Showing posts with label SriLanka. Show all posts



 இரானின் அணுசக்தி திட்டங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இரானின் ஆயுதத் திட்டத்தின் 'இதயத்தை' குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார்.


"இரான் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தின் மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார். இரான் தலைநகரான டெஹ்ரானிலிருந்து 225 கி.மீ தெற்கே உள்ள நடான்ஸ் என்ற நகரில் உள்ள இரானின் முக்கிய செறிவூட்டல் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக நெதன்யாகு கூறினார்.


ஏப்ரல் 2021 இல், அதே வசதியின் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியது.


"அணுகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள" இரானிய விஞ்ஞானிகளை இஸ்ரேல் குறிவைத்ததாக கூறியுள்ள நெதன்யாகு, தாக்குதல்கள் "எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்" என்று எச்சரித்தார்.


விளம்பரம்


இஸ்ரேல் - இரான், நெதன்யாகுபட மூலாதாரம்,Reuters

புரட்சிகர காவல்படை தலைமையகம் மீது தாக்குதல் - இரானிய அரசு ஊடகம்

டெஹ்ரானில் உள்ள புரட்சிகர காவல்படை தலைமையகம் இஸ்ரேலிய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

 ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா விமான விபத்து, குஜராத்

'30 விநாடிகளில் முடிந்துவிட்டது' - ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி கூறியது என்ன?

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் - நிபுணர்கள் விளக்கம்

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் - நிபுணர்கள் விளக்கம்

ஆமதாபாத்: ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 204 பேர் பலி - என்ன நிலவரம்?

ஆமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலி - ஏர் இந்தியா நிறுவனம் கூறியது என்ன?

ஆமதாபாத் விபத்து, மேடே அழைப்பு, ஏர் இந்தியா, குஜராத்

மேடே அழைப்பு என்றால் என்ன? ஆமதாபாத் விமான விபத்துக்கு முன் விமானி அதை குறிப்பிட்டது ஏன்?

End of அதிகம் படிக்கப்பட்டது

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இரான் ஆயுதப்படைகளின் ஒரு கிளை மட்டுமின்றி, நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாகும்.


மேலும், டெஹ்ரானுக்கு அருகில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


டெஹ்ரானின் வடகிழக்கில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு நடத்தும் நூர் நியூஸை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. வெடிப்புகளுக்கான காரணம் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.


டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேல் தாக்கியதாக இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


டெஹ்ரானில் உள்ள மக்களிடமிருந்தும் வெடிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இரானிய அரசு ஊடகங்களின்படி, தெஹ்ரானின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


டெஹ்ரானின் இமாம் காமனெயி சர்வதேச விமான நிலையம் இரானிய தலைநகரிலிருந்து தென்மேற்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.


மேடே அழைப்பு என்றால் என்ன? ஆமதாபாத் விமான விபத்துக்கு முன் விமானி அதை குறிப்பிட்டது ஏன்?

12 ஜூன் 2025

நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் - இந்தியாவை உலுக்கிய மோசமான விமான விபத்துகள் பற்றி தெரியுமா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் - இரான், நெதன்யாகுபட மூலாதாரம்,Reuters

அமெரிக்கா தாக்குதலில் ஈடுபடவில்லை - மார்கோ ரூபியோ

இரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா பங்கெடுக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.


அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவிடமிருந்து ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.


"இன்றிரவு, இஸ்ரேல் இரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்தது. இரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை, மேலும் எங்கள் முதன்மையான முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும். இந்த நடவடிக்கை அதன் தற்காப்புக்கு அவசியம் என்று அவர்கள் நம்புவதாக இஸ்ரேல் எங்களுக்குத் தெரிவித்தது. அதிபர் டிரம்பும் நிர்வாகமும் எங்கள் படைகளைப் பாதுகாக்கவும், எங்கள் பிராந்திய பங்காளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். நான் தெளிவாகச் சொல்ல வேண்டும்: இரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக் கூடாது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆமதாபாத் விமான விபத்து பற்றி இதுவரை வெளியான தகவல்கள் - முழு விவரம்

56 நிமிடங்களுக்கு முன்னர்

'30 விநாடிகளில் முடிந்துவிட்டது' - ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி கூறியது என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் - இரான், நெதன்யாகு

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"இஸ்ரேல் தாக்க தயாராக இருந்தது அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியும்"

இரானில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக புதன்கிழமை அமெரிக்க அதிகாரிகளிடம் கூறப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிகாரிகளிடம் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.


அமெரிக்கா சில அமெரிக்கர்களை இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியதற்கும், இராக்கில் உள்ள சில அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததற்கும் இதுவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


இன்று (ஜூன் 12) மதியம் 1:38 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.


பயணிகள், விமானிகள், விமானப் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் அதில் இருந்தனர். புறப்பட்ட சில நொடிகளில் அந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு மருத்துவர் விடுதி மீது விழுந்து நொறுங்கியதாக, ஒரு காவல்துறை அதிகாரி கூறியதை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.


ஏ.எஃப்.பி மற்றும் ஏபி செய்தி முகமைகளின் தகவல்படி, விமான விபத்தில் யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை என்று ஆமதாபாத் காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார்.


ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து பற்றி இதுவரை கிடைத்த தகவல்கள்

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மேகானி நகர் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். விமானத்தில் 230 பயணிகள், விமானப் பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விமானத்தில் இருந்தவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடாவை சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது - என்ன நிலவரம்?

விமான விபத்து, ஏர் இந்தியா, ஆமதாபாத், குஜராத்


ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து பற்றி இதுவரை கிடைத்த தகவல்கள்

விமானப் பயணம், எந்த சீட் பாதுகாப்பானது? 

விமானத்தில் எந்த 'சீட்' அதிக பாதுகாப்பானது என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் ஏசியை 20°C-க்கு கீழ் குளிர்விக்க தடை செய்தால்

இந்தியாவில் ஏசியை 20°C-க்கு கீழ் குளிர்விக்க தடை செய்தால் சாமானியர்களுக்கு என்ன நன்மை?

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது - என்ன நிலவரம்?

59 நிமிடங்களுக்கு முன்னர்

ஆமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கட்டுப்பாட்டு அறைக்கு விடுக்கப்பட்ட 'மேடே அழைப்பு'

விமான விபத்து, ஏர் இந்தியா, ஆமதாபாத், குஜராத்


பட மூலாதாரம்,Getty Images

விமானக் கண்காணிப்பு தளமான ஃப்ளைட் ரேடார் 24-இன் (FlightRadar24) கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.


விமான கண்காணிப்பு தரவின்படி, விமானம் தரையில் இருந்து 425 அடி உயரத்தில் இருந்தபோது கிடைத்ததுதான் கடைசி சிக்னல். அந்த உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது.


விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி 'மேடே அழைப்பு' (Mayday call) விடுத்ததாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரி தெரிவித்தார்.


(மேடே அழைப்பு என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசரக்கால சமிக்ஞை. இது முதன்மையாக விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் தகவல் தொடர்புகளில் உயிருக்கு ஆபத்தான அவசர நிலையைக் குறிக்கப் பயன்படுகிறது.)


அதன் பிறகு விமானியிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. விமானம் மேகானி நகர் என்ற குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. அது மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியதாக போலீசார் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.


ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது - என்ன நிலவரம்?

59 நிமிடங்களுக்கு முன்னர்

விமானத்தில் எந்த 'சீட்' அதிக பாதுகாப்பானது என்று உங்களுக்குத் தெரியுமா?

2 மணி நேரங்களுக்கு முன்னர்

விமான விபத்து, ஏர் இந்தியா, ஆமதாபாத், குஜராத்


பட மூலாதாரம்,@flightradar24

மத்திய ஆமதாபாத்தில் எடுக்கப்பட்ட (பிபிசியால் சரிபார்க்கப்பட்ட) காணொளிகளில், விபத்து நடந்த பகுதியில் இருந்து வானை நோக்கிப் பெருமளவிலான கரும்புகை எழுவதைக் காண முடிந்தது.


சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த மக்கள் 'முடிந்த வரை பல உயிர்களைக் காப்பாற்ற' அங்கு விரைந்ததாக பிபிசியின் ராக்ஸி காக்டேகர் கூறினார்.


தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட அவசர சேவைப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அப்பகுதியில் இருந்து உடல்கள் எடுக்கப்பட்டதை தான் கண்டதாகவும் அவர் விவரித்தார்.


உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


கீழடி விவகாரம் - மத்திய அமைச்சரின் கருத்து சர்ச்சையாவது ஏன்? பிரச்னையின் முழு பின்னணி

8 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் புகழ்பெற்ற ஹிப்-ஹாப் நட்சத்திரம் கொல்லப்பட்டது ஏன்? - கேங்ஸ்டர் பிபிசியிடம் கூறியது என்ன?

6 மணி நேரங்களுக்கு முன்னர்

'விபத்தின்போது வானிலை தெளிவாக இருந்தது'

விமான விபத்து, ஏர் இந்தியா, ஆமதாபாத், குஜராத்


பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,விபத்து நடந்த பகுதியில் இருந்து வானை நோக்கிப் பெருமளவிலான கரும்புகை எழுந்தது

அதேநேரம், விமானம் விபத்துக்குள்ளானபோது வானிலை தெளிவாக இருந்ததாக விமானப் பாதுகாப்பு நிபுணர் மார்கோ சான் கூறுகிறார்.


METAR என்றழைக்கப்படும் விமான வானிலை முன்னறிவிப்பின்படி, அந்தப் பகுதியில் மேற்பரப்பு காற்று குறைவாகவும், தெரிவுநிலை (Visiblity) ஆறு கிலோமீட்டர் தூரம் என்ற அளவிலும் இருந்தது.


இதுதொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் மோதி, "ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் என்னை அதிர்ச்சியிலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குத் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது இரங்கல்கள். பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன்" என்று கூறியுள்ளார்.


ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்த்திற்கு இரங்கல் தெரிவித்த குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், "உடனடி மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், போர்க்கால அடிப்படையில் ஏற்பாடுகளைச் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று கூறினார்.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஏர் இந்தியாவின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், "அவசர மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது, குடும்பங்களுக்குத் தகவல்களை வழங்க ஆதரவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.


ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம்.


பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் (FCDO) இந்தியாவிலும் பிரிட்டனிலும் நெருக்கடி-நிலை குழுக்களை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் வெளியுறவுச் செயலர் டேவிட் லாமி கூறியுள்ளார்.


"இன்று இந்தியாவில் நடந்த துயரமான விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் பிரிட்டன் துணை நிற்கிறது. பிரிட்டன் நாட்டவர்களும் அந்த விமானத்தில் இருந்தனர் என்பதை நாங்கள் அறிவோம். பிரிட்டன் நாட்டினருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளிக்க வெளியுறவு அலுவலகம், இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. டெல்லியிலும் லண்டனிலும் ஒரு நெருக்கடி-நிலை குழு உருவாக்கப்பட்டுள்ளது" என்று டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.



பாறுக் ஷிஹான்

ஜூன் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக  சமுத்திர தினத்தையும் ஜூன் 6 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் ஆகியவற்றை பாடசாலை மாணவர்கள் ஊடாக சமூகத்துக்கு கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல் நிகழ்வும் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் இன்று( 12)   சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திலும் அதனுடன் இணைந்த சுற்றுச்சூழல் பகுதியிலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கடல் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் அடங்கியதான விழிப்புணர்வு ஊர்வலமும் பாடசாலை சுற்றிவர உள்ள பகுதிகளில் இடம்பெற்றதுடன் ஊர்வலத்தின் இறுதியில் பாடசாலை மாணவர்களுக்கான அறிவுறுத்தல் விழிப்புணர்வுக் கூட்டம் இடம்பெற்றது. இதன் போது கடல் வளங்களின் முக்கியத்துவம் அது அசுத்தமாக்கப்படும் போது ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் சுற்றாடல் சட்டங்கள் தொடர்பிலும் மாவட்ட கடல் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர் கி. சிவகுமார்   வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்திருந்தார்.

பாடசாலையின் அதிபர் டீ.கே.எம். சிராஜ்   ஆலோசனைக்கு அமைய நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பாடசாலை பிரதி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ்   தலைமை வகித்ததுடன் இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.பி.எம். பௌசான்  இந்நிகழ்வுகளை நெறிப்படுத்தியிருந்தார். மேலும் இந்நிகழ்வில் பாடசாலை பகுதித் தலைவர்காளான யூ.கே.எம். முபாறக், ஏ.எம்.எம். ஸாஹிர் மற்றும் ஏ.ஜி.எ. அஜ்மல் ஆகியோருன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். 


 

பாறுக் ஷிஹான்


தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600  பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு  புதன்கிழமை(11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த  நினைவு தூபியில் நடைபெற்றது.

1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 காவல்துறை அதிகாரிகளின் நினைவாக  அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது  கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர   உள்ளிட்ட  பொலிஸ்  உயரதிகாரிகள்   பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்  பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும்  கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின்  குடும்பங்களில் உள்ள சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்   வழங்கும் செயற்பாடுகள்  இதன் போது முன்னெடுக்கப்பட்டன.

இது தவிர நிகழ்வின் ஆரம்பத்தில்  கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவினால்    பொலிஸ் கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன்  உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை ,பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, உள்ளிட்ட பல பொலீஸ் நிலையங்களை முற்றுகையிட்ட  புலிகள் சகல சிங்கள முஸ்லிம் பொலீசார்களையும் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள். அதன் பின்பு திருக்கோவில் பகுதியில் உள்ள ரூபஸ் குளம்  காட்டுப் பகுதியில் சகல பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.



 ( வி.ரி. சகாதேவராஜா)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ” கிழக்கின் கவிக்கோர்வை” தொகுப்பு நூல் அறிமுக  விழா நேற்று செவ்வாய்க்கிழமை(10) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ,பிரதம விருந்தினராக திருமதி சுஜாதா குலேந்திரகுமார்  (மேலதிக செயலாளர் கொள்கை திட்டமிடல் மற்றும் செயல்திறன் மீளாய்வு) கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு இசுருபாய பத்தரமுல்ல) கலந்து சிறப்பித்தார்.

கௌரவ விருந்தினர்களாக ரி.ஜே அதிசயராஜ் ( பிரதேச செயலாளர் கல்முனை வடக்கு) ,ஆர் .இளங்குமுதன் (மாகாணப் பணிப்பாளர் கிராமிய அபிவிருத்தி திணைக்களம்) ,மற்றும்சிறப்பு விருந்தினர்களாக  உமா வரதராஜன் (சிரேஸ்ட எழுத்தாளர்) ,கவிஞர் சோலைக்கிளி ( சிரேஸ்ட எழுத்தாளர்) ,அப்துல் ரசாக் (மொழித்துறை விரிவுரையாளர் இலக்கியவியலாளர்கள் எழுத்தாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெருமளவான கவிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டது ஒரு சிறப்பம்சமாக அமைந்தது.

 “கிழக்கின் கவிக்கோர்வை” எனும் கவிதை நூலிலே 332 கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கவிஞர்களது கவிதை படைப்புகள் உள்ளடங்கிய ஒரு நூலாக இது அமைய பெற்றிருப்பதும் வரலாற்றில் ஒரு புதிய நிகழ்வாக இதனை குறிப்பிடலாம். 

கிழக்கு மாகாணத்தில் உருவான எல்லா கவிஞர்களது கவிதைகளையும் கோர்த்து அதனை புதுமை ஏற்படுத்தி இந்த மாகாணத்தின் புகழைப் பரப்பிட வேண்டும் என்ற அவாவில் ஆயிரம் கவிதைகளை ஆவது கொண்டதொரு தொகுப்பாக இதனை கோர்த்திடவே கிழக்கு மாகாண பணிப்பாளரது முயற்சி இருந்தது, அதற்கான தேடல்கள் தொடர்ந்தாலும் கால நேரம் அந்த தேடலுக்கு ஒரு காற் புள்ளியை இட்டு இருக்கிறது .இருந்தாலும் 332 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞர்களது கவிதை தொகுப்பை இன்று வெளியிட்டதில் கிழக்கு மாகாணம் பெருமை கொள்கின்றது.

 


( வி.ரி.சகாதேவராஜா)


திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் .

இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அவர் 2025-06-09 அன்று  கடமைகளை பொறுப்பேற்றார், 
அச்சமயம் கல்வி பணியக உத்தியோகத்தர்களுடன் இரு பணிப்பாளர்களும் பரஸ்பரம் கலந்துரையாடினர்.

இந்நியமனமானது தற்போதைக்கு பதில் கடமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) பதவியையும் வகிப்பார்.

இதேவேளை, திருகோணமலை கல்வி வலயத்தின் வலய கல்விப் பணிப்பாளராகவிருந்த தினகரன் ரவி மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை புதன்கிழமை பதவியேற்பார்.

 இலங்கை கல்வி நிருவாக சேவை தரம்1 அதிகாரியான செல்லத்துரை புவனேந்திரனுக்கான நியமனக்கடிதம்  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.

காரைதீவைச்சேர்ந்த இவர் ,2009.09.09இல் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியில் ஆசிரிய நியமனம்பெற்றதுடன் கல்விச்சேவையில் இணைந்துகொண்டார்.

அரச சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின்படி இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் வகுப்புக்கு 2021.03.23 முதல் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவர் 2009 இல் இலங்கை கல்வி நிருவாக சேவையில் இணைந்து கல்முனை கல்வி வலயத்தில் கடமையாற்றிய பின்னர் ,2010 முதல் 2018 வரை சம்மாந்துறை கல்வி வலயத்தில் கல்வி அபிவிருத்தி திட்டமிடல்நிர்வாகம் போன்ற பிரிவுகளில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி, 2019 இல் மீண்டும் கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்று 2020.04.16 முதல் கல்முனை கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்தார் . 

இவர் ஆரம்பக்கல்வியை காரைதீவு இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலையிலும் ,இடைநிலைக்கல்வியை விபுலாநந்த மத்தியகல்லூரியிலும் ,கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியிலும் பயின்று, கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப்பட்டதாரியாகி ,பிரான்சில் தனது கல்வித்திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தில் முதுநிலைமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

 


பாறுக் ஷிஹான்

 
நீண்ட காலமாக டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களாக பணியாற்றிய 640 பேருக்கு சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் சுகாதார சேவை உதவியாளர் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்) நியமனத்தினைப் பெற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு இணைப்புச் செய்யப்பட்ட 26 பேரும் தங்களது கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

குறித்த ஊழியர்களுக்கான Orientation Programme திங்கட்கிழமை (09) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. நிருவாகப் பிரிவினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் உட்பட பிராந்திய பிரிவுத்தலைவர்கள், நிருவாக உத்தியோகத்தர் திருமதி எம் எஸ் வாஜிதா, , பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ரீ.எம.இனஷாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


வி.சுகிர்தகுமார்                    


 திருக்கோவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழரசுக்கட்;சியின் உறுப்பினர்கள்; இன்று (10) பதவியேற்றனர்.
அக்கரைப்பற்றில் உள்ள அம்பாரை மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பங்குபற்றுதலுடன் அகில இலங்கை சமாதான நீதவானும் தழிரசுக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேசக்கிளை தலைவருமான ஆர்.ஜெகநாதன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அத்தோடு கட்சிக்கு விசுவாசமாக செயற்படுவதற்கான ஒப்பந்தத்திலும் உறுப்பினர்கள் கைச்சாத்திட்டனர்.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்களான ஆர்.தர்மதாசா, கலாநேசன், நந்தபாலு உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
திருக்கோவில் பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சி 10 வட்டாரங்களில் இரு வட்டாரங்களில் வெற்றி பெற்றதுடன் போனஸ் ஆசனங்கள் 4 அடங்கலாக 6 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.
இதன் அடிப்படையில் தெரிவான ஆறு உறுப்பினர்களுமே இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன் பின்னராக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் திருக்கோவில் பிரதேசம் எப்போதும் தமிழோடும் தமிழ் தேசியத்தோடும் பயணிக்கும் மக்களை கொண்ட பிரதேசம். இருப்பினும் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
இதேநேரம் பிரதேச சபை செயற்பாடுகள் தவறாகவோ அல்லது மழுங்கப்படும் நிலையிலோ செல்லுமாயின் அதற்கு எதிராக எங்கள் உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள். ஊழலற்ற நேர்மையான பிரதேசமாக செயற்படவும் நேர்மையான செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவும் பிழையான செயற்பாடுகளை தட்டிக்கேட்கவும் எமது உறுப்பினர்கள் தயங்கமாட்டார்கள் என்றார்.
சபையின் செயற்பாடுகள் தவறாக நடைபெற்றால் சட்டநடவடிக்கை எடுக்கவும் பிரதேச மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்பை வெளியிடவும் தயங்கமாட்டோம் என்றார்.

 


அக்பைரைப்பற்று புத்தக திருவிழா இன்று ஆரம்பமானது. கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வு நிலைப் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். கடந்த 5 வருடங்களாக இடம்பெறும் இப் புத்தகத் திருவிழாவின் ஏற்பாட்டாளர் Pages புத்தகசாலை செயல் இயக்குனர் சிராஜ் மசூர் என்பது குறிப்பிடத்தக்கது.





கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் மோகன் கருணாரத்ன இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இன்று (09) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


 


ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்ததாக பொய்யான அடிப்படையில் கைதியை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்

 


Rep/Faslin-KKY.

விபத்தில் 21 வயதுடைய காத்தான்குடி அப்துல்லாஹ் அகாலமரணம் 


மட்டக்களப்பு, ஆரையம்பதி, 5ம் கட்டையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச்சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு. மற்றொருவருக்கு காயம்


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டையில் நேற்றிரவு 10.10 மணியளவில் விபத்துச் சம்பவமொன்று சம்பவித்திருக்கிறது. 


இவ்விபத்தில் புதிய காத்தான்குடி -06, இராசா ஆலிம் வீதி, அல் அமீன் வீதி, (தோணா சந்தி) என்னும் முகவரியைச்சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் (21 வயது) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த இளைஞன் பிரபல சிங்கப்பூர் டெக்ஸ் உரிமையாளரான பிரபல வர்த்தகரான காத்தான்குடியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அவர்களின் புதல்வராவார்.


இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.


 மட்டக்களப்பு, கல்முனை சாலை வழியே நேற்றிரவு 10.10 மணியளவில் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த வேனும் மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையை அண்மித்த பகுதியால் பயணிக்கும் போதே நேரெதிர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


குறித்த விபத்தில் சிக்கிய வேன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாடசாலை ஒன்றினது மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த வேன் என தெரிவிக்கப்படுகிறது.


விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் காத்தான்குடியைச்சேர்ந்த இளைஞர்கள் இருவர் பயணம் செய்துள்ளதுடன், அவர்களில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கடோ கபு

#

 



ஐபிஎல் 2025 கோப்பையை முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதையடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கௌரவிக்க அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.

அப்போது மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 10 பேர் இறந்திருக்கலாம் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி ஹிந்திக்கு தெரிவித்துள்ளார்.

மைதானத்தின் வாயில்கள் திறக்கப்படாமல் இருந்ததாகவும் சிறிய நுழைவாயில் வழியாக பலரும் உள்ளே நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதாகவும் பிபிசியிடம் பேசிய காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.

மற்றொரு அதிகாரி பிபிசியிடம் பேசும்போது, "ஒரு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மைதானத்தைச் சுற்றி திரண்டனர்" என்றார்.

End of அதிகம் படிக்கப்பட்டது

இது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களைக் காணவிருந்த மக்கள் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தது மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்சிபியின் வெற்றி குறித்து பெருமைப்படுகிறோம், ஆனால் அது யாருடைய உயிரையும் விட பெரியதாக இருக்க முடியாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார், "லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. காவல் ஆணையர் மற்றும் அனைவரிடமும் பேசியுள்ளேன். நான் சற்று நேரம் கழித்து மருத்துவமனைக்குச் செல்வேன். இப்போதைக்கு நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை." என்றார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "சரியான எண்ணிக்கையை இப்போது சொல்ல முடியாது. மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எல்லாவற்றையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம்." என்றார் துணை முதல்வர் டி.கே. சிவகுமார்.

நேற்று ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 18 வருடங்களில் முதல்முறையாக பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதால் அதை ஆர்சிபி அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விராட் கோலி உள்ளிட்ட பெங்களூர் அணியின் வீரர்கள் கோப்பையுடன் இன்று (ஜூன் 4) மதியம் பெங்களூர் வந்தடைந்தனர். அவர்களை கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்கள்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்கள்

அதைத் தொடர்ந்து, கோப்பையை ஏந்தியபடி விராட் கோலி பேருந்தில் முன்னே அமர்ந்திருக்க, பெங்களூரு வீரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர்கள், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கர்நாடக அரசு சார்பில் ஆர்சிபி அணியின் வீரர்களை கௌரவிக்க விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மைதானத்திற்கு வெளியே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,மைதானத்திற்கு வெளியே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்

சம்பவ இடத்தில் இருந்து பேசிய ஆர்சிபி ரசிகை ஒருவர், "உள்ளே இருக்கைகள் எல்லாம் நிரம்பிவிட்டன, அதனால்தான் எங்களை உள்ளே விடவில்லை. நாங்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறோம், ஆனால் நாங்கள் திரும்பிச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

வாயில்கள் மக்களால் நிரம்பி வழிகின்றன, காவல்துறை வாயில்களைத் திறந்தாலும், மக்கள் உள்ளே வரத் தொடங்குவார்கள். ஏற்கனவே நிறைய பேர் காயமடைந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

மைதானத்திற்கு வெளியே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியது தொடர்பான காணொளிகளை ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.

 


வி.சுகிர்தகுமார்                 


 உலக சுற்றாடல் தினம் வாரம் கடந்த 30ஆம் தொடக்கம் ,நாளை 05ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு கடற்கரை, கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்று(04) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் கடற்கரைப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டன.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் தம்மரெத்தின சிங்கள பாடசாலை மாணவர்கள் அக்கரைப்பற்று 241 ஆம் காலாற்படைப்பிரிவினர் பிரதேச சபை ஊழியர்கள் பிரதேச செயலக சுற்றாடல் அபிவிருத்திப் பிரிவு, கரையோரம் பேணல் திணைக்களப் பிரிவு, பொருளாதார அபிவிருத்திப் பிரிவு, உத்தியோகத்தர்கள்;, பொது சமூக நலன் தன்னார்வலரகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கடற்கரைப் பிரதேசத்திற்கு வருகை தரும் பொது மக்களால் பாவனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கழிவுகளாக ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்த  பொருட்கள் யாவும் அகற்றப்பட்டுச் சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.
கடற்கரை சுற்றாடலைத் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பிரதேச சபை வாகனங்களின் உதவியுடன் கழிவுகள் அகற்றப்பட்டன.



(வி.ரி.சகாதேவராஜா)

 " பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் (Ending plastic pollution) எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 - ஜூன் 5 வரை  பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 "கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் " எனும் தொனிப் பெரிய கல்லாறு தொடக்கம் குருக்கள்மடம் வரையான 30 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்கரையோர சுத்தப்படுத்துகை நிகழ்வு இன்று (2025.06.04) காலை 07.30 மணி முதல் இடம்பெற்றது.

பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - திட்டமிடல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் பங்குபற்றுதலுடன் கடற்கரை கரையோர மற்றும்  சவுக்கு மர பிரதேசங்கள் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன.

 


நூருல் ஹுதா உமர்


வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை நிலைப்படுத்தும் நோக்கில் கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தினால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று (04) கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை கால்நடை வைத்தியர்  திருமதி நிவர்த்திகா அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அம்பாறை காரியாலய பிரதிப்பணிப்பாளர் எம்.ஜே. நௌசாத் ஜமால்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட 50 பண்ணையாளர்களுக்கு தலா 16 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கோழிக்குஞ்சிகளை வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண குறிப்பிட்ட மேம்பாட்டு மானியம் (PSDG) நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட இந்த உதவி மூலம் பண்ணையாளர்கள் பயனடைந்துள்ளனர். இந்நிகழ்வில் கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடைகளில் "H -800க்கு  அமைய உணவு கையாளும் நிறுவனங்களை தரநிலைப்படுத்துவதற்கான பரிசோதனை" இன்று (03) சாய்ந்தமருதில் இடம்பெற்றது

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமையவும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதனின் தலைமையிலும் இந்த  செயற்பாடு முன்னெடுக்கப்பட்டன.

இச் செயற்பாடுகளில் போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடைகள் பார்வையிடப்பட்டன, கடைகளில் சுகாதார நிலைமைகள், உணவுப் பொருட்களின் பாதுகாப்பு  பரிசீலனை செய்யப்பட்டது, கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத் வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது, தேவையான இடங்களில் எதிர்வரும் நாட்களில் மீள்பார்வை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மக்கள் நலனை நோக்கி முன்னெடுக்கப்பட்டன. கடைகளில் சுகாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்குடன் இவ்வாறான  செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என சாய்ந்தமருது
சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

\


 பாறுக் ஷிஹான்


யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த  3  (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.  2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி இன்று (31) வெளியிடப்பட்டது.

 குறித்த அறிவித்தல் மூலம் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் றிஸ்லா வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.

யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.

இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது


இதன்படி யாழ் மாநகரசபையின் முதல் பெண் பிரதிநிதியாக ஆசிரியை பாத்திமா றிஸ்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாநகரசபைக்கான முதல் பெண் பிரதிநிதியாக சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் யாழ் மாநகர சபைத்தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழரசுக்கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.

இந்நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்நியமனத்தை உறுதி செய்த கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணக்கிளைத்தொகுதி தலைவர் சிறில் மற்றும் செயலாளர் ஆர்னோல்ட் ஆகியோருக்கும் யாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக நாம் நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இச்சூழ்நிலையில் தமிழ் மக்களுடனான நல்லிணக்கச் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் வலுவாக அமைந்திருக்கின்றன என்பதற்கு மேற்படி நியமனம் முன்னுதாரணமாகவும் எடுத்துக்காட்டாகவும் சாட்சியமாகவும் அமைந்திருக்கின்றது.

யாழ்ப்பாணம் 13ம் வட்டாரத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட சகோதரர் அப்துல்லாஹ், ஒப்பந்த அடிப்படையில் அவரோடு இணைந்து போட்டியிட்ட சகோதரர் முஹம்மது இர்பான் மற்றும் பாத்திமா றிஸ்லா ஆகியோர் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், சமூக நல்லிணக்கம் சார்ந்த விவகாரங்களில் இலங்கை தமிழரசுக்கட்சியை பிரதிநிதித்துவம் செய்து முற்போக்காகச் செயற்படுவார்கள் என யாழ் முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

நியமனம் பெற்றுள்ள சகோதரிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.



 ( காரைதீவு நிருபர் சகா)

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில்
பட்டியலில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும் பெண்களாவர்.

இவர்களது பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளது.

காரைதீவைச் சேர்ந்த 
கிருஷ்ணபிள்ளை செல்வராணி மற்றும் சவுந்தரம் சுலஸ்தனா ஆகியோரே தெரிவான இரு பெண்களுமாவர்.

 இலங்கைத் தமிழரசுக் கட்சி நான்கு வட்டாரங்களை வென்று மு.காவுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளது.

வட்டாரம் 3 இல் 
 சுப்பிரமணியம் பாஸ்கரன் ( முன்னாள் உறுப்பினர்)
வட்டாரம் 4 இல் வை.கோபிகாந்( முன்னாள் தவிசாளர்)
வட்டாரம் 6 இல் 
 சின்னத்தம்பி சிவகுமார்  
வட்டாரம் 7 இல்
 கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( முன்னாள் தவிசாளர்) உறுப்பினர்களாக வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அதன் படி காரைதீவு பிரதேச சபையில் உள்ள ஏழு வட்டாரங்களில் நான்கு வட்டாரங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி ஈட்டியுள்ளது. 

மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் அபூபக்கர் பர்ஹான்( தேசிய மக்கள் சக்தி)
மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் எம்.எச்.எம்.இஸ்மாயில்( மு.கா.) (முன்னாள் உறுப்பினர்) மற்றும் மாவடிப்பள்ளி வட்டாரத்தில் ஏஆர்எம்.ஹில்மி( அ.இ.ம.காங்கிரஸ்) ஆகியோர் முதல் பட்டியலில் த தெரிவானார்கள்.

காரைதீவு பிரதேச சபைக்கு 04 உறுப்பினர்கள் பட்டியல் முறையில் தெரிவானார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் இரு பெண்கள் கிருஷ்ணபிள்ளை செல்வராணி மற்றும் சவுந்தரம் சுலஸ்தனா மற்றும் மு.கா சார்பில் எம்என்எம்.றனீஸ்( முன்னாள் உறுப்பினர்) மற்றும் சுயேச்சை குழு தலைவர் ஏஎம்.ஜாகீர்( முன்னாள் உப தவிசாளர்) ஆகியோர் தெரிவாகி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒரேயொரு பெண் உறுப்பினர் எஸ்.ஜெயராணி மட்டும் சபையை அலங்கரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


கொழும்பில் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளர்  கிறிஸ்டின் பி பார்கோவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான செந்தில் தொண்டமான் சந்தித்தார்.

சமீபத்தில் தோட்ட இளைஞர்கள் இடம்பெயர்வின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன்,அவர்கள் இடம்பெயரும் போது தேவையான உதவிகளை முன்னெடுக்க  நடவடிக்கை  மேற்கொள்ளுமாறு  கிறிஸ்டின் பி பார்கோவிடம் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.