Showing posts with label Slider. Show all posts

 


இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் பூஜ்ய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 09 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது.


குறித்த சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகக் கூறி, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.


வழக்கு விசாரணைகளின் பின்னர், இந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 



மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி நகரில்  களுவாஞ்சிகுடி எரிபொருள் வர்த்தக சங்கத்தினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

 

இந்த போராட்டமானது இன்று (22 )பிற்பகல் களுவாஞ்சிகுடி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக, இடம்பெற்றது.


இந்த எரிபொருள் நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்துபவர் மேல் சில குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  


வருடத்தில் சுமார் 200 நாட்கள் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை என்றும், பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதோடு நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இந்நிலையில்,விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும் அதிகம் வாழும் இப்பகுதியில், நீண்டகாலமாக நிலவும் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.


எனவே, தற்போதைய குத்தகைதாரரிடமிருந்து இந்த எரிபொருள் நிலையத்தை அரசாங்கம் மீளப்பெற்று, வருடம் முழுவதும் 24 மணி நேரமும் முறையாக நடத்தக்கூடிய தகுதியான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோசம் எழுப்பினர்.


இந்நிலையில் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


 (வி.ரி.சகாதேவராஜா)


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் ( ஈபிஆர்எல்எவ்) இருந்து , மண்ணுக்காக உயிர் நீத்த காரைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மோகன் - கணேஷ்  ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட மென்பந்து  கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரின் இறுதி நிகழ்வில், அவர்களின் உற்ற நண்பர்களான புலம்பெயர் தோழர்கள் மூவர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த இறுதிப் போட்டி நிகழ்வு காரைதீவு விபுலானந்தா  மைதானத்தில் நேற்று (20) சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காலஞ்சென்ற மோகன் கணேஷ் ஆகியோரின் நண்பர்களான, லண்டனில் இருந்து தோழர் பாஸ்கரன் ( காரைதீவு ) ,தோழர் ஷிராப் (தம்பலகாமம்) அத்துடன் பிரான்சிலிருந்து தோழர் ஜோதி (கொக்கொட்டிச்சோலை )
ஆகிய மூன்று நண்பர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

விடுதலை இயக்கத்தில் இருந்து உயிர் நீத்த சக தோழர்களின் நினைவு நிகழ்வில்,  அவர்களது உற்ற நண்பர்கள் மறக்காமல் புலம்பெயர் நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டமை நட்புக்கும் தியாகத்திற்கும் ஒற்றுமைக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தது.

 


நூருல் ஹுதா உமர்


யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.

இந்தக் கண்டுபிடிப்பு, எமது நாட்டின் கடந்தகால வன்முறை மற்றும் காணாமற்போனோர் தொடர்பான தீர்க்கப்படாத கேள்விகளை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. பல தசாப்தங்களாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து பதில் தேடி அலைந்து வரும் குடும்பங்களின் வலியையும் வேதனையையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும்,

மனித உயிர்களின் மதிப்பை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மதிக்க வேண்டியது ஒவ்வொரு நாகரிக சமூகத்தினதும் கடமையாகும். எனவே செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக சுயாதீனமான, வெளிப்படையான, நியாயமான மற்றும் நீதியான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

காலம் தாழ்த்தப்படும் ஒவ்வொரு நாளும், உண்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பங்களின் வேதனையை மேலும் அதிகரிக்கின்றது. ஆகவே சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும், நீதித்துறை அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், மனித உரிமை அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறிவியல் ரீதியான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

இந்த மனித எச்சங்கள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? அவர்களது குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்க வேண்டும். உண்மையை மறைப்பதும், காலம் தாழ்த்துவதும் அல்லது விசாரணையை பலவீனப்படுத்துவதும் எந்தவொரு சமூகத்திற்கும் நீதியை வழங்காது.

போராலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பது நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாகும். உண்மையை அறியும் உரிமையும், நீதியைப் பெறும் உரிமையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அடிப்படை மனித உரிமைகளாகும்.

எனவே செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும், எந்தவித அரசியல் அல்லது நிர்வாக தலையீடுகளுமின்றியும் முன்னெடுக்கப்பட்டு, காலம் தாழ்த்தாது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன். உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தின் முதல் படியாகும்; நீதியை நிலைநாட்டுவதே நிலையான சமாதானத்தின் அடித்தளமாகும் என்று தெரிவித்துள்ளார்

 


( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவில் இலங்கை வங்கியின் கியூஆர் வேலைத்திட்டம் வங்கி முகாமையாளர் திருமதி யாழினி தலைமையில் நேற்று முன்தினம் பரவலாக முன்னெடுக்கப்பட்டது.


இலங்கை வங்கி ஏற்பாடு செய்துள்ள நாடு முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணம் காரைதீவு பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையங்களுக்கு QR வங்கி முகாமையாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

வி.சுகிர்தகுமார்          


 15 வருடங்களின் பின்னர் அக்கரைப்பற்று 241 ஆம் படைப்பிரிவு இராணுவத்தினரின் வசமிருந்த ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு உரிமையான அரிசி குற்றும் ஆலை அமைந்திருந்த சுமார் 2 ஏக்கர் காணி இன்று (22)விடுவிக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்க அவர்களின் உத்தரவின்பேரில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இக்காணி விடுவிக்கப்பட்டது.
கடந்த 15 வருடங்களாக இக்காணியை வழங்கக்கோரி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் நடவடிக்கை எடுத்து வந்தது. இருப்பினும் அச்செயற்பாடு வெற்றியளிக்கவில்லை.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஊடாக அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் இது தொடர்பான மகஜர்கள் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து இக்காணி விடுவிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் நா.ஏரம்பமூர்த்தி தெரிவித்தார்.
காணி விடுவிப்பு கடித ஒப்பந்தமானது இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்றதுடன் விடுவிப்பு ஒப்பந்தத்தில் அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் டபிள்யு இ.டி.எச்.ஆர்.கே. வெலிக்கண்ணா மற்றும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி இராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன் கேர்ணல் திலீப ஆகியோர் கையொப்பமிட்டனர்.
தொடர்ந்து காணி விடுவிப்பிற்கான ஒப்பந்த கடித்தினை பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்தன் பிற்பாடு களவிஜயமொன்றினை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட இடத்தினையும் பார்வையிட்டனர்.
இதேநேரம் இக்காணி விடுவிப்பிற்காக உத்தரவிட்ட ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு அக்கரைப்பற்று 241 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உள்ளிட்டோருக்கும் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
காணி கையளிப்பு நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ஆர்.ரதீசன் மற்றும் பலநோக்கு கூட்டுறவுச்சங்க நிருவாகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

 பிரிட்டன் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் பதவிகளிலிருந்து விலகுவதாக கியர் ஸ்டாமர் அறிவித்துள்ளார்.


10 டவுனிங் தெருவில் தனது முடிவை விளக்கிய அவர், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்தத் தான் மிகவும் பொருத்தமானவரா என்பது குறித்துத் தனது கட்சி கேள்வி எழுப்பி வருவதாகக் கூறினார்.


இந்தக் கேள்விக்குத் தனது கட்சி அளித்துள்ள பதிலை தான் "கேட்டிருப்பதாகவும்", "அந்தப் பதிலை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும்" அவர் கூறியுள்ளார்.


தான் எடுத்த ஒவ்வொரு முடிவும், "தான் நேசிக்கும் தனது நாட்டை முதன்மைப்படுத்துவது குறித்தே அமைந்திருந்ததாக" அவர் கூறியுள்ளார்.


தான் பதவி விலகும் முடிவைத் தெரிவிப்பதற்காக, திங்கள்கிழமை காலையில் அரசரிடம் பேசியதாக ஸ்டாமர் கூறினார்.



விளம்பரம்


தலைமைப் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 9-ஆம் தேதி தொடங்கி, கோடை விடுமுறைக்குள் அப்பணிகள் நிறைவடையும் வகையிலான கால அட்டவணையை வகுக்குமாறு அவர் தொழிலாளர் கட்சியின் தேசிய செயற்குழுவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


அதாவது, செப்டம்பரில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் முன்பே ஒரு புதிய தலைவர் பதவியேற்பார் என்பதாகும்.


அதுவரை, தான் பிரதமர் பதவியில் நீடிப்பேன் என அவர் கூறியுள்ளார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

 வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா ஏ vs இலங்கை ஏ

சூர்யவன்ஷியின் சாதனை ஆட்டத்திற்குப் பின் சஞ்சய் மஞ்சரேக்கர் ட்ரோல் செய்யப்படுவதுஏன்?

தாங்கள் சகோதரிகள் என அறிந்த பிறகு தங்களைப் பிரிக்க முடியாது என நடாஷா, ஜெம்மா மற்றும் ஹெலன் தெரிவிக்கின்றனர். 

ஒரே விந்து கொடையாளருக்குப் பிறந்த 3 பெண்கள் பிற்காலத்தில் சந்தித்துக் கொண்டது எப்படி?

வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா - இலங்கை, லிஸ்ட் ஏ கிரிக்கெட் 

11 பந்துகளில் அரைசதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி: இலங்கை ஏ அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட ஆரம்பகட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடரும்.

'நேர்மறையான முன்னேற்றம்'; அமெரிக்க-இரான் பேச்சுவார்த்தையின் முதல் சுற்று குறித்து மத்தியஸ்தர்கள்

End of அதிகம் படிக்கப்பட்டது

ஸ்டாமர் இந்த முடிவை எடுத்தது ஏன்?

கியர் ஸ்டாமர் 

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கால அட்டவணையை வகுக்குமாறு கியர் ஸ்டாமர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரான ஆண்டி பர்ன்ஹாமிடம் தலைமையை ஒப்படைப்பதற்கான திட்டத்தை அறிவிக்குமாறு, கியர் ஸ்டாமரை வலியுறுத்தும் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


ஆனால், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வேன் என்றும், "பின்வாங்கப் போவதில்லை" என்றும் பிரதமர் உறுதியாகக் கூறினார்.


தொழிலாளர் கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டி இருக்குமா என்பது தெளிவாக இல்லை.


உதாரணமாக, ஜூலை 9-ஆம் தேதி போட்டி தொடங்கும்போது ஆண்டி பர்ன்ஹாம் போட்டியின்றி வெற்றி பெற்றால், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பிறகு அவர் தொழிலாளர் கட்சியின் தலைவராகலாம்.


கியர் ஸ்டாமர் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; பொதுத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டு ஜூலை 5 அன்று பிரதமரானார்.


அவர் பதவி விலகும் முடிவால், 2016-ம் ஆண்டிலிருந்து பிரிட்டன் விரைவில் தனது ஏழாவது பிரதமரைக் காணவிருக்கிறது.


பதவி விலகலை அறிவிப்பதற்கு முன்பாக என்ன கூறினார்?

டவுனிங் ஸ்ட்ரீட்டில் தனது மனைவி விக்டோரியாவை ஆரத்தழுவிய ஸ்டாமர் பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,டவுனிங் ஸ்ட்ரீட்டில் தனது மனைவி விக்டோரியாவை ஆரத்தழுவிய ஸ்டாமர்

பதவி விலகலை அறிவிப்பதற்கு முன், "அரசியல், நிதி மற்றும் தார்மீக ரீதியாக முற்றிலும் சீர்குலைந்திருந்த" தொழிலாளர் கட்சிக்கே தான் பொறுப்பேற்றதாக ஸ்டாமர் கூறினார்.


"இந்தக் கட்சி முடிந்துவிட்டது" என்று தன்னிடம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டதாகவும், ஆனால் அந்தக் கருத்து தவறானது என்பதைத் தாம் நிரூபித்ததாகவும் அவர் கூறினார்.


"யூத வெறுப்பு எனும் நஞ்சை அகற்றுவதன்" மூலம் தான் கட்சியை மாற்றியமைத்ததாக அவர் கூறினார்.


"இது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தது," என்று அவர் மேலும் கூறினார்.


அதிகாரப் பரிமாற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்யத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாகவும், தனக்கு அடுத்து பதவிக்கு வருபவருக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாகவும் கியர் ஸ்டாமர் கூறினார்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வலிமையான மற்றும் நியாயமான ஒரு பிரிட்டனுக்கே தான் பொறுப்பேற்கவிருக்கிறோம் என்பது தனக்குத் தெரியும் என்று அவர் கூறினார்.


கடந்த ஆறு ஆண்டுகளாகத் தன்னுடன் இருந்து வரும் நண்பர்கள் மற்றும் சகாக்களுக்கும், பிரதமர் அலுவலக ஊழியர்கள் மற்றும் "சிறப்பான குடிமைப் பணியினருக்கும்" ஸ்டாமர் நன்றி தெரிவித்தார்.


கடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சியின் மோசமான செயல்பாடே கியர் ஸ்டாரின் பதவி விலகலுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது; ஆனால், இதைத் தவிர ஸ்டாமர் மீதான அழுத்தத்தை அதிகரித்த வேறு பல காரணங்களும் இருந்தன.


நிதி சார்ந்த சவால்கள்

ஸ்டாமரின் செல்வாக்கு மதிப்பீடுகள், சில சமயங்களில் பிரிட்டன் பிரதமர்களுக்கான மிகக் குறைந்த அளவை நெருங்கும் அளவுக்குச் சரிந்துள்ளன.பட மூலாதாரம்,Downing Street / EPA

படக்குறிப்பு,ஸ்டாமரின் செல்வாக்கு மதிப்பீடுகள், சில சமயங்களில் பிரிட்டன் பிரதமர்களுக்கான மிகக் குறைந்த அளவை நெருங்கும் அளவுக்குச் சரிந்துள்ளன.

கியர் ஸ்டாமரின் பதவிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே சிக்கல்களுக்கான அறிகுறிகள் தென்பட்டன.


பிரதமராகப் பதவியேற்ற மூன்று மாதங்களிலேயே, அப்பதவியை ஏற்ற பிறகு தனக்குக் கிடைத்த பரிசுகள் மற்றும் உபசரிப்புகளுக்கான (டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சிக்குரிய டிக்கெட்டுகள் உட்பட) 6,000 பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்பிலான தொகையை அவர் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது.


எந்த விதிகளும் மீறப்படவில்லை என்றாலும், அமைச்சர்கள் இலவசங்களைப் பெற்றுக்கொண்ட செய்தி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது; குறிப்பாக, பொருளாதாரம் மந்தமாக இருந்த சூழலிலும், சீர்திருத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் அரசின் திறன் குறித்த கேள்விகள் எழுந்திருந்த நிலையிலும் இச்செய்தி அதிருப்தியை உருவாக்கியது.


பசுமை முதலீட்டுக்கான வாக்குறுதிகளைக் கைவிட்டது, நலத்திட்ட உதவிகளில் மாற்றங்கள் மற்றும் பரம்பரை சொத்து வரி தொடர்பான கொள்கை மாற்றங்கள் உள்ளிட்ட பல கொள்கை நிலைப்பாட்டு மாற்றங்களுக்காக கியர் ஸ்டாமர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.


பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டவிரோதமாகக் கடந்து வரும் குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அவர் வலதுசாரிகளாலும் விமர்சிக்கப்பட்டார்.


கியர் ஸ்டாமர் மக்களிடையே மிகவும் செல்வாக்கற்றவராக மாறிவிட்டதை கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டின. சில சமயங்களில், அவரது செல்வாக்கு விகிதங்கள் பிரிட்டிஷ் பிரதமர்களுக்கு இதுவரை பதிவான மிகக் குறைந்த அளவுகளுக்கு மிக அருகில் சரிந்திருந்தன.


எப்ஸ்டீன் மற்றும் தூதர்

லார்ட் மண்டல்சன் (இடதுபுறம்) மற்றும் எப்ஸ்டீன்பட மூலாதாரம்,HOUSE OVERSIGHT COMMITTEE

படக்குறிப்பு,லார்ட் மண்டல்சன் (இடதுபுறம்) மற்றும் எப்ஸ்டீன்

அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதரான லார்ட் பீட்டர் மண்டல்சனின் பெயர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஆவணங்களில் இடம்பெற்றது, பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரின் பதவிக்காலத்தில் எழுந்த மிகப்பெரிய சர்ச்சைகளில் ஒன்றாகும்.


டோனி பிளேரின் பதவிக்காலத்தில் சிறந்த அரசியல் வியூகவாதியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட லார்ட் மண்டல்சன், முன்னதாக சர்ச்சைகளுக்கு மத்தியில் இருமுறை தொழிலாளர் கட்சி அரசாங்கங்களிலிருந்து விலகியிருந்தார்.


சிறார் ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட பின்னரும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் நட்பைத் தொடர்ந்தவர் என்பது தெரிந்திருந்தும், பிரிட்டனின் மிக முக்கியமான கூட்டாளியான அமெரிக்காவில் தனது பிரதிநிதியாக லார்ட் மண்டல்சனை கியர் ஸ்டாமர் நியமித்தார்.


ஜனவரி மாதம் அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட ஆவணங்கள், எப்ஸ்டீன் மற்றும் லார்ட் மண்டல்சன் ஆகியோருக்கு இடையிலான தொடர்புகள் குறித்த புதிய விவரங்களை வெளிப்படுத்தின.


லார்ட் மண்டல்சன், எப்ஸ்டீனுடன் அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம் என்பதைக் குறிக்கும் ஆவணங்கள் அல்லது தகவல்கள் குறித்துக் காவல்துறை விசாரணை நடத்த இது வழிவகுத்தது.


லார்ட் மண்டல்சன் அந்த மின்னஞ்சல்கள் குறித்து பகிரங்கமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை; இருப்பினும், தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், நிதி ஆதாயம் ஏதும் பெறும் நோக்கம் தமக்கு இருக்கவில்லை என்றும் அவர் கூறி வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


செப்டம்பர் மாதத்தில் ஸ்டாமர் லார்ட் மண்டல்சனை அவரது பதவியிலிருந்து நீக்கினார்; ஆனால், இந்த விவகாரம் முழுவதுமே பிரதமரின் முடிவெடுக்கும் திறன் குறித்துக் கேள்விகளை எழுப்பியதுடன், ஒரு நிலையான மற்றும் திறமையான தலைவராகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் பலவீனப்படுத்தியது.


டிரம்புடனான உறவு

ஸ்டாமர் பதவி விலகுவார் என்று டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஸ்டாமர் பதவி விலகுவார் என்று டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்

லார்ட் பீட்டர் மண்டல்சனை அமெரிக்காவுக்கான பிரிட்டனின் தூதராக நியமித்ததற்கு கியர் ஸ்டாமர் கொண்டிருந்த முக்கிய காரணங்களில் ஒன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நெருக்கமான உறவை அவரால் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஆகும்.


அமெரிக்க மற்றும் பிரிட்டன் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் ஆரம்பத்தில் சுமூகமாக இருந்தபோதிலும், இரானுக்கு எதிரான போரில் இணைய கியர் முதலில் மறுத்தபோது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான 'சிறப்பு உறவு' என்று அழைக்கப்படும் அந்த உறவு படிப்படியாகச் சிதைவடைந்தது.


பின்னர் பிரதமர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இரானின் ஏவுகணைத் தளங்கள் மீது "தற்காப்புத்" தாக்குதல்களை நடத்துவதற்காக அமெரிக்க ராணுவம் பிரிட்டிஷ் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்தார்.


ஆனால், இந்த நிலைப்பாடு கூட டிரம்புக்குத் திருப்தி அளிக்கவில்லை. அவர் கியர் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தினார்; அதேவேளையில், மோதலில் எந்தவிதமான ஈடுபாட்டையும் அவர் எதிர்த்தது பாரம்பரியத் தொழிலாளர் கட்சி ஆதரவாளர்களையும் கோபமடையச் செய்தது.


பிரதமரின் சில விமர்சகர்களுக்கு, இந்த முடிவு அவரது தலைமைப் பாணியின் அடையாளமாக மாறியது. ஸ்டாமர் அடிக்கடி பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்துவதால், அது இறுதியில் இரு தரப்பினரையும் கோபப்படுத்துகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.


உண்மையில், கியர் பதவி விலகுவதற்கான சாத்தியக்கூறை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பே உணர்ந்திருந்ததாகத் தெரிகிறது.


ஞாயிற்றுக்கிழமையன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில், கியர் "பிரதமர் பதவியிலிருந்து விலகுவார்" என்று கூறிய டிரம்ப், குடியேற்றம் மற்றும் எரிசக்தி கொள்கை விவகாரங்களில் அவர் "மிக மோசமாகத் தோல்வியடைந்துவிட்டதாக" குற்றம் சாட்டினார்.


"அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!" என்று டிரம்ப் தனது பதிவை நிறைவு செய்தார்.


இலங்கை மீஉயர் நீதிமன்றம் 2026ம் ஆண்டு மே மாதம் 8 ந் திகதி Abeyasinghe vs Thilakaratne என்ற வழக்கில் (SC/FR Application No. 81/2021) சிறப்புத் தீர்ப்பினை வழங்கியது. (சாதாரண வாசகர்களும் புரியும்படி, இத் தீர்ப்பு தொகுக்கப்பட்டுள்ளது)

முக்கிய உச்ச நீதிமன்ற அடிப்படை உரிமைகள் வழக்கில்

மனுதாரர் (டாக்டர். அபேசிங்க) சார்பில் வழக்கறிஞர்கள் எர்மிசா டெகல் மற்றும் லினுரி முனசிங்க ஆகியோர் ஆஜராகினர். 

முதல் பிரதிவாதி (பேராசிரியர் திலகரத்ன) சார்பில் சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் ஜகசீச ரணசிங்க ஆகியோர் ஆஜராகினர்.

இதுவொரு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்காகும்.

ஆனால், 2026 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி, இலங்கையின் உச்ச நீதிமன்றம் அந்த வரலாற்றை ஒரு அசாதாரணமான முறையில் மீண்டும் திறந்தது.

 நீதிபதிகள் ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி மற்றும் கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அபேயசிங்க எதிர் திலகரத்ன மற்றும் பிறர் (S.C.F.R. விண்ணப்ப எண் 81/2021) வழக்கில் தனது தீர்ப்பை வழங்கியது.

 இந்தத் தீர்ப்பை, நாட்டின் நீதித்துறை வரலாற்றில் பணியிடப் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாக சட்ட அறிஞர்கள் ஏற்கனவே வர்ணித்து வருகின்றனர்.

அபேசிங்க எதிர் திலகரத்ன (குறிப்பாக டாக்டர் டபிள்யூ. ஏ. எம். உதாரி எல். அபேசிங்க எதிர் பேராசிரியர் டபிள்யூ. எம். திலகரத்ன மற்றும் பிறர் [SCFR மனு எண். 81/2021]) என்பது, பணியிடத்தில் நிகழும் கடுமையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிறுவன ரீதியான குறைதீர்ப்பு வழிமுறைகளின் தோல்வி தொடர்பான இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்காகும். 

வழக்கின் விவரங்கள் மற்றும் அதன் தீர்ப்பு இதோ: 

தரப்பினர் மனுதாரர்: 

டாக்டர் உதாரி அபேசிங்க, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் அறிவியல் பீடத்தில் பல் அறுவை சிகிச்சை நிபுணரும் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆவார்.

 முதல் பிரதிவாதி: 

பேராசிரியர் வன்னிநாயக்க முதியன்செலகே திலகரத்ன, சிரேஷ்டப் பேராசிரியரும், பல் பீடத்தின் முன்னாள் தலைவரும், மனுதாரரின் முன்னாள் எம்.ஃபில். இணை மேற்பார்வையாளரும் ஆவார்.

குற்றச்சாட்டுகள்

ஜூன் 2017 மற்றும் ஏப்ரல் 2018 க்கு இடையில், டாக்டர் அபேசிங்க, பேராசிரியர் திலகரத்னவால் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். 

அவரது வெளிப்படையான எதிர்ப்புகளையும் மீறி, இணையவழி பின்தொடர்தல், அடிக்கடி கட்டிப்பிடித்தல், அவரது கைகளைத் தடவுதல், மற்றும் அவரது முதுகு மற்றும் கால்களைத் தொடுதல் உள்ளிட்ட முறையற்ற நடத்தைகள் மூலம் அவரது இளைய சக ஊழியர் அந்தஸ்தும் கல்வி முன்னேற்றமும் சுரண்டப்பட்டன. 

நிறுவனத் தோல்வி மற்றும் சட்டரீதியான சவால்: பல்கலைக்கழகத்தின் உள்ளக விசாரணைக் குழு, பேராசிரியர் திலகரத்ன பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று கண்டறிந்த பின்னர், புகாரை ஆரம்பத்தில் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, பல்கலைக்கழக சபை இறுதியில் அந்த அறிக்கையை நிராகரித்தது. உள்ளக நிர்வாக ரீதியான தீர்வு ஏதுமின்றி, 


டாக்டர் அபேசிங்க, சமத்துவம், சட்டத்தின் சமமான பாதுகாப்பு (சரத்து 12), மற்றும் சித்திரவதை அல்லது கொடூரமான/இழிவுபடுத்தும் நடத்தையிலிருந்து விடுதலை (சரத்து 11) ஆகிய தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல் செய்தார். 


உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: மே 8 அன்று, நீதிபதி ஜனக் டி சில்வாவால் (நீதிபதிகள் பிரியந்த பெர்னாண்டோ மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் உடன்பட்டு) வழங்கப்பட்ட தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் டாக்டர் அபேசிங்கவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. 


குற்றவாளிக்குத் தண்டனை: 

பேராசிரியர் திலகரத்ன மீண்டும் மீண்டும் செய்த குற்றங்களுக்காகக் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். 

பாலியல் துன்புறுத்தல் மற்றும் கல்வி அல்லது கல்விசார் பதவிகளை வகிக்க நிரந்தரமாகத் தடை. ஸ்தாபன ஆணைகள்: பேராதனைப் பல்கலைக்கழகமும் அதன் பேரவையும் உள்ளக ஒழுங்கு நடவடிக்கைக் கண்டுபிடிப்புகளை நிராகரித்ததற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், பாலின அடிப்படையிலான துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காகக் கடுமையான, அமல்படுத்தக்கூடிய கொள்கைகளைச் செயல்படுத்துமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது

.இழப்பீடு: பேராசிரியர் திலகரத்னவும் அரசும், டாக்டர் அபேசிங்கவின் அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டதற்காக அவருக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.

பணியிடங்களில் பாலியல் வன்முறையின் பரவல் எந்த அளவிற்கு ஆழமாக உள்ளது என்பதை எந்தவொரு அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களும் பதிவு செய்யவில்லை.

பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கத் தவறியதை அடுத்து, பேராசிரியரைக் கல்வித்துறையிலிருந்து இலங்கை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.இலங்கையில் பணியிட துன்புறுத்தலுக்கு எதிரான சட்டக் கட்டமைப்பு இல்லை.


இலங்கையில் உள்ள பெண்களுக்கு, பணியிடங்களில் ஏற்படும் துன்புறுத்தல் என்பது விதிவிலக்கல்ல, மாறாக அதுவே பரவலான இயல்பாகும்.


 இலங்கையில் பணியிடத் துன்புறுத்தல் குறித்து 2022-ஆம் ஆண்டில் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் நடத்திய ஓர் ஆய்வில், பங்கேற்றவர்களில் 61 சதவிகிதத்தினர் ஏதேனும் ஒரு வகையான துன்புறுத்தலையும், 11 சதவிகிதத்தினர் பாலியல் துன்புறுத்தலையும் எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர். களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகம் மற்றும் மேலாண்மை ஆய்வுகள் பீடம் மேற்கொண்ட மேலதிக ஆய்வில், பங்கேற்ற பெண்களில் 70 சதவிகிதத்தினர் பணியிடத்தில் ஏதேனும் ஒரு வகையான பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர்....


பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அநீதியின் இந்தக் கடலில்தான், டாக்டர் விஜயபால அபேசிங்க முதியன்செலகே உதாரி லக்ஷிக அபேசிங்க எதிர் பேராசிரியர் வன்னிநாயக்க முதியன்செலகே திலகரத்ன மற்றும் பிறர் [SC அடிப்படை உரிமைகள் {FR} மனு எண் 81/2021] என்ற சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது – நீதிபதி ஜனக் டி சில்வாவின் கருத்துரை. இது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் அறிவியல் பீடத்தில் பல் அறுவை சிகிச்சை நிபுணராகவும் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் உள்ள ஒரு பெண்ணின் தீர்ப்பின் விளைவாகும். தனது ஆண் மேலதிகாரியான பேராசிரியர் திலகரத்னவுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் வழக்கை நீதிமன்றத்தின் மூலம் தொடர முடிவு செய்த அபேயசிங்க.


அபேயசிங்க எதிர் திலகரத்ன

ஜூன் 2017 முதல் ஏப்ரல் 2018 வரையிலான 10 மாத காலத்திற்கு, டாக்டர் அபேயசிங்க தனது மேற்பார்வையாளரான பேராசிரியர் திலகரத்னவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். புகார் அளிக்கப்பட்ட நேரத்தில், பேராசிரியர் திலகரத்ன, அவரின் தத்துவவியல் முதுகலைப் பட்டத்திற்கான இணை மேற்பார்வையாளராகவும் இருந்தார். பேராசிரியர் திலகரத்ன, குறிப்பிட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதியாகவும், சர்வதேச வாய் மற்றும் முகத்தாடை நோயியல் வல்லுநர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். தனது இளைய சக ஊழியரான டாக்டர் அபேயசிங்கவிடம் அவர் காட்டிய நடத்தையில், இணையவழி பின்தொடர்தல், அடிக்கடி அவரைக் கட்டிப்பிடித்து கைகளைத் தடவுதல், மற்றும் அவரது எதிர்ப்புகளையும் மீறி முதுகு மற்றும் கால்களைத் தொடுதல் ஆகியவை அடங்கும். செப்டம்பர் 2018 பிற்பகுதியில், டாக்டர் அபேயசிங்கவின் தாயார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் புகார் அளித்தார். அவர் ஒரு ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை நியமித்தார். அக்குழு, அவர் மீதான 14 குற்றச்சாட்டுகளில் 10 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என்று கண்டறிந்தது. இருப்பினும், புகாரைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதன் அடிப்படையில், பல்கலைக்கழக சபை அக்குழுவின் கண்டுபிடிப்புகளை நிராகரிக்க முடிவு செய்தது. மேலும், பேராசிரியர் திலகரத்ன மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஜூலை 2020-ல் டாக்டர் அபேயசிங்கவுக்குத் தெரிவிக்கப்பட்டது.


சபையால் நீதி மறுக்கப்பட்ட பிறகு, டாக்டர் அபேயசிங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவரிடம் புகார் அளித்தார். அதற்கு அவர், தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சபைக்குப் பதில் கடிதம் எழுதினார். இருப்பினும், சபை தனது முந்தைய முடிவில் உறுதியாக நின்றதுடன், புகார்தாரருக்குத் தங்கள் முடிவைத் தெரிவிக்கவும் இல்லை. டாக்டர் அபேயசிங்க தனது புகாரின் முடிவு குறித்த தகவல்களைத் தானே தேடிப் பெற வேண்டியிருந்தது.

டாக்டர் அபேயசிங்கவின் வழக்கில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இழைக்கப்பட்ட அநீதியும், குற்றவாளியைப் பொறுப்புக்கூறலில் இருந்து காப்பாற்றுவதற்காகக் கூறப்பட்ட சாக்குப்போக்குகளும், அவர் மீது காட்டப்பட்ட அலட்சியமும் ஆச்சரியமளிப்பதாகவோ அல்லது அதிர்ச்சியூட்டுவதாகவோ இல்லை. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததாக நான் பேசிய ஏறக்குறைய ஒவ்வொரு பெண்ணும் இதே போன்ற ஒரு கதையையே கூறுகிறார்கள்.



டாக்டர் அபேயசிங்கவின் வழக்கில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் நீக்கப்பட்ட அநீதியும், குற்றவாளியின் பொறுப்புக்கூறலில் இருந்து காப்பாற்றுவதற்காகக் கூறப்பட்ட சாக்குப்போக்குகளும், அவர் மீது காட்டப்பட்ட அலட்சியமும் ஆச்சரியமளிப்பதாகவோ அல்லது அதிர்ச்சியூட்டுவதாகவோ இல்லை. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததாக நான் பேசிய ஏறக்குறைய ஒவ்வொரு பெண்ணும் இதே போன்ற ஒரு கதையையே கூறுகிறார்கள்.

பெண்கள் ஏன் நீதியைப் பெறுவதில் தாமதம் செய்கிறார்கள்

சபை போன்ற, கல்வி புகட்டும் பொறுப்புள்ள ஒரு அமைப்பு, பெண்கள் ஏன் நீதியைப் பெறுவதில் தாமதம் செய்கிறார்கள் என்பதைப் பற்றித் தனக்குத்தானே கல்வி புகட்டியிருக்க வேண்டும். பாலியல் வன்முறைக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் நீதியைப் பெறுவதைப் பற்றியே சிந்திப்பதில்லை, புகார்களைப் பதிவு செய்வதில் தாமதம் செய்வது என்பது ஒருபுறம் இருக்கட்டும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒரு நம்பகமான ஒழுங்குமுறை செயல்முறை அவரது குற்றச்சாட்டுகளை நம்பகமானவை என்று கண்டறிந்த பிறகும், அக்காலத்தில் ஆண்களை மட்டுமே கொண்டிருந்த சபை, குற்றவாளியைப் பாதுகாக்க முடிவு செய்தது. ஆழமான பெண் வெறுப்புக் கலாச்சாரம் நிலவும் இந்தச் சூழலில், எந்தவொரு பாதிக்கப்பட்டவரும் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகாரைப் பதிவு செய்ய ஏன் முன்வருவார்?

இருப்பினும், டாக்டர் அபேயசிங்க இதையெல்லாம் மீறி விடாமுயற்சியுடன் செயல்பட்டார். இலங்கைச் சட்டத்தின் கீழ் தனக்குக் கிடைத்த ஒரே தீர்வை அவர் நாடினார்: மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்து, பின்னர் உச்ச நீதிமன்றத்தில் உரிமை கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்வது. அதை அவர் மார்ச் 2021-ல் செய்தார். உரிமை கோரிக்கை மனுக்கள், குற்றம் சாட்டப்பட்ட மீறல் நிகழ்ந்த ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற மிகப்பெரிய சட்டத் தடையை எதிர்கொண்ட போதிலும் அவர் அவ்வாறு செய்தார். உண்மையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதற்காக, பேராசிரியர் திலகரத்ன, மற்றும் பல்கலைக்கழக பேரவையின் தலைவர், பல தொடர்ச்சியான பீடாதிபதிகள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் உட்பட, வழக்கில் 28 முதல் 66 வரையிலான பிரதிவாதிகளால் இந்த 'கால வரம்பு' கடுமையாக வலியுறுத்தப்பட்டது.

நீதியான மற்றும் சமமான அதிகார வரம்பு

கால வரம்பு பொருந்தும் என்று கண்டறிந்த போதிலும், இந்த வழக்கு ஒரு பெரும் சட்டத் தடையுடன் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. அரசியலமைப்பின் 126-வது பிரிவின்படி, அடிப்படை உரிமைகள் தொடர்பான மனுக்கள், பொதுவாக, குற்றம் சாட்டப்பட்ட மீறல் நிகழ்ந்த ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். பேரவையின் முடிவு 2020 ஜூலையில் டாக்டர் அபேயசிங்கவிற்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது மனு, எட்டு மாதங்களுக்கும் மேலாகக் கழித்து, 2021 மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், அத்துடன் இந்த நடவடிக்கைகளில் பெயரிடப்பட்ட பல தொடர்ச்சியான பீடாதிபதிகள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் உட்பட, 28 முதல் 66 வரையிலான பிரதிவாதிகள், இந்த நடைமுறை ஆட்சேபனையை வலுவாக வலியுறுத்தினர்.


ஒருமனதான அமர்வுக்காகத் தீர்ப்பளித்த நீதிபதி ஜனக் டி சில்வா, "தொடர்ச்சியான மீறல்கள்" தொடர்பான இலங்கை சட்ட முன்னுதாரணங்களைக் கவனமாக ஆராய்ந்து, இறுதியில் அந்த மனுவை நிலைநிறுத்த முடியாது என்று முடிவு செய்தார்.


டாக்டர் அபேயசிங்க பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு மேற்கொண்ட பயணங்கள், காலவரையறையைத் தடைசெய்யும் திறன் கொண்ட, சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு செயல்முறையாக அமையவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


2020 டிசம்பரில் மட்டுமே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் தாக்கல் செய்த புகாரும் காலவரம்பைத் தாண்டத் தவறியது, ஏனெனில் ஆணைக்குழு ஒரு விசாரணையை நடத்தியதற்கோ அல்லது தொடங்கியதற்கோ கூட எந்த ஆதாரமும் இல்லை.


கண்டம்பி எதிர் அரச மரக் கூட்டுத்தாபனம் வழக்கில் தனது முந்தைய தீர்ப்பை மேற்கோள் காட்டி, மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒரு புகார் தாக்கல் செய்யப்பட்டது என்பதை மட்டும் மனுதாரர் நிரூபிக்காமல், ஒரு உண்மையான விசாரணை தொடங்கப்பட்டது என்பதையும் நிரூபிக்க வேண்டும் என இலங்கைச் சட்டம் கோருகிறது என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.


அதன்படி, அரசியலமைப்பு காலவரம்பு நடைமுறையில் உள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


பின்னர், நீதிமன்றம் நடைமுறைத் தடையை முற்றிலுமாகத் தாண்டிப் பார்க்கும் மிகவும் அரிதான ஒரு நடவடிக்கையை எடுத்தது.


அரசியலமைப்பின் 126(4)வது சரத்து, "வழக்கில் நியாயமானதாகவும் சமமானதாகவும் அது கருதும் நிவாரணத்தை வழங்க அல்லது அத்தகைய வழிகாட்டுதல்களைச் செய்ய" உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது — இந்த விதியை இலங்கை நீதிமன்றங்கள் நீண்ட காலமாக பரந்த அளவில் விளக்கி வருகின்றன. நோபல் ரிசோர்சஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் எதிர் சியம்பலபிட்டிய (2016) வழக்கில், அப்போதைய தலைமை நீதிபதி ஸ்ரீபவன், "எந்தவொரு மீறலோ அல்லது உடனடி மீறலோ கண்டறியப்படாத சூழலிலும்கூட" நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்க இந்த விதிமுறை அனுமதிக்கிறது என்று தீர்ப்பளித்திருந்தார். நீதிபதி டி சில்வா அந்தத் தீர்ப்பை நேரடியாக மேற்கோள் காட்டி, தயக்கமின்றி அதைப் பயன்படுத்தினார்.


அவரது வாதம் குறிப்பிட்டதாகவும், நன்கு பரிசீலிக்கப்பட்டதாகவும் இருந்தது. பேராசிரியர் திலகரத்ன, முறைசார்ந்த விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகளை ஒருபோதும் எதிர்க்கவோ அல்லது ரத்து செய்யவோ முயற்சிக்கவில்லை. சட்டப்படி — மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தொடர்ச்சியான தீர்ப்புகளை மேற்கோள் காட்டி நீதிமன்றம் உறுதிப்படுத்தியபடி — ஒரு நிர்வாக உத்தரவு, நீதிமன்றம் முறையாக அவ்வாறு அறிவிக்கும் வரை செல்லாததாகவோ அல்லது பயனற்றதாகவோ ஆகது. வேறுவிதமாகக் கூறினால், குழுவின் கண்டுபிடிப்புகள், எதிர்க்கப்படாமல், முற்றிலும் செல்லுபடியாகக்கூடியவையாக, பதிவேட்டில் அப்படியே இருந்தன.


"இவை மிகவும் தீவிரமான கண்டுபிடிப்புகள்," என்று அந்தத் தீர்ப்பு கூறியது, "இவற்றை முதல் பிரதிவாதி கேள்விக்குட்படுத்த முயற்சிக்கவில்லை. சபை அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எந்த வகையிலும் அதைச் செல்லாததாகவோ அல்லது பயனற்றதாகவோ ஆக்கிவிடாது."


பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கத் தவறியதை அடுத்து, பேராசிரியரைக் கல்வித்துறையிலிருந்து இலங்கை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.

 


நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள், பிரித்தானியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.


​இச்சந்திப்பின் போது,பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தூதரக ரீதியாக எதிர்நோக்கும் பிரதான  பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.


​மேலும், பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தங்களது முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான சாதகமான சூழலை உருவாக்குமாறும், அதற்குரிய முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் அவர் இதன்போது வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.


​இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதையும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதையும் நோக்காகக் கொண்டே இந்த முக்கிய சந்திப்பு லண்டனில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment  #dccbatticaloa #JVP #sunilhandunneththi #DCCChairman #Batticaloa #CleanSriLanka

#AKD #ANURAKUMARADISSANAYAKE #PresidentAKD# #foryoupageシ #Batticaloa


விபத்து

பர்சான் எரிவாயு ஆலையில் விபத்து
கத்தார் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் உள்ளூர் எரிவாயு விநியோக ஆலையில், செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த விபத்து நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்பொழுது தீயைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களின் முழு விபரம் இன்னும் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை.

உலகில் இயற்கை எரிவாயு


முக்கிய LNG சுத்திகரிப்பு வளாகமான ராஸ் லஃப்பானில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்திற்குப் பிறகு ஆலையில் பணியாற்றிய 14 ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கத்தார் நாட்டு உள்துறை அமைச்சகம் எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த உள் வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 


www.ceylon24.comமாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள்மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்." - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

#CMVijay | #MKStalin | #HBDVijay | #HBDCMJosephVijay



மூத்த ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயானந்தமூர்த்தி அவர்கள் காலமானார்.

 


கிழக்கு மாகாண O/L பெறுபேறுகளில் கல்முனை கல்வி வலயம் முன்னிலை : 129 மாணவர்கள் 9A சித்தி பெற்று சாதனை.


நூருல் ஹுதா உமர்


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் கிழக்கு மாகாண வலய வாரியான பெறுபேறு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயம் பல்வேறு குறியீடுகளில் முன்னிலை வகித்து கல்வித் துறையில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.


கிழக்கு மாகாணத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை கல்வி வலயம் 84.5% சித்தி வீதத்துடன் முன்னணி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் கணிதம் மற்றும் தமிழ் ஆகிய இரு பாடங்களுடனும் 6 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்களின் வீதம் 75.1% ஆகப் பதிவாகியுள்ளது.


குறிப்பாக, 129 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 124 மாணவர்களுடனும், மட்டக்களப்பு கல்வி வலயம் 122 மாணவர்களுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்வி வலயமும் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. அக்கரைப்பற்று வலயத்தில் 85.4% சித்தி வீதமும், 55 மாணவர்கள் 9A சித்திகளும் பதிவாகியுள்ளன.


கிழக்கு மாகாண அளவில் மொத்தமாக 25,941 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 25,370 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். அவர்களில் 18,881 மாணவர்கள் கணிதம் அல்லது தமிழுடன் சித்தி பெற்றுள்ளதுடன், மாகாணத்தின் மொத்த சித்தி வீதம் 74.42% ஆகக் காணப்படுகிறது.


மாவட்ட அடிப்படையில் பார்க்கும்போது, அம்பாறை மாவட்டம் 77.79% சித்தி வீதத்துடன் முதலிடத்திலும், மட்டக்களப்பு மாவட்டம் 75.78% சித்தி வீதத்துடன் இரண்டாம் இடத்திலும், திருகோணமலை மாவட்டம் 66.59% சித்தி வீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.


கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையிலான கல்முனை கல்வி வலயத்தின் தொடர்ச்சியான கல்வி முன்னேற்றம், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு அர்ப்பணிப்பின் விளைவாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இந்த பெறுபேறுகள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், எதிர்வரும் ஆண்டுகளிலும் மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்யும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. பெற்று சாதனை.


நூருல் ஹுதா உமர்


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் கிழக்கு மாகாண வலய வாரியான பெறுபேறு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயம் பல்வேறு குறியீடுகளில் முன்னிலை வகித்து கல்வித் துறையில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.


கிழக்கு மாகாணத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை கல்வி வலயம் 84.5% சித்தி வீதத்துடன் முன்னணி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் கணிதம் மற்றும் தமிழ் ஆகிய இரு பாடங்களுடனும் 6 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்களின் வீதம் 75.1% ஆகப் பதிவாகியுள்ளது.


குறிப்பாக, 129 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 124 மாணவர்களுடனும், மட்டக்களப்பு கல்வி வலயம் 122 மாணவர்களுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்வி வலயமும் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. அக்கரைப்பற்று வலயத்தில் 85.4% சித்தி வீதமும், 55 மாணவர்கள் 9A சித்திகளும் பதிவாகியுள்ளன.


கிழக்கு மாகாண அளவில் மொத்தமாக 25,941 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 25,370 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். அவர்களில் 18,881 மாணவர்கள் கணிதம் அல்லது தமிழுடன் சித்தி பெற்றுள்ளதுடன், மாகாணத்தின் மொத்த சித்தி வீதம் 74.42% ஆகக் காணப்படுகிறது.


மாவட்ட அடிப்படையில் பார்க்கும்போது, அம்பாறை மாவட்டம் 77.79% சித்தி வீதத்துடன் முதலிடத்திலும், மட்டக்களப்பு மாவட்டம் 75.78% சித்தி வீதத்துடன் இரண்டாம் இடத்திலும், திருகோணமலை மாவட்டம் 66.59% சித்தி வீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.


கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் தலைமையிலான கல்முனை கல்வி வலயத்தின் தொடர்ச்சியான கல்வி முன்னேற்றம், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு அர்ப்பணிப்பின் விளைவாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இந்த பெறுபேறுகள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், எதிர்வரும் ஆண்டுகளிலும் மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்யும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

 


ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்          
 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுத்த சர்வதேச யோகா தின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இன்று (21) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.
 நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச உதவிப்பிரதேச செயலாளர்களான சுபாகர் மற்றும் பிரணவரூபன் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் அதிபர்கள் ஆலய தலைவர்கள் சமூக அமைப்பின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகள் மாணவர்களின் நடன கலைநிகழ்வுகளோடு வரவேற்க்கப்பட்டு தேசிய கொடியேற்றப்பட்டு சர்வதேச யோகா தின உறுதி மொழி வாசிக்கப்பட்டு யோகா பயிற்சி நெறி ஆரம்பமானது.
 இதில் 2000 ஆயிரம் வரையிலான மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து யோகா தின ஒழுங்குகள் தொடர்பாகவும் பாடசாலைகள் ஆலயங்கள் சமூக அமைப்புக்கள் வழங்கிய ஒத்துழைப்பு பங்களிப்பு தொடர்பிலும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் குறிப்பிட்டார்
இறுதியில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் மாவட்ட யோகா தின ஏற்பாடுகளை சிறப்பு முன்னெடுத்த பிரதேச செயலாளர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் நன்றி கூறினார்.
அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து எதிர்வரும் காலத்திலும் சிறந்த முறையில் இச்செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தரின் சேவையினை பாராட்டி பிரதேச செயலாளர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

 


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் 42 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.



குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (19) முதல் தொடராக காலை முதல் மாலை வரை  மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்தலில்   கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் தலைமையில் இந்த நடவடிக்கையில் சம்மாந்துறை பொலிஸ்  போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஏ.டி.ஆர் விஜயவர்த்தன உட்பட    பொலிஸ்  குற்றப் புலனாய்வு பிரிவு  ஊழல் ஒழிப்பு பிரிவு சுற்றாடல் பிரிவு பெண்கள் சிறுவர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் போக்குவரத்து பிரிவு அக்கரைப்பற்று உள்ளிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் பங்கேற்று தத்தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

இது தவிர சம்மாந்துறை பள்ளிவாசல் நிர்வாகத்தின் வீதி ஒழுங்கு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும்  சிலரின் சட்டவிரோத நடவடிக்கையினால் மேற்படி தொடர் விசேட திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

இதன் போது மதுபானம் அருந்தி மோட்டார் சைக்கிள் செலுத்திய  ஒருவர் உட்பட தலைக்கவசம் அணியாமை சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் மோட்டார் சைக்கிளில் மூவர் உள்ளிட்ட 3hன்கு பேர் பாதுகாப்பற்ற முறையில் பயணித்தல்  உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த மோட்டார் சைக்கிள்கள்  கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு வீதி போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு எதிராக இவ்வாறான அதிரடி சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறு வாகன ஓட்டுநர்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் மூலம்  இப்பகுதியில் தொடர்ச்சியாகப் இடம்பெறும் பல விபத்துகளையும்  உயிரிழப்புகளும் குறைப்பதுடன்   இன்றைய விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளுக்கு எதிராக மிக விரைவில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிஷாந்த பிரதீப் குமார தெரிவித்தார்

 நூருல் ஹுதா உமர்


நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான கடல் அலையின் தாக்கம் மற்றும் கடல் அரிப்பு காரணமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடல் அரிப்பு தீவிரமடைந்துள்ளதால், கரைவலை மீனவர்கள் தங்களது வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். கடற்கரைப் பகுதியில் வலைகளை இழுப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாத காரணத்தால், அவர்கள் தற்போது வீதியோரப் பகுதிகளில் வலை இழுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக கடல் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக, கரைவலை மீனவர்கள் தங்களது தோணிகளை பயன்படுத்தி சுதந்திரமாக கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். மேலும், வலைகளை கரைக்கு இழுத்துவர முடியாத நிலை அவர்களின் தொழிலையும் வருமானத்தையும் பாதித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

மீனவர்களின் இந்த நடவடிக்கையால், அப்பகுதி வீதியை பயன்படுத்தும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அன்றாடம் பயணிக்கும் வாகன ஓட்டிகள், மீன் குளிரூட்டும் லொறிகள், தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்டோர் வீதியோரத்தில் இழுக்கப்படும் வலைகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலைமை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடல் அரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நிரந்தர தீர்வொன்றை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் அரிப்பின் தாக்கத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் நிந்தவூர் கடற்கரைப் பகுதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

 


நூருல் ஹுதா உமர்


போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே ஒரு குற்றவாளியாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபராகவோ பார்ப்பதை விட, அவர்களின் முழுமையான வாழ்க்கைச் சூழலைக் கருத்தில் கொண்டு தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் தெரிவித்தார்.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இறுதியாண்டு பயிற்சி மாணவர்களான ஏ.என். அஹமட் அத்னாப், எம்.கே.எப். சனா அப்ரி மற்றும் ஆர்.எம். ஹஸ்ஸான் ஆகிய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமூகப்பணி தலையீட்டு முயற்சி வேலைத்திட்டம் தொடர்பாக உரையாற்றிய அவர், தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல் திட்டத்தின் தேசிய செயற்குழு உறுப்பினராகச் செயற்படுவதையும், அதன் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதியுடன் ஒரே மேடையில் உரையாற்றியதையும் தமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டங்களில் ஜனாதிபதி தொடர்ந்து வலியுறுத்தும் விடயம், அரச சேவைகளின் இறுதிப் பயன் பொதுமக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்பதோடு, மக்களை தனித்த பிரச்சினைகளின் அடிப்படையில் அல்லாது, அவர்களது அனைத்து சமூக, பொருளாதார, குடும்ப மற்றும் உளவியல் தேவைகளுடனும் அணுக வேண்டும் என்பதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“சமூகப் பணியில் இதனை ‘முழுமையான அணுகுமுறை’ என அழைக்கின்றோம். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவருக்கு போதைப்பொருள் பிரச்சினை மட்டுமல்லாது, பொருளாதார நெருக்கடி, குடும்ப சிக்கல்கள், சமூகத் தடைகள், தொழில் வாய்ப்பு குறைபாடுகள், ஆன்மீக மற்றும் கல்விசார் பிரச்சினைகளும் இருக்கலாம். ஆகவே ஒரு பிரச்சினையை மட்டும் தீர்ப்பதன் மூலம் அவரை முழுமையாக மாற்ற முடியாது. அவரை ஒரு முழுமையான மனிதராகக் கருதி, அவரது அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து சேவைகளை வழங்க வேண்டும்” என அவர் விளக்கமளித்தார்.

முன்னைய பல அரசாங்கத் திட்டங்களில் சமூகப் பணியாளர்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் சமூகப் பணியாளர்கள், உளவளத் துணையாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களை இணைத்து சமூக மற்றும் உளவியல் தலையீடுகளை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்க விடயமாகும் என்றார்.

மேலும், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் சிறப்பம்சமாக, மக்களின் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களது பார்வையில் இருந்து பிரச்சினைகளை அணுகும் பண்பை அவர் பாராட்டினார். இம்முறை முன்னெடுக்கப்படும் திட்டம் ஒரு முன்னோடி (Pilot Project) முயற்சி எனக் குறிப்பிட்ட ரஷாத், அதன் பெறுபேறுகள் மற்றும் அனுபவங்களை முறையாக ஆவணப்படுத்தி, தேசிய மட்டத்தில் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதனுடன் தொடர்புபடுத்தி, 2017 ஆம் ஆண்டு சம்மாந்துறையில் தாம் முன்னெடுத்த “சந்தோஷமான குடும்பம்” திட்டத்தின் கீழ் 49 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் அறிக்கை அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் அதே கருத்தாக்கம் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சமூகப் பணி தலையீட்டு முயற்சியும் எதிர்காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு பயனளிக்கும் தேசியத் திட்டமாக வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்ட அவர், மாணவர்களின் ஒத்துழைப்புடன் அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

“பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பிரச்சினைகளற்ற வாழ்க்கையை வாழக்கூடியவர்களாகவும் மாற வேண்டும். அவர்களது வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். அரச சேவைகள் மக்களின் காலடிக்கே சென்று சேர வேண்டும். இதுவே எங்களது இறுதி நோக்கம். அந்த இலக்கை அடைவதற்காகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது” என எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் மேலும் தெரிவித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.