54 வயதான உபுல் செனரத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் அமைந்துள்ள மிருக வைத்தியசாலையை அண்மித்து நேற்றைய தினம்(15) இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது.
மிருக வைத்தியசாலைக்கு முன்பாக இருந்த பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதுடன், அந்த மரம் மின் கம்பத்தில் சாய்ந்தமையினால் மின் கம்பமும் முறிந்துள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதனருகில் சென்றுகொண்டிருந்த தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது மின் கம்பம் வீழ்ந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
கம்பஹா மாவட்;ட ஊடகவியலாளர்களுக்கு நீர்கொழம்பில் உதவி
'கொரோனா தொற்றிலிருந்து ஊடகவியலாளர்களை பாதுகாப்போம்' எனும் நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸாவின் கருத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (28-11-2020) முற்பகல் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நீர்கொழும்பு பிரதேச உதவிச் செயலாளர், கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட கம்பஹா மாவட்ட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக இன்று (09) காலை பெய்து வந்த மழை காரணமாக கொழும்பிலுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு விஜயராம மாவத்தை
கொட்டாஞ்சேனை ஜேதவன விகாரைக்கு முன்பாகவுள்ள ஆமர் வீதி, பாபர் வீதி, இங்குரங்கடை சந்தி, கொழும்பு 8 தேவி பாலிகா வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள காமினி சுற்றுவட்டம், தும்முல்லை சந்தி, ஹெவலொக் வீதி, பண்டாரநாயக்க மாவத்தை ஆகியன வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
அடை மழை பெய்யும் வேளையில், வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும், பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.