(வி.ரி.சகாதேவராஜா)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசலையின் ஊழியர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில்,உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வுக்கான, சிநேகபூர்வ சைக்கிள் சவாரி இடம்பெற்றது.
குறித்த இந்தச் சவாரி, ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து ஒலுவில் வரைச் சென்று மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நோக்கி விரைந்தது.
குறித்த இந்தச் சைக்கிள் சவாரியில், வைத்திய அத்தியட்சகர் உட்பட, ஏனைய வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்களுக்கான "அவசர உயிர் காப்பு" செயன்முறை பயிற்சி பட்டறையானது வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நேற்று முன்தினம் (21) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப் பயிற்சி பட்டறையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர்.இரா. முரளீஸ்வரன், மயக்க மருந்து வைத்திய நிபுணர் டாக்டர் கே. சுதேஸ்வரி, வைத்திய அதிகாரிகள், இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், வைத்தியசாலை சிற்றூழிய மேற்பார்வையாளர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் , மயக்க மருந்து வைத்திய நிபுணர் டாக்டர் கே. சுதேஸ்வரி மற்றும் அவருடைய வைத்திய உத்தியோகத்தர்கள் குழுவினரும் இணைந்து செயற்கை மனித உடல் மாதிரிகளை பயன்படுத்தி செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இதே வேளை இன்று அதிகாலை ஆத்திமுனை ஹிஜ்ரத் நகரத்திற்குள் உட்புகுந்த காட்டு யானை பல் வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் அங்குள்ள அல்-ஸபா பள்ளிவாயலின் வேலியையும் உடைத்துள்ளதாக பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்குள் பல் வேறு பகுதிகளிலிருந்து அகற்றப்படும் திண்மக்கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இக் குப்பை மேட்டில் குவிந்து காணப்படும் திண்மக்கழிவுகளை உட்கொள்வதற்காக குவியும் யானைகள் அப் பகுதில் உள்ள விவசாய பயிர்களையும் மற்றும் பயன்தரும் மரங்களையும் சேதமாக்குவதுடன் வீதியால் பயணிப்பவர்கள் மற்றும் அதனை அன்மித்த பிரதேசங்களில் வசித்து வரும் மக்களையும் அச்சுறுத்தி வருவகின்றது.
இவ்வாறு மக்கள் குடியிருக்கும் பிரதேசத்திற்குள் நுழைந்து குடியிருக்கும் வீடுகளையும் தாக்கி சேதமாக்கி வருவதாக பகுதி மக்கள் சுட்டிக்காட்டியதுடன் குறித்த திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரையும் அண்மையில் தாக்கி பலியாக்கியுள்ள சம்பவத்தையும் நினைவுபடுத்தியிருந்தனர்.
இவ்வாறு அண்மையில் குறித்த பகுதியில் உள்ள வீடொன்றையும் முழுமையாக சேதமாக்கியதுடன் பொது மையவாடியின் வேலிகளையும் தாக்கி சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு இடம்பெற்றுவரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டில் காட்டு யானைகளினால் இப் பகுதியில் அதிகாமன சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பகுதி மக்கள் தெரிவிப்பதுடன் குறித்த பகுதியில் உள்ள மர்வா பாடசாலையிலும் அன்மைக் காலத்தில் பல சேதங்களை ஏற்படுத்தியதுடன் பாடசாலை வளாகத்திற்குள் சென்று அட்டகாசம் செய்து வருவதாகவும் தெரிவிக்கும் இவர்கள் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கும் இது சவாலாகவே அமைவதாக சுட்டிக்காட்டினர்.
எனவே இதனை கருத்திற் கொண்டு இக் கிராமத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் யானை வேலிகளை அமைத்துதரும்படி கிராமவாசிகள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
-பொத்துவில் சியாத்-
கிழக்கு மாகாண பிரதம உள்ளக கணக்காய்வாளர் H.M.M றஸீட் Sir ஓய்வு பெற்றார். ************************************** Accontant றஸீட் என எல்லோராலும் அழைக்கப்பட்ட கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளர் H.M.M றஸீட் Sir தனது 60 வயதில் 39 வருட அரச பணியை நிறைவு செய்து கடந்த 10.11.2023 அன்று ஓய்வு பெற்றுள்ளார் .ஆசிரியராவும் ,பல்வேறு திணைக்களங்களில் கணக்காளராகவும் இறுதியாக கிழக்கு மாகாண உள்ளக பிரதம கணக்காய்வாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸின் மூலம் குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளின் உதவிப்பிரதேச செயலாளர்களான எம்.ஏ.சீ. அஹம்மட் நஸீல் ,சட்டத்தரணி நஹீஜா முஸாபீர், ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் கையளிக்கப்பட்டது.