Showing posts with label Article. Show all posts

 

உலக கருப்பை புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள், உயிருக்கு ஆபத்தான கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2013 முதல் அனுசரிக்கப்படுகிறது.


#Sooriyanfm #உலககருப்பைபுற்றுநோய்தினம் #WorldOvarianCancerDay

 


இந்திய அரசியலமைப்பின் 164-வது சரத்தின்படி, முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுவார் என்றும், மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நியமனம் முறைப்படி ஆளுநரால் செய்யப்பட்டாலும், மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற்ற நபரை அரசாங்கத்தை அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என அரசியலமைப்பு மரபுகள் வலியுறுத்துகின்றன. எனவே, ஆளுநரின் விருப்புரிமை வரையறுக்கப்பட்டதாகும், அதைத் தன்னிச்சையாகப் பயன்படுத்த முடியாது. பெரும்பான்மை ஆதரவு குறித்த இறுதி முடிவு மாநில சட்டமன்றத்தின் அவையிலேயே எடுக்கப்பட வேண்டும். இதன் விளைவாக, ஒரு முதலமைச்சரை நியமிப்பதிலோ அல்லது மாநில அரசை அமைப்பதிலோ ஏற்படும் தேவையற்ற தாமதம், ஜனநாயகக் கொள்கைகளையும் நாடாளுமன்ற அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திட்டத்தையும் மீறுவதாக அமையக்கூடும்.

 


நார்வே உலகின் மிகப் பசுமையான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


இதன் நகரங்களில் மிதிவண்டிகள் நிறைந்து காணப்படுகின்றன, இதன் 98 சதவீத மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து கிடைக்கிறது மற்றும் 2024-இல் விற்கப்பட்ட ஒவ்வொரு பத்து புதிய வாகனங்களில் ஒன்பது மின்சார வாகனங்கள் ஆகும்.


நார்வே சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடும் கூட. இங்கே மொத்த எரிசக்தி நுகர்வில் மின்சாரத்தின் பங்கு மிக அதிகம். கார்பன் வரி விதித்த ஆரம்பகால நாடுகளில் இதுவும் ஒன்று.


ஆனால் இதனுடன் சேர்த்து, இந்நாடு எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாசு உண்டாக்கும் இந்த நிலக்கரி போன்ற எரிபொருள்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, இதுதான் நார்வே அரசின் வருமானத்திற்குப் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.


இந்த வளங்களே 'ஆயில் ஃபண்ட்' என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற 'சாவரின் வெல்த் ஃபண்ட்' உருவாவதற்குக் காரணமாக அமைந்தன. இதுவே தாராளமான ஓய்வூதிய முறை மற்றும் நலன்புரி அரசின் நிதித் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.


உள்நாட்டில் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்கும், உலக அளவில் புதைபடிவ எரிபொருட்களின் பெரிய ஏற்றுமதியாளராக இருப்பதற்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு 'நார்வேஜியன் பேரடாக்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளாகக் கடுமையான அரசியல் மற்றும் சமூக விவாதங்களை உருவாக்கி வருகிறது.


சுற்றுச்சூழல் குழுக்களும் இளைஞர் செயல்பாட்டாளர்களும் எண்ணெய் வணிகத்தைக் குறைப்பதற்கான உறுதியான வாக்குறுதிகளையும் காலக்கெடுவையும் கோரி வரும் நிலையில், பொருளாதாரத்தில் இதன் பங்களிப்பு மற்றும் இதனால் உருவாகும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காரணமாக இந்தத் தொழில் தனது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துள்ளது.


மத்திய கிழக்கில் போர் மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியமான ஹோர்மூஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு, நார்வேயிற்குப் பெரும் எதிர்பாராத லாபத்தை அளித்துள்ளது. ஆனால் இது நாட்டின் மிகவும் சங்கடமான விவாதங்களில் ஒன்றை மீண்டும் வேகப்படுத்தியுள்ளது.


நார்வேயின் சுற்றுச்சூழல் அமைப்பான 'ஃப்ரண்ட்ஸ் ஆஃப் தி எர்த் நார்வே' தலைவர் ட்ரல்ஸ் குலோவ்சன் பிபிசி முண்டோவிடம் கூறுகையில், "என்னைப் போன்ற ஒரு நார்வேஜியன் சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு இந்தச் சூழல் வெட்கக்கேடானது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.


நார்வேயில் மக்கள் மிதிவண்டிகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.பட மூலாதாரம்,Getty Images

ஐக்கிய நாடுகளின் மனித மேம்பாட்டுக் குறியீட்டின்படி, உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றான நார்வேயில் எரிசக்தித் துறை செழிப்பின் முக்கிய ஆதாரமாக உள்ளது.


நார்வேயின் மொத்த ஏற்றுமதியில் இந்தத் துறையின் பங்களிப்பு 60 சதவீதத்திற்கும் அதிகமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதத்திற்கும் மேலாகவும் உள்ளது.


நார்வேயின் கண்டக்கரை பகுதியில் மிகப்பெரிய ஆபரேட்டராக 'இக்வினோர் குரூப்' உள்ளது, இதில் பெரும்பான்மையான பங்குகள் அரசிடம் உள்ளன. அதன் லாபத்தின் பெரும் பகுதி சாவரின் வெல்த் ஃபண்ட் எனப்படும் 'ஆயில் ஃபண்டில்' செலுத்தப்படுகிறது.


ஒரு மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த நிதியில் மொத்தம் 1.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இருந்தன, இது ஒரு குடிமகனுக்கு சுமார் 3.5 லட்சம் டாலர் சேமிப்பிற்குச் சமம்.


2026-ஆம் ஆண்டின் தற்போதைய சூழலில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் இது மேலும் அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது.


இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து, அரசுக்குக் கூடுதலாக 5 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது மற்றும் உள்ளூர் எரிசக்தி நிறுவனங்களின் செயல்பாடுகளால் ஓஸ்லோ பங்குச் சந்தை சாதனைகளைப் படைத்துள்ளது.


செழிப்பான நார்வேயின் பொருளாதாரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது.பட மூலாதாரம்,Kristian Helgesen/Getty

படக்குறிப்பு,நார்வேயின் பொருளாதாரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது.

நோபல் அமைதிப் பரிசு வழங்கும் ஒரு நாடு, போரின் கொந்தளிப்பால் பணக்கார நாடாக மாறுகிறது என்ற கருத்துக்குத் தொழிலாளர் கட்சி அரசு பதிலளிக்க முயன்றுள்ளது.


நார்வேயின் நிதி அமைச்சரும் நேட்டோவின் (NATO) முன்னாள் பொதுச் செயலாளருமான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இதை ஒரு முரண்பாடு என்று குறிப்பிட்டு, நார்வேவுக்கு 'அமைதியால் தான் அதிக லாபம் கிடைக்கிறது' என்றார்.


ஆனால் என்.ஆர்.கே-வின் (NRK) கட்டுரையாளர் செசிலி லாங்கும் பெக்கரின் வார்த்தைகளில், "கசப்பான உண்மை என்னவென்றால், உலகம் எரியும்போது நமது அரசு பட்ஜெட்டில் பணம் வந்து சேர்கிறது."


இந்தச் சூழல் 2022-லேயே தெளிவாகத் தெரியத் தொடங்கியது, அப்போது யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய பிறகு ஐரோப்பாவிற்கான மாஸ்கோவின் ஏற்றுமதி வேகமாக சரிந்தது.


அப்போதிருந்து, எரிசக்தி நெருக்கடியில் தவிக்கும் கண்டத்திற்கு நார்வே மட்டுமே நம்பகமான விநியோகஸ்தராக உருவெடுத்துள்ளது.


நிதி நிறுவனமான நோர்டியாவின் ஆய்வாளர் தீனா சால்ட்வெட் பிபிசி முண்டோவிடம் கூறுகையில், "இன்று நாம் ஐரோப்பாவில் நுகரப்படும் எரிவாயுவில் சுமார் 30 சதவீதத்தையும், எண்ணெயில் 15 சதவீதத்தையும் விநியோகிக்கிறோம், நமது மொத்த ஏற்றுமதியில் 90 சதவீதத்தை அங்கேயே அனுப்புகிறோம்" என்றார்.


நார்வேயின் கார்பன் உமிழ்வை குறைக்கும் கொள்கை

புதைபடிவ எரிபொருட்களின் ஏற்றுமதி குறித்த விவாதம் நார்வேயில் பல ஆண்டுகளாக நீடிக்கிறது.பட மூலாதாரம்,Paul S. Amundsen/Getty Images

படக்குறிப்பு,புதைபடிவ எரிபொருட்களின் ஏற்றுமதி குறித்த விவாதம் நார்வேயில் பல ஆண்டுகளாக நீடிக்கிறது.

பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு கையிருப்பு இருந்தபோதிலும், நார்வே பல தசாப்தங்களாக ஐரோப்பாவின் தூய்மையான உள்கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அதன் நீர்மின் விநியோக கட்டமைப்பு ஆகும்.


1991-இல் பசுமை எரிசக்தியை ஊக்குவிக்க அரசு கார்பன் வரியை விதித்தது; 2005-இல் ஊக்கத்தொகைகள் காரணமாக மின்சாரக் கார்களில் நார்வே உலகின் முன்னணி நாடாக மாறியது; மற்றும் 2017-இல் நாடாளுமன்றம் 2030-க்குள் கார்பன் உமிழ்வை 50 சதவீதம் குறைக்கக் காலநிலைச் சட்டத்தை நிறைவேற்றியது.


இருப்பினும், தற்போதைய சர்வதேச நிலவரங்கள் இந்தப் போக்கைத் தடம் புரளச் செய்வது போலத் தோன்றுகின்றன. யுக்ரேன் மற்றும் இரான் மோதல்கள் மிகவும் 'பசுமை' கொள்கை கொண்ட அரசியல் கட்சிகளைக் கூட, ஐரோப்பிய எரிசக்தி பாதுகாப்பிற்கு நார்வேஜியன் எரிவாயு ஒரு 'தேவையான தீமை' என்பதை ஏற்கக் கட்டாயப்படுத்தியுள்ளன.


குலோவ்சனின் கூற்றுப்படி, உலகளாவிய உறுதியற்ற தன்மை, ஹைட்ரோகார்பன்கள் மீது இன்னும் அதிக சார்ந்திருப்பதை நியாயப்படுத்துகிறதா என்பதுதான் இப்போது பிரதான விவாதமாக உள்ளது.


"இப்போது ஆர்க்டிக் கடல் பகுதிகளின் புதிய இடங்களில் வேலை செய்வது பற்றிப் பேச்சுக்கள் நடக்கின்றன - அத்தகைய உணர்திறன் வாய்ந்த சூழலில், எந்தச் சூழ்நிலையிலும் அகழ்வாராய்ச்சி நடக்கக்கூடாது" என்று அவர் கூறினார்.


அடுத்தது என்ன?

நார்வே அரசு எண்ணெய் தொழிலை மேலும் மேம்படுத்த விரும்புகிறது, அதற்கான ஆய்வுகளுக்கான புதிய உரிமங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.பட மூலாதாரம்,Chris Ratcliffe/Getty Images

படக்குறிப்பு,நார்வே அரசு எண்ணெய் தொழிலை மேலும் மேம்படுத்த விரும்புகிறது, அதற்கான ஆய்வுகளுக்கான புதிய உரிமங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நார்வே பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோரேவின் அரசு சமீபத்தில் 57 புதிய ஆய்வு உரிமங்களை வழங்கியது.


"ஐரோப்பாவிற்கு விநியோகம் செய்ய இன்னும் கூடுதலான எண்ணெயைத் தொடர்ந்து தேடுவோம்" என்று அவர் உறுதியளித்தார்.


ஸ்டோரே 'எண்ணெய் துறையிலிருந்து வெளியேறும் கட்டத்தை' தீர்மானிப்பதை விட, தொழில்துறையின் 'வளர்ச்சிக்கு' ஆதரவாக உள்ளார்.


தனது கட்சியின் இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்தபோதிலும், தொழில்துறையிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை வழங்கும் எண்ணம் ஸ்டோரேவிற்கு இல்லை.


மாறாக, பழைய எண்ணெய் கையிருப்புகளில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்ட, மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்ட பாரண்ட்ஸ் கடல் பகுதியில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.


இண்டஸ்ட்ரி எனர்ஜி யூனியனின் ஃப்ரோட் ஆல்ஃபைம் பிபிசி முண்டோவிடம் இந்தத் தொழிலின் சமூக முக்கியத்துவத்தை நினைவுபடுத்தினார். "நாம் 2 லட்சத்திற்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்புகளைப் பற்றிப் பேசுகிறோம். இது ஐரோப்பாவிற்கான விநியோகத்தை நிறுத்துவதற்கான நேரம் அல்ல."


அதே நேரத்தில், "இந்தத் தொழில் அதன் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது என்பதை அதிகமான மக்கள் உணர்ந்து வருகின்றனர், ஆனால் இந்த மாற்றத்தின் பயணம் வலி நிறைந்ததாக இருக்கும்." என்று சால்ட்வெட் எச்சரித்தார்

 


தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே புதிய வரலாறு படைத்துள்ளார். 1967 முதல் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளை அவரது கட்சி பின்னுக்குத் தள்ளியுள்ளது.

தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே, ஆட்சியில் இருந்த மற்ற பெரிய கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி மக்களிடையே தனக்குள்ள செல்வாக்கை விஜய் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

தயக்கம் மிகுந்த நாயகனாக 33 ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய், இப்போது அரசியலில் தனது முதல் தேர்தலிலேயே வென்று காட்டியுள்ளார். அவரது தனி வாழ்வும் திரைவாழ்வும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால், அரசியலில் விஜய் ஒரு புதிய பாணியை கையாளுகிறார்.

விஜயின் திரைப்படங்களும் அவரது அரசியலும் சொல்வது என்ன?

விஜயை நேரில் சந்திக்கும் யாரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு அம்சம் உண்டு. அதாவது, திரையில் துறுதுறுப்பாகத் தென்படும் விஜய், நேரில் பார்க்கும்போது முற்றிலும் மாறானவராக நடந்துகொள்வார். திரையில் பார்த்த ஒரு கலகலப்பான மனிதரை எதிர்பார்த்துச் சென்றால், பேசவே தயங்கக்கூடிய, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் ஒரு நபராக இருப்பார் விஜய்.

"பத்து வயதிலேயே தங்கையை இழந்துவிட்டு, பெற்றோரின் ஒரே குழந்தையாக வளர்ந்ததும் தன் வயதுக்கேற்ற ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகள் இல்லாததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்," என ஒரு முறை தெரிவித்தார் விஜய்.

அப்படிப்பட்ட ஒரு நபர், தனது புதிய கட்சியின் அரசியல் மேடைகளில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் முழங்குகிறார். புதியவர்களிடம் பேசத் தயங்கும் இளைஞராகத் துவங்கி, ஒரு கட்சியின் தலைவராகப் பரிணாமம் எடுத்த விஜயின் பயணம் சாதாரணமானதல்ல.

எட்டாம் வகுப்பில் தொடங்கிய நடிப்பு

விஜய் சிறுவனாக இருக்கும்போதே நிகழ்ந்த தங்கை வித்யாவின் மரணம் அவரை வெகுவாகப் பாதித்தது. அவரே சொன்னபடி, மேலும் அமைதியானவராக மாறினார் விஜய்.

எஸ்.ஏ. சந்திரசேகர் படங்களை இயக்க ஆரம்பித்தபோது விஜய்க்கு வேடிக்கை பார்க்கக் கூடிய வயது வந்திருந்தது. அந்த சமயத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும்பாலும் விஜயகாந்தை வைத்து படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். இந்தப் படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜய். முதல் படத்தில் நடிக்கும்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தார் விஜய்.

"10ஆம் வகுப்பில் நான் சராசரிக்கும் சற்று மேலான மாணவனாகத்தான் இருந்தேன். அதன் பிறகு படிப்பில் ஆர்வம் குறைய சினிமா ஆசை வந்தது. அப்பாவுக்குத் தெரியாமல் நிறைய சினிமா பார்த்தேன். சிறிது காலம் கழித்து சினிமாவில் வரவேண்டும், நடிக்க வேண்டும் என்று சொல்ல வீட்டில் கடுமையான எதிர்ப்பு. எங்களுக்காக ஒரு டிகிரி படி, பிறகு நானே உனக்காக ஒரு படத்தைத் தயாரிக்கிறேன் என்றார் அப்பா."

"அதன் பிறகு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் சேர்ந்தேன். ஒரு வருடம்தான் படித்தேன். அப்போது அப்பா நாளைய தீர்ப்பு படத்தைத் தயாரித்தார். அதில் என்னை ஹீரோவாக்கினார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. 6- 7 மாத இடைவெளி. திரும்பவும் கல்லூரிக்குப் போனேன்," என தன் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையைப் பற்றி 2009-இல் இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் சுருக்கமாகத் தெரிவித்தார் விஜய்.

X/TVK

தேர்தல் பிரசாரத்தில், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவே விஜயின் பிரதான குறியாக இருந்தது. திமுக மீதான விமர்சனங்களை தனது ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் அவர் முன்வைத்தார். இந்த தேர்தல் திமுகவுக்கும் தவெகவுக்கும் நடக்கும் தேர்தல், ஸ்டாலின் அங்கிளுக்கும் விஜய் அண்ணாவுக்கும் இடையிலான தேர்தல் என்றே அவர் தனது பேச்சுகளில் குறிப்பிட்டு வந்தார்.

இதனால் எரிச்சலடைந்த பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக விஜயை கடுமையாக சாடிய போதிலும், விஜய் தனது பிரசார பாணியை மாற்றிக் கொள்ளவே இல்லை. ஜனநாயகன் பிரச்னையில் கூட மத்தியில் ஆளும் பாஜகவை நேரடியாக சீண்டாத அவர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட சில தருணங்களில் மட்டுமே அக்கட்சி விமர்சனங்களை முன்வைத்தார்.

வாக்குப்பதிவு முடிந்ததும் வெளியான கருத்துக்கணிப்புகளில் பலவும் திமுக அல்லது அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று கூறின. ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு மட்டுமே திமுக, அதிமுகவை விஞ்சி விஜயின் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணித்திருந்தது. அந்த கணிப்பு உண்மையாகக் கூடும் என்பதே தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரமாக உள்ளது.

நண்பகல் 12.30 மணி நிலவரப்படி, திமுக, அதிமுகவை விஞ்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. முதன் முறையாக தேர்தல் களம் கண்டுள்ள தவெக அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெறுமா என்று அக்கட்சித் தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்து தேர்தல் முடிவை பின்தொடர்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



 


இரான் போரினால் உரங்கள் மற்றும் அதன் முக்கிய மூலப்பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால், உலகளவில் வாரத்திற்கு பத்து பில்லியன் உணவுகள் வரை இழப்பு ஏற்படக்கூடும் என்றும், இது ஏழை நாடுகளை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் உலகின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.


யாரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வைன் தோர் ஹோல்செதர் பிபிசியிடம் பேசுகையில், ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைத் தடுத்துள்ள வளைகுடாவில் நிலவும் மோதல், உலகளாவிய உணவு உற்பத்தியை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறினார்.


குறைந்த அளவிலான உரப் பயன்பாட்டினால் பயிர் விளைச்சல் குறைவது, உணவிற்கான ஏலப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.


மற்ற நாடுகளில் உள்ள "மிகவும் பாதிக்கப்படக்கூடிய" மக்கள் மீது இந்த போரின் தாக்கத்தை ஐரோப்பிய நாடுகள் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


பிரிட்டனில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், உணவு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்த செலவுகள், அடுத்த சில மாதங்களில் வாராந்திர உணவு செலவுகளில் தெரிய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விளம்பரம்


"தற்போதைய சூழ்நிலையால் உலகில் இப்போது அரை மில்லியன் டன் வரை நைட்ரஜன் உர உற்பத்தி செய்யப்படவில்லை," என்று ஹோல்செதர் கூறினார்.


"உணவு உற்பத்திக்கு இதன் விளைவு என்ன? உரங்கள் இல்லாததன் விளைவாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் வரை உற்பத்தி செய்யப்படாமல் போகும்."


நைட்ரஜன் உரத்தைப் பயன்படுத்தாவிட்டால், சில பயிர்களின் விளைச்சல் முதல் பருவத்திலேயே 50% வரை குறையும் என்று ஹோல்செதர் தெரிவித்தார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

பிராச்சி நிகம் 

"நான் முதலிடம் பெறாமல் இருந்திருக்கலாம்" - தேர்வில் முதலிடம் பெற்றும் உருவகேலிக்கு ஆளான பெண் இப்போது கூறுவது என்ன?

இந்தியாவில் சுமார் 362 வகையான பாம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன ( கோப்புப்படம் )

கோடைக் காலங்களில் வீடுகளை நோக்கிவரும் பாம்புகள் - தடுக்க சில வழிகள்

இந்த சீசனில் விளையாடிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க்

ராகுல், ஸ்டார்க் அபாரம் - 225 இலக்கை சேஸ் செய்து டெல்லி வெற்றி பாதைக்கு திரும்பியது எப்படி?

 தமிழ்நாட்டில் இறுதி சடங்குகளுக்கு தனிச் சட்டம் - நீதிமன்ற கருத்துக்கு எதிர்வினை என்ன?

தமிழ்நாட்டில் இறுதி சடங்குகளுக்கு தனிச் சட்டம் தேவையா? நீதிமன்றம் கூறியது என்ன?

End of அதிகம் படிக்கப்பட்டது

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"உரச் சந்தை உலகளாவிய ஒன்றாகும், எனவே இந்த மூலப்பொருட்கள் பூமி முழுவதும் நகர்ந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இதன் உடனடித் தாக்கத்தை நீங்கள் ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற முக்கிய இலக்குகளில் காண முடியும்."


உலகம் முழுவதும் பயிரிடும் காலங்கள் மாறுபடுகின்றன. பிரிட்டனில் இது உச்சக்கட்ட பயிரிடும் காலம், அதே நேரத்தில் ஆசியாவில் விவசாயிகள் இப்போதே பணியைத் தொடங்கி வருகின்றனர்.


ஆசியாவில் உரத் தட்டுப்பாட்டின் விளைவுகள் ஆண்டின் இறுதி வரை உணவு விலைகளில் பிரதிபலிக்காது. இந்த வசந்த காலத்தில் நடப்பட வேண்டிய பயிர்கள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக வரும்போது அல்லது வராமல் போகும்போதுதான் அந்தத் தாக்கம் தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புத் துறையின் மூத்த ஆய்வாளர் பேராசிரியர் பால் டெங், ''சில நாடுகள் உடனடிப் பயிரிடும் காலத்திற்குத் தேவையான உரத்தை வைத்திருக்கலாம். ஆனால் இந்த நெருக்கடி இன்னும் நீடித்தால், வரும் மாதங்களில் அரிசி போன்ற பயிர்களில் இதன் தாக்கத்தைக் காண்போம்" என்றார்.


உலகெங்கிலும் உள்ள விவசாயிகள் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்று ஹோல்செதர் கூறினார். அவர்கள் உற்பத்தி செய்யும் உணவிற்கு கிடைக்கும் விலை, அவர்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான செலவுகளை ஈடுகட்டும் வகையில் இன்னும் மாறவில்லை.


"அவர்கள் அதிக எரிசக்தி செலவுகளை எதிர்கொள்கிறார்கள், டிராக்டருக்கான டீசல் விலை அதிகரிக்கிறது, விவசாயிகளுக்கான பிற உள்ளீடுகளின் விலையும் அதிகரிக்கிறது, உரச் செலவும் அதிகரிக்கிறது, ஆனால் பயிர்களின் விலை இன்னும் அந்த அளவிற்கு உயரவில்லை," என்று அவர் கூறினார்.



இரான் போரால் ஆசியா உட்பட உலகெங்கும் உணவு விலை உயரும் ஆபத்து ஏன்?பட மூலாதாரம்,Getty Images

ஏலப் போட்டி

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகின் உரங்களான யூரியா, பொட்டாஷ், அம்மோனியா மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே செல்கிறது.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் மீது போர் தொடுத்ததில் இருந்து உரத்தின் விலை 80% உயர்ந்துள்ளது.


இந்த மோதல் தொடர்வது பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையே உணவிற்கான ஏலப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று ஹோல்செதர் மேலும் கூறினார்.


"உணவிற்காக ஒரு ஏலப் போட்டி ஏற்பட்டு, அதைச் சமாளிக்கும் அளவுக்கு ஐரோப்பா வலுவாக இருந்தால், ஐரோப்பாவில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அத்தகைய சூழ்நிலையில் நாம் யாரிடமிருந்து உணவைப் பறித்து வாங்குகிறோம்?"


"வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் இதற்காக மிக உயர்ந்த விலையைக் கொடுக்கும் சூழல் இதுவாகும், அவர்களால் அந்தப் போட்டியைத் தாங்க முடியாது."


இது "உணவு வாங்கும் திறன், உணவுப் பற்றாக்குறை மற்றும் பசி" ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று யாரா தலைவர் கூறினார்.


பிரிட்டனில், உணவு மற்றும் பானங்களின் கூட்டமைப்பு சமீபத்தில் உணவு விலை உயர்வு டிசம்பர் மாதத்திற்குள் 10% ஐ எட்டக்கூடும் என்று கணித்துள்ளது.


செப்டம்பர் மாதத்தில் உணவு விலை 4.6% ஆக உயரக்கூடும் என்றும், ஆண்டின் பிற்பகுதியில் இது இன்னும் அதிகமாகக்கூடும் என்றும் இங்கிலாந்து வங்கி இந்த வாரம் தெரிவித்துள்ளது.


மத்திய கிழக்கு மோதலின் கூட்டு விளைவுகளால் 2026 ஆம் ஆண்டில் கூடுதலாக 45 மில்லியன் மக்கள் கடும் பசிக்கு தள்ளப்படலாம் என்று ஐநா உலக உணவுத் திட்டம் மதிப்பிட்டுள்ளது.


ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில், உணவுப் பாதுகாப்பின்மை 24% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


லூயிஸ் பார்ருச்சோ

கடந்த 2022-ஆம் ஆண்டு யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு, கச்சா எண்ணெய் விலைகள் இப்போது அதன் உச்சபட்ச அளவை எட்டியுள்ளன.


இந்நிலையில், இரான் மீது மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ராணுவம் அதிபர் டொனால்ட் டிரம்பிடம் விளக்கமளிக்க உள்ளதாக வெளியாகும் செய்திகள், உலகளாவிய கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளன.


அக்ஸியோஸ் செய்தி இணையதளத்தின்படி, இரானுடனான பேச்சுவார்த்தையில் நிலவும் சிக்கலைத் தீர்க்க "குறுகிய மற்றும் சக்திவாய்ந்த" தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்களை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு வகுத்துள்ளது.


இது குறித்துத் தெரிந்துகொள்ள அமெரிக்க ராணுவம் மற்றும் வெள்ளை மாளிகையை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது.


ஆனால், இதன் தாக்கம் எரிபொருள் விலைகளைத் தாண்டியும் வெகுவாக விரிவடைகிறது. கச்சா எண்ணெய் விலைகள் உயரும்போது, அதன் விளைவுகள் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் பரவுகின்றன. அதனால் இதன் செயல்முறை ஒரு சங்கிலித் தொடர் போன்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


எண்ணெய் விலையேற்றம் என்பது "எண்ணெய் சார்ந்தது மட்டுமின்றி, எண்ணெய் தொடர்பான பொருட்கள், பணவீக்கம் மற்றும் அடிப்படையில் நமது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு காரணியிலும் ஒரு தொடர் விளைவை ஏற்படுத்துகிறது" என்கிறார் கெப்ளர் தரவு பகுப்பாய்வுத் தளத்தின் மூத்த எண்ணெய் ஆய்வாளர் நவீன் தாஸ்.


"மீண்டும் பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் குறித்த செய்திகளை நாம் அதிகம் பார்க்கத் தொடங்கலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.


1. அதிகரிக்கும் எண்ணெய் விலை

இதுதான் தொடக்கப் புள்ளி. விநியோகப் பற்றாக்குறை, உலக அரசியல் மோதல்கள் அல்லது சந்தை ஊகங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்கின்றன.


ஐரோப்பிய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 126 டாலருக்கும் அதிகமாக, அதாவது கிட்டத்தட்ட 7% திடீரென உயர்ந்தது. பின்னர் மீண்டும் சுமார் 116 டாலராகக் குறைந்தது. சமாதான முயற்சிகள் முடங்கியதாலும், ஹோர்மூஸ் நீரிணை திறம்பட மூடப்பட்டிருப்பதாலும் இந்த வாரம் விலைகள் அதிகரித்துள்ளன, இது வாகன ஓட்டிகளுக்கான எரிபொருள் செலவை உயர்த்தியுள்ளது.


இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பு, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 70 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இது வியாழக்கிழமையின் உச்ச விலையை விட 80% குறைவாகும்.


பெட்ரோல் மற்றும் டீசலில் கச்சா எண்ணெய் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், மொத்த விற்பனை விலை உயர்வு உடனடியாக விற்பனை நிலையங்களிலும் எதிரொலிக்கிறது.


ஜூன் மாத டெலிவரிக்கான தற்போதைய பிரெண்ட் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தம் வியாழக்கிழமை 23:00 ஜிஎம்டி நேரத்தில் முடிவடைகிறது. அதே நேரத்தில் அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படும் ஜூலை மாத ஒப்பந்தம் ஒரு பீப்பாய் சுமார் 110 டாலராக இருந்தது.


ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் என்பது எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு சொத்தை நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்குவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு செய்யப்படும் ஒப்பந்தங்கள் ஆகும்.


எண்ணெய் எரிபொருளுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாகப் பலதரப்பட்ட தயாரிப்புகளுக்கான முக்கிய மூலப்பொருளாகவும் உள்ளது. பட மூலாதாரம்,Getty Images

2. எண்ணெய் தொடர்பான பொருட்களின் விலை உயர்வு

எண்ணெய் எரிபொருளுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாகப் பலதரப்பட்ட தயாரிப்புகளுக்கான முக்கிய மூலப்பொருளாகவும் உள்ளது.


இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது விமான எரிபொருள், பிளாஸ்டிக் மற்றும் பேக்கேஜிங், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் போன்ற தொழில்துறைகள் முழுவதும் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது.


இந்த மோதலின் விளைவாக வீடுகளுக்கான எரிசக்தி கட்டணங்கள், உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் விமானக் கட்டணங்கள் உயரக்கூடும் என்று அரசாங்கங்கள் எச்சரித்துள்ளன.


சில விமான நிறுவனங்கள் ஏற்கனவே கட்டணங்களை உயர்த்தி வருகின்றன அல்லது சில வழித்தடங்களை ரத்து செய்து வருகின்றன. உரங்களின் விலையும் அதிகரித்து வருகிறது, இது இறுதியில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும்.


வெல்த் கிளப் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உத்தி நிபுணரான சுசன்னா ஸ்ட்ரீட்டர், இந்தச் செலவுகள் அடுத்த ஆண்டு வரை உயர்ந்த நிலையிலேயே நீடிக்கக்கூடும் என்கிறார்.


இதுகுறித்துப் பேசிய அவர், "உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் யூரியா ஏற்றுமதி முடக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அந்த பொருட்களை வாங்கி வைக்காத உலகெங்கிலும் உள்ள விவசாயிகளுக்குச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன" என்று கூறுகிறார்.


மேலும், "இந்தச் செலவுகள் விநியோகச் சங்கிலிகள் வழியாகப் பரவி, இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் அடுத்த ஆண்டிலும் அன்றாடப் பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதே கவலையாக இருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.


வெல்த் கிளப் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணரான சுசன்னா ஸ்ட்ரீட்டர் இதுகுறித்துக் கூறுகையில், இந்தச் செலவுகள் அடுத்த ஆண்டு வரை உயர்ந்த நிலையிலேயே நீடிக்கக்கூடும் என்கிறார். 

பட மூலாதாரம்,Saqib Majeed / SOPA Images / LightRocket via Getty Images

படக்குறிப்பு,இந்தியாவின் காஷ்மீர் முழுவதும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில், இரான் போர் காரணமாக நீடிக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் வாகன ஓட்டிகள் பதற்றமடைந்து எரிபொருளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

3. அதிகரிக்கும் போக்குவரத்து செலவு

உணவு, நுகர்வோர் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் என அனைத்தும் போக்குவரத்தைச் சார்ந்தே இருப்பதால், எரிபொருள் விலை உயர்வு நேரடியாகக் கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்துச் செலவுகளை உயர்த்துகிறது.


உலகளாவிய ரீதியில் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான செலவு அதிகரிக்கும் போது, வணிக நிறுவனங்கள் வழக்கமாக அந்தச் செலவுகளை நுகர்வோர் மீது சுமத்துகின்றன. இது சில்லறை விற்பனை விலையில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


4. அதிகரிக்கும் பணவீக்கம்

அதிகரித்து வரும் இந்த செலவுகள் உலகப் பொருளாதாரம் முழுவதும் ஒன்று சேர்கின்றன.


எரிசக்தி விலை அதிகமாகும்போது, தொழிற்சாலைகளை இயக்குவது முதல் பொருட்களைக் கொண்டு செல்வது வரை வணிகங்கள் இயங்குவதற்கு அதிக செலவுகளை எதிர்கொள்கின்றன.


அதேபோல், உணவு விலைகளும் அதிகரிக்கின்றன. ஏனெனில் விவசாயம், பேக்கேஜிங் மற்றும் விநியோகம் ஆகியவை எரிபொருளையும் எண்ணெயுடன் தொடர்புடைய உரங்களையும் சார்ந்துள்ளன.


மேலும், ஆடைகள் முதல் மின்னணு சாதனங்கள் வரை அன்றாடப் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் அதிக செலவாகிறது.


ஒரே நேரத்தில் பல துறைகளில் இந்த விலை உயரும்போது, விலையழுத்தம் மிகவும் பரவலாகவும் நீடித்ததாகவும் மாறுகிறது.


இந்த முறை குறுகிய கால உயர்வாக இல்லாமல் நீண்ட காலத்திற்குத் தொடரும்போது, பொருளாதார நிபுணர்கள் இதனைப் பணவீக்கம் என்று விவரிக்கிறார்கள். இது அத்தியாவசியச் செலவில் ஏற்படும் பொதுவான, நீடித்த உயர்வாகும்.


"முழு உலகமும் இதை எதிர்கொள்கிறது, சில நாடுகள் அதிகமாகவும், மற்றவை குறைவாகவும் பாதிக்கப்படுகின்றன" என்கிறார் ஏபிசிஇ ஆலோசனை நிறுவனத்தை வழிநடத்தும் பிரேசில் நாட்டு பொருளாதார நிபுணர் ஆண்ட்ரே பெர்பெயிட்டோ.


"உதாரணமாக, பிரேசில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று கூறும் அவர், சமீபத்திய மாதங்களில் பணவீக்கம் தொடர்ந்து மத்திய வங்கியின் இலக்கு வரம்பை விட தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.


மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக, இது இந்த ஆண்டின் இறுதியில் 4.86% ஆக இருக்கும் என்று அந்நாட்டின் மத்திய வங்கியின் சமீபத்திய கணிப்பு தெரிவிக்கிறது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,எண்ணெய் விலை உயர்வு உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியைத் தூண்டக்கூடும் என்று நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களிடையே கவலை நிலவுகிறது.

5. அன்றாட வாழ்வில் ஏற்படும் தாக்கம்

குடும்பங்களைப் பொறுத்தவரை, இது இறுதியாகப் பல வழிகளில் அன்றாட வாழ்க்கையில் ஊடுருவுகிறது. மளிகைப் பொருட்களின் விலை உயர்கிறது, பயணச் செலவுகள் அதிகமாகின்றன மற்றும் மின்சாரம், எரிவாயு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகளும் அதிகரிக்கின்றன.


அன்றாடச் செலவுகள் அதிகரிக்கும்போது, தொழிலாளர்கள் அதனை சமாளிக்க அதிக ஊதியம் கேட்கலாம். இது மேலும் பணவீக்க அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்கு பதிலாக, மத்திய வங்கிகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும். இதனால் வீட்டு கடன்கள் மற்றும் பிற கடன்களுக்கான செலவு அதிகமாகி, செலவு செய்வதையும் கடன் வாங்குவதையும் தடுக்கும்.


பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற சில நாடுகளில், எரிபொருளைச் சேமிக்கவும் செலவுகளைக் குறைக்கவும் பள்ளிகளை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.


"இவை அனைத்தும் பொருளாதார மந்தநிலைக்கும், உலகளாவியப் பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கின்றன" என்று கூறுகிறார் பெர்பெயிட்டோ .


சர்வதேச நாணய நிதியம் தனது சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இரான் மோதல் உலகப் பொருளாதாரத்தை அதன் "பாதையிலிருந்து திசைதிருப்பும்" அபாயம் இருப்பதாகவும், நீண்டகால மோதல் உலகளாவியப் பொருளாதார வீழ்ச்சிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.


மேலும், அதிகப்படியான பணவீக்கத்திற்குப் பதிலடியாக வட்டி விகிதங்களை உயர்த்துவதில் மத்திய வங்கிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது.


இருப்பினும், இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்றால், "சில வாரங்களுக்குச் சிறிய அளவிலான பொருளாதாரச் சிரமத்தைப்" பொறுத்துக் கொள்வதில் நியாயம் இருப்பதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.


இதுகுறித்துப் பேசிய அவர், "நீண்ட காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளும்போது, குறுகிய காலக் கணிப்புகள் குறித்து நான் பெரிதாகக் கவலைப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.

 ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்      



டிஜிசென் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான டிஜிட்டல் செக்குறிட்டி பயிற்சி முகாம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (30) இடம்பெற்றது.
அன்மைக்காலமாக அரச திணைக்களங்களின் தகவல்கள் மற்றும் தனிநபர் சமூக வலைத்தளங்கள் வங்கிக்கணக்குகள் மீதான ஹக்கர்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இதில் இருந்து அரச அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக்கொள்வது தொடர்பில் தெளிவூட்டும் செயலமர்வாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வளவாளர்களாக ஏ.எம்.முஜாகித் எம்.ஏ.எம்.முர்சித் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.அகீல் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இதன்போது அரச உத்தியோகத்தர்கள் இதுவரையில் தாம் எதிர்கொண்ட ஹக்கர்களின் தாக்கம் தொடர்பில் வெளிப்படுத்தினர்.
இவற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பில் வளவாளர்கள் தெளிவூட்டினர்.

மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி (மே 1) உலக அளவில் கொண்டாடப்படுவதாகும்.[1]


மே தின வரலாறு

தொழிலாளர் போராட்டம்


1848 ஆம் ஆண்டு இலண்டனில் உள்ள கென்னிங்டன் காமனில் நடந்த சாசன இயக்கம் கூட்டத்தின் புகைப்படம்.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது, 10 மணி நேர வேலை கோரிக்கையாகும்.


பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.


ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்


2013 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில், சர்வதேச தொழிலாளர் தின ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.


ரஷ்யாவில் மே தினம்

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில்

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.


தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.


சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு சூன் 21, 1886இல் துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.[2]


அமெரிக்காவின் கறுப்பு தினம்

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.


அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான், இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம்


1952 மே 1 அன்று பெய்ஜிங்கில் சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டம்.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.



மே தின ஆர்ப்பாட்டம், ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் 2006.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது.


 


உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியம், சுமார் 6 தசாப்தங்களாக அங்கம் வகித்து வந்த ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் அமைப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.


ஐக்கிய அரபு இராச்சியத்தின் நீண்டகால மூலோபாய மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


ஒபெக் அமைப்பின் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாகச் செயற்படுவது, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் முடிவுகளை எடுக்கத் தமக்கு உதவும் என அந்த அமைச்சு கருதுகின்றது.


ஐக்கிய அரபு இராச்சியம் 1967 ஆம் ஆண்டு இந்த அமைப்பில் இணைந்தது. 


தற்போது ஒபெக் அமைப்பில் இருந்து வெளியேறுவதால் மொத்த உற்பத்தித் திறனில் சுமார் 15 சதவீதத்தை அந்த அமைப்பு இழக்கின்றது.


'இது ஒபெக் அமைப்பின் முடிவின் ஆரம்பம்' என எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனமான MST பினான்சியல் நிறுவனத்தின் தலைவர் சவுல் கவோனிக் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய அரபு இராச்சியத்தை தொடர்ந்து ஏனைய உறுப்பு நாடுகளும் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.


ஒபெக் அமைப்பின் தரவுகளின்படி, ஐக்கிய அரபு இராச்சியம் ஆண்டுக்கு 2.9 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்கிறது.


அத்தோடு, சவூதி அரேபியா ஒன்பது மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்து அமைப்பின் தலைமையாகச் செயற்படுகிறது.


ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, எண்ணெய் சந்தையை நிர்வகிக்கும் பாரிய சுமை இனி சவூதி அரேபியா மீது மட்டுமே விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.




 “மலேரியாவைத் தடுப்போம் - பரிசோதனை செய்துகொள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் 2026 இன்று உலக மலேரியா தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.


வெளிநாட்டு பயணங்களின் பின்னர் காய்ச்சல், தடிமல், உடல் வலி, பிளேட்லெட் எண்ணிக்கை குறைவு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மலேரியா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.


மேலும், மலேரியா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


தங்களது பாதுகாப்பை உறுதிசெய்து, மலேரியா தொற்று நாட்டிற்குள் பரவாமல் தடுப்பதில் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மலேரியா தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: - 071 2841767

 


தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தேச வாக்குப்பதிவு தரவுகளின்படி சுமார் 85% வாக்குகள் பதிவாகியுள்ளன.


சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குச் சதவிகிதத்திலே இதுவே அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் முதல் முறையாக 85 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 78 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன.


மாவட்ட வாரியான வாக்குப்பதிவு (உத்தேச வாக்குப்பதிவு தரவுகளின்படி)


அதிகமாக பதிவான 5 மாவட்டங்கள்


கரூர் 92%


சேலம் 90%


தருமபுரி - 90%


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவின் கிராமப்புறப் பகுதியில் உள்ள ஒரு குழி கழிப்பறை அல்லது 'லாங்-டிராப்' கழிப்பறையின் கோப்புப் படம்.

கழிவறை இடிந்து மலக்குழியில் 3 மணிநேரம் சிக்கிய பெண்ணுக்கு என்ன நேர்ந்தது?

தமிழ்நாடு தேர்தல்

வாக்குப்பதிவு உயர தவெக ஒரு காரணமா? இது திமுகவுக்கு பாதகமா? தேர்தல் வரலாறு தரும் படிப்பினைகள்

அமெரிக்கா இரானுடன் போர்நிறுத்தத்தை நீட்டித்த பிறகு, தலைநகர் தெஹ்ரானின் தெருக்களில் வாழ்க்கை சாதாரணமாகத் தெரிகிறது.

அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் இரான் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?


சர்க்கரையே சாப்பிடாமல் 6 வாரம் இருந்தால் எத்தகைய மாற்றம் ஏற்படும்?

End of அதிகம் படிக்கப்பட்டது

ஈரோடு - 90%


நாமக்கல் 89%


குறைவாக பதிவான 5 மாவட்டங்கள்


கன்னியாகுமரி 75%


சிவகங்கை - 76%


ராமநாதபுரம் - 76%


திருநெல்வேலி - 77%


நீலகிரி 78%


தொகுதி வாரியாக வாக்குப்பதிவு


அதிகமாக பதிவான 6 தொகுதிகள்


வீரபாண்டி - 93%


குமாரபாளையம் - 92%


கிருஷ்னராயபுரம் - 92%


குளித்தலை - 92%


பாலக்கோடு - 92%


பெருந்துறை - 92%


குறைவாக பதிவான 6 தொகுதிகள்


குளச்சல் - 74%


காரைக்குடி - 73%


மதுரை மத்திய - 73%


மதுரை வடக்கு - 72%


கிளியூர் - 71%


பாளையங்கோட்டை - 68%


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

படக்குறிப்பு,சென்னையில் வாக்கு செலுத்திய வாக்காளர் ஒருவர்

முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் நிலை (உத்தேச தரவுகளின்படி)

முதலமைச்சர் ஸ்டாலின் - கொளத்தூர் தொகுதி - 86%


தவெக தலைவர் விஜய் - பெரம்பூர் - 89%, திருச்சி கிழக்கு - 81%


எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி தொகுதி - 91%


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - காரைக்குடி தொகுதி - 73%


ஷார்ட் வீடியோ

Play video, "தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் - முதலமைச்சர் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு", கால அளவு 0,34

00:34


காணொளிக் குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் - முதலமைச்சர் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு

திருவண்ணாமலை அருகே ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை வேட்பாளரின் முகவர் சேதப்படுத்தியதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.


தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தேர்தல் அதிகாரி தர்ப்பகராஜ், தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நிகழ்விடத்தை பார்வையிட்டனர்.


வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக சுயேச்சை வேட்பாளர் மற்றும் அவரது இரு முகவர்களை போலீசார் கைது செய்தனர்.


ஷார்ட் வீடியோ

Play video, "விசில்' ஊதிய காவலர் எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகி", கால அளவு 1,46

01:46


காணொளிக் குறிப்பு,

தலைவர்கள் வாக்களிப்பு

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் தேனாம்பேட்டையில் வாக்களித்தார்.


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.


நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். நடிகர் அஜீத், சென்னையின் திருவான்மியூரில் 7 மணிக்கு முன்னதாகவே தனது வாக்கைச் செலுத்திவிட்டுச் சென்றார்.


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை, தேனாம்பேட்டையில் தனது வாக்கினைச் செலுத்தினார்.


அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சிவகங்கையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கை பதிவு செய்தார்.


காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையின் நீலாங்கரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சென்னையின் 16 தொகுதிகளில், 1 மணி நிலவரப்படி 54.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சென்னை

'தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென' பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று காலை பதிவிட்டுள்ளார்.


காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 85% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் உத்தேச தரவுகள் தெரிவிக்கின்றன.


தமிழ்நாட்டில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


அதேபோன்று, https://elections.tn.gov.in/, votervazhikatti.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம்.


தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.


கோவையில் அமைக்கப்பட்ட தனித்துவமான வாக்குச் சாவடிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ராம்நகர் வாக்குச் சாவடியில் தனித்துவமான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது.


பெண்கள் மட்டும் பணிபுரியும் பிங்க் வாக்குச் சாவடி, இளைஞர் வாக்குச் சாவடி, பசுமை வாக்குச் சாவடி மற்றும் மாதிரி வாக்குச் சாவடி ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளர்களின் குழந்தைகள் விளையாட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.


இந்த 4 விதமான வாக்குச் சாவடிகளும் ஓரே இடத்தில் அமைக்கப்பட்டிருந்தன. வாக்களிப்பவர்கள் வாக்குச் சாவடி வாயிலில் இருந்து செல்பி எடுத்துக்கொள்ள பிங்க் வாக்கு சாவடியில் செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பசுமை வாக்கு சாவடியில், வாக்காளர்களை கவரும் விதமாக தென்னை ஓலையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.


மேலும் வாக்களிக்க வருபவர்களின் குழந்தைகள் விளையாட தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டு, குழந்தைகள் படம் வரையவும், விளையாடவும் உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தது.


வாணியம்பாடியில் தவெக- திமுக இடையே மோதல்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

படக்குறிப்பு,வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் இடையேயான மோதல் காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


'கள்ள ஓட்டு போடப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் தலைமையிலான நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.


தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாம்ளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, 'கள்ள ஓட்டு போட்டவர் யார் என்பது சிசிடிவி பதிவு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக' உறுதி அளித்தார்.


இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதனால் வாக்குப்பதிவு மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.


ராமநாதபுரம்: வாக்காளர்களின் செல்போன்களை சேகரித்த அதிகாரிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

படக்குறிப்பு,ராமநாதபுரம் நகர் பகுதி

ராமநாதபுரம் நகர் பகுதியில் வாக்களிப்பதற்கு முன்பாக வாக்காளர்களிடம் செல்போன்களை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர் திரும்ப வழங்கப்பட்டது.


தேர்தலில் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் மையத்துக்குள் செல்போன்களை எடுத்துச் சென்று வாக்குப் பதிவு செய்வதை வீடியோவாக பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது.


இந்நிலையில், ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேர்தல் அலுவலர்கள் தன்னார்வலர்களைப் பணியில் அமர்த்தி வாக்கு மையத்துக்கு செல்வதற்கு முன்பு வாக்காளர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்துவிட்டு வாக்கு செலுத்த அனுமதித்தனர்.


வாக்கு செலுத்திய பின்னர் அவர்களுடைய செல்போன் நம்பரை கூற சொல்லி, அதனைச் சரிபார்த்து செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்தனர்.


'கடைசி வாய்ப்பு'

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

படக்குறிப்பு,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் இன்பன் உதயநிதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் மனைவி துர்கா, மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரன் இன்பன் உதயநிதியுடன் வந்து, சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.


இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், சமத்துவம், சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் மக்களின் வாக்குகள் அமைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். அவர் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.


அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

படக்குறிப்பு,நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் ஒரு நிலையான அரசு, வளர்ச்சி, நலத்திட்டங்கள் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணியே ஆட்சியை தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அமையும் புதிய அரசு பட்ஜெட் போடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அமைச்சர்கள், அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள். தமிழகத்துக்கு தேவையான கடனை வாங்கி பட்ஜெட் போடுவார்கள். வருவாய் இருந்தால் கடன் வாங்கலாம், தவறில்லை" என்றார்.


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

படக்குறிப்பு,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை, தேனாம்பேட்டையில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மனைவி கயல்விழியுடன் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கினை பதிவு செய்தார். சீமான், இந்த தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.


வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "ஒற்றை விரலால் பெரும் மாறுதலை ஏற்படுத்த முடியும். வாக்களிப்பது, நம்மிடம் இருக்கும் கடைசி மதிப்புமிக்க உரிமை. தலைமையை தேர்ந்தெடுக்க நம்மிடம் இருக்கும் கடைசி வாய்ப்பு. மக்கள் அதை தவறவிடக் கூடாது." என்றார்.


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

படக்குறிப்பு,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வாக்களித்தார்.

அரசியல் கட்சிகளின் நிலவரம்

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி போட்டியிடுவதுடன், விஜயின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. அதுதவிர ராமதாஸ்-சசிகலா கூட்டணியும் களத்தில் உள்ளது.


காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.



தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

படக்குறிப்பு,சென்னை, மயிலாப்பூரில் வாக்களித்த தமிழிசை சௌந்தரராஜன்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திமுக 166 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்குத் தலா இரண்டு தொகுதிகள், மனிதநேய எஸ்டிபிஐ மற்றும் தமிழர் தேசம் ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி என திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8, தேமுதிகவுக்கு 10, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


அதேநேரம், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்களும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 இடங்களும், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் 5 இடங்களில் போட்டியிடுகின்றது. ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஒரு தொகுதி), புதிய நீதிக் கட்சி (ஒரு தொகுதி), புரட்சி பாரதம் (ஒரு தொகுதி) உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் போட்டியிடுகின்றன.


புதிதாகக் களமிறங்கி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. எடப்பாடி தொகுதியில் அக்கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தற்போது அத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமாருக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார்.


சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியில் ஆண்கள் 117 பேரும், பெண்கள் 116 பேரும், திருநங்கை ஒருவரும் போட்டியிடுகின்றனர்.


சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், ராமதாஸ் மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி 120 தொகுதிகளில் போட்டியிடுகிறது.


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026பட மூலாதாரம்,ANI

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 


https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...


 கடற்படை முற்றுகை (Naval Blockade) என்பது ஒரு நாடு, எதிரி நாட்டின் துறைமுகங்கள், கடலோரப் பகுதிகள் அல்லது குறிப்பிட்ட கடல் வழிகளைத் தனது போர்க்கப்பல்களைக் கொண்டு சுற்றி வளைத்து, கடல்வழிப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தும் ராணுவ நடவடிக்கையாகும். இது, எதிரி நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி, வர்த்தகம் மற்றும் ஆயுத விநியோகத்தைத் தடுக்கும் ஒரு போர் உத்தியாகும். 

Key Cases and Legal Precedents
  • The Mavi Marmara Incident (2010): A central modern case involving Israel's blockade of the Gaza Strip, often discussed regarding whether naval blockades are permissible in non-international armed conflicts and their impact on humanitarian access.
  • The Palmer Report (2011): A UN report analyzing the legality of Israel's naval blockade of Gaza, examining whether it met the standards of "traditional law of naval blockade".
  • The Madleen Incident (2010): Often cited regarding the right to intercept vessels suspected of attempting to breach a lawfully established blockade, emphasizing that the vessel's destination is key.
  • Historical US Blockade of Cuba (1962): A significant case discussed in legal contexts to determine if the "quarantine" (blockade) was a proportional and legal use of force to prevent the importation of offensive weapons.
Key Legal Principles
  • Declaration and Notification: The blockade must be officially announced and notified to all parties.
  • Effectiveness: A blockade is only valid if it is actually effective in stopping entry/exit (not a "paper block").
  • Humanitarian Exception: Blockades cannot be used to starve civilians, and basic supplies must be allowed.

கடற்படை முற்றுகையின் முக்கிய அம்சங்கள்:

போக்குவரத்துத் தடை: துறைமுகங்களுக்குள் வரும் மற்றும் வெளியேறும் அனைத்து கப்பல்களும் (வணிகக் கப்பல்கள், எண்ணெய் டேங்கர்கள்) தடுக்கப்படும்.

பொருளாதார முடக்கம்: உணவு, எரிபொருள் (எண்ணெய், இயற்கை எரிவாயு), மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைத் தடுத்து எதிரி நாட்டைப் பொருளாதார ரீதியாகப் பலவீனப்படுத்துதல்.

ஆயுதத் தடை: இராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் கடல வழியாக வருவதை முழுமையாகத் தடுத்தல்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்: முற்றுகையிடப்பட்ட பகுதியில் நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அல்லது கைப்பற்றப்படும் அபாயம் ஏற்படும். 


எடுத்துக்காட்டாக, ஹோர்மூஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் பாதைகளில் கடற்படை முற்றுகை நடத்தப்படும்போது, அது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.



கப்பலை முடக்குதல் என்பது, ஒரு துறைமுகத்தில் அல்லது கடல் பகுதியில் உள்ள கப்பலை அங்கிருந்து நகரவிடாமல் தடுப்பது அல்லது அதன் இயக்கத்தை நிறுத்தி வைப்பதாகும். இது பொதுவாக வர்த்தக ரீதியான தடைகள், சட்ட நடவடிக்கைகள், பாதுகாப்பு காரணங்கள் அல்லது துறைமுக நெரிசல் காரணமாகக் கப்பலை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கும் (Detention/Blockade) செயலாகும். 


முக்கிய அம்சங்கள்:

சட்ட நடவடிக்கை: துறைமுக விதிகளை மீறுதல், அபராதம் செலுத்தாதது அல்லது சட்ட சிக்கல்கள் காரணமாக கப்பல் முடக்கப்படலாம் (Detention).

பொருளாதாரத் தடை: முற்றுகை போன்ற சூழல்களில், ஒரு நாட்டின் கப்பல்களை வெளிவர விடாமல் தடுப்பதன் மூலம் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவது.

பராமரிப்பு/பாதுகாப்பு: பழுது பார்த்தல் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் கப்பல்கள் துறைமுகங்களில் முடக்கி வைக்கப்படலாம்.

 கப்பலை முடக்குதல் (Immobilizing or Crippling a ship) என்பது ஒரு கப்பல் தனது பயணத்தைத் தொடர முடியாமலோ அல்லது கடலில் இயங்க முடியாமலோ செய்வதைக் குறிக்கிறது. 



இது பொதுவாக இரண்டு சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது:

தாக்குதல் அல்லது முற்றுகை: போர் அல்லது மோதல்களின் போது, ஏவுகணைகள், ட்ரோன்கள் அல்லது சிறிய படகுகள் மூலம் கப்பலின் எஞ்சின் (Engine) அல்லது சுக்கான் (Rudder) போன்ற முக்கியமான பகுதிகளைத் தாக்கி அதை நகர விடாமல் செய்வது. உதாரணமாக, செங்கடலில் ஹூதி படைகள் சரக்குக் கப்பல்களைத் தாக்கி அவற்றை முன்னோக்கிச் செல்ல முடியாமல் முடக்கிய நிகழ்வுகளைக் கூறலாம்.

பராமரிப்பு அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கை: ஒரு கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும்போது அல்லது சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும்போது, அதிகாரிகள் அந்த கப்பலைத் துறைமுகத்தை விட்டு வெளியேற விடாமல் தடுத்து வைப்பதையும் "முடக்குதல்" என அழைக்கலாம். 


சுருக்கமாகச் சொன்னால், ஒரு கப்பலின் இயந்திரச் செயல்பாட்டைச் செயலிழக்கச் செய்து, அதைத் தனது கட்டுப்பாட்டை இழக்கச் செய்வதே "முடக்குதல்" ஆகும். 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.