Showing posts with label Slider Sports. Show all posts

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இம்முறை அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 11,790 என குறிப்பிட்டார். 


மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளனர்.


அதனடிப்படையில், விஞ்ஞானத்தில் 70.1% மற்றும் கணிதத்தில் 72.03% மாணவர்கள் சித்தியடைந்துள்ளனரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


 


இலங்கை வந்தடைந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


மேலும், இலங்கையின் விளையாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

 

குறித்த சந்திப்பின்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தற்போதைய இடைக்காலக் குழு தொடர்பான விவகாரம் குறித்து மிக முக்கியமாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் அதன் எதிர்கால நகர்வுகள் குறித்து இருதரப்பிற்கும் இடையில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.



 (செ.திவாகரன்)

நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹட்டன் வீதிக்கருகிலுள்ள சந்தியில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்களும் ஒரு பெண் அடங்களாக மூவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


பதுளை பிரதான வீதியிலிருந்து நுவரெலியா பிரதான நகர் நோக்கி பயணித்த வேனொன்றும் நுவரெலியா நகரில் இருந்து நானுஓயா நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.


குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


(செ.திவாகரன்)


 நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களிலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை 

பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் அமைச்சகங்கள் மற்றும் அரசியல் தலைமைகளால் நேரடி அல்லது இணைய வழிக் கூட்டங்கள் நடத்தப்படுவதால், தங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.



அரசு நிர்வாக சுற்றறிக்கை (இலக்கம் 27/2023) இன் படி, பொதுமக்கள் தினத்தில் அதிகாரிகள் தங்களது அலுவலகங்களில் தங்கியிருந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாளில் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களையும் நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளார்.


 இந்தியாவில் மின்சார வாகனங்கள் தற்போது பிரபலமடைந்து வருகின்றனவா? இந்த மாற்றம் அதிகரித்து வருவதை பல விஷயங்கள் உணர்த்துகின்றன.


2026ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில், மின்சாரக் கார்களின் சந்தை 25 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே வேளையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்கள் 5 சதவீதம் என்ற முக்கிய எல்லையைத் தாண்டின.


"இந்த மாற்றம் இனி வெறும் திசை சார்ந்தது மட்டுமல்ல, மாறாக அது கணிசமானது" என்று இந்தியாவின் வாகன விநியோகஸ்தர்கள் சங்கம் சமீபத்தில் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


குறிப்பாக பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிக விலையுள்ள பெரிய ரகக் கார்களில் மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.


விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு 10 வாகனங்களிலும் ஒன்று இப்போது மின்சார வாகனமாக உள்ளது. மின்சார மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஏற்கனவே அவற்றின் பிரிவுகளில் முறையே 30 சதவீதத்திற்கும் மற்றும் 15 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனையைப் பதிவு செய்துள்ளன.


விளம்பரம்


கடந்த சில மாதங்களில், குறிப்பாக மத்திய கிழக்கு மோதலின் பின்னணியில், மின்சாரக் கார்கள் மீதான ஆர்வம் கணிசமாக உயர்ந்துள்ளது.


இந்தியா தனது கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலைகள் 50 சதவீதம் வரை உயர்ந்ததால், கடந்த நான்கு ஆண்டுகளாக எரிபொருள் விலைகளை ஓரளவிற்கு நிலையாக வைத்திருந்த அரசு எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள், தற்போது எரிபொருள் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.


எரிபொருளைச் சேமிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோதியும் இந்தியர்களைக் கார்களைப் பகிர்ந்துகொள்ளுமாறும் , பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும், வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

மனித உடலில் அக்குளில் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

DMK, Appavu, MLA, 2016, Case, Victory

10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்ட அப்பாவுக்கு என்ன பலன் கிடைக்கும்?

வைபவ் சூர்யவன்ஷி, ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்திய ஆண்கள் டி20 அணி, ஸ்ரேயாஸ் ஐயர்

சச்சின் சாதனையை சூர்யவன்ஷி தகர்ப்பாரா? ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்திய டி20 அணி விவரம்

கொச்சி, மட்டஞ்சேரி, யூத நகரம், யூதர்கள் 

கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்றார்கள்?

End of அதிகம் படிக்கப்பட்டது

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

" அதிகரித்து வரும் இந்த நிச்சயமற்ற தன்மையும், உயர்ந்த எரிபொருள் விலைகளும் மின்சார வாகனங்களுக்கான தேவையை வலுப்படுத்தும் கூடுதல் காரணியாகச் செயல்படுகின்றன" என்று ஜப்பானிய தரகு நிறுவனமான நோமுரா கூறுகிறது.


ஆனால் இந்த உடனடித் தூண்டுதல்களுக்கு அப்பாற்பட்டு, மேலும் பல நீண்டகால காரணிகளும் கார் வாங்குபவர்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன.


அவற்றில் மிக முக்கியமானது, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வந்து 2032 மார்ச் வரை நடைமுறையில் இருக்கத் திட்டமிடப்பட்டுள்ள சிஏஎப்ஃஈ - 3 என்று அறியப்படும் வரவிருக்கும் ஒழுங்குமுறை விதிகளாகும்.


இவை "ஒழுங்குமுறைகளை அர்த்தமுள்ள வகையில் கடுமையாக்குவதோடு மின்சார வாகன பயன்பாட்டில் மிகவும் வெளிப்படையான வேகத்தையும் ஏற்படுத்தக்கூடும்" என்று பெர்ன்ஸ்டீன் நிறுவனத்தின் ஆய்வாளர்களான வேணுகோபால் கர்ரே மற்றும் பரம் ஷா ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


இந்த சிஏஎப்ஃஈ - 3 வரைவு விதிகள், கார்களில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வை 2032 ஆம் ஆண்டுக்குள் 113 கிராமிலிருந்து 76 கிராமாகக் குறைக்க முயல்கின்றன. இது 33 சதவீத வீழ்ச்சியாகும்.


மேலும், வாகன பாகங்களை உற்பத்தி செய்யும் எட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட சுமார் ஒரு பில்லியன் டாலர் அபராதம் இதுவரை வசூலிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால், எதிர்வரும் காலத்தில் தற்போதைய சூழ்நிலையைப் போலல்லாமல், "சிஏஎப்ஃஈ - 3 இன் அபராதங்கள் வசூலிக்கப்படலாம்" என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறது.


இவை அனைத்தும் மின்சார வாகனங்களுக்கான தேவையை முன்னெடுத்துச் செல்லும்.


நாட்டில் மிக அதிகமான மாசடைந்த பகுதிகளில் ஒன்றான டெல்லி போன்றவை, பெட்ரோல் டீசல் வாகனங்களை படிப்படியாக நிறுத்தவும், 2027க்குள் இந்த வகை புதிய வாகனங்களின் பதிவை நிறுத்தவும் முன்மொழியும் லட்சிய வரைவுக் கொள்கைகளைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளன.


இந்தியா தற்போது தனது மின்சார வாகனங்களுக்கான சலுகைகளைக் கடுமையான இலக்குகள் அல்லது அபராதங்களுடன் இணைக்கவில்லை, ஆனால் CAFE-3  (சிஏஎப்ஃஈ - 3 ) விதிகள் இதைக் கட்டாயமாக்கும் என்று கர்ரே மற்றும் ஷா கூறுகின்றனர்.

பட மூலாதாரம்,Bloomberg via Getty Images

படக்குறிப்பு,அதிகமான புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாலும், சாதகமான ஒழுங்குமுறைகளாலும் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"தொடர்ச்சியாக புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படவிருப்பது" மற்றொரு சாதகமான காரணியாக இருக்கும் என்று நோமுரா கூறுகிறது.


இது 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்களின் பங்களிப்பு 9 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கிறது.


இருசக்கர வாகனப் பிரிவிலும் கூட, புதிய மலிவு விலை மாடல்களின் வருகையால் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதே நேரத்தில் 2030க்குள் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை, மின்சாரம் அல்லாத பிற வாகனங்களின் விற்பனையை விட அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது; இது இந்த மாற்றத்தை மேலும் வேகப்படுத்தும்.


"இந்தியாவின் இந்த மாற்றம், மூன்று சக்கர வாகனங்கள் போன்ற அதிகப் பயன்பாடு கொண்ட, அதே சமயம் விலை குறைவான பிரிவுகளில் அதிகமாகக் குவிந்துள்ளது. இது இந்த மாற்றத்தின் வளர்ச்சி சீரற்றதாக இருக்க வாய்ப்புள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.


விலை மலிவாகும் போதும் , சார்ஜிங் உள்கட்டமைப்பு விரிவடையும் போதும், கொள்கை ரீதியான ஆதரவு வலுவடையும் போதும் காலப்போக்கில் பயணிகள் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு வேகமெடுக்கும்" என்று நோமுரா கூறுகிறது.


இருப்பினும், இத்தகைய ஊக்கமளிக்கும் அறிகுறிகள் இருந்தபோதிலும், மின்சார வாகனப் பயன்பாட்டில் முக்கிய உலகளாவிய பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கியே உள்ளது.


நோமுரா தரவுகளின்படி, பயணிகள் கார்களில் சீனாவின் மின்சார வாகனங்களின் பயன்பாடு , 2020 இல் வெறும் 5.7 சதவீதமாக இருந்ததிலிருந்து கடந்த ஆண்டில் 53.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதத்திலும், அமெரிக்கா 8 சதவீதத்திலும் உள்ளன.


மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகச் சார்ஜிங் உள்கட்டமைப்பு இன்னும் நீடிக்கிறது.


பொது சார்ஜிங் நிலையங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 2,000-லிருந்து 10,000 க்கும் அதிகமாக வளர்ந்துள்ளன, இருப்பினும் இந்தியாவின் 28 மாநிலங்களில் வெறும் நான்கு மாநிலங்கள் மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகமான சார்ஜர்களைக் கொண்டுள்ளதால், பிராந்தியங்களுக்கு இடையே இத்தகைய உள்கட்டமைப்பு சீரற்றதாகவே உள்ளது.


மேலும், சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள இடைவெளி மிக வியக்க வைக்கிறது. சீனா இப்போது 20 மில்லியன் பொது சார்ஜிங் பாயிண்டுகளைக் கொண்டுள்ளது; ஆனால் இந்தியாவிடம் உள்ள சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கை வெறும் 10,000 மட்டுமே ஆகும்.


சார்ஜிங் செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளின் விளைவாக, "ரேன்ஜ் ஆன்சைட்டி" அதாவது ஒருமுறை சார்ஜ் செய்தால் பயணம் முழுவதையும் முடிக்க பேட்டரி போதுமானதாக இருக்குமா என்ற கவலை நுகர்வோருக்கு ஒரு முக்கியத் தடையாக நீடிக்கிறது என்று நோமுரா கூறுகிறது.


உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், கேபிஎம்ஜி நிறுவனத்தின்படி, லித்தியம் மற்றும் கோபால்ட் சுத்திகரிப்பில் சுமார் 70-80 சதவீதத்தையும், அரிய கனிமங்களைப் பிரித்தெடுப்பதில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தையும் சீனாவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

பட மூலாதாரம்,NurPhoto via Getty Images

படக்குறிப்பு,கடந்த மூன்று ஆண்டுகளில் பொது சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கை 2,000-லிருந்து 10,000-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விநியோகச் சங்கிலியில் உள்ள இடைவெளிகள் ஆய்வாளர்களின் மற்றொரு முக்கியக் கவலைக்குரிய புள்ளியாகும்.


பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படும் அரிய கனிமங்களின் உலகளாவிய விநியோகத்தை இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது.


உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், கேபிஎம்ஜி நிறுவனத்தின்படி, லித்தியம் மற்றும் கோபால்ட் சுத்திகரிப்பில் சுமார் 70-80 சதவீதத்தையும், அரிய கனிமங்களைப் பிரித்தெடுப்பதில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தையும் சீனாவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.


இவை இந்த மாற்றத்தில் உள்ள உலக அரசியல் சூழல் சார்ந்த அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


மேலும் இவை இரண்டும் "இந்தியாவின் மின்சார வாகன அறிமுகத்தைத் தாமதப்படுத்தலாம் மற்றும் அதன் விலை போட்டித்தன்மையைப் பாதிக்கலாம்" என்று அந்த ஆலோசனை நிறுவனம் சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


இந்தச் சவாலுக்கு உடனடித் தீர்வுகள் எதுவும் இல்லை. சுரங்கத் தொழிலில் இருந்து பேட்டரி பேக் அல்லது காந்தத் தயாரிப்பு வரையிலான ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியைக் கட்டமைக்க பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகலாம் .


இந்தியாவிற்குப் பாதுகாப்பான விநியோகத்திற்கான "குறுகிய கால நடவடிக்கைகளும், உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீண்ட கால முயற்சிகளும்" தேவைப்படும் என்று கேபிஎம்ஜி கூறுகிறது.


இருப்பினும், வாங்குபவர்களின் பார்வையில் இருந்து பார்க்கும்போது, சிஏஎப்ஃஈ - 3 ஒழுங்குமுறை விதிகளைச் சரியான நேரத்தில் செயல்படுத்துவது ஒரு முக்கிய உந்துசக்தியாக இருக்கும் என்று அரசின் சிந்தனைக் குழுவான நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் சமீபத்தில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் எழுதியுள்ளார்.


கடந்த மூன்று ஆண்டுகளாக விவாதத்தில் இருந்தபோதிலும் இதன் இறுதி வரைவு மிக விரைவில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.


"ஒழுங்குமுறை சார்ந்த தெளிவு இல்லாத நிலையில், உற்பத்தியாளர்கள் தங்களின் முதலீட்டு முடிவுகளைத் தள்ளிப்போடுகிறார்கள், விநியோகச் சங்கிலிகள் மிக மெதுவாகவே உருவாகின்றன, மேலும் ஒட்டுமொத்த சூழலும் நிச்சயமற்றதாகவே நீடிக்கிறது" என்று எழுதியுள்ள காந்த், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை வேகப்படுத்துவது கொள்கை தொடர்பான உறுதி தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள  வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் மறுநாள் வியாழக்கிழமை(04) முறைப்பாடும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது.குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின்  வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில்  செயற்பட்ட   கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம்.  சுவர்ணகாந்தி  கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன்  ஏ. ஆதம்பாவா மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்ததுடன் வெள்ளிக்கிழமை (05) அன்று  குறித்த வழக்கானது  மன்றில்  விசாரணைக்கு   கல்முனை நீதிமன்ற  நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை சந்தேக நபரான  இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.


குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது

கல்முனை மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க சிறுமி(பாடசாலையை விட்டு இடைவிலகியவர்)   தனது தாயுடன் ஆடை கொள்வனவிற்காக சென்றுள்ளார்.இவ்வாறு ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞனுக்கும் அங்கு  சென்ற சிறுமிக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டு தொலைபேசி இலக்கம் பரிமாறப்பட்டுள்ளது.அதன் பின்னர் இருவரும் 2 மாதங்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO /WHATAPPS ) தொடர்பில் இருந்துள்ளனர்.இவ்வாறான சூழ்நிலையில்  தான் குறித்த இளைஞன் கடந்த புதன்கிழமை(03) இரவு 11.30 மணியளவில்  வாடகைக்கு பெறப்பட்ட வேன் ஒன்றுடன்   தான் பணியாற்றிய  ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றும் மற்றுமொரு  56 வயது மதிக்கத்தக்க நபரையும் வேனின் சாரதியாக அழைத்துக் கொண்டு சிறுமி தங்கி இருக்கின்ற வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு தொலைபேசி ஊடாக அழைத்த  அவ்விளைஞன்  முகவரி ஒன்றினை காட்டுமாறு கூறியுள்ளார்.அப்போது வீட்டில் இருந்து வீதிக்கு வந்த சிறுமியை  சந்தேக நபரான இளைஞன் உடனடியாக செயற்பட்டு சிறுமியின்   வாயை பொத்தி வேனில் கடத்தி சென்று அம்பாறை  மாவட்டத்தில் உள்ள மத்திய முகாம் பிரதேசத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அழைத்து செல்லப்பட்ட குறித்த சிறுமி  பாழடைந்த வர்த்தக் கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலில் சந்தேக நபரான இளைஞன்  சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.அதன் பின்னர் மற்றுமொரு சந்தேக நபரான 56 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் சிறுமியை துஸ்பிரயோகம் செய்து பின்னர்  இரு சந்தேக நபர்களும் மாறி மாறி துஸ்பிரயோகத்திற்கு  உட்படுத்தி  அக்கரைப்பற்று பகுதிக்கு அச்சிறுமியை  இறுதியாக அழைத்துச் சென்று விட்டுச் சென்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பின்னர் சிறுமி அப்பகுதியால் வருகை தந்த பேரூந்தின் உதவியுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த விடயங்களை உரிய பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.சிறுமியின் வாக்குமூலத்தினை பெற்ற பொலிஸார் உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேக நபரான 2 பிள்ளைகளின் தந்தையான  56 வயது மதிக்கததக்க  சந்தேக நபரை பொலிஸார்  தேடி வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சிறுமியை கடத்தி செல்ல உதவிய வேன் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.அத்துடன் சிறுமியின் தாய் மனஅழுத்தம் காரணமாக வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

நூருல் ஹுதா உமர்


இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA) ஏற்பாட்டில் நடைபெற்ற மாகாண மட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் காரைதீவு பிரதேச சபை சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களும் பங்கேற்று தமது கருத்துக்கள் மற்றும் வாதங்களை முன்வைத்தனர். போட்டியின் இறுதியில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் 299 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகித்ததுடன், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் 254 புள்ளிகளைப் பெற்றனர்.

இதன்மூலம் 45 புள்ளிகள் வித்தியாசத்தில் காரைதீவு பிரதேச சபை வெற்றியீட்டியுள்ளது

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அறிவாற்றல், பகுப்பாய்வுத் திறன், பொதுக் கொள்கைகள் தொடர்பான புரிதல் மற்றும் மேடைப் பேச்சுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இவ்விவாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களின் இந்த வெற்றி, சபையின் செயற்பாட்டுத் திறன் மற்றும் உறுப்பினர்களின் விவாத ஆற்றலை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றிக்காக காரைதீவு பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்ற குழுவினருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

நூருல் ஹுதா உமர் 


கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த மல்டி மீடியா ப்ராஜெக்டர் ஒன்று வழங்கி வைக்கும் நிகழ்வு, பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் தலைமையில் (2026.06.03) பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த அன்பளிப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் பொறியியலாளர் திரு. அன்வர் சமீர் அவர்களின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இதற்கான வேண்டுகோளை பாடசாலை அதிபர் முன்வைத்திருந்ததுடன், DP Education நிறுவனத்தின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாண இணைப்பாளர் திரு. எம்.ஜே. மறூஸ் மற்றும் இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். சமீறுல் இலாஹி ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இது சாத்தியமானது.

பாடசாலையின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இந்த Multimedia Projector, அதிகாரப்பூர்வமாக அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்கள், மாணவர்களின் நலன் கருதி தனது வேண்டுகோளை ஏற்று சொந்த நிதியில் இத்தகைய மதிப்புமிக்க உதவியை வழங்கிய பொறியியலாளர் அன்வர் சமீர் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பாடசாலையின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் இந்த உதவி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 


குவைத்தின் விமான நிலையம் மீது நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


புதன்கிழமை நடைபெற்ற தாக்குதல்களை "இரானின் கிரிமினல் அத்துமீறல்" என குவைத்தின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்ட நிலையில் தூதரகங்கள் சேதமடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


விமான நிலைய தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுத்த இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி), அமெரிக்க ஏவுகணை இடைமறிக்கும் அமைப்பில் ஏற்பட்ட பிழையால் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கிறது.


இந்தக் கூற்றை தவறு எனக் கூறிய அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்), விமான நிலையத்தை "வேண்டுமென்றே, திட்டமிட்டு, நியாயமற்ற முறையில்" இரான் தாக்கியதாகவும் கூறுகிறது.



இரானிய எண்ணெய் கப்பல் மற்றும் கெஷ்ம் தீவு மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்கு வைத்ததாக புரட்சிகர காவல்படை முன்னர் தெரிவித்திருந்தது.


இரான் மீது தற்காப்பு தாக்குதல்களை நடத்தியதாக கூறும் அமெரிக்கா குவைத் மற்றும் பஹ்ரைனை நோக்கி வந்த இரானிய ஏவுகணைகளை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கிறது.


அதோடு புதன்கிழமை ஓமன் வளைகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படை கப்பலை இலக்கு வைத்ததாக இரான் தெரிவித்த நிலையில் சென்ட்காம் அதனை மறுத்துள்ளது.


சமீபத்திய மோதல்கள் ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருக்கும் அமெரிக்கா - இரான் போர்நிறுத்தத்தை அச்சுறுத்துகிறது.


இந்த நிலையில் குவைத் விமான நிலையம் மீதான இரானிய தாக்குதலில் உயிரிழந்தவர் இந்தியக் குடிமகன் என்பது பின்னர் தெரியவந்தது.


இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளது. மேலும் பல இந்தியக் குடிமகன்கள் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.


"இத்தகைய தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரையும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்," என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இரானிய ராஜதந்திரிகள் இருவர் 24 மணி நேரத்தில் நாட்டைவிட்டு வெளியேறுமாறு குவைத் வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் இரான் தூதருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.


முன்னதாக, கெஷ்ம் தீவு மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் தான் மேற்கொண்ட நள்ளிரவு தாக்குதல்கள் "மத்திய கிழக்கில் இரான் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடி" என்று தெரிவித்தது. மேலும் இந்தத் தாக்குதல்கள் இரானிய ராணுவத்தின் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தை இலக்கு வைத்தது என்றும் குறிப்பிட்டிருந்தது.


மேலும் "பிராந்திய கடற்பகுதியை முறையாக கடந்து வந்த சிவிலியன் மரைனர்களை" நோக்கி இரான் செலுத்திய மூன்று தாக்குதல் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவிக்கிறது.


குவைத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகளையும் பஹ்ரைனை நோக்கி மூன்று ஏவுகணைகளையும் இரான் செலுத்தியதாக கூறும் சென்ட்காம் அவை அனைத்தும் சுட்டுவீழ்த்தப்பட்டது அல்லது இடைமறிக்கப்பட்டதாகக் கூறுகிறது.


ஒரு "பிராந்திய நாட்டில்" ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட பதிலடி தாக்குதலில் அமெரிக்க தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கியதாக இரான் தெரிவிக்கிறது.


முன்னதாக, ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கிய ஹோர்மூஸ் நீரிணையின் மீதான அமெரிக்க முற்றுகையின் ஒரு பகுதியாக இரானை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ஏற்றப்படாத எண்ணெய் கப்பலை தான் தாக்கி செயலிழக்கச் செய்தததாக சென்ட்காம் கூறியிருந்தது.


போட்ஸ்வானா கொடி ஏந்திய எம்/டி கப்பல் குழுவினர் "அடுத்தடுத்த எச்சரிக்கையை புறக்கணித்ததால்" அந்தக் கப்பலின் என்ஜின் அறையை நோக்கி ஹெல்ஃபயர் ஏவுகணையை ஓர் அமெரிக்க விமானம் செலுத்தியதாகவும் சென்ட்காம் தெரிவித்தது.


இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என உடனடியாக எதிர்வினையாற்றிய ஐஆர்ஜிசி, "ஹோர்மூஸ் நீரிணையின் பாதுகாப்பை பாதிப்பது அமெரிக்க ராணுவத்திற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்கும்." என்று தெரிவித்தது.


ஏஎஃப்பி செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி, இரான் மீது நடத்தப்பட்ட இரவு நேர தாக்குதலுக்கான நேரடி மற்றும் மன்னிக்க முடியாத பொறுப்பு குவைத் மற்றும் பஹ்ரைனின் தலைவர்களுக்கும் இருக்கிறது என இரான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.


அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள பஹ்ரைன் மற்றும் குவைத் மீது இரான் தொடர்ந்து இலக்குகளைத் தாக்கியுள்ளது.


அமெரிக்கா மற்றும் இரான் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் முடங்கி போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்படாத நிலையில் இந்த தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது.


குவைத், பஹ்ரைன், இரான், அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரானின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியும் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். (கோப்புப் படம்)

தன்னுடைய விமர்சகர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க வேண்டும் எனக் கூறிய டிரம்ப், இரான் ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புவதாகவும் அது அமெரிக்காவுக்குச் சிறந்த ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.


முன்னதாக, போர்நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாக விவாதிக்க மூத்த அதிகாரிகளைச் சந்தித்த பிறகு, சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தின் விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு டிரம்ப் கோரியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிதன.


இந்த மாற்றங்கள் ஹோர்முஸ் நீரிணை, அதிகம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நீக்குவது மற்றும் இரானின் அணுசக்தி திட்டம் மீதான பேச்சுவார்த்தைகளை மீண்டு தொடங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


திங்கட்கிழமை இது தொடர்பாக பேசிய இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்லாயில் பாகேய், இவை விவாதிக்கப்பட்டது என்கிற செய்தியை மறுத்துள்ளார்.


மேலும் அமெரிக்க "தனது பார்வை தொடர்ந்து மாற்றி வருகிறது என்றும் புதிய அல்லது முரணான கோரிக்கைகளை முன்வைக்கிறது" என்றும் தெரிவித்தார்.


புதன்கிழமை வெளியான நேர்காணல் ஒன்றில் பேசிய டிரம்ப், "அணு ஆயுதம் வைத்துக் கொள்ளப்போவதில்லை என இரான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டு விட்டதாக தெரிவித்திருந்தார்.


இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரானின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியும் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.


"நாங்கள் இருவரும் நன்றாகப் பழகி வருகிறோம் போலிருக்கிறது," என்றார் டிரம்ப்.


குவைத், பஹ்ரைன், இரான், அமெரிக்காபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் பேசினார்.

மொத்ஜபா காமனெயியைச் சந்திப்பீர்களா என்கிற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "நான் அவரைச் சந்திக்க ஆசைப்படுகிறேன். எல்லாம் எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்து, நாங்கள் ஒருவேளை எப்போதாவது சந்திப்போம்." என்றார்.


செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பதற்குப் பதிலாக இரானுக்கு பொருளாதார தடைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.


"தற்போது அவர்களிடம் விவாதிக்கப்படுவதெல்லாம், பொருளாதார தடைகளில் அளிக்கப்படும் விலக்குகள் அனைத்தும் நிபந்தனைகளைப் பொருத்தது தான். அவை அந்தப் பொருளாதார தடைகள் எதனால் முதலில் விதிக்கப்பட்டன என்கிற காரணத்துக்கு மாற்றாகவே அவை அமைய முடியும். அந்தக் காரணம் அவர்களின் அணுசக்தி திட்டம் தான்," என்கிறார் மார்கோ ரூபியோ.


மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் உத்தி பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "போர் முடிந்துவிட்டது." என்று தெரிவித்தார்.

(வி.ரி. சகாதேவராஜா)

​இலங்கையில் நிலவும் பல்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" எனும் புதிய தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இப் பாரிய செயற்திட்டம் ஜூன் மாதம் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. 

இதன் கீழ், அம்பாறை மாவட்டத்தின் முதலாவது பிரதான ஆரம்ப நிகழ்வு நேற்று (02) சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரமுனை சுவீஸ் கிராண்ட் மஹால் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 நூருல் ஹுதா உமர்


நான் பாராளுமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பு வகித்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கல்முனை கடலரிப்பு பிரச்சினையின் அவசரத்தன்மையை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்ததன் பயனாக, 2024 ஜூலை 18 ஆம் திகதி ரூபா 6 கோடி 26 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நான் எம்.பியாக இல்லாது போனதன் பின்னர் அந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு கடலரிப்பை கட்டுப்படுத்த இப்போதைய எம்.பிக்கள் தவறியதால் கல்முனை கரையோரம் ஆபத்தில் இருக்கிறது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை கடலரிப்பு விவகாரம் தொடர்பில்  ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

யார் மீதும் எனக்கு தனிப்பட்ட கோபமில்லை. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனாலும் மக்களின் பிரச்சினை தலைக்கு மேலால் போகும்போது உண்மைகளை வெளியிடாமல் மௌனமாக இருக்க முடியாது. பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஆதம்பாவா எம்.பி இருந்தும் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாக எதையும் செய்யாமல், இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்க வேண்டிய கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களையும் கூட கடந்த ஒன்றரை வருடங்களாக முறையாக நடத்தப்படாதிருப்பதும் கவலைக்குரிய விடயமாகும்.

ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானத்தினால் கல்முனை தொகுதியின் கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் கடலரிப்பு தற்போது உக்கிரமடைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பில் மீனவ அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு தரப்புகளில் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், இதுவரை உரிய மற்றும் நிரந்தரமான தீர்வுகள் எட்டப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். கடலரிப்பு அடுத்த கட்ட பேரழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

நான் பாராளுமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பு வகித்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் இந்த பிரச்சினையின் அவசரத்தன்மையை எடுத்துரைத்து கோரிக்கை விடுத்ததன் பயனாக, 2024 ஜூலை 18 ஆம் திகதி ரூபா 6 கோடி 26 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கீழ் கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதியிலிருந்து மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் வரையிலான பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டன.

எனினும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிலரின் சதியினால் நான் தேர்தல் கேட்கவில்லை. அதன் பின்னர் வந்த எம்.பிக்களினால் இத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாத காரணத்தால், பலாஹ் பள்ளிவாசல் தொடக்கம் கடற்கரை பள்ளிவாசல் வரையிலான பகுதிகள் மீண்டும் கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகி, மீனவர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்து வருகின்றன. அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட மரபுரிமை சொத்தமான கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் முன்னாள் அழகுக்காக நிர்மாணிக்கப்பட்ட சகல வேலைத்திட்டங்களும் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், இந்த அவசர பிரச்சினைக்கு தேவையான முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக, ஏற்கனவே எனது கோரிக்கைக்கு இணங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையிலும், சுமார் 250 மீற்றர் தூரத்தை பாதுகாக்கும் பணிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

எனது காலத்தில் மாளிகைக்காடு மையவாடிக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ஊடாகவும், சாய்ந்தமருதில் கடலரிப்பு தடுப்பு அணைகள் நிர்மாணிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் ஊடாகவும் நிதி ஒதுக்கீட்டை பெற்று குறுகிய காலத்திற்குள் தடுப்பணை அமைக்கப்பட்டதுடன், கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதியிலிருந்து பலாஹ் பள்ளிவாசல் வரையிலான பணிகளும் சில மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய நிலையில் மிகவும் குறுகிய தூரப் பகுதியை கூட பாதுகாக்க முடியாத நிலை காணப்படுவது வேதனைக்குரியது.

கல்முனை கடலரிப்பிற்கான அடிப்படை காரணமாக ஒலுவில் துறைமுக பிழையான கட்டுமானமே இருப்பதாக ஜனாதிபதி முதல் பல அதிகாரிகள் வரை சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, கல்முனை மக்களின் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை நோக்கி அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, கல்முனை நகரத்தையும் அதன் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஒன்றிணைந்து அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

 


ஹுதா உமர்


அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் அவர்கள், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம், இன்று (01) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் பீ. வாகீசன், கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே. குணநாதன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில், விண்ணப்பிக்கத் தகுதியுடைய தரம் I கலாசார உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

அதன் முடிவில், கிழக்கு மாகாணத்தில் இருந்து இரு அதிகாரிகள் மட்டுமே சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் பதவிக்கு தெரிவு

 


கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் கார் ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தெரிவித்துள்ளது.


விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவத்தில் 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.


இந்த கொடூர விபத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவசர அவசரமாக ஹோமாகம பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விபத்தை ஏற்படுத்திய கேப் ரக வாகனத்தின் ஓட்டுநர், விபத்து நடக்கும் போது கடுமையான மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதனை அடுத்து, சம்மந்தப்பட்ட ஓட்டுநரை மீகொடை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


தற்போதைய செய்தி:

துபாய் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஈரான் "மேம்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை" ஏவியதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரவு வானில் பத்துக்கும் மேற்பட்ட இடைமறிப்பு ஏவுகணைகள் பாய்ந்ததாக துபாயிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் அச்சுறுத்தலை இடைமறிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டன.

தொடர்பில் இருங்கள், @MOSSADil-ஐப் பின்தொடருங்கள்.


 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தை சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கே சங்கக்கார காலமானார்.


அன்னாரின் பூதவுடன் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிச் சடங்குகள் நாளை (04) மாலை 6 மணிக்கு கண்டி, மஹய்யாவ பொது மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.