Showing posts with label Daily Information. Show all posts



 ( வி.ரி. சகாதேவராஜா)


 தேசிய ரீதியில் நடைபெற்ற புகைப்படப் போட்டியில் பாண்டிருப்பைச் சேர்ந்த மாதவராஜா நிதுர்சன் இரண்டாம் இடத்தை பெற்று 75 ஆயிரம் ரூபாய் பணப் பரிசையும் சான்றிதழையும் பெற்றுள்ளார்.

Dilmah Conservation நிறுவனம் நடத்திய “Life in a Changing World” என்ற தலைப்பிலான தேசிய ரீதியிலான புகைப்படப் போட்டியில், Open Categoryயில் பாண்டிருப்பைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மாதவராஜா நிதுர்சன் அவர்கள் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டிக்காக சிறந்த 70 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இவரது புகைப்படம் இரண்டாம் இடத்துக்குத் தேர்வாகி, ரூபாய் 75,000 பணப்பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு  கொழும்பில் உள்ள Genesis by Dilmah: Centre யில் அண்மையில் நடைபெற்றது.

 


( வி.ரி.சகாதேவராஜா)

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ் மொழி தினப்போட்டியில் பிரிவு.5 சிறுகதை ஆக்கத்தில் காரைதீவு  விபுலாநந்தா மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவி ரா.மகோற்ஷபி இரண்டாம் இடத்தைப்பெற்று  வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

இப் போட்டி கொழும்பு  விவேகானந்தா கல்லூரியில் நேற்று  நடைபெற்றது.

இவர் கடந்த ஆண்டு இதே போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



நூருல் ஹுதா உமர்


1500 வது புனித மீலாத்தை முன்னிட்டு கல்முனை சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம் வழமை போன்று ஏற்பாடு செய்துள்ள மாபெரும் ஈத் மீலாத் ஊர்வலம் 06.09.2025 (சனிக்கிழமை) காலை 07.00 மணிக்கு கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா முன்றலில் இருந்து ஆரம்பமாகும் என கல்முனை சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

கல்முனை சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றிய காரியாலயத்தில் இன்று (04) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைப்பின் தலைவர் எஸ்.எச். எம். நிசார், உப செயலாளர் ஏ.டபலியு முனாஸ், நிர்வாக உறுப்பினர் எம்.எச்.எம். அஸாஹிம் ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்கள் நாளை வெள்ளிக்கிழமையாக இருப்பதனால் நாளை வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு சன நடமாட்டம் குறைவாக இருக்கும். நபிகளாரின் புகழை ஓங்க செய்யவே இந்த ஈத் மீலாத் ஊர்வலம் சந்ததி சந்ததியாக 40 வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அவதரித்த புனித றபீஉனில் அவ்வல் பிறை 12ல் மாபெரும் ஈத் மீலாத் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தும் வெள்ளிக்கிழமை ஜும்மா உடைய நாள் என்பதால் நாளை மறுதினம் இந்த ஊர்வலத்தை நடத்த பல்வேறு சமூக, சமய நிறுவனங்களுடன் கலந்துரையாடி முடிவு செய்துள்ளோம்.

அஸ்ஸெய்யிது ஷெய்க் மௌலவி அல்ஹாஜ் ஏ.அப்துர் றஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அவர்களின் ஆலோசனை வழிகாட்டலுடன் கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா முன்றலில் இருந்து ஆரம்பமாகும் இந்த ஊர்வலம் கல்முனை நகர், பொதுச்சந்தை, இஸ்லாமபாத், கல்முனை நகரின் பிரதான வீதிகளினூடாக பயணித்து இறுதியாக கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபை அடைந்து தபர்ருக் விநியோகத்துடன் நிறைவடைய உள்ளது.

கலந்து கொள்ளும் அனைவருக்கும் புனித ஈத் மீலாத் சின்னம் பொறிக்கப்பட்ட கைக்கொடி அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது டன் பெருமானாரின் நேசர்கள், இளைஞர்கள் இந்த ஊர்வலத்தில் எம்பெருமானாரின் அருள் வேண்டி தங்களது வாகன சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைக்கிறோம். தங்களது வாகனங்களில் வருவோர் சட்டங்களை மதித்து நடக்குமாறும், மோட்டார் சைக்கிளில் ஊர்வலத்தில் கலந்து கொள்வோர் தலைக்கவசம் (Helmet) அணிந்து வருவது அவசியமாகும்.

கல்முனை மாநகர சபை, பொலிஸார் எங்களுக்கு பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ளதுடன் கண்ணியமாக ஈத் மீலாத் ஊர்வலத்தில் சகலரையும் கலந்துகொள்ள வேண்டிக்கொண்டார்கள்.

 


பாறுக் ஷிஹான்


கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட 44kW திறன் கொண்ட சோலார் மின்சார திட்டத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ்   தலைமையில் இன்றைய தினம் (13)   பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
 
நிகழ்வில் பள்ளிவாசலின் மின்சார செலவினங்களை குறைத்து, பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் இம்முக்கியமான திட்டத்திற்கான நிதியை ஒதுக்கி வழங்கிய  முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்   விஷேட அதிதியாக கலந்துகொண்டார். 

மேலும் திட்டத்தின் செயலாக்கத்திற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அக்கறையுடன் ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை பிரதேச செயலாளர் அஷ் ஷேக் டி. எம். எம். அன்ஸார், உதவி திட்டமிடல் பணிப்பாளர் முஹம்மது ஜெளபர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் முஹம்மது ஷபீக் மற்றும் தரநிலைக்கு ஏற்ப பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றிய ஒப்பந்தக்காரர் சகோதரர் முஹம்மது அன்வர் ஆகியோர்களும் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் வெற்றிகரமான நிறைவேற்றத்துக்காக பங்களிப்பு நல்கிய அவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையாளர் சபையின் மனப்பூர்வமான நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் உரையாற்றும் போது அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து முன்கொண்டு செல்லும் நம்பிக்கையாளர் சபையின் போக்கினை வரவேற்றதோடு எதிர்காலத்தில் பள்ளிவாசலினால் முன்னெடுக்கப்படும் சமூக நல வேலைத்திட்டங்களில் தன்னாளான முழு பங்களிப்பையும் வழங்குவதாகவும் உத்தரவாதம் வழங்கினார்.

ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து ஜமாஅத்தார்கள் சகிதம் சோலார் மின்சார தொகுதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச். எம். எம். ஹரீஸ், நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் மற்றும் பொருளாலர் எஸ். எம். ரிப்னாஸ் ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
 
நிகழ்வில் இறுதியாக கண்ணியத்துக்குரிய பேஷ் இமாம்
மெளலவி ஜப்றான் கெளஸீ அவர்களின் விஷேட துஆ பிரார்த்தனையோடு நிகழ்வு நிறைவுபெற்றது. 




நூருல் ஹுதா உமர் 

கிழக்கு மாகாண மக்களின் நாட்டாரியல் கலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்திற்கமைய இம்மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் நாட்டார் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களை மேடையில் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட “நாட்டார் கலை நயம் (Rhythm of Folklore)” என்ற சிறப்பு நிகழ்வு 2025.07.19 ஆம் திகதி சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

டயகோணியா அனுசரனையில், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, சமூக அபிவிருத்தி அமையம் மற்றும் கெப்ஸோவுடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்குப் பிராந்தியத்தின் பாரம்பரிய பண்பாட்டு முறைமைகளை பிரதிபலிக்கும் விதத்தில் “நாட்டார் கலை நயம் நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் இக்கலைகள் தொடர்பாக தொகுக்கப்பட்ட டிஜிட்டல் ஆவண தொகுப்புகளும் காண்பிக்கப்பட்டன.

நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி சார்பில் சிரேஷ்ட ஆலோசகர் என். ஜப்பார், சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் லெய்லா உடையார், நிதி உத்தியோகத்தர் குமுதினி பெரேரா மற்றும் பிராந்திய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நாட்டார் கலை டிஜிட்டல் மயப்படுத்தல் திட்டம் தொடர்பான அறிமுக உரையை FSD இன் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளருமான பொறியியலாளர் கலாநிதி ஏ.எம்.ஏ. சஜா நிகழ்த்தினார். அத்துடன், நாட்டார் கலை சம்பந்தமான அறிமுக உரையை தொல்பொருளியலாளர் மற்றும் மரபுரிமை ஆய்வாளார் கலாநிதி ஏ.ஆர்.எம். ஜெஸ்மில் நிகழ்த்தினார்.

வரவேற்பு பாடலை சம்மாந்துறை திறறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் குழுவினர் இசைத்தனர். நாட்டார் பாடல்கள் நாட்டாரியல் வித்தகர் எழுகவி அக்கரைப்பற்று எம்.ஐ.எம். ஜலீல் மற்றும் நாட்டார் கலைத்துறை வித்தகர் யூ.எல். ஆதம்பாவா ஆகியோரால் பாடப்பட்டது.

சாய்ந்தமருது மருதூர் கலை மன்ற பொல்லடி கலைஞர்களின் நிகழ்வு, மட்டக்களப்பு பறங்கியர் கலாசார சங்க கலைஞர்களால் பேகர் பாடலும் மாவடிப்பள்ளி வளர்பிறை முஸ்லிம் பாரம்பரிய கலாச்சார கலை மன்றம் கலைஞர்களால் சீனடி, சிலம்படி நிகழ்வும் கல்முனை ஸாஹிறா கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களால் மீனவர் பாடலும் , அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய மாணவர்களால் விவசாய பாடலும் இசைக்கப்பட்டு பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது. நிகழ்வுகளில் பங்குபற்றயவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.




 வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழாவையொட்டிய வீதியுலா( பெரஹரா) தினமும் மனோரம்மியமான சூழலில் களைகட்டிய வருகிறது. எதிர்வரும் 10 ஆம் திகதி இறுதி  பெரும் வீதியுலா (மகா பெரஹரா) நடைபெறவுள்ளது.  இங்கு நேற்று இரவு நடைபெற்ற சில கலை அம்சங்களை காணலாம்.


 


( வி.ரி. சகாதேவராஜா)


 வரலாற்று பிரசித்தி பெற்ற 
திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  நேற்று  (30)திங்கட்கிழமை   திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய ஆடி உற்சவமானது எதிர்வரும் 2025.07.07கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து 2025.07.26ம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளது.

இக்காலபகுதியில் ஆலயத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நலன்புரி சேவைகள் தொடர்பாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அணைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இவ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலயத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ், திருக்கோவில் பிரதேச சபை  தவிசாளர் சு.சசிகுமார் ,பதில் உதவி பிரதேச செயலாளர் ரெட்ணம் சுவாகர்,திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.,திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உத்தியோகத்தர்கள்,திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள்,கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர்  எஸ்.சுயகுமார், மற்றும் திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய நிருவாகசபை உறுப்பினர்கள் திருக்கோவில் பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

 


( வி.ரி. சகாதேவராஜா)


வரலாற்றுச் சிறப்பு மிக்க  கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் கதிர்காமம் பெரிய

கோவிலில் வருடமொருமுறை ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவம். இன்று (01) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


 அங்கு பாரம்பரிய

நிகழ்வுகளான யானைகள் மூலம் பந்தலுக்கான மரம்செடி கொடிகள் மாணிக்கங்கையூடாக

சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.


ஆலய நிலமே நிருவாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அக் கொத்துக்களை யானைகள் உதவியுடன் பாரம்பரிய வேடுவகுலமக்கள் சகிதம் பந்தல் மேய்ந்தார்கள்.




 ( வி.ரி. சகாதேவராஜா)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ” கிழக்கின் கவிக்கோர்வை” தொகுப்பு நூல் அறிமுக  விழா நேற்று செவ்வாய்க்கிழமை(10) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ,பிரதம விருந்தினராக திருமதி சுஜாதா குலேந்திரகுமார்  (மேலதிக செயலாளர் கொள்கை திட்டமிடல் மற்றும் செயல்திறன் மீளாய்வு) கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு இசுருபாய பத்தரமுல்ல) கலந்து சிறப்பித்தார்.

கௌரவ விருந்தினர்களாக ரி.ஜே அதிசயராஜ் ( பிரதேச செயலாளர் கல்முனை வடக்கு) ,ஆர் .இளங்குமுதன் (மாகாணப் பணிப்பாளர் கிராமிய அபிவிருத்தி திணைக்களம்) ,மற்றும்சிறப்பு விருந்தினர்களாக  உமா வரதராஜன் (சிரேஸ்ட எழுத்தாளர்) ,கவிஞர் சோலைக்கிளி ( சிரேஸ்ட எழுத்தாளர்) ,அப்துல் ரசாக் (மொழித்துறை விரிவுரையாளர் இலக்கியவியலாளர்கள் எழுத்தாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெருமளவான கவிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டது ஒரு சிறப்பம்சமாக அமைந்தது.

 “கிழக்கின் கவிக்கோர்வை” எனும் கவிதை நூலிலே 332 கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கவிஞர்களது கவிதை படைப்புகள் உள்ளடங்கிய ஒரு நூலாக இது அமைய பெற்றிருப்பதும் வரலாற்றில் ஒரு புதிய நிகழ்வாக இதனை குறிப்பிடலாம். 

கிழக்கு மாகாணத்தில் உருவான எல்லா கவிஞர்களது கவிதைகளையும் கோர்த்து அதனை புதுமை ஏற்படுத்தி இந்த மாகாணத்தின் புகழைப் பரப்பிட வேண்டும் என்ற அவாவில் ஆயிரம் கவிதைகளை ஆவது கொண்டதொரு தொகுப்பாக இதனை கோர்த்திடவே கிழக்கு மாகாண பணிப்பாளரது முயற்சி இருந்தது, அதற்கான தேடல்கள் தொடர்ந்தாலும் கால நேரம் அந்த தேடலுக்கு ஒரு காற் புள்ளியை இட்டு இருக்கிறது .இருந்தாலும் 332 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞர்களது கவிதை தொகுப்பை இன்று வெளியிட்டதில் கிழக்கு மாகாணம் பெருமை கொள்கின்றது.

 


2025 பொசோன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 பொசன் தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (பொது சுகாதார சேவைகள்) விசேட வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்துள்ளார்.


பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களின்படி, கொழும்பில் 944, கம்பஹாவில் 1,792, களுத்துறையில் 977, கண்டியில் 1,264, மாத்தளையில் 812, நுவரெலியாவில் 352, காலியில் 1,186, மாத்தறையில் 1,021, அம்பாந்தோட்டையில் 533, யாழ்ப்பாணத்தில் 03, கிளிநொச்சியில் 03, முல்லைத்தீவில் 17, வவுனியாவில் 21, மன்னாரில் 02, மட்டக்களப்பில் 09, அம்பாறையில் 584, கல்முனையில் 14, திருகோணமலையில் 152, குருணாகலையில் 2,114, புத்தளத்தில் 731, அனுராதபுரத்தில் 2,301, பொலன்னறுவையில் 650, பதுளையில் 968, மொனராகலையில் 716, இரத்தினபுரியில் 1,097 மற்றும் கேகாலையில் 922 என நாடு முழுவதும் தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


“பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தானசாலையை ஒழுங்கு செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில், கடந்த 2025 மே 6 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட வழிகாட்டுதல் தொடர் வெளியிடப்பட்டது.


இந்த வழிகாட்டுதல்களில், சுகாதார அதிகாரிகளுடன் தானசாலைகளை பதிவு செய்தல், பொது சுகாதார பரிசோதகர்களால் தகவல்களை சேகரித்தல், உணவு தயாரிப்பவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்தல், உணவு கையாளுபவர்கள் பின்பற்ற வேண்டிய கை சுத்தமாக வைத்திருத்தல் தொடர்பான சுகாதார நடைமுறைகள், உணவு கையாளுபவர்களின் சுகாதார நிலை, பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உணவு தயாரித்தல், கழிவு அகற்றல், உணவு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பரிசோதனை ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.


தானசாலைகளை நடத்துவது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையது எனவும், முறையற்ற உணவு தயாரிப்பு முறைகள், முறையற்ற சேமிப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளின் பற்றாக்குறை ஆகியவை இதற்கு காரணங்களாக அமைகின்றன எனவும், முறையான உணவு சுகாதார நடைமுறைகளை உறுதி செய்வது பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு இன்றியமையாதது எனவும், பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தானசாலையை ஒழுங்கு செய்வதற்கான வழிகாட்டுதல்களில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


 



தியாகத் திருநாள் ( அரபு: عيد الأضحى ஈத் அல்-அழ்ஹா) அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.



(வி.ரி.சகாதேவராஜா)

 நாடறிந்த கவிஞர் காரைதீவைச் சேர்ந்த அமரர் பொன்.சிவானந்தன்  தனது 82 ஆவது அகவையில் எழுதிய" மறைந்த தலைமுறைகளின் மறந்த சம்பவங்கள் "  எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (18) ஞாயிற்றுக்கிழமை மாலை காரைதீவில் இடம்பெற்றது.

இந் நூல் வெளியீட்டு விழா அவரது புத்திரன் பொறியியலாளர் சிவானந்தன் கனகானந்தன் தலைமையில் நடைபெற்றது .

அழைப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் ,காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி.அருணன், உதவி பிரதேச செயலாளர் கே. பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .

தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித் துறைத் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா நயவுரை நிகழ்த்தினார்.

மேலும் நிகழ்விற்கு காரைதீவு கல்முனை பாண்டிருப்பு மண்டூர் போன்ற இடங்களில் இருந்து அவரது உறவினர்கள் அபிமானிகள் மாணவர்கள் என நூற்றுக்கணக்கான ஊர் வருகை தந்திருந்தார்கள்.



 (  வி.ரி.சகாதேவராஜா)


 உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் 
சுவாமி விபுலானந்த
அடிகளாருக்கு உலகில் 15 அடி உயர முதல் கருங்கல் சிலை நாளை (17) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் திறந்து வைக்கப்படுகிறது.

 அடிகளாரின் துறவற  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு  சுவாமி விபுலானந்தர்  நூற்றாண்டு விழா சபையின்  பூரண ஏற்பாட்டில் ,மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில், இந்திய மாமல்லபுரத்தில் செதுக்கிய கருங்கல்லாலான  சுவாமி விபுலானந்த அடிகளாரின் திரு உருவச்சிலை நிறுவப்படுகிறது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ முன்னிலையில்  சுப வேளையில் கடந்த ஜனவரியில் அடிக்கல் நடும் நிகழ்வு  சிறப்பாக இடம் பெற்றமை தெரிந்ததே. 

 அடிகளாரின் சிலையானது தனி ஒரு     கருங்கல்லால்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   இது இந்தியாவில் மாமல்லபுரத்தில்   திறமை வாய்ந்த தமிழ் நாட்டு சிற்பிகளால்   செதுக்கப்பட்டது .

அடிகளாரின்  சிலை  அமைப்பு   செயற்     குழுவின்    தலைவரான    மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரான  தேசபந்து  முத்துக்குமார் செல்வராஜா  தலைமையில் சிலையமைப்பு பணிகள் நடைபெற்று நாளை அவர் தலைமையில் சிலைதிறப்பு விழா நடைபெறுகிறது.

நாளை முழுநாள் விழாவும் மட்டக்களப்பு நூற்றாண்டு விழாச் சபைத்தலைவர் கே. பாஸ்கரன் தலைமையில்  நடைபெறவுள்ளது .

இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் சிலையைத் திறந்து வைக்கிறார்.

உலகில், சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு தனிக் கருங்கல்லில் சிலை எழுப்பப்படுவதும், கல்லடிப்பாலத்தோடு நெருங்கிய தொடர்பு வரலாறுடைய மண்ணின் மைந்தர் சுவாமிக்கு கல்லடிப் பாலத்தில் சிலை எழுப்பப்படுவதும்  இதுவே முதல் தடவையாகும்.

இது தொடர்பாக- மட்டக்களப்பு
விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் தலைவர் க.பாஸ்கரன் தெரிவிக்கையில்..

முத்தமிழ் வித்தகரும் உலகில் முதலாவது தமிழ்ப்  பேராசிரியருமான சுவாமி விபலானந்தருக்கு  15 அடி உயரமான கற்சிலை  நாளை 17ஆம் திகதி பிற்பகல் 4.30  மணிக்கு  . மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

 முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் மகர யாழை ஆய்வு செய்து  அதற்கு உருவம் கொடுத்து உலகிற்கு தந்தவர் .அவரால் மகரயாழ் இன்றும் உயிர் வாழ்கிறது.

அது மட்டும் இன்றி உலகில் முதலாவது தமிழ் பேராசிரியராக பதவி பெற்று தமிழ் மொழிக்கும்  இனத்திற்கும் நன்கு சேவையாற்றியவர். குறிப்பாக தமிழர்களின் மத்தியில் இருக்கின்ற குல சாதி மத வர்க்க பேதங்களை அறவே ஒழிக்க பாடுபட்டவர் .இதற்கு மேலாக ஆன்மீகத்தில் துறவியாகி ஆன்மீக ஞானத்தை வழங்குவதில் அவர் காட்டிய உற்சாகம், வழிவகைகள் அளப்பெரியன. இப்படியான ஒரு மகான்  வாழ்நாளில் மறக்க முடியாதவர் அவரின் ஞாபகார்த்தமாக  15 அடி உயரமான கற்சிலையை  கல்லடி பாலத்திற்கு அருகாமையில் திறந்து வைப்பதில் விபுலானந்தரின் நூற்றாண்டு விழா சபை மிகவும் சந்தோசம் அடைகிறதென்றாறார்.

 சிலை நிர்மாணக் குழு தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா, சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் பொதுச் செயலாளர் ச.ஜெயராஜா ஆகியோரும் கருத்து கூறினர்.

 


நூருல் ஹுதா உமர்


புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி பயணிக்கின்ற முதல் ஹஜ் குழுவை வழியனுப்பும் நிகழ்வு இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கலந்து கொண்டு ஹாஜிகளை வழியனுப்பி வைத்தார். இதன் போது கருத்து தெரிவித்த சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி,

அனைத்து உலக முஸ்லிம்களாலும் போற்றி விரும்பப்படுகின்ற இஸ்லாத்தின் ஐந்தாவது முக்கிய கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக பயணிக்கும் ஹாஜிகளை வழியனுப்பி வைக்கும் நிaழ்வில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் சவூதி அரேபிய அரசாங்கம், ஹஜ்ஜுக்காக வரும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்குப் பணியாற்றுவதில் முழுமொத்த பங்களிப்பையும் தவறவிடாமல் செயல்பட்டு வருகிறது. ஹஜ் யாத்திரிகர்கள் சவூதிக்குள் வந்ததிலிருந்து தத்தமது நாட்டுக்கு திரும்பும் வரை அனுபவிக்கும் நலன், பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதிப்படுத்துவதற்கு நாட்டின் அனைத்து வளங்களையும் சவூதி அரசாங்கம் பயன்படுத்துகிறது.

இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சவூதி அரேபிய இராச்சியத்துடன் தொடர்புடைய நிறுவனங்களால் முழுமையாக பூரணப்படுத்தப் பட்டுள்ளன. யாத்திரிகர்கள் பாதுகாப்பாக, அமைதியான முறையிலும் ஆன்மிக ரீதியாக நிறைவு பெறும் வகையிலும் ஹஜ் கடமையை நிறைவேற்றக்கூடிய சூழலை உருவாக்குவதற்காக, சுகாதாரம், ஒழுங்கமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புகள் சிறப்பாக நடைபெறுவதற்காக, சவுதி அரேபிய இராச்சியம் மற்றும் இலங்கையின் அதிகாரிகள் வழங்கிய பயனுள்ள ஒத்துழைப்புக்கு இதயம் கனிந்த பாராட்டுகளையும் தெரிவிக்கிறோம். இந்த ஒத்துழைப்பு, எமது இரு நாடுகளுக்கு இடையிலான உறுதியான மற்றும் நட்பான உறவுகளை பிரதிபலிப்பதாக அமைகிறது.

எனவே இறுதியாக ஹஜ்ஜுக்காக செல்கின்ற அனைத்து யாத்ரிகர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரது ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்றுக் கொண்டு, எல்லோரது பாவங்களையும் மன்னித்து, பத்திரமாக திரும்பி வர அல்லாஹ் அருள்புரியட்டும் என்றும் நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அல்லாஹ் எமது நாடுகளை அமைதியாலும் வளமையாலும் தொடர்ந்தும் அருள்புரியட்டும் என்றார்



 ( வி.ரி.சகாதேவராஜா)


திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய நூற்றாண்டு விழா நேற்று (2) வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகியது .

1925 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த புனித சூசையப்பர் ஆலயத்தின்  நூற்றாண்டு விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. விழா எதிர்வரும் 11 ஆம் தேதி திருப்பலி பூஜையுடன் நிறைவுபெறவிருக்கிறது.

ஆலய
பங்குத்தந்தை அருட்தந்தை ஜென்சன் லொயிட் அடிகளாரின் தலைமையில் முதல் நாள் கொடியேற்றத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

விழாவில் அருட்தந்தை அம்புறோஸ் மறையுரை ஆற்றினார் .

ஆலய முதல் நாள் நிகழ்வில் அவ்வட்டாரத்துக்கான தலைவி திருமதி யுவராஜினி  ஆதி நாயகம் நன்றி உரையாற்றினார். திருமதி வேர்ஜினி பிரசாட் மன்றாட்டு வழங்கினார்.

நூறாறுக்கணக்கான கத்தோலிக்க மக்கள் அங்கு கலந்து கொண்டு கொடியேற்ற திருவிழாவிலும் ஏனைய நிகழ்வுகளிலும் பங்குபற்றினார்கள்.



( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின்  வருடாந்த வைகாசித்திங்கள் திருக்குளிர்த்திச்சடங்கு தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று (07) செவ்வாய்க்கிழமை காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது.


அதன் போது  பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் சடங்கு தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரிடமும் ஏற்பாடு தொடர்பாக கலந்துரையாடினார்.
அங்கு துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களும் பெறப்பட்டன.

ஆலய தர்மகத்தா பிரதம பொறியியலாளர் பரமலிங்கம் இராஜமோகன், அனைவரும் இணைந்து இப்பெரும் சடங்கை நடாத்த அழைப்பு விடுத்ததுடன் நன்றியுரையுமாற்றினார்.

இறுதியில் இவ்வருட திருக்குளிர்த்தி விஞ்ஞானம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஊர்ப்பிரசித்தம் தொடர்பான பட்டய நிகழ்வு இடம்பெறும்

சடங்குப் பெருவிழா எதிர்வரும்  13ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக்கால் நடும் பைவத்துடன்   ஆரம்பமாகின்றது.

இச்சடங்குப்பெருவிழா  தொடர்ந்து 08தினங்கள் நடைபெற்று   எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும். 

இரண்டாம் நாள் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.தொடர்ந்து புதன்கிழமை முதல்  ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து பகல் 1மணிக்கு பூசையும் மாலை 7மணிக்கு சடங்குப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.
20ஆம் திகதி திங்கட்கிழமை காலை மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் மாலை 3 மணிக்கு பொங்கலுக்கான நெற்குத்தும் வைபவமும் நடைபெறும்.

மறுநாள்(21) செவ்வாய் அதிகாலை திருக்குளிர்த்தி பாடப்பெறும்.

எட்டாம்சடங்கு 27ஆம் திகதி மாலை 7மணிக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
.

மேலும் இந்நிகழ்வில் கண்ணகி அம்மன் ஆலய வண்ணக்கர்கள், பரிபாலன சபையினர், பொலிஸ் உத்தியோகத்தர், சுகாதார பரிசோதகர், காரைதீவு பிரதேசத்தில் இயங்குகின்ற அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர், ஊடககர்கள்,பொது அமைப்புக்கள், கழகங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


உலக சனத்தொகை புள்ளிவிபரங்களின்படி, பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று நாட்டின் தொழில்துறையில் முன்னின்று உழைக்கும் சக்தியாக பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் கடின உழைப்பில் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றது. ஆண்களைப் போலவே பெண்களும் இன்று வேலைத் தளங்களுக்குச் சென்று உழைத்து ஊதியம் பெறுகின்றனர். மற்றுமோர் வகையில் முறைசாறாத் தொழில்களில் அற்பணிப்புடன் ஈடுபட்டு அதில் பெருமளவு சம்பாதித்து தொழில் வளங்குனர்களாக மாறியிருப்பதையிட்டு பெண் சமுகம் பெருமை கொள்கிறது. அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம்; பெற்றிருந்தாலும், அதற்கான சமூக அங்கீகாரமும், சமத்துவமும் கிடைப்பதில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் கருத்துத் தெரிவித்தார்.

பெண்கள் தொடர்பாக பணியாற்றுகின்ற அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கான கூட்டம் 2021.02.25 அன்று கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்தில்  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வின் போது கருத்;துத் தெரிவித்த அஸீஸ்,  பிள்ளை வளர்ப்பு விடயத்தில் அதீத அக்கறை காட்டி ஒவ்வொரு தாய்மாரும் தங்களை சிறந்த நிர்வாகிகளாகவும், வாழ்க்கைத் துணைவனான கணவனின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து செயற்பட்டு தன்னை அறிவாற்றல்மிக்கவளாய் குடும்ப சூழலில் ஒரு பெண் எத்தகைய நிலையிலும் வாழப் பழகி;க் கொள்கிறாள். எமது நாட்டில் இன்று போதைப்பொருள் பாவனை சிறியோர் முதல் வயோதிபர் வரை மலிந்து காணப்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தாய்மார்களே.

சொகுசு வாழ்க்கையில் விருப்பம் காட்டி எத்தனையோ வங்கிகள் நுண்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி பெண்களை கடன்காரர்களாக ஆக்குகிறது. ஆடம்பரப்பொருட்களை கொள்வனவு செய்து அதனை மாதாந்த தொகையுடன் செலுத்த முடியாமல் எத்தனையோ பெண்கள் பரிதவிக்கின்றனர். பெண்கள் மீதான அடக்கு முறைக்கெதிரான மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்க வேண்டிய தேவைப்பாடு அனைவருக்கும் உள்ளது. பெண்கள் பொறுமை, அடக்கம் போன்ற குணாதிசயங்களைக் கொண்டிராத சந்தர்ப்பத்தில் பெண்மை இழந்தவள் என்று இந்தச் சமூகம் முத்திரையிடுகிறது.
 
பெண்களுக்கான உரிமை இல்லாதவிடத்தில் மனித உரிமைகள் இருக்க முடியாது. மணமுடித்த கணவன் மனைவியையும், பிள்ளைகளையும் அநாதரவாய் விட்டுச் சென்றுள்ளானெனவும், பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமல் வாழ்க்கைச் சுமைகளை சுமந்து கண்ணீர் விட்டழுகின்ற பெண்களின் நிலை பற்றியும், குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண் அதனை நடவடிக்கைக்காக கொண்டு வருவதில்லையெனவும், கொரோனா தொற்று காலத்தின் போது வீட்டில் அனைவர்களும் முடங்கிக் கிடந்த போது பெண்ணானவள் இயந்திரம் போல் வேலை செய்து குடும்பச் சுமைகளுடன் உருக்குலைந்து போனதையும்  நாம் கவனஞ்செலுத்த வேண்டும் எனவும், இவ்விடயங்களை பெண்கள் தொடர்பாக பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்கள்  பொறுப்புடன் கையாள வேண்டும் என அஸீஸ் கருத்துத் தெரிவித்தார். 

 


“உங்களுக்கு (ஸலாம் எனும்) வாழ்த்து கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது குறைந்தது அதைப்போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்.” (குர்ஆன் 4:86)இஸ்லாமிய வாழ்வியல் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது எப்படி முகமன் கூறவேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது. அதுதான் “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்) எனும் வாழ்த்து. வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் கட்டத்திலும், இன்பமான நேரங்களிலும், துயரத்தின்போதும் இந்த வாழ்த்தைச் சொல்லமுடியும். இது ஒருபுறம் வாழ்த்து, இன்னொரு புறம் பிரார்த்தனையும் ஆகும். மரணம் அல்லது நோய் பாதித்த வீட்டிற்குச் செல்லும்போதுகூட அங்குள்ளவர்களுக்கு நம்மால் ஸலாம் சொல்லமுடியும்.

ஏனெனில் அது ஒரு பிரார்த்தனையாகவும் இருப்பதால்.ஓர் இறை நம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளரைப் பார்த்து “உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்” என்று சொல்லும்போது தெளிவான வாக்குறுதி ஒன்றையும் அளிக்கிறார்.அது என்ன வாக்குறுதி?“என் கைகள் மூலமாகவோ என் செயல்கள் மூலமாகவோ உங்களுக்கு எந்தத் தொல்லையும் அளிக்கமாட்டேன். சாந்தியும் அமைதியும் உங்கள் வாழ்க்கையில் நிலவ உதவியாக இருப்பேனே தவிர, ஒருபோதும் உங்கள் நிம்மதியைக் குலைக்கும் வகையில் தொல்லை தரமாட்டேன்.”அதனால்தான் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: உங்களிடையே ஸலாமைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அது அன்பை வளர்க்கும்.”ஒருமுறை தோழர் ஒருவர் அண்ணல் நபிகளாரிடம், “மார்க்கத்தில் சிறந்த செயல் எது?” என்று கேட்டார்.

அதற்கு நபிகளார், “பசித்தவர்களுக்கு உணவு அளிப்பதும், அறிந்தவர்கள் - அறியாதவர்கள் அனைவருக்கும் ஸலாம் - முகமன் கூறுவதும் ஆகும்” என்று கூறினார். மார்க்க அடிப்படையில் ஸலாம் கூறுவது நபி வழியாகும். ஒருவர் ஸலாம் கூறிவிட்டால் அதற்குப் பதில் அளிப்பது கடமையாகும். பதில் கூறாமல் இருப்பது குற்றமாகும். சிலர் நாம் ஸலாம் கூறினால் வாய் திறந்து பதில் கூற மாட்டார்கள். கையைத் தூக்கிக் காட்டுவார்கள் அல்லது தலையை மட்டும் அசைப்பார்கள். இது தவறாகும். நன்றாக வாய் திறந்து பதில் ஸலாம் கூற வேண்டும்.“அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்) என்று மட்டும் கூறினால் பத்து நன்மைகள் கிடைக்கும். ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி’ (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் கருணையும் பொழியட்டும்) என்று கூறினால் இருபது நன்மைகள் கிடைக்கும்.

இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு’(உங்கள் மீது இறைவனின் சாந்தியும் கருணையும் அருள்வளமும் பொழியட்டும்) என்று கூறினால் முப்பது நன்மைகள் கிடைக்கும். இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான நபிமொழித் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது. (திர்மிதீ, அபூதாவூத்) இரண்டு நண்பர்கள் அல்லது இரண்டு சகோதரர்கள் சண்டை போட்டுக்கொண்டு நாள் கணக்கில் வாரக்கணக்கில் பேசாமல் இருப்பார்கள். “இத்தகைய கோபதாபங்களை எல்லாம் மூன்று நாட்களுக்குள் தீர்த்துக்கொள்ளுங்கள். சண்டை போட்டுக்கொண்ட இரு சகோதரர்களில் யார் முதலில் ஸலாம் சொல்கிறாரோ அவரே இறை வனின் பார்வையில் சிறப்புக்குரியவர்” என்று கூறுகிறது  இஸ்லாமிய வாழ்வியல்.  இறைத்தூதர் காட்டிய இனிய வழியில் அனைவருக்கும் ஸலாம் சொல்லி இறைவனின் அருளைப் பெறுவோம். மனிதர்களின் அன்பையும் பெறுவோம்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

RELATED STORIES:

>

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.