Showing posts with label Sri lank. Show all posts

 


பூண்டுலோயா பிரதான வீதியின் பல இடங்களில் மண்மேட்டுடன் கற்பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து வீழ்ந்ததில் இவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 


இதனை தொடர்ந்து தற்போது பொலிஸார் ,பொது மக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் மற்றும் கொடி, செடிகளை அகற்றி, போக்குவரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகின்றனர் .

 


தொடர்ந்தும் மழையுடன் காலநிலை நீடிக்கும் பட்சத்தில், குறித்த வீதியில் இருபுறமும் பல இடங்களில் மண்மேட்டுடன் கற்பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 


எனவே இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

 


குறிப்பாக நுவரெலியாவில் பல இடங்களில் பிரதான வீதியில் சரிந்து விழுந்த மண் மற்றும் கற்பாறைகளை அகற்றி வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

 

செ.திவாகரன்.

 



#Rep/நுஸ்கி.
தைக்கா நகர் பிரிவு 16  அட்டாளைச்சேனை ஸஹ்றா குறுக்கு வீதி கொங்கிறீட் வீதியாக உருவாக்கப்படவுள்ளது. அட்டாளைச்சேனை பிரஜா சக்தி  அமைப்பாளர் ஜனாப் இம்தியாஸ் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வை இன்று காலை திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பிளருமான ஆபுபக்கர் ஆதம்பாவா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

குறித்த இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான ஜனாபா பாஹிமா, திருமதி ஜனுசா இம்தியாஸ் ஆகியோரும், பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும்  கலந்து சிறப்பித்திருந்தனர்.

 


தேசிய புலனாய்வு பிரிவின்  புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட  இன்று (28) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.



ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். 


மேஜர் ஜெனரல் நியங்கொட நேற்று (27) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடம் இருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.


 

( வி.ரி.சகாதேவராஜா)

கல்வி அமைச்சினால் நடைமுறைபடுத்தபட்டுவரும் உள விழிப்புணர்வு வாரத்தை(10 - 17) முன்னிட்டு கல்முனை பாண்டிருப்பு மகா வித்யாலயத்தில் பாடசாலை அதிபர் கே.அருண்குமார்  தலைமையில் மூச்சுப் பயிற்சி, மற்றும் தியான பயிற்சி நேற்று   (17)   நடைபெற்றது.

அங்கு கற்கின்ற மாணவர்களும்  கல்வி கற்பிக்கின்ற  ஆசிரியர்களதும் உள சுகாதார முக்கியத்துவத்தையும், நலனையும் மேம்படுத்துவதற்கான. மூச்சுப் பயிற்சி, மற்றும் தியான பயிற்சி ஆகியவற்றை. எமது வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு நிலையத்தினால். நிலையத்தின். தியான பயிற்சிவிப்பாளர். சிசுபாலனால் தியானம்,மூச்சுபயிற்சி,உளநல ஆன்மீக தெளிவுரைகள் என்பன வழங்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர்,பிரதிஅதிபர்ஆசிரியர்கள்,மாணவர்கள், பாடசாலை சமூகம் என பலர் கலந்து கொண்டதுடன் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஸ்தாபகர் தவத்திரு புண்ணியமலர் அம்மா,ஆன்மீக இணைப்பாளர் என்.சௌவியதாசன்,ஆலோசகர்,தொண்டர்கள் ஆகியோரும் கலந்து நிகழ்வை நெறிப்படுத்தினர்.



 ( வி.ரி.சகாதேவராஜா)

 சர்வதேச சிறுவர் தின வாரத்தின் ஓரங்கமாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளுக்கான போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டல், துண்டுப்பிரசுரம் வழங்கல் மற்றும் ஸ்டிக்கர் ஓட்டும் நிகழ்வுகளானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர்  தலைமையில் களுவாஞ்சிகுடி பிரதான பஸ் தரிப்பிடம், பொதுச்சந்தை மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை போன்ற இடங்களில் இடம்பெற்றது.

"உலகை வழிநடாத்த - அன்புடன் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு 2025.09.25 தொடக்கம் ஒக்டோபர் 01ம் திகதி வரை சர்வதேச சிறுவர் தின வாரமாக பிரகடனப்படுத்தி பல நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.



சிறுவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவையினை ஏற்படுத்தல் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் சிறந்த போக்குவரத்து சேவையினை வழங்கும் சாரதிகள் மற்றும் உதவியாளர்களை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு இடம்பெற்ற இந்த நிகழ்வினை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் அஜந்தா தவசீலன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை நிலைய பொறுப்பதிகாரி, போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 


வடமேற்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேலே நேரடியாக இருக்கும், ஏனெனில் அதன் தெற்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கம் வெளிப்படையானது. இன்று (31) நண்பகல் 12.10 மணியளவில் பத்தலங்குண்டுவ, மதவாச்சி, ஹொரவப்பொட்டான மற்றும் கிண்ணியா ஆகிய இடங்களுக்கு மேல் சூரியன் உச்சம் தரும் இலங்கைக்கு மிக அருகில் இருக்கும்

 


வி.சுகிர்தகுமார்    



49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அக்கரைப்பற்று மண்ணைச்சேர்ந்த ராம்கராத்தே சங்க மாணவன் எஸ்.நவக்சன் குமிற்றி போட்டியில் தங்கம் பதக்கத்தினை சுவீகரித்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்தார்.
தேசிய விளையாட்டு விழாவானது காலியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 18 19 20ஆம் திகதிகளில் நடைபெற்றது.
நடைபெற்ற போட்டிகளில் கிழக்கு மாகாணத்திற்கு 02 தங்கம் 02 பித்தளை பதக்கங்கள் கிடைக்கப்பெற்றன.
இதில் 19 வயதுடைய ராம்கராத்தே மாணவன் எஸ்.நவக்சன் குமிற்றி போட்டியில் தங்கம் வென்றதுடன் 49 வருடங்களின் பின்னர் அம்பாரை மாவட்டத்தில் குமிற்றி போட்டியில் தங்கம் வென்றவர் எனும் சாதனை படைத்தார்.
சிரேஸ்ட வீரர்கள் பங்குபற்றும் போட்டியில் இளவயது வீரராக கலந்து கொண்டு தங்கம் வென்றவர் எனும் பெருமையினையும் தனதாக்கிக் கொண்டார்.
இவருக்கான பயிற்சிகளை ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் க.கேந்திரமூர்த்தி மற்றும் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர்களான சென்சி கே.இராஜேந்திரபிரசாத், சென்சி கே.சாரங்கன் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கனகராசா சரவணன்


இனிய பாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து இன்று (29) மாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு சிஐடியினர் கைது செய்துள்ளனர்.

ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ஆம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு.சந்திவெளி பகுதிகளில் வைத்து சி.ஐ.டியினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்த இனிய பாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டுவந்தவரும் இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சம்பவதினமான இன்று மாலை 4.00 மணியளவில் சி.ஐ.டியினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஐடியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இனியபாரதியை கைது செய்து விசாரணையின் பின்னர் இனிய பாரதியின் முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனிய பாரதியின் சகாக்கள் ஆகிய 4 பேரை சி.ஐ.டியினர் தொடர்ச்சியாக கைது செய்துவருவதையிட்டு இனிய பாரதி மற்றும் பிள்ளையானுடன் தொடர்புபட்டவர்கள் பயப் பீதியில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது .

 

 

கனகராசா சரவணன்


 


கொல்கத்தாவில் நடைபெற்ற 8வது தெற்காசிய குறும்பட விழாவில் சத்யஜித் ரே வெண்கல விருதை (ஆவணப்படம்) வென்ற இலங்கையின் அனோமா ராஜகருணாவுக்கு வாழ்த்துக்கள் 🙌




 

நூருல் ஹுதா உமர்


இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக கடந்த 13.07.2025 ஆம் திகதி நடைபெற்ற மாகாண மட்ட பீ- நிலையறி பரீட்சை யில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) இலிருந்து தோற்றி 150 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களைப் பாராட்டி மேலும் ஊக்கமூட்டும் நிகழ்வு பாடசாலையில் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது.  

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் அவர்களும் கெளரவ அதிதியாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும் பாடசாலை EPSI ஒருங்கிணைப்பாளருமான எஸ்.எம்.எம். அன்ஸார் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான திருமதி குறைஷியா ராபி, றின்ஷா பர்வின் மற்றும் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்ட செய்தி வெளியான பிறகு, 94 வயதான மதகுரு கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் பெயர் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.


ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்த குற்றத்திற்காக நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற, மஹ்தி குடும்பத்தினரின் மன்னிப்பு முக்கியம் ஆகும்.


ஜூலை 14 திங்கட்கிழமையன்று கேரளாவின் மிகவும் மதிக்கப்படும் மற்றும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதத் தலைவரான அபுபக்கர் முஸ்லியார், நிமிஷா பிரியா வழக்கு குறித்து 'ஏமனின் சில ஷேக்குகளுடன்' பேசினார் என நிமிஷா பிரியாவைக் காப்பாற்றுவதற்காக பிரசாரம் செய்து வரும் சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில், செவ்வாயன்று கூறியது


உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் இந்த கவுன்சிலின் உறுப்பினருமான சுபாஷ் சந்திரா பிபிசியிடம் பேசியபோது, "சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சிலின் உறுப்பினர்கள் கிராண்ட் முஃப்தியைச் சந்தித்துப் பேசினார்கள். அதன் பிறகு அவர், அங்குள்ள (ஏமன்) சில செல்வாக்கு மிக்க ஷேக்குகளுடன் பேசினார்" என்று கூறினார்.


விளம்பரம்


"இறந்தவரின் உறவினர்கள் உட்பட செல்வாக்கு மிக்கவர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று சந்திரா கூறினார்.



மௌலவி முஸ்லியார், சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில்

நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைக்க உதவிய இஸ்லாமிய மதகுரு யார்?

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்தில் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி நிலத்தின் தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு எரிந்து வருகிறது.

புனித நீரூற்றை பாதுகாக்க அதானி குழுமத்திற்கு எதிராகப் போராடும் ஆஸ்திரேலிய பழங்குடிகள்

2017 ஆம் ஆண்டு ஏமனில் நடந்த கொலை வழக்கில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் வழக்கு பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

End of அதிகம் படிக்கப்பட்டது

ஜூலை 16 அன்று நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு முஸ்லியாரின் தலையீடு உயிரிழந்த தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடனான பேச்சுவார்த்தைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது.


ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை ஒத்தி வைப்பு - கடைசி நேரத்தில் என்ன நடந்தது?

15 ஜூலை 2025

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பா? கொலையுண்ட மஹ்தியின் சகோதரர் பதில்

16 ஜூலை 2025

மௌலவி முஸ்லியார், சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில்

முஸ்லியார் யார்?

'கிராண்ட் முஃப்தி' என்று இந்தியாவில் முஸ்லியார் அறியப்பட்டாலும், அவருக்கு இந்தப் பட்டம் முறைசாரா முறையில் வழங்கப்பட்டதாகும்.


சுன்னி சூஃபிசம் மற்றும் கல்விக்கான பங்களிப்புக்காக அவர் அறியப்பட்டாலும், பெண்கள் குறித்த அவரது கூற்றுகள் பல முறை கண்டனங்களை எதிர்கொண்டுள்ளன.


கேரள பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாற்றுப் பேராசிரியர் அஷ்ரஃப் கடக்கல் பிபிசியிடம் கூறுகையில், "அவர் தனது சீடர்களுக்கு தீர்க்கதரிசியைப் போன்றவர். அவருக்கு மந்திர சக்திகள் இருப்பதாகவும் சிலர் நம்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.


"பரேல்வி பிரிவைச் சேர்ந்த முஸ்லியாரை சூஃபி மாநாடு ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி சிறப்பித்துள்ளார். ஆனால் பெண்கள் மீதான அவரது அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது."


"அவரை சக்திவாய்ந்த தலைவராக்குவது எது என்று நீங்கள் கேட்டீர்கள். இந்தியாவில் யாராவது சந்திராசாமியுடன் போட்டியிட முடிந்தால், அது முஸ்லியாராகத்தான் இருக்கும் என்பதே எனது பதில். அவரும் இவரைப் போன்றவரே. சந்திரசாமி, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் செல்வாக்குமிக்கவராகவும் இருந்தவர்" என்று பிபிசியிடம் கலாசார மற்றும் அரசியல் ஆய்வாளர் ஷாஜகான் மதாபத் கூறினார்.


நிமிஷா பிரியா விஷயத்தில் ஏபி அபூபக்கர் முஸ்லியார் தலையிட்ட போதிலும், பெண்கள் குறித்த அவரது கருத்துக்கள் குறித்த விவாதங்கள் தொடர்கின்றன. இருப்பினும், எழுத்தாளரும் சமூக சேவகருமான முனைவர் கதீஜா மும்தாஜ் அவரைப் பாராட்டுகிறார்.


பிபிசியிடம் பேசிய அவர், "எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தபோதும், நிமிஷாவுக்காக முஸ்லியாரால் ஏதேனும் செய்ய முடிந்தது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.


'தாயைப் பார்க்க ஏங்கும் மகள்' - நிமிஷா பிரியா பற்றி கணவர், சொந்த ஊர் மக்கள் கூறுவது என்ன?

16 ஜூலை 2025

'நிமிஷா பிரியா இல்லாமல் ஏமனில் இருந்து வர மாட்டேன்' - கேரள செவிலியரின் தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி

14 ஜூலை 2025

சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில்

படக்குறிப்பு,'சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில்' உறுப்பினர்கள் மௌலவி முஸ்லியாரைத் தொடர்பு கொண்டனர்

முஸ்லியார் என்ன செய்தார்?

ஏமனில் உள்ள ஒரு சூஃபி பாரம்பரியத்தைச் சேர்ந்த 'பா அலவி தரீக்கா'வின் தலைவரான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸுடனான தனது நீண்டகால நட்பையும் பிற தொடர்புகளையும் பயன்படுத்தி முஸ்லியார், தலால் மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் வெற்றியடைந்தார்.


ஷேக் ஹபீப் உமர், ஏமனில் உள்ள 'தார் உல் முஸ்தபா' என்ற மத நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அங்கு கேரளா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் கல்வி கற்க வருகிறார்கள்.


ஷேக் ஹபீப் உமர், போரில் ஈடுபடும் குழுக்கள் உட்பட, ஏமனில் உள்ள அனைத்து பிரிவுகள் அல்லது குழுக்களுடன் இணக்கமான தொடர்புகளை கொண்டவர்.


"அவரது தலையீடு முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் இருந்தது. ஷரியா சட்டத்தில் ஒரு நபருக்கு ரத்தப் பணம் செலுத்துவதன் மூலம் மன்னிப்பு பெற முடியும் என்ற விதி உள்ளது என்று மட்டுமே அவர் அவர்களிடம் கூறினார். அவரது முயற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது" என்று முஸ்லியாரின் செய்தித் தொடர்பாளர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.


ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்டவரின் (தலால் அப்தோ மஹ்தி) குடும்பம் மன்னிப்பு அளித்தால், நிமிஷாவின் தண்டனை ரத்து செய்யப்படும். அந்த மன்னிப்பிற்கு ஈடாக 'ப்ளட் மணி' (Blood money) அல்லது தியா (Diyah) எனப்படும் நஷ்டஈடு (பெரும்பாலும் பணம்) வழங்கப்படும்.


முஸ்லியாரிடம் பிபிசியால் பேச முடியவில்லை. மலப்புரத்தில் உள்ள நாலேட்ஜ் சிட்டி நகரத்தில் முஸ்லியாரின் மகனால் அமைக்கப்பட்ட மசூதி மற்றும் மதீன் சாதத் அகாடமியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது ஷேக் ஹபீப் உமர் கேரளாவிற்கு வருகை தந்துள்ளார்.


ஏமனில் சில நாட்களில் மரண தண்டனை: நிமிஷா பிரியாவை இந்தியா நேரடியாக தலையிட்டு மீட்க முடியுமா?

11 ஜூலை 2025

ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு 6 நாட்களில் மரண தண்டனை - காப்பாற்ற ஒரே இறுதி வாய்ப்பு என்ன?

10 ஜூலை 2025

ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

படக்குறிப்பு,நிமிஷா பிரியா 2017 ஆம் ஆண்டு கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார், அவரது கணவர் மற்றும் மகள் கேரளாவில் வசிக்கின்றனர்

மௌலவி முஸ்லியார் பிரபலமானதன் பின்னணி

1926 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுன்னி அமைப்பான 'சமஸ்தா கேரள ஜமியதுல் உலமா' என்ற அமைப்பில் இருந்து பிரிந்து புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தபோது இஸ்லாமிய வட்டாரங்களில் முஸ்லியார் பிரபலமானார்.


இந்த அமைப்பு 1986 வரை ஒற்றுமையாக இருந்தது, ஆனால் பின்னர் சித்தாந்தத்தில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின.


"முஸ்லியார் தீவிர சல்ஃபி இயக்கத்தை எதிர்த்தார். ஆங்கிலம் 'நரகத்தின் மொழி' என்பதால் இஸ்லாமியர்கள் அதைக் கற்கக்கூடாது என்றும், மலையாளம் 'நாயர் சமூகத்தின் மொழி' என்பதால் அதைக் கற்கக்கூடாது என்று நம்பிய இயக்கம் அது. அவர் பெண் கல்விக்கும் எதிரானவர்" என்று பேராசிரியர் அஷ்ரஃப் விளக்குகிறார்.


வெளிநாட்டிலிருந்து நன்கொடைகளைப் பெற்று கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்தினார்.


"குறைந்தது 40 சதவீத சுன்னி இஸ்லாமியர்கள், முஸ்லியாருக்கு ஆதரவாக இருந்தனர். பாரம்பரியமாக சுன்னி அமைப்பு ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) உடன் இருந்தது.


ஆனால் முஸ்லியார் 'எதிரியின் எதிரி நண்பன்' என்ற கொள்கையை பின்பற்றி சி.பி.எம் கட்சியை ஆதரித்தார். இதன் காரணமாக மக்கள் அவரை 'அரிவாள் சுன்னி' என்று அழைக்கத் தொடங்கினார்கள், அரிவாள் சி.பி.எம் கட்சியின் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது."


"அவர் ஒரு சிறந்த அமைப்பாளர் என்பதால் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகம், ஆனால் பெண்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்த அவரது கருத்துக்கள் மிகவும் பழமையானவை. சல்ஃபி வட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வணக்கம் கூட சொல்லக்கூடாது என்று அவர் ஒருமுறை கூறினார்" என்று ஷாஜகான் கூறுகிறார்.


ஏமன், கேரள செவிலியர், நிமிஷா பிரியா

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து

இஸ்லாமிய ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பது அவசியம் என்று கூறும் அவரது கூற்றை முனைவர் மும்தாஜ் கண்டிக்கிறார்.


"முதல் மனைவியின் மாதவிடாய் காலத்தில் ஆண்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரண்டாவது மனைவியைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார். பெண்கள் குறித்த இதுபோன்ற அவரது கருத்துக்கள் கவலையளிப்பவை. இதுபோன்ற அவரது கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாது" என்று அவர் கூறுகிறார்.


இவை அனைத்தையும் மீறி, "நிமிஷா பிரியா இஸ்லாமியர் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அவர் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி உதவியிருக்கிறார் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று மும்தாஜ் கூறுகிறார்.


மேலும், 26/11 மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்லாமியர்களுக்கான மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்வதில் மௌலவி முஸ்லியார் தீவிர பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், "இஸ்லாத்தில் பயங்கரவாதம் தடைசெய்யப்பட்டுள்ளது" என்ற செய்தியை இஸ்லாமிய சமூகத்திற்கு வழங்குவதாகும்.



 ( பாறுக் ஷிஹான்)


காரைதீவு  பிரதேச சபையின்   04 ஆவது சபையின் 1 ஆவது மாதாந்த சபைக்கூட்டம்   இன்று(16)  ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றி  சபையின்  தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்  ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் காரைதீவு பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு நடவடிக்கைகள்  சபையின்  தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்  தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில்  உப தவிசாளர் முஹம்மது ஹனீபா முகம்மது இஸ்மாயீல்  மற்றும் ஏனைய   உறுப்பினர்கள்  பங்கபற்றலுடன் தேசிய கீதம் இயற்றப்பட்டு  ஆரம்பமாகின.

இதன்போது   மத அனுஸ்டானம்  இடம்பெற்ற பின்னர்  தவிசாளர்  உரையுடன் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் அறிமுகம் மற்றும் உரை  என்பன தொடர்ச்சியாக  இடம்பெற்றன.

பின்னர் காரைதீவு பிரதேச சபைக்கு சொந்தமான கடற்கரை பூங்காவின் கடையறையினை காரைதீவு பிரதேச செயலாளர் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க உள்ளூர் உணவு உற்பத்தியாளர் சங்கத்தின் விற்பனை நிலையமாக பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக வழங்கப்படுகின்றது  தொடர்பில் சபையில் கலந்துரையாடப்பட்டன.மேலும் சபையில் தவிசாளரின் அறிவிப்புக்கள், பிரேரணைகளை ஆராய்ந்து நிறைவேற்றுதல், செயலாளர் நியமனம்-தற்போதைய செயலாளரான திரு.அ.சுந்தரகுமார் என்பவரை தொடர்ந்தும் செயலாளராக கடமையாற்ற சபை அனுமதி பெறல்,காசோலையில் கையொப்பமிடல் அலுவலக காசோலையில் இரு உத்தியோகத்தர்கள் கையொப்பமிட வேண்டுமென்பதால் தற்போது இடுவதற்கு சபை அனுமதி பெறல்,நிதிப்பிரமாண அதிகார கையளிப்பின் பிரகாரம் கொடுப்பனவு அத்தாட்சிப்படுத்தும் கடமையினை செயலாளரும், கொடுப்பனவு உத்தியோகத்தராக நிதி உதவியாளரையும் நியமிக்க அங்கீகாரம் வழங்க சபை அனுமதி பெறல்,கலாச்சார மண்டபத்திற்கான தற்போதைய வாடகையை தொடர்ந்தும் அறவீடு செய்ய சபை அனுமதி பெறல் ,2025 ற்கான கேள்விச் சபையில் பின்வருபவர்களை கேள்விச்சபை உறுப்பினர்களாக நியமிப்பதற்கு சபை அனுமதி பெறல்,குறித்தும் ஆராயப்பட்டன.


இறுதியாக  2025ற்கான தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழுவில் பின்வருபவர்களை கேள்விச்சபை உறுப்பினர்களாக நியமிப்பதற்கு சபை அனுமதி பெறல், காரைதீவு பிரதேச சபையின் 4வது சபையின் சபை அமர்வுகளை 2025ம் ஆண்டில் மாதாந்தம் 2ம் வாரத்தில் குறித்த தினத்தில் நடாத்துவதற்கு சபை அனுமதி பெறல்,2025 ஆண்டுக்கான நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற வேலைத்திட்டங்களுக்கான சபை அனுமதி பெறல்,எமது சபைக்கான 2025ம் ஆண்டில் செலுத்தப்படும் மின்சார கட்டணம், தொலைபேசி இணைய கட்டணம், நீர் வழங்கல் கட்டணம் போன்ற மீண்டுவரும் செலவினங்களை மாதாந்தம் தொடர்ந்து செலுத்துவதற்கான சபை அனுமதி பெறல்,தற்பொழுது சபையில் நடைமுறையிலுள்ள திண்மக்கழிவு சேகரிப்பிற்காக அறவிடப்படும் கட்டணத்தினை தொடர்ந்து அறவீடு செய்வதற்கு சபை அனுமதி பெறல்,2025ம் ஆண்டுக்கான நிலையியற் குழுக்கள் அமைப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளல்,2025 ஆண்டுக்கான ஆலோசனை குழு அமைப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளல்,காரைதீவு லெனின் வீதியில் இரு இடங்களில் திண்மக்கழிவுகள் இனந்தெரியாத நபர்களினால் கொட்டப்பட்டுவருவதனால் அதனை தடுக்கும் முக முகமாக அலுவலகம், சித்தானைக்குட்டி ஆலயம் இரு இடங்களிலும் கண்காணிப்பு செய்யும் வகையில் கமரா (Camera) பொருத்துவதற்கும் ஏனைய குப்பை கொட்டப்படும் இடங்களில் (Board) அமைப்பதற்கும் சபை அனுமதி பெறல்,காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதி, களப்பு வீதி, கடற்கரை வீதி மற்றும் மயானம் போன்ற இடங்களில் PDSG நிதியில் கொள்வனவு செய்யப்படும் மின்விளக்குகளை பொருத்துவதற்கு சபை அனுமதி பெறல்,சபையினால் வேலைத்திட்டங்கள் முடிவுறுத்தப்பட்டதனை முன்னெடுக்கப்படுகின்ற உறுதிப்படுத்தும் "ஏற்றுக்கொள்ளும் குழு" Acceptance Committee யினை சபையில் பின்வருபவர்களை உறுப்பினர்களாக நியமிப்பதற்கு சபை அனுமதி பெறல்,மாதாந்த கூட்டம் நடத்த வேண்டிய திகதி தீர்மானித்தல்,முன்மொழிவுகள் உள்ளடங்கலாக  இக்கூட்ட அமர்வில்   கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் பெறப்பட்டு  சபை நடவடிக்கை  சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.




( பாறுக் ஷிஹான்)

சம்மாந்துறை  பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள் இன்று(15) ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கீதம் இயற்றப்பட்டு   சபையின்  தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர்  ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் சம்மாந்துறை பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு நடவடிக்கைகள்  சபையின்  தவிசாளர்    தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில்  உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்  மற்றும் ஏனைய   உறுப்பினர்கள்  பங்கபற்றலுடன் ஆரம்பமாகின.

இதன்போது   மத அனுஸ்டானம்  இடம்பெற்ற பின்னர்  தவிசாளர்  உரையுடன் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் அறிமுகம் மற்றும் உரை  என்பன தொடர்ச்சியாக  இடம்பெற்றன.

அத்துடன் பின்வரும்  தீர்மானங்களுக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட  விடயங்கள் மற்றும் மனுக்கள் தவிசாளர் தலைமையில் ஆராயப்பட்டன.

இதன்படி  1987/15 இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 12 இற்கமைய ஆலோசனை குழுக்களை நியமித்தல்,நிதி மற்றும் கொள்கை உருவாக்கம்,வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி,தொழில்நுட்ப சேவைகள் தொடர்பான குழு,சுற்றாடலும் வாழ்வசதிகளும்,1987/15 இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 216ம் பிரிவிற்கமைய பெறுகைகளையும், அங்கீகாரங்களையும் செய்வதற்கும் கொடுப்பதற்கு அல்லது பெறுவதற்கு இரு அலுவலர்களுக்கு அங்கீகாரம் வழங்கல், காசோலையில் கையொப்பமிடுவதற்கு 02 உத்தியோகத்தர்களுக்கு அனுமதி வழங்கல், மாதாந்த செலவு தொடர்பாக கௌரவ தவிசாளர் அவர்கள் நேரடியாக அனுமதி வழங்கும் உச்ச நிலை தொடர்பான தீர்மானம் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.


மேலும் சபையில்  பெறுகை நடைமுறை குழுக்களை தாபித்தல்(கொள்முதல் குழு),விலைமனு மதிப்பீட்டுக் குழு (Bid Evaluation Committee),(ஏற்றுக்கொள்ளும் குழு), அத்தியவசிய சேவையில் ஈடுபடும் Tractor, JCB, Motor Grader ஆகிய வாகனங்களுக்கான டயர் கொள்வனவுக்கான அனுமதி,அத்தியவசிய சேவையான தெரு விளக்கு பழுதுபார்த்தலுக்காக மின்விளக்குகள், மின் உபகரணங்கள், ஏனைய பொருட்கள் கொள்வனவு செய்வதற்கான தீர்மானம் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
 
 


இறுதியாக பிரதேச சபையில் கடமையாற்றும் நிரந்தர, தற்காலிக ஊழியர்களுக்கான 2025.07.01 2025.12.31 ஆந் திகதி வரையான சம்பளங்கள், மேலதிக நேர கொடுப்பனவு, பிரயாண கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்குவதற்கான தீர்மானம், சபைக்கு கிடைக்கப்பெற்ற கடிதங்கள், மனுக்கள், ஏனைய விடயங்கள் ஆராய்தல் குறித்தும்    இக்கூட்ட அமர்வில்   கலந்துரையாடப்பட்டதுடன்     தீர்மானங்களும் பெறப்பட்டு  சபை நடவடிக்கை  சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


இதே வேளை சம்மாந்துறை அல் முனீர் மகா வித்தியாலய மாணவர்த் தலைவர்கள் சபையின் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்ததுடன்  சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளராக இருந்து அண்மையில் ஹஜ் கடமைக்காக சென்று அங்கு மரணம் அடைந்த அச்சு முகமது அவருக்கான மௌன பிரார்த்தனையும் சபையில் இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது


 

இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள 30% வீத பரஸ்பர வரிகளில் இருந்து மேலும் நிவாரணம் பெற ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் அமெரிக்காவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். 


இந்த கலந்துரையாடலில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் குழு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 100 நாடுகளுக்கு புதிய பரஸ்பர வரிகளை அறிமுகப்படுத்திய நிலையில், இலங்கைக்கு 44% வீத பரஸ்பர வரியை விதித்தார். 

பின்னர் பல நாடுகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அதன் செயல்பாட்டை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ட்ரம்ப் நடவடிக்கை மேற்கொண்டார். 

இந்நிலையில், புதிய பரஸ்பர வரியை அமெரிக்கா கடந்த 9 ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, விதிக்கப்பட்ட புதிய வரி 30% வீதம் ஆகும். 

இந்த தீர்மானம் ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இதற்கமைய, அமெரிக்காவிடமிருந்து வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளது. 

குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க இலங்கை பிரதிநிதிகள் குழு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், நேற்று (12) ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாகவும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார். 

சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது அமெரிக்க பொருட்களின் இறக்குமதி குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்று மங்கள விஜேசிங்க மேலும் தெரிவித்தார்

 


இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார்.

 
பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது.
 
இலங்கை அணியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தசுன் ஷானகா மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை அணி விபரம் பின்வருமாறு,

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.