Showing posts with label Slider. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது கமு/அல் ஹிலால் வித்தியாலய வளாகத்தை வெளிச்சமூட்டும் நோக்கில் LED மின்குமிழ் தொகுதிகள் இன்று (16) காலை வழங்கி வைக்கப்பட்டன. இந்த உதவியை மயோன் குழும தலைவர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் எம். றிஸ்லி முஸ்தபா அவர்கள் வழங்கினார்.

பாடசாலை அதிபர் கே.எல்.அப்துல் ஜொளபர் அவர்களின் தலைமையில் இன்று காலை பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலின் போது, குறித்த LED மின்குமிழ் தொகுதிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார், மயோன் குழும உறுப்பினர்கள் ஏ.எல்.எம். நியாஸ், எச்.எம்.ஸிஹாப், பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பும் கல்விச் சூழலின் மேம்பாடும் கருதி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும், தொடர்ச்சியாக பாடசாலைக்காக பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வரும் எம். றிஸ்லி முஸ்தபா அவர்களுக்கு, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.


 நூருல் ஹுதா உமர்


நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி டாக்டர் ஜே.சிவசுப்ரமணியம் அவர்களின் தலைமையில், நிந்தவூர் 3 பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட அரச ஸ்தாபனங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நோய் தடுப்பு பரிசோதனை இன்று (16.01.2026) மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, டெங்கு கொசு பெருகக் கூடிய இடங்கள் உள்ளனவா என ஆராயப்பட்டதுடன், அவற்றை அகற்றுவது தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு வேலைத்தளங்களில் சுகாதார நிலைமைகள் ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடுகள் காணப்பட்ட இடங்களில் உடனடி சீரமைப்பு மேற்கொள்ளுமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அதேவேளை, வீதியோர கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை, சுற்றுப்புற சுத்தம் மற்றும் உணவு கையாளும் நடைமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. சுகாதார விதிமுறைகளை மீறிய இடங்களுக்கு தேவையான எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டன.

பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில், இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டெங்கு நோய் பரவலைத் தடுப்பதற்கும், உணவு சுகாதாரத்தை பேணுவதற்கும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 


நூருல் ஹுதா உமர்


காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் திரு. அ. சுந்தர குமார் அவர்கள் தனது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில், அவரை கௌரவிக்கும் சேவை நலன் பாராட்டு விழா காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன், உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், சபை உறுப்பினர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டது.

நிகழ்வின் போது, திரு. அ. சுந்தர குமார் அவர்கள் அரச சேவையில் ஆற்றிய நீண்ட கால அர்ப்பணிப்பான சேவை, நிர்வாக திறமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் குறித்து நினைவுகூரப்பட்டு பாராட்டப்பட்டன. அதன் அடையாளமாக அவருக்கு நினைவுச் சின்னமும், கௌரவப்பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், நிகழ்வில் உரையாற்றியோர், தனது சேவை காலம் முழுவதும் பிரதேச சபையின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் நலனுக்கும் உறுதுணையாக செயல்பட்ட அவரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டனர். ஓய்வுபெற்ற பின்னரும் அவர் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

பிரதேச சபை பிரமுகர்கள் பலரினதும் பங்கேற்பு மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களுடன் இந்த சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

 


அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரி பிரதான வீதியில் ஆற்றையும் கடலையும் இணைக்கும் பாலத்தின் கீழ் நட்டாற்றில் உள்ள பெரும் பாறையில் பாரிய முதலையொன்று துயில் கொள்வதைக் காணலாம். நீண்ட தூரத்தில் இருந்து எடுத்த படம் இது.


படங்கள் வி.ரி. சகாதேவராஜா 

 


கடுமையான வெள்ளப்பெருக்கின் போது நீரில் மூழ்கிய கலா ஓயா பாலத்தின் வழியாக பேருந்தை ஓட்ட முயன்றதற்காக, இரண்டு பயணிகளின் மரணத்திற்கு காரணமானதாகவும், உயர் நீதிமன்ற நீதிபதி உட்பட 66 பேரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 (வி.ரி.சகாதேவராஜா)

பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கழுகொல்ல கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு கனடா - கல்முனை பிராந்திய இணையத்தினர் பொங்கல் பரிசை நேற்று வழங்கினர் .

கல்முனை கனடா பிராந்திய இணைய நிறுவனத்தினர் அந்த மக்களுக்கு சாரி மற்றும் பொங்கல் பானை அகப்பை உள்ளிட்ட உள்ளீடுகளை 
தாயக இணைப்பாளர் என். சௌவியதாசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா, எஸ். சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கழுகொல்ல சமூக செயற்பாட்டாளர் நந்தினி தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் 21 பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப தாய்மாருக்கு இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டது.



வி.சுகிர்தகுமார்        

 கூடிப்பொங்கல் விழா அம்பாரை மாவட்டத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான இணைவாக ஆலையடிவேம்பு ஸ்ரீ சிந்தமாணி விநாயகர் ஆலயத்தில் இவ்வருடம் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் கூடிப்பொங்கல் வைத்து கொண்டாடுவோம் வாரீர் என ஆலய நிருவாக சபையினர் அழைத்ததற்கு அமைய ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்களுக்கு பொங்கல் பானைகளும் பொங்கலுக்கு தேவையான பொருட்களும் பிரதமகுரு சிவஸ்ரீ விநாயகமூர்த்தி குருக்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் பின்னராக பெண்கள் பொங்கலிடும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பூஜை வழிபாடுகளை ஆலய குரு சிவஸ்ரீ கிதுர்ச சர்மா நடாத்தி வைத்தார்.
தொடர்ந்து அடியவர்களுக்கு பிரசாதமும் கைவிசேடமும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேநேரம் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய பகவானுக்கான விசேட பூஜைகள் இடம்பெற்றன.
முன்னேற்பாடுகளில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜவ்பர்கான் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் இரு வாரத்தில் 36 டெங்கு நோயாளர்கள்

மக்கள் அவதானம்!


  ஜவ்பர்கான் மட்டக்களப்பு


நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோய் பரவல் காணப்படும் அதேசமயத்தில் மட்டக்களப்பில்  இருவாரத்தில் 36 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


இவ்வாண்டின் ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம்; 11ஆந் திகதி வரையுமான முதல் இரு வாரங்களில் இம்மாவட்டத்தில் பல பாகங்களிலுமிருந்து மொத்தமாக 36 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


இவ்வாரம் வரை டெங்கு தாக்கத்தினால் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகபட்சமாக 20 பேர் டெங்கு நோயினால் பாதிப்புக்குள்ளானர். அதேபோல்  செங்கலடி பிரதேசத்தில் 06 பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேரும் களுவாஞ்சிக்குடி, கிரான், ஓட்டமாவடி, வாகரை, வவுனதீவு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 36 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காத்தான்குடி, ஏறாவூர், கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, பட்டிப்பளை மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் இவ்வாண்டின் முதல் இரு வாரங்களிலும் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.


மேலும் கடந்த சில வாரங்களின் அவதானத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த  ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி  தவபாலசூப்பிரமணியம் சரவணன்; மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். இருப்பினும் கடந்த  டிசம்பர் மாதம் 71 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.


மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் குறிப்பாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகள் மற்றும் சுற்றுச் சூழலில் தேங்கியிருக்கும் குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி  சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


🛑#CLOSED 

மறு அறிவித்தல் வரைக்கும் ஈரான் தனது வான்பரப்பை மூடியுள்ளது!

இதேவேளை கட்டார் #எயார்வேய்ஸ் எதிர்வரும் ஞாயிறு(18) வரைக்கும் ஈரானுக்கான அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தியுள்ளது.

.


 உலகில் தமிழர் சமூகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைத் திருவிழா அல்லது தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


 தை மாதத்தின் முதல் நாளில் ( ஜனவரி 14 அல்லது 15) நடைபெறும் இந்த பண்டிகை, தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் சமூகத்திலும் மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படும் ஒன்று. 
இது இயற்கையின் பெருமையை, விவசாயத்தின் மகத்துவத்தை மற்றும் குடும்ப, சமூக உறவுகளின் அமைதியை உணர்த்தும் ஒரு பண்பாட்டு விழா ஆகும்.

விவசாய  நன்மை மற்றும் நன்றி என்பவற்றை மக்களிடம் கொண்டு வரும் ஒரு சிறப்பான விழாவாகும்.
பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம்
 என்பது சூரிய தேவனை மரியாதை செய்யும் திருவிழாவாகும்.இயற்கைக்கு நன்றி சொல்லும் நாள் இது.

தை பொங்கலுக்கான சிறந்த நேரம்:*

2026 ஜனவரி 15 வியாழக்கிழமை தைப்பொங்கல் திருநாள் காலை 8 முதல் 9 மணி வரை சூரிய ஓரை என்பதால், இந்த நேரத்தில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மகத்தான பலனை தரும். 9 முதல் 10 மணி வரை சுக்கிர ஓரை, இந்த நேரத்தில் பூஜை செய்தால் குடும்ப சாந்தி, செல்வ வளம் அதிகரிக்கும். இந்த இரண்டு நேரங்களையும் நேரங்களையும் தவறினால், காலை 10.30 முதல் 11.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். பக்தியுடன் செய்த வழிபாடு வருடம் முழுவதும் நன்மையும், சந்தோஷமும் தரும் என்று சித்தர்கள் குரல் தெரிவிக்கிறது.
     


என்ற ஆன்மீகத்தை வளர்க்கும் முக்கிய காரணியாகும்.



தைப் பொங்கல் என்பது மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பான சின்னமாகும். இது நமக்கு இயற்கைக்கு நன்றி சொல்லும், குடும்பங்களோடு சந்தோஷத்தை பகிரும், சமூகத்தின் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு அற்புத வாய்ப்பு அளிக்கிறது.


பாரம்பரியத்தின் சிறப்பான சின்னமாகும். இது நமக்கு இயற்கைக்கு நன்றி சொல்லும், குடும்பங்களோடு சந்தோஷத்தை பகிரும், சமூகத்தின் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு அற்புத வாய்ப்பு அளிக்கிறது.


 இந்த ஆண்டு தைத் திருவிழா ஒவ்வொருவருக்கும் சந்தோஷம், வளம் மற்றும் நற்பணி நிறைந்ததாக அமைய வாழ்த்துகள்.

தைப்பொங்கல்  பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அவையாவன:
1️⃣ போகி
– பழையதை அகற்றி, புதியதை வரவேற்கும் நாள்
– வீடுகளைச் சுத்தம் செய்து, போகி தீ மூட்டல்
2️⃣ தைப்பொங்கல் (சூரிய பொங்கல்)
– சூரிய பகவானுக்கு நன்றி கூறும் முக்கிய நாள்
– புதுப் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு
3️⃣ மாட்டுப் பொங்கல்
– விவசாயத்திற்கு உதவும் மாடுகளுக்கு மரியாதை
– மாடுகளை அலங்கரித்து பூஜை செய்வது
4️⃣ காணும் பொங்கல்
– உறவினர்கள், நண்பர்கள் சந்திக்கும் நாள்
– வெளியே சென்று மகிழ்ச்சி பகிரும் நாள்.

தைப்பொங்கல் விழா குடும்பத்தையும், சமூகத்தையும் ஒன்றிணைக்கும் சக்தியுடையது. வீட்டின் சமையலறை, நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் இணைத்து அனைவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. இதனால் தந்தை, தாய், பிள்ளைகள் மற்றும் பெரியோர் அனைவரும் ஒரு குடும்பமாக சேர்ந்து திருவிழாவை கொண்டாடுவார்கள்.
இத்தகைய திருவிழா நம் பாரம்பரிய பண்பாடு, விவசாய வாழ்வு, இயற்கையுடன் இணைந்து வாழ்வது என்பதில் சிறந்த படிப்பினையை வழங்குகிறது. தைப்பொங்கல் நமது முன்னோர்களின் வாழ்வின் மகத்தையும், தமிழ் பண்பாட்டின் அழகையும், சமூக உறவுகளின் வலிமையையும் சுட்டிக்காட்டுகிறது.
முடிவாக, தைப்பொங்கல் மக்களுக்கு நல்வாழ்க்கை, உழைப்பின் மதிப்பு மற்றும் சமூக ஒற்றுமையை உணர்த்தும் ஒரு ஆன்மிகப் பெருமை கொண்ட திருவிழாவாகும். இது வாழ்வின் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளும், நமது பாரம்பரியத்தின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு பொதுப் பண்டிகையாகும். 
அத்தகைய பண்டிகையை உரிய சம்பிரதாய முறைப்படி கொண்டாடி மகிழ்வோம்.

வித்தகர் விபுலமாமணி விரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்



 ரீ.எல்.ஜவ்பர்கான்

 மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் ஒரே நாளில் ஏழு பேருக்கு டெங்கு ! தற்போது பரவுவது DHF எனும் குருதிப்பெருக்குடனான ஆபத்தான டெங்கு! கட்டுப்படுத்த சுகாதார அமைச்சினால் பாரிய நடவடிக்கை 

-சுகாதார வைத்திய அதிகாரி (குரல்)



ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு 


அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைகையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகிறது. மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் மாத்திரம் நேற்று ஒரே நாளில் ஏழு பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்  கல்லடி நாம கூட நொச்சு முனை சேத்துக்குடா புளியந்தீவு ஆகிய பகுதிகளில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது பரவும் டெங்கு நோயானது டி எச் எப் என்கின்ற குருவி பெருக்கோடு ஏற்படுகின்ற ஆபத்தான நோயாக காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.கல்லடி,நாவற்குடா,சேத்துக்குடா, புளியந்தீவு ஆகிய இடங்களில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் டெங்கு நோய் அதிகமாக பரவி டெங்கு குழம்புகள் இணங்காடப்பட்ட இடங்களில் நேற்று முழுநாளும் பாரிய தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன .242 வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


இதன்போது டெங்கு குடம்பிகள் உருவாகும் வகையில் சுற்றுச் சழலை வைத்திருந்த இடங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டன .

சுற்றுச்சூழலை டெங்கு பரவும் இடங்களாக வைத்திருக்கும் நபர்கள் மீது இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்

திருமலை கடற்கரை சர்ச்சைக்குரிய புத்தர் சிலை 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேருக்கு எதிர்வரும் 19 வரை விளக்கமறியல்.

-------------------------------------------------------------------------

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (14) உத்தரவு பிறப்பித்துள்ளது.


திருகோணமலை நீதவான் நீதிமன்றின் குறித்த வழக்கானது இன்றையதினம் (14) புதன்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். 


குறித்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரு தரப்பினராலும் சமர்ப்ணங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் சமாதானமான முறையில் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவ்வாறாயின் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்டபோது எதிர் தரப்பினர் அதற்கு இணங்கிக் கொள்ளாத நிலையில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கின்ற கைதுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்து குறித்த எதிரிகளுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.


குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்த 11 பேரில் 9 பேர் இன்றையதினம் (14) நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப  தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருகோணமலை பிரதான கடற்கரைக்கு அருகில்  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2025 நவம்பர் மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியதாக கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை துறைமுக பொலிஸார் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு 17.11.2025 அன்று திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் சார்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


ரீ.எல் ஜவ்பர்கான் மட்டக்களப்பு 

கிழக்கு மாகாணத்தில் அரச வைத்திய அதிகாரிகள் வேலைநிறுத்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக  பாதிப்பு -தூர இட நோயாளர்கள் திரும்பிச் சென்றனர்


ரீ.எல் ஜவ்பர்கான் மட்டக்களப்பு 


அரச வைத்திய  அதிகாரிகள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன 

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரே ஒரு போதனை வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பணிகள் இடம்பெறாமையினால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் 


தூர இடங்களிலிருந்து வைத்திய சேவைகளுக்காக மற்றும் கிளினிக்களுக்காகவும் வருகை தந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதை அவதானிக்க முடிந்தது 


குறித்த வைத்தியசாலையில் அவசர வைத்திய பணிகள் மாத்திரம் இடம் பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சனி தெரிவித்தார் .


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்ற கோரிய குறித்த வேலை நிறுத்தம் இடம் பறுவதாக தெரிவிக்கப்படுகிறது

 


மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள இக்பால் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை இன்று புதன்கிழமை (14) இக்பால் நகர் பல்தேவை கட்டிடத்தில்  இடம்பெற்றது 


மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.


இதன்போது காணி ஆவணம் தொடர்பான ஆலோசனை,அஸ்வெசுவ, அரசாங்க கொடுப்பணவுகள் தொடர்பான ஆலோசனைகள்,இறப்பு பிறப்பு பதிவுகளுக்கான வழிகாட்டல், மக்களின் குறைபாடுகளை கேட்டறிதல்,ஆயுர்வேத வைத்திய சேவை என பல சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன .


இவ் நடமாடும் சேவையில் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு சேவை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


காலடிக்குச் சென்று மக்களுக்கு சேவை வழங்கும் இவ் நடமாடும் சேவையானது ,ஒவ்வொரு புதன்கிழமையும்  ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது

 


இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறைக்கப்படுமென வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. 


இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை நாளை மறுநாள் (16) முதல் ஒரு கிலோகிராம் 125 ரூபாவினால் குறைக்க பால்மா இறக்குமதியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்

 வாசகர்களுக்கு இந்த பொங்கல் புது தொடக்கம், புது நம்பிக்கை,பெரும் மகிழ்ச்சி கொண்டு வரட்டும்!

உங்கள் இல்லம் செழிப்பாலும் சந்தோஷத்தாலும் நிரம்ப, உழைப்பிற்கு இனிய பலன் கிடைக்க, புதிய நம்பிக்கைகள் மலர இந்த பொங்கல் திருநாள் துணை நிற்கட்டும். 

இனிய பொங்கல் வாழ்த்துகள்


 நூருல் ஹுதா உமர்


இலக்கியம், விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள், கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் மாகாண மற்றும் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சம்மாந்துறையின் புகழுக்கு வித்திடும் மாணவர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபை தேசிய மட்டத்தில் புத்தாக்கப் போட்டியில் வெற்றி பெற்ற இரு மாணவர்களை கௌரவித்துள்ளது.

அதன்படி, சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் மாணவி எம்.ஐ.எப். ஹிமா மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவன் எம்.ஏ.ஏ. அஸ்ரிப் ஆகியோர், பாடசாலை ரீதியாக நடைபெற்ற புத்தாக்கப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றமைக்காக, சம்மாந்துறை பிரதேச சபையினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்தக் கௌரவிப்பு நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபையின் 05ஆவது சபையின் 07ஆவது அமர்வு இடம்பெற்றபோது, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில், சபா மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்றது.

குறித்த இரு மாணவர்களின் புத்தாக்க மற்றும் கண்டுபிடிப்பு திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஆதரவுடனும், அவர்களுக்கு பணப்பரிசு, பொன்னாடை போர்த்தல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், மாணவர்களின் சாதனை சம்மாந்துறை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச சாதனைகள் பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 


ஈரானில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் நடப்பு அரசாங்கத்தின் வீழ்ச்சியை காட்டுவதாக ஜேர்மனி விமர்சித்துள்ளது.

 


ஈரானின் ஆட்சி அதன் “இறுதி நாட்கள்களில் இருப்பதாக ஜேர்மனி சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.

 


வன்முறை மூலம் மட்டுமே ஒரு ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும் என்றால், அந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


ஈரானில் தற்போது இடம்பெற்று போராட்டங்களில் அமெரிக்கா தலையிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.


அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டிய ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.


தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், கல்வியலாளர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்வித் துறை தொழிற்சங்க பிரதிநிதிகளைக் கொண்ட முறையான பொறிமுறையின் மேற்பார்வையின் கீழ் அந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அவர்கள் இங்கு முன்மொழிந்தனர்.


கல்வி மறுசீரமைப்புகளை வெற்றிகரமாக்குவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெறுவது அத்தியாவசியமானது என்றும், சந்தேகம் அல்லது அவநம்பிக்கையுடன் மாற்றத்தை மேற்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய கல்வி மறுசீரமைப்புகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.


அரசாங்கம் தொடங்கியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து இங்கு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, முதலாம் தர மறுசீரமைப்பு செயற்பாடுகளைத் திட்டமிட்டபடி செயற்படுத்துவதாகவும், ஆனால் மொடியுல்களைத் தயாரிப்பதில் எழுந்துள்ள சிக்கல்கள், ஆசிரியர் பயிற்சியில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்த்து 6ஆம் வகுப்பு பாட மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் தொடங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போட்கள், தொலைக்காட்சிகள் மற்றும் கணனிகள் போன்ற அடிப்படை வசதிகளைப் பெற்றோரின் பணத்தில் அன்றி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.


மேலும், மாகாணங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் இங்கு ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.


இலங்கை பிரிவெனா ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் வண. வகமுல்லே உதித தேரர், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வண. யல்வெல பஞ்ஞாசேகர தேரர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக அலஹப்பெரும, கல்வி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.ஜி.பி.எல். லால் குமார, அதிபர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ ஆகியோர் உட்பட பல ஆசிரியர் தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் இதில் கலந்து கொண்டனர். தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.