Showing posts with label Entertainment. Show all posts

 


நடிகை ராதாவை அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. முதல் படமே சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து அவர் நடித்த பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் ஹிட். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மலையாளத்தில் 200 படங்களில் நடித்தார்.


அப்போது பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஹோம்லி, கிளாமர் என இரண்டிலும் முத்திரை பதித்தார்.


தென் இந்தியாவில் முக்கியமான ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்த நடிகை ராதாவுக்கு இன்று பிறந்தநாள்.


'குழல் ஊதும் கண்ணனுக்கு' பாடலை மறக்க முடியுமா?

அவருடன் பழகியவர்கள், சினிமாகாரர்களிடம் ராதா குறித்து பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.


ராதா நடித்த அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத்திறந்தது கதவு, இதயகோயில் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளர் ராஜராஜன், ''இன்றும் என்னிடம் பேசுபவர்கள் அம்மன் கோவில் கிழக்காலே படம் பற்றி, ராதா நடிப்பு, பாடல் பற்றி அவ்வளவு பேசுகிறார்கள்.'' என்கிறார்.


''விஜயகாந்த், இளையராஜா, ஆர்.சுந்தர்ராஜன் என பல ஜாம்பவான்கள் இருந்தாலும், ராதாவும் தனித்தன்மையுடன் இருந்தார். ராதாவின் வெற்றி ஈஸியாக கிடைக்கவில்லை.அவர் கடுமையான உழைப்பாளி, குறிப்பாக, நேரம் விஷயத்தில் சரியாக இருப்பார். காலையில் 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் மேக்கப்புடன் தயாராக இருப்பார். நாங்கள் பல ஆங்கிளில் படமாக்குவோம். பாடல்காட்சிகளில் இன்னும் அதிகம்.


இத்தனை படங்களில் என்னுடன் பணியாற்றி இருந்தாலும் ஒருமுறை கூட அவர் முகம் சுளித்தது இல்லை. அவர் முகமும், கண்களும் அவ்வளவு அழகு. அதனால், அவரை அதிகமாக குளோஸ்-அப் எடுப்போம். நான் ஒளிப்பதிவு செய்யாவிட்டாலும் ராதா படங்களில் முதல்மரியாதை பிடிக்கும். அந்த படத்தை பலதடவை பார்த்து இருக்கிறேன்.'' என்கிறார்.


''அவர் பாடல்களில் எனக்கு பிடித்தது மெல்ல திறந்தது கனவு படத்தில் வரும் குழல் ஊதும் கண்ணனுக்கு பாடல். அதை நான்தான் கோவை சிறுவாணி பகுதிகளில் படமாக்கினேன். எத்தனை முறை பார்த்தாலும் ராதா முகபாவங்கள், சின்ன, சின்ன நளினங்கள் சலிக்காது. அம்மன்கோயில் கிழக்காலே படத்தை மேட்டுப்பாளையத்தில் எடுத்தோம். அந்த நாட்களை மறக்கமுடியாது'' என்கிறார்


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

Mother, Children, Bond, Naxalite, Pregnancy

'குழந்தை இல்லையே என ஏங்கிய காலம் உண்டு' - கருத்தடை செய்துகொண்ட முன்னாள் நக்சல்கள் குழந்தை பெறுவது எப்படி?

உடலில் வாயு வெளியேறும்போது துர்நாற்றம் வீசுவது ஏன்? சரிசெய்ய முடியுமா?

நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?

வசீம் அக்ரம் தனது நண்பர்களான மிஸ்பா, ஃபகர் ஆகியோருடன் ஹஜ் செய்யச் சென்றிருந்தார்.

வசீம் அக்ரம் ஹஜ் பயணத்தில் பௌலிங் பாணியில் மத சடங்கை செய்தது ஏன்?

மீன் இனம், விஞ்ஞானிகள், பாலினமற்ற இனப்பெருக்கம், உயிரினங்கள், பரிணாம வளர்ச்சி

'ஆண் மீன்களே இல்லை' - 1 லட்சம் ஆண்டுகளாக வாழும் இந்த பெண் மீன் இனம் விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்துவது ஏன்?

End of அதிகம் படிக்கப்பட்டது

Actress, Radha, Birthday, Movieபட மூலாதாரம்,Radhanair/Instagram

மூத்த பத்திரிகையாளர் மக்கள்குரல் ராம்ஜி நடிகை ராதா பற்றி பிபிசி தமிழிடம் கூறுகையில், '' தமிழ் ரசிகர்களை வசீகரித்த ஜோடி ரஜினிகாந்த் - ஸ்ரீ பிரியா. ராதாவோடு கமல்ஹாசன் அதிக படங்களில் ஜோடி சேரவில்லை, இவர்கள் இணைந்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 1981ல் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை சினிமாவில் அறிமுகமான ராதா இந்த வெற்றியின் சூட்டோடு சூட்டாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சீனியர் கமலோடும், ரஜினியோடும் இணை சேர்ந்தார் '' என்கிறார்


'சிவாஜிகணேசனே ராதாவை பாராட்டினார்'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இயக்குனர் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரும், கிழக்குசீமையிலே, கருத்தம்மா, கடல்பூக்கள் படங்களின் கதாசிரியரும், எழுத்தாளருமான ரத்னகுமார் பிபிசி தமிழிடம், ''நடிகை ராதா பற்றி பலமுறை என்னிடம் இயக்குனர் பாரதிராஜா வியந்து பேசியிருக்கிறார். குறிப்பாக, முதல்மரியாதை படத்தில் சிவாஜிகணேசன், ராதாவை புகழ்ந்ததை, பெருமையாக பேசியதை என்னிடம் சொல்லியிருக்கிறார்.


'அந்த சின்ன பொண்ணு நடிப்பில் கலக்கிவிட்டது. சில காட்சிகளில் வசனம் பேசாமலே மிரட்டி விட்டாள். குறிப்பாக, ஜெயிலில் இருந்து வந்து பேசும் சீனில் என்னம்மா நடித்துவிட்டாள்' என்று சிவாஜி கணேசன் கூறியதாக என்னிடம் சொல்லியிருக்கிறார். அப்போது ராதா சிறப்பாக நடிப்பார், அதனால்தான் இந்த படத்தில் அவரை நடிக்க வைத்தேன் என பாரதிராஜா சொல்லியிருக்கிறார்.


முதல் மரியாதை படத்தில் மலேசியா வாசுதேவன் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சிவாஜி கணேசன், ராதா நடித்தது படத்தை எங்கேயோ கொண்டு போய்விட்டது. சிவாஜிகணேசன் படங்களிலும் முதல்மரியாதைக்கு முக்கியமான இடமுண்டு. அதில் ராதா நடிப்பையும் பேசாமல் இருக்க முடியாது. அதேபோல் அம்மன் கோயில் கிழக்காலே படத்திலும் துறுதுறு நடிப்பில் சிறப்பாக நடித்து இருப்பார்'' என்கிறார்.


'அம்பிகாவை மிஞ்சினார் ராதா'

அந்த கால சினிமா பத்திரிகையாளரும், மூத்த பி.ஆர்.ஓ.வுமான நெல்லை சுந்தர்ராஜன் பிபிசி தமிழிடம், ''நான், ராதா அக்கா அம்பிகாவின் மேலாளராக பணியாற்றினேன். அந்தவகையில் ராதாவுடன் நல்ல பழக்கம். அவர் வெற்றிக்கு முக்கியமான காரணம், அவர் நேரம் தவறாமை மற்றும் நடிக்கிற கேரக்டராகவே மாறும் விதம். அவர் கமிட்டான படங்கள் வரிசையாக வெற்றி பெற, தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் முன்னணி நடிகை ஆனார்.


அவர் கடும் உழைப்பாளி, காலையில் தமிழ் படம், மாலையில் தெலுங்கு படம் என்று ஓடிக்கொண்டே இருப்பார். அவரை இந்த அளவுக்கு வெற்றி பெற வைத்ததில் அவர் அம்மா சரசம்மாவுக்கும் பங்கு உண்டு. அவர் அக்கா அம்பிகா சிறந்த நடிகை என்றாலும், பாடல் காட்சிகளில் அக்காவை ராதா மிஞ்சினார் என்றே சொல்லலாம்.''என்கிறார்


Actress, Radha, Birthday, Movie, Alaigal Oyvadhillai, First Movieபட மூலாதாரம்,4KCinemas/Youtube

படக்குறிப்பு,தமிழில் நடிகையாக ராதா அறிமுகமான முதல் திரைப்படமான அலைகள் ஓய்வதில்லை.

குருநாதர் மீது அவ்வளவு மரியாதை

இயக்குனர் பாரதிராஜா படங்களில் பணியாற்றியவரும், ராதா மகள் கார்த்திகா நடித்த அன்னக்கொடி படத்தின் ஒளிப்பதிவாளருமான சாலை சகாதேவன், ''தன்னை அறிமுகப்படுத்திய பாரதிராஜா மீது இன்றும் ராதாவுக்கு அவ்வளவு பாசம், மரியாதை. அன்னக்கொடி படத்தில் பாரதிராஜா இயக்கத்தில் அவர் மகள் கார்த்திகா நடித்தபோது அவ்வளவு சந்தோஷப்பட்டார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவரை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, முதல்மரியாதையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தவும் காரணமாக இருந்தார். அதை பல இடங்களில் சொல்லி மகிழ்ந்து இருக்கிறார் ராதா'' என்றார்


'சினிமாவால் எல்லாம் கிடைத்தது' - நடிகை ராதா

Actress, Radha, Birthday, Movieபட மூலாதாரம்,Radhanair/Instagram

தனது பிறந்தநாள் குறித்து பிபிசி தமிழிடம் நடிகை ராதா பேசுகையில் ''நான் உதயசந்திரிகாவாக பிறந்தேன். ராதாவாக மாறியது இரண்டாவது பிறப்பது. அப்படி மாற்றியது சினிமா, அதனால்தான் இவ்வளவு புகழ், பெருமை, சந்தோஷம் எல்லாமே. அதற்கு காரணமான இயக்குனர் பாரதிராஜா, அடுத்தடுத்து எனக்கு பட வாய்ப்புகளை, நல்ல கேரக்டர்களை கொடுத்த சினிமா கலைஞர்கள் அனைவரையும் நான் எப்போதும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். பலருக்கும் கிடைக்காத பாக்கியம், அதிர்ஷ்டம் நான் 1980களில் நடித்தது. சிவாஜிசார் தொடங்கி, என்.டி.ராமாராவ், சிரஞ்சீவி, கிருஷ்ணா, ஷோபன்பாபு, சத்யராஜ், கமல், ரஜினி, கார்த்திக், மோகன் என பலருடன் இணைந்து நடித்தேன். அவர்களின் ரசிகர்களும் என்னை விரும்பினார்கள்'' என்றார்.


தமிழில் ராதா நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட படங்கள் எவை?


Actress, Radha, Birthday, Movie, MuthalMariyadhai, SivajiGanesanபட மூலாதாரம்,Pyramid-Audio/Youtube

படக்குறிப்பு,நடிகர் சிவாஜி கணேசனுடன் ராதா நடித்த முதல் மரியாதை திரைப்படம்.

1) முதல் மரியாதை

பாரதிராஜா இயக்கிய இந்த படத்தில் ஏழை படகோட்டி பெண்ணாக குயில் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் ராதா. அந்த ஊர் தலைவரான, தன்னை விட வயதில் முதிர்ந்த சிவாஜியின் மீது உண்மையான காதல் கொண்டிருப்பார். அவருக்காக, அவர் குடும்பத்துக்காக தியாகம் செய்வார். தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இன்றும் கொண்டாடப்படுகிறது முதல்மரியாதை.


2) அலைகள் ஓய்வதில்லை

பாரதிராஜா இயக்கிய இந்த படத்தில் மேரி என்ற கிறிஸ்துவ பெண் கேரக்டரில் அறிமுகம் ஆனார். காதலுக்கு மதம் இல்லை என்று உணர்ந்தும் கதை. முதல் படம் என்றாலும் அழுத்தமான நடிப்பை ராதா தந்திருந்தார். பாடல்களும் ஹிட்.


3) அம்மன் கோயில் கிழக்காலே

தமிழ் சினிமாவின் சிறந்த கமர்ஷியல் படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் ஜோடியாக வரும் ராதாவின் சுட்டிதனம், திருமணம் ஆனவுடன் மாறுகிற அவரின் நடிப்பும் டாப். இளையராஜாவின் இசையும், ஆர்.சுந்தரராஜின் இயக்கமும் படத்தையும், ராதா கேரக்டரையும் சூப்பர் ஹிட்டாக்கின.


4) காதல் ஓவியம்

பாரதிராஜா இயக்கத்தில் புதுமுகம் கண்ணன் ஜோடியாக ராதா நடித்த படம். காதலும், இசையும், பரதநாட்டியும் படத்தின் பிரதானமான விஷயங்கள். இளையராஜாவின் இசையும், பாடல்களும் இன்றும் ராதாவை கொண்டாட வைக்கின்றன.


5) மெல்ல திறந்தது கதவு

ஆர். சுந்தர்ராஜனின் இயக்கத்தில் மோகன், அமலா நடித்த இந்த படத்தில் ராதாவுக்கு அழுத்தமான கேரக்டர். அவர் நடிப்பிலும் மிரட்டியிருப்பார். குறிப்பாக, குழலூதும் கண்ணனுக்கு பாடல் இன்றும் கச்சேரிகளில் பாடப்படுகிறது.


6) இதயகோயில்

மணிரத்னம் இயக்கத்தில் இந்த படத்தில் ராதா, குடிப்பழக்கத்துக்கு ஆளான மோகனை மீட்கும் கேரக்டரில் வருவார். இந்த படத்தில் மோகன் காதலியாக கௌரவ வேடத்தில் நடித்தவர் அவர் அக்கா அம்பிகா.


Actress, Radha, Birthday, Movie, rajathi raja, Rajinikanth, Superstarபட மூலாதாரம்,TamilMovies/Youtube

படக்குறிப்பு,ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ராஜாதி ராஜா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ராதா நடித்தார்.

7) காதல் பரிசு

கமல்ஹாசன் ஜோடியாக ராதா நடித்தபடம். இதில் அவர் அக்கா அம்பிகாவும் ஒரு ஹீரோயின். அக்காவுடன் போட்டிபோட்டு நடித்து, டான்ஸ் ஆடிய படம். காதல் மகராணி, ஹே உன்னை தானே பாடலில் ரசிகர்களை கவர்ந்து இருப்பார்.


Actress, Radha, Birthday, Movie, Jappanil Kalyanaraman, Kamalhasanபட மூலாதாரம்,TamilMovieCollection/Youtube

படக்குறிப்பு,ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகை ராதா.

8) ஜப்பானில் கல்யாணராமன்

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் ராதா நடித்த படம். பேய்க்கதை, காமெடி இருந்தாலும் கமல்ஹாசன் - ராதா காதல் காட்சிகள் இதமாக இருக்கும்.


9) தூங்காதே தம்பி தூங்காதே

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வெற்றி படம். இதில் துணிச்சலான பத்மினி என்ற கேரக்டரில் ராதா வருவார். அவர் கேரக்டரில் கதையில் திருப்பு முனையை ஏற்படுத்தும்


10) ராஜாதி ராஜா

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கிராமத்து பெண்ணாக வருவார். தமிழில் பல படங்களில் ராதா கிராமத்து பெண்ணாக, ஹோம்லியாக நடித்தார். தெலுங்கில் நேர் எதிர். பல படங்களில் கிளாமராக நடித்தார்.




 சரித்திரம் படைத்தான் சபேசன்!

வாழ்த்துகள் மகனே! 


பலத்த போட்டியின் மத்தியில் இரண்டாம் நிலையினை பெற்றுக்கொண்ட நம்மண்ணின் மைந்தன் சபேசனுக்கு வாழ்த்துகள்.


உங்களால் இலங்கை தேசம் பெருமை கொள்கின்றது.  

சபேசனுக்கு ஆதரவாக இருந்து வாக்களித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

Rep/Jkjathursan/Sukirthakumar

 சரிகமப பாடல் போட்டியில் கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நம்நாட்டின் கலைஞன் சுகிர்தராஜா சபேசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று (05) இடம்பெற்றன.

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் அக்கரைப்பற்று மாநகர சபை ஆலையடிவேம்பு பிரதேச சபை உள்ளிட்டவர்கள் இணைந்து வாழ்த்து தெரிவித்ததோடு சபேசனுக்கு வாக்களிக்க வேண்டும் என பதாதைகளையும் மணிக்கூட்;டு கோபுர சந்தியில் நிறுவினர்.
பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வுகளில் மாநகர சபையின் முதல்வர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபி;ள்ளை உப தலைவரும் மத்தியஸ்த சபையின் தலைவருமான ஸ்ரீ மணிவண்ணன் மற்றும் அக்கரைப்பற்று வர்த்தகர் சங்க தலைவர் மாநாகர சபை முதல்வரின் இணைப்பாளர் தாஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு சபேசனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் பலரும் பல்வேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கினர்.
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் சபேசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

Zee Tamil பாடகர் சபேசனை வாழ்த்தி ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று நலன் விரும்பிகளார் அக்கரைப்பற்று மாநகரின் இன மத வேதம் இன்றி ஓர் நிகழ்வும் இரு இனத்தவரினால் கட்டவூட்கள் இரண்டு வைக்கும் நிகழ்வுி....

 



வி.சுகிர்தகுமார் 

இந்தியாவின் ZeeTamil தமிழ் தொலைக்காட்சி சரிகமப பாடல் போட்டி நிகழ்வின் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியுள்ள கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்து கொண்ட முதல் மைந்தன் சுகிர்தராஜா சபேசனுக்கு பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.


கிழக்கு மண்ணின் அம்பாரை மாவட்டம், திருக்கோவில், விநாயகபுரம் எனும் கிராமத்தில் பிறந்து இன்று நம்நாட்டினதும், பிறந்த மண்ணினதும் பெருமையினை உலகறியச் செய்துள்ள அந்த ஒப்பற்ற கலைஞனுக்கு உலகளாவிய ரீதியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

1995.12.02ஆம் திகதி பிறந்த சபேசன்,  சுகிர்தராஜா ஜெயந்தி தம்பதிகளின் நான்கு பிள்ளைகளில் முதலாவது ஆண் பிள்ளை. 
முதலாம் தரம் தொடக்கம் க.பொ.த.சாதாரண தரம் வரை விநாயகபுரம் மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்ட இவர் திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகாவித்தியாலயத்தில் உயர் தரத்தினை இசைத்துறை இணைந்ததான கலைப்பிரிவில் பயின்று மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டு ஆசிரியர்களதும் விரிவுரையாளர்களதும் வழிநடத்தலில் இசை நுண்கலையில் இளமானி பட்டம் பெற்றார். 

பட்டம் பெற்று பல வருடங்கள் கடந்தும் தொழில் கிடைக்கவில்லையே எனும் ஏக்கத்துடன் வாழ்ந்து வந்த சபேசன்; தாய் தந்தை குடும்பம் சகோதரர்கள் மற்றும் உறவுகளதும் வழிகாட்டலில் இசைத்துறையில்
சாதிக்க முடியும் என நம்பிக்கை கொண்டார்.

தனது தந்தை வழிவந்த கலைத்துறையின் நாட்டத்தால் இசைத்துறையின் மீது ஆர்வம் கொண்ட சபேசன் சிறுவயது முதலே ஆசிரியர்களது பயிற்சியினால் பாடும் திறமையினை பெற்றுக்கொண்டார். இதன் காரணமாக பாடசாலை கலைநிகழ்வுகள் ஆலயங்களின் உற்சவங்கள் பொது நிகழ்வுகளில் பாடி பலரது பாராட்டையும் பெற்றுக்கொண்டார். இதேநேரம் தனது தந்தை பாடகராக இருந்த அக்கரைப்பற்று ஜெயாலயா இசைக்குழுவிலும் ஆரம்பகாலத்தில் பாடி பின்னர் கிழக்கில் புகழ்பூத்த இசைக்குழுக்களிலும் பாடி தனது திறமையினை மேலும் வளப்படுத்தினார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் சக்தி தொலைக்காட்சியில் நடாத்தப்பட்ட சக்தி சூப்பர் ஸ்டார் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தினை பெற்று பெற்றோருக்கும் பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்தார். இதன் பின்னராக இசைத்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய சபேசன் பல இறுவெட்டுகளிலும் பாடி புகழ் சேர்த்ததுடன் இந்தியாவில் உருவாக்கம் பெற்ற உலகப்பொது மறையான திருக்குறள் ஒலிப்பதிவிலும் தனது குரலால் குறள் ஒன்றை பாடி பதிவு செய்தார்.

இவரது இசைத்திறமை கண்டு கிழக்கு தொடக்கம் வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள இசைக்குழுக்களும் சபேசனை பாட அழைத்தது. சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய இவரது புகழ் தேசிய ரீதியில் பரவியதுடன் அரசும் பல்வேறு அமைப்புக்களும் பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்தது.
தனது சொந்த விடாமுயற்சியும் பயிற்சியும் காரணமாக சரிகமப சீசன் 4 இல் முதல் முறையாக கலந்து கொண்டபோதும் பாடகர்களை தெரிவு செய்யும் சுற்றில் வாய்ப்பை இழந்தார். ஆனாலும் அவர் தனது முயற்சியை கைவிடவில்லை. குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு இசைத்துறையில் உள்ள நண்பர்களது வழிகாட்டுதலுடன் முயற்சியை தொடர்ந்தார்.

இதன் பயனாக யாருக்கும் சொல்லாமல் இந்தியா சென்று
 மீண்டும் சரிகமப சீசன் 5 இல் நுழைந்து தெரிவானபோது தனது உள்ளக்குமுறலை அழுகையாக வெளிப்படுத்தினார். அப்போது அவரை பலரும் விமர்சனம் செய்தனர். தனது தாய் நாட்டிற்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் வன்மத்தை கொட்டித்தீர்த்தனர். அப்போது கூட சபேசன் சளைக்கவில்லை. தன்மீது பாய்ந்த அம்புகளை எல்லாம் துறைத்தெறிந்து தனது இசைப்பயணத்தின் இலக்கை நோக்கி பயணித்தார்.

 இந்திய மண்ணின் ஜீ தமிழ் தொலைக்காட்சியின்  வாய்ப்பு, நடுவர்களதும் நிகழ்ச்சித்தொகுப்பாளரதும் ஆலோசனை , பயிற்றுவிப்பாளர்களது சிறந்த பயிற்சி,  அவரது இடைவிடாத முயற்சி, சக போட்டியாளர்களது அன்பு, 
இன மத பேதம் கடந்த இலங்கையிலும், இந்திய மண்ணிலும் உலகவாழ் மக்கள் அத்தனைபேரினதும் அரவணைப்பு இதற்கும் மேலாக பெற்றோர்களது ஆசிர்வாதம் இறையருள் ஆகியவற்றுடன் இன்று இறுதிச்சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்டு சர்வதேசத்தில் வாழும் அத்தனை மக்களையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார்.
அதுபோல் இறுதிச்சுற்றிலும் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டு நாட்டிற்கும் வீட்டிற்கும் புகழ் சேர்ப்பார் எனும் பெரு நம்பிக்கையோடு அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் பெருவரவேற்பளித்து  அவரது வெற்றியை கொண்டாடி மகிழ.

இதேநேரம் சபேசனுக்குரிய களத்தை சரியான நேரத்தில் அமைத்து கொடுத்த ஆதரவை வழங்கிவரும் இந்திய தமிழ் நாட்டு மண்ணிற்கும்,  ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கும்,  சரிகமப நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், இலங்கை மக்கள் சார்பில் நன்றி செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.  


 


சிறந்த நடிகர், நடிகைக்கான தேசிய விருது பெற்ற ஷாருக் கான் மற்றும் ராணி முகர்ஜீ  


ஷாருக் கான் சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதை பெற்றார். ஜவான் படத்துக்காக ஷாருக் கான் விருது பெற்ற நிலையில் Mrs. Chatterjee vs Norway படத்துக்காக ராணி முகர்ஜீ சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.  


#ShahrukhKhan #RaniMukerji #NationalAwards

 


தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர் ஆவார். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.


சில தினங்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா படப்பிடிப்புதளத்தில் ரத்த வாந்தி எடுத்த ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றவர் அவர் உடல் நிலை மோசமானது.



இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 46 ஆகும். ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்


ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இறுதி சடங்குகள் நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது



 ரஜினிகாந்த்தின் பல திரைப்படங்களில் அவருக்கு இருந்த அரசியல் ஆர்வம் வெளிப்படையாகக் கூறப்பட்டாலும், விஜய்யின் திரைப்படங்களில் அவை வெகு அரிதாகவே வெளிப்பட்டிருக்கின்றன. அப்படி வெளியான சில திரைப்படங்கள் குறித்த பட்டியல் இது.

விஜய் 1984லிருந்து குழந்தை நட்சத்திரமாகவும் 1992லிருந்து நாயகனாகவும் நடித்துவருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்தது உட்பட இதுவரை 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் விஜய், கதாநாயகனாக நடித்திருக்கும் 69வது படம் 'ஜனநாயகன்'.

இத்தனை படங்களில் விஜய் தனது அரசியல் வருகைக்கான விருப்பத்தையோ, நேரடியாக அரசியலையோ பேசி நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இருந்தபோதும், சில இடங்களில் அரசியலுக்கு வருவது குறித்தும் , சமூகம் பற்றி தனது பார்வை என்ன என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

தமிழன் (2002)

'தமிழன்' படத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பார் விஜய்.

பட மூலாதாரம்,YouTube

படக்குறிப்பு,'தமிழன்' படத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பார் விஜய்.

எஸ்.ஏ. சந்திரசேகரின் கதையை வைத்து புதுமுக இயக்குநரான மஜீத் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இந்தப் படத்தில் வழக்கறிஞர் சூர்யா என்ற பாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார்.

ஆரம்பத்தில் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் விஜய், ஒரு கட்டத்தில் சகோதரியின் அறிவுரையால் பொறுப்பானவராக மாறுவார். முதலில் இந்தியாவின் கடனை அடைக்க தன் பங்காக 4 ஆயிரம் ரூபாயை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு, எல்லோரும் அதைப் போலச் செய்ய வேண்டுமெனக் கூறுவார்.

இதற்குப் பிறகு, இலவச சட்ட உதவி மையம் துவங்கி, நகராட்சி பிரச்னை, பேருந்துகளில் ஏற்படும் பிரச்னை, கள்ளச்சாராய பிரச்னை போன்றவற்றை சட்ட ரீதியாக தீர்த்துவைப்பார்.

இந்தப் படத்தில், "நான் யாருக்கும் எதிரியாக இருக்க விரும்பலைங்க.. மக்களுக்கு நண்பனாக இருக்கனும்னுதான் ஆசைப்படுறேன்", "எந்தக் கட்சிக்காரன் மேடை போட்டாலும் கைதட்டி, விசிலடிச்சு கேட்கிறோம். எவனாவது அவங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டிருந்தா, இந்த மேடைகள் குறைந்திருக்கும். இதற்குக் காரணம் மக்களின் அறியாமைதான்", "தமிழன் ஜெயிப்பான்" என்பது போன்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தன.

படத்தின் இறுதியில் குடியரசுத் தலைவரே அவரைப் பாராட்டுவது போல படம் நிறைவடையும்.

தலைவா (2013)

'தலைவா' படத்தின் தலைப்புக்குக் கீழே Time to Lead என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

பட மூலாதாரம்,YouTube

படக்குறிப்பு,'தலைவா' படத்தின் தலைப்புக்குக் கீழே Time to Lead என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

ஏ.எல். விஜய் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே Time to Lead என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் படத்தில் மும்பையின் 'டான்' ஆன தனது தனது தந்தை இறந்த பிறகு அவரது இடத்தை 'தலைவா' என்ற பட்டத்துடன் ஏற்றுக்கொள்வார் விஜய்.

இதற்குப் பிறகு மும்பையில் அமைதி திரும்பச் செய்ய, முயற்சிகளை மேற்கொள்வார்.

ஆனால், இந்தப் படத்தின் தலைப்பின் கீழே Time to Lead என்ற வாசகம் இருந்ததை அப்போதைய ஆளும் கட்சி ரசிக்கவில்லை.

இந்தப் பிரச்னையை அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிடம் எடுத்துச் செல்ல படக்குழு முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.

முதலில் ஆகஸ்ட் 9ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் பல திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறப்பட்டு தமிழ்நாடு, புதுச்சேரி தவிர பிற இடங்களில் படம் வெளியானது.

இதற்குப் பிறகு, விஜய் தன் தரப்பை விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இந்தப் படம் வெளியானது. தலைப்புக்குக் கீழே இருந்த Time to Lead என்ற வாசகம் நீக்கப்பட்டு படம் வெளியானது.

ஆனால், இதற்கு முன்பே படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானதால், பட வசூல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

கத்தி (2014)

 2 ஜி ஊழலை வெளிப்படையாக குறிப்பிட்டு வசனம் பேசியிருந்தார் விஜய்.

பட மூலாதாரம்,YouTube

படக்குறிப்பு,2 ஜி ஊழலை வெளிப்படையாக குறிப்பிட்டு வசனம் பேசியிருந்தார் விஜய்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் கத்தி. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜீவானந்தம் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் பொதுவுடமைத் தத்துவம், முதலாளித்துவத்தின் தீமை, விவசாயிகள் பிரச்னை, குடிநீர் பிரச்னை போன்ற பல விஷயங்களைப் பேசியிருந்தார் முருகதாஸ்.

'காத்துல ஊழல் பண்ற ஊருயா' என 2 ஜி ஊழலை வெளிப்படையாக குறிப்பிட்டு வசனம் ஒன்றையும் பேசியிருந்தார் விஜய். இது தொடர்பாக வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.

மெர்சல் (2017)

மருத்துவத் துறையை லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிரான கருத்தைச் சொன்ன படம் இது.

பட மூலாதாரம்,Zee Tamil

படக்குறிப்பு,மருத்துவத் துறையை லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிரான கருத்தைச் சொன்ன படம் இது.

விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்தார்.

மருத்துவத் துறையை லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிரான கருத்தைச் சொன்ன படம்தான் இது. ஆனால், இதில் பல இடங்களில் வெளிப்படையாகவே அரசியல் பேசப்பட்டது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் விமர்சிப்பது போன்ற காட்சிகளுக்கு பா.ஜ.க. கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.

பா.ஜ.கவின் மூத்த தலைவர் எச். ராஜா, விஜய்யின் மதத்தைக் குறிப்பிட்டு அவரை விமர்சிக்க ஆரம்பித்தார்.

படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சி, "உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்" என்ற எம்.ஜி.ஆர். பாடலுடன் இருந்தது கவனிக்கப்பட்டது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த "ஆளப்போறான் தமிழன்" பாடலும் வெகுவாக கவனிக்கப்பட்டது.

சர்க்கார் (2018)

இந்தப் படத்தில் அமெரிக்காவில் வசிக்கும் சுந்தர ராமசாமி வாக்களிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

பட மூலாதாரம்,YouTube

படக்குறிப்பு,இந்தப் படத்தில் அமெரிக்காவில் வசிக்கும் சுந்தர ராமசாமி வாக்களிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான இந்தப் படத்தில் அமெரிக்காவில் வசிக்கும் சுந்தர ராமசாமி வாக்களிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

தேர்தலின்போது வாக்களிக்கச் செல்பவர், தனது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்.

இதற்குப் பிறகு சுந்தரின் முயற்சிகளால் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்படுகிறது. இதனால், முதலமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்ட மாசிலாமணியின் எதிரியாகிறார் சுந்தர். ஆகவே தானும் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்கிறார்.

பிரசார காலகட்டத்தில் பல பிரச்னைகளை சந்திக்கிறார். மொத்த தேர்தல் அமைப்புமே மாற வேண்டுமென உணர்கிறார். தேர்தலில் சுந்தரும் அவரது ஆதரவாளர்களும் வெற்றிபெறுகிறார்கள். இருந்தபோதும் தான் முதலமைச்சராகாமல், நேர்மையான ஒரு அதிகாரியை முதலமைச்சராகத் தேர்வுசெய்கிறார் சுந்தர் என படம் முடிவுக்கு வரும்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.