Showing posts with label Eastern. Show all posts

 


வாழ்த்துக்கள் வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ்


ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக எதிர்வரும் 11.05.2026 அன்று BH/Mahaoya    வைத்தியசாலையில் பதவியேற்பதற்கான பெயர் பட்டியல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகங்கள் அமைச்சால் இன்றையதினம் (08) வெளியிடப்பட்டுள்ளது.  


எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக பதவியேற்கவுள்ள வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக எதிர்வரும் 11.05.2026 அன்று BH/Mahaoya    வைத்தியசாலையில் பதவியேற்பதற்கான பெயர் பட்டியல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகங்கள் அமைச்சால் இன்றையதினம் (08) வெளியிடப்பட்டுள்ளது.  


 மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக பதவியேற்கவுள்ள வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்       

 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வருமானம் குறைந்த வீடற்ற 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக மீள்குடியேற்ற அமைச்சினால் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கண்ணகிகிராமத்தில் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்;டு திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக கண்ணகிகிராமத்தில் மேலும் 4 வீடுகள் இன்று (08) திறந்து வைக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு இணைப்பாளரும் பிரதேச நபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் இராஜேந்திரன் உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நீண்டகாலமாக வீடுகள் இன்றி மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் அரசுக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.

 


🟡 காத்தான்குடி கடற்கரை வீதியில் ஒற்றைநாள், இரட்டை நாள் முறையினை நடைமுறைப்படுத்த தீர்மானம்


டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் 06.05.2026 அன்று நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் பீச் வே மண்டபத்தில் நடைபெற்றது.


இதன்போது போக்குவரத்து நடைமுறைகள், வர்த்தக நிலையங்களை ஒழுங்கு படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் நடாத்தப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


01. டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் ஒற்றைநாள், இரட்டை நாள் முறையினை நடைமுறைப்படுத்துதல்.


2. Transport வாகனங்கள் காலை 8 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை மாத்திரம் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் பொருட்களை ஏற்றி இறக்க அனுமதி.


3. வியாபார நிலையங்களுக்கு முன்னால் உரிமையாளரின் ஒரு மோட்டார் சைக்கிள் மாத்திரம் நிறுத்த அனுமதி.


4. Gas Company வாகனங்கள் மாற்றுப்பதையாக முதியோர் இல்ல வீதியினை பயன்படுத்தல்.

ஆகிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேற்படி நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், செயலாளர், கணக்காளர், உத்தியோகத்தர்கள், போக்குவரத்து பொலிஸார், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள்,  காத்தான்குடி ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள்,

காத்தான்குடி வர்த்தக சங்கத்தினுடைய பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.


 “ஒலுவில் துறைமுகத்தின் தாக்கம்: அம்பாறை கரையோரம் கடலில் கரைகிறது!”

தவறான அபிவிருத்தித் திட்டங்களால் பல தலைமுறைகள் பாதிப்பு – மக்கள் வேதனை


நூருல் ஹுதா உமர் 


அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் அச்சமும் நிலவி வருகிறது. குறிப்பாக ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர் கடலின் இயல்பான நீரோட்ட அமைப்புகள் மாற்றமடைந்ததன் விளைவாக கரையோர நிலப்பரப்புகள் வேகமாக கடலால் விழுங்கப்பட்டு வருவதாக மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்படும் காலகட்டத்திலேயே பல கடலியல் நிபுணர்களும், மீனவ சமூக பிரதிநிதிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்காலத்தில் கடுமையான கரையரிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அரசியல் அதிகாரமும், ஒப்பந்த நிறுவனங்களின் பொருளாதார நோக்கங்களும் அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்ததாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


தற்போது ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் கடல் வேகமாக உள்வாங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மருதமுனை, பாண்டிருப்பு, கல்லாறு போன்ற பகுதிகளும் கடலரிப்பின் ஆபத்தில் சிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


மாளிகைக்காடு பகுதியில் அமைந்திருந்த மையவாடி முழுமையாக கடலுக்குள் சென்று அழிந்துள்ளதாகவும், பல இடங்களில் வீடுகள், மரங்கள், மக்கள் பயன்படுத்திய கடற்கரைப் பகுதிகள் ஆகியவை கடலால் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் வலை உலர்த்திய மணற்பரப்புகள் கூட இன்று கடலின் பகுதியாக மாறியுள்ளன.


“ஒரு துறைமுகத்தை அமைப்பது மட்டுமே அபிவிருத்தி அல்ல; அது மனித வாழ்வையும் இயற்கை சமநிலையையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


இந்நிலையில், கடந்தகாலத்தில் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப ஆய்வுகளை புறக்கணித்த அதிகாரிகள் மற்றும் நிர்மாணப் பொறுப்பை ஏற்ற நிறுவனங்கள் ஆகியோர் இந்த சூழ்நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அம்பாறை மாவட்டத்தில் தற்போது நடைபெறுவது சாதாரண கரையரிப்பு அல்ல; தவறான அபிவிருத்தித் திட்டங்கள் ஒரு சமூகத்தின் வாழ்வுரிமை, பாரம்பரியம் மற்றும் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான நேரடி எடுத்துக்காட்டாக இது மாறியுள்ளது என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 


இலங்கை உயர்நீதிமன்றம், சாய்ந்தமருது நகர சபை சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக நடைமுறையில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.  


கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகியவற்றை வட்டாரங்களாகப் பிரிப்பதற்காக இரண்டு மாதங்களுக்குள் தேசிய எல்லை நிர்ணயக் குழுவை நிறுவுமாறு உள்ளூராட்சி அமைச்சர் பணிக்கப்பட்டார்.  


எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டவுடன், கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகிய இரண்டிற்கும் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.




 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி தனது சேவைகளை நவீனமயமாக்கும் முக்கிய முன்னேற்றமாக, டிஜிட்டல் வங்கிச் சேவையை (Online Banking) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வு நேற்று (04) வங்கிக் கிளையில் வங்கி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய ஒன்லைன் வங்கிச் சேவையை திறந்து வைத்தார்.

நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் கவுன்சில் தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற கல்முனை ஸாஹிறாக் கல்லூரி அதிபர் ஏ. பீர் முஹம்மட், சாய்ந்தமருது அரச ஓய்வூதிய சங்கத் தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் எம்.ஐ.எம். இஸ்மாயில், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் எஸ். றிபாயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் உதவி முகாமையாளர்கள், சமூக அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் வங்கி பணியாளர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி தனது 25ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் இந்நவீன சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு விரைவான, பாதுகாப்பான மற்றும் எளிதான வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய வங்கி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத், “சமுர்த்தி வங்கி சேவைகளை முழுமையான டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு வருவது எமது நீண்டநாள் இலட்சியம். இன்று அது நனவாகியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் வங்கிச் சேவைகளைப் பெற முடியும்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த புதிய ஒன்லைன் சேவை வங்கியின் சேவை தரத்தையும் வேகத்தையும் உயர்த்துவதோடு, மக்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். கிராமப்புற மக்களுக்கும் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான வங்கிச் சேவைகளை கொண்டு சேர்க்கும் முக்கிய முயற்சியாக இதை கருதுகின்றோம் என்றும் தெரிவித்தார்.

இந்த டிஜிட்டல் மாற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் இந்நவீன முயற்சி, கிராமப்புற வங்கிச் சேவைகளை டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு செல்லும் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளதாக சமூகத்தில் பாராட்டப்படுகிறது.

 


(Rep/OluvilMedia)

மின்சாரம் தாக்கியதில் ஒலுவிலைச் சேர்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு


ஒலுவில் - 06 ம் பிரிவைச் சேர்த்த மர்ஹும் லத்தீப் (வண்டிக்கார)  அவர்களின் மகன் உசாமா எனும் 20 வயது இளைஞன் வேலைத்தளத்தின் மின்சார பயன்பாட்டின் போது மின்சாரம் தாக்கியதில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.


இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்.


தற்போது நிந்தவூர் வைத்தியசாலையில் உள்ள ஜனாஸாவின், நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

 


நூருல் ஹுதா உமர் 


பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் கடந்த 30.04.2026 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களின் விவகாரம் தொடர்பில் இன்று (05) மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்ட இளைஞர்களின் நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மௌலவி முஹம்மத் மிப்லால், “இவ்வாறான விவகாரங்களை அரச இயந்திரம் கையாளும் முறை குறித்து ஆளுநர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், பொலிஸார் முறையான விதத்தில் செயல்பட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக எங்களிடம் தெரிவித்துள்ளார்” என்றார்.

மேலும், சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தனது அறிக்கையை ஆளுநர் பார்வையிட்டதையடுத்து, இவ்விவகாரத்தில் அவர் தனிப்பட்ட கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டக்கல ஆகியோருடனும் ஆளுநர் கலந்துரையாடியுள்ளதாகவும், சம்பவம் குறித்து தாமும் கவலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டதாக மிப்லால் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், உழ்ஹிய்யா தொடர்பான விடயங்களும், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்      

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைய தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் 11 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் ரதீஸ் உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 10 இலட்சம் ஒதுக்கீட்டுடன் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதேநேரம் இங்கு கருத்து வெளியிட்ட மக்கள் இவ்வீட்டுத்திட்டத்தினை வழங்கிய அரசுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார்.

 


நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் மே மாதக்கூட்டமும், அதனுடன் இணைந்த விசேட கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (03) காலை 10.00 மணிக்கு சம்மாந்துறையில் அமைந்துள்ள பிக் செப் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எல். அப்துல் சலீம் தலைமையில் நடைபெற்றதுடன், செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஜே.எம். நவாஸ் அவர்களின் ஒழுங்கமைப்பில் நிகழ்வுகள் ஒழுங்காக முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வின் ஆரம்ப கட்டமாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல். ரியாஸ் ஆதம் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நினைவுச்சின்னமும் பொன்னாடையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தங்களது சட்டத் தொழிலில் சுமார் 10 ஆண்டுகளை நிறைவு செய்து சிரேஷ்ட நிலையை அடைந்த மூன்று சட்டத்தரணிகள் – ஏ.ஜே.எம். நவாஸ், யூ.எல்.எம். சமீம் மற்றும் வி.ரி. ஹசீனா – ஆகியோர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் கௌரவப்பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இக்கௌரவிப்பு நிகழ்வுகள் அனைத்தும் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாதாந்திர கூட்டம், தலைவர் கே.எல். அப்துல் சலீம் தலைமையில் பகற்போசனத்துடன் நடைபெற்றது. கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் சங்கத்தின் பொருளாளர் யூ.எல்.சிபானா உள்ளிட்டவர்களுடன் சிரேஷ்ட சட்டத்தரணிகளான முன்னாள் தலைவர் எஸ்.எம்.எம்.முஸ்தபா, சங்கத்தின் தற்போதைய உப தலைவர் ஏ.எம்.நசீல், வை.எம்.அன்வர் சியாத், ஏ.எச் அறூஸ், எம்.எப்.சாமிலா, ஏ.எல் றியாஸ் ஆதம், எம்.எம்.சஹுபீர் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் என ஏராளமான சட்டத்தரணிகள் பங்குபற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 



நூருல் ஹுதா உமர்


பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை (30.04.2026) அன்று கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் இனம், பிரதேச வேறுபாடுகள் பாராமல் மே 06ம் திகதி நீதிமன்றுக்கு சமூகமளித்து அந்த  இளைஞர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

நாளுக்கு நாள் முஸ்லிங்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலை இலங்கையில் உருவாகி வருகிறது. முஸ்லிம் பெயர் தாங்கியவர்களாக, அடையாளம் தாங்கியவர்களாக இருந்தால் அரச பாதுகாப்பு இயந்திரம் உற்றுநோக்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள் பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்திற்கு கடந்த வாரம் சுற்றுலா சென்று அங்கு உணவருந்தவும், தங்குவதற்கும் நல்ல ஹோட்டல் தொடர்பில் விசாரித்தபோது பிரதேசவாசிகள் இஸ்ரேல் நாட்டவர்கள் தங்கும் பிரதேசம் நல்ல இடம் என்றும் அங்கே தான் நல்ல உயர்ரக ஹோட்டல்கள் இருப்பதாகவும் பரிந்துரைத்துள்ளனர்.

அதனடிப்படையில் அங்கு செல்ல முச்சக்கர வண்டி சாரதியிடம் கோரிய போதே பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை (30.04.2026) அன்று அவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா செல்லும் எல்லோரும் ஒழுங்கான உணவகங்களை சுற்றுலா தளங்களில் தேடுவது வழமையே. அதற்காக கைது செய்வதென்பது எந்த வகையில் நியாயம்?

இனிவரும் காலங்களில் உதிர்ந்து விழும் இஸ்ரேல் நாட்டவர்களின் முடியை முஸ்லிங்கள் மிதித்தால் கூட பாதுகாப்பு தரப்பு கைது செய்வார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த இளைஞர்களுக்கு உதவிய அவர்களின் குடும்பத்தினரை கூட தீவிரமாக பாதுகாப்பு துறையினர் கண்காணிக்கும் நிலை இருக்கிறது. இஸ்ரேல் நாட்டவர்களினால் நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை விட அவர்களின் பாதுகாப்புக்கே அரசாங்கம் அதிக நிதியை செலவிடவேண்டியிருக்கிறது.

பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களும் நீதித்துறை சரியாக செயற்பட்டமையால் 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் வழக்கு விசாரணை மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது கிழக்கில் உள்ள 100 கணக்கான சட்டத்தரணிகள் வேறுபாடுகள் பாராமல் நீதிமன்றுக்கு சமூகமளித்து சட்டத்தை காத்து மனித உரிமையை நிலைநாட்டி அந்த  இளைஞர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் பாராளுமன்ற அமர்வுகளில் இந்த அநீதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படியான நிலை தொடர்ந்தால் வெள்ளையர்கள் முதல் இப்போதைய ஆட்சி வரை நாட்டுக்கு விசுவாசமாக வாழும் முஸ்லிங்கள் இலங்கையில் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ்வதில் பாரிய சவால் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலையில் மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு வுழு செய்வதற்கான நீர் தொகுதி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட இந்த நீர் வசதி, மாணவர்களின் நாளாந்த பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, வுழு நீர் தொகுதியை திறந்து வைத்து மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரனீஸ், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பவுண்டேசனின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நீர் வசதி, மாணவர்களின் சுகாதார மற்றும் மத சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.

 


( வி.ரி.சகாதேவராஜி)


இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (02) சனிக்கிழமை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனின் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

​​இதன் போது வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து உயர்ஸ்தானிகருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புக்களால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல் தீர்வு விவகாரத்தில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும், தற்போதைய கள நிலவரங்களையும் நேரில் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர் அவர்கள், தமிழ் மக்களின் ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் மிகுந்த அக்கறையுடன் செயற்படும் என உறுதியளித்தார்.

​இச்சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.ஶ்ரீநேசன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை விரிவாக முன்வைத்திருந்தனர்.

 


நூருல் ஹுதா உமர்


 சாய்ந்தமருது பகுதியில் இரண்டாவது முறையாக மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்த மனிதநேய நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

Myown Education Aid சமூக சேவை பிரிவும் United Power House அமைப்பும் முழுமையான அனுசரணையளித்ததுடன், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து இந்த முகாம் ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வு இன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம் வளாகத்தில் நடைபெற்றது. Myown Education Aid சமூக சேவை அமைப்பின் தலைவர் ரிஸ்லி முஸ்தபா முகாமைத் தொடக்கி வைத்தார்.

ஆரோக்கியமான இரத்ததானிகள் இதில் பெருமளவில் கலந்து கொண்டு, உயிர்களை காப்பாற்றும் உயரிய பணியில் தங்கள் பங்களிப்பை வழங்கினர். ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்ததானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவிக்கையில், “ஒவ்வொரு இரத்ததானமும் ஒரு உயிரைக் காப்பாற்றும் சக்தி கொண்டது. சமூக ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் வலுப்படுத்தும் வகையில் அனைவரும் எதிர்கால இரத்ததான முகாம்களிலும் பங்கேற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.

மேலும், “ஒரு உயிரைக் காப்பது மனிதகுலம் முழுவதையும் காப்பதற்கு சமம்” என்ற இஸ்லாமிய போதனையை நினைவுகூர்ந்து, மனிதநேயத்தின் உயர்ந்த நோக்கில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 


கனேடிய உயர்ஸ்தானிகருடன் காரைதீவு பிரதேச தேவைகள் குறித்து தவிசாளர் பாஸ்கரன் முக்கிய கலந்துரையாடல்


நூருல் ஹுதா உமர் 


இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டினை, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் இன்று ஆலையடிவேம்பில் சந்தித்து, காரைதீவு பிரதேசத்தின் அவசர தேவைகள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


இந்த சந்திப்பின் போது, பிரதேச மக்களின் அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு மேம்பாடு, வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து தவிசாளர் கவனம் செலுத்தியதாகத் தெரிய வருகிறது. குறிப்பாக, போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளில் நிலவும் சவால்கள் தொடர்பாக உயர்ஸ்தானிகரிடம் விளக்கமளிக்கப்பட்டது.


மேலும், காரைதீவு பிரதேசத்தின் நீண்டகால அபிவிருத்திக்கான திட்டங்களை முன்வைத்து, அவற்றுக்கு சர்வதேச ஒத்துழைப்பையும் தொழில்நுட்ப ஆதரவையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, பிரதேசத்தின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.


இச்சந்திப்பு, உள்ளூராட்சி நிர்வாகம் மற்றும் சர்வதேச தூதரகங்களுக்கிடையிலான நேரடி தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, வடகிழக்கு பிரதேசங்களின் மீளுருவாக்கம் மற்றும் சமநிலை அபிவிருத்தி தொடர்பாக சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கத்திற்கும் இது வழிவகுக்கும் என தவிசாளர் பாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டார். 


இந்நிகழ்வில், கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு அதிகாரி சாகித்தியனன் கணேசநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


உள்ளூராட்சி மட்டத்தில் முன்வைக்கப்படும் இத்தகைய நேரடி முயற்சிகள், மத்திய அரசியல் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நிலையான மற்றும் நீடித்த அபிவிருத்தியை உறுதி செய்ய முடியும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதேசமயம், பிரதேச மக்களின் தேவைகளை சர்வதேச மேடைகளில் முன்வைக்கும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


நூருல் ஹுதா உமர்


அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தின நிகழ்வு இன்று கல்முனை தனியார் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசாங்க ஊழியர்களின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய எஸ். லோகநாதன், நாட்டின் பொருளாதார சிக்கல்களின் பாரத்தை அரசாங்க ஊழியர்கள் மட்டுமே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஊழியர்களின் சம்பள உயர்வு, வாழ்க்கைச் செலவு ஏற்றத்திற்கேற்ப திருத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல், அரசாங்க சேவையில் நீண்டகாலமாக நிலவி வரும் பதவி உயர்வு தாமதங்கள், சேவை அமைப்பு குறைபாடுகள் மற்றும் பணிச்சுமை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியவை எனக் கூறப்பட்டது. “அரசாங்க ஊழியர்கள் நாட்டின் நிர்வாகத்தின் முதுகெலும்பாக இருப்பினும், அவர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள், சமச்சீர் சம்பள கட்டமைப்பு, வேலை பாதுகாப்பு மற்றும் தொழில்முறை மரியாதை ஆகியவற்றை உறுதி செய்ய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், எதிர்காலத்தில் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அரசாங்கத்துடன் கலந்துரையாடலுக்கு தயாராக இருப்பதுடன், தேவையானால் போராட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயக்கம் இல்லை என சங்கம் எச்சரித்துள்ளது.

மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, அரசாங்க ஊழியர்களின் தற்போதைய நிலைமை மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்போது புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. பேராளர்கள் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் பழைய நிர்வாகமே இயங்க சபை அனுமதி வழங்கியது

 ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்      



டிஜிசென் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான டிஜிட்டல் செக்குறிட்டி பயிற்சி முகாம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (30) இடம்பெற்றது.
அன்மைக்காலமாக அரச திணைக்களங்களின் தகவல்கள் மற்றும் தனிநபர் சமூக வலைத்தளங்கள் வங்கிக்கணக்குகள் மீதான ஹக்கர்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இதில் இருந்து அரச அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக்கொள்வது தொடர்பில் தெளிவூட்டும் செயலமர்வாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வளவாளர்களாக ஏ.எம்.முஜாகித் எம்.ஏ.எம்.முர்சித் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.அகீல் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இதன்போது அரச உத்தியோகத்தர்கள் இதுவரையில் தாம் எதிர்கொண்ட ஹக்கர்களின் தாக்கம் தொடர்பில் வெளிப்படுத்தினர்.
இவற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பில் வளவாளர்கள் தெளிவூட்டினர்.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்       

 அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (01) ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
உழைக்கும் மக்களின் உழைப்பாளிகள் தினமான மேதினத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் இரத்தவங்கி பிரிவின் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய இரத்ததான முகாம் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கழகத்தின் தலைவர் இன்பராஜா தலைமையில் சிரேஸ் கழக வீரர்களான கணக்காளர் புனிதராஜ் பொது கணக்காய்வு விசாரணை உத்தியோகத்தர் தர்சன் ஆகியோரின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற இரத்ததான முகாமில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்; இரத்தவங்கி பிரிவின் வைத்திய அதிகாரி பி.எம்.கவிதா தலைமையிலான வைத்திய குழுவின் கலந்து கொண்டு இரத்தம் சேமிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதில் அதிகளவான கழக அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்தானம் செய்தனர்.

 


"#மே_தினம்

#தொழிலாளர்_பெற்ற_சீதனம்'

உழைப்பின் 

உயர்வை போற்றி

பாடுபடும் 

பாட்டாளி 

வர்க்கத்தை 

மேன்மையுற செய்திட

"மே' 

தினத்தில் உறுதி ஏற்போம்!


என் இனிய

தொழிலாளர் தின

நல்வாழ்த்துகள்! 🫡👏


|| #MayDay || #மேதினம் ||

|| #LabourDay2026 ||


 அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட பல்வேறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள இரவு நேர உணவகங்களில்  பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திடீர் சோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு  தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.


கடந்த திங்கட்கிழமை (27) இரவு முதல் இவ் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அதிகாரிகளினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதன்போது இரவு நேர உணவகங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  தரமற்ற உணவுகள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன்  10 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
 
குறித்த பரிசோதனை யாவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்   ஆலோசனையின் பேரில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில்  முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையில் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா ,சம்மாந்துறை ,கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது சுமார் 42 உணவகங்கள் மற்றும் 'டேஸ்ட்' கடைகள் விரிவாகச் சோதனை செய்யப்பட்டன. குறிப்பாக உணவகங்களின் சமையலறைகள், உணவுத் தயாரிப்பு இடங்கள் மற்றும் களஞ்சிய அறைகள் ஆகியவற்றின் தூய்மை நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.