Showing posts with label Article. Show all posts


4 வருடங்​களுக்கு ஒரு முறை நடை​பெறும் உலகக் கோப்பை கால்பந்து திரு​விழா வரும் 11ஆம் திகதி கோலாகல​மாக தொடங்​க​வுள்​ளது.


கால்பந்து விளை​யாட்​டில் மாபெரும் திரு​விழா என்று அழைக்கப்படும் ஃபிஃபா (உலக கால்​பந்து சம்​மேளனம்) நடத்​தும் கால்​பந்து உலகக் கோப்பை வரும் 11ஆம் திகதி தொடங்கி ஜூலை 19ஆம் திகதி வரை மிக​வும் பிர​ம்மாண்​ட​மான முறை​யில் நடை​பெறவுள்​ளது. 


ஒலிம்​பிக் போட்​டிகளைப் போலவே மிக பிரம்மாண்ட​மான முறை​யில் நடை​பெறும் போட்​டிகளில் இது முக்கி​யத்​து​வம் வாய்ந்த போட்​டி​யாகக் கருதப்​படு​கிறது.


வழக்​கத்​துக்கு மாறாக இந்த முறை 32 அணி​களுக்​குப் பதிலாக மொத்​தம் 48 அணி​கள் பங்​கேற்​கும் இந்த உலகக் கோப்பை கால்​பந்து திரு​விழாவை அமெரிக்​கா, கனடா, மெக்​ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்​துகின்​றன. 


3 நாடு​களில் மொத்​தம் 16 மைதானங்​களில் போட்டி நடை​பெறும். போட்​டிகள் இந்​திய நேரப்​படி நள்​ளிரவு 12.30 மணி, அதி​காலை 3.30 மணி, காலை 6.30 மணி, 9.30 மணி ஆகிய நேரங்​களில் நடை​பெற உள்​ளன.


குழு சுற்​றின் முடி​வில், ஒவ்​வொரு குரூப்​பிலும் முதல் 2 இடங்​கள் பிடிக்​கும் அணி​கள் மற்​றும் குழுக்களுக்கிடையில் இடம்பெறும் 8 அணி​களும் அடுத்த சுற்​றுக்கு தகுதி பெறும். அதன்​பின்​னர் கால், அரை, இறு​திச் சுற்​றுப் போட்​டிகள் இடம்பெறும். 


104 போட்டிகள்


மொத்​தம் 104 ஆட்​டம், 16 நகரங்​களில் மிக பிர​மாண்​ட​மாக அமைந்​துள்ள மைதானங்​களில் விளை​யாடப்​பட​வுள்​ளன. இறு​திப் போட்​டி, ஈஸ்ட் ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள ‘மெட்​லைஃப் ஸ்டேடி​யத்​தில்’ நடை​பெறும். 


இத்​தொடர் 16 வெவ்​வேறு நகரங்​களில் அமைந்​துள்ள 16 மைதானங்​களில் நடை​பெறவுள்​ளது. 


அமெரிக்​கா​வில் அமைந்​துள்ள 11 மைதானங்​களில் ஒன்​றான, நியூ ஜெர்​சி​யின் ஈஸ்ட் ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள மெட்​லைஃப் மைதானம் 82,500 பார்​வை​யாளர்​கள் அமரும் திறன் கொண்​டது.


கலி​போர்​னி​யா​வின் இங்​கிள்​வுட்​டில் அமைந்​துள்ள சோஃபி மைதானத்​தில் 70,240 பேரும், டெக்​சாஸின் ஆர்​லிங்​டனில் உள்ள ஏடி அன்ட் டி மைதானத்​தில் 80,000 பேரும், டெக்​சாஸின் ஹூஸ்டனில் உள்ள என்​ஆர்ஜி மைதானத்​தில் 72,220 பேரும், மிசவுரி​யின் கன்​சாஸ் நகரில் உள்ள ஏரோஹெட் மைதானத்​தில் 76,416 பேரும், ஜோர்​ஜி​யா​வின் அட்​லாண்​டா​வில் உள்ள மெர்​சிடிஸ் பென்ஸ் மைதானத்​தில் 71,000 பேரும் ரசிக்கலாம்.


மேலும், ஃபுளோரி​டா​வின் மியாமி கார்டன்ஸில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்​தில் 64,767 பேரும், கலிபோர்​னி​யா​வின் சாண்டா கிளா​ரா​வில் உள்ள லெவிஸ் மைதானத்​தில் 68,500 பேரும் பென்​சில்​வேனி​யா​வின் பிலடெல்பியா​வில் உள்ள லிங்​கன் ஃபை​னான்​சி​யல் ஃபீல்ட் மைதானத்​தில் 69,796 பேரும் வாஷிங்​டனின் சியாட்​டிலில் உள்ள லூமன் ஃபீல்ட் மைதானத்​தில் 68,740 பேரும், மாசாசூசெட்​ஸின் ஃபாக்​ஸ்​பரோ​வில் உள்ள ஜில்​லெட் மைதானத்​தில் 65,878 பேரும் போட்​டியை ரசிக்​கலாம்.


கனடா நாட்​டில் 2 மைதானங்​களில் போட்​டிகள் நடை​பெறும். 


பிரிட்​டிஷ் கொலம்​பி​யா​வின் வான்​கூவரில் அமைந்​துள்ள பிசி பிளேஸ் மைதானத்​தில் 54,500 பேரும், டொராண்​டோ​வில் உள்ள பிஎம்ஓ ஃபீல்ட் மைதானத்​தில் 45,736 பேரும் அமர்ந்து போட்​டியைக் கண்​டு​களிக்​கலாம். 


மெக்​ஸிகோ​வில், எஸ்​டாடியோ அஸ்​டெகா மைதானத்​தி​லும், (87,523 இருக்​கைகள்), குவாடலஜா​ரா​வில் உள்ள எஸ்​டாடியோ அக்​ரான் மைதானத்​தி​லும் (49,850 இருக்​கைகள்), மான்​டோரி​யில் உள்ள எஸ்டாடியா பிபி​விஏ மைதானத்​தி​லும் (53,500 இருக்​கைகள்​) போட்​டிகள்​ நடை​பெறும்​.


குழுவில் இடம்பெற்றுள்ள அணிகள் விவரம்


குழு ‘ஏ’: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, செக் குடியரசு


குழு ‘பி‘: கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா, கட்டார், சுவிட்சர்லாந்து


குழு‘சி’: பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்கொட்லாந்து


குழு ‘டி’: அமெரிக்கா, பராகுவே, அவுஸ்திரேலியா, துருக்கி


குழு ‘இ‘: ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வாடோர்


குழு ‘எஃப்: நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், துனிசியா


குழு ‘ஜி’: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து


குழு ‘ஹெச்’: ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே


குழு ‘ஐ’: பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே


குழு ‘ஜே’: அர்ஜெண்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்


குழு ‘கே’: போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா


குழு ‘எல்’: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா


 பலஸ்தீன|

 🇵🇸 காசாவில் உள்ள மருத்துவர்கள் சந்திக்கும் இஸ்ரேலிய தீவிரவாதிகளின் இனப்படுகொலை தாக்குதலை எதிர் கொண்டும் எப்படி அந்த மருத்துவர்கள் மக்களுக்காக களத்தில் நிற்கிறார்கள் என்பதை விவரிக்கும் 

#பாலஸ்தீன் 🇵🇸 காசாவில் உள்ள மருத்துவர்கள் சந்திக்கும் இஸ்ரேலிய தீவிரவாதிகளின் இனப்படுகொலை தாக்குதலை எதிர் கொண்டும் எப்படி அந்த மருத்துவர்கள் மக்களுக்காக களத்தில் நிற்கிறார்கள் என்பதை விவரிக்கும் 
Gaza : Doctors Under Attack
- என்ற ஆவணப்படம் இங்கிலாந்து கலை விருதான #BAFTA -‌ விருதை வென்றது!

~ இதனை தயாரித்த BBC நிறுவனமே இதனை வெளியிடாமல் தடுத்து வைத்திருந்தது தற்போது வெளியே தெரிய வந்துள்ளது!

- என்ற ஆவணப்படம் இங்கிலாந்து கலை விருதான #BAFTA -‌ விருதை வென்றது!

~ இதனை தயாரித்த BBC நிறுவனமே இதனை வெளியிடாமல் தடுத்து வைத்திருந்தது தற்போது வெளியே தெரிய வந்துள்ளது!

 


இரானில் நடைபெற்று வரும் அமெரிக்க-இஸ்ரேல் போரினால் உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் பாதிப்புகளைச் சந்தித்து வரும் வேளையில், சில நிறுவனங்களோ அதற்கு நேர்மாறாக பெருமளவிலான லாபங்களை ஈட்டி வருகின்றன.


இந்த போரால் உருவான நிச்சயமற்ற தன்மையும், இரான் ஹோர்மூஸ் நீரிணையை முடக்கியதும், வாழ்க்கைச் செலவுகளை அதிகரித்தது.


இதனால், நிறுவனங்கள், குடும்பங்கள் மற்றும் அரசாங்கங்களின் நிதிநிலை கடுமையாகப் பாதித்துள்ளது.


ஆனால், இந்தச் சூழலில் சில நிறுவனங்கள் பெரும் நிதி ஆதாயம் கண்டுள்ளன. குறிப்பாக, போர் சூழ்நிலைகளில் அதிக லாபம் காணும் துறைகள் அல்லது எரிசக்தி விலைகளின் ஏற்றத் தாழ்வால் பயன் பெறும் நிறுவனங்கள் அதிக அளவிலான வருவாயை கண்டுள்ளன


மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பில்லியன் கணக்கில் லாபம் ஈட்டும் சில துறைகள் மற்றும் நிறுவனங்கள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.


விளம்பரம்



1. எண்ணெய் மற்றும் எரிவாயு

இந்தப் போரின் மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கம் என்பது எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதாகும். உலகில் வர்த்தகமாகும் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், பிப்ரவரி இறுதியில் இருந்து அந்தப் பகுதியின் போக்குவரத்து செயல்பாடுகள் பெருமளவில் முடங்கின.


இதன் விளைவாக எரிசக்தி சந்தைகளில் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. இதனால் உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் சில பயனடைந்துள்ளன.


குறிப்பாக, விலை மாற்றங்களை பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களே அதிக பலன் பெற்றுள்ளன. எரிசக்தி விலைகளின் திடீர் மாற்றங்கள் அவர்களின் லாபத்தை அதிகரித்தது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

தங்கம், பெட்ரோல், டீசல், ஒர்க் ஃப்ரம் ஹோம், மோதி, இந்தியா

'தங்கம் வாங்க வேண்டாம்' என்று மக்களுக்கு பிரதமர் மோதி வேண்டுகோள் ஏன்?

CSK vs LSG, உர்வில் படேல், ஐபிஎல்

ஹாட்ரிக் வெற்றியுடன் சிஎஸ்கே ஓரிடம் முன்னேற்றம்: பிளேஆஃப் வாய்ப்பு என்ன?

போர்,  இரான், ஹோர்முஸ் நீரிணை 

பட மூலாதாரம்,Getty Images

ஷெல் நிறுவனம் தனது முதல் காலாண்டு லாபம் 6.92 பில்லியன் டாலராக உயர்ந்ததாகத் தெரிவித்தது, இது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிகமாகும்.


மற்றொரு சர்வதேச நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ் எண்ணெய் மற்றும் எரிசக்தி சந்தைகளில் நிலவிய நிலையற்ற தன்மையின் காரணமாக, 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதன் லாபம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்து 5.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.


அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான எக்ஸான்மொபில் மற்றும் செவ்ரான் ஆகியவற்றின் வருவாய், மத்திய கிழக்கில் ஏற்பட்ட விநியோகத் தடையால் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் சரிவைச் சந்தித்தது.


இருப்பினும், இவை இரண்டும் ஆய்வாளர்களின் கணிப்புகளை விட கூடுதல் லாபம் ஈட்டியுள்ளன. போர் தொடங்கிய போது இருந்ததை விட எண்ணெய் விலை இன்னும் கணிசமாக அதிகமாக இருப்பதால், இந்த ஆண்டின் அடுத்து வரும் மாதங்களில் தங்களின் லாபம் மேலும் வளரும் என்று அவை எதிர்பார்க்கின்றன.


 எரிசக்தி  

பட மூலாதாரம்,GIUSEPPE CACACE/AFP via Getty Images

2. பெரிய வங்கிகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இரான் போரின் போது மிகப்பெரிய வங்கிகள் சிலவற்றின் லாபமும் அதிகரித்துள்ளது.


ஜேபி மோர்கன் வங்கியின் வர்த்தகப் பிரிவு, 2026-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 11.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், அந்த வங்கி தனது வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய காலாண்டு லாபத்தை பதிவு செய்துள்ளது.


ஜேபி மோர்கன் உட்பட பாங்க் ஆஃப் அமெரிக்கா, மோர்கன் ஸ்டான்லி, சிட்டிகுரூப், கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் வெல்ஸ் ஃபார்கோ ஆகிய "பிக் சிக்ஸ்" வங்கிகளின் லாபம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது.


ஒட்டுமொத்தமாக, இந்த வங்கிகள் 2026-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 47.7 அமெரிக்க டாலர் லாபத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளன.


வெல்த் கிளப் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உத்தி நிபுணர் சுசன்னா ஸ்ட்ரீட்டர், "அதிகப்படியான வர்த்தக நடவடிக்கைகள் முதலீட்டு வங்கிகளுக்கு, குறிப்பாக மோர்கன் ஸ்டான்லி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகியவற்றுக்கு பெரும் பலனை அளித்துள்ளன" என்றார்.


அபாயம் அதிகம் உள்ள பங்குகள் மற்றும் பத்திரங்களைக் கைவிட்ட முதலீட்டாளர்கள், பாதுகாப்பானதாகக் கருதப்படும் சொத்துக்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய ஆர்வம் காட்டியதால், வால் ஸ்ட்ரீட்டின் முன்னணி வங்கிகளில் வர்த்தகச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.


நிதிச் சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மையைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முதலீட்டாளர்கள் முயன்றதும் வர்த்தக நடவடிக்கைகளின் உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது.


"போரினால் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் வர்த்தகத்தை வெகுவாக அதிகரித்துள்ளன. போர் மேலும் தீவிரமடையலாம் என்ற அச்சத்தில் சில முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றனர், அதே நேரத்தில் மற்றவர்கள் சரிவின் போது பங்குகளை வாங்கினர். இது சந்தை மீண்டும் மீட்சியடைவதற்கான உந்துதலை அளித்தது." என்கிறார் சுசன்னா ஸ்ட்ரீட்டர்.


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்மூஸ் நீரிணைபட மூலாதாரம்,Getty Images

3. பாதுகாப்புத் துறை

எந்தவொரு மோதலிலும் உடனடிப் பலன் பெறும் துறைகளில் பாதுகாப்புத் துறையும் ஒன்று என ஆர்எஸ்எம் யுகே நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் எமிலி சாவிச் கூறுகிறார்.


பிபிசியிடம் பேசிய அவர், "இந்தப் போர், வான்வழி பாதுகாப்பு திறன்களில் உள்ள குறைபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இதனால், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் முதலீடுகள் வேகமடைந்துள்ளன," என தெரிவித்தார்.


பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் முக்கியத்துவத்தை இந்தப் போர் காட்டியுள்ளதுடன், ஆயுத கையிருப்புகளை மீண்டும் நிரப்ப வேண்டிய தேவையையும் அரசுகளுக்கு உருவாக்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு உபகரணங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.


எஃப்-35 போர் விமானத்தின் பாகங்கள் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு விற்பனை மற்றும் லாபத்தில் மிகச்சிறப்பான வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக வர்த்தக அறிக்கையில் தெரிவித்துள்ளது.


உலகெங்கிலும் அதிகரித்து வரும் "பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்" அரசாங்கங்களின் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்கச் செய்துள்ளதாகவும், இது நிறுவனத்திற்கு "ஆதரவான ஒரு சூழலை" உருவாக்கியுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.


உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனங்களான லாக்ஹீட் மார்ட்டின், போயிங், நார்த்ரோப் க்ரம்மன் ஆகிய மூன்றும், 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் தங்களுக்குக் கிடைத்துள்ள ஆர்டர்களின் எண்ணிக்கை சாதனை அளவில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளன.


இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்த பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகள், மார்ச் மாத நடுப்பகுதியிலிருந்து சரிவைச் சந்தித்துள்ளன. இத்துறை அதன் உண்மையான மதிப்பை விட அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளதோ என்ற அச்சமே இதற்கு காரணமாகும்.


4. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

இந்த மோதலானது புதைபடிவ எரிபொருட்களை மட்டுமே சார்ந்திருப்பதைத் தவிர்த்து, பிற ஆதாரங்களுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளதாக ஸ்ட்ரீட்டர் கூறுகிறார்.


இது "புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் மீதான ஆர்வத்தை வேகப்படுத்தியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் "மேலும் எண்ணெய் தோண்டுங்கள்" என்ற முழக்கத்தை டிரம்ப் நிர்வாகம் பிரபலப்படுத்திய போதிலும், அங்கு இந்த ஆர்வம் அதிகரித்துள்ளது.


எதிர்கால அதிர்ச்சிகளைத் தாங்கும் திறனுக்கும் நிலைத்தன்மைக்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான முதலீடு மிகவும் முக்கியமானது என்ற எண்ணத்தைப் போர் ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ட்ரீட்டர் கூறினார்.


இதனால் பலனடைந்த நிறுவனங்களில் ஒன்று புளோரிடாவைச் சேர்ந்த 'நெக்ஸ்ட் எரா எனர்ஜி' ஆகும். முதலீட்டாளர்கள் அதன் திட்டங்களில் ஆர்வம் காட்டியதால், இந்த ஆண்டில் இதுவரை அதன் பங்குகள் 17 சதவீதம் உயர்ந்துள்ளன.


டென்மார்க்கின் காற்றாலை மின்சக்தி நிறுவனங்களான வெஸ்டாஸ், ஆர்ஸ்டெட் ஆகியவையும் லாபம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. இரான் போரின் தாக்கம் எவ்வாறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கும் ஊக்கமளிக்கிறது என்பதை இது காட்டுகிறது.


பிரிட்டனில், இந்தப் போர் சோலார் பேனல்கள் மற்றும் ஹீட் பம்ப்களின் விற்பனையில் ஒரு "பெரிய மாற்றத்தை" ஏற்படுத்தியுள்ளதாகவும், பிப்ரவரி இறுதி முதல் சோலார் பேனல் விற்பனை 50% அதிகரித்துள்ளதாகவும் ஆக்டோபஸ் எனர்ஜி நிறுவனம் சமீபத்தில் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.


பெட்ரோல் விலையேற்றம் மின்சார வாகனங்களுக்கான தேவையையும் அதிகரித்துள்ளது, குறிப்பாகச் சீன உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

 


எத்தியோப்பியாவின் ஹராரி பகுதியில், 12 ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருந்த பெண் ஒருவர் அரிதான வகையில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.


"ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது," என்று 35 வயதான பெட்ரியா ஆடம் என்ற அந்த பெண் தெரிவித்துள்ளார்.


அவர் நான்கு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஹிவோட் ஃபானா சிறப்பு மருத்துவமனை தெரிவித்துள்ளது.


"என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் பிரார்த்தனைகள் நிறைவேறும் வரை மன அழுத்தத்திலும் வேதனையிலும் இருந்தேன்," என்று பெட்ரியா பிபிசியிடம் கூறினார்.


மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் முகம்மது நூர் அப்துலாஹி, தாயும் குழந்தைகளும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளின் எடை 1.3 முதல் 1.4 கிலோ வரை இருப்பதாகவும் கூறினார்.


விளம்பரம்


ஒரு கிலோவுக்கும் அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பும் ஆரோக்கியமாக வளர வாய்ப்பும் அதிகம் என்று அவர் கூறினார்.


மேலும், பெட்ரியா இயற்கையாகவே கர்ப்பம் அடைந்ததாகவும், செயற்கை கருத்தரிப்பு முறையான ஐவிஎஃப் சிகிச்சை பயன்படுத்தப்படவில்லை என்றும் மருத்துவர் தெரிவித்தார். அந்த மருத்துவமனையில் ஐவிஎஃப் சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்பட்டது.


ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பை ஐவிஎஃப் சிகிச்சை வழங்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தப் பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை மாலை சிசேரியன் முறையில் பிரசவம் நடைபெற்றதாக மருத்துவர் தெரிவித்தார்.


"கர்ப்பகாலம் முழுவதும் அவருக்கு முறையான மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவுற்றிருப்பதாக அவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. முழுமையான மருத்துவ உதவியுடன் அவர் சிகிச்சை பெற்றார்," என்று டாக்டர் முகம்மது கூறினார்.


தனக்கு ஆரம்பத்தில் நான்கு குழந்தைகள் கருவுற்றிருப்பதாக கூறப்பட்டதாகவும், ஆனால் பிரசவத்தின் போது மேலும் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்ததாகவும் பெட்ரியா தெரிவித்தார்.


"நான் ஒரு குழந்தைக்காக மட்டுமே பிரார்த்தனை செய்தேன். ஆனால் அல்லாஹ் எனக்கு ஐந்து குழந்தைகளை வழங்கினார்," என்று நீண்ட கால காத்திருப்பை நினைவுகூர்ந்து அவர் கூறினார்.


முதன்முறையாக தாயான பெட்ரியா, தனது கணவருக்கு ஏற்கனவே வேறு திருமணத்தில் பிறந்த ஒரு குழந்தை இருப்பதாகவும், அந்தக் குழந்தை தங்களுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.


"அந்தக் குழந்தை இருந்தாலே போதும், நீ கவலைப்பட வேண்டாம் என்று என் கணவர் அடிக்கடி கூறுவார். ஆனால், கிராமத்தில் உள்ள அனைவரும் எனக்கு குழந்தை இல்லாததைப் பற்றி கேள்வி எழுப்பியதால், மிகவும் வேதனைப்பட்டேன்" என்று அவர் கூறினார்.


"கடந்த காலத்தில் நான் அனுபவித்த வேதனைகள் இப்போது தொலைதூர கனவு போலத் தோன்றுகிறது. அதை நினைவுகூரவே நான் விரும்பவில்லை," என்றும் அவர் கூறினார்.


"12 ஆண்டுகள் வேதனையிலும் தனிமையிலும் வாழ்ந்தேன். குழந்தைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்தேன். இறுதியாக அல்லாஹ் என் பிரார்த்தனையை கேட்டார்," என்று அவர் தெரிவித்தார்.


தான் ஒரு சிறிய விவசாயியாக இருப்பதாகவும், தற்போது பெரிதாகியுள்ள குடும்பத்தை எப்படி கவனிப்பேன் என்பது தெரியவில்லை என்றும் பெட்ரியா கூறினார். "ஆனால், என் சமூகமும் அரசும் தரும் ஆதரவின் மூலம் அல்லாஹ் உதவுவார் என்று நம்புகிறேன்," என்றும் அவர் தெரிவித்தார்.


அந்த "ஐந்து வரங்கள்" என அவர் அழைக்கும் குழந்தைகளுக்கு நயீஃப், அம்மார், முன்சிர், நசீரா மற்றும் அன்சார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது

 

உலக கருப்பை புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள், உயிருக்கு ஆபத்தான கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2013 முதல் அனுசரிக்கப்படுகிறது.


#Sooriyanfm #உலககருப்பைபுற்றுநோய்தினம் #WorldOvarianCancerDay

 


இந்திய அரசியலமைப்பின் 164-வது சரத்தின்படி, முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுவார் என்றும், மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நியமனம் முறைப்படி ஆளுநரால் செய்யப்பட்டாலும், மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற்ற நபரை அரசாங்கத்தை அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என அரசியலமைப்பு மரபுகள் வலியுறுத்துகின்றன. எனவே, ஆளுநரின் விருப்புரிமை வரையறுக்கப்பட்டதாகும், அதைத் தன்னிச்சையாகப் பயன்படுத்த முடியாது. பெரும்பான்மை ஆதரவு குறித்த இறுதி முடிவு மாநில சட்டமன்றத்தின் அவையிலேயே எடுக்கப்பட வேண்டும். இதன் விளைவாக, ஒரு முதலமைச்சரை நியமிப்பதிலோ அல்லது மாநில அரசை அமைப்பதிலோ ஏற்படும் தேவையற்ற தாமதம், ஜனநாயகக் கொள்கைகளையும் நாடாளுமன்ற அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திட்டத்தையும் மீறுவதாக அமையக்கூடும்.

 


நார்வே உலகின் மிகப் பசுமையான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


இதன் நகரங்களில் மிதிவண்டிகள் நிறைந்து காணப்படுகின்றன, இதன் 98 சதவீத மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து கிடைக்கிறது மற்றும் 2024-இல் விற்கப்பட்ட ஒவ்வொரு பத்து புதிய வாகனங்களில் ஒன்பது மின்சார வாகனங்கள் ஆகும்.


நார்வே சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடும் கூட. இங்கே மொத்த எரிசக்தி நுகர்வில் மின்சாரத்தின் பங்கு மிக அதிகம். கார்பன் வரி விதித்த ஆரம்பகால நாடுகளில் இதுவும் ஒன்று.


ஆனால் இதனுடன் சேர்த்து, இந்நாடு எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாசு உண்டாக்கும் இந்த நிலக்கரி போன்ற எரிபொருள்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, இதுதான் நார்வே அரசின் வருமானத்திற்குப் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.


இந்த வளங்களே 'ஆயில் ஃபண்ட்' என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற 'சாவரின் வெல்த் ஃபண்ட்' உருவாவதற்குக் காரணமாக அமைந்தன. இதுவே தாராளமான ஓய்வூதிய முறை மற்றும் நலன்புரி அரசின் நிதித் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.


உள்நாட்டில் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்கும், உலக அளவில் புதைபடிவ எரிபொருட்களின் பெரிய ஏற்றுமதியாளராக இருப்பதற்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு 'நார்வேஜியன் பேரடாக்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளாகக் கடுமையான அரசியல் மற்றும் சமூக விவாதங்களை உருவாக்கி வருகிறது.


சுற்றுச்சூழல் குழுக்களும் இளைஞர் செயல்பாட்டாளர்களும் எண்ணெய் வணிகத்தைக் குறைப்பதற்கான உறுதியான வாக்குறுதிகளையும் காலக்கெடுவையும் கோரி வரும் நிலையில், பொருளாதாரத்தில் இதன் பங்களிப்பு மற்றும் இதனால் உருவாகும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காரணமாக இந்தத் தொழில் தனது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துள்ளது.


மத்திய கிழக்கில் போர் மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியமான ஹோர்மூஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு, நார்வேயிற்குப் பெரும் எதிர்பாராத லாபத்தை அளித்துள்ளது. ஆனால் இது நாட்டின் மிகவும் சங்கடமான விவாதங்களில் ஒன்றை மீண்டும் வேகப்படுத்தியுள்ளது.


நார்வேயின் சுற்றுச்சூழல் அமைப்பான 'ஃப்ரண்ட்ஸ் ஆஃப் தி எர்த் நார்வே' தலைவர் ட்ரல்ஸ் குலோவ்சன் பிபிசி முண்டோவிடம் கூறுகையில், "என்னைப் போன்ற ஒரு நார்வேஜியன் சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு இந்தச் சூழல் வெட்கக்கேடானது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.


நார்வேயில் மக்கள் மிதிவண்டிகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.பட மூலாதாரம்,Getty Images

ஐக்கிய நாடுகளின் மனித மேம்பாட்டுக் குறியீட்டின்படி, உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றான நார்வேயில் எரிசக்தித் துறை செழிப்பின் முக்கிய ஆதாரமாக உள்ளது.


நார்வேயின் மொத்த ஏற்றுமதியில் இந்தத் துறையின் பங்களிப்பு 60 சதவீதத்திற்கும் அதிகமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதத்திற்கும் மேலாகவும் உள்ளது.


நார்வேயின் கண்டக்கரை பகுதியில் மிகப்பெரிய ஆபரேட்டராக 'இக்வினோர் குரூப்' உள்ளது, இதில் பெரும்பான்மையான பங்குகள் அரசிடம் உள்ளன. அதன் லாபத்தின் பெரும் பகுதி சாவரின் வெல்த் ஃபண்ட் எனப்படும் 'ஆயில் ஃபண்டில்' செலுத்தப்படுகிறது.


ஒரு மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த நிதியில் மொத்தம் 1.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இருந்தன, இது ஒரு குடிமகனுக்கு சுமார் 3.5 லட்சம் டாலர் சேமிப்பிற்குச் சமம்.


2026-ஆம் ஆண்டின் தற்போதைய சூழலில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் இது மேலும் அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது.


இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து, அரசுக்குக் கூடுதலாக 5 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது மற்றும் உள்ளூர் எரிசக்தி நிறுவனங்களின் செயல்பாடுகளால் ஓஸ்லோ பங்குச் சந்தை சாதனைகளைப் படைத்துள்ளது.


செழிப்பான நார்வேயின் பொருளாதாரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது.பட மூலாதாரம்,Kristian Helgesen/Getty

படக்குறிப்பு,நார்வேயின் பொருளாதாரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது.

நோபல் அமைதிப் பரிசு வழங்கும் ஒரு நாடு, போரின் கொந்தளிப்பால் பணக்கார நாடாக மாறுகிறது என்ற கருத்துக்குத் தொழிலாளர் கட்சி அரசு பதிலளிக்க முயன்றுள்ளது.


நார்வேயின் நிதி அமைச்சரும் நேட்டோவின் (NATO) முன்னாள் பொதுச் செயலாளருமான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இதை ஒரு முரண்பாடு என்று குறிப்பிட்டு, நார்வேவுக்கு 'அமைதியால் தான் அதிக லாபம் கிடைக்கிறது' என்றார்.


ஆனால் என்.ஆர்.கே-வின் (NRK) கட்டுரையாளர் செசிலி லாங்கும் பெக்கரின் வார்த்தைகளில், "கசப்பான உண்மை என்னவென்றால், உலகம் எரியும்போது நமது அரசு பட்ஜெட்டில் பணம் வந்து சேர்கிறது."


இந்தச் சூழல் 2022-லேயே தெளிவாகத் தெரியத் தொடங்கியது, அப்போது யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய பிறகு ஐரோப்பாவிற்கான மாஸ்கோவின் ஏற்றுமதி வேகமாக சரிந்தது.


அப்போதிருந்து, எரிசக்தி நெருக்கடியில் தவிக்கும் கண்டத்திற்கு நார்வே மட்டுமே நம்பகமான விநியோகஸ்தராக உருவெடுத்துள்ளது.


நிதி நிறுவனமான நோர்டியாவின் ஆய்வாளர் தீனா சால்ட்வெட் பிபிசி முண்டோவிடம் கூறுகையில், "இன்று நாம் ஐரோப்பாவில் நுகரப்படும் எரிவாயுவில் சுமார் 30 சதவீதத்தையும், எண்ணெயில் 15 சதவீதத்தையும் விநியோகிக்கிறோம், நமது மொத்த ஏற்றுமதியில் 90 சதவீதத்தை அங்கேயே அனுப்புகிறோம்" என்றார்.


நார்வேயின் கார்பன் உமிழ்வை குறைக்கும் கொள்கை

புதைபடிவ எரிபொருட்களின் ஏற்றுமதி குறித்த விவாதம் நார்வேயில் பல ஆண்டுகளாக நீடிக்கிறது.பட மூலாதாரம்,Paul S. Amundsen/Getty Images

படக்குறிப்பு,புதைபடிவ எரிபொருட்களின் ஏற்றுமதி குறித்த விவாதம் நார்வேயில் பல ஆண்டுகளாக நீடிக்கிறது.

பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு கையிருப்பு இருந்தபோதிலும், நார்வே பல தசாப்தங்களாக ஐரோப்பாவின் தூய்மையான உள்கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அதன் நீர்மின் விநியோக கட்டமைப்பு ஆகும்.


1991-இல் பசுமை எரிசக்தியை ஊக்குவிக்க அரசு கார்பன் வரியை விதித்தது; 2005-இல் ஊக்கத்தொகைகள் காரணமாக மின்சாரக் கார்களில் நார்வே உலகின் முன்னணி நாடாக மாறியது; மற்றும் 2017-இல் நாடாளுமன்றம் 2030-க்குள் கார்பன் உமிழ்வை 50 சதவீதம் குறைக்கக் காலநிலைச் சட்டத்தை நிறைவேற்றியது.


இருப்பினும், தற்போதைய சர்வதேச நிலவரங்கள் இந்தப் போக்கைத் தடம் புரளச் செய்வது போலத் தோன்றுகின்றன. யுக்ரேன் மற்றும் இரான் மோதல்கள் மிகவும் 'பசுமை' கொள்கை கொண்ட அரசியல் கட்சிகளைக் கூட, ஐரோப்பிய எரிசக்தி பாதுகாப்பிற்கு நார்வேஜியன் எரிவாயு ஒரு 'தேவையான தீமை' என்பதை ஏற்கக் கட்டாயப்படுத்தியுள்ளன.


குலோவ்சனின் கூற்றுப்படி, உலகளாவிய உறுதியற்ற தன்மை, ஹைட்ரோகார்பன்கள் மீது இன்னும் அதிக சார்ந்திருப்பதை நியாயப்படுத்துகிறதா என்பதுதான் இப்போது பிரதான விவாதமாக உள்ளது.


"இப்போது ஆர்க்டிக் கடல் பகுதிகளின் புதிய இடங்களில் வேலை செய்வது பற்றிப் பேச்சுக்கள் நடக்கின்றன - அத்தகைய உணர்திறன் வாய்ந்த சூழலில், எந்தச் சூழ்நிலையிலும் அகழ்வாராய்ச்சி நடக்கக்கூடாது" என்று அவர் கூறினார்.


அடுத்தது என்ன?

நார்வே அரசு எண்ணெய் தொழிலை மேலும் மேம்படுத்த விரும்புகிறது, அதற்கான ஆய்வுகளுக்கான புதிய உரிமங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.பட மூலாதாரம்,Chris Ratcliffe/Getty Images

படக்குறிப்பு,நார்வே அரசு எண்ணெய் தொழிலை மேலும் மேம்படுத்த விரும்புகிறது, அதற்கான ஆய்வுகளுக்கான புதிய உரிமங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நார்வே பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோரேவின் அரசு சமீபத்தில் 57 புதிய ஆய்வு உரிமங்களை வழங்கியது.


"ஐரோப்பாவிற்கு விநியோகம் செய்ய இன்னும் கூடுதலான எண்ணெயைத் தொடர்ந்து தேடுவோம்" என்று அவர் உறுதியளித்தார்.


ஸ்டோரே 'எண்ணெய் துறையிலிருந்து வெளியேறும் கட்டத்தை' தீர்மானிப்பதை விட, தொழில்துறையின் 'வளர்ச்சிக்கு' ஆதரவாக உள்ளார்.


தனது கட்சியின் இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்தபோதிலும், தொழில்துறையிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை வழங்கும் எண்ணம் ஸ்டோரேவிற்கு இல்லை.


மாறாக, பழைய எண்ணெய் கையிருப்புகளில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்ட, மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்ட பாரண்ட்ஸ் கடல் பகுதியில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.


இண்டஸ்ட்ரி எனர்ஜி யூனியனின் ஃப்ரோட் ஆல்ஃபைம் பிபிசி முண்டோவிடம் இந்தத் தொழிலின் சமூக முக்கியத்துவத்தை நினைவுபடுத்தினார். "நாம் 2 லட்சத்திற்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்புகளைப் பற்றிப் பேசுகிறோம். இது ஐரோப்பாவிற்கான விநியோகத்தை நிறுத்துவதற்கான நேரம் அல்ல."


அதே நேரத்தில், "இந்தத் தொழில் அதன் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது என்பதை அதிகமான மக்கள் உணர்ந்து வருகின்றனர், ஆனால் இந்த மாற்றத்தின் பயணம் வலி நிறைந்ததாக இருக்கும்." என்று சால்ட்வெட் எச்சரித்தார்

 


தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே புதிய வரலாறு படைத்துள்ளார். 1967 முதல் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளை அவரது கட்சி பின்னுக்குத் தள்ளியுள்ளது.

தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே, ஆட்சியில் இருந்த மற்ற பெரிய கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி மக்களிடையே தனக்குள்ள செல்வாக்கை விஜய் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

தயக்கம் மிகுந்த நாயகனாக 33 ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய், இப்போது அரசியலில் தனது முதல் தேர்தலிலேயே வென்று காட்டியுள்ளார். அவரது தனி வாழ்வும் திரைவாழ்வும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால், அரசியலில் விஜய் ஒரு புதிய பாணியை கையாளுகிறார்.

விஜயின் திரைப்படங்களும் அவரது அரசியலும் சொல்வது என்ன?

விஜயை நேரில் சந்திக்கும் யாரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு அம்சம் உண்டு. அதாவது, திரையில் துறுதுறுப்பாகத் தென்படும் விஜய், நேரில் பார்க்கும்போது முற்றிலும் மாறானவராக நடந்துகொள்வார். திரையில் பார்த்த ஒரு கலகலப்பான மனிதரை எதிர்பார்த்துச் சென்றால், பேசவே தயங்கக்கூடிய, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் ஒரு நபராக இருப்பார் விஜய்.

"பத்து வயதிலேயே தங்கையை இழந்துவிட்டு, பெற்றோரின் ஒரே குழந்தையாக வளர்ந்ததும் தன் வயதுக்கேற்ற ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகள் இல்லாததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்," என ஒரு முறை தெரிவித்தார் விஜய்.

அப்படிப்பட்ட ஒரு நபர், தனது புதிய கட்சியின் அரசியல் மேடைகளில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் முழங்குகிறார். புதியவர்களிடம் பேசத் தயங்கும் இளைஞராகத் துவங்கி, ஒரு கட்சியின் தலைவராகப் பரிணாமம் எடுத்த விஜயின் பயணம் சாதாரணமானதல்ல.

எட்டாம் வகுப்பில் தொடங்கிய நடிப்பு

விஜய் சிறுவனாக இருக்கும்போதே நிகழ்ந்த தங்கை வித்யாவின் மரணம் அவரை வெகுவாகப் பாதித்தது. அவரே சொன்னபடி, மேலும் அமைதியானவராக மாறினார் விஜய்.

எஸ்.ஏ. சந்திரசேகர் படங்களை இயக்க ஆரம்பித்தபோது விஜய்க்கு வேடிக்கை பார்க்கக் கூடிய வயது வந்திருந்தது. அந்த சமயத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும்பாலும் விஜயகாந்தை வைத்து படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். இந்தப் படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜய். முதல் படத்தில் நடிக்கும்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தார் விஜய்.

"10ஆம் வகுப்பில் நான் சராசரிக்கும் சற்று மேலான மாணவனாகத்தான் இருந்தேன். அதன் பிறகு படிப்பில் ஆர்வம் குறைய சினிமா ஆசை வந்தது. அப்பாவுக்குத் தெரியாமல் நிறைய சினிமா பார்த்தேன். சிறிது காலம் கழித்து சினிமாவில் வரவேண்டும், நடிக்க வேண்டும் என்று சொல்ல வீட்டில் கடுமையான எதிர்ப்பு. எங்களுக்காக ஒரு டிகிரி படி, பிறகு நானே உனக்காக ஒரு படத்தைத் தயாரிக்கிறேன் என்றார் அப்பா."

"அதன் பிறகு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் சேர்ந்தேன். ஒரு வருடம்தான் படித்தேன். அப்போது அப்பா நாளைய தீர்ப்பு படத்தைத் தயாரித்தார். அதில் என்னை ஹீரோவாக்கினார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. 6- 7 மாத இடைவெளி. திரும்பவும் கல்லூரிக்குப் போனேன்," என தன் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையைப் பற்றி 2009-இல் இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் சுருக்கமாகத் தெரிவித்தார் விஜய்.

X/TVK

தேர்தல் பிரசாரத்தில், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவே விஜயின் பிரதான குறியாக இருந்தது. திமுக மீதான விமர்சனங்களை தனது ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் அவர் முன்வைத்தார். இந்த தேர்தல் திமுகவுக்கும் தவெகவுக்கும் நடக்கும் தேர்தல், ஸ்டாலின் அங்கிளுக்கும் விஜய் அண்ணாவுக்கும் இடையிலான தேர்தல் என்றே அவர் தனது பேச்சுகளில் குறிப்பிட்டு வந்தார்.

இதனால் எரிச்சலடைந்த பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக விஜயை கடுமையாக சாடிய போதிலும், விஜய் தனது பிரசார பாணியை மாற்றிக் கொள்ளவே இல்லை. ஜனநாயகன் பிரச்னையில் கூட மத்தியில் ஆளும் பாஜகவை நேரடியாக சீண்டாத அவர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட சில தருணங்களில் மட்டுமே அக்கட்சி விமர்சனங்களை முன்வைத்தார்.

வாக்குப்பதிவு முடிந்ததும் வெளியான கருத்துக்கணிப்புகளில் பலவும் திமுக அல்லது அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று கூறின. ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு மட்டுமே திமுக, அதிமுகவை விஞ்சி விஜயின் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணித்திருந்தது. அந்த கணிப்பு உண்மையாகக் கூடும் என்பதே தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரமாக உள்ளது.

நண்பகல் 12.30 மணி நிலவரப்படி, திமுக, அதிமுகவை விஞ்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. முதன் முறையாக தேர்தல் களம் கண்டுள்ள தவெக அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெறுமா என்று அக்கட்சித் தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்து தேர்தல் முடிவை பின்தொடர்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



 


இரான் போரினால் உரங்கள் மற்றும் அதன் முக்கிய மூலப்பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால், உலகளவில் வாரத்திற்கு பத்து பில்லியன் உணவுகள் வரை இழப்பு ஏற்படக்கூடும் என்றும், இது ஏழை நாடுகளை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் உலகின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.


யாரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வைன் தோர் ஹோல்செதர் பிபிசியிடம் பேசுகையில், ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைத் தடுத்துள்ள வளைகுடாவில் நிலவும் மோதல், உலகளாவிய உணவு உற்பத்தியை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறினார்.


குறைந்த அளவிலான உரப் பயன்பாட்டினால் பயிர் விளைச்சல் குறைவது, உணவிற்கான ஏலப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.


மற்ற நாடுகளில் உள்ள "மிகவும் பாதிக்கப்படக்கூடிய" மக்கள் மீது இந்த போரின் தாக்கத்தை ஐரோப்பிய நாடுகள் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


பிரிட்டனில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், உணவு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்த செலவுகள், அடுத்த சில மாதங்களில் வாராந்திர உணவு செலவுகளில் தெரிய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விளம்பரம்


"தற்போதைய சூழ்நிலையால் உலகில் இப்போது அரை மில்லியன் டன் வரை நைட்ரஜன் உர உற்பத்தி செய்யப்படவில்லை," என்று ஹோல்செதர் கூறினார்.


"உணவு உற்பத்திக்கு இதன் விளைவு என்ன? உரங்கள் இல்லாததன் விளைவாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் வரை உற்பத்தி செய்யப்படாமல் போகும்."


நைட்ரஜன் உரத்தைப் பயன்படுத்தாவிட்டால், சில பயிர்களின் விளைச்சல் முதல் பருவத்திலேயே 50% வரை குறையும் என்று ஹோல்செதர் தெரிவித்தார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

பிராச்சி நிகம் 

"நான் முதலிடம் பெறாமல் இருந்திருக்கலாம்" - தேர்வில் முதலிடம் பெற்றும் உருவகேலிக்கு ஆளான பெண் இப்போது கூறுவது என்ன?

இந்தியாவில் சுமார் 362 வகையான பாம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன ( கோப்புப்படம் )

கோடைக் காலங்களில் வீடுகளை நோக்கிவரும் பாம்புகள் - தடுக்க சில வழிகள்

இந்த சீசனில் விளையாடிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க்

ராகுல், ஸ்டார்க் அபாரம் - 225 இலக்கை சேஸ் செய்து டெல்லி வெற்றி பாதைக்கு திரும்பியது எப்படி?

 தமிழ்நாட்டில் இறுதி சடங்குகளுக்கு தனிச் சட்டம் - நீதிமன்ற கருத்துக்கு எதிர்வினை என்ன?

தமிழ்நாட்டில் இறுதி சடங்குகளுக்கு தனிச் சட்டம் தேவையா? நீதிமன்றம் கூறியது என்ன?

End of அதிகம் படிக்கப்பட்டது

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"உரச் சந்தை உலகளாவிய ஒன்றாகும், எனவே இந்த மூலப்பொருட்கள் பூமி முழுவதும் நகர்ந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இதன் உடனடித் தாக்கத்தை நீங்கள் ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற முக்கிய இலக்குகளில் காண முடியும்."


உலகம் முழுவதும் பயிரிடும் காலங்கள் மாறுபடுகின்றன. பிரிட்டனில் இது உச்சக்கட்ட பயிரிடும் காலம், அதே நேரத்தில் ஆசியாவில் விவசாயிகள் இப்போதே பணியைத் தொடங்கி வருகின்றனர்.


ஆசியாவில் உரத் தட்டுப்பாட்டின் விளைவுகள் ஆண்டின் இறுதி வரை உணவு விலைகளில் பிரதிபலிக்காது. இந்த வசந்த காலத்தில் நடப்பட வேண்டிய பயிர்கள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக வரும்போது அல்லது வராமல் போகும்போதுதான் அந்தத் தாக்கம் தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புத் துறையின் மூத்த ஆய்வாளர் பேராசிரியர் பால் டெங், ''சில நாடுகள் உடனடிப் பயிரிடும் காலத்திற்குத் தேவையான உரத்தை வைத்திருக்கலாம். ஆனால் இந்த நெருக்கடி இன்னும் நீடித்தால், வரும் மாதங்களில் அரிசி போன்ற பயிர்களில் இதன் தாக்கத்தைக் காண்போம்" என்றார்.


உலகெங்கிலும் உள்ள விவசாயிகள் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்று ஹோல்செதர் கூறினார். அவர்கள் உற்பத்தி செய்யும் உணவிற்கு கிடைக்கும் விலை, அவர்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான செலவுகளை ஈடுகட்டும் வகையில் இன்னும் மாறவில்லை.


"அவர்கள் அதிக எரிசக்தி செலவுகளை எதிர்கொள்கிறார்கள், டிராக்டருக்கான டீசல் விலை அதிகரிக்கிறது, விவசாயிகளுக்கான பிற உள்ளீடுகளின் விலையும் அதிகரிக்கிறது, உரச் செலவும் அதிகரிக்கிறது, ஆனால் பயிர்களின் விலை இன்னும் அந்த அளவிற்கு உயரவில்லை," என்று அவர் கூறினார்.



இரான் போரால் ஆசியா உட்பட உலகெங்கும் உணவு விலை உயரும் ஆபத்து ஏன்?பட மூலாதாரம்,Getty Images

ஏலப் போட்டி

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகின் உரங்களான யூரியா, பொட்டாஷ், அம்மோனியா மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே செல்கிறது.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் மீது போர் தொடுத்ததில் இருந்து உரத்தின் விலை 80% உயர்ந்துள்ளது.


இந்த மோதல் தொடர்வது பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையே உணவிற்கான ஏலப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று ஹோல்செதர் மேலும் கூறினார்.


"உணவிற்காக ஒரு ஏலப் போட்டி ஏற்பட்டு, அதைச் சமாளிக்கும் அளவுக்கு ஐரோப்பா வலுவாக இருந்தால், ஐரோப்பாவில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அத்தகைய சூழ்நிலையில் நாம் யாரிடமிருந்து உணவைப் பறித்து வாங்குகிறோம்?"


"வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் இதற்காக மிக உயர்ந்த விலையைக் கொடுக்கும் சூழல் இதுவாகும், அவர்களால் அந்தப் போட்டியைத் தாங்க முடியாது."


இது "உணவு வாங்கும் திறன், உணவுப் பற்றாக்குறை மற்றும் பசி" ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று யாரா தலைவர் கூறினார்.


பிரிட்டனில், உணவு மற்றும் பானங்களின் கூட்டமைப்பு சமீபத்தில் உணவு விலை உயர்வு டிசம்பர் மாதத்திற்குள் 10% ஐ எட்டக்கூடும் என்று கணித்துள்ளது.


செப்டம்பர் மாதத்தில் உணவு விலை 4.6% ஆக உயரக்கூடும் என்றும், ஆண்டின் பிற்பகுதியில் இது இன்னும் அதிகமாகக்கூடும் என்றும் இங்கிலாந்து வங்கி இந்த வாரம் தெரிவித்துள்ளது.


மத்திய கிழக்கு மோதலின் கூட்டு விளைவுகளால் 2026 ஆம் ஆண்டில் கூடுதலாக 45 மில்லியன் மக்கள் கடும் பசிக்கு தள்ளப்படலாம் என்று ஐநா உலக உணவுத் திட்டம் மதிப்பிட்டுள்ளது.


ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில், உணவுப் பாதுகாப்பின்மை 24% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.