Showing posts with label Culture. Show all posts

(வி.ரி.சகாதேவராஜா)


சித்தர்களின் குரல்  கதிர்காம ஆயிரம் வேல் யாத்திரை எதிர்வரும் ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை உகந்தை மலையில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும் 
என சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகதலைவர் சிவசங்கர் ஜீ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

 
மேலும், இக் கதிர்காமத்திற்கான கானக வேல் யாத்திரை ஜூலை 15ம் திகதி புதன்கிழமை கதிர்காமத்தை சென்றடையும் என்பதையும் அதிகார பூர்வமாக அறிவித்தார்.

அதற்கு முன்னதாக, பாரம்பரிய முறைப்படி குறித்த வேல் யாத்திரை வேலோடுமலையில் இருந்து ஜுலை 02 ஆம் திகதி வேலோடுமலை முருகன் கோவில் ஆதீனகர்த்தா முருக பக்தர் தியாகராஜ சுவாமிகள் தலைமையில் சில பக்தர்களுடன் ஆரம்பமாகவுள்ளது.

எனினும் , அனைத்து அடியார்களும் கலந்து கொள்ளும் கானக வேல் யாத்திரை ஜுலை 10 ஆம் திகதி உகந்தமலை முருகன் கோவிலில் இருந்து தலைவர் சிவசங்கர் ஜீ தலைமையில் ஆரம்பமாகும்.

மகிமைகள் பொருந்திய இவ்வருட 2026 கதிர்காம ஆடி வேல் விழா உற்சவம் ஜூலை 15ம் திகதி புதன்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

இது தொடர்பாக சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகதலைவர் சிவசங்கர் ஜீ மேலும் கூறுகையில்..

இலங்கை ஒரு பொக்கிஷ புண்ணிய பூமி. போகர் தொடங்கி இமயமலை கிரியா பாபாஜி வரை எத்தனையோ பல்லாயிரம் சித்த ரிஷிகள், யோகிகள், ஞானிகள் அவர்கள் கால் தேயத் தேய முருகனை தரிசிக்க நடந்த பாதை கதிர்காம பாத யாத்திரை.

குறித்த காட்டுப்பாதை.
 ஒவ்வொரு வருடமும் கதிர்காம திருவிழா காலங்களில் 15 நாட்கள் மட்டும் திறக்கப்படும். 

ஆதியில் நடந்த சித்த பெரு மக்கள் இங்கே ஆறு இடங்களில் தங்கி ஆறு வகையான சக்திகளை வனத்தில் விட்டு சென்றுள்ளார்கள் என வரலாறுகள், நம் முன்னோர்கள் சொல்கிறார்கள்.

முதல் நாள் தங்கும் "வண்ணாத்தி வெட்டை" என்ற கிணத்தடியில் "கருப்பண்ண சாமி" என்ற பாலாவடி கறுப்பையும், இரண்டாவது நாள் தங்கும் "குமுக்கன் ஆற்றங்கரையில்" வன தேவதைகளான "காளி" சக்திகளையும், மூன்றாவது நாள் தங்கும் அமானுஷ்ய பூமியான "நாவலடி" வனத்தில் பாதாள "பைரவ" சக்திகளையும்,
நான்காவது நாள் தங்கும் "யாள" ஆற்றங்கரையில் "நாக" சக்திகளையும்,"
ஐந்தாவது நாள் தங்கும் "வள்ளியாற்று" பாலத்தில் "ஜல தேவதையின்" சக்திகளையும் கடந்து,
ஆறாவது நாள் கதிர்காம மண்ணை அடைய நமக்குள் உள்ள "ஆறு ஆதார சக்கரங்களும் உயிர் பெற்று" மிக பெரிய யோகியாக உங்கள் உடல் மனம் உருவாகும்.

இதுதான் இந்த பாத யாத்திரையின் மூல ரகசியம்.ஒவ்வொரு காடுகளையும் கடக்கும் போதும், ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு இடத்திலும் தங்கும் போதும், அங்குள்ள பிரபஞ்ச சக்தி, தேவதா சக்தி நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும். முறையாக இந்த ரகசியங்களை எல்லாம் உணர்ந்து பயணியுங்கள்.
இது சுற்றுலா பாதை அல்ல..
நம்மை முழுமைப்படுத்தும் ஒரு பூரண யாத்திரை.
               
                  அனைத்து ஏற்பாடுகளும் சித்தர்களின் குரல் அமைப்பின் அன்பர்களினால் முன்னெடுக்க படுகிறது....
        ஆயிரம் பேருடன்,
        ஆயிரம் வேல்களுடன்,
        வேல் யாத்திரையாக.....
அனைத்து நாட்களும் எங்கள் சித்தர்களின் குரல் சமஸ்தான நளபாக சக்கரவத்திகளினால் மூன்று வேளையும் சாத்வீக உணவும், இரண்டு வேளையும் வழங்கப்பட இருக்கிறது.
தினமும் ஒவ்வொரு இடங்களிலும்,
சக்தி வாய்ந்த வேல் பூஜை,அபூர்வ வன மூலிகைகளினால் சர்வ வல்லமை வாய்ந்த 210  சித்தர்கள் வேள்வி, வன பூஜை, வன போஜனம்,மூலிகை குளியல்,ஒரு கோடி சண்முக பஞ்சாட்சர ஜெபம், கூட்டு வழிபாடுகள், நமது கர்ம வினைகளை கரைக்கும் அற்புதமான தியானங்கள், திருப்புகழ் பாராயணங்கள் என தொடரும்.
எங்களுடன் பயணிப்பவர்கள் ஜூலை 10ம் திகதி காலைக்குள் உகந்தைக்கு வரவும்.
இது சுற்றுலா பாதை அல்ல.. இறைவனே இயற்கையை நோக்கி நம்மை அழைத்து செல்லும் ஒரு புதுமையான ஆன்மீக யாத்திரை, பக்தி கலாச்சார  நெறிகளை கடைப்பிடிக்கவும்.அனைவரும் கட்டாயம் ஆறு நாட்களும் காவி உடையிலேயே வர வேண்டும்.பயணத்தின் வரும் அனைவர்க்கும் இரண்டு வேளை தேநீர், மூன்று வேளையும் அற்புதமான உணவு வழங்கப்படும்.
    (விரும்பியவர்கள் அன்னதானத்திற்கு விரும்பிய உதவிகளை செய்யலாம்)
வங்கி கணக்கு இலக்கம்:-
Nations trust bank (NTB)
V.Maheshwaran
Sithargalin kural patha yathra
Account No:- 200370056496   
Kalmunai branch
ஆறு நாட்களும் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, "ஒரு கோடி சுப்பிரமணிய பஞ்சாட்சர ஜெபம்", ஆழ்நிலை தியானம்,  தினமும் அற்புதமான ஆன்மீக அறிஞர்களின் சொற்பொழிவு என ஒரு உயர்த்த பக்தி நிலைக்கு அழைத்து செல்லும் பயணம் இது.
அனைவரும் உங்களுக்குரிய  வேல், ஜெபமாலை, பிளேட், டம்ளர், அமர இரண்டு மீட்டர் பொலித்தீன் க்ளோத் என்பவற்றை கட்டாயம் கொண்டு வரவும்.

மேலதிக தகவல்களுக்கு:
தலைவர்: வேலோடு மலை வேல்சாமி தியாகராஜா ஐயா (+94 77 962 2206)
செயலாளர்: அருள் வரதன் ஐயா (+94 71 418 2513)
பொருளாளர்: வரதகணேஷ் ஐயா (+94 75 735 3626)
போசகர்: நமசிவாய சுவாமிகள் (+94 77 639 2368)
ஆலோசகர்; விபுலமாமணி சகாதேவராஜா ஐயா (+94 77 696 5343) ஆகியோரோடு தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

 (வி.ரி.சகாதேவராஜா)


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் ( ஈபிஆர்எல்எவ்) இருந்து , மண்ணுக்காக உயிர் நீத்த காரைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மோகன் - கணேஷ்  ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட மென்பந்து  கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரின் இறுதி நிகழ்வில், அவர்களின் உற்ற நண்பர்களான புலம்பெயர் தோழர்கள் மூவர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த இறுதிப் போட்டி நிகழ்வு காரைதீவு விபுலானந்தா  மைதானத்தில் நேற்று (20) சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காலஞ்சென்ற மோகன் கணேஷ் ஆகியோரின் நண்பர்களான, லண்டனில் இருந்து தோழர் பாஸ்கரன் ( காரைதீவு ) ,தோழர் ஷிராப் (தம்பலகாமம்) அத்துடன் பிரான்சிலிருந்து தோழர் ஜோதி (கொக்கொட்டிச்சோலை )
ஆகிய மூன்று நண்பர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

விடுதலை இயக்கத்தில் இருந்து உயிர் நீத்த சக தோழர்களின் நினைவு நிகழ்வில்,  அவர்களது உற்ற நண்பர்கள் மறக்காமல் புலம்பெயர் நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டமை நட்புக்கும் தியாகத்திற்கும் ஒற்றுமைக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தது.

 


ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்          
 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுத்த சர்வதேச யோகா தின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இன்று (21) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.
 நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச உதவிப்பிரதேச செயலாளர்களான சுபாகர் மற்றும் பிரணவரூபன் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் அதிபர்கள் ஆலய தலைவர்கள் சமூக அமைப்பின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகள் மாணவர்களின் நடன கலைநிகழ்வுகளோடு வரவேற்க்கப்பட்டு தேசிய கொடியேற்றப்பட்டு சர்வதேச யோகா தின உறுதி மொழி வாசிக்கப்பட்டு யோகா பயிற்சி நெறி ஆரம்பமானது.
 இதில் 2000 ஆயிரம் வரையிலான மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து யோகா தின ஒழுங்குகள் தொடர்பாகவும் பாடசாலைகள் ஆலயங்கள் சமூக அமைப்புக்கள் வழங்கிய ஒத்துழைப்பு பங்களிப்பு தொடர்பிலும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் குறிப்பிட்டார்
இறுதியில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் மாவட்ட யோகா தின ஏற்பாடுகளை சிறப்பு முன்னெடுத்த பிரதேச செயலாளர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் நன்றி கூறினார்.
அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து எதிர்வரும் காலத்திலும் சிறந்த முறையில் இச்செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தரின் சேவையினை பாராட்டி பிரதேச செயலாளர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.


( வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெரியநீலாவணையில் 1 கோடி 10 லட்சம் ரூபாய் செலவில்புனரமைக்கப்பட்டுள்ள உள்ளூர் கலாசாரம் மற்றும் கலைஞர்களுக்கான கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் நேற்று (19) வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி மேனகா புவிகுமார்  தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு , முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர். பேராசிரியர் கலாநிதி. ஜயந்த லால் ரத்னசேகர கலந்து சிறப்பித்தார்.

கௌரவ விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் ஆதம்பாவா சிறப்பு விருந்தினராக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ்  கலந்து சிறப்பித்தனர்.

முன்னாள் கிழக்கு மாகாண கலாச்சார பணிப்பாளர் ச.நவநீதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கலாச்சார மையத்தை தொடரந்து நிருவாகம் செய்வதற்கான பொறுப்பு பெரியநீலாவணை தமிழர் கலாசார அபிவிருத்தி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கான சான்றிதழை ஆளுநர் தமிழர் கலாசார அபிவிருத்தி மன்றச் செயலாளர் என்.சௌவியதாசனிடம் வழங்கி வைத்

 

( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் கல்முனை நெற் ஆகியவற்றின் ஏற்பாட்டில்,  இளம் மற்றும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில், கனடா உதவும் பொற்கரங்கள் அமைப்பு . கட்டார் பீனிக்ஸ் விளையாட்டு கழகம்  ஆகியவற்றின் அனுசரணையுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கவிதை மற்றும் சிறுகதை எழுத்துப் பயிற்சி பட்டறையும் செயலமர்வும் நாளை மறுநாள் 20.06.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவிருக்கும்
இச்செயலமர்வில், இலக்கியத் துறையில் அனுபவமிக்க வளவாளர்கள் கலந்து கொண்டு, கவிதை மற்றும் சிறுகதை எழுத்தின் நுட்பங்கள், படைப்பாற்றல் வளர்ப்பு மற்றும் எழுத்து நடை தொடர்பான பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

 பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பெறுமதியான பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கலந்துரையாடல் மற்றும் அனுபவப் பகிர்வு நிகழ்வுகளும் இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர் புவி.கேதீஸ் தெரிவித்தார்.

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்           

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அலுவலகம் இணைந்து முன்னெடுக்கவுள்ள சர்வதேச யோகா தின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வருடம் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக சர்வதேச யோகா தின நிகழ்வு ஒழுங்கமைப்பு தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற ஒன்று கூடல் நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் சோபிதா பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் அதிபர்கள் ஆலய தலைவர்கள் சமூக அமைப்பின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சர்வதேச யோகா தின முக்கியத்துவம் தொடர்பாகவும் நிகழ்வுகளை 2000 ஆயிரம் மாணவர்களை உள்வாங்கி ஆலையடிவேம்பு பிரிவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து யோகா தின ஒழுங்குகள் தொடர்பாகவும் பாடசாலைகள் ஆலயங்கள் சமூக அமைப்புக்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு பங்களிப்பு தொடர்பிலும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் குறிப்பிட்டனர்.
பாடசாலை மாணவர்களை ஒழுங்கமைத்தல் தொடர்பான விளக்கத்தினை அதிபர்கள்; எடுத்துரைத்தனர்.
மேலும் யோகா தினம் நடைபெறுகின்ற திகதி தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதுடன் எதிர்வரும் 21ஆம் திகதி; நடத்துவது எனவும் இதற்கான பங்களிப்பை சகலரும் இணைந்து மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

 இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது உலக யோகாசனப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1 வெள்ளிப் பதக்கத்தையும் 3 வெண்கலப் 

பதக்கங்களையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள எமது மட்டக்களப்பு மண்ணின் 15 வயது இளம் வீராங்கனை செல்வி துவேஷா ரமேஷ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


சர்வதேச அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைசிறந்த வீரர்களுடன் போட்டியிட்டு, தனது அசாத்திய திறமையினாலும் நெகிழ்வுத்தன்மையினாலும் தாய்நாட்டிற்கும் எமது சொந்த ஊரான மட்டக்களப்பிற்கும் மாபெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளார் இந்த இளம் தாரகை.


விளையாட்டுத் துறையில் எமது மாவட்டத்து இளைஞர், யுவதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சர்வதேச எல்லையைத் தொட்டுள்ள இந்த மகளின் சாதனை ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களுக்கும் பெருமிதமாகும்.


செல்வி துவேஷா ரமேஷ் எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச சாதனைகளைப் புரிந்து, உலக அளவில் இன்னும் பல உயரங்களை எட்ட எனது ஆசிகளும், மட்டக்களப்பு மக்கள் சார்பிலான வாழ்த்துகளும் என்றும் உண்டு!


​- கந்தசாமி பிரபு,

நாடாளுமன்ற உறுப்பினர்,

மட்டக்களப்பு மாவட்டம்


#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment  #dccbatticaloa #JVP #sunilhandunneththi #DCCChairman #Batticaloa #CleanSriLanka

#AKD #ANURAKUMARADISSANAYAKE #PresidentAKD#


 ( வி.ரி.சகாதேவராஜா)


யாழ்- கதிர்காமம் பாத யாத்திரீகர்கள் பதினேழாவது நாள் (7)  ஞாயிற்றுக்கிழமை வடக்கிலிருந்து கிழக்கிற்குள் பிரவேசித்தனர்.

 ஞாயிற்றுக்கிழமை மாலை கொக்கிளாயில் இருந்து கடல் மார்க்கமாக இயந்திரப் படகுகளில் ஜெயா வேல்சாமி தலைமையிலான 148 அடியார்களும் புல்மோட்டையை வந்து அடைந்தனர்.

கடந்த 25 ஆம் திகதி செல்வச் சந்நிதியிலிருந்து ஆரம்பித்து 18 நாட்களாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் வலம் வந்த யாத்திரீகர்கள் நேற்று முன்தினத்துடன் கிழக்கு மாகாணத்தில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் (8) திங்கட்கிழமை திரியாய தாண்டி குச்சவெளியில் தரித்து நின்றனர்.
வழி நெடுகிலும் அடியார்களுக்கு சிரட்டையில் கஞ்சி தொடக்கம் நீராகாரம் வழங்கினர்.

நேற்று (9) செவ்வாய்க்கிழமை கோபாலபுரம் நிலாவெளியில் தங்கியிருந்தனர்.

இன்று(10) புதன்கிழமை சாம்பல் தீவிலும் நாளை (11) வியாழக்கிழமை வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணேஸ்வரர் ஆலயத்தை சென்றடைவர்.

 




பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபை இன்று (08) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.


குறித்த சந்திப்பின்போது மலையக மக்களின் வாழ்வியல், வரலாறு மற்றும் கலாசாரத்தை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் தனது திட்டம் குறித்து அமைச்சரிடம் விளக்கியுள்ளார்.


இத்திரைப்படத்தில் மலையக கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.


பிரதி அமைச்சர் இத்திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.


 


இன்று (8) திங்கட்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் எட்டாம் சடங்கு ஆகும்.


நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் சகிதம் மாலையில் அம்மனுக்கு படையல் செய்து உணர்வு பூர்வமாக வழிபடும் பாரம்பரிய சடங்கு இது.

இந் நிலையில் எட்டாம் சடங்கு என்றால் என்ன? என்பது பற்றி சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா விளக்கம் தருகிறார்.


எட்டாம் சடங்கு என்பது கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தி வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சடங்காகக் கருதப்படுகிறது. 

இது ஆலயத்தின் சமய, சமூக மற்றும் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் ஓர் அங்கமாக விளங்குகிறது.

கண்ணகை அம்மன் வழிபாட்டில் நடைபெறும் சடங்குகளில் எட்டாம் சடங்கு ஒரு திருப்புமுனை நிகழ்வாகக் கருதப்படுகிறது.
 ஆரம்ப நாட்களில் இடம்பெறும் சடங்குகள் மூலம் அம்மனின் அருள் அழைக்கப்பட்டு, பக்தர்களின் மனங்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றன. 

அவற்றின் தொடர்ச்சியாக எட்டாம் சடங்கு நடைபெறுகிறது.

இந்த சடங்கின் மூலம் அம்மனின் சக்தி முழுமையாக வெளிப்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். 

கிராம மக்களின் நலன், மழை வளம், நோய் நீக்கம், விவசாய செழிப்பு மற்றும் சமூக ஒற்றுமைக்காக பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எட்டாம் சடங்கில் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதும், காணிக்கைகள் செலுத்துவதும், அம்மனைப் போற்றி பாடல்களும் காவியங்களும் பாடுவதும் வழக்கமாக உள்ளது. 

சில பகுதிகளில் கண்ணகை வரலாறு, சிலப்பதிகார நிகழ்வுகள் மற்றும் அம்மனின் தெய்வீகச் செயல்கள் நினைவுகூரப்படுகின்றன.


இந்த சடங்கு ஒரு மத நிகழ்வாக மட்டுமல்லாமல், சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நிகழ்வாகவும் அமைகிறது. 

ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆலயப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் ஒற்றுமை, பரஸ்பர உதவி மற்றும் பண்பாட்டு மரபுகள் தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன.


மேலும், எட்டாம் சடங்கு கண்ணகியின் நீதி, கற்பு, பொறுமை மற்றும் தெய்வீக ஆற்றலை நினைவூட்டும் நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

 கண்ணகி வழிபாட்டின் அடிப்படைப் பண்புகளான அறம், உண்மை மற்றும் நீதியை மக்களின் வாழ்வில் நிலைநிறுத்தும் நோக்கத்தையும் இது கொண்டுள்ளது.

எனவே, எட்டாம் சடங்கு என்பது கண்ணகை அம்மன் திருவிழாவின் ஒரு சாதாரண நிகழ்வல்ல; அது பக்தி, மரபு, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் புனிதமான ஆன்மீக நிகழ்வாக விளங்குகிறது


 கத்தாரில் ZABCO நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா: இலங்கை தூதுவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!

...

கத்தாரில் பல்வேறு துறைகளில் முன்னணி சேவைகளை வழங்கி வரும் சப்கோ (ZABCO) நிறுவனத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா சப்கோ குரூப் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அக்ரம் ஹாபிஸ் அவர்களின் தலைமையில் நேற்று (05) தோஹாவில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ரோஷன் சித்தாரா கான் அசாத் அவர்கள் கலந்து சிறப்பித்தார். விசேட அதிதிகளாக இலங்கைத் தூதரகத்தின் மூன்றாம் செயலாளர் ஏ.எம். முஹம்மத் உமராத், சிரேஷ்ட அதிகாரி ரஷீத் பியாஸ், அல் கபாஸ் மற்றும் எப்.எம். லிமோசின் நிறுவனங்களின் உரிமையாளர் அல்ஹாஜ் பசுல்லாஹ் மௌலானா, எப்.ஜி. குழுமம் மற்றும் i Drive நிறுவனங்களின் பணிப்பாளர் அஷ்-ஷைக் ஏ.பி.எம்.நவாஸ், வாட்ஸ்அப் லிமோசின் மற்றும் அல் கனாரி நிறுவனங்களின் பணிப்பாளர் சி.பி.நதீர் மௌலவி, பொலன்னறுவை நலன்புரிச் சங்கத்தின் தலைவர் இஸ்மாயில் ரஃபாய்தீன், சப்கோ நிறுவனத்தின் ஆலோசகர் அப்துல் ரஹ்மான் மற்றும் ஸ்கை தமிழ் மீடியா நெட்வொர்க் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் தசாப்த கால வெற்றிகரமான பயணத்தைக் கொண்டாடும் இவ்விழாவில், சப்கோ நிறுவனத்தின் உலகளாவிய சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியாவில் அதன் புதிய சர்வதேச கிளை திறக்கப்படவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நிறுவனத்தின் தசாப்த கால வெற்றிகரமான பயணத்தைக் கொண்டாடும் இவ்விழாவில், சப்கோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பங்களிப்பு செய்த 50 ஊழியர்கள் விசேடமாகப் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(வி.ரி. சகாதேவராஜா)

​இலங்கையில் நிலவும் பல்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" எனும் புதிய தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இப் பாரிய செயற்திட்டம் ஜூன் மாதம் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. 

இதன் கீழ், அம்பாறை மாவட்டத்தின் முதலாவது பிரதான ஆரம்ப நிகழ்வு நேற்று (02) சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரமுனை சுவீஸ் கிராண்ட் மஹால் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 ( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கின் இறுதிநாளான இன்று (1) திங்கட்கிழமை மடிப்பிச்சை  எடுக்கின்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

காலையில் மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
 
சுமார் 2000 பெண் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். வழிநெடுகிலும் மக்கள் அவர்களுக்கு நெல்லை வாரி வழங்கினார்கள்.

 அவர்கள் அதனை மடியில் ஏந்திக்கொண்டு நேராக 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்து அங்கு சடங்குகள் சகிதம் அந்த நெல்லை அங்கு பெற்றுக் கொண்டார்கள்.

 அதனை உரலில் இட்டு குற்றி அரிசியாக்கி பொங்குவார்கள். மீதியை வசதி குறைந்த மக்களுக்கு வழங்குவது வழக்கம்.

 


ஹுதா உமர்


அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் அவர்கள், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம், இன்று (01) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் பீ. வாகீசன், கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே. குணநாதன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில், விண்ணப்பிக்கத் தகுதியுடைய தரம் I கலாசார உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

அதன் முடிவில், கிழக்கு மாகாணத்தில் இருந்து இரு அதிகாரிகள் மட்டுமே சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் பதவிக்கு தெரிவு

 


சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தினத்தை முன்னிட்டு தானசாலை (Dansal) நிகழ்வு

வெசாக் தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தானசாலை (Dansal) நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.


பொலிஸ் நிலைய ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் பானங்கள் அன்புடன் வழங்கப்பட்டு வருகின்றன.


வெசாக் தினத்தின் ஆன்மீகத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தானசாலை நிகழ்வில், பல்வேறு சமூக மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.


ஏற்பாட்டாளர்கள், பொதுமக்களை அன்புடன் அழைத்து இந்த தானசாலை நிகழ்வில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 


 ♡     ⎙     ➦

ʳᵉᵃᶜᵗ  ˢᵃᵛᵉ  ˢʰᵃʳᵉ


For more update !!

Join Our `WhatsApp Groups

Group No . 17/19 

https://chat.whatsapp.com/GKGt4ADt5ea5xkTQT48wN5

 *றிகாஷ் எம். அலியார்*

 


காரைதீவு ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி சடங்கில்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் பக்த அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்தி வருவதைக் காணலாம்.


படங்கள் . வி.ரி.சகாதேவராஜா


 (வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வைகாசி திருக்குளிர்ச்சி திருச்சடங்கின்
முதலாம் நாள் ஊர்சுற்றுக்காவியம் பாடும் நிகழ்வு இரவில் பக்தி பூர்வமாக நடைபெற்று வருகிறது.

உடுகு அடித்து குறித்த இசையோடு பாடும் இப் பாடலை செவிமடுக்க சுமார் ஆயிரம் பக்தர்கள் இரவில் ஒன்று கூடுவது வழக்கம். 

தொடர்ந்து ஏழு நாட்கள் சடங்கு நடைபெற்று ஜூன் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவடையும். 

சடங்குகள் அனைத்தும் ஆலய கப்புகனார் தலைமையில் நடைபெறும். சடங்குநாட்களில் ஊர்சுற்றுக்காவியம் பாடுதலுடன் பச்சைகட்டல் நிகழ்வும் இடம்பெறும்.

ஜூன் 01ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் பி.ப.3மணிக்கு பொங்கலுக்கு நெற்குத்தும் வைபவமும் நடைபெறும். 

 அதேவேளை ஜூன் 08ஆம் திகதி எட்டாம் சடங்குப்பூஜை ஆயிரம் பொங்கல் பானைகளுடன் இடம்பெறும் .

 


புனித ஹஜ் செய்தவர்களுக்கு பூரணமான ஹஜ்ஜாக இறைவன் ஆக்கவும், ஏனையர்களுக்கு அந்த (ஹஜ்) சிறந்த இடத்தை கண்டு வரும் பெரும் பாக்கியத்தை தரவும் இந்த நன்னாளில் இறைவனிடம் வேண்டுகிறேன்!!!

நண்பர்கள்,வாழ்வெளிநாட்டுநண்பர்கள்,இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்www.ceylon24.com சார்பில் இனிய ஹஜ் திருநாள் நல் வாழ்த்துக்கள்…!

 


( வி.ரி. சகாதேவராஜா)


வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு நேற்று  (25) திங்கட்கிழமை மாலை  கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் உணர்வு,பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

ஆலயத்திலிருந்து தர்மகர்த்தாக்கள் கப்புகனார் சகிதம் பக்தர்கள் கடலுக்குச்சென்று தீர்த்தம் எடுத்து வரும்வழியில் கலயாணக்கால் முறித்து அதனைக்கொணர்ந்து ஆலயத்தில் சடங்கு செய்து, 1000 நேர்த்தி கூறைச்சேலை சாத்தி நட்டார்கள்.

தொடர்ந்து ஏழு நாட்கள் சடங்கு நடைபெற்று ஜூன் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவடையும். 

சடங்குகள் அனைத்தும் ஆலய கப்புகனார்  தலைமையில் நடைபெறும். சடங்குநாட்களில் ஊர்சுற்றுக்காவியம் பாடுதலுடன் பச்சைகட்டல் நிகழ்வும் இடம்பெறும்.

ஜூன் 01ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் பி.ப.3மணிக்கு பொங்கலுக்கு நெற்குத்தும் வைபவமும் நடைபெறும். 

 அதேவேளை ஜூன் 08ஆம் திகதி எட்டாம் சடங்குப்பூஜை ஆயிரம் பொங்கல் பானைகளுடன் இடம்பெறும் .

 


 (வி.ரி.சகாதேவராஜா)

அகில இலங்கை தமிழ் மொழித் தினத்தையொட்டிய
திருக்கோவில் வலய மட்ட போட்டிகள் நேற்று  (23) சனிக்கிழமை பல பண்பாட்டு கலாச்சார பாரம்பரிய பேரணியுடன் தம்பிலுவில்  மத்திய கல்லூரியில்  நடைபெற்றன. 

முன்னதாக,  திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து சுவாமி விபுலாநந்தர் , சேர சோழ பாண்டியர் ,திருவள்ளுவர், ஔவையார், தனிநாயகம் அடிகளார், தமிழ்த்தாய் உள்ளிட்ட பல பண்பாட்டு கலை அம்சங்களுடன் கூடிய பாரம்பரிய நிகழ்ச்சிகள் அடங்கிய பேரணி தம்பிலுவில் மத்திய கல்லூரி வரை சிறப்பாக நடைபெற்றது. பல பாடசாலைகள் அதற்கு தமது நிகழ்ச்சிகளை வழமைபோல் வழங்கியிருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அங்குரார்ப்பண நிகழ்வு தம்பிலுவில் மத்திய கல்லூரியில் 
திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர் . உதயகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் பிரதி, உதவி கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் நடுவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகம் கலந்து சிறப்பித்தது.

போட்டிகளில், ஆலையடிவேம்பு , திருக்கோவில், பொத்துவில் ஆகிய 03 கோட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.