Showing posts with label Slider. Show all posts


 நூருல் ஹுதா உமர் 


இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழக ஊழியர்கள் 15% சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கும் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு அங்கமாக கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுக்கும் ஒருநாள் பணி பகிஷ்கரிப்பு மற்றும் அரசிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலையம் முன்பாக 
நடைபெற்றது. 

இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு, இலங்கை பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை பல்கலைக்கழக நிருவாக மற்றும் நிதி உத்தியோகத்தர்கள் சங்கம், அனைத்து பல்கலைக்கழக கல்விசார் ஆதரவு ஊழியர் சங்கங்கள், அனைத்து பல்கலைக்கழக உபவிடுதிக் காப்பாளர் சங்கம், அனைத்து பல்கலைக்கழக சேவை தொழிற்சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்கம், முற்போக்கு தொழிலாளர் சங்கம், இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்க பல்கலைக்கழக அதிகாரசபை மற்றும் இலங்கை பல்கலைக்கழக தகவல் தொழிநுட்பவியலாளர்கள் சங்கம் 
ஆகிய 10 தொழிற்சங்க அமைப்புகள் அடங்கிய கூட்டு தீர்மானத்தின் அடிப்படையில் இந்த பணிபகிஷ்கரிப்பு நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

 


(எஸ்.அஷ்ரப்கான்)


பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில், தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீனின் தலைமையில் இன்று (19.03.2024) ஆம் திகதி பல்கலைக்கழக முற்றலில் வேலைநிறுத்தத்துடன் கூடிய பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 
பல்கலைக்கழக ஊழியர்களில் குறிப்பிட்ட தரப்பினர் இடையிடையே வேலைநிறுத்தத்தில் குதிப்பதால் மாணவர்களின் கல்விநிலை உட்பட பல்வேறு செயற்பாடுகள் மந்தகேதியிலேயே இடம்பெறுகின்றன.
பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின்  செயலாளர் எம்.எம். முகமது காமிலின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் 
நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சடுதியாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய முடியாத நிலையில், நீண்டகால சம்பள முரண்பாடுகளை சீர்செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாகவும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்விசாரா ஊழியர்கள் இவ்வாறான  முழுநாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 


சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் இதுவரையில் கிடைக்கப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் அது தொடர்பில் அறியப்படுத்துமாறு, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக இன்று கடமையேற்கும்


AC.Ahamed Shafir (SLAS) Sir

Ahamed Shafir Abdul Cader

அவர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூர்த்தி பிரிவின் சார்பில் வாழ்த்துக்கள்!

 


காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக  மலர் வளையம் ஒன்று வைக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.





அகமதாபாத்: குஜராத்தில் பல்கலைக் கழக விடுதியில் தொழுகை நடத்திய வௌிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அகமதாபாத்தில் குஜராத் அரசு பல்கலைக் கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், இலங்கை உள்பட பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்களில் 75 சதவீதம் பேர் பல்கலைக் கழக விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த வௌிநாட்டு மாணவர்கள் ரமலான் நோன்பையொட்டி நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விடுதி வளாகத்துக்குள் நுழைந்த 25 பேர் அடங்கிய குழுவினர் தொழுகை செய்து கொண்டிருந்த மாணவர்களை தடுத்து, மசூதிக்கு சென்று தொழுகை நடத்துமாறு கூறினார்.

தொடர்நது வௌிநாட்டு மாணவர்கள் மீது கற்களை வீசி அந்த குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த இலங்கை மற்றும் தஜிகிஸ்தானை சேர்ந்த 2 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


 


காத்தான்குடி நகர சபையின் புதிய நிருவாக உத்தியோகத்தராக திருமதி றினோஸா முப்லி (முகாமத்துவ சேவை உத்தியோகத்தர் - அதி சிறப்பு) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றுக் கொண்டார்.  


சபையின் செயலாளர் திருமதி றிப்கா சபீனின் முன்னிலையில் இன்றைய தினம் (18) இந்நிகழ்வு இடம்பெற்றது.


ஏற்கனவே இங்கு நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய ஜனாப் எம்.ஐ.எம். நியாஸ் காத்தான்குடி தள வைத்திசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வது குறிப்பிடத்தக்கது.


(எம்.ஏ.சீ.எம். ஜலீஸ்)


 மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழா

(வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்  மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின்  "மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (16)சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபையின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தொகுத்து எழுதிய இந் நூல் வெளியீட்டு விழா
ஆலய சந்நிதானத்தில் ஆலய தலைவர் கலாநிதி கி. ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

ஆன்மீக அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பித்தார்.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ. கோபாலரெத்தினம்  கலந்து சிறப்பித்தார்.

ஆசியுரையை  ஆலய பிரதம குரு ஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் வழங்கினார்.  வெளியிட்டுரையை நூலாசிரியர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.

 முதல் பிரதியை ஆலய தலைவர் கி.ஜெயசிறில் சுவாமி நீலமாதவானந்தா ஜீக்கு  வழங்கி வைத்தார். ஏனைய பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன  .

 


நூருல் ஹுதா உமர் 


மனித அபிவிருத்தி தாபனமும் பெண்கள் ஒத்துழைப்பு முன்னனியும் இணைந்து கல்முனை இஸ்லாமபாத் பொது கட்டிடத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வினை இன்று நடத்தியது.

வேள்வி பெண்கள் அமைப்பின் உப தலைவி எம். றிலீபா பேகம் தலைமைல் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பெண்கள் ஒத்துழைப்பு முன்னனியின் செயலாளரும், மனித அபிவிருத்தி தாபன நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளருமாகிய திருமதி எஸ். லோகேஷ்வரி கலந்து கொண்டு பிரதான உரை வழங்கினர்.

 பெண்கள் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் அபிவிருத்தி போன்றவற்றில் சமத்துவமாக செயற்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் அதற்கு இந்தியாவில் கேரளா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பஞ்சாயத்து முறையை பின்பற்ற வேண்டும் என்ற விளக்க உரையினை வழங்கினார்.

இந்நிகழ்வில் மனித அபிவிருத்தி தபான உதவி இணைப்பாளர் எம். ஐ. றியால், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தார்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் , பெண்கள் அமைப்புகள், சிவில் அமைப்புகளின், இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

 

(வி.ரி. சகாதேவராஜா)

 

கடந்த ஒரு வார காலமாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்ப்பினால் மூடி கிடக்கின்றது.

 இதனால் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் தமிழ்மக்கள் வைத்திய சேவையின்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள் . அவசர சிகிச்சைகளுக்காக அப்பிரதேச மக்கள்  காலநேரபணம் செலவுசெய்து அக்கரைப்பற்று வைத்திய சாலைக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.

ஒரு வாரத்துக்கு முன்பு மரதன் ஓடிய ஒரு மாணவனின் இறப்பைத் தொடர்ந்து அங்கு வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது தெரிந்ததே. அதன் போது வைத்தியசாலை கண்ணாடிகள் பெயர் பலகைகள் உடைக்கப்பட்டதும் தெரிந்தததே.

 இதனை அடுத்து தங்களுக்கு பாதுகாப்பின்மை என்று கூறி வைத்தியர்கள் வெளியேறினார்கள்.

 அதனால் அன்றிலிருந்து இன்று(18) திங்கட்கிழமை வரை ஒரு வார காலமாக வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. அங்கே எவ்விதமான வைத்திய சேவைகளும் இடம் பெறவில்லை.

 இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் பாம்புக் கடி தூக்கிட்டு தற்கொலை முயற்சி போன்ற பல நோயாளிகள் வந்தும் அதை நேரடியாக அக்கரைப்பற்று ஆதரவைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது.

மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் கடந்த ஒரு வாரமாக வைத்திய சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருப்பினும் இன்றைய தினம்(18)  ஒரு முழுமையான கலந்துரையாடல் இடம் பெற்று வைத்தியசாலை திறக்கப்படுவதற்கான சாதகமான அறிகுறி தென்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன்  அறிவித்தார்.

 


#TrincoMedia 

மதுவெறியர்களின் கவனயீனத்தால் அப்பாவி இளைஞன் உயிரிழப்பு! 


#திருகோணமலை - புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்விபத்து இன்று (17) மாலை இடம் பெற்றுள்ளது.


இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பின்புறமாக மூவருடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் அம்மூவர் மதுபோதையில் வேகமாக வந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.


இவ்விபத்தில் திருகோணமலை- கோனேசபுரி ஆறாம் கட்டையைப் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.தேவானந் (39வயது) என்பவரே உயிரிழந்ததாகவும் அவருடன் பயணித்து அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய யூ.தனூஸன் காயம் அடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.


அத்துடன் வேகமாக சென்று கொண்டிருந்த மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் 21, 30, 39 வயது உடையவர்கள் எனவும் தெரிவித்தனர். 


உயிரிழந்தவருடன் பயணித்த இளைஞர் உட்பட மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவருமாக மொத்தமாக நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இப்போது அனைத்து முன்பதிவு இருக்கைகளும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இ-டிக்கெட்டுகள் இயக்கப்பட்டுள்ளன, அரசாங்கத்தின் டிஜிட்டல் மாற்றத்திற்கு நன்றி! மேலும் அச்சிடப்பட்ட டிக்கெட்டுகள் தேவையில்லை. உங்களுக்கு விருப்பமான இருக்கையை சீட்ரீசர்வேஷன்.railway.gov.lk/mtktwebslr/ என்ற இணையதளத்தில் சிரமமின்றி முன்பதிவு செய்யும் வசதியை அனுபவிக்கவும்

 


உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது

 


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

 


நூருல் ஹுதா உமர்


அகில இலங்கை YMMA பேரவையின் ஏற்பாட்டில் பொத்துவில் அக்/ அஸ் -
ஸாதிக் வித்தியாலய மாணவர்கள் 450 பேருக்கு இன்று (16) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சி. சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட YMMAகளின் ஒன்றியச் செயலாளரும், YMMA பாலமுனை தலைவருமான ஐ. அஹமட் ஸிறாஜ்,  சிவேட் சிறிலங்கா தலைவர் எஸ்.எல்.எம். அப்துல் காதர், லங்கா தமிழ் பிரதானி ஆசிரியர் பௌசான் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை YMMA பேரவையின் அனர்த்த பிரிவின் ஏற்பாட்டில் இப்பாடசாலையின் கல்வி கற்கும் 450
மாணவர்களுக்கு இன்றைய தினம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 


நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தோலில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றல் மற்றும் தோலில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.


குறித்த நோய் நிலைமைக்கு சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 


காத்தான்குடியை சேர்ந்த ரஹீம், சஜி ஊடகக்குழுவின் முயற்சி யூடியூப்பில் வரலாற்று சாதனை..!

(ஊடகப்பிரிவு)


காத்தான்குடி வரலாற்றில் காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய தஃவா சமூக ஊடக வலைத்தளமான R Islamic Bayans Media Unit யூடியூப் பக்கத்தில் ஒரு இலட்சம் (100K) விரும்பும் நேயர்களை தன்பக்கம் ஈர்த்தும் 24193611 பார்வையாளர்களை கொண்டும்  வரலாற்று சாதனை படைத்துள்ளது.

காத்தான்குடியை சேர்ந்த ஊடக செயற்பாட்டாளரும் R Islamic Bayans Media Unit ஊடகத்தின் ஸ்தாபகருமான  ஏ.எல். அப்துர் ரஹீம், ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜீ உள்ளிட்ட R Islamic Bayans Media Unit ஊடகக் குழுவிரின் ஆறு வருட விடா முயற்சியினால் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.


இஸ்லாமிய தஃவா பணியினை உலகம்பூராக வழங்கிய யூடியூப் பக்கமான திகழும் R Islamic Bayans Media Unit இச்சாதனையினை நிகழ்த்தியதையடுத்து இஸ்லாமிய தஃவா பணியை உலக மக்களுக்கு வழங்கிய முதலாவது காத்தான்குடியை தளமாக கொண்டு இயங்கும் யூடியூப் பக்கமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.


இஸ்லாமிய தஃவா பணிகளை உலகலாவிய மக்களுக்கு கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய R Islamic Bayans Media Unit ஊடகக் குழுவினருக்கும்  நேயர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக R Islamic Bayans Media Unit சமூக ஊடகத்தின் நடப்பு விவகாரங்களுக்கான பொறுப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். சஜீ தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக யூடியூப் ஆர்வளர்களுக்கு இலவசமாக பயிற்ச்சி வழங்க எமது ஊடக குழு தயாராகவுள்ளதாகவும் R Islamic Bayans Media Unit பிரிவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


R Islamic Bayans Media Unit

https://youtube.com/@r_islamic_official?si=IVO_tEDcp33cnPZe ஊடகப்பிரிவானது Islam is My Life https://youtube.com/@Islamic_My_life?si=f_wcrNvlC2M7yMjX மற்றும் 

Islamic Motivation Tv https://youtube.com/@Islamic_motivation_Tv?si=hye3j92fR2RtQZ4O ஆகிய உப இஸ்லாமிய தஃவா யூடியூப் பக்கங்களை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.