Showing posts with label SriLanka. Show all posts


 நூருல் ஹுதா உமர் 


இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழக ஊழியர்கள் 15% சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கும் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு அங்கமாக கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுக்கும் ஒருநாள் பணி பகிஷ்கரிப்பு மற்றும் அரசிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலையம் முன்பாக 
நடைபெற்றது. 

இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு, இலங்கை பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை பல்கலைக்கழக நிருவாக மற்றும் நிதி உத்தியோகத்தர்கள் சங்கம், அனைத்து பல்கலைக்கழக கல்விசார் ஆதரவு ஊழியர் சங்கங்கள், அனைத்து பல்கலைக்கழக உபவிடுதிக் காப்பாளர் சங்கம், அனைத்து பல்கலைக்கழக சேவை தொழிற்சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்கம், முற்போக்கு தொழிலாளர் சங்கம், இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்க பல்கலைக்கழக அதிகாரசபை மற்றும் இலங்கை பல்கலைக்கழக தகவல் தொழிநுட்பவியலாளர்கள் சங்கம் 
ஆகிய 10 தொழிற்சங்க அமைப்புகள் அடங்கிய கூட்டு தீர்மானத்தின் அடிப்படையில் இந்த பணிபகிஷ்கரிப்பு நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

 


வெடுக்குநாறியில் சிலருக்கு காயம்!

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் அவலக்குரல்! சிவராத்திரி வழிபாட்டுக்காக கூடியிருந்தோர் மீது பொலிசார் தாக்குதல்! பெண்கள் மீதும் தாக்குதல்! குடிநீர் எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு! ஆலய பொருட்களை உதைத்து தள்ளி அடாவடி!

படுகாயமடைந்த சிலர் வவுனியா மருத்துவமனையில் அனுமதி

 


இலங்கையில் 60 வீதத்திற்கும் அதிகமான சிறுவர்கள் கையாள முடியாத அளவு புத்தகப் பையை சுமந்து செல்கின்றமை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக வைத்தியர் கபில ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்

 


இரத்தினபுரியில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட NPP நாடு முழுவதும் அதன் பெண்கள் உச்சி மாநாட்டைத் தொடர்கிறது

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரந்தின் பற்றரி மற்றும் பெட்டியின் பம் சங்கிலி உள்ளிட்டவைகள் திருடப்பட்ட சம்பவம் நேற்று முன் (01) இரவு இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் உறக்கத்தில் இருந்தபோதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் பற்றியை திருடிய திருடர்கள் அங்கு கழற்றி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியின் பம்மினையும் சங்கிலிiயையும் திருடிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளரால் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் முறைப்பாட்டினை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  

 


பிள்ளைகளை தேடி அலையும் எம்தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக சாந்தன் அவர்களின் தாயார் இன்று இருக்கிறார்.

இனியாவது, தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களினது விடுதலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

 


எனது கணுக்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. முழுமையாக குணமடைய இன்னும் சில காலம் ஆகும் - இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி


 பிஜிஎம் கிங் - யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுடன் விமானம் ஏறினார். இங்கே சில சிறப்பம்சங்கள் உள்ளன.

 


உணவு விநியோகம் தாமதம்!

சுடப்பட்டார் சாரதி. ஓர்டர் தாமதமாக எடுத்து வந்ததாக கூறி வாடிக்கையாளர் தன்னை சுட்டதாக குவைத்தில் பணிபுரியும் கே.பி.லக்ஷ்மன் திலகரத்ன (44) என்ற இரு பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.

 


அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் ஆங்கிலப் பாட ஆசிரியரும், இலங்கை பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்பாளருமான ஜப்பார் Abdul Jabbar ஆசிரியர் அவர்கள் வஃபாத்தானார்கள்.

 


கொழும்பில் காணியின் பெறுமதிகள் மந்தகதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

@CBSL. 2H 2023 இல் விலைகள் மெதுவாக 2.1% அதிகரித்தது, முந்தைய ஆண்டு 9.8% அதிகரித்தது. இருப்பினும், சில பெரிய டெவலப்பர்கள் பல ஆண்டுகளாக ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை விற்கவில்லை என்று கூறுகிறார்கள்



அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள், உருப்பெற்றுள்ளன.






அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமாக கௌரவ A,C.றிஸ்வான் அவர்கள் கடந்த 2024.01.01 கடமையேற்றதன் பின்பு அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன.

நீதிமன்றின் நீண்ட காலமாக ஓட்டடை ஒடிசல் விழுந்து காணப்பட்டிருந்த  வாகனத் தரிப்பிடம் சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில், புணரமைக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற, திறந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கான,புதிய திரைச்சீலை வசதிகள், புதிய சிறைக்கூண்டு,  போன்றவையும்,  இலட்சக் கணக்கான ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று நீதின்ற நுழைவாயிலில், இதுகாறும் இருந்து வந்த  பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, புத்தம் புதிய நவீன பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதி வசதிகளை, அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகள் ஒதுக்கியிருந்தன.


இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட  வாகனத் தரிப்பிடம் இன்றைய தினம் அக்கரைப்பற்று, மாவட்ட, நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதியுமான றிஸ்வான் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அதேவேளையில், மேலதிக மாவட்ட நீதிபதியும், கௌரவ நீதிபதியுமாகிய திருமதி தெசீபா ரஜீவன் புதிய பெயர்பலகையினை திறந்து திரை நீக்கம் செய்து வைத்தார். 

அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க மூத்த துணைத் தலைவர், சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எல்.ஏ. றசீத் அவர்கள், அங்குரார்ப்பண உரையினை நிகழ்த்தும் போது, பல தசாப்தகாலமாக புணரமைக்கப்படாமல் காணப்பட்டிருந்த, அக்கரைப்பற்று நீதிமன்று,கடந்த 2024.01.01 கௌரவ  நீதிபதியாக  ஏ.சி. றிஸ்வான் அவர்கள் கடமையேற்றதன் பின்பு, பல்வேறுபட்ட மாற்றங்களகை் கண்டு வருகின்றது என்பதாகத் தெரிவித்தார்.அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன என்பதுடன், அதற்கு ஒத்துழைப்பு நல்கிய உள்ளுராட்சிமன்றங்களக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான கௌரவ  ஏ.சி. றிஸ்வான் அவர்கள் உரைநிகழ்த்தும் போது, குறுகிய காலத்தில் இப் பணிகளைச் செய்து முடிக்க அரும்பணியாற்றிய, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகளுக்கும், களப்பணியில் ஈடுபட்ட சமூதாயஞ்சார் பணியாளர்களுக்கும், நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கும், மிகக் குறுகிய காலத்தில் சிறப்பான திறப்பு விழாவினைச் செய்து கொடுத்த அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

 இன்றைய நிகழ்வில் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள்,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் றயிசுல் ஹாதி, நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர். 









 பத்தரமுல்ல விக்கிரமசிங்க புர சந்தியில் லொறியொன்று மோதியதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.


கொல்லப்பட்ட லக்மினி போகமுவ (24) கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் உதவி விரிவுரையாளரும் விக்கிரமசிங்க புரவைச் சேர்ந்தவருமாவார்.


நேற்றுக் காலை கடமைக்குச் செல்வதற்காக பல்கலைக்கழகத்துக்குச் சென்றுகொண்டிருந்த போதே விபத்துக்குள்ளானார். காயமடைந்தவர் உடனடியாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


மேலதிக விசாரணைகளுக்காக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 


நாட்டில் உள்ள பெண்ணியம் பேசும் அமைப்புக்கள் உடனடியாக இந்த அதிபர் நியமன விடயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்! 

 


வனிந்து ஹசரங்க 100, T20I விக்கெட்டுகளை எட்டினார்.

வரலாற்றில் வேகமாக 100 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் இவர், ரஷித் கானுக்கு அடுத்தபடியாக!

வாழ்த்துகள் வனிந்து ஹசரங்க


(எஸ்.அஷ்ரப்கான்)

ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் ஏற்பாட்டில்  "சுத்தமான சூழலை நோக்கி" எனும் தொனிப் பொருளில்  மாபெரும் சிரமதான பணி கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில்  இன்று (17) சனிக்கிழமை காலை 06 மணிக்கு இடம்பெற்றது.

ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவி சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளிமுதீனின் தலைமையில் 
இடம்பெற்ற இச்சிரமதான பணியில் அமைப்பின்  முகாமையாளர் டாக்டர்    எஸ்.நளிமுதீன் ஆகியோருடன் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இச்சிரமதானத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

கல்முனை மாநகர சபை சுகாதர பிரிவினர், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் உட்பட்ட நிர்வாகத்தினர் மற்றும் தஃவா குழு உறுப்பினர்களின் பங்குபட்டுதலுடன் இடம்பெற்ற குறித்த சிரமதான பணியில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிரமதான பணியினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனைப் பிரதேசத்தில் உள்ள பொது இடங்களை சுத்தமுள்ள சுகாதாரமிக்க சுத்தமான காற்றை சுவாசிக்கக் கூடிய இடமாக மாற்றுவதற்கான முயற்சியில்  ஏ.ஆர் மன்சூர் பவுண்டேஷன் ஈடுபட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.