Showing posts with label Eastern. Show all posts

 



வி.சுகிர்தகுமார்      


ஜனாதிபதியின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கமைய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் 3 கிலோமீற்றர் கடற்கரை பிரதேசம் அழகிய கடற்கரையினை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் நாமும் பங்காளியாவோம் எனும் தொனிப்பொருளுக்கு அமைய இன்று (16) தூய்மைப்படுத்தப்பட்டது.
அரச சுற்றுநிருபங்களுக்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் ஒழுங்கமைப்பட்ட கடற்கரையினை சுத்தம் செய்யும் பணியில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் காலாட் படைப்பிவின் கட்;டளை அதிகாரி கேணல் சுகத் திசாநாயக்கா ஆலையடிவேம்பு பிரதேச சபை செயலாளர் ஆர்.சுரேஸ்ராம் பிரதேச செயலக கணக்காளர் பிரகஸ்பதி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் தலைமைப்பீட முகாமையாளர் க.நேசராஜா உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இராணுவத்தினர் பொலிசார் சுகாதார திணைக்களம் பொது அமைப்புக்கள் ராம் கராத்தே சங்க மாணவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு பிரதேச சபை ஊழியர்கள் பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தியதன் பின்னர் பிரதேச செயலாளர் அரசின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கினார். இதனை அரச உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை தேவையினையும் சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னராக வருகை தந்த அனைவரும் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் கடற்கரையினை அன்மித்த பிரதேசம் முதல் சின்னமுகத்துவாரம் வரையிலான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரிவினர் அங்கு குவிந்து காணப்பட்ட குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகளை சேகரித்து பிரதேச சபையின் உழவு இயந்திரங்களின் உதவியுடன் அகற்றினர்.
இதேநேரம் தீயிட்டு அழிக்கக்கூடிய குப்பைகளை தீயிட்டு அழித்தனர்.



 ஸ்ரீலங்கா #கிளீன் #ஸ்ரீலங்கா...2025....


ஜே.கே.யதுர்ஷன்




கிளீன் சிறீலங்கா தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் "அழகான கடற்கரை - கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்''  எனும் தொனிப்பொருளில் 


திருக்கோவில்  பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சின்ன முகத்துவாரம்  பகுதி 

தொடர்க்கம் சங்கமன் கிராமவரையான  கடற்கரை சூழல் சிரமதான நிகழ்வு  ஒன்று முன்னெடுக்கப்பட்டது...


குறித்த நிகழ்வானது  திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் பெரியமுகத்துவாரதாதில் நிகழ்வு கொடியேற்ற நிகழ்வுடன் வைபவ ரிதியாக  ஆரம்பித்து வைக்கப்பட்டது.....


இன் நிகழ்வில் முப்படையினர் மற்றும் அதன் உயர் அதிகாரிகள் சுகாதார வைத்திய அதிகாரி அதன்  உத்தியோத்தர்கள் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் ,  தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச குழுவினர் மற்றும்  பிரதேச சபை செயலாளர் மற்றும் ஊழியர்கள் பொது அமைப்புகள்  கழகங்கள் பொதுமக்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்....

 (சுகிர்தகுமார)    


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் 2 கிராமத்தில் புலன் வளவொன்றிலிருந்து ஆண் ஓருவரின் சடலம் இன்று(15) மீட்க்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் கோளாவில் 3 இல் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சுந்தரலிங்கம் கமலஹாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று தனது வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன் இரவு வரை வீடு திரும்பாத நிலையில் அவரது மகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டதுடன் பதில் கிடைக்காத நிலையில் உறவினர்களுடன் இணைந்து அவரை தேடி உள்ளனர்.
இந்நிலையில் கோளாவில் 2 கிராமத்தில் புலன் வளவொன்றில் ஒருவர் கிடப்பதை அவதானித்த அயலவர்கள் கிராம உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கி அவர் ஊடாக சம்மந்தப்பட்ட குடும்பத்தினருக்கும் பொலிசாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதேநேரம் 119 ஊடாக தொடர்பு கொண்டதன் பிரகாரம் அங்கு வந்த அவர்கள் குறித்த நபர் இறந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிசார் மரணம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்



 பாறுக் ஷிஹான்


சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு விழா இன்று(14)  சம்மாந்துறை  
நீதிமன்ற நீதிவான் 
ரி. கருணாகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி  கலந்து  கொண்டார்.

மேலும்   கௌரவ அதிதிகளாக  நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் மேலதிக செயலாளர் (பொறியியல்)  பொறியியலாளர் எஸ். ஏ. கே.சுபசிங்க ,விசேட அதிதிகளாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் பணிப்பாளர்( பொறியியல்) பொறியியலாளர் பி.எஸ்.சி.கே. முணசிங்க,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா,நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரி.சஞ்ஞீவன்,விசேட அதிதிகளாக மேல் நீதிமன்ற பதிவாளர் எஸ்.எச்.எஸ். ஹக்கீமுள்ளாஹ்,மேல் நீதிமன்ற வலயக் கணக்காளர் ஏ.எல் நஜிமுடீன்,மேல் நீதிமன்ற தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்  றிப்கான் மற்றும் சட்டத்தரணிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 



நூருல் ஹுதா உமர் 


மனித அபிவிருத்தி தாபனம், நிந்தவூர் பிரதேச செயலகத்துடன் இணைந்து பாதுகாப்பான புலம்பெயர் தொழில் (வெளிநாட்டு வேலை) தொடர்பான நடமாடும் சேவை  நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது

இந்த நடமாடும் சேவைக்கு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ், கல்முனை சட்ட உதவி ஆணைக்குழு சட்ட உத்தியோகத்தர் வீ.ரீ.ஹசீனா, நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர், மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர் எம். ஐ. றியால் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அம்பாறை மாவட்ட காரியாலய அதிகாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு நடமாடும் சேவைக்கு வருகை தந்த பொது மக்களுக்கு பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான பிரச்சனைகளுக்கான தீர்வுகளும், ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கியதுடன் முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

 


பாறுக் ஷிஹான்


எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் பிரகாரம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் கடந்த புதன்கிழமை (12) இரவு திடீர்ச் சோதனை   மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் பழுதடைந்த மற்றும்  களஞ்சியப்படுத்திய  உணவுகளை வைத்திருந்த ஒன்பது கடை உரிமையாளர்களுக்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.



சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களைப் பேணி நடக்காத உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.


 



கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பாராளுமன்ற உறுப்பினர் 


எஸ்.எம்.எம்.முர்ஷித் 


பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் தனது முதல் மாத சம்பளத்தை பொது தேவைகளுக்காக பயன்படுத்துமாறு கல்குடா உலமா சபையிடம் இன்று (வியாழக்கிழமை) இரவு வழங்கி வைத்தார்.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் 2018ல் தனது உள்ளுராட்சி மன்ற அரசியல் பிரவேசத்தின் போது மக்களிடம் ஒரு உறுதி மொழியினை வழங்கினார் தான் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டால் அந்த பதவியால் கிடைக்கும் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள்  வாகன சலுகை எதையும் தனக்கு என உபயோகிக்காது அவற்றை முழுமையாக மக்களின் தேவைக்காக வழங்கி விடுவேன் என்று.


அதன் பிரகாரம் ஏறாவூர் நகர சபை உறுப்பினராகி பின்னர் தவிசாளர் ஆகவும் பதவி வகித்தார் ஆனால் அவர் அப்பதவிக்கான கொடுப்பனவு எதுவும் தனக்காக எடுக்காமல் தேவை உடைய மக்களுக்கும் நோயாளிகளுக்கும் என்று வழங்கியதோடு பாடசாலை, பள்ளிவாசல் என பொது தேவைகளுக்கு வழங்கி வந்தார்.


அந்த வகையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டு உள்ள அவர் தனது முதலாவது மாத சம்பளம் 54,285 ரூபாய், தொலைபேசி கட்டணம் 50,000 ரூபாய், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கட்டணம்120,000 என மொத்த கொடுப்பனவாக இரண்டு இலட்சத்து இருபத்து  ஐயாயிரம் ரூபாய் (225,000) பணத்தினை இன்று கல்குடா உலமா சபையிடம் வழங்கி வைத்தார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்குடா தொகுதி ஆதரவாளர்களை நன்றியுடன் கௌரவிக்கும் முகமாக அகில இலங்கை ஜமியதுல் உலமா சபையின் கல்குடா கிளை நிருவாகத்திடம் அப்பகுதி பொது தேவைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் இப் பணத்தினை கையளித்தார்.


உலமா சபை கல்குடா கிளை அலுவலகத்தில் வைத்து உலமா சபை தலைவர் அஷ்ஷெயஷக் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையிலான குழுவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் குறித்த நிதியை கையளிப்பு செய்தார் .


இதன்போது  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜி.அஸீஸுல் றஹீம், அஷ்ஷெய்க் எம்.ஐ. ஹாமித் லெப்பை, எம்.ரீ.எம். அன்வர் உட்பட கட்சியின்  கல்குடா தொகுதி ஏறாவூர் பிரதேச முக்கியஸ்தர்கள், உலமா சபையின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



 


அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க்  T.M.M அன்சார் அவர்களின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (13.02.2024) நடைபெற்றது. 


அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் திணைக்களங்களின் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



 


வி.சுகிர்தகுமார்       


 விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் வழிகாட்டலில் நெற் செய்கையில் ஒரு ஹெக்டயருக்கு 07 மெற்றிக் தொன் விளைச்சலை அதிகரிக்கும் வேலைத்திட்ட அறுவடை விழா நேற்று (11)நடைபெற்றது.
கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் நிலையப்பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.நிப்றாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவிராஜ் கலந்து கொண்டதுடன்  விவசாயத் திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர்கள் நெல் பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஜ.ஏ பெறோஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த செயற்திட்டத்தின் கீழ் சேதன அசேதனம் இணைந்த நெற்பயிர்ச்செய்கை முறை பரசூட் முறை மற்றும் நாற்று நடுகை இயந்திரம் போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டன.
இச்செயற்திட்டத்தினை பூரணமாக ஆதரித்து எதிர்வரும் போகங்களில் இதனை தொடர்ச்சியாக நடைமுறைபடுத்தவுள்ளதாகவும் விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.

 


நூருல் ஹுதா உமர்


பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு  வியாபார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (11) திடீர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ. வாஸீத் அஹமட் உணவு மற்றும் மருந்து பரிசோதகர் எஸ்.ஜீவராஜா அவர்களால் பலசரக்கு  வியாபார நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டு, மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது தமது கடமையும், பொறுப்பும் ஆகும் என்ற அடிப்படையில் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் களும் செய்ய  உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் 0753333453, 0776702703 , 077 375 1749 எனும் இலக்கங்களூடாக அறியத்தருமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 


பாறுக் ஷிஹான்


ரமழான் மாதத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  ஹோட்டல்கள், பேக்கரிகள், மற்றும் பழக்கடைகளில்   இன்று    திடீர் சோதனைகள்  மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற   தொலைபேசி மூலமான முறைப்பாட்டினைத் தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை கண்டறியவும்     உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல்  நோக்கிலும்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன்  ஆலோசனையின் பிரகாரம்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே . மதன் வழிகாட்டலில்  மேற்குறித்த இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது  ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் பொதுச் சுகாதாரத்துக்கு பொருத்தமான வகையில் உணவு தயாரிப்பது தொடர்பான தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் தேவையான ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பகுதியில் உள்ள   பலசரக்கு  வியாபார நிலையங்கள் தொடர்பில்  பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற    முறைப்பாட்டினைத் தொடர்ந்து இன்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள்    மற்றும் உணவு மற்றும் மருந்து பரிசோதகரினால்   சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டு  சட்ட நடவடிக்கைக்கான முன்னெற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும்  ரமழான் மாதத்தினை முன்னிட்டு மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்   சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சிரேஸ்ட   மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,  பொதுச்சுகாதார பரிசோதகர்கள் , உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் இந்நடவடிக்கையில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

 


Rep/ஜே.கே.யதுர்ஷன்

ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று இடம்பெற்றது....


அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் திரு.திரவிஜராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ ஜனாப் A.ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது....


இன் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.திரு.மஞ்சுள ரத்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌர திரு.கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரும் தேசிய மக்கள் சக்தியின் கரையோர பிரதேச இணைப்பாளர் திரு.ரவீந்திர பிரதேச செயலக உதவிச்செயலாளர் R.சபாகர் மற்றும் கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் முப்படையினர் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள்  பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரேத்தியக செயலாளர்கள் என்பலரும் இவ் கூட்டத்தில் கலந்து கொண்டனர்...


மேலும் இக்கூட்டத்தில் கலந்த காலங்களின் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி கூட்டகளில் எடுக்கப்பட்ட தீர்மானகள் இடம்பெற்றுள்ளதா என குறித்த அதிகாரிகளிடம் ஆராயப்பட்டது...


மற்றும் கண்ணகீ புரம் கவடாப்பிட்டி ஆகிய பகுதிகளின் யானை வேலி அமைப்பது பற்று கலந்துரையாடப்பட்டதுடன் கவடாப்பிட்டி குடிநீர் பிரச்சினை பற்றியும் ஆராயப்பட்டதுடன் . விரைவில் இதற்கான தீர்வுகள் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது...

 


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  பனங்காடு கிராமத்திற்கு களவிஜயம்....


ஜே.கே.யதுர்ஷன்


திகாமடுல்ல மாவட்ட பாராளூமன்ற உறுப்பின மஞ்சுள ரத்நாக்க அவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு கிராமத்திற்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்..... அவருடன் கரையோர பிரதேச இணைப்பாளர் ரவீந்திர அவர்களும் பிரதேச கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்...


அங்கு உள்ள வைத்தியசாலை மற்றும் பாடசாலை என்பதனை பார்வையிட்டதுடன் அங்கு காணப்படும் குறைபாடுகளை பற்றியும் ஆராய்ந்தார்....!!!

 



( (வி.ரி.சகாதேவராஜா)


வெருகல் பிரதேசத்திலுள்ள கல்லரிச்சல்  பழங்குடியினர்  மட்டித் தொழிலாளர் மற்றும் கருங்காலி சோலை ஆகிய மிகவும் பின்தங்கிய மூன்று ஊர்களில் வள்ளுவம் அமைப்பு  வீடமைப்பு மற்றும் வாழ்வாதார உதவி வழங்குதல் போன்ற மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.

கடந்த வாரம் அவர்களுக்கு வீடுகள் ஒப்படைக்கப்பட்டன.

அவர்களுக்கு வீட்டு வசதிகள்  வாழ்வாதார உதவிகள் மாதம் ஒரு முறை உலர் உணர்வுகள் வயோதிபர்களுக்கான உணவுகள் போன்றவற்றை வழங்கி வருகிறது.

வள்ளுவம் அமைப்பு.பணிப்பாளர் ஜெஸ்லனட் ராஜன் செல்வநாயகம்.
( கனடா.) இவ் உதவிகளை செய்து வருகிறார்.

இது இவரின் நேரடி கண்காணிப்பில் நடந்துள்ளவேலைத் திட்டங்கள் ஆகும்.

மற்றும் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களை சமூகத்தில் ஒரு முன் மாதிரியாக வாழ்வதற்கு வழிவகுக்கிறது.
கல்லரிப்பு கிராமத்தில் பழங்குடி பிள்ளைகள் போக்குவரத்து பிரச்சினை 
பாடசாலைக்கு  செல்ல வாகன வசதிகள் ஒழுங்கு படுத்தி கொடுத்து இப் பிள்ளைகள் இப்போது பாடசாலை செல்கிறார்கள்.

 


நூருல் ஹுதா உமர்


கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு 'மரத்தின் வேந்தர்களுக்கு மண்ணின் பெருவிழா' எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை மீலாத் சதுக்கத்தில் (9) நடைபெற்றது.

இந்நிகழ்வில், பத்தாவது பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், கட்சியின் பிரதித் தலைவர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், செயலாளர் எம். நிசாம் காரியப்பர், பிரதி தேசிய அமைப்பாளர் எம்.எஸ் உதுமாலெப்பை மற்றும்  தேசிய இணைப்புச் செயலாளர் எம்.எஸ் நழீம் ஆகியோர்  இவ்வரலாற்று பெருவிழாவில் கட்சி போராளிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Rep/ எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்.


காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் தற்போது காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறுகின்றது.


பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்படுகின்றன.


மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான எம்.பி.எம் .பிர்தௌஸ் நளீமி, பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் உட்பட நகசபை செயலாளர் ரிப்கா சபீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீன் மற்றும் திணைக்கள பிரதேச தலைவர்கள், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 


காத்தான்குடி சாமில் சனாயியின் ஜனாஸா   கரையொதுங்கியுள்ளது.


நேற்று (08.02.2025) மாலை 05.30 மணியளவில் காத்தான்குடி கடலில் நீரில் மூழ்கி காணாமற்போன ஸக்கினா பள்ளிவாயல் வீதி, காத்தான்குடி எனும் முகவரியைச் சேர்ந்த நூராணியா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவன் சாமில் சனாயியின் ஜனாஸா  பூநொச்சிமுனை கடற்கரையில் இன்று கரையொதுங்கியது



 எமது திருக்கோவில் பிரதேச விவசாய மக்களின் நலன் கருதி தற்போது இடம்பெறுகின்ற அறுவடையையும்  கவனத்தில் கொண்டு  மகஜர் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநரிடம் நான் கையளித்துளேன்....


நெல் நிர்ணய விலை மற்றும் தராசுகள் சரியான முறையில் முத்திரையிடப் பட்டுள்ளனவா  என விசாரணை மேற்கொள்ள வேண்டுகோள்.....!!!!


 பாறுக் ஷிஹான்


சுகாதாரமற்ற கிழக்கு பொரியல் உட்பட டேஸ்ட் கடைகள் தொடர்பில்  பொதுமக்களிடம் இருந்து  கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து  உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன்  ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே . மதன் தலைமையில் சென்ற சுகாதார குழுவினர்  வெள்ளிக்கிழமை (7) இரவு திடீர் சோதனைகளை நடாத்தினர்.

பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது

 


பாறுக் ஷிஹான்


வட்டிலப்பம், மிக்சர் உற்பத்தி போன்ற சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு சுகாதார நடைமுறை மற்றும்
உணவுச் சட்டம், சுட்டுத் துண்டிடல், போன்றன தொடர்பாகவும், பிளாஸ்டிக் பாவனையின் பாதிப்பு தொடர்பாகவும் விழிப்புணர்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை(7)  நடை பெற்றது.


மேற்படி நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலக  கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

மேலும் பிரதேச செயலக பங்களிப்புடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத்   தலைமையில் நடைபெற்றதுடன் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்  மற்றும் பிரதேச செயலக சிறு கைத் தொழில் பிரிவு அலுவலர்களும் பங்கு கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.