Showing posts with label Sri lank. Show all posts


( வி.ரி.சகாதேவராஜா)
புத்தாண்டை முன்னிட்டு இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மண்டூர் 35, கண்ணன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 52 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்  வழங்கும் நிகழ்வு  பாடசாலையின் அதிபர். தெ.பேரின்பராசா  தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

கல்விக்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்று "எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் தொனிப்பொருளில்  இணைந்த கரங்கள் அமைப்பானது  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல கஸ்ர பிரதேசங்களில்  உள்ள பாடசாலை மாணவர்களுக்கு  உதவியினை வழங்கி  வருகின்றது.

மேலும் இந் நிகழ்வில்  ஆசிரியர்களான ந. நவகுமார், திருமதி. கி. விலோஜினி மற்றும் 
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான,
ஏஎம்.ரிஸ்வான்,
சி.காந்தன், சி. துலக்சன் ஆகியோர் 
கலந்து கொண்டு 52 மாணவர்களுக்கான பாடசாலைக்கு செல்வதற்கான  கற்றல் உபகரணங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் என்பன வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவைமாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அனுராதபுரம் அதிகபட்ச  வெப்பநிலை 32 (0C)

மட்டக்களப்பு அதிகபட்ச  வெப்பநிலை 30 (0C)

கொழும்பு அதிகபட்ச  வெப்பநிலை 35 (0C)

காலி அதிகபட்ச  வெப்பநிலை 32 (0C)

யாழ்ப்பாணம் அதிகபட்ச  வெப்பநிலை 32 (0C)

கண்டி அதிகபட்ச  வெப்பநிலை 31 (0C)

நுவரெலியா அதிகபட்ச  வெப்பநிலை 21 (0C)

இரத்தினபுரி அதிகபட்ச  வெப்பநிலை 35 (0C)

திருகோணமலை அதிகபட்ச  வெப்பநிலை 32 (0C)

மன்னார் அதிகபட்ச  வெப்பநிலை 33 (0C)

 


9ஆவது நாடாளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது


(எஸ்.அஷ்ரப்கான்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு இன்று (06)  பல்கலைகழக பிரதான சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 

பெப்ரவரி 10ஆம் தேதி 3 அமர்வுகளும் 11ஆம் தேதி 3 அமர்வுகளுமாக மொத்தமாக ஆறு அமர்வுகளாக பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும் மூண்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டம் பெற உள்ளனர்.

 இணையத்தள பக்கமும் பத்திரிகையாளர் மாநாட்டின் போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


ஊடக நிழ்வில் உபேவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் இணைந்து பட்டமளிப்விழாக் குழு தலைவர் பேராசிரியர் எம்.பி.எம் இஸ்மாயில், பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர், ஊடக பிரிவு இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


வி.சுகிர்தகுமார் 0777113659 



 சேர்ச் போ கொமண்ட் கிறவுண்ட் ((Search for Common Ground)  நிறுவனத்தின் அனுசரணையில் அம்பாரை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற பெண்களின் வில் கிளப் (WILL Club) அமர்வானது அம்பாரையிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று (28) நடைபெற்றது.
சேர்ச் போ கொமண்ட் கிறவுண்ட் நிறுவனத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக்கான சிரேஸ்ட முகாமையாளர் எம்.ஜ.எம்.சதாத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திட்ட இணைப்பாளர் கமலவாணி சுதாகரன், அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் திரு.கமால் நேத்மினி, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர், ஏசிஏ.அசீஸ்;, தேசிய அபாயகர ஒளடதங்கள் ஆணைக்குழுவின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் எஆ.றசாட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம ;மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான எம்.எம்.ஜி.பி.நௌசாட், மற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் பெண் உறுப்பினர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்
சேர்ச் போ கொமண்ட் கிறவுண்ட் நிறுவனம் கடந்த 04 வருடங்களாக அம்பாரை மாவட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை வலுப்படுத்தி இப்பெண்களுக்கான தனித்தளமாக 'வில் கழகம்' ஒன்றினை உருவாக்கியதுடன் இவர்களுக்கு உதவியாக பலதரப்பட்ட பங்குதாரர்கள் குழு ஒன்றினையும் அமைத்து இயங்கி வருகின்றது.
இன்றைய வில் கழக அமர்வில் உள்ளுராட்சி மன்ற பெண் தலைவிகளால் எழுதப்பட்ட திட்ட முன்மொழிவுகளின் செயற்பாடுகள் பற்றியும், இச்செயற்பாடுகளினால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள்; அவற்றைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிமுறைகள், திட்ட செயற்பாடுகளை செயற்படுத்தும் போது பலதரப்பட்ட பங்குதாரர் குழுவிடமிருந்து பெற்றுக் கொண்ட உதவிகள் பற்றியும் தெளிவு படுத்தப்பட்டது.
அத்தோடு உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கும் பலதரப்பட்ட பங்குதாரர் குழுவினர்களுக்குமிடையில் கலந்துரையாடலும் நடைபெற்றது.
மேலும் வில் கழகத்தை மாவட்ட ரீதியில் பதிவு செய்வதற்கு தேவையான வழிமுறைகள் பற்றி அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் கே.எம்.இர்பான் கலந்து கொண்டு தெளிவுபடுத்தினார்.
இதேநேரம் வில் கழகத்திற்கான புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

சரிகமப டைட்டில் வின்னராக மகுடம் சூடிய யாழ். சிறுமி கில்மிஷா.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு www.ceylon24.com தமது வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றது.

Zee தமிழ் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார். 

இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தைப் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கியுள்ளார்.



 Zee தமிழ் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார்.


இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கியுள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான சரிகமப இசை நிகழ்ச்சியில் மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் கில்மிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திருந்தனர்.


இதில் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது போட்டியாளராக கில்மிஷா தெரிவாயிருந்ததுடன், அஷானி இறுதித் தருணத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார்.


ஆறு போட்டியாளர்கள் பங்கேற்ற, இன்றைய இறுதிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இறுதிப்போட்டி இடம்பெற்றது.


அவர்களில் கில்மிஷா முதலிடம் பிடித்ததுடன், சரிகமப நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டுதுடன், அவருக்கான பணப்பரிசு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


அரசாங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்  சபையில் நிறைவேற்றப்பட்டது.




அதற்கமைய வரவு செலவுத் திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.




அதன்படி குறித்த வரவு செலவுத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் 41 மேலதிக வாக்குகளால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது




முன்னாள் அமைச்சர் ரொஷான் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்தார்.





 


பாடசாலை இலச்சினை, பெயர் என்பவற்றைப் பயன்படுத்தி பாடசாலையின் ஊடகப் பிரிவு, தனியார் டியுசன் வகுப்பு திட்டத்திற்கான விளம்பரத்தைப் பிரசுரித்துள்ளது.


மாணவர்கள் பாடசாலைக்கு சேர வேண்டும்? கட்டணம் அறவிட்டு நடாத்தப்படும் தனியார் வகுப்புக்கு சேர வேண்டுமா?


அடிப்படை அறம் கூட இல்லையா?


பலாங்கொடை பின்னவல பகுதியில் நேற்று (07) இரவு பெய்த கடும் மழையால் குறித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது


இதனால் பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.


இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பலமுறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 நூருல் ஹுதா உமர் 


சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கு போஷாக்கு மற்றும் ஆரோக்கிய உணவு பழக்கம் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு இன்று (17) சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் ஆகியோரின் வழிகாட்டலில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் வங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

இதில் வளவாளர்களாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரியும், சாய்ந்தமருது பதில் சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் தஸ்லிமா பஷீர், கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை டாக்டர் எம்.என். எம். தில்சாத் கலந்து கொண்டு விரிவுரையாற்றினர்.

இந்நிகழ்வில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றியாபா, சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச வறுமை ஒழிப்பு வாரம் இம்மாதம் 17-23 வரை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தேசிய ரீதியில் அமுல்படுத்தியதை அடுத்து பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி பிரிவினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் இன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லுாரியின் 150 ஆவது ஆண்டு நிகழ்வில் மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

 




பாறுக் ஷிஹான்)


உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை  கமு/கமு/ அஸ்-ஸுஹறா  வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு   இன்று  பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில்   இடம் பெற்றது.

சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி  மாம்பழ இனங்கள் முதற்கட்டமாக அதிதிகளால் உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம்  சேர் கௌரவ அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர்  (நிர்வாகம் )  மற்றும் ஏனைய அதிதிகளாக   முன்னாள் பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ.கமால்  பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு  செயலாளர் பொறியியலாளர் எம்.ரீ.எம்.அனப் உறுப்பினர்களான ரீ.எம்.இர்பான் ஜே.எம்.ஜெஸீல் ஐ.எம்.சமீறுல் இலாஹி  பழைய மாணவர் செயலாளர் எஸ்.எச் எம் .அஜ்வத்  எம்.எம் முஹ்ஷீன்  அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.றிஸான் அமீர் ஏ பாறூக் இமுன்னாள்  நாவதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம். பி. அப்துல் றஹீம்  பாடசாலை ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் கலந்து  சிறப்பித்தனர்.

இதன்போது சுமார் 100க்கும் அதிகமாக மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்ட  நிகழ்வானது அதிபர் உட்பட  மாணவர்களின் தியாகம் அர்ப்பணிப்பு   ஒழுக்கம் சம்பந்தப்பட்டதுடன்   மாணவர்களின் சுற்றாடல் சார் நடவடிக்கைகள் இந்த அறுவடை செயற்பாட்டில் தங்கி இருப்பதாகவும் ஒழுக்கம் உள்ள இடத்தில் தான் காய் கனிகள் பாதுகாப்பாக இருக்கும்   எதிர்காலத்தில் இச்சிறுவர்களின்  திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக  அதிதிகளாக கலந்து கொண்டவர்கள்  குறிப்பிட்டனர்.

குறித்த நூற்றுக்கணக்கான  மாம்பழ அறுவடைக்கு முன்னர் மாம்பழ உற்பத்திக்கான  பங்களிப்பினை யாழ்ப்பாணத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் மனோகரன் சசிகரன் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் ஊடாக ஒரு தொகுதி பொதி செய்கின்ற  பைகளை வழங்கி ஊக்கப்படுத்தி ஆரோசனை வழங்கி  இருந்தமை குறிப்பிடத்தக்கது.


 இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து மனிதகுலத்திற்கும் அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் தூதரான முஹம்மது நபி அவர்கள், அல்லாஹ்வின் கடைசி இறைத் தூதராவார்.
அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதில் நபிகளார் முகங்கொடுத்த கடினமான அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட தருணத்திலும் பொறுமையும் மௌனமும் தான் அவரின் கூரிய ஆயுதங்களாக இருந்தன. நம்பிக்கை மற்றும் மனிதநேயத்திற்காக அவர் செய்த அளவற்ற தியாகத்தின் விளைவாக, அவர் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிந்தது.
பரஸ்பர புரிதல், சகோதரத்துவம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல், நேர்மை என அவர் வாழ்நாள் முழுவதும் காத்து வந்த பண்புகள், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் நமது நம் வாழ்வில் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். மேலும், அவரது தத்துவத்தை மேலும் சமூகமயமாக்கவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் பணியாற்றுவது அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த மரியாதை என்று நான் நம்புகிறேன்.
நபிகள் நாயகம் காட்டிய விழுமியங்களுக்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பாதையை வலுப்படுத்த அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனிய மீலாதுன் நபி தின வாழ்த்துக்கள்!

 


ஜலால்தீன் சதுக்கம் பொத்துவில் பிரதேசத்தில்  அமைந்திருக்கும் இந்தப் பள்ளிவாயல் மிகவும் பழமையானது.


 சுனாமியால் கூட இது வெடிப்புக்கு உள்ளாகி இருந்தது 2021வரையில் இது புனரமைப்பு செய்யப்படவில்லை.


 ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இதனை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது இதனால் நோன்பு மற்றும் ஏனைய தொழுகைகள் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே சிறிய பள்ளிவாயலில் இடம்பெற்றது.


தற்போது புதிய பள்ளிவாசலின்   அனைத்து வேலைகளும் நிறைவேறும் தருவாயில் கொங்கிரீட் சிலப் போடுவதற்காக சீமெந்துப் பக்கட்டுளும் அதற்கான பணமும் தேவைப்படுகிறது.


மண் கல் கம்பி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.


 உங்களால் முடிந்த ஒரு  தொகையை  அல்லது ஒரு சீமந்து பக்கட்டையாவது கொள்வனவு செய்ய உதவி செய்வீர்கள் என நான் நம்புகிறேன்.


*(150 பக்கெட் சீமெந்து சுமார் 10 இலட்சம் பணமும் தேவைப்படுகிறது)*


மேலதிக தகவல்களுக்கு என்னையோ  அல்லது பள்ளிவாசல் தலைவரையோ தொடர்பு கொள்ள முடியும்.


AL-BAHRIYA MASJITH

AC NC 113061000782

SAMPATH BANK

POTTUVIL BRANCH

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.