Showing posts with label A. Show all posts


திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.


இச் சம்பவம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.


விபத்தில் மின்சார சபையின் மின்கம்பங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு திருமண வீடொன்றுக்கு பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


மாவனெல்ல, மணிக்காவ பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் மூவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

 


#மட்டக்களப்பில்  பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் #நிமலரஞ்சன்  காலமானார்.


 மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட  காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள்   திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  இன்றைய தினம் இயற்கை எய்தினார் .


திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர் மட்டக்களப்பு மக்களாலும் போதனா வைத்தியசாலை சமுகத்தாலும் பார்க்கப்படுகிறார். தனது வைத்தியத் திறமையினால்  நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த  வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல  முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.


அன்னாரின் இழப்புக்கு மட்டக்களப்பு மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர் ஆற்றிய சேவை அவரது ஆத்மாவை நிச்சயம் இறைவன் திருப்பாதம் சேர்க்கும்.

 


கடந்த ஒரு வருடத்தில், கூகுள் ஒரு மாற்றத்தைச் செய்துள்ளது, நீங்கள் அதைக் கவனித்திருக்கலாம்.


முன்பு, நீங்கள் இணையத்தில் எதையாவது தேடும்போது, அது தொடர்பான இணைப்புகளின் பட்டியல் கிடைக்கும்.


ஆனால் இப்போது அதற்கு பதிலாக, செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய பதில்கள் கிடைக்கிறது.


இந்த பதில்களை "செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) " என்று அழைக்கிறது கூகுள் .


சில நேரங்களில் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

கூகுள் டயலர், ஸ்மார்ட்போன் திரை, கூகுள் அப்டேட்

ஸ்மார்ட்போனில் மீண்டும் பழைய கால் செட்டிங்ஸ் பெறுவது எப்படி? படங்களுடன் எளிய விளக்கம்

அமெரிக்க வரி, டிரம்ப் வரி, இந்தியா 50% வரி, trump tariffs, america tariff on india, usa tariff, tariff news today 

அமெரிக்காவின் 50% வரியை எதிர்கொள்ள இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் 5 விஷயங்கள்

ராமலிங்க விலாசம் மாளிகை

கட்டபொம்மன் - ஜாக்சன் 'சந்தித்த' மாளிகையில் உள்ள ஓவியங்களும் சுரங்கப்பாதையும் உணர்த்தும் ரகசியம்

தொற்று பாதித்த பசுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்க்ரூவர்ம் ஈயின் புழுக்கள், ஒரு வெள்ளை பாத்திரத்தில் வைத்து ஆய்வு செய்யப்படுகின்றன. 

சதை உண்ணும் ஒட்டுண்ணி பாதிப்பு அமெரிக்காவில் ஒருவரிடம் முதன் முறையாக கண்டுபிடிப்பு

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால் சில நேரங்களில், தவறான தகவல்களை அளித்து, மக்களை குழப்புகின்றன.


அதேபோல், இந்த செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) நீங்கள் அடுத்து என்ன செய்யத் தேர்வு செய்கிறீர்கள் என்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன.


இந்த ஆண்டு, 900 அமெரிக்க இணைய பயனர்கள் இணையத்தில் தாங்கள் தேடுபவற்றைக் கண்காணிக்க, பியூ ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி கொடுத்தனர்.


"செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தோன்றும் தேடல்களில், இவர்கள் இணைப்புகளை கிளிக் செய்யும் வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும், அவர்கள் தேடுவதை முழுவதுமாக நிறுத்துவதற்கும் அதிக வாய்ப்பு இருந்தது," என பியூவின் டேட்டா லேப்ஸ் இயக்குநர் ஆரோன் ஸ்மித் கூறுகிறார்.


கூகுளில் தேடும்போது, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தோன்றும்போது, பயனர்கள் இணையதள இணைப்புகளை கிளிக் செய்யும் வாய்ப்பு கிட்டத்தட்ட இரு மடங்கு குறைவாக இருந்தது. மேலும், 26% சமயங்களில், அவர்கள் தேடுவதையே நிறுத்திவிட்டனர் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.


இது மிக முக்கியமானது, ஏனென்றால் மக்கள் ஆண்டுக்கு ஐந்து பில்லியன் முறை கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்துகின்றனர். இணையதள செயல்பாடுகள் தொடங்கும் இடமும் இதுதான்.


பெரும்பாலான வலைத்தளங்கள், அதிலும் குறிப்பாக, பொருட்களை விற்காமல் தகவல் மற்றும் உள்ளடக்கம் வழங்கும் வலைத்தளங்கள் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுகின்றன.


இந்த டிஜிட்டல் சூழல் பார்வையாளர்களின் எண்ணிக்கையைச் சார்ந்து இயங்குகிறது. ஆனால், கூகுளின் தேடல் முடிவுகளில் வலைத்தளங்கள் தோன்றுவதை குறைத்து, ஒரே இரவில் வணிகங்களை அழித்துவிடலாம்.


இணைய பயன்பாடு 

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பல தளங்கள், கூகுளில் உள்ள இணைப்புகள் மூலம் பயனர்கள் பார்வையிடுவதை தான் நம்பியுள்ளன.

"பெரும்பாலான வலைத்தளங்கள் இயங்குவதற்கு கூகுள் பார்வையாளர்கள் தேவை," என மார்க்கெட்டிங் நிறுவனமான ஆம்சிவ் நிறுவனத்தின் தேடுபொறி குறித்த பிரிவின் துணைத் தலைவர் லில்லி ரே கூறுகிறார்.


"ஆனால், செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) பார்வையாளர்களை பெருமளவு குறைத்து, வலைத்தளங்களின் வருமானத்தை 20%, 30%, அல்லது 40% வரை சரியச் செய்கின்றன. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான ஊக்கத்தைக் குறைக்கிறது."


கூகுளின் புதிய செயற்கை நுண்ணறிவு பயன்முறை, பாரம்பரிய தேடல் முடிவுகளை முற்றிலும் நீக்குவதால், இது மேலும் மோசமாகலாம்.


லில்லி ரே மற்றும் நிபுணர்கள் இது பேரழிவை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர்.


சிலர் இது நாம் அறிந்த இணையத்தை அழித்துவிடலாம் என அஞ்சுகின்றனர்.


வலைத்தளங்களை செயற்கை நுண்ணறிவு அழித்துவிடுமா?

வலைத்தளங்களைப் பார்வையிடுவதற்காக மக்கள் வருவதை, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) குறைக்கின்றன என்று சொல்லப்படும் கருத்தை 'முட்டாள்தனம்' எனக்கூறி மறுக்கிறது கூகுள்.


"நாங்கள் ஒவ்வொரு நாளும் வலைத்தளங்களுக்கு பில்லியன் கணக்கான கிளிக்குகளை இயக்குகிறோம், அதில் பெரிய சரிவு இல்லை",


மேலும், "இந்த ஆய்வு தவறான முறையையும், தேடல் போக்குவரத்தை சரியாக பிரதிநிதித்துவப்படுத்தாத, ஒரு சார்பு கொண்ட கேள்விகளையும் பயன்படுத்துகிறது"என கூகுளின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.


ஆனால், பியூ நிறுவனம் தங்களது ஆராய்ச்சியில் உறுதியாக உள்ளது.


"எங்கள் முடிவுகள், வலை பகுப்பாய்வு நிறுவனங்களின் சுயாதீன ஆய்வுகளுடன் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன," என ஆரோன் ஸ்மித் கூறுகிறார்.


கூகுளில் தேடப்படும் விஷயங்களைப் பொறுத்து, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தேடல் போக்குவரத்தை 30% முதல் 70% வரை குறைக்கின்றன என பல அறிக்கைகள் கூறுகின்றன.


நூற்றுக்கணக்கான வலைத்தளங்களின் தரவைப் பயன்படுத்தி இதை தானே சோதித்ததாக ரே கூறுகிறார்.


ஆனால், கூகுள் இதை ஏற்கவில்லை.


ஆராய்ச்சி தவறானது, தரவுகள் சார்புடையவை, மற்றும் அர்த்தமற்ற தரவுகளை மேற்கோள் காட்டி, அதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பிபிசியிடம் கூறுகிறது கூகுள்.


மக்கள் வலைத்தளங்களுக்கு சென்று தேடுவது பல காரணங்களால் மாறுபடுவதாகவும், செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) பலவகையான இணைப்புகளை வழங்கி, வலைத்தளங்களைக் கண்டறிய புதிய வழிகளை உருவாக்குவதாகவும் கூகுள் கூறுகிறது.


செயற்கை நுண்ணறிவு சுருக்கங்களில் (AI summaries) இருந்து வரும் தரவுகள் உயர்தரமானவை, ஏனெனில் பயனர்கள் அந்தத் தளங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர் என கூகுள் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார்.


ஆனால் அதற்கு முரணாக, கூகுளின் சொந்த செயற்கை நுண்ணறிவு, அதன் மக்கள் தொடர்பு துறையின் கருத்தை மறுக்கிறது.


கூகிள் ஜெமினியிடம் கேட்டால்,செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) வலைத்தளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கூறும்.


ஆதாரம் தெளிவாக உள்ளது. "கூகுள் தகவல்களை மாற்றி, உண்மையை மறைக்க முயல்கிறது, ஏனெனில் அது மக்களை பயமுறுத்தும்," என்கிறார் ரே.


ஆனால் கூகுள் நிறுவனம் தாங்கள் வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளதாகக் கூறுகிறது.


 கூகுள்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த காலத்தில், கூகுள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இணைப்புகளை வழங்கியது.

குழப்பும் செயற்கை நுண்ணறிவு

ஆனால், இதைத்தான் நாம் அனைவரும் விரும்புகிறோமா என்ற மற்றொரு கேள்வியும் உள்ளது.


"மக்கள் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் அனுபவங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். தேடலில் உள்ள செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மக்கள் மேலும் கேள்விகளைக் கேட்க உதவுகின்றன, இது வலைத்தளங்களுடன் இணைவதற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது," என கூகுள் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார்.


ஆனால், இது அர்த்தமற்றது என ரே கூறுகிறார்.


"கூகுள் 'இனி யாரும் கிளிக் செய்ய விரும்பவில்லை' என்று சொல்லலாம். ஆனால் அது மற்றவர்களின் கடின உழைப்பில் லாபம் ஈட்டுகிறது. தகவல்களை உருவாக்கிய தளங்களுக்கு பார்வையாளர்கள் செல்வதை, கூகுளின் செயற்கை நுண்ணறிவு தடுக்கிறது" என்கிறார் ரே.


வலைத்தளங்களை விடுங்கள், ஏஐயின் தவறான தகவல்களைத் தரும் பழக்கம் உங்களுக்கும் கெடுதல் தரும் என்று ரே கூறுகிறார்.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் 

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"செயற்கை நுண்ணறிவு பற்றிய பொதுவான விளக்கங்கள் பெரும்பாலும் தவறாக இருக்கின்றன," என்கிறார் அவர்.


"இது வலைத்தளங்களில் இருந்து பார்வையாளர்களை பறிப்பது மட்டுமல்ல, பயனர்கள் வெவ்வேறு தகவல்களை ஆராய்ந்து, விரும்பியவற்றைத் தேர்ந்தெடுத்து, முடிவுகளை எடுக்கும் திறனைக் கொள்ளையடிப்பது போன்றது."


ஏஐயின் பதில்கள் உதவிகரமாகவும், புறநிலை அம்சம் கொண்டதாகவும், மற்ற தேடல் அம்சங்களுடன் ஒப்பிடக்கூடிய துல்லியத்துடனும் உள்ளன என்கிறது கூகுள்.


ஒருவேளை இந்த ஒப்பந்தத்தில் நாமும் சேர்ந்திருக்கலாம்.


ஏனென்றால், பதில்கள் விரைவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.


நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் குறைகிறது.


செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே முடிவுகளை எடுத்துக் கொடுத்து விடுவதால், வெவ்வேறு ஆதாரங்களை ஆராய வேண்டிய தேவையும் குறைகிறது அல்லவா?.


ஆனால், கூகுள் தவறு செய்து வலைத்தளங்கள் மறையத் தொடங்கினால், அது நாம் தவறான இணைப்பை கிளிக் செய்ததால் இருக்காது. நாம் தேடுவதை முற்றிலும் நிறுத்தியதால் தான் இருக்கும்.

 


கவர்ச்சிகரமான பெண்களின் பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்களுடன் ஆபாசக் கதைகளையும் இடம்பெற்ற யூடியூப் சேனலை நடத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு, கொழும்பு தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி ஜெயதுங்க நேற்று ஐந்து ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தார். 

குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு தாக்கல் செய்த வழக்கில் சந்தேக நபரான "டோபியா" என்றும் அழைக்கப்படும் திமுத்து சாமர. 


கொழும்பு பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடங்கப்பட்டது. பாலியல் ரீதியாக வெளிப்படையான கதைகளை ஒளிபரப்பும் யூடியூப் சேனலில் தனது புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக ஆசிரியை குற்றம் சாட்டினார். 


வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜரானார். 


சந்தேக நபரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே ஆபாச ஒளிபரப்புகளை நிறுத்திவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது வாடிக்கையாளர் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்கு அனுமதிக்கும் வகையில் மறுவாழ்வு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். 


புகார்தாரர் சந்தேக நபரிடமிருந்து ஏதேனும் இழப்பீடு எதிர்பார்க்கிறாரா என்று நீதிபதி விசாரித்தார். ஆசிரியை இழப்பீடு கோரவில்லை என்று பதிலளித்தார். 


சந்தேக நபர் முன்கூட்டியே குற்றத்தை ஒப்புக்கொண்டது மற்றும் ஆபாச உள்ளடக்கத்தை நிறுத்துவதற்கான அவரது முடிவு உள்ளிட்ட உண்மைகளை பரிசீலித்த பிறகு, தலைமை நீதிபதி ஐந்து ஆண்டுகளுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையையும், ரூ. 2,500 அபராதத்தையும் விதித்தார்.


 Japan 🇯🇵 ஆதிக்கத்தில் இருந்து போராடி கொரியா 🇰🇵 நாட்டிற்கு சுதந்திரம் பெற்ற 80_வது ஆண்டில் அந்த விடுதலையில் உதவிய ரஷ்யா 🇷🇺 கொடியுடன் இணைந்த தபால் தலை வெளியிட்டது North Korea 🇰🇵


( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட விபுலாநந்த புனர்வாழ்வு அமைப்பின் (ADVRO) அனுசரணையில் நடாத்தப்படும் உதவித்தாதிய பயிற்சிநெறியை பூர்த்தி செய்த மூன்றாவது தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்று  28.07.2025 திங்கட்கிழமை மட். குருக்கள்மடத்தில் நடைபெற்றது .

குருக்கள்மடம் விபுலாநந்த முதியோர் பராமரிப்பு நிலைய மண்டபத்தில் அமைப்பின் தலைவர் டாக்டர் தியாகராஜா பெரியசாமி (தலைவர் ADVRO -UK)  தலைமையில் இவ் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் இரா. முரளீஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஏனைய அதிதிகளாக மருத்துவர்களான திருமதி பு.லோகநாதன் , வா.ஞானரெட்ணம் ,வீ.அற்புதன்) , மற்றும் சா.அருள்மொழி ( மா.ச.சே உத்தியோகத்தர்) , எந்திரி த.மயூரன் எந்திரி தே.சர்வானந்தன்,க, அழகரெட்ணம் ( போதனாசிரியர் உ.தா.உத்தியோகத்தர்) உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்விலே உதவி தாதிப் பயிற்சியை நிறைவு செய்த மூன்றாவது தொகுதி மாணவர்கள் 16 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.




 #அக்கரைப்பற்று 5ம் குறிச்சியை சேர்ந்த , அக்கரைப்பற்று #மாநகர_சபையின் உறுப்பினர் பொறியிலாளர் #சிராஜுதீன் அவர்கள் காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


ஜனாஷா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


 

இந்தியாவின் ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய பகுதிகளில் மே 8 (வியாழக்கிழமை) இரவு பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது.


நேற்றிரவு இந்திய பாதுகாப்பு அமைச்சகம், "ஜம்மு, பதான்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன," என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


மே 8 இரவு, ஜம்மு நகரத்தில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டத்தைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. ஜம்மு விமான நிலையத்திலும் வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது.


விளம்பரம்


இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்

படக்குறிப்பு,ஜம்மு முழுவதும் மின்வெட்டு அமலில் இருப்பதாக பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா தெரிவித்தார்.

ஜம்முவில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறியது என்ன?

ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின் தடை அமலில் இருப்பதாகக் கூறினார்.


அப்பகுதியில் இருந்து செய்திகளை வழங்கி வரும் திவ்யா ஆர்யா, "பூஞ்ச் நகரத்தில் மின் தடை அமலில் உள்ளது. தற்போது விமான தாக்குதலின் சைரன்களை கேட்டதாகவும், குண்டு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதோடு, அவர்கள் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்குள்ள எங்கள் குழுவினர் தெரிவித்தனர்," என்று கூறினார்.


மேலும், ஜம்மு நகரிலும் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறிய அவர், இரவு 08:45 மணியளவில் ஒரே நேரத்தில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.


"ஜம்மு நகரின் தெற்கு நோக்கிச் சென்றால், அங்குதான் எல்லாம் தொடங்கியது" என்கிறார் திவ்யா ஆர்யா. அங்கு வசிக்கும் மக்களிடம் இருந்து வெடிப்புகள் குறித்த தகவல்கள் கிடைத்தன.


"ஜம்மு நகரில் சுமார் 10 வெடிப்புகள் கேட்டதாக ஜம்மு நகரின் ஒரு குடியிருப்பாளர் என்னிடம் தெரிவித்தார். அதன் பிறகு நகரத்தில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. வழக்கமான தொலைபேசி இணைப்புகளிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் அழைப்புகள் மட்டுமே வேலை செய்கின்றன."


இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்பட மூலாதாரம்,ANI

நேற்றிரவு முதல் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளதாகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் திவ்யா ஆர்யா கூறினார்.


"ஜம்முவில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் இருக்கும் கத்துவாவில் வாழும் மக்களிடமும் நான் பேசினேன். அங்கு குறைந்தது இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்."


இதற்கிடையே, ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சல்மர், பஞ்சாபின் குர்தாபூர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


இந்தியாவின் அரசு ஊடகமான டிடி நியூஸ், பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஜம்முவில் அமைந்திருக்கும் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதோடு, ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் இந்திய வான் பாதுகாப்புப் பிரிவுகள் இடைமறித்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாகவும் டிடி நியூஸ் தெரிவித்துள்ளது.


இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்பட மூலாதாரம்,Getty Images

மூடப்பட்ட சிவில் விமான நிலையங்கள்

பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் சிவில் சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளன.


நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் உத்தரவிட்டுள்ளது.


அறிவுறுத்தல்களின்படி, அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்துப் பயணிகளுக்கும் இரண்டாம் நிலை சோதனைகள் (SLPC) மேற்கொள்ளப்படும். மேலும், விமான நிலையங்களில் ஏர் மார்ஷல்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தை மேற்கோள் காட்டியுள்ள ஏர் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில், உள்நாட்டுப் பயணிகள் இப்போது விமான நிலையத்திற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே வந்து சேர வேண்டும் எனவும், செக்-இன் கதவுகள் 75 நிமிடங்களுக்கு முன்பே மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 



தம்பிலுவில்01 பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் திருட்டூ சம்பவம்.... .


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் 01 பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிரூந்ந மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளது.....


இது பற்றி தெரியவருவது தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலத்திற்கு அருகில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Ep MF 5936 எனும் இலக்க தகடு உடைய மோட்டார் சைக்கிளே திருடப்பட்டுள்ளது......


குறித்த  மோட்டார் சைக்கிள் கண்டிருந்தாலோ தகவல் தெரிந்திருந்தால்  திருக்கோவில் பொலிஸ்க்கு தகவல் வழங்கவும்.....

 


ஒலுவில், பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை மரணித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், பர்வத் உமர் உஸ்மான் என்னும் ஆண் குழந்தை ஆகும்

 


ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தோட்டை - லூல்கந்துர பகுதியில் நேற்று (07) பிற்பகல் மாலை பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரிந்து ஹகுரன்கெத்தவிலிருந்து தெல்தோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பேருந்தின் சாரதி மற்றும் இரண்டு பெண் பணியாளர்களும் காயமடைந்து தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தோலில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றல் மற்றும் தோலில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.


குறித்த நோய் நிலைமைக்கு சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 




தொழில் முறை தவறியதற்காக வழக்கறிஞர் ஒருவர் வழக்கறிஞராகப் பணியாற்றுவதை 8 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பிசிஓஐயின் நடைமுறை விதிகளுக்கு மாறாக, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (பிசிஓஐ) நடவடிக்கைகளின் ஒரு பகுதியை கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி பதிவு செய்ய மௌலவிக்கு உதவியதற்காக இது.


நீதியரசர் புவனேக அலுவிஹாரே, எஸ்.துரைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், பிரதிவாதியான சட்டத்தரணி நிசாம் மொஹமட் ஷமீமை 8 மாதங்களுக்கு சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞரின் இடைநீக்கம் ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும்.
 சட்டத்தரணி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கலபொட அத்தே ஞானசார தேரர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

கையடக்கத் தொலைபேசியை வளாகத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாத நிலையில், சட்டத்தரணியிடம் கையடக்கத் தொலைபேசியை வைத்துக்கொள்ளுமாறு மௌலவி முல்லாஃபர் கோரிக்கை விடுத்திருந்தமை தெரியவந்துள்ளது. வழக்கறிஞர்கள் மட்டுமே தங்கள் மொபைல் தொலைபேசிகளை வளாகத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.



உச்ச நீதிமன்றத்தின் விதிகள் 60 மற்றும் 61 (வழக்கறிஞருக்கான நடத்தை மற்றும் ஆசாரம்) விதிகள் 1988ஐ மீறியதற்காக பிரதிவாதிக்கு எதிராக ஒரு விதி பிறப்பிக்கப்பட்டது.
 
ஃபைஸ் முஸ்தபா பிசி உடன் என்.எம்.ஷாஹெய்ட் பிசி மற்றும் எம்.ஏ.சைட் ஆகியோர் பிரதிவாதிக்காக ஆஜராகினர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்காக சதுரிகா எல்விட்டிகலவுடன் ரொஹான் சஹபந்து பிசி ஆஜரானார். சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனக வாகிஷ்ட ஆராச்சி ஆஜரானார். (லக்மால் சூரியகொட)

 வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் 10 ஆவது ஆண்டு

நிறைவை முன்னிட்டு நடத்திய அமரர் திரு திருமதி அருளானந்தம் ஞாபகார்த்த கிண்ண முக்கோண சுற்றுப் போட்டியில் கிழக்கு பல்கலைக்கழக ஹொக்கி   அணிகள் பங்கேற்றது .

இந் நிகழ்வு  காரைதீவு விபுலானந்த மைதானத்தில் தலைவர்
தவராசா லவன் தலைமையில் நேற்று முன்தினம்(9) ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக ஆண் ,பெண் ஹொக்கி அணியினரும், காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணியினரும் மூன்று போட்டிகளில் மோதினர்.
 முதல் இரண்டு இரண்டு போட்டிகளில் காரைதீவு அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் கிழக்கு பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது. 

 பிரதமர் அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்து சிறப்பித்தார்.

ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் வளர்ச்சி அதன் ஸ்தாபக தலைவர் த.லவனின் அதீதமான அயராத முயற்சி மற்றும் அதன் சாதனைகள் பற்றி சிறப்புரையாற்றினார்.

 கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை செயலாளர் ஏ. சுந்தரகுமார், முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் அ.
மகேந்திரராஜா, அஸ்கோ அமைப்பின் தலைவர் ஏ. விவேகானந்தராஜா, செயலாளர் ச. நந்தகுமார், பொருளாளர் அ.சுந்தரராஜன், இணைப்பாளர் ரி.புவனேந்திரராஜா,  ஆசிரியர்  எஸ்.பாஸ்கரன், விளையாட்டு உத்தியோகத்தர் வி.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கிழக்கு பல்கலைக்கழக ஹொக்கி பயிற்றுவிப்பாளர் எஸ்.கிருஸ்ணபிரபு விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு வீரர்களுக்கும் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 


மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த  சிரேஷ்ட அரசியல் - தொழிற்சங்க வாதியான 'மனிதருள் மாணிக்கம்' என போற்றப்படும் அமரர். அப்துல் அஸீல் அவர்களின், மகனான  அஷ்ரப் அசீஸ் இன்று (16.06.2023) அதிகாலை காலமானார் .


அஷ்ரப் அசீசும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தவர். அசீஸ் காங்கிரஸ் எனும் தொழிற்சங்கத்தை நிறுவி, அதன் ஊடாக அரசியல், தொழிற்சங்க பணிகளை முன்னெடுத்தவர். 


உடல்நலக்குறைவால் சில வருடங்களாக அவர் செயற்பாட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை.  கொழும்பு, பம்பலப்பிட்டியவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை காலமானார்.

 

அவரின் ஜனாசா கொழும்பு,  தெமட்டகொடை, குப்பியாவத்த முஸ்லிம் மையவாடியில் இன்று முற்பகல் 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


மலையக வரலாறு குறித்து பேசும்போது அசீஸ் அவர்களின் குடும்பத்தை மறந்து - கடந்துபோக முடியாது.


1939 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய காங்கிரஸ் உதயமானபோது ஆரம்பகால அங்கத்தவராக இடம்பிடித்தவர் அசீஸ். காலப்போக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவியையும் அலங்கரித்தவர். தொண்டமான் அணியுடன் கொள்கை ரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக காங்கிரஸ் இருந்து வெளியெறி

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார். ( அந்த தொழிற்சங்கம் தற்போது மனோ அணியின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது)


மலையகத்தை மட்டுமல்ல முழு இலங்கையையும் உலுக்கிய 1966 ஆம் ஆண்டில் சுமார் 45 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக பஞ்சப்படி போராட்டத்துக்கு அசீஸே அறைகூவல் விடுத்திருந்தார். சம்பள நிர்ணய சபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 


மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தவர்தான் அசீஸ்.


தந்தைபோல் தீவிர நடவடிக்கையில்   அஷ்ரப் அசீஸ் ஈடுபடாதபோதிலும், அவரின் உடலில் இறுதி மூச்சு இருக்கும்வரை, மலையக மக்களுக்காக அவரின் குரல் ஒலித்துகொண்டே இருந்தது.


ஆத்தா இளைப்பாறட்டும்.


ஆர்.சனத்


#ஜனாஸா_அறிவித்தல்!
கௌரவ தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களுடைய சிறிய தந்தை #ARMசெய்புதீன் அவர்கள் இன்று (12) தாராபுரத்தில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...

மேலதிக தகவல்கள் விரைவில்.

 


கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் வேணுகானன் நயனகேஷன் 7 வயது ஆண்கள் பிரிவிலும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சிவஞானவேல் நர்த்தவி 15 வயது பெண்கள் பிரிவிலும் தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்று கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள சதுரங்கப் போட்டியில் விளையாட தகுதி Instructions!

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.