Showing posts with label Western. Show all posts

 


கொழும்பில் காணியின் பெறுமதிகள் மந்தகதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

@CBSL. 2H 2023 இல் விலைகள் மெதுவாக 2.1% அதிகரித்தது, முந்தைய ஆண்டு 9.8% அதிகரித்தது. இருப்பினும், சில பெரிய டெவலப்பர்கள் பல ஆண்டுகளாக ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை விற்கவில்லை என்று கூறுகிறார்கள்

 


கம்பீரமான தொடர்பை இழக்கும் மெஜஸ்டிக் சிட்டி!


மெஜஸ்டிக் சிட்டி பல குழந்தை பருவ நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது, ஏனெனில் இது கொழும்பில் புயல் வீசிய முதல் வணிக வளாகங்களில் ஒன்றாகும்.

இன்று துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான கடைகள் மேல் தளங்களில் காலியாக உள்ளன!

 


தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இடம்பெற்ற விபத்தில் அதன் பிரதான பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளார். 

54 வயதான உபுல் செனரத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் அமைந்துள்ள மிருக வைத்தியசாலையை அண்மித்து நேற்றைய தினம்(15) இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது. 

மிருக வைத்தியசாலைக்கு முன்பாக இருந்த பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதுடன், அந்த மரம் மின் கம்பத்தில் சாய்ந்தமையினால் மின் கம்பமும் முறிந்துள்ளது. 

குறித்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதனருகில் சென்றுகொண்டிருந்த தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது மின் கம்பம் வீழ்ந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார். 

 


நூருல் ஹுதா உமர்


பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பிற்கு என்றும் உறுதுணையாக இருந்து வருகின்ற CSMWA பேரவையினை கெளரவிக்கும் நிகழ்வு (10) கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

CSMWA பேரவையின் தலைவி ஃபிரோஸா காஸிம் இலங்கை வந்திருந்தபோதே இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு YWMA பேரவையின் தலைவி திருமதி. ஃபவாஸா தாஹா உட்பட அதன் உயர் நிருவாக உறுப்பினர்களும், YMMA பேரவையின் முன்னாள் தலைவர் தேசமானிய காலித் எம்.பாறுக், கனடாவில் வசிக்கும் பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான முஹம்மது அஸார் அவர்களும், மற்றும் “கொழும்பு டைம்ஸ்” பத்திரிகை தலைமை பதிப்பாசிரியர்  முஹம்மது ரஸூல்டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


இன்று காலை #டவுன்ஹாலில் எரிபொருளுக்காக வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது

ஒடெல் மால் கட்டுமான தளத்தின் ஒரு பகுதி இரும்பு கம்பி விழுந்தது. பார் கண்ணாடியில் இருந்து கணிசமான சேதத்தை ஏற்படுத்தியது.

 


கொரோனா தொற்றிலிருந்து ஊடகவியலாளர்களை பாதுகாப்போம்'

கம்பஹா மாவட்;ட ஊடகவியலாளர்களுக்கு  நீர்கொழம்பில் உதவி 


 'கொரோனா தொற்றிலிருந்து ஊடகவியலாளர்களை பாதுகாப்போம்' எனும் நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸாவின் கருத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு  கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை  (28-11-2020) முற்பகல் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 

நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நீர்கொழும்பு பிரதேச உதவிச் செயலாளர், கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட கம்பஹா மாவட்ட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள்  பலர் கலந்து கொண்டனர்.


மேல் மாகாணம் முழுவதும் நாளை(29) நள்ளிரவு முதல் 2ம் திகதி அதிகாலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

திங்கட்கிழமை காலை 5 மணியின் பின்னரும் கம்பஹா மாவட்டத்தில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

 


பேருவளை மீன்பிடி துறைமுகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேருவளை துறைமுகத்திலிருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன்களை எடுத்துச் சென்ற 10  பேருக்கு தொற்று.

 


கொழும்பு விஜயராம மாவத்தையில் மரம் முறிந்து வீழ்ந்து கிடப்பதைப் பார்க்கலாம்.

தொடர்ச்சியாக இன்று (09) காலை பெய்து வந்த மழை காரணமாக கொழும்பிலுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு விஜயராம மாவத்தை

கொட்டாஞ்சேனை ஜேதவன விகாரைக்கு முன்பாகவுள்ள ஆமர் வீதி, பாபர் வீதி, இங்குரங்கடை சந்தி, கொழும்பு 8 தேவி பாலிகா வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள காமினி சுற்றுவட்டம், தும்முல்லை சந்தி, ஹெவலொக் வீதி, பண்டாரநாயக்க மாவத்தை ஆகியன வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அடை மழை பெய்யும் வேளையில், வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும், பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அச்சநிலையை அடுத்து கொழும்பில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காரணம் யாதெனில், தேவைக்கு அதிகமாக மக்கள் பொருட்களை பல் பொருள் அங்பாடிகளில் கொள்வனவு செய்கின்றனர்.

(FilePhoto)
கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு வாகன உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து..
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன - தீயணைப்பு துறை தெரிவிப்பு

நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியன் உருவச் சிலை இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் கல்லெறிந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பிரதேசத்தில் பொதுமக்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலையிலிருந்து முன்னெடுத்தனர்.
இதனால் குறித்த பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. அங்கு பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.
அதேவேளை, குறித்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தற்காலிகமாக உடனடியாக மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் அங்கு விரைந்த பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேசினார்.
அமைதியாகச் செயற்பட வேண்டும் எனவும், இது குறித்து உயர்மட்டத்தினரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும் எனப் பேராயர் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்தியத்திற்காக விஷேட பொலிஸ் போக்குவரத்து பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் கீழ் இது ஸ்தாபிக்கப்பட உள்ளது. 

நுகேகொடயில் இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது,  தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி, 250 க்கு மேற்பட்டோரை படுகொலைச் செய்து, 500 இற்கு மேற்பட்டோரை காயமடையச் செய்த ஐ.எஸ்.  அமைப்புக்கு எதிராக,  இன்று (24) ஜும்மா தொழுகையின் பின்னர்,  நீர்கொழும்பில்  முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.
பெரியமுல்லையில் அமைந்துள்ள, பெரிய பள்ளிவாசலின் முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஜும்மா மஸ்தித் வீதி வழியாக நீர்கொழும்பு – சிலாபம்  பிரதான வீதியில் அமைந்துள்ள யூஸுபியா பள்ளிவாசல் வரை பேரணியாக வந்து, பிரதான வீதியோரத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அவர்கள் பதாதைகளையும் , ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும், தேசிய தௌஹீத் ஜமாஅத்தினால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு எதிராகவும், குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மரணித்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்புக் கோசங்களையும் எழுப்பினர்.

நீர்கொழும்பில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் சமூக பிரச்சினையாக உருவெடுத்தது. பதற்றமான சூழல் நிலவி தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சில,முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் பொருத்தொட்டப் பகுதியில் தீக்கிரையாக்கப்பட்டள்ளன.

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியமை போன்ற காரணங்களுக்காக, மேல்மாகாணசபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் சகல பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இடைநிறுத்தப்பட்டுள்ளார் என, ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சண்முகநாதன் குகவரதன் வகித்து வந்த கட்சியின் உபதலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வொக்ஸ்ஹோல் பகுதியிலுள்ள தளபாடக் களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்துக்குட்பட்ட சில பிரதேசங்களுக்கு, இன்று நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என, தேசிய நீர்வழங்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், இன்று நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் நாளை பிற்பகல் மாலை  6.00 மணிவரை, இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்பிடி, மொரகொஸ்முல்ல, இராஜகிரிய, எதுல்கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல-கொஸ்வத்த மற்றும் இராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த உள்வீதிகள் ஆகிய பிரதேசங்களில் இந்நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
குறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகள் காரணமாகவே, இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.