Showing posts with label Janaaza. Show all posts

 


ஜனாஸா அறிவித்தல்.

***************************


அக்கரைப்பற்று- 01  கடற்கரை வீதி நூரானியா  மஹல்லாவைச் சேர்ந்த எம்.ஐ. அலாவுதீன் காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் அஸ்பத் , அக்தாத் Mohamed Akthath , அன்சித், அர்ஹம் Mohamed Arham ஆகியோரின் அன்புத் தந்தையும், 

சமீம் ஆசிரியர், சல்மான் ஆதாரவைத்தியசாலை அக்கரைப்பற்று,

ஆகியோரின் சகோதரருமாவார்.


ஜனாஷா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

 


ஜனாஸா அறிவித்தல்:


ஏறாவூரை பிறப்பிடமாகவும் காத்தான்குடி-01, டெலிக்கொம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற பொலீஸ் சாஜன் எஸ்.எல்.எம். ஜலீல் அவர்கள் தனது 54வது வயதில் இன்று (15) இரவு வபாத்தானார்கள்.


انا لله وانا اليه راجعون

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله


அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் நாளை (16) சனிக்கிழமை சுபஹு தொழுகையைத் தொடர்ந்து புதிய காத்தான்குடி-01, பதுரியா ஜும்மா பள்ளிவாயலில் தொழுகை நடத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 


இறக்காமம் 09 பிரிவைச் சேர்ந்த MS. Sameem (Cheaf Inspector of Police) அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார்கள். 


02 ஆண்களும், 02 பெண் பிள்ளைகளினதும் தந்தையான இவர் அமைச்சர் அதாஉள்ளாஹ் அவர்களின் முன்னை நாள் பாதுகாப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்தவர், 


தற்போது சம்மாந்துறை பொலிசில் கடமை புரிந்த இவர். முன்னை நாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான ரீ. ஹினாயாவின் அன்புக் கணவருமாவார். 


ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப் படும்.

 


Doctor அல்அமீன் றிஷாத் காலமானார்.! அண்மைக காலமாக, இவர்  நோய் வாய்ப்புற்றுக் காணப்பட்டிருந்தார்.
தற்சமயம், சாய்ந்தமருதில் வைக்கப்பட்டுள்ளது.

 


ஜனாஸா அறிவித்தல்:


காத்தான்குடி -02, மீன்பிடி இலாகா வீதியைச் சேர்ந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் ஷைபுல் இஸ்லாம் அவர்கள் வபாத்தானார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

 


#ஆழ்ந்த_அனுதாபங்கள் 


கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் Mathiaparanan Abraham Sumanthiran { திரு எம் ஏ சுமந்திரன் } அவர்களின்  அன்னை இன்று இயற்கைஎய்தினார் அன்னாரின்


அன்னையின் இழப்பால் துயருற்றிருக்கு ம். திரு.சுமந்திரன் சேர் அவர்களுக்கு எனது ஆழ்ந்தஅனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

 


அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் ஆங்கிலப் பாட ஆசிரியரும், இலங்கை பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்பாளருமான ஜப்பார் Abdul Jabbar ஆசிரியர் அவர்கள் வஃபாத்தானார்கள்.


தகவல்: அஸ்மி ஏறாவூர்


தன்னாமுனை விபத்து; காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் வபாத்; 3 பேர் வைத்தியசாலையில் 


மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


காத்தான்குடியை சேர்ந்த EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டியே விபத்தில் சிக்கி உள்ளது.


குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த காத்தான்குடி - சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை, பெண் உட்பட மேலும் 3 பேர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தகவல்: அஸ்மி ஏறாவூர்


 யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி அவர்கள் இன்று அதிகாலை 10.02.2024 காலமடைந்தாக அறியக் கிடைக்கிறது. 


கலாநிதி தம்பிஐயா கலாமணி அவர்கள் இலங்கையின் தமிழ் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. 


அன்னாரின் மறைவினால் துயறுற்றுள்ள அவரது குடும்பத்தினர்,  மாணவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


යාපන විශ්වවිද්‍යාලයේ අධ්‍යාපන දෙපාර්තමේන්තුවේ ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය ආචාර්ය දම්බයියා කලාමණී මහතා  2024.02.10 වන දින උදෑසන අභාවප්‍රාප්ත වූ බව දැනගන්නට ඇත.


 ශ්‍රී ලංකාවේ දෙමළ අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ උන්නතිය සඳහා ආචාර්ය දම්බයියා කලාමණීගේ දායකත්වය අතිමහත්ය.


ආචාර්ය දම්බයියා කලාමණීගේ වියෝවෙන් විපතට පත් වූ ඔහුගේ පවුලේ අයට සහ සිසුන්ට අපගේ බලවත් ශෝකය ප්‍රකාශ කරමු.




அக்கரைப்பற்று முதலியார் வீதியைச்சேர்ந்த

ஓய்வு பெற்ற ஆசிரியை AR #மரியம்கண்டு 

(#மர்யம்வீவீ #ரீச்சர்)

காலமானார் இன்னாலில்லாஹ்


இவர் ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் #MIMநயீம் அவர்களின் மனைவியும்


மர்ஹூம்களான

அப்துர்ரஹீம் ஹாஜியார்

(வட்டான) பாத்தும்மா ஆகியோரின் மூத்த மகளாரும் 


Nafeel (CEO,Nukemi)

Nafeela tr (USA)

Hafeela tr (USA)

Taib 

Haseen Naheem (UK)

ஆகியோரின் தாயாரும்


Ameen (Accountant)(USA)

Jaleel (NSB)(USA)

ஆகியோரின் மாமியுமாவார்


#ஜனாஸா #தொழைகை 

இன்று(28/1/24) அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஜூம்மா பெரிய பள்ளிவாசலில் தொழுவிக்கப்பட்டு

#பட்டியடிப்பிட்டி #மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்


தகவல்

மகன் நபீல்

 *ஜனாஸா அறிவித்தல்......*



*முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM. ஹிஸ்புல்ழாஹ் அவர்களி நீண்ட கால மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றிய முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட், ஏறாவூரைச் சேர்ந்த சகோதரர் ஏ எம் எம் ஜாபிர் அவர்கள் சற்று முன் ஏறாவூர் தள வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.*


*இன்னாலில்ழாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்*. 


நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 


#Rep/RikkasAhamed

அக்கரைப்பற்று 4 முதலியார் வீதியில் வசித்து வந்த அலித்தம்பி அன்சார் (வங்கி உத்தியோகத்தர்) தற்போது கொழும்பில் வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன் 


இவர் மர்ஹும் அலித்தம்பி வட்டானையின் முத்த மகனாவார்


பாறூக் (milk board)

கலீல்

கால்தீன் (கலால் கட்டுப்பாடு உத்தியோகத்தர்)

நக்கீல் (ஆசிரியர்)

ஹாரூன்

ஹிசாம்

றஸாம்

றஸ்மி

செய்யது பாத்தும்மா

நோனா

சாபிறா

றுவைஸா

ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.


இன்ஷாஅல்லாஹ் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்


 கொழும்பு - பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் எம்.எம்.எம். நௌஷாத் தனது 57வது வயதில் டிசம்பர் 29 வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவின் ஜித்தாவில் காலமானார்.


ஜித்தா, SLT மைதானத்தில் நடைபெற்ற பழைய சஹிரியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அங்கோரா, பாக்தாத், கோர்டோவா மற்றும் இஸ்தான்புல் ஹவுஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜித்தாவில் தங்கியிருக்கும் ஜாஹிரியர்களிடையே இந்தப் போட்டி விளையாடப்பட்டது. நௌஷாத் பாக்தாத் இல்லத்திற்காக விளையாடினார்.


மர்ஹூம் நௌஷாத் 1999 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜித்தாவில் பணியாற்றி வருகிறார். அவர் இறந்தபோது, ​​அவர் ஜெட்டாவில் உள்ள செங்கடல் கடல்சார் சேவையில் கொள்முதல் அதிகாரியாக இணைக்கப்பட்டார்



இவரது பூர்வீகம் கொழும்பு மருதானை மொஹிதீன் மஸ்ஜித் வீதி என்பதுடன் மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு மகளுக்கும் தந்தையாவார்.


இறுதி இறுதிச் சடங்குகளுக்காக நௌஷாத்தின் குடும்பத்தினர் ஏற்கனவே ஜித்தாவுக்குச் சென்றுவிட்டதாக அவரது சகோதரர் மொஹமட் ஃபாஹிம் கொழும்பு டைம்ஸிடம் தெரிவித்தார்.


அவரது மரணம் அகால மரணம் என்று ஜெட்டாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி சவூதி அரேபியாவில் இருந்து கொழும்பு டைம்ஸிடம் தெரிவித்தார். ”நான் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கச் சென்றேன், அவர் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவரைப் பார்த்தேன். நான் வேறொரு விழாவிற்குப் புறப்பட்டதால் மைதானத்தில் என்னைக் கண்டார்"


Rep/SukirthKumR

அக்கரைப்பற்று இலங்கை வங்கியினூடாக கிடைக்கப்பெற்ற நல்ல உறவு. காணும் இடம்மெல்லாம் சுகிர் அண்ணன் எப்படி சுகம்.? என்ன செய்து தரவேண்டும் ? என சிறிய புன்முறுவலுடன் உரையாடி எவ்வளவு வேலைப்பழு இருந்தாலும் கடமையினை செய்து தரும் தம்பி துசாந்தனின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 


நீங்கள் எதிர்பார்த்த CRM வந்து விட்டது. இனி உங்கள் வேலை இலகுபடுத்தப்படும் என அவ்வப்போது மகிழ்ந்து கொள்ளும் நல்லுள்ளம். இலங்கை வங்கியில் நடைபெறும் நிகழ்விற்கு நிகழ்ச்சி தொகுப்பாளனும் அவரே. நம்மை அன்போடு உபசரிக்கும் நற்குணம் கொண்டவரும் அவரே. 


அக்கரைப்பற்று இலங்கை வங்கியில் சில நிகழ்வுகளில் நான் அவ்வப்போது கலந்து கொண்டாலும் துசாந்தனின் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொள்ளவோ அல்லது அவரது இடமாற்றத்தின் பின் நன்றி சொல்லவோ கிடைக்காமை மிக மன வேதனை தருகின்றது. 


எதுவானாலும் எல்லாம் அவன் செயல் என கடந்து செல்ல முடியவில்லை. நமக்கு தேவையான பலரை அன்மைக்காலமாக  இறைவன்விரைவாகவே  அழைத்துக்கொள்வதன் காரணம் விளங்கவில்லை   


 உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.

 


அக்கரைப்பற்று 2ஆம் குறிச்சி, AVV வீதியைச் சேர்ந்த MA.நாகூர் பாத்தும்மா என்பவர் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


 அன்னார்  மாப்பிள்ளை டெயிலர் என்று அழைக்கப்படும் மர்ஹூம் எம்.ஐ.ஆதம்லெப்பை என்பவரின் அன்பு மனைவியும் மர்ஹூம்களான முகம்மது அலியார் முக்குலுதும்மா ஆகியோரின் அன்பு மகளும் 

அஜீர்,ரஷீதா,

மர்ஹூமா ஹைருன் நிஹாரா, சித்தீக், 

அல்ஹாபிழ் மௌலவி அமீர் அம்ஜத் பலாஹி,ரிஸ்வான் என்பவர்களின் அன்புத் தாயாருமாவார். அன்னாரின் ஜனாஸா

ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பட்டின ஜும்ஆ பள்ளி வாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல்

மகன் அல்ஹாபிழ் மௌலவி

அமீர் அம்ஜத் (பலாஹி)

 


#ஜனாஸா_அறிவித்தல்!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் தனது 67ஆவது வயதில் 2023/12/22 இன்று காலை 06:30 மணியளவில் கொழும்பு தனியார் (கிங்ஸ்) வைத்தியசாலையில் காலமானார்.


இன்று பகல் 1மணிக்கு ஜனாஸா உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டபின்னர் அன்னாரின் ஜனாஸாவை அவருடைய கிண்ணியா இல்லத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.


யா அல்லாஹ்...

அன்னாரின் சக பாவங்களையும் மன்னித்து உன்னுடைய மேலான ஜன்னத்துல் பிர்தெளஸை நஸீபாக்கிடுவாயாக! ஆமீன்!


தகவல்!

கொழும்பிலிருந்து

அப்துல்லாஹ் மஹ்ரூப்MP

 


புத்தளம் இஸ்லாஹியா கலாசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் ஹதியத்துல்லாஹ் முஹம்மத் முனீர் (முனீர் மௌலவி) சற்று முன் காலமானதாக ஊர்ஜித தகவல்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.