Showing posts with label Eastern. Show all posts




 அக்கரைப்பற்று பொத்துவில் வீதி, மீன் சந்தைக்கு முன்பாக, புதிதாக உதயமாகி இருக்கின்றது, தாசிம் ஹோட்டேல்.
யூதர்களுடைய பால்மாக்களோ, பொருட்களோ இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை.


வி.சுகிர்தகுமார் 0777113659
 

 ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் இன்று (26) சிரமானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் யு.எல்.எம்.சகீல் வேண்டுகோளுக்கமைய இச்சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற சிரமதானப்பணியில்; அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் வைத்தியர் குணாளினி சிவராஜ் மேற்பார்வை செய்தார்.
வைத்தியசாலையின் வெளிச்சுழலில் காணப்பட்ட ; புற்கள் குப்பைகள் அகற்றப்பட்டது.
அகற்றப்பட்ட குப்பைகள் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டதுடன் அவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள பொது இடங்கள் ஆலயங்கள் என துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பினராகிய ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினருக்கு வைத்தியசாலை நிருவாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

 


வி.சுகிர்தகுமார் 0777113659  


அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் 7.439.000 ரூபா ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ள மாணவர்கள் தங்குமிட கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார துரித முயற்சி திட்டத்தின் கீழ் சிறுவர் நன்நடத்தை திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாம் கட்ட வேலைக்கான அடிக்கல்லே இவ்வாறு நடைபெற்றது.
விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தகஜேந்திரன் மற்றும் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் இணைப்பு செயலாளர் க.கண்ணதாசன் மாவட்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரி எஸ்.சிவகுமார் அக்கரைப்பற்று பிரதேச சிறுவர் நன்நடத்தை அதிகாரி ஜெயதாஸ் உள்ளிட்ட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அடிக்கல் நடும் பூஜை வழிபாடுகளை சிவஸ்ரீ சண்முகம் வசந்த குருக்கள் நடாத்தி வைத்ததுடன் அடிக்கல் நடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து அதிதிகள் அனைவரும் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
முதலாம் கட்டமாக இக்கட்டடத்தின் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தொடராக இவ்வேலைத்திட்டம் முன்கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


(நூருல் ஹுதா உமர் )


குறைந்த வருமானம் பெறும் குடும்பபங்களுக்கு ஆதரவு வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முழு நாட்டையும் உள்ளடக்கும் விதமாக குறைந்த வருமானம் பெறும் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ கிராம் நாட்டு அரிசியை இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இவ் வேலைத்திட்டம் தேசிய ரீதியாக (21) அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
இதன் தொடரச்சியாக காரைதீவில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முசாரப் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன், உதவி பிரதேச செயலாளர் செ.பாத்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் இராஐகுலேந்திரன், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம் .எம் அச்சுமுகமட் உட்பட பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி வழங்கி வைத்தனர். 


 இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, நீதியைக் கோருவது மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த கலந்துரையாடலுக்காக சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து எனது மட்டக்களப்புப் பயணத்தை முடித்தேன்.

 (ஏ.எம்.ஹஸ்னி)



பொத்துவில் பிரதேச மக்களுக்களுக்காக ஒரு துண்டுக் காணியையேனும்
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்  பெற்றுக்கொடுக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின்  முன்னாள் பிரதி தவிசாளருமான ஏ.எம்.தாஜுடீன் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொத்துவிலைப் பொறுத்தவரை செங்காமம், துக்வெல்ல, உடம்பன்குளம், தகராம்பெல, ஆமவெட்டுவான், கிராண்கோவை, சோனிகம உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் காணிப்பிரச்சினை உள்ளது. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுள்ளதா? அல்லது ஒரு துண்டு நிலத்தைக்கூட முஷாரப் எம்.பியினால் விடுதலை செய்ய முடிந்ததா? எனப் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மண்மலை விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பேசுகின்றனர் மண்மலை பிரதேசத்தில் ஏதாவது அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்கின்றதா? மக்களுடைய குடியிருப்புக் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றதா? அங்குள்ள மக்கள் அன்று அனுபவித்த அதே இன்னல்களை இன்றும் அனுபவித்துக்கொண்டே இருக்கின்றனர். இன்று அங்கு மலசலகூடம் கட்டிக்கொள்ள முடியாது. மக்கள் எல்லை வேலிகளை அமைத்துக் கொள்ள முடியாது. குடி நீருக்காக ஒரு கிணற்றைக்கூட நிர்மாணிக்க முடியாது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் அந்த இடத்தை சவாலுக்குட்படுத்துகின்றனர்.

இருக்கின்றனர். இங்கு தனிப்பட்ட ஒருத்தருக்காக வாக்குகள் இல்லை. மிகக் குறுகிய காலத்துக்குள்ளே இந்தக்கட்சி பொத்துவில் பிரதேசத்தில் அளப்பெரிய சேவைகளை ஆற்றியுள்ளது. இந்தக் கட்சியின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இங்குள்ள மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கினர்.

இந்த மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள் முஷாரபுக்கானது அல்ல இந்தக்கட்சி மிகக் குறுகிய காலத்திலேயே ஆற்றிய அளப்பெரிய சேவைக்கானது. அபிவிருத்தி செய்வது போன்று மாயை காட்டி மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. கட்சிக்கும் பொத்துவில் மக்களுக்கும் துரோகம் இழைத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்வரும் தேர்தலில் பொத்துவில் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார்.


சேவைகளை ஆற்றியுள்ளது. இந்தக் கட்சியின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இங்குள்ள மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கினர்.


இந்த மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள் முஷாரபுக்கானது அல்ல இந்தக்கட்சி மிகக் குறுகிய காலத்திலேயே ஆற்றிய அளப்பெரிய சேவைக்கானது. அபிவிருத்தி செய்வது போன்று மாயை காட்டி மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. கட்சிக்கும் பொத்துவில் மக்களுக்கும் துரோகம் இழைத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்வரும் தேர்தலில் பொத்துவில் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார்.


சமூக ஊடக ஆர்வலர்களுக்கான கப்சோவின் நான்காம் கட்ட பயிற்சிப் பட்டறை நிறைவு!*
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான "Youth Media Project" வேலைத்திட்டம் கப்சோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந் நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காம் கட்ட நிகழ்வு காரைதீவு லேடி லங்கா வரவேற்பு மண்டபத்தில் நடை பெற்றது. நிகழ்வுக்கு வளவாளராக வருகை தந்திருந்த ஆசிரியர் அஸ்வர் மொகமட் விரிவுரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் வேலைத்திட்டமானது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 30 சமூக ஊடக ஆர்வலர்களைக் கொண்டு நடாத்தப்பட உள்ள ஒரு வருட கால திட்டமாகும்.
GCERF ,HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் ஏற்பாட்டில் செயற்படுத்தப்படும் Youth Media Project வேலைத்திட்டத்தின் கீழ் “HOPE of YOUTH ”எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 (எம்.என்.எம்.அப்ராஸ்) 



குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம் செய்யும் ஆரம்ப நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் கல்முனையில் நேற்று(21) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும்,கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டார்மேலும் இதன் போது கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியகச் செயலாளர் பி.எம்.எம்.ஜஃபர்,நிருவாக கிராம உத்தியோகத்தர் உதார,கிராம உத்தியோகத்தர்கள்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 (றியாஸ் ஆதம், எஸ்.அஷ்ரப்கான்)


சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் நிறுவப்பட்டுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தி ஆரோக்கியமான சமூகமொன்றினை கட்டியெழுப்பும் நோக்கில் சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்விப் பணியகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த வேலைத்திட்டத்திற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய சுகாதார கல்வி பிரிவினால் கல்முனை பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் நிறுவப்பட்டுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிக் கருத்தரங்கு சனிக்கிழமை (20) பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின், மாவட்ட சுகாதார கல்வி அதிகாரி எம்.ஜே.எம்.பைறூஸ், பல் வைத்திய நிபுணர் ஏ.ஆர்.கத்தாபி, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலிக் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு விரிவுரையாற்றினர்.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 70 உறுப்பினர்கள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர். குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு யுனிசெப் நிறுவனம் நிதியுதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Rep/Faslin.

 ஆரையம்பதி கடற்கரையில் பட்டத்  திருவிழா.



சர்வமத சின்னங்களையிட்டு பட்டம் செய்து பறக்கவிட்ட மாணவன் முதலிடம்


மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் பட்டத்  திருவிழா இன்று(19)  சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.


ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தினால் முதல் தடவையாக இந்தப் பட்டத் திருவிழா  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 


இந்த பட்டத் திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பற்றினர்


இதில் ஆரையம்பதி மகா வித்யாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த . ரவீந்திரன் சோபிதன் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார்


இதில் முதல் மூன்று இடங்களையும் பெற்று போட்டியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்பட்டன


ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரையம்பதி கந்த சுவாமி ஆலயத்தின் பிரதம குரு

உமாபத சர்மா கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு உத்தியோகத்தர்

வேலுப்பிள்ளை ஈஸ்வரன் உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 


இந்த பட்டத் திருவிழாவில் பெருமளவிலான பொது மக்கள் சிறுவர்கள்  கலந்து கொண்டு பட்டத் திருவிழாவை கண்டு கழித்தனர்

 


நூருல் ஹுதா உமர் 


கல்முனை கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கல்வி முகாமைத்துவத்திற்கான பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் எம்.எச்..றியாஸா நியமனம் பெற்றுள்ளார்.

காரைதீவு கோட்டத்திற்கான கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சஞ்ஜீவன், கல்முனை கோட்டத்திற்கான கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் ஆகியோருக்கு மாகாண கல்வி செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் ஆரம்பப் பிரிவு கல்வி அபிவிருத்திக்கான பணிப்பாளராகவும் நியமனம் பெற்றுள்ளார்.

அதே வேளை எம்.எல்.எம்.முதர்ரிஸ் உடற்கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளருக்கான கடிதத்தினையும் பெற்றுக் கொண்டார்.

 நியமனக் கடிதங்கள் அனைத்தும் இன்று வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன


 வி.சுகிர்தகுமார் 0777113659 

 அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக தாழ் நில பிரதேசங்களும் சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த  மழை இன்று காலையிலும் தொடரும் நிலையில் மீண்டும் மழை பெய்யவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றது.
அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.
அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையினால் மாவட்டத்தின் பல்வேறு தாழ் நிலபிரதேசங்களும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன்  காற்றும் வீசி வருகின்றது.
இதனால் மக்களது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் விளையாட்டு மைதானங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நூருல் ஹுதா உமர் 

சம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களின் உறையுள் தேவைக்காக OCD அமைப்பின் தலைவரின் எண்ணக்கருவில் உருவான "யாவருக்கும் உறையுள் - 2030" எனும் தொனிப்பொருளில் நிர்மானிக்கப்படவுள்ள 13 ஆவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (13) மலையடிக்கிராமம் 4 அல்-அக்ஷா பள்ளிவாசல் மஹல்லாவுக்குட்பட்ட பகுதியில் அமைப்பின் செயலாளர் சரோஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவரும், விஞ்ஞான முதுமானியும், சமூக செயற்பாட்டாளருமான அஸ்மி யாஸீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து அடிக்கல் நாட்டிவைத்தார். 

இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் நஸீர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் றியாஸ், தொழிநுட்ப உத்தியோகத்தர் மொஹம்மட் தம்பி, நூர் பள்ளிவாசல் தலைவரும், அமைப்பின் ஆலோசகருமான அல்-ஹாபிழ் றிப்கான், சம்/மத்திய கல்லூரியின் உப அதிபர் பர்ஸான், கணக்காளர் ஜிப்ரி, அஸ்ஸமா வித்தியாலய அதிபர் அபூபக்கர், ஜனாதிபதியின் இளைஞர் விவகார அமைப்பின் உறுப்பினர் பாஸித், OCD அமைப்பின் செயலாளர் பெரோஸ் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 


( எம்.என்.எம்.அப்ராஸ்)

புனித நோன்பு நாட்களில் கல்முனை பிராந்தியத்திலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும் மற்றும் தூர பிரதேசங்களிலிருந்து கல்முனைக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்தவர்களுக்குமான இலவச ஸஹர் உணவு விநியோகிக்கும் செயற்றிட்டத்தினை இவ்வருடமும் (2024)கல்முனையன்ஸ் போரம் மிக வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது. 

தூர இடங்களிலிருந்து கல்முனை பிராந்தியத்திற்கு பல்வேறுபட்ட தேவைகளுக்காக வருகை தருபவர்கள் புனித நோன்பினை நோற்பதற்கான ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவது பற்றி கல்முனையன்ஸ் போரத்தின் கவனத்திற்கு எட்டப்பட்டதினால் இச்செயற்றிட்டம் கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இத்திட்டத்தின் மூலம் நோன்பு ரமழான் முழுவதும் மொத்தமாக 4164 நோன்பு பிடிக்கும் ஸஹர் உணவு ஏற்பாடுகளை கல்முனை,மருதமுனை,

சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களுக்கு எவ்வித தடைகளுமின்றி உரிய ஸஹர் நேரத்திற்கு நோன்பாளிகளின் இடத்துக்கே சென்று 

மேற்படி ஸஹர் உணவானது ரமழான் காலத்தில் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 7:00 வரைக்கும் தொலைபேசியூடாக கிடைக்கப்பெறும் முன்பதிவுகள் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


 ( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக  சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, அவர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை மேலதிகமாக கடமையாற்றவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக, அம்பாந்தோட்டை வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த  வைத்திய கலாநிதி டாக்டர்.  ஏ.பி.ஆர்.எஸ்.சந்திரசேன  நியமிக்கப்பட்டு அவர் கடந்த 2ஆம் திகதி கடமையேற்றுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் நேற்று வியாழக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இது இவ்வாறிருக்க, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் கடமைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் மேலதிக பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் நியமிக்கப்பட்டார் .

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய பணிப்பாளராக கடமையேற்ற வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரனை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர்.நவலோஜிதன் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வரவேற்றதனைத் தொடர்ந்து அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக பதவியேற்றுள்ள நிலையில் குறித்த கடமைக்கு மேலதிகமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைப் பொறுப்பினை  ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த எட்டு வருட காலமாக அர்ப்பணிப்புடன் சிறந்த சேவை செய்து வைத்தியசாலையின் பாரிய வளர்ச்சியில் அபரிமிதமான பெரும் பங்காற்றிய டாக்டர் இரா முரளீஸ்வரன் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 ( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை விவசாய விரிவாக்கல் நிலைய பகுதியில் விவசாய போதனாசிரியர் என். பார்த்தீபன் தலைமையில்  வயல்விழா  நேற்று முன்தினம் நடைபெற்றது.


பரசூட் முறையிலான நெற்செய்கையின் நன்மைகள் பற்றிய தெளிவான விளக்கங்களுடன் பரசூட் முறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் என்பன முறையான செய்து காட்டல்கள் மூலம் விவசாய போதனாசிரியர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக உதவி விவசாய பணிப்பாளர்களான திருமதி நித்தியா நவரூபன், எஸ்.சித்திரவேல் பாடவிதான உத்தியோகத்தர்களான திருமதி லாவண்யா செந்தீபன், லக்ஸ்மன், மாறன் ஆகியோருடன் தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல சேவை நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கொக்கட்டிச்சோலை விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 இதன்போது ஏற்கனவே பரசூட் தட்டுக்களில் இடப்பட்ட நாற்றுகள் நடுகை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பரசூட் முறையிலான நெற்செய்கையின் போது எமது செலவினை குறைத்து அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 8-12 Kg விதைநெல் போதுமானது என்பதால் மிகக்குறைந்த செலவே ஏற்படும் எனவே விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்டுவதற்கு விவசாய திணௌக்களத்துடன் சேர்ந்து முயற்சிக்க வேண்டும் என பிரதி விவசாய பணிப்பாளரும் தன்னுடைய உரையில் கேட்டுக்கொண்டார்.


 நூருல் ஹுதா உமர் 


மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் 
பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். 

நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நல்லூரில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து நல்லூர் பிரதேசத்தை ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டு, வெளி ஆக்கிரமிப்பாளர்களால் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது குறித்து ஆராய்ந்ததுடன் பழங்குடியின மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர். 

இதன்பின் அவர்களின் பிரச்சினைகளை ஆராயவும், பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் உடனடியாக குழுவொன்றை நியமிக்குமாறு திருகோணமலை அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.


வி.சுகிர்தகுமார் 0777113659  


 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின்  கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக 'சமுர்த்தி அபிமானி' புத்தாண்டு சந்தையினை நடாத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில்; சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தையினை இன்றும் நாளையும் (9,10) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ந.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்; மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபி;ர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா நிருவாக கிராம அலுவலர் பரிமளவாணி சில்வெஸ்டார் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் ரி.கமலபிரபா சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான கவிதா கிருதாசன் எஸ்.சுரேஸ்காந் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி பிரிவினரால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்ட அதிதிகள் வியாபார நிலையங்களை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.
பின்னர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டனர்.
இதேநேரம் பல்வேறு உற்பத்தி பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

 


மாளிகைக்காடு அல் ஹூசைன் வித்தியாலயத்தில் நினைவு மலர் வெளியீடும்  இப்தார் நிகழ்வும்!


நூருல் ஹுதா உமர் 


கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹூசைன் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது நினைவாக ‘அடையாளம்’ எனும் பெயரில்  நினைவு மலர் வெளியீடும், இப்தார் நிகழ்வும், வித்தியாலயத்தின் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் திறந்த வெளியரங்கில் 2024.04.07 ஆம் திகதி அதிபர் ஏ.சி.எம். நளீம் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களும் விஷேட அதிதியாக மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களின் புதல்வர் எம்.ஏ.என். சுஹாத் ஹம்டி அவர்களும் கலந்து கொண்டனர்.


நிகழ்வின்போது அஷ்செய்க் மௌலவி ஏ.கே.எம். சமீர் அவர்கள் துஆ பிராத்தனை நடாத்தினார். இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


 நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 25 மாணவர்களுக்கு தனவந்தர்களின் பங்களிப்புடன் பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று (05) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபரின் முயற்சியினால் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. அன்சார் உள்ளிட்ட பலரும்
கலந்து கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.