Showing posts with label Culture. Show all posts

 



#Rep.Asraf. a.Samad,.

இலங்கைக்க விஜயம் மேற்கொண்டுள்ள இரான் ஜனாதிபதி, கொழும்பு கொள்ளுப்பிட்டி பள்ளிவாயலுக்கு இன்று மாலை விஜயம் செய்தார்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


குரோதி சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 41வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும்  இணைந்து நடாத்திய 26வது மாபெரும் கலாசார விளையாட்டு விழாவின் காலை நிகழ்ச்சிகள்  கழகத் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் இன்று (20) சனிக்கிழமை காலை மரதன் ஓட்டத்துடன் சிறப்பாக  ஆரம்பமாகியது.

காலை நிகழ்வான மரதன் ஓட்டமானது கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு விளையாட்டு கழக காரியாலயத்தில் நிறைவுபெற்றது.

கழக போசகர்களான சிவ.ஜெகராஜன், வே.இராஜேந்திரன், வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

நான்கு கிலோமீட்டர் நீள மரதன் ஓட்டத்தில் ஏழு போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

 காரைதீவு பொலிசார் மற்றும் காரைதீவு பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவளித்தன.


( வி.ரி.சகாதேவராஜா)

 காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 41 வது வருட நிறைவை முன்னிட்டும்,  குரோதி புத்தாண்டு வருட பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டு கழகமும்,  விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடத்தும் 26 வது மாபெரும்  கலாச்சார விளையாட்டு விழா எதிர்வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை காரைதீவில் நடைபெற இருக்கிறது.

காரைதீவு விளையாட்டு கழகத் தலைவர் ரொட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன்  தலைமையில் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற இருக்கும் கலாச்சார விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்  கலந்து சிறப்பிக்க இருக்கிறார்.


சீர்பெறு அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான எந்திரி என் .சிவலிங்கம், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் , கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களப்பணிப்பாளர் யு. சிவராஜா ஆகியோரும் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்கள்.
 முதன்மை அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் மற்றும் ஏனைய சிறப்பு நட்சத்திர  கௌரவ அதிதிகள் பலரும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

 இந்த நிகழ்விலே விசேடமாக காரைதீவு விளையாட்டு கழகத்தின் 40 வருடகால வரலாற்றை உள்ளடக்கிய "விபுலவிருட்சம்" என்ற சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட இருக்கின்றது. அத்துடன் கல்வித்துறை சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள் என்று கழக செயலாளர் எஸ்.கிரிசாந்த் தெரிவித்தார்.


( வி.ரி. சகாதேவராஜா
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு  கல்லடி ராமகிருஷ்ணபுரத்தில்  உள்ள இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் சிறுமியர் இல்ல மாணவர்களின் சித்திரை புத்தாண்டு
விளையாட்டு விழா இடம் பெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் பரிசுகளை வழங்கி வைத்தார். 



வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மனாலய புது வருடப்பிறப்பை முன்னிட்டான கைவிசேட நிகழ்வு இன்று இடம் பெற்ற போது...


வி.சுகிர்தகுமார் 0777113659 



  சித்திரைப்புத்தாண்டு விசேட பூஜைகள் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் நேற்றிரவு (12) இடம்பெற்றது.
மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேநேரம் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தினை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலம் வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ப.கு.கேதீவரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.


  
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் நேற்றிரவு (12) இடம்பெற்றது.
மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேநேரம் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தினை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலம் வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ப.கு.கேதீவரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.


எஸ்.அஷ்ரப்கான்)


அம்பாறை 
மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங் 
களைச் சேர்ந்த பள்ளிவாசல்களில் கடமையாற்றும்  நாபீர் 
பவுண்டேஷன் மூலம் பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் கதீப்மார்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு கல்முனை நூராணியா பள்ளிவாசலில் நாபீர் 
பௌண்டேஷனின் ஸ்தாபகர் பொறி 
யியலாளர்  உதுமான்கண்டு 
நாபீர் தலைமையில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்றது.

இங்கு நாபீர் 
பௌண்டேஷனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பாயிஸ் கரீம் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 


இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு ‘ஈத் அல்-பித்ர்’ (ஈகைத் திருநாள்) என்று அழைக்கப்படுக்கிறது. இஸ்லாத்தின் முக்கியமான மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன.


ஆனால், உலகளவில் முக்கியமான இது போன்ற ஒரு நிகழ்வு எப்போது நிகழும் என்பது முடிவுசெய்யப்படுவது மிகவும் சிக்கலான விஷயமாக உள்ளது.


இது ஏன் என்று, பிபிசி செய்தியாளர்களான அஹ்மென் கவாஜா மற்றும் அமீர் ரவாஷ் இந்தக் கட்டுரையில் விளக்குகின்றனர்.


இஸ்லாத்தில் சந்திரனின் முக்கியத்துவம்

ரமலான் மாதம் முடிவடையும் நேரத்தில், உலகிலுள்ள 190 கோடி இஸ்லாமியர்களில் பலர் வானம் மேகமூட்டமின்றி இருக்கவேண்டும் என்று வேண்டியபடி இருப்பார்கள். காரணம், ரமலான் விருந்து துவங்குவதற்கான சமிக்ஞையைக் காணவேண்டி.


ரமலான் துவங்குவதைப் போலவே, இதுவும் பிறையைக் காண்பதிலிருந்து துவங்குகிறது.


இஸ்லாம், நிலவின் கட்டங்களின் அடிப்படையில் அமைந்த சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகிறது. ரமலான் அதன் ஒன்பதாவது மாதத்தில் துவங்குகிறது.


ஒவ்வொரு ஆண்டும், சந்திர நாட்காட்டியின் ஒவ்வொரு மாதமும் முந்தைய சூரிய ஆண்டில் நடந்ததற்கு 11 நாட்களுக்கு முன்பு நடைபெறும்.


சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுவது இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமானது. இதுதான் அவர்கள் ரமலானை எப்போது கொண்டாடுகிறார்கள் என்பதை முடிவு செய்கிறது.


இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கிறார்கள், விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்கிறார்கள்.


காஸாவில் 'துயரமான' ரமலான்: போரில் தாயையும் தந்தையையும் இழந்த குழந்தைகள் பெருநாளைக் கொண்டாட முடியாமல் தவிப்பு

3 மணி நேரங்களுக்கு முன்னர்

சூரிய கிரகணத்தின் போது ராட்சத ஆமைகள் உற்சாகமாக இனச் சேர்க்கையில் ஈடுபடுவது ஏன்?


இஸ்லாத்தின் முக்கியமன மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன


இஸ்லாமிய மாதங்கள் சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் அமைந்திருந்தால், பருவங்கள் அனைவருக்கும் பொதுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதனால், உலகின் சில பகுதிகளில் வாழும் மக்கள் கோடையில் ரமலானைக் கொண்டாடுவார்கள், அங்கு பகல் நேரம் நீண்டதாக இருக்கும். மற்ற பகுதிகளில் குளிர்காலமாக இருக்கும், எனவே பகல் குறுகியவையாக இருக்கும்.


ஆனால், சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுவதன் மூலம், ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்கள் வாழ்வில் வெவ்வேறு பருவங்களில் ரமலானை கடைபிடிக்கிறார்கள். அதனால் அவர்களது வாழ்வின் 33 வருடங்களில் நீண்ட நோன்பு நாட்கள், குறுகிய நோன்பு நாட்கள் ஆகிய அனைத்தையும் அனுபவிக்கிறார்கள்.

ஈத் அல்-பித்ர் பண்டிகை பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் வருகிறது.


ஆனால் இஸ்லாத்தில், இந்நாள் உண்மையில் எப்போது வருகிறது என்ற விவாதம் உள்ளது.


பிறையின் தோற்றத்தை அறிவிக்க, சிலர் பாரம்பரியமன சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகிறார்கள், மற்றவர்கள் வானியல் அவதானிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் உண்மையில் பிறை நிலவு வானில் காணப்பட்ட பின்னரே புதிய மாதத்தைக் குறிக்கின்றனர்.


இது பொதுவாக இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களால் செய்யப்படுகிறது, தனிநபர்களால் அல்ல.



இந்த ஆண்டு ஈத் பண்டிகை எப்போது?

சந்திரனைப் பார்த்து ஈத் பண்டிகையை நிர்ணயம் செய்பவர்கள், அவர்கள் உலகில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, ஏப்ரல் 9 (செவ்வாய்), ஏப்ரல் 10 (புதன்கிழமை), ஏப்ரல் 11 (வியாழக்கிழமை) ஈத் பண்டிகை அமையும்.


சந்திரனின் முதல் பிறை உண்மையில் இரவு வானத்தில் எப்போது தெரியும் என்பதைப் பொறுத்து, சந்திர மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும் என்பதால், இதைச் சரிபார்க்க ஈத் முன் இரவு வரை இஸ்லாமியர்கள் காத்திருக்க வேண்டும்.


வானில் பிறையைப் பார்ப்பவர்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வானத்தை நோட்டமிடத் துவங்குவார்கள். அவர்கள் உலகில் எங்கிருந்தாலும் மாதத்தின் 29-வது நாளில் இந்த பிறையைத் தேடுவார்கள்.


அவர்கள் பிறையைக் கண்டால், மறுநாள் ஈத் கொண்டாட்டங்கள் நடக்கும்.


இல்லையென்றால், 30 நாள் மாதத்தை நிறைவு செய்ய இன்னும் ஒரு நாள் நோன்பு இருக்கவேண்டும்.


பிரிட்டனின் ‘HM Nautical Almanac’ அலுவலகத்தின்படி, ஈத் பண்டிகை, ஏப்ரல் 10 புதன்கிழமை அன்று அமைகிறது.



படக்குறிப்பு,

பிறையின் தோற்றத்தை அறிவிக்க, சிலர் பாரம்பரியமன சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகிறார்கள், மற்றவர்கள் வானியல் அவதானிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்


இஸ்லாமிய நாடுகள் ஈத் பண்டிகையை எப்படி முடிவு செய்கின்றன?

ஈத் பண்டிகையின் தேதி உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. பொதுவாக அவை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வித்தியாசத்தில் அமையும்.


உதாரணமாக, சௌதி அரேபியாவில் உள்ள அதிகாரிகள் - இஸ்லாத்தின் பிறப்பிடமாக இருந்த சுன்னி ஆதிக்கம் செலுத்தும் நாடு - பார்வையால் சந்திரனைக் கவனிக்கும் பொதுமக்களின் சாட்சியங்களைப் பொறுத்து ரமலான் தொடக்கத்தையும் முடிவையும் அறிவிக்கிறது.


பல நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் இதைப் பின்பற்றுகிறார்கள்.


ஆனால், ஷியா இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இரான், சந்திரனைக் கண் பார்வையால் அவதானிப்பதைச் சார்ந்து இருக்கும் அரசாங்க அறிவிப்பைப் பின்பற்றுகிறது.


பெரும்பான்மையான ஷியா முஸ்லிம்கள் மற்றும் சுன்னி சிறுபான்மையினரைக் கொண்ட இராக், இந்த இரண்டு முறைகளின் கலவையைப் பின்பற்றுகிறது. அங்கு ஷியா மக்கள் செல்வாக்குமிக்க மதகுரு கிராண்ட் அயதுல்லா அலி அல்-சிஸ்தானியின் அறிவிப்பைப் பின்பற்றுகிறார்கள். சுன்னி சிறுபான்மையினர் அவர்களின் சொந்த மதகுருக்களைப் பின்பற்றுகிறார்கள்.


அதிகாரப்பூர்வமாக மதச்சார்பற்ற நாடான துருக்கி, ரமலான் தொடக்கத்தையும் முடிவையும் தீர்மானிக்க வானியல் கணக்கீடுகளைப் பயன்படுத்துகிறது.


ஐரோப்பாவில், பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த சமூகங்களின் தலைவர்களின் அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.



ஈத் பண்டிகையின் தேதி உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. பொதுவாக அவை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வித்தியாசத்தில் அமையும்


தமிழ்நாட்டில் என்ன குழப்பம்?

தமிழ்நாட்டில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட சில அமைப்புகள் நேற்று (செவ்வாய், ஏப்ரல் 9) பிறை தென்படதாக அறிவித்து, இன்று (ஏப்ரல் 10, புதன்கிழமை) ஈத் பெருநாளை அறிவித்துக் கொண்டாடிவருகின்றன. இது தமிழ்நாடு அரசு தலைமை காஜியின் அறிவிப்புக்கு எதிராக இருப்பதாகப் பேசப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர் அப்துல் கரீம் இதற்கான காரணத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.


அவர், பொதுவாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் பிறையைப் பொறுத்தே அமையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது, என்றார். “அதுவும், பிறை வானில் இருந்தால்மட்டும் போதாது, அது கண்ணுக்குத் தெரியவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது,” என்றார்.


“இதன் அடிப்படையில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தமிழ்நாட்டை 50-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 20-25 கிளைகள் உள்ளன. இவற்றில் பிறை வானில் தெரிவதைக் கண்காணிக்கக் குழுக்கள் உள்ளன. மாநில நிர்வாகிகள் இடையேயும் பிறை கண்காணிப்புக் குழு உள்ளது. இது ரமலான் மாதம் மட்டுமல்ல. அனைத்து மாதங்களும் நடைபெறுகிறது,” என்றார்.


மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தலைமை காஜி, கடந்த காலங்களில் அவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பிறையைப் பார்த்ததாகச் சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் பிறை தெரிந்ததாகச் சொல்லப்பட்டால் அதை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் நபிகள் சொன்ன வழிமுறைப்படி அவர்கள் இல்லை. அதனால் பிறை விஷயத்தில் அவர்களை நம்புவதில்லை,” என்றார்.


“அதனால் தான் நாங்கள் தனியாகக் குழுக்கள் அமைத்து பிறையைக் கண்காணிக்கிறோம். அதனடிப்படையில் கோவையிலும் கன்னியாகுமரியிலும் பிறை பார்த்ததாகச் சொல்லப்பட்டது. எங்கள் நிர்வாகிகள் சென்று அதனை உறுதிப்படுத்தி அறிவித்து இன்று (ஏப்ரல் 10, புதன்கிழமை) பெருநாள் கொண்டாடினோம்,” என்றார்.


முன்னதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் வெளியிட்ட அறிக்கையில், செவ்வாய்க்கிழமை இரவில் பிறை தெரியாததால், வியாழக்கிழமையன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.


இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



 நூருல் ஹுதா உமர் 


ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பாப் பிரசங்கமும் புதன்கிழமை (10) மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரால் வழமைபோன்று இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பெருநாள் தொழுகையும் குத்பாப் பிரசங்கமும் அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம். மின்ஹாஜ் (உஸ்மாணி) அவர்களால் நடத்தப்பட்டன.

நோன்புப் பெருநாள் தொழுகையில் மார்க்க அறிஞர்கள், ஊர் பிரமுகர்கள், ஊடகவியலாளா்கள், புத்திஜீவிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.


 (எஸ்.அஷ்ரப்கான்)


புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்  களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி அஷ்ஷெய்க் எம்.எப்.எம்.ஜவ்ஸாத் (ஸலாமி) அவர்கள் நிகழ்த்தினார்.

ஆயிரக்கணக்கான மக்கள்  நோன்புப் பெருநாள் தொழுகையில்  கலந்துகொண்டதுடன் பலஸ்தீன் ; காஸா மக்களுக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

 









 







அக்கரைப்பற்று பட்டின ஜூம்ஆ பள்ளிவாயலில் இன்றைய தினம் நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது. தொழுகையினை, மௌலவி   ஹாதி அவர்கள் நடத்தி வைக்க, குத்பாவினை மௌலவி கலாமுல்லாஹ் நடத்தி வைத்தார்.

அக்கரைப்பற்று பட்டின ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகம், ரமழானின் கடந்த 29 நாட்களில் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்தது போல, நோன்புப் பெருநாள் தினத்திலும் விசேட ஏற்பாடுகனைச் செய்தது. ஆண்களும் பெண்களுமாக, சுமார் 3000 பேர் வரை இன்றைய தினத்தில் கலந்து சிறப்பித்தனர்.


 



ரமழான் கால இறுதிப் பத்து நாட்களில், விசேட வணக்க வழிபாடுகளில்,மக்கள் அக்கரைப்பற்று பட்டினப் பளளிவாயலிலும் ஈடுபட்டு வந்திருந்தனர். ரமழான் நோன்பு 27 இற்கான விசேட நிகழ்ச்சிகள் சனிக் கிழமை இரவில் துவங்கி ஞாயிறு அதிகாலை வரை பயான் இடம் பெற்றிருந்தது. தராவீஹ் தொழுகையினை ஹாபிழ்களான, றியாஸ்தீன்,ஹாதி ஆகியோர் நிகழ்த்திய அதேவேளையில், தஸ்பீஹ் தொழுகையினை மௌலவி ஐயுப்கான் அவர்களும்,  விசேட பயான் சொற்பொழிவுகளை கலாநிதி அல்ஹாபிழ் சித்திக் (அஸ்ஹரி அவர்களும், துஆப் பிரார்தனையினை கலாமுல்லாஹ் ரசாதி அவர்களும், நடத்தியிருந்தார்கள்.

கியாமுல் லைல் தொழுகையைத்  தொடர்ந்து, சுமார்  1600 பேருக்கு  சஹர் உணவுகளும் வழங்கி வைக்கப்பட்டது.


(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலின் தஃவா குழு ஏற்பாடு செய்திருந்த  10 நாட்கள் கொண்ட ரமழான் செயலமர்வு தொடராக இண்டாவது வருடமாகவும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வு 05.04.2024 ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பள்ளி வாசல் நிர்வாக சபைத் தலைவர்  அல்-ஹாஜ் இப்றாகீம்  தலைமையில் பேஷ் இமாம் மெளலவி ஏ.எம்.சாபித் (ஸரயி, றியாதி) அவர்களின் வழி நடாத்தலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மெளலவி எஸ்.எம்.றிஷாத் ஸலீம் 
(றியாதி) Phd கலந்து கொண்டு சிறப்பித்தார்.

70 மாணவர்கள் கலந்துகொண்டு அகீதா, பிக்ஃஹ், ஸீரா, அஹ்லாக், தஜ்வீத், பிக்ஃஹுஸ் ஸலா போன்ற பாடங்களை கற்று இறுதி பரீட்சையில்  வெற்றியாளர்களாக தெரிவானோருக்கு, முதலாம் பரிசாக 10000 ரூபாவும் இரண்டாம் பரிசாக 7000 ரூபாவும் மூன்றாம் பரிசாக  5000 ரூபாவும் ஆறுதல் பரிசில்கள் 2000 ரூபாய்கள் வீதம் 12 மாணவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பங்கு கொண்ட 70 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கிவைக் கப்பட்டதுடன்,
கற்பித்த கண்ணியமான உலமாக்களும் அன்பளிப்புகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


இராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் வரலாற்று பிரசித்தி பெற்ற ஈரளகுளம் வேலோடும் மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அன்னதான மண்டபம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

வேலோடுமலை முருகன் ஆலய தர்மகர்த்தா எஸ்.தியாகராஜா தலைமையில் நடைபெற்ற அன்னதான மண்டப திறப்பு விழாவில், இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார்.

லண்டனில் வாழும் திருமதி ஜீவா தேவி வரதராஜன் , காலஞ்சென்ற திரு மயில்வாகனன் வரதராஜன் AVS அவர்களின் ஞாபகார்த்தமாக இந்த அன்னதான மண்டபத்தை ராமகிருஷ்ண மிஷன்  வேண்டுகோளின்படி நிறுவியுள்ளனர்.

இந்த பணியில் ராமகிருஷ்ண மிஷன் தொண்டர் திரு கருணாநிதி  பொறுப்பேற்று  முருகன் ஆலயத்தின் தலைவர் திரு தியாகராஜாவின் ஒத்துழைப்போடு பணிகள் நிறைவேற்றப்பட்டன.

  அன்னதான மையத்தோடு இணைந்து சமய நூல்கள் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் வெளியிடப்பட்டுள்ள புத்தகங்களையும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 இந்த நிகழ்வில்  ராமகிருஷ்ணன் மிஷன் பக்தர்கள் மற்றும் அன்பர்கள் கலந்து கொண்டனர்.


 மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழா

(வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்  மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின்  "மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (16)சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபையின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தொகுத்து எழுதிய இந் நூல் வெளியீட்டு விழா
ஆலய சந்நிதானத்தில் ஆலய தலைவர் கலாநிதி கி. ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

ஆன்மீக அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பித்தார்.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ. கோபாலரெத்தினம்  கலந்து சிறப்பித்தார்.

ஆசியுரையை  ஆலய பிரதம குரு ஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் வழங்கினார்.  வெளியிட்டுரையை நூலாசிரியர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.

 முதல் பிரதியை ஆலய தலைவர் கி.ஜெயசிறில் சுவாமி நீலமாதவானந்தா ஜீக்கு  வழங்கி வைத்தார். ஏனைய பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன  .


வி.சுகிர்தகுமார் 0777113659 


 கிழக்கு மாகாணம் அம்பாரை  மாவட்டத்தில்  பிரசித்தி பெற்ற பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றான அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான வருடாந்த  மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம் இன்று (15) நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற கிரியைகளை தொடர்ந்து கொடிச்சீலை எடுத்து வருவதற்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிச்சீலையும் எடுத்துவரப்பட்டது.

பின்னர் நடைபெற்ற யாக பூஜையுடன் பிரதான கும்ப பிரதட்சனையுடன் கொடிச்சீலையும் உள்வீதி வலமாக எடுத்து வரப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்திற்கான அபிசேக பூஜைகள் நடைபெற்றதுடன்; பக்தர்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றமும் இடம்பெற்றது.

பின்னராக மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரரை அலங்கரிக்கப்பட்ட தேரில் இருத்தி அடியார்களினால் வெளி;வீதிவலமாக சுமந்து சென்றதுடன் வசந்த மண்டபத்தில் அமர்த்தப்பட்டு விசேட பூஜைகளும் இடம்பெற்றது.

இன்று (15) கொடியேற்றமுடன் ஆரம்பமான பிரம்மோற்சவப் பெருவிழாவின் சத 108 சங்காபிசேகம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் 24ஆம் திகதி இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் மாலை கொடியிறக்கமும் 25ஆம் திகதி இடம்பெறும் பூங்காவனத்திருவிழாவுடனும் 26ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடனும்   இவ்வருட விழா இனிது நிறைவுறவுள்ளது.

ஆலய கௌரவ தலைவர் சு.தில்லைநாயகம் தலைமையில் நடைபெறும் மகோற்சவப் பெருவிழாவின் கிரியைகள் யாவும் வித்யாசாகரர் சிவாச்சாரிய கலாபவனமணி வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ புண்ய கிருஸ்ணகுமார சிவாச்சாரியார்; தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

இதேநேரம் வருகைதந்த அடியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் பணி அடியவர் ஒருவரின் நிதி ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டதுடன் அன்னதானப் பணியை ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.  


 


புனித ரமலானை முன்னிட்டு கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய 2003ம் வருடம் G.C.E O/L பரீட்சைக்கு தோற்றிய ரியல் சாம்பியன் 2003 அமைப்பினரால் வருடாந்தம் வழங்கப்படுகின்ற வறிய மக்களுக்கான உலருணவு பொதிகள் சுமார் 100 குடும்பங்களுக்கு இன்று வழங்கிவைக்கப்பட்டது. (படம் - நூருல் ஹுதா உமர்)

 


நோன்பிற்கு தேவை உணவா? பயிற்சியா?


Dr PM Arshath Ahamed MBBS MD PAED


உங்களிடம் ஒரு கார் இருக்கிறது. அது பெற்றோலில் ஓடும். தேங்காய் நெய்யிலும் ஓடும். பெற்றோல் விலை குறைவு. கிடைப்பதும் இலகு. அப்படியென்றால் பெற்றோலில் தான் அந்த கார் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். பெற்றோல் இல்லாத போது , விலை அதிகரிக்கின்ற போது மாத்திரமே, எப்போதாவது ஒரு நாள் அந்தக் கார் தேங்காய் நெய்யில் ஓடும். 


சார் ஆட்சிக்கு வந்து, ஓரிரு வருடங்களுக்கே பெற்றோலுக்கு கடும் தட்டுப்பாடு. போலின். அப்போது தான் உங்கள் கார் தேங்காய் நெய்யில் ஓடுவது ஞாபகம் வருகிறது. சரி தேங்காய் நெய்யை ஊற்றி நமது காரை ஓடலாம், அப்பாடா நமக்கு கவலை இல்லை என்று தேங்காய் நெய்யை வாங்க கடைக்கு போனால் கடைகளில் தேங்காய் நெய் என்று ஒரு சாமானை இல்லை. உருக்கெண்ணெய் இருக்கிறது, நல்லெண்ணெய் இருக்கிறது , தேங்காய் எண்ணெய் இருக்கிறது, பசு நெய் இருக்கிறது ஆனா எங்க தேடியும் தேங்காய் நெய் இல்லை. இனி எப்படி ஜாமீன் வாங்குவது. என்ன இழவுடா இது என்று உங்கள் பாசுனைக்கு கோல் எடுத்த போதுதான் விஷயம் புரியவருகிறது.


பெற்றோலில் ஓடுகின்ற காலத்தில் அடிக்கடி காரை ரிசர்வ் ற்கு கொண்டு வர வேண்டும். ஒரு கிழமைக்கு ஓரிரு தரமாவது இப்படி செய்ய வேண்டும். ஒரு போதும் புள் டாங் அடித்திருக்க கூடாது. அப்படி செய்தால் தான் தேங்காய் நெய் காரிலே தானாக உருவாகும். அதை தான் பின்னர் பெற்றோல் இல்லாத காலங்களில் பாவிக்கலாம். அப்படி உருவாகும் தேங்காய் நெய்யை அடிக்கடி பாவித்தால் கார் இலகுவில் பழுதடையாது. நல்ல பிக் அப் கிடைக்கும். அடிக்கடி பார்ட்ஸ் மாற்ற வேண்டிய தேவையும் வராது. மெயின்டனன்ஸ் செலவும் குறைவு. தேங்காய் நெய்யில் காரை ஓட்ட பழக்கினால், அடிக்கடி பெற்றோல் அடிக்காமலே, நீண்ட தூரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் காரை ஓட்டி செல்லலாம் என்று ஏகப்பட்ட நன்மைகள் அப்போது தான் தெரிய வருகிறது. அடடா இது தெரியாமல் இவ்வளவு நாளும் புள் டாங் அடித்து காரை ஓட்டி இருக்கிறேனே என்று   இப்போது கைசேதப்பட்டு பிரயோசனம் இல்லை. கார் வாங்கிய போது மெனுவலை வாசித்திருக்க வேண்டும். 


இது தான் நம் நிலை. கடைசியில் கைசேதம். இப்போது அந்த காரை - உங்கள் உடம்புக்கும் (Body), பெற்றோலை -குளுக்கோஸுக்கும்( Glucose) , தேங்காய் நெய்யை -கீட்டோனுக்கும் (Ketone) மாற்றி விட்டால் சரி. நாமும் இவ்வளவு காலமும் இது தெரியாமல் அடிக்கடி பெற்றோல் அடித்திருக்கிறோம் என்பது தெரிய வரும்.


குளுகோஸ் உற்பத்திக்கு கார்போஹைட்ரேட் தேவை. கீட்டோன் உற்பத்திக்கு கொழுப்பு தேவை. கார்போஹைட்ரேட் ‌தேவை என்றால் மாப்பொருள் உணவுகள் உண்ண வேண்டும் . ஆனால் கீட்டோன் தேவை என்றால் எதையும் உண்ண வேண்டியதில்லை. அவ்வளவு கொழுப்பும் ஏற்கனவே தின்று பெருத்த நமது உடம்பிலே இருக்கிறது. வேறு எங்கும் போக வேண்டியதில்லை. இது தான் அடிப்படை.


கைத்தொழில் புரட்சி ஏற்படுதற்கு முதல் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பருவமும் பஞ்சம் வரும். பட்டினி வரும். மனிதர்கள் உண்ண உணவின்றி கஷ்டப்படுவார்கள். அப்போது அவர்கள் தப்பி பிழைத்து உயிர் வாழ காரணமாக அமைந்தது தான் இந்த கீட்டோன்கள். அதே கீட்டோன்கள் நமது உடலிலும் உண்டு ஆனால் பாவிக்கப்படாமலே. அவைகளை பாவிக்க உகந்த காலம் தான் எதிர்வரும் ரமழான்.

 

எதிர் வருகின்ற புனித ரமழான் உங்கள் உடம்பை கீட்டோனில் இயக்கவைக்க வருகின்ற ஒரு பயிற்சி பட்டறை. இவ்வளவு காலமும் பெற்றோலில் ( குளுக்கோஸில்) ஓடிய உடம்பை இனி ஒரு மாத காலம் கீட்டோனில் ஓட வைக்க வருகின்ற ஒரு புனித காலம். கீட்டோனில் ஓடுகின்ற உடம்பு அடிக்கடி பழுதடையாது. தானாகவே புள் சேர்விஸ் பண்ணிக்கொள்ளும். மெயின்டனன்ஸ் பிரீ. இவ்வளவு நன்மைகளும் வந்து சேர நீங்கள் உங்கள் வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். 


இந்த கீட்டோன் வேண்டும் என்றால் பசித்திருக்க வேண்டும். புள் டேங் கூடவே கூடாது. எப்போதும் அரை வயிறு மட்டும் சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக சுப்பர் பெட்ரோல் கூடவே கூடாது. சீனி , இனிப்பு பண்டங்கள் , பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இப்படி குறைவாக உணவுப் பதார்த்தங்களை உட் கொண்டால் மாத்திரமே, உடம்பில் ஸ்டோரில் உள்ள கீட்டோனின் பலனை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம். இதை தான் இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங்( intermittent fasting) என்று சொல்வார்கள்.


இந்த நோன்பு மனித வரலாறு தொடங்கிய காலம் முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்து வருகிறது. வடிவங்கள் மாறினாலும் அதன் பயனும் நோக்கமும் ஒன்றாகவே இருந்து வருகிறது. உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்படுகிறது என்று அல்குர்ஆனும் இதையே குறிப்பிடுகிறது.


நோன்பின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் பற்பல. ஆனால் அவைகளை அடைத்து கொள்ள நாம் பசித்திருக்க வேண்டும். தாகித்திருக்க வேண்டும். அதுபோல அதன் ஆண்மீக பயன்களும் பற்பல. அதை அடைந்து கொள்வதற்கு நாம் முத்தகீன்களாக மாற வேண்டும். மொத்தமாக இந்த பொருள் தேடல் உலகிலிருந்து ( Consumerism) கொஞ்சம் விடுதலை பெற வேண்டும். 


நோன்பின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் என்று பெரும் பட்டியலே இருக்கிறது. ஆனால் அதை பெற்றுக் கொள்ள அதற்கு உரிய முறையில் நாம் நோன்பு நோற்க வேண்டும். அப்போது தான் கீட்டோன் கிடைக்கும். இல்லையென்றால் வழமை போல் குளுக்கோஸ் தான். பெற்றோல் போட வேண்டும்.


ஒரு உதாரணத்திற்கு பின்வரும் அட்டவணை போல உங்கள் நோன்பு நாட்கள் அமைந்தால் உங்கள் உடல் கீட்டோனில் இயங்க தொடங்கும். க்ளுகோஸ் தேவை குறைவடையும். தேவையில்லாத கொழுப்பு எரிக்கப்படும். 


சஹர்- கொஞ்சம் சோறு( மூன்று அகப்பை) ஒரு துண்டு இறைச்சி/ மீன்/ ஒரு முட்டையுடன் ) கொஞ்சம் மரக்கறி. கூடவே ஒரு சில ஈச்சம் பழங்கள் அல்லது ஒரு வாழைப்பழம். ஒரு கிளாஸ் பால்/ தயிர் அன்ட் அரை லிட்டர் தண்ணீர். அல்லது ஒரு துண்டு சீஸ்+ மூன்று பிஸ்கட்+ ஒரு கிளாஸ் பால்+ மூன்று ஈச்சம் பழங்கள் + அரை லிட்டர் தண்ணீர் ( எனது ஃபேவரிட் மெனு)


இப்தார்- ஒரு சில ஈச்சம் பழங்கள் தண்ணீர் அரை லீட்டர். ஒரு கோப்பை கஞ்சி. கூடவே கடித்துக் கொள்ள ஒரே ஒரு சமுசா/ ஒரு கட்லட். (அதையும் தவிர்த்தால் நன்று)


மஃரிப் தொழுகைக்கு பின்னர் ஒரு கப் கோப்பி / ஒரு கப் தேனீர் கொஞ்சம் நறுக்கிய பழங்கள். இடையிடையே கொஞ்சம் தண்ணீர்.


தறாவீஹ் தொழுகைக்கு பின்னர் மூன்று இடியாப்பம்/ ஒரு துண்டு பிட்டு/ இரண்டு ரொட்டி+ மரக்ககறி + மீன் / முட்டை கூடவே ஒரு கிளாஸ் பிரஸ் ஜுஸ். ஒருகிளாஸ் தண்ணீர்.


அவ்வளவு தான் ஒரு நாளைய சாப்பாடு. பள்ளிவாசலுக்கு இயலுமானவரை  நடந்து போவது. நடந்து வருவது. கியாமுல் லைலில் நீண்ட நேரம் நின்று வணங்குவது. இது போதுமான எக்ஷஸைர்ஸ்.  


இப்படி சாப்பிட்டு நோன்பு நோற்று பாருங்கள். நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். உங்கள் உடம்பும் ஒரு மாத காலம் கீட்டோனுக்கு மாறி விடும்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.