Showing posts with label Culture. Show all posts

 (வி.ரி. சகாதேவராஜா)


 இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும்  “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான கம்பன் விழா
 மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில்,  எதிர்வரும் மார்ச் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வை கதிரவன் கலைக் கழக தலைவர் த. இன்பராசா தலைமையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போபால் கம்பன் கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகள் இடம்பெறுகின்றன.

காலை அமர்வு “அயோத்தி அரங்கு” எனப் பெயரிடப்பட்டு, காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். தொடர்ந்து, மாலை அமர்வு “இராவணேஸ்வரர் அரங்கு” எனப் பெயரிடப்பட்டு, பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

தமிழ் இலக்கிய மேதை கம்பனைப் போற்றும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், புகழ் பாடல்களும் இடம்பெறவுள்ளன.
 “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்விற்கு இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

+94759175981 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்று கதிரவன் இன்பராசா தெரிவித்தார்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நாளை (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், தெய்வீக கானங்கள் இறுவெட்டு வெளியீடு இடம்பெறவிருக்கின்றது.

ஆலயத்தலைவர் பிரபல தமிழாசான் வே.செவ்வேட்குமரன் முன்னிலையில்,  இறுவெட்டு நெறியாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இவ் இறுவெட்டு வெளியீடு இடம்பெறவிருக்கின்றது.

காரைதீவு தெய்வீக கான சபையின் ஸ்தாபகர் விபுலமணி இ.கோபாலசிங்கம் தயாரித்த 24 சிவ கானங்கள் அடங்கிய இறுவெட்டு நாளை பகல் 12 மணிக்கு ஆலய சந்நிதானத்தில் வெளியீடு செய்யப்படும்.

 

உலகலாவிய முஸ்லிம்கள் அனைவருக்கும், புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!

நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) என்பது ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று முடித்த பின், ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய இஸ்லாமியப் பண்டிகை ஆகும். இது இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், ஏழைகளுக்கு உணவளித்து மகிழும் (சதக்கத்துல் ஃபித்ர்) ஈகைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. 2026-ல் மார்ச் 21 சனிக்கிழமை கொண்டாடப்பட




 


நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பொது மைதானத்தில் இன்று (20) நோன்பு பெருநாள் தொழுகை ஆன்மீக உன்னதத்துடனும் சிறப்பாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருமளவிலான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு, நோன்பு பெருநாளை முன்னிட்டு ஒற்றுமை, சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தொழுகையில் ஈடுபட்டனர்.

மேலும், சமூக நல்லிணக்கத்தையும் மனிதநேய பண்புகளையும் பேணிக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்நிகழ்வில் பெருநாள் உரை நிகழ்த்தப்பட்டன.

நிகழ்வின் இறுதியில், நாட்டின் அமைதி, முன்னேற்றம் மற்றும் அனைத்து மக்களினதும் நலனுக்காக சிறப்பு துஆக்கள் இடம்பெற்றன.

 


உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக, காத்தான்குடி பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் கடற்கரை திடலில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த திடல் தொழுகையில், பெருமளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக பங்கேற்று ஒன்றுபட்ட சமுதாய உணர்வுடன் தொழுகையை நிறைவேற்றினர்.

பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) நடத்தி வைத்தார். அவர் தனது உரையில் ஒற்றுமை, அமைதி மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வு அமைதியான சூழலில் சிறப்பாக நடைபெற்றதுடன், மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


ஈகைத் திருநாள் தொழுகையில் இஸ்லாமிய மக்களை சந்திந்த அவுஸ்திரேலிய பிரதமர்! 


2026, மார்ச் 20, வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற லகெம்பா பள்ளிவாசலுக்குநேரில் சென்று இஸ்லாமியப் பெருமக்களுடன் ஈகைத் திருநாளை (Eid al-Fitr) உற்சாகமாகக் கொண்டாடினார்.


அங்கு திரண்டிருந்த மக்களுடன் கைகுலுக்கி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட அவர், சமூக ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

2026, மார்ச் 20, வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற லகெம்பா பள்ளிவாசலுக்குநேரில் சென்று இஸ்லாமியப் பெருமக்களுடன் ஈகைத் திருநாளை (Eid al-Fitr) உற்சாகமாகக் கொண்டாடினார்.


அங்கு திரண்டிருந்த மக்களுடன் கைகுலுக்கி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட அவர், சமூக ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

 


(Rep/Yusuf Ahamed)
புனித ரமழான் மாதத்தில் உபவாசம்  இருப்பவர்கள, நோன்பு திறப்பதற்காக, அனைத்துப் பள்ளிவாயல்களிலும், நோன்புக் கஞ்சி விநியோகம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. 

குறித்த கஞ்சியினைப் பெற மாற்றுமத சகோதரர்களும் வருகின்றார்கள். அவர்களுக்கும், கஞ்சி இலசவமாக வழங்க்கப்படுகின்றது. 

 


இலங்கையில் நோன்பை முப்பதாக பூர்த்தி செய்வோம்.! இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (21.03.2026) சனிக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு சமய பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் அஷ்-ஷேக் முனீர் முழப்பர் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) விஜயமொன்றை மேற்கொண்டார்.

பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் விசேட அழைப்பினை ஏற்றே இவ்விஜயம் இடம்பெற்றது. விஜயத்தின் போது, பள்ளிவாசலில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய புனர்நிர்மாண மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் தொடர்பாக பிரதி அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்ததுடன், அவற்றின் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.


 வரலாற்றுச்சுருக்கம்!


மட்டக்களப்பு மாநிலத்தின் இராமகிருஸ்ணமிசன்  மடாலயத்திலிருந்துகொண்டு
இலங்கையிலிருந்த 26 மிசன்பாடசாலைகளையும் கவனித்து முகாமையாளராக சீரிய
சேவையாற்றிய சுவாமி நடராஜானந்தா 1903.நவம்பர் மாதம் 29ஆம் திகதி
காரைதீவில் கதிர்காமத்தம்பி விதானையாருக்கும் மயிலம்மாவிற்கும் மகனாக
அவதரித்தார்.

கேம்பிரிச் சீனியர் லண்டன் மொற்றிகுலேசன் பரீட்சைகளில் சித்திபெற்று
ஆசிரியராக நீர்ப்பாசன பொறியியல்உதவியாளராக சேவையாற்றி இ.கி.மிசனில்
1935இல் இணைந்தார்.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நெருங்கிய தொடர்பையடுத்து
நிர்வேதசைதன்யர் எனும் துறவறப்பெயருடன் துறவறம் புகுந்து  சுவாமி
அகண்டானந்தரை குருவாகக்கொண்டு சுவாமி நடராஜானந்தரானார்.
1967.03.18ஆம் திகதி அதிகாலை பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ண பரமஹம்சரின்
திருவுருவப்படத்தை மார்பில் தாங்கியவண்ணம் இறைவனடி சேர்ந்தார்.

வரலாறு!
அம்பாறை மாவட்டத்தில் பழம்பெரும்  சிறப்பு வாய்ந்த காரைதீவு மண்ணிலே
கிழக்கு வானின் விடிவெள்ளியாக இரு கண்மணிகள் அவதரித்தனர். அவர்களில்
ஒருவர் உலகம் போற்றும் 'யாழ்நூல் வல்லோன்'உலகின் 'முதற்றமிழ் பேராசான்'
'முத்தமிழ் வித்தகர்' சுவாமி விபுலானந்தர் மற்றையவர் 'உத்தமத்துறவி'
'சேவையின் சிகரம்''ஏழையின் சிரிப்பினில் இறைவனைக்கண்ட
பொதுநெறிப்பெரியார்'  'நடமாடும் தெய்வம்'இ 'ஏழைச்சிறுவர்களின் வாழ்வில்
கல்வி எனும் சுடரை ஏற்றி மறுமலர்ச்சியை தோற்றுவித்த சேவாதிலகம்'
'ஏழைகளின் இல்லங்களில் ஒளியூட்டிய ஞானசூரியன்' சுவாமி நடராஜானந்தர்.

'தோன்றிப் புகழோடு தோன்றுக' எனும் பொய்யாமொழிக்கிணங்க அவதரித்தவர்
சுவாமிகள். கார்காத்த வேளாள மரபிலே கதிர்காமத்தம்பி விதானையாருக்கும்
மயிலம்மாவிற்கும் மகனாக 1903ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் திகதி
இப்பூவுலகில் அவதரித்தார். அவரது பிள்ளைத்திருநாதம் சிதம்பரப்பிள்ளை.
இவரை செல்லமாக  சீனிவாசகம் எனவும் அழைத்தனர்.
சீனிவாசகம் தனது ஆரம்பக்கல்வியை காரைதீவு ஆண்கள் பாடசாலையிலும் அடுத்து
கல்முனை ஆர்ச் மரியாள் ஆங்கிலக்கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஆர்ச்
மைக்கேல் கல்லூரியிலும் பெற்று சிறந்த மாணவனாகத் திகழ்ந்தார்.

சுவாமிகள் கேம்பிரிச் சீனியர் பரீட்சை லண்டன் மெற்றிக்குலேசன் ஆங்கில
ஆசிரியர் தராதரப்பத்திரம் போன்ற பரீட்சைகளில் தேறி சிறந்த ஓர் ஆசானாக
தன்னை உயர்த்திக்கொண்டார். தனது கல்விப்பேற்றினால் திருகோணமலை
இந்துக்கல்லூரி மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் யாழ் வைத்தீஸ்வரா
வித்தியாலயம் ஆகியவற்றில் தனது ஆசிரியத் தொழிலை சீராகச் செய்து தனது
உன்னத பணியின் பேறாக சிறந்த கல்வியறிவுள்ள மாணவச் செல்வங்களை
உருவாக்கினார்.

ஆசிரியத் தொழிலின் புனிதத்தன்மைக்குச் சான்றாக விளங்கியவர் சுவாமிகள்.
இவரிடம் கற்றோர்  பின் பல கலைகளிலும் சிறந்து விளங்கி உயர் பதவி
வகித்தனர். இவர் ஆசிரியர் தொழிலை விட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தில்
பொறியியல் உதவியாளராகவும் பணியாற்றினார்.

செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தும் அழியும் பொருளின் மேல்
பற்றறுத்து அழியாப்பேரின்பப் பெருவாழ்வான துறவு வாழ்வின் மேல் அவரது மனம்
நாட்டம் கொண்டது. இராமகிருஷ்ண சங்கத்தின் பணிகளும் தொண்டுகளும் கடமைகளும்
சுவாமிகளை மிகவவும் கவர்ந்தன. அதன் காரணமாக தனது பதவியை துறந்தார்.

அவ்வேளையில் சிதம்பரப்பிள்ளையின் உறவினரான சுவாமி விபுலானந்தரின்
அருட்பார்வையால் கவரப்பட்டு  இராமகிருஸ்ண சங்கத்தில் சேர்ந்து 'நிர்வேத
சையதன்யர்' எனும் பிரமச்சரிய நாமம் பெற்று துறவுநிலை பூண்டார்.

ரங்கூனில் இராமகிருஷ்ண சங்கத்தால் நடாத்தப்பட்ட இலவச மருத்துவமனையில்
வைத்தியர்களுக்கு உதவியாக நோயாளிகளுக்கு வேண்டிய சிறந்த சேவையாற்றினார்.
2ம் உலகப்போரின்போது வீசப்பட்ட குண்டின் காரணமாக ரங்கூன் பிரதேசம்
முற்றாக பாதிக்கபட்டு மக்கள் அகதிகளாயினர். சுவாமிகளும் அகதியாக
கல்கத்தாவை வந்தடைந்து பின் தாய்நாடு திரும்பினார்.

1943ம் ஆண்டு கல்கத்தா நகரிலுள்ள இராமகிருஷ்ண சங்கத்தலைமையகத்தில் பகவான்
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச்சீடரான சுவாமி அகண்டானந்தரைக் குருவாகக்
கொண்டு சந்நியாச தீட்சை பெற்று 'சுவாமி நடராஜானந்தர்' எனும் தீட்சா நாமம்
பெற்றார். பாரதத்தின் நாட்டறப்பள்ளி உதக மண்டலம் போன்ற பல இடங்களிலும்
கடமையாற்றினார். பின் மட்டக்களப்புக் கல்லடியில் அமைந்துள்ள சிவபுரியில்
தங்கியிருந்து 26 இராமகிருஸ்ண சங்கப்பாடசாலைகளினதும் 3 சிறுவர்
இல்லங்களினதும் முகாமையாளராக  அரும்பணியாற்றினார்.

சுவாமி நடராஜானந்தர் முகாமையாளராகப்பணியாற்றிய காலம் மிவும் கஸ்டமான
காலமாகும். இல்லக்குழந்தைகளுக்குரிய உணவு உடை உறையுள் போன்ற முக்கிய
தேவைகளுக்குக் கூட பஞ்சம் நிலவிய காலம். 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு'
என  நினைத்து வாழ்ந்த சுவாமிகள் சுவாமிகளுக்குரிய ஒரு இலக்கணமாகத்
திகழ்ந்தார்
அறுவடைக்காலங்களில் சாக்கினைத் தோளில் போட்டுக்கொண்டு களவெட்டிகளுக்குச்
சென்று அங்கு போடிமார் கொடுக்கும் நெல்லையும்இ பொருட்களையும் பணத்தையும்
கொண்டு பெற்றோரை இழந்த விடுதிக்குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றினார்.
அதுமட்டுமன்றி தாயாய் அன்புகாட்டி அரவணைத்து  தந்தையாய் கல்வியறிவூட்டி
இல்லச்சிறுவர்கள் நோயுற்றவேளை இரவு பகல் பாராது விழித்திருந்து
சேவையாற்றும் போது சேவகனாகவும் உன்னத பணிகள் செய்தார்.

அது மட்டுமன்றி உடற்பயிற்சி யோகாசனம் ஆன்மீகம் என்பவற்றை
இல்லக்குழந்தைகளுக்கு சாதனை முறையில் பயிற்றுவித்தார். சகல இன மத
மாணவர்களையும் ஒன்று சேர்த்து கல்வி மனிதப்பண்புகள் சமய சிந்தனை
சகோதரத்துவம் என்பவற்றிலே மாணவர்களது மனதை ஒருமுகப்படுத்தியவரும் இவரே.
கண்ணை இமையிரண்டு காப்பது போல இல்லக்குழந்தைகளை வண்ணமறக் காத்து
நின்றவர்தான் சுவாமி நடராஜானந்தர்.  'இங்கிவரை நாம்பெறவே என்ன
தவம்செய்தோம்' என அன்று அந்த இல்லச்சிறுவர்கள் அகமகிழ்ந்தனர்.

சுவாமிகள் தனக்கென்று  ஏதும் விசேடமாக செய்து உண்ணமாட்டார். உடை
விடயத்திலும் அப்படியே. 'மூன்று சோடி உடுப்பு ஒரு மனிதருக்குப் போதும்'
என்பார். இது போல இறுதி மூச்சவரை வாழ்ந்து காட்டினார்.
சுவாமிகளின் மேற்பார்வையில் இருந்த சிவானந்தா இல்லம் காரைதீவு மகளிர்
இல்லம் ஆனைப்பந்தி மகளிர் இல்லம் ஆகிய இல்லங்களிலுள்ள குழந்தைகளின்
தேவைகளையும் கடமைகளையும் நிறைவேற்றவேண்டிய பாரிய பொறுப்பு சுவாமிகளிடம்
ஒப்படைக்கப்பட்டிருந்தது. சிவபுரியில் இருந்தவாறு  சுவாமிகள் எதற்கும்
மனந்தளராது தனது கடமைகளை செவ்வனே செய்து சேவா திலகமாகத் திகழ்ந்தார்.

உண்மைத்துறவியாக சேவையின் சிகரமாக ஏழைக்குழந்தைகளின் அன்பு அன்னையாக
நல்லாசானாக குன்றிலிட்ட தீபம் போல் பிரகாசித்த எமது அன்புத் தெய்வம்
1967ம் ஆண்டு பங்குனி மாதம்  18ம் திகதி சனிக்கிழமை அதிகாலை 04.30
மணியளவில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை தனது மார்பிலே அணைத்த வண்ணம்
 இறைவன் திருவடிநீழலை அடைந்தார்.
அமர ஜோதியாம் நடராஜானந்த ஜோதி அணையாத ஜோதியாக இறையடியில் பிரகாசித்துக்
கொண்டிருக்கும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் மத்ரஸா மாணவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நிகழ்வு 2026 மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது கமு/கமு/ரியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் ஐ. ஜஃபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 50க்கும் மேற்பட்ட மத்ரஸா மாணவர்களுக்கு புனித குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிதியாக புனித குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்க அனுசரணை வழங்கிய றிஷாட் ஹெல்பிங் பவுண்டேஷன் தலைவரும், பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் கிழக்கு மாகாண செயற்திட்ட பணிப்பாளருமான எம்.பி முபாரக் கலந்து கொண்டார். மேலும், கிழக்கு மாகாண கவியுவன் கலை இலக்கிய மன்றத்தின் தலைவரும், கிழக்கு மாகாண பிரதேச சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவருமான ஏ.ஜி. இக்பால் அவர்களும், அல்- மீஸான் பவுண்டேஷன் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.என்.ஹுதா உமர் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

அத்துடன் அமைப்பின் செயலாளர், பொருளாளர், அமைப்பாளர், கணக்காய்வாளர், செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை அறிவிப்பாளர் கவிஞர் சியான் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வு மூலம் மத்ரஸா மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் குர்ஆன் வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 


நூருல் ஹுதா உமர், ஜெஸ்மி மூஸா


மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் அனுசரணையில் அதன் மாணவர் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளில் 6, 7, 8, 9 மற்றும் 10ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ரமழான் ஸ்ட்ரைவர்ஸ்” ரமழான் பருவகால கற்கைநெறி நிறைவு நிகழ்வு சனிக்கிழமை (07) மருதமுனை அக்பர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இந்நிகழ்வு இஸ்லாமிய பிரசார மையத்தின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.சிபான் மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக இஸ்லாமிய பிரசார மையத்தின் கெளரவத் தலைவரும், தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியின் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி கலந்து கொண்டார்.

மேலும் கெளரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மருதமுனை கிளை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இஸ்லாமிய பிரச்சார மையத்தின் ஆலோசனை சபை, பொதுச் சபை மற்றும் நிறைவேற்று சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது கற்கை நெறியில் கலந்து கொண்ட 230 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.



 நூருல் ஹுதா உமர்


மத்திய முகாம் – சாளம்பைக்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கு ஆயிரம் கிலோ பேரீச்சம்பழம் வழங்கும் நிகழ்வு நளீர் பவுண்டேஷன் அமைப்பின் ஏற்பாட்டில் மத்திய முகாம் மஸ்ஜிதுல் முகம்மதிய்யா ஜும்மா பள்ளிவாசலில் நேற்றுமுந்தினம் நடைபெற்றது.

நளீர் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரான எம்.ஏ. நளீர் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. அவரின் வேண்டுகோளுக்கு அமைவாக சவுதி அரேபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரம் கிலோ பேரீச்சம்பழங்கள் முதற்கட்டமாக மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து சாளம்பைக்கேணி பிரதேசத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இப்பேரீச்சம்பழங்கள் வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மத்திய முகாம் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.எஸ்.எம். வசீர், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.கே. அப்துல் சமட் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


தலைநகரை தளமாக கொண்டு இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள்  நேற்று (7) சனிக்கிழமை வீர வனிதையர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

உலகறிந்த மனித உரிமை மற்றும் மகளிர் உரிமைகள் செயற்பாட்டாளரும், கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைமை இயக்குநருமான  திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம் "வீர வனிதையர்", விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அந்த விருதினை வழங்கி வைத்தார்.

மனித அபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசத்தின் துணைவியான இவர் இன்னோரன்ன சமூக மகளீர் அபிவிருத்தி செயற்பாடுகளில் தொடர்ச்சியாக கடந்த நாற்பது வருடங்களாக செயற்பட்டு வருகிறார்.

மகளிர் உரிமைகள் தொடர்பாக தனது  பயணத்தில் பல ஆக்கங்களையும் படைத்தவர் .

 பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதற்கான தண்டனைகளும் அடங்கிய கையேடுகள்  பலவற்றை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். 

 


(  வி.ரி.சகாதேவராஜா)


இலங்கை புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள்  நேற்று முன்தினம் (7) சனிக்கிழமை வீர வனிதையர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

அந்த வகையில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் அவர்களும்
 "வீர வனிதையர்", விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அந்த விருதினை வழங்கி வைத்தார். 

இவர் உதவி பணிப்பாளராக இருந்து அறநெறி கல்வியினுடைய மறுமலர்ச்சிக்கு சிறப்பான முறையில் பங்களிப்பை நல்கிய பெண்மணியாவார்.

 


(  வி.ரி.சகாதேவராஜா)


வராற்றுப் பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த சனிக்கிழமை புராதன ஆலயத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ சபா.கோவர்த்தன குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி, நிந்தவூர் பிரதேச கலாசார உத்தியோகத்தர் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன், உறுப்பினர் சி.சிவகுமார் உள்ளிட்ட சகலஊர்ப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

சுமார் ஐந்து மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிருவாகத் தெரிவு,  பரிபாலன சபையின் ஆலோசகர் விபுலமாமணி  வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.

புதிய நிர்வாக சபைத் தெரிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

அதன்படி புதிய நிர்வாக சபையின் தலைவராக மீண்டும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் 
செயலாளராக மீண்டும் த.சண்முகநாதன் ஆகியோர் தெரிவானார்கள்.
 பொருளாளராக கே.குழந்தைவடிவேல் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் நிருவாகசபை உறுப்பினர்கள், கணக்காளர்கள், ஆலோசகர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

நிருவாக சபை உறுப்பினர்களாக அம்பாறை மாவட்டத்தின் அனைத்து   பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த 21 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், 1999 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யாப்பின் படி சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் தங்களது கடமைகளை விரைவில் பொறுப்பேற்று ஆலய முன்னேற்றப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், புதிய நிர்வாகத் தெரிவை முன்னிட்டு பக்தர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
8 attachment  •  Scanned by G

 


( வி.ரி.சகாதேவராஜா)


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் ஆரம்பித்த மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா  
 வித்தியாலய கால்கோள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு,  கிரிக்கற் விளையாட்டு மைதான புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (2) திங்கள் கிழமை மாசிமக சுப வேளையில் சிறப்பாக நடைபெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் சுவாமி நீலமதவானந்தாஜி பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

தொடர்ந்து சிவானந்தா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட சமூகம் அடிக்கல் நாட்டினார்கள்.

 


நூருல் ஹுதா உமர்


ஏறாவூர், கல்குடா உள்ளிட்ட முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் உலமாக்கள், முஅத்தின்கள் மற்றும் ஊழியர்களுக்கான ரமழான் மாத உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

“ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன்” அமைப்பின் ஏற்பாட்டில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களின் தலைமையில், ஓட்டமாவடி ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் வளாகங்களில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் “ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன்” தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கிவைத்து உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் சேவையாளர்களை கௌரவித்தார்.

மேலும், அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி), உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், உலமாக்கள் மற்றும் பிரதேச சமூக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ரமழான் மாதத்தின் ஆன்மீக சிறப்பை முன்னிறுத்தி, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, பள்ளிவாசல்களில் பணியாற்றும் சேவையாளர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் ஒரு கண்ணியமான நிகழ்வாக அமைந்தது.

 


நூருல் ஹுதா உமர்


சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் மொழித்துறை ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்வு 2026.02.27 ஆம் திகதி கலை மற்றும் கலாசார பீட கூட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

“தாய்மொழி எங்கள் அடையாளமும் பாரம்பரிய பெருமையும் ஆகும்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, தாய்மொழியின் செழுமை, பண்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்தது.

மொழித்துறையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். மொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். அப்துல் றஸ்ஸாக் அவர்களின் நெறிப்படுத்தலில் நிகழ்ச்சி ஒழுங்காக முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து, கவிதை, நாட்டார் பாடல்கள், உரைகள், “கவ்வாத்துக்கத்தி” என்ற நூல் அறிமுகம் மற்றும் “தாய்மொழி வழிக்கல்வி இன்றைய காலத்துக்கு அவசியமா – அவசியமில்லையா?” என்ற தலைப்பிலான பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்று விழாவை களைகட்டச் செய்தன.

பிரதம அதிதி உரையாற்றிய பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், தாய்மொழி என்பது ஒருவரின் அடையாளத்தையும் சமூக வளர்ச்சியையும் நிர்ணயிக்கும் அடிப்படை சக்தி எனக் குறிப்பிட்டார். மொழி மனித சிந்தனையின் பிரதான ஊடகமாக விளங்குவதோடு, அறிவியல் முன்னேற்றத்திற்கும் தனிமனித ஆளுமை மேம்பாட்டிற்கும் தாய்மொழிக் கல்வி உறுதுணையாக அமைகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சீனா, ஜப்பான், இந்தியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் தங்களது தாய்மொழிகளைப் பாதுகாத்து வளர்த்ததன் மூலம் உலகளாவிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்றும் எடுத்துரைத்தார்.

மேலும், மொழி அடையாளம் தொடர்பான போராட்டங்கள் பங்களாதேஷ் உருவாக்கத்திற்கும் இலங்கையின் நீண்டகால உள்நாட்டுப் போருக்கும் காரணிகளில் ஒன்றாக அமைந்தன என்பதை நினைவூட்டிய அவர், மொழி என்பது வெறும் தொடர்பாடல் கருவி அல்ல; அது அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு தளங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாகும் என்றும் வலியுறுத்தினார்.

தலைமையுரையாற்றிய பேராசிரியர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரஃப், சர்வதேச தாய்மொழி தினத்தின் முக்கியத்துவம் இளைய தலைமுறையினரிடத்தில் போதியளவில் உணரப்படாமை கவலைக்குரியது எனத் தெரிவித்தார். மொழி மற்றும் பண்பாட்டு தினங்களை முன்னெடுத்து செல்லும் பொறுப்பு கல்விச் சமூகத்திற்கே உரியது என்றும், தமிழ் மொழி எந்த ஒரு மதத்துடனும் மட்டும் இணைக்கப்படக் கூடாது; அது அனைத்து சமயங்களையும் தழுவிய பொதுப் பண்பாட்டு மொழி என்றும் விளக்கினார்.

மொழித்துறையின் நான்காம் ஆண்டு மாணவர் ஆர்.எம். மனாஸ் எழுதிய “கவ்வாத்துக்கத்தி” என்ற நூல் இந்நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. நூல் விமர்சனத்தை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். அப்துல் றஸ்ஸாக் நிகழ்த்தினார்.

பட்டிமன்றத்துக்கு சமூகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். அய்யூப் நடுவராகப் பணியாற்றினார். நன்றியுரையை மொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என். சுபராஜ் வழங்கினார்.

இந்நிகழ்வில் சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எம். றிஸ்வான், பேராசிரியர் கலாநிதி எம்.எ.எஸ்.எவ். சாதியா, சிரேஷ்ட விரிவுரையாளர் கே.ஆர். பாத்திமா சீபா, விரிவுரையாளர் எம்.ஐ. பாத்திமா சப்னா, புவியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். அய்யூப் உள்ளிட்ட பல கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

புனித ரமழான் மாதத்தையொட்டி, ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு பேரீச்சம் பழம் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.