Showing posts with label Eastern. Show all posts

  (எம். என். எம். அப்ராஸ் ) 


கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் ஜம்இய்யதுல் உலமா,பொது நிறுவனங்கள் சம்மேளனம், வர்த்தக சங்கங்கள், ஊர் மக்கள் ஆகியோரின் பங்களிப்பில் கல்முனை அனர்த்த நிவாரண முகாவைத்துவ பணிமனையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வைக்கப்பட்டது.

சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட வெல்லம்பிடிய மெகடகொலன்னாவ பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் கடந்த (10) புதன்கிழமை கையளிக்கப்பட்டது. இங்கு 850 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

 இதேவேளை மேற்குறித்த நிவாரண பணியின் மற்றுமொரு ஒரு தொகுதி மல்வான ரக்ஷபான பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் கடந்த (10) புதன்கிழமை 450 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மல்வானை விதானகொடை மற்றும் காந்தியவெலவ பிரதேச மக்களுக்கான நிவாரணப் பொதிகள் விதானகொடை ஹிதாயா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் காந்தியவெலவ ஜும்ஆ மஸ்ஜித் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டது. மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (11) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. 

பொலனறுவைக்கு நிவாரணப் பொதிகள் திவுலான அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதின் ஆலோசனைகளுக்கமைய பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (11) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. பொலனறுவை மானிக்கம்பிடிய மக்களுக்கு மானிக்கம்பிடிய ஹுதா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் கிராம சேவகரின் ஆலோசனைகளுக்கமைய நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன .

மேலும் மூதூர் பால நகர் பகுதியில் ஜாமிஉல் அல்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (11) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.



 (வி.ரி.சகாதேவராஜா)


சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி   அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக இன்று (10) புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

 கவனயீர்ப்பில் சங்கத்தின் உபதலைவி கி. கலைவாணி, செயலாளர் ரஞ்சனா தேவி, பொருளாளர் சுனித்திரா தேவி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஆலோசகருமான தா.பிரதீபன் உள்ளிட்டவர்களும் பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்

 நூருல் ஹுதா உமர்




அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் எஹெட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கிய 25,000 ரூபாய் அவசரநிலை நிவாரண உதவித்தொகை இன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.


சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இந்த நிதி வழங்கல் இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், வீடுகளில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதற்கும், அவசியமான வாழ்வாதாரப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் இந்த உதவித்தொகை உதவுவதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார். வெள்ளத்தினால் அப்பகுதியில் பல வீடுகள் நீரில் மூழ்கி, வீட்டு உபயோகப் பொருட்கள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமடைந்தன.


சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிவாரண நிதி வழங்கல் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிகா, நிர்வாக உத்தியோகத்தர், நிதி உதவியாளர், நிர்வாக கிராம நிலதாரி, பிரதம முகாமைத்துவ சேவை அதிகாரி உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிரமங்களை குறைக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மீதமுள்ள பகுதிகளில் மதிப்பிடல் பணிகளும் அதனடிப்படையிலான நிவாரண உதவிகளும் தொடரும் எனவும்  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவியை வழங்க அரசாங்கம் எடுத்த இந்த நடவடிக்கை, சமூக நலனுக்கான முக்கிய முயற்சியாகப் பாராட்டப்படுகிறது.


 


கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை வெள்ளப் பெருக்கினால் 45,387 குடும்பங்களைச் சேர்ந்த 144,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். 



திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 153 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் இடம்பெயர்ந்து தொடர்ந்தும் 05 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்ததுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (07) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


இதுரை 122 வீடுகள் முழுமையாகவும் 2,156 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இருவர் உயிரிழந்ததுடன் 12,469 குடும்பங்களைச் சேர்ந்த 34,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றினால் இதுரை 11 வீடுகள் முழுமையாகவும் 946 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

 

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டடு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை அரசாங்கம் மற்றும் பொது அமைப்புகள் வழங்கிக்கொண்டிருக்கின்றன.

 


 நாட்டில் ஏற்பட்ட 'டித்வா' புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள   மக்களுக்கான நிவாரண உதவியாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள  வர்த்தக சங்கங்களின்  அணுசரனையுடன் இலங்கை  பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக முதற்கட்டமாக அத்தியவசிய   உலர் உணவுப் பொருட்கள்  இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


குறித்த உலருணவுப் பொருட்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை மருதமுனை சவளக்கடை சாய்ந்தமருது சம்மாந்துறை வர்த்தக சங்க பிரதிநிதிகள்  பங்குபற்றலுடன்  பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு அருகில்  உள்ள கல்முனை மாநகர சபையின்  கலாச்சார மண்டபத்தில் இன்று(6) நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக  அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்லவிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி  கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளும் கல்முனை பெரியநீலாவணை சவளக்கடை சாய்ந்தமருது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்குறித்த திட்டத்தில் உள்வாங்கப்பட்ட உலர் உணவுப் பெறுமதி ரூபா 5000 க்கும் மேல் பெறுமதியுடையது என்பதுடன் 400 க்கும் மேற்பட்ட இவ்வலருணவுப் பொதிகளின் பெறுமதி சுமார் ரூபா 20 லட்சத்திற்கும் அதிகமாகும்.கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான  சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய  இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இவ்வுலருணவுப் பொருட்கள் தற்போது திருகோணமலை  கந்தளாய் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் தற்போதைய அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட  சிங்கள தமிழ் முஸ்லீம் என பேதமின்றி வழங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட  சிங்கள தமிழ் முஸ்லீம் என பேதமின்றி வழங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




மேலும்  இந்த முதற்கட்டமாக அத்தியவசிய   உலர் உணவுப் பொருட்கள்  நிவாரண சேவைகளை ஒருங்கிணைக்க வர்த்தக  சமூகத்தின் ஆலோசனைக்கமைய  சிறப்பு குழு ஒன்று அண்மையில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நேரடி வழிகாட்டலில்  உருவாக்கப்பட்டிருந்தது.குறித்த குழுவில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமார சவளக்கடை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வை.சி.இந்திரஜீத் டி சில்வா  சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பி.கஜேந்திரன்  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் பொது மக்கள் பாதுகாப்புக் குழுவின் பொறுப்பதிகாரியுமான   ஏ.எல்.ஏ .வாஹிட்  உள்ளடங்கலாக கல்முனை வர்த்தக சங்கம் ,கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம், மருதமுனை வர்த்தக சங்கம், சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம் ,  சம்மாந்தறை வர்த்தக சங்கம், சவளக்கடை வர்த்தக சங்க பிரதிநிதிகளும் உள்ளடங்கி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

 தற்சமயம், RAMBUK ELE இல் 
சுத்திகரிப்பு.பணியில், ஈடுபட்டு வரும் அக்கரைப்பற்று Farzan Emergency சேவை நிறுவன.கொண்டர்களை
அல் ஜசீரா ஊடகக் குழுவினர் சந்தித்தனர்.


 பாறுக் ஷிஹான்


சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவில் வாராந்தம் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலையப் பரிசோதனையானது    முன்னெடுக்கப்பட்டது.

இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டதுடன், பிரதேசத்திலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) இதன்போது விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.

இச்சோதனையின் போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற, காலாவதியான மற்றும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் B அறிக்கை (B-Report) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மேலும் தற்போதைய காலப்பகுதியில் மின்சார விநியோகத்தில் அடிக்கடி தடங்கள் ஏற்படுவதால், குளிரூட்டிகளில் (Fridge/Freezer) வைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை  கொள்வனவு செய்யும்போது  அதிக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என   பொதுமக்களுக்கான விசேட அறிவித்தலை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி விடுத்துள்ளார்.

--

 


இலங்கை இராணுவத்தின் 241  படைப்பிரிவு தலைமையகத்தினால், இலவசமாக செல்பேசிகளுக்கான மீள் நிரப்பும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில், பெருந்திரளானவர்கள் கலந்து கொள்கின்றார்கள்

 


வி.சுகிர்தகுமார்        


 வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மலையகம் உள்ளிட்ட நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கு கரம் கொடுத்து அவர்களுக்கான நிவாரணப்பொருட்களை அனுப்பும் மனிதாபிமான பணியில் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சமமேளம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் நிவாரணப்பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம் எனும் அடிப்படையில் இன்றும் நாளையும் (02,03) இடம்பெறும் இப்பணியில் பிரதேச செயலாளர் ஆர்.திரிவியராஜ் உள்ளிட்;ட பலர் கலந்து கொண்டு பங்களிப்பை வழங்கினார்.
வெள்ள அனர்த்தத்தில் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டபோதிலும் மிகவும் பாதிக்கப்பட்ட மலையகம் உள்ளிட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப்பொருட்களை மக்கள் மனமுவந்து வழங்கி வருகின்றனர்.


 வி.சுகிர்தகுமார்       

 அம்பாரை மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு வருகின்றபோதிலும் மின்சாரம் துண்டிப்பு, தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு, எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு முதல் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக முண்டியடித்துக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்து காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இருப்பினும் எரிபொருள் நிலையங்களில் ஜெனரேட்டர் உதவியுடன் எரி;பொருளை வழங்கும் செயற்பாடுகளை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
இதேநேரம் மின்சாரத்துண்டிப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டமையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளம் வடிந்து வருகின்றபோதும்; ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையானது விவசாயிகளிடையே பெரும் கவலையினை தோற்றுவித்துள்ளது.
ஆயினும் மலையகம் மற்றும் வடமாகாணம் தென்மாகாணம் போன்ற பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பெரும் இழப்பை சந்தித்துள்ள அம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அம்பாரை மாவட்ட மக்கள் தயாராகி வருவதையும் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்திவேண்டி அஞ்சலி செலுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழ இறைவனிடத்தில் வேண்டுவதையும் குறிப்பிட முடிகின்றது.
      

வெளி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு 

பொருள் மற்றும் நிதியுதவிகளை அக்கரைப்பற்று மக்கள்  சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.


 

 


மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.




 பவர் கட் 💡

ரன்டெம்பே மற்றும் மஹியங்கனை 132 kV ஒலிபரப்பு கம்பிகள் பழுதடைந்ததால் மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு துணை மின் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. - இலங்கை மின்சார சபை

 


#KWT

காரைதீவு-அம்பாறை பிரதான வீதி தற்காலிகமாக போக்குவரத்துக்காக பூட்டப்படுள்ளது.

இன்று இரவு 8.00 மணி முதல் காலை 6.00 மணிவரை பாதை பூட்டப்பட்டிருக்கும். 


தொடர்சியாக வீதியின் மேலாக செல்லும் நீர் மட்டம் அதிகரித்து கொண்டு காணப்படுகின்றது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.