Showing posts with label Eastern. Show all posts

 

 


இன்று மாலை வேளையில் ஏற்பட்ட சீரற்ற வாநிலையினால் பலத்த மழையுடன் கூடிய காற்று, அக்கரைப்பற்றிலும் வீசியிருந்தது.  சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 

அக்கரைப்பற்ற அஸ்ஸராஜ் மகாவித்தியாலயத்தின் பின் புறமுள்ள வாகன தரிப்பிடக் கூரையானது, காற்றில் அள்ளிச் செல்லப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதே வேளை, மரம் ஒன்று மின் கம்பியில் வீழ்ந்துள்ளது.தற்சமயம். இங்கு மின்தடை. ஏற்பட்டுள்ளது.
.

 


மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சிவம் பாக்கியநாதன், SJB உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  


பாறுக் ஷிஹான்


சாய்ந்தமருது நகர சபை விடயத்தில்  தடுத்தவர் முன்னாள் எம்.பி ஹரீஸூம் ஒருவர்.அதுமட்டுமல்ல ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களும் எதிராகவே செயற்பட்டனர்.என்னை தவிர அனைவரும் இவ்விடயத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர் என  ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. எஹியாகான்  தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் திங்கட்கிழை(9) இரவு  நடைபெற்ற விசேட  செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர்


சாய்ந்தமருது நகர சபை விடயத்தில்  தடுத்தவர் முன்னாள் எம்.பி ஹரீஸூம் ஒருவர்.அதுமட்டுமல்ல ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களும் எதிராகவே செயற்பட்டனர்.என்னை தவிர அனைவரும் இவ்விடயத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.வெளியிடங்களில் பல்வேறு மாயைகளை காட்டிவிட்டு உள்ளக கலந்துரையாடல்கள் கூட்டங்களில் நகர சபையினை சாய்ந்தமருது மக்களிற்கு கொடுக்கக்கூடாது என்று கூறி வந்தார்கள்.அதாவது கொடுத்தால் பிரிந்துவிடும் கொடுக்க கூடாது அது போய்விடும் விற்கப்பட்டு விடும்.இவ்வாறு பல்வேறு கதைகளை கட்டிவிட்டார்கள்.

முன்னாள் எம்.பி ஹரீஸ் சாய்ந்தமருது நகர சபையினை பிரித்து கொடுத்தால் கல்முனை பறிபோய்விடும் என்று நினைத்தார்.அது பொய்யான விடயம்.இவருடன் இணைந்து பல உறுப்பினர்கள் இவ்விடயத்தில் எதிராகவே இருந்தார்கள்.இவ்விடயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்ட பள்ளிவாசல் தலைவரது கையையும் தட்டிவிட்டு அவமானப்படுத்தினார்கள்.நான் கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் பள்ளிவாசல் தலைவரை அழைத்து சம்பந்தப்பட்ட அவர்களுடன் சந்திப்பினை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றேன்.

அவர்கள் அச்சபையினை கொடுத்திருக்கலாம்.ஆனால் இவர்கள் திட்டமிட்டு தடுத்தார்கள்.எனவே தான் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸை தவிர  எவரும் சாய்ந்தமருது நகர சபை விடயத்தை   தடுக்கவில்லை என்பதை தெளிவாக என்னால் கூற முடியும். என்றார்.
 





 தேசிய மக்கள் சக்தியின் மூன்று பெண் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்


காத்தான்குடி நகர சபைக்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்கள் மூவர் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  கந்தசாமி பிரபு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.


காத்தான்குடி நகர சபைக்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களான

செல்வி ARF.மர்வாஹ். ஜனாபா அமுனா சிபான், ஜனாபா M.M.ஆரிபா உம்மா ஆகியோரே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.


இதில் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் நசீர் உட்பட அதன் முக்கியஸ்தர் பலரும் கலந்து கொண்டனர்.


காத்தான்குடி நகர சபைத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. அதற்கு மூன்று பெண் உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எம்.எஸ்.எம்.நூர்தீன்

 


(வி.ரி.சகாதேவராஜா)


திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்திக்
குழு உறுப்பினர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி ஷஹிலா இஸ்ஸதீனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இச் சந்திப்பு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  அலுவலகத்திலே நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதன்போது திருக்கோவில் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் அபிவிருத்தி குழுவினர் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

  தற்போது திறப்பதற்கு தயார்நிலையில் உள்ள  வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தை திறந்து வைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.

அதேவேளை, இயன் மருத்துவப் பிரிவு திறக்கின்ற தினம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

 பசற்சிகிச்சை பிரிவானது தொடர்ந்து நீண்ட காலமாக வைத்தியர் வராமையினால் மூடிக் கிடப்பதனையும் மற்றும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பான விடயங்களையும் இக்கலந்துரையாடலின்  போது பேசப்பட்டது.

 குறிப்பாக அண்மையில் வழங்கப்பட்ட தாதிய நியமனத்திலே தமது வைத்தியசாலைக்கு ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை, இருப்பினும் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிபுரையின் பேரிலே மூன்று தாதிய உத்தியோகத்தர்கள் திருக்கோவில் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் . எனினும் அவர்களை திருக்கோவில் வைத்தியசாலையில் தொடர்ந்து பணியாற்ற நியமிக்கப்பட   வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர் .

அதற்கு அமைவாகசெய்து தருவதாக அவர் உறுதியளித்தார்.

சந்திப்பு திருப்தி அளித்ததாக அபிவிருத்தி குழு உறுப்பினர் கண். இராஜரெத்தினம் தெரிவித்தார்.

 


உலக  சுற்றாடல் தினநிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் ஏற்பாட்டில்  பிரதேச செயலாளர்  தலைமையில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது....


ஜே.கே.யதுர்ஷன்..


 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உலக  சுற்றாடல் தின  முன்னிட்டு   திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச  செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பலன் தரும்  மரக்கன்றுகள் நடுகை  நிகழ்வும் இடம்பெற்றது....


 இன் நிகழ்வில் பொலித்தின் பிளாஷ்ரிக் பாவனைகள் கட்டுப்படுத்தல்  பற்றி விழிப்புணர்வும்  சுற்றுச்சுழல் பாதுகாப்பு ,சுற்றாடல் தினம்  பற்றிய உரைகளும் இடம்பெற்றது....



 இவ் நிகழ்வில் திருங்கோவில் விநாயகபுரம் சிவன் ஆலய பிரதம குரு   பிரதேச செயலக உதவித்திட்ட மிடல் பணிப்பாளர் மற்றும் கிராம  சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்  கிராம அபிவிருத்தியோத்தர்கள் திருக்கோவில் பொலிஸ்நிலைய உத்தியோத்தர் மற்றும்  விளையாட்டுகழக உறுப்பினர்கள்  பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்....



 நூருல் ஹுதா உமர்


சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை மையமாக கொண்டு டயகோணியா மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி என்பனவற்றின் அனுசரணையில் இன்று ஐந்தாம் திகதி விழிப்பூட்டல் ஊர்வலமும், கருத்தரங்கும் கல்முனையில் நடைபெற்றது.

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.ஏ. றிசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.எல்.எம். முதர்ரீஸ், வலய ஆணையாளர் எம்.எம். சியாம், சுற்றாடல் அதிகார சபை உயர் அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னோடி மாணவர்கள், கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். 

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயம், மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயம், கல்முனை ஆர்.கே.எம். வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்- அக்ஸா மகா வித்தியாலயம், சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயம் ஆகியவற்றின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஏனைய பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்கள் போன்றோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவது, அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமான விடயங்கள் தொடர்பான விடயங்களை கருத்தரங்கின் வளவாளர் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப்பணிப்பாளர் எம்.எ.சி.எம். றியாஸ் நிகழ்த்தினார்.

மேலும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மாவட்ட இணைப்பாளர் யூ.எல். ஹபீலா உட்பட முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 


 பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டத்தில் 900 Million  நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக 'நீர்ப்பாசனத்தின் மகத்துவம் எமது உரிமை' எனும் தொனிப்பொருளிற்கமைய தோழர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின் சிந்தனையில் இன்று (05) உத்தியபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது விவசாயம் கால்நடை காணி நீர்ப்பாசனம் அமைச்சர்  கே.டி லால்காந்த , கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்  வசந்த பியதிஸ்ஸ , அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தின் அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர்  ஏ.ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபயவிக்ரம, அம்பாறை மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் அம்பாறை மாவட்ட விவசாய சங்கத்தினர்கள், அம்பாறை மாவட்ட விவசாயிகள் அத்துடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

காலநிலை மாற்றம் மற்றும் ஒழுங்கற்று மனித செயற்பாடுகள் காரணமாக கல்லோயா ஆற்றின் பள்ளத்தாக்குகளில் சிறு மழை பொழிந்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது இதனால் மாவட்ட விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்து விளைச்சலிலும் குறைவினை ஏற்படுத்தியுள்ளதோடு இவ் இழப்பினை ஈடு செய்ய ஆண்டுதோறும் பெரும் செலவு ஏற்படுகிறது எனவே இவ்வாறான  நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்காக அரசாங்கம் ஆனது கல்லோயா மறுசீரமைத் திட்டத்தினை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


வி.சுகிர்தகுமார்                   


 திருக்கோவில் பிரதேச சபைத்தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் பதவியேற்றதன் பின்னர் இன்று முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைவாக பிளாஸ்டிக் மூலமான மாசுபடுத்தலை முடிவுக்கு கொண்டுவரல் எனும் கருப்பொருளுக்கமைய உலக சுற்றாடல் தினம் வாரத்தின் இறுதி நாளான இன்று 05ஆம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதனை முன்னிட்டு பெரிய முகத்துவாரம் களப்பினை அன்மித்த களப்பு பூங்கா மற்றும் அதனோடிணைந்;த, கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்று(05) இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில்; இடம்பெற்ற பூங்கா மற்றும் அதனோடிணைந்;த, கரையோரப் பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் பிரதேச சபை உபதவிசாளர் செயலாளர் சீ.திவாகரன் வைத்தியர் மோகனகாந்தன் பிரதேச செயலக அதிகாரிகள் பொலிசார் பிரதேச சபை ஊழியர்கள் அரச திணைக்களங்கள், பொது சமூக நலன் தன்னார்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்களால்; பாவனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கழிவுகளாக ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் யாவும் அகற்றப்பட்டுச் சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அகற்றப்பட்ட கழிவுப்பொருட்கள் பிரதேச சபை வாகனங்களின் உதவியுடன் கழிவுகள் அகற்றப்பட்டன.
இதேநேரம் களப்பின் கரையோரங்களில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதன் பின்னராக கருத்து தெரிவித்த தவிசாளர் புவி வெப்பமாதலை தடுக்கும் நடவடிக்கையின் பிரகாரம் பிளாஸ்டிக் பாவனையை தடுத்து சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையோடு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இதற்காக அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 


மட்டு.போதனா வைத்தியசாலையின் நிரந்தர திடீர் மரண விசாரணையாளராக ஏறாவூரைச்சேர்ந்த எம்.எஸ்.எம்.நஸீர் நியமனம் 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மற்றொரு நிரந்தர திடீர் மரண விசாரணையாளராக ஏறாவூரைச்சேர்ந்த எம்.எஸ்.எம்.நஸீர்  நியமிக்கப்பட்டுள்ளார். 


கடந்த 01-06-2025ம் திகதியிலிருந்து நீதியமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த இவர், நேற்றைய தினம் (04-06-2025) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி முன்னிலையில் போதனா வைத்தியசாலைக்கான மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

 


நூருல் ஹுதா உமர்


Clean SriLanka வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை மற்றும்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகத்தினால் சர்வதேச சுற்றாடல் தினம் வெற்றிகரமாக இன்று 2025.06.04 முன்னெடுக்கப்பட்டது.

"நில மீட்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான தாங்கு திறன்" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருட  உலக சுற்றாடல்  தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்கமைய ஆற்றங்கரை சூழலை சுத்தம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்திற்கு உட்பட்ட ஆற்றங்கரை பிரதேசத்தை சுத்தம் செய்து 150  வேப்ப மரக்கன்றுகள்  நடும் விசேட வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.ராபி, சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஹ்பிகா மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் ஆகியோர்களின் தலைமை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுற்றுச்சூழல் பாதுகாப்பு  உத்தியோகத்தர் திருமதி புஷ்ப ரஜினி, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், இளைஞர் விளையாட்டு கழக அமைப்புக்கள், மாணவர்கள், சுற்றாடல் முன்னோடி கழகம் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் நடைபவனி ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர். இந்த நடைபவனி ஆனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்களின் பொறுப்புணர்வை வளர்க்கவும் நோக்கமாகக் கொண்டது.


கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் மட்டுநகரில் ஸ்தாபிதம்!
பொறுப்பதிகாரியாக IP மேனன் நியமனம்!
( வி.ரி.சகாதேவரிஜா)

கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பில்  உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.

 பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீயசூரயவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 
நிகழ்வில் கிழக்குமாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபர்  வர்ண ஜெசுந்தரவும் கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாண குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் பதில் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டார்.

காரைதீவைச் சேர்ந்த பொலிஸ் மேனன் இறுதியாக மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக பணியாற்றியவராவார்.

இந்த பிரிவு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ்  செயற்படும்.

 



வி.சுகிர்தகுமார்                   


 நிதி அமைச்சின் ஊடாக வழங்கப்படுகின்ற ஆலையடிவேம்பு பிரதேச மத்தியஸ்த குழாமினருக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (04) நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மத்தியஸ்த சபையின் பயிற்றுவிப்பாளர் எம்.ஜ.எம்.ஆசாத் மற்றும் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா மத்தியஸ்த சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள தேசமான்ய ஸ்ரீ மணிவண்ணன் உப தவிசாளர் ஜெ.ஜெய்கணேஸ் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.லாவண்யா
உள்ளி;ட்ட நியமனம் பெற்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மத்தியஸ்த சபையினுடைய கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் உரையாற்றியதுடன் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
இதேநேரம் மத்தியஸ்த சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் தேசிய ரீதியில் வருடத்திற்கு இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிணக்குகள் தீர்க்கப்படுவதாகவும் இதனால் அரசாங்கம் சுமார் 2000 ஆயிரம் பில்லியன் ரூபாவினை மீதப்படுத்தி அதனூடாக பல்வேறு சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் மத்தியஸ்த சபையின் பயிற்றுவிப்பாளர் எம்.ஜ.எம்.ஆசாத் கூறினார்.
மேலும் நியமனங்கள் யாவும் எவ்வித தடைகளுமின்றி நேர்மையான முறையில் பரீட்சைகள் இடம்பெற்று அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேநேரம் புதிதிதாக நியனம் பெற்றவர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அனைவரும் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டர்.
புதிய தவிசாளர் தனது கன்னி உரையில் மிக வினைத்திறானான பக்கச்சார்பின்றிய சேவையினை மக்களுக்கு வழங்குவோம் என உறுதியளித்தார்.




(வி.ரி.சகாதேவராஜா)

புனித ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரும் சம்மாந்துறை வலய முன்னாள் சமாதான இணைப்பாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான ஆதம்பாவா அச்சிமொகமட்( வயது 65) மதீனாவில் சுகயீனமுற்று இன்று (2) திங்கட்கிழமை  திடீரென காலமானார்.

நைfப் என அன்பாக அழைக்கப்பட்ட அவர் தம் மனைவி எம்.ஜ.தஸ்லிமாவுடன் ஹஜ் கடமைக்காக மக்காசென்றிருந்த வேளையில் மதீனாவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவரது பூதவுடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கல்விப் பணியில் 29 வருடகாலம் நிறைபணியாற்றிய சம்மாந்துறை வலய சமாதானக்கல்வி உத்தியோகத்தரான ஆதம்பாவா அச்சிமொகமட் 2020 இல் தனது 60வது வயதில் ஓய்வுபெற்றார்.




இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் சபையின் உபதவிசாளராகவிருந்த வெ.ஜெயச்சந்திரன் இராஜினாமாச்செய்ததையடுத்து சபையின் உபதவிசாளராக சேவையாற்றிவந்தார்.

சம்மாந்துறை கபூரியா பள்ளிவாசல் தலைவராகவும் பொன்னன்வெளி விவசாயஅமைப்பின் தலைவராகவும் சம்மாந்துறை பொலிஸின் சிவிலபாதுகாப்புக்குழுத்தலைவராகவும் மேலும் பல அமைப்புகளில் பதவிகளை வகித்துவந்த முக்கியஸ்தராவார்.


 சேவையாற்றிவந்தார்.


சம்மாந்துறை கபூரியா பள்ளிவாசல் தலைவராகவும் பொன்னன்வெளி விவசாயஅமைப்பின் தலைவராகவும் சம்மாந்துறை பொலிஸின் சிவிலபாதுகாப்புக்குழுத்தலைவராகவும் மேலும் பல அமைப்புகளில் பதவிகளை வகித்துவந்த முக்கியஸ்தராவார்.




மக்கள்பணியாற்றினார். இரண்டாவது தடவையும் அவர் தெரிவாகினார்.


இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் சபையின் உபதவிசாளராகவிருந்த வெ.ஜெயச்சந்திரன் இராஜினாமாச்செய்ததையடுத்து சபையின் உபதவிசாளராக சேவையாற்றிவந்தார்.

சம்மாந்துறை கபூரியா பள்ளிவாசல் தலைவராகவும் பொன்னன்வெளி விவசாயஅமைப்பின் தலைவராகவும் சம்மாந்துறை பொலிஸின் சிவிலபாதுகாப்புக்குழுத்தலைவராகவும் மேலும் பல அமைப்புகளில் பதவிகளை வகித்துவந்த முக்கியஸ்தராவார்.


 ( வி.ரி.சகாதேவராஜா )

திருக்கோவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் நியமிக்கப்பட்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டுள்ளார்.

உதவி தவிசாளராக தங்கராசா வரதராஜன்
நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் போட்டியின்றி அறுதிப் பெரும்பான்மையுடன் தெரிவான  ஒரேயொரு தவிசாளர் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் ஆவார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனியொரு சுயேட்சை அணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது திருக்கோவில் பிரதேச சபையில் மாத்திரமே என்பது இவ்வண் குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் 
சுயேட்சைக்குழு ஒன்றின் அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார்  தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்திருந்தது.

மொத்தம் 10 வட்டாரங்களில் 08 வட்டாரங்களில்  சுயேட்சை குழு அமோக வெற்றியை ஈட்டியிருந்தது.

வரலாற்றில் முதல் முறையாக திருக்கோவில் பிரதேச சபை சுயேச்சை அணி வசமாகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது 

திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சை அணி ஒன்று 08 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 06 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேச்சை அணி தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தமை தெரிந்ததே..

16 ஆசனங்களில் 50 வீதமான 08 ஆசனங்களை சசிகுமார் தலைமையிலான சுயேச்சை அணி பெற்றிருந்தது.

எனவே அங்கு  சுயேட்சை அணித் தலைவரான பிரபல தொழிலதிபரும்,  கல்முனை ரோட்டரி கழக முன்னாள் தலைவருமான  சுந்தரலிங்கம் சசிகுமார் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



வி.சுகிர்தகுமார்                


 சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அலுவலக தளபாடங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் வடக்கு வலய பிரிவு உத்தியோகத்தர்களுக்கான அலுவலக தளபாடங்கள் இன்று(29) கையளிக்கப்பட்டன.
தலைமைப்பீட முகாமையாளர் கே.நேசராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் ஆகியோர் கலந்து கொண்டு தளபாடங்களை கையளித்தனர்.
நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் கமலபிரபா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது 11 பிரிவுகளுக்குமான சமுர்த்தி வங்கிச்சங்கத்தின் பொதுநிதியக்கணக்கின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட அலுவலக உபகரணங்;கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவு கையாளும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு தைபொய்ட் (Typhoid) தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று 2025.05.28 இடம் பெற்றது. 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் 37 நபர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டனர்
   
தைபொய்ட் (Typhoid) என்பது salmonella என்னும் ஒரு வகை பக்டீரியாவால் பரவும் ஒரு தீவிரமான தொற்று நோயாகும். இது மாசுபட்ட உணவு மற்றும் குடிநீரினால் பரவுவதுடன் இத் தொற்றினால் உலகலாவிய ரீதியில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.

இந் நோயின் அறிகுறிகளாக நீண்ட நாட்களாக காய்ச்சல், வயிற்று வலி, ஈரல் மற்றும் முதுகு வலி, வாந்தி மனச் சோர்வு, குடல் சீர் கேடுகள் என்பன ஏற்படும். 

எனவே இதிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் ஒரே வழி அனைத்து உணவு கையாளும் நிறுவனங்களிலும் பணிபுரியும் நபர்களும் தடுப்பூசி ஏற்றி இத்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதாகும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். 

 வி.சுகிர்தகுமார்         


 ஆலையடிவேம்பில் அதிபர் ஆசிரியர் தாக்கப்பட்டமை தொடர்பில் திருக்கோவில் பிரதேச சபையின் எதிர்கால தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தனது கண்டணத்தை தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.
க.பொ.தராதர மற்றும் உயர்தர மாணவ்hகளின் கற்றை பெறுபேறுகளிலும் தாக்கத்தை செலுத்தும் என குறிப்பிட்டார்.
இத்தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக பொலிசார் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இல்லாது விடின் எதிர்காலத்தில் இதுபோன்ற இன்னும் பல சம்பவங்கள் இடம்பெறலாம் எனவும் கூறிய அவர் சம்பவம் தொடர்பில் மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கும் கடிதம் மூலம் அறிவித்து தக்க நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.




திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகே பாரிய விபத்து. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.

 



பாறுக் ஷிஹான் 


சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சம்மாந்துறை சுகாதார வைத்திய  அதிகாரி (MOH) குழுவினரால் வியாழக்கிழமை(22) முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில்   கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர்   வழிகாட்டல்களுக்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் தலைமையில் சம்மாந்துறை  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  பொலிஸாரின்  போசாக்கு  அளவிடப்பட்டு உடற் திணிவுச் சுட்டெண் (BMI)கணிப்பு ,குருதி அழுத்தம்,இரத்த சீனி அளவு,இடுப்புச் சுற்றளவு, உயரத்திற்கேற்ற நிறையின் அவசியம்    தொடர்பான கருத்தாடல்களுடன் உத்தியோகத்தர்களுக்கு  தனிப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில்  மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்    பொதுச்சுகாதார பரிசோதகர்   சுகாதார ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.