அக்கரைப்பற்று தேனீர்ச்சாலையில் மரணமுற்றவர் தொடர்பில் SOCCO பொலிசார் விசாரணை
அக்கரைப்பற்று வெள்ளப் பாதுகாப்பு வீதியில் இன்று மாலை நான்கு மணி அளவில் தேனீர்சாலை ஒன்றில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாஜித் என்பவர் என்பவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் 28 வயது நிரம்பியவர் என்பதாக, தெரிவிக்கப்படுகிறது
இவர் அக்கரைப்பற்று நீதிமன்ற சமுதாய சீர்த்திருத்த நடவடிக்கைளுக்கு உட்பட்டிருந்தவராவார். நேற்றைய தினம் அக்கரைப்பற்று, ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 4 மணிவரை அங்குள்ள நோயாளர் சாதாரண விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து வியாழக்கிழமை மாலை 4.15 அளவில் எவரது முன் அனுமதியுமின்றி வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்பு அவர் வெளியாகி 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தேனீர்ச் சாலைக்கு வந்து கதிரையில் அமர்ந்த பின்னர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் கூறுகின்றன
இதுபற்றிய விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்ற அதே வேளையில், அம்பாறை சொக்கோ பிரிவினரும், இன்று மாலை குறித்த இடத்திற்கு விஜயம் செய்து, தடயவியல் சான்றிதழ் சம்பந்தமான பதிவுகளை மேற்கொண்டிருந்தார்கள்