Showing posts with label Article. Show all posts

 "வரலாற்றில் அரிதாகவே ஒரு தருணம் வரும் - அப்போது நாம் பழையதிலிருந்து புதியதுக்குள் ஒரு அடியை எடுத்து வைக்கிறோம்," என புதன்கிழமையன்று நியூயார்க்கில் உற்சாகமாக கூடிய மக்கள் மத்தியில் ஸோஹ்ரான் மம்தானி கூறினார்.

1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய புகழ்பெற்ற உரையை மேற்கோள் காட்டி, மம்தானி பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மம்தானி, "ஒரு யுகம் முடிவடையும் போது, ஒரு தேசத்தின் ஆன்மா தனது குரலை வெளிப்படுத்துகிறது. இன்று நாம் பழையதை விட்டு புதியதை நோக்கி செல்கிறோம்," என்றார்.

மம்தானி வெற்றி உரையை முடிந்தவுடன், 2004-ல் வெளியான பாலிவுட் திரைப்படமான தூம் படத்தின் பாடல் அரங்கில் ஒலித்தது.

பின்னர், ஜே-ஸி மற்றும் அலிசியா கீஸின் எம்பயர் ஸ்டேட் ஆஃப் மைண்ட் பாடல் ஒலித்தது. நியூயார்க்கின் முதல் இந்திய வம்சாவளி மேயராக, மம்தானி வரலாறு படைத்த தருணத்தில், இந்தப் பாடல் புதிய அர்த்தத்தைப் பெற்றது.

 

பெண்கள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்தது இந்திய அணி.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்திடமும் தோல்வியைச் சந்தித்திருந்தது.

இந்த போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் இந்தியாவின் கைகளில் இருந்து நழுவியது போல தோன்றியது.

251 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா, 144/6 என்ற நிலையில் இருந்தது. இருந்தாலும், இந்தியா அந்தப் போட்டிடியில் தோற்றது.

ஆஸ்திரேலியாவோ சேஸிங்கில் உலக சாதனை (அன்றைய தேதிக்கு) படைத்து இந்தியாவை வீழ்த்தியது.

விளம்பரம்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட 10 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் இந்தியா இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்க, இந்திய பேட்டர்கள் இலக்கை எட்டிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது, இருந்தாலும் தோல்வியே மிஞ்சியது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
இந்தியாவில் கிடைத்த வாசுகி பாம்புதான் உலகிலேயே நீளமானதா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
இந்தியாவில் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி' பாம்பின் உணவும் வேட்டை முறைகளும் என்ன? ஆய்வாளர்கள் தகவல்
'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, ஆனால்..!' ஏர் இந்தியா விபத்தில் தப்பியர் கூறுவது என்ன?
ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய ஒரேயொரு நபர் இப்போது எப்படி இருக்கிறார்?
ஆந்திர கூட்ட நெரிசல், ஸ்ரீகாகுளம் கோட்டா நெரிசல், கோவில் கூட்ட நெரிசல் 
'திருப்பதியில் முழுமையான தரிசனம் கிடைக்காததால் தனியே கோவில் கட்டினேன்' - யார் இவர்?
மகளிர் உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - தென் ஆப்ரிக்கா
சச்சின், கோலி வாழ்த்து: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசு எவ்வளவு?
End of அதிகம் படிக்கப்பட்டது
பலமான அணியாகக் கருதப்பட்ட இந்தியா சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பையில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளைச் சந்தித்தது.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது இந்தியா
ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து இப்போது இந்த ஞாயிறு இந்தியாவுக்கானதாக மலர்ந்தது. அன்று தொடர் தோல்விகளைச் சந்தித்த அதே அணி, இன்று உலக சாம்பியன் ஆகியிருக்கிறது.

மூன்று தொடர் தோல்விகளுக்கும் வெற்றிக்கும் இடையிலான இந்த இரண்டு வாரங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன? அந்தத் தோல்விகளில் இருந்து இந்தியா மீண்டு வந்தது எப்படியென்று, சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரனிடம் பிபிசி தமிழ் பேசியது.

பொறுப்பெடுத்துக்கொண்ட சீனியர்கள்
இந்திய அணியின் எழுச்சிக்கு மிக முக்கியக் காரணமாக ஆர்த்தி சங்கரன் சொல்வது, ''இந்திய சீனியர் வீராங்கனைகள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான்''

"அந்தத் தோல்விகளுக்குப் பின் சீனியர் வீராங்கனைகள் தங்கள் கைகளில் பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர். தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இது அணிக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்" என்று கூறினார் அவர்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 60 பந்துகளுக்கு 62 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றுவிடும் நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.

இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருக்க, 88 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த ஸ்மிரிதி மந்தனா, ஒரு பந்தை தூக்கி அடித்து அவுட் ஆனார். அதன்பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ 4 ரன்களில் தோல்வியடைந்தது இந்தியா.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கையில் எடுத்துக்கொண்டது மாற்றத்தை ஏற்படுத்தியது என்கிறார் ஆர்த்தி சங்கரன்
இந்தத் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி மந்தனா, "எங்கள் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம். அந்த சரிவு என்னிடம் இருந்து தொடங்கியதால் நான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆட்டத்தை இறுதி வரையிலும் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். என் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம்" என்று கூறினார்.

இப்படி ஒரு முன்னணி வீராங்கனை பொறுப்பை தன் மீது எடுத்துக்கொண்டது திருப்புமுனை ஏற்படுத்திய விஷயம் என்கிறார் ஆர்த்தி.

இந்த அணுகுமுறையை கடைசி இரண்டு போட்டிகளில் தீப்தி ஷர்மாவின் பேட்டிங்கிலுமே பார்க்க முடிந்தது. களமிறங்கியதும் செட்டில் ஆக சில பந்துகள் எடுத்துக்கொண்டு, மெல்ல தன் ஆட்டத்துக்குள் செல்பவர் தீப்தி ஷர்மா. அதுதான் அவரது அணுகுமுறை. ஆனால், அரையிறுதியிலும் இறுதிப் போட்டியிலும் வேறொரு அணுகுமுறையை அவரிடம் பார்க்க முடிந்தது.

அரையிறுதியில் 338 ரன்களை இந்திய அணி சேஸ் செய்ததால், செட்டில் ஆக தீப்தி ஒரு பந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வந்ததில் இருந்தே அதிரடி காட்டியவர், 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டே டாட் பால்கள்தான் ஆடினார். கடினமான சிங்கிள்களைத் தவிர்க்கும் அவர், ரிஸ்க் எடுத்து ஓடி ரன் அவுட்டும் ஆனார்.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,நாக் அவுட் போட்டிகளில் பேட்டிங்கில் தீப்தியின் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது
இறுதிப் போட்டியில் கூட தீப்தி அதைத்தான் செய்தார். "ஷஃபாலி, ஜெமி இருவரும் அடுத்தடுத்து அவுட்டான பிறகு, ஹர்மனும் மெதுவாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் ரன் ரேட் பெரிய அடி வாங்கியிருக்கும். ஆனால், அப்படி ஏற்படாமல் தீப்திதான் பார்த்துக்கொண்டார். இல்லையெனில் இந்தியா அந்த கட்டத்தில் பின் தங்கியிருந்திருக்கும்" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.

இறுதிப் போட்டியில் தீப்தி 58 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வெளியேறிய பிறகும் இந்தியாவின் ரன் ரேட் சீராக இருந்ததற்கு முக்கியக் காரணமாக விளங்கியிருந்தார் தீப்தி.

சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டதை முக்கியக் காரணமாகக் கூறும் ஆர்த்தி சங்கரன், சில டெக்னிக்கலான காரணங்களையும் குறிப்பிட்டார்.

சரியான காம்பினேஷனும், மாறிய பேட்டிங் ஆர்டரும்
"காம்பினேஷனை சரியாகக் கண்டறிந்து, ஆறாவது பௌலரை சேர்த்தது இந்த மாற்றத்துக்கான முக்கியமான விஷயம். அது ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிக்குத் தேவைப்பட்டது" என்கிறார் ஆர்த்தி சங்கரன்.

அதிக பேட்டிங் ஆப்ஷன்கள் வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் இந்திய அணி 5 பௌலர்களை மட்டுமே அணியில் எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 330 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாததற்கும் அது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அதை சரிசெய்தது இந்திய அணி. அடுத்த போட்டிகளில் 6 பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதுபோல் அணியை மாற்றினார்கள்.

அதேபோல், பேட்டிங் ஆர்டரையும் ஒரேபோல் வைத்திருக்காமல் மாற்றியதும் முக்கியக் காரணம் என்றும், குறிப்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸை நம்பர் 3 இடத்தில் ஆடவைத்ததும் இந்த மாற்றத்துக்கான ஒரு முக்கியம் என்றும் ஆர்த்தி சங்கரன் குறிப்பிட்டார்.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஜெமிமா நம்பர் 3 பொசிஷனில் களமிறங்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
வழக்கமாக ஐந்தாவது ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு வந்த ஜெமிமாவை, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெளியே அமர்த்தியது இந்திய நிர்வாகம்.

ஆனால், அடுத்த போட்டியிலேயே அவரை அணிக்குக் கொண்டு வந்ததோடு, மூன்றாவது வீரராகவும் களமிறக்கினார்கள். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார் ஜெமிமா.

அதற்கு முன் ஆடிய 55 போட்டிகளில் மூன்று முறை மட்டுமே மூன்றாவது வீரராகக் களமிறங்கியிருந்தார் ஜெமிமா.

அந்த நியூசிலாந்து போட்டியில் கூட அவர் முதலில் ஐந்தாவது இடத்தில் தான் ஆடுவதாக இருந்தது. ஓப்பனர்கள் 33 ஓவர்கள் ஆடிவிட்டதால் அவரை மூன்றாவது வீரராகக் களமிறக்கினார்கள்.

அதேபோல் அரையிறுதியில் கூட களமிறங்குவதற்கு 10 நிமிடம் முன்புதான்தான் அந்த இடத்தில் விளையாடப்போவது பற்றி அணி நிர்வாகம் கூறியதாகச் சொல்லியிருந்தார் ஜெமிமா.

அந்த மாற்றம் அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தக் காரணமாக அமைந்தது.

இப்படி முன்கூட்டியே செய்திருந்த பேட்டிங் ஆர்டர் திட்டங்களை மாற்றியது சாதகமான அம்சம் என்று குறிப்பிட்டார் ஆர்த்தி சங்கரன்.

ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி
அந்தத் தோல்விகளுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்ஸியிலும் நல்ல மாற்றங்கள் தெரிந்ததாகக் குறிப்பிட்டார் ஆர்த்தி. குறிப்பாக ஃபீல்ட் செட் அப் பல தருணங்களில் மிகவும் துல்லியமாக இருந்ததாக அவர் கூறினார்.

"சமீபத்திய போட்டிகளில் இந்தியா ஃபீல்டிங் செய்தபோது பௌண்டரிகள் தடுக்கப்பட்ட விகிதம் அதிகரித்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஃபீல்டிங் திறன் சிறப்பாக இருந்ததோடு, சரியான இடங்களில் சரியான ஃபீல்டர்களை நிற்க வைத்ததும் இதில் முக்கியக் காரணம்" என்றார் ஆர்த்தி.

இறுதிப் போட்டியில் கூட இதைப் பார்க்க முடிந்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் விக்கெட் வீழ்ந்ததே இப்படி நல்ல ஃபீல்டிங் செட் அப் மற்றும் துல்லியமான ஃபீல்டிங்கால்தான்.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஃபீல்டிங்கில் ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்த முடிவுகள் சிறப்பாக இருந்ததாகக் கூறுகிறார் ஆர்த்தி சங்கரன்
அவுட் ஆவதற்கு முந்தைய பந்தை டாஸ்மின் பிரிட்ஸ் கவர் திசையில் அடித்துவிட்டு ஓட முயற்சி செய்தார். ஆனால், சிறப்பாக ஃபீல்டிங் செய்து ரன் ஓட விடாமல் ஜெமிமா தடுத்தார்.

அடுத்த பந்தை மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு பிரிட்ஸ் ரன் எடுக்க முயற்சி செய்ய, டைரக்ட் ஹிட் மூலம் அவரை அவுட்டாக்கினார் அமஞ்சோத் கவுர்.

இந்தியாவின் இரண்டு சிறந்த ஃபீல்டர்களை முக்கியமான அந்த இடங்களில் நிறுத்தி வைத்திருந்ததும், அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டதும்தான் விக்கெட் கணக்கை தொடங்கிவைத்தது.

அதுமட்டுமல்ல, ஜாஃப்தா அவுட்டானபோது, அந்த கேட்சைப் பிடித்த ராதா யாதவ் ஷார்ட் மிட் ஆன் பொசிஷனில் வழக்கத்தைவிட மிகவும் நேராக நின்றிருந்தார்.

அதுபோக, பிரிட்ஸுக்கு 'சில்லி மிட் ஆன்' ஃபீல்டர் கூட (அங்கும் ஜெமிமா) வைத்திருந்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். இப்படியான ஃபீல்ட் பொசிஷன்கள் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்தின.

ஆனால், இதற்கு முன்பாக இதே ஃபீல்டிங் செட் அப் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன், இந்தியாவின் ஃபீல்டிங் செட் அப் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அது அந்தத் தோல்விகளுக்குப் பின் நன்றாகவே மாறியிருக்கிறது.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரு வாரங்கள் முன்பு தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்த இந்தியா, இப்போது உலக சாம்பியன் ஆகியிருக்கிறது
"ஆட்டம் பற்றிய விழிப்புணர்வு இறுதிப் போட்டியில் ஹர்மனிடம் நன்றாகத் தெரிந்தது" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.

அந்தத் தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்திய அணி தங்கள் தவறுகளை ஏற்றுத் திருத்திக் கொண்டதும், சீனியர் வீராங்கனைகள் பொறுப்புகளை தங்கள் கைகளிலும் எடுத்துக்கொண்டது இந்த மாற்றத்தின் மிக முக்கியமாகக் காரணமாக விளங்கியது என்று கருதுகிறார் ஆர்த்தி.


பெண்கள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்தது இந்திய அணி.


தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்திடமும் தோல்வியைச் சந்தித்திருந்தது.


இந்த போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் இந்தியாவின் கைகளில் இருந்து நழுவியது போல தோன்றியது.


251 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா, 144/6 என்ற நிலையில் இருந்தது. இருந்தாலும், இந்தியா அந்தப் போட்டிடியில் தோற்றது.


ஆஸ்திரேலியாவோ சேஸிங்கில் உலக சாதனை (அன்றைய தேதிக்கு) படைத்து இந்தியாவை வீழ்த்தியது.




இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட 10 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் இந்தியா இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்க, இந்திய பேட்டர்கள் இலக்கை எட்டிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது, இருந்தாலும் தோல்வியே மிஞ்சியது.



இந்தியாவில் கிடைத்த வாசுகி பாம்புதான் உலகிலேயே நீளமானதா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி' பாம்பின் உணவும் வேட்டை முறைகளும் என்ன? ஆய்வாளர்கள் தகவல்

'


மகளிர் உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - தென் ஆப்ரிக்கா

சச்சின், கோலி வாழ்த்து: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசு எவ்வளவு?

End of அதிகம் படிக்கப்பட்டது

பலமான அணியாகக் கருதப்பட்ட இந்தியா சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பையில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளைச் சந்தித்தது.


இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது இந்தியா

ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து இப்போது இந்த ஞாயிறு இந்தியாவுக்கானதாக மலர்ந்தது. அன்று தொடர் தோல்விகளைச் சந்தித்த அதே அணி, இன்று உலக சாம்பியன் ஆகியிருக்கிறது.


மூன்று தொடர் தோல்விகளுக்கும் வெற்றிக்கும் இடையிலான இந்த இரண்டு வாரங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன? அந்தத் தோல்விகளில் இருந்து இந்தியா மீண்டு வந்தது எப்படியென்று, சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரனிடம் பிபிசி தமிழ் பேசியது.


பொறுப்பெடுத்துக்கொண்ட சீனியர்கள்

இந்திய அணியின் எழுச்சிக்கு மிக முக்கியக் காரணமாக ஆர்த்தி சங்கரன் சொல்வது, ''இந்திய சீனியர் வீராங்கனைகள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான்''


"அந்தத் தோல்விகளுக்குப் பின் சீனியர் வீராங்கனைகள் தங்கள் கைகளில் பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர். தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இது அணிக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்" என்று கூறினார் அவர்.


இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 60 பந்துகளுக்கு 62 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றுவிடும் நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.


இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருக்க, 88 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த ஸ்மிரிதி மந்தனா, ஒரு பந்தை தூக்கி அடித்து அவுட் ஆனார். அதன்பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ 4 ரன்களில் தோல்வியடைந்தது இந்தியா.


இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கையில் எடுத்துக்கொண்டது மாற்றத்தை ஏற்படுத்தியது என்கிறார் ஆர்த்தி சங்கரன்

இந்தத் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி மந்தனா, "எங்கள் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம். அந்த சரிவு என்னிடம் இருந்து தொடங்கியதால் நான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆட்டத்தை இறுதி வரையிலும் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். என் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம்" என்று கூறினார்.


இப்படி ஒரு முன்னணி வீராங்கனை பொறுப்பை தன் மீது எடுத்துக்கொண்டது திருப்புமுனை ஏற்படுத்திய விஷயம் என்கிறார் ஆர்த்தி.


இந்த அணுகுமுறையை கடைசி இரண்டு போட்டிகளில் தீப்தி ஷர்மாவின் பேட்டிங்கிலுமே பார்க்க முடிந்தது. களமிறங்கியதும் செட்டில் ஆக சில பந்துகள் எடுத்துக்கொண்டு, மெல்ல தன் ஆட்டத்துக்குள் செல்பவர் தீப்தி ஷர்மா. அதுதான் அவரது அணுகுமுறை. ஆனால், அரையிறுதியிலும் இறுதிப் போட்டியிலும் வேறொரு அணுகுமுறையை அவரிடம் பார்க்க முடிந்தது.


அரையிறுதியில் 338 ரன்களை இந்திய அணி சேஸ் செய்ததால், செட்டில் ஆக தீப்தி ஒரு பந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வந்ததில் இருந்தே அதிரடி காட்டியவர், 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டே டாட் பால்கள்தான் ஆடினார். கடினமான சிங்கிள்களைத் தவிர்க்கும் அவர், ரிஸ்க் எடுத்து ஓடி ரன் அவுட்டும் ஆனார்.


இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,நாக் அவுட் போட்டிகளில் பேட்டிங்கில் தீப்தியின் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது

இறுதிப் போட்டியில் கூட தீப்தி அதைத்தான் செய்தார். "ஷஃபாலி, ஜெமி இருவரும் அடுத்தடுத்து அவுட்டான பிறகு, ஹர்மனும் மெதுவாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் ரன் ரேட் பெரிய அடி வாங்கியிருக்கும். ஆனால், அப்படி ஏற்படாமல் தீப்திதான் பார்த்துக்கொண்டார். இல்லையெனில் இந்தியா அந்த கட்டத்தில் பின் தங்கியிருந்திருக்கும்" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.


இறுதிப் போட்டியில் தீப்தி 58 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வெளியேறிய பிறகும் இந்தியாவின் ரன் ரேட் சீராக இருந்ததற்கு முக்கியக் காரணமாக விளங்கியிருந்தார் தீப்தி.


சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டதை முக்கியக் காரணமாகக் கூறும் ஆர்த்தி சங்கரன், சில டெக்னிக்கலான காரணங்களையும் குறிப்பிட்டார்.


சரியான காம்பினேஷனும், மாறிய பேட்டிங் ஆர்டரும்

"காம்பினேஷனை சரியாகக் கண்டறிந்து, ஆறாவது பௌலரை சேர்த்தது இந்த மாற்றத்துக்கான முக்கியமான விஷயம். அது ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிக்குத் தேவைப்பட்டது" என்கிறார் ஆர்த்தி சங்கரன்.


அதிக பேட்டிங் ஆப்ஷன்கள் வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் இந்திய அணி 5 பௌலர்களை மட்டுமே அணியில் எடுத்திருந்தது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 330 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாததற்கும் அது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அதை சரிசெய்தது இந்திய அணி. அடுத்த போட்டிகளில் 6 பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதுபோல் அணியை மாற்றினார்கள்.


அதேபோல், பேட்டிங் ஆர்டரையும் ஒரேபோல் வைத்திருக்காமல் மாற்றியதும் முக்கியக் காரணம் என்றும், குறிப்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸை நம்பர் 3 இடத்தில் ஆடவைத்ததும் இந்த மாற்றத்துக்கான ஒரு முக்கியம் என்றும் ஆர்த்தி சங்கரன் குறிப்பிட்டார்.


இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜெமிமா நம்பர் 3 பொசிஷனில் களமிறங்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

வழக்கமாக ஐந்தாவது ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு வந்த ஜெமிமாவை, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெளியே அமர்த்தியது இந்திய நிர்வாகம்.


ஆனால், அடுத்த போட்டியிலேயே அவரை அணிக்குக் கொண்டு வந்ததோடு, மூன்றாவது வீரராகவும் களமிறக்கினார்கள். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார் ஜெமிமா.


அதற்கு முன் ஆடிய 55 போட்டிகளில் மூன்று முறை மட்டுமே மூன்றாவது வீரராகக் களமிறங்கியிருந்தார் ஜெமிமா.


அந்த நியூசிலாந்து போட்டியில் கூட அவர் முதலில் ஐந்தாவது இடத்தில் தான் ஆடுவதாக இருந்தது. ஓப்பனர்கள் 33 ஓவர்கள் ஆடிவிட்டதால் அவரை மூன்றாவது வீரராகக் களமிறக்கினார்கள்.


அதேபோல் அரையிறுதியில் கூட களமிறங்குவதற்கு 10 நிமிடம் முன்புதான்தான் அந்த இடத்தில் விளையாடப்போவது பற்றி அணி நிர்வாகம் கூறியதாகச் சொல்லியிருந்தார் ஜெமிமா.


அந்த மாற்றம் அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தக் காரணமாக அமைந்தது.


இப்படி முன்கூட்டியே செய்திருந்த பேட்டிங் ஆர்டர் திட்டங்களை மாற்றியது சாதகமான அம்சம் என்று குறிப்பிட்டார் ஆர்த்தி சங்கரன்.


ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி

அந்தத் தோல்விகளுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்ஸியிலும் நல்ல மாற்றங்கள் தெரிந்ததாகக் குறிப்பிட்டார் ஆர்த்தி. குறிப்பாக ஃபீல்ட் செட் அப் பல தருணங்களில் மிகவும் துல்லியமாக இருந்ததாக அவர் கூறினார்.


"சமீபத்திய போட்டிகளில் இந்தியா ஃபீல்டிங் செய்தபோது பௌண்டரிகள் தடுக்கப்பட்ட விகிதம் அதிகரித்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஃபீல்டிங் திறன் சிறப்பாக இருந்ததோடு, சரியான இடங்களில் சரியான ஃபீல்டர்களை நிற்க வைத்ததும் இதில் முக்கியக் காரணம்" என்றார் ஆர்த்தி.


இறுதிப் போட்டியில் கூட இதைப் பார்க்க முடிந்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் விக்கெட் வீழ்ந்ததே இப்படி நல்ல ஃபீல்டிங் செட் அப் மற்றும் துல்லியமான ஃபீல்டிங்கால்தான்.


இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஃபீல்டிங்கில் ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்த முடிவுகள் சிறப்பாக இருந்ததாகக் கூறுகிறார் ஆர்த்தி சங்கரன்

அவுட் ஆவதற்கு முந்தைய பந்தை டாஸ்மின் பிரிட்ஸ் கவர் திசையில் அடித்துவிட்டு ஓட முயற்சி செய்தார். ஆனால், சிறப்பாக ஃபீல்டிங் செய்து ரன் ஓட விடாமல் ஜெமிமா தடுத்தார்.


அடுத்த பந்தை மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு பிரிட்ஸ் ரன் எடுக்க முயற்சி செய்ய, டைரக்ட் ஹிட் மூலம் அவரை அவுட்டாக்கினார் அமஞ்சோத் கவுர்.


இந்தியாவின் இரண்டு சிறந்த ஃபீல்டர்களை முக்கியமான அந்த இடங்களில் நிறுத்தி வைத்திருந்ததும், அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டதும்தான் விக்கெட் கணக்கை தொடங்கிவைத்தது.


அதுமட்டுமல்ல, ஜாஃப்தா அவுட்டானபோது, அந்த கேட்சைப் பிடித்த ராதா யாதவ் ஷார்ட் மிட் ஆன் பொசிஷனில் வழக்கத்தைவிட மிகவும் நேராக நின்றிருந்தார்.


அதுபோக, பிரிட்ஸுக்கு 'சில்லி மிட் ஆன்' ஃபீல்டர் கூட (அங்கும் ஜெமிமா) வைத்திருந்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். இப்படியான ஃபீல்ட் பொசிஷன்கள் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்தின.


ஆனால், இதற்கு முன்பாக இதே ஃபீல்டிங் செட் அப் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன், இந்தியாவின் ஃபீல்டிங் செட் அப் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அது அந்தத் தோல்விகளுக்குப் பின் நன்றாகவே மாறியிருக்கிறது.



படக்குறிப்பு,இரு வாரங்கள் முன்பு தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்த இந்தியா, இப்போது உலக சாம்பியன் ஆகியிருக்கிறது

"ஆட்டம் பற்றிய விழிப்புணர்வு இறுதிப் போட்டியில் ஹர்மனிடம் நன்றாகத் தெரிந்தது" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.


அந்தத் தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்திய அணி தங்கள் தவறுகளை ஏற்றுத் திருத்திக் கொண்டதும், சீனியர் வீராங்கனைகள் பொறுப்புகளை தங்கள் கைகளிலும் எடுத்துக்கொண்டது இந்த மாற்றத்தின் மிக முக்கியமாகக் காரணமாக விளங்கியது என்று கருதுகிறார் ஆர்த்தி.



 அமெரிக்கா தீவிரவாதி என்று அறிவித்த முதல் நபர்,


உலகில் நடக்கும் போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்-களின்‌ பிதாமகள்.,


கருப்பின மக்களை கல்வி மற்றும் கவிதை மூலம் வெள்ளையர்களின் இன வெறி -க்கு எதிரான புரட்சியை விதைத்தவர்.


கொலையாளி என்று பொய் குற்றச்சாட்டில் பல ஆண்டுகளாக அமெரிக்கா சித்திரவதை செய்தது!


அவர் இறக்கும் தருவாயில் இருந்த போது மக்கள் ஒன்றிணைந்து அவரை சிறையில் இருந்து காணாமல் போக செய்தனர்.


பல மாதங்களுக்கு பிறகு அவர் கியூபா-வில் உயிருடன் இருப்பதாக தெரிய வந்ததும்!


அவரை அமெரிக்காவின் முதல் தீவிரவாதியாக அறிவித்து அவரின் உயிருக்கு 2 மில்லியன் டாலர் தொகையை அறிவித்தது!


அவரின் புத்தகங்கள் உலகின் பல போராட்டங்களை ஒருங்கிணைக்க உதவும் அகராதி!


கடைசி வரை அவரை அமெரிக்காவினால் நெருங்க முடியவில்லை!


தோழர். Assata Shakur..,

நேற்றுடன் தான் சிந்தப்பதை நிறுத்திக் கொண்டார்!


 


தெற்காசியாவில் மிக வேகமான பெண் என்ற சாதனை இலங்கையை சேர்ந்த ருமேஷிகா ரத்னாயக்க 11.60 செக்கனில் வைத்து இருந்தார். வேகமான ஆண் இலங்கையை சேர்ந்த யுபுன் அபேகூன் 9.96 செக்கனில் இந்த சாதனையை வைத்து இருந்தார். இந்த நிலையில் கண்டியை சேர்ந்த சபியா யாமிக் 11.53 செக்கனில் நிறைவு செய்து 200 கோடி மக்கள் வாழும் தெற்காசியவின் புதிய வேக மங்கை என்ற சாதனையை புரிந்துள்ளார். பொதுவாக மெய்வல்லுனர் சாதனைகளில் (Athletic ) என்றுமே இலங்கை தான் முன்னணியில் இருக்கிறது

 


'ஹரிணி அமரசூரிய சமூக, இன ஆராய்ச்சி ஆய்வகம் பிரதமரின் தலைமையில் புதுடெல்லியில் திறந்து வைப்பு..


#SriLanka  #NewsFirstTamil #lka #HariniAmarasuriya  #india #IndiaSriLankaRelations

 

(ஜக்கலிசுடன் கட்டுரையாளர்)

தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் இன்று அரைசதம் அடித்திருக்கிறார்.பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து ஏரியாக்களிலும் ஜொலித்த அவருக்கு இன்றோடு ஐம்பது வயது ஆகிறது.


சுமார் 19 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் விளையாடிய அவரது பயணத்தை எண்களின் வாயிலாக அலசுவோம். ஏனெனில், "நம்பர்களை வைத்துப் பார்த்தால் ஒரு முழுமையான கிரிக்கெட்டர் என்பதற்கு மிக அருகில் வருவது காலிஸ்தான்" என்று டிராவிட்டே கூறியிருக்கிறார்!



டெஸ்ட் கிரிக்கெட்டில் காலிஸ்

166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் காலிஸ், 55.37 என்ற சராசரியில் 13289 ரன்கள் குவித்திருக்கிறார். சச்சின், ஜோ ரூட், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்து டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்தவர் இவர்தான்.


அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு (51) அடுத்து 45 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.


"டெஸ்ட் பேட்டர் காலிஸை உடைப்பதென்பது சாதாரண விஷயமில்லை. எத்தனை திட்டங்கள் வேண்டுமானால் தீட்டுங்கள், நாளின் முடிவில் அவர் ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்பார்" என்று ஒருமுறை புகழ்ந்திருந்தார் ரிக்கி பாண்டிங். ஆனால், அவரது சாதனைகள் பேட்டிங்கோடு நின்றுவிடவில்லை.



ஜாக் காலிஸ்

148 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜாக் காலிஸ் சாதனையை யாராலும் நெருங்க முடியாதது ஏன்?


பேட்டிங் போல் பந்துவீச்சிலேயும் காலிஸ் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். 32.65 என்ற சராசரியில் 292 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அவர்.


அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 43வது இடத்தில் இருக்கும் காலிஸ், ஹர்பஜன் சிங், இஷாந்த் ஷர்மா, ஜஹீர் கான், இஷாந்த் ஷர்மா, ஸ்வீட் ஹார்மிசன் போன்ற முன்னணி பௌலர்களுக்கு இணையான சராசரி வைத்திருக்கிறார்.


148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களுக்கு மேலும் 250 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்த ஒரே வீரர் காலிஸ்தான்.


ஏன், 5000+ ரன்கள் & 250+ விக்கெட்டுகள் என்ற பட்டியலில் இருப்பவர்களே மூவர்தான். அதில் காலிஸோடு இருப்பவர்கள் கபில் தேவ் மற்றும் சர் இயான் போத்தம் ஆகியோர் மட்டுமே.


இது மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகள் (23) வென்றவரும் இவர்தான். 9 முறை தொடர் நாயகன் விருது பெற்று, அஷ்வின் & முரளிதரன் (இருவரும் 11) இருவருக்கும் அடுத்து அந்தப் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் காலிஸ்.


ஜாக் காலிஸ்பட மூலாதாரம்,Graham Crouch-ICC/ICC via Getty Images

ஒருநாள் போட்டிகளில்...

ஒருநாள் ஃபார்மட்டைப் பொறுத்தவரை 328 போட்டிகளில் 44.36 என்ற சராசரியில் 11579 ரன்கள் விளாசியிருக்கிறார். அதிக ஒருநாள் ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் எட்டாவது இடம். அதேபோல் 31.79 என்ற சராசரியில் 273 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இந்தப் பட்டியலில் 19வது இடம். தென்னாப்பிரிக்காவின் மிகச் சிறந்த பௌலராகக் கருதப்படும் ஆலன் டொனால்டை விடவும் அதிக விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.


ஆல்ரவுண்டராகப் பார்க்கும்போதும், ஒருநாள் போட்டிகளில் 5000+ ரன்களும் 250+ விக்கெட்டுகளும் எடுத்திருக்கும் ஐந்து பேரில் இவரும் ஒருவர்.


முன்பொருமுறை காலிஸின் ஒருநாள் போட்டி அணுகுமுறையைப் புகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங், "காலிஸ் ஒருநாள் கிரிக்கெட்டை செஸ் போட்டி போல் மாற்றிவிடுவார். வியூகங்கள் வகுப்பார், நிதானமாகக் காத்திருப்பார், கருணை காட்டமாட்டார். ஆர்ப்பாட்டமே இருக்காது. ஆனால், முடிவுகள் கிடைக்கும்" என்று கூறியிருந்தார்.


ஜாக் காலிஸ் சாதனையை 148 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் முறியடிக்க முடியாதது ஏன்? 

பட மூலாதாரம்,Carl Fourie/Gallo Images/Getty Images

மூன்று ஃபார்மட்களிலும் சேர்த்தால்?

கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு ஃபார்மட்களிலுமே 10,000 ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் மொத்தமே ஆறு பேர் தான் - சச்சின், டிராவிட், பான்டிங், ஜெயவர்தனே, சங்கக்காரா, காலிஸ். இவர்களுள் பந்துவீச்சிலும் கலக்கியது சச்சினும், காலிஸும் மட்டும்தான்.


டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து 25534 ரன்கள் (ஆறாவது இடம்) & 519 விக்கெட்டுகள் (31வது இடம்) எடுத்துள்ள இவர், அதிக 50+ ஸ்கோர்கள் (211) எடுத்ததில் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார்.


இவ்வளவு ஏன் ஐபிஎல் அரங்கிலும் கூட சிறப்பாகவே செயல்பட்டார். 2010 சீசனில் 572 ரன்கள் விளாசி இரண்டாம் இடம் பிடித்தார். 2012 சீசனில் 409 ரன்கள் குவித்ததோடு 15 விக்கெட்டுகளும் கைப்பற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக விளங்கினார்.


ஜாக் காலிஸ்பட மூலாதாரம்,Duif du Toit/Gallo Images/Getty Images

நீண்ட காலம் சீராக ஆடியவர்!

காலிஸ் இன்னும் அதிகளவு புகழப்படுவதற்கு இன்னொரு காரணம் அவர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பது.


வேகப்பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கும்போதே கிரிக்கெட் வீரர்கள் காயத்துடனான போராட்டத்துக்கும் தயாராகிவிடுவார்கள். பேட்டர்கள் போல், ஸ்பின்னர்கள் போல் அவர்களால் அனைத்து போட்டிகளிலும் விளையாடிவிட முடியாது.


அதேபோல், எந்தவொரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராலும் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் விளையாடிட முடியாது. இன்றைய காலகட்டத்தில் ஹர்திக் பாண்டியா தொடங்கி ஆண்ட்ரே ரஸல் வரை அவர்கள் காயத்தோடு போராடுவதை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.


ஆனால், சர்வதேச அரங்கில் 519 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் காலிஸ். அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.


சர்வதேச கிரிக்கெட்டில் 28903 பந்துகளை (3வது இடம்) சந்தித்திருக்கும் காலிஸ், பௌலராக 31258 பந்துகள் வீசியிருக்கிறார் (18வது இடம்). வக்கார் யூனுஸ், டேல் ஸ்டெய்ன், பிரெட் லீ போன்ற ஜாம்பவான் பௌலர்களை விடவும் அதிக பந்துகள் வீசியிருக்கிறார்.


மொத்தம் 60161 பந்துகளில் நேரடியாக காலிஸின் பங்களிப்பு இருந்திருக்கிறது. அதாவது சுமார் 10026 ஓவர்கள் அந்த 22 யார்டு பிட்சுக்கு நடுவே உழைத்திருக்கிறார்.


தொடர்ந்து போட்டிகளில் விளையாடியது மட்டுமல்லாமல், அந்தப் போட்டிகளில் அவர் சீரான செயல்பாட்டையும் கொடுத்திருக்கிறார். 1999 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஒரே ஒரு ஆண்டு மட்டும்தான் (2008) அவரது ஆண்டு பேட்டிங் சராசரி நாற்பதுக்கும் குறைவாக இருந்திருக்கிறது.


காலிஸ் பற்றி ஒருமுறை பேசிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார, "தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு டிராவிட்டும், கபில் தேவும் இருந்திருந்து, அவர்களை ஒன்றிணைத்தால் என்ன வருமோ அதுதான் காலிஸ். அவரது திறன், ஒழுக்கம், நீண்ட காலம் ஆடிய தன்மையெல்லாம் அசாத்தியமானது" என்று புகழ்ந்தார்.


ஃபீல்டிங்கிலும் அசத்துபவர்!

ஜாக் காலிஸ்பட மூலாதாரம்,Getty Images

பேட்டிங், பௌலிங் மட்டுமல்ல, காலிஸ் ஃபீல்டிங்கிலும் அசத்தும் முழுமையான 3D வீரர். சர்வதேச அரங்கில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் 338 கேட்சுகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார் அவர்! இத்தனைக்கும் பெரும்பாலான கேட்ச்களை கடினமான ஸ்லிப் பகுதியில் நின்று பிடித்திருக்கிறார்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஜாய் பட்டச்சார்யா காலிஸின் ஃபீல்டிங் திறனை வெகுவாகப் பாராட்டி சில ஆண்டுகளுக்கு X தளத்தில் பதிவிட்டிருந்தார்.


அந்தப் பதிவில், "2011ம் ஆண்டு டெல்லிக்கு எதிரான போட்டியில் பௌண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார் காலிஸ். அங்கு மூன்று முழு நீள டைவ்கள் அடித்து 3 பௌண்டரிகளைத் தடுத்தார் காலிஸ். அணியின் ஃபிசியோ அவருக்கு உதவி செய்வதற்காக கிளம்பியபோது வேண்டாம் என்று காலிஸ் மறுத்துவிட்டார். அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்களில் வென்றது. டிரஸிங் ரூமில் காலிஸ் அவர் உடையைக் கழற்றியபோது அனைவரும் உரைந்து போனார்கள். ஏனெனில் உடல் முழுக்க காயம் பட்டிருந்தது. ரத்தம் ஒழுகியது. இளம் வீரர்கள் அர்ப்பணிப்பின் அர்த்தத்தை அன்று உணர்ந்து கொண்டார்கள்" என்று குறிப்பிடிருந்தார் ஜாய் பட்டாச்சார்யா.


இந்த நிகழ்வு நடந்தபோது காலிஸின் வயது 35.


ஓய்வுப் பிறகான சர்ச்சைகள்

ஓய்வு பெறும் வரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பைக் கொடுத்த காலிஸ், ஓய்வுக்குப் பிறகு சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.


2016ம் ஆண்டு இட ஒதுக்கீடு இலக்குகளை எட்டாததற்காக தென்னாபிரிக்க விளையாட்டு சங்கத்தை அந்நாட்டு அரசு கலைத்தது.


அதை விமர்சித்து அப்போது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் காலிஸ். அது விமர்சனத்துக்குள்ளனதும், "நான் அரசியில் தலையீட்டைத்தான் விமர்சித்தேனே ஒழிய, சமத்துவத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை" என்று விளக்கம் கூறிவிட்டு அந்தப் பதிவை நீக்கினார்.


1995ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகம் ஆனவர் 2014 வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். சாதனைகள் பல படைத்திருந்தாலும், தென்னாப்பிரிக்க அணிக்காக ஒரு உலக கோப்பையை வெல்ல முடியாதது குறித்து எப்போதுமே வருந்தியிருக்கிறார்.


காலிஸைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல, ஜாம்பவான் பிரயன் லாரா ஒருமுறை சொன்னதையே பயன்படுத்தலாம் "ஒரு அணியில் பேட்டராக மட்டும் காலிஸால் இடம்பெற முடியும். ஒரு அணியில் பௌலராக மட்டுமே அவரால் இடம்பெற முடியும். ஒரு அணியில் ஸ்லிப் ஃபீல்டராக மட்டுமே அவரால் இடம்பெற முடியும். காலிஸ் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்".

உலக தரவரிசையில் 197வது இடத்தில் உள்ள இலங்கை, இன்று ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த AFC ஆசிய கோப்பை  உதைபந்தாட்ட  2027 தகுதிச் சுற்றின் முதல் லெக்கில் 1-0 என்ற வெற்றியுடன் 138வது இடத்தில் உள்ள துர்க்மெனிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ⚽🔥


அக்டோபர் 14 ஆம் தேதி துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாட்டில் நடைபெறும் இரண்டாவது லெக்கில் லயன்ஸ் அணிக்கு சொந்த மண்ணில் ஒரு பெரிய வெற்றி ஒரு முக்கிய உந்துதலை அளிக்கிறது. 💪🇱🇰

 


🇵🇰 Pakistan: 30.8% 🇰🇼 Kuwait: 24.9% 🇪🇬 Egypt: 20.9% 🇶🇦 Qatar: 19.5% 🇲🇾 Malaysia: 19% 🇸🇦 Saudi Arabia: 18.7% 🇲🇽 Mexico: 16.9% 🇹🇷 Turkey: 14.5% 🇧🇩 Bangladesh: 14.2% 🇱🇰 Sri Lanka: 11.3% 🇿🇦 South Africa: 10.8% 🇮🇶 Iraq: 10.7% 🇺🇸 United States: 10.7% 🇮🇩 Indonesia: 10.6% 🇨🇳 China: 10.6% 🇪🇸 Spain: 10.3% 🇹🇭 Thailand: 9.7% 🇮🇳 India: 9.6% 🇮🇷 Iran: 9.1% 🇵🇹 Portugal: 9.1% 🇧🇷 Brazil: 8.8% 🇨🇦 Canada: 7.7% 🇵🇭 Philippines: 7.1% 🇰🇷 South Korea: 6.8% 🇯🇵 Japan: 6.6% 🇦🇺 Australia: 6.4% 🇮🇹 Italy: 6.4% 🇬🇧 United Kingdom: 6.3% 🇻🇳 Vietnam: 6.1% 🇷🇺 Russia: 5.6% 🇦🇷 Argentina: 5.4% 🇫🇷 France: 5.3% 🇪🇹 Ethiopia: 5% 🇳🇬 Nigeria: 3.6% (Source: International Diabetes Federation)

 


பெரும் போட்டிக்கு மத்தியில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை சனே டகாய்ச்சி பெற்றுள்ளார்.


செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி, தன்னுடன் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களையும் தோற்கடித்து ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றார். 


இது கட்சித் தலைமைப் பதவியில் அவர் வகிக்கும் மூன்றாவது வெற்றியாகும். 

 

எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒன்றுகூடலில் சனே டகாய்ச்சி ஜப்பானின் புதிய பெண் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.