Showing posts with label Eastern. Show all posts


 பாறுக் ஷிஹான்


சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவில் வாராந்தம் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலையப் பரிசோதனையானது    முன்னெடுக்கப்பட்டது.

இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டதுடன், பிரதேசத்திலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) இதன்போது விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.

இச்சோதனையின் போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற, காலாவதியான மற்றும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் B அறிக்கை (B-Report) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மேலும் தற்போதைய காலப்பகுதியில் மின்சார விநியோகத்தில் அடிக்கடி தடங்கள் ஏற்படுவதால், குளிரூட்டிகளில் (Fridge/Freezer) வைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை  கொள்வனவு செய்யும்போது  அதிக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என   பொதுமக்களுக்கான விசேட அறிவித்தலை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி விடுத்துள்ளார்.

--

 


இலங்கை இராணுவத்தின் 241  படைப்பிரிவு தலைமையகத்தினால், இலவசமாக செல்பேசிகளுக்கான மீள் நிரப்பும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில், பெருந்திரளானவர்கள் கலந்து கொள்கின்றார்கள்

 


வி.சுகிர்தகுமார்        


 வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மலையகம் உள்ளிட்ட நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கு கரம் கொடுத்து அவர்களுக்கான நிவாரணப்பொருட்களை அனுப்பும் மனிதாபிமான பணியில் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சமமேளம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் நிவாரணப்பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம் எனும் அடிப்படையில் இன்றும் நாளையும் (02,03) இடம்பெறும் இப்பணியில் பிரதேச செயலாளர் ஆர்.திரிவியராஜ் உள்ளிட்;ட பலர் கலந்து கொண்டு பங்களிப்பை வழங்கினார்.
வெள்ள அனர்த்தத்தில் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டபோதிலும் மிகவும் பாதிக்கப்பட்ட மலையகம் உள்ளிட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப்பொருட்களை மக்கள் மனமுவந்து வழங்கி வருகின்றனர்.


 வி.சுகிர்தகுமார்       

 அம்பாரை மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு வருகின்றபோதிலும் மின்சாரம் துண்டிப்பு, தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு, எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு முதல் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக முண்டியடித்துக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்து காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இருப்பினும் எரிபொருள் நிலையங்களில் ஜெனரேட்டர் உதவியுடன் எரி;பொருளை வழங்கும் செயற்பாடுகளை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
இதேநேரம் மின்சாரத்துண்டிப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டமையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளம் வடிந்து வருகின்றபோதும்; ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமையானது விவசாயிகளிடையே பெரும் கவலையினை தோற்றுவித்துள்ளது.
ஆயினும் மலையகம் மற்றும் வடமாகாணம் தென்மாகாணம் போன்ற பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பெரும் இழப்பை சந்தித்துள்ள அம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அம்பாரை மாவட்ட மக்கள் தயாராகி வருவதையும் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்திவேண்டி அஞ்சலி செலுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழ இறைவனிடத்தில் வேண்டுவதையும் குறிப்பிட முடிகின்றது.
      

வெளி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு 

பொருள் மற்றும் நிதியுதவிகளை அக்கரைப்பற்று மக்கள்  சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.


 

 


மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.




 பவர் கட் 💡

ரன்டெம்பே மற்றும் மஹியங்கனை 132 kV ஒலிபரப்பு கம்பிகள் பழுதடைந்ததால் மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு துணை மின் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. - இலங்கை மின்சார சபை

 


#KWT

காரைதீவு-அம்பாறை பிரதான வீதி தற்காலிகமாக போக்குவரத்துக்காக பூட்டப்படுள்ளது.

இன்று இரவு 8.00 மணி முதல் காலை 6.00 மணிவரை பாதை பூட்டப்பட்டிருக்கும். 


தொடர்சியாக வீதியின் மேலாக செல்லும் நீர் மட்டம் அதிகரித்து கொண்டு காணப்படுகின்றது.


 கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் வலையமைப்பிற்கான கலந்துரையாடல் 25.11.2025 அன்று மட்டக்களப்பு உள்ளூராட்சி மன்ற  உதவியாணையாளர் அலுவலகத்தில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டது.

 

Rep/Yathursan

திருக்கோவில் பிரதேசத்தில் ஆதாரவைத்திய சாலைக்கு முன்பாக பழமை வாய்ந்த  புளியமரம் ஒன்று  தற்போது ஏற்பட்டுள்ள காற்றுடன் கூடிய மழையினால் புடைசாய்ந்தது  பிரதான  வீதியில் விழுந்தது ...


இதனால் திருக்கோவில் அக்கரைப்பற்று பிரதான வீதி தடைப்பட்டது...


இதனை அகற்றும் பணி பிரதேச செயலாளரின் நேரடி  கண்காணிப்பில் இடம்பெற்றது..


குறித்த தகவல் வழங்கப்பட்ட உடன் களத்திற்கு விரைந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் அவர்கள் இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டு குறித்த மரத்தினை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார் 


குறித்த தகவலுக்கு அமைவாக குறித்த பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர்  மற்றும RDA ஊழியர்கள் மரத்தினை அகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டனர் மேலும் திருக்கோவில் பிரதேச இளைஞர்களும் பொதுமக்களும் திருக்கோவில் பிரதேச சபை ஊழியர்களும் இணைந்து குறித்த மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்


மேலும் பிரதான விதியால் வாகனம் செல்ல தடைப்பட்டு வாகன நெரிசல் காணப்பட்டது  இதனை திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுபதிகாரியின் உதவியுடன் வாகனங்கள் மாற்று வழிகளில் அனுப்பட்டது 


பின்னர் வெட்ட பட்ட மரத்துண்டுகள் கிளைகள் என்பன திருக்கோவில் பிரதேச சபையின் ஊழவு இயந்திரங்கள் மற்றும் இராணுவத்தினரின் வாகனத்தின் உதவியுடன் அங்கிருந்து அகற்றப்பட்டதுடன் பிரதான  வீதி  வழமைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது...


மேலும் குறித்த மரத்தினால் சேதமடைந்த மின்இணைப்புக்களை திருத்தி அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபை ஊழியர்  துரிதமாக செயற்பட்டு வருகின்றனர்....

 


( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை சேனனாயக்க சமுத்திர அணைக்கட்டின் வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம். எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
என்று நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் பொறியாளர் அஜித் கணசேகர எச்சரிக்கை அறிக்கையில் விடுத்துள்ளார்.

இவ் அறிக்கை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மாத்திரமே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது 

கல்ஒயா ஆற்றின் மேல்பகுதி மற்றும் நடுப்பகுதியில் ஏற்பட்ட கனமழையால் இங்கினியாகல, அமைந்துள்ள சேனனாயக்க சமுத்திரம் அணையின் நீர்மட்டம் அதிகபட்ச கொள்ளளவிற்கு அருகில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பெய்த கடும் மழையால் அணையின் வான் கதவுகளை திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

அவ்வாறு திறக்கப்பட்டால் கல்ஒயா ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம் உருவாகும்.

எனவே ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அந்தப் பகுதிகளால் பயணம் செய்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக பின்வரும் பிரதேசங்களில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்:

தமனஅம்பாறைஇறக்காமம்அட்டாளைச்சேனைசம்மாந்துறை நிந்தவூர்காரைதீவு
சாய்ந்தமருதுகல்முனை
நாவிதன்வெளிதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் (ஒலுவில்) அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
.
தொடர்புடைய அனர்த்த முகாமைத்துவ  அதிகாரிகள் உடனடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


 (. வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கிட்டங்கி - நாவிதன்வெளி மற்றும் மண்டூர்- வெல்லாவெளி பாதைகள் முற்றாக மூடப்பட்டுள்ளன.

அதேவேளை காரைதீவு - அம்பாறை பிரதான வீதி பொலிஸாரின் கண்காணிப்பில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போக்குவரத்து நடைபெறுகிறது.

மேலும் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.

குறிப்பாக காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் காரைதீவு மற்றும் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் வெள்ளம் வீதிக்கு குறுக்காக பாய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நீத்தையாறு அருகே  சாகாம வீதியிலுள்ள மதகு (Causeway) இனூடாக 2 அடி அளவான வெள்ள நீர் வடிந்தோடுவதனால்  அவ்வழியில் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்கப் பட்டுள்ளது.

 அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில்  அட்டாளைச்சேனை, தைக்கா நகர் , அக்கரைப்பற்று, நிந்தவூர்,காரைதீவு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில்  மூழ்கிக் காணப்படுகின்றன.

மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மக்கள் பாதுகாப்பான முறையில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொலிஸ் திணைக்களத்தைக் கேட்டுள்ளது

 ( வி.ரி.சகாதேவராஜா) ui




ஐக்கிய நாடுகள் சிறுவர் தினத்தையொட்டி கல்முனை  ஆதார வைத்திய சாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த விசேட தேவை உடைய குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

 இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் சுகுணன் குணசிங்கம்  தலைமையில் இடம்பெற்றது.
 இந்நிகழ்வினை கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் ரொசாந்த்துடைய ஏற்பாட்டில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் நௌபீன்  அவர்களும், வைத்தியர்கள், தாதிய பரிபாலகர், நிர்வாக உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர்கள், பேச்சுப் பயிற்சியாளர், இயன் மருத்துவ நிபுணர், மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 இந்நிகழ்விற்கான அனுசரணையினை அனலிட்டிக்கல் இன்ஸ்ட்ருமென்ட் பிரைவேட் லிமிடெட் வழங்கியிருந்தது. இந்நிறுவனத்தின் பிரதிநிதியாக நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர்  கலையரசன்  கலந்து சிறப்பித்திருந்தார்

 


கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 


அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது.

அக்கரைப்பற்று சந்தை பகுதி உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நேற்று முதல் ஆரம்பித்த பலத்த மழை இன்று (25) காலையிலும் தொடரும் நிலையில் மீண்டும் மழை பெய்யவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றது.
ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.