இலங்கை நிலையான ஆற்றல் அதிகாரசபையின் தலைவர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டாரா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளுக்குப் எரிபொருட்களைப் பெறுவதில் பெரும் சவால்களை உருவாக்கியுள்ளது.
எனவே, கடந்த காலங்களில் மின்சாரத்தைச் சேமிக்க பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பு வழங்கியது போன்றே, இந்தப் புத்தாண்டு காலத்திலும் பொறுப்புணர்வுடன் செயற்படவும்;.
குறிப்பாக இரவு 6 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத் தேவை மிக அதிகமாக இருப்பதால், அந்த நேரத்தில் தேவையற்ற மின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளவும்.
விடுமுறை நாட்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாலும், சூரிய சக்தி மூலம் பகல்வேளையில் அதிக மின்சாரம் கிடைப்பதாலும், சமையல், துணி துவைத்தல் போன்ற பணிகளைப் பகல் நேரத்திலேயே முடித்துக் கொள்ளுமாறு இலங்கை நிலையான ஆற்றல் அதிகாரசபையின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
ஓன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவு பகுதியான பொல்துவ சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஓன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவு பகுதியான பொல்துவ சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவார்.
வனவிலங்குகளிடமிருந்து நிலத்தைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியிலிருந்து மின் பாய்ந்தமையினாலேயே இவ் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த நிலத்தின் பராமரிப்பாளராக பணியாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி சாந்த சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணம்.
இந்த முறைமையினால் ஊழியர்கள் கடுமையாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் 6ம% இலாபத்தைப் பெற்றுக்கொள்கின்றன.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும், கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் அது தடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்பதிவு செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் முறையாக வழங்கப்படாததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயங்களை முன்னிறுத்தி இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
இரண்டு முனையங்களைக் கொண்ட இந்த நிலையத்தில், தரைத்தளம் பேருந்து தரிப்பிடமாகவும், இரண்டாம் தளம் ஓட்டுநர் - நடத்துநர் ஓய்வறைகளாகவும், மூன்றாம் தளம் நிர்வாக அலுவலகங்களாகவும் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இலங்கை விமானப் படையின் உழைப்புப் பங்களிப்புடன் இந்த பேருந்து நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சுமார் 424 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
நகரங்களுக்கு இடையேயான எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25% இனால் அதிகரிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நாளை (28) முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பத்திரம் மூலம் உங்கள் விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்தக் கடிதம் பெறப்பட்ட நாளிலிருந்து ஒரு (01) வாரத்திற்குள் அத்தகைய பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இணங்கத் தவறினால், மேலும் அறிவிப்பு இல்லாமல் மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகத்திலிருந்து எரிபொருளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அருகே உள்ள பொதுக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்ட சரக்கு ரயிலில் 52 பெட்டிகள் உள்ளன.
சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.