Showing posts with label Eastern. Show all posts

 


அக்கரைப்பற்று -கல்முனை  பிரதான வீதியில் இன்று மாலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. பிரதான வீதியில் பின்னால் வந்த கென்ரர் ரக வாகனம் முன்னால் சென்ற வேனில் பின் பகுதியில் மோதியது. தெய்வாதீனமாக அதிலிருந்த குழந்தையும் பெண்ணும் உயிர் தப்பினர். குறித்த வேன், தனக்கு முன் எதிரே சென்ற  வெசல் ரக காரில் மோதுண்டது. இதனால், குறித்த காரின் பின் பகுதியும் சேதமடைந்தது.




அகமட் எஸ். முகைடீன்

 சம்மாந்துறை குவாஷி நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற மீராலெப்பை தாஸீம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!


அகமட் எஸ். முகைடீன்


சம்மாந்துறை TREND 

Thu, Nov 06 - 2025


சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின் புதிய குவாஷி நீதிபதியாக ஓய்வு பெற்ற கிராமசேவக நிர்வாக உத்தியோகத்தர் மீராலெப்பை தாஸீம் அவர்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 


அதற்கமைவாக, திங்கட்கிழமை (03.11.2025) கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜூட்சன் முன்னிலையில் குவாஷி நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.


அதனைத் தொடர்ந்து, இன்று (06.11.2025) வியாழக்கிழமை சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.


மீராலெப்பை மற்றும் லைலத்தும்மா தம்பதிகளின் புதல்வரான தாஸீம் அவர்கள், சம்மாந்துறை மஸ்ஜிதுன் நகர் பள்ளிவாசல் தலைவராகவும், சம்மாந்துறை இஸ்லாமிய தஃவா கலாபீடத்தின் பணிப்பாளராகவும், சம்மாந்துறை SWDC அமைப்பின் உறுப்பினராகவும் தற்போது செயற்பட்டு வருகிறார்.


அரசாங்க சேவையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், 1990 ஆம் ஆண்டு கொழும்பு நில அளவைத் திணைக்களத்தில் படவரைஞராக நியமனம் பெற்று கடமையாற்றினார். பின்னர், 1993 ஆம் ஆண்டு அம்பாறை நில அளவைத் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று ஒன்பது வருடங்கள் படவரைஞராக சேவையாற்றினார்.


இந்நிலையில், 1993ஆம் ஆண்டு இலங்கை சுங்க ஆய்வாளர் (Custom Inspector) பதவிக்கும், 1996ஆம் ஆண்டு பொதுச் சுகாதார பரிசோதகர் பதவிக்கும் நடைபெற்ற போட்டி மற்றும் நேர்முகப் பரீட்சைகளில் சித்தியடைந்து அப்பதவிகளுக்கான நியமனக் கடிதங்களை பெற்றிருந்த போதிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பதவிகளை அவர் பெறுப்பேற்கவில்லை. 


சமூகம், ஊர் சார்பாக பல்வேறு கருமங்களை ஆற்றக்கூடிய கிராமசேவகர் பதவிக்கு 1999ஆம் ஆண்டு நியமனம் பெற்ற இவர், சம்மாந்துறை பிரதேச செயலக கிராமசேவகர் பிரிவுகளில் பணியாற்றினார். பின்னர், கிராமசேவகர் நிர்வாக உத்தியோகத்தருக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து சம்மாந்துறை பிரதேச செயலாக கிராமசேவகர் நிர்வாக உத்தியோகத்தராக நியமனம் பெற்று கடமையாற்றினார். 


இக்காலப்பகுதியில், இவர் தனது உத்தியோகபூர்வப் பொறுப்புகளுக்கு அப்பால், சம்மாந்துறை தொடர்பான பல தகவல்களைத் தனது விரல் நுனியில் வைத்துக்கொண்டு, பிரதேச செயலகத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் முன்னின்று திறம்படச் செயல்பட்டார். குறிப்பாக, குடும்பப் பிணக்குகள் மற்றும் காணித் தகராறுகளை கிராம அலுவலர் மட்டத்தில் தீர்த்து வைப்பதில் இவர் மிகச் சாதுரியமாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். அந்த வகையில், குடும்ப உறவைப் பேணுவதற்காகவும், சமூக நலத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்காகவும் இவரது இரத்த உறவுகள் ஒன்றிணைந்து மீரா பவுண்டேஷன் என்னும் அமைப்பை 1985ஆம் ஆண்டு ஸ்தாபித்தபோது, அதன் செயலாளராக இவர் செயற்பட்டிருந்தார். இவ்வமைப்பானது தற்போது தொடர்ந்து இயங்கி வருவதோடு, அதன் சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவராகவும் இவர் செயற்படுகின்றார்.


சிறந்த கல்விப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர், குவாஷி நீதித்துறையினை மேலும் வலுப்படுத்தி, சம்மாந்துறை குவாஷி நீதி மண்றத்தை இலங்கையின் முன்மாதிரியான குவாஷி நீதிமன்றமாகச் செயற்படுத்த வேண்டும் என்ற உயரிய சேவை நோக்கத்துடன் இப் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.


இவரது பல்துறை ஆளுமை மற்றும் இஸ்லாமிய மார்க்கப் பேணுதல் ஆகியவற்றின் மூலம், சம்மாந்துறையில் குவாஷி நீதித்துறை புத்துணர்ச்சி பெறும் என மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.


நிந்தவூர் குவாஷி நீதிமன்ற்த்தின் குவாஷி நீதிபதியும் சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின் பதில் குவாஷி நீதிபதியுமாகிய எம்.ஐ.எம்.இல்யாஸ் தலமையில் நடைபெற்ற பதவியேற்கும் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, ஓய்வுபெற்ற கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொது நிர்வாகம்) ஏ.மன்சூர், சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற்த்தின் குவாஷி நீதிபதி ஏ.எல் ஆதம்பாவா, சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்சூறா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர் (நளீமி), சம்மாந்துறை ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் மெளலவி எம்.எல்.எச். பஷீர் (மதனி), ஓய்வுபெற்ற வனபரிபாலகரும், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்சூறா தவிசாளரும், மீரா பவுண்டேஷன் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகருமான எம்.எல்.அப்துல் மஜீட், கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வை.பி.எம்.அப்துல் அஸீஸ், சம்மாந்துறை இணக்கசபைத் தலைவர் மௌலவி எம்.வை.ஏ.ஜலீல், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம். றம்சீன் காரியப்பர், சம்மாந்துறை மஸ்ரபுல் இஸ்லாஹி தலைவர் ஐ.ஏ. ஜப்பார் ஏ.டீ, ஊவாமாகாண தொழில் ஆணையாளரும், SWDC பிரதித் தலைவருமான எம்.எஸ்.எம்.அன்சார்,  ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை நிறைவேற்று அதிகாரி எம்.ஐ.எம்.முகைடீன் உட்படப் பல ஊர்ப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


 ♡     ⎙     ➦

ʳᵉᵃᶜᵗ  ˢᵃᵛᵉ  ˢʰᵃʳᵉ


For more update !!

Join Our `WhatsApp Groups

Group No . 17/19 

https://chat.whatsapp.com/CrR8BAjP3CP8lReQkSRUm7?mode=wwt

 *றிகாஷ் எம். அலியார்*

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் டெங்கு தடுப்புக் குழு கூட்டம் இன்று (03) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள், டெங்கு நோயின் தற்போதைய நிலை, தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் பாடசாலை – சமூக மட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.

மேலும், பாடசாலை வளாகங்களில் நீர் தேக்கம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய அவசியம், மாணவர்களிடையே சுகாதார பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரிவுக்குட்பட்ட அனைத்து நிறுவனத் தலைவர்களும் அதன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பு வழங்கினர்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் டெங்கு தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து துறைகளுடனும் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள், சமூக விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கும் பெரும் பங்களிப்பாக இருக்கும் என சுகாதார வைத்திய அதிகாரி இதன்போது தெரிவித்தார்.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் 2026 இரண்டாம் தவணைக்கான சிறுவர் பாதுகாப்புக் குழு மீளாய்வுக் குழு கூட்டம் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

குழுவின் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம்.றிபாஸின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த மீளாய்வுக் குழு கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீ. குகராஜ் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டு கடந்த கால மற்றும் எதிர்கால திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டதுடன்  சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலும் விளக்கமளித்தார்.

மேலும், பெற்றோர் பிரதிநிதியாக கலந்து கொண்ட பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் நூருல் ஹுதா உமர்  சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் ஆசிரியர், மாணவர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



 நூருல் ஹுதா உமர்


பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திலும் பிரதேச அபிவிருத்தியிலும், சமூக நல்லிணக்கத்திலும் அதீத அக்கரையுடன் செயற்பட்டு வரும் நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர் பிரதேச சபை உறுப்பினருக்கென கிடைத்த நான்காம் மாத கொடுப்பனவையும் தான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய வீரத்திடல் பிரதேசத்தில் சொந்த வீடு வசதி அற்ற ஒரு குடும்பத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர்; தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த கொடுப்பனவை மக்களுக்கே வழங்கும் நான் எனது பதவிக்கால சகல மாத கொடுப்பனவுகளையும் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கு இணங்க பொதுமக்களுக்கே வழங்குவதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

 


நூருல் ஹுதா உமர்


ஈ.சி.என்.கல்லூரி அனுசரணையில் மைனர் மோட்டிவேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்த சிறுதானியங்களும் மருத்துவ குணங்களும் என்ற தலைப்பிலான செயலமர்வு இன்று மைனர் மோட்டிவேஷன் நிறுவனத்தின் காரியாலயத்தில் இடம் பெற்றது.

நிறுவனத்தின் தலைவர் ஏ.எல்.றமீஸ் தலைமையிலான இச் செயலமர்வில் வளவாளராக அசோகா ஆறுமுகம் கலந்து கொண்டதோடு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக மட்டத் தலைவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சிறுதானிய உணவுப் பழக்கத்தின் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளை  கிராம மட்டத் தலைவர்களிடம் முதலாவதாக கொண்டு செல்லப்படுவதன் முக்கியத்துவம் இங்கு உணரப்பட்டது.

 


பாறுக் ஷிஹான்

மாம்பழ அறுவடையில்  வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து  கல்முனை   அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா  நன்றி தெரிவித்துள்ளார்.


கல்முனை  கமு/கமு/அஸ்-ஸுஹறா  வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு   இன்று(3)   பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில்  சிறப்பாக பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம்,  கௌரவ அதிதியாக  கல்முனை வலயக்கல்விப் பிரதிப் பணிப்பாளர்     (நிர்வாகம்) எம்.எச்.எம் ஜாபீர் , பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் கலந்து  சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களின் போசாக்கு மற்றும் அவர்களின் உணவு திட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் வழங்கப்படவுள்ளதுடன் இவ்வறுவடை வெற்றி பெற காரணமான இருந்த உதவி அதிபர்  , ஆசிரியர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு ,பெற்றோர் சங்கம்,அயலவர்கள் ஆகியவற்றிக்கு நன்றிகளை  அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தெரிவித்தார்.

மேலும் இப்பாடசாலையில்    சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி  மாம்பழ இனங்கள் அதிதிகளால் 04  தடவை  உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (State Pharmaceutical Corporation - SPC) புதிய மட்டக்களப்பு  அரச ஓசுசல  (Batticaloa Osu Sala) திறந்து வைக்கபட்டது.

 இது மட்டக்களப்பு மக்களின் நீண்ட நாள் கனவு நனவான தருணம்


#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment  #dccbatticaloa #JVP #sunilhandunneththi #DCCChairman #Batticaloa #CleanSriLanka


 (வி.ரி. சகாதேவராஜா)


மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92  ஆண்டு புலன அணியினரின்  பத்தாவது ஒன்று கூடலும் , மணிவிழா கொண்டாட்டமும் திருகோணமலையில் கடந்த இரு தினங்களாக (29&30) நடைபெற்றது.

அணி உறுப்பினர்களான திருமதி நளினி அகிலேஸ்வரன் மற்றும் சுகுணமதி அருள்ராஜா ஆகியோரின்  மணி விழாக்  கொண்டாட்டம் மற்றும் புலம் பெயர் உறுப்பினரான சுவிஸில் வாழும் திருமலை  திருமதி விஜயகுமாரி மகேஸ்வரன்  33 வருடங்களின் பின்னர் சக நண்பர்களை சந்திக்கும் நிகழ்வும் பத்தாவது 
ஒன்றுகூடலாக 
 திருகோணமலையில்  நடைபெற்றது.

அணித் தலைவரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய  வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் திருகோணமலை நிலாவெளி நட்சத்திர விடுதியில்   சிறப்பாக நடைபெற்றது.

 மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் 1991/92 புலன அணியின் திருகோணமலை தொடக்கம் திருக்கோவில் வரையிலான புலன அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நாள் திருகோணமலை நிலாவெளியிலுள்ள இரண்டு நட்சத்திர விடுதிகளில்  நள்ளிரவு வரை மணிவிழாக் கொண்டாட்டங்கள் மற்றும் சுவிஸ் விஜியின் வருகை  சிறப்பாக நடைபெற்றன.

இரண்டாம் நாள் லக்ஷ்மி நாராயணன் ஆலயம் மற்றும் கடல் பயணத்தை மேற்கொண்டு சோபர்ஸ் தீவில் கொண்டாட்டமும் இடம்பெற்றது.


ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள பாரிஸ் ஹாட்வெயார் உரிமையாளரது மூத்த மகன் இன்று (31) நள்ளிரவு மின்சாரம் தாக்கி வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

 


கிண்ணியா நிருபர்

திருகோணமலை உட்துறை முக வீதியில் உள்ள கடலோர பகுதியில் ஒரு வகை சிவப்பு நிற நண்டுகள் கரையொதுங்கியுள்ளது. 


அண்மைக்காலமாக பல ஆயிரக் கணக்கான நண்டுகள் கிழக்கு மாகாண ஏனைய பகுதி கரையோரங்களிலும் கரையொதுங்கியுள்ளன. அத்துடன் பல நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நண்டுகள் இறந்து கரையொதுங்குகின்றமை தொடர்பான ஆய்வுகளை உரிய திணைக்களத்தினர் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கிண்ணியா நிருபர்

 


வி.சுகிர்தகுமார்   


 விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் மூலம் பெண்களின் வாழ்வாதாரங்களை விவசாய நடவடிக்கைகளின் மூலம் ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளில் வீட்டுத் தோட்டங்களில் தேனீ வளர்ப்பை ஊக்குவித்தல் சம்மந்தமான செயன்முறை பயிற்சி வகுப்பும் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு நிலையப்பொறுப்பதிகாரி MSM.நிப்றாஸ் இன் தலைமையில்  அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்திற்குட்பட்ட கண்ணகி  கிராமத்தில் இடம்பெற்றது.

 இதில் வளவாளர்களாக மாவட்ட விவசாய பயிற்சி நிலைய விவசாய போதனாசிரியர் MYM. நியாஸ் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர் A. ஜெயினுலாப்தீன், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் MH. நுசைத் , MA. Silmiya மற்றும் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஆலையடிவேம்புக்கான பொறுப்பாளர் K. நிசாகரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


வி.சுகிர்தகுமார் 

முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு திட்டம் அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களிலும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது!!
இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும் நோக்கில் 'முழு நாடுமே ஒன்றாக' எனும் தேசிய செயற்பாட்டுத்திட்டம் இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்  செய்துவைக்கப்பட்டது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச  செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி ஒருங்கிணைப்பில் இன்று இடம்பெற்றது.
'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு திட்டம் நிகழ்வுகள் மற்றும் ஜனாதிபதியின் விசேட உரை நிகழ்நிலை ஊடாக காண்பிக்கப்பட்டதுடன்
போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில்  உத்தியோகத்தர்களினால் சத்தியப்பிரமான நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வுகளில் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் சத்தியப்பிரமாணமும் செய்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின், அம்பாறை கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள மாணவர் விடுதியின் பின்புற களஞ்சியசாலையில் இன்று (29) காலை தீ விபத்து ஏற்பட்டது.

இன்று காலை சுமார் 7.20 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பயனாக தீ விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீயை அணைப்பதற்காக அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை தீயணைப்புப் படையினர் மட்டுமல்லாமல் சம்மாந்துறை பிரதேச சபையின் தீயணைப்புக் குழுவினரும் இணைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து குறித்து தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் கூறுகையில்,

“தீ இன்று (2025.10.29) காலையில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகமும் சம்மாந்துறைப் பொலிசாரும் ஆராய்ந்து வருகின்றனர். தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர விரைந்து உதவிய அம்பாறை, அக்கரைப்பற்று,கல்முனை தீயணைப்புப் படையினர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் தீயணைப்புக் குழுவினருக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.

மாணவர் விடுதியின் பின்புறம் அமைந்துள்ள பாவனைக்கு உதவாத பொருட்களை சேகரித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தீ விபத்தில் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஆராய்ந்து வருகின்றனர்.


 வி.சுகிர்தகுமார் 



பாடசாலை செல்லாத மாணவர்களை இனங்கண்டு அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் பணியை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு பாடசாலையின் கல்விச்சமூகம் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக கண்ணகி;கிராமத்தில் பாடசாலை செல்லாத இனங்காணப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமாரின் அறிவுறுத்தலுக்கு அமைய கோட்டக்கல்விப்பணிப்பாளர் க.கமலமோனதாசனின் வழிகாட்டலில் திருக்கோவில் கல்வி வலயத்தின் முறைசாராக்கல்வியின் ஆசிரிய ஆலோசகர் வி.மேகவண்ணன் தலைமையில் ஆசிரியர்களான சி.உமாகாந்தன் ச.ரகுவரன் ஆகியோர் களப்பரிசீலனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேநேரம் பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
பாடசாலை செல்லாத பெற்றோர்களை நேரடியாக சந்தித்த அதிகாரிகள் பெற்றோர்களுக்கு இறுக்கமான கட்டளை பிறப்பித்ததுடன் அவ்வாறான குடும்பங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அரசினால் வழங்கப்படும் மானியங்களை நிறுத்த வேண்டிய நிலைவரும் எனவும் எச்சரித்தனர்.
கண்ணகிகிராமத்தில் பாடசாலை செல்லாத 16 வயதிற்குட்பட்ட 30  மாணவர்கள் வரையில் உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளமை 


சுற்றுலா துறை மேம்பாட்டினை மேற்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றுலா துறைசார்  உப குழு அங்குரார்ப்பனம்!!


சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உப குழுவினை அமைப்பது தொடர்பான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடலொன்று இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.


தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளுக்குமான அபிவிருத்திக் குழு தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.


தற்பேதைய அரசாங்கத்தினால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளை கவர்ந்தீர்க்கும் வண்ணம் பல அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் அவற்றை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் உப குழுவினை அமைப்பது தொடர்பாகவும், வாகரை, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, வவுணதீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலாத்துறை சார்ந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்ததுடன், அவற்றை முன்னெடுத்து செல்வதில் ஏற்படும் தாமதங்கள், அவற்றை நிவர்த்திப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டு, பல தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களினால் சில திட்டங்களை முன்னெடுப்பதில் உள்ள  சிக்கல் நிலமைகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தார்.


குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், அமைச்சின் இணைப்பாளர்கள் , மாவட்ட செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக  திட்டமிடல் அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



 *மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதி உதவி*


மண்முனை பற்று பிரதேசத்தை உள்ளடக்கிய பாலமுனை பிரதேசத்தில் *“மக்கள் பணிமனை”*  (26/10/2025)  திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது


இத்திட்டத்தின் முதல் கட்டமாக, அண்மையில் ஏற்பட்ட மினி சூறாவளியால் பாலமுனையில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு வீட்டை தெரிவு செய்து, அந்த குடும்பத்துக்கு உதவித்தொகையாக பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.எம். *சியாத் JP* அவர்கள் தமக்கான மாதாந்த சம்பளத்திலிருந்து ரூபாய் 10,000/- மதிப்பிலான காசோலையை வழங்கி வைத்தார்.


MAM. சியாத் JP

மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

 


'சரோஜா' என்ற தொனிப்பொருளில் பாதுகாப்பற்ற சிறுவர்  சிறுமியர் தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் அரச தனியார் பேருந்துகளுக்கு விழிப்புணர்வு   ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு இன்று நாடு பூராகவும் நடைபெற்றது.


இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் ஆரம்பமானது.இதன் போது அங்கு காணப்பட்ட முச்சக்கரவண்டி அரச தனியார் பேரூந்துகளில் உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.இதன்போது  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி கலந்து கொண்டிருந்தார்.அவருடன் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை உப பிரதேச செயலகம் சார்ந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைச்சு  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.

இது தவிர சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பொலிஸ் நிலைய  ஏற்பாட்டிலும் குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் பங்கேற்பில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இதன்போது பொலிஸ் நிலையத்தின் முன்பாக முச்சக்கரவண்டிகள் வரவழைக்கப்பட்டு குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டன.

இதே வேளை காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு சந்தியல் குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன் போது காரைதீவு பதில்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியுமான பி.எம்.எஸ்.டி குமார தலைமையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சரோஜா ஸ்ரிக்கர்" என்பது  பாதுகாப்பற்ற சிறுவர், சிறுமியர் குறித்த விழிப்புணர்வுக்காக   ஒட்டப்பட்ட ஸ்ரிக்கர்களைக் (stickers) குறிக்கின்றது.

 மேலும் அண்மையில் கூட அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதிக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனரத், உள்ளிட்டோர் குறித்த சரோஜா ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்ததுடன் இந்நிகழ்வில் கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர,  அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல,   அம்பாறை மாவட்ட பதில் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமார் ,கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம் இப்னு அன்சாரும் கலந்து கொண்டிருந்தனர்.


 பாறுக் ஷிஹான்

 
தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச பிரதேச மக்கள் தொடர்பாடல் பணிமனை  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

திங்கட்கிழமை (27) தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச பிரதான செயற்பாட்டாளர் எம் எல் சம்சுன் அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த மக்கள் தொடர்பாடல் பணிமனையை  திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின்தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஏ. இப்திகார் அஹமட் ,   பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் எஸ் எம் ஆரிப்,  தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச செயற்ப்பாட்டாளர்களான ஐ எம்  சதாத், ஜாபிர் உட்பட ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.