Showing posts with label Slider. Show all posts

உலக கோப்பை ⚽ போட்டியில் நடுவராக பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட

 Omar _க்கு‌ விசா மறுத்துள்ளது அமெரிக்கா!


அதற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம் அவர் சோமாலியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தான்!


~ அமெரிக்கா

உலகக்கோப்பையை நடத்துவதே..,

கால்பந்து-க்கு

உலக நாடுகள் இழைத்த துரோகம்!

நூருல் ஹுதா உமர்


ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி தனது விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. கொழும்பு சுகததாச விளையாட்டரங்க நீச்சல் தடாகத் தொகுதியில் நடைபெற்ற 17வது அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், கல்லூரியின் நீச்சல் அணி முதன்முறையாக பங்கேற்று குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.


கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்ட நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற மாணவராக எம்.எஸ்.எம். ராயீத் இடம்பிடித்துள்ளார். அவர் 50 மீற்றர் பின்நீச்சல் (Backstroke) போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், 50 மீற்றர் சுதந்திர நீச்சல் (Freestyle) போட்டியிலும் தகுதி நேரத்தைப் பதிவு செய்து மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


அதேவேளை, எம்.எஸ்.எம். ராஷித் 50 மீற்றர் பின் நீச்சல் மற்றும் 200 மீற்றர் தனிநபர் கலப்பு நீச்சல் (Individual Medley) போட்டிகளில் தகுதி நேரத்தை பதிவு செய்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எச்.எம். ஹம்தான், எம்.எஸ்.எம். ராஹிக், ஏ.எச். ஹுஸைபா, எம்.எச்.எம். ஹுமைத், எப். மஹ்தி, எம்.ஆர்.எம். ரஹீஷ், எம்.எஸ்.எம். ராஷித், எம்.எஸ்.எம். ராயீத் ஆகிய எட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். நீச்சல் அணி ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் போட்டியிட்டு கல்லூரியின் கீர்த்தியை உயர்த்தியுள்ளனர்.


இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு கல்லூரி அதிபர், நிர்வாகம், விளையாட்டுக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் முழு பாடசாலை சமூகமும் மாணவர்களுக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளன. “இது எமது கல்லூரியின் நீச்சல் விளையாட்டு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். இம்மாணவர்களின் அர்ப்பணிப்பும் முயற்சியும் எதிர்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளுக்கு வழிவகுக்கும்” என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


நூருல் ஹுதா உமர்


ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி தனது விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. கொழும்பு சுகததாச விளையாட்டரங்க நீச்சல் தடாகத் தொகுதியில் நடைபெற்ற 17வது அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், கல்லூரியின் நீச்சல் அணி முதன்முறையாக பங்கேற்று குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.


கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்ட நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற மாணவராக எம்.எஸ்.எம். ராயீத் இடம்பிடித்துள்ளார். அவர் 50 மீற்றர் பின்நீச்சல் (Backstroke) போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், 50 மீற்றர் சுதந்திர நீச்சல் (Freestyle) போட்டியிலும் தகுதி நேரத்தைப் பதிவு செய்து மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


அதேவேளை, எம்.எஸ்.எம். ராஷித் 50 மீற்றர் பின் நீச்சல் மற்றும் 200 மீற்றர் தனிநபர் கலப்பு நீச்சல் (Individual Medley) போட்டிகளில் தகுதி நேரத்தை பதிவு செய்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எச்.எம். ஹம்தான், எம்.எஸ்.எம். ராஹிக், ஏ.எச். ஹுஸைபா, எம்.எச்.எம். ஹுமைத், எப். மஹ்தி, எம்.ஆர்.எம். ரஹீஷ், எம்.எஸ்.எம். ராஷித், எம்.எஸ்.எம். ராயீத் ஆகிய எட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். நீச்சல் அணி ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் போட்டியிட்டு கல்லூரியின் கீர்த்தியை உயர்த்தியுள்ளனர்.


இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு கல்லூரி அதிபர், நிர்வாகம், விளையாட்டுக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் முழு பாடசாலை சமூகமும் மாணவர்களுக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளன. “இது எமது கல்லூரியின் நீச்சல் விளையாட்டு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். இம்மாணவர்களின் அர்ப்பணிப்பும் முயற்சியும் எதிர்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளுக்கு வழிவகுக்கும்” என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 


(வி.ரி.சகாதேவராஜா)


அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில், அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட “ராஜதந்திர ஜெயந்தி” விழாவில் காரைதீவைச் சேர்ந்த ரி.கோணேஸ்வரனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் அம்பாறை மாவட்ட பொருளாளரும், காரைதீவு பிரதேச செயலாளருமான ரி.கோணேஸ்வரன் ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தராவார்.

இந்த பாராட்டு விழா நிகழ்வு கொழும்பு டவர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

ஓய்வூதியதாரர்களின் சமூகப் பங்களிப்பை மதிப்பளிக்கும் வகையிலும், அவர்களிடையே நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக நம்பிக்கை நிதியத்தின் கொழும்புத் தலைமையகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்           

 அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் மயானத்தின் முன்பாக கண்டக்குழி பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய பொருட்களை சேகரிக்கும் நாடார் நிலையமொன்றில் இன்று (09) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இத்தீப்பரவால் அப்பகுதி கரும்புகை நிரம்பி காட்சியளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று மாநாகர சபையின் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.
இதேநேரம் சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று இராணுவம் மற்றும் பொலிசாரும் சென்றிருந்ததுடன் தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகளையும் பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.
தீப்பரவல் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமை எரிவாயு மொத்த வியாபார நிலையம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சரண குணவர்தனவுக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளின் தீர்ப்பை அறிவித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.


இதன்படி, பிரதிவாதிக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளதுடன், அது தொடர்பான விடயங்களை முன்வைக்கும் பணிகளில் சட்டத்தரணிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த 2006ஆம் ஆண்டு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, "ஊழல்" குற்றச்சாட்டின்கீழ் கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நூருல் ஹுதா உமர்

மலேசியாவின் ஹென்டிங் (Genting) நகரில் நேற்று (04) நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற கல்முனை மாணவன் முஹம்மட் அனாகித் அம்றி இரண்டு போட்டி நிகழ்வுகளிலும் சர்வதேச அபாகஸ் போட்டியில்த்தைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

12 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இச்சர்வதேச போட்டியில், சாய்ந்தமருதில் இயங்கி வரும் தாருல் இல்மு கல்வி நிலையத்தின் ஐகம் அபாகஸ் பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முஹம்மட் ஹனீஸ் முஹம்மட் அனாகித் அம்றி (Level-1) தனது திறமையை வெளிப்படுத்தி இந்த சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

கல்முனை – 05, டாக்டர் ரிஸ்வி வீதியைச் சேர்ந்த எம்.எச். முஹம்மட் ஹனீஸ் மற்றும் ஏ.எம். பாத்திமா இன்ஸிரா தம்பதியினரின் புதல்வரான இம்மாணவர், குறுகிய காலப் பயிற்சியிலேயே சர்வதேச மட்டத்தில் தனது கணிதத் திறனையும் மனக்கணக்குத் திறமையையும் நிரூபித்துள்ளார்.

இந்த வெற்றி இலங்கைக்கும், குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கும், கல்முனை மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையாகப் பாராட்டப்படுகிறது. சர்வதேச அரங்கில் இலங்கை மாணவர்களின் அறிவாற்றலையும் போட்டித்திறனையும் வெளிப்படுத்தியுள்ள இச்சாதனை, இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.

மேலும், கடந்த பல ஆண்டுகளாக தாருல் இல்மு கல்வி நிலைய மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டிற்கும் வழங்கி வரும் பங்களிப்பு கல்வித்துறையில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.


 கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை


ஒரு சாம்பியன் பட்டம், இரு ரன்னர்-அப் வெற்றிகள்; 7 மாணவர்கள் மாகாண மட்டத்திற்கு தெரிவு


நூருல் ஹுதா உமர் 


கல்முனை கார்மல் பத்திமா கல்லூரியில் கடந்த 06.06.2026 அன்று இலங்கை பாடசாலை செஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (KM/KM.G.M.M.S) மாணவர்கள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


இப்போட்டியின் 10 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்ற ஏ.மிஷால் உமைர் சாம்பியன் பட்டத்தை வென்று தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார். அதேவேளை, 6 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.எச்.ஹஸிமா மர்யம் முதல் ரன்னர்-அப் இடத்தையும், 8 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.எச்.முஹம்மது ஹாஸிக் இரண்டாம் ரன்னர்-அப் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மேலும், எம்.எச்.ஹஸிமா மர்யம் (தரம் 1), எம்.எச்.முஹம்மது ஹாஸிக் (தரம் 3), எம்.ஏ.ஏ.அபீக் அஹமட் (தரம் 2), எம்.எஸ்.யூசுப் ஐமான் (தரம் 2), எம்.ரீ.எம். மஹ்தி ஹசன் (தரம் 3), ஏ.மிஷால் உமைர் (தரம் 4), எம்.ஏ.கே. அஹமட் ஸைன் மஹ்தி (தரம் 5) ஆகிய ஏழு மாணவர்கள் மாகாண மட்ட செஸ் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.


இளம் வயதிலேயே செஸ் விளையாட்டில் தமது திறமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள இம்மாணவர்களின் வெற்றி, பாடசாலைக்கும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்விச் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.


இம்மாணவர்களுக்கு வழிகாட்டி ஊக்கமளித்த பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பிரதி அதிபர் யூ.எல். றின்ஸா பர்வின், பயிற்றுவிப்பாளர்களான இஸ்மாயில் அஸ்லம் சுஜா மற்றும் எம்.ஏ.ஏ.அதீப் ஆகியோருக்கும், மாணவர்களின் வெற்றிக்கு பின்னணியில் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

 


2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. A/L) பரீட்சை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 09ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 




பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபை இன்று (08) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.


குறித்த சந்திப்பின்போது மலையக மக்களின் வாழ்வியல், வரலாறு மற்றும் கலாசாரத்தை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் தனது திட்டம் குறித்து அமைச்சரிடம் விளக்கியுள்ளார்.


இத்திரைப்படத்தில் மலையக கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.


பிரதி அமைச்சர் இத்திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.



மகளிர் ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதியன்று இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ஆரம்பமாகவுள்ளது. 


இது குறித்து இங்கிலாந்தில் நடந்த இதன் அறிமுகக் கூட்டத்தில், ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


இக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த ரி20 உலகக் கோப்பை தொடர் மகளிர் கிரிக்கெட்டிற்கு ஒரு மைல்கல் எனவும் இதுவரை நடத்தப்பட்ட மகளிர் ரி20 உலகக் கோப்பை தொடர்களில் இது மிகவும் விறுவிறுப்பாக மற்றும் குறிக்கோளுடன் இருக்கும் என நம்புவதாக கூறினார். 


முன்னதாக இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுள்ளன. 


இருப்பினும் இதுவரை இடம்பெற்ற ரி20 உலக கோப்பையில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கம் செலுதித்ய நிலையில் 2010 முதல் 2023 வரை நடைபெற்ற போட்டிகளில் இதுவரை ஆறு முறை கோப்பையை கைப்பற்றி சாதனை செய்துள்ளது.


மேலும் முக்கியமாக 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் ஹர்ட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

 

பெரும்பாலும் இறுதிப் போ ட்டிகளில் அவுஸ்திரேலியா அணி இடம்பெறுகிறது. ஆயினும் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போ ட்டியில் அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்து, இங்கிலாந்து மகளிர் அணி கோப்பையை வென்றுள்ளது. 


இந்நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, 50 ஓவர் உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்த ரி20 கோப்பையையும் வெல்லும் தீவிர பயிற்சியிலுள்ளதாக தெரியவந்துள்ளது.


 ( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள களப்பு மற்றும் மயானவீதி பகுதிகள் காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று (8) திங்கள் கிழமை துப்பரவாக்கப்பட்டன.

பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரனின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத்துப்பரவு நடவடிக்கையில் கனரக வாகன உதவியுடன் சபை ஊழியர்கள் பங்கேற்று வீதியின் இருமருங்கிலும் காடுபற்றிக் கிடந்த மரங்கள் செடி கொடிகள்  அகற்றப்பட்டதுடன், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்கள் சுகாதாரமான சூழலில் வாழ்வதையும் இலகுவாக பயணிப்பதையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான துப்பரவு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.


மேலும், பொதுமக்களும் தமது சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மத்திய கிழக்கில் இரான் - இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் பல ஏவுகணைகளை ஏவியது. இந்தத் தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இது "முழு வாரத்திற்கும் தொடர்ச்சியான தாக்குதல்களின்" ஆரம்பம் என்று அது கூறியுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல் நடத்திய வேளையில், இரானின் இந்தத் தாக்குதலும் நடைபெற்றது.


பெய்ரூட் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஐஆர்ஜிசி, இஸ்ரேல் மீண்டும் "ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில்" ஈடுபட்டால், அதற்கான பதிலடி "மிகப் பெரியதாக" இருக்கும் என்றும், அப்பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் "அனைத்து" இலக்குகளும் அதில் அடங்கக்கூடும் என்றும் எச்சரித்தது.


விளம்பரம்


இதற்குப் பதிலடியாக, மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி மற்றொரு அலையாக ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும் ஏமனில் இருந்தும் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை ஏவப்பட்டதை கண்டறிந்திருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் (IDF) தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?


ஹைஃபாவுக்கு தென்கிழக்கே உள்ள ரமத் டேவிட் விமானப்படை தளத்தைத் தாக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி)கூறியது.


ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக இரான் குற்றம் சாட்டியுள்ளது.


"ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின்" வடக்குப் பகுதியில் உள்ள பல "இராணுவ நிலைகள்" மீது தங்கள் படைகள் தாக்குதல் நடத்தியதாக இரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அமெரிக்கா, இரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏப்ரல் மாதம் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் "தொடர்ந்து மீறப்பட்டதைத்" தொடர்ந்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியது. இரானின் தெற்குப் பகுதியில் இரானியக் கப்பல்கள் மற்றும் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களும் இந்த மீறல்களில் அடங்கும்.


ஏப்ரல் 17 முதல் அமலில் உள்ள போர்நிறுத்தம் பெயரளவில் மட்டுமே உள்ளது. இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய இரு தரப்பினரும் அதைத் தொடர்ந்து மீறி வந்துள்ளனர்.


வார இறுதியில் இரானிய இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கடந்த வாரம் கூறியது. அதேவேளையில், அதற்குப் பதிலடியாக அமெரிக்கத் தளம் ஒன்றை இலக்கு வைத்ததாக இரான் கூறியது.


இரான் தனது பாதுகாப்பையும் தேசிய நலன்களையும் காத்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறியது. லெபனான் அல்லது இரான் மீது தாக்குதல் இஸ்ரேல் நடத்தினால், அதற்கு "வலுவான மற்றும் சக்திவாய்ந்த பதிலடி" கொடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.


லெபனானில் பெய்ரூட்டின் தெற்குப் பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், டெஹ்ரானில் அரசாங்கத்திற்கு ஆதரவாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


புகைப்படங்களில் காணப்பட்ட பல போராட்டக்காரர்கள், இரானின் கொடிகளையும், இரானின் ஆதரவு பெற்ற லெபனானிய அரசியல் மற்றும் இராணுவ அமைப்பான ஹெஸ்பொலாவின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.


டிரம்ப் கூறியது என்ன?

அமெரிக்கா, இஸ்ரேல் - இரான், மத்திய கிழக்குபட மூலாதாரம்,Kevin Dietsch via Getty Images

படக்குறிப்பு,இனி எந்தத் தாக்குதல்களையும் காண விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு இரானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.


அதிபர் டிரம்ப் பேசுகையில்: "அவர்கள் ஏற்கனவே தங்கள் ஏவுகணைகளை ஏவிவிட்டார்கள், போதும் என்ற நிலை வந்துவிட்டது. நாம் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி ஓர் ஒப்பந்தத்தை எட்டுவோம்." என்று கூறியதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.


இரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் பல அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களிடம் பேசியுள்ளார்.


இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசுவதற்கு முன்னதாக, இரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டாம் என்று நெதன்யாகுவை வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகமான 'ஆக்சியோஸ்' (Axios)-இடம் டிரம்ப் கூறினார்.


'டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' (Times of Israel) செய்திப்படி, "இன்றிரவு இனி எந்தத் தாக்குதல்களையும்" பார்க்க விரும்பவில்லை என்று கூறி, இஸ்ரேலின் 'சேனல் 12' (Channel 12) செய்திச் சேனலிடமும் அமெரிக்க அதிபர் அதே கருத்தை வலியுறுத்தினார்.


"இரானின் தாக்குதல்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இரு தரப்பினரும் தங்கள் வேலையைச் செய்தனர். இஸ்ரேல் தாக்கியது, இரானும் தாக்கியது. இப்போது நமக்கு மேலும் தாக்குதல்கள் தேவையில்லை." என்று டிரம்ப் கூறியுள்ளார்.


தான் "இப்போதே" நெதன்யாகுவை அழைத்து, "பதிலடி தாக்குதல் நடத்த வேண்டாம்" என்று கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறினார்.


முன்னதாக, 'பைனான்சியல் டைம்ஸ்' (Financial Times) உடனான உரையாடலில், இரானுடனான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு வேறு "வழியில்லை" என்று டிரம்ப் கூறியிருந்தார்.


"இஸ்ரேலில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழல்" காரணமாக, ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும்.


அனைத்து அமெரிக்க அரசு ஊழியர்களும் "தங்கள் இடத்திலேயே இருக்குமாறும், பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறத் தயாராக இருக்குமாறும்" அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் என்ன செய்கிறது?

அமெரிக்கா, இஸ்ரேல் - இரான், மத்திய கிழக்குபட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,இரான் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய அதிகாரிகள் இடிபாடுகளை அகற்றுகின்றனர்.

தலைமைத் தளபதி (Chief of General Staff) நிலைமையை ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் (IDF) தங்களது டெலிகிராம் (Telegram) பக்கத்தில் தெரிவித்தன.


"உத்தரவு கிடைத்தவுடன் முழு உறுதியுடன் எதிரியைத் தாக்குவோம்" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஐயல் ஜமீர் (Eyal Zamir) கூறியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.


இரான் பொதுமக்களின் மீது "தொடர் தாக்குதல்களை" நடத்துவதை இஸ்ரேலிய ராணுவம் அனுமதிக்காது என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் (Efi Defrin) செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.


"மேலும் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகளுக்கு" இஸ்ரேல் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.


நாடு முழுவதும் வான் பாதுகாப்பு அமைப்புகள் "நிறுவப்பட்டுள்ளதாகவும்", தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி "நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும்" டெஃப்ரின் மேலும் கூறினார்.


"லெபனான் முழுவதும் இஸ்ரேலிய ராணுவம் தனது நடவடிக்கைகளைத் தொடரும்; ஹெஸ்பொலா பயங்கரவாத அமைப்பின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தும்." என்று அவர் தெரிவித்தார்.


இதற்கிடையில், மோதல் குறித்த அச்சம் அதிகரித்த நிலையில், திங்கள்கிழமை காலை ஆசியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.


உலகளாவிய அளவுகோலான 'பிரெண்ட்' (Brent) கச்சா எண்ணெய் விலை 2.6% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 95.50 டாலராகவும், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை 2.5% உயர்ந்து 92.75 டாலராகவும் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதிலிருந்து, எரிபொருள் விலைகளில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டுள்ளன.


இரானுக்கு இஸ்ரேல் பதிலடி

மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.


"சற்று நேரத்திற்கு முன்பு, இஸ்ரேலிய விமானப்படை மேற்கு மற்றும் மத்திய இரானில் உள்ள இரானிய பயங்கரவாத ஆட்சிக்குச் சொந்தமான இராணுவ இலக்குகளைத் தாக்கியது," என்று இஸ்ரேலிய ராணுவம் (IDF) தனது டெலிகிராம் பக்கத்தில் கூறியுள்ளது.


உயிரிழப்புகள் அல்லது தாக்குதல்கள் நடந்த சரியான இடம் குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.


இரானிய அரசு தொலைக்காட்சி தகவல்

இஸ்ரேல் ராணுவ அறிவிப்பைத் தொடர்ந்து, மூன்று நகரங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக இரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


"டெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹானில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டன," என்று அரசு தொலைக்காட்சி தனது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. மத்திய நகரமான கராஜுக்கு அருகிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


மத்திய மற்றும் மேற்கு இரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், டெஹ்ரானின் நகர்ப்புறப் பகுதிகள் குறிவைக்கப்படவில்லை என்று இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


டெஹ்ரான் தீயணைப்புத் துறையை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, திங்கட்கிழமை அதிகாலையில் இரானியத் தலைநகரின் மேற்குப் பகுதிகளில் குறைந்தது இரண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.


சேதத்தின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


இஸ்ஃபஹானில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பிற பகுதிகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


ஏமனில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதாக இஸ்ரேல் தகவல்

ஏமனில் இருந்து இஸ்ரேலியப் பகுதியை நோக்கி ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் (IDF) தெரிவித்துள்ளது.


அந்த அச்சுறுத்தலை இடைமறித்துத் தடுப்பதற்கான வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாக அது கூறியுள்ளது.


ஜெருசலேம், டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலின் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளதாக 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' செய்தி வெளியிட்டுள்ளது.


"சூழலை மதிப்பிட்ட" பிறகு, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் இப்போது "பாதுகாப்பான இடங்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்" என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.


அமெரிக்கா, இஸ்ரேல் - இரான், மத்திய கிழக்குபட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,ஜெருசலேம் நகருக்கு மேலே இரானிய ஏவுகணை ஒன்றை இஸ்ரேல் இடைமறித்தபோது எழுந்த புகை

இரானில் மற்றொரு ஏவுகணை அலை - இஸ்ரேல்

இரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி மற்றொரு அலையாக ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் (IDF) தெரிவித்துள்ளது.


வான் பாதுகாப்பு அமைப்புகள் "அச்சுறுத்தலை இடைமறித்துத் தடுக்கச் செயல்பட்டு வருகின்றன" என்று இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எச்சரிக்கை அறிவிப்பு வந்தால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நாடிச் செல்லுமாறு அது வலியுறுத்துகிறது.

 இலங்கையின் தெற்குக் கடற்கரையோர சொகுசு பங்களா ஒன்றின் கதவுகள் எப்போதும் பூட்டப்பட்டே இருந்தன. உள்ளே 24 மணிநேரமும் குளிரூட்டி இயங்கியதுடன், நள்ளிரவிலும் கணினித் திரைகளின் வெளிச்சம் அறைகளை நிறைத்திருந்தது. அங்கு தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் சுற்றுலாத் தலங்களை ரசிக்க வெளியே வரவில்லை.


"மாதத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வாடகை தருகிறோம் என்று முன்பணத்துடன் வந்தபோது எனக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை," என்கிறார் இலங்கையின் தென்பகுதியில் தனது சொகுசு பங்களாவை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விட்ட வீட்டு உரிமையாளர் ஒருவர். பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத அவர், பிபிசி தமிழிடம் தனது அதிர்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்:


"சுற்றுலாப் பயணிகள் என்றுதான் கூறினார்கள். ஆனால், காவல்துறையினர் எனது வீட்டைச் சோதனையிட்டபோதுதான், உலகளாவிய இணையதள மோசடி வலையமைப்பு ஒன்று எனது வீட்டிற்குள் இயங்கிய அதிர்ச்சி உண்மை எனக்குத் தெரிந்தது. இப்போது விசாரணை, நீதிமன்றம் என்று எனது குடும்பமே அச்சத்தில் உள்ளது" என்கிறார் அவர்.


இது ஏதோ ஒரு தனிப்பட்ட வீட்டின் கதையல்ல. இலங்கை தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் சர்வதேச சைபர் குற்றச் செயல்களின் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது என்பதற்கான நேரடிச் சான்று.



ஆயிரம் பேர் கைது

ஆசியாவின் பிற பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட அதிநெருக்கடி மிக்க இணைய மோசடிக் கும்பல்கள், இலங்கையைத் தங்களின் முதன்மைச் செயல்பாட்டுத் தளமாக மாற்றி வருவதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.


இதன் உச்சகட்டமாக, தெற்கு மாகாணத்தின் மிதிகம, ஹிக்கடுவ, காலி ஆகிய பகுதிகளில் அதிகளவான கைதுகள் இடம்பெற்றுள்ளன.


இலங்கை காவல்துறையினரால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட இறுதிப் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் மே மாத இறுதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் விசா விதிமீறல்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஒட்டுமொத்த வெளிநாட்டுப் பிரஜைகளின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது.


கடந்த 2024ஆம் ஆண்டு முழுவதுமே இக்குற்றச்சாட்டில் 430 பேர் மட்டுமே கைதாகியிருந்தனர். தொடர்ந்து 2025ஆம் ஆண்டில் இணைய நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக 12,650க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகி அச்சுறுத்தல் அதிகரித்திருந்த பின்னணியில், 2026இல் இந்தக் கைதுகளின் எண்ணிக்கை முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளதை இது காட்டுகிறது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

கோடைக் காலத்தில் இரவு குளித்துவிட்டு உறங்கச் செல்வது நல்லதா?


இரவில் தூங்கும் முன் குளிப்பதில் யாருக்கு எச்சரிக்கை அவசியம்? வெப்ப அலையை சமாளிக்க எளிய டிப்ஸ்

மாதவிடாய் சுகாதாரம், வெப்ப அலை, ஆடை தொழிற்சாலைகள்  


'ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்': திருப்பூரில் பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்னைகள் - பிபிசி கள ஆய்வு

செபி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், ரூ.15.15 லட்சம் கோடி வருவாய்

சுமார் ரூ.15 லட்சம் கோடி வருவாய் எப்படி வந்தது? ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் விளக்கம்

அமெரிக்கா, இஸ்ரேல் - இரான், மத்திய கிழக்கு

இரான் - இஸ்ரேல் மீண்டும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்; டிரம்ப் கூறியது என்ன?

End of அதிகம் படிக்கப்பட்டது

அண்மைய முக்கிய சோதனைகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இலங்கை காவல்துறை பகிர்ந்த தகவல்களின் படி, மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தென்னிலங்கையில் நடத்தப்பட்ட 5 அதிரடிச் சோதனைகளில் 173 முதல் 192 வரையான இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி பகுதியில் மட்டும் இரு விடுதிகளில் 110 இந்தியர்களும், மிதிகமவில் 28 பேரும், ஹிக்கடுவவில் 35 பேரும் கைதாகியுள்ளனர்.


மார்ச் மாதத்தில் மிகிந்தலை மற்றும் அனுராதபுரத்தில் ஒரே நாளில் 135 சீனப் பிரஜைகளும், ஏப்ரல் தொடக்கத்தில் சிலாபத்தில் 133 சீனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரியில் கொழும்பு கறுவாத்தோட்டத்தில் 21 பேரும் கைதாகினர்.


கொழும்பு கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு ஸ்ரீ உத்தரானந்த மாவத்தையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் மே 6 அன்று ஒரே சோதனையில் 74 வியட்நாம் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.


இவர்களுடன் நேபாளம், மியான்மர், பிலிப்பின்ஸ், மலேசியா, தைவான், இந்தோனீசியா (77 பேர்) ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிநவீன கணினிகள்/மடிக்கணினிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் மில்லியன் கணக்கான உள்ளூர், வெளிநாட்டு கரன்சிக்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இலங்கையில் மே 12ஆம் தேதியன்று சைபர் குற்ற வேலைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாள பிரஜைகள்பட மூலாதாரம்,Handout

படக்குறிப்பு,இலங்கையில் மே 12ஆம் தேதியன்று சைபர் குற்ற வேலைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாள பிரஜைகள்

"மியான்மரில் ஒடுக்குமுறை; இலங்கையில் புகலிடம்"

சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சைபர் மோசடி வளாகங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தன.


கம்போடியா, மியான்மர், லாவோஸ், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இந்த இணைய மோசடி மையங்களுக்கு எதிராகக் கடும் ஒடுக்குமுறைகளை மேற்கொண்டதால், இந்தக் கும்பல்கள் முற்றாக அழியாமல் தங்கள் செயல்பாடுகளை இலங்கை நோக்கி நகர்த்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இதுகுறித்து டிஜிட்டல் உரிமைகள் ஆர்வலரான சஞ்சன ஹத்துட்டுவ பிபிசி தமிழிடம் கூறும்போது, "கம்போடியா மற்றும் மியான்மரில் உள்ள மோசடி முகாம்கள் மீதான ஒடுக்குமுறைகள் அவற்றை முற்றாக ஒழிக்கவில்லை, மாறாக இடமாற்றம் செய்துள்ளன. அந்த இடப்பெயர்வின் நடைமுறை வடிவம்தான் இலங்கை. தாராளமான சுற்றுலா விசா, நல்ல டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள், மலிவான தங்குமிடங்கள் மற்றும் எவ்வித கேள்விகளும் கேட்காமல் வீடுகளை வாடகைக்கு விடும் முறை ஆகியவை இந்த சர்வதேசக் குற்றக் கும்பல்களுக்கு இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றியுள்ளன" என்றார்.


இதில் உள்ள மற்றொரு சோகமான உண்மை என்னவென்றால், இலங்கை ஒரே நேரத்தில் வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளின் தளமாகவும், அதே நேரத்தில் உள்ளூர் தமிழ், சிங்கள இளைஞர்கள் போலி வேலைவாய்ப்பு என்ற பெயரில் மியான்மர் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படும் மனிதக் கடத்தலின் இரையாகவும் மாறியுள்ள இரட்டை நெருக்கடியைச் சந்திப்பதாகும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


இதற்கிடையே, வெலிசறை தடுப்பு முகாமில் நாடு கடத்தப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த 21 சீனர்கள், 9 வியட்நாமியர்கள் உள்ளிட்ட 30 பேர் அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பாதுகாப்புப் பிரிவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பின்னர் அவர்கள் பொரலஸ்கமுவையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டனர்.


வியப்பூட்டும் விதமாக, "அவர்கள் தப்பியோடிய சில நாட்களிலேயே 10 கணினிகள் மற்றும் 29 ஐபோன்களுடன் மீண்டும் ஒரு புதிய மோசடி மையத்தைத் தொடங்கிச் செயற்பட்டு வந்துள்ளனர்" என காவல்துறையினர் கூறுகின்றனர்.


"ஒரு தடுப்பு முகாமில் இருந்து தப்பித்து, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, உள்கட்டமைப்பை அமைத்து, மீண்டும் ஒரு மோசடி மையத்தை யாராலும் தற்செயலாகத் தொடங்க முடியாது. இந்த அமைப்பிற்குள் ஏதோவொரு பெரிய முறைகேடு அல்லது ஊழல் நடந்துள்ளது என்பதை இது காட்டுகிறது" என்று சஞ்சன ஹத்துட்டுவ சுட்டிக்காட்டினார்.


இலங்கையில் மே 12ஆம் தேதியன்று சைபர் குற்ற வேலைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாள பிரஜைகள்பட மூலாதாரம்,Handout

அரசு கூறுவது என்ன?

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, "இலங்கை சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த நெருக்கடியைக் கையாள்வதற்குப் போதுமான சட்டங்கள் நாட்டில் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.


முன்னதாக இலங்கையில் சைபர் குற்றங்கள் 2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணினிக் குற்றங்கள் சட்டத்தின் மூலமே நிர்வகிக்கப்பட்டன. எனினும், சில குற்றங்கள் கணினி மூலமே செய்யப்பட்டன என்பதை நிரூபிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எல்லை கடந்த குற்றங்களை எதிர்கொள்வதில் தற்போதைய சட்டத்தில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை நிவர்த்தி செய்ய இரண்டு புதிய சட்டமூலங்கள் அவசரமாகத் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.


டிஜிட்டல் பொருளாதாரச் சட்டம் (Digital Economy Act): நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை ஒழுங்குபடுத்த புதிய விசேட அதிகார சபை இதன் கீழ் நிறுவப்படும்.

சைபர் பாதுகாப்புச் சட்டம் (Cyber Security Act): இச்சட்டத்தின் கீழ் "சைபர் குற்றங்கள் ஒழுங்குமுறை அதிகார சபை" (Cyber Crimes Regulatory Authority) 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறுவப்படும்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால இதுகுறித்து பிபிசி தமிழுக்கு கூறுகையில், புதிய சட்டத்தின் கீழ் நிறுவப்படும் இந்த அதிகார சபைக்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்களைக் கண்காணிக்கும் முழுமையான சட்டபூர்வ அதிகாரம் வழங்கப்படும் என்றார்.


புதிய சட்டவிதிகளுக்கு அமைய செயற்படத் தவறும் நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்றும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சைபர் பாதுகாப்புத் தயார்நிலை உத்திகளை வருடாந்தரம் நடைமுறைப்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


இலங்கையில் மே 12ஆம் தேதியன்று சைபர் குற்ற வேலைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாள பிரஜைகள்பட மூலாதாரம்,Getty Images

உள்நாட்டு சட்டங்கள் இன்னும் வரைவு நிலையில் இருக்கும் சூழலில், எல்லை கடந்த இந்த சைபர் மாஃபியாக்களை ஒடுக்குவதற்கு சர்வதேச நாடுகளின் கூட்டு உதவி அவசியம் என்பதை இலங்கை உணர்ந்துள்ளது. இதற்கமைய, வியட்நாமிய தலைநகர் ஹனோயில் நடைபெற்ற ஐநா-வின் உத்தியோகபூர்வ மாநாட்டில், 'சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்தில்' (UN Cybercrime Convention) இலங்கை முறைப்படி கைச்சாத்திட்டுள்ளது.


இதன் மூலம், வெளிநாட்டு வலையமைப்பிற்கு டிஜிட்டல் தடயங்களை சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவும், குற்றவாளிகளை அந்தந்த நாடுகளுக்குத் துரிதமாக நாடு கடத்தவும் இலங்கைக்கு சர்வதேச சட்ட பலம் கிடைக்கிறது.


இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரெட்ரிக் வூட்லர் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், "கைது செய்யப்படும் வெளிநாட்டுச் சந்தேக நபர்கள் உடனடியாக நாடுகடத்தப்பட மாட்டார்கள். அவர்கள் அனைவரும் சுற்றுலா விசா ஒழுங்குவிதிகளை மீறி, சட்டவிரோதமாகப் பணிபுரிந்து விசா காலத்தையும் மீறி தங்கியுள்ளனர். இவர்கள் கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்கள் கொழும்பு நீதவான் உத்தரவின் பேரில் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாடுகடத்தல் பற்றித் தீர்மானிக்கப்படும்.


மோசடிக் கும்பல்களுக்கு இடமளிக்கும் சொத்து உரிமையாளர்கள், குற்றச் செயல்களுக்குத் துணை நின்ற குற்றச்சாட்டின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வர். பொலிஸ் கட்டளை சட்டத்தின் 76வது பிரிவின்படி, தற்காலிக குடியிருப்பாளர்களின் விவரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதோடு, "இலங்கையின் திறைசேரி (கருவூலம்) மீது அண்மையில் நடத்தப்பட்டு, சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பை ஏற்படுத்திய பாரிய சைபர் தாக்குதலுக்கும், தற்போது பிடிபட்டுள்ள சர்வதேச சைபர் மோசடிக் கும்பல்களுக்கும் ஏதேனும் பின்னணித் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் மே 12ஆம் தேதியன்று சைபர் குற்ற வேலைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாள பிரஜைகள்பட மூலாதாரம்,Getty Images

சீன அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடு

இலங்கையில் கைது செய்யப்படுவோரில் கணிசமானோர் சீனப் பிரஜைகளாக உள்ள நிலையில், கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதுகுறித்து உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


எல்லையைக் கடந்த இணைய சூதாட்டமும், தொலைத்தொடர்பு மோசடிகளும் சர்வதேச அளவிலான ஒரு திட்டமிடப்பட்ட குற்றவியல் வடிவமாக உருவெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளதை சீனத் தூதரகம் நினைவு கூர்ந்துள்ளது.


சீனத் தூதரகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில், "எல்லையைக் கடந்த சூதாட்டம் குறித்த சீன அரசின் நிலைப்பாடு மிகவும் தெளிவானதும் உறுதியானதுமாகும். சீன மூலதனத்தை வெளிநாட்டு சூதாட்ட விடுதிகளில் முதலீடு செய்யக்கூடாது, சீனக் குடிமக்கள் வெளிநாட்டு சூதாட்ட விடுதிகளை இயக்குவதில் பங்கேற்கக் கூடாது. இத்தகைய நடவடிக்கைகள் மோசடி, பணமோசடி, கடத்தல், மனிதக் கடத்தல், சட்டவிரோதமாக எல்லை தாண்டுதல் போன்ற பிற குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன. சீன குற்றவியல் சட்டத்தின் புதிய திருத்தங்கள், எல்லையைக் கடந்த சூதாட்ட நடவடிக்கைகளைக் குற்றவியல் செயலாக அறிவித்துள்ளன" என்று தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இக்குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் இலங்கைக்கு இடம்பெயரும் போக்கு அதிகரித்து வருவதை அடுத்து, சீனாவும் இலங்கையும் கூட்டுச் சட்ட அமலாக்க முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மோசடிக் குற்றங்களுடன் தொடர்புடைய பல சீனப் பிரஜைகள் ஏற்கெனவே சீன தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தூதரகம், குடிவரவு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளைப் பெரிதும் பாராட்டியுள்ளது.


இதற்கிடையே, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இயங்கும் திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்கள் "மேலும் தொலைதூர மற்றும் சட்ட அமலாக்கம் பலவீனமான" பிராந்தியங்களை நோக்கி விரிவடைந்து வருவதன் நேரடிப் பிரதிபலிப்பே இலங்கையின் தற்போதைய நிலைமை என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.


இந்த விவகாரம், 2026ஆம் ஆண்டில் அதிவேகமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் எல்லைக் கட்டுப்பாடு, விசா கண்காணிப்பு, நிதி மேற்பார்வை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த சைபர் பாதுகாப்புத் திறன் குறித்துப் பல கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.


 பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (8) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதன் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.


அந்த நாட்டில் உள்ள மிண்டானாவ் தீவுப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக களத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.


மேலும், சுனாமி பேரலை எழலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

நூருல் ஹுதா உமர்

"வளமான நாட்டின் பெருமை அவளே, தேசத்தின் வழிகாட்டி" எனும் தொனிப்பொருளை முன்னிறுத்தி, 2026 சர்வதேச மகளிர் தினத்திற்கு இணைவாக, அம்பாறை மாவட்டத்தின் தைரியமிக்க பெண் தொழில்முனைவோரைப் பாராட்டும் விசேட விழா அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

திகாமடுல்ல மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ அவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

அம்பாறை மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு, உள்நாட்டுப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு வழங்கி வரும் பெண் தொழில்முனைவோர் பலர் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். பெண் தொழில்முனைவோரின் வணிக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் தேவையான வசதிகளை வழங்குதலும் இதன்போது இடம்பெற்றது.

அரசின் தலையீட்டுடன் பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அரசியல் அதிகாரத் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரியந்த விஜேரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் முத்து ரத்வத்தே உட்பட பிரதேசத்தின் அரச அதிகாரிகளும், பல பெண் தொழில்முனைவோர் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

பிராந்திய மட்டத்திலான பெண்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வென்றெடுப்பதற்கும், அவர்களை நாட்டின் வழிகாட்டிகளாக மாற்றுவதற்கும் இத்தகைய திட்டங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

 குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த   குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில்   விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.



அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் உள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படும் சிறைக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

119 இலக்க முறைப்பாட்டிற்கமைய  குடும்பப் பிரச்சினை தொடர்பில் கைது செய்யப்பட்டு  பொலிஸ் நிலையத்திற்கு   அழைத்து வரப்பட்ட  குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்  உயிரிழந்திருந்தார்.

குறித்த உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் குடும்பஸ்தர் அணிந்திருந்த சாரம் துண்டினை பயன்படுத்தி தூக்கிலிட்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.

அதே வேளை  65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவினர்கள் சிலர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து தூக்கில் அவர் தொங்கி உயிரிழக்க வில்லை எனவும் உயிரிழந்தவரின் உடம்பில் காயங்கள் காணப்படுவதாகவும் எனவே   நீதி  வேண்டும் என கோஷம் எழுப்பி இருந்தனர்.


மேலும் மரணமடைந்த குடும்பஸ்தர் கடந்த  2 நாட்களுக்கு முன்னரும்  குடும்ப பிரச்சினைக்காக பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டு பின்னர்  பிணையில்  விடுதலை செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் அதே பிரச்சினைக்காக மீண்டும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டு  தடுப்புக் காவலில வைத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அத்துடன் உயிரிழந்தவரின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் மரண விசாரணையின் பின்னர்  பிரேத பரிசோதனைக்காக   அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.


இச்சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் காரைதீவு 1 பிரிவு  மாதவி வீதியைச் சேர்ந்த  சாமித்தம்பி பாக்கியராசா ஆவார்.இவர்  முன்னாள் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் என் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் நிலையத்திற்கு  அக்கரைப்பற்று   பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண காரைதீவு  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஐ.பி ஜெயரட்ண காரைதீவு பிரதேச சபை   தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்   உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் தற்போது பல்வேறு மட்டங்களில்  மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.



 


இன்று (8) திங்கட்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் எட்டாம் சடங்கு ஆகும்.


நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் சகிதம் மாலையில் அம்மனுக்கு படையல் செய்து உணர்வு பூர்வமாக வழிபடும் பாரம்பரிய சடங்கு இது.

இந் நிலையில் எட்டாம் சடங்கு என்றால் என்ன? என்பது பற்றி சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா விளக்கம் தருகிறார்.


எட்டாம் சடங்கு என்பது கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தி வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சடங்காகக் கருதப்படுகிறது. 

இது ஆலயத்தின் சமய, சமூக மற்றும் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் ஓர் அங்கமாக விளங்குகிறது.

கண்ணகை அம்மன் வழிபாட்டில் நடைபெறும் சடங்குகளில் எட்டாம் சடங்கு ஒரு திருப்புமுனை நிகழ்வாகக் கருதப்படுகிறது.
 ஆரம்ப நாட்களில் இடம்பெறும் சடங்குகள் மூலம் அம்மனின் அருள் அழைக்கப்பட்டு, பக்தர்களின் மனங்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றன. 

அவற்றின் தொடர்ச்சியாக எட்டாம் சடங்கு நடைபெறுகிறது.

இந்த சடங்கின் மூலம் அம்மனின் சக்தி முழுமையாக வெளிப்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். 

கிராம மக்களின் நலன், மழை வளம், நோய் நீக்கம், விவசாய செழிப்பு மற்றும் சமூக ஒற்றுமைக்காக பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எட்டாம் சடங்கில் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதும், காணிக்கைகள் செலுத்துவதும், அம்மனைப் போற்றி பாடல்களும் காவியங்களும் பாடுவதும் வழக்கமாக உள்ளது. 

சில பகுதிகளில் கண்ணகை வரலாறு, சிலப்பதிகார நிகழ்வுகள் மற்றும் அம்மனின் தெய்வீகச் செயல்கள் நினைவுகூரப்படுகின்றன.


இந்த சடங்கு ஒரு மத நிகழ்வாக மட்டுமல்லாமல், சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நிகழ்வாகவும் அமைகிறது. 

ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆலயப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் ஒற்றுமை, பரஸ்பர உதவி மற்றும் பண்பாட்டு மரபுகள் தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன.


மேலும், எட்டாம் சடங்கு கண்ணகியின் நீதி, கற்பு, பொறுமை மற்றும் தெய்வீக ஆற்றலை நினைவூட்டும் நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

 கண்ணகி வழிபாட்டின் அடிப்படைப் பண்புகளான அறம், உண்மை மற்றும் நீதியை மக்களின் வாழ்வில் நிலைநிறுத்தும் நோக்கத்தையும் இது கொண்டுள்ளது.

எனவே, எட்டாம் சடங்கு என்பது கண்ணகை அம்மன் திருவிழாவின் ஒரு சாதாரண நிகழ்வல்ல; அது பக்தி, மரபு, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் புனிதமான ஆன்மீக நிகழ்வாக விளங்குகிறது

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.