Showing posts with label India. Show all posts

 


இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.

மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும்.

யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்?

இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.

 


மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 26 பேர் உயிரிழப்பு... 20 பேர் கவலைக்கிடம்...

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிறன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் பின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தற்போது 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் போடாட் மற்றும் அதன் அருகாமை மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மதுபானத்தை தயாரிக்க தேவையான ரசாயனத்தை கொடுத்தவர், மதுபானத்தை விற்றவர் ஆகியோர் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர்.

    குஜராத்

    பட மூலாதாரம்,SACHIN PITHHVA

    இந்த சம்பவத்தில் மாநிலத்தில், இரு மாவட்டங்களில் உள்ளவர்கள் ஈடுபட்டதாக குஜராத்தின் உள்துறை அமைச்சர் ராஜ் குமார் ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார். மேலும்,"இந்த சம்பவத்தை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

    "23க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் கள்ளச்சாராயத்தை குடித்து மேலும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உயிரிழந்தவர்களுக்கு நான் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்." என டெல்லியின் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் மதுபானம் விற்பனை செய்வது மற்றும் அருந்துவது இரண்டுமே சட்டவிரோதமானது. அரசால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மதுபானம் அருந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உம்பான் புயலால் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் குறைந்தது 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இந்த புயல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    உம்பான் புயலால் கடற்கரை பகுதியில் பெரும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. மற்றும் அது தற்போது வலுவிழந்து பூட்டான் நோக்கி சென்றது.

    கொல்கத்தாவில் பலத்த காற்று வீசியதில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சரிந்தன மேலும் மின் கம்ப இணைப்புகள் மற்றும் டெலிஃபோன் தொடர்புகளும் அறுந்து விழுந்தன. வீட்டின் கூரைகளும் அடித்துச் சென்றன.

    கொல்கத்தாவின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. 14 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொல்கத்தாவில் மின்சாரம் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    1999ஆம் ஆண்டுக்கு பிறகு வங்கக் கடலில் உருவான வலுவான புயலாக இது உள்ளது.

    கோப்புப்படம்படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR

    கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போடப்பட்ட தடைகளால் அவசரகால பணிகளும், மீட்புப் பணிகளும் தடைப்பட்டுள்ளன. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்களை கும்பலாக அப்புறப்படுத்துவதும், முகாம்களில் கூட்டமாக தங்க வைப்பதும் கடினமாக உள்ளது.

    மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகள், ஒடிஷா, வங்கதேசத்தின் தென் மேற்கு பகுதியில் மணிக்கு 185 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

    வங்கதேசத்தில் 12 பேரும், மேற்கு வங்கத்தில் 72 பேரும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    மேற்க வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் கோவிட் 19 -ஐ காட்டிலும் இந்த புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்தார்.

    கோப்புப்படம்படத்தின் காப்புரிமைSHAKEEL ABDIN

    "பல பகுதிகள் மோசமடைந்துள்ளன," என பிடிஐ செய்தி முகமையிடன் மம்தா தெரிவித்துள்ளார்.

    மேலும்,"இன்று போர் போன்றதொரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பிபிசி பெங்காலி சேவையின் அமிதாபா பட்டாசலி, "கொல்கத்தா மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் ஒரு நாள் முழுக்க மின்சாரம் இல்லை. புயல் மோசமாக தாக்கிய பகுதிகளில் அலைப்பேசி நெட்வொர்க்குகளும் செயல்படவில்லை," என தெரிவித்துள்ளார்.

    கோப்புப்படம்

    கொல்கத்தாவில் மின்கம்பங்கள் வெடிப்பது போன்ற விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

    வெள்ளம் சூழ்ந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்கு கம்பிகள் அடியோடு சரிந்து விழுவது போன்ற வீடியோக்கள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. மேலும் மரங்களுக்கு அடியில் பல வாகனங்கள் நொறுங்கியுள்ளன.

    "மரங்கள் சரிந்தன, மின்சாரம் நின்றுவிட்டது, மின் கம்பங்கள் சரிந்தன, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன, இணையதள சேவை நின்றுவிட்டது. குழந்தைகள் அலறினர்," என ஷமிக் பாக் என்பவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

     

    "எனது வீட்டின் அனைத்து கதவு மற்றும் ஜன்னல்கள் மூடியிருந்தாலும், காற்றின் வேகத்தால் ஜன்னல் கதவுகள் வீரல்விட்டன. 45 நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது," என்கிறார் அவர்.

    இந்த புயல் தாக்கியபோது பலர் தங்களின் வீடுகளில் இருந்தனர். மேலும் கொல்கத்தா உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    2007ஆம் ஆண்டு 3500 பேரை பலிகொண்ட மிக சக்திவாந்த புயலுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த புயல் இதுவாக இருக்கலாம் என வங்கதேச அதிகாரிகள் நம்புகின்றனர்.

    யுத்தம் காரணமாக இந்திய அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களை மீள்குடியேற்றுவதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசு அதிக கரிசணையுடன் செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

    இந்தியாவில் நடைபெறும் “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இஸ்லாமிய சமுதாயம் நிகழ்த்தும் நினைவேந்தல்” நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (26) சென்னை சென்றடைந்தார். 

    அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு சென்னை விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடைய நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மற்றும் அரசியல் பிரமுகர்களினால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டது. 

    அதன்பின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

    ஊடகவியலாளர்கள் மத்தியில் அமைச்சர் மேலும் பதிலளிக்கையில் கூறியதாவது, தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையிலுள்ள இழுபறி நிலைக்கு தீர்வுகாணவேண்டும். இதற்காக இரு நாடுகளின் மீனவ சங்கங்கள் உள்ளடங்கலாக வெளியுறவு அமைச்சு மட்டத்திலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    இந்தக் குழுக்களின் சிபார்சுகளில் நாங்கள் தீவிர கரிசணை செலுத்திவருகிறோம். இலங்கை, இந்திய நாடுகளின் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையிலும் சுமூகமானதொரு தீர்வை நாங்கள் மேற்கொள்வோம் என்றார். 

    கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மாலை 4 மணிக்கு சென்னை, வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் நடைபெறவுள்ளது. இந்திய முஸ்லிம் யூனியன் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பல இந்திய முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். 

    இந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

    ரதமர் ரணில் விக்ரமசிங்க தனது சுற்றுப்பயணத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார்.

    மீடூ(me too) என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக பாடகர் சின்மயி வெளியிட்ட தகவல்களை அடுத்து, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் நீதிமன்றத்தில் தன் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
    வைரமுத்துவின் அதிகாரப்பூர்வ அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் பேசும் அவர், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பது தொடர்பாக ஒரு வார காலமாக வழக்கறிஞர்கள் மற்றும் அறிவுலக ஆன்றோர்களோடும் ஆலோசித்து தனது பதிலை தற்போது வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
    ட்விட்டர் வலைதளத்தில் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்றும் முற்றிலும் உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறியுள்ள வைரமுத்து, ''அந்த குற்றச்சாட்டுகள் உண்மையானவையாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடரலாம். அதை சந்திக்க காத்திருக்கிறேன். அசைக்கமுடியாத ஆதாரங்களை தொகுத்து, திரட்டி வைத்திருக்கிறேன்,''என்று கூறியுள்ளார்.
    காணொளியில் சின்மயி உள்ளிட்ட யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசியுள்ள வைரமுத்து, '' நான் நல்லவனா, கெட்டவனா என்று யாரும் இப்போது முடிவு செய்யவேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும், நீதிக்கு தலைவணங்குகிறேன்,''என்று தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது.

    அதன்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையை ஏற்று ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். 

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்றுடன் ஓய்வு  பெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆவார். இவர் அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி வரை தலைமை நீதிபதியாக பணியாற்றுவார். 

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகாய் கடந்த 1978-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் நிரந்தர நீதிபதியாக கடந்த 2001-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு தலைமை நீதிபதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பின்னர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. #CJI #JusticeRanjanGogoi #46thChiefJusticeOfIndia

    கேராளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    தற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
    மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று, வெள்ளிக்கிழமை, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
    நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் இந்த அமர்வில் அங்கம் வகித்தனர்.
    பழக்க வழக்கங்களும் நடைமுறையும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டுமென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
    சபரிமலைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
    சபரிமலை கோயில் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் சொந்தமான கோயில் இல்லை என்பதால் பழைய வழக்கங்களையே பின்பற்ற முடியாது என்று நீதிபதி நாரிமன் தன் தீர்ப்பில் கூறியுள்ளார். பிறப்பின் அடிப்படையில் வழிபாட்டு உரிமையை மறுக்க முடியாது என்றும் பெண்களை நுழைய அனுமதி மறுக்கும் வழக்கம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    "அனைவருக்கும் சம உரிமை உண்டு. சில ஆண்களின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் விழுமியங்களை முடிவு செய்ய முடியாது. பெண்களால் கோயிலுக்கு விரதம் இருக்க முடியாது என்பதால் அவர்களின் அனுமதியை மறுப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது," என்று நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
    "இந்த விதிமுறையே இழிவானது. மாதவிடாயை காரணம் காட்டி அனுமதி மறுப்பது பெண்களின் தனிப்பட்ட கண்ணியத்துக்கு எதிரானது. இதுவும் ஒரு வகையான தீண்டாமைதான்," என்று சந்திரசூட் கூறினார்.
    இந்த அமர்வில் அங்கம் வகித்த பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா, "மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஏனெனில், பிற மத வழிபாட்டு இடங்களிலும் இது பெரிய தாக்கத்தை உண்டாக்கும்," என்று மாறுபட்ட, சிறுபான்மை தீர்ப்பை அளித்துள்ளார்.
    "பகுத்தறிவுக்கு உற்பட்டதோ இல்லையோ, எல்லா மக்களும் தங்கள் நம்பிக்கையை பின்பற்ற மதசார்பற்ற ஜனநாயகத்தில் இடம் உண்டு. அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. சம உரிமைக் கோட்பாடு வழிபாட்டு உரிமையை மீறும் வகையில் இருக்கக் கூடாது," என்று இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
    படத்தின் காப்புரிமைGETTY IMAGES
    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு தாங்கள் ஆதரவாக உள்ளதாகவே கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கூறியிருந்தது. பெண்களுக்கோ பொது மக்களுக்கோ எதிரான பாரபட்சத்தை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை என்றும் கேரள அரசு தெரிவித்திருந்தது.
    அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமையை அரசியலைப்புச் சட்டம் வழங்குவதாகவும், பெண்களின் ஒரு பகுதியினரை மட்டும் அனுமதிக்காமல் இருப்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் மத வழக்கங்களும், நடைமுறைகளும் கடந்த 50 ஆண்டுகளில் மாறியுள்ளதால், அதற்கேற்ப அரசியலமைப்பும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாரபட்சமின்றி சம உரிமைகளை வழங்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கேரளா தரப்பில் கூறப்பட்டிருந்தது.
    சபரிமலைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
    Image caption50 வயதுக்கும் குறைவான பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் சென்றதாக கூறப்பட்ட விவகாரங்களால் கடந்த காலங்களில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
    இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு எதிராக இந்தத் தடை உள்ளது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.


    பெண்கள் கோயிலுக்குள் நுழைய எதிராக வாதிட்டவர்கள் இது நீண்ட காலமாக உள்ள நடைமுறை என்பதால், காலம் காலமாக தொடரும் மத நம்பிக்கை எனும் அடிப்படியில் அரசியலைப்பின் பிரிவு 25(1)இன் கீழ் மாற்ற முடியாது என்று கூறியிருந்தனர்.

    இந்திய பாராளுமன்றத்தின் விஷேட அழைப்பின் பெயரில் இந்தியாவிற்கு சென்றுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்துள்ளனர். 

    இதன்போது இந்திய பிரதமர் மற்றும் இலங்கை சபாநாயகருக்கு இடையில் சுமார் 45 நிமிடம் நீண்ட இரு தரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

    எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட நிலமையின் ​போதும் இலங்கை தூதுக்குழுவிற்காக நேரம் ஒதுக்கியமை தொடர்பில் இந்திய ஊடகங்கள் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

    இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக, மனோ கணேசன் ஆகியோருடன் டக்லஸ் தேவானந்தா, விஜித ஹேரத், பாராளுமன்ற பொது செயலாளர் தம்மிக தசாநாயக்க ஆகியோரும் இவ்வாறு இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

    ராஜிவ் காந்தி கொலையில் சம்மந்தப்பட்ட பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசு.


    நடிகர் கோவை செந்தில் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. உடல்நல குறைவால் இன்று காலை கோவை வடவள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில் கோவை செந்தில் காலமானார். 



    இலங்கையில் இருந்து அகதியாக இந்தியவிற்கு சென்ற கலானி என்பவருக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் பிறந்துள்ளன. 

    ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் விஜயகுமார் அதே பகுதியை சேர்ந்த கலானி என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 

    இந்தநிலையில் கர்ப்பம் தரித்த கலானியை விஜயகுமார் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். 

    அங்கு கலானிக்கு அழகான 4 குழந்தைகள் பிறந்தன. 

    இதுகுறித்து கலானியின் உறவினர் ஒருவர் கூறும்போது, “கலானிக்கு 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் பிறந்துள்ளன. எங்களது உறவினர்களில் சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளன. ஆனால் 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது”, என்றார். 

    (மாலைமலர்)


    #SarithaSBalan
    #KerelaFloods  
    அண்மையில், இந்தியாவில் கேரள மாநிலத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அதில் பலர் உயிர் நீத்தனர்,சிலர் உடமைகளையும் இழந்தனர். சிலர் வெள்ளத்தில் அடிபட்டுப் போயிருந்து பின்பு மீட்கப்பட்டனர். ஆனால், கடந்த 15ம் திகதி முதல்,இடுக்கிப் பிரதேசத்தில், காணாமல் போன முஹம்மத் மம்முட்டி, இவரது மனைவி அஸ்மா,இவர்களது புதல்வர் 17 வயது மாணவர் முப்சல் ஆகியோரை இன்னும் காணவில்லை என்பதாக அறிவிக்கப்படுகின்றது.

    ”மீட்கப்பட்ட ஓர் உடலம் உள்ளது.ஆனால்,அது தனது சகோதரி அஸ்மாவின் உடல்தானா என, உடற்கூற்றாய்வின் மூலம் உறுதி செய்யப்படவில்லை” என்கின்றார், அஸ்மாவின் சகோதரன். ஏனையோருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்கின்றார்,கண்ணீர் மல்க.

    சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.
    அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் மு.க.ஸ்டாலின் திமுக வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகம் இன்று நடைபெற்ற திமுக பொது குழு கூட்டத்தில் அறிவித்தார்.

    இதன்மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் இரண்டாவது தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.
    கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைந்ததையொட்டி  காலியாக இருந்த கட்சி தலைவர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.

    திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை கொண்டாடி வருகின்றனர்.

    ஐக்கிய அரபு அமீரகம் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக 700 கோடி ரூபாய் அளித்துள்ளதாக கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    படத்தின் காப்புரிம
    கேரளாவில் ஜூன் மாதத்திலிருந்து இதுவரை பெய்த பருவமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து வரும் நிலையில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
    இந்நிலையில் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா முழுவதும் பலர் உதவிக் கரங்களை நீட்டி வருகின்றனர். பல்வேறு மாநில அரசுகளும் கேரளாவிற்கான தங்கள் நன்கொடையை அறிவித்துள்ளன.
    இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பிரனராயி விஜயன் கேரளாவிற்கு நன்கொடை அளித்தவர்களின் தகவல்களை வெளியிட்டபோது ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
    அபு தாபியின் முடிக்குரிய இளவரசர் பிரதமர் நரேந்திர மோதியுடன் பேசியதாக தெரிவித்த அவர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
    Presentational grey line
    பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கு உதவி வரும் நிலையில் பிற நாடுகளும் உதவிக் கரம் நீட்டி வருவதாக முதல்வர் தெரிவித்தார்.
    மேலும் சிறப்பு நிதியாக, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க 2600 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கோரப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
    வளைகுடா நாடுகள் அனைத்து தரப்பிலும் தங்களுக்கு உதவி வருவதாகவும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
    முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியில் கேரளாவுக்கு எப்போதும் பங்குண்டு. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உண்டு என ஷேக் முகமத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
    இந்தியாவுடன் சேர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர் பக்ரித் பண்டிகையையொட்டி இந்தியாவில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு தாரளமாக உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
    கேரளாவில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தை 'தீவிர பேரிடர்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    #IsmailUvaizurRahman.
    கேரளாவில் பெரு வெள்ளம் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 33 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


    பேரழிவில் அரசியல் செய்யும் மோடி அரசு..
    ஒக்கி புயலின்போது தமிழக மீனவர்களை திட்டமிட்டே கைவிட்டதுபோல் கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பேரழிவை சந்தித்து வருகிறார்கள்..
    ஆனால் பட்டேல் சிலைக்கு 2 ஆயிரம் கோடியை ஒதுக்கிய மோடி அரசு கேரள அரசுக்கு கிள்ளி கொடுக்கிறது. காரணம் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் ஆள்கிறார்கள்..
    ஆக இந்த தருணத்தில் நாம் கேரள மக்களுடன் துணை நிற்க வேண்டும்.. களத்திற்கு போக முடியாத சூழலில் இருக்கும் நண்பர்கள் நம்மால் முடிந்த பொருளாதார உதவியை கேரள மக்களுக்கு செய்வோம்..
    இதேவேளை,கேரள மக்களுக்காக தனது தங்க கம்மலை கழற்றி கொடுத்துள்ளார், முஸ்லீம் சகோதரி.
    '' கேரளாவில் வெள்ளத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனடா தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது'' என ட்வீட் செய்துள்ளார் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
    ''கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிரார்த்தனையை உரித்தாக்குகிறேன். நூறு பேருக்கும் மேல் பலியாகியுள்ளதும், இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பதும் கோரமான நிலை'' என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
    ''நேற்று மட்டும் இரண்டு லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு நன்றி. அவர்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேரை மீட்டதாக செய்திகள் வந்துள்ளன. போற்றப்படாத நாயகர்கள் - மீனவர்கள்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
    கேரளா வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமருக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் ராகுல் காந்தி.

    இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

    Powered by Blogger.