Showing posts with label Court. Show all posts

 


அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், பொலிஸார் அவரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 


தடுப்புக்காவலில் இருந்த வசந்த முதலிகே சார்பில் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் உடன்பாட்டுடன், உயர்நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா இந்தத் தீர்ப்பை வழங்கினார். 


2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, அதன் அப்போதைய ஒருங்கிணைப்பாளரான வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.


இதனை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


நீண்ட விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள் குழாம், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்குத் தேவையான நியாயமான சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விடயங்களை பிரதிவாதிகள் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டியது. 


அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க பிரதிவாதிகள் தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாதுகாக்கப்பட்ட யாழ்ப்பாண பழைய பூங்கா வளாகத்திற்குள் முன்மொழியப்பட்ட உட்புற விளையாட்டு அரங்கக் கட்டுமானத்தை நிறுத்தி வைக்கும் இடைக்கால உத்தரவை யாழ்ப்பாண உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது, இது திட்டத்தைத் தொடர அனுமதித்த முந்தைய மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை மீறியது.


கடந்த வாரம் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, ​​மனுவின் இறுதித் தீர்ப்பு வரும் வரை                          ....  .. ..  .   .        ........ ......           .... .   ..   ..          ..         ..       .     . .. . .  .          ....    ..... .  .     ...      ..         ...   ..     ..         . ..                                  ..   
     .                       .   .   . . .    .  .        .        . .                                     .                                  .  . .  ... .     
                      .  .              .    Hb..h.bbnngnbmbbvvv. Hjhyyyyyj.njyyyyyyytttgt உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

தடை உத்தரவு தீர்க்கப்படும் வரை எந்த கட்டுமானமும் நடைபெறாது என்று சட்டமா அதிபர் உத்தரவாதம் அளிக்க முடியுமா என்று கேட்டபோது, ​​அரசு வழக்கறிஞர்கள் பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரினர்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ரூ. 170 மில்லியன் திட்டம், இப்பகுதியில் உட்புற விளையாட்டுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், இந்த இடம் பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகி சர் பெர்சிவல் அக்லாண்ட் டைக்கால் 1853 ஆம் ஆண்டு பரிசாக வழங்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டு அறக்கட்டளை சொத்து என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

இந்தத் திட்டத்திற்கான ஆட்சேபனைகளை ஏப்ரல் 30 ஆம் தேதி உயர் நீதிமன்றம் விசாரிக்கும்.

 

இலங்கை மேல் நீதிமன்றுக்கு புதிய நீதிபதியாக எஸ் சதீஸ்கரன் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வினால் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சாவகச்சேரி  நீதிமன்றின்  நீதிபதியாக ற செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சாவகச்சேரி மாவட்ட நீதிபதி எஸ். சதீஸ்தரன் அவர்கள் இன்று (மார்ச் 13, 2026) அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

இவர் இலங்கை நீதிச் சேவையின் விசேட தர (Special Grade) அதிகாரி ஆவார்.

அரசியலமைப்பின் 111 (2) ஆம் உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

எஸ். சதீஸ்தரன் அவர்கள் இதற்கு முன்னர் யாழ்ப்பாண நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதியாக நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#judgement #Judicial #followers


 


தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இன்று (23) உத்தரவிட்டுள்ளது.


2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்தமை தொடர்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காகவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அக்கரைப்பற்றில் விபத்தினால், அண்மையில், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு  உயிராபத்தை ஏற்படுத்திய   16 வயது மாணவனை, சிறுவர் பாதுபாப்பு இல்லத்தலிருந்தவாறு  க.பொ.த சா/த  பரீட்சை நிலையத்திற்கு வந்து, பரீட்சை  எழுதுவதற்கு அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நிதவான் திருமதி. அபிநயா சூரியசிவா இன்நைய  தினம்  உத்தரவிட்டுள்ளார்

குறித்த மாணவன் இன்றைய தினம்  சிறுவர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தரால், அக்கரைப்பற்று நீதிமன்றில் இன்று அஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.. 

குறித்த சந்தேக நபர், இம்முறை க.பொ.த (சா/ த) பரிட்சைக்குத் தோற்றும் மாணவர் என்பதாலும்,16 வயது நிரம்பப் பெற்றவர் என்பதனாலும், இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று (15) தெரிவித்திருந்தனர்.


இதற்கு ஆதரவாக இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஹட்டன் நீதவான் நீதிமன்ற சட்ட தரணிகள் இன்று (16) தமது கடமைகளில் இருந்து விலகியிருந்தனர்.


இதன் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பித்திருந்தன. இதில் ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் கறுப்புக் கொடியை ஏற்றி நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்தனர்.


சட்டதரணிகள் வருகை தராததன் காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றங்களின் சில வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை .


விசாரணைக்கு வந்திருந்த வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராக காரணத்தால் அனைத்து வழக்குகளுக்கும் வேறு திகதி வழங்கி வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன.


செ.திவாகரன்

 


மூதூர் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (16) நீதிமன்றத்திற்கு முன்னாள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தமையை கண்டித்து கையில் கருத்தப்பட்டி அணிந்தும்,கடமையில் ஈடுபடாதும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.


இதன் காரணமாக மூதூர் நீதீமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    


#lawyer #strike #protest #SriLankaNews #tamilnewsupdates #TamilNewsToday #Trincovoice

 


கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் : சட்டத்தரணி படுகொலைக்கு எதிராக நீதிமன்ற வளாகம் முன்பு போராட்டம்


நூருல் ஹுதா உமர்


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து இன்று (16) காலை கல்முனை நீதிமன்ற வளாகம் முன்பாக அமைதியான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கான விசேட பொதுக்கூட்டம் இன்று காலை 9.00 மணிக்கு கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற பின்னர் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் கருப்பு பட்டா அணிந்த சட்டத்தரணிகள், “சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுக”, “சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு வழங்குக” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும், அதனை பிரதிபலிக்கும் பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இச்சம்பவம் சட்டத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். சட்டத்தரணிகள் தங்களது தொழில்பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என கல்முனை கிளை தலைவி, சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் இதன்போது வலியுறுத்தினார்.


“ஒரு சட்டத்தரணி மீது நடத்தப்படும் தாக்குதல், முழு நீதித்துறையின்மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அரசின் பொறுப்பாகும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான துரிதமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியம்,” என அவர் இங்கு குறிப்பிட்டார்.


இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உறுப்பினர்களான சட்டத்தரணிகள், இன்று (பிப்ரவரி 16) நாடு முழுவதும் எந்தவொரு வழக்குகளுக்கும் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் இருக்க தீர்மானித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இத்தீர்மானம் கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்க விசேட பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதுடன் சட்டத்துறையின் பாதுகாப்பும் சுயாதீனத்தன்மையும் குறித்து எழுந்துள்ள அச்சங்களை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாறுக் ஷிஹான்


அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயலட்சுமி டி சில்வாவிற்கு   எதிரான வழக்கு இன்று (11) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கானது புதன்கிழமை(11) கல்முனை நீதிமன்ற  நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில்  மன்றில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை குறித்த இவ்வழக்கில்  சந்தேகநபரான  நீதிபதியிடம் இருந்து  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிசாரின் வழக்குக் கோவை சட்ட ஆலோசனைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வழக்குத் தொடுநரான பெரியநீலாவணைப் பொலிசார் நீதிமன்றிற்குத் தெரிவித்தனர்.

இவ் வழக்கானது  மீண்டும் 11.03.2026 அன்று சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் அழைக்கப்பட திகதியிடப்பட்டுள்ளது.

 

​உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் மற்றும் தீர்மானங்கள், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மிகத்தெளிவாகப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகும்.

​பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க சூழலானது, நீதித்துறையின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் மேலும் வலுப்படுத்துகின்றது.


சீன அரசாங்கத்தின் நிதியுதவியின்கீழ் நவீனமயமாக்கப்பட்ட உச்சநீதிமன்ற வளாகத்தை நீதித்துறை நடவடிக்கைகளுக்காகத் திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதமர் ஹரினி அமரசூரிய  கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.


"The decisions rendered within the Supreme Court Complex reflect the strength of justice, democracy, and the rule of law in the country. A safe and efficient environment further reinforces the independence and dignity of the judiciary"


While participating in the opening of the Supreme Court Complex, which was renovated with the assistance of the Government of China, for judicial activities..


#HariniAmarasuriya #PrimeMinister

 


நூருல் ஹுதா உமர்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நிகழ்நிலை காப்புப் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று (27) நீதவான் நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

சமூக வலைத்தளத்தில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக எதிராளிகளுக்கு எதிராக பல வழக்குககள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பாராளுமன்ற உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆறு வழக்குகளும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வழக்குகளில் எதிராளிகள் சார்பாக  சிரேஷ்ட சட்டத்தரணி இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான், முஹம்மட் சப்ரின், எம்.ஐ. இயாஸ்டீன், முஹம்மட் ஹனிபா பசில், முஹம்மட் ஜெசிம் ஆகியோர், தோன்றியிருந்தனர்

 


அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் அதன் பல பிரிவுகளில் அரசியலமைப்பை மீறுவதாகவும் எனவே, அது நிறைவேற்றப்பட்டால், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எம். பிரேமசிறி, நவரட்ண பண்டா, பி.எம்.தீபால் குணசேகர மற்றும் சமன்சிறி ஹேரத் ஆகியோர் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். 2004 முதல் 2010 வரை பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றியதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். மற்றொரு மனுவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பியசோம உபாலி மற்றும் உபாலி அமரசிறி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.


1988 முதல் 2004 வரை பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த மனுக்களில் சட்ட மா அதிபர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நீதி அமைச்சர் கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.


1977 ஆம் ஆண்டு 7 ஆம் எண் தேசிய சட்டமன்றச் சட்டத்தின் பிரிவு 108(2), ஐந்து வருட பதவிக்காலத்தை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு உரிமையுடையவர்கள் என்று தெளிவாகக் கூறுகிறது என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.


அதன் பிறகு, 1979 ஆம் ஆண்டு சட்டம் எண் 50, 1982 ஆம் ஆண்டு சட்டம் எண் 01 மற்றும் 1985 ஆம் ஆண்டு சட்டம் எண் 33 ஆகியவற்றில், ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிமார்க்கு ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்க உத்தரவிடப்பட்டது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக பொதுச் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாக சுட்டிக்காட்டும் மனுதாரர்கள், தங்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவாக 60,000 முதல் 80,000 வரை வழங்கப்படுகிறது என்றும் மேலும் இந்தத் தொகை அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானதாக இல்லை என்றும் கூறுகின்றனர்.


அரசியல் ஊடாக பொதுச் சேவையில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தான செயல் என்று சுட்டிக்காட்டும் மனுதாரர்கள், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ரணசிங்க பிரேமதாச, லலித் அத்துலத் முதலி , காமினி திசாநாயக்க , சி.வி. குணரத்ன மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற தலைவர்கள் பொதுச் சேவைக்காக தங்கள் உயிரைக் கூட தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.


பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.டி. சித்ரசிறி தலைமையிலான குழு, ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை இரத்துச் செய்ய முடியாது என்று அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


இருப்பினும், அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நோக்கில் இந்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், இது ஒரு வெறுக்கத்தக்க மற்றும் மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


அதன்படி, அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள இந்தச் சட்டமூலத்தை பல பிரிவுகள் தற்போதைய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


அதன்படி, இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், அது பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குமூலம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டுமென்று மனுதாரர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருமலை கடற்கரை சர்ச்சைக்குரிய புத்தர் சிலை 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேருக்கு எதிர்வரும் 19 வரை விளக்கமறியல்.

-------------------------------------------------------------------------

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (14) உத்தரவு பிறப்பித்துள்ளது.


திருகோணமலை நீதவான் நீதிமன்றின் குறித்த வழக்கானது இன்றையதினம் (14) புதன்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். 


குறித்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரு தரப்பினராலும் சமர்ப்ணங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் சமாதானமான முறையில் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவ்வாறாயின் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்டபோது எதிர் தரப்பினர் அதற்கு இணங்கிக் கொள்ளாத நிலையில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கின்ற கைதுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்து குறித்த எதிரிகளுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.


குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்த 11 பேரில் 9 பேர் இன்றையதினம் (14) நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப  தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருகோணமலை பிரதான கடற்கரைக்கு அருகில்  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2025 நவம்பர் மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியதாக கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை துறைமுக பொலிஸார் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு 17.11.2025 அன்று திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் சார்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பிலான வழக்கில் வாழைச்சேனை தவிசாளர்,பிரதி தவிசாளர் உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேருக்கும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர் இரண்டு உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் இன்றைய தினம்  (25) வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

 

கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.

 

வாழைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாக தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் குறித்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.

 

இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துவந்தனர்.

 

இதன்கீழ் வாழைச்சேனை பிரதேசபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக்குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்றைய தினம்(24)  வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.

 

இது தொடர்பில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர் உறுப்பினர் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் நால்வரும் ஆஜராகியிருந்தனர்.

 

இன்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியுள்ளார்.

 

பெயர் பதாகைகளை திருடியது,அரச உத்தியோகத்தர் ஒரு விடயத்தினை அதாவது ஒரு பெயர் பலகையினை நட்டால் அது அப்புறப்படுத்துவது குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த குற்றச்சாட்டுகள் பொருத்தமற்ற குற்றச்சாட்டுகள் என்று நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணி சுமந்திரனால் கொண்டுசெல்லப்பட்டதுடன் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேசசபை சட்டத்தின் கீழ்பொதுவழிகள் சட்டம் தொடர்பில் சொல்லப்பட்டுள்ளது வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேசசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.பிரதேசசபை தவிசாளர் அந்த சட்டத்தின் கீழ் அதிகாரமுடையவர்.அந்த அதிகாரத்தின் கீழ் செய்யப்பட்ட விடயத்தினை அகற்றினார் என்று எக்காலத்திலும் குற்றச்சாட்டினை முன்வைக்கமுடியாது.அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அதனை அவர் செய்துள்ளார் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

 

அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் அனுமதியைப்பெற்றே பெயர்ப்பலகை இடப்படவேண்டும் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணியினால் கொண்டுவரப்பட்டபோது அதனை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் முறையான அனுமதியைப்பெற்றுக்கொள்வதாகவும் எதிர்காலத்தில் முறையாக அனுமதி கோரும்போது அதனை சபையில் சமர்ப்பித்து சபையினால் முறையான அனுமதியை வழங்கமுடியும் என்று கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக தீர்க்கலாம் என்ற காரணத்தினாலும் பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிணைவழங்ககூடிய காரணங்களைக்கொண்டிருப்பதனாலும் ஐந்து பேரையும் பிணையில் செல்ல அனுமதித்தது.

 

எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் பிரதேசசபையின் முறையான அனுமதிபெறப்பட்டு பெயர்ப்பலகையிடும் பணிகள் நடைபெற்று இது தொடர்பான பிரச்சினை முடிவுறுத்தப்படுமானால் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த வழக்கு முடிவுக்கு வரும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.

 


இதன்போது வாழைச்சேனை பிரதேசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர்,இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுதியளித்து. இந்த வழக்கானது மீண்டும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

வீரமுனை செய்தியாளர்

 


ஓட்டமாவடி முன்னாள் தவிசாளர் பைறூஸ் தாக்கல் செய்த வழக்கு டிஸம்பர் 9 ஆம் திகதி ஒத்திவைப்பு


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்று (11) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.


ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளராக இருந்த பைறூஸ் ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பைறூஸின் உறுப்புரிமையை நீக்கி இருந்தது.


இவ்விடயம் தொடர்பில் முன்னாள் தவிசாளர் பைறூஸ் இடைக்கால தடையுத்தரவு வேண்டி வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார்.


குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.


இவ் வழக்கு டிஸம்பர் மாதம் 9 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


முன்னாள் தவிசாளர் பைறூஸின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக கடந்த 31 ஆம் திகதி வர்த்தமானி பிரசுரமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்க கொழும்பு உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது, அதை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது

 


நூருல் ஹுதா உமர்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ. அஸ்பர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடை விதிக்குமாறு கோரிய வழக்கு இன்று (23.10.2025) எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் டிசம்பர் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தவிசாளரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டமையை ஆட்சேபித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையை நீக்குவதாக எழுத்து மூல அறிவிப்பை விடுத்திருந்த நிலையிலேயே குறித்த இடைக்காலத்தடை கோரி வழக்கு தவிசாளரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவி வெற்றிடமாக்கப்படுவதுடன் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஏ. அஸ்பர் அவர்களுக்கு மாற்றீடாக கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட வேறு நபரின் பெயர் இன்று அல்லது நாளை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் படி மிக விரைவில் நிந்தவூர் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.