Showing posts with label Janaaza. Show all posts

 



ஓட்டமாவடி மாணவன் #அஸ்லூப் நீரில் மூழ்கி வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சந்தியாற்றில் நீராடச்சென்ற ஓட்டமாவடி-2, பீ.எஸ்.வீதியைச்சேர்ந்த ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) உயர்தரம் கற்கும், துபாயில் தொழில்புரியும் அலிகான் ஆசிரியரின் 19 வயதுடைய மகன் அஸ்லுப் சற்றுமுன்னர் நீரில் மூழ்கி வபாத்தானார்.

 அக்கரைப்பற்று - 21அரசயடி, அம்பாரை வீதியை சேர்ந்த


#அப்துல்_ரஷீட்_ரவூப் 

(பாலையாவின் மருமகன்)

அவர்கள் சவுதி அரேபியாவில் வபாத் ஆனார்கள்.


#இன்னாலில்லாஹி #வஹின்னாஇலைஹிராஜிஹூன்


இவர் 

#முகம்மது_சாலி_மஹ்ரூபா  

அவர்களின் அன்பு கணவரும்,


#ஹம்தி (சவூதி அரேபியா) 

#ஷஹானி  

ஆகியோரின் அன்பு தந்தையும்,


#ரவூஜி ( ஐனா Hotel) 

#ரஸூல் (water board) 

ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்கள்.


#ஜனாஸா_நல்லடக்கம்!

இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.




(Rep/Lafir-(SC)

 சட்ட உதவி ஆணைக்குழுவைச்.சேர்ந்த சட்டத்தரணி சாபிர் காலமானார்.

சட்டத்தரணியும், கல்முனை காணிப்பதிவகத்தின் கீழ் பிரசித்த நொத்தாரிசுவாக கடமையாற்றுபவரும், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான பணிப்பாளரும் (Legal Aid Commission), சம்மாந்துறை, நீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதியுமான M.T.சபீர் அகமட் அவர்கள் இன்று காலமானார்கள்.


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஸா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறையில் நல்லடக்கம் செய்யப்படும். 


  


மூதூர் விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த CTB பஸ் நடாத்துனர் ரிபாஸ் வபாத்தானார்


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


காத்தான்குடியைச் சேர்ந்த CTB பஸ் நடாத்துனர் ரிபாஸ் (வயது 38) இன்று (16) வெள்ளிக்கிழமை காலை வபாத்தானார்.


கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மூதூர் வைத்தியசாலைக்கு அருகாமையில் வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான றிபாஸ் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் வபாத்தானார்.



சாய்ந்தமருது - 07, மார்க்கட் வீதியில் வசித்து வந்த முஹம்மது செயின் முஹம்மது றியாஸ் ( ஜெமில் ஞாபகார்த்த வைத்தியசாலை மருந்தாளர்) அவர்கள் சற்று முன் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வபாத்தானார்.


 இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்.


அன்னார் முஹம்மது செயின் தம்பி ( ஓய்வு பெற்ற காசாளர் இலங்கை வங்கி)மர்ஹுமா ஆதம்பாவா பாத்தும்மா ( சைலா)) ஆகியோரின் அன்பு மகனும்  உம்முல் சஜ்றா அவர்களின் அன்புக் கணவரும்  நுஹா ஸெரீன் , பாத்திமா நிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்  ஜாஹாங்கீர் ( நிள அளவையாளர்),றமீஸ்,பயாஸ் ( மின் அத்தியட்சகர் இலங்கை மின்சார சபை), ஹக்கீம் ( இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்),நிப்றாஸ் (அலுவலக உதவியாளர் கமு/காரியப்பர் வித்தியாலயம் சாய்ந்தமருது) ஆகியோரின் அன்புச் சகோதரரும் மற்றும் மர்ஹும்களான ஆதம்பாவா ( ஆசிரியர்) சுபைதா ( றகுமத்தும்மா) ஆகியோரின் அன்பு மருமகனும்) அரூஸ் ( சட்டத்தரணி),சாஹிர் (வைத்தியர் கொழும்பு தேசிய வைத்தியசாலை), ஜவாத் (ஆய்வுகூட உதவியாளர் ஸாஹிறாக் கல்லூரி, கல்முனை),நிஷாத் ( ஆய்வுகூட உதவியாளர் மத்திய கல்லுரி சம்மாந்துறை) ஆகியோரின் மச்சானும்  ஆவார்.


அன்னாரின் ஜனாஸாத் தொழுகை இன்ஷா அல்லாஹ் நாளை 30/04/2025 புதன் கிழமை காலை 7.00 மணியளவில் சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசலில் நடாத்தப்பட்டு சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக ஆமீன்.

 


போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.


அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது. போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


"அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.


ஆயிரக்கணக்கான மக்களுக்கு "ஈஸ்டர் வாழ்த்துகள்" தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.


விளம்பரம்


சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, "அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துகள்" என்று கூறினார்.


ஆசிர்வாதம் வழங்கிய பிறகு, அவர் வாகனத்தில் ஏறி வாடிகன் சதுக்கத்தைச் சுற்றிவந்தார். அந்த நேரத்தில், பல முறை வாகனத்தை நிறுத்தி, குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.


ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மக்கள் முன்பு தோன்றிய போப்பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மக்கள் முன்பு தோன்றிய போப்

"அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை பிரான்சிஸின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறேன்'' என கார்டினல் ஃபாரெல் தெரிவித்தார்.


''இன்று காலை 7:35 மணிக்கு (உள்ளூர் நேரம்) ரோமின் பிஷப் பிரான்சிஸ், தந்தையிடம் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது''


''நற்செய்தியின் விழுமியங்களை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும் நமக்குக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஏழைகளுக்கு மிகவும் ஆதரவாக வாழ அவர் நமக்கு கற்பித்தார்'' எனவும் அவர் கூறியுள்ளார்.


போப் பிரான்சிஸ், கத்தோலிக்க திருச்சபையில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர். அதே நேரத்தில், பாரம்பரிய நிகழ்வுகள் தொடர வேண்டும் என்று கருதும் பழமைவாதிகளிடையேவும் இவர் பிரபலமாக இருந்தார்.


உலகின் தெற்குப் பகுதியில் இருந்து வந்த முதல் போப் இவர்தான்.


இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஐந்து வார மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து திரும்பினார்.


உலக மக்களுக்கு போப்பின் இறுதி செய்தி

மறைந்த போப் பிரான்சிஸ் ஈஸ்டர் தினத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையே உலக மக்களுக்கான அவரது கடைசி செய்தியாக அமைந்தது. ஈஸ்டர் ஞாயிறன்று போப்பின் அறிக்கையை அவரது உதவியாளர் ஒருவர் வாசித்தார்.


அந்த செய்தியில்,"மத சுதந்திரம், சிந்தனைக்கான சுதந்திரம், கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் இன்றி அமைதி இல்லை" என போப் தெரிவித்திருந்தார்.


காஸா மக்களையும், குறிப்பாக அங்கு வாழும் கிறிஸ்தவ மக்களையும் குறிப்பிட்ட அவர், அங்கு நிகழும் மோதல்கள் மரணத்தையும், அழிவையும் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.


மேலும் இந்த போர் "மோசமான மனிதாபிமான சூழ்நிலையை" உருவாக்குகிறது. உலகளாவிய யூத எதிர்ப்புவாதம் வளர்ந்து வருவது "கவலைக்குரியது" என்றும் அவர் கூறினார்.


"உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மோதல்களில் கொலை செய்வதற்கான தாகம் எவ்வளவு அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார்.


"அனைத்து இஸ்ரேலிய மற்றும் பாலத்தீன மக்களுக்காக எனது அன்பை வெளிப்படுத்துகிறேன். போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுங்கள், பணயக்கைதிகளை விடுவியுங்கள். அமைதியான எதிர்காலத்தை விரும்பும் மக்களுக்கு உதவுங்கள்." எனவும் போப் கூறியுள்ளார்.


யுக்ரேன் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் "நீடித்த அமைதியை அடைவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும்" எனவும் போப்பின் இறுதி அறிக்கை கூறுகிறது.


பவுன்சராக பணியாற்றிய போப்

பியூனஸ் அயர்ஸில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக உயர்ந்தவர் போப் பிரான்சிஸ். அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 1936 டிசம்பர் 17ம் தேதி போப் பிரான்சிஸ் பிறந்தார். பாசிசத்தின் பிடியில் இருந்து தப்பிக்க இத்தாலியில் இருந்து வெளியேறிய போப் பிரான்சிஸ், 5 குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் மூத்த மகன் ஆவார்.


சான் லொரெஞ்சோ நகரின் உள்ளூர் கால்பந்து க்ளப்பின் ஆதரவாளராக இருந்த போப் பிரான்சிஸ், டாங்கே நடனத்திலும் விருப்பம் கொண்டவர்.


இளம் வயதிலேயே கடுமையான நிமோனியா தாக்குதலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் நுரையீரலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தது. இதனால் அவர், தனது வாழ்நாள் முழுவதும் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையும் ஏற்பட்டது.


வயதுமூப்பின் காரணமாக தனது வலது காலில் ஏற்பட்ட மூட்டுவலியால் மிகவும் பாதிக்கப்பட்டார். இந்த பிரச்சனையை போப், 'உடல்ரீதியிலான அவமானம்' என்று குறிப்பிட்டார்.


வேதியியலில் பட்டம் பெறும்வரை, போப் பிரான்சிஸ் பவுன்சராகவும், தரையை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டார்.


உள்ளுர் தொழிற்சாலை ஒன்றில் எஸ்தர் பலெஸ்ட்ரினோவுடன் பணியாற்றிவர் போப் பிரான்சிஸ். எஸ்தர் பலெஸ்ட்ரினோ, அர்ஜெண்டினாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் என்பதால் கடும் சித்திரைவதைக்கு உள்ளானவர், இறுதியில் அவரது சடலம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினரான போப் பிரான்சிஸ், தத்துவயியல் பயின்றவர் என்பதும் இலக்கியம் மற்றும் மனோதத்துவத்தை பயிற்றுவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, துரிதமாக பதவி உயர்வு பெற்ற போப் பிரான்சிஸ், 1973 இல் அர்ஜென்டினா மாகாணத்தின் மேலதிகாரியானார்.



 காத்தான்குடியைப். பிறப்பிடமாகவும்,அக்கரைப்பற்றை வதிவிடமாகவும் கொண்ட

புரோட்வே #BROADWAY_MOTORS உரிமையாளர்

#இஸ்மாயில் காலமானார்


Sabry

Sacky Ismail 

Sathila

ஆகியோரின் தந்தையும்


Dr Munnawwer

இன் மாமனாரும்

ஆவார்


ஜனாஸா

தொழுகை

#9மணிக்கு

#மர்கஸ் #பள்ளிவாசலில்

நடைபெற்று

#தைக்காநகர்

#மையவாடியில்

நல்லடக்கம்

இடம்பெறும்


தகவல்

மகன் சப்ரி

 


Akkaraipattu 17

ஜின்னா வீதியை சேர்ந்த #மஸ்வூவுத்

(#முனீர் - SANA ELECTRICAL) காலமானார்.


அன்னார் 

மர்ஹூம்கள் #யூசுப்_மாஸ்டர் 

முஹம்மது பாத்தும்மா (#மம்மாத்தும்மா_டீச்சர்)

ஆகியோரின்

#மகனும்


#றியாசா 

அவர்களின் #கணவரும் 


#சறபா 

#ஹசீம் 

#சயான் 

ஆகியோரின் 

#தந்தையாரும் 


ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் #தாஹா_GS அவர்களின் 

#மருமகனும் 


மர்ஹூம் #நிஸ்பா_டீச்சர் 

#ஜெஸ்மின்_டீச்சர் 

#நளீர் (GAMA CONSTRUCTION)

ஆகியோரின் 

#சகோதரரும் 


மர்ஹும் 

#தாஜுதீன்_மாஸ்டர் 

ஓய்வு பெற்ற அதிபர் #சஹாப்தீன்

(#அன்சார்_மாஸ்டர்)

ஆகியோரின்

#மைத்துனரும் ஆவார்.


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


Taqwa Emergency service

0742421817

 


அக்கரைப்பற்று ஏவிவி வீதியில் அரசயடி சந்தியில் வசித்துவரும் அப்துல் பதாஃ மௌலவி வபாத் ஆனார்கள்


இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


நுஸ்வியாவின் அன்பு கணவரும்


ஹஸ்ஸான்

சம்ஹா

லெபீபா

ஹஸ்னான் ஆகியோரின் அன்பு தந்தையும் 



இல்யாஸ் மௌலவி யின் அன்பு சகோதரரும் 


அன்சார் தப்லீக் அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்கள்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4.30 மணியளவில் ஜும்மா பட்டியடிப்பிட்டி பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு பட்டியடிப்பிட்டி மையவாடியில் நடைபெறும் 


Taqwa Emergency service

0742421818

 

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ் சேவையின் பணிப்பாளராய் விளங்கிய கலாசூரி திருமதி.அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்கள் காலமானார்கள்.
80-வது வயதில் மரணம் சம்பவித்துள்ளது.


அக்கரைப்பற்று 2

உடையார் வீதியைச் சேர்ந்த

#செயினம்பு 

(#மதீனா_உம்மா) வபாத்தானார்கள்)


இன்னாலில்லாஹ்


இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் #மர்ஹூம்



#MIஉதுமாலெப்பையின் மனைவியும்


நிலோபா

Drநிஹாயா

நிஹாறா(ரூபா)

Shakeel Uthumalebbe 

ஆகியோரின் தாயாரும்


மர்ஹூம்

சனூன்,

Hameem Sakeer 

Insaf Abdul Hameed ,

ஆகியோரின்

மாமியும்

ஆவார்


ஜனாஸா நல்லடக்கம்


இன்று 

10 /2/2025

பட்டினப்பள்ளியில்

அஸர் தொழுகையை தொடர்ந்து ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு

நல்லடக்கத்திற்காக தைக்கா நகர் மையவாடிக்கு கொண்டு செல்லப்படும்


தகவல்

மகன்

Shakeel

 



வீரகேசரி பத்திரிகையின் யாழ். பிராந்திய பொறுப்பாசிரியரும் தினக்குரல் பத்திரிகை வார வெளியீட்டின் முன்னாள் பொறுப்பாசிரியருமான மூத்த பத்திரிகையாளர் ராஜநாயகம் பாரதி அவர்கள் சற்று முன்னர் காலமானார்.

 


மட்டக்களப்பு நீதிமன்ற சுருக்கெழுத்காளர் வாணி அக்கா  காலமானார். கல்முனை நீதிமன்றிலும் பணிபுரிந்திருந்த இவர், இம்மாதம் மட்டக்களப்பு நீதிமன்றமன்றுக்கு மாற்றலாகிச் சென்றிருந்தார். 



அக்கரைப்பற்று -02 ஓய்வு பெற்ற அதிபர்  S.M. Mohideen வபாத் இன்று காலமானார். இவர்,றகீபாவின் அன்புக் கணவரும்,றெசோனா, றிறானா. றொசானி-ரீச்சர், றிஸ்னி,.றுவைஸ்-லண்டன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னார் ஓய்வுபெற்ற அதிபர்களான 

S.M. Hussain, 

S.M.A. Ghafoor மற்றும் S.M. செயினுதீன் ஓடாவியார் 

மர்ஹும் S.M. Hassan அவர்களின் மூத்த சகோதரர் ஆவார்.

றெசோனா, றிறானா. றொசானி-ரீச்சர், றிஸ்னி,.றுவைஸ்-லுண்டன்,

பெரோஸ்( AI ) சியாம், சக்கீல், முனவ்வறா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு 9.30 மணிக்கு மர்கஸ் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நடைபெறும் 


அக்கரைப்பற்று -03ஆலிம் வீதியைச் சேர்ந்த றபிலா -(அக்கரைப்பற்று ஆயிசா மகளிர் கல்லுாரி) ஆசிரியை கொழும்பில் .இன்று காலை காலமானார்.

இவர் கணக்காய்வு அத்தியட்சகர் Nizar Yazeen Bawa அவர்களின் அன்பு மனைவியும், மா்ஹீம் அஹமட்லெப்பை- (முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்,  இப்றாஹிம் - ஓய்வு நிலை முகாமையாளர், சட்டத்தரணி ஏஎம்.தாஜ் -ஒலிரப்பாளர், சரினா  ஆசிரியை ஆகியோரின் சகோதரியும்,மனாப் மௌலவி-(ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் மதினியும் ஆவார். 


அவரது ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


 தம்பாளை ஸமட்

நேற்று இரவு(19)கரப்பொல ,முத்துக்கல் குளத்தின் இஸ்பீல் வழியாக மோட்டார் சைக்கிலில்  சேனபுரவிற்கு செல்லும் போது வெள்ள நீரில் மூழ்கிய சேனபுரயில் திருமணம் முடித்து இருந்த ஓட்டமாவடி ரிஸ்வான் அவர்களின் ஜனாஸா இன்று மீட்கப்பட்டுள்ளது-

தம்பாளை ஸமட் JP).

 


அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி கடற்கரை வீதியில் வசித்துவரும் 

முஹம்மது அபூபக்கர் முகம்மது பாத்தும்மா வபாத் ஆனார்கள் 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்


இவர் மரணித்த மீராசாஹிப் (சீனி முஹம்மது மனேஜர்) அவர்களின் அன்பு மனைவியும்


மரணித்த Yoosuf (A.I)

மரணித்த Hasim - கண்டி (ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்)

பேராசிரியர்: Dheen Mohamed (University of Qattar)

Ameen 

Nisam  (Accountant) 

மரணித்த Niyas - பிரதி அதிபர் 


Ummu Habeeba

Ummu Salma

Ummu Salha

Jameela

ஆகியோரின் அன்புத் தாயாரும்.


மரணித்த அலாவுதீன்  (ஆங்கில ஆசிரியர்)

Mr.தையார்  (ஓய்வு பெற்ற புள்ளிவிபரவியலாளர்)

Mr.முனவ்வர்  ஓய்வு பெற்ற கிராம அலுவலர் 

Mr.தாஹிர்  ஆசிரிய ஆலோசகர் (வலயக் கல்வி அலுவலகம் அக்கரைப்பற்று)

ஆகியோரின் மாமியாரும் ஆவார்


ஜனாஸா நல்லடக்கம்

இரவு 9.00 மணிக்கு பட்டினப் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு 

தைக்காநகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Taqwa Emergency service


 பாயிஷ் ஹஸரத் ஜூம்மா பிரசங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது இறை அழைப்பை ஏற்றார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....
அக்குரணை அஸ்னா பள்ளி முன்னாள் தலைமை இமாம் மெளலவி #பாயிஸ் ஹஸரத் அவர்கள் இன்று குத்பாப் பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் போது இறையடி சேர்ந்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.