Showing posts with label Janaaza. Show all posts

 


அக்கரைப்பற்று உடையார் வீதி ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் இபுறாஹிம் மாஸ்டர் இன்று( (14) அதிகாலை காலமானார் 


இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரஹும் எம்.ஐ. உதுமாலைப்பை அவர்களின் அந்தரங்க செயலாளருமாவார் 


இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன் 


இவர் ஜெஸ்மின் சாந்தா அவர்களின் கணவரும் 


 பெளசீல் றுசைக் photo star ,  ஆகியோரின் அன்புத் தந்ததையும் ஆவார் 


ஜனாஸா நல்லடக்கம் 

இன்று (14) காலை 7 மணிக்கு ஜும்மா பட்டின பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் நடைபெறும்

 


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி நேற்றிரவு சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. அவருக்கு வயது 79. 2014ம் ஆண்டு ‘அஞ்ஞாடி’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருதை வென்றிருந்தார். இவரின் ‘வெக்கை’ நாவலை தழுவி ‘அசுரன்’ படம் தயாரானது.


#Poomani | #RIPPoomani நேற்றிரவு சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. அவருக்கு வயது 79. 2014ம் ஆண்டு ‘அஞ்ஞாடி’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருதை வென்றிருந்தார். இவரின் ‘வெக்கை’ நாவலை தழுவி ‘அசுரன்’ படம் தயாரானது.


#Poomani | #RIPPoomani



🚨 மூதூர் - மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு 😢

திருகோணமலை மாவட்டம், மூதூர் - கங்குவேலி பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவர் மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் இன்று சனிக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.


குடும்பத்தினருடன் சமையலுக்குச் சென்றிருந்த நிலையில், குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனின் உயிரிழப்பு குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


🕊️ சிறுவனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


📍

 

அமரர் ராகுலன் பாராளுமன்றத்தில் பிரதம உரை பெயர்ப்பாளராகவும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் மற்றும் ஜனாதிபதி ஊடகத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளராகவும் [Director, Presidential Communication/Former Director of Legislator Services in Parliament & Chief Parliament Interpreter] கடமையாற்றி ஓய்வு பெற்றவர். பிறப்பில் மலையாளியாகத் திகழ்ந்த அமர் ராகுலன், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மிகவும் சரளமாக உரையாடக் கூடியவராகவும், மும்மொழிகளிலும் உரைபெயர்க்கக்கூடியவராகவும் இருந்தார். அவர் ஸ்ரீ நாராயண குரு சங்கத்தின் தலைவராக கடமையாற்றி, இலங்கையில் வாழும் மலையாள சமூகத்தை வழிநடத்தக்கூடிய பாத்திரத்தையும் திறம்பட வகித்திருந்தார்.
அரச பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், சமூகப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வேளையில், தமது 81ஆவது வயதில் அவர் நேற்று காலமானார்.

 


முன்னாள்l பாராளுமன்ற உறுப்பினரும்,

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்,

ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான

மீராசாஹிபு அப்துல் மஜீத் வபாத் 


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


யா அல்லாஹ் அன்னாரின் எல்லா நற்செயல்களையும் ஏற்று, ஜன்னத்தில்

உயர்ந்த இடத்தை வழங்குவானாக.


ஆமீன்.


ஜனாஷா தற்பொழுது 201/11, சீபல் அவனியூ, கிருலப்பனையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கக்கப்பட்டுள்ளது. .


201/11, Sibel Avenue,

Kirulappone, 

Colombo 06


ஜனாசா நல்லடக்கம் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


 Mohamed Issadeen Meerasahibu

தமிழ் திரை உலகின் மூத்த கலைஞர்களில் ஒருவரான பாக்யராஜ் இன்று காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா எனப் பல பரிமாணங்களில் திரைத் துறைக்கு தனது பங்களிப்பைச் செய்தவர் பாக்யராஜ். தமிழ் திரை உலகில் நடிகர்கள் இயக்குநராகவும், இயக்குநர்கள் நடிகர்களாவும் அவதாரம் எடுத்தாலும் இரு கலைகளும் ஒருசேர செய்து இரண்டிலும் சாதித்த வெகு சிலரில் பாக்யராஜும் ஒருவர்.

சமீபத்தில் மறைந்த முதுபெரும் பாரதிராஜாவின் சீடராக இருந்தவர் பாக்யராஜ். பாரதி ராஜாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஶ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். இயக்குநர் என்பதையும் கடந்து நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ்

தமிழ் திரை உலகின் மூத்த கலைஞர்களில் ஒருவரான பாக்யராஜ் இன்று காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார்.


அவரது உடல் நாளை (ஜூன் 28) பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் பாக்யராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.


அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்." எனத் தெரிவித்துள்ளார்.

'ரஜினி படங்கள் போல கமலுடன் அதிகம் நடிக்காதது ஏன்?' - பிபிசி தமிழுக்கு

பாக்யராஜின் இல்லத்திற்கு வருகை தந்த அமைச்சர் ராஜ் மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவரின் மறைவு செய்தி கேட்டு நிலை குலைந்து போய் உள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தொலைபேசியில் என்னுடன் பேசினார். ஒட்டுமொத்த கலை உலகிற்கும் இது மாபெரும் இழப்பு. குருநாதரை இழந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள்ளாக அவருடைய சீடனையும் இழந்துள்ளோம். இந்த துக்கத்தில் அவர் குடும்பத்தினருடன் நாங்கள் பங்கெடுக்கிறோம்." என்றார்.


பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள் கூறியது என்ன?

பாக்யராஜின் இல்லத்திற்கு வருகை தந்த நடிகை சுஹாசினி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாக்யராஜ் சமீபத்தில் எங்களுடன் நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் திரும்பி வந்திருந்தார். இன்று காலை நடைபயிற்சி சென்றுவிட்டு நெஞ்சு வலி எனக் கூறியதால் மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அவருடைய உயிர் பிரிந்தது. சிரித்துக் கொண்டே இருந்தவர் சிரித்துக்கொண்டே மறைந்திருக்கிறார்." என்றார்

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கண்ணீர்மல்க செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்னுடைய வாழ்க்கையின் மிகவும் துக்கமான நாள். உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பு தேவை." என்றார்.


அழுது கொண்டே பேசிய சார்லி

கண்ணாடி அணிந்தே வெற்றி பெற்ற நடிகர் என்றால் அது பாக்யராஜ்தான் என்று நடிகர் ராமராஜ் தெரிவித்தார்.


மறைந்த பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், " எனக்கு அவர் ஒரு ரோல்மாடல், அவரது திரைப்படங்கள் அனைத்தையும் முதல்நாளே பார்த்துவிடுவேன், பாரதிராஜா மீது பாக்யராஜ் உயிரையே வைத்திருந்தார், குருநாதர் இறந்த குறுகிய நாட்களிலேயே அவரும் இறந்துள்ளது எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறினார்

சாதாரண நடிகர்களை சாதனை நாயகர்களாக உயர்த்தி பிடித்தவர் பாக்யராஜ் என்று, நகைச்சுவை நடிகர் சார்லி தெரிவித்தார். பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அனுமதியின்றி என்னை நீ பார்க்க வரலாம் என்று சொன்னவர் பாக்யராஜ், ஆனால் இன்று அவரது அனுமதி இல்லாமல் அவரை இந்த நிலையில் பார்ப்பது எனக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறி கண்கலங்கினார் சார்லி.


இளையராஜா இரங்கல் செய்தி

இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி காணொளி ஒன்றில், "பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். சுற்றுப்பயணத்தில் இருப்பதால் உடனடியாக நேரில் செல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்." என கூறியுள்ளார்

மேலும், "என்னுடைய ஆரம்பகாலத்தில் நெருங்கி பழகிய பாக்யராஜ் அவர்கள் மறைவு கேட்டு மிகவும் வருந்துகிறேன். ஸ்கிரீன் பிளே ரைட்டிங்கில் இந்தியாவில் முதலிடம் வகிப்பவர். அவருடைய திடீர் மரணம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது." எனவும் இளையராஜா கூறியுள்ளார்.


தலைவர்கள் இரங்கல்

பாக்யராஜ் மறைவுக்கு தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "மூத்த தமிழ் திரை இயக்குநர் மற்றும் எழுத்தாளர் கே.பாக்யராஜின் மறைவு திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு. அவரின் தனித்துவமான கதைசொல்லும் பாணி, படைப்பாற்றல் மேன்மை தனது தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பு மக்களின் மனதில் அவருக்கு சிறப்பான இடத்தைப் பெற்றுக்கொடுத்தது." எனத் தெரிவித்துள்ளார்.


ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாக்யராஜின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்

பாக்யராஜூக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய சினிமாவில் முடிசூடா திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.


தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு." என்றும் தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் தனது எக்ஸ் பதிவில், "மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்."


பாக்யராஜின் மறைவுக்கு கே.அண்ணாமலை இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். "சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது," என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்த்துள்ளார்.


மேலும் அவர், "தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்." என்றும் குறிப்பிட்டிருந்தார்.


தமிழ் திரையுலகின் "திரைக்கதை மன்னன்" என்று போற்றப்பட்ட இயக்குநர் திரு. பாக்யராஜ் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி என்னை மிகுந்த துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


"ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரது படைப்புகள் இன்றளவும் சிறந்த பாடமாக விளங்கி வருகின்றன. எளிமையான கதை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் இணைத்து, தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார்." என்றும் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.


உதவி இயக்குநர் டூ நடிகர்

பாரதிராஜா இயக்கிய 'சிகப்பு ரோஜாக்கள்' படத்துக்கு வசனமும், 'ஒரு கைதியின் டைரி' படத்துக்கு கதை, வசனமும் எழுதியவர் பாக்யராஜ் தான்.


பாரதிராஜாவிடம் பணியாற்றியது குறித்து பிபிசி தமிழிடம் முன்பு பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், ''எங்க டைரக்டர் எப்பவுமே சீரியஸ் டைப். எல்லா விஷயத்தையும் அழுத்தமாக சீரியஸ் ஆக சொல்வார். நான் எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் அதை எளிமையாகவும், காமெடி, சென்டிமென்ட் கலந்தும் கொடுக்கணும்னு நினைப்பேன்'' என்று கூறியிருந்தார்.


பாக்யராஜ், மறைவு, இயக்குநர் பாக்யராஜ்பட மூலாதாரம்,K Bhagiyaraj

பாக்யராஜை நடிகராக அறிமுகம் செய்தது அவரது குருநாதரான பாரதிராஜாதான். தன்னுடைய பல்வேறு படங்களில் சிறுசிறு வேடங்கள் கொடுத்து பாக்யராஜை நடிகராக்கிய பாரதிராஜா, தன்னுடைய ''புதிய வார்ப்புகள்'' படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.


அப்படத்தில் பாக்யராஜை நடிக்க வைத்தது பற்றி கூறிய அவர், ''பாக்யராஜை நான் ஹீரோவாக்கும் போது, பெரும்புள்ளிகள் பல பேர், 'ஏன் இந்த விஷப்பரிட்சை' என்று கேட்டார்கள். 'இல்லை. என் கற்பனையில் தோன்றுகிற வாத்தியார் இப்படித்தான் இருக்கவேண்டும். நடிப்பதற்கு எவ்வளவோ பேர் வந்து போகிறார்கள். இவன் தான் சொல்லிக்கொடுக்கிறான். என் வாத்தியார் மாதிரியே இருக்கிறான். ஒரு கண்ணாடி மட்டும் போட்டுவிட்டால், என் வாத்தியார்தான்' என்று நினைத்தேன்.'' என்று கூறியிருந்தார் பாரதிராஜா.


பாக்யராஜ், மறைவு, இயக்குநர் பாக்யராஜ்பட மூலாதாரம்,Lok Bhavan TN

திரைத்துறையில் சாதித்த பாக்யராஜ்

1980- களின் திரைக்கதை மன்னன் என்று திரையுலகினரால் போற்றப்படும் கே.பாக்யராஜ் 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எழாம் தேதி கோவையில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் கிருஷ்ணசாமி நாயுடு. தாயார் அமராவதி அம்மாள்.


1978-ஆம் ஆண்டு பதினாறு வயதினிலே படத்தை இயக்குநர் பாரதிராஜா இயக்கிய போது, அதில் உதவியாளராக சேர்ந்த பாக்யராஜ். பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் கவுண்டமணியுடன் ஒரு காட்சியில் நடித்தார்.


பாரதிராஜாவின் மூன்றாவது படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்தவர், அப்படத்திற்கு வசனமும் எழுதினார். தனது நான்காவது படமான 'புதிய வார்ப்புகள்' படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா.


கதாநாயகனாக வெற்றி பெற்ற பின்னர் சுதாகர், சுமதி நடித்த 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் அதில் ஒரு குணச்சித்திரப் பாத்திரத்திலும் நடித்திருந்தார். பாக்யராஜை இயக்குநராக அறிமுகப் படுத்தியவர் பிரபல தயாரிப்பாளரான கே ஆர் ஜி அவர்களின் சகோதரர் கோபிநாத்.


ராஜேஷ் அறிமுகமான 'கன்னிப்பருவத்திலே' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி அப்படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்த இவர், ஒரு கை ஓசை' என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். இவரே இயக்கிய இந்தத் திரைப்படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்


அடுத்து இவர் இயக்கிய 'மௌன கீதங்கள்' 'இன்று போய் நாளை வா', படங்கள், மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.


விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு பேச்சு, டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு என இவரது படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்தன.


இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புது அவதாரம் எடுத்த இவர் அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது குருநாதர் பாரதிராஜாவுடன் இணைந்து இவர் பணியாற்றிய படம் 'ஒரு கைதியின் டைரி' கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த அந்தப் படம் மிகச் சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது


ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் கதாநாயகனாக நடிக்க அப்படத்தை இயக்குகின்ற பொறுப்பை பாக்யராஜ் ஏற்றார். ஆக்ரி ராஸ்தா என்ற பெயரில் வெளியான அந்தப் படம்தான் பாக்யாராஜ் இயக்கிய முதல் இந்திப் படம்.


பாக்யராஜின் எண்ணற்ற வெற்றிப் படங்கள் இந்தி மொழியில் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஒரியா என்று பல மொழிகளில் இவரது கதைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.


திரைப்படத் துறையோடு எழுத்துலகிலும் தன் முத்திரையைப் பதித்த இவர் கடந்த இருபது ஆண்டுகளாக பாக்யா வார இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் என்கிற சிறந்த புத்தகத்தை எழுதிய இவரது கைவண்ணத்தில் 'நீங்க நெனச்சா சாதிக்கலாம், உங்கள் பாக்யராஜின் கேள்வி - பதில் என பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன


புதிய வார்ப்புகள் படத்தின் சிறந்த வசனத்திற்காகவும், தாய்க்குலமே தாய்க்குலமே படத்தின் சிறந்த திரைக்கதைக்காகவும் தமிழக அரசின் விருது பெற்ற இவர், 'ஒரு கை ஓசை' படத்தில் சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருதினைப் பெற்றார்.


பாக்யராஜ், மறைவு, இயக்குநர் பாக்யராஜ்பட மூலாதாரம்,EPS TamilNadu

பிலிம்பேர் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளைப் பலமுறை பெற்றுள்ள கலைஞர் இவர்.


தமிழ்த் திரையின் கதாநாயகர்கள் ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் அடுத்த வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் தனது இயல்பான நடிப்பால் நம்மையெல்லாம் கவர்ந்தவர் இவர்


மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நடித்து பாதியில் நின்று போன திரைப் படமான 'அண்ணா நீ என் தெய்வம்' திரைப்படத்தில் எம்.ஜி. ஆர். நடித்திருந்த காட்சிகளை வைத்துக் கொண்டு அதற்கு புதிய திரைக்கதை எழுதி "அவசர போலீஸ் - 100" என்ற பெயரில் அந்த படத்தை வெளியிட்டது பாக்யராஜின் தனித் திறமை.


இவர் உதவி இயக்குநராக இருந்த போது இவருக்கு உதவியவர் பிரவீணா என்ற நடிகை. அப்போது முதலே இவர்கள் இருவருக்குமிடையே காதல் இருந்தது. கதாசிரியராக அறிமுகமாகி இயக்குநராக உயர்ந்து வெற்றிகரமான கதாநாயகன் என்ற இடத்தைப் பிடித்த பிறகு, 1981-ஆம் ஆண்டில் பிரவீணாவை மணந்தார்.


"இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மிணி" போன்ற பலபடங்களில் இவருடன் நடித்த பிரவீணா, மஞ்சள் காமாலை நோய் காரணமாக 1983ஆம் ஆண்டில் மறைந்தார்.


பாக்யராஜ், மறைவு, இயக்குநர் பாக்யராஜ்பட மூலாதாரம்,Sembuli Jagan

படக்குறிப்பு,'சுந்தர காண்டம்' திரைப்படத்தில் பாக்யராஜ்

முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவரும் டார்லிங் டார்லிங் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவருமான பூர்ணிமா ஜெயராமை பாக்யராஜ் இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.


தனது மகள் சரண்யாவை பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் தன் இயக்கத்திலேயே கதாநாயகியாக இவர் அறிமுகம் செய்தார். சரண்யா பாரிஜாதம் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை.


சாந்தனு "சக்கரக்கட்டி" படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.


ஒரு கால கட்டத்தில் குணச்சித்திர வேடங்களுக்கு மாறிய இவர், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், உத்தம புத்திரன், வாகை சூட வா என எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.


உதவி இயக்குநராக வாழ்க்கையைத் துவங்கி தமிழ்த் திரையின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரு அற்புதமான கலைஞர் பாக்யராஜ். இவர் கடைசியாக ஒரு விளம்பரப் படத்தில் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.

நிந்தவூர்-16, பிரதான வீதியயைச் சேர்ந்தவரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தின் ஆரம்பகால பீடாதிபதியும், ஓய்வுபெற்ற சிரேஸ்ட விரிவுரையாளருமான அல்ஹாஜ். ஏ. நசீர் அஹமட் அவர்கள் இன்று (2026.06.02)காலை இறையழைப்பை ஏற்றுக்கொண்டார்.


இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன்.


அன்னார் காலஞ்சென்றவர்களான ஓய்வுபெற்ற அதிபர் அல்ஹாஜ். ஏ. எம். அகமத், ஹாஜியானி. துஹ்பா ஆகியோரின் புதல்வரும்,


ஓய்வுபெற்ற ஆசிரியை யாக்கூப் சாதுனாவின் அன்புத் துணைவரும்,


ஓய்வுபெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ். எம். எச். யாக்கூப் ஹஸன், ஹாஜியானி செயின் றாஹிலா ஆகியோரின் மருமகனும்,


தௌசீப் அஹமட்(கட்டார்), வாசீப் அஹமட் (No limit)ஆகியோரின் அன்புத் தந்தையும்,


மர்ஹுமா பௌசுல் மின்னா(பரீதா), ஹாஜிகளான ஏ. ஷபாஅத் அஹமட் (விவாகப் பதிவாளர்), ஓய்வுபெற்ற தொழினுட்ப உத்தியோகத்தர் ஏ. சஹீட் அஹமட், ஏ. ஷபீக் அஹமட்(ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்), ஹாஜியானிகளான ஏ. நூறுல் ஹிதாயா, ஏ. சித்தி ஜெமீலா (சபீனா), ஏ. ஷர்புன் நிசா, ஏ. அஷ்றப் அஹமட், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏ. இப்திகார் அகமட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,


காலஞ்சென்றவர்களான    அல்ஹாஜ். எம். ஐ. அகமட், JP, - (முன்னாள் தவிசாளர், பிரதேச சபை, நிந்தவூர்), ஓய்வுபெற்ற ஆசிரியரான எம். மீராலெவ்வை, அல்ஹாஜ். எஸ். பதுறுதீன்(ஓய்வுபெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக தலைமைப் பாதுகாப்பு அதிகாரி) ஆகியோரின் மைத்துனரும், 


ஓய்வுபெற்ற தபாலதிபர் அல்ஹாஜ். வை. வை. வொகார் ஹஸன், வை. ஜாஹிட் ஹஸன்(பட்டயக் கணக்காளர்), வை. ஜாயிசா ஹஸன், வை. றஸ்மி ஹஸன்(பட்டய கணக்காளர்) ஆகியோரின் மச்சானும்,


எஸ். றுசைக்கா(ஆசிரியை), எப். அஸ்ரா (வைத்தியர், மாவட்ட வைத்தியசாலை, சம்மாந்துறை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,


அல்ஹாஜ். எச். அப்துல் சத்தார் (பணிப்பாளர், நைட்டா) அவர்களின் சகலனும்,


மரீஹா, மஹ்தியா, மஸீயா, சாஸியா, பாதில் ஹஸன், ஆகியோரின் பாசமுள்ள அப்பாவுமாவார். 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு இஷா தொழுகையின் பின்னர் நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு, வைத்தியசாலை வீதியிலுள்ள றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அன்னாரின் மறுமை வாழ்வு பிரகாசிக்க உங்களது பிரார்த்தனைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


                     (ஏ.ஷபாஅத் அஹமத்)

 


கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் கார் ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தெரிவித்துள்ளது.


விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவத்தில் 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.


இந்த கொடூர விபத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவசர அவசரமாக ஹோமாகம பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விபத்தை ஏற்படுத்திய கேப் ரக வாகனத்தின் ஓட்டுநர், விபத்து நடக்கும் போது கடுமையான மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதனை அடுத்து, சம்மந்தப்பட்ட ஓட்டுநரை மீகொடை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 அக்கரைப்பற்று முதலாம் குறிச்சியை சேர்ந்த அக்கரைப்பற்று  (சுள்ளியர் பெமிலி) வபாத் ஆனார்கள் 


இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி றாஜிஹுன் 


இவர் 

லியாகத் அலி ( BMC)

ஜெமீல் (BMC)

இஸ்ஸதீன் (BMC)

அப்துல் ஹமீட் மௌலவி ஆகியோரின் அன்பு சகோதரரும் 


சபறுல்லாஹ் அவர்களின் அன்பு மருமகனும் 


சிராஜ் (சிங்கர்) அன்பு மைத்துனரும் ஆவார்கள் 


நல்லடக்க விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


Taqwa jummah mosque

Taqwa emergency service 

Akkaraipattu

மட்டக்களப்பு மொடர்ன் எலக்ரிகல் நஷாட் விபத்து ஒன்றில் சற்றுமுன்னர் காலமானார்கள்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...


விமான நிலையம் சென்று வருகையில் இந்த விபத்து ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்..


ஜனாஸா தற்போது

பகமுனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்..

 

சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (D.B.S. Jeyaraj) காலமானார்.  


அன்னாரின் இறுதிச் சடங்குகள் குறித்து குடும்பத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர் இலங்கை அரசியல், இனப் பிரச்சினை, புவிசார் அரசியல், சினிமா குறித்து ஆய்வுக் கட்டுகரைகளை எழுதி வந்தார். 


மேலும் ‘தி ஐலண்ட்’ (The Island), ‘டெய்லி மிரர்’ (Daily Mirror), ‘டெய்லி எஃப்.டி’ (Daily FT) உள்ளிட்ட முன்னனி ஆங்கில நாளிதழ்களில் நீண்டகாலமாகப் பத்திகளை எழுதி வந்ததோடு, தனது பிரத்தியேக அரசியல் இணையத்தளத்தினூடாகவும் (dbsjeyaraj.com) உலக நடப்புகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.



 பொத்துவில் - 02  மர்ஹும் மூசா GS அவர்களின் மூத்த மகனும், பிரதேச செயலக முகாமைத்துவ உத்தியோகத்தருமாகிய

MLM. ஹாபிழ் அவர்கள் இன்று காலமாகிவிட்டார் 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



 


ஓர் அழகிய இறை அழைப்பு


பொத்துவிலில் இருந்து முல்தஸம் ட்ரெவல்ஸில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற  வந்த  #அப்துல்_றவூப் (றஹீம் மனேஜர்) அவர்கள் தனது உம்ரா கடமையை நிறைவேற்றி விட்டு மக்கா 🕋 ஹரத்தில் தஹஜ்ஜத்துடைய நேரத்தில் இஹ்ராமுடைய ஆடையில் தஹஜ்ஜத் தொழுது விட்டு தவாஃப் செய்யும் இடத்தில் சுபஹ் அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் 2026-05-03 ம் திகதி இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொள்வானாக. ஆமீன்


தகவல்: றயீஸ் முப்தி

 


பேராசான் அப்துல் மலிக் அவர்களின் திடீர் மறைவு செய்தி அளவிட முடியாத துயரத்தை அளிக்கிறது.


மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அல்-மனாரின் பழைய மாணவர். உயர் கல்விக்காக பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவை அவர் தெரிவு செய்தார். கல்வி எனும் பெருங்கடலில் நீந்தி, கடல் கடந்து இஸ்லாமாபாத் சர்வதேச பல்கலைக்கழகத்தில் மத ஒப்பீட்டியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சர்வதேச அளவில் பல ஆய்வு மாணவர்களை உருவாக்கியவர்.


இடையறாத பணிக்கு மத்தியில் இலங்கையில் வெளியாகும் இஸ்லாமிய சிந்தனை, அல் ஹஸனாத் போன்ற சஞ்சிகைகளுக்கு அவர் எழுதி வந்த ஆய்வுக் கட்டுரைகள் மிகப் பெறுமதியானவை. 


மணிக்கணக்கில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அன்பர். மாணவப் பருவத்திலேயே அவருடன் உரையாடிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுவாரசியம் நிறைந்த உரையாடல்கள் அவரது புலமையை வெளிப்படுத்தி எமது ஆர்வத்தை தூண்டுபவை. பெரியார் குறித்தும் அவரது சமூக நீதி கருத்துக்கள் குறித்தும் அண்மையில்  என்னுடன் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் நினைவில் வந்து போகின்றன...


மதம், அரசியல், தத்துவம் என விரியும் அறிவார்ந்த உரையாடல்கள், குடும்ப நலன் வரை பரவியவை. கள யதார்த்தங்களை நன்கறிந்தவர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இயங்கியலையும் அதற்குள் இருக்கும் நுண்ணரசியல் குறித்தும் தெளிவான புரிதலுடையவர். 


என்னுடன் தனிப்பட்ட அன்பு கொண்ட அவர், எனது தொழில் வாழ்க்கையைப் பற்றியும் அக்கறையுடன் கேட்டறிவார்.


வெளிநாட்டு வாழ்கையை முடித்து தாய் நாடு திரும்பி கல்விப் பணியாற்றும் எண்ணம் கொண்டிருந்தார். மருதமுனையின் சமய, சமூக, கல்வி நிலைமைகள் குறித்து அக்கறையுடன் அவ்வப்போது கேட்டறிவார்.


இன்று, ஒரு மூத்த சகோதரனை இழந்த துயரத்தை உணர்கிறேன். நிலையற்ற உலகின் யதார்த்தத்தை இத்தகைய திடீர் மறைவுகள் எமக்கு உணர்த்துகின்றன.


எல்லாம் வல்ல இறைவன், அன்னாரின் பாவங்களை மன்னித்து, தனது அருளும் அன்பும் கொண்ட இறக்கைகளுக்குள் அவரை அரவணைத்தருள்வானாக. ஆமீன். அவர்களின் திடீர் மறைவு செய்தி அளவிட முடியாத துயரத்தை அளிக்கிறது.


மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அல்-மனாரின் பழைய மாணவர். உயர் கல்விக்காக பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவை அவர் தெரிவு செய்தார். கல்வி எனும் பெருங்கடலில் நீந்தி, கடல் கடந்து இஸ்லாமாபாத் சர்வதேச பல்கலைக்கழகத்தில் மத ஒப்பீட்டியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சர்வதேச அளவில் பல ஆய்வு மாணவர்களை உருவாக்கியவர்.


இடையறாத பணிக்கு மத்தியில் இலங்கையில் வெளியாகும் இஸ்லாமிய சிந்தனை, அல் ஹஸனாத் போன்ற சஞ்சிகைகளுக்கு அவர் எழுதி வந்த ஆய்வுக் கட்டுரைகள் மிகப் பெறுமதியானவை. 


மணிக்கணக்கில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அன்பர். மாணவப் பருவத்திலேயே அவருடன் உரையாடிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுவாரசியம் நிறைந்த உரையாடல்கள் அவரது புலமையை வெளிப்படுத்தி எமது ஆர்வத்தை தூண்டுபவை. பெரியார் குறித்தும் அவரது சமூக நீதி கருத்துக்கள் குறித்தும் அண்மையில்  என்னுடன் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் நினைவில் வந்து போகின்றன...


மதம், அரசியல், தத்துவம் என விரியும் அறிவார்ந்த உரையாடல்கள், குடும்ப நலன் வரை பரவியவை. கள யதார்த்தங்களை நன்கறிந்தவர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இயங்கியலையும் அதற்குள் இருக்கும் நுண்ணரசியல் குறித்தும் தெளிவான புரிதலுடையவர். 


என்னுடன் தனிப்பட்ட அன்பு கொண்ட அவர், எனது தொழில் வாழ்க்கையைப் பற்றியும் அக்கறையுடன் கேட்டறிவார்.


வெளிநாட்டு வாழ்கையை முடித்து தாய் நாடு திரும்பி கல்விப் பணியாற்றும் எண்ணம் கொண்டிருந்தார். மருதமுனையின் சமய, சமூக, கல்வி நிலைமைகள் குறித்து அக்கறையுடன் அவ்வப்போது கேட்டறிவார்.


இன்று, ஒரு மூத்த சகோதரனை இழந்த துயரத்தை உணர்கிறேன். நிலையற்ற உலகின் யதார்த்தத்தை இத்தகைய திடீர் மறைவுகள் எமக்கு உணர்த்துகின்றன.


எல்லாம் வல்ல இறைவன், அன்னாரின் பாவங்களை மன்னித்து, தனது அருளும் அன்பும் கொண்ட இறக்கைகளுக்குள் அவரை அரவணைத்தருள்வானாக. ஆமீன்.

சாஜித் ஜி எஸ் காலமானார். இவர்மர்ஹும் அப்துல் ஜப்பார்   அவர்களின் அன்பு மகனும் 


அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர் 

ஹரிஸ்பா அவர்களின் அன்புக் கணவரும்


ஹசீயா 

ஹசீபா ஆகியோரின் அன்பு தந்தையும் 



#பிர்னாஸ் (டுபாய்) 

#ரிப்கா ஆகியோரின் அன்பு சகோதரரும் 


ஹாரித் 

ஹனாஸ் ஆகியோரின் அன்பு மச்சானும் 


மஜீத் ஹாஜியார் (டயர் கடை, அரசடி)

அன்பு மருமகனும் 


மர்ஹும் பெரிய மோதினாரின் அன்பு பேரனும் 


மர்ஹும் பாறூக்

(கீப்பர்- ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தர்) இன் சகோதரியின் அன்பு மகனும் 


#சியாத் (ஆயுர்வேத வைத்தியசாலை ) ஆகியோரின் 

மைத்துனரும் ஆவார்.


"இன்ஷாஅல்லாஹ்"

இன்று இரவு 11.30 மணியளவில் அக்கரைப்பற்றில் அவரது வீட்டில் பார்வையிட சாத்தியப்படுவதுடன்

நாளை காலையில் 6 மண

 


மட்டக்களப்பின் பிரபல ஆசிரியரும் -  கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரீ.ஜெயசிங்கம் அவர்களின் துணைவியாருமான ஜெயசிங்கம் புஷ்பலதா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் ஆழ்ந்த அனுதாபங்கள்

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட 

 ஆதம்பாவா அப்துல் கையூம் ( *அஸ்ஸலாமு அலைக்கும்


ஜனாஸா அறிவித்தல்


அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட 

 ஆதம்பாவா அப்துல் கையூம் ( *கையூம் ஹாஜியார்* ) அவர்கள் இன்று கொழும்பில் வஃபாத்தானார்.


#إِنَّا_لِلّهِ_وَإِنَّا_إِلَيْهِ_رَاجِعُونَ


இவர்

ஆபிதா உம்மா ( *சித்திநிஷா* ) அவர்களின் அன்புக் கணவரும்


* அஃபீல் (ரஜா),

* அஃபீலா (ரஜானா),

* சுபஹான் (மசாஹிர்)


ஆகியோரின் அன்புத் தந்தையும்


* அஸ்கர் சம்சுதீன் (UAE),

* மக்கியா நசார்,

* ருஸானா யஹ்யா 


ஆகியோரின் மாமனாரும்


* ஷிஹாப் அஸ்கர் (Australia),

* டெஹானி அஸ்கர் (UAE),

* ஆகிப் அஃபீல்,

* ஷாஹின் சுபஹான் 


ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்


ஜனாஸா இன்று (10 April 2026) கொழும்பு ஜாவத்த ஜும்மா பள்ளிவாசலில் 6:30 PM க்கு  பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். 

பின்னர் அக்கரைப்பற்றுக்கு எடுத்துச் செல்லப்படும்.


அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து

அவர்களுக்கு #ஜன்னத்துல்_பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக.


அன்னாரின் குடும்பத்தாருக்கு மன வலிமையும் பொறுமையும் வழங்குவானாக.


 *ஜனாஸா நல்லடக்கம்*  பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.




 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818* ) அவர்கள் இன்று கொழும்பில் வஃபாத்தானார்.


#إِنَّا_لِلّهِ_وَإِنَّا_إِلَيْهِ_رَاجِعُونَ


இவர்

ஆபிதா உம்மா ( *சித்திநிஷா* ) அவர்களின் அன்புக் கணவரும்


* அஃபீல் (ரஜா),

* அஃபீலா (ரஜானா),

* சுபஹான் (மசாஹிர்)


ஆகியோரின் அன்புத் தந்தையும்


* அஸ்கர் சம்சுதீன் (UAE),

* மக்கியா நசார்,

* ருஸானா யஹ்யா 


ஆகியோரின் மாமனாரும்


* ஷிஹாப் அஸ்கர் (Australia),

* டெஹானி அஸ்கர் (UAE),

* ஆகிப் அஃபீல்,

* ஷாஹின் சுபஹான் 


ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்


ஜனாஸா இன்று (10 April 2026) கொழும்பு ஜாவத்த ஜும்மா பள்ளிவாசலில் 6:30 PM க்கு  பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். 

பின்னர் அக்கரைப்பற்றுக்கு எடுத்துச் செல்லப்படும்.


அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து

அவர்களுக்கு #ஜன்னத்துல்_பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக.


அன்னாரின் குடும்பத்தாருக்கு மன வலிமையும் பொறுமையும் வழங்குவானாக.


 *ஜனாஸா நல்லடக்கம்*  பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.




 


 சிறுநீரக மருத்துவமத் துறையின் முன்னோடியுமான

பேராசிரியர் ரிஸ்வி ஷெரிப் அவர்கள் காலமானார்கள்.

அக்கரைப்பற்று *PTM GOLD HOUSE உரிமையாளர் PTM மன்சூர்*  காலமானார்.

அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

ஜன்னத்துல் பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.