Showing posts with label Culture. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


தேசிய ரீதியாக பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் Sadaqah Bulletin Welfare Foundation நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத இறக்காமம் அரபா நகர், கொக்குலான் கல் மக்களுக்கு கற்களால் ஆன வீடுகள் அமைக்க அடிக்கல் நடப்பட்டது.

ஸதகா புல்லட்டின் மற்றும் பெமிலி ரிலீப் நிறுவனங்களின் பிரதிநிதியும் பொறியியலாளருமான எம்.சி.கமால் நிஷாத் அவர்களின் நெறிப்படுத்தலிலும், தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் தகரக் கொட்டில்களில் உள்ள மக்களின் கஷ்டங்களை போக்கும் நோக்கில் மூன்று வீடுகளுக்கான அடிக்கல் நடப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல்.நசார், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா, ஆசிரியர் சிப்லி சம்சுதீன், பள்ளிவாசல் தலைவர், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஸதகா புல்லட்டின் மற்றும் பெமிலி ரிலீப் நிறுவனங்களின் உதவியுடன் தொடர்ந்தும் இந்த பிரதேச மக்களுக்கு பொறியியலாளர் எம்.சி.கமால் நிஷாத் அவர்களினால் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டம்  இறக்காமம் பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத இந்த அரபா நகர் இகொக்குலான் கல்  மக்கள் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் சொல்லிலடங்காதவை. இப்பகுதி மக்களுக்கு மலசல கூட வசதி, மின்சார வசதி,வீதி அபிவிருத்தி, தெருவிளக்கு, மாலை வேளைகளில் உள்ள பாம்பு தொல்லை, யானைகளின் அட்டகாசம் என பல்வேறு வகையான பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளதை காண முடிகிறது. எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் அனைவரும் இது தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


2019 ஏப்பிரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6ஆவது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளன. 


2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம், இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்தக் கொடூரமான தாக்குதல்களை நாங்கள் தெளிவாகவும் உறுதியான முறையிலும் கண்டிக்கிறோம். இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் இஸ்லாத்தையோ அல்லது முஸ்லிம் சமூகத்தையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்களின் செயல்கள் எமது நம்பிக்கைக் கொள்கைகளையும், நாம் நிலைநிறுத்தும் விழுமியங்களையும் முற்றிலுமாக மீறுவதாகும். ஆரம்பத்திலிருந்தே, மத அறிஞர்களின் வழிகாட்டுதலின் கீழ் முஸ்லிம் சமூகம் குற்றவாளிகளை நிராகரித்து கண்டனம் செய்தது, எங்கள் வெறுப்பின் உறுதியான அறிக்கையாக இஸ்லாமிய இறுதிச் சடங்குகளை மறுத்தது. 

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, முஸ்லிம்கள் இந்த மண்ணில் விசுவாசமான, அமைதியான மற்றும் தொழில்முனைவோர்களாகவும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் குடிமக்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் சுமூகமான மற்றும் குழப்பமான எல்லாக் காலங்களிலும் சகவாழ்வு, விசுவாசமான சேவை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற வரலாற்றைக் கொண்டுள்ளதோடு குறிப்பிடத்தக்கவிதமாக அநீதிகள், பாகுபாடு மற்றும் அவதூறுகளை எதிர்கொண்ட போதிலும், நாங்கள் எப்போதும் பொறுமை மற்றும் அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம், ஒருபோதும் தீவிரவாதம் அல்லது வன்முறையை பதிலாக நாங்கள் பயன்படுத்தவில்லை. 

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவங்கள் பயங்கரவாதச் செயல்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தை அவதூறு செய்வதையும், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதையும், நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது தெளிவாகிறது. முழு உண்மையும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதில் பலிக்கடாவாக உள்ளவர்களை விடுத்து உண்மையிலேயே பொறுப்பானவர்கள் - தாக்குதலின் சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும்;, தாக்குதல் நடந்து; ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்படாமலும், தாக்குதல்களைச் சுற்றியுள்ள முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமலும் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் முஸ்லிம் தனிநபர்கள் நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் அல்லது தீர்ப்புகள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் மேலும் ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம். இத்தகைய நடைமுறைகள் அவநம்பிக்கையையும் பயத்தையும் மேலும் ஆழப்படுத்தியுள்ளன. மேலும் தாமதமின்றி அனைத்து விசாரணைகளையும் வெளிப்படையான மற்றும் நம்பகமான முடிவுக்குக் கொண்டுவருமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 

இலங்கையில் வன்முறைகளை தூண்டுவதும் தண்டனைகளின்றி விடுபடுவதும் மீண்டும் மீண்டும் வேரூன்ற காரணமாக உள்ள நிறுவனங்கள், கட்டமைப்புகள் மற்றும் அரசியல் கலாசாரம் என்பவற்றில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்துமாறு நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் துயருற்றிருக்கும் நீண்ட உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 1971, 1989ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மற்றும் அழுத்கம, ஜின்தோட்டை, திகன, மினுவாங்கொட போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அத்துடன் கோவிட்-19 காலத்தில் கட்டாய தகனம் செய்ததன் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் என எல்லாம் சமூகங்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இதில் முழுமையான கரிசனை இல்லையெனில், நம்பிக்கையுடனும் முன்னோக்கியும் செல்லும் ஒரு தேசியத் தரமான கூட்டு முன்னேற்றப் பாதை என்றும் எட்டமுடியாத ஒன்றாகவே இருக்கும். 

கூட்டு தண்டனைக்கு எதிராகவும், அதைத் தொடர்ந்து வந்த குழப்பமான காலங்களில் நீதிக்காக போராடிய கௌரவ கர்தினால் மால்கம் ரஞ்சித், கத்தோலிக்க திருச்சபை மற்றும் அனைத்து மத மற்றும் இனக் குழுக்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது துணிச்சலும் ஒற்றுமையும் ஒருபோதும் மறக்கப்படக்கூடாதவை. 

ஓரங்கட்டப்பட்ட குழுவாக அல்லாமல் இந்த நாட்டின் சமமான அந்தஸ்துடன் அறிவொளி பெற்ற சமூகமாக நாம் முன்னேற உறுதிபூண்டுள்ளோம். அனைத்து இலங்கையர்களும் பிரிவினை மற்றும் சந்தேகத்தையும், அவற்றை உருவாக்கும் வெளிப்புற மற்றும் உள் கூறுகளையும் நிராகரிக்கவும், சமூகங்களிடையே நம்பிக்கையை வளர்க்கவும், அமைதி, இரக்கம் மற்றும் உண்மையான தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை வடிவமைக்கவும் முன்வருமாரு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 

பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகள் அதிக வெறுப்பு மற்றும் அநீதியால் மதிக்கப்படக்கூடாது, மாறாக உண்மை மேலோங்கி நிற்கும், நீதி நிலைநாட்டப்படும், மேலும் ஒவ்வொரு குடிமகனும் - இன மத பேதமின்றி - கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய ஒரு நாடாக இலங்கை மாறுவதை உறுதி செய்வதன் மூலம் கௌரவிக்கப்பட வேண்டும்.

 

நூருல் ஹுதா உமர்

நாட்டின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல்வேறு சமூக கட்டமைப்புக்களும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளமைக்கு நிவாரணமளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக சம்மாந்துறை பத்ர் ஹிஜ்றா ஜும்ஆ மஸ்ஜிதுக்கு சோலார் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

சம்மாந்துறை பத்ர் ஹிஜ்றா ஜும்ஆ மஸ்ஜிதின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்து வந்த பெருந்தொகை மின்சார கட்டண பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் விதமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் தனது டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 லட்சம் பெறுமதியான சோலார் சிஸ்டம் சம்மாந்துறை பத்ர் ஹிஜ்றா ஜும்ஆ மஸ்ஜிதின் மேல்தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் நிறைவு பணிகளை கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் பார்வையிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முன்னெடுத்த இந்த சோலார் சிஸ்டம் பொருத்தும் வேலைத்திட்டத்தினால் பள்ளிவாசல் மாதாந்தம் இலங்கை மின்சார சபைக்கு செலுத்திவந்த மின் பட்டியல் கட்டணம் 85 ஆயிரம் இப்போது இல்லாமலாகி எவ்வித கட்டணமும் இப்போது நாங்கள் செலுத்துவதில்லை என்றும் இந்த சோலார் மூலம் மாதாந்தம் 70-75 ஆயிரம் பள்ளிவாசலுக்கு  மேலதிகமாக வருமானமாக வருவதாகவும் இந்த வருமானத்தினூடாக பள்ளிவாசலின் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் இப்படியான நிலையான வருமான மூலங்கள் கிடைக்க உதவிய முன்னாள் எம்.பி எச்.எம்.எம். ஹரீஸுக்கு நன்றிகளையும் தமது பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக சம்மாந்துறை பத்ர் ஹிஜ்றா ஜும்ஆ மஸ்ஜிதின் நிர்வாக சபை தலைவர் பொறியியலாளர் எம்.ஐ. நஸீர் இதன்போது தெரிவித்தார்.

இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 


(வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழா உற்சவ திகதியில் மாற்றமடைந்துள்ளதாக வெளியாகும் செய்தியால் அடியார்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முன்னர் 
கதிர்காமக் கந்தன் ஆலயம் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26/07/2025 ம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பிக்கப்பட்டு  ஆகஸ்ட் 10 ம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற இருந்தது.

தற்போது திகதி மாற்றத்தையடுத்து 
2025 கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஜூன் 26ம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு யூலை 10ம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது என அறியப்படுகிறது.

கதிர்காம உற்சவம் ஆடிவேல் விழாவா? ஆனி வேல் விழாவா?
என்று இந்துக்கள் கேள்வி எழுப்பி அதிர்ச்சியடைந்துள்ளனர். 

கதிர்காமக்கந்தனின் திருவிழா இடம்பெறும் திகதிகளில் திடீர் மாற்றம் இடம் பெற்றுள்ளதாக சேவற்கோடியோன் அமைப்பு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்பதாக ஜூலை மாதம் 26ம் திகதி இடம்பெறவிருந்த கொடியேற்றம் தற்போது ஜூன் மாதம் 26ம் திகதி இடம்பெறுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளதாக அச் செய்தி கூறுகிறது.

புதிய திகதிகள்:-
கந்தனின் கொடியேற்றம் - 2025.06.26
கந்தனின் தீர்த்தோற்சவம் - 2025.07.10.

இலங்கையில் வெளியாகிய பெரும்பாலான கலண்டர்களில் ஜுலை மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 09 ஆம் தேதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும் என குறிப்பிடப்படுகிறது.
ஆனால் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இவ் வருட பஞ்சாங்கத்தில் பிரபல ஆலயங்களின் உற்சவ திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பிரபல கதிர்காம ஆடிவேல் உற்சவ திகதி தொடர்பில் எதுவும் இல்லை.

கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து 
இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 01 ஆம் தேதி ஆரம்பமாகிறது என் பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கதிர்காமம் ஆலய நிர்வாகம் இக் குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று இந்துமக்கள் கோருகின்றனர்.

 

கிறிஸ்வ வாசகர்களுக்கு ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களை www.ceylon24.com தெரிவிக்கின்றது.

உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33 ஆம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது.


இது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டுதோறும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில், இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.


(வி.ரி.சகாதேவராஜா)

சித்தர்களின் குரல் ஏற்பாட்டில் "வேலோடுமலை வேலவன் இசை பாடல்"  வெளியீட்டு விழா பங்குனி உத்தர தீர்த்த திருவிழாவன்று ஆலய ஆதீனகர்த்தா எஸ். தியாகராஜா சுவாமிகள் தலைமையில்  நடைபெற்றது.

வேலோடு மலையில் சித்தர்களின் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ, நமசிவாய மகேஸ்வரன் சுவாமி, தலைவர் ஆதித்தன் மற்றும் துணைத்தலைவர் மனோகரன் முன்னிலையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் திலக்சன்  பாடலை அருமையாக அமைத்துள்ளார்.

பாடலை யாத்த மற்றும் பாடிய மூவரும் ஆலயம் சார்பிலும் சித்தர்கள் குரல் சார்பிலும் பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 

 


( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு தேசிய புத்தாண்டு விழாவில் சிரேஸ்ட பிரஜைகளுக்கான புத்தாண்டு இளவரசரும் இளவரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார்.
 
இந்த நிகழ்வை வெற்றிகரமாக்க கடுமையாக உழைத்த அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் சொய்சா சிறிவர்தன, அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் அந்த அலுவலகங்களின் அதிகாரிகள் உட்பட எனது ஊழியர்களின் அனைத்து அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


 வரலாற்று சிறப்பு மிக்க மடத்தடி மீனாட்சி அம்மன்  ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன சர்மாவின் விஷேட பூசை வழிபாடுகளை தொடந்து அடியவர்களுக்கு கைவிஷேடம் வழங்கி வைக்கப்பட்டபோது..



 (வி.ரி.சகாதேவராஜா)


பிறந்திருக்கின்ற விசுவாசுவ புத்தாண்டு விசேட பூசைகள் மற்றும் வழிபாடுகள் அம்பாறை மாவட்டதமிழர் பிரதேசமெங்கும் இன்று திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றன .

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன்  ஆலயத்தில்  பெருந்திரளான மக்கள் ஆலயம் சென்று வழிபட்டனர் .

அங்கே புராதன அம்மாள் ஆலயத்தில் சாஸ்திர சம்பிரதாய பாரம்பரிய முறைப்படி கை விசேஷம் வழங்கப்பட்டது .

ஆயிரக்கணக்கான அடியார்கள் கியூ வரிசையில் நின்று கைவிஷேசத்தை பெற்றுக் கொண்டனர் .

நண்பர்கள் உறவினர்கள் முகம் மலர்ந்து கைலாகு கொடுத்து தமது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.

 இதுபோன்று ஏனைய ஆலயங்களிலும் இத்தகைய வழிபாடுகள் கை விசேஷம் வழங்கல்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


ஆதவன் அனலாய் அவதரிக்க

தீமைகள் எரிந்து,

நன்மைகளை மேலும் செம்மையாக்க,உழைப்பால் உயரும் அனைவருக்கும்

வாழ்வெல்லாம் வசந்த காலமாய்

ஒளிர வைக்க.

என் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும்.

மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு இவைகளை சுத்தமாக நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி எடுப்பதாகும்.

எனினும் நடைமுறையில் சில பிரதேசங்களில் இவைகளைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லை என்பதால், இந்துக்கள், தமது வீடுகளுக்கு அருகில் கிடைக்கக்கூடிய அறுகு, துளசி, வேப்பிலை ஆகியவற்றை மஞ்சள், பால் கலந்த சுத்த நீரில் மிளகு, சுக்கு இட்டு, நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி சிரசிலும், பாதத்திலும் வைத்து  நீராடுவது  உசிதமாகும். 

இவ் வருடம் விசுவாவசு புத்தாண்டு பிறக்கும் விசு புண்ணிய காலத்தில் மருத்து நீர் வைத்து ஸ்ஞானம் செய்யலாம்.

தலையில் ஆல் இலையும் காலில் இலவம் இலையும் வைத்து சித்திரை புத்தாண்டு புண்ணியகாலத்தில் நீராடினால் நற்பலன்கள் கிடைக்கும். 

மருத்து நீரை மூலிகை மருந்துக்களின் சங்கமம் என்றே கூற வேண்டும்.

 


நூருல் ஹுதா உமர்


நோன்புப் பெருநாளைத் தொடர்ந்து பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு வருடாந்தம் நடைபெறும் சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலய நோன்புப் பெருநாள் நிகழ்வு பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலை பணியாட்குழுவினரின் முழுமையான பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நோன்புப் பெருநாளைச் சிறப்பிக்கும் முகமாக வீடுகளில் தயாரிக்கப்பட்ட இனிப்புப் பண்டங்கள் மற்றும் பலகாரங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு அதிதிகள் மற்றும் பணிக்குழுவினருக்கான விருந்தோம்பல் நிகழ்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களின் ஆலோசனையின் பேரில் கல்விப் பணிமனையின் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. என். வரணியா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.என்.ஏ.மலீக், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ஏ.அஸ்மா மலீக், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரிஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் ஆசிரியர் ரவீந்திரகுமார் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

மேலும் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 


( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை  நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய "பிரசவம்" என்ற  கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீடு இன்று (6)   ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

 கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் தி.ஜே. அதிசயராஜ் தலைமையில் நடைபெற இருக்கிற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் 
கலந்து சிறப்பிக்கிறார்.

 சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண உதவிக்காணி ஆணையாளர் கே எல்எம். முஸம்மில் பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் உள்ளிட்ட பல  அதிதிகள் கலந்து சிறப்பிக்கிறார்கள் .

நூல் நயவுரையை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் சஞ்சீவி சிவகுமார் நிகழ்த்தவிருக்கிறார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் காணிப்பிரிவு போதனாசிரியராக அரச கடமை ஆற்றும் சதானந்தன் ரகுவரனின் முதலாவது இலக்கிய படைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.


 ( வி.ரி.சகாதேவராஜா)


புத்தசாசன மற்றும் மத கலாசார அலுவல்கள்  அமைச்சின் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற பல்வேறு பயிற்சி நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிலையத்திற்கு பொறுப்பான எஸ்.ரவீந்திரன்  தலைமையில் கடந்த புதன்கிழமை(3)  இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன்  கலந்து சிறப்பித்தார் .
 ஏனைய அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.நிருபா நிருவாக உத்தியோகத்தர் டி.மங்களா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பொதுமக்கள்  மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

 



பாறுக் ஷிஹான்)


ஈதுல் பித்ர் புனித நோன்பு பெருநாள் தொழுகை கிழக்கு மாகாணத்தின்   பல்வேறு  இடங்களில்  இன்று (31)  சிறப்பாக நடைபெற்றன.

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள்  தொழுகையும் குத்பா பிரசங்கமும்   அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று   நடைபெற்றது. இதன் போது   மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி  தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும்  பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.

 மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்காகன மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித   பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது  பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .

இதனை தொடர்ந்து  தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள்  நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

 



நூருல் ஹுதா உமர்


ஒவ்வொரு வருடமும் மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெறும் பெருநாள் தொழுகை இம்முறையும் மிகவும் சிறந்த முறையில் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.

இப்பெருநாள் தொழுகையினையும், குத்பா பிரசங்கத்தையும் மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) அவர்கள் நிகழ்த்தினார்.

 


இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புனித ரமழான் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

 

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.


 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு ஸீறா பவுண்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பினால் 12 வது வருடமாக அமைப்பின் சர்வதேச மற்றும் உள்ளூர் நல்லுள்ளங்களின் நிதியுதவியின் பங்களிப்புடன் ஒரு தொகை உலர் உணவு பொதிகள் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளை காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது அமைப்பின் ஸ்தாபகரும், ஒருங்கிணைப்பாளருமான யூ.கே. காலித்தீனின் தலைமையிலும், அமைப்பின் பணிப்பாளர் சபையின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மிய்யத்துல் உலமா சபையின் செயலாளருமான அல் ஹாபில் அஷ்ஷெய்க் மௌலவி நப்றாஸ் ஹனிபா (ரஹ்மானி) அவர்களின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்றது.

நிகழ்வில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி எம்.எம். சலீம் (ஷர்க்கி), சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபையின் இடைக்கால சபை தலைவர் வைத்தியர் சனுஷ் காரியப்பர், சாய்ந்தமருது மாளிகைக்காடு கதீப் முஅத்தின் சம்மேளனத்தின் தலைவர்  அஷ்ஷெய்க்  எம்.ஐ. ஆதம்பாவா (ரசாதி) கதீப் முஅத்தின் சம்மேளத்தின் உறுப்பினர்கள், ஸீறா பவுண்டேஷன் ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உலமா சபையின் சிரேஸ்ட உறுப்பினரும், மாவடிப்பள்ளி சஹ்தி அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் மௌலவி ஐ.எம். ரஹ்பி (ஹிழ்ரி) அவர்களினால் காலத்தின் தேவையும், முஅத்தீன் கத்தீப்மார்களின் முன்மாதிரியும் எனும் தொனிப் பொருளில் விசேட சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

 


ஜே.கே.யதுர்ஷன்


 தம்பிலுவில்02 யை சேர்ந்த மகாதேவா ஞானம்மா அவர்களின் நிதிபங்களிப்புடன்.....


இந்துமா சமுத்திரத்தின் முத்தாம் இலங்காபுரியில் கிழக்கு வங்கடலோரம்  அமர்ந்திருந்து நாடி வரும் அடிவர்களுக்கு செல்வத்தை வாரிவளங்கும் கலயுகநாயகன் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் இராஜகோபுர நிர்மாண வேலைப்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் மூன்றாம் தளம் நிர்மாணிப்பு வேலைத்திட்டத்தின்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது இன்றையதினம் ஆலய குரு திரு.அங்குசநாத குருகளினால் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டது...


இதற்கான நிதி தம்பிலுவில்02 சேர்ந்த மகாதேவா ஞானம்மா குடும்பத்தினரிகளின் நிதிப்பங்களிப்பில் மூன்றாம் தள நிர்மாணத்திற்கான  அடிகல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது ....


இன் நிகழ்வில் ஆலய நிருவாகத்தினர் மற்றும் அவர்களின் நிதிப்பங்களிபாளர்களின் குடும்பத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்....




 புனித ரமழான் 27வது ரமழான் நோன்பைச் சிறப்பிக்கும் வகையில் விசேட நிகழ்வுகள் நேற்று இரவ துவங்கி இன்று அதிகாலை வரை இடம்பெற்றது.

நேற்று இரவு 8:45க்கு ஆரம்பித்து இன்று அதிகாலை மூன்று மணிவரை இரவு நேரத் தொழுகை, வழிபாடுகள், துஆப் பிரார்த்தனை, பாவமன்னிப்பு போன்றவையும் இடம் பெற்றது. இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர். கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி தேனீர் உட்பட, நோன்பு நோற்பதற்கான (ஸஹர்) அதிகாலை உணவும் வழங்கப்பட்டது. 

அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாயலின் நிருவாக சபையினர், இதனை மேற்கொண்டிருந்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.