Showing posts with label SriLanka. Show all posts

 


கீல்ஸ் நிறுவனத்தில் மின்சார சார்ஜிங் மையங்கள் உள்ளன. இது பல மாதங்களுக்கு முன்பே நிறுவப்பட்டிருந்தாலும், எந்த வாகனமும் அதில் இணைக்கப்பட்டிருப்பதை நான் பார்த்ததில்லை. முதல் முறையாக, நான் ஒரு வாகனத்தைப் பார்த்தேன், அது சுவாரஸ்யமாக இருக்கிறது. நல்ல முயற்சி. அது நிறுத்தப்பட்ட விதத்தைப் பொருட்படுத்த வேண்டாம்.

 


பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் போகாமலித்த பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த விபத்தில் எவருக்கும் உயிர் சேதமோ அல்லது கடுமையான காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கின்றன.


விபத்துக்குள்ளான வாகனத்தை மீண்டும் நிலைநிறுத்தும் பணிகளில் மின்சார சபை ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


ராமு தனராஜா 

 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் கட்டார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு (18) விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.


இதன்போது ஜனாதிபதி, கட்டார் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்ததுடன், குறிப்பாக அந்நாட்டில் வசிக்கும் 150,000 இற்கும் அதிகமான இலங்கையர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்தினார். தற்போதைய பிராந்திய நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, கட்டார் நாட்டுக்கு இலங்கையின் ஆதரவு கிடைக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


தற்போதைய நிலைமையை விளக்கிய கட்டார் அமீர், இலங்கையர்கள் உட்பட அந்நாட்டில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதாக ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்.


ஹோர்முஸ் சமுத்திர சந்தி போன்ற முக்கிய கடல்வழிப் பாதைகளுக்கு ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து இரு தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன், அதன் மூலம் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் வலுசக்தி சந்தைகளில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்தும் கலந்துரையாடினர்.


அதிகரித்து வரும் வலுசக்தி செலவுகளால் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மீது ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைப்பதற்கு, சர்வதேச உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.


உலகளாவிய வலுசக்தித் துறையில் கட்டார் நாடு எப்போதும் நம்பகமான பங்காளியாக செயற்படும் என்றும், சவால்கள் இருந்தபோதிலும் தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தைப் பேணுவதில் உறுதியாக உள்ளது என்றும் கட்டார் அமீர் மேலும் தெரிவித்தார்.


பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக, பதற்றமான சூழ்நிலையை விரைவாகத் தணிக்க வேண்டும் என்றும், போர் நடவடிக்கைகளுக்குப் பதிலாக பிராந்தியப் பேச்சுவார்த்தைகள் மூலம் இராஜதந்திரத் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் மேலும் வலியுறுத்தினர்.

 


Teacher Center ல் பணியாற்றிய நிலாஸ் சகோதரர் ரியாத்தில் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818 வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818


 வரலாற்றுச்சுருக்கம்!


மட்டக்களப்பு மாநிலத்தின் இராமகிருஸ்ணமிசன்  மடாலயத்திலிருந்துகொண்டு
இலங்கையிலிருந்த 26 மிசன்பாடசாலைகளையும் கவனித்து முகாமையாளராக சீரிய
சேவையாற்றிய சுவாமி நடராஜானந்தா 1903.நவம்பர் மாதம் 29ஆம் திகதி
காரைதீவில் கதிர்காமத்தம்பி விதானையாருக்கும் மயிலம்மாவிற்கும் மகனாக
அவதரித்தார்.

கேம்பிரிச் சீனியர் லண்டன் மொற்றிகுலேசன் பரீட்சைகளில் சித்திபெற்று
ஆசிரியராக நீர்ப்பாசன பொறியியல்உதவியாளராக சேவையாற்றி இ.கி.மிசனில்
1935இல் இணைந்தார்.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நெருங்கிய தொடர்பையடுத்து
நிர்வேதசைதன்யர் எனும் துறவறப்பெயருடன் துறவறம் புகுந்து  சுவாமி
அகண்டானந்தரை குருவாகக்கொண்டு சுவாமி நடராஜானந்தரானார்.
1967.03.18ஆம் திகதி அதிகாலை பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ண பரமஹம்சரின்
திருவுருவப்படத்தை மார்பில் தாங்கியவண்ணம் இறைவனடி சேர்ந்தார்.

வரலாறு!
அம்பாறை மாவட்டத்தில் பழம்பெரும்  சிறப்பு வாய்ந்த காரைதீவு மண்ணிலே
கிழக்கு வானின் விடிவெள்ளியாக இரு கண்மணிகள் அவதரித்தனர். அவர்களில்
ஒருவர் உலகம் போற்றும் 'யாழ்நூல் வல்லோன்'உலகின் 'முதற்றமிழ் பேராசான்'
'முத்தமிழ் வித்தகர்' சுவாமி விபுலானந்தர் மற்றையவர் 'உத்தமத்துறவி'
'சேவையின் சிகரம்''ஏழையின் சிரிப்பினில் இறைவனைக்கண்ட
பொதுநெறிப்பெரியார்'  'நடமாடும் தெய்வம்'இ 'ஏழைச்சிறுவர்களின் வாழ்வில்
கல்வி எனும் சுடரை ஏற்றி மறுமலர்ச்சியை தோற்றுவித்த சேவாதிலகம்'
'ஏழைகளின் இல்லங்களில் ஒளியூட்டிய ஞானசூரியன்' சுவாமி நடராஜானந்தர்.

'தோன்றிப் புகழோடு தோன்றுக' எனும் பொய்யாமொழிக்கிணங்க அவதரித்தவர்
சுவாமிகள். கார்காத்த வேளாள மரபிலே கதிர்காமத்தம்பி விதானையாருக்கும்
மயிலம்மாவிற்கும் மகனாக 1903ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் திகதி
இப்பூவுலகில் அவதரித்தார். அவரது பிள்ளைத்திருநாதம் சிதம்பரப்பிள்ளை.
இவரை செல்லமாக  சீனிவாசகம் எனவும் அழைத்தனர்.
சீனிவாசகம் தனது ஆரம்பக்கல்வியை காரைதீவு ஆண்கள் பாடசாலையிலும் அடுத்து
கல்முனை ஆர்ச் மரியாள் ஆங்கிலக்கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஆர்ச்
மைக்கேல் கல்லூரியிலும் பெற்று சிறந்த மாணவனாகத் திகழ்ந்தார்.

சுவாமிகள் கேம்பிரிச் சீனியர் பரீட்சை லண்டன் மெற்றிக்குலேசன் ஆங்கில
ஆசிரியர் தராதரப்பத்திரம் போன்ற பரீட்சைகளில் தேறி சிறந்த ஓர் ஆசானாக
தன்னை உயர்த்திக்கொண்டார். தனது கல்விப்பேற்றினால் திருகோணமலை
இந்துக்கல்லூரி மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் யாழ் வைத்தீஸ்வரா
வித்தியாலயம் ஆகியவற்றில் தனது ஆசிரியத் தொழிலை சீராகச் செய்து தனது
உன்னத பணியின் பேறாக சிறந்த கல்வியறிவுள்ள மாணவச் செல்வங்களை
உருவாக்கினார்.

ஆசிரியத் தொழிலின் புனிதத்தன்மைக்குச் சான்றாக விளங்கியவர் சுவாமிகள்.
இவரிடம் கற்றோர்  பின் பல கலைகளிலும் சிறந்து விளங்கி உயர் பதவி
வகித்தனர். இவர் ஆசிரியர் தொழிலை விட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தில்
பொறியியல் உதவியாளராகவும் பணியாற்றினார்.

செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தும் அழியும் பொருளின் மேல்
பற்றறுத்து அழியாப்பேரின்பப் பெருவாழ்வான துறவு வாழ்வின் மேல் அவரது மனம்
நாட்டம் கொண்டது. இராமகிருஷ்ண சங்கத்தின் பணிகளும் தொண்டுகளும் கடமைகளும்
சுவாமிகளை மிகவவும் கவர்ந்தன. அதன் காரணமாக தனது பதவியை துறந்தார்.

அவ்வேளையில் சிதம்பரப்பிள்ளையின் உறவினரான சுவாமி விபுலானந்தரின்
அருட்பார்வையால் கவரப்பட்டு  இராமகிருஸ்ண சங்கத்தில் சேர்ந்து 'நிர்வேத
சையதன்யர்' எனும் பிரமச்சரிய நாமம் பெற்று துறவுநிலை பூண்டார்.

ரங்கூனில் இராமகிருஷ்ண சங்கத்தால் நடாத்தப்பட்ட இலவச மருத்துவமனையில்
வைத்தியர்களுக்கு உதவியாக நோயாளிகளுக்கு வேண்டிய சிறந்த சேவையாற்றினார்.
2ம் உலகப்போரின்போது வீசப்பட்ட குண்டின் காரணமாக ரங்கூன் பிரதேசம்
முற்றாக பாதிக்கபட்டு மக்கள் அகதிகளாயினர். சுவாமிகளும் அகதியாக
கல்கத்தாவை வந்தடைந்து பின் தாய்நாடு திரும்பினார்.

1943ம் ஆண்டு கல்கத்தா நகரிலுள்ள இராமகிருஷ்ண சங்கத்தலைமையகத்தில் பகவான்
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச்சீடரான சுவாமி அகண்டானந்தரைக் குருவாகக்
கொண்டு சந்நியாச தீட்சை பெற்று 'சுவாமி நடராஜானந்தர்' எனும் தீட்சா நாமம்
பெற்றார். பாரதத்தின் நாட்டறப்பள்ளி உதக மண்டலம் போன்ற பல இடங்களிலும்
கடமையாற்றினார். பின் மட்டக்களப்புக் கல்லடியில் அமைந்துள்ள சிவபுரியில்
தங்கியிருந்து 26 இராமகிருஸ்ண சங்கப்பாடசாலைகளினதும் 3 சிறுவர்
இல்லங்களினதும் முகாமையாளராக  அரும்பணியாற்றினார்.

சுவாமி நடராஜானந்தர் முகாமையாளராகப்பணியாற்றிய காலம் மிவும் கஸ்டமான
காலமாகும். இல்லக்குழந்தைகளுக்குரிய உணவு உடை உறையுள் போன்ற முக்கிய
தேவைகளுக்குக் கூட பஞ்சம் நிலவிய காலம். 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு'
என  நினைத்து வாழ்ந்த சுவாமிகள் சுவாமிகளுக்குரிய ஒரு இலக்கணமாகத்
திகழ்ந்தார்
அறுவடைக்காலங்களில் சாக்கினைத் தோளில் போட்டுக்கொண்டு களவெட்டிகளுக்குச்
சென்று அங்கு போடிமார் கொடுக்கும் நெல்லையும்இ பொருட்களையும் பணத்தையும்
கொண்டு பெற்றோரை இழந்த விடுதிக்குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றினார்.
அதுமட்டுமன்றி தாயாய் அன்புகாட்டி அரவணைத்து  தந்தையாய் கல்வியறிவூட்டி
இல்லச்சிறுவர்கள் நோயுற்றவேளை இரவு பகல் பாராது விழித்திருந்து
சேவையாற்றும் போது சேவகனாகவும் உன்னத பணிகள் செய்தார்.

அது மட்டுமன்றி உடற்பயிற்சி யோகாசனம் ஆன்மீகம் என்பவற்றை
இல்லக்குழந்தைகளுக்கு சாதனை முறையில் பயிற்றுவித்தார். சகல இன மத
மாணவர்களையும் ஒன்று சேர்த்து கல்வி மனிதப்பண்புகள் சமய சிந்தனை
சகோதரத்துவம் என்பவற்றிலே மாணவர்களது மனதை ஒருமுகப்படுத்தியவரும் இவரே.
கண்ணை இமையிரண்டு காப்பது போல இல்லக்குழந்தைகளை வண்ணமறக் காத்து
நின்றவர்தான் சுவாமி நடராஜானந்தர்.  'இங்கிவரை நாம்பெறவே என்ன
தவம்செய்தோம்' என அன்று அந்த இல்லச்சிறுவர்கள் அகமகிழ்ந்தனர்.

சுவாமிகள் தனக்கென்று  ஏதும் விசேடமாக செய்து உண்ணமாட்டார். உடை
விடயத்திலும் அப்படியே. 'மூன்று சோடி உடுப்பு ஒரு மனிதருக்குப் போதும்'
என்பார். இது போல இறுதி மூச்சவரை வாழ்ந்து காட்டினார்.
சுவாமிகளின் மேற்பார்வையில் இருந்த சிவானந்தா இல்லம் காரைதீவு மகளிர்
இல்லம் ஆனைப்பந்தி மகளிர் இல்லம் ஆகிய இல்லங்களிலுள்ள குழந்தைகளின்
தேவைகளையும் கடமைகளையும் நிறைவேற்றவேண்டிய பாரிய பொறுப்பு சுவாமிகளிடம்
ஒப்படைக்கப்பட்டிருந்தது. சிவபுரியில் இருந்தவாறு  சுவாமிகள் எதற்கும்
மனந்தளராது தனது கடமைகளை செவ்வனே செய்து சேவா திலகமாகத் திகழ்ந்தார்.

உண்மைத்துறவியாக சேவையின் சிகரமாக ஏழைக்குழந்தைகளின் அன்பு அன்னையாக
நல்லாசானாக குன்றிலிட்ட தீபம் போல் பிரகாசித்த எமது அன்புத் தெய்வம்
1967ம் ஆண்டு பங்குனி மாதம்  18ம் திகதி சனிக்கிழமை அதிகாலை 04.30
மணியளவில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை தனது மார்பிலே அணைத்த வண்ணம்
 இறைவன் திருவடிநீழலை அடைந்தார்.
அமர ஜோதியாம் நடராஜானந்த ஜோதி அணையாத ஜோதியாக இறையடியில் பிரகாசித்துக்
கொண்டிருக்கும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா

 நூருல் ஹுதா உமர்


சிட்டிசன் வலையமைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் உலமாக்கள், பல்துறை சாதனையாளர்கள் மற்றும் மகளிர் சாதனையாளர்களை கௌரவிக்கும் சிறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

சமூக முன்னேற்றத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பு செய்துள்ள நபர்களை பாராட்டும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மத அறிஞர்கள் (உலமாக்கள்), கல்வி, சமூக சேவை, தொழில், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்கள் மற்றும் பெண்களின் பங்கு சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டது. பெண்கள் சமூக முன்னேற்றத்தில் வகிக்கும் முக்கிய பங்கினை வலியுறுத்தும் வகையில் மகளிர் சாதனையாளர்களுக்கான தனிப்பட்ட கௌரவிப்பும் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக பொலிஸ் உயரதிகாரிகள், பிரதிக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித், ஹில்மாஸ் லங்கா பணிப்பாளர் எம்.ஐ.எம். இல்யாஸ், டெக்னோ பெப் நிறுவுனர் எம்.ஐ. ஹதீப் முஹம்மட் உட்பட சமூக முக்கியஸ்தர்கள், கல்வியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்டவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு சமூக ஒற்றுமையையும், திறமைகளை அங்கீகரிக்கும் பண்பையும் ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. நிகழ்வின் இறுதியில் கௌரவிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.
 

 


பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.


ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்துக்கு மூன்று முறை நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்.


இதற்கான பயணச் சீட்டு விற்பனை நேற்று (17) ஆரம்பமானது.


அதன்படி, இலங்கையிலிருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கும் ஒரே விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாத்திரமே காணப்படுகிறது.


 


வாராந்தம் புதன் கிழமையை அரச விடுமுறை தினமான பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


சுகாதாரம், நீர்வழங்கல், சுங்கம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கல் துறைகள் இந்த விடுமுறை தினத்துக்கு உட்படாது.


அத்துடன், பாடசாலை நீதிமன்றம், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவைகளுக்கு இந்த விடுமுறை தினம் பொருந்தும்.


அதேநேரம், ஏனைய நான்கு நாட்களில் பணிக்கு அழைக்கப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானம் எடுக்க நிறுவன தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளையும் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

 


இலங்கை கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேனவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு ஒன்று அளித்துள்ளது.


பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்னரும் பங்களாதேஷ் அணி மூன்றாவது நடுவரிடம் மதிப்பாய்வு செய்ய குமார் தர்மசேன அனுமதித்தார் என்று குற்றம் சுமத்தி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தேனீர் குடித்துக் கொண்டே பேசுவது போல் வெளியிடப்பட்டுள்ள காணொளி போலியானது என்று எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் க்ரூக் கூறியுள்ளது.


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திவிட்டோம், இதில் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை, இறந்திருக்கலாம் என்று ஈரான் அறிவித்தது. ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.


நெதன்யாகு உயிருடன் தான் இருக்கிறார், நலமாக உள்ளார் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தொடர்ந்து மறுத்து வருகின்றது. தமது மறுப்பை மெய்ப்பிக்கும் வகையில் கையில் தேனீர் அருந்தியபடியே பேசும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்றை இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.


அவர் உயிருடன் தான் உள்ளார் என்று இஸ்ரேல் அறிவித்து இருக்கும் நிலையில், அந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து உலக நாடுகள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன. இந்நிலையில், இந்த காணொளி உண்மையானது தானா? என்று எக்ஸ் வலை தள பக்கத்தில் க்ரூக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த க்ரூக், நெதன்யாகு தேனீர் குடித்தபடி பேசும் காணொளி ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று அறிவித்துள்ளது. 


இந்த வீடியோ ஏஐ-யால் உருவாக்கப்பட்டது. தேனீர் கடையில் வெகு சாதாரணமாக ஈரான், லெபனான் பற்றி பேசுவது ஒரு போலியான காணொளி ஆகும். இந்த வீடியோவில் உண்மையான நிகழ்வு இருப்பது போன்று தெரியவில்லை.என க்ரூக் தெரிவித்துள்ளது.


 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் மத்ரஸா மாணவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நிகழ்வு 2026 மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது கமு/கமு/ரியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் ஐ. ஜஃபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 50க்கும் மேற்பட்ட மத்ரஸா மாணவர்களுக்கு புனித குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிதியாக புனித குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்க அனுசரணை வழங்கிய றிஷாட் ஹெல்பிங் பவுண்டேஷன் தலைவரும், பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் கிழக்கு மாகாண செயற்திட்ட பணிப்பாளருமான எம்.பி முபாரக் கலந்து கொண்டார். மேலும், கிழக்கு மாகாண கவியுவன் கலை இலக்கிய மன்றத்தின் தலைவரும், கிழக்கு மாகாண பிரதேச சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவருமான ஏ.ஜி. இக்பால் அவர்களும், அல்- மீஸான் பவுண்டேஷன் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.என்.ஹுதா உமர் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

அத்துடன் அமைப்பின் செயலாளர், பொருளாளர், அமைப்பாளர், கணக்காய்வாளர், செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை அறிவிப்பாளர் கவிஞர் சியான் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வு மூலம் மத்ரஸா மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் குர்ஆன் வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 

ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்      


கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய தேசத்தை கட்டி எழுப்பும் வளமான கிராமம் சமூக உற்பத்திதிறன் மாதிரிக்கிராம அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (16) ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட அக்கரைப்பற்று 7ஆம் பிரிவில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா பிரதேச ஒருங்கிணைப்புக் குழத்தலைவரின் பிரதிநிதியும் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் பிரதேச சபை உறுப்பினரும் பிரஜா சக்தி தலைவருமான எம்.தங்கேஸ்வரன் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் நேசராஜா உள்ளிட்ட கிராமத்தின் முக்கியஸ்தர்கள்  பலர் கலந்து கொண்டனர்.
உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான முர்தாளா மற்றும் முஹம்மத் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கிளின் சிறிலங்கா தொடர்பான கீதமும் விசேட காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அக்கரைப்பற்று ஆம் பிரிவின் திட்ட அறிக்கை தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசனிடம் கையளிக்கப்பட்டது.
இதன் பின்னராக அதிதிகள் அனைவரும் இணைந்து மாதிரிக்கிராமத்தின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்;டது.

 


இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காயமடைந்துள்ளார் எனவும் அவர் கொல்லப்பட்டுவிட்டார் எனவும் சில தகவல்கள் பரவின.


நெதன்யாகு இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதைப் போல் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் இந்தப் புகைப்படம் ஏஐ உதவியினால் உருவாக்கப்பட்டது எனவும் அவர் காயமடைந்ததற்கான தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டது.


இந்நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதுவும் ஆகவில்லை. அவர் நலமுடன் உள்ளார். இது பொய்யான தகவல் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.