Showing posts with label Culture. Show all posts


 மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழா

(வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்  மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின்  "மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (16)சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபையின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தொகுத்து எழுதிய இந் நூல் வெளியீட்டு விழா
ஆலய சந்நிதானத்தில் ஆலய தலைவர் கலாநிதி கி. ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

ஆன்மீக அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பித்தார்.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ. கோபாலரெத்தினம்  கலந்து சிறப்பித்தார்.

ஆசியுரையை  ஆலய பிரதம குரு ஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் வழங்கினார்.  வெளியிட்டுரையை நூலாசிரியர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.

 முதல் பிரதியை ஆலய தலைவர் கி.ஜெயசிறில் சுவாமி நீலமாதவானந்தா ஜீக்கு  வழங்கி வைத்தார். ஏனைய பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன  .


வி.சுகிர்தகுமார் 0777113659 


 கிழக்கு மாகாணம் அம்பாரை  மாவட்டத்தில்  பிரசித்தி பெற்ற பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றான அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான வருடாந்த  மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம் இன்று (15) நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற கிரியைகளை தொடர்ந்து கொடிச்சீலை எடுத்து வருவதற்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிச்சீலையும் எடுத்துவரப்பட்டது.

பின்னர் நடைபெற்ற யாக பூஜையுடன் பிரதான கும்ப பிரதட்சனையுடன் கொடிச்சீலையும் உள்வீதி வலமாக எடுத்து வரப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்திற்கான அபிசேக பூஜைகள் நடைபெற்றதுடன்; பக்தர்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றமும் இடம்பெற்றது.

பின்னராக மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரரை அலங்கரிக்கப்பட்ட தேரில் இருத்தி அடியார்களினால் வெளி;வீதிவலமாக சுமந்து சென்றதுடன் வசந்த மண்டபத்தில் அமர்த்தப்பட்டு விசேட பூஜைகளும் இடம்பெற்றது.

இன்று (15) கொடியேற்றமுடன் ஆரம்பமான பிரம்மோற்சவப் பெருவிழாவின் சத 108 சங்காபிசேகம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் 24ஆம் திகதி இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் மாலை கொடியிறக்கமும் 25ஆம் திகதி இடம்பெறும் பூங்காவனத்திருவிழாவுடனும் 26ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடனும்   இவ்வருட விழா இனிது நிறைவுறவுள்ளது.

ஆலய கௌரவ தலைவர் சு.தில்லைநாயகம் தலைமையில் நடைபெறும் மகோற்சவப் பெருவிழாவின் கிரியைகள் யாவும் வித்யாசாகரர் சிவாச்சாரிய கலாபவனமணி வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ புண்ய கிருஸ்ணகுமார சிவாச்சாரியார்; தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

இதேநேரம் வருகைதந்த அடியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் பணி அடியவர் ஒருவரின் நிதி ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டதுடன் அன்னதானப் பணியை ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.  


 


புனித ரமலானை முன்னிட்டு கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய 2003ம் வருடம் G.C.E O/L பரீட்சைக்கு தோற்றிய ரியல் சாம்பியன் 2003 அமைப்பினரால் வருடாந்தம் வழங்கப்படுகின்ற வறிய மக்களுக்கான உலருணவு பொதிகள் சுமார் 100 குடும்பங்களுக்கு இன்று வழங்கிவைக்கப்பட்டது. (படம் - நூருல் ஹுதா உமர்)

 


நோன்பிற்கு தேவை உணவா? பயிற்சியா?


Dr PM Arshath Ahamed MBBS MD PAED


உங்களிடம் ஒரு கார் இருக்கிறது. அது பெற்றோலில் ஓடும். தேங்காய் நெய்யிலும் ஓடும். பெற்றோல் விலை குறைவு. கிடைப்பதும் இலகு. அப்படியென்றால் பெற்றோலில் தான் அந்த கார் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். பெற்றோல் இல்லாத போது , விலை அதிகரிக்கின்ற போது மாத்திரமே, எப்போதாவது ஒரு நாள் அந்தக் கார் தேங்காய் நெய்யில் ஓடும். 


சார் ஆட்சிக்கு வந்து, ஓரிரு வருடங்களுக்கே பெற்றோலுக்கு கடும் தட்டுப்பாடு. போலின். அப்போது தான் உங்கள் கார் தேங்காய் நெய்யில் ஓடுவது ஞாபகம் வருகிறது. சரி தேங்காய் நெய்யை ஊற்றி நமது காரை ஓடலாம், அப்பாடா நமக்கு கவலை இல்லை என்று தேங்காய் நெய்யை வாங்க கடைக்கு போனால் கடைகளில் தேங்காய் நெய் என்று ஒரு சாமானை இல்லை. உருக்கெண்ணெய் இருக்கிறது, நல்லெண்ணெய் இருக்கிறது , தேங்காய் எண்ணெய் இருக்கிறது, பசு நெய் இருக்கிறது ஆனா எங்க தேடியும் தேங்காய் நெய் இல்லை. இனி எப்படி ஜாமீன் வாங்குவது. என்ன இழவுடா இது என்று உங்கள் பாசுனைக்கு கோல் எடுத்த போதுதான் விஷயம் புரியவருகிறது.


பெற்றோலில் ஓடுகின்ற காலத்தில் அடிக்கடி காரை ரிசர்வ் ற்கு கொண்டு வர வேண்டும். ஒரு கிழமைக்கு ஓரிரு தரமாவது இப்படி செய்ய வேண்டும். ஒரு போதும் புள் டாங் அடித்திருக்க கூடாது. அப்படி செய்தால் தான் தேங்காய் நெய் காரிலே தானாக உருவாகும். அதை தான் பின்னர் பெற்றோல் இல்லாத காலங்களில் பாவிக்கலாம். அப்படி உருவாகும் தேங்காய் நெய்யை அடிக்கடி பாவித்தால் கார் இலகுவில் பழுதடையாது. நல்ல பிக் அப் கிடைக்கும். அடிக்கடி பார்ட்ஸ் மாற்ற வேண்டிய தேவையும் வராது. மெயின்டனன்ஸ் செலவும் குறைவு. தேங்காய் நெய்யில் காரை ஓட்ட பழக்கினால், அடிக்கடி பெற்றோல் அடிக்காமலே, நீண்ட தூரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் காரை ஓட்டி செல்லலாம் என்று ஏகப்பட்ட நன்மைகள் அப்போது தான் தெரிய வருகிறது. அடடா இது தெரியாமல் இவ்வளவு நாளும் புள் டாங் அடித்து காரை ஓட்டி இருக்கிறேனே என்று   இப்போது கைசேதப்பட்டு பிரயோசனம் இல்லை. கார் வாங்கிய போது மெனுவலை வாசித்திருக்க வேண்டும். 


இது தான் நம் நிலை. கடைசியில் கைசேதம். இப்போது அந்த காரை - உங்கள் உடம்புக்கும் (Body), பெற்றோலை -குளுக்கோஸுக்கும்( Glucose) , தேங்காய் நெய்யை -கீட்டோனுக்கும் (Ketone) மாற்றி விட்டால் சரி. நாமும் இவ்வளவு காலமும் இது தெரியாமல் அடிக்கடி பெற்றோல் அடித்திருக்கிறோம் என்பது தெரிய வரும்.


குளுகோஸ் உற்பத்திக்கு கார்போஹைட்ரேட் தேவை. கீட்டோன் உற்பத்திக்கு கொழுப்பு தேவை. கார்போஹைட்ரேட் ‌தேவை என்றால் மாப்பொருள் உணவுகள் உண்ண வேண்டும் . ஆனால் கீட்டோன் தேவை என்றால் எதையும் உண்ண வேண்டியதில்லை. அவ்வளவு கொழுப்பும் ஏற்கனவே தின்று பெருத்த நமது உடம்பிலே இருக்கிறது. வேறு எங்கும் போக வேண்டியதில்லை. இது தான் அடிப்படை.


கைத்தொழில் புரட்சி ஏற்படுதற்கு முதல் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பருவமும் பஞ்சம் வரும். பட்டினி வரும். மனிதர்கள் உண்ண உணவின்றி கஷ்டப்படுவார்கள். அப்போது அவர்கள் தப்பி பிழைத்து உயிர் வாழ காரணமாக அமைந்தது தான் இந்த கீட்டோன்கள். அதே கீட்டோன்கள் நமது உடலிலும் உண்டு ஆனால் பாவிக்கப்படாமலே. அவைகளை பாவிக்க உகந்த காலம் தான் எதிர்வரும் ரமழான்.

 

எதிர் வருகின்ற புனித ரமழான் உங்கள் உடம்பை கீட்டோனில் இயக்கவைக்க வருகின்ற ஒரு பயிற்சி பட்டறை. இவ்வளவு காலமும் பெற்றோலில் ( குளுக்கோஸில்) ஓடிய உடம்பை இனி ஒரு மாத காலம் கீட்டோனில் ஓட வைக்க வருகின்ற ஒரு புனித காலம். கீட்டோனில் ஓடுகின்ற உடம்பு அடிக்கடி பழுதடையாது. தானாகவே புள் சேர்விஸ் பண்ணிக்கொள்ளும். மெயின்டனன்ஸ் பிரீ. இவ்வளவு நன்மைகளும் வந்து சேர நீங்கள் உங்கள் வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். 


இந்த கீட்டோன் வேண்டும் என்றால் பசித்திருக்க வேண்டும். புள் டேங் கூடவே கூடாது. எப்போதும் அரை வயிறு மட்டும் சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக சுப்பர் பெட்ரோல் கூடவே கூடாது. சீனி , இனிப்பு பண்டங்கள் , பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இப்படி குறைவாக உணவுப் பதார்த்தங்களை உட் கொண்டால் மாத்திரமே, உடம்பில் ஸ்டோரில் உள்ள கீட்டோனின் பலனை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம். இதை தான் இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங்( intermittent fasting) என்று சொல்வார்கள்.


இந்த நோன்பு மனித வரலாறு தொடங்கிய காலம் முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்து வருகிறது. வடிவங்கள் மாறினாலும் அதன் பயனும் நோக்கமும் ஒன்றாகவே இருந்து வருகிறது. உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்படுகிறது என்று அல்குர்ஆனும் இதையே குறிப்பிடுகிறது.


நோன்பின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் பற்பல. ஆனால் அவைகளை அடைத்து கொள்ள நாம் பசித்திருக்க வேண்டும். தாகித்திருக்க வேண்டும். அதுபோல அதன் ஆண்மீக பயன்களும் பற்பல. அதை அடைந்து கொள்வதற்கு நாம் முத்தகீன்களாக மாற வேண்டும். மொத்தமாக இந்த பொருள் தேடல் உலகிலிருந்து ( Consumerism) கொஞ்சம் விடுதலை பெற வேண்டும். 


நோன்பின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் என்று பெரும் பட்டியலே இருக்கிறது. ஆனால் அதை பெற்றுக் கொள்ள அதற்கு உரிய முறையில் நாம் நோன்பு நோற்க வேண்டும். அப்போது தான் கீட்டோன் கிடைக்கும். இல்லையென்றால் வழமை போல் குளுக்கோஸ் தான். பெற்றோல் போட வேண்டும்.


ஒரு உதாரணத்திற்கு பின்வரும் அட்டவணை போல உங்கள் நோன்பு நாட்கள் அமைந்தால் உங்கள் உடல் கீட்டோனில் இயங்க தொடங்கும். க்ளுகோஸ் தேவை குறைவடையும். தேவையில்லாத கொழுப்பு எரிக்கப்படும். 


சஹர்- கொஞ்சம் சோறு( மூன்று அகப்பை) ஒரு துண்டு இறைச்சி/ மீன்/ ஒரு முட்டையுடன் ) கொஞ்சம் மரக்கறி. கூடவே ஒரு சில ஈச்சம் பழங்கள் அல்லது ஒரு வாழைப்பழம். ஒரு கிளாஸ் பால்/ தயிர் அன்ட் அரை லிட்டர் தண்ணீர். அல்லது ஒரு துண்டு சீஸ்+ மூன்று பிஸ்கட்+ ஒரு கிளாஸ் பால்+ மூன்று ஈச்சம் பழங்கள் + அரை லிட்டர் தண்ணீர் ( எனது ஃபேவரிட் மெனு)


இப்தார்- ஒரு சில ஈச்சம் பழங்கள் தண்ணீர் அரை லீட்டர். ஒரு கோப்பை கஞ்சி. கூடவே கடித்துக் கொள்ள ஒரே ஒரு சமுசா/ ஒரு கட்லட். (அதையும் தவிர்த்தால் நன்று)


மஃரிப் தொழுகைக்கு பின்னர் ஒரு கப் கோப்பி / ஒரு கப் தேனீர் கொஞ்சம் நறுக்கிய பழங்கள். இடையிடையே கொஞ்சம் தண்ணீர்.


தறாவீஹ் தொழுகைக்கு பின்னர் மூன்று இடியாப்பம்/ ஒரு துண்டு பிட்டு/ இரண்டு ரொட்டி+ மரக்ககறி + மீன் / முட்டை கூடவே ஒரு கிளாஸ் பிரஸ் ஜுஸ். ஒருகிளாஸ் தண்ணீர்.


அவ்வளவு தான் ஒரு நாளைய சாப்பாடு. பள்ளிவாசலுக்கு இயலுமானவரை  நடந்து போவது. நடந்து வருவது. கியாமுல் லைலில் நீண்ட நேரம் நின்று வணங்குவது. இது போதுமான எக்ஷஸைர்ஸ்.  


இப்படி சாப்பிட்டு நோன்பு நோற்று பாருங்கள். நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். உங்கள் உடம்பும் ஒரு மாத காலம் கீட்டோனுக்கு மாறி விடும்.


 (வி.ரி. சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தினவிழா பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது.

மகளிர் தின விழாவின் மூன்றாவது  நிகழ்வாக மகளிருக்கான "மனைப் பொருளாதார முகாமைத்துவ செயலமர்வானது"  நேற்று முன்தினம் (2024.03.09)  பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் வளவாளர்களாக  தங்கவேல் சக்திவேல் (முதன்மை பயிற்றுவிப்பாளர், நிபுணத்துவ ஆலோசகர்  மற்றும் திருமதி சக்தீஸ்வரி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு செயலமர்வினை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.

இந்த செயலமர்வில் பிரதேச செயலக பிரிவிலிருந்து திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட 35 பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் மூலம் தாம் நல்ல ஆலோசனைகளையும் சிறந்த அனுபவத்தையும் பெற்றுக் கொண்டதாக பயனாளிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .


வி.சுகிர்தகுமார் 0777113659 

 மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களிலும் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பாக நடைபெற்றது.
அக்கரைப்பற்று பகுதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலும் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் பனங்காடு பாசுபதேசுவரர் போன்ற பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களிலும் விரத பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
மாலை 6 மணிமுதல் ஆரம்பமான முதாலம் ஜாம பூஜையினை தொடர்ந்து இடம்பெற்ற நான்கு ஜாம பூஜைகளிலும் பெருமளவிலான பக்தர்கள் பங்கேற்றனர்.
யாக பூஜைகள் இடம்பெற்றதுடன் சிவலிங்கத்திற்கு பாலாபிசேகமும் விசேட அபிசேக அலங்கார பூஜைகளும் இடம்பெற்றன.
இவ்வருடம் இடம்பெற்ற மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றதுடன் அக்கரைப்பற்று பகுதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை பிரதிஷ்டா கலாநிதி தற்புருச சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்கள் அவர்களும் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை சிவஸ்ரீ பழனிவேல்குருக்கள் கேதீஸ்வரக்குருக்கள் நடாத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

  


(வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி விரதத்தை முன்னிட்டு இன்று (8) வெள்ளிக்கிழமை காலை பூஜை வழிபாடுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது.

பிரதேச செயலகம் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்தது.

மாணவரிடையே குருத்தோலை பின்னுதல் நிறைமுட்டிவைத்தல் கோலம் போடுதல் போன்ற பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகளில் போட்டி இடம்பெற்றது.

அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

 


மஹா சிவராத்திரியின் தீபங்கள் இந்து சமூகத்தின் உணர்வைப் பற்றவைப்பது போல், அனைத்து இலங்கைப் பிரஜைகளின் வாழ்விலும் ஒளியேற்றும் ஆசீர்வாதமாக இருக்கட்டும்.


( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் தேதி  தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில்  மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில்  நடைபெறும்.

அது தொடர்பான செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசா  சென்ற கூட்டறிக்கை வாசிக்க ஆரம்பமானது.

சங்கத்தின் பொருளாளர் க..தியாகராஜா  பொருளாளர் அறிக்கை முன்வைக்கப்பட்டது.

 மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் அமரர் ஆ.மு.சி. வேலழகனது நூல் வெளியீடு மற்றும் நினைவுப் பேருரை பற்றிய தீர்மானமெடுக்கப்பட்டது.

 சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் சார்ந்த கருத்துக்கள் செயற்குழு உறுப்பினர்களால்  முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.  சங்க பொதுச்செயலாளரின் நன்றியுரையுடன்  நிறைவுற்றது.



அம்பாறை மாவட்ட தென்கிழக்கு இளைஞர் பேரவை ஏற்பாடு செய்த 'யூத் போரம்- 2024' நிகழ்வு கல்முனை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் எல்.எம். சாஜித் அவர்களின் நெறிப்படுத்தலில் மாளிகைக்காடு வாபா றோயலி மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டதுடன் மேலும் விசேட அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸீல், கிழக்கின் கேடயம் பிரதானியும், கிழக்கு மாகாண அனைத்துப்பள்ளிவாசல்கள் பொதுநிறுவனங்கள் சம்மேளன நிறைவேற்று குழு உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், சிரேஷ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் வெகுஜன தொடர்பாடல் செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், அட்டாளைசேனை நலன்புரி அமைப்பின் தலைவர் அதிபர் ஏ.ஜி.அன்வர் நௌஸாத், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், எம்.ஏ. ஹலீலுர் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ பாவா, இணைப்பு செயலாளர் சட்டத்தரணி சப்ராஸ் நிலாம் உட்பட தேசிய புகழ்பெற்ற கலைஞர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

 


நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகம் நடாத்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் ‘ஸிஹாஹ் ஸித்தா’ கிரந்தங்களின் (தமிழ்) மொழிபெயர்ப்புத் தொகுதி அறிமுகமும் ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ (தமிழ்) நூல் வெளியீடும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது தலைமையில் 2024.03.03 ஆம் திகதி பல்கலைக்கழக கலை கலாச்சார கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


தமிழ் கூட்டமைப்பு

முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில்... சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் #சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 


அக்கரைப்பற்று நூரானியா ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் இன்றைய தினம் இஜ்திமா இடம்பெற்றது.

அக்கரைப்பற்றிலும் அதன் அயற் கிராமங்களிலிருந்தும் சுமார் 2000 இற்கும் அதிகமானவர்கள் ஆண்களும், பெண்களும் பங்குபற்றியிருந்தனர்.

இதற்காள ஏற்பாட்டை நூரானியா ஜும்ஆ மஸ்ஜித் அக்கரைப்பற்று நம்பிக்கையாளர் சபை செய்திருந்தது.

ரமழானை எவ்வாறு அரிய சந்தர்ப்பமாக மாற்றுவது என்ற தலைப்பில்,அஷ்ஷேய்க்: M.H. லபீர்‌ முர்ஸி) அவர்கள் என்ற தலைப்பில், சன்மார்கச் சொற்பொழிவு இடம் பெற்ற வேளையில் எடுத்துக் கொண்ட படம் இது.

 


(வி.ரி.சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச செயலகம் சர்வதேச தாய்மொழி தினத்தை (21.02.2024) முன்னிட்டு ஏற்பாடு செய்த சர்வதேச தாய்மொழி தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம்  தலைமையில் நேற்று முன்தினம் (2024.02.27)  பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது .

தாய்மொழிக்காக போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறி, உலகின் அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையை பாதுகாக்கும் வகையில் பெப்ரவரி 21ம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக ( International Mother Language Day) ஐ.நாவின் யுனெஸ்கோ 1999ம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. 

இதனையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து பெப்ரவரி 21ம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகின்றது.

 "நமது தாய்மொழியை  நினைத்து நாம் பெருமிதம் அடையலாம். ஆனால் இன்னுமொருவருடைய மொழியை சிறுமைப்படுத்துவது மனித அறமாகாது" என்பது தாய்மொழிகள் தினம் சொல்லும் செய்தி.
இதன்போது "நம் தாய்மொழியை பேணுதல் ஒரு பன்முக நோக்கு" எனும் தலைப்பின் கீழ் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதி பதிவாளர் த. சஞ்சீவி சிவகுமாரினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

பிரதேச கலைஞர்களின் பாடல்கள் மற்றும் கணேஷா கலைக்கழக மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் கதிரவன் பட்டிமன்ற பேரவை வழங்கிய 126வது சிறப்பு பட்டிமன்றம் "தற்காலத்தில் தமிழ்மொழி வளர்கிறது......தற்காலத்தில் தமிழ்மொழி தளர்கிறது" எனும் தலைப்பில்  இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவல உத்தியோகத்தர்கள், பிரதேச மூத்த எழுத்தாளர்கள், மாணவர்கள்  என பலரும் கலந்துகொண்டிருந்தனர்


 பிஜிஎம் கிங் - யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுடன் விமானம் ஏறினார். இங்கே சில சிறப்பம்சங்கள் உள்ளன.


 ( காரைதீவு  சகா)


 அன்றையகாலகட்டத்தில் ஆலயங்கள் சமூகத்தை வழிநடத்தும் நீதிமன்றமாகவும் விளங்கியது. ஆனால் இன்று நிர்வாக சிக்கலில் மாட்டி பல ஆலயங்களில் நீதிமன்றத்தில் நிற்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு மடத்தடி மீனாட்சி அம்மனாலய விசேட நிர்வாக சபை கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  வேதநாயகம் ஜெகதீசன் கவலை தெரிவித்தார் .

நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயவிசேட நிருவாக சபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் கே.ஜெயசிறில் தலைமையில் ஆலய அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது .

அங்கு அரசஅதிபர் மேலும் கூறுகையில்.

அம்பாறை மாவட்டத்தில் இன்று 21 ஆலயங்கள் நீதிமன்றத்தில் நிற்கின்றன. பணம் நேரம் என்பன வீணாக விரயமாகின்றன. உகந்தமலை முருகன் ஆலயமும் நீதிமன்றில் உள்ளதை அறிவீர்கள். அதனால் லாகுகலை பிரதேச செயலாளர் வசம் அவ் ஆலயம் பரிபாலிக்கப்படுகிறது.
விசேட அமைவிடம் பொருந்திய இவ் ஆலயம் மிகவும் பலத்த சவால்களுக்கு மத்தியில்  கும்பாபிஷேகம் கண்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது. அதற்காக இந்த ஆலய நிர்வாக சபையை பாராட்டுகின்றேன். அதேவேளை இங்குள்ள நிர்வாக நடவடிக்கைகள் சீரமைக்கப்பட வேண்டும் .அந்த ரீதியிலே இந்த கூட்டம் இடம்பெறுகின்றது. என்றார்.
கூட்டத்தில்
ஆலய பரிபாலன சபையின் ஆலோசனைகளான வி.ரி.சகாதேவராஜா வா.குணாளன் வி.ஜயந்தன்  மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
 மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி நிந்தவூர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.

எதிர்வரும் 16ஆம் தேதி சங்காபிஷேகம் இடம்பெற இருக்கின்றது. அவ்வளையில் ஆலய வரலாற்று நூலான " "மரகதம் "என்ற நூல் வெளியிட்டு வைக்கப்படவிருக்கிறது என தலைவர் கூறினார்.



( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த தைப்பொங்கல் விழா நேற்று(16) வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றது..

முன்னதாக மாட்டு வண்டி சகிதம் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
அதிதிகளாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் டாக்டர் கோ.வசந்தராஜா அம்பாறை நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் திருமதி புவிராஜினி விஷ்ணுரூபன் 
 உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா , கல்முனை ஹற்றன் நாஷனல் வங்கி முகாமையாளர் ஏ. நிர்மலகுமார் பற்றியா 125 வது ஆணாடுவிழாக்குழு பொருளாளர் எஸ்.சிறிரங்கன் ஆகியோர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டார்கள்.

விழாவில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்யாலயா அதிபர் ரிசாட் மற்றும் மாணவர்களும், சிங்கள மகா வித்தியாலய அதிபர் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
-

அங்கு பற்றிமா பழையமாணவர்களானவைத்திய கலாநிதி டாக்டர் வசந்தராஜா பொறியியலாளர் புவிராஜினி ஆகியோர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டாரர்கள்.


 ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலை விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்......,


ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலையின்  விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் - பள்ளிவாசல் தலைவரும்  பிரதேச  நீர்ப்பாசன பொறியியலாளர் 

ஏ. எஸ் .எம். இர்ஷாத் தலைமையில் ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலய பிரதான  மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.


 நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்கள


ப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செய்யிது அலிசாகிர் மௌலானா அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். 


அத்துடன் கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர்

 எம். எஸ். நழீம்  அவர்களும் விசேட அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்தின் முன்பள்ளிக்கான  முன்னாள் உதவிக்கல்வி பணிப்பாளர் எம். எச் .எம் .நசீர் மற்றும் ஏறாவூர் கோட்ட பாலர் பாடசாலையின் இணைப்பாளர் 

 சக்கினா பௌசூல் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரித்ததுடன் அதிதிகளால் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் 

பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 


#Rep/VithusanJeyachanthiren.

கச்சத்தீவு  #KatchatheevuFestival2024 👇


▪️5 AM தொடக்கம் மு.ப 10 மணி வரை பேருந்து சேவை, (23) நண்பகல் 12 வரை படகு சேவை 

▪️படகு சேவைக்கு ஒரு வழிக் கட்டணம் 1500/-)

▪️உணவு & குடிநீர் ஏற்பாடுகளுடன் செல்ல வேண்டும்

▪️மதுபானங்களை கொண்டு செல்லல் மற்றும் பாவித்தலுக்கு தடை


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.