Showing posts with label Sri lank. Show all posts


 இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து மனிதகுலத்திற்கும் அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் தூதரான முஹம்மது நபி அவர்கள், அல்லாஹ்வின் கடைசி இறைத் தூதராவார்.
அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதில் நபிகளார் முகங்கொடுத்த கடினமான அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட தருணத்திலும் பொறுமையும் மௌனமும் தான் அவரின் கூரிய ஆயுதங்களாக இருந்தன. நம்பிக்கை மற்றும் மனிதநேயத்திற்காக அவர் செய்த அளவற்ற தியாகத்தின் விளைவாக, அவர் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிந்தது.
பரஸ்பர புரிதல், சகோதரத்துவம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல், நேர்மை என அவர் வாழ்நாள் முழுவதும் காத்து வந்த பண்புகள், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் நமது நம் வாழ்வில் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். மேலும், அவரது தத்துவத்தை மேலும் சமூகமயமாக்கவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் பணியாற்றுவது அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த மரியாதை என்று நான் நம்புகிறேன்.
நபிகள் நாயகம் காட்டிய விழுமியங்களுக்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பாதையை வலுப்படுத்த அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனிய மீலாதுன் நபி தின வாழ்த்துக்கள்!

 


ஜலால்தீன் சதுக்கம் பொத்துவில் பிரதேசத்தில்  அமைந்திருக்கும் இந்தப் பள்ளிவாயல் மிகவும் பழமையானது.


 சுனாமியால் கூட இது வெடிப்புக்கு உள்ளாகி இருந்தது 2021வரையில் இது புனரமைப்பு செய்யப்படவில்லை.


 ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இதனை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது இதனால் நோன்பு மற்றும் ஏனைய தொழுகைகள் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே சிறிய பள்ளிவாயலில் இடம்பெற்றது.


தற்போது புதிய பள்ளிவாசலின்   அனைத்து வேலைகளும் நிறைவேறும் தருவாயில் கொங்கிரீட் சிலப் போடுவதற்காக சீமெந்துப் பக்கட்டுளும் அதற்கான பணமும் தேவைப்படுகிறது.


மண் கல் கம்பி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.


 உங்களால் முடிந்த ஒரு  தொகையை  அல்லது ஒரு சீமந்து பக்கட்டையாவது கொள்வனவு செய்ய உதவி செய்வீர்கள் என நான் நம்புகிறேன்.


*(150 பக்கெட் சீமெந்து சுமார் 10 இலட்சம் பணமும் தேவைப்படுகிறது)*


மேலதிக தகவல்களுக்கு என்னையோ  அல்லது பள்ளிவாசல் தலைவரையோ தொடர்பு கொள்ள முடியும்.


AL-BAHRIYA MASJITH

AC NC 113061000782

SAMPATH BANK

POTTUVIL BRANCH

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.