Showing posts with label Culture. Show all posts

 N


நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் பேரவையின் ஏற்பாட்டில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான “சங்கமப் பொங்கல்” விழா 2026.02.10 ஆம் திகதி பீட வளாகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு கலை கலாசார பீடத்தின் அதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்கள் தலைமை வகித்ததுடன், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜூனைடீன் அவர்கள் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இதனுடன் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள், பதில் பதிவாளர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவிப் பதிவாளர், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை மெருகூட்டினர்.

விழாவிற்கு வருகைதந்த அதிதிகள் பாரம்பரிய மேள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைந்தது. விழாவின் ஆரம்ப நிகழ்வாக மும்மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இவ்வரவேற்புரையை மாணவர் பேரவை பிரதிநிதி எஸ்.எம். சஹான் அவர்கள் நிகழ்த்தினார்.

தலைமை உரையாற்றிய பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்கள், சங்கமப் பொங்கல் விழா இலங்கையின் யுத்தத்திற்குப் பிந்திய சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முக்கிய அடையாளமாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜூனைடீன் அவர்கள், பல்லின மாணவர்களை ஒன்றிணைத்து இவ்வாறான விழாவை ஏற்பாடு செய்த மாணவர் பேரவையின் முயற்சியைப் பாராட்டியதுடன், இதன் மூலம் சமூக நல்லிணக்கமும் பல்லின சமூகத்தின் ஒற்றுமையும் வெளிப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டினார்.

சமூகவியல் பேராசிரியருமான றமீஸ் அபூபக்கர் அவர்கள் மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் பாடலொன்றை பாடியிருந்தமை விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

இவ்விழாவை அலங்கரிக்கும் வகையில் மாணவர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேற்றப்பட்டதுடன், சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய இச்சங்கமப் பொங்கல் விழா அனைவருக்கும் நினைவுகூறத்தக்க நிகழ்வாக அமைந்தது.

மாணவர்களை ஒன்றிணைத்து இவ்வாறான விழாவை ஏற்பாடு செய்த மாணவர் பேரவையின் முயற்சியைப் பாராட்டியதுடன், இதன் மூலம் சமூக நல்லிணக்கமும் பல்லின சமூகத்தின் ஒற்றுமையும் வெளிப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டினார்.


மேலும், மொழிகள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என். சுபராஜ் அவர்கள் பொங்கல் திருவிழாவின் பாரம்பரியம் மற்றும் அதன் மகிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார். அதேநேரம், பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் சமூகவியல் பேராசிரியருமான றமீஸ் அபூபக்கர் அவர்கள் மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் பாடலொன்றை பாடியிருந்தமை விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

இவ்விழாவை அலங்கரிக்கும் வகையில் மாணவர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேற்றப்பட்டதுடன், சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய இச்சங்கமப் பொங்கல் விழா அனைவருக்கும் நினைவுகூறத்தக்க நிகழ்வாக அமைந்தது

 


அக்கரைப்பற்று அபூபக்கர் சித்தீக் அறபுக் கல்லூரியின்

புதிய கட்டிடம் திறப்பு மற்றும் 7ஆவது பட்டமளிப்பு விழா


✍️

அஷ்ஷேய்க் ஜுனைட் நஸீர் நளீமி


அக்கரைப்பற்றில் அமைந்துள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான அபூபக்கர் சித்தீக் அறபுக் கல்லூரியின் புதிய கட்டிடம் இன்று காலை வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.

இதனுடன் இணைந்து, இக் கல்லூரியின் 7ஆவது பட்டமளிப்பு விழாவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.


அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள தப்லீக் மர்க்கஸில் இதுவரை இயங்கி வந்த இந்த அறபுக் கல்லூரி, இப்போது அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட புதிய நிரந்தர கட்டிடத்திற்குத் தன்னுடைய செயல்பாடுகளை இடம் மாற்றியுள்ளது.

இந்த இடமாற்றம், இக்கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பு வளர்ச்சிக்கும், கல்வித் தர மேம்பாட்டுக்கும் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.


2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இம் மத்ரஸாவின் அதிபராக

அஷ்ஷெய்க் எம்.எம். கலாமுல்லாஹ் (ரஷாதி) அவர்கள் பணியாற்றி வருவதுடன்,

அவர் அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா கிளையின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.

அவரது திட்டமிடலும் வழிநடத்தலும், இந்தக் கல்லூரியை ஆன்மிகம், ஒழுக்கம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றை இணைக்கும் கல்வி மையமாக உருவாக்கியுள்ளது.


இந்தக் கல்லூரியின் நிர்வாகக் குழுவின் தலைவராக அஷ்ஷெய்க் அஷ்ரஃப் ஷர்க்கி அவர்கள் செயல்பட்டு வருகிறார்.

அவர் தற்போது கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர்,

அஷ்ஷெய்க் றிஸ்வி முஃப்தி அவர்கள் கலந்து கொண்டு,

புதிய கட்டிடத்தை திறந்து வைத்ததுடன்,

7ஆவது பட்டமளிப்பு விழாவின் சிறப்புரையையும் நிகழ்த்தினார்.


மேலும், கொழும்பு மர்க்கஸில் இயங்கும் ரஷாதிய்யா அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பத்வா குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். சல்மான் (தப்லீகி) அவர்கள்

சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை மேலும் சிறப்பித்தார்.


அத்துடன்,

அகில இலங்கை தப்லீக் ஜமாஅத்தின் ஷூறா அங்கத்தவர் யூசுப் ஹாஜியார்,

மர்ஹூம் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத்தின் மூத்த புதல்வர்

றஹ்மதுல்லாஹ் பலாஹி,

முன்னாள் அக்கரைப்பற்று ஊர் உலமா சபைத் தலைவர் எம்.எம். அப்துல் லலத்தீப் பஹ்ஜி, அம்பாறை மாவட்ட உலமா சபைத் தலைவர் ஹாஷிம் சூரி உள்ளிட்ட

பல வெளிநகர், உள்ளூர் மத, கல்வி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


மேலும்,

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்,

உதவி பிரதேச செயலாளர் ராஷித் யஹ்யா (நளீமி),

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகிய அரச அதிகாரிகளும்

நிகழ்வில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.


ஒழுங்கமைப்பு – நிகழ்வின் தனிச்சிறப்பு


இந்த நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாக,

நிகழ்ச்சிகள் அனைத்தும் முன்கூட்டியே மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டு,

அழகிய ஒழுங்கமைப்புடன், நேர்த்தியான நடைமுறையில் நடைபெறுதல் அமைந்தது.


வருகைதந்த அதிதிகளை வரவேற்பதிலிருந்து,

நிகழ்ச்சித் தொடக்கம்,

முக்கிய உரைகள்,

பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கல்,

கௌரவிப்பு நிகழ்வுகள்,

நிகழ்ச்சி நிறைவு வரை,

ஒவ்வொரு கட்டமும் ஒழுங்காகவும், கால வரம்பிற்குள் நடத்தப்பட்டமை,

நிகழ்வின் மேன்மையை மேலும் உயர்த்தியது.


நிகழ்விடத்தின் அலங்காரம்,

அமர்வு ஏற்பாடுகள்,

ஒலிபெருக்கி வசதிகள்,

மேடை ஒழுங்கு,

மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் பட்டமளிப்பு நடைமுறை ஆகிய அனைத்தும்

ஒரு முதிர்ந்த நிர்வாகத் திறனையும், ஒற்றுமையான குழு பணியையும் வெளிப்படுத்தின.


குறிப்பாக,

மாணவர்களும் தன்னார்வலர்களும் ஒழுக்கத்துடனும் மரியாதையுடனும் செயல்பட்ட விதம்,

இக்கல்லூரி மாணவர்களின் ஒழுக்கப் பயிற்சியின் வெளிப்பாடாக அமைந்தது.


இந்தக் கல்லூரியில்

ஷரீஆ கல்வியுடன் இணைந்து,

NVQ Level 4 தொழிற்கல்வி பாடநெறிகள்,

அரச கரும மொழித் திணைக்களத்தின் மூலம் நடத்தப்பட்ட சிங்கள மொழிப் பாடநெறிகள்

என்பவற்றில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு

சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


அத்துடன்,

இங்கிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களும்

மேடையில் பாராட்டப்பட்டனர்.


நிகழ்வின் போது,

அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவர் அப்துல் லத்தீஃப் ஹஸ்ரத்,

ஷெய்குல் பலாஹ்வின் புதல்வர் றஹ்மதுல்லாஹ் ஹஸ்ரத்,

மற்றும் ஹாஷிம் சூரி ஆகியோர்

இஸ்லாமிய கல்வி மற்றும் சமூக சேவைகளில் ஆற்றிய பணிகளை மதித்து

பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.


மேலும்,

புதிய கட்டிடத்தை நிர்மாணிக்க முன்னின்று உழைத்த

மஜீத் ஹாஜியார் அவர்களும்

பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன், கட்டிடப் பணிகளில்

எம்.எம். தாஹிர் TA அவர்களின் பங்களிப்பும்

நன்றியுடன் நினைவுகூரப்பட்டது.


இந்த கல்வி நிறுவனம் உருவாகக் காரணமான

நிலத்தை வக்ஃபு செய்த மர்ஹூம் உதுமாலெப்பை அவர்களையும்,

இதற்காக துணை நின்ற

முஸ்தஃபா மெனேஜர் அவர்களையும்

நிகழ்வில் சிறப்பாக நினைவுகூர்ந்தனர்.


கானடிப் பள்ளியாக ஆரம்பித்து,

ஹிஃப்ழ் மத்ரஸா,

மர்க்கஸ்,

இன்று நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் என்ற

வளர்ச்சி வரலாறும் நிகழ்வில் நினைவுபடுத்தப்பட்டது.


இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில்

நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.


இதனிடையே,

இன்றைய பட்டமளிப்பு விழாவில்

பல மாணவர்கள் ‘சித்தீதி’ பட்டம் பெற்று

கல்விப் பயணத்தின் அடுத்த கட்டத்திற்குத் துவங்கினர்.


இந்த நிகழ்வு,

அக்கரைப்பற்றில் இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்கான

முக்கிய மைல்கல்லாக அமைந்ததுடன்,

ஒழுங்கமைப்பு, திட்டமிடல் மற்றும் கல்வித் தரம் என்பவற்றின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்தது.

 


( காரைதீவு சகா)


உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் ஆகியோரது திருவுருவச்சிலைகள் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்கார் – AusKar) ஏற்பாட்டில் பூண்டுலோயாவில் இன்று 07 ஆம் திகதி சனிக்கிழமை 
பூண்டுலோயாவில் இருபெ

ஒஸ்காரின் மங்கள இசை முழங்க,
மலையக மண்ணில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் மலர்ந்தது.


இச் சிலைகள் மத்திய மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவிலே பூண்டுலோயா விவேகானந்த மகாவித்தியாலயத்தில் இன்று அதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் மற்றும் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் ஆகியோர் சிலைகளை திறந்து வைத்தனர்.

ஒஸ்கார் சார்பில் தாயக இணைப்பாளர் ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா நட்சத்திர அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் பல அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
ஒஸ்காரின் துறவியர் படிவமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலாசிரியர் வி.ரி.சகாதேவராஜா முதற் பிரதிகளை சுவாமிகளுக்கு வழங்கி வைத்தார்.


ஒஸ்காரின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் நிதி அனுசரணையில் மக்களுக்கும் ஆசிரியைகளுக்கும் புது வஸ்திரங்கள் வழங்கப்பட்டன.
ஒஸ்காரின் ஏற்பாட்டில் அன்னதானம் இடம் பெற்றது.

 


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி வைக்கப்பட்டது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் மாவட்ட செயலகமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கு கலைஞர் சுவதம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று (03) காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு எஸ். சுதர்சனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலக்கிய சேவைக்காக எழுத்தாளர் நூருல் ஹுதா உமர், இசை கலைஞர்களான சுதாகரன் லோவிகரன், லோககேசரம் லோஜினி ஆகிய மூன்று கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சுவதம் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.ரிம்ஸான், காரைதீவு பிரதேச செயலக கணக்காளர் திருமதி றிம்ஸியா, அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் கௌரவ நீதிபதி, 'ஜெயராம் ரொக்சி அவர்கள் முன்னிலையில், குறித்த வழக்கு  விசாரணைகள் இடம்பெற்றிருந்தது. அவரது தீர்பினை, கல்முனை மேல் நீதிமன்ற தற்போதைய நீதிபதி, A. ஜூட்சன் அவர்கள் வாசித்தார்.

14 வயது சிறுமி துஷ்பிரயோகம். கல்முனை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

#Kalmunai #courtorder #NewsFirstTamil #srilanka #lka

 


காரைதீவில் சங்காபிஷேகம் 


காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த சங்காபிஷேகம் பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் பங்கேற்புடன் நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றபோது...

படங்கள்: வி.ரி. சகாதேவராஜா 

 ( வி.ரி.சகாதேவராஜா)


புத்தசாசன , சமய கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து நடாத்திய  தேசிய இலக்கிய போட்டியில் "பாடல் நயத்தல்" நிகழ்வில் தேசிய ரீதியில் 3 ம் இடத்தை காரைதீவு  இகிச பெண்கள் பாடசாலை மாணவி அனுர்ஜன் ரிதீஷ்கா பெற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கான சான்றிதழ், பதக்கம் மற்றும் பணப்பரிசில் தேசிய இலக்கிய விழாவில் நேற்றுமுன்தினம் (24) வழங்கி வைக்கப்பட்டது.

 


நூருல் ஹுதா உமர்


கேரள மாநிலம், கோழிக்கோட்டில் அமைக்கப்படவுள்ள தேசிய தலைமைத்துவ நிறுவனம் (National Institute of Leadership – NIL) தொடர்பான திட்டத்தின் தொடக்க விழா, இன்று (24) தமரசேரி நகரில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

விழாவின் போது, ஜமியா மதீனத்துன்னூர் கல்வி நிறுவனத்தின் தலைவர் முப்தி முஹம்மத் அப்துல் ஹக்கீம் அஷ்ஹரி, கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

ஜமியா மதீனத்துன்னூர் கல்வி நிறுவனத்தின் முக்கிய அமைப்பாக தேசிய தலைமைத்துவ நிறுவனம் நிறுவப்படவுள்ளதுடன், ஆன்மீகம், கல்வி மற்றும் சமூகத் தலைமைத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்நிறுவனம் செயல்படவுள்ளது.

2001ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஜமியா மதீனத்துன்னூர் கல்வி நிறுவனம், இதுவரை பல்வேறு துறைகளில் சிறந்த தலைவர்களை உருவாக்கியுள்ளதுடன், அந்த நீண்ட பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகவே தேசிய தலைமைத்துவ நிறுவனம் கருதப்படுகிறது.

இந்நிகழ்வில், எகிப்து நாட்டை சேர்ந்த மார்க்க அறிஞர் ஷெய்க் அல்பத்ஹி மௌலானா, கேரளாவை சேர்ந்த கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆன்மிக விழுமியங்களோடும், அறிவார்ந்த சிந்தனையுடனும் கூடிய புதிய தலைமுறை தலைவர்களை உருவாக்குவதில் தேசிய தலைமைத்துவ நிறுவனம் முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கையும் இந்நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்டது.

– நூருல் ஹுதா உமர்


பன்னூலாசிரியர், கவிஞர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி அலறி (ஏ.எல்.எம். றிபாஸ்) அவர்களால் எழுதப்பட்ட 08வது நூலான “தந்தனக்கிளி” கவிதை நூல் வெளியீட்டு விழா, புதுப்புனைவு வட்டத்தின் ஏற்பாட்டில் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் கடந்த சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.எம். ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

நூலின் அறிமுக உரையை ஆசிரியை மற்றும் கவிஞர் றியாசா எம். சவாஹிர் நிகழ்த்தியதுடன், நூலாய்வுரைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கைப்பரப்பு செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கவிஞர் கல்முனை ஜவாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளருமான எழுத்தாளர் மன்சூர் ஏ. காதிர், பேஜஸ் புத்தக நிலையத்தின் நிறுவுனரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இலக்கிய விமர்சகர் சிராஜ் மஸூர் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி, சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர்,
கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானியும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள், கல்விமான்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். நிகழ்வை ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் தொகுத்து வழங்கியதுடன் அண்மையில் தேசிய விருதை பெற்றமைக்காக அதிதிகளினால் பொன்னாடை போத்தப்பட்டு பணப்பரிசு வழங்கி கௌரவித்தனர்.

விருதை பெற்றமைக்காக அதிதிகளினால் பொன்னாடை போத்தப்பட்டு பணப்பரிசு வழங்கி கௌரவித்தனர்.


கவிதை இலக்கியத்தில் புதிய அனுபவங்களையும் ஆழமான சமூகப் பார்வையையும் முன்வைக்கும் “தந்தனக்கிளி” நூல், இலக்கிய வாசகர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறும் என நிகழ்வில் கலந்துகொண்டோர் கருத்து தெரிவித்தனர்.

 


( வேலோடுமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)


நாட்டின் நன்மை கருதி, இலங்கையில் சித்தர்களின் ஆதி இருப்பிடம் எனக் கூறப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தில்,  இந்த உலகை ஆளுகின்ற 210 சித்தர்களை பூஜிக்க நேற்று செவ்வாய்க்கிழமை (20/01/2026) அன்று நள்ளிரவில் சத்ரு சம்ஹார வேள்வி யாகம் ஆரம்பமாகி இன்று அதிகாலை வரை இடம்பெற்றது. 

சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான தலைவர் சிவசங்கர் ஜீ தலைமையில், நமசிவாய மகேஸ்வரன் சுவாமிகளின் முன்னிலையில் இன்று (21) புதன்கிழமை அதிகாலை மூன்று மணி வரை யாகம் தியானம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வில்  உலகப்புகழ் பெற்ற சாதனைத் தமிழன்  ஈழ நல்லூர் நாதஸ்வரச் சக்கரவர்த்தி பாலமுருகன் குழுவினரும்  சித்தர்களின் குரல் அன்பர்களுடன் கலந்து கொண்டார்கள்.

நேற்று மாலை மூலிகை குளியலுடன் ஆரம்பமாகி, வனபோஜனம், 18 சித்தர்கள் சந்நிதியில் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, வேல் பூஜை மற்றும் இரவு முழுவதும் "தபஸ்" என்னும் உயர்ந்த ஆழ்நிலை தியானங்கள் இடம் பெற்றன.

வேலோடுமலை தேவஸ்தான ஆதீனகர்த்தா தியாகராஜ சுவாமிகளின் அழைப்பில்
 சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், துணைத்தலைவர் மனோகரன், சித்தர்களின் குரல் ஆஸ்தான ஊடகவியலாளர் விபுலமாமணி சகாதேவராஜா ஆகியோரின் ஒழுங்கமைப்பில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சகிதம் மிக மிகச்சிறப்பாக இந் நிகழ்வு நடைபெற்றது.


 (வி.ரி.சகாதேவராஜா)

பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கழுகொல்ல கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு கனடா - கல்முனை பிராந்திய இணையத்தினர் பொங்கல் பரிசை நேற்று வழங்கினர் .

கல்முனை கனடா பிராந்திய இணைய நிறுவனத்தினர் அந்த மக்களுக்கு சாரி மற்றும் பொங்கல் பானை அகப்பை உள்ளிட்ட உள்ளீடுகளை 
தாயக இணைப்பாளர் என். சௌவியதாசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா, எஸ். சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கழுகொல்ல சமூக செயற்பாட்டாளர் நந்தினி தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் 21 பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப தாய்மாருக்கு இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டது.



வி.சுகிர்தகுமார்        

 கூடிப்பொங்கல் விழா அம்பாரை மாவட்டத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான இணைவாக ஆலையடிவேம்பு ஸ்ரீ சிந்தமாணி விநாயகர் ஆலயத்தில் இவ்வருடம் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் கூடிப்பொங்கல் வைத்து கொண்டாடுவோம் வாரீர் என ஆலய நிருவாக சபையினர் அழைத்ததற்கு அமைய ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்களுக்கு பொங்கல் பானைகளும் பொங்கலுக்கு தேவையான பொருட்களும் பிரதமகுரு சிவஸ்ரீ விநாயகமூர்த்தி குருக்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் பின்னராக பெண்கள் பொங்கலிடும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பூஜை வழிபாடுகளை ஆலய குரு சிவஸ்ரீ கிதுர்ச சர்மா நடாத்தி வைத்தார்.
தொடர்ந்து அடியவர்களுக்கு பிரசாதமும் கைவிசேடமும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேநேரம் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய பகவானுக்கான விசேட பூஜைகள் இடம்பெற்றன.
முன்னேற்பாடுகளில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

.


 உலகில் தமிழர் சமூகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைத் திருவிழா அல்லது தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


 தை மாதத்தின் முதல் நாளில் ( ஜனவரி 14 அல்லது 15) நடைபெறும் இந்த பண்டிகை, தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் சமூகத்திலும் மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படும் ஒன்று. 
இது இயற்கையின் பெருமையை, விவசாயத்தின் மகத்துவத்தை மற்றும் குடும்ப, சமூக உறவுகளின் அமைதியை உணர்த்தும் ஒரு பண்பாட்டு விழா ஆகும்.

விவசாய  நன்மை மற்றும் நன்றி என்பவற்றை மக்களிடம் கொண்டு வரும் ஒரு சிறப்பான விழாவாகும்.
பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம்
 என்பது சூரிய தேவனை மரியாதை செய்யும் திருவிழாவாகும்.இயற்கைக்கு நன்றி சொல்லும் நாள் இது.

தை பொங்கலுக்கான சிறந்த நேரம்:*

2026 ஜனவரி 15 வியாழக்கிழமை தைப்பொங்கல் திருநாள் காலை 8 முதல் 9 மணி வரை சூரிய ஓரை என்பதால், இந்த நேரத்தில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மகத்தான பலனை தரும். 9 முதல் 10 மணி வரை சுக்கிர ஓரை, இந்த நேரத்தில் பூஜை செய்தால் குடும்ப சாந்தி, செல்வ வளம் அதிகரிக்கும். இந்த இரண்டு நேரங்களையும் நேரங்களையும் தவறினால், காலை 10.30 முதல் 11.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். பக்தியுடன் செய்த வழிபாடு வருடம் முழுவதும் நன்மையும், சந்தோஷமும் தரும் என்று சித்தர்கள் குரல் தெரிவிக்கிறது.
     


என்ற ஆன்மீகத்தை வளர்க்கும் முக்கிய காரணியாகும்.



தைப் பொங்கல் என்பது மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பான சின்னமாகும். இது நமக்கு இயற்கைக்கு நன்றி சொல்லும், குடும்பங்களோடு சந்தோஷத்தை பகிரும், சமூகத்தின் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு அற்புத வாய்ப்பு அளிக்கிறது.


பாரம்பரியத்தின் சிறப்பான சின்னமாகும். இது நமக்கு இயற்கைக்கு நன்றி சொல்லும், குடும்பங்களோடு சந்தோஷத்தை பகிரும், சமூகத்தின் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு அற்புத வாய்ப்பு அளிக்கிறது.


 இந்த ஆண்டு தைத் திருவிழா ஒவ்வொருவருக்கும் சந்தோஷம், வளம் மற்றும் நற்பணி நிறைந்ததாக அமைய வாழ்த்துகள்.

தைப்பொங்கல்  பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அவையாவன:
1️⃣ போகி
– பழையதை அகற்றி, புதியதை வரவேற்கும் நாள்
– வீடுகளைச் சுத்தம் செய்து, போகி தீ மூட்டல்
2️⃣ தைப்பொங்கல் (சூரிய பொங்கல்)
– சூரிய பகவானுக்கு நன்றி கூறும் முக்கிய நாள்
– புதுப் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு
3️⃣ மாட்டுப் பொங்கல்
– விவசாயத்திற்கு உதவும் மாடுகளுக்கு மரியாதை
– மாடுகளை அலங்கரித்து பூஜை செய்வது
4️⃣ காணும் பொங்கல்
– உறவினர்கள், நண்பர்கள் சந்திக்கும் நாள்
– வெளியே சென்று மகிழ்ச்சி பகிரும் நாள்.

தைப்பொங்கல் விழா குடும்பத்தையும், சமூகத்தையும் ஒன்றிணைக்கும் சக்தியுடையது. வீட்டின் சமையலறை, நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் இணைத்து அனைவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. இதனால் தந்தை, தாய், பிள்ளைகள் மற்றும் பெரியோர் அனைவரும் ஒரு குடும்பமாக சேர்ந்து திருவிழாவை கொண்டாடுவார்கள்.
இத்தகைய திருவிழா நம் பாரம்பரிய பண்பாடு, விவசாய வாழ்வு, இயற்கையுடன் இணைந்து வாழ்வது என்பதில் சிறந்த படிப்பினையை வழங்குகிறது. தைப்பொங்கல் நமது முன்னோர்களின் வாழ்வின் மகத்தையும், தமிழ் பண்பாட்டின் அழகையும், சமூக உறவுகளின் வலிமையையும் சுட்டிக்காட்டுகிறது.
முடிவாக, தைப்பொங்கல் மக்களுக்கு நல்வாழ்க்கை, உழைப்பின் மதிப்பு மற்றும் சமூக ஒற்றுமையை உணர்த்தும் ஒரு ஆன்மிகப் பெருமை கொண்ட திருவிழாவாகும். இது வாழ்வின் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளும், நமது பாரம்பரியத்தின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு பொதுப் பண்டிகையாகும். 
அத்தகைய பண்டிகையை உரிய சம்பிரதாய முறைப்படி கொண்டாடி மகிழ்வோம்.

வித்தகர் விபுலமாமணி விரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்


 வாசகர்களுக்கு இந்த பொங்கல் புது தொடக்கம், புது நம்பிக்கை,பெரும் மகிழ்ச்சி கொண்டு வரட்டும்!

உங்கள் இல்லம் செழிப்பாலும் சந்தோஷத்தாலும் நிரம்ப, உழைப்பிற்கு இனிய பலன் கிடைக்க, புதிய நம்பிக்கைகள் மலர இந்த பொங்கல் திருநாள் துணை நிற்கட்டும். 

இனிய பொங்கல் வாழ்த்துகள்

 


நூருல் ஹுதா உமர் 


கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியிலிருந்து 7வருட ஆலிம் கற்கையை நிறைவு செய்து வெளியேறிய நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நான்கு உலமாக்கள் நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து அறிமுகம் செய்து கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் நஜ்முதீன் நபீஸ், மர்ஹூம் றபாய்தீன் சப்னாஸ், முஹம்மத் நவாஸ் அஷ்பாக் அகமட் , ஹாரூன் முகம்மட் சப்ரி ஆகியோர் அன்பளிப்புகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

நற்பிட்டிமுனை ஜாமிஉல் ஹிக்மா சார் பள்ளிவாசல்கள் கூட்டமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ. எல்.நாஸிர் கனி (ஹாமி) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசல், ஆஷுர் பஸார் பள்ளிவாசல் மற்றும் றாஜிஹி பள்ளிவாசல் ஆகியவற்றின் நிருவாகிகள், இமாம்கள், புதிய உலமாக்களின் உறவினர்கள் அடங்கலாக பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.




திருவாதிரை என்பது ஆன்மிகமும் பண்பாடும் இணையும் திருநாள்.
தமிழ் மக்களின் ஆன்மிக வாழ்க்கையிலும் பண்பாட்டு மரபிலும் முக்கிய இடம் பெற்ற திருநாள்களில் திருவாதிரையும் ஒன்றாகும். 

 திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் சிறப்பு நிகழ்வு. 

சிவபெருமானை மையமாகக் கொண்டு கொண்டாடப்படும் இந்த விழா, சைவ சமயத்தின் உயர்ந்த தத்துவங்களை வெளிப்படுத்துகிறது.
திருவாதிரை நாளில் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியதாக நம்பப்படுகிறது. இந்த நடனம் உலகின் படைப்பு, நிலை, அழிவு, மறைவு, அருள் ஆகிய ஐந்து செயல்களை (பஞ்சகிருத்தியங்கள்) குறிக்கிறது. சிதம்பர நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவம் உலகப் புகழ் பெற்றதாகும். அன்றைய தினம் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், நடன ஆராதனைகள் ஆகியவை விமரிசையாக நடைபெறுகின்றன.

 பெறலாம் என்பது நம்பிக்கை.


திருவாதிரை என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. இது நம் முன்னோர்களின் நம்பிக்கைகள், கலாச்சாரம் மற்றும் ஆன்மிக வாழ்வு ஆகியவற்றை இணைக்கும் ஒரு பாலமாகும். இந்த விழா நம்மை ஒற்றுமையாக இணைத்து, நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவுகிறது. திருவாதிரை கொண்டாட்டம், அன்பு, பக்தி, ஒற்றுமை மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கும் ஒரு சிறப்பு நிகழ்வாகும்.

மார்கழி மாதத்தில் வரும் இந்தத் திருநாள், நட்சத்திரங்களில் ஆறுதிரை (ஆருத்ரா) நட்சத்திரத்துடன் தொடர்புடையதாகும். 
திருவாதிரை என்பது ஆன்மிக விழாவாக மட்டுமல்ல, குடும்பம் மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்தும் நாளாகவும் விளங்குகிறது. குறிப்பாக பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து, சிவபெருமானை வழிபட்டு, குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இல்லங்களில் “களி” மற்றும் “ஏழு கறி கூட்டு” போன்ற பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்படுவது திருவாதிரையின் தனிச்சிறப்பாகும். இவை இயற்கையுடனான ஒற்றுமையையும், சமநிலையான உணவுமுறையையும் எடுத்துக்காட்டுகின்றன.
இந்தத் திருநாள் தமிழர் பண்பாட்டின் ஆழத்தையும், ஆன்மிக சிந்தனையின் உயரத்தையும் வெளிப்படுத்துகிறது. திருவாதிரை வழிபாடு மனிதனுக்குள் உள்ள அகந்தையை நீக்கி, சுயஞானத்தை வளர்க்கும் என சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவபெருமானின் தாண்டவம், மனித வாழ்க்கையில் மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதையும், அந்த மாற்றங்களை அருளோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில், திருவாதிரை போன்ற விழாக்கள் நம்மை நமது பண்பாட்டு வேர்களுடன் இணைக்கின்றன. ஆன்மிக அமைதி, குடும்ப ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்கும் இந்தத் திருநாள், தலைமுறைகள் கடந்தும் தமிழர் வாழ்வில் ஒளி வீசும் விழாவாகத் திகழ்கிறது.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்

 காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் தினமும் ஆலயம் தோறும் திருவாசக முற்றோதல் ஓதுவார் ந.லோகராஜு தலைமையில் எட்டு மணிநேரம் நடைபெற்று வருகின்றது. அதேபோதான காட்சிகள்.



படங்கள்: வி.ரி.சகாதேவராஜா

 (வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவுஇந்து சமயவிருத்திச்சங்கம் வருடாவருடம் நடாத்திவரும்  திருப்பள்ளிஎழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது கடந்த 25 ஆம் திகதி முதல் தினமும் அதிகாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


தினமும் அதிகாலை 4 மணியளவில் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி ஆலயமொன்றில் திருவெம்பாவை பாடுதலுடன் நிறைவடையும். தொடர்ந்து திருவாசக முற்றோதலும் இடம்பெறும்.

எதிர்வரும் ஜனவரி  03 ஆம் திகதி சனிக்கிழமை திருவாதிரை தீர்த்தமத்துடன் திருவெம்பாவை நிறைவடையும் என சங்கச் செயலாளர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.