Showing posts with label Culture. Show all posts

 




பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபை இன்று (08) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.


குறித்த சந்திப்பின்போது மலையக மக்களின் வாழ்வியல், வரலாறு மற்றும் கலாசாரத்தை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் தனது திட்டம் குறித்து அமைச்சரிடம் விளக்கியுள்ளார்.


இத்திரைப்படத்தில் மலையக கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.


பிரதி அமைச்சர் இத்திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.


 


இன்று (8) திங்கட்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் எட்டாம் சடங்கு ஆகும்.


நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் சகிதம் மாலையில் அம்மனுக்கு படையல் செய்து உணர்வு பூர்வமாக வழிபடும் பாரம்பரிய சடங்கு இது.

இந் நிலையில் எட்டாம் சடங்கு என்றால் என்ன? என்பது பற்றி சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா விளக்கம் தருகிறார்.


எட்டாம் சடங்கு என்பது கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தி வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சடங்காகக் கருதப்படுகிறது. 

இது ஆலயத்தின் சமய, சமூக மற்றும் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் ஓர் அங்கமாக விளங்குகிறது.

கண்ணகை அம்மன் வழிபாட்டில் நடைபெறும் சடங்குகளில் எட்டாம் சடங்கு ஒரு திருப்புமுனை நிகழ்வாகக் கருதப்படுகிறது.
 ஆரம்ப நாட்களில் இடம்பெறும் சடங்குகள் மூலம் அம்மனின் அருள் அழைக்கப்பட்டு, பக்தர்களின் மனங்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றன. 

அவற்றின் தொடர்ச்சியாக எட்டாம் சடங்கு நடைபெறுகிறது.

இந்த சடங்கின் மூலம் அம்மனின் சக்தி முழுமையாக வெளிப்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். 

கிராம மக்களின் நலன், மழை வளம், நோய் நீக்கம், விவசாய செழிப்பு மற்றும் சமூக ஒற்றுமைக்காக பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எட்டாம் சடங்கில் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதும், காணிக்கைகள் செலுத்துவதும், அம்மனைப் போற்றி பாடல்களும் காவியங்களும் பாடுவதும் வழக்கமாக உள்ளது. 

சில பகுதிகளில் கண்ணகை வரலாறு, சிலப்பதிகார நிகழ்வுகள் மற்றும் அம்மனின் தெய்வீகச் செயல்கள் நினைவுகூரப்படுகின்றன.


இந்த சடங்கு ஒரு மத நிகழ்வாக மட்டுமல்லாமல், சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நிகழ்வாகவும் அமைகிறது. 

ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆலயப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் ஒற்றுமை, பரஸ்பர உதவி மற்றும் பண்பாட்டு மரபுகள் தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன.


மேலும், எட்டாம் சடங்கு கண்ணகியின் நீதி, கற்பு, பொறுமை மற்றும் தெய்வீக ஆற்றலை நினைவூட்டும் நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

 கண்ணகி வழிபாட்டின் அடிப்படைப் பண்புகளான அறம், உண்மை மற்றும் நீதியை மக்களின் வாழ்வில் நிலைநிறுத்தும் நோக்கத்தையும் இது கொண்டுள்ளது.

எனவே, எட்டாம் சடங்கு என்பது கண்ணகை அம்மன் திருவிழாவின் ஒரு சாதாரண நிகழ்வல்ல; அது பக்தி, மரபு, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் புனிதமான ஆன்மீக நிகழ்வாக விளங்குகிறது


 கத்தாரில் ZABCO நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா: இலங்கை தூதுவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!

...

கத்தாரில் பல்வேறு துறைகளில் முன்னணி சேவைகளை வழங்கி வரும் சப்கோ (ZABCO) நிறுவனத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா சப்கோ குரூப் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அக்ரம் ஹாபிஸ் அவர்களின் தலைமையில் நேற்று (05) தோஹாவில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ரோஷன் சித்தாரா கான் அசாத் அவர்கள் கலந்து சிறப்பித்தார். விசேட அதிதிகளாக இலங்கைத் தூதரகத்தின் மூன்றாம் செயலாளர் ஏ.எம். முஹம்மத் உமராத், சிரேஷ்ட அதிகாரி ரஷீத் பியாஸ், அல் கபாஸ் மற்றும் எப்.எம். லிமோசின் நிறுவனங்களின் உரிமையாளர் அல்ஹாஜ் பசுல்லாஹ் மௌலானா, எப்.ஜி. குழுமம் மற்றும் i Drive நிறுவனங்களின் பணிப்பாளர் அஷ்-ஷைக் ஏ.பி.எம்.நவாஸ், வாட்ஸ்அப் லிமோசின் மற்றும் அல் கனாரி நிறுவனங்களின் பணிப்பாளர் சி.பி.நதீர் மௌலவி, பொலன்னறுவை நலன்புரிச் சங்கத்தின் தலைவர் இஸ்மாயில் ரஃபாய்தீன், சப்கோ நிறுவனத்தின் ஆலோசகர் அப்துல் ரஹ்மான் மற்றும் ஸ்கை தமிழ் மீடியா நெட்வொர்க் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் தசாப்த கால வெற்றிகரமான பயணத்தைக் கொண்டாடும் இவ்விழாவில், சப்கோ நிறுவனத்தின் உலகளாவிய சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியாவில் அதன் புதிய சர்வதேச கிளை திறக்கப்படவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நிறுவனத்தின் தசாப்த கால வெற்றிகரமான பயணத்தைக் கொண்டாடும் இவ்விழாவில், சப்கோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பங்களிப்பு செய்த 50 ஊழியர்கள் விசேடமாகப் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(வி.ரி. சகாதேவராஜா)

​இலங்கையில் நிலவும் பல்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" எனும் புதிய தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இப் பாரிய செயற்திட்டம் ஜூன் மாதம் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. 

இதன் கீழ், அம்பாறை மாவட்டத்தின் முதலாவது பிரதான ஆரம்ப நிகழ்வு நேற்று (02) சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரமுனை சுவீஸ் கிராண்ட் மஹால் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 ( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கின் இறுதிநாளான இன்று (1) திங்கட்கிழமை மடிப்பிச்சை  எடுக்கின்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

காலையில் மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
 
சுமார் 2000 பெண் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். வழிநெடுகிலும் மக்கள் அவர்களுக்கு நெல்லை வாரி வழங்கினார்கள்.

 அவர்கள் அதனை மடியில் ஏந்திக்கொண்டு நேராக 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்து அங்கு சடங்குகள் சகிதம் அந்த நெல்லை அங்கு பெற்றுக் கொண்டார்கள்.

 அதனை உரலில் இட்டு குற்றி அரிசியாக்கி பொங்குவார்கள். மீதியை வசதி குறைந்த மக்களுக்கு வழங்குவது வழக்கம்.

 


ஹுதா உமர்


அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் அவர்கள், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம், இன்று (01) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் பீ. வாகீசன், கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே. குணநாதன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில், விண்ணப்பிக்கத் தகுதியுடைய தரம் I கலாசார உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

அதன் முடிவில், கிழக்கு மாகாணத்தில் இருந்து இரு அதிகாரிகள் மட்டுமே சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் பதவிக்கு தெரிவு

 


சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தினத்தை முன்னிட்டு தானசாலை (Dansal) நிகழ்வு

வெசாக் தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தானசாலை (Dansal) நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.


பொலிஸ் நிலைய ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் பானங்கள் அன்புடன் வழங்கப்பட்டு வருகின்றன.


வெசாக் தினத்தின் ஆன்மீகத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தானசாலை நிகழ்வில், பல்வேறு சமூக மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.


ஏற்பாட்டாளர்கள், பொதுமக்களை அன்புடன் அழைத்து இந்த தானசாலை நிகழ்வில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 


 ♡     ⎙     ➦

ʳᵉᵃᶜᵗ  ˢᵃᵛᵉ  ˢʰᵃʳᵉ


For more update !!

Join Our `WhatsApp Groups

Group No . 17/19 

https://chat.whatsapp.com/GKGt4ADt5ea5xkTQT48wN5

 *றிகாஷ் எம். அலியார்*

 


காரைதீவு ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி சடங்கில்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் பக்த அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்தி வருவதைக் காணலாம்.


படங்கள் . வி.ரி.சகாதேவராஜா


 (வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வைகாசி திருக்குளிர்ச்சி திருச்சடங்கின்
முதலாம் நாள் ஊர்சுற்றுக்காவியம் பாடும் நிகழ்வு இரவில் பக்தி பூர்வமாக நடைபெற்று வருகிறது.

உடுகு அடித்து குறித்த இசையோடு பாடும் இப் பாடலை செவிமடுக்க சுமார் ஆயிரம் பக்தர்கள் இரவில் ஒன்று கூடுவது வழக்கம். 

தொடர்ந்து ஏழு நாட்கள் சடங்கு நடைபெற்று ஜூன் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவடையும். 

சடங்குகள் அனைத்தும் ஆலய கப்புகனார் தலைமையில் நடைபெறும். சடங்குநாட்களில் ஊர்சுற்றுக்காவியம் பாடுதலுடன் பச்சைகட்டல் நிகழ்வும் இடம்பெறும்.

ஜூன் 01ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் பி.ப.3மணிக்கு பொங்கலுக்கு நெற்குத்தும் வைபவமும் நடைபெறும். 

 அதேவேளை ஜூன் 08ஆம் திகதி எட்டாம் சடங்குப்பூஜை ஆயிரம் பொங்கல் பானைகளுடன் இடம்பெறும் .

 


புனித ஹஜ் செய்தவர்களுக்கு பூரணமான ஹஜ்ஜாக இறைவன் ஆக்கவும், ஏனையர்களுக்கு அந்த (ஹஜ்) சிறந்த இடத்தை கண்டு வரும் பெரும் பாக்கியத்தை தரவும் இந்த நன்னாளில் இறைவனிடம் வேண்டுகிறேன்!!!

நண்பர்கள்,வாழ்வெளிநாட்டுநண்பர்கள்,இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்www.ceylon24.com சார்பில் இனிய ஹஜ் திருநாள் நல் வாழ்த்துக்கள்…!

 


( வி.ரி. சகாதேவராஜா)


வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு நேற்று  (25) திங்கட்கிழமை மாலை  கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் உணர்வு,பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

ஆலயத்திலிருந்து தர்மகர்த்தாக்கள் கப்புகனார் சகிதம் பக்தர்கள் கடலுக்குச்சென்று தீர்த்தம் எடுத்து வரும்வழியில் கலயாணக்கால் முறித்து அதனைக்கொணர்ந்து ஆலயத்தில் சடங்கு செய்து, 1000 நேர்த்தி கூறைச்சேலை சாத்தி நட்டார்கள்.

தொடர்ந்து ஏழு நாட்கள் சடங்கு நடைபெற்று ஜூன் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவடையும். 

சடங்குகள் அனைத்தும் ஆலய கப்புகனார்  தலைமையில் நடைபெறும். சடங்குநாட்களில் ஊர்சுற்றுக்காவியம் பாடுதலுடன் பச்சைகட்டல் நிகழ்வும் இடம்பெறும்.

ஜூன் 01ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் பி.ப.3மணிக்கு பொங்கலுக்கு நெற்குத்தும் வைபவமும் நடைபெறும். 

 அதேவேளை ஜூன் 08ஆம் திகதி எட்டாம் சடங்குப்பூஜை ஆயிரம் பொங்கல் பானைகளுடன் இடம்பெறும் .

 


 (வி.ரி.சகாதேவராஜா)

அகில இலங்கை தமிழ் மொழித் தினத்தையொட்டிய
திருக்கோவில் வலய மட்ட போட்டிகள் நேற்று  (23) சனிக்கிழமை பல பண்பாட்டு கலாச்சார பாரம்பரிய பேரணியுடன் தம்பிலுவில்  மத்திய கல்லூரியில்  நடைபெற்றன. 

முன்னதாக,  திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து சுவாமி விபுலாநந்தர் , சேர சோழ பாண்டியர் ,திருவள்ளுவர், ஔவையார், தனிநாயகம் அடிகளார், தமிழ்த்தாய் உள்ளிட்ட பல பண்பாட்டு கலை அம்சங்களுடன் கூடிய பாரம்பரிய நிகழ்ச்சிகள் அடங்கிய பேரணி தம்பிலுவில் மத்திய கல்லூரி வரை சிறப்பாக நடைபெற்றது. பல பாடசாலைகள் அதற்கு தமது நிகழ்ச்சிகளை வழமைபோல் வழங்கியிருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அங்குரார்ப்பண நிகழ்வு தம்பிலுவில் மத்திய கல்லூரியில் 
திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர் . உதயகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் பிரதி, உதவி கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் நடுவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகம் கலந்து சிறப்பித்தது.

போட்டிகளில், ஆலையடிவேம்பு , திருக்கோவில், பொத்துவில் ஆகிய 03 கோட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

 


இலங்கையின் மிக நீண்ட புனித யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி - கதிர்காம பாதயாத்திரை இன்று சனிக்கிழமை காலை [2026.05.23] யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான போது...


 ( வி.ரி.சகாதேவராஜா)


யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை நேற்று முன்தினம்(19)  செவ்வாய்க்கிழமை பண்டத்தரிப்பிலிருந்து முன்னோடி பயணமாக  ஆரம்பமானது .

ஜெயாவேல்சாமி தலைமையிலான இப் பாதயாத்திரை,  மூத்த முருக பக்தர் துரைச்சாமி அடியார் வேண்டுகோளுக்கிணங்க, பண்டத்தரிப்பு  பிரான்பற்று  பெரிய வளவு  முருகன்

ஆலயத்திலிருந்து 45 அடியார்களுடன் ஆரம்பமானது .
அன்றிரவு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் தங்கி இருந்தனர்.
 நேற்று(20) புதன்கிழமை மாவிட்ட புரம் ஊடாக மயிலிட்டி பேச்சியம்மன்  ஆலயத்தை வந்தடைந்தனர் .

இன்று தொண்டமானாறு அக்கரை நாக பூசணி அம்மன் ஆலயத்தை அடைந்து நாளை வெள்ளிக்கிழமை (22) காலை  செல்வச் சந்நிதி ஆலயத்தை ஆலயத்தை சென்றடைவர். 

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து 2026.05.23 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை கதிர்காம பாதயாத்திரை முறைப்படி விசேட பூஜைகள் சகிதம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

அதன்போது, மேலும் நூறு அடியார்கள் இப் பாரிய பாதயாத்திரையில் இணைந்து கொள்வர்.

இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரையாகக் கருதப்படும் இப்புனிதப் பயணம், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களை இணைத்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக இடம்பெறுகிறது.
55 நாட்கள் கால்நடைப் பயணமாக, 108 ஆலயங்களைத் தரிசித்து, சுமார் 815 கிலோமீற்றர் தூரம் நடந்து கதிர்காம முருகனை தரிசிக்கும் இப்புனித யாத்திரை, இலங்கையின் மிக நீண்ட தூர பாதயாத்திரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பக்தி, ஒழுக்கம், தியாகம் மற்றும் இறைநம்பிக்கையின் வெளிப்பாடாக அமையும்  ஜெயாவேல் சாமி தலைமையில் வரும் இப் பாதயாத்திரையில், இடையில் இணைய இருக்கும் அடியார்கள் தங்களது விபரங்களை பதிவு செய்ய  ஜெயாவேல் சாமி  

 


கர்நாடகாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவிகள், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.


ஹிஜாப் அணிய கர்நாடக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, அந்த மாணவிகள் தங்களது படிப்பை மீண்டும் தொடங்குவதற்கான புதிய திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.


சில ஆசிரியர்களால் பூணூல் (தென்னிந்தியாவில் ஜனிவாரம் என்று அழைக்கப்படும் புனித நூல்) அணிவது தடுக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இது நிம்மதியை அளித்துள்ளது.


மாண்டியாவில் உள்ள தனது கல்லூரியில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு எதிராக "அல்லாஹு அக்பர்" என்று முழக்கமிட்டு, அதன் மூலம் "ஹிஜாப் பெண்" என்ற புனைப்பெயரைப் பெற்ற முஸ்கான் கான், தற்போது தனது படிப்பை மீண்டும் தொடரத் திட்டமிட்டுள்ளார்.


இதற்கிடையில், தனது மகன் ஆனந்த் எஸ். தீர்த்தா தற்போது சந்தித்து வரும் அதே கொடுமையை மற்ற மாணவர்கள் சந்திக்க நேரிடக்கூடாது என சுவர்ணா தீர்த்தா விரும்புகிறார்.


விளம்பரம்


மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு மையத்துக்குள் நுழைவதற்கு முன்பு, அவர் தனது பூணூலைக் கழற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.


"பூணூலை கழற்றக் கூடாது என்று தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தன. ஆனால் அது கடந்த ஆண்டும் நடந்தது, இந்த ஆண்டும் நடந்துள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் தான் சிறப்பாகச் செய்திருக்கிறோமா இல்லையா என்பது குறித்து உறுதியாகத் தெரியாததால் அவர் இன்னும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்" என்று சுவர்ணா தீர்த்தா பெங்களூருவில் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் தெரிவித்தார்.


"அவன் பியூசி தேர்வில் (PUC board exam) 94 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தான். ஒரு நல்ல கல்லூரியில் சேர்வதற்கு, பியூசி தேர்வின் 50 சதவிகித மதிப்பெண்களும், சிஇடி தேர்வில் 50 சதவிகித மதிப்பெண்களும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன."


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

மின்சார வாகனங்களின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய இந்திய விஞ்ஞானிகளின் சிறு கண்டுபிடிப்பு

மின்சார வாகனங்களின் எதிர்காலத்தையே இந்திய விஞ்ஞானிகளின் சிறு கண்டுபிடிப்பு மாற்றுமா?

CSK vs SRH, ஐபிஎல் பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு?

சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்பை வலுப்படுத்திய முடிவுகள்: சன்ரைசர்ஸை இன்று வீழ்த்துமா?

ஜோனாஸ் சால்க் 

சொந்த குடும்பத்தையே சோதனை எலிகளாக பயன்படுத்தி போலியோவுக்கு தீர்வு கண்ட விஞ்ஞானி

கேரளம், தமிழ்நாடு, சினிமா, திரைப்படங்கள்

மலையாள சினிமாவில் தமிழர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்? 'பாண்டி' என்பதன் பின்னணி

End of அதிகம் படிக்கப்பட்டது

கர்நாடக அரசு இந்த வார தொடக்கத்தில், 2022 இல் பாஜக அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடையை ரத்து செய்து புதிய உத்தரவைப் பிறப்பித்தது.


அந்தப் புதிய உத்தரவில், "மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்ட ஆடையுடன் சேர்த்து, குறிப்பிட்ட அளவிலான பாரம்பரிய மற்றும் கலாசார அடிப்படையிலான சின்னங்களை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்" என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.


அந்த உத்தரவின்படி, "இத்தகைய ஏற்றுக்கொள்ளத்தக்க சமூக மற்றும் பாரம்பரியச் சின்னங்களில் தலையில் கட்டும் பாகை (turban), புனித நூல் (sacred thread), சிவமாலை, ருத்ராட்சம், ஹிஜாப் அல்லது மாணவர்கள் பொதுவாக அணியும் பிற சமூக மற்றும் பாரம்பரியச் சின்னங்கள் அடங்கலாம். ஆனால், அவை மாணவரின் ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் அடையாளத்தை பாதிக்கக் கூடாது"என்று கூறப்பட்டுள்ளது.


முஸ்கான் கானின் அனுபவம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முஸ்கான் கான் பிப்ரவரி 8, 2022 அன்று நடந்த சம்பவத்தை நினைவுகூர்கிறார், அப்போது அவர் தனது ஸ்கூட்டரில் கல்லூரிக்குச் சென்றார்.


கல்லூரி வாயிலில் சில மாணவர்களும் அடையாளம் தெரியாத சில நபர்களும் இருந்தனர். அவர் தனது ஸ்கூட்டரை நிறுத்தியவுடன், வெளியில் இருந்து வந்த ஒரு குழுவினர் அவர் ஹிஜாபை கழற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.


அதுகுறித்து பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய அவர், "அப்போதுதான் நான் 'அல்லாஹு அக்பர்' என்ற முழக்கத்தை எழுப்பினேன். பிறகு, 'ஏன் இந்த முழக்கத்தை எழுப்பினீர்கள்? வேறு எந்த முழக்கத்தையும் எழுப்பியிருக்கலாமே' என்று என்னிடம் கேட்கப்பட்டது," எனக் கூறினார்.


"ஆனால் மகாத்மா காந்தி சுடப்பட்ட போது, அவர் 'ஹே ராம்' என்று சொன்னார். அதேபோல், எந்தவொரு நபரும் தான் நம்பும் ஒருவரைத்தான் அழைப்பார்" என்றார்.


தனக்கு உதவி செய்து கல்லூரிக்குள் அழைத்துச் சென்ற விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு முஸ்கான் கான் நன்றி தெரிவித்தார்.


"அவர்கள் எனக்கு மிகவும் உதவினார்கள்" என்று அவர் கூறுகிறார்.


அவருடன் உறுதியாக நின்ற தோழிகள், இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். "ஏனென்றால், பல ஆண்டுகளாக நான் ஹிஜாப் அணிவதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்" என்கிறார் முஸ்கான் கான் .


 முஸ்கான் கான் பட மூலாதாரம்,Video Grab

படக்குறிப்பு,இந்தப்படம், தனது ஹிஜாபை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு எதிராக முஸ்கான் கான் முழக்கமிடும் காணொளியின் ஸ்கிரீன்ஷாட் ஆகும்.

அந்த சம்பவத்துக்கு பிறகு என்ன நடந்தது?

பி.காம் படிப்பின் மூன்றாவது செமஸ்டர் தேர்வுக்கு சற்று முன்பு தான் அந்த சம்பவம் நடந்திருந்ததால், அவரால் தேர்வு எழுத முடியவில்லை.


"நாங்கள் பல பிரச்னைகளை எதிர்கொண்டோம். என் அம்மா என்னை வெளியே விடவில்லை. அதனால்தான் நான் ஒரு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதேபோல், வேறு பல பெண்கள் தேர்வு எழுதாமலேயே சேர்க்கை பெற்றனர். ஹிஜாப் அதற்கு முன்பு ஒருபோதும் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய அவர், "படிக்க விரும்பும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இதனால் தான் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு பிறப்பிக்கப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெவ்வேறு சமூகங்களின் மரபுகளை மனதில் கொண்டு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது"என்று கூறுகிறார்.


தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில், சிஇடி தேர்வு மையத்தில் பல மாணவர்கள் தங்களின் பூணூலை கழற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது தொடர்பாக அவர் வருத்தப்படுகிறார்.


எதிர்காலத்தில், அவர் தனது முதுகலைப் படிப்பை முடித்த பிறகு சட்டம் படிக்க விரும்புகிறார்.


"கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், இந்தியா முன்னேற உதவவும் நான் என் சமூகத்துக்கு சேவை செய்வேன். நான் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக விரும்புகிறேன், பெண்கள் தங்களின் அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டே கல்வியைத் தொடர முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவ விரும்புகிறேன். அறிவைப் பெறுவதற்கு இஸ்லாம் நமக்கு வழிவகை செய்கிறது" என்று அவர் கூறுகிறார்.


ஆனந்த தீர்த்தரின் கதை

பியூசி படிப்பில் ஆனந்த் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததாக சுவர்ணா தீர்த்தா தெரிவித்தார்.

பட மூலாதாரம்,Umesh Marpally/BBC

படக்குறிப்பு,கர்நாடகாவில் ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவி உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.

ஆனந்தின் தாய் சுவர்ணா தீர்த்தா, தனது மகன் 12-ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும், பொறியியல் கல்லூரியில் சேர மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும் கூறினார்.


"தேர்வுக்குப் பிறகு, அவன் சிஇடி (பொது நுழைவுத் தேர்வு) தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினான். ஏப்ரல் 24 அன்று, என் கணவர் அவனை தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். பெற்றோர் நுழைவாயிலிலேயே நிறுத்தப்பட்டனர்" என்று அவர் கூறுகிறார்.


"பரிசோதனை செய்யும் ஊழியர்கள் அனைவரையும் சோதித்து, சங்கிலிகள், கடிகாரங்கள் போன்றவற்றை கழற்றுமாறு சொன்னார்கள். அவர்கள் ஜனிவாராவை (பூணூல்) பார்த்துவிட்டு, அதை கழற்றுமாறு அவனிடம் கூறினர். அவன் 10 ஆண்டுகளாக அதை அணிந்திருந்தான். ஜனிவாரா அணிந்து கொண்டு உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறினர். அவன் தேர்வு மையத்துக்கு வெளியே இருந்த தன் தந்தையை அழைத்தான்."


பியூசி படிப்பில் ஆனந்த் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததாக சுவர்ணா தீர்த்தா தெரிவித்தார்.


"சிஇடி தேர்வில், 50 சதவிகித மதிப்பெண்கள் பியூசி தேர்வு முடிவுகளில் இருந்தும், 50 சதவிகித மதிப்பெண்கள் சிஇடி தேர்விலிருந்தும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நாங்கள் மதிய வேளையில் கல்லூரி முதல்வரையும் சந்தித்தோம். (ஜனிவாரா அணிய அனுமதிக்க வேண்டும் என) தெளிவான வழிமுறைகள் வெளியிடப்பட்ட பின்னரும் இது ஏன் நடந்தது என்று எங்களுக்குப் புரியவில்லை. கடந்த ஆண்டும் அரசு வழிமுறைகளை வெளியிட்டிருந்தது, ஆனால் அந்த வழிமுறைகளையும் மீறி இது நடந்துள்ளது" என்று கூறிய அவர்,


"அவன் (ஆனந்த் தீர்த்தா) மிகவும் மனமுடைந்துள்ளான். நாங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதேபோன்ற நடவடிக்கையால் மேலும் நான்கு-ஐந்து மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களின் எதிர்காலம் சிஇடி மதிப்பெண்களைப் பொறுத்தே அமைந்துள்ளது" என்றார்.


பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 299 (எந்தவொரு பிரிவினரின் மத உணர்வுகளையோ அல்லது அதன் மதத்தையோ அல்லது நம்பிக்கைகளையோ புண்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் திட்டமிட்ட மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள்) மற்றும் 302 (எந்தவொரு நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் வார்த்தைகளை உச்சரிப்பது அல்லது சைகை செய்வது) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


இது தொடர்பாக சுவர்ணா தீர்த்தா கூறுகையில், " தேர்வு எழுதும் வேறு எந்த நபருக்கும் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே நாங்கள் இந்த புகாரை அளித்தோம்" என்றார்.


அவரது கணவர் சுதீந்திர தீர்த்தா பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசுகையில், "அவன் ஒட்டுமொத்தமாக 97 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றால், நன்கொடைக் கட்டணம் செலுத்தாமல் சிறந்த கல்லூரிகளில் சேர்க்கை பெற வாய்ப்பு உள்ளது. எங்களால் நன்கொடை செலுத்த முடியாது" என்றார்.


தேர்வில் முறைகேடு செய்வதற்கு பூணூல் எவ்வாறு பயன்படுத்தப்பட முடியும் என்று ஆனந்த் தீர்த்தாவின் பெற்றோர் (சுவர்ணா மற்றும் சுதீந்திரா) கேள்வி எழுப்பினர்.

 


(  வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் வருடாந்த திருக்குளிர்ச்சிச்  சடங்கு காலம் புனித வாரமாகும். அக் காலப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் பயபக்தியுடன் ஆசாரமாக நடந்து கொள்ள வேண்டும் வேண்டும்  
என்று திருக்குளிர்த்தி  சடங்கு தொடர்பான ஆலோசனைக்  கூட்டத்தின் போது கருத்துரைக்கப்பட்டது .

குறித்த சடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டமும் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன  வெளியீட்டு நிகழ்வும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(15) ஆலய கேட்போர் கூடத்தில் தர்மகர்த்தாக்களான இரா.குணசிங்கம், எஸ்.நமசிவாயம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அங்கு துறை சார்ந்த அலுவலர்கள்,  தலைமைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த திருக்குளிர்ச்சிச் சடங்கு  எதிர்வரும் திங்கட்கிழமை 25ஆம் திகதி கதவுதிறத்தல் கடல்தீர்த்தம் கொணரல் கல்யாணக்கால் நடல் நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி
தொடர்ந்து 07தினங்கள் சடங்கு இடம்பெற்று 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவுறும் எனவும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் வருகையும் அவசியம் எனவும்
ஆலய தர்மகர்த்தாக்களான இரா.குணசிங்கம், எஸ்.நமசிவாயம் குறிப்பிட்டார்கள்.

கூட்டத்தில் பாதுகாப்பு,குடிநீர் வசதி, சுகாதாரம், போக்குவரத்து, வீதி,  தொண்டர் நடைமுறை,  உள்ளிட்ட பல துறைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன. 
ஊடகம் மற்றும் சடங்கு புனிதவார நடைமுறைகள் தொடர்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா கருத்துரைத்தார்.
துறைசார் அலுவலர்களும் கருத்துகளை தெரிவித்தனர்.

இறுதியில் அனைவருக்கும் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன அழைப்பிதழ் (நோட்டீஸ்) வழங்கி வைக்கப்பட்டது.

 


அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் மட்டக்களப்பு கல்லடி துளசி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றபோது மேடையேறிய பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகள்...


 நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆம் வட்டாரமான புதுநகர் உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2488/10 இன் பிரகாரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் முகமது முஸ்தபா முகமது அன்சார் அவர்கள் தனது உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தல்கள் ஒழுங்கு விதி சட்டத்தின் 66A(1)(a) பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், குழந்தை மறைக்கார் முகமது ஜெரீஸ் அவர்கள் நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆம் வட்டார உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமன அறிவிப்பை நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அதிகாரியான கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தால் 2026 மே 11ஆம் திகதி வெளியிடப்பட்ட இவ்வறிவிப்பு, 2026 மே 12ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது


 நூருல் ஹுதா உமர்


இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ரமழான் விசேட போட்டிகளின் பரிசளிப்பு விழா – 2026 நிகழ்வு நேற்று (13) புதன்கிழமை இறக்காமம் கலாசார மண்டபத்தில் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

மாணவர்களிடையே சமய, ஒழுக்க மற்றும் கல்வி விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, ரமழான் மாதத்தின் ஆன்மீகப் பண்புகள் தொடர்பான புரிதல்களை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் குர்ஆனை முறையாக ஓதல், குர்ஆன் மனனம், ஹதீஸ் மனனம், இஸ்லாமிய பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு சமய மற்றும் திறன் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும், பிரதேச செயலக கணக்காளர் ஐ.எல்.எம். றிபாஸ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல்.எம். றஸாக், நிருவாக கிராம உத்தியோகத்தர் நிலுபுல் குமார உள்ளிட்ட அதிகாரிகளும், இறக்காமம் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர். அதேவேளை, இறக்காமம் ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச். வஹாப் (இஸ்லாஹி), செயலாளர் அஷ்ஷெய்க் எம்.கே. றுவைஸ் (ஸலபி), ஜும்மா பள்ளிவாசல் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் திருக்குர்ஆன் பாராயணம் இடம்பெற்றதுடன், தொடர்ந்து வரவேற்புரை, சிறப்புரைகள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வெற்றியாளர்களுக்கான கௌரவிப்புகளும் நடைபெற்றன. ரமழான் மாதம் மனிதர்களிடையே ஒழுக்கம், பொறுமை மற்றும் பகிர்வுத் தன்மையை வளர்க்கும் புனிதமான காலமாகும் என்றும், இவ்வாறான போட்டிகள் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் சமய அறிவு மேம்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் நிகழ்வில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இளம் தலைமுறையினரை நல்லொழுக்கம், ஒற்றுமை மற்றும் சமயப்பற்றுடன் வளர்ப்பதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதையும் நிகழ்வு வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 


( வி.ரி.சகாதேவராஜா)


இலங்கை இராமகிருஷ்ண மிஷினில் கடந்த 40 வருடங்களாக கல்வி சமூக கலாச்சார ஆன்மீக பணியாற்றி வந்த மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ, ஓய்வுபெற்று  இறுதி ஆன்மீக தவவாழ்வை மேற்கொள்ளுமுகமாக இந்தியா செல்லவுள்ளார்.

இலங்கையிலிருந்து பிரியாவிடை பெறவிருக்கின்ற இத்தருணத்தில், கொழும்பிலும், மட்டக்களப்பிலும், கொட்டகலையிலும் அவருக்கு மகத்தான பிரியாவிடை நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் தேதி மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷினுக்கு வருகை தர உள்ளார்.
 அங்கு 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகத்தான பிரியாவிடை நிகழ்வு மட்டக்களப்பு ஆச்சிரம பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ  மகராஜ் முன்னிலையில் நடைபெற உள்ளது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அந்நிறுவனத்தினனல் மகத்தான ஜீவசேவை புரிந்த மகராஜ்ஜின்  பிரிவு உபசார விழா நடைபெறவுள்ளது.

1986 ஆம் ஆண்டு இராமகிருஷ்ண மிஷனின் இலங்கை கிளைக்கு மாற்றம் பெற்று வந்த சுவாமி ராஜேஸ்வரானந்தஜி மகாராஜ் அவர்கள், கடந்த 40 ஆண்டுகளாக கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூகப் பணிகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்துள்ளார். 

குறிப்பாக ஏழை மக்களின் முன்னேற்றம், இளைஞர் வழிகாட்டல் மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்காக tireless-ஆக பணியாற்றிய அவர், மக்களிடையே பெரும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.