கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுமார் 15 கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (16) காலை 6.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் கல்முனை கடற்கரை பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டது.கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை இணைந்து முன்னெடுத்த இச் சுத்தப்படுத்தும் நிகழ்வின் பிரதான நிகழ்வு கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பு உள்ள கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.டி.எம் ராபி பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ''சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்'' எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கு இவ் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் பொலிஸ்,விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள்,சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள்,சிவில் அமைப்பினர்கள் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டில் இடம்பெறும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்புக்காக பொதுமக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்த வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றுச்சூழல் பிரச்சினைகளை 076 6412029 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு குறுஞ்செய்திகளாக அனுப்பலாம்.
இந்த வாட்ஸ்அப் இலக்கமானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சேவையில் இருக்கும்.
பொது மக்களால் முன்வைக்கப்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து , சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அக்கரைப்பற்று வெள்ளப் பாதுகாப்பு வீதியில் இன்று மாலை நான்கு மணி அளவில் தேனீர்சாலை ஒன்றில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாஜித் என்பவர் என்பவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் 28 வயது நிரம்பியவர் என்பதாக, தெரிவிக்கப்படுகிறது
இவர் அக்கரைப்பற்று நீதிமன்ற சமுதாய சீர்த்திருத்த நடவடிக்கைளுக்கு உட்பட்டிருந்தவராவார். நேற்றைய தினம் அக்கரைப்பற்று, ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 4 மணிவரை அங்குள்ள நோயாளர் சாதாரண விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து வியாழக்கிழமை மாலை 4.15 அளவில் எவரது முன் அனுமதியுமின்றி வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்பு அவர் வெளியாகி 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தேனீர்ச் சாலைக்கு வந்து கதிரையில் அமர்ந்த பின்னர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் கூறுகின்றன
இதுபற்றிய விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்ற அதே வேளையில், அம்பாறை சொக்கோ பிரிவினரும், இன்று மாலை குறித்த இடத்திற்கு விஜயம் செய்து, தடயவியல் சான்றிதழ் சம்பந்தமான பதிவுகளை மேற்கொண்டிருந்தார்கள்
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் இன்றைய தினம் பி.ப 5.45 மணியளவில் வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தினை உடைத்து நீரோடையில் விழுந்துள்ளது. இதன்போது காரில் பயணித்தவர்கள் காயங்களுடன் 03 பேர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிரான மக்களின் போராட்டம் இன்று (13) வியாழக்கிழமை இரண்டாவது நாளாக தொடர்கிறது.
அதேவேளை ஆர்ப்பாட்டப் பகுதியில் பொலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை பெரியநீலாவணையில் புதிதாக மதுபான சாலை ஒன்று திறக்க பட்டதனை தொடர்ந்து பெரியநீலாவணை பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதனை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியநீலாவணை பொது அமைப்புகளும், பொதுமக்களும், இணைந்து கல்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் மதுபான சாலையை அகற்றுமாறு கூறிய மகஜுரும் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக தனது அதிகாரத்துக்குட்பட்டு மூட நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந் நிலையில் மதுபான சாலை நேற்று 11) மீண்டும் திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பௌர்ணமி தினம் என்பதால் மதுபான சாலை மூடப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.
இன்று வியாழக்கிழமை மீண்டும் மதுபான சாலை திறந்தபோது தொடர்ந்து மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் பொலீசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
பெரியநீலாவணை பொலீஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஆர்ப்பாட்ட காரர்கள் ஒரு சிலர் மீது கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் தடை உத்தரவினையும் பெற்று அங்கு வாசித்துக் காட்டியதோடு, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளுமாறு கூறினர்.
பொது மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.
வரலாறு.
பெரியநீலாவணையில் ஏலவே காலா காலமாக ஒரு மதுபான சாலை இயங்கி வருகிறது.
அதேவேளை கடந்த வருடம் புதிய மதுபானசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதனை பொதுமக்களும், பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும், பல்வேறு பட்ட எதிர்ப்புகளை தெரிவித்து கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்ததன் மூலம் தற்காலிகமாக அது மூடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த வருடம் மதுபான சாலையை திறப்பதற்குரிய நடவடிக்கையை உரிமையாளர் மேற்கொண்ட போதும், மீண்டும் பொதுமக்கள்
கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கு முன்பாக ஒன்று கூடி விளக்குமாற்றுடன் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொண்டு இருந்தனர். அத்தோடு மதுவரி திணைக்கள அதிகாரிகளிடம் பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும் பெரியநீலாவணையில் ஏற்கனவே மதுபான சாலை ஒன்று இருப்பதாகவும், மற்றும் ஒரு மதுபான சாலை அவசியம் இல்லை என்பதையும், கூறி எமது கிராமத்து மக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை தெரிவித்து மகஜர் ஒன்றினை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஊடாக கையளித்திருந்தனர்.
அதன் பின்னர் மதுவரி திணைக்கள அதிகாரிகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வருகை தந்து மகஜர் கையளித்த பொது அமைப்புகளையும் ஆலய பரிபாலன சபையினரையும் சந்தித்து விசாரணைகளையும் மேற்கொண்டு இருந்தனர்.
இவ்வாறு பொதுமக்கள் எதிர்ப்புகள் தெரிவித்த போதும் நேற்றுமுன்தினம் (11) காலை தொடக்கம் மதுபான சாலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதனை எதிர்த்து மக்கள் தொடர்ந்து கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரப்பித்திருக்கின்றனர்.
இன்றும் (13) மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் அமுல்படுத்தப்படும் என்றும், சரியான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத் துண்டிப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 6 மணி நேரத்திற்குள் 4 பிரிவுகளாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இருப்பினும், நேற்று (12) பௌர்ணமி தினம் என்பதால், குறைந்த மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடிந்ததால், மின் விநியோத் துண்டிப்பை இலங்கை மின்சார சபை மேற்கொள்ளவில்லை.
தற்போது, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த பணிகளை விரைவாக முடித்த பின்னர், மின்பிறப்பாக்கிகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் நாளை (14) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
உலக வானொலி தினத்தை முன்னிட்டு, வானொலித் துறையைச் சார்ந்தோருக்கும் மற்றும் வானொலி நேயர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
உலக வானொலி தினம் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும் மேலும் வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பெப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.
அமெரிக்கா காஸாவை "கைப்பற்றலாம்" மற்றும் அதன் மக்களை இடமாற்றம் செய்யலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அவர் இனச் சுத்திகரிப்பு செய்ய திட்டமிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழத் தொடங்கின. ஐ.நா, அரேபிய மற்றும் பிற உலகத் தலைவர்களும், மனித உரிமைக் குழுக்களும், அவரது கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த செவ்வாய்கிழமை மாலை, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அருகில் நின்று, காஸா தொடர்பான கருத்துக்களைத் தெரிவித்தார் டிரம்ப்.
டிரம்பின் கருத்து, "கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று" என்று நெதன்யாகு பதிலளித்தார்.
இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை, காஸா, டிரம்ப்
ஆனால், இரண்டு மில்லியன் மக்களை தங்கள் நிலத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பின் உதவிப் பொதுச்செயலாளர் ஹொசாம் ஜாக்கி பிபிசியிடம் தெரிவித்தார்.
"குடிமக்கள் தங்கள் நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்படுவதை, அதாவது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை இந்த யோசனை ஆதரிக்கிறது. போர்நிறுத்தம் எட்டப்பட்ட பிறகு, பாலத்தீன மக்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிய தங்களின் வீடுகளுக்கு விரைவாக திரும்பினர். அவர்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு வெளியேற மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வார்கள் என உங்களால் எப்படி கற்பனை செய்ய முடிகிறது?" என்கிறார் ஹொசாம் ஜாக்கி.
ஆனால், "புதிய மற்றும் நவீன வீடுகள் கொண்ட, மிகவும் பாதுகாப்பான மற்றும் அழகான இடங்களில்" மீள்குடியேற்றம் செய்யப்படும் என்று லட்சியவாத சொற்களில் டிரம்ப் முன்மொழிந்துள்ள கருத்தை, உண்மையில் இனச் சுத்திகரிப்பு எனக் கருதலாமா?
மேலும், இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப் படுகொலை இடையில் உள்ள வேறுபாடு என்ன?
போரின் போது, இஸ்ரேலின் உத்தரவின் பேரில் தெற்கே இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள், ஜனவரி 27ம் தேதி அன்று வடக்கு காசாவில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.
'இனச் சுத்திகரிப்பு' என்றால் என்ன ?
இனச் சுத்திகரிப்பு என்பது பொதுவாக குறிப்பிட்ட ஒரு குழுவை, ஒரு குறிப்பிட்ட பகுதியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதாகும்.
நாடு கடத்துவது அல்லது ஒரு இனக்குழுவை கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம், ஒரு நிலப்பகுதியில் ஒரே ஒரு இனக்குழுவே வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்கின்றனர்.
இனச் சுத்திகரிப்பு என்பது இடமாற்றம் தொடர்பானது மட்டுமல்ல. "நினைவுச் சின்னங்கள், கல்லறைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை அழிப்பதன் மூலம் குறிவைக்கப்பட்ட குழுவின் அனைத்து அடையாளங்களையும் அகற்றுவது" என நியூயார்க்கில் உள்ள ஜான் ஜே கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகளுக்கான மையத்தின் நிறுவன இயக்குநர் பேராசிரியர் ஜார்ஜ் ஆண்ட்ரியோபொலோஸ் கூறுகிறார்.
1990களில் யூகோஸ்லாவியா கூட்டாட்சி குடியரசு சிதைந்த போது இன மோதல்கள் வெடித்த சமயத்தில், இனச் சுத்திகரிப்பு எனும் சொல் முதன்முதலில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள போஸ்னிய இஸ்லாமிய மக்கள், குரோஷியாவின் கிராஜினா பகுதியில் உள்ள செர்பியர்கள் மற்றும் கொசோவோவில் உள்ள அல்பேனியர்கள் மற்றும் செர்பியர்கள் ஆகிய இனத்தவர்களின் மீது நடத்தப்பட்ட கொடூரமான துன்புறுத்துதல்களை விவரிக்க அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களால் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது.
மேலும், 2017-ஆம் ஆண்டில், முன்னாள் ஐநா மனித உரிமைகள் தலைவர் ஜெய்த் ராத் அல் ஹுசைன், ரோஹிஞ்சா இன முஸ்லிம்களுக்கு எதிரான மியான்மர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விவரிக்க 'இனச் சுத்திகரிப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்தினார். மேலும், "இனச் சுத்திகரிப்புக்கு தெளிவான எடுத்துக்காட்டு" என்றும் அதனை விவரித்தார்.
இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை, காஸா, டிரம்ப்பட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு,ஆகஸ்ட் 2017ல், நடந்த வன்முறைச் சம்பவத்தில் 742,000 க்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா இன மக்கள் மியான்மரில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்திற்கு சென்றனர்
இனச் சுத்திகரிப்பு போர்க்குற்றமாகுமா?
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சமகால ஆயுத மோதல்களின் தன்மை காரணமாக இந்த வார்த்தை பரவலாகிவிட்டது.
ஒரு நாட்டின் ராணுவ சரணடைதலை விரைவுபடுத்த என்னென்ன வற்புறுத்தல் நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதோ, அதே நடைமுறைகள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறும்படி மக்களை ஒப்புக்கொள்ள வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்று ஐநாவின் நிபுணர் குழு கூறுகிறது.
சித்திரவதை, கைது, சிறைவைத்தல், பாலியல் வன்புணர்வு,பாலியல் வன்கொடுமைகள், சொத்துக்களை அழித்தல், பொருட்களை கொள்ளையடித்தல் மற்றும் மருத்துவமனைகளைக் குறிவைத்தல் ஆகியவை இந்த நடைமுறைகளில் அடங்கும்.
இதில் சில நடைமுறைகள் சட்டப்பூர்வ போர்க்குற்றங்களாக கருதப்படுகின்றன.
இருப்பினும், ஐ.நா சபையின் சர்வதேச சட்டத்தின்படி, இனச் சுத்திகரிப்பு என்பது ஒரு போர்க்குற்றமாக அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை.
பல ஆண்டுகளாக "போரினால் ஏற்படும் குழப்பங்களின் கீழ் பாலத்தீனயர்களை இனச் சுத்திகரிப்பு" செய்ய இஸ்ரேல் முயற்சித்து வருகிறது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதியின் ஐக்கிய நாடுகளின் சிறப்பு கண்காணிப்பாளரான பிரான்செஸ்கா அல்பானீஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரேல் எனும் நாடு உருவானதன் காரணமாக ஏற்பட்ட மோதல்களால் 1947 முதல் 1949 வரை 7,50,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் அவர்களின் வீடுகளிலும் நிலங்களிலும் இருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த நிகழ்வை பாலத்தீன மக்கள் அரபு மொழியில் "நக்பா" (பேரழிவு) என்று அழைக்கின்றனர்.
"தற்போது நாம் காணும் நிகழ்வுகள், 1948ம் ஆண்டு நடந்த நக்பாவின் மறு நிகழ்வாக, அல்லது அதைவிட இன்னும் பெரிய அளவிலானதாக இருக்கலாம்" என்று பிரான்செஸ்கா அல்பானீஸ் கூறுகிறார்.
இனச் சுத்திகரிப்புக்கும் இனப் படுகொலைக்கும் என்ன வித்தியாசம்?
இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின்படி, தனி குற்றமாக அங்கீகரிக்கப்படாத நிலையில், இனப்படுகொலை என்பது அதிகாரப்பூர்வக் குற்றமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1946 ஆம் ஆண்டு நடந்த யூதப் படுகொலையின் போது நாஜிக்கள் திட்டமிட்ட முறையில் யூத மக்களை கொன்றபோது ஐநா பொதுச் சபை இதை குற்றமாக அங்கீகரித்தது.
அதாவது, "ஒரு தேசிய, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது அவர்களில் ஒரு பகுதியினரையோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் எந்தவொரு செயலும்" இனப்படுகொலை என வரையறுக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது அல்லது அவர்களுக்குக் கடுமையாக தீங்கு விளைவிப்பது, ஒரு குழு உயிர்வாழ முடியாத வாழ்க்கைச் சூழலை உருவாக்குவது, அந்தக் குழுவிற்குள் புதிதாக குழந்தைப் பிறப்பதைத் தடுப்பது அல்லது குழந்தைகளை ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு வலுக்கட்டாயமாக மாற்றுவது ஆகியவை அந்தச் செயல்களில் அடங்கும் என அறியப்படுகின்றது.
இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை, காஸா,
படக்குறிப்பு,ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனப்படுகொலை தொடர்பான தீர்ப்பை வழங்கிய முதல் சர்வதேச நீதிமன்றம் ஆகும்.
1998ம் ஆண்டில், ருவாண்டாவின் முன்னாள் பிரதமர் ஜீன் கம்பண்டா இனப்படுகொலைக்காக சர்வதேச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.
மேலும், இனப்படுகொலைக்காக தண்டிக்கப்பட்ட முதல் அரசியல் தலைவர் இவர் என்றும் அறியப்படுகின்றது.
ஜீன் கம்பண்டா தண்டனை பெறுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மில்லியன் டுட்ஸி இனக்குழுவினர் மற்றும் மிதவாத ஹூட்டுக்கள் இப்படுகொலையில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோக்கம் பற்றிய கேள்வி
இனச் சுத்திகரிப்புக்கும், இனப்படுகொலைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் குற்றம் சாட்டப்பட்டவரின் 'நோக்கம்' என்று ஐநா விளக்குகிறது.
ஒரு இன அல்லது மதக் குழுவை அழிப்பது இனப்படுகொலையின் முதன்மையான நோக்கமாக இருந்தாலும், இனச் சுத்திகரிப்புக்கான முக்கிய நோக்கம் அவர்களை வெளியேற்றுவதும், நிலவியல் ரீதியாக ஒரே இன மக்களைக் கொண்ட பகுதிகளை நிறுவுவதும் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர இந்த நியமனத்தை நேற்று வழங்கியுள்ளார்.
கிழக்குமாகாணத்தில் ஆளுநர் மேற்கொண்ட அதிரடி உயர்நிருவாக மாற்றத்தில் ஓரங்கமாக இவரது நியமனம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியான இவர், தற்போது கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளராக கடமை புரிந்துவருகின்றார்.
அதற்கு மேலதிகமாக இப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதற்குமுன்னர் திறைசேரி முகாமைத்துவ திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக. சேவையாற்றியிருந்தார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர், மூத்ததம்பி செல்லம்மா தம்பதியினரின் புதல்வராவார். தற்போது கல்முனையில் வாழ்ந்துவருகிறார்.
1995 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக தெரிவுசெய்யப்பட்ட இவர், தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். கலைமாணி பட்டத்தினை பேராதனை பல்கலைக் கழகத்திலும், பொதுநிருவாக துறையில் முதுமானிப் பட்டத்தினை இந்தியா பல்கலைக் கழகத்திலும் பெற்றார்.
இவர், தம்பலகாமம், ஏறாவூர் நகர் ,பட்டிப்பளை, கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், குச்சவெளி, நாவிதன்வெளி,திருக்கோயில் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப்பெற்றிருந்தார்.
கல்முனை லயன்ஸ்கழக தலைவராகவிருந்த லயன் கோபாலரெத்தினம், பல சமுகசேவைகளில் முன்னின்று சேiவாயற்றிவருபவராவார். சிறந்த ஒருகலைஞரான இவர் பிரபல மேடைகளில் பழையபாடல்களைப்பாடி அசத்தியிருக்கிறார்.
2025 ஆம் கல்வியாண்டுக்கான தரம் 06 க்கு புதிய மாணவிகளை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் பாடசாலை சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலய பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் விசேட அதிதியாக சியபத நிதி நிறுவனத்தின் சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் முஹம்மத் பிரிம்சாத் கலந்து கொண்டார்.
பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களினால் வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் எம்.ஏ.மசூது லெப்பை, எம்.எச். நதீரா, உதவி அதிபர்களான எம்.எஸ்.மநூனா, என். தர்ஷன் நதீஹா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களின் பெற்றோர்களால் சீரமைத்து புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள் மாணவிகளின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
பாறுக் ஷிஹான் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலை சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
குறித்த முறைப்பாடுக்கு அமைய திங்கட்கிழமை (10) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய குறித்த சிற்றுண்டிசாலை உரிமையாளருக்கு எதிராக சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் மேறடகொள்ளப்பட்டு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியவேளை ரூபா 20 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையையும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
50 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய கேரளா கஞ்சாவினை சூட்சுமமாக கட்டிலின் கீழ் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை திங்கட்கிழமை (10) மாலை மேற்கொள்ளப்ட்டது.
இதன் போது கடந்த புதன்கிழமை(5) இரு சந்தேக நபர்கள் பெருந்தொகையான கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர்.5 நாட்களாக தடுப்புகாவலில் வைக்கப்பட்ட மேற்படி இரு சந்தேக நபர்களிடம் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
சாய்ந்தமருது கடற்கரை வீதி இணைக்கும் தோணா பாலம் உடைந்து விழும் ஆபத்தில் உள்ளதால் செப்பனிட்டு அழகு படுத்துவது பெரும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள மிக பழமையான தோணா பாலத்தினை சிறு திருத்தங்கள் மாத்திரம் செய்து அழகு படுத்த முயற்சிக்கும் செயற்பாட்டை பொதுமக்கள் கண்டித்துள்ளதுடன் குறித்த பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அபாயகரமான நிலைமையையும் தெளிவு படுத்தினர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாலத்தின் ஊடாக சாய்ந்தமருது பழைய ஆஸ்பத்திரி உப தபாலகம் கமு/கமு/றியாலுல் ஜன்னா வித்தியாலயம் அஷ்ரப் ஞாபகர்த்த பூங்கா பள்ளிவாசல் மீனவர்களின் கட்டிடத்தொகுதி என பல்வேறு அரச தனியார் காரியாலயங்கள் வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.
மேலும் இப்பாலத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொழில் நிமர்த்தம் காரணமாக அதிக பயணங்கங்களை மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன் குறிப்பாக அதிக கனரக வாகனங்கள் பயணிப்பதால் தற்போது இந்தப்பாலம் பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.மேலும் கடந்த 2004 ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவிலும் குறித்த பாலம் பாதிப்படைந்ததுடன் தற்போது உடைந்து விழும் நிலையில் உள்ளது.
இன் நிலையில் பாலத்தின் பாதுகாப்பிற்காக உள்ள மேல் தூண்களை மாத்திரமே அகற்றி அழகு படுத்துவதால் எதிர்காலத்தில் பாரிய ஆபத்துகள் இடம்பெறும் என சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு இப்பாலத்திற்கான திட்ட வரைபடம் வரையப்பட்டு, குறித்த திணைக்கள நிறுவன அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு முறையான அங்கீகாரம் கிடைத்தன் பிற்பாடு அப்போதைய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு செயற்பட இருந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக துரதிஷ்டவசமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அபாயகரமான இருக்கின்ற இப்பாலம் புனர்நிர்மானம் செய்யும் நிலையில் தற்போது இல்லை என்பதுடன் அதன் அனைத்து மூலப்பொருட்களும் செயலிழந்த நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச அரசியல்வாதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்கள் அனைவரும் இந்த புனர்நிர்மான வேலைக்கு எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து இந்தப்பாலத்தை முற்றாக அகற்றி புதிய பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளுமாறு இப்பிரதேச பொதுமக்கள் சிவில், சமூக அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு இப்பாலத்திற்கான திட்ட வரைபடம் வரையப்பட்டு, குறித்த திணைக்கள நிறுவன அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு முறையான அங்கீகாரம் கிடைத்தன் பிற்பாடு அப்போதைய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு செயற்பட இருந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக துரதிஷ்டவசமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அபாயகரமான இருக்கின்ற இப்பாலம் புனர்நிர்மானம் செய்யும் நிலையில் தற்போது இல்லை என்பதுடன் அதன் அனைத்து மூலப்பொருட்களும் செயலிழந்த நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச அரசியல்வாதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்கள் அனைவரும் இந்த புனர்நிர்மான வேலைக்கு எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து இந்தப்பாலத்தை முற்றாக அகற்றி புதிய பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளுமாறு இப்பிரதேச பொதுமக்கள் சிவில், சமூக அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
நாடு முழுவதும் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் வினவியபோது, நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருவதாகவும், அதற்கான காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
குறித்த திடீர் மின்வெட்டை சரிசெய்ய 4 முதல் 6 மணி நேரம் ஆகுமென மின்சார சபை வட்டாரங்கள்
நூருல் ஹுதா உமர் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அம்பாறை மாவட்ட சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டமைப்பினர் கதிரை சின்னத்தில் தேர்தலில் களமிறங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த காலங்களில் உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்களாக, உப தவிசாளர்களாக இருந்தவர்களையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிராந்திய முக்கியஸ்தர்களையும் அம்பாறை தனியார் விடுதிக்கு இன்று அழைத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை நிர்வாகிகள் கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயலாளர் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பொருளாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி ஸ்ரீயாணி விஜேவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டு அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் நிலைப்பாடு, தேர்தல் சாதக, பாதங்கள் சமகால அரசியல் முன்னெடுப்புகள், விவசாயி களினதும் ஏனைய தொழிலாளர் களினதும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.S.நளீம் இன்று காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து சிலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.