Showing posts with label Janaaza. Show all posts

 


ஓர் அழகிய இறை அழைப்பு


பொத்துவிலில் இருந்து முல்தஸம் ட்ரெவல்ஸில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற  வந்த  #அப்துல்_றவூப் (றஹீம் மனேஜர்) அவர்கள் தனது உம்ரா கடமையை நிறைவேற்றி விட்டு மக்கா 🕋 ஹரத்தில் தஹஜ்ஜத்துடைய நேரத்தில் இஹ்ராமுடைய ஆடையில் தஹஜ்ஜத் தொழுது விட்டு தவாஃப் செய்யும் இடத்தில் சுபஹ் அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் 2026-05-03 ம் திகதி இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொள்வானாக. ஆமீன்


தகவல்: றயீஸ் முப்தி

 


பேராசான் அப்துல் மலிக் அவர்களின் திடீர் மறைவு செய்தி அளவிட முடியாத துயரத்தை அளிக்கிறது.


மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அல்-மனாரின் பழைய மாணவர். உயர் கல்விக்காக பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவை அவர் தெரிவு செய்தார். கல்வி எனும் பெருங்கடலில் நீந்தி, கடல் கடந்து இஸ்லாமாபாத் சர்வதேச பல்கலைக்கழகத்தில் மத ஒப்பீட்டியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சர்வதேச அளவில் பல ஆய்வு மாணவர்களை உருவாக்கியவர்.


இடையறாத பணிக்கு மத்தியில் இலங்கையில் வெளியாகும் இஸ்லாமிய சிந்தனை, அல் ஹஸனாத் போன்ற சஞ்சிகைகளுக்கு அவர் எழுதி வந்த ஆய்வுக் கட்டுரைகள் மிகப் பெறுமதியானவை. 


மணிக்கணக்கில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அன்பர். மாணவப் பருவத்திலேயே அவருடன் உரையாடிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுவாரசியம் நிறைந்த உரையாடல்கள் அவரது புலமையை வெளிப்படுத்தி எமது ஆர்வத்தை தூண்டுபவை. பெரியார் குறித்தும் அவரது சமூக நீதி கருத்துக்கள் குறித்தும் அண்மையில்  என்னுடன் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் நினைவில் வந்து போகின்றன...


மதம், அரசியல், தத்துவம் என விரியும் அறிவார்ந்த உரையாடல்கள், குடும்ப நலன் வரை பரவியவை. கள யதார்த்தங்களை நன்கறிந்தவர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இயங்கியலையும் அதற்குள் இருக்கும் நுண்ணரசியல் குறித்தும் தெளிவான புரிதலுடையவர். 


என்னுடன் தனிப்பட்ட அன்பு கொண்ட அவர், எனது தொழில் வாழ்க்கையைப் பற்றியும் அக்கறையுடன் கேட்டறிவார்.


வெளிநாட்டு வாழ்கையை முடித்து தாய் நாடு திரும்பி கல்விப் பணியாற்றும் எண்ணம் கொண்டிருந்தார். மருதமுனையின் சமய, சமூக, கல்வி நிலைமைகள் குறித்து அக்கறையுடன் அவ்வப்போது கேட்டறிவார்.


இன்று, ஒரு மூத்த சகோதரனை இழந்த துயரத்தை உணர்கிறேன். நிலையற்ற உலகின் யதார்த்தத்தை இத்தகைய திடீர் மறைவுகள் எமக்கு உணர்த்துகின்றன.


எல்லாம் வல்ல இறைவன், அன்னாரின் பாவங்களை மன்னித்து, தனது அருளும் அன்பும் கொண்ட இறக்கைகளுக்குள் அவரை அரவணைத்தருள்வானாக. ஆமீன். அவர்களின் திடீர் மறைவு செய்தி அளவிட முடியாத துயரத்தை அளிக்கிறது.


மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அல்-மனாரின் பழைய மாணவர். உயர் கல்விக்காக பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவை அவர் தெரிவு செய்தார். கல்வி எனும் பெருங்கடலில் நீந்தி, கடல் கடந்து இஸ்லாமாபாத் சர்வதேச பல்கலைக்கழகத்தில் மத ஒப்பீட்டியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சர்வதேச அளவில் பல ஆய்வு மாணவர்களை உருவாக்கியவர்.


இடையறாத பணிக்கு மத்தியில் இலங்கையில் வெளியாகும் இஸ்லாமிய சிந்தனை, அல் ஹஸனாத் போன்ற சஞ்சிகைகளுக்கு அவர் எழுதி வந்த ஆய்வுக் கட்டுரைகள் மிகப் பெறுமதியானவை. 


மணிக்கணக்கில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அன்பர். மாணவப் பருவத்திலேயே அவருடன் உரையாடிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுவாரசியம் நிறைந்த உரையாடல்கள் அவரது புலமையை வெளிப்படுத்தி எமது ஆர்வத்தை தூண்டுபவை. பெரியார் குறித்தும் அவரது சமூக நீதி கருத்துக்கள் குறித்தும் அண்மையில்  என்னுடன் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் நினைவில் வந்து போகின்றன...


மதம், அரசியல், தத்துவம் என விரியும் அறிவார்ந்த உரையாடல்கள், குடும்ப நலன் வரை பரவியவை. கள யதார்த்தங்களை நன்கறிந்தவர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இயங்கியலையும் அதற்குள் இருக்கும் நுண்ணரசியல் குறித்தும் தெளிவான புரிதலுடையவர். 


என்னுடன் தனிப்பட்ட அன்பு கொண்ட அவர், எனது தொழில் வாழ்க்கையைப் பற்றியும் அக்கறையுடன் கேட்டறிவார்.


வெளிநாட்டு வாழ்கையை முடித்து தாய் நாடு திரும்பி கல்விப் பணியாற்றும் எண்ணம் கொண்டிருந்தார். மருதமுனையின் சமய, சமூக, கல்வி நிலைமைகள் குறித்து அக்கறையுடன் அவ்வப்போது கேட்டறிவார்.


இன்று, ஒரு மூத்த சகோதரனை இழந்த துயரத்தை உணர்கிறேன். நிலையற்ற உலகின் யதார்த்தத்தை இத்தகைய திடீர் மறைவுகள் எமக்கு உணர்த்துகின்றன.


எல்லாம் வல்ல இறைவன், அன்னாரின் பாவங்களை மன்னித்து, தனது அருளும் அன்பும் கொண்ட இறக்கைகளுக்குள் அவரை அரவணைத்தருள்வானாக. ஆமீன்.

சாஜித் ஜி எஸ் காலமானார். இவர்மர்ஹும் அப்துல் ஜப்பார்   அவர்களின் அன்பு மகனும் 


அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர் 

ஹரிஸ்பா அவர்களின் அன்புக் கணவரும்


ஹசீயா 

ஹசீபா ஆகியோரின் அன்பு தந்தையும் 



#பிர்னாஸ் (டுபாய்) 

#ரிப்கா ஆகியோரின் அன்பு சகோதரரும் 


ஹாரித் 

ஹனாஸ் ஆகியோரின் அன்பு மச்சானும் 


மஜீத் ஹாஜியார் (டயர் கடை, அரசடி)

அன்பு மருமகனும் 


மர்ஹும் பெரிய மோதினாரின் அன்பு பேரனும் 


மர்ஹும் பாறூக்

(கீப்பர்- ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தர்) இன் சகோதரியின் அன்பு மகனும் 


#சியாத் (ஆயுர்வேத வைத்தியசாலை ) ஆகியோரின் 

மைத்துனரும் ஆவார்.


"இன்ஷாஅல்லாஹ்"

இன்று இரவு 11.30 மணியளவில் அக்கரைப்பற்றில் அவரது வீட்டில் பார்வையிட சாத்தியப்படுவதுடன்

நாளை காலையில் 6 மண

 


மட்டக்களப்பின் பிரபல ஆசிரியரும் -  கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரீ.ஜெயசிங்கம் அவர்களின் துணைவியாருமான ஜெயசிங்கம் புஷ்பலதா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் ஆழ்ந்த அனுதாபங்கள்

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட 

 ஆதம்பாவா அப்துல் கையூம் ( *அஸ்ஸலாமு அலைக்கும்


ஜனாஸா அறிவித்தல்


அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட 

 ஆதம்பாவா அப்துல் கையூம் ( *கையூம் ஹாஜியார்* ) அவர்கள் இன்று கொழும்பில் வஃபாத்தானார்.


#إِنَّا_لِلّهِ_وَإِنَّا_إِلَيْهِ_رَاجِعُونَ


இவர்

ஆபிதா உம்மா ( *சித்திநிஷா* ) அவர்களின் அன்புக் கணவரும்


* அஃபீல் (ரஜா),

* அஃபீலா (ரஜானா),

* சுபஹான் (மசாஹிர்)


ஆகியோரின் அன்புத் தந்தையும்


* அஸ்கர் சம்சுதீன் (UAE),

* மக்கியா நசார்,

* ருஸானா யஹ்யா 


ஆகியோரின் மாமனாரும்


* ஷிஹாப் அஸ்கர் (Australia),

* டெஹானி அஸ்கர் (UAE),

* ஆகிப் அஃபீல்,

* ஷாஹின் சுபஹான் 


ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்


ஜனாஸா இன்று (10 April 2026) கொழும்பு ஜாவத்த ஜும்மா பள்ளிவாசலில் 6:30 PM க்கு  பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். 

பின்னர் அக்கரைப்பற்றுக்கு எடுத்துச் செல்லப்படும்.


அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து

அவர்களுக்கு #ஜன்னத்துல்_பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக.


அன்னாரின் குடும்பத்தாருக்கு மன வலிமையும் பொறுமையும் வழங்குவானாக.


 *ஜனாஸா நல்லடக்கம்*  பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.




 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818* ) அவர்கள் இன்று கொழும்பில் வஃபாத்தானார்.


#إِنَّا_لِلّهِ_وَإِنَّا_إِلَيْهِ_رَاجِعُونَ


இவர்

ஆபிதா உம்மா ( *சித்திநிஷா* ) அவர்களின் அன்புக் கணவரும்


* அஃபீல் (ரஜா),

* அஃபீலா (ரஜானா),

* சுபஹான் (மசாஹிர்)


ஆகியோரின் அன்புத் தந்தையும்


* அஸ்கர் சம்சுதீன் (UAE),

* மக்கியா நசார்,

* ருஸானா யஹ்யா 


ஆகியோரின் மாமனாரும்


* ஷிஹாப் அஸ்கர் (Australia),

* டெஹானி அஸ்கர் (UAE),

* ஆகிப் அஃபீல்,

* ஷாஹின் சுபஹான் 


ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்


ஜனாஸா இன்று (10 April 2026) கொழும்பு ஜாவத்த ஜும்மா பள்ளிவாசலில் 6:30 PM க்கு  பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். 

பின்னர் அக்கரைப்பற்றுக்கு எடுத்துச் செல்லப்படும்.


அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து

அவர்களுக்கு #ஜன்னத்துல்_பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக.


அன்னாரின் குடும்பத்தாருக்கு மன வலிமையும் பொறுமையும் வழங்குவானாக.


 *ஜனாஸா நல்லடக்கம்*  பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.




 


 சிறுநீரக மருத்துவமத் துறையின் முன்னோடியுமான

பேராசிரியர் ரிஸ்வி ஷெரிப் அவர்கள் காலமானார்கள்.

அக்கரைப்பற்று *PTM GOLD HOUSE உரிமையாளர் PTM மன்சூர்*  காலமானார்.

அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

ஜன்னத்துல் பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

 


பிரபல ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் மறைவு


நூருல் ஹுதா உமர் 


அம்பாறை மாவட்ட நிந்தவூரைச் சேர்ந்த மூத்த இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர், கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் இன்று (25.03.2026) இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.


ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி ஜெஸ்மின் சலீம் அவர்களின் அன்புக்கணவரும், எஸ்.எப். அகீலா மற்றும் எஸ்.எம். அகீல் ஆகியோரின் பாசமிகு தந்தையுமான இவர், 1966ஆம் ஆண்டிலிருந்து பிராந்திய செய்தியாளராகவும், ஊடகத் துறையில் அரை நூற்றாண்டிற்கு மேல் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவராகவும் இருந்தார்.


தினபதி, சிந்தாமணி உட்பட முக்கிய பத்திரிகைகளில் பணியாற்றிய இவர், தனது எழுத்தின் மூலம் சமூகத்தின் உண்மைக் குரலாகவும், அம்பாறை மாவட்டத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் சமூக ஒத்துழைப்பு செய்தியாகவும் பெரிதும் மதிக்கப்பட்டார். “அனார்கலி” மற்றும் “அவதானி” என்ற புனைப் பெயர்களில் எழுதிய அவரது கட்டுரைகள் வார்த்தைகளை சமாதானத்தின் பாலமாக மாற்றியவை.


அவரது சிறப்பான பங்களிப்புக்காக 2008ஆம் ஆண்டு கலாபூஷணம் பட்டமும், 2010ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சரின் வித்தகர் விருதும் வழங்கப்பட்டன. மேலும், திகாமடுல்ல பௌத்த சிங்கள சங்கத்தினால் சாஹித்யசூரி விருதும், 2017ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியல் விருதுகளிலும் கௌரவிக்கப்பட்டார்.


நிந்தவூர் கலை, இலக்கிய பேரவையின் ஆரம்பகர்த்தாகவும் மூத்த துணைத்தலைவராகவும் இருந்த இவர், அம்பாறை மாவட்ட ஊடக சம்மேளனத்தின் மூத்த ஆலோசகராகவும், பல நூற்றுக்கணக்கான கலை, இலக்கிய ஆர்வலர்களையும் ஊடகவியலாளர்களையும் உருவாக்கிய ஒளிவிளக்காகவும் இருந்தார்.


அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளனர்.


 (வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை ரோட்டரி கழகத்தின் செயலாளர் ரோட்டரியன்  கணபதிப்பிள்ளை குகதாஸ்( வயது 67) நேற்று(4) புதன்கிழமை இரவு கொழும்பில் காலமானார்.

பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் குகதாஸ் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும்,  தனியார் பல்கலைக்கழக மட்டக்களப்பு இணைப்பாளராகவும் சேவையாற்றி வந்தவர். 
இவரது காலத்தில்தான் சர்வதேச வர்த்தக கண்காட்சி மட்டக்களப்பில் தலைவர் வி.ரஞ்சிமூர்த்தி தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இருதய சத்திரசிகிச்சையின் பின்னர் கொழும்பில் தங்கியிருந்த வேளையில் மரணமானார்.

துபாயில் பணியாற்றும் துஜிப்சாந்த் மற்றும் ஹபித் ஆகியோரின் தந்தையான இவர் சமூக சேவையாளர் ஆவார்.
 
அன்னாரின் ஈமக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 4 மணிக்கு பெரியகல்லாறு உறவுகள் உறங்கும் இல்லத்தில் இடம்பெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த அன்சார் ஆசிரியர் (முன்னைய நாள் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்) சற்று முன்னர்  கொழும்பில் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


இன்ஷா அல்லாஹ்


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇs G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818



 சென் தோமஸ் கல்லூரியின்  ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி , நேற்று மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார்.

  

ஆசிரியர்  சண்முகவேல் பிரஷாந்தி,  கலை இலக்கிய ஆர்வமிக்க ஒருவராக திகழ்ந்தவராவர் . சிறந்த குரல் வளமிக்க பாடகியும் அனைத்து இசைகருவிகளையும் இசைக்கும் திறமையான  இசை ஞானம் கொண்டவர் இசையமைப்பில் அதீத ஆர்வத்தோடு புத்தாக்கமிக்கவராக புதிய படைப்புகளை உருவாக்க கூடியவர்,  



இந்திய முன்னணி இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், தீனா , ஆகியோரது பாராட்டையும் பெற்றவர் , 

அன்மையில்  நாட்டில் ஏற்பட்ட ' தித்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் நாட்டையும் மக்களையும் மீளெழுச்சி பெரும் நோக்கில்  தனது தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கிய "Rebuild Sri Lanka " எனும் ஆங்கிலம் ,சிங்களம் ,தமிழ் , என  மும்மொழியில் தானே பாடி இசையமைத்து பாடல் ஒன்றினை வெளியிட்டார்.


அதுபோல கடந்த காலங்களில் பல்வேறுபட்ட பாடல் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவரது பாடல் தொகுப்பானது  சமூக ஊடகங்களிலும்  சமுக ஆர்வலர்கள் மற்றும் கலை உலகத்தினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடதக்கது. இதுபோன்று மேலும் எதிர்வரும் காலங்களில் பல்வேறுபட்ட பாடல் தொகுப்புகள் அடங்கிய அல்பம்களையும் வெளியீடு செய்வதற்கான ஆர்வத்தோடு தயாராகியிருந்தார்,



தீராத இசை ஆர்வமிக்க படைப்பாளியாகவும் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்த செல்வி சண்முகவேல் பிரஷாந்தினியின் இழப்பு, மலையக கல்வி சமூகத்திற்கும் கலை உலகிற்கும் பெரும் பேரிழப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.


-தலவாக்கலை குணா-




UpDated.

அம்பாறை-சியம்பலாண்டுவ சாலையில் பரணிகம பகுதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், இன்று (14) நடந்த விபத்தைத் தொடர்ந்து துரதிர்ஷ்டவசமாக முன்னால் வந்த லாரியுடன் மோதியது. 

அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள், இருவர் சென்ற மோட்டார் சைக்கிள்  லொறி ஒன்றுடன் மோதி விபத்து நிகழந்துள்ளது.

 இதில்   அக்கரைப்பற்று அபுசாலி வீதி அருகில்  வசித்து வந்த  சேர்ந்த நுஸ்ரத் என்பவரும், டீன்ஸ் வீதியைச் சேர்ந்த சிமாஸ் என்பவரும் உயிரிழந்துள்ளார்கள்.



 


அக்கரைப்பற்று இரண்டாம் குறிச்சி  அஸ்ராஜ் பாடசாலையின் முன்னாள்  அதிபர் அபூல் மாஸ்ட்டர்

இன்று காலமானார் இன்னாலில்லாஹி

 வயின்னா இலைஹி ராஜ்ஊன் 

முஹம்மது ஷரீஃப் 

நாமதும்மா தம்பதியினரின் 

மூத்த புதல்வர் 

ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் 

முன்னாள் அதிபர் அபுல் மாஸ்டர் வபாதானார்கள்.


இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன் 


அன்னார் மர்ஹுமா றிஸ்வியாவின் அன்பு கணவரும் 


பஹ்மி சாதிக் (அவுஸ்திரேலியா) 

இர்பானா

மர்ஹுமா ரிஸ்வானா பர்வின் 

மர்ஹும் அஹமட் சகி 

ஜவ்ஹர் சாதிக் (டூபாய்) ஆகியோரின் அன்பு தந்தையும் 


அவ்ஃபர் முஸ்தபா 

அனஸ் (ஜேர்மன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் 


மர்ஹும் ஜுனைத்தீன் ஓய்வு பெற்ற அதிபர்

மர்ஹும் அப்துல் ஜப்பார் (ராசிக் மௌலவி)

கால்டீன் ENGINEER 

ஜாபிர் மாஸ்டர் 

மர்ஹும் அப்துல் குத்தூஸ் (தாஜுர்)

நசீர் ENGINEER

ஜிப்ரி ஆகியோரின் அன்பு சகோதரரும் 

ஆவார் 


நல்லடக்க விபரம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்



🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818

 


வடக்கு- கிழக்கு மாகாணங்களின் கல்வி அமைச்சின் முன்னாள் கல்வி  செயலாளர்.

அல்- ஹாஜ்.எம்.ஏ.சி. முகைதீன் சற்று முன் கொழும்பில் காலமாகினார். மரணிக்கும்

சமயம் இவரது வயது 88 ஆகும்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி

இராஜி ஊன்.


அன்னார் அக்கரைப்பற்றை பிறப்பிடமாக

கொண்டும் சாய்ந்தமருதுவில் புகுவிடமாக

கொண்டவர். அரச சேவையிலிருந்து ஓய்வு

பெற்ற பின் கொழும்பு தெஹிவளையில்

வசித்து வந்தார்.


இலங்கை கல்வி நிருவாக சேவையின் மிக

மூத்த அதிகாரியான இவர் அம்பாறை,

கல்முனை, மட்டக்களப்பு மாவட்டங்களில்

பிரதம கல்வி அதிகாரியாகவும் மன்னார்

மாவட்டக் கல்விப்பணிப்பாளராகவும்கடமை

புரிந்ததுடன் கொழும்பு கல்வியமைச்சிலும்

சிறிது காலம் கடமையாற்றினார்.


அக்கரைப்பற்று மத்திய கல்லூரி, காத்தான்

குடி மத்திய கல்லூரிஆகியவற்றில்பட்டதாரி

ஆசிரியராக கடமையாற்றி அக்கரைப்பற்று

மத்திய கல்லூரியின் அதிபராகவும் கடமை

புரிந்தார்.


வடக்கு- கிழக்கு மாகாண கல்வி செயலராக

கடமையாற்றிய சமயம் மாகாண கல்வி

அமைச்சுக்கான தனியான கட்டிடமொன்றை

அமைத்தார். அதே போல் கிழக்கு மாகாணத்

தில் முதலாவது தேசிய பாடசாலையாக

அக்கரைப்பற்று மத்திய கல்லூரியை உரு

வாக்க கால்கோளாக இருந்தார்.


வடக்கு- கிழக்கு மாகாண விவசாய, கூட்டு

றவு அமைச்சின் செயலாளராகவும் , வகிமா

முகாமைத்து பயிற்சி நிறுவன பணிப்பாளர்

ஆகவும் சிறிது காலம் கடமையாற்றினார்.


அரசியல்வாதிகளுக்கு அடிபணியாத ஒரு

உயர் அதிகாரி.தனக்கு எது நியாயமெனப்

பட்டதோ அதை துணிந்து செய்தார். இவர்

மும்மொழி வித்தகர். இவரது காலதாதில்

தான் வடகிழக்கில் ஆயிரக்கணக்கானவர்

களுக்கு தொண்டர் பயிலுனர் ஆசிரியர்

நியமனத்தை வழங்கினார்.


அரச தாபனக்கோவை, பொதுநிருவாக

சுற்று நிருபங்கள், நிதிப்பிரமாணம் ஆகிய வற்றை துறை போகக் கற்றவர்.


சாய்ந்தமருதுவை சேர்ந்தஅகமதுதுரையின்

மருமகனான இவர்மௌலவியாநஜீமாவின்

( ஓய்வு பெற்ற ஆசிரியை) கணவனான

இவர் 05 பிள்ளைகளின் தந்தையார் ஆவார்.


 காத்தான்குடி பல் வைத்தியர் ஹாஜா மொஹிதீன் இந்தியாவில் வபாத்


காத்தான்குடி - 3 பிரதான வீதியைச் சேர்ந்த Dr. ஹாஜா மொஹிதீன் (பல் வைத்தியர்) இன்று (15) வபாத்தாகியுள்ளார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..


இவர், இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே வபாத்ததாகியுள்ளார்.

 


துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபிநய் காலமானார்

என்னவோ இவரின் மரணம் ஏதோ செய்கிறது தோல்வியடைந்த ஒருவரின் வாழ்க்கை மரணத்தை விட எவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என்பதை இவரை வைத்து பார்க்கும் போதே உள்ளுக்குள் உதறல் ஏற்படுகிறது இளைப்பாறட்டும்!

 www.ceylon24.com தமது ஆழ்ந்த இரங்கலை, மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றது.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார், வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் இன்று (07.11.2025) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் நாளை (சனிக்கிழமை 08.11.2025) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஞாயிற்றுக்கிழமை 09.11.2025 மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.



அக்கரைப்பற்று 12 உபதபாலக வீதி முதலாம் குறுக்கு தெருவை (#மாநகரசபை_முன்_வீதி ) சேர்ந்த



#ஒஸாமா (23 வயது) அவர்கள் வபாத்தானார்கள்.


#இன்னாலில்லாஹி_வ_இன் னா_இலைஹி_ராஜிஊன்


இவர்

#அஸ்மி Azmy Abdul Cader மற்றும்

#நிம்ஸா தம்பதியினரின் அன்பு #மகனும்

#ஹம்தான்

#நதா

#லுக்மான்


ஆகியோரின் அன்பு

#சகோதரரும்

Saneej Ahamed அவர்களின் #மருமகனும்


மர்ஹும் சுபைத்தீன் மாஸ்டர் (#SAFCO_SUBAIDEEN) அவர்களின் மருமகளின் மகனும்

Naleer Abdul Cader

ஆகியோரின் சகோதாரரின் மகனும் ஆவார்.


#ஜனாஸா_

#அம்பாரை_வைத்தியாசலைய ல் உள்ளது


நல்லடக்கம் பற்றி இன்ஷா அல்லாஹ்! பின்னர் அறிவிக்கப்படும்.

 


தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிந்தவூர் நீர்வழங்கல் திட்ட காரியாலயத்தில் மாணி வாசிப்பாளராக கடமையாற்றும்


அக்கரைப்பற்றைச் சேர்ந்த Mia Juman அவர்களின் அன்பு மகனார் அக்சத் அலி (தரம் -04 பாடசாலை மாணவர்) இன்று (27) இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.


#இன்னாலில்லாஹி_வ_இன் னா_இலைஹி_ராஜிஊன்

இறைவா, அந்த பச்சிளம் சிறுவனது நற்கிரிகைகளை ஏற்று மேலான


#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக...


அவரின், பெற்றோர், சகோதர்கள் மற்றும் குடும்பத்திற்கு பொறுமையையும் வழங்குவாயாக ஆமீன்.


ஜனாஸா நல்லடக்கம் காலை 10:00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள பட்டின பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.