(ஏ.எம்.ஹஸ்னி)
சேவைகளை ஆற்றியுள்ளது. இந்தக் கட்சியின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இங்குள்ள மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கினர்.
(எம்.என்.எம்.அப்ராஸ்)
Rep/Faslin.
ஆரையம்பதி கடற்கரையில் பட்டத் திருவிழா.
சர்வமத சின்னங்களையிட்டு பட்டம் செய்து பறக்கவிட்ட மாணவன் முதலிடம்
மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் பட்டத் திருவிழா இன்று(19) சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.
ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தினால் முதல் தடவையாக இந்தப் பட்டத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்த பட்டத் திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பற்றினர்
இதில் ஆரையம்பதி மகா வித்யாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த . ரவீந்திரன் சோபிதன் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார்
இதில் முதல் மூன்று இடங்களையும் பெற்று போட்டியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்பட்டன
ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரையம்பதி கந்த சுவாமி ஆலயத்தின் பிரதம குரு
உமாபத சர்மா கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு உத்தியோகத்தர்
வேலுப்பிள்ளை ஈஸ்வரன் உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த பட்டத் திருவிழாவில் பெருமளவிலான பொது மக்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பட்டத் திருவிழாவை கண்டு கழித்தனர்
புனித நோன்பு நாட்களில் கல்முனை பிராந்தியத்திலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும் மற்றும் தூர பிரதேசங்களிலிருந்து கல்முனைக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்தவர்களுக்குமான இலவச ஸஹர் உணவு விநியோகிக்கும் செயற்றிட்டத்தினை இவ்வருடமும் (2024)கல்முனையன்ஸ் போரம் மிக வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது.
தூர இடங்களிலிருந்து கல்முனை பிராந்தியத்திற்கு பல்வேறுபட்ட தேவைகளுக்காக வருகை தருபவர்கள் புனித நோன்பினை நோற்பதற்கான ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவது பற்றி கல்முனையன்ஸ் போரத்தின் கவனத்திற்கு எட்டப்பட்டதினால் இச்செயற்றிட்டம் கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் மூலம் நோன்பு ரமழான் முழுவதும் மொத்தமாக 4164 நோன்பு பிடிக்கும் ஸஹர் உணவு ஏற்பாடுகளை கல்முனை,மருதமுனை,
சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களுக்கு எவ்வித தடைகளுமின்றி உரிய ஸஹர் நேரத்திற்கு நோன்பாளிகளின் இடத்துக்கே சென்று
மேற்படி ஸஹர் உணவானது ரமழான் காலத்தில் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 7:00 வரைக்கும் தொலைபேசியூடாக கிடைக்கப்பெறும் முன்பதிவுகள் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
( வி.ரி.சகாதேவராஜா)
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹூசைன் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது நினைவாக ‘அடையாளம்’ எனும் பெயரில் நினைவு மலர் வெளியீடும், இப்தார் நிகழ்வும், வித்தியாலயத்தின் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் திறந்த வெளியரங்கில் 2024.04.07 ஆம் திகதி அதிபர் ஏ.சி.எம். நளீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களும் விஷேட அதிதியாக மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களின் புதல்வர் எம்.ஏ.என். சுஹாத் ஹம்டி அவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது அஷ்செய்க் மௌலவி ஏ.கே.எம். சமீர் அவர்கள் துஆ பிராத்தனை நடாத்தினார். இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.