3 கிலோமீற்றர் கடற்கரை பிரதேசம் தூய்மைப்படுத்தப்பட்டது
வி.சுகிர்தகுமார்
அரச சுற்றுநிருபங்களுக்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் ஒழுங்கமைப்பட்ட கடற்கரையினை சுத்தம் செய்யும் பணியில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் காலாட் படைப்பிவின் கட்;டளை அதிகாரி கேணல் சுகத் திசாநாயக்கா ஆலையடிவேம்பு பிரதேச சபை செயலாளர் ஆர்.சுரேஸ்ராம் பிரதேச செயலக கணக்காளர் பிரகஸ்பதி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் தலைமைப்பீட முகாமையாளர் க.நேசராஜா உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இராணுவத்தினர் பொலிசார் சுகாதார திணைக்களம் பொது அமைப்புக்கள் ராம் கராத்தே சங்க மாணவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு பிரதேச சபை ஊழியர்கள் பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தியதன் பின்னர் பிரதேச செயலாளர் அரசின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கினார். இதனை அரச உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை தேவையினையும் சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னராக வருகை தந்த அனைவரும் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் கடற்கரையினை அன்மித்த பிரதேசம் முதல் சின்னமுகத்துவாரம் வரையிலான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரிவினர் அங்கு குவிந்து காணப்பட்ட குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகளை சேகரித்து பிரதேச சபையின் உழவு இயந்திரங்களின் உதவியுடன் அகற்றினர்.
இதேநேரம் தீயிட்டு அழிக்கக்கூடிய குப்பைகளை தீயிட்டு அழித்தனர்.