Showing posts with label Eastern. Show all posts

 


( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை ஆதார வைத்தியசாலையில் இயங்கும் என்பு  முறிவு நெரிவு பிரிவு( orthopetic unit ) கடந்த காலங்களை விட மிகவும் சிறப்பாக பல வசதிகளுடன் இயங்கி வருகின்றது.

 "சி"ஆம் ( C Arm) என்று சொல்லப்படுகிற நவீன ரக எக்ஸ் கதிர் கருவியுடன் சிறப்பாக சத்திர சிகிச்சைகள் இடம் பெற்று வருகின்றன.

பிரபல என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் பததிநாதன் கலாவேந்தன் தலைமையிலான குழுவினர் வார்டில் இயங்கி வருகின்றார்கள்.

 அங்கு ஆண்கள் பெண்களுக்கு என்று தனியான சத்திர சிகிச்சை கூடம் 24 மணிநேரமும் அங்கு தயார் நிலையில் இருக்கின்றது.
கூடவே அம்பாறை மாவட்டத்தில் எங்கு மில்லாத சிற்றி நவீன எக்ஸ் கதிர் இயந்திரமும் உள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரனின் முழு முயற்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த என்புமுறிவு நெரிவு சிகிச்சைப் பிரிவு இன்றைய பணிப்பாளர் டாக்டர் ரங்கா சந்திரசேகரவின்  வழிகாட்டலில் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது .

தற்போது பணிப்பாளருக்காக பதில் கடமை புரியும் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் எஸ் ராஜேந்திரனிடம் நேற்று அங்கு சென்று கேட்ட பொழுது ..

தற்போது என்பு முறிவு நெரிவுப் பிரிவு பல நவீன உபகரணங்களுடன் அளப்பரிய சேவைகளை அங்கு செய்துவருகின்றது. எங்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் சொத்து என்பு முறிவு வைத்திய நிபுணர் டாக்டர் கலாவேந்தன் அவர்கள்.
அங்கு வயது வந்தோர் முதல் சிறுபிள்ளை வரை வளை பாத கிளினிக் ஏனைய கிளினிக்குகளை சிறப்பாக நடத்தி வருகின்றார்.

 அர்ப்பணிப்பு ஊழியர்களுடன்  சத்திர சிகிச்சை கூடம் அங்கு தனியாக இயங்கி வருகின்றது. இதனால் அங்கு நோயாளிககளின் எண்ணிக்கை தினம் கூடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது . முன்னாள் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரனின் பணி பாராட்டத்தக்கது.இன்றைய பணிப்பாளர் டாக்டர் ரங்கா சந்ரசேன அதனை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுத்து வருகிறார் என்றார்.

என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் பத்திநாதன் கலாவேந்தன் சத்திர சிகிச்சை கூடத்தில் மிகவும் பிஸியாக இயங்கி கொண்டிருக்கும் வேளையில் சந்தித்து கேட்டபோது....

விபத்து மற்றும் அவசர பிரிவில் இருந்து இந்த எலும்பு முறிவு நெரிவு பிரிவு இயங்க ஆரம்பிக்கின்றது. இங்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முதியோர்களுக்கான கிளினிக் நடைபெறுகிறது. அதேபோன்று வெள்ளிக்கிழமைகளில் சிறுவர்களுக்கான கிளினிக் நடைபெறுகிறது.

எமது வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சக வைத்திய அதிகாரிகள் தாதிய உத்தியோகத்தர்கள் ஏனைய ஊழியர்கள் பலத்த ஒத்துழைப்பை வழங்கி வருவதே இன்றைய வெற்றிக்கு காரணம்.

நிர்வாகத்தோடு இணைந்து இந்த வேலைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் .பொது மக்களும் ஏனைய வைத்திய சாலைகளும் நிறைந்த ஒத்துழைப்பு தருகிறார்கள். என்றார்.


 ( வி.ரி. சகாதேவராஜா)



கிழக்கு மாகாண கல்வித் திணைக் களத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை வலயக்கல்விப்  பணிமனையின் முறைசாரா கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த சிறுவர் உரிமைகள் தொடர்பான செயலமர்வு கடந்த புதன்கிழமை வியாழக்கிழமை இரண்டு நாட்கள் நடைபெற்றன.

 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செபமாலை மகேந்திரகுமாரின் வழிகாட்டலில் வலயக்கல்விப்பணிமனையின் முறைசாரா கல்வி பிரிவின் ஆசிரியர் ஆலோசகர் எம் .ஐ.அகமட்லெவ்வையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் வளவாளராக உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டார்.

நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திலும்  சம்மாந்துறை அல்.அர்சத்  மகா வித்தியாலயத்திலும் கருத்தரங்குகள் நடைபெற்றன.

 இதன்போது சிறுவர் உரிமை மற்றும் கடமைகள் தொடர்பாக பூரண விளக்கம் அளிக்கப்பட்டது.

 


பாறுக் ஷிஹான்


தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஒன்று கூடி காரைதீவு சந்திக்கு அருகில்    தமது பிள்ளைகளுடன் வந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏனைய மாவட்டங்களை போன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், தமது தொழில் நியமனத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.

வயது ஏறுகிறது வாழ்க்கை போகுது வேலை வேண்டும், நாம்கண்ட கனவு பொய்யாகிவிடுமோ, பட்டம் வீட்டில் நாங்கள் றோட்டில்  "பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்", "கல்வி கொடுத்த அரசே கொள்ளிவைக்கலாமா?", "அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தினை அழிக்காதே" போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

வருடங்கள் போகப்போக வயது போவதன் காரணமாக பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்  அழிக்காதே அழிக்காதே எதிர்காலத்தினை அழிக்காதே, பட்டதாரிகள் வீதிகளில் நின்றால் நாடு முன்னேறுவது எவ்வாறு?, பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்? போன்ற பதாகைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.

தமது போராட்டம் தொடர்பில் இதுவரையில் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை என  கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

குறித்த கவனயீர்ப்பு  போராட்டமானது சிறிது தூரம் பேரணியாக இடம்பெற்றதுடன்  அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க  தலைவர் உதுமாலெப்பை முகமது முஹ்சீன்  , செயலாளர் அப்துல் வஹாப் முப்லிஹ் அகமட் உட்பட குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக  அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பேரணியிலும் இணைந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

 



நூருல் ஹுதா உமர்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தொடர்பாகவும், சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள 17 கிராம சேவைகள் பிரிவுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் கிளைகள், மகளிர் கிளைகள் புனரமைப்பு தொடர்பாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்ச பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயற்குழு வின் செயலாளருமான ஏ.சீ.சமால்தீன் தலைமையில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தவிசாளரும்,  கலைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய  அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான எம்.ஐ.பிர்தௌஸ், முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் ஏ.ஏ.பஷீர், முன்னாள் கல்முனை மாநகர சபையின்  மேயர் சிராஸ் மீராசாஹிப் அவர்களின் பிரத்தியோக செயலாளர் ஏ.ஜீ.எம்.நிம்சாத், கல்முனை மாநகர சபையின் வேட்பாளர் எம்.எம்.எம்.பாமீ அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.நசீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது பல்வேறு எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

 



உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு!


கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.


கடந்த காலங்களில் 

கிழக்கு மாகாணத்தில் இருந்த 

ஆளுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம் இவர்களின் நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து வந்திருந்த போதும் அவர்களால் எவ்வித நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படாத  நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிரந்தர நியமனம் குறித்தும், நிரந்தர நியமனம் இல்லாததால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான  செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.


ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று  உரிய தீர்வினைப் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார்.


ஆளுநர் செந்தில் தொண்டமானால் உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 1350க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரே நாளில் நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதன் முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


ஒன்பது மாகாணத்திலும்  உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து பிரச்சினைகள் இருந்த போதும் கிழக்கு மாகாண ஆளுநர் இதுகுறித்து அதிகம் கவனம் செலுத்தி ஒரே நாளில் இந்நியமனங்களை வழங்கி வைத்தமை  என்பது பாராட்டுகிரியது.

 

மேலும் 10 வருடமாக காணப்பட்ட தங்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஒரு வருட காலத்திற்குள் பெற்றுத்தந்த ஆளுநருக்கு உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.


தொழில் திணைக்களத்தின் உதவி  ஆணையாளராக , திரு. புருஷோத்மன் அவர்களுக்கு இன்றைய தினம், நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது


 ( வி.ரி. சகாதேவராஜா)


திருக்கோவில் பிரதேச செயலகத்தில்  நிர்வாக உத்தியோகத்தராக மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி  தனது 32 வருட சேவையினை வழங்கி ஓய்வுபெறும் தெய்வநாயகம் மோகனராஜாவைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன்  தலைமையில்  நடைபெற்றது 

அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் அவரது சேவை பற்றி பலரும் உரையாற்றினார்கள்.

இறுதியாக சேவையை வியந்து பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.


 நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலய பிரிவுக்குட்பட்ட 14 விவசாய அமைப்புக்களின் சம்மேளனமான பட்டம்பிட்டி திட்ட முகாமைத்துவ குழு ஏற்பாடு செய்த சம்மாந்துறை பிரதேச புதிய நீர்ப்பாசன பொறியியலாளருக்கான வரவேற்பும், கௌரவிப்பும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நெய்னா காடு  பிரதேசத்தில் பட்டம்பிட்டி திட்ட முகாமைத்துவ குழுவின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளருமான ஏ.எல். மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளராக பொறுப்பேற்றிருக்கும் எந்திரி ஆர்.வேல் கஜன் அவர்களையும் காரியாலய அதிகாரிகளையும் வரவேற்று கௌரவித்த இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் (நிர்வாகம்) எம்.எம். மன்சூர் மற்றும் கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் (நிதி) ஏ.எம்.எம். றபீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். இதன்போது சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலய பிரிவுக்குட்பட்ட 14 விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடிய விவசாயிகள் அவற்றுக்கான தீர்வை பெற்றுத் தர  வேண்டிய விடயங்களையும் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலய உத்தியோகத்தத்தார்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 


பாறுக் ஷிஹான்


 அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நாய்பட்டிமுனை உப அஞ்சல்  அலுவலகம்    2024.04.02 அன்று தொடக்கம்  நற்பிட்டிமுனை உப தபாற் கந்தோர் என்று பெயராக  மாற்றம் செய்யப்பட்டுள்ளது என வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அஞ்சல் அலுவலக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவர் ஜெ.எம்  றிஸான் (ஹாமி)  உட்பட நிர்வாகிகள் கொண்டு வந்ததை தொடர்ந்து 2024.05.31 திகதி  வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக குறித்த பெயர் மாற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இதன்படி குறித்த உப தபாற் கந்தோரின் பழைய விளம்பர பலகை அஞ்சல் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமாரவின் உத்தரவிற்கமைய    அகற்றப்பட்டு புதிய விளம்பலகை தற்போது பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இனிவரும் காலங்களில் நற்பிட்டிமுனை உப தபாற் கந்தோர் என அழைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த செயற்பாட்டை முன்னெடுத்த நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவர் உட்பட பலருக்கு நற்பிட்டிமுனை பொதுமக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்


மாளிகைக்காடு செய்தியாளர்   

நாவிதன்வெளி பிராந்தியத்தில் ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளை உருவாக்குவதில் முதன்மையான கழகங்களாக இருந்து பிரதேச விளையாட்டு மேம்பாட்டுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கி வரும் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்து கழகத்தினை வளர்ச்சி அடையச் செய்ய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியால் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் விளையாட்டு கழகங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு கடிதங்கள் இன்று நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் வைத்து கழக நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டது.

அண்மைக்காலமாக எமது நாட்டில் நிலவிவரும் கடின பொருளாதார சூழ்நிலையின் காரணமாக விளையாட்டு கழகங்கள் எதிர்நோக்கிவரும் சிக்கல் நிலையை நிவர்த்திக்கும் விதத்தில் ஜனாதிபதி அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி. கிருபைராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆவணங்களை கையளித்தார். இந்நிகழ்வில் மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பிரதேச அமைப்பாளருமான ஏ.சி.ஏ. நஸார் ஹாஜி, நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.பி நவாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர், பாராளுமன்ற உறுப்பினரின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் எம். நெளபர், பாராளுமன்ற உறுப்பினரின் விளையாட்டு கழகங்களுக்கான இணைப்பாளர் ஏ.எம் நளீம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


 பாறுக் ஷிஹான்


தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க எம். பி பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அவர் கலந்து கொள்கின்ற கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட சிசிடிவி கமரா மற்றும் இதர நவீன தன்னியக்க சிசிடிவி கமராக்கள் பல அங்காங்கே பொருத்தப்பட்டு கூட்டங்களுக்கு வருபவர்கள் கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (12) காரைதீவு மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கூட்ட மேடைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறான கமராக்கள் பல பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதே வேளை என்றும் இல்லாதவாறு கூட்டங்களுக்கு பைகளுடன் சமூகமளிப்பவர்கள் அழைக்கப்பட்டு விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

 

 


நூருல் ஹுதா உமர்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாடசாலை மாணவர்களின் நலன் கருதி கல்வி அமைச்சின் 4.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/அல்- அஸ்கர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான தொடக்க நிகழ்வு இன்று (12) இடம்பெற்றது.
கல்முனை கமு/கமு/அஸ்கர் வித்தியாலய அதிபர் ஏ.எச். அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான கட்டிட அனுமதி கடிதத்தை பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்ததுடன் கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல் செயலாளர், இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
154 வருட வரலாற்றையும், அதிக மாணவர்கள் தொகையையும் கொண்ட இந்த பாடசாலைக்கு தேவையாக இருந்த இக்கட்டிடத்தை குறுகிய காலத்தில் கட்டி முடிக்க தேவையான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


( வி.ரி.சகாதேவராஜா)


திருவிழாக் காலங்களில் ஆலய வளாகத்தில் நடாத்தப்படும் உணவுக் கடைகள் விசேட பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று 
திருக்கோவில்ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு  கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது நேற்று முன்தினம் (8)திங்கட்கிழமை திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய ஆடி உற்சவமானது எதிர்வரும் 2023.07.18கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து 2023.08.04ம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளது.

இக்காலபகுதியில் ஆலயத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நலன்புரி சேவைகள் தொடர்பாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இவ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.நிருபா,திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எம்..மோகனகாந்தன், ஆலய பரிபாலன சபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ்,  திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் திருமதி வீரபத்திரன, திருக்கோவில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன்,கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர்  என்..கந்தசாமி ,மற்றும் திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய நிருவாகசபை உறுப்பினர்கள், திருக்கோவில் பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள், மற்றும் அதன்  உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

துறைசார்ந்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


( வி.ரி.சகாதேவராஜா )


கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத்தோற்றி 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் அக்கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவித்தனர்.

குறித்த மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சாதனையாளர்களை கௌரவித்தல்" வரலாற்று முக்கியத்துவமிக்க விழா கடந்த சனிக்கிழமை கல்லூரி அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ.ரெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்றது.

பற்றிமா கல்லூரியின் பழைய மாணவியும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அத்துடன் அக்கல்லூரியின் பழைய மாணவர்களான டொக்டர் மஹாலிங்கம் லட்சியன், பொறியியலாளர் எம்.கிரிதரன், சட்டத்தரணி ரவீந்திரன் சுஜீதா ஆகியோர் நட்சத்திர அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கல்லூரி பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி குழுவினர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்பித்த மற்றும் வழிகாட்டிய அதிபர் ஆசிரியர்கள் அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் இந்நிகழ்வின் போது அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.


பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை   பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2024 ஆண்டிற்கான அரையாண்டு  அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று பொலிஸ் நிலைய  மைதானத்தில்   இடம்பெற்றது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்    தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம பிரதம அதிதியாக கலந்து கொண்டு   பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

 மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள்  சுற்று சூழல்  பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன்  பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில்    சம்மாந்துறை ,பெரியநீலாவணை,  சாய்ந்தமருது,   பொலிஸ் நிலைய பொலிஸாரும்  இணைந்திருந்தமை குறிப்படத்தக்கது.


 


(வி.ரி.சகாதேவராஜா)


திருக்கோவில் பிரதேசத்தில் தொல்லியல் வார விழிப்புணர்வு செயலமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

தொல்லியல் திணைக்களம்  கடந்த 07/07/2024 தொடக்கம் 2024/07/14ம்  திகதி வரை தொல்லியல் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. 

இவ் விடயம் தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர்  தங்கையா கஜேந்திரன்  தலைமையில் தொல்பொருள் இடங்கள் மற்றும்   நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு கலந்துரையாடல்  நடைபெற்றது. 

இக் கலந்துரையாடலில்தொல்பொருள் இடங்களை பாதுகாப்பது  தொடர்பாக  கிராம மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும்  குழுக்கள் அமைக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி  காணிபிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.எஸ்.கஸ்தூரி மற்றும் தொல்பொருள் இடங்கள் அமைந்துள்ள கிராமசேவகர் பிரிவுகளான தம்பிலுவில் 01 மேற்கு, விநாயகபுரம்03, கஞ்சிகுடியாறு, காஞ்சிரங்குடா, சாகாமம், தங்கவேலாயுதபுரம், சங்கமன் கிராமம் போன்ற  இடங்களில் உள்ள  கிராம சேவை உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திசங்க உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள்  போன்றவர்கள்  கலந்து கொண்டனர்.




ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தை சேர்ந்த 48 வயதுடைய  சீனி முகம்மது கலீலுர் றஹ்மான் 

என்பவர் சென்ற 05-07-2024 முதல் காணாமல் போயுள்ளார்.


ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருக்கின்றனர்


ஏறாவூர் புன்னக்குடா வீதி,  மத்தி வலயத்திற்கு முன்பாக வாழ்ந்துவந்த KSM 

என்று அழைக்கப்படும் மர்கூம் சீனிமுகம்மது என்பவரின் மகனான 

இவர் " எங்கு சென்றார் "என்பது யாருக்குமே தெரியாதாம்.


மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரை யாரேனும் கண்டால் தயவு செய்து பின்வரும் தொலைபேசிக்கு அழைப்பை எற்படுத்துங்கள்.


077 3246309 


தகவல் : ,முஸ்தபா (மாமனார்)

          '

 


மாளிகைக்காடு செய்தியாளர்


சீரற்ற காலநிலையினால் இவ்வருட ஆரம்பப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அம்பாறை மாவட்ட காரைதீவு-01,06,07 மற்றும் 11 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் பத்தொன்பது வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கான முற்பண தொகை 10,000/- வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சசிந்திரன் தலைமையில் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், நிர்வாக கிராம உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


மாளிகைக்காடு செய்தியாளர்


புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாசிகசாலை இன்று (06) சனிக்கிழமை வைபவரீதியாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள கலாச்சார மேம்பாட்டு பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ரணசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு பிரதம அதிதியுடன் இணைந்து இந்த வாசிகசாலையை திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் கலாசார மத்திய நிலைய அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் அஸ்வான் மௌலானா, உப செயலாளர் நூருல் ஹுதா உமர், பொருளாளர் ஏ.பி.எம். நௌஸாத் உட்பட நிறைவேற்று சபையினரும், பிரதேச மூத்த இலக்கியவாதிகள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வாசிகசாலைக்கான அங்கத்துவம் தொடங்கி வைக்கப்பட்டதுடன், பிரதேச எழுத்தாளர்கள் தமது நூல்களை குறித்த வாசிகசாலைக்கு அன்பளிப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த கலை இலக்கியவாதியும் சட்டத்தரணியுமான, முத்துமீரான் அவர்களது ஜனாசா தொழுகை இன்று இஷா தொழுகைக்குப்  பின்னர், இடம்பெற்று, பெருந்திரளானவர்க்கு  மத்தியில் நல்லடக்கம்  இடம் பெற்றது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.