Showing posts with label Slider. Show all posts

 


ஒலுவில் துறைமுகத்தை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் - இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு !! 


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அண்மைய நாடொன்றுக்கு வழங்குவதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதை தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாம் முறியடிக்க வேண்டும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் நமது அண்டை நாடான இந்தியாவை அண்மித்த மாகாணங்களாகும். 


எனவே, அந்த மாகாணங்களில் இத்தகைய பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அபிவிருத்தி செய்ய அல்லது பராமரிக்க போகின்றோம் என்ற தோரணையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பது புத்திசாலித்தனம் அல்ல. அது இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தாகும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார். 


அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தினால் அண்மைய பிரதேசங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு துறைமுகமும் ஒழுங்காக இயங்க முடியாமல் உள்ள சூழ்நிலையை சீரமைக்க இலங்கை அரசாங்கமும், கிழக்கு மாகாண ஆளுநரும் அலட்சியப்போக்கில் உள்ளதை காரணமாக வைத்து அந்த துறைமுகத்தை சீரமைக்கும் நோக்கில் இந்திய உயர்ஸ்தானிகர் கிழக்குக்கு விஜயம் செய்து குறித்த துறைமுகம் தொடர்பில் ஆய்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஊடக செய்திகளினூடாக அறிந்துகொள்ள முடிந்தது. 


எதிர்காலத்தில் இந்தத் துறைமுகத்தை அண்டை நாடான இந்தியாவுக்குக் கொடுப்பதற்காக ஒலுவில் கடலை அழிக்க பொறுப்பான அதிகாரிகள் குழு எவரேனும் சதி செய்கிறார்களா? என்பதை அரசாங்கம் பரிசீலித்து, இந்தத் துறைமுகத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் எடுத்து, அபிவிருத்தி செய்து, அதனை முதலீட்டு திட்டங்களுக்குத் திறந்து, அங்கு வாழும் மக்களுக்கு ஆபத்துக்களோ நாட்டின் இறையாண்மைக்கு பங்கமோ வந்துவிடாத வகையில் பாரபட்சமில்லாது வெளிநாட்டுத் திட்டத்திற்கு கையளிப்பதில் முஸ்லிம் சமூக அரசியல் இயக்கம் என்ற வகையில் எமக்கு ஆட்சேபனை இல்லை. 


வடகிழக்கில் அண்டை நாடான இந்தியாவுக்கு நிறைவான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் வடக்கு மற்றும் மலையக பிரதேசங்களிலும் இந்தியாவுக்கு வழங்கப்படும் பெரும் மரியாதை போதுமானது.  இந்தியாவை மேலும் கௌரவிக்க வேண்டும் என்றால், புவியியல் ரீதியாக இலங்கையின் கிழக்கில் கொடுக்காமல் தெற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் கொடுப்பது நல்லது என்பது எங்களின் கருத்தாக உள்ளது. 


எமது இலங்கை மண்ணுக்குள் இந்திய அமைதிப் படை நுழைந்து செய்த அநியாயங்கள், பலாத்காரமாக திணித்த மாகாண சபை முறையான வெள்ளை யானையால் இந்தியாவைக் கண்டு நாம் மிகவும் பயப்படுகிறோம். இலங்கை உள்நாட்டு போரின் போது இந்தியா கடைபிடித்த ராஜதந்திர விடயங்கள், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட கருத்துக்கள் இந்தியா தொடர்பில் எங்களுக்கு மேலும் அச்சத்தை கொடுத்துள்ளது. அதனாலே தான் இந்த நிலைப்பாட்டுக்கு நாங்கள் வரவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 


நாங்கள் கடந்த காலங்களில் பாரத தேசமான இந்தியாவை நேசித்தோம். நாங்கள் முகலாயப் பேரரசை ஏற்றுக்கொண்டோம்.  எனினும், தற்போதைய இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடி மற்றும் அவரது குழுவினர் நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் மீது காட்டும் அக்கறையாலும், தற்போதைய தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாலும், முஸ்லிம் சமூகம் வாழும் கிழக்கு மாகாணத்தில் இந்திய பிரவேசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. போன்ற காரணங்கள் ஏராளமாக உள்ளது.


எனவே முஸ்லிம் சமூகத்தை அவமரியாதை செய்யும் ஒரு நாட்டின் அரச தலைவருக்கு எதிராக அறிக்கை விடாமல் பயந்து அவர்களுக்கு அடிபணிந்து இருக்கும் அரசியல்வாதிகள் அந்த நாட்டின் தூதுவரை கிழக்கு மாகாணத்திற்கு அழைக்க வேண்டாம் என கிழக்கு மாகாணத்தில் அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். கிழக்கின் உரிமைகள், சொத்துக்கள், இருப்புக்கள், பாதுகாப்பு தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் மத, அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இவ்வாறான காட்டிக்கொடுப்புக்களுக்கு எதிராக எழுந்து நின்று குரல் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.- என்று தெரிவித்துள்ளார்

 அமெரிக்காவின் பல முக்கிய பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை எதிர்த்தும், இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரியும் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


அமெரிக்காவின் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், பல முக்கியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இது அமெரிக்காவின் உயர்கல்வி வளாகங்களைப் புரட்டிப் போட்டுள்ளது.


கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து சுமார் 1,200 பேரைக் கொன்றது. அதற்குப் பதிலடியாக காஸாவின்மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இதுவரை 34,000க்கும் அதிகமான பாலத்தீனர்களை கொன்றிருக்கிறது. காஸாவில் மனிதாபிமான சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


இந்தச்சம்பவங்களைக் கண்டித்தும், காஸாவில் அமைதி வேண்டியும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் நடந்து வருவதால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.


இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளுகக்கு எதிராகப் போராடும் மாணவர்களை 'யூத வெறுப்பாளர்கள்' என்று யூத மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொலம்பியா மற்றும் வேறு சில பல்கலைக் கழகங்களில் உள்ள யூத மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைப் போல் உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.


ஆயினும் பல யூத மாணவர்களும் இஸ்ரேலுக்கு எதிரான இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.


அமெரிக்க மாணவர்கள் போராட்டம், இஸ்ரேல் காஸா போர், பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆஸ்டின் நகரத்தில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் மாணவப் போராட்டக்காரர்கள்

மாணவர்கள் கைது, வன்முறை

முதலில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தத் துவங்கினர்.


பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்ட முகாம்கள் தோன்றின. இதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்தன.


கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டம் நடத்தியதற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரத்தில், போராட்டக்காரர்களை கைது செய்யுமாறு மாகாண துருப்புகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.


அட்லாண்டா நகரத்தில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர்.


இஸ்ரேல் - பாலத்தீன மோதல்: எளிய வடிவில் முழுமையான வரலாறு

9 அக்டோபர் 2023

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தது ஏன்? செயற்கை இனிப்பூட்டிகளால் என்ன ஆபத்து?

25 ஏப்ரல் 2024

ஷெங்கன் விசா: இந்தியர்கள் இனி எளிதில் ஐரோப்பா செல்லும் வகையில் விதிகள் மாற்றம் - முழு விவரம்

25 ஏப்ரல் 2024

போராட்டம் எப்படித் துவங்கியது?

அமெரிக்க மாணவர்கள் போராட்டம், இஸ்ரேல் காஸா போர், பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் கூடாரம் அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

முதலில் போராட்டத்தைத் துவங்கியது நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள். பல்கலைக்கழக வளாகத்தில், பாலத்தீனத்தை ஆதரித்து மாணவர்கள் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடனர். இதனால் இந்தப் பல்கலைக்கழகத்தின்மீது யூத எதிர்ப்புக் குற்றமும் சாட்டப்பட்டது.


கடந்த வாரம் இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் போராட்டத் தளத்தை அகற்றுமாறு போலிசாரிடம் கேட்டதை அடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட மாணவப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.


ஆனால் இந்தக் கைதுகள் மாணவர்களின் போராட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. கைதுகள் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகும் மாணவர்கள் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர்.


அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியான இல்ஹான் ஓமரின் மகளும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்டார். பிபிசியிடம் பேசிய அவர், இந்த இயக்கம் வெகுசில மாணவர்களுடன் தொடங்கியது, ஆனால் இந்தக் கைதுகள் காரணமாக விரைவாகப் பரவியது, என்றார்.


கடந்த வியாழன் அன்று கொலம்பியாவில் பிபிசியிடம், "இது வெறும் 70 மாணவர்களுடன் தொடங்கிய இயக்கம்" என்று கூறினார்.


"கொலம்பியா பல்கலைக்கழகம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்ததால் போராட்டம் இப்போது தேசிய அளவில் பரவியுள்ளது," என்றார்.


இதைத்தொடர்ந்து அமெரிக்கா எங்கிலும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் பாலத்தீன ஆதரவுப் போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். ஹார்வார்ட், யேல், எமரி, தெற்கு கலிபோர்னியா, ஜார்ஜ்டவுன், டெக்சாஸ், நியூயார்க், எமெர்சன் ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பாலத்தீன ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர்.


பிராமண எதிர்ப்பு இயக்கம், பாலியல் கல்வி வழக்குகளில் அம்பேத்கர் முன்வைத்த வாதங்கள் என்ன தெரியுமா?

14 ஏப்ரல் 2024

டைட்டானிக் மூழ்கியபோது பலகையைப் பிடித்துக் கொண்டு தப்பியவர், பிபிசியிடம் விவரித்த பயங்கர நினைவுகள்

17 ஏப்ரல் 2024

பட்டமளிப்பு விழா ரத்து

அமெரிக்க மாணவர்கள் போராட்டம், இஸ்ரேல் காஸா போர், பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அட்லாண்டா நகரத்தில் எமரி பல்கலைக் கழகத்தில் காவல்துறையால் தடுப்புக் காவலில் எடுக்கப்படும் ஒரு மாணவர்

லாஸ் ஏஞ்சல்ஸில் நகரத்தில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of Southern California - USC), பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி எதிர்வரும் மே 10ஆம் தேதி நடக்கவிருந்த முக்கிய பட்டமளிப்பு விழாவை ரத்து செய்துள்ளது.


அந்தப் பல்கலைக்கழகம், ஓர் அறிக்கையில் பட்டமளிப்பு விழா அன்று, வளாகத்திற்கு "பாரம்பரியமாக மாணவர்கள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 65,000 பேர் வருவார்கள். பல்கலைக் கழகத்தால் முக்கிய மேடை விழாவை நடத்த முடியாது," என்று கூறியது.


இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த புதன்கிழமை, அத்துமீறி நுழைந்ததற்காகக் குறைந்தது 93 பேரைக் கைது செய்த போலீசார், போராட்டக்காரர்கள் அமைத்திருந்த முகாமை அகற்ற உத்தரவிட்டனர்.


தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், குறிப்பிடப்படாத பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக முஸ்லிம் மாணவியான அஸ்னா தபஸ்ஸும் நிகழ்த்தவிருந்த பட்டமளிப்பு விழா உரை ரத்து செய்யப்படுகிறது என அறிவித்திருந்தது.


பூமிக்குள் புதைந்து கிடக்கும் தங்கம் விண்ணில் இருந்து எப்படி வந்தது? விடைதேடும் விஞ்ஞானிகள்

12 ஏப்ரல் 2024

நம் உடலுக்கு காபியின் தேவை என்ன? அது அதிகரித்தாலும் குறைந்தாலும் என்ன ஆகும்?

11 ஏப்ரல் 2024

கலவரமாக மாறிய அமைதிப் போராட்டம்

அமெரிக்க மாணவர்கள் போராட்டம், இஸ்ரேல் காஸா போர், பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எமரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர்.

அட்லாண்டா நகரில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், பாலத்தீனத்தினர்களுக்கு ஆதரவாக மட்டுமின்றி, அப்பகுதியில் ஒரு காவல்துறை பயிற்சி மையம் அமையவிருப்பதை எதிர்த்தும் போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தனர். இந்தப் பயிற்சி மையம் அமைவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


வியாழக்கிழமை (ஏப்ரல் 25) அன்று எமரி பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர்.


போராட்டம் நடத்தும் மாணவர்களைக் கட்டுப்படுத்த ரசாயன எரிச்சலூட்டிகளைப் பயன்படுத்தியதாக அப்பகுதியின் காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்படுவதுபோல மாணவர்கள் மீது ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.


போலீசாரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்ட எமரி பல்கலைக் கழகத்தின் தத்துவத்துறைத் தலைவர் நோயல் மெச்-அஃபீ, முதலில் போராட்டம் அமைதியானதாக இருந்ததாகத் தெரிவித்தார். மாணவர்கள் முன்னேறி நடக்கத் துவங்கியதும், காவல்துறையினரும் செயல்படத் துவங்கினர் என்றார். "அமைதியான போராட்டமாக இருந்தது, திடீரென ஒரு நிமிடத்தில் கலவரமாக மாறிவிட்டது," என்றார் அவர்.


கன்னெடிகட் மாகாணத்தில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தின் போராட்டத் தலைவரும் சட்டக்கல்வி மாணவருமான சிஸாடோ மிமுரா, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், தங்கள் பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலரும் காஸாவில் நடக்கும் இன அழித்தொழிப்பிற்கு நிதியும் ஆயுதங்களும் வழங்குவது குறித்து போராட்டக்காரர்கள் மிகவும் கவலையடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.





 அக்கரைப்பற்று பொத்துவில் வீதி, மீன் சந்தைக்கு முன்பாக, புதிதாக உதயமாகி இருக்கின்றது, தாசிம் ஹோட்டேல்.
யூதர்களுடைய பால்மாக்களோ, பொருட்களோ இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை.

 


காலி முகத்திடலுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ITC Ratnadipa (ஐடிசி ரத்னதீப) ஹோட்டல் மற்றும் அதிசொகுசு வீட்டுத் தொகுதி இன்று (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ITC நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

– ITC ரத்னதீப ஹோட்டல் திறப்பு விழாவில் ஜனாதிபதி

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்ததென தெரிவித்த ஜனாதிபதி, சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.

 



நூருல் ஹுதா உமர் 


ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் யோச­னையின் பேரில் காஸா பகு­தியில் இடம்­பெற்ற மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு கல்முனை வலயக்கல்வி அலுவலகம், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் ஆகிய பொதுநிறுவனங்களினால் 50 லட்சம் ரூபாய் நிதி நன்­கொ­டை­யாக இன்று (26) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. 


முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிதி கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்த்தன உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். 


காஸா சிறுவர்களின் நல திட்டத்திற்காக கல்முனை கல்வி வலய உத்தியோகத்தர்கள், அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் பங்களிப்பில் 3,128,500/- நிதியும், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தனவந்தர்களின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற 1,589,000/- நிதியும், ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் சார்பில் 300,000/- ரூபாய் நிதியுமாக ஐந்து மில்லியன் ரூபாய் பணத்தை இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர். 


ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் சார்பில் நிதியை பௌண்டஷனின் தவிசாளர் திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கல்முனை கல்வி வலய நிதியை பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையிலான பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபீர், கணக்காளர் வை. ஹபீபுல்லா, அதிபர், ஆசிரியர் சார்பில் நவாஸ் சௌபி அடங்கிய குழுவும், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் பள்ளிவாசல் தலைவர் ஏ.எம். இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகளும் கையளித்தனர்.

 ( வி.ரி. சகாதேவராஜா)

 காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 40 வருட நிறைவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட "விபுலவிருட்சம்" KSC@40 என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

காரைதீவு விளையாட்டு கழகத் தலைவர் ரொட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன்  தலைமையில் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்  கலந்து சிறப்பித்தார்.

முதற் பிரதியை தலைவர் சாந்தன் பிரதம அதிதி மகேசனிடம் வழங்கி வைத்தார்.

ஏனைய அதிதிகளான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்    காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்ட அதிதிகளுக்கும் அவர் வழங்கி வைத்தார்.

மலர் ஆசிரியர் முன்னாள் தலைவர் த.தவக்குமார் நூலாக்ககுழு ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா செயலாளர் எஸ்.கிருசாந் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.

 


(வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவில் நடப்பாண்டின் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

காரைதீவு விளையாட்டு கழகத்தின் 41 வது வருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குறித்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 கழகத் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கபொத சாதாரண தரத்தில் 9ஏ பெற்ற மற்றும் கபொத உயர்தர பரீட்சையில் 3ஏ சித்தி பெற்ற மாணவர்கள் 29 பேர் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றோரால் பாராட்டப்பட்டார்கள்.

பிரதம அதிதியான விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்
ஏனைய அதிதிகளான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்    காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் 
கழக போசகர்களான  வே.இராஜேந்திரன், வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டு கௌரவித்தனர்.

 


(  வி.ரி.சகாதேவராஜா)

 காரைதீவைச் சேர்ந்த திருமதி ஜெயகோபன் நந்தினி தனது 60 வது வயதில் இன்று ஓய்வு பெற்றார்.

அவர் இறுதியாக கற்பித்த நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மஹா வித்தியாலயத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை பிரியாவிடை நிகழ்வு நடாத்தப்பட்டது.

 2000ம் ஆண்டு தொடங்கிய அவரது ஆசிரியர் சேவை 2024 உடன் நிறைவு பெற்றது.

2000 - 2008 வரை விபுலானந்த மத்திய கல்லூரி காரைதீவு 
2009- 2019 வரை அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயம் . இறுதியாக 
2020- 2024 வரை: இமாம் கஸ்ஸாலி மஹா வித்தியாலயத்தில் இன்று வரை சேவையாற்றினார்.

நிகழ்வில் அவரது குடும்பம் கலந்துகொண்டது.

தன்னுடைய இந் நிகழ்வை மேலும் சிறப்பித்து பிரியாவிடை நிகழ்வை அளித்த  சகோதர பாடசாலை இமாம் கஸ்ஸாலி மஹா வித்தியாலய அதிபர் ஆசிரிய மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் என்று அவர் நன்றிகள் தெரிவித்தார்.


வி.சுகிர்தகுமார் 0777113659
 

 ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் இன்று (26) சிரமானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் யு.எல்.எம்.சகீல் வேண்டுகோளுக்கமைய இச்சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற சிரமதானப்பணியில்; அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் வைத்தியர் குணாளினி சிவராஜ் மேற்பார்வை செய்தார்.
வைத்தியசாலையின் வெளிச்சுழலில் காணப்பட்ட ; புற்கள் குப்பைகள் அகற்றப்பட்டது.
அகற்றப்பட்ட குப்பைகள் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டதுடன் அவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள பொது இடங்கள் ஆலயங்கள் என துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பினராகிய ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினருக்கு வைத்தியசாலை நிருவாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

 


அமெரிக்கா CEOWORLD சஞ்சிகையால், 2024 ஆம் ஆண்டில், உங்கள் வாழ்நாளில் சென்று பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகளில் #SriLanka 5வது இடத்தைப் பிடித்துள்ளது. 🇱🇰


 முதல் 10 நாடுகள்....

 


80 ரூபாய்க்கு பால் தேநீர் வழங்கவும்


இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரை  80 ரூபாய்க்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


அத்துடன், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மா இறக்குமதியாளர்கள் பால் மாவின்  சில்லறை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.


அண்மைகாலமாக பால்மா விலை உயர்வு காரணமாக, பால் தேநீர் அருந்துவதற்கு ஹோட்டல்களுக்கு வருவதை மக்கள் தவிர்த்து வந்தனர்.


தற்போது அந்த நிலை மாறி, மீண்டும் 80 ரூபாய்க்கு ஒரு கோப்பை பால் தேநீர் குடிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



இறக்குமதிக்கான நடவடிக்கைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்திருந்த தடை இலங்கைக்கு மாத்திரம் உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் அறிவித்திருந்தது.


 அமெரிக்காவில் TikTok செயலிக்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடத்தயார்-  TikTok நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Chew Shou Zi

 


Chennai super Kings அணியின் கிரிக்கெட் வீரர் துஷார் தேஷ்பாண்டே, நடிகர் அஜித்குமாருடன் நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 


வி.சுகிர்தகுமார் 0777113659  


அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் 7.439.000 ரூபா ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ள மாணவர்கள் தங்குமிட கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார துரித முயற்சி திட்டத்தின் கீழ் சிறுவர் நன்நடத்தை திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாம் கட்ட வேலைக்கான அடிக்கல்லே இவ்வாறு நடைபெற்றது.
விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தகஜேந்திரன் மற்றும் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் இணைப்பு செயலாளர் க.கண்ணதாசன் மாவட்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரி எஸ்.சிவகுமார் அக்கரைப்பற்று பிரதேச சிறுவர் நன்நடத்தை அதிகாரி ஜெயதாஸ் உள்ளிட்ட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அடிக்கல் நடும் பூஜை வழிபாடுகளை சிவஸ்ரீ சண்முகம் வசந்த குருக்கள் நடாத்தி வைத்ததுடன் அடிக்கல் நடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து அதிதிகள் அனைவரும் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
முதலாம் கட்டமாக இக்கட்டடத்தின் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தொடராக இவ்வேலைத்திட்டம் முன்கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  இஸ்ரேல் உடனான பதற்றத்திற்கு நடுவே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இன்று இலங்கைக்குச் சென்றுள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இரான் அதிபர் இலங்கைக்குச் சென்றிருப்பது இதுவே முதல்முறை. அதேநேரம், அமெரிக்க கடற்படை குழுவொன்றும் திருகோணமலைக்குச் சென்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.


இரான் அதிபர் இலங்கைக்குச் சென்றிருப்பது ஏன்? இந்த பயணத்தின் பின்னணி என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.


இரான் இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரைஸி தொடங்கி வைத்த திட்டத்தின் மதிப்பு சுமார் 514 மில்லியன் டாலர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிக்கிறது

இரான் - இஸ்ரேல் மோதல்

ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் உள்ள இரான் தூதரக வளாகத்தின் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இரான் – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மோதல் வலுத்தது. தங்கள் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இஸ்ரேலை குற்றம்சாட்டிய இரான், அந்நாட்டின் மீது ஏப்ரல் 13ம் தேதி வான்வழித் தாக்குதலை தொடுத்தது. இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை கிளப்பியது.


இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க, இரானின் இஸ்ஃபஹான் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருநாடுகளும் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.


இப்படியாக, இருநாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், ஏப்ரல் 21ம் தேதி இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, பாகிஸ்தானில் 3 நாள் பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், ஜனாதிபதி ஆசிஃப் அலி ஜர்தாரி , இராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் உள்ளிட்டோரை ரைஸி சந்தித்துப் பேசினார்.


பாகிஸ்தான் பயணத்தை முடித்த பிறகு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி புதன்கிழமை காலையில் இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அவரை இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார்


தென் கொரியாவில் பிரமாண்ட 'பாலியல் திருவிழா' கடைசி நேரத்தில் ரத்து - எதிர்ப்பு எழுந்தது ஏன்?

24 ஏப்ரல் 2024

தனியார் பள்ளிகளில் 25% இடங்களை கட்டணமின்றி ஏழைக் குழந்தைகளுக்கு வழங்குவதில் என்ன சிக்கல்?

24 ஏப்ரல் 2024

இரான் இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இலங்கைக்கு பயணம் வந்த இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

புதிய திட்டம் தொடக்கம்

இலங்கை இரான் இருதரப்பு நிதியுதவியில் உமா ஓயா பல்நோக்கு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நீர் மின் நிலையத்தை ரைஸி திறந்து வைத்தார். தொடர்ந்து ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையே 5 புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின


உமா ஒயா திட்டம் இலங்கையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என இலங்கை ஜனாதிபதி மாளிகை தெரிவிக்கிறது.


ஜனாதிபதி மாளிகையின் செய்திக்குறிப்பின் படி, இலங்கையின் தென்கிழக்கில் வறண்ட பகுதிகளில் நிலவும் நீர்ப் பற்றாக்குறையைப் தனிப்பதற்காக, உமா ஓயாவில் ஆண்டுதோறும் சேரும் 145 கன மீட்டர் தண்ணீருக்கும் மேலதிகமான தண்ணீரை கிரிந்தி ஓயவிற்கு திருப்பிவிடுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.


ஓய என்பது நீர்நிலைகளை குறிப்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதி கிடைப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் இத்திட்டத்தின் மூலம் 290 ஜிகாவாட் மின் சக்தியும் கிடைக்கும் என இலங்கை அரசு கூறுகிறது.


பிராய்லர் கோழி சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

24 ஏப்ரல் 2024

காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவு மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டி - வெற்றிக்கான வியூகமா? பலவீனமா?

23 ஏப்ரல் 2024

இரான் இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரான்-இஸ்ரேல் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், ஏப்ரல் 21ம் தேதி இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, பாகிஸ்தானில் 3 நாள் பயணம் மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது, இந்திய பெருங்கடலில் இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என இரான் அதிபர் ரைஸி உறுதியளித்தார். அனைத்து ஆசிய நாடுகள், அண்டை நாடுகள், இறையாண்மை மற்றும் சுதந்திர நாடுகளுடன் இருதரப்பு உறவை விரிவுபடுத்த இரான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.


ரைஸி தொடங்கி வைத்த திட்டத்தின் மதிப்பு சுமார் 514 மில்லியன் டாலர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிக்கிறது.


2008-ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்காக இரான் இலங்கைக்கு நிதியுதவி செய்வதாகக் கூறியிருந்தது. இதன் அடிப்படையில் 2013-ம் ஆண்டு வரை 50 மில்லியன் டாலர்களை இலங்கைக்கு இரான் வழங்கியது. அதன் பிறகு இரானால் நிதிப் பங்களிப்பு செய்ய முடியவில்லை. அந்த சமயம், அமெரிக்கா, இரான் மீது சர்வதேச தடைகளை விதித்ததால் மேற்கொண்டு இலங்கைக்கு பொருளாதார பங்களிப்பை இரானால் செய்ய முடியவில்லை.


ஈரான் அதிபர் தனது ஆசிய சுற்றுப்பயணத்தின் போது இலங்கைக்கு வந்து, இந்த திட்டத்தை திறந்து வைப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.


கடந்த பத்து ஆண்டுகளில் இழந்த சந்தையை மீட்டெடுத்து, இலங்கையின் தேயிலை ஏற்றுமதி சந்தையை பலப்படுத்தியதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் அதிக தேயிலையை கொள்வனவு செய்யும் நாடாக இரான் மாறியிருப்பதாகவும் அவர் கூறினார்.


சோலியஸ்: உங்கள் உடலின் இந்தப் பகுதி இரண்டாவது இதயம் என அழைக்கப்படுவது ஏன் தெரியுமா?

24 ஏப்ரல் 2024

மோதி சர்ச்சை பேச்சு: எதிர்க்கட்சிகளின் புகார் மீது நடவடிக்கை என்ன? தேர்தல் ஆணையம் மீது எழும் கேள்விகள்

23 ஏப்ரல் 2024

இரான் இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரான் அதிபரின் இலங்கை பயணம் அமெரிக்காவுக்கு சங்கடத்தை கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா அதிருப்தி?

இரான் அதிபர் இலங்கைக்கு வருவது குறித்து அமெரிக்கா அதிருப்தி அடைந்திருப்பதாக சில செய்திகள் வெளியாகின. இது குறித்து பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, "உண்மையில், யாரும் எங்களுக்கு கவலையோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. மற்றவர்களின் எதிரிகள் எங்களுக்கும் எதிரிகள் அல்ல. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை அனைவருக்கும் நட்பு கரங்களை நீட்டுகிறது. இரான் அதிபரின் பயணம் திடீரென திட்டமிடப்பட்டது அல்ல. இந்த வளர்ச்சித் திட்டத்திற்கான பணிகள் முடிந்ததும் திறப்பு விழாவுக்கு அவரை அழைக்க வேண்டும் என முன்பே முடிவு செய்திருந்தோம்" என்றார்.


தொடர்ந்து பேசிய அலி சப்ரி, "கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் இரானுக்கு பயணம் மேற்கொண்ட போது, அதிபர் ரைஸிக்கு, இலங்கை அரசு சார்பில் அழைப்பிதழை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில்தான் தற்போது இரான் அதிபர் இலங்கை வந்திருக்கிறார். சுதந்திர நாடாக, நாங்கள் அணிசேரா வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறோம்" என கூறினார்


இரான் ஜனாதிபதியின் இலங்கை பயணம், சர்வதேச ரீதியாகவும் பொருளாதார, அரசியல் ரீதியாகவும் இலங்கை மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச உறவுகள் தொடர்பான ஆராய்ச்சியாளரும் ஆலோசகருமான கலாநிதி ஹசித் கந்தவுடஹேவாவிடம் பிபிசி சிங்களம் கேட்டது..


இதற்குப் பதிலளித்த அவர், இரான் அதிபரின் இலங்கை பயணத்தில் சாதகமும் பாதகமும் இருப்பதாகக் கூறினார்.


இஸ்ரேலின் யூத பழமைவாத ராணுவப் பிரிவு மீது தடை விதிக்க அமெரிக்கா திட்டம் - காஸாவில் என்ன நடந்தது?

9 மணி நேரங்களுக்கு முன்னர்

குழந்தைகள் உணவின் தரத்திலும் இந்தியா - ஐரோப்பா இடையே பாரபட்சம்: நெஸ்லே கூறுவது என்ன?

23 ஏப்ரல் 2024

இரான் இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இலங்கையின் தேயிலை மற்றும் ஏனைய ஏற்றுமதிப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இரான் திகழ்கிறது.

ஏப்ரல் 13ம் தேதி இஸ்ரேலுக்கும் இரானுக்கும் மோதல் தீவிரம் அடைவதற்கு முன்பே, இரான் அதிபர் ரைஸி இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது இலங்கை ஒரு வகையான இராஜ தந்திர சிக்கலை எதிர்கொண்டது. காரணம், இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது இராணுவ ஆதரவை வழங்கிய நாடாக இஸ்ரேல் இருந்தது.


மறுபுறம், இஸ்ரேலும் இலங்கையும் தற்போது பல்வேறு பொருளாதார, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளன.


இதன் காரணமாக இரான் அதிபரின் இலங்கை பயணம், இஸ்ரேலுடன் தற்போதுள்ள உறவுகளுக்கு ஏதோ ஒரு வகையில் பின்னடைவை ஏற்படுத்தலாம்.


"தற்போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் உள்ளது. எனவே இந்த திட்டத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெறுவது அவசியம். இந்த கோணத்தில் பார்த்தால், இரான் அதிபரின் பயணத்திற்காக இலங்கைக்கு அமெரிக்கா நேரடியாக தமது எதிர்ப்பை பதிவு செய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளன" என்கிறார் கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா.


இலங்கையின் தேயிலை மற்றும் ஏனைய ஏற்றுமதிப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இரான் திகழ்கிறது. எனவே, இந்த சூழலில், ரைஸி வருகை தர வேண்டாம் என இலங்கை முடிவெடுத்தால், அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பலத்த அடியாக அமையும். எதிர்காலத்தில் இரானிடம் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய பொருளாதார ஒத்துழைப்பை இலங்கை இழக்க நேரிடும் என கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா குறிப்பிடுகிறார்.


அமெரிக்க கடற்படையினர் என்ன செய்கிறார்கள்?

இரான் அதிபரின் வருகைக்கு நடுவே, இலங்கையின் திரிகோணமலைக்கு அமெரிக்க கடற்படையினரும் சென்றுள்ளனர். அமெரிக்கா கடற்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி நடவடிகைக்களுக்காக ஏப்ரல் 22 முதல் 26 வரை திருகோணமலையில் இருப்பார்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.


கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற மரைன் கார்ப்ஸின் சிறப்புப் பிரிவான FAST எனும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃப்ளீட் ஆண்டி டெரரிசம் செக்யூரிட்டி டீம் (ஃபாஸ்ட்) இந்த பயிற்சியில் பங்கேற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது


 கடந்த 2024.04.23 திகதி இடம்பெற்ற PPA புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம்...

________________________________

தலைவர் ALM.பாயிஸ் (Pr)   

உப தலைவர் ARM.சாதிக் (Lec)

செயலாளர்  MSM. இக்ராம் (CCO)    

உப செயலாளர்  AL .நூபைஸ் (Tr)

பொருளாளர்  MSM. பாஹிம் (Pr)     

உப பொருளாளர் AL.நளீம்        

கணக்கு பரிசோதகர் SM.ஹுஸ்ரி (FA)   

குழு உறுப்பினர்கள்

1.AM. அஸ்மி (Pr)

2.KM. அக்ரம் (Tr)

3.AM.அர்பான் 

4.MALM.றிஸ்வான் (SDO)

5.Uk.முஸம்மில் (Tr)

6.S.சிஹாப்தீன் (Sec)

7.AL.பௌஸர் 

8.MS.ஜெனிஸ் 

9.ASM.உவைஸ் (Mps)

10.AM.நபீஸ்தீன் (DO)

11.I.முனாஸ் (Law)

12.IL.ஹாரூன்

 



#Rep.Asraf. a.Samad,.

இலங்கைக்க விஜயம் மேற்கொண்டுள்ள இரான் ஜனாதிபதி, கொழும்பு கொள்ளுப்பிட்டி பள்ளிவாயலுக்கு இன்று மாலை விஜயம் செய்தார்.

 




அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இணைப்பாட விதான அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய 42 வகையான குழுக்கள் உருவாக்கம்

....................................


எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு கழகங்கள்/சங்கங்கள்/படையணிகள் என 42 வகையான குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன்‌ அவர்களுக்கான கடமைப் பொறுப்புக்களும் இன்று 24/04/2024 கையளிக்கப்பட்டது.


இக்கடமைப் பொறுப்புக்கள் யாவும் அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்களின் பணிப்புரைக்கமைவாக‌ இணைப்பாடவிதான விதான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான‌ பிரதி அதிபர் லெப்டினன் NM.முஹமட் ஸாலிஹ் (SLPS) அவர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதற்கிணங்க இக்குழுக்கள் யாவும் குறித்த பொறுப்பாசிரியர்களுடன் எமது மாணவச் செல்வங்களின் பல்வேறு நலன்சார் விடயங்களுக்காக (மாணவ உறுப்பினர்களுடன்) தொடர்ச்சியாக பயணிக்கவுள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.