ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கூறியது என்ன?
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை அவரது அவாமி லீக் கட்சி விமர்சித்துள்ளது. நீதிமன்றத்தின் முடிவு "தீங்கிழைக்கும் மற்றும் பழிவாங்கும் நோக்கில் வந்தது" என்று அக்கட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
"வங்கதேச மக்கள், அவாமி லீக் மற்றும் அனைத்து விடுதலை ஆதரவு சக்திகளும் இந்த முடிவுக்கு எதிராக ஓர் இயக்கத்தைத் தொடங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவாமி லீக் கூறியுள்ளது.
இன்று (நவம்பர் 18) நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை அவாமி லீக் அறிவித்துள்ளது. நவம்பர் 19 முதல் 21 வரை நாடு தழுவிய பல்வேறு போராட்டங்களுக்கும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
வங்தேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் தண்டனையை அறிவித்த தீர்ப்பாயம் குறித்தும் அவாமி லீக் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
"தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்குப் பதிலாக, சட்டவிரோதமான, அரசியலமைப்புக்கு விரோதமான, தேர்ந்தெடுக்கப்படாத பாசிச யூனுஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் நாட்டில் சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர் அவர்கள் சர்வதேச கொள்கைகளை மீறி ஒரு சட்டவிரோத தீர்ப்பாயத்தை நிறுவியுள்ளனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இந்த தீர்ப்பாயம் முற்றிலும் சட்டவிரோதமானது, தீங்கிழைக்கக் கூடியது, பழிவாங்கல் மற்றும் மோசமான எண்ணங்களால் தூண்டப்பட்டது, யூனுஸ் சட்டவிரோதமாக கைப்பற்றிய அதிகாரத்தைக் காப்பாற்ற ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார்" என்று அவாமி லீக் விமர்சித்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
ஜாகேஷ்வர் பிரசாத் அவதியா
'மனைவி இல்லை, மரியாதை போய்விட்டது'- ரூ.100 லஞ்ச வழக்கில் 39 ஆண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டவரின் கதை
இந்தியா - பாகிஸ்தான், எல்லை தாண்டிய காதல், சரப்ஜித் கவுர்
பாகிஸ்தான் சென்று மதம் மாறி காதலரை கரம் பிடித்த இந்திய பெண்ணை அந்நாட்டு காவல்துறை தேடுவது ஏன்?
ஏஐ, கூகுள், சுந்தர் பிச்சை
'செயற்கை நுண்ணறிவு குமிழி வெடித்தால் ஒரு நிறுவனம் கூட தப்பாது' - சுந்தர் பிச்சை கூறியது என்ன?
தமிழ்நாடு, வானிலை, கனமழை எச்சரிக்கை, காற்றழுத்த தாழ்வு நிலை, வடகிழக்கு பருவமழை, வங்கக்கடல்
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
End of அதிகம் படிக்கப்பட்டது
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான விசாரணை 'ஒரு நாடகத்தைத் தவிர வேறில்லை' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை, வங்கதேசம், முகமது யூனுஸ், அவாமி லீக், இந்தியாபட மூலாதாரம்,Getty Images
முகமது யூனுஸ் என்ன சொன்னார்?
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நேற்று (நவ.17) தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
"வங்கதேச நீதிமன்றம் இன்று(நவ.17) வழங்கியுள்ள தெளிவான தீர்ப்பு நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் எதிரொலிக்கிறது" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"குற்றச்சாட்டு மற்றும் தண்டனை ஒரு அடிப்படைக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது: யாரும், எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இந்த முடிவு ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2024 எழுச்சியின் போது பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கும், தங்கள் இழப்புகளால் இன்னும் போராடி வரும் குடும்பங்களுக்கும் நீதியை வழங்குகிறது." என்று அவர் கூறியுள்ளார்.
"பல ஆண்டுகளாக ஒடுக்குமுறையால் அழிக்கப்பட்ட ஜனநாயக நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். 1400 பேர் உயிரிழந்தனர் என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிகாரம் பெற்ற குடிமக்கள். நிராயுதபாணியான போராட்டக்காரர்களுக்கு எதிராக ஹெலிகாப்டர் உள்பட எவ்வளவு அதிக பலம் பயன்படுத்தப்பட்டது என்பதை பல மாத சாட்சியங்கள் விவரித்தன. நமது நீதி அமைப்பு குற்றவாளிகளை பொறுப்பேற்க வைக்கும் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது." என்று முகமது யூனுஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை, வங்கதேசம், முகமது யூனுஸ், அவாமி லீக், இந்தியாபட மூலாதாரம்,Getty Images
ஷேக் ஹசீனா கூறியது என்ன?
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஷேக் ஹசீனா ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
"அவாமி லீக்கை ஓர் அரசியல் சக்தியாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கு இடைக்கால அரசாங்கம் பயன்படுத்தும் வழிமுறையே மரண தண்டனை" என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கு ஓர் 'கேலிக்கூத்து' என்று கூறி, தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
மேலும், "சாட்சியங்களை உண்மையின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சோதிக்கக்கூடிய ஒரு முறையான நீதிமன்றத்தில் என் மீது குற்றம் சாட்டுபவர்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறும் அவர் இடைக்கால அரசுக்கு சவால் விடுத்தார்.
ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்
கடந்த ஜூன் மாதத்தில் ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அரசின் தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், "கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 25,000 பேர் காயமடைந்தனர்" என வாதிட்டார். இறந்தவர்களின் பட்டியலையும் அரசு தரப்பு தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.
ஷேக் ஹசீனா உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக 747 பக்க ஆவணமும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மூன்று பேரின் மீதும் கொலை, கொலை முயற்சி, சதி, உதவி செய்தல், உடந்தையாக இருத்தல் என ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
"ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்தபோது, கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், மாணவர்களை 'ரசாக்கர்களின் மகன்கள் மற்றும் பேரன்கள்' என்று கூறி ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்" என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.
வங்கதேசத்தில், ரசாக்கர் என்பது தேசதுரோகி அல்லது துரோகி என்று பொருள்படும் இழிவான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்து கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை குறிப்பிட பயன்படுகிறது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை, வங்கதேசம், முகமது யூனுஸ், அவாமி லீக், இந்தியா
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,2014-ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா அரசு அகற்றப்பட காரணமான போராட்டத்தின் ஒரு காட்சி
இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில், "குற்றம் சாட்டப்பட்ட அசாதுஸ்ஸாமான் கான் கமல் மற்றும் சவுத்ரி அப்துல்லா அல் மாமூல் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலும், உதவியுடனும், சட்ட அமலாக்க முகமைகளும் அவாமி லீக்கின் ஆயுதமேந்திய ஆட்களும் கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் அப்பாவி மற்றும் நிராயுதபாணியான மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பெரியளவில் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் துன்புறுத்த உதவினர்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் இந்தக் குற்றங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தே செய்யப்பட்டவை என்று கூறுகிறது.
ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது, ரங்பூரில் உள்ள பேகம் ரோகையா பல்கலைக்கழக மாணவர் அபு சயீத்தை தூண்டுதலின்றி கொலை செய்ததாகவும், தலைநகரில் உள்ள சங்கர் புல்லில் ஆறு பேரைக் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தவிர, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நாளில் அஷுலியாவில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், அவர்களின் உடல்களை எரித்ததாகவும், ஒருவரை உயிருடன் எரித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நூருல் ஹுதா உமர்
பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேலே நேரடியாக இருக்கும், ஏனெனில் அதன் தெற்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கம் வெளிப்படையானது. இன்று (31) நண்பகல் 12.10 மணியளவில் பத்தலங்குண்டுவ, மதவாச்சி, ஹொரவப்பொட்டான மற்றும் கிண்ணியா ஆகிய இடங்களுக்கு மேல் சூரியன் உச்சம் தரும் இலங்கைக்கு மிக அருகில் இருக்கும்
( வி.ரி.சகாதேவராஜா)
கடந்த ஒரு வருடத்தில், கூகுள் ஒரு மாற்றத்தைச் செய்துள்ளது, நீங்கள் அதைக் கவனித்திருக்கலாம்.
முன்பு, நீங்கள் இணையத்தில் எதையாவது தேடும்போது, அது தொடர்பான இணைப்புகளின் பட்டியல் கிடைக்கும்.
ஆனால் இப்போது அதற்கு பதிலாக, செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய பதில்கள் கிடைக்கிறது.
இந்த பதில்களை "செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) " என்று அழைக்கிறது கூகுள் .
சில நேரங்களில் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
கூகுள் டயலர், ஸ்மார்ட்போன் திரை, கூகுள் அப்டேட்
ஸ்மார்ட்போனில் மீண்டும் பழைய கால் செட்டிங்ஸ் பெறுவது எப்படி? படங்களுடன் எளிய விளக்கம்
அமெரிக்க வரி, டிரம்ப் வரி, இந்தியா 50% வரி, trump tariffs, america tariff on india, usa tariff, tariff news today
அமெரிக்காவின் 50% வரியை எதிர்கொள்ள இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் 5 விஷயங்கள்
ராமலிங்க விலாசம் மாளிகை
கட்டபொம்மன் - ஜாக்சன் 'சந்தித்த' மாளிகையில் உள்ள ஓவியங்களும் சுரங்கப்பாதையும் உணர்த்தும் ரகசியம்
தொற்று பாதித்த பசுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்க்ரூவர்ம் ஈயின் புழுக்கள், ஒரு வெள்ளை பாத்திரத்தில் வைத்து ஆய்வு செய்யப்படுகின்றன.
சதை உண்ணும் ஒட்டுண்ணி பாதிப்பு அமெரிக்காவில் ஒருவரிடம் முதன் முறையாக கண்டுபிடிப்பு
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆனால் சில நேரங்களில், தவறான தகவல்களை அளித்து, மக்களை குழப்புகின்றன.
அதேபோல், இந்த செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) நீங்கள் அடுத்து என்ன செய்யத் தேர்வு செய்கிறீர்கள் என்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன.
இந்த ஆண்டு, 900 அமெரிக்க இணைய பயனர்கள் இணையத்தில் தாங்கள் தேடுபவற்றைக் கண்காணிக்க, பியூ ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி கொடுத்தனர்.
"செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தோன்றும் தேடல்களில், இவர்கள் இணைப்புகளை கிளிக் செய்யும் வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும், அவர்கள் தேடுவதை முழுவதுமாக நிறுத்துவதற்கும் அதிக வாய்ப்பு இருந்தது," என பியூவின் டேட்டா லேப்ஸ் இயக்குநர் ஆரோன் ஸ்மித் கூறுகிறார்.
கூகுளில் தேடும்போது, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தோன்றும்போது, பயனர்கள் இணையதள இணைப்புகளை கிளிக் செய்யும் வாய்ப்பு கிட்டத்தட்ட இரு மடங்கு குறைவாக இருந்தது. மேலும், 26% சமயங்களில், அவர்கள் தேடுவதையே நிறுத்திவிட்டனர் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
இது மிக முக்கியமானது, ஏனென்றால் மக்கள் ஆண்டுக்கு ஐந்து பில்லியன் முறை கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்துகின்றனர். இணையதள செயல்பாடுகள் தொடங்கும் இடமும் இதுதான்.
பெரும்பாலான வலைத்தளங்கள், அதிலும் குறிப்பாக, பொருட்களை விற்காமல் தகவல் மற்றும் உள்ளடக்கம் வழங்கும் வலைத்தளங்கள் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுகின்றன.
இந்த டிஜிட்டல் சூழல் பார்வையாளர்களின் எண்ணிக்கையைச் சார்ந்து இயங்குகிறது. ஆனால், கூகுளின் தேடல் முடிவுகளில் வலைத்தளங்கள் தோன்றுவதை குறைத்து, ஒரே இரவில் வணிகங்களை அழித்துவிடலாம்.
இணைய பயன்பாடு
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பல தளங்கள், கூகுளில் உள்ள இணைப்புகள் மூலம் பயனர்கள் பார்வையிடுவதை தான் நம்பியுள்ளன.
"பெரும்பாலான வலைத்தளங்கள் இயங்குவதற்கு கூகுள் பார்வையாளர்கள் தேவை," என மார்க்கெட்டிங் நிறுவனமான ஆம்சிவ் நிறுவனத்தின் தேடுபொறி குறித்த பிரிவின் துணைத் தலைவர் லில்லி ரே கூறுகிறார்.
"ஆனால், செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) பார்வையாளர்களை பெருமளவு குறைத்து, வலைத்தளங்களின் வருமானத்தை 20%, 30%, அல்லது 40% வரை சரியச் செய்கின்றன. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான ஊக்கத்தைக் குறைக்கிறது."
கூகுளின் புதிய செயற்கை நுண்ணறிவு பயன்முறை, பாரம்பரிய தேடல் முடிவுகளை முற்றிலும் நீக்குவதால், இது மேலும் மோசமாகலாம்.
லில்லி ரே மற்றும் நிபுணர்கள் இது பேரழிவை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர்.
சிலர் இது நாம் அறிந்த இணையத்தை அழித்துவிடலாம் என அஞ்சுகின்றனர்.
வலைத்தளங்களை செயற்கை நுண்ணறிவு அழித்துவிடுமா?
வலைத்தளங்களைப் பார்வையிடுவதற்காக மக்கள் வருவதை, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) குறைக்கின்றன என்று சொல்லப்படும் கருத்தை 'முட்டாள்தனம்' எனக்கூறி மறுக்கிறது கூகுள்.
"நாங்கள் ஒவ்வொரு நாளும் வலைத்தளங்களுக்கு பில்லியன் கணக்கான கிளிக்குகளை இயக்குகிறோம், அதில் பெரிய சரிவு இல்லை",
மேலும், "இந்த ஆய்வு தவறான முறையையும், தேடல் போக்குவரத்தை சரியாக பிரதிநிதித்துவப்படுத்தாத, ஒரு சார்பு கொண்ட கேள்விகளையும் பயன்படுத்துகிறது"என கூகுளின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
ஆனால், பியூ நிறுவனம் தங்களது ஆராய்ச்சியில் உறுதியாக உள்ளது.
"எங்கள் முடிவுகள், வலை பகுப்பாய்வு நிறுவனங்களின் சுயாதீன ஆய்வுகளுடன் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன," என ஆரோன் ஸ்மித் கூறுகிறார்.
கூகுளில் தேடப்படும் விஷயங்களைப் பொறுத்து, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தேடல் போக்குவரத்தை 30% முதல் 70% வரை குறைக்கின்றன என பல அறிக்கைகள் கூறுகின்றன.
நூற்றுக்கணக்கான வலைத்தளங்களின் தரவைப் பயன்படுத்தி இதை தானே சோதித்ததாக ரே கூறுகிறார்.
ஆனால், கூகுள் இதை ஏற்கவில்லை.
ஆராய்ச்சி தவறானது, தரவுகள் சார்புடையவை, மற்றும் அர்த்தமற்ற தரவுகளை மேற்கோள் காட்டி, அதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பிபிசியிடம் கூறுகிறது கூகுள்.
மக்கள் வலைத்தளங்களுக்கு சென்று தேடுவது பல காரணங்களால் மாறுபடுவதாகவும், செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) பலவகையான இணைப்புகளை வழங்கி, வலைத்தளங்களைக் கண்டறிய புதிய வழிகளை உருவாக்குவதாகவும் கூகுள் கூறுகிறது.
செயற்கை நுண்ணறிவு சுருக்கங்களில் (AI summaries) இருந்து வரும் தரவுகள் உயர்தரமானவை, ஏனெனில் பயனர்கள் அந்தத் தளங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர் என கூகுள் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார்.
ஆனால் அதற்கு முரணாக, கூகுளின் சொந்த செயற்கை நுண்ணறிவு, அதன் மக்கள் தொடர்பு துறையின் கருத்தை மறுக்கிறது.
கூகிள் ஜெமினியிடம் கேட்டால்,செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) வலைத்தளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கூறும்.
ஆதாரம் தெளிவாக உள்ளது. "கூகுள் தகவல்களை மாற்றி, உண்மையை மறைக்க முயல்கிறது, ஏனெனில் அது மக்களை பயமுறுத்தும்," என்கிறார் ரே.
ஆனால் கூகுள் நிறுவனம் தாங்கள் வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளதாகக் கூறுகிறது.
கூகுள்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,கடந்த காலத்தில், கூகுள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இணைப்புகளை வழங்கியது.
குழப்பும் செயற்கை நுண்ணறிவு
ஆனால், இதைத்தான் நாம் அனைவரும் விரும்புகிறோமா என்ற மற்றொரு கேள்வியும் உள்ளது.
"மக்கள் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் அனுபவங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். தேடலில் உள்ள செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மக்கள் மேலும் கேள்விகளைக் கேட்க உதவுகின்றன, இது வலைத்தளங்களுடன் இணைவதற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது," என கூகுள் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார்.
ஆனால், இது அர்த்தமற்றது என ரே கூறுகிறார்.
"கூகுள் 'இனி யாரும் கிளிக் செய்ய விரும்பவில்லை' என்று சொல்லலாம். ஆனால் அது மற்றவர்களின் கடின உழைப்பில் லாபம் ஈட்டுகிறது. தகவல்களை உருவாக்கிய தளங்களுக்கு பார்வையாளர்கள் செல்வதை, கூகுளின் செயற்கை நுண்ணறிவு தடுக்கிறது" என்கிறார் ரே.
வலைத்தளங்களை விடுங்கள், ஏஐயின் தவறான தகவல்களைத் தரும் பழக்கம் உங்களுக்கும் கெடுதல் தரும் என்று ரே கூறுகிறார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
"செயற்கை நுண்ணறிவு பற்றிய பொதுவான விளக்கங்கள் பெரும்பாலும் தவறாக இருக்கின்றன," என்கிறார் அவர்.
"இது வலைத்தளங்களில் இருந்து பார்வையாளர்களை பறிப்பது மட்டுமல்ல, பயனர்கள் வெவ்வேறு தகவல்களை ஆராய்ந்து, விரும்பியவற்றைத் தேர்ந்தெடுத்து, முடிவுகளை எடுக்கும் திறனைக் கொள்ளையடிப்பது போன்றது."
ஏஐயின் பதில்கள் உதவிகரமாகவும், புறநிலை அம்சம் கொண்டதாகவும், மற்ற தேடல் அம்சங்களுடன் ஒப்பிடக்கூடிய துல்லியத்துடனும் உள்ளன என்கிறது கூகுள்.
ஒருவேளை இந்த ஒப்பந்தத்தில் நாமும் சேர்ந்திருக்கலாம்.
ஏனென்றால், பதில்கள் விரைவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.
நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் குறைகிறது.
செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே முடிவுகளை எடுத்துக் கொடுத்து விடுவதால், வெவ்வேறு ஆதாரங்களை ஆராய வேண்டிய தேவையும் குறைகிறது அல்லவா?.
ஆனால், கூகுள் தவறு செய்து வலைத்தளங்கள் மறையத் தொடங்கினால், அது நாம் தவறான இணைப்பை கிளிக் செய்ததால் இருக்காது. நாம் தேடுவதை முற்றிலும் நிறுத்தியதால் தான் இருக்கும்.
நூருல் ஹுதா உமர்
பாறுக் ஷிஹான்
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (09) 7 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் தீவு பகுதியில் 2ஆவது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
எனினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வந்தது. இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மூலம் இன்று வருகை தந்து குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக சென்று மீண்டும் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர்.
அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிப் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.
( வி.ரி.சகாதேவராஜா)
நூருல் ஹுதா உமர்
இந்தக் கண்காட்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், நிலங்களை இழந்தமை, கட்டாய இடப்பெயர்வு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக நிற்கும் பெண் செயற்பாட்டாளர்களின் ஒலி, ஒளி மற்றும் கலைநயமான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நாட்டின் பல்வேறு மாகாணங்களில் செயலூக்கமுள்ள பெண் செயற்பாட்டாளர்களின் ஒத்துழைப்பைக் காட்சிப்படுத்துவதே கண்காட்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இலங்கையில் பெண்களின் நீதிக்கான போராட்டத்தை நிலைப்படுத்துதல், நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தக் கண்காட்சி நடைபெற்றது. இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவர், ஒக்ஸ்போர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி மற்றும் அவசரகாலப் பயிற்சி மையத்தின் (CENDEP) மனித உரிமைகள் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி ஃபரா மிஹ்லார் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்றைய தினம்(02) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் .
நுவரெலியாவில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் பெருமாள் ராஜதுரை, இ.தொ.காவின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகராளய குழுவினர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்கள்
குறிப்பாக இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.
அதாவது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளுக்கான காணி உரித்தினை பெற்றுக்கொடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அதாவது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத்திட்டத்தினை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கினங்க, மிக விரைவில் வீட்டுத்திட்டங்களை நிறைவு செய்ய முயற்சிப்பதோடு, மேலதிக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவின் கீழ் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினை(வித்தியாவர்தன) வழங்கி எமது ஆசிரியர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறைகளில் புலமையை அதிகரித்துக் கொள்வதற்காக உதவி வழங்கியைமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டதோடு, அத்திட்டத்தினை மேலும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறும் இ.தொ.கா வினால் கோரிக்கை வைக்கப்பட்டது.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கான புதிய கட்டிடம் ஒன்றை இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிப்பதற்கான திட்டம் ஒன்று இருப்பதாகவும், வைத்தியர்களுக்கான விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் இந்திய உயர்ஸ்தானிர் தெரிவித்தார்.
அதேபோல் இந்திய அரசின் புலைமைத் திட்டத்தினூடாக மிகவும் குறைந்தளவிலான மலையக மாணவர்களே உள்வாங்கப்படுவதனால், எதிர் காலத்தில் மலையக மாணவர்களுக்கு என்று இந்திய துனைத் தூதரகத்தினூடாக இந்திய அரசின் புலைமைத்திட்டம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கு இனங்க, இது தொடர்பாக விரைவில் மலையகத்திற்கு என்று புதியதொரு புலைமை திட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த அதேவேலை இதனூடாக அதிகப்படியான மலையக மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று கருத்து பரிமாறப்பட்டது.
மேலும் மலையகத்திற்கான இந்திய அரசினால் வழங்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதனை இந்தியா விரும்புவதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
புதிதாக தெரிவுசெய்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்காக இந்தியாவின் அஹமதாபத்தில் நடைபெறவுள்ள பயிற்சிப் பட்டறையில் இ.தொ.கா சார்பில் 20 உறுப்பினர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இனங்க அதற்காக பதிலையும் விரைவில் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளான உங்களை சந்தித்தமை மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், பெருமைக்கொள்வதாகவும் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துக்கொண்டார்.