Showing posts with label Court. Show all posts

 


தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பிலான வழக்கில் வாழைச்சேனை தவிசாளர்,பிரதி தவிசாளர் உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேருக்கும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர் இரண்டு உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் இன்றைய தினம்  (25) வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

 

கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.

 

வாழைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாக தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் குறித்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.

 

இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துவந்தனர்.

 

இதன்கீழ் வாழைச்சேனை பிரதேசபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக்குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்றைய தினம்(24)  வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.

 

இது தொடர்பில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர் உறுப்பினர் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் நால்வரும் ஆஜராகியிருந்தனர்.

 

இன்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியுள்ளார்.

 

பெயர் பதாகைகளை திருடியது,அரச உத்தியோகத்தர் ஒரு விடயத்தினை அதாவது ஒரு பெயர் பலகையினை நட்டால் அது அப்புறப்படுத்துவது குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த குற்றச்சாட்டுகள் பொருத்தமற்ற குற்றச்சாட்டுகள் என்று நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணி சுமந்திரனால் கொண்டுசெல்லப்பட்டதுடன் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேசசபை சட்டத்தின் கீழ்பொதுவழிகள் சட்டம் தொடர்பில் சொல்லப்பட்டுள்ளது வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேசசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.பிரதேசசபை தவிசாளர் அந்த சட்டத்தின் கீழ் அதிகாரமுடையவர்.அந்த அதிகாரத்தின் கீழ் செய்யப்பட்ட விடயத்தினை அகற்றினார் என்று எக்காலத்திலும் குற்றச்சாட்டினை முன்வைக்கமுடியாது.அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அதனை அவர் செய்துள்ளார் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

 

அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் அனுமதியைப்பெற்றே பெயர்ப்பலகை இடப்படவேண்டும் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணியினால் கொண்டுவரப்பட்டபோது அதனை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் முறையான அனுமதியைப்பெற்றுக்கொள்வதாகவும் எதிர்காலத்தில் முறையாக அனுமதி கோரும்போது அதனை சபையில் சமர்ப்பித்து சபையினால் முறையான அனுமதியை வழங்கமுடியும் என்று கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக தீர்க்கலாம் என்ற காரணத்தினாலும் பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிணைவழங்ககூடிய காரணங்களைக்கொண்டிருப்பதனாலும் ஐந்து பேரையும் பிணையில் செல்ல அனுமதித்தது.

 

எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் பிரதேசசபையின் முறையான அனுமதிபெறப்பட்டு பெயர்ப்பலகையிடும் பணிகள் நடைபெற்று இது தொடர்பான பிரச்சினை முடிவுறுத்தப்படுமானால் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த வழக்கு முடிவுக்கு வரும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.

 


இதன்போது வாழைச்சேனை பிரதேசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர்,இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுதியளித்து. இந்த வழக்கானது மீண்டும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

வீரமுனை செய்தியாளர்

 


ஓட்டமாவடி முன்னாள் தவிசாளர் பைறூஸ் தாக்கல் செய்த வழக்கு டிஸம்பர் 9 ஆம் திகதி ஒத்திவைப்பு


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்று (11) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.


ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளராக இருந்த பைறூஸ் ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பைறூஸின் உறுப்புரிமையை நீக்கி இருந்தது.


இவ்விடயம் தொடர்பில் முன்னாள் தவிசாளர் பைறூஸ் இடைக்கால தடையுத்தரவு வேண்டி வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார்.


குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.


இவ் வழக்கு டிஸம்பர் மாதம் 9 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


முன்னாள் தவிசாளர் பைறூஸின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக கடந்த 31 ஆம் திகதி வர்த்தமானி பிரசுரமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்க கொழும்பு உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது, அதை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது

 


நூருல் ஹுதா உமர்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ. அஸ்பர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடை விதிக்குமாறு கோரிய வழக்கு இன்று (23.10.2025) எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் டிசம்பர் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தவிசாளரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டமையை ஆட்சேபித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையை நீக்குவதாக எழுத்து மூல அறிவிப்பை விடுத்திருந்த நிலையிலேயே குறித்த இடைக்காலத்தடை கோரி வழக்கு தவிசாளரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவி வெற்றிடமாக்கப்படுவதுடன் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஏ. அஸ்பர் அவர்களுக்கு மாற்றீடாக கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட வேறு நபரின் பெயர் இன்று அல்லது நாளை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் படி மிக விரைவில் நிந்தவூர் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


2012 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக தங்காலை உயர் நீதிமன்றத்தால் "ஜூலம்பிட்டி அமரே" என்று பிரபலமாக அறியப்படும் ஜி.ஜி. அமரசிங்கவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று (அக். 7) உறுதி செய்தது.


தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி அமரசிங்க தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிபதிகள் ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து, அதன் மூலம் மரண தண்டனையை உறுதி செய்தது.

தன்னை நிரபராதி என்று கூறி விடுவிக்கக் கோரி அமரசிங்க தனது சட்ட ஆலோசகர் மூலம் மேல்முறையீடு செய்திருந்தார், ஆனால் உச்ச நீதிமன்றம் அதை முழு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

2012 ஆம் ஆண்டு கட்டுவன பகுதியில் நடந்த மக்கள் விடுதலை பெரமுன (ஜே.வி.பி) கூட்டத்தின் போது இரண்டு நபர்களை சுட்டுக் கொன்று மற்றொருவரை கடுமையாக காயப்படுத்தியதற்காக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

தங்கலை உயர் நீதிமன்றத்தில் அமரசிங்க மற்றும் பிறருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 



யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய சட்டத்தரணி இன்று திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர் , பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் முற்படுத்திய வேளை , கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது.

அதேவேளை குறித்த சட்டத்தரணியின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுகிழமை பொலிஸார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து எவ்விதமான நீதிமன்ற கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக நடந்து கொண்டதாகவும், பொலிஸாரின் குறித்த செயல்களை கண்டித்து நாளைய தினம் செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி வழக்குகளில் சில சட்டத்தரணிகள் நேரடியாக தொடர்பு பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு தாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


 

முல்லைத்தீவில் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி 

முல்லைத்தீவு, முத்தையன்கட்டுப் பகுதியில் அண்மையில் இராணுவ முகாம் ஒன்று விடுவிக்கப்படவிருந்த நிலையில், அங்கிருந்த தகரங்களை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்த முகாமில் இருந்து தகரங்கள் தருவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இராணுவ வீரர் ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

இதையடுத்து, தகரங்களை எடுப்பதற்காக ஐந்து இளைஞர்கள் அந்த இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்ற இளைஞர்களை இராணுவத்தினர் தடிகள் மற்றும் கம்பிகளால் தாக்கி விரட்டியதாகவும், அதனால் பயந்து ஓடியதாகவும் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்பு மற்றும் விசாரணை

இராணுவ முகாமுக்குச் சென்ற ஐந்து பேரில் நான்கு பேர் திரும்பிய நிலையில், ஒரு இளைஞர் காணாமல் போயிருந்தார். காணாமல் போன இளைஞன் ஓடும்போது முகாமுக்குப் பின்னால் உள்ள முத்தையன்கட்டு குளத்தில் விழுந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது. இதனால் கிராம மக்கள் குளத்தில் இறங்கித் தேடியபோது, அந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இறந்த இளைஞரின் சகோதரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தனது தம்பியை இராணுவத்தினர் அடித்துக் கொலை செய்து குளத்தில் போட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இறந்த இளைஞரின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 


வழக்கு பதிவேட்டின் பக்கங்களைக் கிழித்த சட்டத்தரணிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

SC Rule No. 16/2023


Decided on 06.08.2025


"Respondent Attorney-at-Law has been found guilty of an act of deceit which is also a malpractice, acting in terms of Section 42 of the Judicature Act,

the Respondent Attorney-at-Law... be removed from office as an Attorney-at-Law"

2023ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவறையில் வழக்கு பதிவேட்டின் இரண்டு பக்கங்களை கிழித்த சம்பவம் தொடர்பாக சட்டத்தரணி தர்மசிறி கருணாரத்ன, ஏமாற்றும் நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக, உயர் நீதிமன்றத்தால் சட்டத்தரணிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமின் ஏனைய நீதியசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் இது தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.


குறித்த சட்டத்தரணியின் செயல்கள் நாட்டின் சட்டத் துறையின் மதிப்பை சேதப்படுத்தியுள்ளதாகவும், அவர் நீதித்துறைச் சட்டத்தின் சில பிரிவுகளையும் உயர்நீதிமன்ற விதிகள் 60 மற்றும் 61ஐ (சட்டத்தரணிகளுக்கான நடத்தை மற்றும் ஒழுக்கம்) மீறியுள்ளதாகவும் பிரதம நீதியரசர் தமது தீர்ப்பில் அறிவித்தார்.


அத்துடன்,குறித்த பதிவேட்டை பார்வையிட அனுமதி பெறும் போதே அவர் பொய்யான பெயரொன்றை வழங்கியதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பிரதிவாதியை சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறும், அந்த உத்தரவை உடனடியாக அமுல்படுத்துமாறும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு பிரதம நீதியரசர் உத்தரவிட்டார்.

 



இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள BYD மின்சார கார்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மேலதிக சமர்ப்பணங்களை உறுதி செய்வதற்காக இந்த மாதம் 7 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இந்த மனு இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன் அழைக்கப்பட்டிருந்தது. 

இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி பர்சானா ஜமீல், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த வாகனங்களை தடுத்து வைக்க சுங்கம் எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

குறித்த வாகனங்களை வங்கி பிணைப்பத்திரங்களுக்கு அமைய சுங்கத்திற்கு விடுவிக்க முடியும் என அவர் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார். 

இதன்போது இலங்கை சுங்கம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன சமர்ப்பணங்களை முன்வைத்து, இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட 997 வாகனங்கள் சுங்கத்தின் பொறுப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

அந்த வாகனங்களின் மோட்டார் திறன் 100 கிலோவாட்டா? அல்லது 150 கிலோவாட்டா? என்பதை முடிவு செய்ய மொரட்டுவை மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரண்டு நிபுணத்துவமிக்க பேராசிரியர்கள் மற்றும் BYD-யின் இரண்டு பொறியாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

அந்த அறிக்கை கிடைக்கும் வரை குறித்த வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய வரிகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் கணக்கிட்டு, அந்தத் தொகையை சுங்க பணிப்பாளர் கணக்கில் வைப்புத்தொகையாக வைப்பு செய்தால், அந்த வாகனங்களில் 06 வாகனங்களை விசாரணைக்காகத் தக்கவைத்துக் கொண்டு, மீதமுள்ள வாகனங்களை விடுவிக்கலாம் என்றும் பிரதிவாதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். 

இந்த சமர்ப்பணங்களின் பின்னர் குறித்த மனுவை இந்த மாதம் 7 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட நீதியரசர்கள் அமர்வு, இந்த முன்மொழிவு குறித்து மனுதார் தரப்பின் நிலைப்பாட்டை அன்றைய தினம் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டனர். 

இந்த மனு, ஜோன் கீல்ஸ் சிடி ஒட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது

 


செம்மணி, கல்லறை தளத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆடைகள் மற்றும் பிற கலைப்பொருட்களை அடையாளம் காணுமாறு 



யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். #இலங்கையின் மனித புதைகுழி விசாரணைகளில் முதன்முதலாக, ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் 5.00 மணி வரை அகழ்வாராய்ச்சி வளாகத்தில் இந்தப் பொருட்கள் பொதுக் காட்சிக்கு வைக்கப்படும்




 எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவில் தொடர்புடைய அரசு சாராத தரப்பினர் ஒரு வருடத்திற்குள் ஆரம்ப தொகையாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், அந்தப் பணத்தை திறைசேரி செயலாளருக்கு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


மிக மோசமான கடல்சார் பேரழிவில் கப்பலால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சேதத்திற்கு இந்த நட்டஈடு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.


 



விதுர ரலபனாவ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவைத் தொடர்ந்து, தனிநபர்களை அறிக்கைகளுக்காக காவல் நிலையங்களுக்கு வரவழைக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் சுற்றறிக்கையை இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ளது.


ரலபனாவ வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், சம்மனுக்கான எந்தவொரு குற்றச்சாட்டுகள் அல்லது காரணங்கள் குறித்து அவருக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், இது அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் கூறி, பொலிஸாரால் சம்மன் அனுப்பப்பட்ட பின்னர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.


மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சாலிய பீரிஸ், இலங்கை மின்சார வாரியம் பற்றிய பேஸ்புக் பதிவு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு சம்மன் அனுப்பியதற்காக ரலபனாவ சவால் விடுத்த உச்ச நீதிமன்ற அடிப்படை உரிமைகள் விண்ணப்பம் SC(FR) 266/2023 இன் விளைவாக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டார்.


பதில் காவல் ஆய்வாளர் (IGP) பிரியந்த வீரசூரியவின் சுற்றறிக்கை இப்போது சந்தேக நபர்கள் அல்லது சாட்சிகளை வரவழைக்கும்போது போதுமான தகவல்களை வழங்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்துவதாகவும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், குற்றம் வெளிப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே காவல்துறை செயல்பட முடியும் என்பதை அதிகாரிகளுக்கு நினைவூட்டுவதாகவும் சாலிய பீரிஸ் கூறினார்.


புதிய வழிகாட்டுதல்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றன:


சந்தேக நபர்களுக்கு அழைக்கப்படும்போது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் அல்லது குற்றச்சாட்டுகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.


சாட்சிகளுக்கு அவர்களின் வாக்குமூலத்தின் நோக்கம் மற்றும் நடந்துகொண்டிருக்கும் விசாரணைக்கு அதன் பொருத்தம் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.


சந்தேக நபர்கள் அல்லது சாட்சிகள் அல்லாத காரணங்களுக்காக அழைக்கப்பட்ட நபர்களுக்கு கோரிக்கைக்கு போதுமான சூழல் வழங்கப்பட வேண்டும்.


தொலைபேசி மூலம் சம்மன் அனுப்பப்பட்டால், பொறுப்பான அதிகாரி மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


விசாரணை தொடர்பான தகவல்களை புகார்தாரர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் அல்லாத பிற தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளும்போது, ​​குறிப்பாக வெளிப்படுத்தல் வழக்கை பாதிக்கக்கூடும் என்றால், அதிகாரிகள் விருப்புரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

The Sri Lanka Police has issued a circular outlining procedures to be followed when summoning individuals to police stations for statements, following a fundamental rights petition filed by Vidura Ralapanawa.

Ralapanawa had filed the petition after being summoned by police over a social media post he had published, where he was not informed of any charges or reasons for the summons, which he alleged violated his fundamental rights.

Attorney Saliya Pieris, who appeared on behalf of the petitioner, noted that the circular was issued as a result of the Supreme Court fundamental rights application SC(FR) 266/2023, in which Ralapanawa challenged the Criminal Investigation Department for summoning him regarding a Facebook post about the Ceylon Electricity Board. 

Saliya Pieris said that the acting Inspector General of Police (IGP) Priyantha Weerasooriya’s circular now directs police to provide adequate information when summoning suspects or witnesses and reminds officers that, under the Criminal Procedure Code, police may only act when an offence has been disclosed.

The new guidelines specify the following:

  1. Suspects must be informed of the specific charges or allegations when being summoned.
  2. Witnesses must be told the purpose of their statement and its relevance to an ongoing investigation.
  3. Individuals summoned for reasons other than as suspects or witnesses must also be given sufficient context for the request.
  4. If a summons is issued via telephone, the Officer in Charge must ensure the above procedures are followed.
  5. Officers must exercise discretion when sharing investigation-related information with parties other than complainants, victims, or witnesses, especially if disclosure could impact the case. 

 


காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

ஜனாதிபதி சட்டத்தரணி M. A. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று (27) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தகமானியை தற்காலிகமாக வலிதற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளநிலையில், அதற்கிடையில் குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இல. SC/FR/112/25 இல் மனுதாரர் M.A. சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் க. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொண்சேகா, லக்ஷ்மணன் ஜெயக்குமார், நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.



வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்பவர் சட்டவிரோதமாக ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மொஹான் கருணாரத்ன எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


குறித்த வழக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) விசாரணைக்கு வந்தபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதன்போது,பிரதிவாதியான டபிள்யூ. எம். அதுல திலகரத்னவும் அந்தச் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் இருந்தார். 

அவர் தொடர்ந்த மற்றொரு வழக்கு முடிவுக்கு வந்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி சார்பாக ஆஜரான மூத்த சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல, தனது கட்சிக்காரரான பிரதிவாதி டபிள்யூ.எம். அதுல திலகரத்ன சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டதாக திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இந்த நேரத்தில் பிரதிவாதியான அதுல திலகரத்னவும் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதன் மூலம் இது மேலும் உறுதிப்படுத்தப்படுவதாகவதாக சட்டத்தரணி குறிப்பிட்டார். 

சட்டத்தரணி பேசிக் கொண்டிருக்கும்போது, ​​பிரதிவாதியான அதுல திலகரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் இருந்த திறந்த நீதிமன்ற அறையில் கையை உயர்த்தி, தான் நீதிமன்றத்தில் இருப்பதாக நீதவானிடம் தெரிவித்தார். 

பிரதிவாதியான அதுல திலகரத்னவின் சட்டத்தரணி சுரங்க மொஹோட்டி, தனது கட்சிக்காரர் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள HC/69/2018 வழக்கிலிருந்து சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டதால் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இருப்பினும், பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தெரிவித்தார். 

பிரதிவாதியின் சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி அரவிந்த ஹபக்கல, வெசாக் பௌர்ணமி தினத்தன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் பட்டியலில் டபிள்யூ.எம். அதுல திலகரத்னவின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

 

இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரியின் பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.


இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களை, இலங்கை கிரிக்கெட் சபை ஊழியர்களாக கருதி, அவர்களிடம் நிறுத்தி வைக்கும் வரி அறவிடும் முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, வரும் 28 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த மனு இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க மற்றும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

மனுதாரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நிஷான் பிரேமதிரத்ன, மனுதாரர்களான கிரிக்கெட் வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்கள் அல்ல என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

2022 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம், தேசிய மட்டத்திலான கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்கள் என்று விளக்கியுள்ளார், இது தவறானது என்று மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். 

தனது வாடிக்கையாளர்கள் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட சலுகைகளுக்கு உரியவர்கள் அல்ல என்றும், எந்தவொரு நியாயமான விசாரணையும் இல்லாமல் தனது வாடிக்கையாளர்கள் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழியர்களாக வகைப்படுத்தப்பட்ட முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபை சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சொய்சா, நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்து, மனுதாரர்கள் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழியர்கள் அல்ல, மாறாக சுயாதீன சேவை வழங்குநர்கள் என்று சுட்டிக்காட்டினார். 

2022 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட உள்நாட்டு இறைவரி சட்டத்தின் கீழ், தேசிய மட்டத்திலான கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்களாகக் கருதி, ஜனவரி 1, 2023 முதல் அவர்கள் மீது நிறுத்தி வைக்கும் வரியை விதிக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். 

இந்தப் பிரச்சினை காரணமாக, 2024 நவம்பர் முதல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் கிரிக்கெட் வீரர்களுக்கு பணம் செலுத்த முடியவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். 

அதன்படி, இலங்கை கிரிக்கெட் சபை சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, மனுதாரரின் கோரிக்கைகளை ஆதரிப்பதாகக் கூறினார். 

அதன் பின்னர், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர டி சில்வா, நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்ட வீரர்கள் அதன் ஊழியர்களாக விளக்கப்படுவதாகக் கூறினார். 

அதன்படி, அவர்கள் வரி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார். 

அதன் பின்னர், குறித்த மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் வாதங்களை முன்வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.