வாகாயாமா என்ற இடத்தில் அவர் ஒரு நிகழ்வில் உரையாற்ற இருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
ஒரு ஆள் பிரதமர் மீது ஏதோ ஒன்றை வீசியதாகவும், அதைத் தொடர்ந்து அங்கே புகை கிளம்பியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். ஒரு பெரிய சத்தம் கேட்டதாக மற்றொரு நேரில் கண்ட சாட்சி கூறினார்.
சந்தேகிக்கப்படும் நபர் என்று தோன்றும் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடிப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த நபரை கைது செய்துவிட்டதாக கூறும் போலீஸ் மேற்கொண்டு எதையும் தெரிவிக்கவில்லை.
ஜப்பான் நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. வெளியிட்ட ஒரு காணொளியில் மக்கள் அந்த இடத்தை விட்டு கூட்டமாக ஓடுவது தெரிகிறது.
#GotaGoHome எதிர்ப்பாளர்களை, அழகிய மைதானத்தை கண்டும் காணாத காலி கோட்டை அரண்களிலிருந்து இராணுவம் வெளியேற்றியதை அடுத்து பேரழிவு ஏற்பட்டது. பதிலடி என்கிறார்கள் போராட்டக்காரர்கள்!?
யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசனின் அறிவுறுத்தலின் பிரகாரம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதற்கான நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இந்த மருத்துவ உபகரணங்கள், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டன.
பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 75 செயற்கை சுவாச கருவிகள், 150 C-PAP செயற்கை சுவாச கருவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் சார்க் கொவிட் – 19 அவசர உதவித்திட்டத்தின் கீழ் இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
(
தலவாக்கலை நகரசபைக்குட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய முன் எச்சரிக்கையாக லிந்துலை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கைகளை நகர சபை தலைவர் லெச்சுமனன் பாரதிதாசன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தொடர்ந்து வைத்தியசாலையில் கடினமாக தீர்க்கப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்பாக லிந்துலை வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் எஸ்.பி.ஜயலத் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றன.
இதன் போது அவசரமாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும், ஆளுநர் மற்றும் நகர சபையின் உதவியுடன் உடன் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உன்னெடுக்கப் போவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
குறித்த வைத்தியசாலையில் உள்ள 05, 06 வாட்டுக்கள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றவுள்ளதாகவும் இத்தொகுதி மற்றுமொரு பிரிவுக்கு மாற்றப்படவுள்ளன. இந்த நிலையத்திற்கு தேவையான சமையலறை, பாதை, கட்டில்கள், வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியவசிய பணிகள் இதன் போது விருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தலவாக்கலை பகுதியில் கடந்த காலங்களில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதன் காரணமாக சென்கூம்ஸ் மேல் பிரிவு, கீழ்பிரிவு தேயிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பமையு
குறித்த கலந்துரையாடலில் நகரசபையின் தவிசாளர், உப தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தலைநகர் மாஸ்கோவுக்கு கிழக்கே 820 கி.மீ தூரத்தில் உள்ளது கசான் நகரம். அங்குள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக ஒரு பதின்ம வயது நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எந்த நோக்கத்துக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
டாடர்ஸ்டான் பிராந்திய தலைவர் ருஸ்தாம் மின்னிகானொஃப், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை பேரிடர் மற்றும் துயரமான சம்பவம் என்று அழைத்துள்ளார்.
175 என்ற எண் கொண்ட அந்த பள்ளி முன்பாக ஆயுதமேந்திர காவல்துறையினரும் அவசர ஊர்தி வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், ஜன்னல்கள் வழியாக பள்ளிக்குள் இருந்த சில சிறார்கள் குதித்து தப்பி ஓடுவதும் சிலர் அந்த முயற்சியில் விழுந்து காயம் அடைவதும் சிலர் வெளியேற்றப்படுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தொடக்கத்தில் அந்த பள்ளிக்குள் இரண்டு துப்பாக்கிதாரிகள் இருந்ததாகவும் அதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால், அதை பின்னர் மறுத்த அதிகாரிகள், தாக்குதலில் ஒரேயொரு சந்தேக நபரே ஈடுபட்டதாக கூறுகின்றனர்.
சம்பவ பகுதியை பார்வையிட்ட டாடர்ஸ்டான் தலைவர் மின்னிகனொஃப் பள்ளிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், "உயிரிழந்தவர்கள் மட்டுமின்றி மேலும் 12 சிறார்கள், நான்கு பெரியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்று கூறினார்."அந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளவர்," என்று மின்னிகனொஃப் தெரிவித்தார்.
ஒரு காணொளியில் கட்டடம் ஒன்றுக்கு வெளியே பதின்ம வயது நபர் தரையில் படுக்க வைக்கப்பட்டு அவரை காவல்துறையினர் தடுத்து வைத்திருப்பதும் பிறகு அவரை காவலர்கள் பிடித்துச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
டாடர்ஸ்டான் பிராந்தியம் கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வெவ்வேறு குழுவினரின் வாழ்விடமாக அது விளங்கியது. காலப்போக்கில் அங்கு வோல்கா டாடர் இனவாத குழுவினர் குடியேறினர். 15ஆம் நூற்றாண்டில் கசான்களின் ஆளுகையை இவான் தி டெரிபிள் படை ஆக்கிரமித்து 200 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியது. அப்போதுதான் பெருமளவிலான ரஷ்யர்கள் அங்கு குடியேறினர். அது பூர்விகமாக அங்கு வாழ்ந்து வந்த டாடர் இனவாத குழுக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 18,19ஆம் நூற்றாண்டுகளில் தொழிற்துறை வளர்ச்சி பெற்று ரஷ்யர்களுக்கு இணையாக டாடர்ஸ்டான்கள் வளர்ந்தனர். 1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகு தனி ஆளுகையாக டாடர்ஸ்டான் அறிவித்துக் கொண்டபோது, அதை ஏற்காத சோவியத் அரசு பல ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போர் முடிவில் டாடர் சுயாதீன பகுதியை தங்களின் ஆளுகைக்கு கீழ் உள்ள பிராந்தியமாக அறிவித்தது. 1991இல் சோவியத் பிளவுபட்ட பிறகு, சுதந்திர குரல்கள் ஒலித்தன. ஆனாலும் 1994இல் ரஷ்யாவின் ஆளுகைக்கு உள்பட்ட சுயாதீன பிராந்தியமாக டாடர்ஸ்டான் அறிவிக்கப்பட்டது. 2008இல் டாடர்ஸ்டான் பிராந்தியம் தன்னை சுதந்திர குடியரசாக அறிவித்துக் கொண்டாலும், அதை ஐ.நா சபையோ, ரஷ்ய அரசோ ஏற்கவில்லை.
பருத்தித்துறை நீதவானின் இல்லத்தில் சற்று முன்னர் அவரை முன்னிலைப்படுத்தியபோதே, அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தில், பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேநேரம் வடமராட்சி உள்ளிட்ட யாழின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் தமிழீல விடுதலைப்புலிகளில் ஒரு பிரிவினரான கரும்புலிகள் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 9.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.