Showing posts with label Janaaza. Show all posts


 (வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை ரோட்டரி கழகத்தின் செயலாளர் ரோட்டரியன்  கணபதிப்பிள்ளை குகதாஸ்( வயது 67) நேற்று(4) புதன்கிழமை இரவு கொழும்பில் காலமானார்.

பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் குகதாஸ் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும்,  தனியார் பல்கலைக்கழக மட்டக்களப்பு இணைப்பாளராகவும் சேவையாற்றி வந்தவர். 
இவரது காலத்தில்தான் சர்வதேச வர்த்தக கண்காட்சி மட்டக்களப்பில் தலைவர் வி.ரஞ்சிமூர்த்தி தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இருதய சத்திரசிகிச்சையின் பின்னர் கொழும்பில் தங்கியிருந்த வேளையில் மரணமானார்.

துபாயில் பணியாற்றும் துஜிப்சாந்த் மற்றும் ஹபித் ஆகியோரின் தந்தையான இவர் சமூக சேவையாளர் ஆவார்.
 
அன்னாரின் ஈமக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 4 மணிக்கு பெரியகல்லாறு உறவுகள் உறங்கும் இல்லத்தில் இடம்பெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த அன்சார் ஆசிரியர் (முன்னைய நாள் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்) சற்று முன்னர்  கொழும்பில் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


இன்ஷா அல்லாஹ்


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇs G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818



 சென் தோமஸ் கல்லூரியின்  ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி , நேற்று மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார்.

  

ஆசிரியர்  சண்முகவேல் பிரஷாந்தி,  கலை இலக்கிய ஆர்வமிக்க ஒருவராக திகழ்ந்தவராவர் . சிறந்த குரல் வளமிக்க பாடகியும் அனைத்து இசைகருவிகளையும் இசைக்கும் திறமையான  இசை ஞானம் கொண்டவர் இசையமைப்பில் அதீத ஆர்வத்தோடு புத்தாக்கமிக்கவராக புதிய படைப்புகளை உருவாக்க கூடியவர்,  



இந்திய முன்னணி இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், தீனா , ஆகியோரது பாராட்டையும் பெற்றவர் , 

அன்மையில்  நாட்டில் ஏற்பட்ட ' தித்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் நாட்டையும் மக்களையும் மீளெழுச்சி பெரும் நோக்கில்  தனது தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கிய "Rebuild Sri Lanka " எனும் ஆங்கிலம் ,சிங்களம் ,தமிழ் , என  மும்மொழியில் தானே பாடி இசையமைத்து பாடல் ஒன்றினை வெளியிட்டார்.


அதுபோல கடந்த காலங்களில் பல்வேறுபட்ட பாடல் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவரது பாடல் தொகுப்பானது  சமூக ஊடகங்களிலும்  சமுக ஆர்வலர்கள் மற்றும் கலை உலகத்தினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடதக்கது. இதுபோன்று மேலும் எதிர்வரும் காலங்களில் பல்வேறுபட்ட பாடல் தொகுப்புகள் அடங்கிய அல்பம்களையும் வெளியீடு செய்வதற்கான ஆர்வத்தோடு தயாராகியிருந்தார்,



தீராத இசை ஆர்வமிக்க படைப்பாளியாகவும் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்த செல்வி சண்முகவேல் பிரஷாந்தினியின் இழப்பு, மலையக கல்வி சமூகத்திற்கும் கலை உலகிற்கும் பெரும் பேரிழப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.


-தலவாக்கலை குணா-




UpDated.

அம்பாறை-சியம்பலாண்டுவ சாலையில் பரணிகம பகுதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், இன்று (14) நடந்த விபத்தைத் தொடர்ந்து துரதிர்ஷ்டவசமாக முன்னால் வந்த லாரியுடன் மோதியது. 

அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள், இருவர் சென்ற மோட்டார் சைக்கிள்  லொறி ஒன்றுடன் மோதி விபத்து நிகழந்துள்ளது.

 இதில்   அக்கரைப்பற்று அபுசாலி வீதி அருகில்  வசித்து வந்த  சேர்ந்த நுஸ்ரத் என்பவரும், டீன்ஸ் வீதியைச் சேர்ந்த சிமாஸ் என்பவரும் உயிரிழந்துள்ளார்கள்.



 


அக்கரைப்பற்று இரண்டாம் குறிச்சி  அஸ்ராஜ் பாடசாலையின் முன்னாள்  அதிபர் அபூல் மாஸ்ட்டர்

இன்று காலமானார் இன்னாலில்லாஹி

 வயின்னா இலைஹி ராஜ்ஊன் 

முஹம்மது ஷரீஃப் 

நாமதும்மா தம்பதியினரின் 

மூத்த புதல்வர் 

ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் 

முன்னாள் அதிபர் அபுல் மாஸ்டர் வபாதானார்கள்.


இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன் 


அன்னார் மர்ஹுமா றிஸ்வியாவின் அன்பு கணவரும் 


பஹ்மி சாதிக் (அவுஸ்திரேலியா) 

இர்பானா

மர்ஹுமா ரிஸ்வானா பர்வின் 

மர்ஹும் அஹமட் சகி 

ஜவ்ஹர் சாதிக் (டூபாய்) ஆகியோரின் அன்பு தந்தையும் 


அவ்ஃபர் முஸ்தபா 

அனஸ் (ஜேர்மன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் 


மர்ஹும் ஜுனைத்தீன் ஓய்வு பெற்ற அதிபர்

மர்ஹும் அப்துல் ஜப்பார் (ராசிக் மௌலவி)

கால்டீன் ENGINEER 

ஜாபிர் மாஸ்டர் 

மர்ஹும் அப்துல் குத்தூஸ் (தாஜுர்)

நசீர் ENGINEER

ஜிப்ரி ஆகியோரின் அன்பு சகோதரரும் 

ஆவார் 


நல்லடக்க விபரம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்



🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818

 


வடக்கு- கிழக்கு மாகாணங்களின் கல்வி அமைச்சின் முன்னாள் கல்வி  செயலாளர்.

அல்- ஹாஜ்.எம்.ஏ.சி. முகைதீன் சற்று முன் கொழும்பில் காலமாகினார். மரணிக்கும்

சமயம் இவரது வயது 88 ஆகும்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி

இராஜி ஊன்.


அன்னார் அக்கரைப்பற்றை பிறப்பிடமாக

கொண்டும் சாய்ந்தமருதுவில் புகுவிடமாக

கொண்டவர். அரச சேவையிலிருந்து ஓய்வு

பெற்ற பின் கொழும்பு தெஹிவளையில்

வசித்து வந்தார்.


இலங்கை கல்வி நிருவாக சேவையின் மிக

மூத்த அதிகாரியான இவர் அம்பாறை,

கல்முனை, மட்டக்களப்பு மாவட்டங்களில்

பிரதம கல்வி அதிகாரியாகவும் மன்னார்

மாவட்டக் கல்விப்பணிப்பாளராகவும்கடமை

புரிந்ததுடன் கொழும்பு கல்வியமைச்சிலும்

சிறிது காலம் கடமையாற்றினார்.


அக்கரைப்பற்று மத்திய கல்லூரி, காத்தான்

குடி மத்திய கல்லூரிஆகியவற்றில்பட்டதாரி

ஆசிரியராக கடமையாற்றி அக்கரைப்பற்று

மத்திய கல்லூரியின் அதிபராகவும் கடமை

புரிந்தார்.


வடக்கு- கிழக்கு மாகாண கல்வி செயலராக

கடமையாற்றிய சமயம் மாகாண கல்வி

அமைச்சுக்கான தனியான கட்டிடமொன்றை

அமைத்தார். அதே போல் கிழக்கு மாகாணத்

தில் முதலாவது தேசிய பாடசாலையாக

அக்கரைப்பற்று மத்திய கல்லூரியை உரு

வாக்க கால்கோளாக இருந்தார்.


வடக்கு- கிழக்கு மாகாண விவசாய, கூட்டு

றவு அமைச்சின் செயலாளராகவும் , வகிமா

முகாமைத்து பயிற்சி நிறுவன பணிப்பாளர்

ஆகவும் சிறிது காலம் கடமையாற்றினார்.


அரசியல்வாதிகளுக்கு அடிபணியாத ஒரு

உயர் அதிகாரி.தனக்கு எது நியாயமெனப்

பட்டதோ அதை துணிந்து செய்தார். இவர்

மும்மொழி வித்தகர். இவரது காலதாதில்

தான் வடகிழக்கில் ஆயிரக்கணக்கானவர்

களுக்கு தொண்டர் பயிலுனர் ஆசிரியர்

நியமனத்தை வழங்கினார்.


அரச தாபனக்கோவை, பொதுநிருவாக

சுற்று நிருபங்கள், நிதிப்பிரமாணம் ஆகிய வற்றை துறை போகக் கற்றவர்.


சாய்ந்தமருதுவை சேர்ந்தஅகமதுதுரையின்

மருமகனான இவர்மௌலவியாநஜீமாவின்

( ஓய்வு பெற்ற ஆசிரியை) கணவனான

இவர் 05 பிள்ளைகளின் தந்தையார் ஆவார்.


 காத்தான்குடி பல் வைத்தியர் ஹாஜா மொஹிதீன் இந்தியாவில் வபாத்


காத்தான்குடி - 3 பிரதான வீதியைச் சேர்ந்த Dr. ஹாஜா மொஹிதீன் (பல் வைத்தியர்) இன்று (15) வபாத்தாகியுள்ளார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..


இவர், இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே வபாத்ததாகியுள்ளார்.

 


துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபிநய் காலமானார்

என்னவோ இவரின் மரணம் ஏதோ செய்கிறது தோல்வியடைந்த ஒருவரின் வாழ்க்கை மரணத்தை விட எவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என்பதை இவரை வைத்து பார்க்கும் போதே உள்ளுக்குள் உதறல் ஏற்படுகிறது இளைப்பாறட்டும்!

 www.ceylon24.com தமது ஆழ்ந்த இரங்கலை, மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றது.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார், வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் இன்று (07.11.2025) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் நாளை (சனிக்கிழமை 08.11.2025) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஞாயிற்றுக்கிழமை 09.11.2025 மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.



அக்கரைப்பற்று 12 உபதபாலக வீதி முதலாம் குறுக்கு தெருவை (#மாநகரசபை_முன்_வீதி ) சேர்ந்த



#ஒஸாமா (23 வயது) அவர்கள் வபாத்தானார்கள்.


#இன்னாலில்லாஹி_வ_இன் னா_இலைஹி_ராஜிஊன்


இவர்

#அஸ்மி Azmy Abdul Cader மற்றும்

#நிம்ஸா தம்பதியினரின் அன்பு #மகனும்

#ஹம்தான்

#நதா

#லுக்மான்


ஆகியோரின் அன்பு

#சகோதரரும்

Saneej Ahamed அவர்களின் #மருமகனும்


மர்ஹும் சுபைத்தீன் மாஸ்டர் (#SAFCO_SUBAIDEEN) அவர்களின் மருமகளின் மகனும்

Naleer Abdul Cader

ஆகியோரின் சகோதாரரின் மகனும் ஆவார்.


#ஜனாஸா_

#அம்பாரை_வைத்தியாசலைய ல் உள்ளது


நல்லடக்கம் பற்றி இன்ஷா அல்லாஹ்! பின்னர் அறிவிக்கப்படும்.

 


தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிந்தவூர் நீர்வழங்கல் திட்ட காரியாலயத்தில் மாணி வாசிப்பாளராக கடமையாற்றும்


அக்கரைப்பற்றைச் சேர்ந்த Mia Juman அவர்களின் அன்பு மகனார் அக்சத் அலி (தரம் -04 பாடசாலை மாணவர்) இன்று (27) இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.


#இன்னாலில்லாஹி_வ_இன் னா_இலைஹி_ராஜிஊன்

இறைவா, அந்த பச்சிளம் சிறுவனது நற்கிரிகைகளை ஏற்று மேலான


#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக...


அவரின், பெற்றோர், சகோதர்கள் மற்றும் குடும்பத்திற்கு பொறுமையையும் வழங்குவாயாக ஆமீன்.


ஜனாஸா நல்லடக்கம் காலை 10:00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள பட்டின பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அட்டாளைச்சேனை 15ஆம் குறிச்சியைச் சேர்ந்த,  அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர், சமத் ஆசிரியர் (தைக்காநகர்) காலமானார்!


அன்னார், சியாத் (அனர்த்த முகாமைத்துப் பணிப்பாளர்), றுமைஸா (ஆசிரியை), சப்றி (Eng), சப்னா ஆகியோரின் தகப்பனும், 


அதிபர். ஸாஹீர் ஹூஸைன், 

றிபாஸ் (அக்கறைப்பற்று நீதிமன்றம்) ஆகியோரின் மாமனாருமாவார்…


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.

 

அக்கரைப்பற்று 05,

 சின்னப்பள்ளி வீதி இஹ்சான்பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த,


#ELENS_TRADE உரிமையாளர்

#நிசார்_ஹாஜியார் இன்று வபாத்தானார்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்  


அன்னார்

#மர்ஹும்_முஹம்மது_இஸ்மாயில்  (Dr.ஜௌபர்).

#மர்ஹுமா_சுலைஹா_உம்மா ஆகியோரின் அன்பு மகனும் 


#உசைமா'வின் அன்புக்கணவரும்


#பஸ்னா

#பயாஸ் (Dubai)

#பஸ்லான் (Dubai)

#சக்கில் ஆகியோரின் அன்புத் தந்தையும் 


#சித்தி_சல்மா 

#சித்தி_பரிதா

#சித்தி_சமீனா 

#எஹியா (ELENS) ஆகியோரின் அன்பு சகோதரரும் 


#ஆரிபீன்

#கப்பார் ஆகியோரின் மைத்துனரும் 


#தஹா(GS)

#ரபாயுடீன்

ஆகியோரின் சகலனும் ஆவார்


அன்னாரின் ஜனாஸா நள்ளடக்கம் இன்று காலை 10.00 மணிக்கு பட்டினப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு 

தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் 


தகவல் மகன் சக்கில்


அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818




காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவரான ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப். MCM. ஜௌபர் JP அவர்கள் சற்று முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.


இ்ன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


اللهم اغفرله والرحمه.....


அன்னார்  MJ. ஹஸனுல் ஜெஹீர்  (Medical Final Year Student) அவர்களின் அன்பு தந்தையும், சம்மேளன உப தலைவர் ஜனாப். MAM. ஸுஹைர்  B.Com  (Accountant - RDA) அவர்களின் மச்சானும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் ஜனாப். MCM. அன்வர் அவர்களின் சகோதரரும் ஆவார்கள்.


அன்னாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கமானது இன்ஷா அள்ளாஹ் இன்றைய தினம் 2025.09.22 ஆம் திகதி இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து காத்தான்குடி - 01 மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அன்னாரின் மறுமை வாழ்விற்காவும் ஈடேற்றத்திற்காகவும் இரு கரம் ஏந்தி பிரார்த்தித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


ஊடகப் பிரிவு,

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,

காத்தான்குடி.

 


#மட்டக்களப்பில்  பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் #நிமலரஞ்சன்  காலமானார்.


 மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட  காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள்   திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  இன்றைய தினம் இயற்கை எய்தினார் .


திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர் மட்டக்களப்பு மக்களாலும் போதனா வைத்தியசாலை சமுகத்தாலும் பார்க்கப்படுகிறார். தனது வைத்தியத் திறமையினால்  நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த  வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல  முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.


அன்னாரின் இழப்புக்கு மட்டக்களப்பு மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர் ஆற்றிய சேவை அவரது ஆத்மாவை நிச்சயம் இறைவன் திருப்பாதம் சேர்க்கும்.



(Rep/Kalmunai Net)

 மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேக கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது இதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் பாண்டிருப்பைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா மேனகா ( கல்முனை வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்) ஆவார்.

விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


(Rep/Rijaan)

அட்டாளைச்சேனையை சேர்ந்த ஜஃபர் ரிஸ்லான் ( வயது 18 )என்பவர் காலமானார்,இன்று அதிகாலை தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளிலில் பயணம் செய்த வேளையில், பிரதான வீதிக்கு குறுக்காக வந்து மாடு குத்தியதால்,இவர் உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்தவர். காயமுற்று அக்கரைப்பற்று ஆதார தை்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாசா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைகளின் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 🤲

 


மருதூரின் முகவெற்றிலை ஷீபிரிஸ் நன்பர் ஜௌபரின் மரணச் செய்தி ஆளத் துயரமே என்றும் புன்சிரிப்பிலும் மென்மைப் பேச்சிலும் மக்களை ஈர்த்த நல் உள்ளம் ஒன்று உலகை விட்டுப் பிரிந்து சென்றதே இன்னாலில்லாயிவயின்னாஇலைஹி ராஜ்ஊன் 


*30/08/2025 சனிக்கிழமை*


*சாய்ந்தமருது 09, 

GMMS வீதியில் வசித்து வந்த 

MY. #ஜௌபர் #(சீ விரிஸ்) உரிமையாளர் அவர்கள் சற்று முன் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்*


*அன்னார், A. பசிலா வின் அன்புக் #கனவரும்,  மர்ஹும்கலான IL முஹம்மது யூசுப், IL பாத்தும்மா அவர்களின் அன்பு 7வது #மகனும், MJM. மலாஸ், MJF. மபாஸா, MJM. மபாக், ஆகியோரின் #தந்தையும், மர்ஹும் MY. ஜப்பார். MYM. ரஸ்ஸாக், MY. ,உம்மு சல்மா MYM.குலாம், MYA.ரபிக், MYM. ஜலீல், MYM. அஸ்ரப், ஆகியோரின் அன்புச் #சகோதரரும் ஆவார்கள்*


*அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் விபரம் பின்னர் அறியத்தரப்படும்* 

 

எனவே அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக ஆமீன்.


*அறிவிப்பவர் 

மகன்  MJM. மலாஸ்*


 மருதமுனையை பிறப்பிடமாக கொண்ட காத்தான்குடி மக்களுக்கு நன்கு பரீட்சயமான மௌலவி அபூ உபைதா அவர்கள் சவூதியில் மரணத்த செய்தி வேதனை தருகிறது, 


இன்னாலில்லாஹி...


இவரது ஹஜ் / உம்ராஃ ட்ரவல்ஸ் மூலம் நமதூர் ஆயிரக்கணக்கான மக்கள் ஹஜ் மற்றும் உம்றாஃ கடமையினை நினைவேற்றிய அனுபவங்களை கொண்டுள்ளனர். 


இறைவன் அன்னாரை பொருந்திக்கொள்வானாக!

 


மூத்த ஊடகவியலாளர் வார #உரை_கல் பத்திரிகையின் ஆசிரியர் #புவி_றஹ்மத்துல்லாஹ் மறைந்தார்


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.


1960களில் இலங்கையின் மூத்த தமிழ் பத்திரிகைளில் ஒன்றான தினபதியில் ஊடக பயணத்தை ஆரம்பித்த இவர், 2000ஆம் ஆண்டுகளில் காத்தான்குடியில் வார உரை கல் என்ற பத்திரிகையின் மூலம் துளியளவும் யாருக்கும் அஞ்சாமல், ஊழல்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் கண்டித்து எழுதியவர்,


அதற்காக பெருமளவில் பழிவாங்கப்பட்டவர்.


அநியாயக்கார அரசியல்வாதிகளின் கொலை முயற்சிகளில் உயிர் தப்பியவர், வெறும் சொல்லில் இல்லாமல் பல சமூக விடயங்களை செயலில் காட்டியவர்.


எவ்வளவு தடைகள் வந்த போதிலும், உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்மாதிரியாக செயற்பட்ட ஒரு  ஊடகவியலாளர்.


ஜனாஸா தொழுகை ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு புதிய காத்தான்குடி அப்றார் பள்ளிவாயலில் நடத்தப்பட்டு நூரானியா ஜும் ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Mathy Anpan

Mohamed Mehboo

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.