Showing posts with label Janaaza. Show all posts

 


துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபிநய் காலமானார்

என்னவோ இவரின் மரணம் ஏதோ செய்கிறது தோல்வியடைந்த ஒருவரின் வாழ்க்கை மரணத்தை விட எவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என்பதை இவரை வைத்து பார்க்கும் போதே உள்ளுக்குள் உதறல் ஏற்படுகிறது இளைப்பாறட்டும்!

 www.ceylon24.com தமது ஆழ்ந்த இரங்கலை, மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றது.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார், வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் இன்று (07.11.2025) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் நாளை (சனிக்கிழமை 08.11.2025) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஞாயிற்றுக்கிழமை 09.11.2025 மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.



அக்கரைப்பற்று 12 உபதபாலக வீதி முதலாம் குறுக்கு தெருவை (#மாநகரசபை_முன்_வீதி ) சேர்ந்த



#ஒஸாமா (23 வயது) அவர்கள் வபாத்தானார்கள்.


#இன்னாலில்லாஹி_வ_இன் னா_இலைஹி_ராஜிஊன்


இவர்

#அஸ்மி Azmy Abdul Cader மற்றும்

#நிம்ஸா தம்பதியினரின் அன்பு #மகனும்

#ஹம்தான்

#நதா

#லுக்மான்


ஆகியோரின் அன்பு

#சகோதரரும்

Saneej Ahamed அவர்களின் #மருமகனும்


மர்ஹும் சுபைத்தீன் மாஸ்டர் (#SAFCO_SUBAIDEEN) அவர்களின் மருமகளின் மகனும்

Naleer Abdul Cader

ஆகியோரின் சகோதாரரின் மகனும் ஆவார்.


#ஜனாஸா_

#அம்பாரை_வைத்தியாசலைய ல் உள்ளது


நல்லடக்கம் பற்றி இன்ஷா அல்லாஹ்! பின்னர் அறிவிக்கப்படும்.

 


தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிந்தவூர் நீர்வழங்கல் திட்ட காரியாலயத்தில் மாணி வாசிப்பாளராக கடமையாற்றும்


அக்கரைப்பற்றைச் சேர்ந்த Mia Juman அவர்களின் அன்பு மகனார் அக்சத் அலி (தரம் -04 பாடசாலை மாணவர்) இன்று (27) இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.


#இன்னாலில்லாஹி_வ_இன் னா_இலைஹி_ராஜிஊன்

இறைவா, அந்த பச்சிளம் சிறுவனது நற்கிரிகைகளை ஏற்று மேலான


#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக...


அவரின், பெற்றோர், சகோதர்கள் மற்றும் குடும்பத்திற்கு பொறுமையையும் வழங்குவாயாக ஆமீன்.


ஜனாஸா நல்லடக்கம் காலை 10:00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள பட்டின பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அட்டாளைச்சேனை 15ஆம் குறிச்சியைச் சேர்ந்த,  அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர், சமத் ஆசிரியர் (தைக்காநகர்) காலமானார்!


அன்னார், சியாத் (அனர்த்த முகாமைத்துப் பணிப்பாளர்), றுமைஸா (ஆசிரியை), சப்றி (Eng), சப்னா ஆகியோரின் தகப்பனும், 


அதிபர். ஸாஹீர் ஹூஸைன், 

றிபாஸ் (அக்கறைப்பற்று நீதிமன்றம்) ஆகியோரின் மாமனாருமாவார்…


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.

 

அக்கரைப்பற்று 05,

 சின்னப்பள்ளி வீதி இஹ்சான்பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த,


#ELENS_TRADE உரிமையாளர்

#நிசார்_ஹாஜியார் இன்று வபாத்தானார்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்  


அன்னார்

#மர்ஹும்_முஹம்மது_இஸ்மாயில்  (Dr.ஜௌபர்).

#மர்ஹுமா_சுலைஹா_உம்மா ஆகியோரின் அன்பு மகனும் 


#உசைமா'வின் அன்புக்கணவரும்


#பஸ்னா

#பயாஸ் (Dubai)

#பஸ்லான் (Dubai)

#சக்கில் ஆகியோரின் அன்புத் தந்தையும் 


#சித்தி_சல்மா 

#சித்தி_பரிதா

#சித்தி_சமீனா 

#எஹியா (ELENS) ஆகியோரின் அன்பு சகோதரரும் 


#ஆரிபீன்

#கப்பார் ஆகியோரின் மைத்துனரும் 


#தஹா(GS)

#ரபாயுடீன்

ஆகியோரின் சகலனும் ஆவார்


அன்னாரின் ஜனாஸா நள்ளடக்கம் இன்று காலை 10.00 மணிக்கு பட்டினப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு 

தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் 


தகவல் மகன் சக்கில்


அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818




காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவரான ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப். MCM. ஜௌபர் JP அவர்கள் சற்று முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.


இ்ன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


اللهم اغفرله والرحمه.....


அன்னார்  MJ. ஹஸனுல் ஜெஹீர்  (Medical Final Year Student) அவர்களின் அன்பு தந்தையும், சம்மேளன உப தலைவர் ஜனாப். MAM. ஸுஹைர்  B.Com  (Accountant - RDA) அவர்களின் மச்சானும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் ஜனாப். MCM. அன்வர் அவர்களின் சகோதரரும் ஆவார்கள்.


அன்னாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கமானது இன்ஷா அள்ளாஹ் இன்றைய தினம் 2025.09.22 ஆம் திகதி இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து காத்தான்குடி - 01 மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அன்னாரின் மறுமை வாழ்விற்காவும் ஈடேற்றத்திற்காகவும் இரு கரம் ஏந்தி பிரார்த்தித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


ஊடகப் பிரிவு,

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,

காத்தான்குடி.

 


#மட்டக்களப்பில்  பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் #நிமலரஞ்சன்  காலமானார்.


 மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட  காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள்   திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  இன்றைய தினம் இயற்கை எய்தினார் .


திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர் மட்டக்களப்பு மக்களாலும் போதனா வைத்தியசாலை சமுகத்தாலும் பார்க்கப்படுகிறார். தனது வைத்தியத் திறமையினால்  நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த  வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல  முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.


அன்னாரின் இழப்புக்கு மட்டக்களப்பு மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர் ஆற்றிய சேவை அவரது ஆத்மாவை நிச்சயம் இறைவன் திருப்பாதம் சேர்க்கும்.



(Rep/Kalmunai Net)

 மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேக கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது இதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் பாண்டிருப்பைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா மேனகா ( கல்முனை வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்) ஆவார்.

விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


(Rep/Rijaan)

அட்டாளைச்சேனையை சேர்ந்த ஜஃபர் ரிஸ்லான் ( வயது 18 )என்பவர் காலமானார்,இன்று அதிகாலை தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளிலில் பயணம் செய்த வேளையில், பிரதான வீதிக்கு குறுக்காக வந்து மாடு குத்தியதால்,இவர் உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்தவர். காயமுற்று அக்கரைப்பற்று ஆதார தை்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாசா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைகளின் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 🤲

 


மருதூரின் முகவெற்றிலை ஷீபிரிஸ் நன்பர் ஜௌபரின் மரணச் செய்தி ஆளத் துயரமே என்றும் புன்சிரிப்பிலும் மென்மைப் பேச்சிலும் மக்களை ஈர்த்த நல் உள்ளம் ஒன்று உலகை விட்டுப் பிரிந்து சென்றதே இன்னாலில்லாயிவயின்னாஇலைஹி ராஜ்ஊன் 


*30/08/2025 சனிக்கிழமை*


*சாய்ந்தமருது 09, 

GMMS வீதியில் வசித்து வந்த 

MY. #ஜௌபர் #(சீ விரிஸ்) உரிமையாளர் அவர்கள் சற்று முன் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்*


*அன்னார், A. பசிலா வின் அன்புக் #கனவரும்,  மர்ஹும்கலான IL முஹம்மது யூசுப், IL பாத்தும்மா அவர்களின் அன்பு 7வது #மகனும், MJM. மலாஸ், MJF. மபாஸா, MJM. மபாக், ஆகியோரின் #தந்தையும், மர்ஹும் MY. ஜப்பார். MYM. ரஸ்ஸாக், MY. ,உம்மு சல்மா MYM.குலாம், MYA.ரபிக், MYM. ஜலீல், MYM. அஸ்ரப், ஆகியோரின் அன்புச் #சகோதரரும் ஆவார்கள்*


*அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் விபரம் பின்னர் அறியத்தரப்படும்* 

 

எனவே அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக ஆமீன்.


*அறிவிப்பவர் 

மகன்  MJM. மலாஸ்*


 மருதமுனையை பிறப்பிடமாக கொண்ட காத்தான்குடி மக்களுக்கு நன்கு பரீட்சயமான மௌலவி அபூ உபைதா அவர்கள் சவூதியில் மரணத்த செய்தி வேதனை தருகிறது, 


இன்னாலில்லாஹி...


இவரது ஹஜ் / உம்ராஃ ட்ரவல்ஸ் மூலம் நமதூர் ஆயிரக்கணக்கான மக்கள் ஹஜ் மற்றும் உம்றாஃ கடமையினை நினைவேற்றிய அனுபவங்களை கொண்டுள்ளனர். 


இறைவன் அன்னாரை பொருந்திக்கொள்வானாக!

 


மூத்த ஊடகவியலாளர் வார #உரை_கல் பத்திரிகையின் ஆசிரியர் #புவி_றஹ்மத்துல்லாஹ் மறைந்தார்


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.


1960களில் இலங்கையின் மூத்த தமிழ் பத்திரிகைளில் ஒன்றான தினபதியில் ஊடக பயணத்தை ஆரம்பித்த இவர், 2000ஆம் ஆண்டுகளில் காத்தான்குடியில் வார உரை கல் என்ற பத்திரிகையின் மூலம் துளியளவும் யாருக்கும் அஞ்சாமல், ஊழல்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் கண்டித்து எழுதியவர்,


அதற்காக பெருமளவில் பழிவாங்கப்பட்டவர்.


அநியாயக்கார அரசியல்வாதிகளின் கொலை முயற்சிகளில் உயிர் தப்பியவர், வெறும் சொல்லில் இல்லாமல் பல சமூக விடயங்களை செயலில் காட்டியவர்.


எவ்வளவு தடைகள் வந்த போதிலும், உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்மாதிரியாக செயற்பட்ட ஒரு  ஊடகவியலாளர்.


ஜனாஸா தொழுகை ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு புதிய காத்தான்குடி அப்றார் பள்ளிவாயலில் நடத்தப்பட்டு நூரானியா ஜும் ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Mathy Anpan

Mohamed Mehboo



அக்கரைப்பற்று  5 ஐ பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்படமாகவும் கொண்ட முஹம்மது அபூபக்கர் அபுல் ஹசன் ஹாஜி கொழும்பில் இன்று காலமானார். இவர் பன்நெடுங்காலமாக இலங்கை வானொலி ஆங்கில செய்திப் பிரிவில் சிரேஸ்ட செய்தியாளராகப் பணிபுரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபுல் ஹசன் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை செய்தியாளராக சுமார் முப்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னர் சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் Sun, Weekend ஆகிய  பத்திரிகைகளிலும் கடமை புரிந்தார்.

ஏ சீ எஸ் ஹமீத் வெளி விவகார அமைச்சராக இருந்த போது அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றினார்.  ஊடகப்பணிக்காக பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். தற்போது 

தெமட்டகொடை, ஞானவிமல வீதியில் வைக்கப்பட்டுள்ள அவரது ஜனாஸா இன்றிரவு  இசாத் தொழுகையின் பின்னர் தெஹிவளை ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அபுல் ஹசனின் மறுமை வாழ்விற்காக அனைவரும் பிரார்த்திப்போம்.



 

அக்கரைப்பற்று 2 கூட்டுறவு சங்க வீதியில் வசித்துவரும் அப்துல் கபூர் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) காலமானார்.

 அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயம் ஆயிஷா மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பன்னெடுங்காலமாக தமிழ் மொழி ஆசிரியராக பணி புரிந்திருந்தவர் இவர், வயது மூப்பின் காரணமாக தனது 87 வது. வயதில் காலமானார்.

அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தைச் செதுக்கியவர்களுள் கபூர் மாஸ்டரும் ஒருவர் எனலாம்.

கலை இலக்கிய நயம் மிகுந்த இவர் பல மாணவர்களை , பயிற்றுவித்து தேசிய மட்டப் போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்காக  பணிபுரிந்து இருந்தார்.

  அக்கரைப்பற்று கலாசார பேரவை மற்றும் ப பிரதேச செயலகம் ஆகியவை இவரது கலை இலக்கியப் பணிக்காக விருது வழங்கி கௌரவித்திருந்தது.

இவர்,சனூபா,அறூஸா,சதீம் (WB) ஆகியோரின் அன்பு தந்தையும் 

அப்துல் கரீம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்),

ஜமால்தீன்  (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

 

ஆகியோரின் அருமைச்

சகோதரரும் 

மன்சூர் (PTM)

ஜெலீலுர்ரஃமான் (ஆசிரியர்) 

நௌபல் - சஊதி அரேபியா, ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்கள்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் ஞாயிறு காலை நல்லடக்கம் செய்யப்படும்.




 #அக்கரைப்பற்று 5ம் குறிச்சியை சேர்ந்த , அக்கரைப்பற்று #மாநகர_சபையின் உறுப்பினர் பொறியிலாளர் #சிராஜுதீன் அவர்கள் காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


ஜனாஷா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 



 அக்கரைப்பற்று மீராவோடையில், இன்று காலையில் நீரில் இறங்கிய இரண்டு வயது குழந்தை இரவு 8 மணி அளவில்  ஆதரவைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.  

இந்தக் குழந்தையின் உயிரினைக் காப்பாற்றுவதற்கு வைத்தியர்கள் பகீரதப் பிரயத்தனம் இன்று காலை முதல் மேற்கொண்டு இருந்தார்கள் இருப்பினும் குழந்தை உயிரிழந்துள்ளது 

.

 


சட்டத்தரணி அஷாம் சாதிக் துபாயில் காலமானார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் ஜன்னத்தை அல்லாஹ் அளித்திடட்டும்!

குறிப்பு:
ஜனாஸா தற்போது UAE சார்ஜா அஜ்மான் மெடிக்கல் சிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 
See less

 



ஓட்டமாவடி மாணவன் #அஸ்லூப் நீரில் மூழ்கி வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சந்தியாற்றில் நீராடச்சென்ற ஓட்டமாவடி-2, பீ.எஸ்.வீதியைச்சேர்ந்த ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) உயர்தரம் கற்கும், துபாயில் தொழில்புரியும் அலிகான் ஆசிரியரின் 19 வயதுடைய மகன் அஸ்லுப் சற்றுமுன்னர் நீரில் மூழ்கி வபாத்தானார்.

 அக்கரைப்பற்று - 21அரசயடி, அம்பாரை வீதியை சேர்ந்த


#அப்துல்_ரஷீட்_ரவூப் 

(பாலையாவின் மருமகன்)

அவர்கள் சவுதி அரேபியாவில் வபாத் ஆனார்கள்.


#இன்னாலில்லாஹி #வஹின்னாஇலைஹிராஜிஹூன்


இவர் 

#முகம்மது_சாலி_மஹ்ரூபா  

அவர்களின் அன்பு கணவரும்,


#ஹம்தி (சவூதி அரேபியா) 

#ஷஹானி  

ஆகியோரின் அன்பு தந்தையும்,


#ரவூஜி ( ஐனா Hotel) 

#ரஸூல் (water board) 

ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்கள்.


#ஜனாஸா_நல்லடக்கம்!

இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.