Showing posts with label Eastern. Show all posts


 மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகன விபத்து....


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேராக மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது ...

 


நூருல் ஹுதா உமர்  


வீட்டு லொத்தர் சீட்டுழுப்பின் மூலம் வழங்கப்பட்ட தலா ரூபா 2 இலட்சம் நிதியினை கொண்டு தனது வாழ்வாதாரத்தினை விருத்தி செய்வதற்காக சாய்ந்தமருது 01ஆம் பிரிவைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கும் சாய்ந்தமருது 09 ஆம் பிரிவைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கும் தொழில் முயற்சிகளை  ஆரம்பிக்கும் பொருட்டு அவர்களுக்கான உபகரணங்கள் வழங்குகின்ற நிகழ்வு  சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் (06) செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர்  றியாத் ஏ. மஜீத், பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம். ஜாபீர், எம்.ஐ. ஜெரீன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

 


நூருல் ஹுதா உமர்


தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது  பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்கரையோர பிரதேசங்களில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் மரநடுகை நிகழ்வு  இடம்பெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக பொறியியலாளர் எம்.சி .கமால் நிஸாத் அவர்களும், அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா , நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட் , கரையோர பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.நுஸ்ரத் அலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக சாய்ந்தமருது  ஹெப்பி கிட்ஸ் ஹோம் முன் பாடசாலை வளாகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் மரநடுகை நிகழ்வு  இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் எஸ்.டி.சுதாகரன், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை. திருப்பதி, சமூக பாதுகாப்பு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்பீக், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எப்.சுமையா பானு,  ஹெப்பி கிட்ஸ் ஹோம் முன்பாடசாலை தலைமை ஆசிரியை ஜூனைதா மசூத், ஹேப்பி கிட்ஸ் ஹோம் முன்பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


நூருல் ஹுதா உமர்

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக நுழைந்த கல்முனை உப பிரதேச செயலக வழக்கின் இடையீட்டு மனுதாரர்களாக நீதிமன்றம் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளது.

கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வரும் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேன்முறையீட்டு நீதிமன்றில் கல்முனை விவகாரம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று (07) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த  அறிவிப்பு நீதிபதிகள் குழாமினால்  விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்திருந்த வழக்கின் இடையீட்டு மனுதாரர்களாக கல்முனையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் நீதிமன்றுக்கு தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற குழாமுக்கு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கடந்த தவணையில் கோரிக்கை விடுத்திருந்த போது வழக்காளியான பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அந்த கோரிக்கைக்கு எதிராக தனது கடுமையான ஆட்சபனையை அன்று வெளியிட்டார். அத்துடன் இடையீட்டு மனுவை நீதிமன்றம் ஏற்க  கூடாது என்றும் இடைக்கால தீர்வை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது வாதத்தில் நீதிமன்றுக்கு கடந்த தவணையில் போது முன்வைத்தார்.

எதிர்தரப்பினரிடமும், சட்டமா அதிபர் திணைக்களத்திடமும் இந்த இடையீட்டு மனு தொடர்பில் வினவிய நீதிபதிகள் குழாம் இந்த இடையீட்டு மனுவை ஏற்பது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தரப்பினது ஆட்சபனையை வழங்க ஒரு வார கால அவகாசமும் இடையீட்டு மனுதாரர்களின் ஆட்சபனைக்கான பதிலை நீதிமன்றுக்கு வழங்க ஒருவாரம் அவகாசம் வழங்கியிருந்த நிலையில் இன்று இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து இந்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்சீவ ஜெயவர்த்தன, பைஸர் முஸ்தபா உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி வாதிட்டனர். இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரியியிருந்த இடைக்கால தீர்வுக்கும் தமது ஆட்சபனைகளை அவர்கள் தெரிவித்திருந்தனர். இதுவிடயமாக எழுத்துமூல ஆட்சபனை அறிக்கையை வழங்க இடையீட்டு மனுதாரர்களுக்கு ஒருவாரமும் அந்த அறிக்கைக்கு பதிலறிக்கை வழங்க கலையரசன் எம்.பி சார்பிலான சட்டத்தரணிகளுக்கு ஒருவார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த தவணை ஜூலை 12 இல் நடைபெறவுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் தமிழ் மக்களிடமும், முஸ்லிம் மக்களிடமும் பலத்த வாதபிரதி வாதங்கள் சில தினங்களாக இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை மக்கள் எதிர்பார்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


பாறுக் ஷிஹான்


பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில்  இன்று  நடைபெற்றது.

 அம்பாறை மாவட்டம்  கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி  தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானதுடன்   கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி,    கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ,அரச சட்டவாதி எம்.லாபீர்   ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் முதலில்  மத அனுஸ்டானம் இடம்பெற்றதை தொடர்ந்து  கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி  தலைமையுரை மற்றும் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி உரையுடன் இக்கலந்துரையாடல் ஆரம்பமானது.

தொடர்ந்து இக்கலந்துரையாடலில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்  மருத்துவ கலாநிதி   என். இதயகுமார் வளவாளராக கலந்த கொண்டு   பக்கவாதம் என்றால் என்ன?, ஆரோக்கியமான உடற்பயிற்சி செய்வது ஏன்? , உணவுப்பழக்க வழக்கங்கள் பேணப்படுவது எவ்வாறு ? ,நீண்ட நேர தூக்கம் மன அழுத்தம் தொடர்பான விழிப்பணர்வு  , பக்கவாதம் நோயின் தன்மை  ,அதற்கான சிகிச்சை முறைகள்,  தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் ,கலந்துரையாடலில் நோயாளி ஒருவரும் அழைக்கப்பட்டு அவரது அனுபவ பகிர்வும் கலந்துரையாடலில்  அவையோருக்கு  தெளிவு படுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சிரேஸ்ட சட்டத்தரணிகள் சட்டத்தரணிகள் நீதிமன்ற பதிவாளர்கள்  உத்தியோகத்தர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் கல்முனை சட்டத்தரணிகள் சங்க செயலாளர்   சட்டத்தரணி ரோஸன் அக்தரின்    நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


 (நூருல் ஹுதா உமர் )


காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கிராம உத்தியோகத்தர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழு ஒன்று டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் முகமான வீடு வீடான களப்பயணம் ஒன்றை இன்று மேற்கொண்டு இருந்தனர்.

இந்த களப்பரிசோதனையில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.பைசால் முஸ்தபா,  எம்.எம்.எம்.சப்னூஸ், டெங்கு கட்டுப்பாட்டு கள பரிசோதகர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் இதன்போது வெற்று காணிகள் பராமரிக்கப்படாத கிணறுகள் வீடுகள் என்பவற்றிற்கு  சிவப்பு அறிக்கை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
 

 


கல்முனை நிருபர்)


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தின் புவியியற்துறையினால் உலக சுற்றாடல்தினமானது கலைகலாசார கேட்போர் கூடத்தில் புவியியற்துறைத் தலைவர் கே.நிஜாமிர் தலைமையில் (05) இடம்பெற்றது


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்துசிறப்பித்தார்இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலைகலாசார பீடத்தின்பீடாதிபதி எம்.எம்.பாசில் கலந்துகொண்டதோடு துறைத்தலைவர்கள்பேராசிரியர்கள்விரிவுரையாளர்கள்மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்


நிகழ்வின் தலைமையுரையினை துறைத்தலைவர் கேநிஜாமிர் இவ்வருடசுற்றாடல் தின தொணிப்பொருளான Solutions to plastic pollution தொடர்பாக நிகழ்த்தினார்


நிகழ்வில் உரையாற்றிய உபவேந்தர் பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஏற்படும் சுற்றாடல்,சுகாதார,மற்றும் சமூகபிரச்சினைகள் பற்றியும் எடுத்துரைத்தார்


நிகழ்வில் பீடாதிபதி சிறப்புரையாற்றியதோடு பேரசிரியர் எம்..ம்.கலீலினால் விஷேட விழிப்புணர்வு விரிவுரையும் நாடாத்தப்பட்டதுடன்,

இந்நிகழ்வினை முன்னிட்டு பீடத்தின் வளாகத்தில் மரநடுகையும்,மாணவர்களின் விழிப்புணர்வு 

நிகழ்ச்சிகளும்இடம்பெற்றன


 நூருல் ஹுதா உமர், யூ.கே.காலிதீன்


டெங்கு கட்டுப்பாட்டு வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (06) சாய்ந்தமருதில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில் காலை 7.00 மணி தொடக்கம் மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான அடையாளம் காணப்பட்ட பல இடங்களில் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சாய்ந்தமருது பொலிஸார், மாநகர சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் மாநகர திண்ம கழிவு முகாமைத்துவ மேற்பார்வையாளர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ் வேலைத் திட்டத்திற்கு பிரதேச சுகாதார வைத்திய பணிமனை, பொலிஸ் உள்ளிட்ட சில அரச திணைக்களங்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தன.


 வி.சுகிர்தகுமார் 0777113659 

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அம்பாறை வீதியிலுள்ள பாவிக்கப்பட்ட பழைய இரும்புகள்; விற்பனை மற்றும் பழைய நானாவித பொருட்களின் பாரிய களஞ்சிய சாலையொன்று இன்று தீ  அனர்த்தத் துக்குள்ளாகியது.
இன்று காலை 10 மணியளவில் விற்பனை நிலையத்தில் இருந்து தீ வெளிவருவதை அவதானித்த அருகில் இருந்தவர்களும் கடையிலே வேலை பார்த்தவர்களும் உரிய தரப்;பினருக்கு அறிவித்திருந்த நிலையில் உடன் விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர் உள்ளிட்டவர்களினால் அதிஷ்டவசமாக தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.
அக்கரைபற்று மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், ஆலயடிவேம்பு அக்கரைப்பற்று, , அட்டாளைச்சேனை பிரேதேச சபைகளின் நீர் பவுசர்களின் உதவியைக்கொண்டு பரவிய தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதால் பாரிய அனர்த்தத்திலிருந்து தவிர்க்கப்பட்டது.
மாநகர சபையின் ஆணையாளர் எ.ரீ.எம் ராபி, அக்கரைப்பற்று 241 வது    இரானுவப்பிரிவின் கேர்ணல் தணிக்க பத்திரத்ன மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ரீ.பீ.விஜயதுங்க போன்றோர் ஸ்தலத்தில் தமது குழுவினருடன் விரைந்து சென்று பாரிய கொழுந்துவிட்டெரிந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அயல்வீடுகளுக்கும் தீ பரவாமல் தடுத்தனர்.
பொது மக்களும் இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் நீண்டகாலமாக  இயங்கிவரும் இந்தக் களஞ்சிய சாலையில் .பழைய பாவனைக்குதவாத இரும்பு மற்றும் நானாவித இரும்பு வகைகள் மின்சார உபகரணங்கள் கொள்வனவு செய்து மீள்சுழர்ச்சி பாவனைக்காக வேறு இடங்களுக்கும் அனுப்பி வந்தனர். ஆயினும் இச்செயற்பாடு பாதுகாப்பற்ற முறையில் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பில் பிரதேச சபை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
வெற்றுப்போத்தல்கள், மற்றும் சில மின் உபகரணங்கள் இவ்வனர்தத்தின்போது  வெடித்து சிதரறியதையும் காணக்கூடியதாக இருந்தது.
அனர்த்தம் ஏற்பட்டு சில மணிநேரம் அக்கரைப்பற்று அம்பாறை வீதி ஊடான போக்குவரத்து செயற்பாடுகளும் சற்று நேரம் தடைப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது .

 


அக்கரைப்பற்று அம்பாரை வீதியில் அமைந்துள்ள நாடார் கடையொன்று இன்று காலையில் தீப்பற்றிக் கொண்டது. அக்கரைப்பற்று மாநகர சபையின் தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தன. தீப் பரவலால், எத்தகைய உயிராபத்துக்களும் ஏற்படவில்லை.

 


கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருடன் எம் எஸ் தௌபீக் எம்.பி கலந்துரையாடல்.


(எஸ் சினீஸ் கான்)


கிழக்கு மாகாண அபிவிருத்தி, பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் இன்று (6) இடம்பெற்றது.


அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றக்கூடிய ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விடயம் எனவும் அவரை மக்கள் முழுமையாக ஆதரிப்பதாவும் பாராளுமன்ற உறுப்பினர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.


இச்சந்திப்பில், கிழக்கு மாகாண அபிவிருத்தி,  மாகாணத்தில்  நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, காணிப் பிரச்சினை, வெளிநாட்டு முதலீடுகள் சம்மந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


இச்சந்திப்பின்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டனர்.

 


(சர்ஜுன் லாபீர்)


அண்மையில் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட மருதமுனை சுனாமி வீட்டுத்திட்டத்தில் உள்ள உள்ளக தெருக்களுக்கான மின் விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் இன்று(05)  மருதமுனை சுனாமி வீட்டுத் திட்டத்தில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி,கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி,கல்முனை மாநகர பிரதி ஆணையாளர்  ஏ.எஸ்.எம் அஸீம்,பொறியியலாளர்  ஏ.ஜ.ஜெளஸி தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர் உடபட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் வீட்டுத்திட்டத்தில் ஏற்கனவே தனித் தனி வீடுகளுக்கான மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் தெருக்குகளில் உள்ள மின் விளக்குகள் இதுவரை காலமும் இல்லாமையினால் மக்கள் மிகுந்த சிரமங்களுக்கும்,கஸ்டங்களுக்கும் உட்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 


(நூருல் ஹுதா உமர்)


சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினை மாவட்டத்தின் சிறந்த முன்மாதிரி அமைப்பாக பாராட்டு பெறுமளவுக்கு வழிநடாத்தும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீனை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் மாதாந்த கூட்டம் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்தே அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி நிர்வாகிகளால் கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஊடகவியலாளர் றியாத் ஏ.மஜீத், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பொருளாளர் ஏ.எம்.பசீல், முன்னாள் தலைவர் கலைஞர் ஏ.அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினூடாக மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு தனவந்தர்களின் உதவிகளைப் பெற்று திட்டங்களை செயற்படுத்துவதிலும் மாவட்டத்தில் முன்மாதிரியான கருத்திட்டங்களை செயற்படுத்தி மாவட்டத்தில் சிறந்த அமைப்பாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸினால் நற்பெயர் வாங்க காரணகர்த்தாவாக செயற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிகாஸா ஷர்பீனின் ஆளுமையை பாராட்டியே சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினரால் இக்கெளரவம் அவருக்கு வழங்கப்பட்டது.

ஆகியோர் பாராட்டிப் பேசியமை குறிப்பிடத்தக்கது.


இதன்போது  அபிவிருத்தி உத்தியோகத்தர் றிகாஸா ஷர்பீன் கருத்துத் தெரிவிக்கையில், இப்பாராட்டுக்கும் கெளரவத்திற்கும் நான் மட்டும் உரித்துடையவள் அல்ல.  மாறாக இப்பாராட்டினையும் கெளரவத்தினையும் பெறுவதற்கு எனக்கு பெரிதும் ஒத்துழைப்பு வழங்கி வரும் வெளிக்கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இவ்விடத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அமைப்பினூடாக மேற்கொள்ளப் படும் வேலைத்திட்டங்களுக்கு எனக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டும் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், முன்னாள் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைப்பினூடாக மேற்கொள்ளப் வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தித்தரும் தற்போதைய சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், கணனி உதவியாளர் எஸ்.சாபித் அக்மல் உள்ளிட்ட சக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்கு மேலாக பிரதேச செயலக பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு சிறந்த முறையில் திட்டங்களை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கும் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.சம்சுதீன், செயலாளர் ஏ.முபீதா, பொருளாளர் ஏ.எம்.பசீல், முன்னாள் தலைவர் ஏ.அலாவுதீன் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எமது பிரதேச செயலக பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் செயற்திட்டங்களை பாராட்டி, எமது செயற்பாட்டுக்கு ஊக்கமளித்து வரும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸ் ஆகியோருக்கும் இதன்போது தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

 

சைக்கிளில் வலம் வருவோம் என்ற அமைப்பானது தனது 3 வது ஆண்டில.் கால் பதிக்கின்றது. அதனை முன்னிட்டு இன்று அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் சைக்கிள் சவாரி ஆரம்பமாகி, கல்முனை வீதியினை நோக்கி சைக்கிளில் செல்வதை அவதானிக்க முடிந்நது.


 


இலங்கை போக்குவரத்து சபை

அக்கரைப்பற்று பஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கு...


 பல நாட்களாக உங்களது அக்கரைப்பற்று நிலையத்திற்கு பொறுப்பான வவுனியா செல்லும் பேரூந்தில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டு வருகின்ற பணியாகும்.  தெரிவிக்கும் விடயமாக நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டு வரும்போது பல அசௌகரியங்களை அனுபவிக்கிறோம்.

1 உரிய நேரத்தில் பஸ் வருவதில்லை . தாமதமாக வருவதால் உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாது உள்ளது.

2. பஸ் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு இருப்பதால் பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது.

3. உரிய நேரத்திற்கு பெல் Bell வேலை செய்வதில்லை..


இது போன்ற பிரச்சனைகளை தாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன ????

தூர பயணம் செல்லும் எங்களுக்கு இதனை சரிசெய்து தர முடியுமா ??

இது பஸ் நடத்துனரின் தவரா? அல்லது பொறுப்பு அதிகாரியாக இருந்தும் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது உங்களின் தவறா?

 


பாறுக் ஷிஹான்


114/5, பூனைந்தவத்த, கலால்பிடிய, உக்குவலையைச் சேர்ந்த இமாம்தீன் ராசித் அப்துல்லா முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக (Justice of the Peace for the Whole Island) நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டு, மாத்தளை மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் கடந்த புதன்கிழமை (31.05.2023) செய்துகொண்டார்.

இமாம்தீன், நஜிமா உம்மா  தம்பதியினரின் புதல்வரான இவர் சமுக சேவையாளராகவும், நீதி அமைச்சில் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.


 வி.சுகிர்தகுமார் 0777113659 

 திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாகாமம் பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளான ஒருவர் பலியானார்.

இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தம்பிலுவில் 02 பிரதான வீதியை சேர்ந்த 67வயது மதிக்கத்தக்க கனகரெட்ணம் கங்காதரன் எனும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் திருக்கோவில் சாகாமம் பகுதியில் உள்ள  வயல் காணியில் காவல் கடமையில் 

யானை தாக்கியதில் தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ககைரத்தினம் கங்காதரன் என்பவர் உயிரிழந்துள்ளார். வயலில் இரவு நேரத்தில் யானைக் காவலுக்குச் சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


 நூருல் ஹுதா உமர்


கிழக்கில்  மிகப்பெரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை மாதிரியாக்க தொழில் கண்காட்சி 2023, இன்று (31-05-2023) இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. பல்கலைக்கழகத்துடன் இணைந்து SLASSCOM ஆல் நடத்தப்படும் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு, நமது நாட்டில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள திறமையாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் மிகப்பெரிய தொழில் கண்காட்சியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஏ. ரமீஸ் அவர்களின் பிரதம அதிதி உரையுடனும், SLASSCOM இன் தலைவர் திரு. ஆஷிக் அலி அவர்களின் அறிமுக உரையுடனும் தொழில் கண்காட்சி ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியை பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின் அனுசரணையாளர்களாக நாட்டின் IT மற்றும் BPM துறையின் வளர்ச்சியை ஆதரித்து, சக்தி வழங்கும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வந்துள்ளன. SimCentric Technologies, Axiata Digital Labs, HSenid Axcenze, HCL Tech, Topjobs, Dialog, LSEG, Abans மற்றும் நோர்வே தூதரகத்தின் ஆதரவு உட்பட பிற அனுசரணையாளர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை வழங்கிய நிறுவனங்களாக அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். அவர்களின் அர்ப்பணிப்பு இந்த நிகழ்வை சாத்தியமாக்கியுள்ளதுடன் எண்ணற்ற வாய்ப்புகளுக்கான தளத்தை வழங்குகிறது. இது IT மற்றும் BPM துறையில் வேலைவாய்ப்புக்களை பூரணப்படுத்தவதற்கான கதவுகளைத் திறக்கிறது.

நிகழ்வின்போது பல்கலைக்கழக துணைவேந்தர் தனது உரையில் பல முக்கியமான விடயங்களை எடுத்துரைத்தார். கணினி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சார்ந்த மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட இது போன்ற வாய்ப்பு இதற்கு முன் கிடைக்காதவர்களுக்கு இந்த தொழில் கண்காட்சி ஒரு குறிப்பிடத்தக்க தளமாக விளங்குகிறது. வரலாற்று ரீதியாக, இதே போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் கொழும்பு போன்ற பெருநகரங்களில் தனிநபர்களுக்கு அணுகக்கூடியதாக இருந்தது. எவ்வாறாயினும், இந்த தொழில் கண்காட்சியானது கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த தனிநபர்களுக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் பல துறைகளில் வௌ;வேறு சாத்தியக்கூறுகளை ஆராய அவர்களுக்கு உதவுகிறது.

பல்கலைக்கழகமும் அதன் ஊழியர்களும் மற்றும் மாணவர்களை இங்கு கூடியிருக்கும் அனைத்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், பட்டதாரிகள் மற்றும் இளங்கலை பட்டதாரிகளுக்கு, தங்கள் திறமைகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது. இந்த தொழில் கண்காட்சி மாணவர்களை அவர்களின் கனவு வேலைவாய்ப்பை நோக்கி வழிநடத்தும் ஒரு ஊடகமாக செயல்படுகிறது. இது புதிய வாய்ப்புகளை சந்திக்கும் இடமாகும். இது மாணவர்கள் தொழில்துறை தலைவர்களுடன் இணைவதற்கும், வளர்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்த எதிர்காலத்தை இயலுமையாக்குவதற்கும் அனுமதிக்கிறது.

இந்த நிகழ்வு முழுவதும், மாணவர்கள் பரந்த அளவிலான தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதனூடாக IT மற்றும் BPM தொழிற்துறையின் சமீபத்திய போக்குகள், தொழில்நுட்பங்கள் மற்றும் வாழ்க்கைப் பாதைகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுகின்றனர். இந்த விலைமதிப்பற்ற தளத்தை இணைப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்கும் அதிகம் பயன்படுத்துமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அத்துடன் மாணவர்களின் திறமைகள் பிரகாசிக்கவும் இவ் எண்ணற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்துமாறும் உபவேந்தர் கேட்டுக்கொண்டார்.

சமகாலத்தில் IT மற்றும் இயந்திர கற்றல் துறையில் மாணவர்களை ஈடுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆய்வுகள் கூட செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சியில் மாணவர்களின் ஈடுபாட்டை முதன்மைப்படுத்துகின்றன. இதற்கேற்ப துணைவேந்தர் அவர்கள் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞானப் பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களையும் பங்கேற்குமாறு ஊக்குவித்தமை எடுத்துக்காட்டத்தக்கதாகும். இந்த தொழில் கண்காட்சி பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நடைமுறை வேலை உலகிற்கான வாய்ப்புகளைத் திறக்கும் என்று நம்பப்படுகிறது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டுதலில் சுகாதார சேவைகள் பணிமனையின் MCH பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியினால் ஒருங்கிணைக்கப்பட்ட தீகவாபி பிரதேச தாய் ஆதரவு குழு தேர்ந்தெடுக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவர்களது கணவர்களுக்கான போஷாக்கு உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.

ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தின் முதன்மை நோக்கம் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதை உறுதி செய்வதாகும். மொத்தம் 21 கர்ப்பிணித் தாய்மார்கள் தங்கள் குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவைகளின் அடிப்படையில் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். கர்ப்ப காலத்தில் தங்கள் மனைவிகளை ஆதரிப்பதில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரித்து, அவர்களின் கணவர்களும் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அவர்களது கணவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டன. அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் உட்பட கர்ப்பிணிப் பெண்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உணவுப் பொருட்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும், பிரசவத்திற்குத் தேவையான கருவிகள் மற்றும் பொருட்களும் பங்கேற்ற தாய்மார்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.

இந்த முன்முயற்சி ஆரோக்கியமான கர்ப்பத்தை ஊக்குவிப்பதும், பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களின் அபாயத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சரியான ஊட்டச்சத்து மற்றும் தேவையான கருவிகள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், தீகவாபி பிரிவில் தாய் மற்றும் குழந்தை சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

 


பாறுக் ஷிஹான்


வீதியால் சென்றவர் மீது வெட்டு-சந்தேக நபர் ஒருவர் காயம் மற்றுமொருவர்  தலைமறைவு -பொலிஸ் விசாரணை முன்னெடுப்பு 

மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைது  செய்ய  கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இன்று காலை  மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர்   மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன் போது இச்சம்பவத்தில் 41 வயது மதிக்கத்தக்க  இஸ்மாலெப்பை சிறாஜ்டீன் என்ற மேசன் வேலை செய்யும்   குடும்பஸ்தரே  காயமடைந்துள்ள நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பதில்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்   குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியுமான  பிரதம பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பின்னணி

இரண்டாவது திருமணத்தில் இணைந்த ஒருவர் அவரது மனைவிக்கு தினம் தோறும் தொந்தரவு செய்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து இத்தொந்தரவு செயற்பாடு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்  தனது சகோதர்களிடம் முறையிட்டிருந்தார்.இந்நிலையில் சகோதரிக்கு தொந்தரவு செய்து வந்த மச்சானை இரு சகோதரர்களும் வீதியில் இடைமறித்து  தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பில் மனைவி தரப்பிலும் கல்முனை தலைமையக பொலிஸ்  நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கானவரும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டு தலைமைறைவான மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய கல்முனை தலைமையக  பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.