நாசாவின் விண்வெளி வீரர் பயிற்சி திட்டத்தில் பட்டம் பெற்ற முதல் அரபு பெண்மணி நோரா அல்-மத்ரூஷி, இப்போது அவர் விண்வெளிக்கு தயாராகிவிட்டார்.
நோரா அல்மத்ரூஷி (அரபு$E: نورا المطروشي; பிறப்பு 1993) ஒரு எமிராட்டி பொறியாளர் மற்றும் விண்வெளி வீரர். ஏப்ரல் 2021 இல், அவர் ஒரு சர்வதேச பணி நிபுணராக பணியாற்றுவதற்காக விண்வெளி வீரர்களின் நாசா விண்வெளி வீரர் குழு 23 உடன் பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] நாசா விண்வெளி வீரர் திட்டத்தில் பட்டம் பெற்ற முதல் அரபு பெண்மணி ஆவார்
தொழில்
அல்மத்ரூஷி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகத்தில் BS பட்டம் பெற்ற பயிற்சியின் மூலம் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். 2011 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நடந்த சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றார். அவர் 2014 இல் பின்லாந்தில் உள்ள வாசா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (VAMK) படித்தார், மேலும் தென் கொரியாவின் சியோலில் உள்ள ஹன்யாங் பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியைப் படித்தார். 2016 முதல், அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய பெட்ரோலியம் கட்டுமான நிறுவனத்தில் குழாய் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் உறுப்பினராகவும் உள்ளார்
சர்வதேச மகளிர் தினம்! உலகம் முழுவதும் அன்று மிக உற்சாகமாக, மகிழ்ச்சியாக மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது. ஒருவகையில் இது மகிழ்ச்சியாக இருந்தாலும், இதன் இன்னொரு கோணத்தையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்கு முன்னதாக, உலக மகளிர் தினத்தின் உருவாக்கம் பற்றி ஒரு சுருக்கமான வரலாற்றைப் பார்ப்போம்.
1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி உழைக்கும் பெண்களின் வேலை நேரத்தைக் குறைக்கவும், கூலியை உயர்த்தவும், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோரியும், சுமார் 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை, அடுத்த ஆண்டே தேசிய பெண்கள் தினமாக அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி அறிவித்தது. எனினும், 1975-ம் ஆண்டுதான் மார்ச் 8-ம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக ஐ.நா அறிவித்தது. அதைத் தொடர்ந்தே மெள்ள மெள்ள உலக அளவில் இது பரவ ஆரம்பித்தது.
தோள் சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு; 40 ஆண்டுக்காலம் போராட வைத்த அடக்குமுறை!
இன்று உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தினம், ஒரு நூற்றாண்டு காலப் பெண்களுடைய போராட்டங்களின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அவர்கள் நடத்திய பேரணி, ஆர்ப்பாட்டங்கள்தான் இன்றைய நம் ஆர்ப்பரிப்புகளுக்குக் காரணமாக இருக்கின்றன. பெண்களின் உரிமைகளுக்காக அவர்கள் குரல் கொடுக்கா விட்டால் இன்று நம்முடைய குரல்வளை நசுக்கப்பட்டிருக்கும்.
வாக்குரிமைக்காகப் போராடி அதைப் பெற்றுத் தராவிட்டால் நாம் வாக்களிக்கும் உரிமையற்று வெறும் பதுமைகளாகவே இருந்து கொண்டிருப்போம். வேலை நேரத்தைக் குறைக்கச் சொல்லி அவர்கள் போராடி இருக்காவிட்டால் இன்று வெளியிலும் வீட்டிலும் பெண்களின் நேரம் சுரண்டப்பட்டிருக்கும். ஆக, இன்று பெண்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் உரிமைகள் எல்லாம் போராடி பெறப்பட்டவை. வலுவான அடித்தளம் கொண்டவை. பல்லாயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவை.
இத்தகு உரிமைகளை அடைவதற்குக் காரணமான முன்னோடிப் பெண்களை நாம் போற்ற வேண்டும். இன்று எல்லா துறைகளிலும் நாம் மகிழ்ச்சியுடன் கண்ணுறும் பெண் முன்னேற்றத்துக்குப் பின்னால் பலரின் உழைப்பு, முயற்சி இருக்கிறது. அரசு எடுத்த முன்னெடுப்புகள் உள்ளன. எழுத்தாளர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் போன்றோர் பேசியும், எழுதியும் வருகின்றனர். பெண் விடுதலை குறித்தும், பெண் கல்வி, பெண் உரிமைகள் குறித்தும், அவர்கள் முன்வைத்த பார்வைகளும், செயல்பாடுகளும் பெண்களை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கின்றன.
ஆனால், இன்று பெண்கள் தினம் என்பது அதீத கொண்டாட்டத்துக்கு உரியதாக மாறி வருகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், சமீப ஆண்டுகளில்தான் `பெண்கள் தினம்’ பெண்கள் மற்றும் மக்களிடையே அதிக கவனம் பெற்று வருகிறது.
90-களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார கொள்கைகள், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவை காரணமாகப் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக பெண்களின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு கூறுகளில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்றுதான் சர்வதேச சந்தைப்படுத்துதல். இந்தியா மிகப்பெரிய நாடு. இந்தியாவின் மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் ஆவர். ஆகவே, பெண்களை மையப்படுத்தி வியாபாரச் சந்தைகள் நுணுக்கமாகத் தோன்றின.
அழகிப் போட்டிகள் அதன் பிறகுதான் உருக்கொள்ள ஆரம்பித்தன. சிவப்பாக, மெல்லிய உடல்வாகுடன் இருக்கும் பெண்கள்தான் அழகு என்னும் எண்ணத்தை ஊடகத்தின் வாயிலாக விளம்பரங்கள் மூலமாக மெள்ள மெள்ள விதைக்கத் தொடங்கினார்கள். தெற்காசிய நாடுகளில் தங்கள் வியாபாரத் தளங்களை ஏற்படுத்தவும், வலுவாக்கிக்கொள்ளவும் அவர்கள் எடுத்த ஆயுதம்தான் பெண்களின் அழகு குறித்த சிந்தனை.
இதன் காரணமாகப் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள், ஆடைகள் இவற்றை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை இங்கு பரப்பின. உலக அழகிப் போட்டிகள், பிரபஞ்ச அழகிப் போட்டிகள் நடத்தி இந்தியப் பெண்களை அழகிகள் என உலகுக்கே காட்டினர். அவர்களை தங்கள் பிராண்ட் அம்பாசிடராக நியமித்து, அவர்கள் வாயிலாக தங்கள் நிறுவன அழகு சாதனப் பொருள்களை சந்தைப்படுத்திக் கொண்டனர். அவர்கள் பயன்படுத்தும் பொருள்களை பயன்படுத்தினால் நாமும் அழகாகிவிடுவோம் என்ற மாயத் தோற்றத்தில் பெண்கள் விட்டில் பூச்சிகளாக விழுந்துகொண்டிருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாகவே சர்வதேச பெண்கள் தினமும் அப்படியொரு சந்தைப்படுத்துதலில் சிக்கிக்கொண்டதோ என்னும் எண்ணம் எழுகிறது. அரசாங்கம் பல்வேறு தினங்களை அறிவித்திருக்கிறது. அதைக் கொண்டாடியும் வருகிறது. இவ்வாறு கொண்டாடுவதன் மூலமாக அதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர்வார்கள், அது ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்காகத் தான்.
ஆனால், இவை எதையும் கருத்தில் கொள்ளாமல் காதலர் தினத்தைப் போலவே சர்வதேச பெண்கள் தினமும் ஒருநாள் கொண்டாட்டமாக ரொமான்ட்டிசைஸ் செய்யப்பட்டு வருகிறது. பெண்கள் தினம் என்பது இன்று அதன் முக்கியத்துவத்தை இழந்து அன்றைய மனமகிழ்ச்சிக்கு அல்லது கொண்டாட்டத்துக்கு மட்டுமே என மாறி இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
மார்ச் - 8 - மகளிர் தினம், கொண்டாடுவதற்கு மட்டுமல்ல! பெண்கள் தினம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டும்தானா, அதன் பின்னர் இருக்கும் அரசியல் என்ன என்பதை பற்றி ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும். பெண்கள் தினத்தன்று தொலைக்காட்சிகளில், பண்பலை நேரலைகளில் ஒருபக்கம் மகளிர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கும் பெண்களையும், மறுபுறம் இவை பற்றி எதுவும் தெரியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களையும், கட்டட வேலை, விவசாயக் கூலி வேலை செய்பவர்களையும் காண்பிப்பார்கள். அவர்களுக்கு மகளிர் தினம் என்றால் என்ன என்பது தெரியாது. பெண் உரிமை, பெண் விடுதலை பற்றித் தெரியாது. பெண் கல்வி பற்றி தெரியாது. பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவது தெரியாது. அவர்கள் பாட்டுக்கு அன்று கூட மழையில், வெயிலில், வயற்காட்டில், வீட்டில் உழைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படியெனில், இந்த இருவேறு காட்சிகள் ஏன் என்ற கேள்வியும் உடன் எழுகிறது.
இதுதான் யதார்த்தம். உண்மை. ஒருபுறம் மகளிர் தினத்தை அதிகமாக ரொமான்ட் டிசைஸ் செய்துகொண்டே இன்னொரு புறம் ஒரு பகுதிப் பெண்களை அதிலிருந்து விலக்கி வைத்திருக்கிறோம். பெண்கள் தினத்தை நாம் கொண்டாட ஆரம்பித்த நாளிலிருந்தே இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. எல்லா பெண்களையும் உள்ளடக்கிய ஒரு கொண்டாட்டம்தானே சரியாக இருக்க முடியும்? ஒரு பகுதி பெண்கள் அதுகுறித்த எந்த உணர்வும் இல்லாமல் இருப்பதற்கு எது காரணம்? பெண்களிடையே நிலவுகின்ற பழஞ்சிந்தனைகள் தான்.
மகளிர் தினம் கொண்டாடினால் மட்டும் போதுமா?
கல்வி சார்ந்த பணிகள் உயர்வானவை, கற்றறிந்த பெண்கள் தான் உயர்வானவர்கள், உடலுழைப்பு சார்ந்த வேலைகள் தாழ்ந்தவை, படிக்காத பெண்கள் தாழ்ந்தவர்கள் என எண்ணுதல்தான் மிகப்பெரிய காரணம். இந்த மேட்டிமைத் தனத்தில் இருந்து, மேட்டிமைச் சிந்தனையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். மகளிர் தினம் என்பது எல்லா பெண்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப் பட்ட, உடலுழைப்பு சார்ந்த பணிகளைச் செய்துவரும் பெண்களையும், பெண்களோடு, பெண் அரசியலோடு இணைக்க வேண்டும். இது நிகழவில்லை என்றால் மகளிர் தினம் கொண்டாடுவதில் என்ன பயன்? ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நிர்பயாவுக்காக தெருவில் இறங்கிப் போராடிய நாம், பாலியல் வன்முறைக்குப் பலியான அரியலூர் சிறுமிக்காகவோ, தேனி சிறுமிக்காகவோ, சேலம் சிறுமிக்காகவோ ஏன் குரல் கொடுக்க முன்வரவில்லை? பெண்கள் மீதான வன்முறைகளுக்குக் காரணம் பெண் என்னும் பாலினம் மட்டுமன்று. மாறாக சாதி, மதம், வர்க்கம் எல்லாமுமே செயல்படுகின்றன. இவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்க வேண்டும்.
எப்போதெல்லாம் எங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றனவோ, அப்போதெல்லாம் அங்கெல்லாம் பெண் உரிமைக்காகப் போராடுவதும், போராட்டத்தின் நியாயங்களை சமூகத்துக்கு எடுத்துச் செல்வதும்தான் பெண்களுக்கு உண்மையான மகளிர் தினக் கொண்டாட்டம்.
மட்டக்களப்பு மாவட்ட ஊர்கள்
1)மட்டக்களப்பு
2)மாங்கேணி
3)காயாங்கேணி
4)புனானை
5)பனிச்சங்கேணி
6)வட்டவான்
7)வாகரை
8)கதிரவெளி
9)பால்சேனை
10)கட்டுமுறிவு
11)மீராவோடை
12)மாஞ்சோலை
13)ஓட்டமாவடி
14)கறுவாக்கேணி
15)கும்புறுமூலை
16)கல்குடா
17)கல்மடு
18)வாழைச்சேனை
19)புதுக்குடியிருப்பு
20)கண்ணகிபுரம்
21)பெரியபுல்லுமலை
22)கரடியனாறு
23)மரப்பாலம்
24)வேப்பவட்டுவான்
25)ஆறுமுகத்தான் குடியிருப்பு
26)செங்கலடி
27)கொடுவாமடு
28)கொம்மாதுறை
29)வந்தாறுமூலை
30)மாவடிவேம்பு
31)களுவன்கேணி
32)சித்தாண்டி
33)ஈரலிக்குளம்
34)ஏறாவூர்
35)மஞ்சந்தொடுவாய்
36)நாவற்குடா
37)நொச்சிமுனை
38)கல்லடி
39)அமிர்தகழி
40)இருதயபுரம்
41)பாலமீன்மடு
42)புன்னைச்சோலை
43)சத்துருக்கொண்டான்
44)கருவேப்பங்கேணி
45)பெரிய ஊரணி
46)சின்ன ஊரணி
47)தாண்டவன்வெளி
48)தாமரைக்கேணி
49)கோட்டைமுனை
50)பெரிய உப்போடை
51)புளியந்தீவு
52)திமிலதீவு
53)வீச்சுக்கல்முனை
54)சேத்துக்குடா
55)காத்தான்குடி
56)ஆரையம்பதி
57)காங்கேயனோடை
58)தாழங்குடா
59)கோவில்குளம்
60)மண்முனை
61)கிரான்குளம்
62)வேடர் குடியிருப்பு
63)அம்பிலாந்துறை
64)கற்சேனை
65)அரசடித்தீவு
66)கடுக்காமுனை
67)பட்டிப்பளை
68)மகிழடித்தீவு
69)முதலைக்குடா
70முனைக்காடு
71)கொக்கட்டிச்சோலை
72)தாந்தாமலை
73)கணேசபுரம்
74)வெல்லாவெளி
75)காக்காச்சிவட்டை
76)பாலையடிவட்டை
77)விளாந்தோட்டம்
78)ஆனைகட்டியவெளி
79)நெல்லிக்காடு
80)பலாச்சோலை
81)கண்ணகிபுரம்(மட்டக்களப்பு)
82)பழுகாமம்
83)திக்கோடை
84)வீரன்சேனை
85)தும்பன்கேணி
86)வன்னிநகர்
87)பெரியபோரதீவு
88)கோவில்போரதீவு
89)குருக்கள்மடம்
90)செட்டிபாளையம்
91)மாங்காடு (மட்டக்களப்பு)
92)தேத்தாத்தீவு
93)களுதாவளை
94)களுவாஞ்சிக்குடி
95)பட்டிருப்பு
96)எருவில்
97)மகிழூர்
98)குருமண்வெளி
99)ஒந்தாச்சிமடம்
100)கோட்டைக்கல்லாறு
101)பெரியகல்லாறு
102)துறைநீலாவணை
103)செம்மண் ஓடை
104)முறக்கொட்டாஞ்சேனை
105)சந்திவெளி
106)கிரான்
107)குடும்பிமலை
108)வாகனேரி
109)மஞ்சந்தொடுவாய்
110)இலுப்படிச்சேனை
111)பாவற்கொடிச்சேனை
112)காஞ்சிரங்குடா
113)கரயாக்கந்தீவு
114)குறிஞ்சாமுனை
115)பருத்திச்சேனை
116)ஈச்சந்தீவு
117)வவுணதீவு
118)நாவற்காடு
119)விளாவெட்டுவான்
120)மகிழவெட்டுவான்
121)உன்னிச்சை
122)நரிப்புல்தோட்டம்
123)நெடியமடு
124)ஆயித்தியமலை
125)கரவெட்டி (மட்டக்களப்பு)
126)திராய்மடு
127)மட்டிக்களி
128)மாமாங்கம்
129)நாவலடி
130)திருப்பெருந்துறை
131)பாலமுனை
132)சுங்காங்கேணி
133)ஆஞ்சனேயபுரம்
134)பாசிக்குடா
134)தாண்டவன்வெளி
135)தன்னாமுனை
136)கொக்குவில்
137)களுமுந்தன்வெளி
138)பண்டாரியா வெளி
139)முனைத்தீவு
140)பட்டாபுரம்
141)தாண்டியடி
142)பாலைநகர்
143)காவத்தமுனை
144)நாசிவன்தீவு
145)நாவல் தோட்டம்
146)மாங்கேணி
147)மாந்தீவு
148)மண்டூர்
149)அம்பிளாந்துறை
150)முனைக்காடு
151)களுதாவளை
152)ஆறுமுகத்தான் குடியிருப்பு
153)மயிலம்பாவெளி
154)குருக்கள்மடம்
155)கல்லடி
156)தேற்றாத்தீவு
157)தேவபுரம்
158)சித்தாண்டி
159)ஐயங்கேணி
160)தளவாய்
161)பன்குடாவெளி
162)இலிப்பட்டிச்சேனை
163)தரவை
164)கோராவெளி
165)சவுக்கடி
166)மாமாங்கம்
167மட்டிக்களி
168)சிகரம்
169)பூநொச்சிமுனை
170)கர்பலா
171)பரீத்நகர்
172)கொத்தியாபுலை
173)பொண்டுகள் சேனை
174)வெட்டுக்காடு
175)விபுலானந்தபுரம்
176)நாவக்குடா
177)அரசடி
178)உப்புக்கராஜ்
179)பூம்புகார்
180)சீலாமுனை
181)புதுநகர்
182)வாகனேரி
183)கோரலிமடு
184)கள்ளியங்காடு
185)ஜெயந்திபுரம்
186)விஜயபுரம்
187)சிவபுரம்
188)பனிச்சையடி
189)கோவிற்குளம்
190)பால்வாத்த ஓடை
191)சின்னப் புல்லுமலை
192)பேத்தாளை
193)துறைவந்தியமேடு
194 சல்லித்தீவு
195)ஆணைகட்டியவெளி
196)மாவடி முன்மாரி
197)குருந்தையடி முன்மாரி
198)உப்புக்குளம்
199)காலபோட்டமடு
200)பனையறுப்பான்
201)பன்சேனை
202)சில்லிக்கொடியாறு
203)இலுக்குப்பொத்தானை
204)பெரியவெட்டுவான்
205)முந்தன் குமாரவெளி
206)தம்பானம்வெளி
207)காயன்குடா
208)மயிலவெட்டவான்
209)கரடியன் குளம்
210)புலயவெளி
211)பாலர்சேனை
212)கிண்ணையடி
213)கொண்டையன்கேணி
214)சின்னவெம்பு
215)மாவேற்குடா
216)சுரவணையடி ஊற்று
217)ஒல்லிக்குளம்
218)ரிதிதென்னை
219)வெருகல்
220)மாவிலங்கத்துறை
221)பிரம்படித்தீவு
222)இராஜபுரம்
223)மாவளையாறு
224)காந்திபுரம்
225)காந்தி கிராமம்
226)பொறுகாமம்
227)நவகி நகர்
228)வம்மியடியூற்று
229)செல்வாபுரம்
230)சங்கபுரம்
231)சின்னவத்தை
232)அம்மன்குளம்
233)மணிச்சறிமாறி
234)கெளுத்திமடு
235)வடமுனை
236)ஊத்துச்சேனை
237)கள்ளிச்சை
238)மருதநகர்
239)நெல்லிக்காடு
240)மாவடியோடை
241)கூளாவடி
242)கண்ணகிநகர்
243)மாதவணை
244)மயிலத்தைமடு
246)பிள்ளையாரடி
247)நாவக்கேணி
248)இராஜபுரம்
249)மண்முனை
250)களிமடு
251)புளியடிமடு
252)ஊத்துமடு
253)பழங்குடிப்புமடு
254)பம்பரச்சேனை
255)தூத்தன்சேனை
256)கொல்லநூறு
257)இரும்பாண்டகுளம்
258)ஆனையாண்டசேனை
259)சலம்பொக்கனை
260)மண்டம்பொக்கனை
261)கட்டக்காடு
262)பொன்னாங்கன்னித் தோட்டம்
263)மண்டபத்தடி
264)வேட்டையன்சேனை
265)காயன்மடு
266)வெள்ளமச்சேனை
267)காயன்குளம்
268)வேடன்குளம்
269)கரடிப்புவல்
270)கரடிக்குளம்
271)பள்ளக்காடு
272)இருட்டுச்சேனைமடு
273)காயன்காடு
274)கிளிவாயடி
275)பேத்தாழை
276)உப்போடை
277)பெரிய உப்போடை
278)வேலூர்
279)நெடியவெட்டை
280)காக்காச்சி வெட்டை
281)பலாச்சோலை
282)பாலமுனை
283)தம்பலவத்தை
284)மிச்நகர் (ஏறாவூர்)
285)மீராகேணி (ஏறாவூர்)
286)தவூத்கிராமம் (ஏறாவூர்)
287)சம் சம் கிராமம்(ஏறாவூர்)
288)ஸகாத் கிராமம்(ஏறாவூர்)
289அப்துல் மஜீத் புரம்(ஏறாவூர்)
290பாலையடித்தோணா
291)விநாயகபுரம்
292)தேவாபுரம்
293)புளுக்குணாவ
294)அடைச்சகல்லு
295)நாற்பதாம் வட்டை
296)மங்கிகட்டு
297)கோடைமேடு
298)முருங்கத்தீவு
299)கவுடாதீவு
300)பூச்சிக்குடு
301)சமுத்திரபுரம்
302)சிவபுரம்
303)பாரதிபுரம்
304)முறாவோட
305)நாசுவந்தீவு
306)வம்மிவட்டவான்
307)நடராஜானந்தபுரம்
308)கண்ணபுரம்
அவர்களின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, நுவரெலியாவைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களும் ஆரோக்கியமற்ற காற்று நிலைமைகளுடன் போராடுகின்றன, கொழும்பு, கண்டியின் அக்குரணை மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவு மாசுபாட்டை பதிவு செய்கின்றன.
அமெரிக்காவின் காற்றுத் தரக் குறியீட்டின் (AQI) தரவுகளை மேற்கோள் காட்டி, NBRO, கொழும்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளை, குருநாகல், கண்டி மற்றும் மாத்தளை ஆகிய எட்டு மாவட்டங்களை காற்றின் தரம் குறிப்பிடத்தக்க சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் பகுதிகளாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ள நபர்கள், சுறுசுறுப்பான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று அமைப்பு எச்சரித்தது மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைக்க அவர்களுக்கு அறிவுறுத்தியது
🛑 ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டிய ‘கதிரை’ 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களத்தில்…!
🛑 கதிரை சின்னத்தால் இலங்கை தேர்தல்களில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை?
1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளையும் இணைத்துக்கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றியை பதிவு செய்து, அரியணையேறியது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தையும் இழந்தது.
எனினும், 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்த வெற்றியின் பின்னரே இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையுடன் புதிய அரசமைப்பு இயற்றப்பட்டது.
அதன்பின்னர் 1982 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி நடைபோட்டது.
சு.க. ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் ஐதேகவின் அரசியல் பலம் உள்ளிட்ட காரணிகளால் சுதந்திரக் கட்சியால் மீண்டெழ முடியுமா என அரசியல் ரீதியில் அச்சம் ஏற்பட்டது. 1988 இல் நடைபெற்ற 2 ஆவது ஜனாதிபதி தேர்தலிலும் கை சின்னத்தில் களமிறங்கிய சுதந்திரக்கட்சி பின்னடைவை சந்தித்தது.
1977 இற்கு பின்னர் 1989 இலேயே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. (சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்ற ஆட்சிகாலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீடித்துக்கொள்வதற்கு ஜே.ஆர். ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.)
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் கூட்டணியாக கதிரை சின்னத்தில் களமிறங்கியது. ( அதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் கை சின்னத்திலேயே அக்கட்சி தனித்து - கூட்டணியாக களமிறங்கியது)
இத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது, ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டு, சுதந்திரக்கட்சி மீண்டும் தலைதூக்கியது.
மக்கள் கூட்டணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கிய அதன் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 4 இலட்சத்து 64 ஆயிரத்து 58 விருப்பு வாக்குகளைப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.
இலங்கையில் விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இது அமைந்திருந்தது. (2015 இல் இச்சாதனையை கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க முறியடித்தார்.)
அதே ஆண்டு அதாவது 1994 நவம்பர் 9 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் கதிரை சின்னத்திலேயே சுதந்திரக்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வெற்றியும் பெற்றது. இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியை உருவாக்கிய தேர்தல் அது.
அதன்பின்னர் 2000, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் கதிரை சின்னமே சுதந்திரக்கட்சிக்காக களத்துக்கு வந்தது.
அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கதிரை சின்னம் களத்துக்கு வரவில்லை. மக்கள் கூட்டணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக உதயமானது. வெற்றிலை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2004 இற்கு பின்னர் அனைத்து தேர்தல்களிலும் சுதந்திரக்கட்சி வெற்றிலை சின்னத்திலேயே கூட்டணி அமைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக களமிறங்கியது.
2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது. இதனால் அக்கட்சியின் வெற்றிலை சின்னமும் மாயமானது. மொட்டு சின்னம் ஆதிக்கம் செலுத்தியது. 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதும் மொட்டு கூட்டணியில் சுதந்திரக்கட்சி களமிறங்கினாலும் சில மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சுமார் 23 ஆண்டுகளுக்கு பின்னர் ‘கதிரை’ சின்னத்துக்கு புத்துயிர் கொடுத்து களமிறக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. மக்கள் கூட்டணி தற்போதும் சுதந்திரக்கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியாக செயற்படுகின்றது.
முன்னணியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவும், செயலாளராக லசந்த அழகியவண்ணவும் செயற்படுகின்றனர். முன்னணியின் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. தலைமைத்துவ சபையொன்றை உருவாக்கி அச்சபையின் தலைமைப்பதவியை சந்திரிக்கா அம்மையாருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இக்கூட்டணி தொடர்பில் சந்திரிக்கா அம்மையார் இன்னும் எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.சனத்
raasanath@gmail.com