Showing posts with label Southern. Show all posts

 மாத்தறை வெலிகம பிரதேசத்தில் உள்ள பெண் பாடசாலை ஒன்றின் விடுதியின் ஒரு பகுதி தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.



மாத்தறை வெலிகம ஹப்ஸா மகளிர் அரபிக் கல்லூரியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விடுதியில் இருந்த சுமார் 150 மாணவர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


விடுதியின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள், மாணவர்களின் படுக்கைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.


இச்சம்பவத்தில் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

 


நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த 3 முதல் 24 மணித்தியாலங்களில் பின்வரும் பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நில்வலா கங்கை பெருக்கெடுக்கும்  தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


 


நேற்றிரவு, காலியில் உள்ள சில்லறை ஜவுளிக் கடையொன்றின் உரிமையாளர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


அதிகாரிகளின் கூற்றுப்படி, காலியில் உள்ள டிக்சன் வீதியில் காருக்குள் இருந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 நூருல் ஹுதா உமர்


தீவிர மந்த போசணை உடைய சிறுவர்களுக்கான போஷனை கண்காட்சியும், விழிப்புணர்வும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க குழந்தைகளுக்கு எப்படி உணவளிக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் விளக்கமளிப்பும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம். வாஜித் கலந்து கொண்டதுடன் கல்முனை பிராந்திய தாய் சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம். ரிஸ்பின் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான போஷனை தொடர்பிலும், உணவு விழிப்புணர்வு சம்பந்தமாகவும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க குழந்தைகளுக்கு எப்படி உணவளிக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் விளக்கமளித்தார்.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பாடசாலை மாணவ மாணவிகள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


 நூருல் ஹுதா உமர் 


“கல்முனை பிராந்திய மக்களின் அடிப்படை தேவைகளில் தன்னிறைவடைதல்” எனும் கல்முனையன்ஸ் போரமின் இலக்கினை அடையும் முகமாக பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் கல்முனையான்ஸ் போரமினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

அந்த வகையில் தேவையுடைய இணங்கானப்பட்ட 15 பயனாளிக்குடும்பங்களுக்கான குடிநீர் இணைப்புகள் அண்மையில் கையளிக்கப்பட்டிருக்கிறது. 

கல்முனையிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீர் இணைப்பினை கொண்டுசேர்க்கும் நோக்கில் கடந்த 2017ம் ஆண்டு கல்முனையன்ஸ் போரமினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இச்செயற்றிட்டத்தின் கீழ் இதுவரையிலும் சுமார் 135 பயனாளிக் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு கல்முனையன்ஸ் போரமினால் முன்னெடுக்கப்பட்ட கல்முனைக்கான கல்வி, சமூக, பொருளாதார தனிநபர் தகவல் திரட்டின் மூலம் இணங்காணப்பட்ட குடும்பங்களே இச்செயற்றிட்டத்திற்கான பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது பொது நிகழ்வு ஒன்றில் புகைக்குண்டு என்று கருதப்படும் ஒன்று வீசப்பட்டது. ஆனால், அவர் காயம் ஏதுமின்றி அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டார்.

வாகாயாமா என்ற இடத்தில் அவர் ஒரு நிகழ்வில் உரையாற்ற இருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

ஒரு ஆள் பிரதமர் மீது ஏதோ ஒன்றை வீசியதாகவும், அதைத் தொடர்ந்து அங்கே புகை கிளம்பியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். ஒரு பெரிய சத்தம் கேட்டதாக மற்றொரு நேரில் கண்ட சாட்சி கூறினார்.

சந்தேகிக்கப்படும் நபர் என்று தோன்றும் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடிப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த நபரை கைது செய்துவிட்டதாக கூறும் போலீஸ் மேற்கொண்டு எதையும் தெரிவிக்கவில்லை.

ஜப்பான் நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. வெளியிட்ட ஒரு காணொளியில் மக்கள் அந்த இடத்தை விட்டு கூட்டமாக ஓடுவது தெரிகிறது.


 மாத்தறை, பிடபெத்தர பகுதியில் நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் காதலி (19 வயது) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (27) காலை தேடுதல் நடவடிக்கையின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மாத்தறை, பிடபெத்தர, நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் காதலனை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 1வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் பலத்த காற்று வீசியதால் காலி மைதானத்தில் தற்காலிக கிராண்ட் ஸ்டாண்ட் மாறியது. 


#GotaGoHome எதிர்ப்பாளர்களை, அழகிய மைதானத்தை கண்டும் காணாத காலி கோட்டை அரண்களிலிருந்து இராணுவம் வெளியேற்றியதை அடுத்து பேரழிவு ஏற்பட்டது. பதிலடி என்கிறார்கள் போராட்டக்காரர்கள்!?

 


அம்பலாந்தோட்டை கடலில் மூழ்கி 03 பேர் காணாமற்போயுள்ளனர்.

தாயும் (55) மகனும் (16) மற்றுமொரு உறவுக்கார இளைஞரும் (22) கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் கூறினர்.

காணாமற்போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 


கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசனின் அறிவுறுத்தலின் பிரகாரம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

 


ஹம்பாந்தோட்டையில் இன்றிரவு நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி  இன்றிரவு 09:19 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 


இலங்கையில் கொரோனா சவாலை வெற்றிகொள்வதற்காக பாகிஸ்தானினால் மருத்துவ உபகரணங்கள் சில வழங்கப்பட்டுள்ளன.


இதற்கான நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்றது.


இந்த மருத்துவ உபகரணங்கள், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டன.


பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 75 செயற்கை சுவாச கருவிகள், 150 C-PAP செயற்கை சுவாச கருவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.


பாகிஸ்தானின் சார்க் கொவிட் – 19 அவசர உதவித்திட்டத்தின் கீழ் இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 (


க.கிஷாந்தன்)

தலவாக்கலை நகரசபைக்குட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய முன் எச்சரிக்கையாக லிந்துலை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கைகளை நகர சபை தலைவர் லெச்சுமனன் பாரதிதாசன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தொடர்ந்து வைத்தியசாலையில் கடினமாக தீர்க்கப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்பாக லிந்துலை வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் எஸ்.பி.ஜயலத் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றன.

இதன் போது அவசரமாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும், ஆளுநர் மற்றும் நகர சபையின் உதவியுடன் உடன் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உன்னெடுக்கப் போவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலையில் உள்ள 05, 06 வாட்டுக்கள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றவுள்ளதாகவும் இத்தொகுதி மற்றுமொரு பிரிவுக்கு மாற்றப்படவுள்ளன. இந்த நிலையத்திற்கு தேவையான சமையலறை, பாதை, கட்டில்கள், வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியவசிய பணிகள் இதன் போது விருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தலவாக்கலை பகுதியில் கடந்த காலங்களில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதன் காரணமாக சென்கூம்ஸ் மேல் பிரிவு, கீழ்பிரிவு தேயிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த கலந்துரையாடலில் நகரசபையின் தவிசாளர், உப தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


 ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஏழு சிறார்களும் ஒரு ஆசிரியரும் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள்.

தலைநகர் மாஸ்கோவுக்கு கிழக்கே 820 கி.மீ தூரத்தில் உள்ளது கசான் நகரம். அங்குள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக ஒரு பதின்ம வயது நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எந்த நோக்கத்துக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

டாடர்ஸ்டான் பிராந்திய தலைவர் ருஸ்தாம் மின்னிகானொஃப், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை பேரிடர் மற்றும் துயரமான சம்பவம் என்று அழைத்துள்ளார்.

175 என்ற எண் கொண்ட அந்த பள்ளி முன்பாக ஆயுதமேந்திர காவல்துறையினரும் அவசர ஊர்தி வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், ஜன்னல்கள் வழியாக பள்ளிக்குள் இருந்த சில சிறார்கள் குதித்து தப்பி ஓடுவதும் சிலர் அந்த முயற்சியில் விழுந்து காயம் அடைவதும் சிலர் வெளியேற்றப்படுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

தொடக்கத்தில் அந்த பள்ளிக்குள் இரண்டு துப்பாக்கிதாரிகள் இருந்ததாகவும் அதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால், அதை பின்னர் மறுத்த அதிகாரிகள், தாக்குதலில் ஒரேயொரு சந்தேக நபரே ஈடுபட்டதாக கூறுகின்றனர்.

சம்பவ பகுதியை பார்வையிட்ட டாடர்ஸ்டான் தலைவர் மின்னிகனொஃப் பள்ளிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், "உயிரிழந்தவர்கள் மட்டுமின்றி மேலும் 12 சிறார்கள், நான்கு பெரியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்று கூறினார்."அந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளவர்," என்று மின்னிகனொஃப் தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஒரு காணொளியில் கட்டடம் ஒன்றுக்கு வெளியே பதின்ம வயது நபர் தரையில் படுக்க வைக்கப்பட்டு அவரை காவல்துறையினர் தடுத்து வைத்திருப்பதும் பிறகு அவரை காவலர்கள் பிடித்துச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

டாடர்ஸ்டான் எங்கு உள்ளது?

டாடர்ஸ்டான் பிராந்தியம் கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வெவ்வேறு குழுவினரின் வாழ்விடமாக அது விளங்கியது. காலப்போக்கில் அங்கு வோல்கா டாடர் இனவாத குழுவினர் குடியேறினர். 15ஆம் நூற்றாண்டில் கசான்களின் ஆளுகையை இவான் தி டெரிபிள் படை ஆக்கிரமித்து 200 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியது. அப்போதுதான் பெருமளவிலான ரஷ்யர்கள் அங்கு குடியேறினர். அது பூர்விகமாக அங்கு வாழ்ந்து வந்த டாடர் இனவாத குழுக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 18,19ஆம் நூற்றாண்டுகளில் தொழிற்துறை வளர்ச்சி பெற்று ரஷ்யர்களுக்கு இணையாக டாடர்ஸ்டான்கள் வளர்ந்தனர். 1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகு தனி ஆளுகையாக டாடர்ஸ்டான் அறிவித்துக் கொண்டபோது, அதை ஏற்காத சோவியத் அரசு பல ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போர் முடிவில் டாடர் சுயாதீன பகுதியை தங்களின் ஆளுகைக்கு கீழ் உள்ள பிராந்தியமாக அறிவித்தது. 1991இல் சோவியத் பிளவுபட்ட பிறகு, சுதந்திர குரல்கள் ஒலித்தன. ஆனாலும் 1994இல் ரஷ்யாவின் ஆளுகைக்கு உள்பட்ட சுயாதீன பிராந்தியமாக டாடர்ஸ்டான் அறிவிக்கப்பட்டது. 2008இல் டாடர்ஸ்டான் பிராந்தியம் தன்னை சுதந்திர குடியரசாக அறிவித்துக் கொண்டாலும், அதை ஐ.நா சபையோ, ரஷ்ய அரசோ ஏற்கவில்லை.

 


கல்முனை பிராந்தியத்தில் இன்று  காலை கண்டறியப்பட்ட 14 பேர் புதிய கொரோனா நோயாளர்களுடன்,  கிழக்கு மாகாணத்தில் இதுவரை 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாகாண சுகாதார பணிப்பாளர்  லதாகரன் அறிவிப்பு 



செய்தியாளர் மநாநாட்டில், மீனுக்கு கொரொனா தொற்று ஏற்படவில்லை, பச்சை மீனைச் சாப்பி்ட்டால், கொரெனா தொற்று வராது என்று அண்மையில் தெரிவித்து, செயல்படுத்திய முன்னாள் அமைச்சரும், எஸ்ஜேபி இந் நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிலிப் வெததராச்சக்கு தங்காலையில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.. இவர் பச்சை மீனைச் சாப்பிட்டதால், அதிக விற்பனை இடமபெறுவதாக தென்னிலங்கை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


இது வெனிஸ் நகரமல்ல. தென்னிலங்கையின் தலைநகர் காலி ஆகும். மாறி மாறி வந்த அரசுகள் கடந்த 72 ஆண்டுகளாக காலி மாநகரினை அபிவிருத்தி செய்திருப்பினும், சட்டெனப் பெய்த மழைக்கு நின்று பிடிக்க முடியாமல் போனது காலி நகர்.

தீர்க்க தரிசனமற்ற திட்டமிடப்படாத அபிவிருத்திகள், சீரான வடிகான்கள் இ்ன்மை இன்றைய இந்த நிலைமைக்கு காரணம்.

வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரும் செயற்பாட்டினை எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வௌியுறவு மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை நீதவானின் இல்லத்தில் சற்று முன்னர் அவரை முன்னிலைப்படுத்தியபோதே, அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தில், பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேநேரம் வடமராட்சி உள்ளிட்ட யாழின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் தமிழீல விடுதலைப்புலிகளில் ஒரு பிரிவினரான கரும்புலிகள் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 9.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.