Showing posts with label Culture. Show all posts

  


(வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற " சின்னக் கதிர்காமம்" என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கான வருடாந்த தலபாதயாத்திரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி சனிக்கிழமை காரைதீவிலிருந்து நடைபெற இருக்கிறது .

வரலாற்று பிரசித்தி பெற்ற " சின்னக் கதிர்காமம்" என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 19 ஆம் தேதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய விருக்கிறது.

காரைதீவில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் பாதயாத்திரை இடம் பெறுவது வழக்கம்.

காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து இந்த பாரிய பாதயாத்திரையை வருடாந்தம் நடத்தி வருகிறது.

 காரைதீவிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் பாதயாத்திரை கல்முனை நற்பிட்டிமுனை  சேனைக்குடியிருப்பு கிட்டங்கி நாவிதன்வெளி வேப்பையடி தம்பலவத்தை ஊடாக மண்டூரைச் சென்றடையும்.

 தம்பலவத்தையில் பிரபல சட்டத்தரணி நடராசா சிவரஞ்சித்தின் அன்னதான நிகழ்வு இம் முறையும் இடம்பெறும் என சங்க செயலாளர் கு. ஜெயராஜி தெரிவித்தார்.

 



சவூதி அரேபியாவின் மக்கா நகரில் அமைந்திருக்கின்ற புனித கஅபா ஆலயம் பூமியின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது.ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் கடைமை முடிந்த பிறகும் சதுரவடிவிலான பெட்டி, கட்டம் போன்ற பொருள் உள்ளது சுத்திகரிப்புச் செய்யப்படும்.

குஸ்ல் (சலவை விழா) போது காபாவுக்குள் நுழைந்த தூதுக்குழுவில் ஷேக் ஷம்சன் மற்றும் ஷேக் முஹன்னா ஆகியோர் உள்ளனர்


( வி.ரி.சகாதேவராஜா)
கதிர்காமத்தில் 48 வருடங்களாக அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள  இ.கி.மிஷனுக்குச் சொந்தமான யாத்திரீகர் மடம் மீண்டும் மிஷனிடம்  கையளிக்கப்படுமா? என்று சர்வதேசம் வாழ்
இந்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குறித்த கதிர்காமம் இ.கி.மடம் 1953 இல் பிரதமர் டட்லி சேனநாயக்காவால் திறந்து வைக்கப்பட்டது.

 1943 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல அமைப்புகள் கதிர்காமத்தில் உள்ள புனித ஆலயத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான யாத்திரீகர்களுக்கு சேவை செய்யத் தொடங்கியது. அதன் ஓரங்கமாக உலகளாவிய ரீதியில் வியாபித்து ஜீவசேவையாற்றிவரும் இராமகிருஷ்ண மிஷன் அமைப்பும் கதிர்காமத்தில் காலூன்றியது.

அதன் காரணமாக விசாலமான கட்டிடங்கள் கட்டப்பட்டு ராமகிருஷ்ண மிஷன் மடம் 1953 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த மாண்புமிகு டட்லி சேனாநாயக்க அவர்களால் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. 

 அப்போதிருந்து, மத வேறுபாடின்றி யாத்ரீகர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டது.
 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடக்கும் வருடாந்த திருவிழாவின் போது, ​​17 நாட்களுக்கு தொடர்ச்சியாக, ஒரு நாளைக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட (10,000) யாத்ரீகர்களுக்கு இலவச உணவை மிஷன் வழங்கியது. மத விரிவுரைகள், சொற்பொழிவுகள் மற்றும் பஜனைகள் மடத்தில் வழக்கமான நடவடிக்கைகள். 1976 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் வரை மிஷன் ஒரு குடியுரிமை சுவாமியின் மேற்பார்வையின் கீழ் அதன் உன்னத சேவைகளைத் தொடர்ந்தது. 

அத்தகைய உன்னத ஜீவ சேவையாற்றிய இகிமிசன் மடத்தை மீண்டும் ஒப்படைத்து சமாதான பூமி புனித பூமி என்ற வாசகத்திற்கு அர்த்தம் சேர்க்குமாறு உலக இந்துக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவும் குறிப்பாக பிரதமர் மோடியும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.


 மாளிகைக்காடு செய்தியாளர்


இஸ்லாமிய கலண்டரின் முதல் மாதமாக புனித முஹர்ரம் - 1446 புதுவருடத்தினை நினைவு ௯றும் வகையில் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் சுற்று நிரூபத்துக்கு அமைவாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) "மகிழ்ச்சிகரமான முஹர்ரம்" எனும் தொனிப்பொருளில் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் முஹர்ரம் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முஹர்ரம் நிகழ்வை ஞாபகப்படுத்தும் நல்லுபதேசங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை இஸ்லாம் பாட ஆசிரியர் மௌலவி ஏ.ஜி. முகம்மது நதீர் அவர்களினால் நிகழ்த்தப்பட்டன. மேலும் இத்தினத்தில் எமது தாய் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பொருளாதார முன்னேற்றம், சுபீட்சம், ஐக்கியம், சௌபாக்கியம் வேண்டி விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வினை கல்லூரியில் தற்காலிக இணைப்பு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி சமதா மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர்களான எம்.எஸ். மனுனா, என்.டி. நதீகா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்


 (வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை மேலும் ஒருநாள் திறந்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (12) வெள்ளிக்கிழமை மூடப்படும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார்.

களுதாவளை கதிர்காம பாதயாத்திரை ஒன்றியம் ஒருநாள் பாதைத்திறப்பை நீடிக்குமாறு விடுத்த கோரிக்கை  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம ஆகியோரின் பரிசீலனைக்கு பிற்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


அதன் பிரகாரம் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.00 மணியளவில் இவ் வருட பாதயாத்திரைக்கான காட்டுப் பாதை மூடப்படவுள்ளது.

இம்முறை இதுவரை இப்பாதையால் 34 ஆயிரம் பக்தர்கள் பயணித்துள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.
 
உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வரலாற்றில் கானகப் பாதை திறந்த( 30) முதல் நாளில் சுமார் 7000 பாதயாத்திரீகர்கள் பயணித்தமை இதுவே முதல் முறையாகும்.
அதேபோல உகந்தை முருகனாலய கொடியேற்றம் இடம் பெற்ற கடந்த ஆறாம் தேதி கானகத்தில் பிரவேசித்த அடியார்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். இதுவும் ஒரு வரலாற்று பதிவாகும்.

கதிர்காமத்திற்கான கானகப் பாதை கடந்த 30 ஆம் திகதி திறக்கப்பட்டு கடந்த 12 தினங்கள் அடியார்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகனாலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம்  06ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 22ஆம் திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.





( வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய ஆடிவேல்  விழா உற்சவம் ஆரம்பமாக இருக்கின்றது.

இந்நிலையில் தினமும் கதிர்காமம்  பாதயாத்திரைக்கும் திருவிழாவுக்குமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் உகந்தைமலை சென்று வருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள ஏழு கிணறுகளில் வாளிகள் இல்லாமல் காட்சி அளிக்கின்றது.
 இதனால் அங்கு செல்கின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடிநீரைப் பெறுவதற்கும் நீராடுவதற்கும்
பலத்த சிரமங்களை  எதிர் நோக்குகின்றனர்.

 அதைவிட அங்கு தினமும் பெறப்படும் குப்பை கூழங்கள் ஆலய வளாகத்தின் தென் புறத்திலே கொட்டப்பட்டு வருகின்றன .

அதனால் அங்கு சூழல் மாசடைந்து பாதிப்படையவும் தொற்றுநோய்க்கான காரணிகள் தோன்றவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
 இதனை நிவர்த்தி செய்ய ஆலய நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு செல்கின்ற அடியார்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருவிழாக்கள் நிறைவடைய இன்னும் 12 நாட்கள் உள்ளன. அதாவது எதிர்வரும் 22 ஆம் தேதி தீர்த்த உற்சவம் இடம் பெற இருக்கின்றது .

எனவே இந்த ஆலயங்களிலுள்ள கிணறுகளுக்கு வாளிகளைப் பொருத்தி அடியார்களுக்கு போதுமான வசதியை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று இந்த குப்பை கூழங்கள் பக்தர்கள் கூடுகின்ற ஆலய வளாகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றார்கள்.
தேசத்து ஆலயமாக விளங்கும் இவ் ஆலய உற்சவத்திற்கான முன்னோடிக் கூட்டம் அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம முன்னிலையில் நடைபெற்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதிலும் இவ்வாறான குறைபாடுகள் நிலவுவது அடியார்களின் நலன்புரி செயற்பாடுகளை  வழங்குவதை கேள்விக் குறியாக்கியுள்ளது.

எனவே இந்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 


பாறுக் ஷிஹான்


இஸ்லாமிய புதுவருடம் தினத்தை(முஹர்ரம்) நினைவு தினத்தை முன்னிட்டு ஹிஜ்ரி 1446 முஹர்ரம் தொடர்பான விஷேட நிகழ்வு கல்முனை  அஸ்-ஸுஹறா வித்தியாலய  அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா தலைமையில் இன்று  இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லுலூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்  அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா(நழீமி)  சிறப்புரை ஆற்றினார்.

மாணவர்கள் மத்தியில் ஆற்றப்பட்ட இச்சிறப்புரையில் புதிய மாற்றங்களுக்கு முஸ்லிம் சமூகம்' எவ்வாறு முகங்கொடுப்பது தொடர்பிலும்,முஹர்ரம் நிகழ்வின் சிறப்புக்கள், மாணவர்கள் பேணும் விழுமியங்கள், ஒற்றுமை,சமூக இணக்கப்பாடு உள்ளடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.நிகழ்வின் இறுதியில்  பாடசாலையின் ஆசிரியை சுசான் பாயிஸினால் வழங்கப்பட்ட இனிப்பும் பிரதம அதிதியால் சகல மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி அதிபர் எம். ஏ. பாதிம் மிஸ்னா, ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 




 நூருல் ஹுதா உமர்


இலைமறைகாயாக ஒளிந்திருப்பவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களது எழுத்தாக்கத்திற்கு உயிரூட்டும் வகையில் செயல்பட்டு வரும் ஏட்டுலா கனவாக்கத்தால் வெளியிடப்பட்ட  அக்கரைப்பற்று முபீதா அமீன் எழுதிய அவரது கன்னிப் படைப்பான "நிதர்சனத்தின் நிழல்" கவிதை நூல் வெளியீட்டு விழா அக்கரைப்பற்று கலை இலக்கிய பேரவையின் தலைவர் கலாபூசனம் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கலாச்சார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் கலந்து சிறப்பிதத்துடன், ஓய்வுநிலை நில அளவையாளர் ஏ.எல்.மொஹிதீன் பாவா,  அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி என்.நவப்பிரியா ஆகியோரும் மற்றும் பல இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

 


( கதிர்காமத்திலிருந்து வி.ரி. சகாதேவராஜா)

கதிர்காமம் மாணிக்கங்கையில் நீராடிய ஒருவர் முதலை கடித்து ஸ்தலத்திலேயே பலியாகினர் .

இச்சம்பவம் கொடியேற்ற தினமான நேற்று(6) சனிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

நேற்று மாலை 5.30 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்று முதலாவது பெரஹரா பெரிய ஊர்வலத்திற்காக மக்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் பலர் மாணிக்க கங்கையில் நீராடிக் கொண்டிருந்தார்கள்.
 அப்பொழுது அங்கிருந்த முதலை நீராடிய ஒருவரை கடித்து குதறி இருக்கின்றது .

சற்று வேளையில் அங்கு வந்த போலீசாரின் மீட்பு அணியினர்(rescue mission) உடன் பாய்ந்து அங்கே கம்பியால் குத்தி அதற்குரிய நடவடிக்கை எடுத்த பொழுது இவர் மேலே மிதக்க காணப்பட்டார். பின்பு அவரது சடலம் கதிர்காமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவர் மட்டக்களப்பைச்சேர்ந்த நடுத்தர வயதுடையவர் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பின்னால் அவரது மனைவி உறவினர்கள் அங்கு அழுதழுது சென்றார்கள் .

 இதேவேளை, நேற்று முதலாவது பெரஹராவில் கலந்து கொண்ட இரண்டு யானைகள் குழப்பம் விளைவித்தன. முதல் நாளில் லட்சம் மக்கள் பெரஹரா பார்க்க வந்திருந்தனர். யானைகள் மதங் கொண்டு ஓடி குழப்பம் விளைவித்தன.

இதனால் மக்கள் பீதியோடு கலைந்து ஓடினர். பிள்ளைகள் ஓலமிட்டனர். பலர் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர்.
அதன்போது சிலருக்கு காயமும் ஏற்பட்டது.

இவ்வாறான சம்பவங்கள் கதிர்காமம் செல்லும் அடியார்களின் மனதிலே ஒருவித அச்சத்தை உண்டு பண்ணும்.

 லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடும் இப் புனித பூமியில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற அனுமதிக்ககூடாதென்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

 எனவே கதிர்காம நிர்வாகம் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்கின்றனர் .

அந்த புனித பூமியிலே மக்களுக்கான பாதுகாப்பையும் அவர்கள் வழங்க வேண்டும் என்றும் மக்கள் கேட்டுக் கொண்டார்கள்.


வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம்  ஆடி வேல்விழாவை  ஒட்டிய பாதயாத்திரை வரலாறு காணாத வகையில் இம்முறை களைகட்டி உள்ளது.

 இதுவரை 25,000 மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் கானகத்தினுள் பிரவேசித்து இருக்கின்றார்கள்.

 கடந்த 30ஆம் தேதி முதல் நாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கானகப் பாதை திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் சுமார் 7000 அடியார்கள் கானகத்தில் பிரவேசித்தனர். கடந்த ஆறு நாட்களாக பயணித்து நேற்றும் முன்தினமும் கருகாமத்தை சுமார் 5000 அடியார்கள் வந்தடைந்தனர்.

 நேற்றைய தினம் உகந்தமலை முருகன் ஆலய வருடாந்த ஆலிவில் விழாவை ஒட்டிய கொடியேற்றம் ஆலய பிரதம குரு க.கு. சீதாராம் குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுமார் 6000 அடியார்கள் கானகத்தில் பிரவேசித்துள்ளார்கள்.

 அதேவேளை நேற்று கதிர்காம கந்த ஆலய கொடியேற்றம் பால்குடி பாபா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

 அவ்வமயம் வடக்கு கிழக்கிலிருந்து சுமார் 10000 அடியார்கள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டார்கள். எதிர்வரும் 11ஆம் தேதி வரை காட்டுப்பாதை திறந்திருக்கும்.

 செல்வச் சேர்ந்த ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் கடந்த 60 நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் கதிர்காமத்தை அடைந்து கதிர் மலை  ஏறி அவர்களை  அவர்களது நேர்த்தியை பூர்த்தி செய்து இருந்தார்கள்.

 இன்னும் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை போன்ற பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான யாதத்திரீகர்கள் தற்சமயம் கானகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள் .

இம்முறை பயணம் அனைவருக்கும் சாதகமாக அமைந்திருந்தது காலநிலை சிறப்பாக இருந்தது.

 எனினும் இரண்டு இடங்களிலே போலீஸ் மற்றும் ராணுவத்தினரின் கணக்கெடுப்பு இடம் பெற்று இருந்தது.


  கலியுகத் தெய்வமாம் முருகப் பெருமான் மன உகந்து பதி கொண்டு எழுந்தருளிய உகந்தைப் பதியானது இப்பூவுலகிலுள்ள சிறப்பு பெற்ற புண்ணிய தலங்களுள் முக்கிய தலமாக  அடியார்களினால் போற்றியும் வழிபடப்பட்டும் வருகின்றது.

இவ்வாறு வரலாற்றுப் பெருமையும், புகழும் கொண்டு விளங்கும் இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணத்தில் தென்கோடியில் நானிலங்களும் சமுத்திரமும் சூழப்பெற்ற இயற்கை எழில் கொண்ட அருள்மிகு உகந்தமலை ஸ்ரீP முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் மஹோற்சவ கொடியேற்றப் திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் இன்று  (06) இடம்பெற்றது.
லாகுகல பிரதேச செயலாளர் நவனீதராஜாவின் கண்காணிப்பின் கீழ் ஆலய தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தலைமையில் பிரதம குரு சிவாகமகிரியாயோதி, ஈசானசிவச்சாரியார் சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் உள்ளிட்ட குருமார்களின் வேதாகம கிரியைகளுடன்  ஆரம்பமான மூலவர் மற்றும் வசந்த மண்டப பூசை வழிபாடுகளை தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.
கொடியேற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இன்று ஆரம்பமான ஆடிவேல் விழாவானது 15 நாட்கள் இடம்பெறுகின்ற விசேட பூஜை வழிபாடுகளுடனும் 22 ஆம் திகதி இடம்பெறுகின்ற ஆடிவேல் தீர்த்தோற்வசத்துடனும் நிறைவறும்.
இதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் உகந்தை முருகனின் கொடியேற்றத்தின் பின்னர் கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


 வி.சுகிர்தகுமார் 0777113659   


 கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை திறப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு காட்டுவழிப்பாதையினை திறந்து வைத்தார்.
நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர சிந்தக அபேவிக்கிரம 
கிழக்கு மாகாணவீதி அபிவிருத்தி ,நீர்ப்பாசனம் ,மோட்டார் போக்குவரத்து,  கட்டட நிர்மானம் ,வீடமைப்பு,கிராமியம் மற்றும் மின்சாரம் ,நீர் வழங்கல் அமைச்சின்   செயலாளர்  மூ.கோபாலரெத்திணம்  லாகுகல பிரதேச செயலாளர் நவனீதராஜா உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க யாத்திரிகர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீP க.கு.சீதாராம குருக்கள் நடாத்தி வைத்ததன் பிற்பாடு காட்டுவழிப்பாதை திறப்பு கழகு மலை பத்துப்பாடி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இன்று 30ஆம் திகதி திறக்கப்பட்டுள்ள நிலையில் 07ஆம் திகதி மூடப்படுகின்றது.
இதேநேரம் இவ்வருடம் சுமார் 50000 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் இன்று சுமார் 2000 ஆயிரம் பக்தர்கள் காட்டு வழிப்பாதையின் ஊடாக யாத்திரையினை தொடர்ந்தனர்.
பொலித்தீன் பாவனை மற்றும் சிறிய தண்ணீர்போத்தல்களை கொண்டு செல்வதை தடை செய்துள்ளதாகவும் கருத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர் தொடக்கம் முதியவர்கள் வரை ஆண்;கள் பெண்கள் என அனைவரும் கலாசார ஆடையுடன் மாத்திரம் யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 (எஸ்.அஷ்ரப்கான்)




அக்கரைப்பற்று வலய மட்ட தமிழ் தினப் போட்டியில் ஒலுவில் அல் - மதீனா வித்தியாலயத்தில் இருந்து இசை, நடனம், கும்மி கோலாட்டம், நிகழ்சியில் பங்கு பற்றிய 09 மாணவர்கள் வலய மட்டத்தில் வெற்றிப் பதக்கங்களைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

இன்று 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று அல் - முனவ்வறா கனிஷ்ட வித்தியாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

இதில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் ஆகிய கல்விக் கோட்டங்களிலுள்ள பாடசாலைகள் பங்கு பற்றின.

இதில் ஒலுவில் அல் - மதீனா வித்தியாலயத்தில் இருந்து இசை நடனம், கும்மி கோலாட்டம் நிகழ்சியில் பங்கு பற்றிய 
ஏ.ஆகிபா ஷஹ்லா,
எம்.எஸ்.ஆயிஷா, 
எம்.எஸ்.ஷாரா அதீமா,
ரி.றுஸ்னத் நப்லா,
ஜே.அதிகா,
ஏ.எம்.ரின்சா,
ஏ. Bபி.சைனப் மிஸ்பா, 
எம்.ரி.அக்ஸா,
எப்.ஹப்ஸா மர்யம் 
ஆகிய மாணவர்களே வலய மட்டத்தில் வெற்றிப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சியை  ஆசிரியை ஜே. நூர் சுஹாறா வழங்கினார். இவ்வாசிரியை மற்றும் மாணவர்களை பாடசாலை சமூகம் பாராட்டுகின்றது.


 நூருல் ஹுதா உமர்


வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டி கதிர்காமத்திற்கான குமண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை விசேட பூஜைகளுடன் இன்று (30.06.2024) ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காலை 6.00 மணியளவில்  திறந்து வைக்கப்பட்டது.

பாதையாதிரிகளுக்காக பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னகோன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

 


.(சுகிர்தகுமார் 0777113659 )


 ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரெட்ணம் சுவாகர் எழுதிய 'இரகசியங்களால் ஆன ஒற்றைவரிக்கோடு' எனும் நூல் வெளியீட்டு விழா பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று (26) மாலை இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் விசேட அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் கலந்து கொண்டார்.


பாராட்டி உரையாற்றினர்.

இதன் பின்னராக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்;க அதிபர் சி.ஜெகராஜன் இச்சிறப்பு நிகழ்வில் தான் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தமையிட்டு மகிழ்ச்சி தெரிவித்ததுடன் நிருவாக துறையில் தன்னுடன் பணியாற்றும் ஒருவர் கலை இலக்கிய துறையில் சிறப்புற்று விளங்குகின்றமை பெருமை அளிப்பதாக கூறினார்.


எழுத்தாற்றல் தொடர்பிலும் அவரது இலக்கியதுறை சார்ந்த பயணம் தொடர்பிலும் பாராட்டி பேசினர்.

நிகழ்வில் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் உதவிப்பிரதேச செயலாளர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரச உத்தியோகத்தர்கள் இலக்கிய நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 


( காரைதீவு  வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் புதிய தலைவராக பிரபல சமுகசேவையாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும், முன்னாள் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கலாநிதி கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

 ஆலயத்தின் வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் நேற்றுமுன்தினம்(22) சனிக்கிழமை மீனாட்சிஅம்மன் பழைய சந்நிதானத்தில் பரிபாலன சபையின் ஆலோசகரும் புதிய நிருவாக சபைதெரிவுக்கான தற்காலிக தலைவருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.

அச்சமயம் புதிய நிருவாக சபை முறைப்படி தெரிவு செய்யப்பட்டது.

கடந்த 10வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம் 
ஆலய குரு சிவ ஸ்ரீ சபா.கோவர்த்தன சர்மா அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது 

முன்னதாக இதுவரை இறைபதமடைந்த முன்னாள் தலைவர் கோ.கமலநாதன் வினாயகமூர்த்தி முத்தையா மற்றும் உறுப்பினர்கள் மறைவையிட்டு 2நிமிடநேரம் மௌன ஆத்மாஞ்சலி நடாத்தப்பட்டது.

புதிய பரிபாலன சபை வருமாறு;
தலைவராக மீண்டும் கி.ஜெயசிறில் செயலாளராக மீண்டும் த.சண்முநாதன் பொருளாளராக மீண்டும் அ.சுந்தரராஜன் தெரிவு செய்யப்பட்டனர். மூவருக்கும் முறைப்படி உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

உபதலைவர்களாக பி.சண்முகராசா ஏ.காராளசிங்கம் கே.கணேசன்  உப செயலாளராக எஸ்.சிறிகாந்தன் மற்றும் 
கணக்காளர்களாக கே.உமாரமணன் கே.குழந்தைவடிவேல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆலோசகர்களாக  வி.ரி.சகாதேவராஜா சி.அரியநாயகம் ஆகியோர் சபையால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

நிருவாக சபை உறுப்பினர்களாக அம்பாறை மாவட்டத்தின் சகல தமிழ்ப் பிரதேசங்களிலிருந்தும் 21 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

1999 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யாப்பில் சில ஷரத்து மாற்றங்களுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
 பின்னர் ஆலயபரிபாலனசபையின் நிருவாகசபை உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதையிட்டு பலரும் ஜெயசிறிலுக்கு வாழ்த்துக்களைக்கூறினர்.


 மாளிகைக்காடு செய்தியாளர்


காரைதீவு பிரதேச மாவடிபள்ளியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற தகுதியானவர்கள், சாதனையாளர்கள் கௌரவிப்பும், மாவடிப்பள்ளி பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் தொடக்கவிழாவும் மாவடி பேர்ல்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கழக தலைவரும், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக இஸ்லாம் பாட வளவாளருமான மௌலவி ஏ.ஜே.எம். அஸ்ரப் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலய திறந்தவெளி அரங்கில்  நடைபெற்றது.

அதி திறமை சித்திகளை பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாவடிப்பள்ளி பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் நான்கு அணிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மயோன் குரூப் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளரும், ரிஸ்லி கல்வி மைய தலைவருமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ரிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன், மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலய அதிபர் வீ.எம். ஸம்ஸம், அல்- ஜலால் வித்தியாலய பிரதி அதிபர் ஏ.எல். ரஜாப்தீன், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா உமர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாவடிப்பள்ளி அமைப்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.\
 


 ( வி.ரி. சகாதேவராஜா)

 சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர்  வைத்திய கலாநிதி டாக்டர் தர்மலிங்கம்  பிரபாசங்கருக்கு அங்கு பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் பெரு வரவேற்பளித்தனர்.

தாதியர் சங்கப் பிரதிநிதிகளான எஸ்.சந்திரகுமார் எம்.அன்வர் ஏ.பரீஷ் ஏ றசூல் உள்ளிட்ட தாதிய உத்தியோகத்தர்கள் புதிய வைத்திய அத்தியட்சகர் டாக்டர் பிரபா சங்கருக்கு மாலை சூட்டி வரவேற்றார்கள்.

இந் நிகழ்வு நேற்று  வைத்திய சாலையில் நடைபெற்றது.

அவர்களுடனான சந்திப்பும் இடம்பெற்றது. புதிய வைத்திய அத்தியட்சகர் குறைநிறைகள் தொடர்பாக தாதிய உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்தார்.

சம்மாந்துறை மண் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் இடம் பெற்றது.

ஏலவே வைத்தியசாலை அபிவிருத்திக் குழு அவரை வாழ்த்தி வரவேற்றது.

காரைதீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி டாக்டர் பிரபாசங்கர் முன்னதாக ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய. அதிகாரியாக கடமையாற்றி இருந்தார்.

இருவருட வைத்திய நிருவாக துறை பட்டப்பின் பயிற்சி முடித்து வைத்திய அத்தியட்சகராக தெரிவாகிய முதல் காரைதீவு வைத்தியர்  இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிரபல பல் வைத்திய அதிகாரி டாக்டர் தர்மலிங்கம் உமாசங்கரின் சகோதரராவார்.

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 அக்கரைப்பற்று ஸ்ரீP தம்மரெத்தின சிங்கள மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம ஆலோசனைக்கேற்ப ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஒருங்கிணைப்பில் அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயாராம மகாவிகாரையின் விகாரதிபதி தேவகொட சோரத்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் பங்களிப்போடு அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயாராம மகாவிகாரையில் மூவின மக்களையும் உள்ளடக்கியதாக நேற்று மாலை இடம்பெற்ற பொசன் மிகுந்து மகா பெரகராவில் பல் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் மூன்றாவது முறையாக மிக பிரமாண்டமான முறையில் மூவின மக்களையும் உள்வாங்கி இனநல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இடம்பெற்ற பொசன் மிகுந்து மகா பெரகராவில் புனித சின்னங்கள் அடங்கிய பேழை தாங்கிய இரு யானைகளும் பவனியாக சென்றதுடன் தமிழ் சிங்கள கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாக அமைந்தது.
இதில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து வருகை தந்த நடனங்கலைஞர்கள் மாணவர்கள் என பலரும் பங்குபற்றியதுடன் பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றுக்கொண்டனர்.

ஸ்ரீ விஜயாராம மகாவிகாரையில்  இடம்பெறும் விசேட பூஜையின் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக ; ஆரம்பமான பெரகரா பிரதேச செயலக மகாகணபதியை தரிசித்து சாகாம வீதி ஊடாக அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து கல்முனை வீதி ஊடாக கொமர்சியல் வங்கி சந்தியை அடைந்து பொத்துவில் வீதி ஊடாக திரும்பி விகாரையினை அடைந்தது.
பின்னர் விகாரையின் உள்ளே அங்கு இடம்பெற்ற விசேட பூஜையுடன் நிறைவுற்றது.
இதேநேரம் பெரகராவில் கலந்து கொண்டவர்களுக்கான தாகசாந்தி ஏற்பாடுகளும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் மற்றும் உள்ளிட்டவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
பெரகஹராவிற்கான ஒத்துழைப்பை இப்பிரதேச வாழ் மூவின மக்களும் இணைந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


ஏறாவூர் Dr. ஜலீலா முஸம்மில் அவர்களுக்கு உலக தமிழ் மாநாட்டில் விருது

______


எழுத்தாளர் கவிஞர் நூலாசிரியர் டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்கள் தமிழகத்தில் தூரிகை வரையும் மின்மினிகள் எனும் ஹைக்கூ நூலுக்காக ஹைக்கூ பேரொளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


மதுரை உலகத்தமிழ்ச்சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், இனிய நந்தவனம் மாத இதழ் இணைந்து நடாத்திய "தமிழ் ஹைக்கூ : மூன்றாவது உலக மாநாடு" கடந்த 09/ ஜூன்/2024 அன்று மதுரை மாநகரில் உலகத்தமிழ்ச் சங்க வளாகத்தின் மித்ரா அரங்கில் பிரமாண்ட விழாவா நடைபெற்று முடிந்தது.


 

தமிழகத்திலிருந்தும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு நாடுகளிலிருந்தும் மாநாட்டின் பிரதிநிதிகளாகவும் சிறப்பு அழைப்பாளர்களாகவும் 

200-க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்கள் ஆர்வத்தோடு மாநாட்டில் கலந்துகொண்டனர். இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினராகவும் விருதாளராகவும் வைத்தியர் ஜலீலா முஸம்மில் அவர்கள் கலந்து கொண்டார். 


மாநாட்டுத் தொடக்க விழா,ஹைக்கூ கண்காட்சி, தூண்டில் மாநாட்டுச் சிறப்பு மலர் வெளியீடு, ஹைக்கூ வாசிப்பரங்கங்கள், ஹைக்கூ அனுபவப் பகிர்வரங்கங்கள், ஹைக்கூ நூல்கள் வெளியீடு, ஹைக்கூ கவிதைப்போட்டி பரிசளிப்பு, அயலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், ஹைக்கூ ஓலைச்சுவடிகள் கையளிப்பு, உங்கள் நண்பன் மாத இதழ் விருது வழங்கல், மாநாட்டு நிறைவு விழா என மாநாடு பல்வேறுபட்ட நிகழ்வுகளோடு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட புரவலர் ஹாஷிம் உமர் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர்) அவர்கள் கலந்து கொண்டார்.


வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வில் கவி முதுசமான ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்களோடு விழா ஆலோசகர் ஒருங்கிணைப்பாளர்

கவிஞர் மு.முருகேஷ், இனிய நந்தவனம் மாத இதழ் சந்திரசேகரன்,இனிய நந்தவனம் மாத இதழ் ஆலோசகர் ரொட்டோரியன் மேஜர் டோனர் டாக்டர் கே.சீனிவாசன், கவிஞர் அமரன், கவிஞர் தங்கமூர்த்தி,

பாரதியாரின் கொள்ளுப்பேத்தி உமா பாரதி, எழுத்தாளர் உமர் பாரூக், கவிஞர் பச்சை பாலன், கவிஞர் இமாஜான் போன்ற பல்வேறு இலக்கியப் பிரபலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.