Showing posts with label Slider. Show all posts

 


#வாழ்த்துக்கள் மேல் நீதிமன்ற நீதிபதி தர்மரெத்தினம் கருணாகரன் ஐயா. 


அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதி எனும் பெருமை கொள்கின்றார்  திருவாளர் தர்மரெத்தினம் கருணாகரன் அவர்கள்.

 


வாழ்த்துக்கள் வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ்


ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக எதிர்வரும் 11.05.2026 அன்று BH/Mahaoya    வைத்தியசாலையில் பதவியேற்பதற்கான பெயர் பட்டியல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகங்கள் அமைச்சால் இன்றையதினம் (08) வெளியிடப்பட்டுள்ளது.  


எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக பதவியேற்கவுள்ள வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக எதிர்வரும் 11.05.2026 அன்று BH/Mahaoya    வைத்தியசாலையில் பதவியேற்பதற்கான பெயர் பட்டியல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகங்கள் அமைச்சால் இன்றையதினம் (08) வெளியிடப்பட்டுள்ளது.  


 மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக பதவியேற்கவுள்ள வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்       

 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வருமானம் குறைந்த வீடற்ற 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக மீள்குடியேற்ற அமைச்சினால் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கண்ணகிகிராமத்தில் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்;டு திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக கண்ணகிகிராமத்தில் மேலும் 4 வீடுகள் இன்று (08) திறந்து வைக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு இணைப்பாளரும் பிரதேச நபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் இராஜேந்திரன் உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நீண்டகாலமாக வீடுகள் இன்றி மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் அரசுக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.

 


நூருல் ஹுதா உமர்


2026 ஆம் ஆண்டிற்கான கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டிகளில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டிகளில் பாடசாலை மாணவர்கள் மொத்தமாக 05 முதலாம் இடங்கள், 01 இரண்டாம் இடம், 02 மூன்றாம் இடங்கள் எனப் பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வெற்றிகளுக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்து வழிநடத்திய தமிழ் துறை ஆசிரியர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதிம் அவர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் அவர்கள் பாடசாலை சார்பாக தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.


 நூருல் ஹுதா உமர்


கல்வி, உயர் கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பிரதம மந்திரியும், கல்வி, உயர் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது முன்மொழிவில் இலங்கையில் அமைந்துள்ள 06 தமிழ் மொழி மூல தேசிய கல்வியியற் கல்லூரிகளில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் 1992ம் ஆண்டிலிருந்து 20 வருடங்கள் உடற்கல்வி பாடநெறி சிறப்பாக கற்பிக்கப்பட்டு நாட்டுக்குத் தேவையான சிறந்த உடற்கல்வி ஆசிரியர்களை உருவாக்கி வந்தது. 2013ம் ஆண்டில் சிலரது தனிப்பட்ட நலனுக்காக இக்கற்கை நெறி இடைநிறுத்தப்பட்டன. எனவே, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் உடற்கல்வி கற்கை நெறிக்கு போதுமான இடவசதிகள், வசதியான விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளதுடன் அண்மையில் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 02 உடற்கல்வி விரிவுரையாளர்கள் இக்கல்லூரிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இடைநிறுத்தப்பட்ட உடற்கல்வி பாடநெறியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை கௌரவ பிரதம மந்திரி அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக விளக்கங்களைப் பெற்றுக் கொண்ட கௌரவ பிரதம மந்திரி அவர்கள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்ட உடற்கல்வி கற்கை நெறியினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அவர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சைக்கு தோற்றி 172 புள்ளிகளுக்கு குறைவாகப் புள்ளிகளைப் பெற்ற தகுதியான 1216 ஆசிரியர்கள் மீதமாக உள்ளனர். இவ் ஆசிரியர்களில் 50 வயதினை பூர்த்தி செய்தவர்களும் உள்ளனர். சென்ற 26.11.2025 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கௌரவ பிரதம மந்திரி அவர்களை சந்தித்த அதிபர் பரீட்சை எழுதிய ஆசிரியர்களுக்கு இதுவரை அதிபர் நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. பரீட்சை எழுதியவர்களில் பலர் 50 வயதினை தாண்டியுள்ளனர். எனவே, இவர்களின் விடயமாக கல்வி அமைச்சின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்குமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

அதிபர் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அவர்களை பதிலளிக்குமாறு பிரதம மந்திரி பணித்தார்.

இது தொடர்பாக பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். நாலக்க கலுவெவ அதிபர்களால் கல்வி அமைச்சுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டு தற்போது அந்த வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்துள்ளன. எனவே, அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு அதிபர் நியமனம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


 ( காரைதீவு  வேதசகா)

கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், இலக்கியச் சந்திப்பொன்று கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில்  நேற்று நடைபெற்றது.

இந்த இலக்கியச்சந்திப்பில், கல்முனைப் பிராந்தியத்தைச் சேர்ந்த கலைஞர்களான வைரமுத்து கணேசன் ( சேனைக்குடியிருப்பு), சதானந்தம் ரகுவரன் (கோட்டைக்கல்லாறு), சண்முகம் சுந்தரராஜன் (சேனைக்குடியிருப்பு) ஆகியோர் தத்தமது காத்திரமான இலக்கிய அனுபவப் பகிர்வுகளை  பகிர்ந்தனர்.

இலக்கியச் சந்திப்பிற்கு சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா  தலைமை வகித்தார்.

எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மைய ஸ்தாபகர் புவி.கேதீஸ்ஸின் வழிகாட்டலில், செயலாளர் கே.சாந்தகுமார், பொருளாளர் என்.அருளானந்தம், திட்டமிடல் பணிப்பாளர் ப.சந்திரமோகன் ஆகியோர் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள, இளம் ஊடகவியலாளர் ரிஷி வீடியோ படப்பிடிப்பை மேற்கொண்டார்.

 


🟡 காத்தான்குடி கடற்கரை வீதியில் ஒற்றைநாள், இரட்டை நாள் முறையினை நடைமுறைப்படுத்த தீர்மானம்


டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் 06.05.2026 அன்று நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் பீச் வே மண்டபத்தில் நடைபெற்றது.


இதன்போது போக்குவரத்து நடைமுறைகள், வர்த்தக நிலையங்களை ஒழுங்கு படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் நடாத்தப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


01. டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் ஒற்றைநாள், இரட்டை நாள் முறையினை நடைமுறைப்படுத்துதல்.


2. Transport வாகனங்கள் காலை 8 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை மாத்திரம் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் பொருட்களை ஏற்றி இறக்க அனுமதி.


3. வியாபார நிலையங்களுக்கு முன்னால் உரிமையாளரின் ஒரு மோட்டார் சைக்கிள் மாத்திரம் நிறுத்த அனுமதி.


4. Gas Company வாகனங்கள் மாற்றுப்பதையாக முதியோர் இல்ல வீதியினை பயன்படுத்தல்.

ஆகிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேற்படி நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், செயலாளர், கணக்காளர், உத்தியோகத்தர்கள், போக்குவரத்து பொலிஸார், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள்,  காத்தான்குடி ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள்,

காத்தான்குடி வர்த்தக சங்கத்தினுடைய பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் மயோன் சமூக சேவை அமைப்பின் அனுசரனையில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்கை நெறி தெரிவு மற்றும் விண்ணப்பித்தல் வழிகாட்டல் நிகழ்வு மாளிகைக்காடு பாவா ரோயல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம வளவாளராக ஆசிரியர் சபீர் ஹமீட் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு துறைகளிற்கும் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கான விண்ணப்பித்தல் மற்றும் கற்கை நெறி தெரிவு தொடர்பான வழிகாட்டலை வழங்கினார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மற்றும் சமூகவியல் துறை பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பல்கலைக்கழக நடைமுறை தொடர்பில் விஷேட உரையாற்றினார்.  மேலும் மயோன் சமூக சேவை அமைப்பு சார்பாக நிகழ்வின் கெளரவ அதிதியாக திடீர் மரண விசாரணை அதிகாரி, மொழிபெயர்ப்பாளர் ஏ.எச்.அல் ஜவாஹீர் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு இளைஞர் சேவை அதிகாரி அன்வர் அப்துல் கபூர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

சுமார் 120 இற்கும் மேற்பட்ட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

உலக கருப்பை புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள், உயிருக்கு ஆபத்தான கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2013 முதல் அனுசரிக்கப்படுகிறது.


#Sooriyanfm #உலககருப்பைபுற்றுநோய்தினம் #WorldOvarianCancerDay

 


இந்திய அரசியலமைப்பின் 164-வது சரத்தின்படி, முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுவார் என்றும், மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நியமனம் முறைப்படி ஆளுநரால் செய்யப்பட்டாலும், மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற்ற நபரை அரசாங்கத்தை அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என அரசியலமைப்பு மரபுகள் வலியுறுத்துகின்றன. எனவே, ஆளுநரின் விருப்புரிமை வரையறுக்கப்பட்டதாகும், அதைத் தன்னிச்சையாகப் பயன்படுத்த முடியாது. பெரும்பான்மை ஆதரவு குறித்த இறுதி முடிவு மாநில சட்டமன்றத்தின் அவையிலேயே எடுக்கப்பட வேண்டும். இதன் விளைவாக, ஒரு முதலமைச்சரை நியமிப்பதிலோ அல்லது மாநில அரசை அமைப்பதிலோ ஏற்படும் தேவையற்ற தாமதம், ஜனநாயகக் கொள்கைகளையும் நாடாளுமன்ற அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திட்டத்தையும் மீறுவதாக அமையக்கூடும்.



 மட்டக்களப்பு வாவியில் மிதந்த இருவரின் உடலங்கள் : கொலையா? தற்கொலையா? - காவல்துறையினர் தீவிர விசாரணை


மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மட்டக்களப்பு வாவியிலிருந்து (மே 7) இரண்டு ஆண்களின் உடலங்கள் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு காவல்துறையினர் உடலங்களை மீட்டுள்ளனர் . உடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


 “ஒலுவில் துறைமுகத்தின் தாக்கம்: அம்பாறை கரையோரம் கடலில் கரைகிறது!”

தவறான அபிவிருத்தித் திட்டங்களால் பல தலைமுறைகள் பாதிப்பு – மக்கள் வேதனை


நூருல் ஹுதா உமர் 


அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் அச்சமும் நிலவி வருகிறது. குறிப்பாக ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர் கடலின் இயல்பான நீரோட்ட அமைப்புகள் மாற்றமடைந்ததன் விளைவாக கரையோர நிலப்பரப்புகள் வேகமாக கடலால் விழுங்கப்பட்டு வருவதாக மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்படும் காலகட்டத்திலேயே பல கடலியல் நிபுணர்களும், மீனவ சமூக பிரதிநிதிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்காலத்தில் கடுமையான கரையரிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அரசியல் அதிகாரமும், ஒப்பந்த நிறுவனங்களின் பொருளாதார நோக்கங்களும் அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்ததாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


தற்போது ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் கடல் வேகமாக உள்வாங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மருதமுனை, பாண்டிருப்பு, கல்லாறு போன்ற பகுதிகளும் கடலரிப்பின் ஆபத்தில் சிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


மாளிகைக்காடு பகுதியில் அமைந்திருந்த மையவாடி முழுமையாக கடலுக்குள் சென்று அழிந்துள்ளதாகவும், பல இடங்களில் வீடுகள், மரங்கள், மக்கள் பயன்படுத்திய கடற்கரைப் பகுதிகள் ஆகியவை கடலால் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் வலை உலர்த்திய மணற்பரப்புகள் கூட இன்று கடலின் பகுதியாக மாறியுள்ளன.


“ஒரு துறைமுகத்தை அமைப்பது மட்டுமே அபிவிருத்தி அல்ல; அது மனித வாழ்வையும் இயற்கை சமநிலையையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


இந்நிலையில், கடந்தகாலத்தில் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப ஆய்வுகளை புறக்கணித்த அதிகாரிகள் மற்றும் நிர்மாணப் பொறுப்பை ஏற்ற நிறுவனங்கள் ஆகியோர் இந்த சூழ்நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அம்பாறை மாவட்டத்தில் தற்போது நடைபெறுவது சாதாரண கரையரிப்பு அல்ல; தவறான அபிவிருத்தித் திட்டங்கள் ஒரு சமூகத்தின் வாழ்வுரிமை, பாரம்பரியம் மற்றும் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான நேரடி எடுத்துக்காட்டாக இது மாறியுள்ளது என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 ஸ்ரீ லங்கன் விமான நிறுவன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் சடலம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது .


அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன



🚨 BREAKING - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன சடலமாக மீட்பு! 😱✈️


🔴​ஸ்ரீலங்காவை உலுக்கியுள்ள அதிர்ச்சித் தகவல்! ஏர்பஸ் விமானக் கொள்வனவில் பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன, கொழும்பு 07 இல் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்! 🏠


​🔴 என்ன நடந்தது? (Quick Highlights):

♦️​திடீர் மரணம் - இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார். பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 👮‍♂️🔍

♦️​நேற்று வந்த உத்தரவு - 2 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 60 கோடி ரூபாய்க்கும் மேல்!) இலஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், இவரை உடனடியாகக் கைது செய்யுமாறு நேற்று (மே 7) தான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது! ⚖️🚫


🔴​சர்ச்சை பின்னணி - கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருந்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட இருந்த தருணத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 🤔❓


​🔍 அடுத்தது என்ன?

​மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன? இது தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பது பிரேதப் பரிசோதனையின் பின்னரே தெரியவரும். 🏥🧪


🔴​விமான சேவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் முக்கிய சாட்சி/குற்றவாளி மறைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 📉🔥

​​#SriLankanAirlines #KapilaChandrasena #BreakingNewsSriLanka #ColomboNews #AirbusScandal #SrilankaCrime #TrendingNow #VpReport #VisionPoint #CurrentAffairsSL #CorruptionScandal #SrilankaUpdates #lka

 


முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில், அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கிடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இதனால் அப்பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.


"அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறிவிட்டது"

ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளையகமான கதம் அல்-அன்பியா அமெரிக்கா திட்டமிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


ஈரானின் ஜஸ்க் கடலோரப் பகுதியிலிருந்து புறப்பட்ட ஈரானிய எண்ணெய் கப்பலையும், ஃபுஜைரா துறைமுகத்திற்கு அருகே சென்ற மற்றொரு கப்பலையும் அமெரிக்கப் படைகள் இலக்கு வைத்துள்ளன.


 கடல் பகுதியில் மட்டுமன்றி, ஈரானின் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.


"இது தற்காப்புத் தாக்குதல் மட்டுமே"

ஈரானின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க இராணுவம், ஈரானின் தூண்டுதலற்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தாம் செயல்பட்டதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


ஹோர்முஸ் நீரிணையை மூன்று அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் கடக்க முயன்றபோது, ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய ரகப் படகுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியது.


 இந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஈரானிய இராணுவத் தளங்கள் மீது துல்லியமான பதிலடித் தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் மேற்கொண்டுள்ளன.


 உலகளாவிய மசகு எண்ணெய் போக்குவரத்தில் ஹோர்முஸ் நீரிணை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையேற்றம் மற்றும் பிராந்திய பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

போரதீவுப்பற்றில் தமிழ்த்தினப் போட்டிக்குச் சென்ற மூன்று மாணவிகள் விபத்தில்  காயம்.!


​தமிழ்த்தினப் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்ற பாடசாலை மாணவிகள் பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவிகள் காயமடைந்துள்ளனர்.


இன்று (07.05.2026) வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள், கோவில்போரதீவு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள கோட்டமட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.


வெல்லாவெளி - பொறுகாமம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டியின் முன் டயர் திடீரென வெடித்துள்ளது. 


இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தின் காரணமாக முச்சக்கரவண்டிக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


விபத்தின் போது வாகனத்திலிருந்த நான்கு மாணவிகளில் மூவர் காயமடைந்த நிலையில், உடனடியாகக் களுவாஞ்சிகுடி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


​மாணவிகளுக்குப் பொறுப்பான ஆசிரியர் இது குறித்துத் தெரிவிக்கையில்.


​சிகிச்சை பெற்ற மாணவிகளில் இருவர், தங்களது திறமையை வெளிப்படுத்தும் ஆர்வத்துடன் சிகிச்சை முடிந்து உடனடியாகத் தமிழ்த்தினப் போட்டிக்குச் சமூகமளித்துள்ளனர்.


​ஒரு மாணவி மட்டும் மேலதிக சிகிச்சைக்காகத் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.


மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


இந்தோனேஷியாவில் பேருந்தொன்றும் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லொறியொன்றும் மோதி தீப்பிடித்ததில் 16 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.


சுமத்ரா மாகாணத்தில் உள்ள லுபுக்லிங்காவ் நகரிலிருந்து ஜாம்பி நோக்கி 20 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தில் திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்துஎதிரில் வந்த லொறி மீது மோதியுள்ளது. 


மோதிய வேகத்தில் லொறியில் இருந்த டீசல் கொட்டியதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளன.


பேருந்துக்குள் இருந்தவர்களால் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 


 


இலங்கை உயர்நீதிமன்றம், சாய்ந்தமருது நகர சபை சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக நடைமுறையில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.  


கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகியவற்றை வட்டாரங்களாகப் பிரிப்பதற்காக இரண்டு மாதங்களுக்குள் தேசிய எல்லை நிர்ணயக் குழுவை நிறுவுமாறு உள்ளூராட்சி அமைச்சர் பணிக்கப்பட்டார்.  


எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டவுடன், கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகிய இரண்டிற்கும் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.



 


மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட வேடுவத்தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார். 


வெலிசர காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர், தனது 62ஆவது வயதில் காலமானார்.


 


நார்வே உலகின் மிகப் பசுமையான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


இதன் நகரங்களில் மிதிவண்டிகள் நிறைந்து காணப்படுகின்றன, இதன் 98 சதவீத மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து கிடைக்கிறது மற்றும் 2024-இல் விற்கப்பட்ட ஒவ்வொரு பத்து புதிய வாகனங்களில் ஒன்பது மின்சார வாகனங்கள் ஆகும்.


நார்வே சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடும் கூட. இங்கே மொத்த எரிசக்தி நுகர்வில் மின்சாரத்தின் பங்கு மிக அதிகம். கார்பன் வரி விதித்த ஆரம்பகால நாடுகளில் இதுவும் ஒன்று.


ஆனால் இதனுடன் சேர்த்து, இந்நாடு எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாசு உண்டாக்கும் இந்த நிலக்கரி போன்ற எரிபொருள்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, இதுதான் நார்வே அரசின் வருமானத்திற்குப் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.


இந்த வளங்களே 'ஆயில் ஃபண்ட்' என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற 'சாவரின் வெல்த் ஃபண்ட்' உருவாவதற்குக் காரணமாக அமைந்தன. இதுவே தாராளமான ஓய்வூதிய முறை மற்றும் நலன்புரி அரசின் நிதித் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.


உள்நாட்டில் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்கும், உலக அளவில் புதைபடிவ எரிபொருட்களின் பெரிய ஏற்றுமதியாளராக இருப்பதற்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு 'நார்வேஜியன் பேரடாக்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளாகக் கடுமையான அரசியல் மற்றும் சமூக விவாதங்களை உருவாக்கி வருகிறது.


சுற்றுச்சூழல் குழுக்களும் இளைஞர் செயல்பாட்டாளர்களும் எண்ணெய் வணிகத்தைக் குறைப்பதற்கான உறுதியான வாக்குறுதிகளையும் காலக்கெடுவையும் கோரி வரும் நிலையில், பொருளாதாரத்தில் இதன் பங்களிப்பு மற்றும் இதனால் உருவாகும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காரணமாக இந்தத் தொழில் தனது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துள்ளது.


மத்திய கிழக்கில் போர் மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியமான ஹோர்மூஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு, நார்வேயிற்குப் பெரும் எதிர்பாராத லாபத்தை அளித்துள்ளது. ஆனால் இது நாட்டின் மிகவும் சங்கடமான விவாதங்களில் ஒன்றை மீண்டும் வேகப்படுத்தியுள்ளது.


நார்வேயின் சுற்றுச்சூழல் அமைப்பான 'ஃப்ரண்ட்ஸ் ஆஃப் தி எர்த் நார்வே' தலைவர் ட்ரல்ஸ் குலோவ்சன் பிபிசி முண்டோவிடம் கூறுகையில், "என்னைப் போன்ற ஒரு நார்வேஜியன் சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு இந்தச் சூழல் வெட்கக்கேடானது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.


நார்வேயில் மக்கள் மிதிவண்டிகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.பட மூலாதாரம்,Getty Images

ஐக்கிய நாடுகளின் மனித மேம்பாட்டுக் குறியீட்டின்படி, உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றான நார்வேயில் எரிசக்தித் துறை செழிப்பின் முக்கிய ஆதாரமாக உள்ளது.


நார்வேயின் மொத்த ஏற்றுமதியில் இந்தத் துறையின் பங்களிப்பு 60 சதவீதத்திற்கும் அதிகமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதத்திற்கும் மேலாகவும் உள்ளது.


நார்வேயின் கண்டக்கரை பகுதியில் மிகப்பெரிய ஆபரேட்டராக 'இக்வினோர் குரூப்' உள்ளது, இதில் பெரும்பான்மையான பங்குகள் அரசிடம் உள்ளன. அதன் லாபத்தின் பெரும் பகுதி சாவரின் வெல்த் ஃபண்ட் எனப்படும் 'ஆயில் ஃபண்டில்' செலுத்தப்படுகிறது.


ஒரு மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த நிதியில் மொத்தம் 1.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இருந்தன, இது ஒரு குடிமகனுக்கு சுமார் 3.5 லட்சம் டாலர் சேமிப்பிற்குச் சமம்.


2026-ஆம் ஆண்டின் தற்போதைய சூழலில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் இது மேலும் அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது.


இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து, அரசுக்குக் கூடுதலாக 5 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது மற்றும் உள்ளூர் எரிசக்தி நிறுவனங்களின் செயல்பாடுகளால் ஓஸ்லோ பங்குச் சந்தை சாதனைகளைப் படைத்துள்ளது.


செழிப்பான நார்வேயின் பொருளாதாரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது.பட மூலாதாரம்,Kristian Helgesen/Getty

படக்குறிப்பு,நார்வேயின் பொருளாதாரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது.

நோபல் அமைதிப் பரிசு வழங்கும் ஒரு நாடு, போரின் கொந்தளிப்பால் பணக்கார நாடாக மாறுகிறது என்ற கருத்துக்குத் தொழிலாளர் கட்சி அரசு பதிலளிக்க முயன்றுள்ளது.


நார்வேயின் நிதி அமைச்சரும் நேட்டோவின் (NATO) முன்னாள் பொதுச் செயலாளருமான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இதை ஒரு முரண்பாடு என்று குறிப்பிட்டு, நார்வேவுக்கு 'அமைதியால் தான் அதிக லாபம் கிடைக்கிறது' என்றார்.


ஆனால் என்.ஆர்.கே-வின் (NRK) கட்டுரையாளர் செசிலி லாங்கும் பெக்கரின் வார்த்தைகளில், "கசப்பான உண்மை என்னவென்றால், உலகம் எரியும்போது நமது அரசு பட்ஜெட்டில் பணம் வந்து சேர்கிறது."


இந்தச் சூழல் 2022-லேயே தெளிவாகத் தெரியத் தொடங்கியது, அப்போது யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய பிறகு ஐரோப்பாவிற்கான மாஸ்கோவின் ஏற்றுமதி வேகமாக சரிந்தது.


அப்போதிருந்து, எரிசக்தி நெருக்கடியில் தவிக்கும் கண்டத்திற்கு நார்வே மட்டுமே நம்பகமான விநியோகஸ்தராக உருவெடுத்துள்ளது.


நிதி நிறுவனமான நோர்டியாவின் ஆய்வாளர் தீனா சால்ட்வெட் பிபிசி முண்டோவிடம் கூறுகையில், "இன்று நாம் ஐரோப்பாவில் நுகரப்படும் எரிவாயுவில் சுமார் 30 சதவீதத்தையும், எண்ணெயில் 15 சதவீதத்தையும் விநியோகிக்கிறோம், நமது மொத்த ஏற்றுமதியில் 90 சதவீதத்தை அங்கேயே அனுப்புகிறோம்" என்றார்.


நார்வேயின் கார்பன் உமிழ்வை குறைக்கும் கொள்கை

புதைபடிவ எரிபொருட்களின் ஏற்றுமதி குறித்த விவாதம் நார்வேயில் பல ஆண்டுகளாக நீடிக்கிறது.பட மூலாதாரம்,Paul S. Amundsen/Getty Images

படக்குறிப்பு,புதைபடிவ எரிபொருட்களின் ஏற்றுமதி குறித்த விவாதம் நார்வேயில் பல ஆண்டுகளாக நீடிக்கிறது.

பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு கையிருப்பு இருந்தபோதிலும், நார்வே பல தசாப்தங்களாக ஐரோப்பாவின் தூய்மையான உள்கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அதன் நீர்மின் விநியோக கட்டமைப்பு ஆகும்.


1991-இல் பசுமை எரிசக்தியை ஊக்குவிக்க அரசு கார்பன் வரியை விதித்தது; 2005-இல் ஊக்கத்தொகைகள் காரணமாக மின்சாரக் கார்களில் நார்வே உலகின் முன்னணி நாடாக மாறியது; மற்றும் 2017-இல் நாடாளுமன்றம் 2030-க்குள் கார்பன் உமிழ்வை 50 சதவீதம் குறைக்கக் காலநிலைச் சட்டத்தை நிறைவேற்றியது.


இருப்பினும், தற்போதைய சர்வதேச நிலவரங்கள் இந்தப் போக்கைத் தடம் புரளச் செய்வது போலத் தோன்றுகின்றன. யுக்ரேன் மற்றும் இரான் மோதல்கள் மிகவும் 'பசுமை' கொள்கை கொண்ட அரசியல் கட்சிகளைக் கூட, ஐரோப்பிய எரிசக்தி பாதுகாப்பிற்கு நார்வேஜியன் எரிவாயு ஒரு 'தேவையான தீமை' என்பதை ஏற்கக் கட்டாயப்படுத்தியுள்ளன.


குலோவ்சனின் கூற்றுப்படி, உலகளாவிய உறுதியற்ற தன்மை, ஹைட்ரோகார்பன்கள் மீது இன்னும் அதிக சார்ந்திருப்பதை நியாயப்படுத்துகிறதா என்பதுதான் இப்போது பிரதான விவாதமாக உள்ளது.


"இப்போது ஆர்க்டிக் கடல் பகுதிகளின் புதிய இடங்களில் வேலை செய்வது பற்றிப் பேச்சுக்கள் நடக்கின்றன - அத்தகைய உணர்திறன் வாய்ந்த சூழலில், எந்தச் சூழ்நிலையிலும் அகழ்வாராய்ச்சி நடக்கக்கூடாது" என்று அவர் கூறினார்.


அடுத்தது என்ன?

நார்வே அரசு எண்ணெய் தொழிலை மேலும் மேம்படுத்த விரும்புகிறது, அதற்கான ஆய்வுகளுக்கான புதிய உரிமங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.பட மூலாதாரம்,Chris Ratcliffe/Getty Images

படக்குறிப்பு,நார்வே அரசு எண்ணெய் தொழிலை மேலும் மேம்படுத்த விரும்புகிறது, அதற்கான ஆய்வுகளுக்கான புதிய உரிமங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நார்வே பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோரேவின் அரசு சமீபத்தில் 57 புதிய ஆய்வு உரிமங்களை வழங்கியது.


"ஐரோப்பாவிற்கு விநியோகம் செய்ய இன்னும் கூடுதலான எண்ணெயைத் தொடர்ந்து தேடுவோம்" என்று அவர் உறுதியளித்தார்.


ஸ்டோரே 'எண்ணெய் துறையிலிருந்து வெளியேறும் கட்டத்தை' தீர்மானிப்பதை விட, தொழில்துறையின் 'வளர்ச்சிக்கு' ஆதரவாக உள்ளார்.


தனது கட்சியின் இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்தபோதிலும், தொழில்துறையிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை வழங்கும் எண்ணம் ஸ்டோரேவிற்கு இல்லை.


மாறாக, பழைய எண்ணெய் கையிருப்புகளில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்ட, மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்ட பாரண்ட்ஸ் கடல் பகுதியில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.


இண்டஸ்ட்ரி எனர்ஜி யூனியனின் ஃப்ரோட் ஆல்ஃபைம் பிபிசி முண்டோவிடம் இந்தத் தொழிலின் சமூக முக்கியத்துவத்தை நினைவுபடுத்தினார். "நாம் 2 லட்சத்திற்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்புகளைப் பற்றிப் பேசுகிறோம். இது ஐரோப்பாவிற்கான விநியோகத்தை நிறுத்துவதற்கான நேரம் அல்ல."


அதே நேரத்தில், "இந்தத் தொழில் அதன் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது என்பதை அதிகமான மக்கள் உணர்ந்து வருகின்றனர், ஆனால் இந்த மாற்றத்தின் பயணம் வலி நிறைந்ததாக இருக்கும்." என்று சால்ட்வெட் எச்சரித்தார்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.