Showing posts with label Sri lank. Show all posts


 

இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள 30% வீத பரஸ்பர வரிகளில் இருந்து மேலும் நிவாரணம் பெற ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் அமெரிக்காவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். 


இந்த கலந்துரையாடலில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் குழு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 100 நாடுகளுக்கு புதிய பரஸ்பர வரிகளை அறிமுகப்படுத்திய நிலையில், இலங்கைக்கு 44% வீத பரஸ்பர வரியை விதித்தார். 

பின்னர் பல நாடுகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அதன் செயல்பாட்டை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ட்ரம்ப் நடவடிக்கை மேற்கொண்டார். 

இந்நிலையில், புதிய பரஸ்பர வரியை அமெரிக்கா கடந்த 9 ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, விதிக்கப்பட்ட புதிய வரி 30% வீதம் ஆகும். 

இந்த தீர்மானம் ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இதற்கமைய, அமெரிக்காவிடமிருந்து வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளது. 

குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க இலங்கை பிரதிநிதிகள் குழு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், நேற்று (12) ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாகவும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார். 

சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது அமெரிக்க பொருட்களின் இறக்குமதி குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்று மங்கள விஜேசிங்க மேலும் தெரிவித்தார்

 


இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார்.

 
பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது.
 
இலங்கை அணியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தசுன் ஷானகா மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை அணி விபரம் பின்வருமாறு,

 


பாறுக் ஷிஹான்


கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக பாடசாலை மட்டத்திலான வேலை திட்டம் புதன்கிழமை (09) நாடளாவிய ரீதியில் இடம் பெற்றது.
 
கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரது அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த கிளீன் ஸ்ரீலங்கா விசேட  செயற்திட்ட முன்னெடுப்பு கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ல்முனை கமு/கமு/அஸ்-ஸூஹறா வித்தியாலயத்திலும் சிறப்பாக நடைபெற்றது

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர அவர்களின் ஆலோசனையின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைசால் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக  எம். எஸ். சஹூதுல் நஜீம்  வழிகாட்டலில் பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமை  இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த விசேட செயற்திட்டத்தின் போது நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அழித்தொழிக்கப்படுவதுடன் , மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே நுளம்புகளால் பரவும் நோய்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில்,  பெற்றார்,  மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகத்தினர் பெருந்தொகையானோர் கலந்து கொண்டு பாடசாலை சூழலையும் கட்டிடங்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

--

 


இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.


பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை இந்திய அணி வென்று தொடரை சமன் செய்துள்ளது. இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்கள்) அடித்திருந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.


இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷுப்மன் கில் சதமடிக்க (161 ரன்கள்) 427 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்திருந்தது இந்திய அணி.


25 நிமிடங்களில் திருப்புமுனை

ஆட்டமிழந்து வெளியேறும் ஹேரி புரூக்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆட்டமிழந்து வெளியேறும் ஹேரி புரூக்

4வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களுடன் இருந்தது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 536 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.


ஹேரி ப்ரூக் 15 ரன்களுடனும், போப் 24 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஏற்கெனவே ஆகாஷ் தீப், சிராஜ் இருவரும் இங்கிலாந்து பேட்டர்களை தங்களின் ஸ்விங் பந்துவீச்சால் அலறவிட்ட நிலையில் அவர்களின் துல்லியமான லென்த்தில் கணிக்க முடியாத ஸ்விங் பந்துவீ்ச்சு இன்று காலையும் தொடர்ந்தது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

ஜெனரேட்டர் புகை, கார்பன் மோனாக்சைடு, சென்னை

சென்னையில் தந்தை, இரு மகன்களின் உயிரை பறித்த 'கண்ணுக்குத் தெரியாத கொலையாளி'

இந்தியா , இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

39 ஆண்டு சாதனையை சமன் செய்த ஆகாஷ் தீப் - இங்கிலாந்துக்கு எதிராக இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி

டெல்லி பழைய கார்களுக்கு தடை, தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கார் விற்பனை 

டெல்லி பழைய கார்களை சொற்ப விலைக்கு தமிழகத்தில் வாங்க முடியுமா? என்ன நடைமுறை?

சார்லஸ் டார்வின், மனிதர்கள், திருமணம், இயற்கைத் தேர்வு, வாழ்க்கைத் துணை, லியோ டால்ஸ்டாய்

திருமணம் செய்து கொள்வதன் நன்மைகள், தீமைகள் என்ன? - சார்லஸ் டார்வின் செய்த பகுப்பாய்வு

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆட்டம் தொடங்கிய 25 நிமிடங்களுக்குள் ஆகாஷ் தீப் இரு அருமையான பந்துகளால் இரு விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்து அணியை நெருக்கடிக்குள் தள்ளினார்.


முதலாவதாக ஆட்டம் தொடங்கி 4வது ஓவரில் ஆலி போப்பிற்கு இன் கட்டரில் பந்துவீசி க்ளீன் போல்டாக்கினார் ஆகாஷ் தீப். ஏற்கெனவே திணறிக்கொண்டிருந்த போப் 25 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.


போப் ஆட்டமிழந்த அடுத்த 2 ஓவர்களில் ஹேரி ப்ரூக் விக்கெட்டுக்கு ஆகாஷ் குறிவைத்தார். பேட்டர் ஆடமுடியாத வகையில் இன்ஸ்விங்கில் பந்தை வீசி ஹேரி ப்ரூக்கை நிலைகுலையச் செய்து கால்காப்பில் வாங்கவைத்தார் ஆகாஷ்.


ப்ரூக் கால்காப்பில் வாங்கியதும் ஆகாஷ் அப்பீல் செய்தவுடனே நடுவர் மறுபேச்சு இன்றி கையை உயர்த்தி அவுட் வழங்கினார். டிஆர்எஸ் முறையீட்டுக்கு வாய்ப்பின்றி துல்லியமான எல்பிடபிள்யு என்பதால், ப்ரூக்கும் முறையீடு செய்யாமல் வெளியேறினார்.


இந்த இரு விக்கெட்டுகளும், இங்கிலந்து அணி சேஸிங் கனவிலிருந்து சற்று பின்னோக்கி தள்ளச் செய்தது. சேஸ் செய்துவிடலாம் என எண்ணி களமிறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் பின்னடைவைச் சந்தித்தனர். 4வது நாள் முடிவில் 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, இன்று காலை ஆட்டம் தொடங்கி, 19 ரன்களைச் சேர்பதற்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.


இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம் - இந்தியா ஒருமுறை கூட வெல்லாத ஆடுகளம் எப்படி உள்ளது? பும்ரா ஆடுவாரா?

2 ஜூலை 2025

மற்ற பவுலர்களிடம் இல்லாத, பேட்டர்களை கலங்கடிக்கும் பும்ராவின் தனித்துவம் என்ன?

24 ஜூன் 2025

தோனியை விஞ்சி பந்த் புதிய சாதனை: இந்திய அணியின் தவறுகளை சரியாக பயன்படுத்திய இங்கிலாந்து

22 ஜூன் 2025

ஸ்டோக்ஸ், ஸ்மித் நங்கூரம்

கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேம் ஸ்மித் இருவரும் 7வது விக்கெட்டுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பந்து தேய்ந்து, மென்மையாக மாறிவிட்டதால், எதிர்பார்த்த ஸ்விங்கும், வேகமும் கிடைக்காததால் பேட்டர்கள் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருந்ததால், ரன்களை இங்கிலாந்து பேட்டர்கள் வேகமாகச் சேர்த்தனர்.மதிய உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தது.


ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்ய சுந்தர், ஜடேஜாவை மாறி, மாறி கேப்டன் கில் பயன்படுத்தினார். இதில் ஸ்டோக்ஸ் 18 ரன்னில் இருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை கில் தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.


ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திருப்பிவிடுவார் என்பதால் இவருக்கு குறிவைத்து கில் செயல்பட்டு பந்துவீச்சை உணவு இடைவேளைக்குப்பின் மாற்றினார்.


வாஷிங்டன் திருப்புமுனை

பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்பட மூலாதாரம்,Stu Forster/Getty Images

படக்குறிப்பு,பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்

உணவு இடைவேளை முடிந்துவந்தபின், மீண்டும் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ஸ்டோக்ஸ் 33 ரன்கள் சேர்த்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து தோல்வியின் பக்கம் தள்ளப்பட்டு ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்கு திரும்பியது. 7-வது விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ், ஸ்மித் இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர்.


அடுத்து வோக்ஸ் களமிறங்கி ஸ்மித்துடன் சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஸ்மித் 73 பந்துகளில் அரைசதம் அடித்தபின் வேகமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.


பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் பவுன்ஸராக வீசப்பட்ட பந்தை தூக்கி அடிக்க வோக்ஸ் முற்பட்டபோது, அது சிராஜிடம் கேட்சானது. வோக்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழக்கமே ஆட்டம் மொத்தமும் இந்தியாவின் பக்கம் திரும்பியது.


இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. ஸ்மித், கார்ஸ் களத்தில் இருந்தனர். ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்யும் நோக்கில் ஆகாஷ் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார்.


ஆகாஷ் சற்று ஸ்லோவர் பந்தாக ஆப்சைடு விலக்கி வீசினார். இதை கணிக்காத ஸ்மித் தூக்கிஅடிக்கவே, பேக்வார்ட் ஸ்குயரில் நின்றிருந்த சுந்தரிடம் கேட்ச் கொடுத்து 88 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து அணி 8வது விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.


ஆகாஷ் தீப் தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறையாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்புமுனையாக இருந்தார்.


ஆட்டமிழந்து வெளியேறும் ஸ்மித்பட மூலாதாரம்,Stu Forster/Getty Image

படக்குறிப்பு,ஆட்டமிழந்து வெளியேறும் ஸ்மித்

சிராஜின் அற்புதமான கேட்ச்

இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. கார்ஸ், டங் இருவரும் களத்தில் இருந்தனர். பிரசித், ஜடேஜா மாறி, மாறி பந்துவீசியும் இருவரும் சளைக்காமல் ஆடினார்.


ஒரு கட்டத்தில்பேட்டர்களுக்கு நெருக்கடி தரும்வகையில் ஸ்லிப்பில், மிட்விக்கெட்டில் பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தி ஜடேஜா பந்துவீசினார். ஜடேஜாவின் வியூகத்துக்கு பலன் கிடைத்து.


ஜடேஜாவீசிய பந்தை டங் தட்டிவிட, மிட்விக்கெட்டில் நின்றிருந்த சிராஜ், அற்புதமாக டைவ் செய்து கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இங்கிலாந்து 9வது விக்கெட்டை இழந்தது.


அடுத்ததாக பஷீர் களமிறங்கி, கார்ஸுடன் சேர்ந்தார். கடைசி விக்கெட்டை வீழ்த்த ஆகாஷ் பந்துவீச அழைக்கப்பட்டார். ஆகாஷ் பந்துவீச்சில் சற்று திணறிய கார்ஸ், திடீரென பெரிய ஷாட்டுக்கு முயன்று பந்தை தூக்கி அடித்தார். ஆனால் சிராஜ் பந்தை பிடிக்கும் முயற்சியில் தவறாக கணித்ததால் கேட்சை தவறவிட்டார்.


வெற்றிக்கான கேட்ச்

இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப்

ஜடேஜா அடுத்து பந்துவீச அழைக்கப்பட்டார். ஜடேஜா பந்துவீச்சில் பஷீர் கால்காப்பில் வாங்கிய பந்தை கேட்ச்பிடித்தபோது நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் டிஆர்எஸ் முறையீட்டில் பந்து பேட்டில் படவில்லை, கால்காப்பில் மட்டுமே பட்டது எனத் தெரியவந்ததால் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது.


அதன்பின்பும், ஜடேஜா, ஆகாஷ் இருவரும் மாறி மாறி பந்துவீசியும் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இறுதியாக ஆகாஷ் தீப் வீசிய 64வது ஓவரில் அந்த வெற்றி விக்கெட் விழுந்தது. ஆகாஷ் வீசிய பந்தை கார்ஸ் தூக்கிஅடிக்க கேப்டன் கில் கேட்ச் பிடிக்கவே இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது.


வெற்றியின் நாயகர்கள்

இந்திய அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரர்களும் பங்களிப்பு செய்துள்ளனர்.முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அரைசதம், ஷுப்மன் கில் இரட்டை சதம், ஜடேஜா அரைசதம், 2வது இன்னிங்ஸில் ராகுலின் அரைசதம், கில்லின் 2வது சதம், ரிஷப்பந்த் அரைசதம், ஜடேஜாவின் 2வது அரைசதம் என பேட்டிங்கில் முடிந்தவரை பங்களிப்பு செய்தனர்.


பந்துவீச்சில் பும்ரா இல்லாத நிலையில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது உண்மையில் பாராட்டுக்குரியது. முதல் இன்னிங்ஸில் சிராஜ் எடுத்த இங்கிலாந்து மண்ணில் முதல் 5 விக்கெட், ஆகாஷ் தீப்பின் 4 விக்கெட். 2வது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் எடுத்த முதல் 6 விக்கெட், சிராஜ், வாஷிங்டன் விக்கெட் ஆகியவை வெற்றிக்கு துணையாக இருந்தன.


39 ஆண்டுகளுக்குப்பின் நிகழ்ந்த சாதனை

இந்தியா, இங்கிலாந்து, பிசிசிஐ, ஷுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட், இந்தியா வெற்றிபட மூலாதாரம்,Getty Images

அதிலும் ஆகாஷ் தீப் வெற்றிக்கான திருப்புமுனையை இரு இன்னிங்ஸிலும் வழங்கினார் என்பதை மறுக்க இயலாது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆகாஷ் பெற்றார்.


1986ம் ஆண்டு இதே பிர்மிங்ஹாம் மைதானத்தில் சேத்தன் சர்மா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியபின் ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்குப்பின் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார்.


அன்று காபா, இன்று பிர்மிங்ஹாம்

2021ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் முதல்முறையாக இந்திய அணி வரலாற்று பெற்றி பெற ஷுப்மன் கில், ரிஷப் பந்த், சிராஜ் ஆகிய 3 பேரும் முக்கிய காரணமாக இருந்தனர். இன்று எட்ஜ்பாஸ்டனில் புதிய சரித்திரத்தை எழுதவும் இந்த 3 வீரர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது. இதில் ஆகாஷ் தீப்பின் முதல்முறை 6 விக்கெட், ஒட்டுமொத்த 10 விக்கெட் முக்கியமாக இருந்துள்ளது.


இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று 2வது போட்டியிலேயே அந்நிய மண்ணில் கில் வெற்றி தேடித்தந்துள்ளார். இதில் கேப்டன் கில்லின் பேட்டிங் பங்களிப்பு இரு டெஸ்ட் போட்டிகளிலும் மகத்தானது. முதல் போட்டியில் சதம், 2வது டெஸ்டில் இரட்டை சதம், சதம் என 430 ரன்கள் குவித்து முழுமையான உழைப்பை வழங்கினார்.


அதேபோல ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் சொதப்பினாலும், 2வது இன்னிங்ஸில் விரைவாக அடித்த அரைசதம், சிராஜ் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மண்ணில் எடுத்த 6 விக்கெட், 2வது இன்னிங்ஸில் ஒருவிக்கெட் என 7 விக்கெட்டுகளை சாய்த்து மீண்டும் சரித்திரம் படைக்க உதவினர்.


பிர்மிங்ஹாமில் புதிய வரலாறு

பிர்மிங்ஹாமில் இதுவரை 8 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், இந்த போட்டியில் பிர்மிங்ஹாமில் வென்றதன் மூலம் இந்திய அணி முதல்வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்தது.


நூறாண்டுகளாக பிர்மிங்ஹாமில் கிரிக்கெட் விளையாடியும் முதல் வெற்றிக்காக தவம் கிடந்த நிலையில் நூறாண்டுகளுக்குப்பின் கிடைத்த முதல் வரலாற்று வெற்றி, கொண்டாடப்பட வேண்டிய வெற்றியாகும். இந்த நாள் இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாளாக அமைந்திருக்கிறது.


சீனியர்கள் இல்லாமல் சாதனை

இந்திய இளம் அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளதுபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்திய இளம் அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது

இந்திய அணியில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், பும்ரா இல்லாத நிலையில் இளம் வீரர்கள் வரலாற்று வெற்றி தேடித்தந்துள்ளனர்.


இந்திய அணியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்குள் இருக்கும் இளம் வீரர்கள், 50 டெஸ்ட் போட்டியில்கூட ஆடாத அனுபவம் குறைந்தவர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கேப்டன் ஷுப்மன் கில் இங்கிலாந்து மண்ணில் வென்றது உண்மையில் வரலாற்று வெற்றியாகும், கில் கேப்டன்ஷிப் ஏற்று கிடைக்கும் முதல் வெற்றியாகும்.



பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இங்கிலாந்துக்கு மரணஅடி

பாஸ் பால் உத்தியைக் கையாண்டு விளையாடியது முதல், இங்கிலாந்து அணி டிரா என்றாலே என்ன என்று கேள்வி கேட்கும் விதத்தில் ஆடியது. 23 டெஸ்ட்களில் 15 போட்டிகளை வென்றிருந்தது, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், பாஸ் பால் ஆட்டத்தை ஆடும் முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு இளம் இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.


டாஸ் வென்று முதல் டெஸ்டில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் இந்த டெஸ்டிலும் 2வதுமுறையாக டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஸ்டோக்ஸின் முடிவு தவறானது, இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொதப்பாது என்பதை இளம் இந்திய அணி நிரூபித்துள்ளது.


சமநிலையில் தொடர்

இதன் மூலம் சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். 3வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி வரலாற்று சிறப்பு மிகுந்த லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

 

வி.ரி. சகாதேவராஜா)
யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த  பாதயாத்திரை குழுவில்  ஒருவர் நேற்று கதிர்காமத்தில் திடீரென மரணமானார்.

புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னம்பலம்( வயது 52)என்பவரே இவ்வாறு திடீரென மரணமானவர்.

கடந்த மே மாதம் 01 ஆம் தேதி உடப்பிலிருந்து  யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதிக்கு வந்து 56 நாள் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர் என பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

அவர்  பாதயாத்திரை செல்வது மூன்றாவது தடவை ஆகும்.

இம்முறை கதிர்காமத்தை வந்தடைந்த போது அவரது மனைவி பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் பஸ்ஸில் கதிர்காமம் வந்தனர்.

நேற்று 11 மணியளவில் குடும்பத்தினர் சகிதம் கதிர்காமம் ஆலயத்துக்குள் பிரவேசித்த பொழுது திடீரென சரிந்து விழுந்தார்.

 மறுகணம் அவரை கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர் .
 அங்கே அவர் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

காரணம் மாரடைப்பு என்று கூறப்பட்டது.
தற்போது அவரது பிரேதம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 அங்கு அவரது பிரதேச பரிசோதனையின் பின் அவரது பூதவுடல் உடப்பிற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது என்று பாதயாத்திரைக் குழுத்தலைவர் ஜெயா வேல்சாமி மேலும் தெரிவித்தார்.


 இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக்கழகததில், அண்மையில் சிலேஸ்ட மாணவர்களால், முதலாம் வருட மாணவர்கள் பகிடிவதை செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகின. இதனால், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 32 மாணவர்களுக்கு  பல்கலைக்கழகத்தினால், வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

குறித்த சம்பவத்துடன் தொடர்புற்றதாக சந்தேகிக்கப்படும், மாணவர்கள் 12 பேர், இன்றைய தினம் அக்கரைப்பற்று பொலிசாரினால், அக்கரைப்பற்று நீதிமன்ற மேலதிக கௌரவ நீதிபதி தெசிபா ரஜீவன் முன்னிலையில், ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். 

இன்னும் சில மாணவர்கள் கைது செய்யப்பட வேண்டியிருப்பதாகவும், குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள், அடையாள அணி வகுப்புக்கு  உட்படுத்தப்பட வேண்டியிருப்பதாகவும் பொலிசாரால்ஈ தெரிவிக்கப்பட்டதை அடுத்து, எதிர்வரும்  ஜீலை மாதம் 1ம் திகதி  வரை விள்க்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற மேலதிக நீதிபதி கௌரவ தெசிபா ரஜீவன் கட்டளை பிறப்பித்தார்.



( வி.ரி. சகாதேவராஜா)


35 ஆவது  தியாகிகள் தினத்தை முன்னிட்டு காரைதீவில் நடைபெற்றுவந்த  உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மண்டூர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகி வெற்றி வாகை சூடியுள்ளது.

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் தனது 38வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் முகமாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்  தோழர் பத்மநாபா மற்றும் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தினை முன்னிட்டு "மோகன் கணேஸ் " ஞாபகார்த்த    தியாகிகள் தின கிண்ணத்திற்கான  உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியினை கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 அணிகளின் பங்குபற்றுதலுடன் புலம்பெயர் வாழ் தோழர்களின் அனுசரணையுடன்  சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்தினர்.

 இச்சுற்றுப்போட்டி தொடரின் இறுதிப் போட்டியானது விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் வி. தயாபரன்  தலைமையில்  விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது .

முன்னதாக  தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .

இவ் இறுதிப்போட்டியில்  மண்டூர் விளையாட்டுக்கழகம்  மற்றும் புதிய வளத்தாப்பிட்டியை பிரதிநிதித்துவப்படுத்தி வீனஸ் விளையாட்டுக்கழகமும் மோதின.
 முதற்பாதியில் மண்டூர் விளையாட்டுக் கழகம் ஒரு கோலினை அடித்து முன்னிலை வகித்தது , இறுதிப் பாதியில் மீண்டும் ஒரு கோலினை அடித்து முன்னிலை வகித்தது பின்னர் கடைசி ஒரு சில நிமிடங்களில் வீனஸ் விளையாட்டு கழகம்  ஒரு கோலினை அடித்தது எனவே மண்டூர் விளையாட்டு கழகம் 2:1 எனும் கோல் கணக்கில் வெற்றியீட்டி மோகன் கணேஸ் ஞாபகார்த்த தியாகிகள் தின கிண்ணத்திற்கான  சாம்பியனாக முடிசூடியது. 
 இச் சுற்றுப்போட்டியில் சம்பியனாகவும், இரண்டாம் நிலையினையும் பெற்ற இரு அணிகளுக்கும்  சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பெறுமதி வாய்ந்த வெற்றி கேடயம் மற்றும் பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ் இறுதிப் போட்டிக்கு அதிதிகளாக புலம்பெயர் வாழ் தோழர்கள், மோகன் கணேஷ் குடும்ப உறுப்பினர்கள், விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 


பாறுக் ஷிஹான்


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் (AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு, பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்ப்போர் கூடத்தில்  இன்று(18) இடம்பெற்றது.

“முன்னேற்றம் பெறும் சந்தைகளில் தொழில்நுட்பத் தொழில் முனைவோர்; சுறுசுறுப்பின் மூலம் நிறுவன மாற்றம்” (“Technopreneurship in Emerging Markets; Organizational Transformation through Agitity”) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த சர்வதேச ஆய்வரங்கில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ். எம். ஜுனைடீன் உரையாற்றியதுடன் ஆய்வு மாநாட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட  ஆய்வாளர்களின் ஆய்வு கட்டுரைகளின் சுருக்கங்களை உள்ளடக்கிய சுருக்கக்கோவை நூல் (Book of Abstracts) ஐயும் வெளியிட்டு வைத்தார்.(AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டில் 136 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

(AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டின் தொடக்க அமர்வில் இணைப்பாளர் கலாநிதி எம்.ஐ.எம். றியாத் வரவேற்புரையையும் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, மாநாட்டின் நோக்கம், முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகளை விளக்கும் வகையில் உரைகளையும் நிகழ்த்தினர்.முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர் ரோஷன் அஜ்வர்ட் அவர்கள், தனது முக்கிய உரையில் (Keynote Address) நிகழ்வின் தலைப்பிற்கு ஏற்ப ஆழமான கருத்துகளை பகிர்ந்தார்.

நிகழ்வின்போது முகாமைத்துவ வர்த்தக பீடத்திலிருந்து புதியதாக பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.யாதவன் ஜெயராம், பார்ட்லீட் ரிலிகேர் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, "செல்வத்தின் விதைகள்: முதலீடு செய்யத் தொடங்குங்கள், வளரத் தொடங்குங்கள்" என்ற தலைப்பில் தனது பார்வையை நிகழ்வில் எடுத்துரைத்தார்.

இங்கு அனுசரணையாளர்களுக்கான நன்றியுரையும் கௌரவிப்பும் இடம்பெற்றது. அத்துடன் (AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டின் செயலாளரும் விரிவுரையாளருமான தபாணி றஷிட் நன்றியுரை நிகழ்த்தினார்.

(AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து திருநெல்வேலி சமூக விஞ்ஞான ஆராச்சி மையத்தின் ஸ்தாபக தலைவர் கலாநிதி ஜி. பரமசிவம், கலாநிதி அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் அசோசியேட் பேராசிரியர் கலாநிதி பி. விருந்தா, தயானந்த சாகர் பல்கலைக்கழகத்தின் அசோசியேட் பேராசிரியர் கலாநிதி றூஹி குர்சாட்கான், தயானந்த சாகர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் கலாநிதி நயானா பரப்ஹாஸ், தயானந்த சாகர் பல்கலைக்கழகத்தின் அசோசியேட் பேராசிரியர் கலாநிதி மகேஸ்வரி, கலாநிதி அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் கலாநிதி சுபாசினி, அமெரிக்கன் கல்லூரியின் எஸ். அருள் லிட்டில் செனிட்டா மற்றும் பி. வென்ஷிஹ’ மோனோலின் ஆகியோர் கலந்து கொண்டனர் .

நிகழ்வின்போது கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பொறியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியரா கலாநிதி எம்.ஏ.எல். அப்துல் ஹலிம், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் அனுசரணையாளர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.

--



 ( வி.ரி.சகாதேவராஜா)


வடக்கு- கிழக்கில் 35 வது தியாகிகள் தினம் நாளை (19) வியாழக்கிழமை அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபா உள்ளிட்ட உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமாகும்.

 அதனை முன்னிட்டு 
மோகன் - கணேஸ்" ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்று போட்டி காரைதீவில் நடைபெற்றுவந்தது.

காரைதீவு விவேகானந்த விளையாட்டுக் கழகம் தனது 38 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு பெருமையுடன் நடாத்தும் "மோகன் கணேஷ்" ஞாபகார்த்த தியாகிகள் தினம் (யூன் 19)  உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப தொடர் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி 
மைதானத்தில் கடந்த 08/06/2025 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 8 அணிகள் கலந்து இருந்தன. 
தொடர்ந்து இச்சுற்றுப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நாளை 19/06/2025 அன்று சிறப்பாக இடம்பெறவிருக்கிறது.

 வருடா வருடம் நடைபெறும் இப்போட்டிக்கு புலம்பெயர் வாழ் தோழர்கள் அனுசரணை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 


விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவன் டர்சாந்.

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவனான கனகராசா டர்சாந் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் பெரியகல்லாறு பாலத்தில் வைத்து விபத்தில் சிக்கி சிகிசை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த மட்/ கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான கனகராசா டர்சாந் அவர்கள் ரஸ்யா நாட்டில் தனது மருத்துவக் கல்வியை தொடர்ந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நாடு திரும்பிய நிலையில் மட்டக்களப்பு பெரியகல்லாறு வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராக இணைந்து கொண்டு கடமை புரிந்து வந்த நிலையில் கடமை நிமிர்த்தம் வைத்தியசாலைக்குச் செல்லும் வழியிலேயே பெரியகல்லாறு பாலத்தில் வைத்து விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார்.
படுகாயத்துக்குள்ளான மருத்துவ மாணவன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சைபலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.



 ( வி.ரி.சகாதேவராஜா)


விஞ்ஞான ஒன்றியம் மட்டு. அம்பாறை அமைப்பின் ஏற்பாட்டில் 4 வது திறன் வகுப்பறை பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று (17)  செவ்வாய்க்கிழமை திறந்து  வைக்கப்பட்டது.

கிராம புற மாணவ செல்வங்களையும் நவீன தொழில்நுட்ப சாதனங்களினூடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் ஏற்பாட்டில் 4வது திறன் வகுப்பறை திறப்பு விழா  பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் கே.கமலராஜன்  தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. 

இத் திறன் வகுப்பறைக்கான நிதியுதவி அமரர். கலாநிதி வல்லிபுரம் குமாரசுவாமி நினைவாக அவரது குடும்பத்தினரால்(அமெரிக்கா)  மனித நேயம் அமைப்பின் ஒருங்கிணைப்பில் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் நெறிப்படுத்தலில் அமைத்துக் கொடுக்கப்பட்டது. 

நிகழ்வில் விசேட அதிதிகளாக பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் ரி.உதயகுமார் மற்றும் பாடசாலைக்கான இணைப்பாளர் கே. குலேந்திரேஸ்வரன்,  கௌரவ அதிதிகளாக விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் ஸ்தாபகர் மற்றும் இணைப்பாளர் வ.யதுர்ஷன், தலைவர் தி.கோபிநாத், செயலாளர் ரா.ஜனுசன், பொருளாளர் ம.திலக்சன் ஆகியோரும், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் 

மேலும் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் ஸ்தாபகரும் இணைப்பாளருமான யதுர்ஷன் மற்றும் தலைவர் கோபிநாத் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் மனித நேயம் அமைப்பின் இச் சேவையை பாராட்டி ஒரு நினைவுச் சின்னமும் மற்றும் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் இச் சேவையை பாராட்டி ஒரு நினைவுச் சின்னமும் பாடசாலை சமூகத்தினால் வழங்கி வைக்கப்பட்டன

 


அக்பைரைப்பற்று புத்தக திருவிழா இன்று ஆரம்பமானது. கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வு நிலைப் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். கடந்த 5 வருடங்களாக இடம்பெறும் இப் புத்தகத் திருவிழாவின் ஏற்பாட்டாளர் Pages புத்தகசாலை செயல் இயக்குனர் சிராஜ் மசூர் என்பது குறிப்பிடத்தக்கது.



 


வி.சுகிர்தகுமார்                 


 உலக சுற்றாடல் தினம் வாரம் கடந்த 30ஆம் தொடக்கம் ,நாளை 05ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு கடற்கரை, கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்று(04) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் கடற்கரைப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டன.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் தம்மரெத்தின சிங்கள பாடசாலை மாணவர்கள் அக்கரைப்பற்று 241 ஆம் காலாற்படைப்பிரிவினர் பிரதேச சபை ஊழியர்கள் பிரதேச செயலக சுற்றாடல் அபிவிருத்திப் பிரிவு, கரையோரம் பேணல் திணைக்களப் பிரிவு, பொருளாதார அபிவிருத்திப் பிரிவு, உத்தியோகத்தர்கள்;, பொது சமூக நலன் தன்னார்வலரகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கடற்கரைப் பிரதேசத்திற்கு வருகை தரும் பொது மக்களால் பாவனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கழிவுகளாக ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்த  பொருட்கள் யாவும் அகற்றப்பட்டுச் சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.
கடற்கரை சுற்றாடலைத் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பிரதேச சபை வாகனங்களின் உதவியுடன் கழிவுகள் அகற்றப்பட்டன.



(வி.ரி.சகாதேவராஜா)

 " பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் (Ending plastic pollution) எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 - ஜூன் 5 வரை  பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 "கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் " எனும் தொனிப் பெரிய கல்லாறு தொடக்கம் குருக்கள்மடம் வரையான 30 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்கரையோர சுத்தப்படுத்துகை நிகழ்வு இன்று (2025.06.04) காலை 07.30 மணி முதல் இடம்பெற்றது.

பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - திட்டமிடல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் பங்குபற்றுதலுடன் கடற்கரை கரையோர மற்றும்  சவுக்கு மர பிரதேசங்கள் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன.


 “எங்கள் கட்சியான தேசிய காங்கிரஸ் தூய்மையான கட்சி, 

நாங்கள் வேறு எந்த கட்சியுனும் கரைந்துவிடுபவர்கள் 

அல்ல,   








எங்களது கொள்கைகளோடு இணைந்து பணியாற்ற 

யார் வந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம், 


இன்று அக்கரைப்பற்று Water Parkயில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வெற்றி விழாவில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள், அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு முஸ்லிம் தேசிய கூட்டணியாக உருவாக வேண்டுமென அழைப்பு விடுத்தார்..



 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளை வலுவூட்டும் நோக்கில் சமுதாய அமைப்பின் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு (29) வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, சமுர்த்தி வங்கி சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை வழிநடத்தும் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிகாஸா ஷர்பீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எம்.அபுல் ஹுதா, எம்.எம். ஜாபீர், சமுர்த்தி பிரதேச சமுதாய அமைப்பின் தலைவர் கே.எம்.கபீர், பொருளாளர் யூ.எல்.ஜுனைதா உள்ளிட்ட சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிர்வாகிகள் 200 பேருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது. சாய்ந்தமருதில் மே 31 - ஜூன் 17 வரை வீடு வீடாக போதைப்பொருள் மற்றும் புகைத்தல் எதிர்ப்பு பிரச்சாரத்தினை மேற்படி சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜூன் 04 ஆம் திகதி சாய்ந்தமருதில் போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.




 பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால்   கவனயீர்ப்பு போராட்டம்  மேற்கொள்ளப்பட்டது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் செவ்வாய்க்கிழமை(26)  அம்பாறை மாவட்டம் திருக்கொவில் பகுதியில்  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த அமைதி வழி போராட்டமானது  இலங்கை அரசிடம் நீதி கோரிய போதும் தீர்வுகள் கிடைக்காத நிலையில் தற்போது சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.


அம்பாறை  மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி  தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 
சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதிபன்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? மனிதம் பாதுகாக்கப்படுகிறதா?  அரசே காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நிரந்தர தீர்வை பெற்று தருவீர்களா?  ஆகிய பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது  கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இந்த பேரணி இடம்பெற்றதாக  எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான்  தெரிவித்தார்.

 




பாறுக் ஷிஹான்


அம்பாறை பிரதேசத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபரை    அம்பாறை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை நகரில் இன்று (23)  40  கொகைன் போதைப் பொருள் பாக்கெட்டுகளுடன்    நடமாடிய சந்தேக நபரை  விசேட  சோதனை நடவடிக்கையின்போது அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை நகருக்கு குறித்த போதை பொருளை  கொண்டு வந்து விநியோகம் செய்யும் பிரதான சந்தேக நபராக  அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் போதைப்பொருள் மற்றும் ஐஸ் வலையமைப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை  அம்பாறை தலைமையக பிரதான  பொலிஸ் பொறுப்பதிகாரி  அசேல கே. ஹேரத்தின் மேற்பார்வையின்  கீழ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள்    மேற்கொண்டு வருகின்றனர்.



 தனது தடாலடி ஆட்டத்தால் அணியின் வெற்றிக்கு வித்திட்ட அபிஷேக் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய போது களத்தில் பரபரப்புக் காட்சிகள் அரங்கேறின. நடப்பு சீசனில் எதிரணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும் போது வித்தியாசமாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள திக்வேஷ் ராதி, இந்த முறையும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தனது ஸ்டைலில் வழக்கமான கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட, அவரிடம் அபிஷேக் சர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முடிவில், நடுவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.