மதுவெறியர்களின் கவனயீனத்தால் அப்பாவி இளைஞன் உயிரிழப்பு!
#திருகோணமலை - புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (17) மாலை இடம் பெற்றுள்ளது.
இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பின்புறமாக மூவருடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் அம்மூவர் மதுபோதையில் வேகமாக வந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் திருகோணமலை- கோனேசபுரி ஆறாம் கட்டையைப் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.தேவானந் (39வயது) என்பவரே உயிரிழந்ததாகவும் அவருடன் பயணித்து அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய யூ.தனூஸன் காயம் அடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அத்துடன் வேகமாக சென்று கொண்டிருந்த மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் 21, 30, 39 வயது உடையவர்கள் எனவும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவருடன் பயணித்த இளைஞர் உட்பட மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவருமாக மொத்தமாக நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--------------------------------------------------
தந்தை வாக்கு மூலம்..
பெரிய நீலாவணை - பாக்கியதுஸ் சாலிஹாத் வீதியில் இரு ஜனாஸாக்கள் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் சகோதரனும் சகோதரியும் ஆவர். இருவரும் மாற்றுத்திரனாளிகள். சகோதரனின் வயது 30. சகோதரியின் வயது 18.
தந்தையே - தனது மேற்படி இரு பிள்ளைகளின் கழுத்தை துண்டித்துள்ளார். அவரும் - (தந்தை ) தனது கழுத்தை துண்டித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நானே - எனது பிள்ளைகள் இருவரையும் கொலை செய்தேன். எனது மனைவி ஒரு வருடத்துக்கு முன்னர் மரணித்து விட்டார். எனது மூத்த இரு ஆண் மகன்களும் வெளிநாட்டில் தொழில் புரிகின்றனர். இதனால் ஏற்பட்ட விரக்தியே இந்த நிலைக்கு காரணம் என அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சந்தேகநபரான இலங்கையை சேர்ந்த 19 வயதுடைய பேப்ரியோ டி சொய்சா என்ற இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் இருந்ததாகவும், அவர் தான் படிக்கும் பாடசாலையில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கணவன் – மனைவிக்கு இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். அடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவ சென்றே இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் தந்தையால் மகனை சரியான முறையில் வழி நடத்த முடியவில்லை என்பதனாலேயே உயிரிழந்த பெண்ணின் கணவர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து வைத்திருந்தார் என தந்தை குறிப்பிட்டுள்ளார்.
மகள் அந்த இளைஞனை அனுப்பிவிடுமாறும் கூறிய போதிலும் உதவி செய்யும் நோக்கில் தங்க வைத்திருந்ததாக அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.
கனடாவின் ஒட்டாவாவில் வசித்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபரான இலங்கையை சேர்ந்த 19 வயதுடைய பேப்ரியோ டி சொய்சா என்ற இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் இருந்ததாகவும், அவர் தான் படிக்கும் பாடசாலையில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கணவன் – மனைவிக்கு இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். அடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவ சென்றே இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் தந்தையால் மகனை சரியான முறையில் வழி நடத்த முடியவில்லை என்பதனாலேயே உயிரிழந்த பெண்ணின் கணவர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து வைத்திருந்தார் என தந்தை குறிப்பிட்டுள்ளார்.
மகள் அந்த இளைஞனை அனுப்பிவிடுமாறும் கூறிய போதிலும் உதவி செய்யும் நோக்கில் தங்க வைத்திருந்ததாக அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.
கனடாவில் கொல்லப்பட்ட ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரவிக்கின்றனர்.
குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விடயமறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை விரைவாக அடையாளம் கண்டு அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து தாயும் அவரது நான்கு பிள்ளைகளும். அந்த குடும்பத்துடன் வசித்து வந்த ஒருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய தர்ஷனி டிலந்திகா ஏக்கநாயக்க என்ற பெண்ணும் அவரது ஏழு வயதுடைய மகனும், நான்கு வயதுடைய மகளும், இரண்டு வயதுடைய மகளும், இரண்டு மாத குழந்தையும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த ஆறாவது நபர் 40 வயதுடைய காமினி அமரகோன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சந்தேகநபர் கூரிய ஆயுதமொன்றை பயன்படுத்தி கொலைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், இது பயங்கரமான வன்முறை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த அசிட் தாக்குதலில் 5 பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இரத்தினபுரி சமன் தேவாலய பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி காரொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான வழக்கிற்காக பிரசன்னமான பிரதான சந்தேகநபரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் சந்தேகநபர், சந்தேகநபரின் மனைவி, நண்பர் ஒருவர் மற்றும் அருகிலிருந்தத மேலும் இருவர் அசிட் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
வாகன விபத்தில் உயிரிழந்த நபரின் தந்தையே, அசிட் தாக்குதல் நடத்தியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும்
குறிப்பிட்ட இந்த சந்தேகம் அவர்கள் ஒன்பது பேரில் மூன்று பேர் இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் குறித்த மூவரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கம் அளிக்குமாறு அக்கரைப்பற்று நீதிபதி ஏ.சி ரிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.
குறித்த சந்தேக நபர்கள் சார்பில்,
சட்டத்தரணிகள் சமீம், ஜனிர் ரிஸ்வான் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்
நாகானந்த கொடிதுவாக்குவின் பெயரை சட்டத்தரணியாக மாற்றியமைத்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கொடிதுவாக்கு தொழில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரியந்த ஜயவர்தன, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
நாகாநந்த கொடிதுவாக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதியரசர்கள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சற்றுமுன்னர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய் மடி தேடி, தாயகம் நோக்கி புறப்பட்டார் சாந்தன்.
உயிரற்ற உடலாக சிறப்பு முகாமில் இருந்து நிரந்தர விடுதலை பெற்றார் சாந்தன்.
உயிரோடு வந்தவனை உயிரற்ற பிணமாக தாயகம் அனுப்புகிறது தமிழகம்.
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது...