இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் தனித்தனி அன்னையர் தினத்தை கடைப்பிடிக்கின்றன.
அமெரிக்காவில் அன்னா ஜார்விஸ் என்ற ஒரு ஆர்வலரின் முயற்சியால் அன்னையர் தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அன்னா 1854 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின்போது பிறந்தார். மேலும் அம்மை, டைபாய்டு மற்றும் டிஃப்தீரியா போன்ற நோய்களால் தனது உடன்பிறந்தவர்களில் சிலரை இழந்தார்.
அவரது தாயார், ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ், தனது சொந்த அனுபவங்களால் உந்தப்பட்டு, குழந்தை இறப்பைத் தடுக்க தாய்மார்களுக்கு சுகாதாரத்தை கற்பித்தல் போன்ற தாய்மையை மையமாகக் கொண்ட காரணங்களுக்காக தனது வாழ்க்கையை செலவிட்டார்.
அன்னாவின் இளம் வயதில் அவரது தாயார், அன்னையர் தினம் ஒன்று வேண்டும்” என்றார். அவர் வளர்ந்தபோது, அன்னா ஒரு 'அன்னையர் தினம்' ஸ்தாபனத்தை தனது வாழ்க்கையின் பணியாக மாற்றினார்.
அவர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் தேவாலயத் தலைவர்களுக்கு தனது ஆதரவைப் பெறுமாறு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தாய்மார்களைக் கொண்டாடும் நாளாக அர்ப்பணிக்கப்பட்டது.
அதாவது, அவரின் அம்மா இறந்த மே 9 ஆம் திகதிக்கு அருகில் இருக்கும் என்று குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்தார்.
1908 ஆம் ஆண்டில், அவரது சொந்த ஊரான கிராஃப்டன் மற்றும் பிலடெல்பியாவில் இரண்டு பெரிய அன்னையர் தின நிகழ்வுகள் நடைபெற்றபோது அவரது முயற்சிகளுக்கு வெகுமதி கிடைத்தது.
மே 8, 1914 அன்று, அன்னையர் தினத்தை முறையாக அங்கீகரிப்பதற்கான சட்டமூலத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் கையெழுத்திட்டார்.
பின்னர், அன்னையர் தின கொண்டாட்டங்கள் வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகளாக மாறியதால், இந்த நிகழ்வை வணிகமயமாக்குவதற்கு அன்னா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
ஏனென்றால் வீட்டில் தனது குடும்பத்தை பராமரிக்கும் தாயை, சிறந்த தாய் எனக் கொண்டாடுங்கள் என்றார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய 9 பேரடங்கிய விசேட குழுவை விமானப்படைத் தளபதி நியமித்துள்ளார்.
உலகெங்கும் மே மாதம் முதல் நாளை தொழிலாளர் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். மே தினம் பிறந்த இடம் சோவியத் நாடு என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. மே தினம் பிறந்த இடம் அமெரிக்காதான். 1884ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அமெரிக்கா, கனடா நாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் பேரவை எட்டு மணி நேர வேலையை சட்டபூர்வமாக ஆக்கிட வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்க தீர்மானித்தது. அதன்படி 1886ம் ஆண்டு மே முதல் நாள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
அமெரிக்காவின் பல மாகாணங்களில் உள்ள தொழில் நகரங்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றாலும் சிகாகோ நகரம்தான் தீவிர உணர்ச்சிமிக்க தொழிலாளர்களின் போராட்டக் களமாகத் திகழ்ந்தது. அதுவரை தொழிலாளர்கள் அப்படிப் போராடியதே கிடையாது. அதைக் கண்டு அரசாங்கம் சினந்தது. அவ்வண்ணம் போராடிய தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கண்மூடித்தனமாக ஏவி விட்டது. மே 3ல் நடைபெற்ற மெக்கார்மிக் ரீப்பர் தொழிற்சாலை வேலை நிறுத்தமும், மறுநாள் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டமும் பெரும் அடக்குமுறைக்கு ஆளாகியது. இதில் உயிர் பலிகள் ஏராளம்.
1888ம் ஆண்டில் நடைபெற்ற தொழிலாளர் பேரவையில் தொழிலாளர்கள் இயக்கத்தினை அரசியல் முறையில் மே முதல் நாள் நடத்தத் திட்டமிட்டது. 1889 மே முதல் நாளை அமெரிக்க தொழிலாளர் பேரவை விரிவாக நடத்தத் திட்டமிட்டிருந்ததால் அனைத்து நாடுகளில் உள்ள தொழிலாளர் அமைப்புகள் இதையே தொழிலாளர் நாளாகக் கொண்டாட முடிவு செய்தனர். இப்படித்தான் மே தினம் பிறந்தது. 8 மணி நேர வேலை உரிமைக்காக தோன்றிய போராட்ட நாளில் பிறந்ததுதான் மே நாள் என்ற தொழிலாளர் தினம்.
Advertisement
ஆண்டுதோறும் மே தின விழாவில் ரஷ்யாவின் தலைவர் கலந்துகொண்டு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் முதலாளித்துவ சுரண்டலின் கேடு, உலக அமைதியின் அவசியம் முதலானவற்றை விளக்கி உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது. தொழிலாளர்கள் இயக்கத்தை முதன் முதலில் தொடங்கியவர் சர்.ஜேம்ஸ் லுடாயி. முதன் முதலில் தோன்றிய தொழிலாளர் இயக்கத்திற்கு, ‘லூடாயி இயக்கம்’ என்றே பெயர்.
மே தினம்
1864ல் உலக அளவிலான தொழிற்சங்கத்தை முதன் முதலில் காரல் மார்க் ஏற்படுத்தினர். பி.பி.வாரியா 1918ல் முதல் தொழிற்சங்கத்தை சென்னையில் தொடங்கினார். சென்னையில் தோன்றிய முதல் தொழிற்சங்கத்தின் பெயர், ‘மதராஸ் லேபர் யூனியன்’ என்பதாகும். இன்றைய நாளில் மே தின பேரணிகள் நடைபெறுகின்றன.
மே தினம் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுவதெல்லாம் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் மாறுபாட்டினால்தான். புராதன ரோமானியர்கள் மே தினத்தை மகிழ்ச்சி அளிக்கும் நாள், கேளிக்கை தினமாகக் கொண்டாடினர். வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் மே தினத்துக்கு முதல் நாள் இரவை வேடிக்கை இரவு என்று கொண்டாடுகின்றனர். அன்று இரவில் வீடு மற்றும் கடைகளில் கதவுகள் அகற்றப்பட்டிருக்கும். கதவுகளின் பூட்டுகளை உடைத்து வைத்து விடுவர். கடைகளின் பெயர்ப்பலகைகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கும். இவை எல்லாம் மே தின கொண்டாட்டங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது. போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு "ஈஸ்டர் வாழ்த்துகள்" தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.
விளம்பரம்
சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, "அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துகள்" என்று கூறினார்.
ஆசிர்வாதம் வழங்கிய பிறகு, அவர் வாகனத்தில் ஏறி வாடிகன் சதுக்கத்தைச் சுற்றிவந்தார். அந்த நேரத்தில், பல முறை வாகனத்தை நிறுத்தி, குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.
ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மக்கள் முன்பு தோன்றிய போப்பட மூலாதாரம்,Reuters
படக்குறிப்பு,ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மக்கள் முன்பு தோன்றிய போப்
"அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை பிரான்சிஸின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறேன்'' என கார்டினல் ஃபாரெல் தெரிவித்தார்.
''இன்று காலை 7:35 மணிக்கு (உள்ளூர் நேரம்) ரோமின் பிஷப் பிரான்சிஸ், தந்தையிடம் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது''
''நற்செய்தியின் விழுமியங்களை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும் நமக்குக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஏழைகளுக்கு மிகவும் ஆதரவாக வாழ அவர் நமக்கு கற்பித்தார்'' எனவும் அவர் கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ், கத்தோலிக்க திருச்சபையில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர். அதே நேரத்தில், பாரம்பரிய நிகழ்வுகள் தொடர வேண்டும் என்று கருதும் பழமைவாதிகளிடையேவும் இவர் பிரபலமாக இருந்தார்.
உலகின் தெற்குப் பகுதியில் இருந்து வந்த முதல் போப் இவர்தான்.
இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஐந்து வார மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து திரும்பினார்.
உலக மக்களுக்கு போப்பின் இறுதி செய்தி
மறைந்த போப் பிரான்சிஸ் ஈஸ்டர் தினத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையே உலக மக்களுக்கான அவரது கடைசி செய்தியாக அமைந்தது. ஈஸ்டர் ஞாயிறன்று போப்பின் அறிக்கையை அவரது உதவியாளர் ஒருவர் வாசித்தார்.
அந்த செய்தியில்,"மத சுதந்திரம், சிந்தனைக்கான சுதந்திரம், கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் இன்றி அமைதி இல்லை" என போப் தெரிவித்திருந்தார்.
காஸா மக்களையும், குறிப்பாக அங்கு வாழும் கிறிஸ்தவ மக்களையும் குறிப்பிட்ட அவர், அங்கு நிகழும் மோதல்கள் மரணத்தையும், அழிவையும் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் இந்த போர் "மோசமான மனிதாபிமான சூழ்நிலையை" உருவாக்குகிறது. உலகளாவிய யூத எதிர்ப்புவாதம் வளர்ந்து வருவது "கவலைக்குரியது" என்றும் அவர் கூறினார்.
"உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மோதல்களில் கொலை செய்வதற்கான தாகம் எவ்வளவு அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார்.
"அனைத்து இஸ்ரேலிய மற்றும் பாலத்தீன மக்களுக்காக எனது அன்பை வெளிப்படுத்துகிறேன். போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுங்கள், பணயக்கைதிகளை விடுவியுங்கள். அமைதியான எதிர்காலத்தை விரும்பும் மக்களுக்கு உதவுங்கள்." எனவும் போப் கூறியுள்ளார்.
யுக்ரேன் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் "நீடித்த அமைதியை அடைவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும்" எனவும் போப்பின் இறுதி அறிக்கை கூறுகிறது.
பவுன்சராக பணியாற்றிய போப்
பியூனஸ் அயர்ஸில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக உயர்ந்தவர் போப் பிரான்சிஸ். அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 1936 டிசம்பர் 17ம் தேதி போப் பிரான்சிஸ் பிறந்தார். பாசிசத்தின் பிடியில் இருந்து தப்பிக்க இத்தாலியில் இருந்து வெளியேறிய போப் பிரான்சிஸ், 5 குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் மூத்த மகன் ஆவார்.
சான் லொரெஞ்சோ நகரின் உள்ளூர் கால்பந்து க்ளப்பின் ஆதரவாளராக இருந்த போப் பிரான்சிஸ், டாங்கே நடனத்திலும் விருப்பம் கொண்டவர்.
இளம் வயதிலேயே கடுமையான நிமோனியா தாக்குதலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் நுரையீரலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தது. இதனால் அவர், தனது வாழ்நாள் முழுவதும் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையும் ஏற்பட்டது.
வயதுமூப்பின் காரணமாக தனது வலது காலில் ஏற்பட்ட மூட்டுவலியால் மிகவும் பாதிக்கப்பட்டார். இந்த பிரச்சனையை போப், 'உடல்ரீதியிலான அவமானம்' என்று குறிப்பிட்டார்.
வேதியியலில் பட்டம் பெறும்வரை, போப் பிரான்சிஸ் பவுன்சராகவும், தரையை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டார்.
உள்ளுர் தொழிற்சாலை ஒன்றில் எஸ்தர் பலெஸ்ட்ரினோவுடன் பணியாற்றிவர் போப் பிரான்சிஸ். எஸ்தர் பலெஸ்ட்ரினோ, அர்ஜெண்டினாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் என்பதால் கடும் சித்திரைவதைக்கு உள்ளானவர், இறுதியில் அவரது சடலம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினரான போப் பிரான்சிஸ், தத்துவயியல் பயின்றவர் என்பதும் இலக்கியம் மற்றும் மனோதத்துவத்தை பயிற்றுவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, துரிதமாக பதவி உயர்வு பெற்ற போப் பிரான்சிஸ், 1973 இல் அர்ஜென்டினா மாகாணத்தின் மேலதிகாரியானார்.
தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை 2026 மார்ச்/ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும்.
95.7 கி.மீ நீளமுள்ள கால்வாய் மஹா எலா திட்டம், வட மத்திய மாகாணத்தில் 12,500 ஹெக்டேர் புதிய நெல் வயல்களுக்கு நீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டம் பெரிய மகாவலி மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்
இது முப்பரிமாணம் அச்சிடப்பட்ட உலகின் முதல் ரயில் நிலையம் ஆகும். அதேசமயம் இந்த முப்பரிமாண கட்டிடம் கான்கிரீட் கட்டிடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது என ஜப்பான் வீட்டு வசதி நிறுவனமான செரெண்டிக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த முப்பரிமாண ரயில் நிலையம் வருகிற ஜூலை மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ஜப்பான் மேற்கு ரயில்வே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், மக்கள் தொகை இன்னும் அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகை 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை விட 1,403,731 அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள் தொகை 21,763,170 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண ரீதியாக எடுத்துக் கொண்டால், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 28.1% என்ற மிகப்பெரிய மக்கள் தொகை மேல் மாகாணத்தில் வசிக்கும் அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3% வடக்கு மாகாணத்தில் வாழ்வதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் மக்கள்தொகை பரவலைக் கருத்தில் கொள்ளும்போது, அதிக மக்கள் தொகை கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 2,433,685 ஆகும்.
இரண்டாவது இடத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் 2,374,461 பேர் வசிக்கின்றனர்.
அதன்படி, இந்த இரண்டு மாவட்டங்களிலும் மாத்திரம் தலா 02 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை வசிப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு மாவட்டங்களைத் தவிர, முன்னைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போன்று இம்முறையும், குருநாகல் 1,760,829, கண்டி 1,461,269, களுத்துறை 1,305,552, இரத்தினபுரி 1,145,138 மற்றும் காலி 1,096,585 ஆகிய மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை பதிவாகியுள்ளது.
அதேநேரம் முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மற்றும் வவுனியா மாவட்டங்கள் பதிவாகியுள்ளன.
முல்லைத்தீவில் 122,542 பேரும், மன்னாரில் 123,674 பேரும், கிளிநொச்சியில் 136,434 பேரும் வவுனியாவில் 172,257 பேரும் வசிக்கின்றனர்.
இதற்கிடையில், அதிகபட்ச சராசரி வளர்ச்சி விகிதம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது, இது 2.23 ஆகவும் பதிவாகியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மிகக் குறைந்த சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளதுடன், இது 0.001 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போலவே, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேர் என்ற அதிகபட்ச மக்கள் தொகை அடர்த்தி கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது.
அங்கு மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தொகைமதிப்பு முதற்கட்ட அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் குடிசனம், குடிசன வளர்ச்சி மற்றும் மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை பரவல் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்திச் செயல்முறைக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க அரசாங்கம் அல்லாத ஏனைய நிறுவனங்களுக்கு இந்த குடிசன கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை. குடிசன தொகைமதிப்பு வரலாற்றில் முதல் முறையாக, டெப்லெட் கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது விசேட அம்சமாகும்.
இந்தியா, சீனா, இலங்கை, பிரிட்டன் உள்ளிட்ட சுமார் 100 நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா.
அமெரிக்கா மீது வரிகளையும் பிற தடைகளையும் விதித்துள்ள ''மோசமான நாடுகளில்'' ஒன்றாக இந்தியாவை பட்டியலிட்டுள்ள அமெரிக்கா, இந்தியா மீது 27% வரி விதித்துள்ளது (டிரம்ப் காண்பித்த விளக்கப்படத்தில் இந்தியாவுக்கு 26% வரி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ உத்தரவில் 27% என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு மற்ற சில நாடுகளுக்கான வரிவிதிப்புகளிலும் காணப்பட்டது). இதுவரை 2% வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியா மீது தற்போது 27% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிகள் எதனால் விதிக்கப்படுகின்றன? இதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும்?
இந்தியா மீது 27% வரி விதித்த டிரம்ப் - பிரதமர் மோதி பற்றிக் கூறியது என்ன?
'இது வர்த்தகப் போரை ஏற்படுத்தும்' - டிரம்ப் அறிவிப்பால் கொந்தளிக்கும் உலகத் தலைவர்கள்
பரஸ்பர வரி அறிவிப்பில் சீனா, ஜப்பான், தைவானுக்கான வரி குறித்து விளக்கிய டிரம்ப்
டிரம்பின் '3வது முறை அதிபராகும்' ஆசை - சாத்தியமாக வல்ல கனவா? கானல் நீரா?
1. ஏன் வரிகள் விதிக்கப்படுகின்றன?
அமெரிக்க வரி விதிப்பு – 8 கேள்வி-பதில்கள்பட மூலாதாரம்,Getty Images
வெளிநாடுகளிலிருந்து உள்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை நாடுகள் விதிக்கின்றன. எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு விதிக்கப்படுகின்றன என்பது ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடும்.
நாடுகள் பல காரணங்களுக்காக வரிகளை விதித்தாலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை 3 முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
முதலில் உள்ளூர் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் இவை விதிக்கப்படலாம். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிக்கப்படும்போது, அவற்றின் விலை உள்ளூர் சந்தையில் அதிகரிக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் உள்நாட்டு பொருட்களை வாங்க தூண்டப்படுவார்கள்.
அரசுக்கு கணிசமான வருவாய் ஈட்டும் ஆதாரங்களில் ஒன்று இறக்குமதி வரிகள் என்பதால் வருவாய் உருவாக்குவதற்காக வரிகள் விதிக்கப்படலாம்.
வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காக வரிகள் விதிக்கப்படலாம்.
இதில் வர்த்தகப் பற்றாக்குறையையே அமெரிக்கா தனது வரி விதிப்புகளுக்கு காரணமாக குறிப்பிடுகிறது.
2. வர்த்தக பற்றாக்குறை என்றால் என்ன?
அமெரிக்க வரி விதிப்பு – 8 கேள்வி-பதில்கள்பட மூலாதாரம்,Getty Images
ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்தால் அது வர்த்தகப் பற்றாக்குறை எனப்படும். ஒரு நாடு 100 கோடிக்கு பொருட்களை இறக்குமதி செய்து, 80 கோடிக்கு மட்டுமே பொருட்களை ஏற்றுமதி செய்தால், 20 கோடி வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம்.
3. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை எவ்வளவு?
அமெரிக்காவின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறை 1.2 டிரில்லியன் டாலராகும்.
இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு 2024-ம் ஆண்டில் 45.7 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. அதாவது 2024-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை அமெரிக்கா இறக்குமதி செய்தது. அதே நேரம், இந்தியாவுக்கு 41.8 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
2023-ம் ஆண்டு இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை விட 2024-ம் ஆண்டின் பற்றாக்குறை 5.4% (2.4 பில்லியன் டாலர்) அதிகரித்திருந்தது.
அமெரிக்காவின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இந்தியாவுடனானது 3.8% மட்டுமே.
சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையில் 24.7% சீனாவுடனானதாகும்.
இந்த வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவே பரஸ்பர வரிகளை விதிப்பதாக அமெரிக்கா கூறுகிறது.
பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை
1 ஏப்ரல் 2025
மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறி கேலிக்கு ஆளான விஞ்ஞானி அதை நிரூபித்த கதை
1 ஏப்ரல் 2025
அமெரிக்க வரி விதிப்பு – 8 கேள்வி-பதில்கள்பட மூலாதாரம்,Getty Images
4. பரஸ்பர வரிகள் என்றால் என்ன?
பரஸ்பர வரிவிதிப்பு என்பது ஒரு வர்த்தகக் கொள்கையாகும்.
வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை (ஒரு நாடு ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்யும் போது) நிவர்த்தி செய்ய அமெரிக்கா இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.
அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை அதிக விலை கொண்டதாக மாற்றுவதன் மூலம், பிற நாடுகள் விதிக்கும் வர்த்தக வரிகள், தடைகளை குறைப்பதே இதன் நோக்கமாகும்.
அமெரிக்க வரி விதிப்பு – 8 கேள்வி-பதில்கள்பட மூலாதாரம்,Getty Images
5. அமெரிக்கா மீது இந்தியா விதிக்கும் வரி எவ்வளவு?
இந்தியா மீது வரி விதிக்கும் போது, அமெரிக்க சரக்குகளுக்கு இந்தியா 52% வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்தியா மிகவும் கடினமான அணுகுமுறையை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
2024-ம் ஆண்டு அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அறிக்கை, " அமெரிக்காவின் தாவர எண்ணெய் (45 சதவிகிதம் வரை) உட்பட பரந்த அளவிலான பொருட்களுக்கு இந்தியா அதிக வரிகளை விதித்து வருகிறது. ஆப்பிள், சோளம், மோட்டார் சைக்கிள்களுக்கு 50%, வாகனங்கள், பூக்களுக்கு 60%, இயற்கை ரப்பருக்கு 70%, காபி, திராட்சை, அக்ரூட் பருப்புகளுக்கு 100%, மதுபானங்களுக்கு 150% விதிக்கப்படுகிறது. கூடுதலாக, உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள உயிர் காக்கும் மருந்துகள், முழுவதும் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மீது இந்தியா மிக உயர்ந்த வரிகளை (சில சந்தர்ப்பங்களில் 20%க்கும் அதிகமாக) விதிக்கிறது" என கூறுகிறது.
வானத்தில் ஒளிர்ந்த அரோரா - மனதை மயக்கும் காட்சி
31 மார்ச் 2025
சிறுநீரை உரமாக மாற்றும் அமெரிக்க விவசாயிகள்
29 மார்ச் 2025
6. இந்திய பொருளாதாரத்தை பாதிக்குமா?
அமெரிக்க வரி விதிப்பு – 8 கேள்வி-பதில்கள்பட மூலாதாரம்,Getty Images
அமெரிக்காவின் வரி விதிப்பினால் இந்தியாவில் குறைவான பாதிப்புகளே இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால், சீனா, ஜப்பான், வியட்நாம், இலங்கை ஆகிய நாடுகளைப் போன்று ஏற்றுமதியை சார்ந்திருக்கும் நாடாக இந்தியா இல்லை என்கின்றனர்.
அமெரிக்காவில் விலைவாசி உயர்வு மற்றும் உலக வர்த்தகப் போக்கில் இந்த வரி விதிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த பாதிப்பே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பாங்க் ஆஃப் பரோடாவின் பொருளாதார நிபுணர் சோனல் பதன், "ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸை(17%) கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்தால், இந்தியாவுக்குதான் குறைந்த வரி விதிக்கப்பட்டுள்ளது," என்று கூறினார் என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
அதே செய்தியில், பிரிமல் குழுவின் தலைமை பொருளாதார நிபுணர் தீபோபம் செளத்ரி, "உள்நாட்டை சார்ந்த இந்தியா போன்ற பொருளாதாரங்கள் வங்கி பணப்புழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் (bank liquidity). இதனால் உள்நாட்டு சில்லறை கடன் பெறுபவர்களுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் தாராளமாக கடன் வழங்க முடியும். இதன் மூலம், உள்நாட்டு நுகர்வை சீராக பராமரிக்க முடியும்" என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் 'ஜிப்லி' என்றால் என்ன? அது முதலில் எப்படி உருவானது?
31 மார்ச் 2025
வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயார் செய்வது எப்படி?
31 மார்ச் 2025
7. வரி விதிப்பினால் அமெரிக்கா பாதிக்கப்படுமா?
வரி விதிப்பினால் அமெரிக்காவில் விலைவாசி உயர்வு ஏற்படலாம். அமெரிக்க டாலரின் மதிப்பு விதிக்கப்பட்ட வரிகளுக்கு ஈடாக உயர்ந்தால் மட்டுமே அது அமெரிக்க மக்களை பாதிக்காமல் இருக்கும்.
உதாரணமாக இந்தியாவை பொருத்தவரை, 27% வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 85 முதல் 108 ஆக குறைவான காலக்கட்டத்தில் உயர்ந்தால், இந்த வரி விதிப்பின் பாதிப்பை அமெரிக்க மக்கள் உணரமாட்டார்கள். இதுவரை இந்திய சரக்குகளை எந்த விலையில் இறக்குமதி செய்து வந்தார்களோ அதே விலைக்கு தொடர்ந்து இறக்குமதி செய்யலாம்.
ஆனால், ரூபாயின் மதிப்பு டாலருக்கு 85 என்ற நிலையிலேயே நீடித்தால், அமெரிக்கர்கள் 27% அதிகம் செலவு செய்து இந்திய சரக்குகளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.
டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்த போது வரிவிதிப்புகள் அதிகரித்ததால், அமெரிக்காவில் எஃகு விலை 2.4% மற்றும் அலுமினியத்தின் விலை 1.6% அதிகரித்தது.
2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் வரிகள் அதிகரிப்பு காரணமாக வாஷிங் மெஷினின் விலை அமெரிக்காவில் 34% அதிகரித்தது என அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பொருளாதாரத்தின் மீதான சார்பை பொறுத்து பிற நாடுகளிலும் விலைவாசிகள் உயர்ந்து, வளர்ச்சி குறையலாம். இது உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பிரபல YouTube சேனலான Wild Cookbookஐ உருவாக்கிய சரித் என். சில்வா, YouTube தளத்தில் 10 மில்லியன் Subscribeஐ கடந்த முதல் இலங்கையராக மாறியுள்ளார்.
விண்கலத்தில் இருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார்.
இந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல மறுநுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கி பயணித்தது. பிறகு பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, நீரில் இறங்கி, மிதந்தது.
#வாழ்த்துக்கள் 💐💐💐❤️👍👏
📌👉சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், தனது சகாக்களுடன் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளார். அவர்கள் பயணித்து வந்த டிராகன் விண்கலம், இலங்கை நேரப்படி (19.03.2025) சுமார் அதிகாலை 3.27 மணி அளவில் ஃபுளோரிடா அருகே கடலில் இறங்கியது.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரோஸ்கோஸ்மோஸ், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்.
கண்டுகளிக்க முடியும். அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, ரஷ்யா, ஜப்பான் மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் தெளிவாகத் தெரியும். இது இந்தியாவில் முழுமையாகத் தெரியாது. இந்தியாவில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அதிகாலையில் தோன்றும் சந்திர கிரகணத்தை கண்டுகளிக்கலாம்.
இது உண்மையில் எங்களுக்கு மிகப்பெரிய, மிகப்பெரிய மைல்கல். இந்த வெற்றி மூலம் நாங்கள் எப்படிப்பட்ட அணி என்பதை வெளிப்படுத்தியுள்ளோம். ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில்கூட தோற்காத நாங்கள் இறுதிப்போட்டியில் தோற்றோம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், டி20 உலகக் கோப்பையில் ஒருபோட்டியில் கூட தோற்காமல், கோப்பையை வென்றோம். அதேபோல சாம்பியன்ஸ் டிராபியிலும் ஒரு போட்டியில்கூட தோற்காமல் கோப்பையை வென்றுள்ளோம்"
இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனை படைத்த போது உற்சாகத்தில் கேப்டன் ரோஹித் சர்மா பேசியது.
மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது. 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.
1907-ல் தொடக்கம். 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1912-ல் Bread and roses வாசகம், 1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945 தனி பெண்ணுக்கான உரிமை, உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது
உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் இந்த மகளிர் தினம். "