Showing posts with label Entertainment. Show all posts

 


தமிழில் வெளியான தளபதி, ரோஜா, இருவர், உயிரே, ராவணன், துப்பாக்கி உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ் சிவனுக்கு Pierre Angenieux என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


 இந்திய முன்னணி நடிகையான ரம்பா, பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் வந்தார்.


பிரபல நடிகை தனது குடும்பத்தினருடன் வந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வரவேற்கப்பட்டார்.

கடந்த டிசம்பரில் முதலில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ரம்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், ரம்பா எட்டு மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் தவிர, சில பெங்காலி, போஜ்புரி மற்றும் ஆங்கில படங்களுடன்.

 நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘லியோ’ படம் இன்று (வியாழன், அக்டோபர் 19) ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்திடையே வெளியாகியுள்ளது.



பல சிக்கல்களையும் சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களுக்கு இடையே வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஊடகங்கள் விமர்சனங்கள் வெளியிட்டு வருகின்றன.


இந்தப் படம் என்ன மாதிரியான விமர்சனங்களைப் பெற்று வருகிறது? படம் எப்படி இருக்கிறது?


முக்கியமாக, 'லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் - LCU' வெற்றி பெற்றதா?


விஜய் குரலை செயற்கை நுண்ணறிவு மூலம் எப்படி உருவாக்கினார்கள்? போலியை கண்டறிவது எப்படி?

4 அக்டோபர் 2023

சிவாஜி நடிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன வேடம் என்ன?

1 அக்டோபர் 2023

சந்திரமுகி: உண்மையான மாளிகையும் கொலைகளும் - நூறாண்டுக்கு முன் நடந்தது என்ன?

1 அக்டோபர் 2023

பொதுவாக எல்லா விமர்சனங்களும் இந்தப் படம் 'A History of Violence' என்ற ஆங்கில திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன.


இருந்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்று தொய்வடைவதால் இப்படம் அசலான படமாக அமையவில்லை எனவும் பெரும்பாலான விமர்சனங்கள் குறிப்பிட்டுள்ளன.


அதோடு, ஊடக விமர்சனங்கள் லோகேஷ் சினிமேடிக் யூனிவர்ஸுக்கான தொடர்பு வலிந்து திணிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன.


விஜய், லியோ, லோகேஷ் கனகராஜ்பட மூலாதாரம்,7 SCREEN ENTERTAINMENT

படக்குறிப்பு,

'இப்படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும், இது ஒரு ‘ஒன் மேன் ஷோ’, விஜய் இரட்டை வேடத்தில் ஜொலிக்கிறார்'


விஜய்யின் ‘ஒன் மேன் ஷோ’

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ், லோகேஷ் கனகராஜ், நன்கு அறியப்பட்ட பழைய கதையான ‘நாட்டை விட்டு வெளியேறி வாழும் ஹீரோ’ கதையைத் தேர்ந்தெடுத்து, அதை படைப்பூக்கமுள்ள ஆக்ஷன் காட்சிகளுடன் அழகுபடுத்தியுள்ளார், என்று கூறியுருக்கிறது. இந்தப் படத்தில் ரத்தம் அதிகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறது.


“தியேட்டருக்குள் நுழைந்த அரை மணிநேரத்திற்குள் படத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடிந்தாலும், லோகேஷ் தனது ‘புதுமையான வன்முறை மற்றும் அதிரடி காட்சிகளில்’ ஜொலிக்கிறார்,” என்று எழுதியிருக்கிறது.


மேலும், இப்படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும், இது ஒரு ‘ஒன் மேன் ஷோ’, விஜய் இரட்டை வேடத்தில் ஜொலிக்கிறார் என்றும் எழுதியிருக்கிறது.


திரிஷா, வெறுமனே நாயகனுக்கு ஜோடியாக மட்டும் சில காட்சிகளில் தோன்றாமல், அவரது கதாபத்திரத்துக்கும் நல்ல கவனம் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.


‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ எனப்படும் LCU படங்களான கைதி, விக்ரம் ஆகியவை முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்களாக இருந்தபோதும் விக்ரம் படத்தில் குடும்ப சென்டிமென்ட் இருந்தது.


ஆனால், லியோ படத்தில் இருக்கும் குடும்ப சென்டிமென்ட் ஆக்ஷன் படத்தின் அதிரடி நகர்வைப் பாதிக்கிறது என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதியிருக்கிறது.


அதேநேரம், ‘LCU’ பகுதியும் வலிந்து திணிக்கப்பட்டதுபோல் தெரிந்தாலும், ‘லியோ’ படத்தின் மூலம் அடுத்த படத்திற்கான வலுவான கதையைப் பெற்றுள்ளார் என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.


விஜய், லியோ, லோகேஷ் கனகராஜ்பட மூலாதாரம்,7 SCREEN ENTERTAINMENT

படக்குறிப்பு,

திரிஷா, வெறுமனே நாயகனுக்கு ஜோடியாக மட்டுமே சில காட்சிகளில் தோன்றாமல், அவரது கதாபத்திரத்துக்கும் நல்ல கவனம் அளிக்கப்பட்டிருக்கிறது.


லியோ விஜய்க்கு இன்னொரு ‘கில்லி’ ஆனதா?

இந்து தமிழ் திசை, தனது விமர்சனத்தில், இப்படம், விஜய்யின் ஹிட் லிஸ்ட்டில் இன்னொரு படமாக அமைந்திருப்பதாகத் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறது.


அதிவேகமாக நகரும் படத்தின் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் அமைந்திருந்தால், ‘லியோ இன்னொரு கில்லியாக காலம் கடந்தும் விஜய்யின் மகுடத்தில் நின்றிருக்கும்,’ என்று கூறியிருக்கிறது.


“படத்தின் ஆகப் பெரும் குறை, உருக்கமான செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களிடையே எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாததுதான். படம் முழுக்க வரிசையாய் வில்லன்கள் இருந்தாலும் யாருடைய கதாபாத்திரமும் அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை.


சிங்கிள் சீனில் வந்தாலும், ‘ரோலக்ஸ்’ சூர்யா போன்ற மிரட்டல் காட்சிகள் வில்லன்களுக்கு இல்லை,” என்று எழுதியிருக்கிறது தி இந்து தமிழ் திசை.


மேலும், படம் முழுக்கவே தொடர்ந்து சண்டைக் காட்சிகள் வருவதும் அயர்சியைத் தருகிறது என்றும் விமர்சித்துள்ளது.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் - த்ரிஷா ஜோடி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது என்றும் இந்து தமிழ் திசை எழுதியிருக்கிறது.


விஜய், லியோ, லோகேஷ் கனகராஜ்பட மூலாதாரம்,7 SCREEN ENTERTAINMENT

படக்குறிப்பு,

இப்படத்தின் 'இருண்ட கடந்த காலம் கொண்ட நல்ல மனிதன்’ என்னும் கதை இந்தியத் திரைப்படங்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கதை வகை.


படத்தின் திரைக்கதை அதிரடியை தக்க வைத்ததா?

தி இந்தியன் எக்ஸ்பிரெஸ் நாளிதழ், ‘லியோ’ படம் அதிரடியாகத் தொடங்கினாலும், திரைக்கதை இரண்டாம் பாதியில் தொய்வடைவதாக எழுதியிருக்கிறது.


‘A History of Violence’ திரைப்படத்தை மறு உருவாக்கம் செய்திருந்தாலும், இப்படத்தில் அசல் தன்மை இல்லை, என்று கூறுகிறது இந்த விமர்சனம்.


‘இருண்ட கடந்த காலம் கொண்ட நல்ல மனிதன்’ என்னும் கதைக்களம் இந்தியத் திரைப்படங்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கதை வகை என்பதாலும், இப்படத்தில் எழுத்தாளரும் இயக்குநரும் அதை மேலும் மேம்படுத்தத் தவறியதாலும், லியோவின் திரைக்கதை லோகேஷின் திரைக்கதைகளிலேயே சுமாரானதாக இருக்கிறது, என்றும் இந்தியன் எக்ஸ்பிரெஸ் விமர்சனம் கூறியிருக்கிறது.


டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தைப் போலவே, இந்த விமர்சனமும், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் பகுதியாக இப்படம் அமைந்திருந்தாலும், அந்தத் தொடர்பு செயற்கையாகவும் வலிந்து திணிக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது, என்று எழுதியிருக்கிறது.


விஜய், லியோ, லோகேஷ் கனகராஜ்பட மூலாதாரம்,7 SCREEN ENTERTAINMENT

படக்குறிப்பு,

'லியோ படத்தில் இருக்கும் குடும்ப சென்டிமென்ட் ஆக்ஷன் படத்தின் அதிரடி நகர்வைப் பாதிக்கிறது'


இது லோகேஷ் யூனிவர்ஸா? விஜய் யூனிவர்ஸா?

ஆங்கில இணைய இதழான ஸ்க்ரோல், லியோ மெதுவாகத் தொடங்கி கிளைமேக்ஸையும் மெதுவாகவே அடைகிறது என்று எழுதியிருக்கிறது.


“இப்படத்தின் திரைக்கதை தேவையான இடங்களில் ஆர்வத்தைத் தூண்டுகிறது, ஆனாலும் இது பழக்கப்பட்ட கதைதான்,” என்று கூறியிருக்கிறது.


மேலும், லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இந்தப் படம் ஒரு பகுதியாக இருந்தாலும், விஜய்தான் தனது யூனிவர்ஸின் மாஸ்டர் என்று கூறியிருக்கிறது.


விஜய், லியோ, லோகேஷ் கனகராஜ்பட மூலாதாரம்,7 SCREEN ENTERTAINMENT

படக்குறிப்பு,

'லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் பகுதியாக இப்படம் அமைந்திருந்தாலும், அந்தத் தொடர்பு செயற்கையாகவும் வலிந்து திணிக்கப்பட்டதாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது'


அனிருத்தின் இசை எப்படி?

சமீபகாலமாகத் தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவாகி வரும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.


இப்படத்தின் இசையைப் பற்றி அனைத்து விமர்சனங்களும் பொதுவாகச் சாதகமாகவே எழுதியிருக்கின்றன.


இந்து தமிழ் திசை, “அனிருத் மீண்டுமொரு முறை இளைஞர்களை வசியம் செய்திருக்கிறார். படம் முழுக்கவே அனிருத் இசை விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டங்களை தரத் தவறவில்லை,” என்று எழுதியிருக்கிறது.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ், அனிருத் ரவிச்சந்தரின் ஒலிப்பதிவும் பின்னணி இசையும் படத்தின் வேகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்று கூறியிருக்கிறது.


“அவரது வழக்கமான ‘நட்சத்திர வழிபாட்டு’ இசையமைப்பில் இருந்து விலகி, அனிருத் மிக நல்ல பாடல்களுடன் லியோவுக்கு தனித்துவமான இசையைச் சேர்த்திருக்கிறார்,” என்று கூறியிருக்கிறது.


தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, படத்தின் இரண்டாம் பாதியில் அனிருத்தின் இசை உச்சத்தைத் தொடுவதாகக் கூறுகிறது. “முதல் பாதியில் ஒரு மெதுவான பாடல் மற்றும் இரண்டாம் பாதியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘நா ரெடி தான்’ ஆகியவை, படத்தை சமநிலையில் வைத்திருக்கின்றன. ஆனால் முதல் பாதியில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் ஆற்றல் மிகுந்த பின்னணி இசை தேவை,” என்று எழுதியிருக்கிறது.

 


இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா.

1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.

ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்தார்.

குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனோபாலா பங்கேற்றிருக்கிறார்.

பிரபல இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார்



 


சென்னை: 

விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் மனைவியுடன் மேடையில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பானு உடன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் ரஹ்மான் பேசி கொண்டிருந்தபோது, அவரது மனைவியை மேடைக்கு பேச வரும்படி அழைத்தார். சாய்ரா பானுவும் மேடைக்கு வந்தார். இருவரும் மேடையில் நின்று கொண்டிருக்கும் போது, சாய்ரா பானு பேச வேண்டிய சூழல் வந்துள்ளது. அப்போது அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது. உடனே ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியிடம் ‘இந்தியில் பேச வேண்டாம் தமிழில் பேசுங்கள்’ எனக் கூறுகிறார்.

இதை கேட்ட அங்கிருந்த ரசிகர்களிடம் இருந்து பலத்த கைதட்டல்கள் எழுந்தது. பின்னர், சாய்ரா பானு கூட்டத்தை வாழ்த்தி, “மன்னிக்கவும், என்னால் தமிழில் சரளமாக பேச முடியாது. எனவே, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன், ஏனென்றால் அவரது குரல் எனக்கு மிகவும் பிடித்தது. நான் அவரது குரலால் அவரை நேசித்தேன். அவ்வளவுதான். என்னால் சொல்ல முடியும்.” என சுருக்கமாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


BEST ORIGINAL SONG

"Naatu Naatu," from "RRR," music by M.M. Keeravaani; lyrics by Chandrabose


 1990ல் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான எம்.எம். கீரவாணியை அதற்கு அடுத்த ஆண்டே மரகதமணி என்ற பெயரில் தமிழில் அறிமுகப்படுத்தினார் கே. பாலசந்தர். தமிழில் அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை 15க்குள்தான் இருக்கும் என்றாலும் சில மறக்கமுடியாத தமிழ்ப் பாடல்களைத் தந்திருக்கிறார்.


தமிழில் அறிமுகமான அழகன் படத்திலேயே தமிழ் திரைப்படப் பாடல் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தார் அவர். மரகதமணி இசையமைத்து தமிழில் வெளியான சில இனிமையான பாடல்களின் பட்டியல் இது.


1. சங்கீத ஸ்வரங்கள் (அழகன்): அழகன் திரைப்படத்தில் கதாநாயகனான மம்மூட்டியும் நாயகியான பானுப்ரியாவும் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடும்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல் இது. இந்தப் படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும்கூட, இப்போதும் யாராவது தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினால் இந்தப் பாடலை ஒலிக்கவிட்டே சுட்டிக்காட்டும் அளவுக்கு, காலத்தால் அழியாத பாடல் இது. அருமையான இசை, அட்டகாசமான வரிகள் என எந்தத் தருணத்திலும் கேட்கத் தகுந்த பாடல் இது. இந்தப் பாடலின் பின்னணியில் வரும் காட்சியில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பு துவங்குவதற்கு முன்பாக ஒலிக்கும் பின்னணி இசையையும் பாடலின் ஒரு பகுதியாக பயன்படுத்தியிருப்பார் மரகதமணி. இந்தப் பாடலை சந்தியா என்பவரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் பாடியிருப்பார்கள்.


ஆஸ்கர் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி: மொழி எல்லைகளை கடந்த இசை சாதனையாளர்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்கர் விருது வென்றது ஆர்ஆர்ஆர் படத்தின் “நாட்டுக்கூத்து” பாடல் - ஆஸ்கர் மேடையில் கீரவாணி

9 மணி நேரங்களுக்கு முன்னர்

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

4 மணி நேரங்களுக்கு முன்னர்

2. மழையும் நீயே (அழகன்): இந்தப் பாடலும் அதே பாடத்தில் மம்முட்டிக்கும் பானுப்ரியாவுக்கும் இடையிலான பாடல்தான். இருவருக்கும் இடையிலான காதல் வளரும் நிலையில், பின்னணியில் ஒலிக்கும் பாடல் இது. இந்தப் பாடலில், மம்மூட்டிக்கு ஒரு கீ போர்டை வாங்கி அனுப்பும் பானுப்ரியா, "இசையைவிட இனிமையானவருக்கு - ப்ரியங்களுடன்" என்று எழுதப்பட்ட ஒரு வாழ்த்து அட்டையையும் வைத்திருப்பார். பதிலுக்கு, பானுப்ரியாவுக்கு ஒரு காரை வாங்கி அனுப்பும் மம்மூட்டி, "என்னைப் புதுப்பித்த புதியவளுக்கு" என்று எழுதப்பட்ட ஒரு வாழ்த்து அட்டையை காருக்குள் வைத்திருப்பார். மனதை வரும் மெல்லிசையும் வைரமுத்துவின் வரிகளும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமின் குரலும் சேர்ந்து மறக்க முடியாத பாடலின் பட்டியலில் இந்தப் பாடலைச் சேர்த்தன.


3. காலமுள்ளவரை (நீ பாதி நான் பாதி): கௌதமியும் ரகுமானும் நடித்த 'நீ பாதி.. நான் பாதி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், மிக வித்தியாசமான இசையுடன் இடம்பெற்றிருந்தது. வாலி எழுதிய இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியமும் சித்ராவும் பாடியிருந்தார்கள். முதல் முறை கேட்கும்போதே பிடித்துப்போகும் இந்தப் பாடல், அந்தத் தருணத்தின் சிறந்த மெல்லிசைப் பாடல்களில் ஒன்றாக இருந்தது.


4. நிவேதா (நீ பாதி நான் பாதி): ஒரு பாடல் நெடுக, ஒரே ஒரு வார்த்தையை வைத்து மட்டும் உருவாக்கி, அந்தப் பாடலை ஹிட் செய்ய முடியுமா? அதைச் செய்து காட்டினார் மரகதமணி. இந்தப் பாடல் நெடுக கதாநாயகி கௌதமி ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயரான 'நிவேதா' என்ற ஒரு வார்த்தை மட்டுமே திரும்பத் திரும்ப வரும். இருந்தபோதும், சலிப்புத்தட்டாத வகையில் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்.


 ஆஸ்கர் விருது - கீரவாணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

5. நன்றி சொல்லிப் பாடுவேன் (சேவகன்): நடிகர் அர்ஜுன் இயக்கிய இந்தப் படத்தில் அவரும் குஷ்புவும் நாயகன் நாயகியாக நடித்திருப்பார்கள். பெண் குரல் ஒலிக்கும்போது சோகமாகவும் ஆண் குரல் சந்தோஷமாகவும் பாடும் இந்தப் பாடல் அந்த சமயத்தில் தேநீர் கடைகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது.


6. கம்பங்காடு கம்பங்காடு (வானமே எல்லை): இந்தப் படத்தில் ப்ருத்விராஜும் விசாலி கண்ணதாசனும் இணைந்து பாடுவதைப் போல எடுக்கப்பட்ட இந்தப் பாடல், இப்போது கேட்டாலும் புதுமையாக ஒலிக்கக்கூடியது.. வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை, மரகதமணியும் சித்ராவும் இணைந்து பாடியிருந்தார்கள்.


7. மறக்கமுடியவில்லை (ஜாதிமல்லி): 1993ல் வெளியான ஜாதிமல்லி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை இப்போது எத்தனை பேர் நினைவில் வைத்திருப்பார்கள் என்பது தெரியாது. ஆனால், இந்தப் படம் வெளியான தருணத்தில் ஒரு மிகச் சிறந்த நினைவெழுச்சி பாடலாக இது இருந்தது. குஷ்புவுக்கும் முகேஷிற்கும் இடையிலான பாடலாக இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை, எஸ்.பி. பாலசுப்பிரமணியனும் சித்ராவும் பாடியிருந்தார்கள். "மழை ஆடிய எங்கள் வீதியில், அலை ஆடிய தண்ணீர் மேலே/விளையாடிய காகித கப்பல்/ மறக்க முடியவில்லை/ நான் ஆடிய காகித கப்பல்/ தண்ணீரில் மூழ்கும் முன்னே கண்ணீரில் மூழ்கிய சோகம்/மறக்க முடியவில்லை" என்ற வரிகள் பலரால் அப்போது தொடர்ந்து முணுமுணுக்கப்பட்டன.

 


இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை தற்போது சீராக இல்லை என்பதால், ''கருமேகங்கள் கலைகின்றன''  திரைப்படமே, அவரது இறுதித் திரைப்படமாக இருக்குமென, தகவல் வெளியாகியுள்ளது.

 


விஜயின் “வாரிசு” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை திரைப்படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது

 


நூருல் ஹுதா உமர்


புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சானது, கலைஞர்களின் தரவுத்தளத்தை தாபித்தலும் இற்றைப்படுத்தலும் மூலம் செயற்படுத்தப்படும் கலைஞர்களுக்கான ஒரு தரவுத்தளத்தை தாபித்தல் மற்றும் இற்றைப்படுத்தல் பற்றிய கருத் திட்டத்தின் கீழ் கலைஞர்களை ஒன்லைன் ( Onine ) ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் கலைஞர்களின் தகவல்களை திரட்டும்  நோக்கில் தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனை www.heritagemgiv.lk எனும் இணையத்தளம் ஊடாக அல்லது My Heritage எனும் Mobile Application மூலமாக கலைஞர்கள் தாங்களாகவே பதிவுசெய்து கொள்ளமுடியும். அதற்கான விளம்பர சுவரொட்டிகள் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் கலாசாரப் பிரிவு விளம்பர பலகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜமீல் காரியப்பர், மற்றும் இறக்காமம் பொதுநூலகம், கிராம சேவை உத்தியோகத்தர்கள், கலை மன்ற உறுப்பினர்களுக்கு கலாசார உத்தியோகத்தர்களான எம்.ஏ. நௌபீஸா, ஏ.எல்.பரீனா மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.

www.heritage.gov.lk என்ற  இணைத்தளத்தில் பிரவேசித்து கலைஞர்கள் பதிவு செய்து கொள்ள முடியும். பதிவு செய்து கொள்ளும் கலைஞர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் இலவசமாக பெற்றுக்கொடுக்கப்படும். இதன் ஊடாக சந்தை வாய்ப்புகளும் உருவாகும் . கலை ஆக்கங்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் கலைஞர்களின் கலை சார்ந்த தொழிலை பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும் .

 


திரைப்பட உலகில் 25 ஆண்டுகளாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய், தனது பிறந்த வயது 49 என்பதை நம்ப முடியாதவராக இருக்கிறார். சமீபத்தில் ஒரு திரைப்படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்தபடி இந்த கருத்தைத்தான் ஐஸ்வர்யா ராய் பகிர்ந்திருக்கிறார்.

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கதாநாயகிகள் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இங்கு அறிமுகமாகும் பெண்களை விட வடக்கத்திய ஹீரோயின்களைக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.

ரத்தி, மாதவியில் ஆரம்பித்து மதுபாலா, பல்லவி, ரூபிணி, மும்தாஜ், ரீமா சென், லைலா, ஜுகி சாவ்லா, நக்மா, ஜோதிகா, கஜோல், மனிஷா கொய்ராலா, மல்லிகா ஷெராவத், சோனியா அகர்வால், காஜல் அகர்வால், குஷ்பு, தபு, இஷா கோபிகர், ராணி முகர்ஜி, ஊர்மிளா, ஷில்பா ஷெட்டி, ஜெனலியா, இலியானா, ஹன்ஸிகா மோத்வானி, சமீபத்திய வரவான சித்தி இத்னானி வரை ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

இவர்கள் எல்லோருமே தமிழ், மற்றும் தெலுங்கு, கன்னட திரைகளில் குறைந்த பட்சம் ஐந்து முதல் பத்தாண்டுகளாவது பிசியாக இருந்தவர்கள். இதில் குஷ்புவும் ஜோதிகாவும் தமிழ்நாட்டின் மருமகள்களாகவே மாறி சென்னையிலேயே செட்டிலாகி இரண்டு குழந்தைகளுக்கும் தாயாராகி விட்டவர்கள்!

இதில் ஐஸ்வர்யா ராய் மட்டும் சினிமாவில் அறிமுகமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆனாலும் இன்றும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

பணத்திற்கு டி.டி. எடுத்துக் கொண்டு ராஜீவ்மேனனோடு மும்பைக்குப் போய் அதைக் கொடுத்து வந்தேன்.

அப்போது அவரிடம் "இந்த மாதிரி தயாரிப்பாளர் கிடைத்திருப்பது என் பாக்கியம்" என்று சொல்லி இருக்கிறார். அவரது அந்த பழகும் தன்மையும், எளிமையும்தான் அவரது மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்" என்கிறார் எஸ்.தாணு.


முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.



68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் "சூரரைப்போற்று" தமிழ் திரைப்படத்திற்கான சிறந்த நடிகர்,சிறந்த நடிகை சிறந்த இசையமைப்பாளர் சிறந்த தயாரிப்பாளர் என பல தேசிய விருதுகளை பெற்றுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
 
68வது தேசிய திரைப்பட விருதுகள் - சுதா கொங்கரா

சிறந்த திரைக்கதை (சூரரைப் போற்று)


 மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த வாரம் வெளியாகிறது. தமிழில் மிகப் பிரபலமான இந்த நாவல் சொல்லும் கதை என்ன?



மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், ரகுமான், நிழல்கள் ரவி என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நாடு முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.


இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தமிழின் மூத்த எழுத்தாளரான ஜெயமோகன் வசனம் எழுத, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.


பொன்னியின் செல்வன் நாவலின் பின்னணி

கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் தமிழில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி (1899-1954) தன்னுடைய பத்திரிகையான கல்கியில் 1950ஆம் ஆண்டிலிருந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு எழுதிய வரலாற்று நாவல்தான் பொன்னியின் செல்வன்.


பிற்காலச் சோழர்களில் புகழ்பெற்று விளங்கிய ராஜராஜசோழனின் தந்தையான சுந்தரசோழன் என்ற இரண்டாம் பராந்தகச் சோழனின் (963-980) காலத்தில் நடந்த சில சரித்திர நிகழ்வுகளை மையப்படுத்தி, இந்த நாவலை கல்கி எழுதியிருந்தார். இந்த நாவலில் பல உண்மைப் பாத்திரங்களும் பல கற்பனைப் பாத்திரங்களும் இடம்பெற்றிருந்தன.


பிரபல சரித்திர ஆசிரியர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய 'The Cholas' புத்தகமும் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய 'History of the Later Cholas' நூலையும் பயன்படுத்தியே இந்த நாவலை கல்கி உருவாக்கினார். ஆர். கோபாலனின் 'Pallavas of Kanchi' உள்ளிட்ட புத்தகங்களும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன.


இந்த நாவலுக்காக சோழ நாட்டிலும் (தற்போதைய தஞ்சாவூர், நாகப்பட்டனம், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள்) இலங்கையிலும் பல பயணங்களை மேற்கொண்டார் கல்கி. அப்போது அவருடன் ஓவியரான மணியனும் உடன் சென்றார். பொன்னியின் செல்வன் கல்கி இதழில் வெளியானபோது, மணியனே ஓவியங்களை வரைந்தார். 2,400 பக்கங்களுக்கு மேல் நீளும் இந்த நாவல் 5 பாகங்களைக் கொண்டது.


சிவப்புக் கோடு

பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எப்படி உள்ளது?

பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் - பாகம் 1

பொன்னியின் செல்வன்: கதைச் சுருக்கம் - பாகம் 2

பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் - பாகம் - 3

சிவப்புக் கோடு

பொன்னியின் செல்வன் நாவலின் கதை என்ன?

கல்கி

இரண்டாம் பராந்தகச் சோழன் எனப்படும் சுந்தர சோழனின் கடைசி சில ஆண்டுகளில் இந்த கதை நடக்கிறது. சுந்தர சோழனுக்கு ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன் என மூன்று மகன்கள். ஆதித்த கரிகாலனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்பட்டிருக்கிறது.


காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டியிருக்கும் ஆதித்த கரிகாலன், தஞ்சாவூரில் வசிக்கும் சுந்தர சோழன் தன்னுடைய மாளிகையில் வந்து வசிக்க வேண்டுமென ஓலை எழுதி, அதனை தன் நண்பன் வந்தியத்தேவனிடம் கொடுத்து அனுப்புகிறான். தஞ்சாவூருக்குச் செல்லும் வழியில், கடம்பூரில் இருக்கும் ஓர் அரண்மனையில் தங்கும் வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலனுக்கு எதிராக சோழ நாட்டின் தனாதிகாரி பழுவேட்டரையர் தலைமையில் சதி நடப்பதைக் கண்டுபிடிக்கிறான்.


பிறகு சுந்தர சோழரையும் அவரது மகள் குந்தவையையும் சந்தித்து ஓலைகளைக் கொடுக்கிறான். அப்போது குந்தவை, இலங்கையில் போரிட்டுக் கொண்டிருக்கும் தன்னுடைய இளைய சகோதரனை தஞ்சைக்கு அழைத்துவரும்படி, வந்தியத்தேவனிடம் கோருகிறாள். இதற்காக இலங்கைக்குச் செல்கிறான் வந்தியத்தேவன்.


இதற்கிடையில், ஆதித்த கரிகாலனுக்கு எதிராக சதி செய்த பழுவேட்டரையர், அருள்மொழி வர்மனை சிறைப்பிடித்து அழைத்து வர இரண்டு கப்பல்களை அனுப்புகிறார். அதில் ஏறி வந்தியத்தேவனும் அருள்மொழி வர்மனும் வரும்போது அந்த கப்பல்கள் புயலில் சிக்குகின்றன. அவர்களைப் பூங்குழலி என்ற மீனவர் குல பெண் காப்பாற்றுகிறாள்.


அருள்மொழி வர்மனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட அவர் நாகப்பட்டினத்தில் உள்ள புத்த விகாரையில் சிகிச்சை பெறுகிறார். இதற்கிடையில், ஆதித்த கரிகாலனுக்குப் பதிலாக அவனுடைய சித்தப்பாவான மதுராந்தகனை பதவியில் அமர்த்தும் சதித்திட்டம் வேகமெடுக்கிறது. இதில் பழுவேட்டரையர், அவருடைய மனைவி நந்தினி உள்ளிட்டவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.


பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,MADRAS TALKIES

கடம்பூர் என்ற இடத்தில் இருக்கும் மாளிகைக்கு ஆதித்த கரிகாலனை வரழைத்துக் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். அதன்படி, ஆதித்த கரிகாலன் கொலைசெய்யப்படுகிறான். அந்தக் கொலைப் பழி வந்தியத்தேவன் மீது விழுகிறது.


இதற்குப் பிறகு, வந்தியத்தேவன் அந்தப் பிரச்சனையிலிருந்து எப்படித் தப்பினான், பெரிய பழுவேட்டரையர் என்ன ஆனார், நந்தினி என்ன ஆனாள், வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் இடையிலான காதல் என்ன ஆனது என்பதே மீதிக் கதை.


1950களில் பிரபலமான நாவல்

1950களில் இருந்து தமிழ்நாட்டில் மிகப் பிரபலமாக விளங்கும் இந்த நாவல் இதுவரை லட்சக் கணக்கான பிரதிகள் விற்றிருக்கின்றன. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் எழுத்துகள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், பல பதிப்பகங்கள் பல்வேறு தரத்தில், பல்வேறு விலையில் இந்த நாவலைப் பதிப்பித்திருக்கின்றன.


1950ல் முதன் முதலில் கல்கி இதழில் தொடராக வெளியான இந்த நாவல், அதற்குப் பிறகு பல முறை தொடராக வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தத் தொடர் வெளியான ஒவ்வொரு முறையும் கல்கி இதழின் விற்பனை கணிசமாக உயர்ந்தது.


இப்போது இந்தத் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் மறுபடியும் பொன்னியின் செல்வன் நாவல் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. தமிழில் உள்ள பல பதிப்பகங்கள் அந்த நாவலை வெளியிட்டுள்ளன. ஆங்கிலத்திலும் அந்த நாவல் இரு முறை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.



காணொளிக் குறிப்பு,

பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம் - பாகம் 1


அந்த நாவலின் சுருக்கமான வடிவமும் தற்போது வெளியாகி, பல ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.


மணிரத்னம் பொன்னியின் செல்வனை இரு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், மணிரத்னத்திற்கு முன்பாகவே பலர் இந்த நாவலை திரைப்படமாக்கத் திட்டமிட்டு, அது முடியாமல் போயிருக்கிறது.


நடிகரும் இயக்குநரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி. ராமச்சந்திரன் இந்த நாவலைத் தானே தயாரித்து, இயக்க விரும்பினார்.


1958இல் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். வைஜெயந்திமாலா, சாவித்திரி, ஜெமினி கணேசன், சரோஜா தேவி, பாலைய்யா, எம்.என். நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.


இதற்குப் பிறகு இந்த நாவலை படமாக்குவது குறித்து கமல்ஹாசன் பலமுறை பேசியிருக்கிறார். இருந்தபோதும் அது நடக்கவில்லை. 1990களின் துவக்கத்தில் இந்த நாவலைப் படமாக எடுப்பது தனது கனவுத் திட்டம் என்றார் மணிரத்னம். அதற்குப் பிறகு பல முறை இது தொடர்பாக பேசப்பட்டும், அந்த முயற்சி நிறைவேறவில்லை.


பிறகு ஒரு வழியாக 2019ஆம் ஆண்டில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக்கப்படுவதாக மணிரத்னம் அறிவித்தார். இந்தப் படத்திற்கான தயாரிப்புச் செலவு எவ்வளவு என்பதை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 500 கோடி ரூபாய் செலவாகியிருக்கலாம் என சில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 250 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் காலை 4.30 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்து விட்டன.

 


திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பூ பார்வதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான திரைப்படங்கள் குறித்து பேசினார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடந்த ஆணவ படுகொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையை அடுத்த வெள்ளலூரில் "குமுக‌‌ழ அழககம்" என்ற பெயரில் குடும்ப அழகு நிலையம் ஒன்றைத் திறந்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகை "பூ" பார்வதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை பார்வதி, "கௌசல்யா மற்றும் அவரைப் போன்ற பெண்களுக்காக நான் இங்கு வந்துள்ளேன், 


காதலிப்பதற்கும் அவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்கும் பெண்களுக்கு முழு உரிமை உண்டு. பெண்களின் உரிமையைச் சிலர் திருட பார்க்கிறார்கள். அதையும் தாண்டி அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்த கௌசல்யா, நிஜ வாழ்க்கை ஹீரோவாக திகழ்கிறார். அவரின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தால் அதற்கு நான் துணை நிற்பேன். ஆணவ படுகொலைகளுக்கு எதிராக வெளிவரும் படங்கள் வரவேற்கத்தக்கன.மரியான் திரைப்படத்திற்குப் பிறகு ஏன் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, காதல் சார்ந்த திரைக்கதைகள் மட்டுமே எனக்கு தமிழில் வந்தது. அவை மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும், அதனால் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.