Showing posts with label Culture. Show all posts

 


கார்த்திகை தீபத் திருவிழாவில் இம்முறை பல வீடுகள் இருளில் மூழ்கிக்காணப்பட்டன.இவ்வாறு இருளில் மூழ்குவதற்கு காரணம் விளக்கு மற்றும் எண்ணேய் பற்றாக்குறை என மக்கள் தெரிவித்தனர்.இது தவிர டித்வா' புயல் அனர்த்தம் காரணமாக பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டமை ஆகும்.8 நாட்களாக சீரான மின்சாரம் குடிநீர் இன்மை எரிவாயு தட்டுப்பாடு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு பெற்றோல் டீசலுக்கு மக்கள் வரிசை என்பன இதில் உள்ளடங்கும்.


அவ்வாறு மேற்கூறிய விடயங்கள் இருந்தாலும் வழமை போன்று அம்பாறை மாவட்ட மக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவை   கொண்டாடி வருகின்றனர்.

இந்துக்கள் நாடளாவிய ரீதியில்  கோலாகலமாக இவ்வாறு கொண்டாடுகின்ற இததினத்தை முன்னிட்டு  இரவு  பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என  வீடுகள்   தெருக்கள்  மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை அவதானிக்க முடிந்தது.

சிறுவர் சிறுமியர் தத்தமது வீடுகளுக்கு முன்னால்  தீபம் ஏற்றி ஆனந்தமடைந்தனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில்  காரைதீவு, சம்மாந்துறை,பெரியநீலாவணை ,கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு ,வீரமுனை ,நாவிதன்வெளி ,அன்னமலை ,மத்தியமுகாம் ,அக்கரைப்பற்று ,திருக்கோவில் ,கோளாவில்  ,ஆலையடிவேம்பு ,பகுதிகளில் உள்ள  முருகன் ஆலயங்களில் குமாராலய தீபம்   நடைபெற்ற நிலையில் ஏனைய தெய்வ ஆலயங்களில்   சொர்க்கப்பானை எரித்து கார்த்திகைத் தீபத் திருவிழா சிறப்பாக  இடம்பெற்றன.

 


சர்வதேச அழகு கலைத்திறன் நிறுவனத்தில் அழகுக்கலை பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



சர்வதேச அழகு கலைத்திறன் கெம்பஸின் (International Beauty Artistry Campus) மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகுக்கலை பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கான பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பயிலுநர்களினால் அலங்காரம் செய்யப்பட்ட மணப்பெண்கள் கண்காட்சியும் சர்வதேச அழகு கலைத்திறன் கெம்பஸின் பணிப்பாளர் ஜீனத்துல் பாஸீலாவின் தலைமையில் காரைதீவில் இன்று (25) நடைபெற்றது. 


இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினருமான, எஸ்.எல்.டி.பி கொள்கைப்பரப்பு செயலாளர் யூ.எல்.என். ஹுதா, பிரைனி கல்லூரி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல். பரீட்கான் ஆகியோர் பிரதான அதிதிகளாக கலந்து கொண்டு மணப்பெண் அலங்காரம் பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கான பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி வைத்தனர். 


மேலும் இந்நிகழ்வில் நுஜா ஊடக அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம். அரூஸ், டீ.டீ. கல்விநிலைய செயற்பாட்டு பணிப்பாளர் எம். இம்தியாஸ் உட்பட பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டதுடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வை டியூப் லீடர் பிரதானி ரோஷன் அஸ்ரப் தொகுத்து வழங்கினார்.

 ( வி.ரி.சகாதேவராஜா)


இந்தியாவின் சிற்பி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு தின  தேசிய கௌரவ பட்டம் வழங்கும் விழா நேற்று  (23) ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மலையக கலை கலாசார சங்கம் ( இரத்தின தீபம்) 
நாட்டின் உயர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் அர்ப்பணிப்போடு சேவை ஆற்றிய மக்கள் நலன் பேணும் மனிதநேயமிக்கவர்களை கௌரவிக்கு முகமாக இத் தேசிய பட்டமளிக்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.


 சங்கத்தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதியாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம் எச் எம். ஜாபீர் கலந்து 
 சிறப்பித்தார் .

இங்கு 15 பேராளர்கள் கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் 

சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா "தேச அபிமானி ஊடகவிபூஷணம் " பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மாணவரின் கலைநிகழ்ச்சிகளும் மகாத்மா காந்தி நினைவு தின உரையும் இடம்பெற்றன.



 ( நமது நிருபர்)

 பிரபல சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா இன்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழாவில் " தேச அபிமானி ஊடகவி பூஷணம்"  பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் .


இந்த நிகழ்வு மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் ராஜா தலைமையில் இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது . பதின்மருக்கு கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்  எம்எச்எம். ஜாபீர்  பொன்னாடை போர்த்தி பதக்கம் அணிவித்து விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

 


(VTS)

இன்று காரைதீவில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது அவதார தின விழா.


பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா“ நிகழ்வுகளின் ஓரங்கமாக காரைதீவு ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினர் ஏற்பாடு செய்த  சுவாமியின் 100 வது அவதாரதின தெய்வீக நகர்உலா இன்று (2025.11.23) ஞாயிற்றுக்கிழமை காலை காரைதீவின் தேரோடும் வீதி வழியாக இடம்பெற்றது.



 ( வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா)


தென்கிழக்கு ஆசியா பல்கலைக்கழகமும் ஆங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து சிறப்பிக்கும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடார வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்ட கடாரம் கொண்டான் சிறப்பு மாநாடு (1024 -2025) நேற்று சனிக்கிழமையும் (22) இன்று ஞாயிற்றுக்கிழமையும்(23)  கம்போடியா நாட்டின் அங்கோர் மாநில சியிம்ரீப் நகரில் நடைபெறுகிறது. 

இம்மாநாட்டில் உலகமுழுவதிலுமுள்ள 15க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் ஆயிரம் தமிழறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பங்கேற்று அற்புதமான படைப்புகளை படைத்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கையிலிருந்து 15 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 இந்த மாநாட்டில் ஒழுங்கமைப்பாளர், கம்போடியா நாட்டின் தமிழ்சங்க தலைவர் ஸ்ரீனிவாச ராவ்வின் சிறப்பாக அழைப்பின் கீழ் கொழும்பு ஏர் டிரான்ஸ் ட்ராவல்ஸ் உரிமையாளர் தனுகரனின் ஒழுங்கமைப்பில் கீழ் இலங்கையில் இருந்து 15 பேர் பங்கேற்றனர். 

காரைதீவைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி செல்வி  தயாபரன் விதுர்ஷிகா "தேவராஜ வழிபாடு" தென்கிழக்காசியாவை மையப்படுத்திய உரையை 15 நிமிடங்கள் சிறப்பாக நிகழ்த்தினார். இவரது உரை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

 "சோழர்களுக்கும் கருவூர் சித்தர்களுக்குமான தொடர்பை" பற்றி சிறப்புரையை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான தலைவர் சிவசங்கர் ஜீ நிகழ்த்தினார்.

சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் மற்றும் துணைத்தலைவர் மனோகரன் உள்ளிட்ட 15 பேராளர்கள் பங்குபற்றிஉள்ளனர்.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுக்காக சிறப்பாக அமைக்கப்பட்ட கலை மற்றும் கலாச்சார போட்டி சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி. நௌஸாத்தின் நெறிப்படுத்தலில் இன்று (22) எழிலுடன் நடைபெற்றது. புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வு, அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மட்டுமல்லாமல், சமூகத்தில் அவர்களின் திறன்களை வெளிக்கொணரும் அரிய மேடையாகவும் அமைந்தது.

அமைச்சின் கலாச்சார மேம்பாட்டு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ரணசிங்க தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.  அமைச்சின் அதிகாரிகள், கல்வி மற்றும் சமூகப் பணியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். கலை, இசை, நடனம்  உள்ளிட்ட பல பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் விசேட தேவையுடைய மாணவர்கள் தங்கள் இயற்கைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

அமைச்சினால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இத்தகைய செயல்திட்டங்கள், அவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வருவதோடு, சமுதாயத்தில் சம உரிமை உணர்வை வளர்க்கவும் பெரிதும் உதவுகின்றன என அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். நிகழ்வு வருகையாளர் பாராட்டுகளுடனும், போட்டியாளர்களின் மகிழ்ச்சியுடனும் சிறப்பாக நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் அஸ்வான் எஸ் மௌலானா, பிரதி செயலாளர் நூருல் ஹுதா உமர், நடுவர்கள், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய வளவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 



நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக் கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, ஸெய்யித் அப்துல் காதிர் நாகூரி மாணிக்கப்பூரி பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 204 வது கொடியேற்று பெருவிழாவும் 460 வது மனாகிப் மஜ்லிஸும் இவ்வருடமும் இன்று (21) வெள்ளிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமானது. 

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் விமர்சையாக இடம்பெற்று ஏழு அடுக்கு மினராவில் கொடியேற்றி வைக்கப்பட்டது.  

இங்கு தினமும் நாளாந்த நிகழ்வுகளாக கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், மீரான் சாஹிப் மௌலித் மஜ்லிஸ், றிபாயி ராத்திப் மஜ்லீஸ், ஜியாரத் மஜ்லிஸ், சன்மார்க்க பயான் மஜ்லிஸ், விசேட இஸ்லாமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளது.

ஏ.எல்.எம் மஜீட்,நிர்வாக உத்தியோகத்தர் ஏ,சி.எம் பழீல் கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப்பின் செயலாளர் எம்.எச்.எம் முபாரிஸ்,பொருளாளர் எம்.ரிப்னாஸ் உட்பட நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப் நிர்வாகிகள், மற்றும் கல்முனை தரவை கோவில் ஆலய நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 நூருல் ஹுதா உமர்


கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக் கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, ஸெய்யித் அப்துல் காதிர் நாகூரி மாணிக்கப்பூரி பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 204 வது கொடியேற்று பெருவிழாவும் 460 வது மனாகிப் மஜ்லிஸும் இவ்வருடமும் நாளை (21) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் விமர்சையாக இடம்பெறவுள்ளதுடன் கொடியேற்ற தினமான நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணி மணிக்கு சந்தனம் பூசுதல் நிகழ்வும், காலை 8:00 மணிக்கு பெண்கள் தலைபாத்திஹா மஜ்லிஸும், பிற்பகல் 3:45 மணிக்கு மௌலித் மஜ்லிசுடன் கொடி ஊர்வலம் நடைபெற்று மாலை 5:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது.

இங்கு தினமும் நாளாந்த நிகழ்வுகளாக கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், மீரான் சாஹிப் மௌலித் மஜ்லிஸ், றிபாயி ராத்திப் மஜ்லீஸ், ஜியாரத் மஜ்லிஸ், சன்மார்க்க பயான் மஜ்லிஸ், விசேட இஸ்லாமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுகள் சங்கைக்குரிய சாதாத்மார்கள், உலமாக்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தினரின் பங்குபற்றுதலுடன் இடம் பெறுவதோடு. இறுதித்தினமான 2025.12.03 புதன்கிழமை லுஹர் தொழுகையின் பின்னர் மாபெரும்  கந்தூரி   அன்னதானம் வழங்கப்பட்டு, அன்றைய தினம் அஸர் தொழுகையுடன் கொடி இறக்கும் நிகழ்வும் இடம்பெறும். மேலும் 2025.12.04 வியாழக்கிழமை அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தினரின் கந்தூரி நிகழ்வும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 



நூருல் ஹுதா உமர்

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும், தரவை சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினருக்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இரண்டு சமூகங்களுக்கிடையில் பல ஆண்டுகளாகத் தழைத்தோங்கும் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவை மேலும் வலுப்பெற வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தைப் பதிவு செய்தனர்.

மேலும், இவ்வாரம் இடம்பெறவிருக்கும் 204வது கொடியேற்ற விழா அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறுவதற்கு இரு சமூகங்களினதும் பங்களிப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. விழாக் காலங்களில் போக்குவரத்து, ஒழுங்கு, பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இரு சமுதாயங்களின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுவது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இச்சந்திப்பில் கடந்த வருட கொடியேற்று விழாவிற்கு ஆலய பரிபாலன சபையினர்கள் அதிதிகளாக அழைக்கப்பட்டதும், கந்தூரி அன்னதானத்தினை தமிழ் சகோதரர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கிய விடயங்களை ஆலய பரிபாலன சபையினர்கள் பெரிதும் சிலாகித்து பேசியிருந்தனர்.

எதிர்காலத்திலும் இத்தகைய சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம், கல்முனை பிராந்தியத்தின் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இரு தரப்பும் மேற்கொள்ள வேண்டிய கூட்டு முயற்சிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது இச்சந்திப்பின் சிறப்பம்சமாகும்.

இந்த சந்திப்பானது, பிராந்தியம் எதிர்நோக்கும் இதர சவால்களைக் கூட இரு தரப்பு சமூகங்களும் ஒன்றாக அமர்ந்து பேசி, நிரந்தர தீர்வுகள் காணக்கூடிய புதிய நம்பிக்கைகளை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 ( வி,ரி,சகாதேவராஜா)


பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினது  குறிஞ்சிச்சாரல் நிகழ்வானது   நெய்தல் காற்று நெகிழ்ந்தாடும் மட்டுமாநகர் தன்னில் 16.11.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழ சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் பீடத்தில்  மாலை 02.30 மணியளவில் இடம்பெற்றது. 

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரை முதற் பெருந்தலைவராகக் கொண்டு  99 வருடங்களைக் கடந்து 100 ஆவது வருடத்தை நோக்கி வீறு நடையிடும் தொன்மையும் பெருமையும் மிக்கதோர் மாபெரும் சங்கத்தின்  தமிழுணர்வுப் பெருவிழா 
மேற்குறித்த நிகழ்வானது பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத் தலைவர்  மதுமிதனின் தலைமையிலும்  பெருந்தலைவர் பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்  மற்றும் பெரும்பொருளாளர் கலாநிதி .எஸ். பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலிலும் நடந்தேறியது. 

நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடகப் பெருந்தகை  பேராசிரியர். சி. மெளனகுரு   தன்னுடைய கருத்துரைகளை வழங்கியதுடன் சிறப்பு விருந்தினர்களாக  
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் பீடத்தின்  இயக்குனர் பேராசிரியர்  புளொரன்ஸ் கெனடி அம்மையார், கலைப்பீட நுண்கலைத்துறை,  துறைத்தலைவர்  திருமதி துஷ்யந்தி சத்தியஜித் அம்மையார்  ஆகியவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். 

தமிழில் செழும்பணியாற்றிய ஆளுமைகளுக்கு வழங்கி கெளரவிக்கப்படும் சங்கச்சான்றோர் விருதானது  எழுத்தாளர்  உமா வரதராஜனுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. 

மேலும்  கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இன்னியம் இசைத்து வரவேற்றிட  தமிழர்களின்  தனித்துவமான வெற்றிலை வழங்கி வரவேற்கும் வழக்கத்துடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர் .

தொடர்ந்து மங்கல விளக்கேற்றல்  மற்றும் வரவேற்புரை மற்றும் தலைமையுரையோடு  பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் வரவேற்பு நடனத்தினை வழங்கியிருந்தனர்.  

தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின்  இறையிசைப் பாடல்கள் இடம்பெற்றது. 

பேராதனைப்பல்கலைக்கழக  தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி  ஆன் யாழினி சதீஸ்வரனது நெறிப்படுத்துகையில் பெண்ணியம் செழித்திடும் பிச்சி நாடகமும் மேடையேற்றப்பட்டது. 

அடுத்து  "  எங்கட கதை " எனும் தலைப்பில்  பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் வில்லுப்பாட்டானது மேடையேற்றப்பட்டது. 

மொறட்டுவைப் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தின் கணினி விஞ்ஞானத்துறை துறைத்தலைவர் கலாநிதி தயாசிவம்  உதயசங்கர்  மக்கள் மன்றத்தினை தலைமை தாங்கி நடுவு வகித்திட்டு நற்பணியாற்றினார். 

இன்றைய இளைஞர்களின் மீதான குற்றச்சாட்டுக்கள் எதைஅடிப்படையாக கொண்டது  எனும் தொனிப்பொருளில் மக்கள் மன்றமானது அமைந்திருந்தது. 

அரசியற் பங்களிப்புச் சார்ந்தது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறை மாணவன் ஜெயபாலன் தவேதன் 

ஆளுமைத்திறன் சார்ந்தது என மொறட்டுவைப் பல்கலைக்கழ  பொறியியற்பீட மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன் 

சமூகப் பொறுப்புணர்வின்மை சார்ந்தது என கிழக்குப்பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி அபிராமி நகுலகுமார் 

புலம்பெயர் மோகம் சார்ந்தது என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக  விலங்கு விஞ்ஞான மற்றும்  ஏற்றுமதி விவசாயப்பீட மாணவன் லங்கேஸ்வரன் கிருஷன்  ஆகியோர் தத்தம் வாதங்களால் சபையினை உயிர்ப்பித்தனர் 

தொடர்ந்து  முறை காக்கும் முடி என்ற நடனத்தினை பேராதனைப்பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கினர் 

அடுத்து  சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்  திருமதி தாக்க்ஷாயினி பரமதேவனின் நெறியாள்கையில்  மட்டுமண் வாசம் மாறாத ஒய்யார ஒயிலாட்டமானது மேடையேற்றப்பட்டது. 

 மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரியின் அஷ்ட லட்சுமி நாட்டியநாடகமானது அவையின் கண்களை கட்டிப்போட்டு அரங்கத்தினை நிறைத்த  

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் க . மோகனதாஸ்  நெறியாள்கையில்   " அகிலத்தின் திறலே தமிழணங்கு "  என்ற தலைப்பில் மட்டுநகரின் தனிச்சிறப்புடைய கூத்துக்கலையானது மேடையேற்றப்பட்டது.   

இறுதி நிகழ்வாக  பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் திரையிசைப் பாடல்களோடு  குறிஞ்சிச்சாரல் நிகழ்வானது இனிதே நடந்தேறியது.   



 ( வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறையிலுள்ள நம்பிக்கையாளர் சபை,மஜ்லிஸ் அஷ்ஷூறா, ஐம்மியத்துல் உலமா ஆகிய மூன்று சபைகளை உள்ளடக்கிய முச்சபைகளின்   செயற்பாடுகள் சம்மாந்தமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய  திணைக்களங்களின் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு  (12) சம்மாந்துறை நம்பிகையாளர் சபைத் தலைவர் மெளலவி கே.எம்.கே.ஏ ரம்ஸீன் காரியப்பர் தலைமையில் சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம,அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் விடமுல்ல,சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர்,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா,இராணுவ,பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வில் சம்மாந்துறையில் சிறப்பாக இயங்கிவரும் வட்டியில்லா வங்கியின் நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கையாளர் சபையினால் செய்து வரும் உதவிகள் இனிவரும் காலங்களில்  நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் செயற்பாடுகள் சம்மந்தமாக தெளிவான விளக்கம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 


( திருக்கோவிலிலிருந்து வி.ரி. சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற  திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நிருமாணிக்கப்பட்டுவரும் நவதள இராஜகோபுரம் ராஜ கம்பீரமாக குடமுழுக்கு காணும் காலம் வெகு தூரத்தில் இல்லை .இப் புனித தெய்வீக பணிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

இவ்வாறு திருக்கோவில்  சித்திர வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் நேற்று இராஜ கோபுரத்தின் 9 வது தளத்தில் ஏறி நின்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் ஒன்பது தளங்களுடன் கூடிய இராஜகோபுரம் அமைந்த ஒரே ஒரு ஆலயமாக இவ்வாலயம் திகழ்கிறது .

அவருடன் உபதலைவர் கே.சபாரத்தினம் ,
பொருளாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி, கணக்குப்பிள்ளை இ.லோகிதராஜா, திருப்பணி குழுத்தலைவர் கே.பாஸ்கரன், சமய ஆர்வலர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் நின்றிருந்தனர்.

 அங்கே ராஜ கோபுர நிதிப் பங்களிப்பு செய்தோர் பற்றி தலைவர் சுரேஸ் மேலும் கூறுகையில்..

இராஜகோபுரத்தின் அடித்தளம் ஆலய நிதி மூலம் ஆனந்தன் போடியார்  தலைமையில் நிறுவப்பட்டது.
வியாழமட்டம் பொதுமக்கள் பங்களிப்புடன் திருப்பணிச்சபை ஊடாக நிறுவப்பட்டது.
முதலாம் தளம் அ. உருத்திரகுணசீலன்( தம்பிலுவில் )
முதலாம் தளத்தின்  மேல் பிளேட் கவி. கோடீஸ்வரன் அரச நிதியிலிருந்து கட்டப்பட்டது.

இரண்டாம் தளம்  சு. சசிகுமார் (திருக்கோவில்) 
மூன்றாம் தளம் மகாதேவா குடும்பம் (தம்பிலுவில் )
நான்காம் ஐந்தாம் தளம் இந்தியா  ஆந்திரா  சுவாமி ராமானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது.

ஆறாம் ஏழாம் தளங்கள் ஆலய நிதியில் இருந்து கட்டப்பட்டது.

எட்டாம் தளம் ராஜதுரை போடியார் ( திருக்கோவில் )
ஒன்பதாம் தளம் ப. ஜேசுதாஸ்  (திருக்கோவில் )
ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் இந்த ஒன்பது தளங்களும் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றது .

மேலும் இதற்கு பொம்மை மற்றும் வர்ணப் பூச்சு வேலைகளுக்கு பக்தர்கள் உதவி செய்ய முன் வந்து கொண்டிருக்கின்றார்கள். 

இதேவேளை இரண்டு மணிக் கோபுரங்களை அமைக்க அதே இந்தியா ஆந்திரா சுவாமி ராமானந்த சரஸ்வதி முன்வந்துள்ளார்.

பெரும்பாலும் 2027-28 களில் இராஜகோபுரம் பூரணமாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது .

எமது பிரதான ஆலயம் 2018 இல் மகா கும்பாபிஷேகம் கண்டது. எனவே 2030 இல் அடுத்த கும்பாபிஷேகம் காண வேண்டும் .
எல்லாம் வல்ல முருகப்பெருமான் என்ன திகதியன்று கோபுரம் மற்றும் ஆலய கும்பாபிஷேகம் காண வேண்டும் என நினைக்கிறாரோ அதற்கமைய அருள் பாலிப்பார் என நம்புகிறோம். என்றார்.

ஆலயபிரதமகுரு விபுலமணி
சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில் ஆலய குரு சிவஸ்ரீ நீதி.அங்குசநாதக் குருக்கள் முன்னிலையில் ஆலயபரிபாலனசபைத்
தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் நெறிப்படுத்தலில் நீண்ட நாட்கள் தடைபட்டிருந்த இராஜ கோபுர நிருமாண பணிகள் மிகவும் ஜரூராக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


(வி.ரி.சகாதேவராஜா)


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய இவ்வாண்டு க்கான அறநெறி மாணவர்களுக்கான தேசிய மட்ட தேசியமட்ட பண்ணிசைப்போட்டியில் காரைதீவு கண்ணகி அறநெறி பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் 

இப் போட்டி கொழும்பு கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தை எதிர்த்து போட்டியிட்ட அம்பாறை மாவட்ட காரைதீவு அணி முதலிடத்தை பெற்றுக்கொண்டது 



 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய 

“பௌர்ணமி கலைவிழா”
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தர் பிறந்த மண்ணான  காரைதீவில்  புதன்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றபோது..

படங்கள். வி.ரி.சகாதேவராஜா

 


( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய இராஜகோபுர நவதளத்தின் இறுதித்தள வேலைப்பாடுகள் மற்றும் மணிக்கோபுர வேலைப்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஆலயபிரதமகுரு விபுலமணி
சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில் ஆலயபரிபாலனசபைத்
தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் நெறிப்படுத்தலில் நீண்ட நாட்கள் தடைபட்ட இராஜ கோபுர நிருமாண பணிகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன் விரைவில் வெளிச்சிற்ப வேலைப்பாடுகளும் நடைபெற இருக்கின்றன .

எனவே முருக நிதி அளிக்க விருப்பும் அடியார்கள் கட்டட நிர்மாண குழு ,ஆலய நிர்வாக குழுவினை தொடர்பு கொள்ளலாம் எனவும் 
மேலதிக தகவல்களுக்கு
நிர்மாண குழுத்தலைவர் பாஸ்கரன் -0772354679 ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


( வி.ரி.சகாதேவராஜா)

நாட்டின் சமகாலத்தில் அதிகரித்து வருகிற உளநோய்களுக்கு ஒரே மருந்து கலைதான். ஒன்றில் கலைஞனாக இருக்க வேண்டும் இன்றேல் ரசிகனாக இருக்க வேண்டும். இரண்டுமில்லாதவன் 
மனிதனே இல்லை.

இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற பௌர்ணமி கலைவிழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும்
“பௌர்ணமி கலைவிழா”
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தர் பிறந்த மண்ணான  காரைதீவில் நேற்று  (5) புதன்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் தலைமையில் விபுலானந்த கலாசார மண்டபத்தில்  நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விழாவில் கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் முயற்சியால் மை பிரதிப் பணிப்பாளர் பி.குணாலினி உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த கலாசார விழாவில் காரைதீவு,  மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேச கலைஞர்கள், இந்த பிரதேசங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு பல்லின கலை, இலக்கிய, கலாசார நிகழ்ச்சிகளை வழங்கினர். 

விழாவில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன்,  கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார், காரைதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரணவரூபன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் உரையாற்றினர்.

இதன்போது பிரதேச கலாசார போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசில்கள், நினைவு சின்னங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில்  காரைதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரணவரூபன், லாகுகல பிரதேச செயலாளர் க.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி. ராஜகுலேந்திரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி ஆர். சஜிந்தா நிருவாக கிராம அலுவலர் திருமதி பரிமளவாணி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



 வி.சுகிர்தகுமார்   


 சரிகமப பாடல் போட்டியில் கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நம்நாட்டின் கலைஞன் சுகிர்தராஜா சபேசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் பல்வேறு நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம்  அக்கரைப்பற்று மாநகர சபை ஆலையடிவேம்பு பிரதேச சபை உள்ளிட்டவர்கள் இணைந்து வாழ்த்து தெரிவித்ததோடு சபேசனுக்கு வாக்களிக்க வேண்டும் என பதாதைகளையும் மணிக்கூட்;டு கோபுர சந்தியில் நிறுவினர்.
பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வுகளில் மாநகர சபையின் முதல்வர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபி;ள்ளை உப தலைவரும் மத்தியஸ்த சபையின் தலைவருமான ஸ்ரீ மணிவண்ணன் மற்றும் அக்கரைப்பற்று வர்த்தகர் சங்க தலைவர் மாநாகர சபை முதல்வரின் இணைப்பாளர் தாஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு சபேசனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் பலரும் பல்வேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கினர்.
தொடர்ந்து பட்டாசுகள் கொழுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் சபேசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

Rep/Jkjathursan/Sukirthakumar

 சரிகமப பாடல் போட்டியில் கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நம்நாட்டின் கலைஞன் சுகிர்தராஜா சபேசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று (05) இடம்பெற்றன.

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் அக்கரைப்பற்று மாநகர சபை ஆலையடிவேம்பு பிரதேச சபை உள்ளிட்டவர்கள் இணைந்து வாழ்த்து தெரிவித்ததோடு சபேசனுக்கு வாக்களிக்க வேண்டும் என பதாதைகளையும் மணிக்கூட்;டு கோபுர சந்தியில் நிறுவினர்.
பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வுகளில் மாநகர சபையின் முதல்வர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபி;ள்ளை உப தலைவரும் மத்தியஸ்த சபையின் தலைவருமான ஸ்ரீ மணிவண்ணன் மற்றும் அக்கரைப்பற்று வர்த்தகர் சங்க தலைவர் மாநாகர சபை முதல்வரின் இணைப்பாளர் தாஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு சபேசனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் பலரும் பல்வேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கினர்.
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் சபேசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

Zee Tamil பாடகர் சபேசனை வாழ்த்தி ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று நலன் விரும்பிகளார் அக்கரைப்பற்று மாநகரின் இன மத வேதம் இன்றி ஓர் நிகழ்வும் இரு இனத்தவரினால் கட்டவூட்கள் இரண்டு வைக்கும் நிகழ்வுி....

 


நூருல் ஹுதா உமர்


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (04) நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் காரைதீவு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடத்திய இந்த கலாச்சார விழாவில் காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேச கலைஞர்கள், இந்த பிரதேசங்களை சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டு பல்லின கலை, இலக்கிய, கலாசார நிகழ்ச்சிகளை வழங்கினர்.

இதன்போது பிரதேச கலாசார போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசுகள், நினைவு சின்னங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டீ.எம். றிம்ஸான், காரைதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரணவ ரூபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி. ராஜகுலேந்திரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி ஆர். சஜிந்தா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.