காரைதீவு தவிசாளரை சந்தித்த மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் - பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த சபை !
மாளிகைக்காடு செய்தியாளர்
மாளிகைக்காடு பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய மாளிகைக்காடு மக்களின் சார்பில் மாளிகைக்காடு தலைமை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களுக்கும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று காரைதீவு பிரதேச சபையில் இடம்பெற்றது.
மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் செயலாளர் நூருல் ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ. பௌசர் தலைமையில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனை சந்தித்த மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் மாளிகைக்காடு மையவாடி புனரமைப்பு, மின்விளக்கு பொருத்துதல் மற்றும் திருத்துதல், திண்மக்கழிவு முகாமைத்துவம், சமூக நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போது காரைதீவு பிரதேச சபை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்த சந்திப்பில் காரைதீவு பிரதேச சபை உபதவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உதவித்தலைவரும், முன்னாள் உப தவிசாளருமான ஏ.எம். ஜாஹீர், பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரணீஸ், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் ஆலோசகர் எம்.ஐ. இஸ்திகார், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ், முன்னாள் உப தலைவர் யூ.எல். செய்னுலாப்தீன், நம்பிக்கையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
( வி.ரி. சகாதேவராஜா)
வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பின்தங்கிய வேத்துச்சேனை கிராம மக்களுடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் டாக்டர் இ.சிறிநாத் ஆகியோர் களத்தில் நின்று கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பில் வேத்துச்சேனை கிராமத்தில் எதிர்கொள்ளப்படும் பல விடயங்கள் தொடர்பாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஶ்ரீநேசன் வைத்தியர் இ.ஶ்ரீநாத் ஆகியோர் நேற்று முன்தினம் மக்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்கள்.
இதில் சில விடயங்களை பூர்த்திசெய்வதற்குரிய கோரிக்கைகளையும் முன்வைத்தார்கள்.
சில பிரச்சனைகளை அந்த இடத்தில் தீர்த்து வைத்தனர்.
( வி.ரி. சகாதேவராஜா)
( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் கதிர்காமம் பெரிய
கோவிலில் வருடமொருமுறை ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவம். இன்று (01) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அங்கு பாரம்பரிய
நிகழ்வுகளான யானைகள் மூலம் பந்தலுக்கான மரம்செடி கொடிகள் மாணிக்கங்கையூடாக
சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.
ஆலய நிலமே நிருவாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அக் கொத்துக்களை யானைகள் உதவியுடன் பாரம்பரிய வேடுவகுலமக்கள் சகிதம் பந்தல் மேய்ந்தார்கள்.
நூருல் ஹுதா உமர்
( வி.ரி. சகாதேவராஜா)
பாறுக் ஷிஹான்
தம்பிலுவில் களூதாவளை ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர மஹோட்ச கொடியோற்றதுடன் ஆரம்பம்....!!!
ஜே.கே.யதுர்ஷன் ...
கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வங்க கடலோரம் ஆறுகளும் மரங்களூம் வயல் வெளிகளூம் சூழ் அழகிய கிராமமாம் தம்பிலுவில் கிராமத்தில் ஆற்றங்கரை யோரம் கிராம எல்லையில் தனிக்கோவில் கொண்டு வீற்றிருந்து நாடிவரும் தேடிவரும் அடியவர்களூக்கு அருள் வழங்கும் வள்ளல் நாயகனாம் தம்பிலுவில் களூதாவளை ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த ஆணி உத்தர மஹோற்சவ கொடியோற்ற திருவிழா நேற்றைய 2025/06/23தினம் பஞ்ச பூதங்களின் ஆசிவாதத்துடன் மேளதாளங்கள் முழங்க விண்னைபிளக்கும் பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் மிக சிறப்பாக ஆரம்பமாகிய 15து நாட்கள் திரூவிழா கோலம் பூண்டூ 2025/07/01 வீதி உலா இடம்பெற்று 2025/07/02 திகதி தீர்த்த உட்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.....
ஆலய பூசை நிகழ்வுகள் யாவும் உட்சவ கால பிரதம குரு கலா பூசனம் சைவப்புலவர்,சைவ சித்தாண்ட பண்டிதர் சோதிடர் சிவஸ்ரீ.க.லோகநாதன் குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் ஆலய நிகழ்வுகள் யாவும் ஆலய தலைவர் வ.பவாநந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது....
( வாகூரவெட்டையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா)
(வி.ரி. சகாதேவராஜா)
.சுகிர்தகுமார் 0777113659
வி.சுகிர்தகுமார்