Showing posts with label Slider. Show all posts

 (வி.ரி. சகாதேவராஜா)


 இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும்  “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான கம்பன் விழா
 மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில்,  எதிர்வரும் மார்ச் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வை கதிரவன் கலைக் கழக தலைவர் த. இன்பராசா தலைமையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போபால் கம்பன் கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகள் இடம்பெறுகின்றன.

காலை அமர்வு “அயோத்தி அரங்கு” எனப் பெயரிடப்பட்டு, காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். தொடர்ந்து, மாலை அமர்வு “இராவணேஸ்வரர் அரங்கு” எனப் பெயரிடப்பட்டு, பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

தமிழ் இலக்கிய மேதை கம்பனைப் போற்றும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், புகழ் பாடல்களும் இடம்பெறவுள்ளன.
 “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்விற்கு இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

+94759175981 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்று கதிரவன் இன்பராசா தெரிவித்தார்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நாளை (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், தெய்வீக கானங்கள் இறுவெட்டு வெளியீடு இடம்பெறவிருக்கின்றது.

ஆலயத்தலைவர் பிரபல தமிழாசான் வே.செவ்வேட்குமரன் முன்னிலையில்,  இறுவெட்டு நெறியாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இவ் இறுவெட்டு வெளியீடு இடம்பெறவிருக்கின்றது.

காரைதீவு தெய்வீக கான சபையின் ஸ்தாபகர் விபுலமணி இ.கோபாலசிங்கம் தயாரித்த 24 சிவ கானங்கள் அடங்கிய இறுவெட்டு நாளை பகல் 12 மணிக்கு ஆலய சந்நிதானத்தில் வெளியீடு செய்யப்படும்.



மோட்டர் சைக்கிள் ஒன்று  கார் மீது மோதி இன்றைய தினம் விபத்துக்குள்ளானது.இதில் மோட் பார் வாகனச் சாரதி காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்

 


(நூருல் ஹுதா உமர்)

அக்கரைப்பற்றில் நடைபெற்ற நோன்புப்பெருநாள் தொழுகையும், பெருநாள் குத்பாவும் (நூருல் ஹுதா உமர்)

 

உலகலாவிய முஸ்லிம்கள் அனைவருக்கும், புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!

நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) என்பது ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று முடித்த பின், ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய இஸ்லாமியப் பண்டிகை ஆகும். இது இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், ஏழைகளுக்கு உணவளித்து மகிழும் (சதக்கத்துல் ஃபித்ர்) ஈகைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. 2026-ல் மார்ச் 21 சனிக்கிழமை கொண்டாடப்பட




 


வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு இரண்டரை வயது குழந்தையுடன் நேற்று (19) சென்று காணாமல்போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தும் குழந்தை வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில் இருந்தும் உயிருக்கு போராடிய நிலையில் உயிருடன் இன்று (20) மீட்கப்பட்டதுடன் அந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது.


இது பற்றி தெரியவருவதாவது,


வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் அவரது இரண்டரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து எடுப்பதற்காக நேற்று காலையில் வீட்டில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்ததுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.


இந்நிலையில் இன்று காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் மாட்டுபட்டியில் பால் எடுப்பதற்காக சிலர் சென்று கொண்டிருந்தபோது அப் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.


இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் கிணற்றில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதாக அப் பெண் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.


இதேவேளை குறித்த குழந்தை கொத்தியாவலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரம் கொண்ட வயல் பகுதியில் கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.


குழந்தை மீட்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து தாய் மீட்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  


இதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற அனுமதியை பெற்று தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்த அழுகிய நிலையில் இருந்த சுமார் 20 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டு பிரேத பரிசோதணைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்.


இதேவேளை இச் சம்பவத்தில் உயிர் தப்பிய தாய் தான் சம்பவதினம் மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்துக்கொண்டு ஈட்டு கடையில் 34 ஆயிரம் ரூபாவுக்கு அடைவில் இருந்த தங்க ஆபரணம் ஒன்றை மீட்டெடுத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறி வவுணதீவு கொத்தியாவலையில் உள்ள தனது வீட்டிற்கு பிரயாணித்து தாண்டியடி பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு நோக்கி சென்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


அதேவேளை இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அவர் பெரும் அதிர்சியடைந்து பயந்த நிலையில் இருந்து வருவதால் அவரிடம் தொடர்ந்து தற்போது விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இதேவேளை குறித்த இளம் தாய் கடத்தப்பட்டாரா? கொள்ளையர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனரா? தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா? என பல கோணத்தில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, பொலிஸார், மாவட்ட புலனாய்வு பிரிவினர், விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


(கனகராசா சரவணன்)


 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்        

 அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்ல ஸ்தாபகர் தின நிகழ்வுகளும் இந்தியாவில் இருந்து வருகைதந்த வளவாளர்களையும் வள்ளல்களையும் வரவேற்கும் நிகழ்வும் அறநெறி ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் (19) இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் திருச்சி உதயா உணவுகள் பதப்படுத்தல் உற்பத்தி பயிற்சியாளர் எஸ்.பொன் செல்வி சரவணன் தொழில் ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் எம்.ஞானசேகரன் சமூக சேவகர் எம்.பி.பழனிச்சாமி திருமதி கண்ணம்மாள் சண்முகம் சட்டத்தரணி மற்றும் ரோட்டறி கழகத்தின் செயலாளர் எப்.டபிளியு.பிறங்கிளின் விஜயகுமார் பணியகம் சார்ந்த தரச்சான்று உத்தியோகத்தர் சதீஸ்பாபு உள்ளிட்ட பிரதேச சபை தவிசாளர் தர்மதாச அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜி என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபகராக இருந்து வழிநடத்திவரும் த.கயிலாயபிள்ளை அவர்களை முன்னிறுத்தி ஸ்தாபகர் தினமாக மார்ச் மாதம் 17ஆம் திகதியாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் பின்னராக இந்தியாவில் இருந்து வருகை தந்த வளவாளர்களும்; வள்ளல்களும் இணைந்து இல்ல வளர்ச்சிக்காக உதவி செய்வதாக உறுதி அளித்ததோடு பிரதேச உற்பத்தியாளர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முன்வருவதாகவும் கூறினர்.
இறுதியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சேவை செய்யும் அறநெறி ஆசிரியர்கள் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்து இளைஞர் மன்றத்தின் நிதியினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

 


நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பொது மைதானத்தில் இன்று (20) நோன்பு பெருநாள் தொழுகை ஆன்மீக உன்னதத்துடனும் சிறப்பாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருமளவிலான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு, நோன்பு பெருநாளை முன்னிட்டு ஒற்றுமை, சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தொழுகையில் ஈடுபட்டனர்.

மேலும், சமூக நல்லிணக்கத்தையும் மனிதநேய பண்புகளையும் பேணிக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்நிகழ்வில் பெருநாள் உரை நிகழ்த்தப்பட்டன.

நிகழ்வின் இறுதியில், நாட்டின் அமைதி, முன்னேற்றம் மற்றும் அனைத்து மக்களினதும் நலனுக்காக சிறப்பு துஆக்கள் இடம்பெற்றன.

 


நூருல் ஹுதா உமர்


கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட இணைந்த சேவை உத்தியோகத்தர்கள் 2026 ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கட்டளைக்கமைய இதுவரை விடுவிக்கப்படாத உத்தியோகத்தர்களை 20 ந் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்


இது தொடர்பாக (17.03.2026) ந் திகதி ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாகாண அமைச்சர்களின்  செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களின் மாதாந்த கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார்


இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,


ஆளுநரின் உத்தரவின்படி, 03.03.2026 முதல் இடமாற்ற உத்தரவுகளில் உள்ள அனைத்து அலுவலர்கள்/பணியாளர்களையும் வரும் வெள்ளிக்கிழமை, 20.03.2026-க்குள் விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த உத்தரவை மீறினால்,  இலங்கை அரசாங்க தாசன விதி கோவை மற்றும் கிழக்கு மாகாண அரச ஒழுங்கு விதி (E.Code) விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மேலும் வலியுறுத்தி உள்ளதாக  ஆளுநரின் செயலாளர் பி. வாகேஷன், அறிவித்துள்ளார்.

 


உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக, காத்தான்குடி பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் கடற்கரை திடலில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த திடல் தொழுகையில், பெருமளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக பங்கேற்று ஒன்றுபட்ட சமுதாய உணர்வுடன் தொழுகையை நிறைவேற்றினர்.

பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) நடத்தி வைத்தார். அவர் தனது உரையில் ஒற்றுமை, அமைதி மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வு அமைதியான சூழலில் சிறப்பாக நடைபெற்றதுடன், மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


ஈகைத் திருநாள் தொழுகையில் இஸ்லாமிய மக்களை சந்திந்த அவுஸ்திரேலிய பிரதமர்! 


2026, மார்ச் 20, வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற லகெம்பா பள்ளிவாசலுக்குநேரில் சென்று இஸ்லாமியப் பெருமக்களுடன் ஈகைத் திருநாளை (Eid al-Fitr) உற்சாகமாகக் கொண்டாடினார்.


அங்கு திரண்டிருந்த மக்களுடன் கைகுலுக்கி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட அவர், சமூக ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

2026, மார்ச் 20, வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற லகெம்பா பள்ளிவாசலுக்குநேரில் சென்று இஸ்லாமியப் பெருமக்களுடன் ஈகைத் திருநாளை (Eid al-Fitr) உற்சாகமாகக் கொண்டாடினார்.


அங்கு திரண்டிருந்த மக்களுடன் கைகுலுக்கி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட அவர், சமூக ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

 


(Rep/Yusuf Ahamed)
புனித ரமழான் மாதத்தில் உபவாசம்  இருப்பவர்கள, நோன்பு திறப்பதற்காக, அனைத்துப் பள்ளிவாயல்களிலும், நோன்புக் கஞ்சி விநியோகம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. 

குறித்த கஞ்சியினைப் பெற மாற்றுமத சகோதரர்களும் வருகின்றார்கள். அவர்களுக்கும், கஞ்சி இலசவமாக வழங்க்கப்படுகின்றது. 

 


இலங்கையில் நோன்பை முப்பதாக பூர்த்தி செய்வோம்.! இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (21.03.2026) சனிக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

 


அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், பொலிஸார் அவரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 


தடுப்புக்காவலில் இருந்த வசந்த முதலிகே சார்பில் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் உடன்பாட்டுடன், உயர்நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா இந்தத் தீர்ப்பை வழங்கினார். 


2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, அதன் அப்போதைய ஒருங்கிணைப்பாளரான வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.


இதனை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


நீண்ட விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள் குழாம், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்குத் தேவையான நியாயமான சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விடயங்களை பிரதிவாதிகள் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டியது. 


அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க பிரதிவாதிகள் தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


கீல்ஸ் நிறுவனத்தில் மின்சார சார்ஜிங் மையங்கள் உள்ளன. இது பல மாதங்களுக்கு முன்பே நிறுவப்பட்டிருந்தாலும், எந்த வாகனமும் அதில் இணைக்கப்பட்டிருப்பதை நான் பார்த்ததில்லை. முதல் முறையாக, நான் ஒரு வாகனத்தைப் பார்த்தேன், அது சுவாரஸ்யமாக இருக்கிறது. நல்ல முயற்சி. அது நிறுத்தப்பட்ட விதத்தைப் பொருட்படுத்த வேண்டாம்.

 இரான் மற்றும் கத்தாரில் உள்ள எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தாம் டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் அமீருடன் பேசியதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தெரிவித்தார்.


" எரிசக்தி மற்றும் நீர் விநியோக நிலையங்கள் போன்ற சிவிலியன் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவது நமது பொதுவான நலன்களுக்கு உகந்தது.


பொதுமக்கள் மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகளின் பாதுகாப்பும், அதே போல் எரிசக்தி விநியோகமும் ராணுவ மோதலில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்" என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.


வளைகுடா நாடுகளின் உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்

ஃபிராங்க் கார்ட்னர், பாதுகாப்புச் செய்தியாளர், தோஹா, கத்தார்


ராஸ் லஃபான் கத்தாரின் எரிவாயு உள்கட்டமைப்பின் மணிமகுடமாகத் திகழ்கிறது, எனவே இயல்பாகவே அந்நாட்டு அரசாங்கம் மிகுந்த கோபத்தில் உள்ளது.


சுமார் 18 நாட்களுக்கு முன்பு போர் தொடங்கும் வரை, கத்தாருக்கும் அதன் வளைகுடா அண்டை நாடான இஸ்லாமிய குடியரசுக்கும் (இரான்) இடையிலான உறவுகள் பொதுவாக நல்லுறவாகவே இருந்தன.


இரு நாடுகளும் சவுத் பார்ஸ் எரிவாயு வயலைப் பகிர்ந்துகொள்கின்றன, இது இந்த சிறிய வளைகுடா நாட்டுக்கு முன்னெப்போதும் இல்லாத பொருளாதார செழிப்பைக் கொண்டு வந்துள்ளது.


கத்தார் அமைச்சர்கள் தெஹ்ரானுக்குச் சென்றுள்ளனர் மற்றும் போரை எதிர்த்த நாடுகளில் கத்தாரும் ஒன்றாக இருந்துள்ளது.


இரான் இப்போது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் வெடிக்கும் ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. அரபு வளைகுடா நாடுகளுக்கும் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையிலான நம்பிக்கை எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.


வளர்ந்து வரும் மோதல்

இரான் போர் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகின்றன, இதுவரை இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம்,EPA-EFE/REX/Shutterstock

படக்குறிப்பு,இரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் மரணத்தை புதன்கிழமை இரான் அரசு உறுதிப்படுத்தியது (கோப்புப் படம்).

இரான் போர் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகின்றன, இதுவரை இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


இரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை அன்று தெரிவித்தார். முன்னதாக, பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லரிஜானியும் கொல்லப்பட்டிருந்தார்.


இரானிய மூத்த அதிகாரிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கையைத் தாங்கள் மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இஸ்மாயில் கதிப்பின் கொலையை ஒரு "கோழைத்தனமான கொலை" என்று இரானிய அதிபர் பெசெஷ்கியன் வர்ணித்துள்ளார், அதே நேரத்தில் நாட்டின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி பழிவாங்கப்போவதாக சபதம் செய்துள்ளார்.


ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, மொஜ்தபா காமனெயி ஒரு எழுத்துப்பூர்வ செய்தியில், "சிந்தப்பட்ட ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு" என்று கூறியுள்ளார்.


போரின் ஆரம்பகட்டத் தாக்குதல்களில் தனது தந்தை அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றிய மொஜ்தபா காமனெயி, இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை.


கோம் நகரில் உள்ள ஒரு மதத் தலத்தில் லரிஜானி அடக்கம் செய்யப்படுவார் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


"எரிவாயு வயல் முழுவதையும் தகர்த்துவிடுவோம்" - இரானை எச்சரித்த அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் பட மூலாதாரம்,EPA/ Shutterstock

புதன்கிழமை இரவு இரானின் சவுத் பராஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.


அந்த தாக்குதலுக்கு எதிர்வினையாக இரான் கத்தாரின் ராஸ் லஃபான் எனும் தொழில் துறை பகுதி மீது தாக்குதல் நடத்தியது. அப்பகுதியில் தான் உலகின் மிகப்பெரிய எல்என்ஜி எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.


டிரம்ப் தன்னுடைய பதிவில் இஸ்ரேலிய தாக்குதல் குறித்து "அமெரிக்காவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது" என்றும் இரான் மீண்டும் கத்தாரை தாக்கினால் நிலைமை தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளார்.


"மத்திய கிழக்கில் நிகழ்ந்தவற்றின் மீதான கோபத்தினால்," இஸ்ரேல் "வன்முறையுடன் தாக்கியது" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.


"இந்த குறிப்பிட்ட தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை; மேலும், கத்தார் நாடு இத்தாக்குதலில் எந்த வகையிலும், எவ்வித வடிவிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை — இத்தாக்குதல் நிகழப்போகிறது என்பது பற்றிய எவ்விதத் தகவலும் அந்நாட்டுக்குத் தெரிந்திருக்கவும் இல்லை."


ஆனால் கத்தாரின் ராஸ் லஃபான் மீதான அதன் பதிலடித் தாக்குதல்கள் "நியாயமற்ற முறையிலும் அநீதியாகவும்" மேற்கொள்ளப்பட்டன என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



"இரான் விவேகமற்ற முறையில் வேறொரு நிரபராதி நாட்டின் மீது (கத்தார்) தாக்குதல் நடத்தத் தீர்மானிக்காத வரையில்," இஸ்ரேல் இரானின் 'சவுத் பார்ஸ்' (South Pars) எரிவாயு வயல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இரான் மீண்டும் கத்தார் மீது தாக்குதல் நடத்தினால், "இரான் இதற்கு முன் ஒருபோதும் கண்டிராத அளவிலான வலிமையுடனும் ஆற்றலுடனும், சவுத் பார்ஸ் எரிவாயு வயல் முழுவதையும் அமெரிக்கா மிகக் கடுமையாகத் தகர்த்துவிடும்" என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.


இரானுக்கான "நீண்டகால விளைவுகள்" காரணமாக, "இந்த அளவிலான வன்முறை மற்றும் அழிவை" அங்கீகரிக்க தான் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ள அவர், "ஆனால், கத்தாரின் எல்என்ஜி எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் தாக்கப்பட்டால், அவ்வாறு செய்ய நான் தயங்கமாட்டேன்." என்றார்.

 


பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் போகாமலித்த பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த விபத்தில் எவருக்கும் உயிர் சேதமோ அல்லது கடுமையான காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கின்றன.


விபத்துக்குள்ளான வாகனத்தை மீண்டும் நிலைநிறுத்தும் பணிகளில் மின்சார சபை ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


ராமு தனராஜா 

 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் கட்டார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு (18) விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.


இதன்போது ஜனாதிபதி, கட்டார் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்ததுடன், குறிப்பாக அந்நாட்டில் வசிக்கும் 150,000 இற்கும் அதிகமான இலங்கையர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்தினார். தற்போதைய பிராந்திய நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, கட்டார் நாட்டுக்கு இலங்கையின் ஆதரவு கிடைக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


தற்போதைய நிலைமையை விளக்கிய கட்டார் அமீர், இலங்கையர்கள் உட்பட அந்நாட்டில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதாக ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்.


ஹோர்முஸ் சமுத்திர சந்தி போன்ற முக்கிய கடல்வழிப் பாதைகளுக்கு ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து இரு தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன், அதன் மூலம் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் வலுசக்தி சந்தைகளில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்தும் கலந்துரையாடினர்.


அதிகரித்து வரும் வலுசக்தி செலவுகளால் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மீது ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைப்பதற்கு, சர்வதேச உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.


உலகளாவிய வலுசக்தித் துறையில் கட்டார் நாடு எப்போதும் நம்பகமான பங்காளியாக செயற்படும் என்றும், சவால்கள் இருந்தபோதிலும் தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தைப் பேணுவதில் உறுதியாக உள்ளது என்றும் கட்டார் அமீர் மேலும் தெரிவித்தார்.


பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக, பதற்றமான சூழ்நிலையை விரைவாகத் தணிக்க வேண்டும் என்றும், போர் நடவடிக்கைகளுக்குப் பதிலாக பிராந்தியப் பேச்சுவார்த்தைகள் மூலம் இராஜதந்திரத் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் மேலும் வலியுறுத்தினர்.

 


ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் இனி தாக்குதல் நடத்தாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு (LNG) வசதிகளின் ஒரு பகுதியைத் தாக்கி ஈரான் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலியத் தாக்குதல் குறித்து வாஷிங்டனுக்கு முன்னரே எந்தத் தகவலும் தெரியாது என்றும், இந்தத் தாக்குதல் பற்றி கத்தாருக்கு "எந்தத் தகவலும் தெரியாது" என்றும் டிரம்ப் வலியுறுத்துகிறார்.

 


(காரையூர் வேதசகா )


கல்முனை ஆதார  வைத்தியசாலையில் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம் (17) செவ்வாய்க்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விமரிசையாக நடைபெற்றது.

வைத்தியசாலையின் ஊழியர் சமூக நலன்புரிச் சங்கம் இந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

 இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, ஓய்வு நிலை உதவிக் கல்வி பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமாகிய வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா   கலந்து சிறப்பித்தார்.


 இந்நிகழ்வின் போது தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, கல்வி பொது தராதர சாதாரண தரத்தில் சித்தி அடைந்த, பல்கலைக்கழகத்துக்கு தெரிவான,  வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த காலங்களில் இவ் வைத்தியசாலை முன்னேற்றத்தில் பங்களித்தமைக்காக,  பிரதம அதிதியான வி.ரி.சகாதேவராஜா,  மேடையில் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கு.சுகுணன் மற்றும் பொருளாளர் ரி.மதுரா ஆகியோரால் பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 நிகழ்வின்போது 120 மாணவர்களுக்கு நலன்புரி சங்கம்  ஏழு லட்சம் ரூபாய் செலவில் பரிசுகளையும் கௌரவிப்பையும் வழங்கியிருந்தது.

நிகழ்வில் வைத்தியசாலை கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, நிருவாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள், தாதியபரிபாலகர் என்.சசிதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


நலன்புரி சங்க செயலாளர் எஸ்.மனோஜினி பொருளாளர் ரி.மதுரா ஆகியோர் நெறிப்படுத்திய இந் நிகழ்வை ,சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தர் ப. செல்வகுமார் தொகுத்து வழங்கினார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.