Showing posts with label Eastern. Show all posts

 


காத்தான்குடி நகர சபையின் புதிய நிருவாக உத்தியோகத்தராக திருமதி றினோஸா முப்லி (முகாமத்துவ சேவை உத்தியோகத்தர் - அதி சிறப்பு) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றுக் கொண்டார்.  


சபையின் செயலாளர் திருமதி றிப்கா சபீனின் முன்னிலையில் இன்றைய தினம் (18) இந்நிகழ்வு இடம்பெற்றது.


ஏற்கனவே இங்கு நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜனாப் எம்.ஐ.எம். நியாஸ் காத்தான்குடி தள வைத்திசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வது குறிப்பிடத்தக்கது.


(எம்.ஏ.சீ.எம். ஜலீஸ்)

 

(வி.ரி. சகாதேவராஜா)

 

கடந்த ஒரு வார காலமாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்ப்பினால் மூடி கிடக்கின்றது.

 இதனால் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் தமிழ்மக்கள் வைத்திய சேவையின்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள் . அவசர சிகிச்சைகளுக்காக அப்பிரதேச மக்கள்  காலநேரபணம் செலவுசெய்து அக்கரைப்பற்று வைத்திய சாலைக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.

ஒரு வாரத்துக்கு முன்பு மரதன் ஓடிய ஒரு மாணவனின் இறப்பைத் தொடர்ந்து அங்கு வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது தெரிந்ததே. அதன் போது வைத்தியசாலை கண்ணாடிகள் பெயர் பலகைகள் உடைக்கப்பட்டதும் தெரிந்தததே.

 இதனை அடுத்து தங்களுக்கு பாதுகாப்பின்மை என்று கூறி வைத்தியர்கள் வெளியேறினார்கள்.

 அதனால் அன்றிலிருந்து இன்று(18) திங்கட்கிழமை வரை ஒரு வார காலமாக வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. அங்கே எவ்விதமான வைத்திய சேவைகளும் இடம் பெறவில்லை.

 இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் பாம்புக் கடி தூக்கிட்டு தற்கொலை முயற்சி போன்ற பல நோயாளிகள் வந்தும் அதை நேரடியாக அக்கரைப்பற்று ஆதரவைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது.

மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் கடந்த ஒரு வாரமாக வைத்திய சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருப்பினும் இன்றைய தினம்(18)  ஒரு முழுமையான கலந்துரையாடல் இடம் பெற்று வைத்தியசாலை திறக்கப்படுவதற்கான சாதகமான அறிகுறி தென்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன்  அறிவித்தார்.

 


காத்தான்குடியை சேர்ந்த ரஹீம், சஜி ஊடகக்குழுவின் முயற்சி யூடியூப்பில் வரலாற்று சாதனை..!

(ஊடகப்பிரிவு)


காத்தான்குடி வரலாற்றில் காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய தஃவா சமூக ஊடக வலைத்தளமான R Islamic Bayans Media Unit யூடியூப் பக்கத்தில் ஒரு இலட்சம் (100K) விரும்பும் நேயர்களை தன்பக்கம் ஈர்த்தும் 24193611 பார்வையாளர்களை கொண்டும்  வரலாற்று சாதனை படைத்துள்ளது.

காத்தான்குடியை சேர்ந்த ஊடக செயற்பாட்டாளரும் R Islamic Bayans Media Unit ஊடகத்தின் ஸ்தாபகருமான  ஏ.எல். அப்துர் ரஹீம், ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜீ உள்ளிட்ட R Islamic Bayans Media Unit ஊடகக் குழுவிரின் ஆறு வருட விடா முயற்சியினால் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.


இஸ்லாமிய தஃவா பணியினை உலகம்பூராக வழங்கிய யூடியூப் பக்கமான திகழும் R Islamic Bayans Media Unit இச்சாதனையினை நிகழ்த்தியதையடுத்து இஸ்லாமிய தஃவா பணியை உலக மக்களுக்கு வழங்கிய முதலாவது காத்தான்குடியை தளமாக கொண்டு இயங்கும் யூடியூப் பக்கமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.


இஸ்லாமிய தஃவா பணிகளை உலகலாவிய மக்களுக்கு கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய R Islamic Bayans Media Unit ஊடகக் குழுவினருக்கும்  நேயர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக R Islamic Bayans Media Unit சமூக ஊடகத்தின் நடப்பு விவகாரங்களுக்கான பொறுப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். சஜீ தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக யூடியூப் ஆர்வளர்களுக்கு இலவசமாக பயிற்ச்சி வழங்க எமது ஊடக குழு தயாராகவுள்ளதாகவும் R Islamic Bayans Media Unit பிரிவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


R Islamic Bayans Media Unit

https://youtube.com/@r_islamic_official?si=IVO_tEDcp33cnPZe ஊடகப்பிரிவானது Islam is My Life https://youtube.com/@Islamic_My_life?si=f_wcrNvlC2M7yMjX மற்றும் 

Islamic Motivation Tv https://youtube.com/@Islamic_motivation_Tv?si=hye3j92fR2RtQZ4O ஆகிய உப இஸ்லாமிய தஃவா யூடியூப் பக்கங்களை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 


சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் மாணவர் சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு.


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் மாணவர் சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று (16) சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கிவரும் இம்முன்பள்ளி, தமது 10 ஆண்டு நிறைவையொட்டி வெளியிடும் புதிய சீருடை மற்றும் மாணவர் அடையாள அட்டைகள் LKG, UKG ஆகிய பிரிவுகளில் கல்வி பயிலும் 183 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தாய் சேய் நலன் பேணல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின் கௌரவ அதிதியாவும் கலந்து கொண்டார்.


சாய்ந்தமருது மக்கள் வங்கி உதவி முகாமையாளர் ஏ.ஆர்.றிஸ்வான் முகம்மட், கல்முனை பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ஆயிஷா மற்றும் கல்முனை மெற்ரோபொலிட்டன் கல்லூரியின் கணக்காளர் எஸ்.லியாக்கத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


இதன்போது, "சிறுவர் உளவியல்" எனும் தலைப்பில் டொக்டர் ஐ.எல். எம்.றிபாஸ் மற்றும் "சிறுவர் போசாக்கு" தலைப்பில் டொக்டர் எம்.எச். றிஸ்பின், "முன்பள்ளி கல்வியில் பெற்றோரின் வகிபாகம்" தலைப்பில் ஏ.எம்.ஆயிஷா, "சேமிப்பின் முக்கியத்துவம்" தலைப்பில் ஏ.ஆர். றிஸ்வான் முகம்மட் ஆகியோரால் பெற்றோருக்கான விழிப்புணர்வு உரைகள் இடம்பெற்றது.

 


அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் சிறுநீரக நோய் தொடர்பான கண்காட்சி : டாக்டர் றிபாஸ் தொடங்கி வைத்தார்


நூருல் ஹுதா உமர்

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கான சிறுநீரக நோய் தொடர்பிலான கண்காட்சி அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் அம்பாறை பொது வைத்தியசாலை சிறுநீரக விசேட வைத்திய நிபுணர் திருமதி நியோமி அவர்களின் வழிகாட்டலில் அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தனுஷ் கவின் தலைமையில் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த கண்காட்சியை வைபவரீதியாக திறந்து ஆரம்பித்து வைத்த இந்நிகழ்வில் பொத்துவில், அக்கரைப்பற்று, அம்பாறை, தெஹியத்தகண்டிய, மகாஓயா போன்ற பல்வேறு வைத்தியசாலைகளை சேர்ந்த வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் சிறுநீரக நோய் தொடர்பிலான தமது காட்சிப்பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். அதில் சிறுநீரக தொழிற்பாடுகள், நோய் நிலைகள், குணப்படுத்த செய்யவேண்டிய மருத்துவ விடயங்கள் தொடர்பில் நிறைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் அம்பாறை பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திரஸ்ரீ உட்பட முக்கிய பிரமுகர்கள், மருத்துவ துறைசார் அதிகாரிகள், அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


அசுவெசும பயனாளிகள் நலன்கருதி கொடுப்பனவு வழங்கப்படுதோடு  புதிய கணக்கு திறப்பதற்காக அக்கரைப்பற்று இலங்கை வங்கி நாளை  சனிக்கிழமை (16) திறக்கப்படும் என வங்கி முகாமையாளர் இ.ருதுசாந்தன் தெரிவித்தார்.   


இந்நடவடிக்கை நாளை காலை8.30 மணிமுதல் பிற்பகல் 3மணிவரை இடம்பெறும் எனவும் கூறினார். 


ஆகவே  அசுவெசும கொடுப்பனவு பெறவுள்ள பயனாளிகள்  மற்றும் புதிய கணக்கு திறக்கவேண்டிய பயனாளிகள் நாளை அக்கரைப்பற்று இலங்கை வங்கிக் கிளைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்


தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்


 (சர்ஜுன் லாபீர்)


அம்பாறை மாவட்ட திட்டமிடல் புதிய  பணிப்பாளர் எம்.ஏ முனாஸீர் அவர்களுக்கும்,அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று(14) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத் தலைவர் கபீர் கலீல் தலைமையில் இடம்பெற்ற இந் சந்திப்பில் அமைப்பின் செயலாளர் எம்.அரூஸ் இஹ்லாஸ் மாவட்ட இணைப்பாளர் எல்.எம் சர்ஜுன்,பிரதேச இணைப்பாளர் ஏ.சி பர்ஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்

இச் சந்திப்பில் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவிருக்கும் எதிர்கால அரச திட்டங்களில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வகிபாகம்  மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 தனது தந்தைக்காக பள்ளிவாசல் அமைத்து கொடுத்த ஒரு வைத்தியர்....



அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சட்ட வைத்தியர்  S.M.றிபாஸ்தீன் அவர்களின் சொந்த முயற்சியினால் அவரின் தந்தையான மர்ஹூம் ஆதம்பாவா சம்சுதீன் அவர்களின் பேரில் சதக்கத்துல் ஜாரியாவாக  பாலமுனையில் அமைக்கப்பட்ட "மஸ்ஜிதுஷ் ஷம்ஸ்" பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை மக்கள் பாவனைக்காக வக்பு செய்து திறந்து வைத்தார்.


இதில் உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 நூருல் ஹுதா உமர்


கல்முனையில் உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும், கல்முனையில் தங்கியுள்ள வெளியூர் பயணிகளுக்கும் புனித நோன்பை நோற்க ஸஹர் உணவு இலவசமாக வழங்க கல்முனையன்ஸ் போரம் ஏற்பாடு செய்துள்ளது.

ஸஹர் உணவு தேவைப்படுபவர்கள் 0777849423 / 0767969913 ஆகிய தொலைபேசி இலக்கங்களை மாலை 5 மணி முதல் 07 மணிக்குள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறும் ஸஹர் நேரத்தில் உங்கள் காலடிக்கே நேரில் வந்து ஸஹர் உணவு வழங்கப்படும் என்றும் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களும், பல்வேறு தேவைகளுக்காக வெளியூர்களிலிருந்து கல்முனைக்கு வருகை தருபவர்களும் ரமழான் மாதத்தில் ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் நிலையை கருத்திற்கொண்டு கல்முனையன்ஸ் போரம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகிறது என கல்முனையன்ஸ் போரம் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.


நூருல் ஹுதா உமர் 

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி பூங்கா மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

ஆளுநர் செந்தில் தொண்டமானால் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான திருமதி சுசித்ரா எல்ல அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

திருமதி சுசித்ரா எல்ல கோவிட் காலப்பகுதியில் கொவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, 600 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் உயிரை காத்த உன்னத பெண்ணான திருமதி சுசித்ரா எல்ல அவர்கள் ஆளுநரால் கௌரவிக்கபட்டார்.

மேலும் மட்டக்களப்பு கல்வி துறையில் சாதித்த பெண்கள், Rural development society, பெண்கள் அமைப்புகள் போன்ற பல சாதனைகளை நிலைநாட்டிய பெண்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் கலாசார நிகழ்வுகள்,சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், அமைச்சர் வியாழேந்திரன் அவர்களால் சிறப்புரை ஆற்றப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம்  வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், செய்யட்  அலி சாஹிர் மௌலானா, கிழக்கு  மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பீ.எஸ். ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல். பீ. மதநாயக்க, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் உட்பட அரச உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


 (சர்ஜுன் லாபீர்)


அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்தினை சேர்ந்த ஒரு எம்.ஏ முனாஸீர் பொதுச் சேவை ஆணைக்குழுவினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கிழக்கு மாகாண சபையில் மாகாண திட்டமிடல் செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக சுமார் 15 வருடங்களாக கடமையாற்றி இன்று பதவியுயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று(11) அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்ரம முன்னிலையில் கடமைகளை பெறுப்பேறுக்கொண்டார்.

இவர் ஒரு  சிறந்த  ஆளுமை கொண்ட நிர்வாக அனுபவம் உள்ள ஒரு அதிகாரி ஆவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


 மாளிகைக்காடு செய்தியாளர்


மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலையின் 27 ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலையின் பணிப்பாளரும், மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தலைவருமான எம்.எச்.எம். அஸ்வர் அவர்களின் தலைமையில் மாவடிப்பள்ளி அல்- அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று (09) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மயோன் குரூப் நிறுவனத்தின் பணிப்பாளரும், ரிஸ்லி முஸ்தபா கல்வி மையத்தின் தலைவருமான ரிஸ்லி  முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்களின் வகிபாகம், எதிர்காலத்தில் பிள்ளைகளை சிறந்த தலைவர்களாக உருவாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய பணிகள், எதிர்காலம் மீது உள்ள சவால்கள் தொடர்பில் கருத்துரைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினரும், மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் கலந்து கொண்டார். மாவடிப்பள்ளி ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் ஏ.எல்.எம். மனாப், அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி பீ .எம். றியாத், டலண்ட் பிளஸ் நிறுவனர் அல்ஹாபிழ் ஆர்.எம். சில்ஹான் உட்பட அதிதிகள், பெற்றோர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கடந்த காலங்களில் இப்பாலர் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள், சாதாரண  தரத்தில் அதி திறமை சித்தி பெற்ற மாணவர்கள், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி அதிதிகளினால் மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவு சின்னங்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



நூருல் ஹுதா உமர்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நிந்தவூர் ஆதார வைத்தியசாலை (08) பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பி.அப்துல் வாஜித் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்  குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

"பலம் மிக்க பெண்கள் நாட்டின் வளம்" பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள் முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில்  வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி. சகாதேவராஜா)


இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மதுவரி ஆணையாளராக(ஆதாயம்) கனகசபை தர்மசீலன்  கடமையேற்றுள்ளார்.

 மதுவரித் திணைக்களத்தில் மதுவரி பரிசோதகராக  1986 இல் இணைந்து பணியாற்றினார்.  தொடர்ந்து அத்தியட்சகர்,உதவி ஆணையாளர்,ஆகிய பதவி உயர்வடைந் து  பின் திணைக்கள தலைமையகத்தில் பிரதி மதுவரி ஆணையாளராக கடமையாற்றினார்.

 இறுதியாக மதுவரி ஆணையாளராக கடமையாற்றிய கனகசபை தர்மசீலன்   மதுவரி ஆணையாளராக(ஆதாயம்) கடந்த வாரம் கடமையேற்றுள்ளார்.இந்த வருடம் இறுதிப்பகுதியில் இவர் ஓய்வுபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது அல் அமானா நற்பணி மன்றத்தினால் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வும், மன்றத்தின் ஒன்றுகூடலும், ஊடக சந்திப்பும் அமைப்பின் தலைவர் ஏ.எல்.ஏ. பரீட் ஹாஜி அவர்களது தலைமையில் சாய்ந்தமருது பிரதான வீதியிலுள்ள அமைப்பின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது.

இங்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த சகோதரி ஒருவரின் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை தேவைக்காக ஒருதொகை நிதியை அவரது உறவினரிடம் கையளிக்கப்பட்டது. நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அல் அமானா நற்பணி மன்றத்தின் செயற்பாடுகள் அதன் உருவாக்கம் தொடர்பில் விரிவாக அமைப்பின் தலைவர் எடுத்துரைத்தார்.

1986 ஆம் ஆண்டு அன்ஸாரிகள் சங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, அந்த சங்கத்தினூடாக மீனவர்களின் இழப்புக்கள் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் பின்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட (கடல் பேரலை) சுனாமியின் பின்னர் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் அந்த மக்களுக்கு உதவுவதற்காக அன்ஸாரிகள் சங்கம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றியம் என்ற பெயரில் உருமாறி மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கு உதவியதாகவும் தெரிவித்தார்.

காலப்போக்கில் மக்களின் தேவைகள் அதிகரித்துச் சென்றதன் காரணமாகவும் அரசாங்கம் மற்றும் உதவு நிறுவனங்களிடம்  மக்களின் பிரச்சனைகளை கொண்டுசெல்ல பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் தேவை உணரப்பட்டதால் அப்போதைய பிரதேச செயலாளரின் உதவியுடன் கடந்த 2008 ஆம் ஆண்டு அல் அமானா நற்பணி மன்றம் என்ற பெயரில் மன்றம் பதிவு செய்யப்பட்டு மிகுந்த வீரியத்துடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஏ.எல்.ஏ. பரீட் ஹாஜி, மிகக்குறுகிய நிலப்பரப்புக்குள் வாழும் சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்கள் சுனாமி கடல் பேரலையின் காரணமாக தாங்கள் வாழ் இடங்களை இழந்து தவித்தபோது அரசு ஊரின் மேற்குப் புறமாகவுள்ள காணிகளை சுவீகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்தது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் வீடுகளை பெறவில்லை குறித்த பாதிக்கப்பட்டோர் ஸ்தாபிக்கப்பட்ட புதிய குடியிருப்புக்களை அண்டிய பிரதேசங்களில் காணிகளை சிறு சிறு துண்டுகளாக கொள்வனவு செய்து அவர்களது வாழ்விடங்களை அமைத்துள்ளனர்.

இவ்வாறான மக்களின் பிரதான தேவைகளான வீதி அமைத்தல் உட்கட்டமைப்புகளுக்கு உதவுதல் மற்றும் வாழ்வாதாரத்துக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல் போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். மக்கள் நல திட்டங்களை கொண்டு செல்வதில் தாங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும் அவைகள் தேவையுடைய மக்களின் நீதியான போராட்டம் காரணமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதன்போது வீதிகளுக்கு பெயர்களை வைப்பது தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.

நிகழ்வின்போது அமைப்பின் செயலாளர் எம்.எஸ். முபாறக், பொருளாளர் ஏ.சி.எம். பளீல், ஆலோசகர் எம்.ஐ.எம். பிர்தௌஸ் உள்ளிட்டவர்களுடன் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் எஸ்.எச். ஆதம்பாவா (ராசாதி) அவர்களும் உரையாற்றினர். நிகழ்வில் மன்றத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


நூருல் ஹுதா உமர்

இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் கீழ் இறக்காமம்-05 ஆம் பிரிவு  நியூ குன பிரதேசத்தில் இயங்கும் யஷோதரா மகளிர் சங்கமும், உளச் சுகாதார முன்னேற்றத்திற்கான நிறுவனத்திலும் (Foundation for Promotion of Mental Health) இணைந்து பொதுமக்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மகிழ்ச்சி முகாமை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த கிராமத்தில் உள்ள முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், விசேட தேவையுடையவர்கள்,  கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் இம் மகிழ்ச்சி முகாம் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஷ்ஷான் (நளீமி) அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் உளச் சுகாதார முன்னேற்றத்திற்கான நிறுவனத்தின் தலைவரும் சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு பிரகீத், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுரேகா எதிரிசிங்க, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.கே. சாஜிதா மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இம் மகிழ்ச்சி முகாமில் உளவியல் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள், மகிழ்ச்சிகரமாக வாழும் கலை, முரண்பாடுகளை இனங்காணலும் முகாமை செய்தலும், இளைஞர்களுக்கான வழிகாட்டல்கள் நிகழ்வுகள், குழுப் பயிற்சி மற்றும் செயற்பாடுகள், சிறுவர் விளையாட்டுகள், சித்திரம் வரைதல் போட்டிகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள்  என முழு நேரத்தையும்  பங்குபற்றுநர்கள் மகிழ்ச்சிகரமாக வைத்திருக்கும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் தீச் சுடர் முகாம் நடைபெற்றது. பங்குபற்றுநர்களின் விசேட கலைத் திறமைகள், ஆற்றல்கள் என்பது  அரங்கேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.



(வி.ரி. சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் எம்.பி.எம்.யூசுப்  தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றதை முன்னிட்டு அங்கு பிரிவுபசார நிகழ்ச்சி இன்று (6) புதன்கிழமை நடைபெற்றது.

 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எ.எல்.எ.மஜீட் ஏற்பாட்டில் கல்விசார் உத்தியோகத்தர்கள்  நலன்புரி ஒன்றியத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் வலயக்கல்விப் பணிமனையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

 அங்கு ஆசிரிய ஆலோசகர் யூசுப்பின் சேவைகள் பற்றி பலரும் பாராட்டி பேசினர் .

இறுதியில் அவருக்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்கள் .

பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான மஜீத், யசீர்அறபாத், நிதர்சினி,நிலோபரா உள்ளிட்ட கல்வி சார் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரிய ஆலோசகர் யூசுப் ஏற்புரை வழங்கினார்.


நூருல் ஹுதா உமர்

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 1991 தொடக்கம் 1996 வரை ஒரே வகுப்பில் (6G-11G) கல்வி கற்ற பழைய மாணவர்களின் அணுசரனையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட உதவி அதிபருக்கான
அலுவலக அறையை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு அண்மையில் 91G- 96G மாணவ சமூகத்தின் தலைவர் பொறியியளாளர் முஹமட் றிஸ்கான் தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கல்முனை சாஹிராக் கல்லூரிக்கு உதவி அதிபருக்கான காரியாலயம் ஒன்றை புனர்நிர்மாணம் செய்து தருமாறு பாடசாலை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய  91G-96G மாணவ சமூகமானது  அக்காரியாலயத்தின் தேவைகளை கண்டறிந்து அதை தொழில் நிமிர்த்தம் வெளிநாடுகளில் வாழும்  வகுப்புத் தோழர்களின் உயர் பங்களிப்பில் சமார் 3 1/2  இலட்சம் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பாவனைக்கு கையளித்துள்ளனர். இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை சாஹிரா கல்லூரியில் பதியமிட்டோருக்கான கெளரவமும், விளைந்த பயிர்களின் மீளிணைவும் எனும் தொனிப்பொருளில் கடந்த 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 91G-96G  வகுப்பு மாணவர் சமூகம் பாடசாலை காலத்தில்  கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களை வரவழைத்து கௌரவிக்கும் விழாவையும்  வெற்றிகரமாக நடத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி.சகாதேவராஜா)


ஓய்வுபெறும் கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் சண்முகம் சரவணமுத்துவிற்கான சேவைநலன் பாராட்டு விழாவும்,
 மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை  91/ 92 அணியினரின் ஆறாவது ஒன்று கூடலும் நேற்று  ஞாயிற்றுக்கிழமை(03)   பாண்டிருப்பில் இடம் பெற்றது.

 மட்டக்களப்பு ,அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த புலன அணி ஆசிரியர்கள் 50 பேர் இந்த ஒன்று கூடலிலும், பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டார்கள் .

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 91/ 92 அணியினரின்ஆறாவது ஒன்றுகூடல் புலன அணியின் தலைவர் வீ.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.

ஓய்வுபெறும் கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் சண்முகம் சரவணமுத்துவிற்கான பாராட்டு கௌரவிப்பு விழா பொன்னாடை போர்த்தி இடம்பெற்றது.
 அனைவரும் தனது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

கவிமாமணி எஸ்.புண்ணியமூர்த்தி வாழ்த்துப்பா வாசித்தளித்தார். இடையே விநோத விளையாட்டு இடம்பெற்றது. பாடல்களை சோதி சுகுணா சுஷ்மிதா ஆகியோர் பாடினார்கள். டில்பிரபா கவிதை பாடினார். 
 
 திருகோணமலை புலன உறவுகளான சண்முகநாயகம் சசிகலா இந்திராணி நளினி கிரிஜா குமுதினி  ஆகியோர் வருகை தந்திருந்தார்கள் என்பதும் லண்டன் நண்டு நடா இணை அனுசரணை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.