Showing posts with label SriLanka. Show all posts


இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடக்கிறது
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் இன்று ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடக்கிறது
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் இன்று மக்களைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கிறது
‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம்’ – பிரதமர் மோதி
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது" என்று பதிவிட்டுள்ளார்.


( வி.ரி. சகாதேவராஜா
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு  கல்லடி ராமகிருஷ்ணபுரத்தில்  உள்ள இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் சிறுமியர் இல்ல மாணவர்களின் சித்திரை புத்தாண்டு
விளையாட்டு விழா இடம் பெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் பரிசுகளை வழங்கி வைத்தார். 


 வி.சுகிர்தகுமார் 0777113659 

 அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக தாழ் நில பிரதேசங்களும் சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த  மழை இன்று காலையிலும் தொடரும் நிலையில் மீண்டும் மழை பெய்யவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றது.
அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.
அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையினால் மாவட்டத்தின் பல்வேறு தாழ் நிலபிரதேசங்களும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன்  காற்றும் வீசி வருகின்றது.
இதனால் மக்களது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் விளையாட்டு மைதானங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வி.சுகிர்தகுமார் 0777113659 



  சித்திரைப்புத்தாண்டு விசேட பூஜைகள் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் நேற்றிரவு (12) இடம்பெற்றது.
மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேநேரம் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தினை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலம் வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ப.கு.கேதீவரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.


  
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் நேற்றிரவு (12) இடம்பெற்றது.
மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேநேரம் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தினை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலம் வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ப.கு.கேதீவரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.


( வி.ரி.சகாதேவராஜா)
புத்தாண்டை முன்னிட்டு இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மண்டூர் 35, கண்ணன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 52 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்  வழங்கும் நிகழ்வு  பாடசாலையின் அதிபர். தெ.பேரின்பராசா  தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

கல்விக்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்று "எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் தொனிப்பொருளில்  இணைந்த கரங்கள் அமைப்பானது  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல கஸ்ர பிரதேசங்களில்  உள்ள பாடசாலை மாணவர்களுக்கு  உதவியினை வழங்கி  வருகின்றது.

மேலும் இந் நிகழ்வில்  ஆசிரியர்களான ந. நவகுமார், திருமதி. கி. விலோஜினி மற்றும் 
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான,
ஏஎம்.ரிஸ்வான்,
சி.காந்தன், சி. துலக்சன் ஆகியோர் 
கலந்து கொண்டு 52 மாணவர்களுக்கான பாடசாலைக்கு செல்வதற்கான  கற்றல் உபகரணங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் என்பன வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் ஆகியோரின் வழிகாட்டலில் காஸா சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிதிப்பங்களிப்பில் மூன்று இலட்சத்து நாற்பத்தேழாயிரம் ரூபா (LKR. 3,47,000.00) நிதியினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (08) கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களிடம் குறித்த தொகைக்கான கடிதத்தினை கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் முன்னிலையில் கையளித்தார்.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்), கல்லூரியின் பிரதி உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைப்போன்றே காஸா சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கான கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பங்களிப்பாக 623,500/- ரூபாய்க்கான ஆவணத்தை பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர் தலைமையிலான பாடசாலை குழாத்தினர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களிடம் குறித்த தொகைக்கான கடிதத்தினை கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் முன்னிலையில் கையளித்தனர் .


நூருல் ஹுதா உமர் 


அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் "வாழ்வில் வசந்தம்" வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 15 வது வீடு பயனாளியிடம் கையளித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது 

 நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளரிடம் இவ் வீட்டை வைபவ ரீதியாக கையளித்து வைத்தார் 

அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பத்வா குழு இணைப்பாளர் சங்கைக்குரிய மௌலவி அல் ஹாபிழ் ஏ எச் மின்ஹாஜ் (முப்தி) அவர்களின் பங்குபற்றுகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம் ரீ எம் சரீம், நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் ஆலோசகர் கலாபூஷணம் அல் ஹாஜ் எஸ் அஹமது, செயலாளர் ஏ புஹாது, பொருளாளர் எஸ் ஏ பாஸித், திட்ட முகாமையாளர் எம் எஸ் எம் நிப்றாஸ், நிந்தவூர் சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் நிதிஉதவியாளர் ஏ அன்வர், உட்பட பலரும் கலந்து கொண்டனர் 

நிந்தவூரில் வீடற்றோருக்கான வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் நிந்தவூரை சேர்ந்த கல்விமான் மர்ஹும் சீ ஓ லெஸ்தகீர் அவர்களின் புதல்வரும், இலங்கை சுங்க திணைக்களத்தின் ஓய்வுநிலை பிரதிப் பணிப்பாளர் ஓ எல் சப்ரி இஸ்மத்தின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் பெஸ்ட் ஒப் யங் அமைப்பினால் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது

நிந்தவூர்-4 ம் பிரிவில் இருந்து தாய் தந்தையை இழந்த, வீட்டு வசதியற்ற பபயனாளி ஒருவருக்கே இந்த வீடு கையளிக்கப்பட்டது 

இதன் மூலம் வாழ்வதற்கு ஓரளவேனும் வசதியான வீடின்றி கஷ்டப்பட்ட ஏழைக் குடும்பத்தின் நிரந்தர வீட்டுக்கான கனவு இந்த ரமழானில் நிறைவேறுகின்றது

 


ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தோட்டை - லூல்கந்துர பகுதியில் நேற்று (07) பிற்பகல் மாலை பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரிந்து ஹகுரன்கெத்தவிலிருந்து தெல்தோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பேருந்தின் சாரதி மற்றும் இரண்டு பெண் பணியாளர்களும் காயமடைந்து தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 நூருல் ஹுதா உமர்


இறக்காமம், குடுவில் அரபா நகர் கிராமத்தில் மின்சார வசதி இல்லாமல் மிக நீண்ட காலமாக பல்வேறு சிரமங்கள் உடன் வாழ்ந்து வந்த சுமார் 35 குடும்பங்களுக்கு தனவந்தர்களால் சூரிய சக்தி மின் இணைப்பு வழங்கப்பட்டது.

35 குடும்பங்களுக்கு மின் இணைப்பினை உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது. சமூக செயற்பாட்டாளர் எஸ்.எம்.சன்சீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஷ்ஷான் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு மின் இணைப்பினை வழங்கி வைத்தனர்.

இதன்போது பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், இறக்காமம் பொலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஜஃபர், கிராம உத்தியோகத்தர்களான ஏ.சீ.எம்.சமீர், எம்.ஜே.எம்.அதீக், சமூக சேவையாளர் ஜிப்ரி ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உரையாற்றுகையில், அடிப்படை வசதிகளின்றி மிகவும் கஷ்டத்துடன் வாழும் இக்கிராம மக்களின் நலன் கருதி தனவந்தர்கள் முன்வந்து மின்சார வசதியை ஏற்படுத்தி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
இங்குள்ள மக்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களின் சுகாதார ரீதியான பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு இக்கிராமத்தில் மருத்துவ முகாம்களை நடத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.

 


நூருல் ஹுதா உமர் 


நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். லத்தீப் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னா தலைமையில் நிந்தவூர் 02 அல்ஹிதாயா மகளிர் சங்க தலைவி எம்.ரி. நவுஷாவின் முயற்சியின் விளைவாக நிந்தவூரைச் சேர்ந்த தன்னார்வ தனவந்தர் ஒருவரின் பங்களிப்புடன் அல்ஹிதாயா மகளிர் சங்க அங்கத்தவர்கள் அனைவருக்கும் ஈச்சம் பழங்கள் இன்று (02.04.2024) வழங்கி வைக்கப்பட்டன. 

இந்நிகழ்விற்கு நிந்தவூர் பிரதேச பெண்கள் சிறுவர் பிரிவின் உத்தியோகத்தர்களான உளவளத் துணை உதவியாளர்கள் டி.எம். ஹஃப்ரத் மற்றும் ஏ.ஆர். தஹ்லான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 


சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சோதனை : பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு ! 


 நூருல் ஹுதா உமர்


உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. கே.எம். அர்சத் காரியப்பர் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள் இன்று (30) திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று.


உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகளினால் இந்த கள பரிசோதனையில் பரிசோதிக்கப்பட்டது.


மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கடை உரிமையாளர்களை கொண்டே அழிக்கப்பட்டது. 


இந்த கள விஜயத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர் எம்.ஜே. புஹாது உட்பட பலரும் ஈட்டுப்பட்டனர்.

 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு எதிர்வரும் காலங்களில் மாலை ஆறு மணி வரை இயங்கும் என அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்


 இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோவின் விலை 150 ரூபாவாலும் 400 கிராமின் விலை 60 ரூபாவாலும் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் அறிவித்துள்ளார்.



வெல்லவாய சந்தியில் நேற்று காலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் குறைந்தது 11 பயணிகள் காயமடைந்துள்ளனர்.


ஐந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் சாரதி உட்பட காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சக்கரத்தில் பயணித்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக சாரதி பஸ்ஸின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது


நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


 நூருல் ஹுதா உமர் 


இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழக ஊழியர்கள் 15% சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கும் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு அங்கமாக கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுக்கும் ஒருநாள் பணி பகிஷ்கரிப்பு மற்றும் அரசிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலையம் முன்பாக 
நடைபெற்றது. 

இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு, இலங்கை பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை பல்கலைக்கழக நிருவாக மற்றும் நிதி உத்தியோகத்தர்கள் சங்கம், அனைத்து பல்கலைக்கழக கல்விசார் ஆதரவு ஊழியர் சங்கங்கள், அனைத்து பல்கலைக்கழக உபவிடுதிக் காப்பாளர் சங்கம், அனைத்து பல்கலைக்கழக சேவை தொழிற்சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்கம், முற்போக்கு தொழிலாளர் சங்கம், இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்க பல்கலைக்கழக அதிகாரசபை மற்றும் இலங்கை பல்கலைக்கழக தகவல் தொழிநுட்பவியலாளர்கள் சங்கம் 
ஆகிய 10 தொழிற்சங்க அமைப்புகள் அடங்கிய கூட்டு தீர்மானத்தின் அடிப்படையில் இந்த பணிபகிஷ்கரிப்பு நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

 


வெடுக்குநாறியில் சிலருக்கு காயம்!

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் அவலக்குரல்! சிவராத்திரி வழிபாட்டுக்காக கூடியிருந்தோர் மீது பொலிசார் தாக்குதல்! பெண்கள் மீதும் தாக்குதல்! குடிநீர் எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு! ஆலய பொருட்களை உதைத்து தள்ளி அடாவடி!

படுகாயமடைந்த சிலர் வவுனியா மருத்துவமனையில் அனுமதி

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.