Showing posts with label Article. Show all posts

 



பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (ஜூலை 26)அதிகாரப்பூர்வமாக தொடக்க விழாவுடன் துவங்குகிறது. ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டிகள் வரை நடைபெறுகின்றன.

கடந்த 100 ஆண்டுகளில் பிரான்ஸ் தலைநகர் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

1900 மற்றும் 1924 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரத்தில் நடைபெற்றன. இப்போது மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெறுகின்றன.

இதன் மூலம் லண்டன் நகரத்​திற்குப் பிறகு மூன்​றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரம் என்ற பெரு​மையைப் பெற்றிருக்கிறது பாரிஸ். இதற்காக பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


 



அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜோ பைடனின் விலகலால் அதிபர் தேர்தலில் புதிய சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகியிருக்கும் நிலையில், தனது ஆதரவை துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸுக்கு வழங்கியுள்ளார்.


எனினும் உடனடியாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகிவிட முடியாது. ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகளின் முறையான ஆதரவு அவருக்குத் தேவைப்படும்.


கமலா ஹாரிஸுக்கு ஆதரவு (கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் சிறப்பாக பணியாற்றினார் என ஏற்றுகொண்டோரின் விகிதம்) குறைவாகவே உள்ளது.


அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு துணை அதிபர் பதவி காலத்தில் அவர் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாரா என்ற சந்தேகமும் உள்ளது.




கமலா ஹாரிஸ் அரசியலுக்கு வந்தது எப்படி?

2020 அதிபர் தேர்தலுக்கு பிறகு துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ், இந்தப்பதவியில் அமர்ந்த முதல் பெண்மணி, முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் ஆசிய வம்சாவளியினர் உள்ளிட்ட பெருமைகளை பெற்றார்..


2021 நவம்பரில் ஜோ பைடன் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது அவர் 75 நிமிடங்கள் அதிபர் பொறுப்பை வகித்தார்.



கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியாவின் ஓக்லாண்டில், இந்தியாவில் பிறந்த தாய் மற்றும் ஜமைக்காவில் பிறந்த தந்தை ஆகிய இரு புலம்பெயர்ந்த பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார்.


அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது பெற்றோர் விவாகரத்து செய்தனர். அதன் பிறகு கமலா முக்கியமாக அவரது தாயார் ஷியாமளா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார். ஷியாமளா, புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.


ஓக்லாண்டின் கறுப்பின சமூகத்தில் தன்னையும் தனது தங்கை மாயாவையும் தன் தாய் முழுமையாக இணைத்ததாக கமலா ஹாரிஸ் கூறுகிறார்.


"இரண்டு கறுப்பின மகள்களை தான் வளர்த்து வருவதை என் அம்மா நன்றாக புரிந்து கொண்டார்" என்று அவர் தனது சுயசரிதையான ’தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்’ புத்தகத்தில் எழுதினார்.


"தாய்நாடாக தான் தேர்ந்தெடுத்த நாடு, மாயாவையும் என்னையும் கறுப்பினப் பெண்களாகப் பார்க்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். மேலும் நாங்கள் தன்னம்பிக்கையுள்ள, பெருமைமிக்க கறுப்பினப் பெண்களாக வளர்வதை உறுதி செய்தார்,” என்று கமலா குறிப்பிட்டுள்ளார்.


கமலா ஹாரிஸ் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். இது நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான கறுப்பின கல்லூரிகளில் ஒன்றாகும். அங்கு அவர் தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான மற்றும் அமெரிக்காவில் இன உறவுகள் போன்ற அரசியல் பிரச்னைகளை எதிர்கொண்டார்.


கமலா ஹாரிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவின் ஓக்லாண்டில் உள்ள அலமேடா கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் தனது சட்டப்பணி வாழ்க்கையைத் தொடங்கினார்

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹேஸ்டிங்ஸ் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான அவர், கலிஃபோர்னியாவில் உள்ள பல்வேறு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகங்களில் பணிபுரிந்தார்.


2010 இல் கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக உயர்ந்தார். 2016 இல் அம்மாகாணத்தின் அமெரிக்க செனட்டராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


2020 ஆம் ஆண்டில் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தான் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே போட்டியிலிருந்து வெளியேறினார்.


இருப்பினும் அதிபர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட ஜோ பைடன் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தார்.


"கமலா புத்திசாலி, உறுதியானவர், அனுபவம் வாய்ந்தவர், கடுமையாக போராடக்கூடியவர்,” என்று பைடன் கமலா பற்றிக் குறிப்பிட்டார்.


இருவரும் இணைந்து அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸை தோற்கடித்தனர்.


பிரசாரத்தின்போது கமலா ஹாரிஸ் பைடனின் பின்னணியில் இருந்தாலும் கூட, அவர் ஒரு பெண் மற்றும் கறுப்பினத்தவர் என்ற அடையாளம் அவர்களின் வெற்றியில் பெரும் பங்கு வகித்திருக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு கறுப்பின பெண்களால் அளிக்கப்பட்ட 90% வாக்குகள் கிடைத்தன.



துணை அதிபராக கமலா ஹாரிஸ் என்ன செய்தார்?

அமெரிக்க துணை அதிபர் என்ற நிலையில் கமலா ஹாரிஸ் அமெரிக்க செனட்டின் தலைவராகவும் உள்ளார். மசோதாக்களில் வாக்குகள் சமமாக இருக்கும்போது அவர் தன் வாக்கை அளிக்க முடியும்.


அமெரிக்காவின் வரலாற்றில் வேறு எந்த துணை அதிபரையும் விட அதிகமாக 32 முறை அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் சாதனை படைத்துள்ளார்.


"அறையின் கடைசி குரலாக ஒலிக்கும் கமலா, அனுமானங்களை சவால் செய்வார் மற்றும் கடினமான கேள்விகளைக் கேட்பார்," என்று பைடன் தனது துணை அதிபர் பற்றிக் கூறினார்.


கருக்கலைப்பை அமெரிக்காவின் முழு உரிமையாக்கிய ‘ஜேன் ரோ vs ஹென்றி வேட்’ தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, இனப்பெருக்க உரிமைகளை பாதுகாப்பதற்காக 2022 முதல் நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்தார்.


கமலா ஹாரிஸ், மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவின் தெற்கு எல்லையை கடக்கும் குடியேறிகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை

எவ்வாறாயினும் ஹாரிஸ் துணை அதிபராக இருந்த காலம் முழுவதும் அவருக்கு ஆதரவு (கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் சிறப்பாக பணியாற்றினார் என ஏற்றுகொண்டோரின் விகிதம்) குறைவாகவே இருந்தது.


51% அமெரிக்கர்கள் அவரது செயல்திறனை ஏற்கவில்லை எனவும் 37% பேர் மட்டுமே அவரது பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர் எனவும் 'ஃபைவ் தெர்டி எயிட்' தொகுத்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


அமெரிக்க தெற்கு எல்லையில் குடியேற்றத்தை குறைப்பதே அதிபர் பைடன் துணை அதிபருக்கு வழங்கிய முக்கிய பணி என்றும், அந்த சிக்கலை சரிசெய்ய அவர் பெரும்பாலும் தவறிவிட்டார் என்றும் பிபிசியின் அமெரிக்க சிறப்பு செய்தியாளர் கேட்டி கே கூறுகிறார்.

 


'தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு' (IT outage), கடந்த இரண்டு நாட்களாக


உலகம் முழுவதும் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த நவீன யுகத்தில் ஒரு சிறு தொழில்நுட்ப தவறு கூட நமது அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்கு வெள்ளிக்கிழமை நடந்தவை ஒரு உதாரணம். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது விமான சேவைகள் தான்.


அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன. வங்கித் துறை, பங்குச் சந்தை மற்றும் மருத்துவத்துறையும் இதனால் பாதிக்கப்பட்டது.


சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட்ஸ்ட்ரைக் இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 85 லட்சம் விண்டோஸ் கணினிகள் செயலிழந்தன என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் விமான சேவைகள், வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



ஹாங்காங் விமான நிலையத்தின் கணினித் திரையில் தோன்றும் 'ப்ளூ ஸ்க்ரீன் எரர்'

கடந்த வெள்ளிக்கிழமை காலை தங்களது கணினிகளை ஆன் செய்த விண்டோஸ் பயனர்கள் பலரும் திரையில் தோன்றிய ப்ளூ ஸ்க்ரீன் எரர் 'Blue Screen of Death (BSOD)' கண்டு சற்று திகைத்துப்போயினர்.


'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன் பின்னர், ரீஸ்டார்ட் செய்யப்படும்’ என அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.


இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஐ.டி துறையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்த விவரங்களை தமிழ்நாட்டின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.


காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அஜய் பேசுகையில், "வெள்ளிக்கிழமை என்றவுடன் சரி சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டால், இரண்டு நாட்கள் விடுமுறை என்ற எண்ணத்தில் கணினியை ஆன் செய்தேன். எங்கள் கணினி திரைகளில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் ஏற்படவில்லை, காரணம் நாங்கள் இணைய சர்வர் மூலம் மற்றொரு கணினியில் தான் லாக்-இன் செய்வோம். ஆனால், அவ்வாறு லாக்-இன் செய்வதில் தான் சிக்கல் ஏற்பட்டது. 5 முதல் ஆறு மணி நேரம் வரை எங்களால் பணிபுரிய முடியவில்லை" என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், "முதலில் எங்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்னை என்று நினைத்தோம். பின்னர் செய்தியைப் பார்த்த பிறகு உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது புரிந்தது. எங்களது கிளையண்ட் (Client) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் சுகாதார நிறுவனம். 5 மணி நேரம் தாமதமானதால் அதற்கு ஈடாக இரவு வரை பணிபுரிந்தோம்." என்றார்.



படக்குறிப்பு,பாங்காக் விமான நிலையத்தில் குவிந்துள்ள பயணிகள்

தங்கள் குழுவுக்கு நஷ்டம் என்று பார்க்கும் போது மனித உழைப்பும், நேரமும் தான் என்கிறார் அஜய்.


"ஆனால் வங்கித்துறை, பங்குச் சந்தைகள் போன்றவற்றில் ஒவ்வொரு நொடியும் பணம் சார்ந்தது. எனவே வேலை சரியான நேரத்தில் நடக்கவில்லை என்பதால் அதில் தான் நிதி சார்ந்து அதிக பாதிப்பு ஏற்பட்டது" என்கிறார்.


"வழக்கமாக வெள்ளிக்கிழமை அதிக வேலை இருக்கும், பரபரவென்று அலுவலகம் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் அன்று காலை முழுவதும் வேலையில்லாமல் இருந்தது, பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியார் வரமால் போனால் கிடைக்கும் ஒரு நிம்மதி உணர்வு தோன்றியது. அதேவேளை பொது மக்கள் பலரும் இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் அவதிப்பட்டதை செய்திகளில் கண்டபோது வருத்தமாகவும் இருந்தது" என்கிறார் அஜய்.



சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் சிவசங்கர் இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் தங்களது நிறுவனத்தின் 20 சதவீத பணிகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.


"காரணம் எங்கள் நிறுவனம் பெரும்பாலும் லினக்ஸ் இயங்குதளத்தை சார்ந்து உள்ளது. அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் போல பயன்படுத்த எளிதாக இருக்காது" என்று கூறுகிறார்.


சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்ட்ரைக் (Crowdstrike) இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோஸில் செயல்படும் கணினி உள்ளிட்ட கருவிகளில் வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட 'ஃபால்கன் ஆண்டி-வைரஸ்' (Falcon antivirus software) மென்பொருளைப் புதுப்பித்த போது (update) இந்தச் செயலிழப்பு நிகழ்ந்துள்ளது என்கிறது அந்த நிறுவனம்.


"அந்த ஆண்டி-வைரஸ் மென்பொருள் அடிக்கடி தானாகவே புதுப்பிக்கப்படும். கடைசி அப்டேட் (Update) வியாழன் இரவு வந்தது. வெள்ளிக்கிழமை காலை எல்லா கணினிகளிலும் ப்ளூ ஸ்க்ரீன் எரர் தோன்றியவுடன் பிரச்னை புரிந்துவிட்டது. ஏனென்றால் எங்களது கிளையண்ட் ஒரு பிரபலமான வெளிநாட்டு வங்கி, ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் பல நிதிப் பரிவர்த்தனைகள் இதனால் பாதிக்கப்பட்டன." என்று கூறுகிறார் மென்பொறியாளர் மனோஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).


சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் மனோஜ், இந்த தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பால் தங்களது நிறுவனத்திற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால் அதன் முழுமையான விவரங்கள் இனி வரும் வாரங்களில் தான் தெரியவரும் என்றும் கூறினார்.


மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் கிரவுட்ஸ்ட்ரைக் ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்தும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த பணிகளை செய்த ஐ.டி. நிறுவனங்களில் மட்டுமே பாதிப்பு இருந்ததாக அவர் கூறினார்.



படக்குறிப்பு,ஐ.டி. செயலிழப்பின் காரணமாக கிரவுட்ஸ்ட்ரைக்கின் பங்குகள் 21% வரை வீழ்ச்சி அடைந்தன.

தொடர்ந்து பேசிய அவர், "பொதுவாக ஒரு நிறுவனத்தில் 1000 மென்பொருள் பொறியாளர்கள் இருந்தால், அவர்களது கணினிகளை பராமரிப்பதற்கான குழு ஒன்று இருக்கும். ஆனால் அதில் 20 முதல் 25 நபர்கள் மட்டுமே இருப்பார்கள். வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கில் கணினிகள் பழுதானதால் அவர்கள் தான் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டார்கள். ஆனால் ஒரு நல்ல விஷயம் இது வெள்ளிக்கிழமை ஏற்பட்டது தான்.


பெரும்பாலும் சனி மற்றும் ஞாயிறுகளில் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் விடுமுறை என்பதால் இதை இந்த இரண்டு நாட்களில் முழுமையாக சரிசெய்ய முயற்சிப்பார்கள். நிச்சயமாக இது மிகப்பெரிய எச்சரிக்கை. பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் விண்டோஸை தான் பயன்படுத்துகிறார்கள். எனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் இது போல மீண்டும் நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று கூறினார்.


விண்ோஸ் வெளிநாட்டு வங்கிகள்



படக்குறிப்பு,நியூயார்க்கில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவன அலுவலகம்

இதுகுறித்து பேசிய மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, "அண்மையில் கிரவுட்ஸ்ட்ரைக் வெளியிட்ட அப்டேட் உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையை முடக்கியுள்ளது. இந்த சிக்கலை நாங்கள் அறிவோம். அதோடு இதற்கு தீர்வு காணும் வகையில் பணியாற்றி வருகிறோம்.


வாடிக்கையாளர்களின் ஆன்லைன் இயக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் கிரவுட்ஸ்ட்ரைக் உடன் மைக்ரோசாப்ட் இயங்கி வருகிறது. இதிலிருந்து மீள வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய வழிகாட்டு செயல்முறையை வழங்கி வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், "மைக்ரோசாப்டிலோ அல்லது விண்டோஸிலோ எந்தப் பிரச்னையும் இல்லை. ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் தான் மைக்ரோசாப்ட் மென்பொருளில் குளறுபடி ஏற்பட்டது" என மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னர் விளக்கம் அளித்திருந்தது.


வெள்ளிக்கிழமை நடைபெற்றது சைபர் தாக்குதல் அல்ல. இந்தச் செயலிழப்பு தங்களின் தவறால் ஏற்படவில்லை என்பதையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உடனடியாகச் சுட்டிக்காட்டியது.


வாடிக்கையாளர்கள் மீண்டு வர உதவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஒரு வலைப்பதிவில் "கிரவுட்ஸ்ட்ரைக் அப்டேட் காரணமாக உலகம் முழுவதும் விண்டோஸ் பயன்படுத்தும் 85 லட்சம் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளோம்." என்று குறிப்பிட்டுள்ளது.


நிறுவனத்தின் துணைத் தலைவரான டேவிட் வெஸ்டன், "இந்த எண்ணிக்கை உலகெங்கிலும் உள்ள அனைத்து விண்டோஸ் கணினிகளிலும் 1% க்கும் குறைவுதான். ஆனால். பரந்த அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் முக்கிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் க்ரவுட்ஸ்ட்ரைக் மென்பொருளை பயன்படுத்துவதைப் பிரதிபலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

 


சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது.

பொதுக் கூட்டம் ஜூலை 19 முதல் 22 வரை நடைபெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, கிழக்கு ஆசியா பசிபிக் மற்றும் ஐரோப்பா போன்ற பிராந்தியங்களை உள்ளடக்கிய உலகெங்கிலும் உள்ள 108 ஐசிசி உறுப்பு நாடுகளில் இருந்து 220 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கிரிக்கெட் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளர்..



 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் 

இதுவே நடைமுறையில் உள்ள நில அளவை


♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்

♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்

♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்

♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்

♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்

♓1 ஏக்கர் – 100 சென்ட்

♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்

♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்

♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்

♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்

♓1 மீட்டர் – 3.281 அடி

♓1 குழி – 44 சென்ட்

♓1 மா – 100 குழி

♓1 காணி – 132 சென்ட் (3 குழி)

♓1 காணி – 1.32 ஏக்கர்

♓1 காணி – 57,499 சதுர அடி

♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்

♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)

♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)

♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)

♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)

♓1 கிலோ மீட்டர் – 3280 அடி

♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு

♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்

♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)

♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)

♓1 லிங்க் – 0.66 அடி

♓1 கெஜம் – 3 அடி

♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)

♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)

♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)

♓10 செயின் – 1 பர்லாங்கு

♓1 இன்ச் – 2.54 செ.மீ

♓1 செ.மீ – 0.3937 செ.மீ

♓1 கெஜம் – 0.9144 மீட்டர்

♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)

♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்

♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்

♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்

♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..


உங்கள் நண்பர்களும் அறிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்....

 



''Stag Beetle' என்ற ஒரு வகையான வண்டுதான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் விலை இலங்கை மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்குமென்று கூறப்படுகிறது.என்ற ஒரு வகையான வண்டுதான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் விலை இலங்கை மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்குமென்று கூறப்படுகிறது.


2024-ஆம் ஆண்டு, ஜூன் 24-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக மாறிவிட்டது.

எப்போது, எங்கு என்ன நடக்கும் என நிச்சயமற்ற வாழ்க்கைக்கு மத்தியில், பல்வேறு சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, கிரிக்கெட் பயிற்சி எடுத்து, டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியதை அந்த தேசத்தின் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் வெற்றியை வெறுத்து, வங்கதேசத்தின் வெற்றியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து சூப்பர்-8 சுற்றோடு வெளியேறியது. 2022-ஆம் ஆண்டுக்குப்பின் தொடர்ந்து 2-வது முறையாக அரையிறுதிக்குச் செல்லாமல் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.

வங்கதேச அணியை வென்றால் ஆப்கானிஸ்தானுக்கு வழிபிறக்கும், ஆப்கானிஸ்தானை வங்கதேசம் வென்றால், ஆஸ்திரேலியாவுக்கு கதவுகள் திறக்கும் என்ற ரீதியில்தான் ஆட்டம் நடந்தது.

வங்கதேசத்தின் வெற்றி அந்த அணிக்கு நலம் பயக்கிறதோ இல்லையோ, ஆஸ்திரேலியா அரையிறுதி செல்ல உதவியாக இருக்கும் என்பதால், ஆஸ்திரேலியா ஆவலோடு காத்திருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பீல்டிங்கால் வங்கதேசத்தை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் அரையிறுதிக் கனவை தவிடுபொடியாக்கியது.

இதையடுத்து, 27-ஆம் தேதி காலையில் நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியுடன் ஆப்கானிஸ்தான் மோதுகிறது. அன்று இரவு நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.



படக்குறிப்பு,வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் வென்றது.
இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு?
முதல் அரையிறுதி ஆட்டத்தில் மழை பெய்தால் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 2-வது அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசர்வ் நாள் இல்லை, மாறாக கூடுதலாக 250 ரன்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா-இங்கிலாந்து ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே ரத்தானால், இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும். ஏனென்றால் குரூப்-1 பிரிவில் முதலிடம் பிடித்ததால் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதியாகும்.

இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் நடக்கும் கயானாவில் 27-ஆம் தேதி 88% மழைக்கும் 18% இடியுடன் மழைபெய்யவும் வாய்ப்புள்ளது. மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வசதியும் கயானா மைதான நிர்வாகத்திடம் இல்லை. ஆதலால், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டால் இந்தியா இறுதிப்போட்டி செல்வது உறுதியாகும்.

கிங்ஸ்டவுனில் நடந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் வென்றது.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது. மழையின் குறுக்கீட்டால் டி.எல்.எஸ் விதிப்படி 19 ஓவர்களில் 119 ரன்கள் சேர்க்க வங்கதேசத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வங்கதேச அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

குரூப்-1 பிரிவில் அரையிறுதிக்கு இந்திய அணி ஏற்கெனவே தகுதி பெற்ற நிலையில் 2-வது இடத்துக்கு ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன. ஒவ்வொரு அணியின் வெற்றியும், தோல்வியும் மற்றொரு அணிக்கு அரையிறுதிக் கதவை திறக்கும் வகையில் இருந்தது. ஆனால், இறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை வெளியேற்றி ஆப்கானிஸ்தான் முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு முதன்முதலாக பயிற்சியாளராகப் பதவி ஏற்ற இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜோனத்தன் டிராட்டுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பிராவோ இருந்துள்ளார்.


படக்குறிப்பு,"நாங்கள் அரையிறுதி செல்வோம் என்று ஜாம்பவான் பிரையான் லாரா மட்டும் சரியாகக் கணித்திருந்தார்" என்றார் ரஷித் கான்
‘நம்பமுடியவில்லை, சாதனைதான்’
வெற்றிக்குப்பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான் கூறுகையில், உலகக் கோப்பை அரையிறுதி செல்வது தங்களுக்குக் கனவாக இருந்தது என்றார்.

“அந்த நோக்கில்தான் போட்டித் தொடரைத் தொடங்கினோம். எங்கள் நம்பிக்கை நியூசிலாந்தை வென்றதும் உறுதியானது. இப்போதும் நம்பமுடியவில்லை. நாங்கள் அரையிறுதி செல்வோம் என்று ஜாம்பவான் பிரையான் லாரா மட்டும் சரியாகக் கணித்திருந்தார். நான் ஒரு பார்ட்டியில் அவரைச் சந்தித்தபோது, உங்கள் கணிப்பைப் பொய்யாக்கி தலைகுனிவை ஏற்படுத்தமாட்டோம் என்று கூறியிருந்தேன்,” என்றார்.

மேலும், “130 ரன்கள் சேர்த்தாலே இந்த விக்கெட்டில் நல்ல ஸ்கோர். ஆனால் எங்களால் 115 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. வங்கதேசம் எங்களுக்குக் கடினமான சவால் அளிப்பார்கள் என எங்களுக்குத் தெரியும், அதனால் எங்களின் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றோம். தெளிவான திட்டத்துடன் களமிறங்கினோம். எங்கள் மக்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினோம். ஒவ்வொரு வீரரும் அற்புதமான பணியைச் செய்துள்ளனர்,” என்றார்.

“புதிய பந்தில் பரூக்கியும், நவீனும் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தத் தொடர் முழுவதுமே இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். குல்புதீன் நயீப் எடுத்தவிக்கெட் எங்களுக்கு அந்த நேரத்தில் விலைமதிப்பில்லாதது. நாங்கள் தாய்தேசம் திரும்பியதும் மிகப்பெரிய கொண்டாட்டம் காத்திருக்கிறது. அரையிறுதி என்பது எங்களுக்கு மிகப்பெரிய சாதனை. 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அரையிறுதி வரை வந்திருந்தோம். இப்போது உலகக் கோப்பையில் வந்திருப்பது எங்களைப் பொருத்தவரை சாதனைதான். எங்கள் தேசத்துக்கு திரும்பும் அந்த நாளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தெளிவான மனநிலை, திட்டமிடலுடன் அரையிறுதிப் போட்டிக்குச் செல்வோம், அந்த தருணத்தை அனுபவிப்போம்,” எனத் தெரிவித்தார்.

மனிதன் இறக்கும் தருவாயில் மகிழ்ச்சி தரும் ஹார்மான் சுரக்குமா? மூளையில் என்ன நடக்கிறது?

படக்குறிப்பு,பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்து தடுமாறியது
ஆட்டநாயனுக்கு போட்டி
ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு கேப்டன் ரஷித் கான் பந்துவீச்சும், வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல்ஹக் பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், ஆட்டநாயகன் விருது நவீன் உல் ஹக்கிற்கு வழங்கப்பட்டது. பேட்டிங்கில் ரஷித் கான் கடைசி நேரத்தில் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஆப்கானிஸ்தானை கவுரவமான ஸ்கோரைப் பெற உதவியது. இருப்பினும் முக்கியத் தருணங்களில் விக்கெட் வீழ்த்திய நவீனுக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பவர்ப்ளே ஓவரில் மூன்றாவது ஓவரிலேயே நவீன் உல் ஹக் சிறப்பான பந்துவீச்சால் கேப்டன் ஷான்டோ, சஹிப் அல் ஹசன் இருவரின் விக்கெட்டையும், கடைசி நேரத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது விக்கெட்டையும் வீழ்த்தி வங்கதேச அணியை நெருக்கடியில் சிக்கவைத்தமைக்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நம்பிக்கையளிக்கும் ஜோடி
ஆப்கானிஸ்தான் அணியைப் பொருத்தவரை வழக்கம்போல் அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ்-இப்ராஹிம் ஜாத்ரன் நல்ல தொடக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ரன் சேர்க்க திணறிய ஆப்கானிஸ்தான், பவர்ப்ளேயில் 27 ரன்கள் மட்டுமே சேர்த்து 10 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்தது.

டி20 உலகக் கோப்பைபட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,பேட்டிங் செய்வதற்குக் கடினமான விக்கெட்டாக ஆன்டிகுவா இருந்தது
ரஷித் கானின் 3 சிக்ஸர்கள்
அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 43 ரன்களும், ஜாத்ரன் 18 ரன்களும் சேர்த்தனர். ஓமர்சாய் 10 ரன்களும், கடைசி நேரத்தில் களமிறங்கிய ரஷித்கான் 3 சிக்ஸர்களை விளாசி 19 ரன்களைச் சேர்த்தார். ரஷித்கானின் 3 சிக்ஸர்களால்தான் ஆப்கானிஸ்தான் 100 ரன்களைக் கடந்து கவுரவமான ஸ்கோரைப் பெற்றது. இல்லாவிட்டால், 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது.

பேட்டிங் செய்வதற்குக் கடினமான விக்கெட்டாக ஆன்டிகுவா இருந்தது. பந்துகள் தாழ்வாகவும், மெதுவாகவும் பேட்டர்களை நோக்கி வந்ததால் பேட் செய்யவும், பெரிய ஷாட்களை அடிக்கவும் கடினமாக இருந்தது. அதிலும் பந்து தேய்ந்தபின் பெரிய ஷாட்டை அடித்தாலும் பந்து சிக்ஸர், பவுண்டரி செல்வது கடினமாக இருந்தது. வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹூசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விக்கெட்டுகளை இழந்த வங்கேதசம்
116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்து தடுமாறியது. பரூக்கி வீசிய 2-வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் டக்அவுட் ஆகினார்.

நவீன் உல் ஹக் வீசிய 3-வது ஓவரில் கேப்டன் ஷான்டோ (5), அனுபவ பேட்டர் சஹிப் அல்ஹசன் (0) விக்கெட்டை இழந்தனர். 23 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறியது. 4வது ஓவர் வீசப்பட்டபோது மழைக் குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டது.


படக்குறிப்பு,11-வது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது
ரஷித் கான் மாயஜாலம்
மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அதன்பின் ஆட்டத்தைக் கையில் எடுத்த ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வங்கதேச பேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்தி வங்கதேசத்தை ரஷித்கான் நெருக்கடியில் தள்ளினார். ரஷித்கான் பந்துவீச்சில் 10 ரன்னில் சவுமியா சர்க்கார் போல்டாகினார், ரஷித்கான் வீசிய 9-வது ஓவரில் ஹிர்தாய் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ரஷித்கான் வீசிய 11-வது ஓவரில் மெகமதுல்லா (6), ரிஷாத் ஹூசைன் கிளீன் போல்டாகி ஒரே ஓவரில் இருவரும் வெளியேறினர். 80 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தோல்வியில் பிடியில் சிக்கியது.

11-வது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. அப்போது டிஎல்எல் விதிப்படி ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு வங்கதேசத்துக்கு இலக்கு 114 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே 80 ரன்களை வங்கதேசம் சேர்த்துவிட்டதால், 35 ரன்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவைப்பட்டது.

உலகக் கோப்பை டி20பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது
லிட்டன் தாஸ் போராட்டம்
தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி 41 பந்துகளில் அரைசதம் அடித்தார், கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. 15-வது ஓவரில் தன்சிம் ஹசன் விக்கெட்டை குல்புதீன் நயீப் எடுக்கவே ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது.குல்புதீன் வீசிய 17-வது ஓவரில் லிட்டன் தாஸ் 4 ரன்கள் சேர்த்தார். 12 பந்துகளில் வங்கதேசம் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

18-வது ஓவரை நவீன் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் தஸ்கின் அகமது தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டு பந்து பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜில் போல்டாகியது. வங்கேதசம் 9-வது விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அடுத்து களமிறங்கிய முஸ்தபிசுர் ரஹ்மான், நவீன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி அவுட் ஆகவே, ஆப்கானிஸ்தான் வீரர்கள் கட்டித்தழுவி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். குர்பாஸ் கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இரு தேசங்களின் இதயங்கள் நொறுங்கின
மிகக் குறைவான ஸ்கோரை அடித்தபோதிலும் வலுவான சுழற்பந்துவீச்சு, துல்லியமான வேகப்பந்துவீச்சு மூலம் வங்கதேசத்தைச் சுருட்டி ஆப்கானிஸ்தான் முதல்முறையாக அரையிறுதி சென்றது. ரஷித்கான் நடுப்பகுதி ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதும், நவீன் உல்ஹக் பவர்ப்ளேயில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதும் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

லிட்டன் தாஸ் வங்கதேச அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லப் போராடியும் கடைசிவரை அவருக்கு ஒத்துழைக்க வீரர்கள் இல்லை. ஆப்கானிஸ்தான் வெற்றி வங்கதேச மக்களின் இதயத்தை மட்டுமல்ல, ஆஸ்திரேலிய ரசிகர்களின் இதயத்தையும் நொறுக்கிவிட்டது, என்றே சொல்லவேண்டும்.


இம்முறை தென்கொரியா நடத்தும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்கா தங்கப் பதக்கத்தை வென்றார்.


ருமேஷ் தரங்கவின் ஆட்டம் 85.45 மீட்டர் என்பது இலங்கை சாதனை மற்றும் போட்டி சாதனையாகும்.

இருப்பினும், அவர் ஒலிம்பிக் ஏலத்தில் 5 செ.மீ.

ஒலிம்பிக் மட்டம் 85.50 மீற்றராக காணப்பட்டது.

இதேவேளை, இந்த போட்டியில் இலங்கையின் சுமேதா ரணசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவரது செயல்திறன் 77.57 மீட்டர்.

பெண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தில்ஹானி லேகம்கே 57.94 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்

 


சுவாச மண்டலத்தைப் பாதித்து, உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட ‘சூப்பர்பக்' என்று அழைக்கப்படும் ஒரு வகை பக்டீரியாவானது, விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ளவர்களால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 



டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் 2024 அன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 9) மாலை 7:15 மணிக்கு, நரேந்திர மோதி, மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


நரேந்திர மோதியுடன், அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.


விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார்.


இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் பலர் டெல்லி வந்துள்ளனர். சார்க் நாடுகளின் (SAARC) தலைவர்களுக்கும் விழாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


18-வது மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த முறை பா.ஜ.க-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.


3-வது முறை பிரதமராகப் பதவியேற்றார் மோதி 



பதவியேற்பு விழாவிற்கு வந்த பிரபலங்கள்

தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, மற்றும் கௌதம் அதானி, நடிகர் ரஜினிகாந்த், மற்றும் நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார் ஆகியோர் பிரதமர் மோதியின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.


பிரதமர் இல்லத்தில் நடந்த கூட்டம்பட மூலாதாரம்,ANI

பிடிஐ செய்தி முகமையின் படி, இன்று நண்பகல் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், நிர்மலா சீதாராமன், மன்சுக் மாண்டவியா, எல். முருகன், ஜெய் ஷங்கர் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.


2014ஆம் ஆண்டு முதல், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு முன்பாக இவ்வாறு கூட்டம் நடத்துவதை மோதி வழக்கமாக வைத்திருக்கிறார். இதில் கலந்துகொள்பவர்களே அமைச்சர்களாக நியமிக்கபப்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அப்போது பேசிய நரேந்திர மோதி, அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் எப்போதும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.


"உங்களுக்கு எந்த வேலை ஒதுக்கப்பட்டாலும், அதை நேர்மையாகச் செய்யுங்கள், தன்னடக்கம் உள்ளவர்களை மக்கள் நேசிப்பதால் பணிவாக நடந்துகொள்ளுங்கள்" என்று கூறினார் மோதி.


இந்தக் குழுவில், மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் சவுகான், பண்டி சஞ்சய் குமார் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகிய புதிய முகங்களும் காணப்பட்டனர்.



ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் தொடர்ந்து 3-வது முறையாக நாட்டின் பிரதமராகும் ஒரே நபர் என்ற அந்தஸ்த்தைப் பெறுகிறார் நரேந்திர மோதி. நேரு, 1952, 1957, 1962 தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக இருந்தார். இந்நிலையில் தற்போது மோதி, 2014, 2019, 2024 என மூன்றாவது முறையாக பிரதமராகிறார்.


இந்த பதவியேற்பு விழாவிற்காக தலைநகர் டெல்லியில், குறிப்பாக குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


டெல்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ராஷ்டிரபதி பவனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துணை ராணுவப் படைகள், என்எஸ்ஜி கமாண்டோக்கள் மற்றும் ஸ்னைப்பர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.


சுற்றுவட்டாரப் பகுதிகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


இவை அனைத்தையும் தவிர, சுமார் 2,500 போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தி முகமையான பிடிஐயிடம் தெரிவித்தார்.


டெல்லி போக்குவரத்து காவல்துறையும் போக்குவரத்து தொடர்பான அறிவுரைகளை வெளியிட்டுள்ளது, "டெல்லியின் சில சாலைகளில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். ராஷ்டிரபதி பவனைச் சுற்றியுள்ள சாலைகளில் அரசுப் பேருந்துகளும் அனுமதிக்கப்படவில்லை." என்று கூறியுள்ளது.


மூன்றாவது முறையாக பதவியேற்கும் மோதிபட மூலாதாரம்,MINISTRY OF EXTERNAL AFFAIRS, INDIA

படக்குறிப்பு,இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தடைந்தார்.

இந்தியா வந்தடைந்த வெளிநாட்டுத் தலைவர்கள்

நரேந்திர மோதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பூடான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் இந்தியா வந்துள்ளனர் .


இந்த தகவலை வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.


ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள கணக்கில், "பிரதமர் தாஷோவின் இந்த பயணம் இந்தியாவிற்கும் பூடானுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும்." என்று தெரிவித்துள்ளார்.


மோதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியா வந்துள்ளதாக அரசாங்க ஒளிபரப்பு ஊடகமான டிடி நியூஸ் தெரிவித்துள்ளது.


ராமர் கோவில் கட்டியும் அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? பிபிசி கள ஆய்வு

9 ஜூன் 2024

மோதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் மாலத்தீவு அதிபர் - எந்தெந்த நாடுகளின் தலைவர்கள் வருகிறார்கள்?

8 ஜூன் 2024

மூன்றாவது முறையாக பதவியேற்கும் மோதிபட மூலாதாரம்,@MEAINDIA

படக்குறிப்பு,மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இன்று டெல்லிக்கு வந்தார்.

டெல்லி வந்த மாலத்தீவு அதிபர்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சனிக்கிழமை இந்தியா வந்ததை அடுத்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இன்று டெல்லிக்கு வந்தார்.


இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலின் சமூக ஊடகப் பதிவின் படி, "பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க புதுதில்லி மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை விமான நிலையத்தில் செயலாளர் (மேற்கு) பவன் கபூர் வரவேற்றார். இந்தியாவும் மாலத்தீவுகளும் கடல்சார் நட்பு நாடுகள் மற்றும் நெருங்கிய உறவுகள் கொண்ட அண்டை நாடுகள்” எனப் பதிவிட்டுள்ளார்.


முகமது முய்ஸு மாலத்தீவு அதிபராக பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்தது. அவரது தேர்தல் பிரச்சாரமும் இந்தியாவுக்கு எதிரானதாகவே இருந்தது.


தற்போது அவர் இந்தியா வந்த பிறகு, இரு நாட்டு உறவில் புதிய பிணைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   


Smart Phone கைக்குள் இன்றைய மாணவ சமூகம்!

அன்று மனிதன், மனிதனோடு தொடர்பினை மேற்கொள்ளவும் மனித தேவைகளை இலகுவான முறையில் பூர்த்தி செய்ய மனிதனால் மனித கைக்குள் அடங்கும் வகையில் உருவாக்கப்பட்டவையே கையடக்க தொலைபேசிகள் ஆகும். ஆனால் இவை இன்று அபரிவிதமான  தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக திறன் பேசிகள் (Smart Phone) என்ற பெயரோடு இன்றைய சமூகத்தை அதன் கைக்குள் அடக்கி வைத்துள்ளன.
“கூவும் செல்போனின் நச்சரிப்பை அனைத்து கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்”  என பல வருடங்களுக்கு முன்னர் வெளியான சிவாஜி படப்பாடலில்  அழகாக வரிகள் அமைத்திருக்கிறார் நா. முத்துக்குமார்.  முன்னைய சமூகத்தினர்  ஏனையவருடன் பேசுவதற்காக மட்டுமே  தொலைபேசிகளை பயன்படுத்தினர். ஆனால் இன்று குழந்தைக்கு சோறூட்டுவது முதல் பணத்தை வங்கியில் வைப்பு செய்வது வரை  அனைத்தையும் செய்து விடுகின்றன இந்த திறன் பேசிகள். 
இலங்கையில் பொதுவாக கோவிட்-19 பரவலை தொடர்ந்தே இணையவழி கற்கை ஆரம்பமானது.  இதனை அடிப்படையாக வைத்து அனைத்து மாணவர்கள் மத்தியிலும் திறன்பேசிகளின் பாவனை புழக்கமுறத் தொடங்கி விட்டன. ஆனால் இணையவழி கற்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் திறன்பேசிகளின் பாவனையை குறைத்துக் கொள்ள முடியவில்லை என்றே கூற முடியும். 
2011 ஆம் ஆண்டில்  உலக சுகாதாரத் திணைக்களம்  மேற்கொண்ட ஆய்வின்படி 5 பில்லியனுக்கு  மேற்பட்ட மக்கள்  கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துகின்றார்கள். நாளொன்றுக்கு  இரண்டு மணித்தியாலயங்கள் மட்டுமே  தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய சமூகத்தினர் 5 மணித்தியாலயங்களுக்கு மேல்  பயன்படுத்துகின்றார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. சீனாவில் குழந்தைகள் நாளொன்றுக்கு  60 நிமிடங்கள் மட்டுமே  தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டும் என 2021 ல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் நம் நாட்டில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நம்மில் எத்தனையோ பேர் இருபத்து நான்கு மணித்தியாலயங்களும் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றோம்.
இலங்கையில் 2024ம் ஆண்டு ஆய்வு முடிவில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60% சதவீதம் பேர் தொலைபேசிக்கு அடிமையாகி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்மாகாணத்தில் உள்ள 400 பாடசாலை மாணவர்களிடம் வைத்திய குழுவொன்று  ஆய்வொன்றை மேற்கொண்டதாக விசேட வைத்திய நிபுணர் அமில சந்திர ஸ்ரீ கூறியுள்ளார். இதில் பல சிறுவர்கள் இரவில் தூக்கமின்றி கவலையுடன் இருப்பதாகவும், இவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுப்பதில்லை என்பதும் ஆய்வில் வெளிவந்துள்ளது. மேலும் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகி உள்ள சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதும்  கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது உடல் சரியாக செயல்படாததால் நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதாகவும் அதனை பெற்றோர்களால் கட்டுப்படுத்த முடியாத உள்ளதாகவும்  ஆய்வு முடிவு கூறுகின்றது. அவசியமாக இருந்தால் மட்டும் பிள்ளைகளுக்கு ஒரு மணித்தியாலயத்துக்கு குறைந்த அளவு  கையடக்க தொலைபேசிகளை வழங்கும் படி வைத்திய குழு கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக காணப்படுகின்றது.
திறன்பேசிகளால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனால் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு”  என்பது போல இன்று அளவுக்கு மீறி திறன்பேசிகள் எனும் போதையில் அடிமையாகி விட்டார்கள். இன்றைய சமூகத்தினருக்கு உணவின்றியும் ஒரு நாள் இருந்து விடலாம் இன்டர்நெட் கார்ட் (Internet Card)  இல்லாமல் வாழ முடியாதுள்ளது.
தேவையற்ற செயலிகளின் பதிவிறக்கம்,  காணொளிகள் பதிவிறக்கம், இணையவழி விளையாட்டுக்கள், போதைப் பொருள் பாவனை, தகாத உறவுகள், மன அழுத்தங்கள், உடல் நோய்கள்  இதனால் குடும்பங்களுக்கிடையே முரண்பாடுகள், சமூக சீரழிவுகள் என பல்வேறு சவால்களை ஏற்படுத்தி விடுகின்றன இந்த திறன் பேசிகள்.   எவ்வளவுதான்  பத்திரிக்கைகள், ஊடகங்களினூடாக கைபேசியின்  பாவனையை குறையுங்கள்  என பற்பல செய்திகள் பரப்பப்பட்டாலும் அவை இன்று  அதிகரித்துக் கொண்டு செல்கின்ற வண்ணமே உள்ளன.
 நமது முன்னைய தலைமுறையினர்   நடக்க, பேச, பழக, சமைக்க, வாழ என பல்வேறு விடயங்களை சமூகத்திடமிருந்து  கற்றுக்கொண்டார்கள். ஆனால் நம் தலைமுறையினர் இவை அனைத்தையும்  திறன்பேசிகளிடமிருந்து கற்றுக் கொள்வதுடன் அவர்களுக்கும் சமூகத்திற்கும் தேவையற்ற விடயங்களையும் கற்றுக் கொண்டு சமூகத்திலிருந்து தனிமையாகி விடுகின்றார்கள் .  எந்தளவிற்கு நாம் கைபேசிகளுடன் நேரத்தை செலவிடுகின்றோமோ? அந்தளவுக்கு நாம் குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் பிரிந்து செல்கின்றோம்.
சூழலோடும் சமூகத்தோடும் ஒன்றித்து வாழ்ந்தால் தான் சூழலில் இருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்ளக் கூடியவனாக மனிதன் மாற முடியும். அன்று “பெற்றோர்கள் வெளியில் செல்ல வேண்டாம் என பிள்ளைகளிடம் கூறிய காலம் மாறி  இன்று வெளியில் சென்று விளையாடு என கூறுமளவுக்கு இன்றைய சமூகத்தினர் திறன்பேசிகளுடன் ஒன்றித்து வாழ்கின்றார்கள் என்றே கூற வேண்டும். மனிதன் மனிதனோடு எங்கிருந்தாலும் தொடர்பினை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட  இவ் கைபேசிகள் மனித முகங்களை பார்த்து பேச முடியாத அளவிற்கு மாற்றி விட்டன.
எது எவ்வாறாக இருந்தாலும்  “கத்தி கொண்டு  கனியையும் நறுக்கலாம், பிறர் உயிரையும் பறிக்கலாம்” என்பதுபோல  எந்த ஒரு விடயமாக இருந்தாலும் நன்மையும் காணப்படும் அதேபோல தீமைகளும் காணப்படும். அதுபோலவே திறன்பேசிகளை  நம் திறன்களை வளர்ப்பதற்கு பயன்படுத்துவோமாக இருந்தால்  நாமும் சமூகத்தை சீர்படுத்தி சிறந்த பிரஜையாக பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ முடியும்.

தேவலிங்கம்  நிலக்ஷனா 
நான்காம் வருட கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி 
கல்வி, பிள்ளை நலத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.
இலங்கை.

 


டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 9) மாலை 7:15 மணிக்கு, நரேந்திர மோதி, மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நரேந்திர மோதியுடன், அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் பலர் டெல்லி வந்துள்ளனர். சார்க் நாடுகளின் (SAARC) தலைவர்களுக்கும் விழாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

18-வது மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த முறை பா.ஜ.க-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.


கல்வி என்பது சுயசெயற்பாடு எனும் கூற்றிற்கு இணங்க பரீட்சையை மாத்திரம் மையமாகக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படகூடாது என்பதற்கிணங்க அவர்களுடைய சமநிலை ஆளுமையை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு இணைப்பாடவிதான செயல்பாடுகளின் மூலமாக அவருடைய திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான பல்வேறு நிகழ்வுகள் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.எடுத்துக்காட்டாக பாடசாலை தமிழ் தின போட்டி, ஆங்கிலத்தினப்போட்டி மாணவர்களின் அறிவு மேம்படுவதுடன் போட்டி போட்டு செயல்படும் விதத்தை அறிந்து கொள்ள, சமூகத்தில் பிற மாணவர்களுடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு நற்குணங்களை வளர்த்துக்கொள்ள, தோல்வியை ஏற்றுக் கொள்ளல், வெற்றி பெற்றவர்களை பாராட்டும் பண்பு என சமூகமயமாக்கல் பண்பு வளர்க்கப்படுகின்றது.

இணைந்த கலைத்திட்ட செயல்முறைகளாக கல்வி சுற்றுலா, விளையாட்டுப் போட்டி, முதலுதவி,சாரணியம், மாணவர் மன்றம்,  விழாக்கள்,பெருங்காட்சி மற்றும் கண்காட்சி பல்வேறு மன்றங்கள் அல்லது கழகங்களின் செயல்பாடுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இவ்வாறு பாடசாலைகளில் இடம்பெறும் இணைப்பாடவிதான செயல்பாடுகளின் மூலமாக மாணவர்கள் எவ்வாறு சமூகமயமாக்கப்படுகின்றார்கள் என்பதனை பின்வருமாறு ஆராயலாம்.இதன்படி கல்வி சுற்றுலாவை எடுத்துக் கொள்வோமானால் பாட நூல்களில் அல்லது ஆசிரியர் கை நூல்களில் காணப்படும் இடங்கள் அல்லது பிரசித்தி பெற்ற இடங்களை நேரில் சென்று பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இக்கல்வி சுற்றுலா அமைகின்றது மேலும் விழுமிய பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் ஒரு மேடையாக இச்செயல் முறையானது காணப்படுகின்றது.
அதாவது கல்வி சுற்றுலாக்களின் மூலமாக தேவாலயங்கள், விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள் போன்ற பல்வேறு மத ஸ்தலங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதனால் அங்கு எவ்வாறான விழுமிய பண்புகள் காணப்படுகின்றது என்பது தொடர்பாக அறிந்து பல்வேறு மதம் தொடர்பான அறிவினையும் மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது. இதன் மூலமாக சமூகமயமாக்கம் மாணவர்கள் மத்தியில் இடம்பெறக்கூடியதாக உள்ளது எனலாம்.
மேலும் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக மாணவர்கள் ஏனைய பாடசாலை மாணவர்களோடு போட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படுவதனால் ஏனைய பாடசாலைகள் தொடர்பான சட்டதிட்டங்கள், விழுமியப்பன், விதிகள்,நடைமுறைகள் என பல்வேறு விடயங்களையும் அம்மாணவர்கள் தொடர்பு கொள்வதன் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியவர்களாக உள்ளனர்.அதே நேரம் ஏனைய பாடசாலை மாணவர்களுடன்  நட்புறவும் மாணவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே விளையாட்டு போட்டிகள் மூலமாக சிறந்த சமூகமயமாக்கல் தன்மையை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
சாரணிய இயக்க செயற்பாடுகளின் மூலமாக சாரணியர் பாடல், சர்வதேச சமய வழிபாடு, உடற்பயிற்சி, விளையாட்டு போட்டி,  முதலுதவி சிகிச்சை, மனக்கட்டுப்பாடு, ஒழுக்க பண்பு, சேவை மனப்பான்மையை வளர்த்தல், தலைமை பண்பு, பிறருக்கு உதவுதல், கூடாரம் அமைத்தல், தீயணைப்பு போன்ற பல்வேறு செயல்பாடுகள் விருத்தி பெற சாரணிய இயக்கம் உதவுகின்றது. ஏனைய பாடசாலை மாணவர்களோடு தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளை சாரணிய இயக்கம் ஏற்படுத்திக் கொடுப்பதனால் மாணவர்கள் மத்தியில் சமூகமயமாகும் தன்மை விருத்தி அடைகின்றது.
பாடசாலைகளில் ஒளிவிழா, சரஸ்வதி பூஜை, மீலாத்து நபி விழா போன்ற பல்வேறு விழாக்கள் பாடசாலைகளில் இடம்பெறுவதனால் ஒவ்வொரு மதத்தை சார்ந்த விடயங்கள் கலை கலாச்சார அம்சங்கள், பண்பாடுகள் தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு மாணவர்கள் மத்தியில் ஏற்படுகின்றது. அத்தோடு மாணவர்கள் ஏனைய மதத்தவர்களுடைய விழாக்களில் இணைந்து நிகழ்வுகளில் பங்குபெற்றுதல், அவர்களுடைய விழாக்களுக்கான உதவி வேலைப்பாடுகளை செய்தல் போன்றவற்றின் மூலமாக சமூகமயமாக்கல்   மாணவர்கள் மத்தியில் இடம்பெறக்கூடியதாக உள்ளது. இதற்காக இணைபாடவிதான செயல்பாடுகளாக காணப்படும் பாடசாலை மட்டத்தில் இடம்பெறுகின்ற இவ்வாறான விழாக்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று கூறலாம்.
மாணவர் மன்ற  செயற்பாடுகள்  மூலமாக பாடசாலைகளில் இடம்பெறும் தமிழ் இலக்கிய கலாமன்றம்,  சமய சமூகம் சார்ந்த மன்றங்கள் நடத்தப்படுவதனால் மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றுவதோடு அவர்களுடைய திறமைகளையும் வெளிக்காட்டுவதற்கான களமாக அமைகின்றது. இதன் மூலமாக சமூகத்தின் மத்தியில் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைகின்றது. இதன் மூலமாக ஆசிரியர் மாணவர் தொடர்பும்,மாணவர் மாணவர் தொடர்பு என்பன சிறந்த முறையில் ஏற்பட்டு மாணவர்கள் மத்தியில் சமூகமயமாக்கல் தன்மையானது மேலும் விருத்தி அடைவதற்கு மாணவர்மன்ற செயல்பாடுகள் முக்கியமானதாக அமைகின்றது எனலாம்.
கல்வி என்பது வாழ்கைக்கான பொருத்தப்பாடு என்பதற்கு இனங்க மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை, சுயகௌரவம், சுயதிறன் விருத்தி என்பவை ஏற்படுவதோடு தலைமைத்துவ பண்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை, குழு முயற்சி, கூட்டுறவு பண்பு, நம்பிக்கை, தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு, தமது சுற்றாடலை பேண வேண்டும் என்ற உணர்வு போன்ற சமூகமயமாக்கல் தன்மைகள் மாணவர்கள் மத்தியில் ஏற்படக்கூடியதாக அமைகின்றது அவ்விதத்திலேயே இணைந்த கலைத்திட்டமானது பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ளது எனலாம்.
அந்த விதத்தில் விளையாட்டு போட்டிகளாக இருக்கட்டும், சுற்றுலாவாக இருக்கட்டும், சாரணியம், விழாக்கள், கழகங்கள் போன்றவற்றில் மாணவர்கள் பங்கு கொள்வதினால் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகள் சீரழிய வாய்ப்பு உள்ளது என பெற்றோர்கள் எண்ணுகின்றனர். இதன் மூலமாக மாணவர்கள் சமூகமயமாகும் தன்மையானது குன்றி குறுகிய வட்டத்துக்குள்ளேயே மாணவர்கள் புத்தகப் பூச்சிகளாக உருவாக்கப்படுகின்றனர். எனவே இணைந்த கலைத்திட்டம் தொடர்பான தெளிவான அறிவினை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சரியான விதத்தில் வழங்குதல் வேண்டும்.
ஆனால் மாணவர்கள் இதில் பங்கு கொள்ளும் விதமானது மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் மூலமாக மாணவர்களுக்கு தோல்வியை கண்டு துவண்டு விடும் பண்பு, மற்றவர்களிடம் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதில் உள்ள அச்சம், பயம், கூச்சம் போன்ற விடயங்களின் மூலமாக பல்வேறு சிக்கல்களுக்கு மாணவர்கள் உள்ளாக நேரிடக் கூடியதாக உள்ளது. சிறந்த சமூகமயமாக்கல் தன்மை மாணவர்கள் மத்தியில்  இல்லாத காரணத்தினால்  இன்றைய காலகட்டங்களில் பல மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  இவ்வாறான நிலைமைகளிலிருந்து  மாணவர்களை விடுவித்து ஒரு சுமுகமான வாழ்க்கையை வாழ்வதற்கு சமூக மயமாக்கல் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை எனலாம்.

காராளசிங்கம் ஷயந்தினி,
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவி,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
வந்தாறுமூலை.




ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என வரலாற்றுபூர்வமான தீர்ப்பை நியூயார்க் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 11 அன்று அறிவிக்கப்படும். அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றாலும் பெரும்பாலும் அபராதமே விதிக்கப்படும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த தீர்ப்பு அவமானகரமானது என்றும் மோசடியானது என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குற்ற வழக்கு ஒன்றில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறை.

வரும் நவம்பரில் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் உள்ளார்.

‘யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல’ எனக்கூறி, இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரச்சார குழு நியாயப்படுத்தியுள்ளது.

“டிரம்ப்பை தோற்கடிப்பதற்கான ஒரே வழி அவரை வாக்குப்பதிவில் தோற்கடிப்பதுதான், நீதிமன்ற அறையில் அல்ல” என, பைடனின் பிரச்சாரக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், அவருடைய பிரச்சாரக் குழு அவரை ‘அரசியல் கைதியாக’ சித்தரித்தது.

34 குற்றச்சாட்டுகள், எரிச்சலடைந்த நீதிபதி, அணிவகுத்த சாட்சியங்கள்.

கடந்த 2006-ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என, இரண்டு நாட்கள் நடந்த விவாதங்களுக்குப் பிறகு 12 நடுவர்கள் ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளனர்.

வரலாற்றுபூர்வமான ஒரு விசாரணையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட வரலாற்றுபூர்வ தீர்ப்பு இது. இதன்மூலம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முதல் அமெரிக்க முன்னாள் அதிபரானார் டொனால்ட் டிரம்ப். மேலும், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் முக்கியக் கட்சி ஒன்றின் அதிபர் வேட்பாளராகக் களமிறங்குவதும் இதுவே முதல் முறை.

34 குற்றச்சாட்டுகள், எரிச்சலடைந்த நீதிபதி, அணிவகுத்த சாட்சியங்கள்.


கடந்த 2006-ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார்.


இந்த வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என, இரண்டு நாட்கள் நடந்த விவாதங்களுக்குப் பிறகு 12 நடுவர்கள் ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளனர்.


வரலாற்றுபூர்வமான ஒரு விசாரணையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட வரலாற்றுபூர்வ தீர்ப்பு இது. இதன்மூலம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முதல் அமெரிக்க முன்னாள் அதிபரானார் டொனால்ட் டிரம்ப். மேலும், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் முக்கியக் கட்சி ஒன்றின் அதிபர் வேட்பாளராகக் களமிறங்குவதும் இதுவே முதல் முறை.


ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு - தேர்தலில் போட்டியிட முடியுமா?

9 மணி நேரங்களுக்கு முன்னர்

வேலைவாய்ப்பு மோசடி: இந்தியர்களை தாய்லாந்து, மியான்மருக்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்யும் கும்பல் - முழு பின்னணி

4 மணி நேரங்களுக்கு முன்னர்

அடுத்து என்ன நடக்கும்?

டொனால்ட் டிரம்ப்பட மூலாதாரம்,REUTERS

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.


இனியும் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா?


முடியும்.


அதிபர் வேட்பாளர்களுக்கு வெகுசில தகுதிகளையே அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.


போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 35 வயதை எட்டியிருக்க வேண்டும், 'அமெரிக்காவில் பிறந்த' அந்நாட்டுக் குடிமகனாகவும், குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் அந்நாட்டில் வாழ்ந்தவராகவும் இருக்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கும் எந்த விதிமுறைகளும் இல்லை.


எனினும், இந்தத் தீர்ப்பு வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தாண்டு தொடக்கத்தில் ப்ளூம்பெர்க் மற்றும் மார்னிங் கன்சல்ட் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், இரு முதன்மை கட்சிகளுக்கும் ஒத்த அளவு ஆதரவு உள்ள மாகாணங்களில், டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால், தாங்கள் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என, 53% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.


குயின்னிபியாக் பல்கலைக்கழகம் இம்மாதம் நடத்திய மற்றொரு கருத்துக்கணிப்பில், 6% டிரம்ப் ஆதரவு வாக்காளர்கள் அவருக்கு வாக்களிக்காமல் போவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தது, இரு கட்சிகளுக்கிடையேயான கடும் போட்டியில் விளைவுகளை ஏற்படுத்தும்.


டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் வலிமையை பரிசோதிக்கப்போகும் பாகிஸ்தானின் 'பவர் ஹிட்டர்கள்'

56 நிமிடங்களுக்கு முன்னர்

கங்காருவுக்கு முன்பு ஆஸ்திரேலிய நிலப்பரப்பை ஆண்ட விசித்திர உயிரினம்

30 மே 2024

டொனால்ட் டிரம்ப் வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஸ்டார்மி டேனியல்ஸின் சாட்சியத்தை டிரம்ப்பின் குழு மேல்முறையீட்டுக்கான அடிப்படையாக கொள்ளும்.

டிரம்ப்புக்கு என்ன நடக்கும்?

இவ்வழக்கின் விசாரணைக் காலம் முழுவதும் டிரம்ப் ஜாமீனில் இருந்தார். இது, வியாழக்கிழமை (மே 30) தீர்ப்பு வெளியான பிறகும் மாறாது. டொனால்ட் டிரம்ப் சொந்த ஜாமீனில் (recognisance) விடுவிக்கப்பட்டார்.


அவர் ஜூலை 11 அன்று நீதிமன்றத்திற்குத் திரும்புவார். அன்றைய தினம் இவ்வழக்கின் நீதிபதி ஹுவான் மெர்ச்சன் தண்டனை விவரங்களை அறிவிப்பார்.


தண்டனை வழங்கும்போது, டிரம்ப்பின் வயது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை நீதிபதி கருத்தில் கொள்வார்.


அவருக்கான தண்டனை வாய்ப்புகளுள் அபராதம், நன்னடத்தைக் கண்காணிப்பு அல்லது சிறைத்தண்டனை ஆகியவை உள்ளடங்கும்.


இந்தத் தீர்ப்பை டிரம்ப் 'அவமானகரமானது' எனத் தெரிவித்துள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வார், அதன் நடைமுறை பல மாதங்கள் அல்லது அதையும் தாண்டி நீடிக்கும்.


டிரம்ப்பின் சட்டக்குழு இதற்காக மான்ஹாட்டனில் உள்ள மேல்முறையீட்டு நடுவர் மன்றத்தை (Appellate Division) எதிர்கொள்ளலாம்.


இதன்மூலம் தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் டிரம்ப் சிறைக்குச் செல்வது சாத்தியமில்லை, ஏனெனில் மேல்முறையீடு செய்யும்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்த 14 போராளிகளை குற்றவாளிகள் என அறிவித்த ஹாங்காங் நீதிமன்றம்

30 மே 2024

மகாத்மா காந்தி: ‘காந்தி’ படத்திற்குப் பிறகுதான் உலகம் முழுவதும் அறியப்பட்டாரா?

30 மே 2024

மேல்முறையீட்டுக்கான அடிப்படை என்னவாக இருக்கும்?

டொனால்ட் டிரம்ப் வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டிரம்ப்-க்கு சிறைத்தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என பெரும்பாலான சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவ்வழக்கின் மையமாக உள்ள ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸின் ஆதாரங்கள் ஒரு காரணமாக இருக்கும்.


“[ஸ்டார்மி டேனியல்ஸ்] வழங்கிய விவரங்களின் அளவு, இவ்வழக்கை விவரிக்கத் தேவையில்லை,” என, நியூயார்க் சட்டப்பள்ளி பேராசிரியர் ஆனா கோமின்ஸ்கி தெரிவிக்கிறார்.


“ஒருபுறம், ஸ்டார்மி டேனியல்ஸ் வழங்கிய விவரங்கள் அவரை நம்பத்தகுந்தவராக ஆக்குகிறது. வழக்குத் தொடுப்பவராக, நீங்கள் போதுமான விவரங்களை வழங்க விரும்புகிறீர்கள், அதனால் அவர் சொல்வதை நடுவர் நம்புகிறார். மறுபுறம், இந்த விவரங்கள் பொருத்தமற்றதாகவும் பாரபட்சமானதாகவும் மாறும் இடங்களும் உண்டு,” என்கிறார்.


ஸ்டார்மி டேனியல்ஸின் சாட்சியத்தின்போது, டிரம்ப்பின் சட்ட குழு இருமுறை சட்டபூர்வ தவறு நிகழ்ந்ததாக (mistrial) தெரிவித்தது. ஆனால், அது நீதிபதியால் மறுக்கப்பட்டது.


அதற்கு அப்பால், இந்த வழக்கில் மாவட்ட அரசு வழக்கறிஞர் எடுத்த புதிய சட்ட யுக்தி, மேல்முறையீட்டுக்கான காரணத்தையும் வழங்கலாம்.


வணிகப் பதிவுகளை பொய்யாக்குவது நியூயார்க்கில் தீவிரமான தவறான செயலாக இருக்கலாம், ஆனால் 2016 தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதற்கான சட்டவிரோத முயற்சி என்று கூறப்படும் குற்றத்தின் காரணமாக டிரம்ப் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.


வரி மோசடியுடன் கூட்டாட்சி மற்றும் மாகாணத் தேர்தல் சட்டங்களின் மீறல்கள் இந்த வழக்கில் பொருந்தும் என்று வழக்கறிஞர்கள் பரவலாக குற்றம்சாட்டினர்.


மேல்முறையீட்டிற்கான அடிப்படையை உருவாக்கக்கூடிய கூட்டாட்சி சட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடு பற்றிய கேள்விகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இதுவரை கூட்டாட்சி சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படாத வழக்குக்கு அதை அரசு வழக்கறிஞர்கள் பயன்படுத்தியதில்லை. அதேபோன்று, மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞருக்கு அவ்வாறு செய்வதற்கான அதிகார வரம்பு இருக்கிறதா என்ற கேள்வியும் உள்ளது.


ஸ்மார்ட்போன்களை தவிர்த்து சாதாரண ஃபோன்கள் மீது அதிகரிக்கும் மக்களின் மோகம்


டிரம்ப் சிறைக்கு செல்வது அதிக சாத்தியம் இல்லையென்றாலும்,சட்ட ரீதியில் அது சாத்தியமானதுதான்.


டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளும் நியூயார்க்கில் குறைந்தபட்சம் கடுமையான குற்றங்களைச் சேர்ந்தவை (class E felonies). இதில் ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


மேலே குறிப்பிடப்பட்டவை போன்று நீதிபதி மெர்ச்சன் குறைந்தபட்ச தண்டனையை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களும் உள்ளன. அவற்றுள், டிரம்ப்பின் வயது, இதற்கு முன் எந்த வழக்கிலும் தண்டனை பெறாதது, அவர் மீதான குற்றங்கள் வன்முறை சார்ந்தவை இல்லாதது உள்ளிட்ட காரணங்கள் அடங்கியுள்ளன.


விசாரணையின்போது இவ்வழக்கு குறித்துப் பொதுவெளியில் பேசக்கூடாது என்கிற நீதிமன்ற உத்தரவை டிரம்ப் மீறியதை நீதிபதி கருத்தில் கொள்ளலாம்.


முன்னோடி இல்லாத இந்த வழக்கின் தன்மையை ஆழ்ந்து சிந்தித்து, முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய அதிபர் வேட்பாளரை சிறைக்கு அனுப்புவதை நீதிபதி தவிர்ப்பதற்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.


நடைமுறை சாத்தியம் குறித்த கேள்வியும் உள்ளது. அனைத்து முன்னாள் அதிபர்களைப் போன்றே டிரம்புக்கும் சீக்ரெட் சர்வீசஸ் (Secret Services) எனும் முக்கிய அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசு முகமையின் சேவையைப் பெறும் உரிமை உள்ளது. இதன்மூலம், அதன் முகவர்கள் டிரம்ப்பை சிறையில் பாதுகாப்பர்.


மேலும், முன்னாள் அதிபரை சிறைக்குள் அடைத்து, சிறைத்துறை கட்டமைப்பை இயக்குவது மிகவும் கடினமான செயலாகும். அவரை பாதுகாப்பது அதிக ஆபத்தானதும், செலவுகரமானதும் ஆகும்.


“சிறைத்துறை அமைப்புகள் இரு விஷயங்களில் கவனம் செலுத்தும் — சிறையின் பாதுகாப்பு, மற்றும் செலவுகளை குறைப்பது,” என, சிறைவாசிகளுக்கான ஆலோசனைகளை வழங்கும் ஒயிட் காலர் அட்வைஸ் அமைப்பின் இயக்குநர் ஜஸ்டின் பாபெர்னி கூறுகிறார்.


“டிரம்ப் (சிறையில்) இருந்தால், அது விநோத நிகழ்ச்சி போன்று இருக்கும்… எந்த சிறை வார்டனும் அதை அனுமதிக்க மாட்டார்,” என்றார்.


டி20 உலகக்கோப்பை: 22,000 கி.மீ. பயணம் செய்து அமெரிக்காவை அடைந்த கிரிக்கெட் ஆடுகளங்கள்

30 மே 2024

பிரக்ஞானந்தா: சொந்த நாட்டில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இந்திய இளம் செஸ் வீரர்

30 மே 2024

டிரம்ப் வாக்களிக்கலாமா?

டொனால்ட் டிரம்ப்பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்ப் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கான சாத்தியம் உள்ளது.


டிரம்ப் வசித்துவரும் ஃபுளோரிடாவில் உள்ள சட்டத்தின்படி, வேறொரு மாகாணத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர், 'அம்மாகாணத்தில் வாக்கு செலுத்தத் தகுதியற்றவர்' எனும் போதுதான் ஃபுளோரிடாவிலுவிலும் வாக்கு செலுத்தத் தகுதியவற்றாகிறார்.


டிரம்ப்புக்புக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. நியூயார்க்கைப் பொறுத்தவரையில் அவர் சிறையில் அடைக்கப்படாதவரை, டிரம்ப் வாக்குச் செலுத்த முடியும்.


அதாவது, நவம்பர் 5 அன்று டிரம்ப் சிறையில் இல்லாவிட்டால், அவரால் வாக்கு செலுத்த முடியும்.


டிரம்புக்கு மன்னிப்பு கிடைக்குமா?

கிடைக்காது.


அமெரிக்கக் கூட்டாட்சி சட்டத்தால், சட்டவிரோதமானது (federal offences) என அறிவிக்கப்பட்டக் குற்றங்களுக்கு அதிபர் மன்னிப்பு வழங்க முடியும். ஆனால், டிரம்ப் தொடர்பான வழக்கு ஒரு மாகாண வழக்காகும். இதில், டிரம்ப் மீண்டும் அதிபரானாலும் ஒன்றும் செய்ய முடியாது.


கடந்த 2020 அதிபர் தேர்தலில் மயிரிழையில் ஜோ பைடனிடம் தோல்வியை சந்தித்த டொனால்ட் டிரம்ப் அந்த முடிவை மாற்றச் சதி செய்ததாக ஜார்ஜியாவில் டிரம்ப்புக்கு எதிரான வழக்கிலும் இதே நிலைதான். இவ்வழக்கு தற்போது மேல்முறையீட்டில் உள்ளது.


அரசு ஆவணங்களை தவறாக கையாண்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு மற்றும் 2020 தேர்தலில் முடிவை மாற்றச் சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது என இரண்டு கூட்டாட்சி குற்றங்களிலும் அதிபரால் மன்னிப்பு வழங்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


முதல் வழக்கில், ஆதாரங்கள் குறித்த கேள்விகளை தீர்க்காமல் தேதி அறிவிப்பது 'விவேகமற்றது' எனக்கூறி, விசாரணையை காலவரையின்றி, டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட ஃபுளோரிடா நீதிபதி ஒத்திவைத்துள்ளார். டிரம்ப்பின் மேல்முறையீட்டால் இரண்டாவது வழக்கும் தாமதமாகியுள்ளது.


இரு வழக்குககளிலும் நவம்பர் தேர்தலுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்படாது என்றாலும், அதிபர் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தில் டிரம்ப்பும் அடங்குவாரா என்பதை அரசியலமைப்பு நிபுணர்கள் மறுக்கின்றனர். இதை முயற்சிக்கும் முதல் நபராக டிரம்ப் இருக்கலாம்.


 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.