Showing posts with label Slider. Show all posts


 ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 11A இருக்கையில் இருந்த நபர் உயிர் பிழைத்ததாக, ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக், ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார். அந்த இருக்கையில் இருந்த பயணி பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், "விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில், ஒரு பெரிய சத்தம் கேட்டது. பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. அனைத்தும் மிக விரைவாக நடந்தது" என்று கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

அவர் தனது போர்டிங் பாஸை பகிர்ந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. அதில் அவரது பெயர் மற்றும் இருக்கை எண் இடம் பெற்றுள்ளது.



 இரானின் அணுசக்தி திட்டங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இரானின் ஆயுதத் திட்டத்தின் 'இதயத்தை' குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார்.


"இரான் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தின் மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார். இரான் தலைநகரான டெஹ்ரானிலிருந்து 225 கி.மீ தெற்கே உள்ள நடான்ஸ் என்ற நகரில் உள்ள இரானின் முக்கிய செறிவூட்டல் நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதாக நெதன்யாகு கூறினார்.


ஏப்ரல் 2021 இல், அதே வசதியின் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியது.


"அணுகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள" இரானிய விஞ்ஞானிகளை இஸ்ரேல் குறிவைத்ததாக கூறியுள்ள நெதன்யாகு, தாக்குதல்கள் "எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்" என்று எச்சரித்தார்.


விளம்பரம்


இஸ்ரேல் - இரான், நெதன்யாகுபட மூலாதாரம்,Reuters

புரட்சிகர காவல்படை தலைமையகம் மீது தாக்குதல் - இரானிய அரசு ஊடகம்

டெஹ்ரானில் உள்ள புரட்சிகர காவல்படை தலைமையகம் இஸ்ரேலிய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

 ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா விமான விபத்து, குஜராத்

'30 விநாடிகளில் முடிந்துவிட்டது' - ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி கூறியது என்ன?

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் - நிபுணர்கள் விளக்கம்

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் - நிபுணர்கள் விளக்கம்

ஆமதாபாத்: ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 204 பேர் பலி - என்ன நிலவரம்?

ஆமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலி - ஏர் இந்தியா நிறுவனம் கூறியது என்ன?

ஆமதாபாத் விபத்து, மேடே அழைப்பு, ஏர் இந்தியா, குஜராத்

மேடே அழைப்பு என்றால் என்ன? ஆமதாபாத் விமான விபத்துக்கு முன் விமானி அதை குறிப்பிட்டது ஏன்?

End of அதிகம் படிக்கப்பட்டது

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இரான் ஆயுதப்படைகளின் ஒரு கிளை மட்டுமின்றி, நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாகும்.


மேலும், டெஹ்ரானுக்கு அருகில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


டெஹ்ரானின் வடகிழக்கில் வெடிப்புகள் கேட்டதாக இரானிய அரசு நடத்தும் நூர் நியூஸை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. வெடிப்புகளுக்கான காரணம் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.


டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை இஸ்ரேல் தாக்கியதாக இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


டெஹ்ரானில் உள்ள மக்களிடமிருந்தும் வெடிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இரானிய அரசு ஊடகங்களின்படி, தெஹ்ரானின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


டெஹ்ரானின் இமாம் காமனெயி சர்வதேச விமான நிலையம் இரானிய தலைநகரிலிருந்து தென்மேற்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.


மேடே அழைப்பு என்றால் என்ன? ஆமதாபாத் விமான விபத்துக்கு முன் விமானி அதை குறிப்பிட்டது ஏன்?

12 ஜூன் 2025

நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் - இந்தியாவை உலுக்கிய மோசமான விமான விபத்துகள் பற்றி தெரியுமா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் - இரான், நெதன்யாகுபட மூலாதாரம்,Reuters

அமெரிக்கா தாக்குதலில் ஈடுபடவில்லை - மார்கோ ரூபியோ

இரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா பங்கெடுக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.


அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவிடமிருந்து ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.


"இன்றிரவு, இஸ்ரேல் இரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்தது. இரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை, மேலும் எங்கள் முதன்மையான முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும். இந்த நடவடிக்கை அதன் தற்காப்புக்கு அவசியம் என்று அவர்கள் நம்புவதாக இஸ்ரேல் எங்களுக்குத் தெரிவித்தது. அதிபர் டிரம்பும் நிர்வாகமும் எங்கள் படைகளைப் பாதுகாக்கவும், எங்கள் பிராந்திய பங்காளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். நான் தெளிவாகச் சொல்ல வேண்டும்: இரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக் கூடாது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆமதாபாத் விமான விபத்து பற்றி இதுவரை வெளியான தகவல்கள் - முழு விவரம்

56 நிமிடங்களுக்கு முன்னர்

'30 விநாடிகளில் முடிந்துவிட்டது' - ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி கூறியது என்ன?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் - இரான், நெதன்யாகு

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"இஸ்ரேல் தாக்க தயாராக இருந்தது அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியும்"

இரானில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக புதன்கிழமை அமெரிக்க அதிகாரிகளிடம் கூறப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிகாரிகளிடம் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.


அமெரிக்கா சில அமெரிக்கர்களை இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியதற்கும், இராக்கில் உள்ள சில அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததற்கும் இதுவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு.


நூருல் ஹுதா உமர் 


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டின் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தொடக்க நிகழ்வு, 2025.06.12 ஆம் திகதி முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.


முகாமைத்துவ வர்த்தக பீடத்திற்கு 2023/2024 ஆம் கல்வியாண்டுக்காக 403 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். குறித்த மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் உணவுகள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கி வரவேற்றது விஷேட அம்ஷமாகும்.


நிகழ்வின்போது மாணவர்கள் தொடர்பான ஆவணங்களை பதிவாளர் எம்.ஐ. நௌபர் மற்றும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எவ். பாரிஷா எம் ஹசன் ஆகியோரது பங்குபற்றலுடன் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் மாணவர்களுடன் சம்மந்தப்பட்ட துறைத்தலைவர்களிடம் ஒப்படைத்தார்.


திணைக்களங்களின் தலைவர்களான பேராசிரியர் கலாநிதி எம்.பி.எம். இஸ்மாயில், பேராசிரியர் கலாநிதி ஏ.இல்முடீன், பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என். சபானா ஆகியோர் தாங்கள் சார்ந்த துறைகளில் இணைந்துள்ள மாணவர்கள் கையாளவேண்டிய நடைமுறைகள் மற்றும் குறித்த துறைகளின் ஊடாக மாணவர்கள் அடையக்கூடிய நன்மைகள் தொடர்பில் உரையாற்றினர்.


முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் மாணவர் சங்க தலைவர் டி.எம்.ஏ.எஸ். தஸநாயக்க புதிய மாணவர்களை வரவேற்றதுடன் சிரேஷ்ட மாணவர்களுடன் இணைந்து தங்களது சிறந்த கற்றல் செயற்ப்பாடுகளை தொடர முடியும் என்றும் தெரிவித்தார்.


நிகழ்வில் மாணவர்களை வரவேற்று கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. பிரதி பதிவாளர் பி.எம். முபீன் நன்றியுரை நிகழ்த்தினார்.


நிகழவில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் மற்றும், நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தர், கல்விசாரா உதிதியோகத்தர்கள் மாணவர்கள் மற்றும் புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 


இன்று (ஜூன் 12) மதியம் 1:38 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.


பயணிகள், விமானிகள், விமானப் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் அதில் இருந்தனர். புறப்பட்ட சில நொடிகளில் அந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு மருத்துவர் விடுதி மீது விழுந்து நொறுங்கியதாக, ஒரு காவல்துறை அதிகாரி கூறியதை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.


ஏ.எஃப்.பி மற்றும் ஏபி செய்தி முகமைகளின் தகவல்படி, விமான விபத்தில் யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை என்று ஆமதாபாத் காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார்.


ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து பற்றி இதுவரை கிடைத்த தகவல்கள்

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மேகானி நகர் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். விமானத்தில் 230 பயணிகள், விமானப் பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விமானத்தில் இருந்தவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடாவை சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது - என்ன நிலவரம்?

விமான விபத்து, ஏர் இந்தியா, ஆமதாபாத், குஜராத்


ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து பற்றி இதுவரை கிடைத்த தகவல்கள்

விமானப் பயணம், எந்த சீட் பாதுகாப்பானது? 

விமானத்தில் எந்த 'சீட்' அதிக பாதுகாப்பானது என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் ஏசியை 20°C-க்கு கீழ் குளிர்விக்க தடை செய்தால்

இந்தியாவில் ஏசியை 20°C-க்கு கீழ் குளிர்விக்க தடை செய்தால் சாமானியர்களுக்கு என்ன நன்மை?

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது - என்ன நிலவரம்?

59 நிமிடங்களுக்கு முன்னர்

ஆமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கட்டுப்பாட்டு அறைக்கு விடுக்கப்பட்ட 'மேடே அழைப்பு'

விமான விபத்து, ஏர் இந்தியா, ஆமதாபாத், குஜராத்


பட மூலாதாரம்,Getty Images

விமானக் கண்காணிப்பு தளமான ஃப்ளைட் ரேடார் 24-இன் (FlightRadar24) கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.


விமான கண்காணிப்பு தரவின்படி, விமானம் தரையில் இருந்து 425 அடி உயரத்தில் இருந்தபோது கிடைத்ததுதான் கடைசி சிக்னல். அந்த உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது.


விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி 'மேடே அழைப்பு' (Mayday call) விடுத்ததாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரி தெரிவித்தார்.


(மேடே அழைப்பு என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசரக்கால சமிக்ஞை. இது முதன்மையாக விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் தகவல் தொடர்புகளில் உயிருக்கு ஆபத்தான அவசர நிலையைக் குறிக்கப் பயன்படுகிறது.)


அதன் பிறகு விமானியிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. விமானம் மேகானி நகர் என்ற குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. அது மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியதாக போலீசார் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.


ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது - என்ன நிலவரம்?

59 நிமிடங்களுக்கு முன்னர்

விமானத்தில் எந்த 'சீட்' அதிக பாதுகாப்பானது என்று உங்களுக்குத் தெரியுமா?

2 மணி நேரங்களுக்கு முன்னர்

விமான விபத்து, ஏர் இந்தியா, ஆமதாபாத், குஜராத்


பட மூலாதாரம்,@flightradar24

மத்திய ஆமதாபாத்தில் எடுக்கப்பட்ட (பிபிசியால் சரிபார்க்கப்பட்ட) காணொளிகளில், விபத்து நடந்த பகுதியில் இருந்து வானை நோக்கிப் பெருமளவிலான கரும்புகை எழுவதைக் காண முடிந்தது.


சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த மக்கள் 'முடிந்த வரை பல உயிர்களைக் காப்பாற்ற' அங்கு விரைந்ததாக பிபிசியின் ராக்ஸி காக்டேகர் கூறினார்.


தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட அவசர சேவைப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அப்பகுதியில் இருந்து உடல்கள் எடுக்கப்பட்டதை தான் கண்டதாகவும் அவர் விவரித்தார்.


உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


கீழடி விவகாரம் - மத்திய அமைச்சரின் கருத்து சர்ச்சையாவது ஏன்? பிரச்னையின் முழு பின்னணி

8 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் புகழ்பெற்ற ஹிப்-ஹாப் நட்சத்திரம் கொல்லப்பட்டது ஏன்? - கேங்ஸ்டர் பிபிசியிடம் கூறியது என்ன?

6 மணி நேரங்களுக்கு முன்னர்

'விபத்தின்போது வானிலை தெளிவாக இருந்தது'

விமான விபத்து, ஏர் இந்தியா, ஆமதாபாத், குஜராத்


பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,விபத்து நடந்த பகுதியில் இருந்து வானை நோக்கிப் பெருமளவிலான கரும்புகை எழுந்தது

அதேநேரம், விமானம் விபத்துக்குள்ளானபோது வானிலை தெளிவாக இருந்ததாக விமானப் பாதுகாப்பு நிபுணர் மார்கோ சான் கூறுகிறார்.


METAR என்றழைக்கப்படும் விமான வானிலை முன்னறிவிப்பின்படி, அந்தப் பகுதியில் மேற்பரப்பு காற்று குறைவாகவும், தெரிவுநிலை (Visiblity) ஆறு கிலோமீட்டர் தூரம் என்ற அளவிலும் இருந்தது.


இதுதொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் மோதி, "ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் என்னை அதிர்ச்சியிலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குத் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது இரங்கல்கள். பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன்" என்று கூறியுள்ளார்.


ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்த்திற்கு இரங்கல் தெரிவித்த குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், "உடனடி மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், போர்க்கால அடிப்படையில் ஏற்பாடுகளைச் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று கூறினார்.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஏர் இந்தியாவின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், "அவசர மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது, குடும்பங்களுக்குத் தகவல்களை வழங்க ஆதரவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.


ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம்.


பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் (FCDO) இந்தியாவிலும் பிரிட்டனிலும் நெருக்கடி-நிலை குழுக்களை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் வெளியுறவுச் செயலர் டேவிட் லாமி கூறியுள்ளார்.


"இன்று இந்தியாவில் நடந்த துயரமான விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் பிரிட்டன் துணை நிற்கிறது. பிரிட்டன் நாட்டவர்களும் அந்த விமானத்தில் இருந்தனர் என்பதை நாங்கள் அறிவோம். பிரிட்டன் நாட்டினருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளிக்க வெளியுறவு அலுவலகம், இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. டெல்லியிலும் லண்டனிலும் ஒரு நெருக்கடி-நிலை குழு உருவாக்கப்பட்டுள்ளது" என்று டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.



 நூருல் ஹுதா உமர் 


ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மர்ஹூம் நூர்தீன் மஷூரின் 15 ஆவது ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (10) மன்னார் பிரதேச சபை முன்னாள் தலைவர் இஸ்மாயில் இஸ்ஸதீனின் ஏற்பாட்டில் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் தலைமையில் எருக்கலம் பிட்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டதுடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

 


நூருல் ஹுதா உமர் 


சர்வதேச சிறுவர் தினமானது நாடாளவிய ரீதியில் (12) இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிலும் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களின் ஆலோசனைக்கு அமைய உதவி பிரதேச செயலாளர் எம். ஐ. மு ஆபிக்கா அவர்களின் வழிகாட்டலுக்கமைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களது ஒருங்கினைப்பில் சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம் எச் எம் அஷ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன் அவர்களது ஏற்பாட்டிலும் கமு/கமு/லீடர் எம் எச் எம் அஷ்ரப் வித்தியாலயத்தை மையப்படுத்தி இந்நிகழ்வானது இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

முதலாம் கட்டமாக மாணவர்களை மையப்படுத்தி விழிப்புணர்வு நடை பவனியானது பாடசாலையை அண்டிய வீதியினுடாக சந்தை பகுதியை ஊடறுத்து சென்று பதாதைகள் மூலமாகவும் துண்டுபிரசுரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் முக்கியமான விடயம் சந்தை பகுதியினை அண்டியதாக இந் நடை பவனி மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும். 

இரண்டாம் கட்டமாக  இன்றைய தினத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும், சிறுவர் தொழிலாளர்கள் என்றால் யார்? எவ்வாறு அவர்கள் தொழிலுக்கு உட்படுத்தபடுகின்றார்கள்? ஆபத்தான 51 தொழில்கள் தொடர்பான விளக்கம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை தொடர்பாகவும் விரிவான விளக்கம் உதவி பிரதேச செயலாளரினாலும், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரினாலும், முறைசார கல்வி இணைப்பாளரினாலும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வு அதிபர் எம்.ஐ.சம்சுதீன் அவர்களின் அர்பணிப்பான முன்னெடுப்பினால் சகல நிதி செலவினையும் முன்னின்று மேற்கொண்டிருந்தமை சிறப்பான விடயம் அதற்காக பிரதேச செயலகம் சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டதுடன் மேலும் இந்நிகழ்வில் மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர், நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர், சாய்ந்தமருது பொலிஸ் உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


 


பாறுக் ஷிஹான்

 
நிந்தவூர்  பொலிஸ் நிலையத்தின் புதிய நிலைய பொறுப்பதிகாரியாக  பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ்.  நிசாந்த வெதகே இன்று (12 )  நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு   உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இதற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம் .நஜீம் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கும் பன்சியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

--



பாறுக் ஷிஹான்

ஜூன் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக  சமுத்திர தினத்தையும் ஜூன் 6 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் ஆகியவற்றை பாடசாலை மாணவர்கள் ஊடாக சமூகத்துக்கு கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல் நிகழ்வும் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் இன்று( 12)   சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திலும் அதனுடன் இணைந்த சுற்றுச்சூழல் பகுதியிலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கடல் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் அடங்கியதான விழிப்புணர்வு ஊர்வலமும் பாடசாலை சுற்றிவர உள்ள பகுதிகளில் இடம்பெற்றதுடன் ஊர்வலத்தின் இறுதியில் பாடசாலை மாணவர்களுக்கான அறிவுறுத்தல் விழிப்புணர்வுக் கூட்டம் இடம்பெற்றது. இதன் போது கடல் வளங்களின் முக்கியத்துவம் அது அசுத்தமாக்கப்படும் போது ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் சுற்றாடல் சட்டங்கள் தொடர்பிலும் மாவட்ட கடல் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர் கி. சிவகுமார்   வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்திருந்தார்.

பாடசாலையின் அதிபர் டீ.கே.எம். சிராஜ்   ஆலோசனைக்கு அமைய நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பாடசாலை பிரதி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ்   தலைமை வகித்ததுடன் இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.பி.எம். பௌசான்  இந்நிகழ்வுகளை நெறிப்படுத்தியிருந்தார். மேலும் இந்நிகழ்வில் பாடசாலை பகுதித் தலைவர்காளான யூ.கே.எம். முபாறக், ஏ.எம்.எம். ஸாஹிர் மற்றும் ஏ.ஜி.எ. அஜ்மல் ஆகியோருன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

 


பாறுக் ஷிஹான்


விடுதலைப் புலிகளால் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு   35 வருடம் நிறைவு குறித்த  ஞாபகார்த்த நிகழ்வின் பின்னர் இரு பொலிஸாரின் வீட்டுக்கு சென்று   கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர   நலன் விசாரித்துள்ளார்.


அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வசிக்கும்  பொலிஸ் உத்தியோகத்தர் தௌபீக்  வீட்டிற்கும் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குபட்ட சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த இல்யாஸ் என்ற பொலிஸ் சார்ஜன்ட் உத்தியோகத்தரது வீட்டிற்கு சென்று     நலன் குறித்து ஆராய்வதற்காக  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் உட்பட பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  வீரசிங்க பங்குபற்றலுடன் கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர   சென்றார்.

இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரது விடயத்தில் அக்கறையுடன் நலன்களை கேட்டறிந்த கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனைத்து உதவிகளைம் செய்வதற்கு உரிய தரப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600  பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு   அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த  நினைவு தூபியில் நடைபெற்றிரந்தது.

இது தவிர நிகழ்வின் ஆரம்பத்தில்  கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவினால்    பொலிஸ் கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன்  உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை இபொத்துவில்இ அக்கரைப்பற்றுஇ சம்மாந்துறைஇ உள்ளிட்ட பல பொலீஸ் நிலையங்களை முற்றுகையிட்ட  புலிகள் சகல சிங்கள முஸ்லிம் பொலீசார்களையும் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள். அதன் பின்பு திருக்கோவில் பகுதியில் உள்ள ரூபஸ் குளம்  காட்டுப் பகுதியில் சகல பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

 

 


இன்று மாலை வேளையில் ஏற்பட்ட சீரற்ற வாநிலையினால் பலத்த மழையுடன் கூடிய காற்று, அக்கரைப்பற்றிலும் வீசியிருந்தது.  சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 

அக்கரைப்பற்ற அஸ்ஸராஜ் மகாவித்தியாலயத்தின் பின் புறமுள்ள வாகன தரிப்பிடக் கூரையானது, காற்றில் அள்ளிச் செல்லப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதே வேளை, மரம் ஒன்று மின் கம்பியில் வீழ்ந்துள்ளது.தற்சமயம். இங்கு மின்தடை. ஏற்பட்டுள்ளது.
.

 


சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 


இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக நாளை கூடவிருக்கும் நிலையில், இன்று இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது. 

2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவரும் அந்தந்தச் சபை எல்லைப் பரப்புக்குள் தம்மை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்குத் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புரிமைகளையும் இரத்துச் செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுவைப் பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடியதாக இடைக்காலத் தடை விதிக்கும் படியும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

இந்த இரு மனுக்களும் இன்று நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

வழக்குத் தாக்கல் செய்தவர் சார்பில் இன்று சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ முன்னிலையாகி வழக்கின் விபரத்தை எடுத்துரைப்பார். 

சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வான இரண்டு உறுப்பினர்கள் சார்பிலும் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-யாழ். நிருபர் பிரதீபன்-



வி.சுகிர்தகுமார்                     


 கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்று கிழக்கில்; சிறப்புற்று விளங்கும் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய  வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி மகோற்சவம் நேற்று (10) நிறைவுற்றன.

பொற்புறா வந்த காவியத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில்  கடந்த 04ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் கிரியைகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து அம்மனின் உற்சவம் கிரியைகள் 06 ஆம் திகதி இடம்பெற்ற அம்மனின் திருக்கதவு திறக்கும் நிகழ்வுடனும் 09ஆம் திகதி இடம்பெற்ற கால்யாணக்கால் நடும் சடங்குடனும் 10 ஆம் திகதி இடம்பெற்ற மாலை இடம்பெற்ற திருக்குளிர்த்தி சடங்கு 11ஆம் திகதி இடம்பெறும் ஐயனார், வைரவர், நாகேஸ்வரர் சடங்குடன் இனிது நிறைவுறுகின்றது.
 நேற்று பிற்பகல் அம்மனுக்கான பொங்கல் ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து பெருந்திரளான பக்தர்கள் நேர்பொங்கலில் ஈடுபட்டனர். பின்னர் சிலம்பொலி, உடுக்கை ஒலி, மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா எனும் ஒலியுடன் அம்மனவள் எழுந்தருளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு காட்சியளித்ததுடன் அம்மனவளுக்கு குளிர்ந்தருளப்பட்டு வாழிபாடப்பட்டதன் பின்னர் கருவறையில் மீண்டும் அமர்ந்து கொண்டாள்.
 இறுதியாக பூசகர்களினால் திருக்குளிர்த்தி பாடப்பட்டதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரியப்பட்டதுடன் அடியவர்களுக்கு திருவருட்பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதேவேளை திருக்குளிர்த்தி தினத்தன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையிலான உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடியவர்களுக்கான தாகசாந்தி பந்தலை அமைத்திருந்ததுடன் ஆலயத்தில் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
 வழிபாட்டுக்கிரியைகளை ஆலய பிரதம பூசகர் கு.ரவீந்திரநாதன்; தலைமையிலான பூசகர்கள் நடாத்தி வைத்தனர்.
 வழிபாடுகளில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 


ஜனாதிபதியின் "சந்தேகத்திற்கிடமான" பொதுமன்னிப்பு குறித்து BASL கவலை


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அநுராதபுரம் சிறையிலிருந்து ஒரு கைதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து சங்கத்தின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.


இன்று அனுப்பப்பட்ட கடிதத்தில், சரியான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக BASL குறிப்பிட்டுள்ளது. இது நிறுவன முறைகேடுகள் மற்றும் சிறைச்சாலை அமைப்பின் உள் கட்டுப்பாடுகளில் ஏற்பட்ட கோளாறுகள் பற்றிய சந்தேகங்களை எழுப்புகிறது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு அவ்வாறு எந்த அதிகாரப்பூர்வ மன்னிப்பும் வழங்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியிருந்ததை அது சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த சம்பவம் குறித்து முழுமையான, பக்கச்சார்பற்ற விசாரணைக்கு உத்தரவிடவும், சிறைச்சாலை திணைக்களத்திற்குள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் BASL ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.

சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை சங்கம் வலியுறுத்தியுள்ளதுடன், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒழுங்கு அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

 


நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 


இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்தார். 

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் துஷானி தபரேரா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 

இந்த நோய் ஒரு பாக்டீரியாவால், குறிப்பாக பாலூட்டிகளின் சிறுநீர் வழியாகப் பரவுகிறது. உண்மையில், இந்த பாக்டீரியா எலிகளின் சிறுநீர் அமைப்பில் வாழ்கிறது. எலிகள் தண்ணீர் குடிக்கும்போது, ​​அவற்றின் சிறுநீர் தண்ணீரிலோ அல்லது மண்ணிலோ கலக்கிறது. நாம் அந்த மண் அல்லது தண்ணீரை பயன்படுத்தும் போது, மக்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாவட்ட ரீதியாக இந்த நோயாளிகள் பெரும்பாலும் இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் காணப்படுகிறார்கள். அதே நேரத்தில், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பற்றி நாம் பேசினால், நெல் விவசாயிகள், சில மாவட்டங்களில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கீரைத் தோட்டங்களில் பணியாற்றுபவர்களை நாம் சுட்டிக்காட்டலாம். 

இதேவேளை, கொழும்பில் உள்ள லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன, இந்த நாட்களில் சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பான நோய்கள் குறித்து ஊடக சந்திப்பின் போது பின்வருமாறு விளக்கினார். 

இந்த நாட்களில் குழந்தைகளிடையே கடுமையான காய்ச்சல் பரவி வருகிறது. இது புதிய விடயம் இல்லை. ஏனெனில் பருவமழையுடன் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவுகின்றன. ஒவ்வொரு வருடமும் இதை நாங்கள் 'ஷவர் பீவர்' என்று சொல்றோம். இந்த முக்கிய பிரிவில் நமக்கு மிக முக்கியமானவை டெங்கு, எலிக்காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சிக்குன்குனியா. அத்துடன் காய்ச்சலுடன் வரும் வயிற்றுப்போக்கு. நான் சொல்ல விரும்பும் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், உங்கள் குழந்தைக்கு அதிக காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால், காத்திருக்க வேண்டாம். வைத்தியசாலைக்குச் செல்லுங்கள்.


 

பாறுக் ஷிஹான்


தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600  பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு  புதன்கிழமை(11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த  நினைவு தூபியில் நடைபெற்றது.

1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 காவல்துறை அதிகாரிகளின் நினைவாக  அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது  கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர   உள்ளிட்ட  பொலிஸ்  உயரதிகாரிகள்   பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்  பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும்  கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின்  குடும்பங்களில் உள்ள சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்   வழங்கும் செயற்பாடுகள்  இதன் போது முன்னெடுக்கப்பட்டன.

இது தவிர நிகழ்வின் ஆரம்பத்தில்  கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவினால்    பொலிஸ் கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன்  உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை ,பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, உள்ளிட்ட பல பொலீஸ் நிலையங்களை முற்றுகையிட்ட  புலிகள் சகல சிங்கள முஸ்லிம் பொலீசார்களையும் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள். அதன் பின்பு திருக்கோவில் பகுதியில் உள்ள ரூபஸ் குளம்  காட்டுப் பகுதியில் சகல பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

 


தாமரைக்குளம் சீரடி சாயி கருணாலயத்தில் கதிர்காமபாதயாத்திரைக்களுக்கான சேவைகள் முன்னெடுப்பு ....


ஜே.கே.யதுர்ஷன்

தம்பிலுவில்...


கிழக்கிலங்கையில் பெரிய ஷீரடி என்று மக்களால் போற்றப்பட்டுவரும் அம்பாறை மாவட்டம் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலயத்தின் வருடாந்த கதிர்காம பாத யாத்திரையர்களூக்கான சேவைகள் இவ்வருடமும் ஆலய ஸ்தாபகரும் இலங்கையில் மட்டும் இன்றி இந்தியாமற்றும் பல நாடுகளில் தனது சமுக மக்கள் சேவைகளை வழங்கும் சமுக செயற்பாட்டாளர் திருமதி சீதா விவேக் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....


மேலும் குறித்த சேவை ஓட்டி இலங்கையில் வட மகாணத்திலும் மற்றய பாகங்களில் இருந்து வரும் யாத்திரையர்கள் தங்கி இருந்து அவர்களின் களைப்பை போக்கி உணவருத்தி மற்றும் நீராடி அவர்களின் கடமைகளை முடித்தும் செல்லுவதற்கு அமைவாக ஷீரடி சாயி கருணாலயத்தின் சேவைகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.... 


அத்துடன் ஷீரடி சாயி கருணாலயத்தின் செயலாளரும் சமுகசெயற்பாட்டாளருமான ஜே.கே.யதுர்ஷன் அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க திருக்கோவில் காஞ்சிரன் குடா இராணுவத்தினர் அவர்களின் கட்டளை அதிகாரி மற்றும் அம்பாறை மாவட்ட சிவதொண்டர் அமைப்பின் ஊடாக தினசரி குடிநீர் மற்றும் சாதாரண நீர்கள் வழங்கும் சேவையும் ஆலயத்தில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது....


இது வரை ஷீரடி சாயி கருணாலயத்தில் 300க்கும் மேற்பட்ட யாத்திரையர்கள் வருகை தந்து சேவைகளை பெற்று கதிர்காமம் நோக்கிய யாத்திரையை தொடங்கியுள்ளது மேலும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்....

 



மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுத்தலைவரின் அலுவலகம் புதிய மாவட்ட செயலகத்தில் திறந்து வைப்பு


அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் காரியாலயம் இன்றைய தினம் மட்டக்களப்பு திராய்மடுவிலுள்ள புதிய மாவட்ட செயலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழுத் தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டதனைத்தொடர்ந்து இன்று அவரது தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.


அதனைத்தொடர்ந்து, மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் மற்றும் அமைச்சரின் உததியோகத்தர்கள், மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


மாவட்ட செயலக ஊடகப்பிரிவு



வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்பவர் சட்டவிரோதமாக ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மொஹான் கருணாரத்ன எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


குறித்த வழக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) விசாரணைக்கு வந்தபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதன்போது,பிரதிவாதியான டபிள்யூ. எம். அதுல திலகரத்னவும் அந்தச் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் இருந்தார். 

அவர் தொடர்ந்த மற்றொரு வழக்கு முடிவுக்கு வந்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி சார்பாக ஆஜரான மூத்த சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல, தனது கட்சிக்காரரான பிரதிவாதி டபிள்யூ.எம். அதுல திலகரத்ன சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டதாக திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இந்த நேரத்தில் பிரதிவாதியான அதுல திலகரத்னவும் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதன் மூலம் இது மேலும் உறுதிப்படுத்தப்படுவதாகவதாக சட்டத்தரணி குறிப்பிட்டார். 

சட்டத்தரணி பேசிக் கொண்டிருக்கும்போது, ​​பிரதிவாதியான அதுல திலகரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் இருந்த திறந்த நீதிமன்ற அறையில் கையை உயர்த்தி, தான் நீதிமன்றத்தில் இருப்பதாக நீதவானிடம் தெரிவித்தார். 

பிரதிவாதியான அதுல திலகரத்னவின் சட்டத்தரணி சுரங்க மொஹோட்டி, தனது கட்சிக்காரர் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள HC/69/2018 வழக்கிலிருந்து சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டதால் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இருப்பினும், பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தெரிவித்தார். 

பிரதிவாதியின் சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல, வெசாக் பௌர்ணமி தினத்தன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் பட்டியலில் டபிள்யூ.எம். அதுல திலகரத்னவின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

 

இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரியின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

 


பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் 


கொழும்பு பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் குறும்படத் தயாரிப்பாளருமான பாத்திமா ஷானாஸ் இனால் தயாரித்தளிக்கப்பட்ட “எழுதப்படாத வசனங்கள்” எனும் 15 நிமிட குறுந்திரைப்படத்தை திரையிடலும் அதுதொடர்பில் கருத்தாடல் நிகழ்வும் 2025.06.11 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் கூட்ட மண்டபத்தில் பல்கலைகழக சமூக நல்லிணக்க நிலையத்தின் தலைவரும் அரசியல் விஞ்ஞான துறையின் தலைவருமான கலாநிதி எம். அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.

கலை பொதுக்கருத்தாடல் பிரிவின் ஆலோசகர் ஏ.சி.எம். மாஹிர் மற்றும் , சிறகுநுனி கலை ஊடக மையத்தின் பணிப்பாளர் எம்.ஐ. ஜாபீர் ஆகியோரது நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குறித்த திரைப்படம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தினாலும் ஜேர்மன் பெடரல் வெளிநாட்டு அலுவலகத்தினாலும் கூட்டாக நிதியளிக்கப்படும் இலங்கையில் சமூக ஒத்திசைவையும் சமாதானத்தையும் வலுப்படுத்தும் (SCOPE) நிகழ்ச்சித்திட்டத்தின் பங்காண்மையுடன், சிறகுநுனி கலை ஊடக மையம் தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க நிலைத்துடன் இணைந்து இந்நிகழ்வானது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. 

SCOPE நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை அரசாங்கத்தடன் இணைந்து GIZ நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 
நிகழ்வில் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர், மற்றும் பேராசிரியர்கள், சிரேஷ்ட கனிஷ்ட விரிவுரையாளர்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



 நூருல் ஹுதா உமர் 


நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, நாடளாவிய ரீதியில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், இன்று (11) திருகோணமலை, ஜேகப் பார்க் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தும் போட்டியிட்டு, நாடளாவிய ரீதியில் தெரிவான 140 உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. அஷ்ரப் தாஹிர், முத்து முஹம்மது மற்றும் அரசியல் அதிகாரபீட உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.