விற்பனை நிலைய திறப்பு விழாவும் இடம்பெறவுள்ளதுடன் தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச வைத்திய முகாமும் இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த வைத்திய முகாமில் 2000 ஆயிரம் பேர் அளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்களுக்கான காலை உணவு ஏற்பாட்டினை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம் கடந்த காலத்தில் 200 ரூபாய் பெறுமதியான நல்ல பயிர்விதைகளை பெற விவசாயிகள் பெரும் செலவு செய்து பிற நகரங்களுக்கு சென்றதாகவும் விவசாய உற்பத்திகளை பெறுவதற்கான விற்பனை சந்தை திறப்பதன் மூலம் விவசாயிகளின் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



( வி.ரி.சகாதேவராஜா)
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச, அரச சார்பற்ற அலுவலர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பில் தௌிவூட்டும் பயிற்சி பட்டறையானது பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கந்தசாமி அருட்பிரசாந்தன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டு அம்பாறை மாவட்ட மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் எம் .ஆஸாத் வளவாளராக கலந்து கொண்டார் .

மத்தியஸ்தம் தொடர்பான விளக்கம் அதன் நடைமுறைகள் மற்றும் மத்தியஸ்த சபை மூலமாக கையாளப்படும் பிணக்குகள் மத்தியஸ்த சபையின் வளர்ச்சி என பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் பொதுமக்களுக்கான தௌிவூட்டல்களை வழங்கினர்.

அத்துடன் பயிற்சி செயலமர்வின் மூலம் மத்தியஸ்தம் தொடர்பில் முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பாகவும் பயிற்சி வழங்கப்பட்டதுடன் எதிர்கால சமுதாயம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.



 பாறுக் ஷிஹான்


“மனிதாபிமானத்திற்காக – ஒற்றுமை” “Charity for Humanity – Start Help Each Other” என்ற தலைப்பில் அங்குரார்ப்பன நிகழ்வு சனிக்கிழமை(30) மாலை கல்முனை மையோன் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வை பெண்கள் படை – இலங்கை (Women’s Corps – Sri Lanka) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. சமூகத்தில் அன்பு, ஒற்றுமை மற்றும் உதவி மனப்பான்மையை ஊக்குவித்து, உதவி தேவைப்படுவோருக்கு தன்னார்வ பணி மற்றும் சமூக சேவை வழங்குவதை நிகழ்வின் முக்கிய நோக்கமாக குறிப்பிடப்பட்டது. முன்னிலை ஏற்பாட்டை ஏ.எவ். றிகாஷா ஷர்பீன் செய்திருந்தார்.


நிகழ்வில் வரவேற்புரை மற்றும் அமைப்பின் அறிமுக உரையை – Women's Corps Sri Lanka தலைவி றிகாஷா ஷர்பின் நிகழ்த்தினார். இங்கு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவரும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியுமான டாக்டர் சனூஸ் காரியப்பர், கல்முனை சட்டத்தரணி சங்கத்தின் தலைவி சட்டத்தரணி ஆரிக்கா சாரிக் காரியப்பர், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ், சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி.றிப்கா அன்சார், ஓய்வுபெற்ற ஆசிரியை, மௌலவியா எம். எஸ். எஸ். நிஸ்ரினா மற்றும்  சாய்ந்தமருது பிரதேச செயலக திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நன்றி உரையை Women's corps Sri Lanka அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.முபிதா நிகழ்த்தினர். நிகழ்வின்போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பிரதி மாகாணப் பணிப்பாளர் எம். எம். முனாஸ், சிலோன் மீடியா போரத்தின்  தலைவர் கலாநிதி றியாத் எம். மஜீத் உள்ளிட்ட பலரும் பங்கு கொண்டிருந்தனர்.


இங்கு உரையாற்றிய றிகாஷா ஷர்பீன்,  எமது தொண்டு நிறுவனத்தின் அடிப்படை நோக்கம் மனித குலத்திக்கு உதவுவதே இதில் குறிப்பாக பெண்களை வலுவூட்டுவது பிரதானதாகும்.

மேலும் பெண்கள் கல்வியிலும் அரச தொழில் நியமனங்களிலும் அதிகரித்து காணப்படும் இத்தருணத்தில் சமூக செயற்பாடுகளில் எமது பிராந்தியத்தில் காணப்படுகின்றது. பெண்களின் வகிபாகம் குறைவாகவே எதிர்காலத்தில் இதனை கருத்திற்கொண்டு பெண்கள் அவர்களிடமுள்ள கல்வி, திறமை, ஆளுமை என்பவற்றை தமது சமூகத்திற்காக பயன்படுத்தக் கூடியவாறு மட்டுமல்லாமல் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவராக மாற்றுவதற்கான அடித்தளத்தினை Women's Corps Sri Lanka எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் இன்று இடுகின்றோம்.

இந்த தொண்டு நிறுவனம் இனம், மதம் பாராது பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக செயற்படும் என்பதோடு பெண்களுக்கான நீதியை நிலைநாட்டப்பாடுபடும். என்றும் தெரிவித்தார்.

மேலும் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்குவதும் எமது செயற்பாடுகளில் ஒன்றாகும் அதனடிப்படையில் பெண்கள் குடும்ப ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை உருவாக்கவுள்ளோம். மேலும் ஆத்மீக செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம். இதன் மூலமே சமூக மாற்றங்களை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வரமுடியும் என்பது எங்களது நிலைப்பாடாகும்.

மேலும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை மக்கள், விதவைகள் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவும் இவ்வமைப்பு செயற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். என்றும் தெரிவித்தார்.
எமது தொண்டு நிறுவனத்தில் இணைந்து செயற்பட ஆர்வமுள்ள பெண்களுக்கு திறந்த அழைப்பினை விடுக்கின்றேன். என்றும் அறைகூவல் விடுத்தார்.


சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவரும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியுமான டாக்டர் சனூஸ் காரியப்பர் தனது உரையில்,
 
எமது ஊரிலும் சமூகத்திலும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான உதவிகள் சில நேரங்களில் குறைவாகவே உள்ளன. திருமணம் தாமதமாகி விடுவது, பெண்களின் பிரச்சினைகள் பள்ளிவாசல் பதிவுகளில் சரியாகச் சேர்க்கப்படாதது போன்ற குறைகள் உண்டு. இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கவும், பெண்களுக்கு தகுந்த ஆதரவளிக்கவும் இந்த அமைப்பு ஒரு வலிமையான தளமாக அமையும் என்று நம்புகிறேன். என்று தெரிவித்தார்.

இன்றைய சூழலில், எதிர்காலத்தில் அமைப்புகளையும் நிறுவனங்களையும் வழிநடத்தப் போவது பெண்கள்தான் என்பதில் ஐயமில்லை. காரணம், பெண்களே கல்வியில் தொடர்ந்து படித்து முன்னேறுகின்றனர்.

ஆண்கள் பெரும்பாலும் விரைவாக ஒரு குறுகிய காலக் கல்வி முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பெண்கள் பொறுமையுடன் படிப்பைத் தொடர்கின்றனர். அதனால், எதிர்கால துறைத் தலைவர்களாகவும், பொறுப்பான நிர்வாகிகளாகவும் பெண்கள் அதிக வாய்ப்பு பெறுகின்றனர்.

பெண்களை நாம் நம் வாழ்க்கையில் நான்கு முக்கியமான நிலைகளில் சந்திக்கிறோம்:

1. தாயாக – எம்மை வளர்த்து, துன்பங்களைக் கடந்து, சிரமங்களை சகித்துக் கொண்டு உருவாக்குபவர்.
2. சகோதரியாக – நம்மைத் துணை நிற்பவர்.
3. மனைவியாக – வாழ்க்கைப் பயணத்தில் தோழியாக இணைவவர்.
4. மகளாக – குடும்பத்தின் மகிழ்ச்சியையும், எதிர்காலத்தின் நம்பிக்கையையும் தருபவர்.

இந்த நான்கு நிலைகளிலும், பெண்கள் தியாகம், பொறுமை, அன்பு, வலிமை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இருப்பதை நாமறிகிறோம். என்றும் தெரிவித்தார்.

மருத்துவ துறையில் பணிபுரியும் அனுபவத்தால் நான் அடிக்கடி சொல்லும் ஒரு உண்மை உண்டு. சிகிச்சை பெறும் பொழுது ஆண்கள் பல நேரங்களில் அஞ்சுகின்றனர். ஆனால் பெண்கள் அதே நேரத்தில் அமைதியாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருந்து தாங்கிக் கொள்கின்றனர்.

ஒரு மனிதர் என்னிடம் கூறியது: “பெண்கள்தான் உலகிலேயே வலிமையானவர்கள்”

உண்மையிலேயே, மாதந்தோறும் அவர்கள் அனுபவிக்கும் உடல் வலிகள், கர்ப்ப காலத்தின் சிரமங்கள், பிரசவ வேதனைகள், அதற்குப் பிறகான பாலூட்டும் காலம் – அனைத்தும் ஒரு பெண்ணின் தாங்கும் வலிமையையும், அல்லாஹ் அளித்த சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன.

வீட்டிற்குள் பெண்கள் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகள் எண்ணிலடங்கா.

காலை முதலே தொடங்கும் வேலைகள் இரவு வரை ஓயாது தொடர்கின்றன. அதோடு, இன்று பெரும்பாலான பெண்கள் வெளி வேலைகளையும், சமூகப் பணிகளையும் இணைத்துச் செய்கிறார்கள்.

இவ்வளவு கடின உழைப்பையும், தியாகங்களையும் சுமந்து கொண்டிருந்தும், பெண்கள் தங்கள் வாழ்வை மகிழ்ச்சியுடனும், தன்னலமற்ற மனப்பான்மையுடனும் நடத்துகின்றனர்.

இன்று தொடங்கப்பட்ட Women Scope Sri Lanka அமைப்பு, நமது ஊரின் பெண்களுக்கு வலிமையான ஒரு மேடை ஆகும்.
இவ்வமைப்பின் மூலம் பெண்கள் தங்கள் கல்வி, திறமை, சேவை மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டு சமூகத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்வார்கள் என்பதில் எனக்கு உறுதியுண்டு.

இந்த அமைப்பின் வளர்ச்சி தொடர்ந்து நீடித்து, எமது சமூகத்தில் பெண்களின் முன்னேற்றத்தையும், நலன்களையும் நிலைநிறுத்தி, பெரும் பயன்களை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். என்று கூறினார்.

கல்முனை சட்டத்தரணி சங்கத்தின் தலைவி சட்டத்தரணி ஆரிக்கா சாரிக் காரியப்பர் தனது உரையில்; இந்த நிகழ்விற்கான அழைப்பிதழ் எனக்கு கிடைத்தபோது, இது எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது முதலில் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அதனை ஆழமாக ஆராய்ந்தபோது, எமது பிரதேசத்தில் சமூக சேவைக்காக ஒரு புதிய அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது என்பது எனக்கு விளங்கியது. இது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று.

சுனாமி பேரழிவுக்குப் பிந்தைய காலத்தில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு அமைப்புகள் எமது பகுதிகளில் இயங்கின. நானும் ஒரு சர்வதேச அமைப்பில் சட்ட ஆலோசகராகவும், திட்ட முகாமையாளராகவும் பணிபுரிந்த அனுபவம் கொண்டவன். ஆனால் பின்னர் அந்த அமைப்புகளின் நிதி ஆதரவு குறைந்து, பல சேவை அமைப்புகள் மூடப்பட்டன. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களை எங்கு கொண்டு செல்லுவது, யாரின் உதவியை நாடுவது என்ற நிலைமை சமூகத்தில் ஏற்பட்டது.

அவ்வாறான வெற்றிடத்தை நிரப்பும் முகமாக இன்று இந்த சமூக சேவை அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. எமது பிரதேசத்தில் சமூக நலனுக்காக இதுபோன்ற அமைப்புகள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
எமது பிரதேசத்தில் கல்விச்சேவைக்காக பாடுபட்ட முன்னோடி ஆசிரியர்களைப் பற்றி நினைவுகூர விரும்புகிறேன். 

எனது தாயார் மற்றும் றைஹானா டீச்சர் ஆகியோர் கல்முனை முகம்மது மாளிகை கல்லூரியில் முதன்முதலாக பணியாற்றிய பெண்கள் ஆசிரியர்கள். அவர்கள் பிரதேசக் கல்வி முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்துள்ளனர். அதே போன்று இன்று எம்மிடையே ஆளுமையுள்ள அதிபர்கள், மஹ்மூத் பாலிகா  கல்லூரி அதிபரும், மல்ஹார் ஷம்ஸ் மகாவித்யாலய அதிபரும் இருக்கின்றனர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

இன்னும் எமது சமூகத்தில் பல பெண்கள் பலவீன நிலையில் உள்ளனர். அவர்கள் சமூக விழுமியங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனரா, இல்லையெனில் குடும்பச் சூழ்நிலைகளால் தடுக்கப்பட்டுள்ளனரா என்பதை நாம் அறியோம். ஆனால் அவர்களை முன்னேற்றம் அடையச் செய்து, குடும்பங்களின் பிள்ளைகளையும் ஒழுங்கான வாழ்வியலுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் றிகாஷா சர்பீன்  இந்த அமைப்பை துவங்கியிருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
இன்றைய இளைஞர்களின் நிலைமையையும் நாம் கவனிக்க வேண்டும்.

 கல்முனை நீதிமன்றத்தில் அடிக்கடி சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையால் வழக்குகளில் சிக்கிக் கொண்டு மாதக்கணக்கில் விளக்கமறியலில் வைக்கப்படுகின்றனர். சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை போன்ற பகுதிகளில் இரவு பத்து மணிக்குப் பிறகு வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் வேகமாகச் செல்லும் நிலைமை காணப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் அந்த மாணவர்கள் நாளைய சமுதாயத்தின் தூண்கள். ஆனால் அவர்கள் தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்வது சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது.

இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சியில் எமது பள்ளிவாசல்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் இவ்வாறான சமூக சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வாழ்வியல், வாழ்வாதாரம், கல்வி, மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செயல்படும்போது மட்டுமே எமது சமூகத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்க முடியும்.

அவ்வாறு பெண்கள், இளைஞர்கள், மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டுள்ள இவ்வமைப்பு தனது உயர்ந்த குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என அல்லாஹ்வை வேண்டுகிறேன். என்று தெரிவித்தார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தனது உரையில்:

 நான் என் உரையை ஆரம்பிப்பதற்கு முன், ஒரு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன்.
எங்கள் சமூகத்தில் இன்று நம் குழந்தைகளுக்காக அக்கறையுடன் சிந்தித்து, வழிகாட்டி, எங்களைத் தூண்டிவிடக்கூடிய மருத்துவர்கள், சட்டத்தரணிகள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் இருக்கிறார்கள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
ஆனால், அதே சமயம் ஒரு சிந்தனை எழுகிறது.

எங்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் எங்கிருந்து தொடங்குகின்றன?
நாம் கல்வியளித்தாலும், வழிநடத்தினாலும், இன்னும் ஏன் தடைகள் இருக்கின்றன?
இன்றைய சூழலில், நவீன ஊடகங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
எங்கள் பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகள், கல்வியிலும், எதிர்கால இலக்குகளிலும் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், அதிகப்படியான கைப்பேசி (மொபைல்) பயன்பாட்டுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

இதன் விளைவாக, அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் நிலை உருவாகிறது.
நான் பாடசாலையில் சந்தித்த ஒரு சம்பவத்தை பகிர விரும்புகிறேன்.
ஒரு பெற்றோர் தமது பிள்ளைக்காக ஒவ்வொரு நாளும் புதிய கைப்பேசியைக் கொடுத்து வந்தார். அந்தப் பிள்ளை, பாடசாலை வளாகத்திலேயே மறைந்து கைப்பேசியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

இதைத் தெரிந்தபோது, நான் பெற்றோரை அழைத்து சந்தித்தேன். ஆனால், பெற்றோர்கள் “எங்கள் பிள்ளை கேட்டதை வாங்கித் தரவேண்டும்” என்ற தவறான எண்ணத்தில் இருந்தார்கள். அந்த 

பிள்ளைக்கு உண்மையில் பயன் கிடைக்கிறதா என்று யாரும் சிந்திக்கவில்லை.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது:

நாம் பெற்றோராக, ஆசிரியராக, சமூகமாக — நம் பிள்ளைகளின் வாழ்க்கையை நாம் காப்பாற்றுகிறோமா? அல்லது அழித்துவிட்டோமா?

முன்னோர்கள் காலத்தில், கல்வி என்பது பல தியாகங்களின் மூலம் கிடைத்த ஒன்று.

எங்கள் மூத்தவர்கள் சொன்னது போல, மாணவிகள் வண்டிகளில் மறைத்து கொண்டு செல்லப்பட்டு கல்வி கற்ற காலங்கள் இருந்தன. இன்று பாடசாலைகள்  எங்களது வீட்டு வாசற்படியில் இருக்கின்றன. அனைத்தும் எளிதாகக் கிடைக்கும் காலம் வந்துவிட்டது.
ஆனால், அந்த அரிய வாய்ப்பை எங்கள் பிள்ளைகள் மதிக்காமல், நவீன வசதிகளில் மூழ்கி தங்களது எதிர்காலத்தை அழித்து வருகின்றனர்.

இது ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை. ஏனெனில், இன்று கூட சிறிய சிறிய வயதிலேயே பிள்ளைகள் திருமணமாகி, நீதிமன்றங்களில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
______________
எனவே, எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்த பெண்கள் தன்னார்வ நிறுவனம் கல்வி, ஒழுக்கம், சமூக பொறுப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு ஒளியாய் இருக்க வேண்டும். எங்கள் பிள்ளைகள் நல்ல வழியில் செலுத்தப்பட வேண்டும்.

பெண்கள் தங்கள் திறமையை அறிந்து, சமூக முன்னேற்றத்திற்காக வலிமையடைய வேண்டும். அப்படிச் செய்தால் தான், நாங்கள் எங்கள் முன்னோர்களின் கனவை நிறைவேற்றுகிறோம்.

எங்கள் சமூகத்தையும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்கிறோம். என்று தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற ஆசிரியை, மௌலவியா எம். எஸ். எஸ். நிஸ்ரினா தனது உரையில்:

இன்று நான் பேசுவது ஒரு நிகழ்வுக்காக மட்டும் அல்ல.

ஒரு தாயின் மனதில் பொங்கும் நன்றியும், மகிழ்ச்சியும், பெருமையும் கொண்ட உணர்வுகளாக இந்த வார்த்தைகள் வருகின்றன.
என் மகள் சிறு வயதிலிருந்தே ஒரு தனி குணம் கொண்டவள். எப்போதும் மற்றவர்களை நினைப்பவள். வீட்டில் கூட சும்மா அமர்ந்து கொண்டிருக்கும்போது — “அம்மா, இவ்வளவு கஷ்டத்தில் இருக்கும் குடும்பம் இருக்கிறதே, அவர்களுக்கு உதவலாமா?” என்று கேட்பவள்.

அவளுக்கு மனதில் எப்போதும் பிறரைப் பற்றிய கவலை, பிறருக்குச் செய்யவேண்டிய உதவி பற்றிய நினைவு. சில நேரங்களில் “அம்மா, அந்த விதவைக்கும் பிள்ளைகளுக்கும் நாம கொடுப்போமா?” என்று சொல்வாள். யாரேனும் கஷ்டப்பட்டு இருப்பதைப் பார்த்தாலே அவளுக்கு மனம் தாங்காது.

அதற்குப் பின்னால் நிற்கும் இன்னொரு பெரிய காரணம் — அவளது கணவர்.

அவளுக்கு உதவி செய்யும் நல்ல மனதை, அவளது கணவரும் பூரணமாக ஆதரிக்கிறார். ஒவ்வொரு நோன்பு மாதத்திலும் அவள் ஒரு பட்டியலைத் தயாரிப்பாள்:

“இந்த குடும்பத்துக்கு நாம கொடுக்கணும். அந்த குழந்தைக்கு நாம உதவணும்” என்று.
அந்த நேரங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து, எதையும் பொருட்படுத்தாமல், பிறருக்குப் பகிர்ந்து கொடுப்பதைப் பார்த்தால், என் தாய் மனம் நன்றியால் நிரம்பி வழியும்.

அல்லாஹ்வின் அருளால் எனக்கு பிறந்த ஒரே பெண் குழந்தை அவள். அவளுக்காக நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கைத்துணையைத் தேடினோம். அல்லாஹ் மிக அழகான பரிசாக, ஒரு நல்ல கணவரையும், நன்மை நிறைந்த குடும்பத்தையும் தந்தான். அது எனக்குப் பெரும் ஆறுதலும் மகிழ்ச்சியும்.

நான் எப்போதும் என் பிள்ளைகளுக்கு சொல்வது ஒன்று தான்:

“நம்மால் சேர்த்த செல்வம், நம்முடன் கல்லறைக்கு வராது. ஆனால் நம்மால் செய்த நன்மை மட்டும் தான் நம்மைத் தொடர்ந்து வரும்.”
அதை என் மகள் தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி காட்டுகிறாள். அதுதான் என்னை மிகுந்த பெருமையடையச் செய்கிறது.
சில நேரங்களில் அவளுக்கு கோபம் வந்தாலும், அது உடனே கரையும். ஏனெனில் அவள் மனதில் “நம்மிடம் இருக்கும் அனைத்தும் பிறருக்காகவே” என்ற உண்மை அடிக்கடி நிலைத்திருக்கும்.

எனக்கு பெரும் சந்தோஷம் அளிப்பது என்னவென்றால், என் மகளின் வாழ்வில் அவள் மட்டும் அல்ல, அவளுடைய கணவரும், பிள்ளைகளும், குடும்பமும் எல்லோரும் இந்த மனப்பான்மையை ஏற்று வாழ்கிறார்கள்.

அதனால் தான் இன்று, இந்த சேவைக்கான முயற்சி, அவளுடைய உள்ளார்ந்த விருப்பத்தின் பலனாக, உங்கள் முன்னால் நிற்கிறது.
நான் என் வாழ்நாளில் பெற்ற மிகப் பெரிய மகிழ்ச்சி — என் பிள்ளைகள் பிறருக்குப் பயனுள்ள வாழ்க்கை வாழ்வதுதான். என்று தெரிவித்தார்.

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி.றிப்கா அன்சார் தனது உரையில்; 

 இன்றைய உலகில், குறிப்பாக நமது குழந்தைகள் மற்றும் இளைய தலைமுறை, நல்ல கல்வியையும், நல்ல வாழ்வையும் பெறவேண்டும். பெண்கள் மாணவிகள் கல்வியில் அதிக ஆர்வத்தையும், முயற்சியையும் காட்டுகின்றனர். ஆனால் சில ஆண் மாணவர்கள் படிப்பில் தங்கள் பங்களிப்பை குறைத்து “நிறைய படிக்க தேவையில்லை” என்ற எண்ணத்தில் இருந்து கொள்கின்றனர். இது மிகவும் கவலைக்கிடமான நிலை. இதுவே தொடர்ந்தால், அவர்களின் எதிர்காலம் சிக்கல்களுக்கு வழிவிடும்.

எனவே, நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பெண்-ஆண் மாணவர்களும் இருவரும் சமமான வாய்ப்புகளைப் பெறவும், கல்வியில் முன்னேறவும் உதவி செய்ய வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தினர் அனைவரும் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த இணைந்து முயற்சி செய்ய வேண்டும்.

மேலும், நமது தொண்டு முயற்சியில் சதகா (Charity) என்ற பண்பும் மிக முக்கியம். சதகா என்பது பொருள் உதவியோடு மட்டுமல்ல; சேவையையும் கொண்டுள்ளது. உதாரணமாக:
• பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு கற்பித்தல்,
• மருத்துவ மற்றும் ஆலோசனை துறைகளில் சுயவாழ்வு சேவை செய்தல்,
• சமூக முன்னேற்ற திட்டங்களில் பங்களித்தல்.

இவ்வாறு, நாங்கள் சதகாவை வாழ்வில் உணர்த்தி, மிகவும் பயனுள்ள சேவைகளை நமது சமூகத்திற்கு வழங்கலாம். நமது சமூக மருத்துவர்கள் மற்றும் தலைவர்களுடன் முன்கூட்டியே ஆலோசித்து, பிரதேசங்களில் Charity Centres அமைத்து, கல்வி, சுகாதாரம், சமூக வழிகாட்டல் போன்ற சேவைகளை வழங்குவதே எங்கள் திட்டமாகும்.

அன்புடையீர், இன்று நாங்கள் தொடங்கும் இந்த முயற்சி, நம் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நன்மை செய்யும் ஒரு பெரும் முயற்சி ஆகும். அதனால், எல்லோரும் ஒற்றுமையாக, முழுமையான முயற்சியுடன் பங்கேற்று, நமது குழந்தைகளுக்கும் எதிர்காலமும் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். என்றும் கேட்டுக்கொண்டார்.

 


நூருல் ஹுதா உமர்


கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான்  மற்றும் முஹம்மத் ஆஷிக் ஆகியோர்களால் தங்களின் சபை அமர்வில்  கிடைக்கப் பெறுகின்ற மாதாந்த கொடுப்பனவை கல்வி நிலையத்திற்கு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக (10) சம்மாந்துறையில் இயங்கி வரும்  மிரர் கல்வி நிலையத்திற்கு வழங்கி வைத்தனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது கல்வி மேம்பாட்டிற்காக சம்பளத்தை ஒதுக்குவதாக உறுதியளித்திருந்த இவர்கள், அந்த உறுதியை இன்று நடைமுறைப்படுத்தினர். வழங்கப்பட்ட நிதியை கல்வி நிலையத்தின் பெளதீக  வசதிகளை மேம்படுத்தவும் ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் இந் நிதி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்  கல்வி நிலைய பொறுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து எங்களின் அதிகார காலத்தில் கிடைக்கும் பிரதேச சபை கொடுப்பனவுகளை கல்வி மேம்பாட்டுக்காக கையளிக்க உள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் இதன்போது கருத்து தெரிவித்தார்.

 


பாறுக் ஷிஹான்)


அம்பாறை மாவட்டம் கல்முனை   பிராந்தியத்தில்    விசேட   போக்குவரத்து பொலிஸாரின்   திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  93 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை   இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது   பெரிய நீலாவணைக்கட்பட்ட மருதமுனை  மற்றும்  கடற்கரை வீதி  போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டது.

இத் திடீர் சோதனையில்  மோட்டார் சைக்கிள் ஆவணம், காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது   தலைக்கவசம் அணியாது செல்வது     ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது   அதிவேகமாக செல்வது  மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள்  தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள்  பொலிஸாரினால் வழங்கப்பட்டன.
 

இச்சோதனை நடவடிக்கையானது கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர  ஆலோசனையில்  அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட  பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி நெறிப்படுத்தலில்  அம்பாரை மாவட்ட  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் தலைமையில்  இடம்பெற்றது.இதன் போது     கல்முனை  சம்மாந்துறை சவளைக்கடை சாய்ந்தமருது   பொலிஸ் நிலைய    பொலிஸார்   இணைந்து  முக்கிய சந்திகள்  பிரதான  புற நகர வீதிகளில்  திடீர் சோதனை நடவடிக்கை  மேற்கொண்டனர்.

குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  93   பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி.சகாதேவராஜா)

 சம்மாந்துறை இலங்கை மின்சார சபைக்கு நிரந்தரமாக அல் மர்ஜான் பாடசாலைக்கு முன்பாக உள்ள அரச காணியினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் (29) ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா  தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவின் ஒருங்கிணப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ் உதுமாலெப்பை,கவி.கோடிஸ்வரன், எம்.எஸ் அப்துல் வாசீத்,சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர்,ஏ.எம்.எம் நெளசாத்,உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,கணக்காளர் எ.எஸ்.எல் சர்தார் மிர்ஸா, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச செயலகத்தின்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இலங்கை மின்சார சபைக்கு நிரந்தரமாக அல் மர்ஜான் பாடசாலைக்கு முன்பாக உள்ள அரச நிலத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது அத்தோடு சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள்,புனரமைப்பு செய்யப்படாமல் இருக்கும் வீதி பிரச்சினைகள்,வீதி மின் விளக்கு சார்ந்த பிரச்சினைகள்,சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம், அல் அமீர் பாடசாலையில் உள்ளக அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள்,வீரமுனை இந்துமயான பிரச்சினைக்கான தீர்வு,சம்மாந்துறை கல்வி வலய பாடசாலைகளின் பெளதீக மற்றும் உள்ளக சார்ந்த பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்,விவசாய காணி சம்மந்தமான பிரச்சினைகள்,நீர்ப்பாசன  பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகளும்.தீர்வுகளும்,  கலந்தாலோசிக்கப்பட்டு  முடிவுகளும் எடுக்கப்பட்டன என்பதோடு இன்னும் பல முடிவுகளும் எடுக்கப்பட்டன குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


100 மில்லியன் ரூபா செலவில் முற்றிலும் இலவச 3000 உயிர் காக்கும் சேவை நிறைவு – ( 3000 Cardiac Interventions with more than 850 Stents)

மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி வைத்தியசாலை கேத் லேப் ஆரம்பிக்கப்பட்டு 02 வருடங்களே ஆன நிலையில் 15.07.2025 அன்று 3000 நோயாளிகளுக்கு முற்றிலும் இலவச இருதய சிகிச்சை ( Angiogram, PCI ) வழங்கியுள்ளது.

 தனியார் வைத்தியசாலைகள் ஒரு நபருக்கு ரூபா 1 லட்ஷம் தொடக்கம் 10 லட்சங்கள் வரை கட்டணமாக அறவிடும் இச் செயற்பாட்டை எமக்காக முற்றிலும் இலவசமாக இவ் வைத்தியசாலை வழங்கி வருகின்றமை எம்மில் பலரும் அறியாத ஒரு விடயம்.

அது மட்டும் இன்றி கிழக்கு மாகாணத்தில் இந்த சேவையை வழங்கும் ஒரே ஒரு வைத்தியசாலை இதுவாகும். இங்கு அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதுடன் மிகவும் தரமான உயர்தரத்திலான உபகரணங்களை கொண்டே வைத்திய சேவை வழங்கப்படுகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருந்த சிகிச்சை குழுவின் பூரண பங்களிப்புடன் இருதய சிகிச்சை நிபுணர்களான Dr.வினோதன், Dr.அருள்நிதி, Dr.ரஜீவன் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இருதய சிகிச்சை நிபுணர் Dr.சந்துன் ஆகியோரது அர்ப்பணிப்பான சேவையும் போற்றுதலுக்குரியது.

2023.06.01 திகதி ஆரம்பிக்கப்பட்டு இச் சேவையானது 100 மில்லியனுக்கும் அதிக பணத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நன்கொடையாக பெற்று எமது பிரதே மக்களுக்கு இச்சேவையினை வழங்கி வருகின்றது.

 இந்த நிறுவனம் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு தொண்டு நிறுவனம் ஆகையால் பல நல் உள்ளம் கொண்ட கொடையாளர்கள் நன்கொடை வழங்குகின்றார்கள்.

இவ் வைத்தியசாலையின் ஸ்தாபாகர் சுவாமி ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்களின் ஆசிர்வாதமும், தலைவர் திருமதி. பென்னி ஜெயவர்தன அவர்களின் வழிநடத்தலிலும் பொது முகாமையாளர் திரு. டேவிட் அவர்கள் இவ் வைத்தியசாலையை மிக அழகாகவும் தரமாக சேவை வழங்கும் இடமாகவும் பேணி வருகின்றார் ” ஒரு உலகம் ஒரு குடும்பம்” என்னும் அவர்களது சிந்தனைக்கு அமைய எல்லாரும் நமது சொந்தங்கள் அவர்களிடம் நாங்கள் எங்கள் சேவைக்கு பணம் பெறுவது இல்லை என்று சொல்லி நம்மை ஆச்சரியத்தின் உச்சத்துக்கே எடுத்து செல்கிறார்கள் இங்கு கடமை புரியும் அனைத்து ஊழியர்களும். 

இங்கே இவ் வருட இறுதியில் இருதய சத்திர சிகிச்சைகளும் இலவசமாக இடம்பெறும் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது மேலும் இரு மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டது.



 நூருல் ஹுதா உமர்


காரைதீவு சபை புதிய தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் மற்றும் புதிய உப தவிசாளர் முஹமட் ஹனிபா முஹமட் இஸ்மாயில் ஆகியோரின் பதவியேற்பு வைபவம் காரைதீவு பிரதேச சபையில் இன்று (27) காலை சுபவேளையில் பிரதேச சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் வை.கோபிநாந்த், என்.எம்.றணீஸ், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர், ஏ.ஆர்.எம். ஹில்மி, ஏ.பர்ஹாம், பிரதேச சபை செயலாளர்  உட்பட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பதவியேற்பு வைபவம் முடிவுற்றதும் தவிசாளர் அறையில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

 


நூருல் ஹுதா உமர்


போசாக்கு மாதத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினரின் ஏற்பாட்டில், பல்வேறு வகையான போசணை  மிக்க உணவுகளை அறிமுகப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

போசணை மிக்க உணவுகளை வீட்டில் எளிமையாகவும், குறைந்த செலவில் தயாரிக்க கூடிய வகையில் தயாரித்து, அவற்றை தாய்மார்களுக்கு அறிமுகப்படுத்தும் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வாக இது அமைந்தது.
நிகழ்வில் விற்றமின் மாமா உட்பட அனைத்து வகையான போசணை மிக்க உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உண்ணக் கூடாத உணவுகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினரின் ஏற்பாட்டில்  அன்னையர் ஆதரவு குழு அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டதுடன்.  மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் போசணை மிக்க மதிய உணவும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் அலுவலகத்தின் பொதுச் சுகாதார தாதிய சகோதரி, மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது, பொது சுகாதார மாதுக்கள் மற்றும் பிற சுகாதார உத்தியோகத்தர்கள் இணைந்து சமகால பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்டதுடன் தாய்மார்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வையும் வழங்கினர்.

மேலும்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்கள் நிகழ்வில் உரையாற்றும் போது
"சத்து  என்பது ஒரு குழந்தையின் அடித்தள வளமாகும்".சத்தான உணவுடன் அவர்களின் எதிர்கால வளர்ச்சியும் அமைந்துள்ளது, சிறு வயதிலேயே போசணை மிக்க உணவுகளை வழங்குவது வாழ்நாள் முழுவதும் நோயற்ற வாழ்க்கைக்கு வழிகோலும் என்று கூறினார்.



 ( குமுக்கனிலிருந்து  வி.ரி.சகாதேவராஜா)

 
கதிர்காம பாதயாத்திரையை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கான 24 மணி நேர வைத்திய சேவையொன்று குமுக்கன் நதியோரத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது .

கிழக்கு மாகாணத்தையும் ஊவா மாகாணத்தையும் பிரிக்கும் எல்லையில் உள்ள குமுக்கன் நதி தீரத்தில் வைத்திய முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் நிசங்கவின் ஏற்பாட்டில் அந்த சேவை நடைபெற்று வருகிறது.
 
அம்பாறை பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ரங்க சந்திரசேன தலைமையிலான வைத்தியர் குழுவினர் இச் சேவையை 24 மணி நேரமும் நிகழ்த்தி வருகின்றனர்.

இச் சேவை தொடர்பாக பணிப்பாளர் டாக்டர் நிஸங்க, பணிப்பாளர் டாக்டர் ரங்க, சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் சுப்பிரமணியம் புனிதராஜன் மற்றும் வைத்தியர்கள் களத்தில் நின்று கண்காணித்து வருகின்றார்கள்.

இங்கு இம்முறை புதிதாக நடமாடும் வைத்திய  பஸ் சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது .
அவசர அவசிய சிகிச்சைகள் மற்றும் ஏனைய விடயங்களுக்காக இந் நடமாடும் பஸ் சேவை 
நடைபெற்றுவருகிறது.

அத்துடன் 24   மணி நேரமும் இயங்கக்கூடிய வண்ணம் அன்புலன்ஸ் சேவை ஒன்றும் அங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது . நாவலடியில் இயங்கிவரும் மருத்துவ முகாமில் இருந்து மேலதிக அவசர அவசிய சிகிச்சைகளுக்காக குமுக்கன் பிரதான வைத்திய முகாமிற்கு நோயாளிகள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அருகில் கல்முனை ஆதரவைத்தியசாலையின் சேவையும் தொடர்கிறது.

திருவிழா மற்றும் யாத்திரைக்காக வழமைபோல் நியமிக்கப்படும் பிராந்திய சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் சுப்பிரமணியம் புனிதராஜன்   24 மணி நேரமும் களத்தில் நின்று வழமைபோல் பாதயாத்திரீகர்களின் சுகாதார சேவைகளை கவனித்து வருகின்றார்.
 
இதேவேளை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் குமண வனஜீவராசிகள் திணைக்கள பொறுப்பதிகாரி விமலசேன உள்ளிட்ட குழுவினர் பாதையாத்திரை நலன்புரிவசதிகளை கண்காணித்து வருகின்றார்கள்..

 


உலக  சுற்றாடல் தினநிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் ஏற்பாட்டில்  பிரதேச செயலாளர்  தலைமையில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது....


ஜே.கே.யதுர்ஷன்..


 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உலக  சுற்றாடல் தின  முன்னிட்டு   திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச  செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பலன் தரும்  மரக்கன்றுகள் நடுகை  நிகழ்வும் இடம்பெற்றது....


 இன் நிகழ்வில் பொலித்தின் பிளாஷ்ரிக் பாவனைகள் கட்டுப்படுத்தல்  பற்றி விழிப்புணர்வும்  சுற்றுச்சுழல் பாதுகாப்பு ,சுற்றாடல் தினம்  பற்றிய உரைகளும் இடம்பெற்றது....



 இவ் நிகழ்வில் திருங்கோவில் விநாயகபுரம் சிவன் ஆலய பிரதம குரு   பிரதேச செயலக உதவித்திட்ட மிடல் பணிப்பாளர் மற்றும் கிராம  சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்  கிராம அபிவிருத்தியோத்தர்கள் திருக்கோவில் பொலிஸ்நிலைய உத்தியோத்தர் மற்றும்  விளையாட்டுகழக உறுப்பினர்கள்  பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்....



 நூருல் ஹுதா உமர்


சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை மையமாக கொண்டு டயகோணியா மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி என்பனவற்றின் அனுசரணையில் இன்று ஐந்தாம் திகதி விழிப்பூட்டல் ஊர்வலமும், கருத்தரங்கும் கல்முனையில் நடைபெற்றது.

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.ஏ. றிசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.எல்.எம். முதர்ரீஸ், வலய ஆணையாளர் எம்.எம். சியாம், சுற்றாடல் அதிகார சபை உயர் அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னோடி மாணவர்கள், கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். 

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயம், மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயம், கல்முனை ஆர்.கே.எம். வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்- அக்ஸா மகா வித்தியாலயம், சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயம் ஆகியவற்றின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஏனைய பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்கள் போன்றோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவது, அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமான விடயங்கள் தொடர்பான விடயங்களை கருத்தரங்கின் வளவாளர் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப்பணிப்பாளர் எம்.எ.சி.எம். றியாஸ் நிகழ்த்தினார்.

மேலும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மாவட்ட இணைப்பாளர் யூ.எல். ஹபீலா உட்பட முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 



பாறுக் ஷிஹான்

திருக்கோவில் பிரதேசத்தில் நீண்ட காலம் நிலவி வரும் கட்டாக்காலி மாடுகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள தவிசாளர் சசிகுமார் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
,
இதற்கமைய அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கால்நடை  உரிமையாளர்களுக்கு  திருக்கோவில் பிரதேச சபை   திருக்கோவில் பொலிஸ் நிலையம்  மற்றும் திருக்கோவில் மிருக வைத்தியசாலை என்பன  இணைந்து  இன்று (05) நடாத்திய கலந்துரையாடலின் போது  திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த  05 மாதங்களுக்குள்  கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்ட வீதி விபத்துக்களினால்   02 மரணங்களும் அதிகளவான பொருட்சேதங்களும் இடம் பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி  அறிக்கை  சமர்ப்பித்துள்ளார்.

எனவே   கட்டாக்காலி மாடுகளை உரிமையாளர்கள்  உரிய இடங்களில்  கட்டி  வீதிகளில் நடமாடுவதை  தடுப்பதற்கான  உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  திருக்கோவில் பிரதேச சபை  தவிசாளர் சசிகுமார் அறிவித்துள்ளார்.

அத்துடன் 2025.06.05 தொடக்கம் 2026.06.12 ஆம் திகதி வரை திருக்கோவில் மிருக வைத்தியசாலையில் தங்களது  மாடுகளை அடையாளப்படுத்தி அவற்றினை உடனடியாக சட்டரீதியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் அவ்வாறு பதிவு செய்யப்படாத கட்டாக்காலி மாடுகள்  பிடிக்கப்பட்டால்   10 ஆயிரம்  ரூபாவுக்கும் அதிகமான தண்டப்பணம் அறவிடப்படும் என்பதையும் 03 நாட்களுக்குள் மீட்க்கப்படாத கட்டாக்காலி மாடுகள்  அனைத்தும் சட்டரீதியாக அரச உடமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 


வி.சுகிர்தகுமார்                   


 திருக்கோவில் பிரதேச சபைத்தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் பதவியேற்றதன் பின்னர் இன்று முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைவாக பிளாஸ்டிக் மூலமான மாசுபடுத்தலை முடிவுக்கு கொண்டுவரல் எனும் கருப்பொருளுக்கமைய உலக சுற்றாடல் தினம் வாரத்தின் இறுதி நாளான இன்று 05ஆம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதனை முன்னிட்டு பெரிய முகத்துவாரம் களப்பினை அன்மித்த களப்பு பூங்கா மற்றும் அதனோடிணைந்;த, கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்று(05) இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில்; இடம்பெற்ற பூங்கா மற்றும் அதனோடிணைந்;த, கரையோரப் பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் பிரதேச சபை உபதவிசாளர் செயலாளர் சீ.திவாகரன் வைத்தியர் மோகனகாந்தன் பிரதேச செயலக அதிகாரிகள் பொலிசார் பிரதேச சபை ஊழியர்கள் அரச திணைக்களங்கள், பொது சமூக நலன் தன்னார்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்களால்; பாவனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கழிவுகளாக ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் யாவும் அகற்றப்பட்டுச் சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அகற்றப்பட்ட கழிவுப்பொருட்கள் பிரதேச சபை வாகனங்களின் உதவியுடன் கழிவுகள் அகற்றப்பட்டன.
இதேநேரம் களப்பின் கரையோரங்களில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதன் பின்னராக கருத்து தெரிவித்த தவிசாளர் புவி வெப்பமாதலை தடுக்கும் நடவடிக்கையின் பிரகாரம் பிளாஸ்டிக் பாவனையை தடுத்து சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையோடு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இதற்காக அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 


நூருல் ஹுதா உமர்


வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை நிலைப்படுத்தும் நோக்கில் கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தினால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று (04) கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை கால்நடை வைத்தியர்  திருமதி நிவர்த்திகா அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அம்பாறை காரியாலய பிரதிப்பணிப்பாளர் எம்.ஜே. நௌசாத் ஜமால்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட 50 பண்ணையாளர்களுக்கு தலா 16 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கோழிக்குஞ்சிகளை வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண குறிப்பிட்ட மேம்பாட்டு மானியம் (PSDG) நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட இந்த உதவி மூலம் பண்ணையாளர்கள் பயனடைந்துள்ளனர். இந்நிகழ்வில் கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.