Showing posts with label Crime. Show all posts



 மட்டக்களப்பு வாவியில் மிதந்த இருவரின் உடலங்கள் : கொலையா? தற்கொலையா? - காவல்துறையினர் தீவிர விசாரணை


மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மட்டக்களப்பு வாவியிலிருந்து (மே 7) இரண்டு ஆண்களின் உடலங்கள் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு காவல்துறையினர் உடலங்களை மீட்டுள்ளனர் . உடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 


களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதவான் திரு.RPJ  ரஞ்சித் குமார் அவர்களை, மே மாதம் 10ம் திகதி வரை (விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி கெளரவ நீதவான் திரு. பிரதீபன் கட்டளையிட்டார். வீடியோ இணைப்பின் மூலமாக சந்தேக நபர் இணைக்கப் பட்டிருந்தார்.


(முந்தைய செய்தி)
இவருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி  பொலிசார்,  வழக்குப் பொருட்களான ரூபா 408333.07  பெறுமதியான பொதுச் சொத்துக்களான மரத்தளபாடங்களை  கையாடல் செய்த வழக்கில் சந்தேக நபராக உட்படுத்தி,  களுவாஞ்சிக்குடி  நீதிமன்றத்தில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்திருந்தனர்.

இதேவேளையில், இதே நீதிமன்றில் பதில் பதிவாளராகப் பணியாற்றி வந்த திரு.ரமேஸ் என்பவர் சுமார் 18 மில்லியன் பெறுமதியான (தங்க நகைகளை) சான்றுப் பொருளைக் கையாடல் செய்த குற்றத்திற்காக, விளக்க மறியலில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் பணிப்பின் பேரில், களுவாஞ்சிக்குடியில் ்இட்ம்பெற்ற மோசடிகள் தொடர்பாக, நீதிமன்றில் பணிபுரியும்  அதிகாரிகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி திரு. பிரபாகரன் அவர்களினால்,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்கள்.

நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு நீதிபதிகள் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில்  விசாரணைகளை அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.

களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதிபதியாகவிருந்த திரு.ரஞ்சித்துமார் 2026 முதல் சம்மாந்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

நீதிச்சேவை ஆணைக்குழு. 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில், ஒழுக்காற்று விசாரணைகளின் பின்பு இவரை இடைநிறுத்தியுமிருந்தது.

களுவாஞ்சிக்குடி பொலிசார், களுவாஞ்சிக்குடியில் காணமல் போயிருந்த  1.5 மில்லியன் பெறுமதியான மரக்குற்றிகள் தொடர்பில் சந்தேக நபராக திரு.ரஞ்சித் குமாரைப் பெயரிட்டிருந்தனர்.

இன்றைய தினம், நகர்வு மனு ஒன்றினை சிரேஸ்ட சட்டத்தரணி மனார்தீன் மூலமாக, திரு.ரஞ்சித் குமார் ஆஜராகியிருந்தார். சிரேஸ்ட சட்டத்தரணிகளான பாறுாக், முபீத். இஹ்லாஸ்,மற்றும் இயாஸ்தீன் சுஜிதாஸ் தனுசியா, பசீல், கிருபாகரண், ஆகியோர் சந்தேக நபரான ரஞ்சித்குமார் ஆகியோர் சார்பில் ஆஜராகினர்.

சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களின் பின்பு, ரஞ்சித் குமார் அவர்களை, மே மாதம் 4ம் திகதி வரை (இன்றிலிருந்து 14 நாட்களுக்கு), விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி கெளரவ நீதவான் திரு. பிரதீபன் கட்டளையிட்டார்.

 


காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


சிறைக்குள் இருந்த இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


இதில் காயமடைந்த கைதி கராப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே மாதம் 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 06 எயார்பஸ் A-330 மற்றும் 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களை கொள்வனவு செய்த நடவடிக்கையுடன் தொடர்புபட்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக நபரான கபில சந்திரசேன கடந்த மார்ச் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.


அதனைத் தொடர்ந்து, அவர் மே மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 


மாலபே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அருகில், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களை நடத்திய 22 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்கள் பயணித்த டோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வீதியில் பயணிப்போருக்கு இடையூறு ஏற்படும் வகையில் இளைஞர்கள் குழுவொன்று மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவதாக, கடுவெல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து, பொலிஸார் அங்கு சென்று அப்பகுதியை முற்றுகையிட்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.


வட்ஸ்அப் குழுக்கள் ஊடாக ஒன்றிணைந்த இந்த இளைஞர்கள், குறித்த இடத்திற்கு வந்து பொதுமக்களுக்கு பயம் ஏற்படும் வகையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களை நடத்தியுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.


கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் இரண்டுக்கு பதிவு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள் இன்று விரிவான சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இப்பரிசோதனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, நுகர்விற்கு பொருத்தமற்ற மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், வியாபாரிகள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன், உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி, எதிர்காலத்தில் இத்தகைய குறைபாடுகள் இடம்பெறாத வகையில் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் இணைந்து செயற்பட்டு, பரிசோதனைகளை திறம்பட முன்னெடுத்தனர்.

சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பதாவது, இத்தகைய சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு, மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் எனக் கூறினர்.

 


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இஸ்லாமிய மதத்துக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பிலேயே இக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அரசாங்கத்திற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) அபிமானி ஜன ஜய கட்சி இன்
று (30) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதுடன், அமெரிக்காவிற்கு செலுத்த வேண்டியிருந்த 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மாயமானமை மற்றும் திறைசேரி நிதி கையாடல் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.


இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கட்சியின் தலைவர் பிரதீப் சார்லஸ் தெரிவிக்கையில், நலிந்த ஜயதிஸ்ஸவின் கருத்துப்படி மேலும் ஒரு தொகுதி பணம் வேறு சில தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 


இவ்வாறான நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை உடனடியாகக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், நாட்டின் நிதித்துறையில் இத்தகைய நிச்சயமற்ற நிலை நிலவும் போது பொதுமக்கள் எவ்வாறு வங்கிகளை நம்பி தமது பணத்தை வைப்பு செய்வார்கள் என கேள்வி எழுப்பினார். 


அத்துடன், திருடர்களைப் பிடிப்பதற்கான வேலைத்திட்டத்தை வெறும் 20 நாட்களில் முன்னெடுக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இதன்போது கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் இளைஞர் விவகார செயலாளர் ரவீந்திர நிஷாங்க, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த நிதி விவகாரம் குறித்து விசேட கவனம் செலுத்தி, காணாமல் போன பணத்திற்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 


திறைசேரியில் இருந்த பணம் முறையற்ற வகையில் கையாளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்திற்கு மிக விரைவான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.


ஞான பிரசாந்தன்


 AI ஆல் உருவாக்கப்பட்ட படம்)


கொழும்பு 11இல் சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற வியாபாரி ஒருவருக்கு ரூபா 2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.


குறித்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையிலேயே இவ் விடயம் தொடர்பில் தெரிய வந்துள்ளது.


அதிகபட்ச சில்லறை விலையான கிலோ ரூ 240 கொண்ட 5 கிலோ சம்பா அரிசி, நுகர்வோருக்கு ரூ 1425இற்கு அதாவது, ஒரு கிலோ ரூ 285 இற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


இச் சம்பவம் தொடர்பில் நேற்று (28) குறித்த வியாபாரி மீது மாளிகாககந்த நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் விற்பனையாளருக்கு ரூ 2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

 


யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு பெண்ணை நோக்கித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


கைதான அவர் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


இதன்போது, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

 


யாழ்ப்பாணத்தின் இளவாலை பகுதியில் ஒரு பெண்ணை நோக்கித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இளவாலை பெரியவிளான் பகுதியிலுள்ள காணியொன்றை அர்ச்சுனாவும் மற்றொரு தரப்பினரும் உரிமை கோரி வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று (25) குறித்த காணியை சுத்தம் செய்வதற்காக அர்ச்சுனா சென்றபோது அங்கு வந்த இரு பெண்கள் அதனை தடுத்துள்ளனர்.


இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தனது தற்காப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை எடுத்த பெண்களை அச்சுறுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் பொதுமக்களும் தன் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக அர்ச்சுனா எம்.பி தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


 


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


உளவுத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது இந்தக் கைது நிகழ்ந்தது .


பாடசாலை பொருட்கள் மற்றும் பலவகையான இனிப்புகள் நிரப்பப்பட்ட போலி அடிப்பாகம் கொண்ட சூட்கேஸ்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமுக்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருள் இவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஒவ்வொரு பிக்குவும் தங்களது பயணப் பைகளில் ஐந்து கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை எடுத்துவந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.


ஒரு அனுசரணையாளர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி, இந்தக் குழுவினர் ஏப்ரல் 22 அன்று பாங்காக்கிற்குப் பயணம் செய்ததையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கைபேசி ஆதாரங்கள் காட்டியதாகக் கூறப்படுகிறது.


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை என்றும், அங்கு துறவிகள் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு இது என்றும் விவரிக்கப்படுகிறது.


நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் இளம் துறவிகள் எனக் கூறப்படும் சந்தேக நபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


 


மட்டக்களப்பு நகரில் கட்டுப்பாட்டை இழந்த லொறி மதுபான விற்பனை நிலையத்திற்குள் புகுந்தது!


மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள  "தயா லிக்கர் ஷாப் " (Thaya Liquor Shop) முன்பாக பயணித்த லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதுபான விற்பனை நிலையத்தின் முன்பகுதியை மோதித் தள்ளிய சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது 


 லொறி மோதிய வேகத்தில் விற்பனை நிலையத்தின் முன்பக்க வேலிகள், பாதுகாப்புத் தூண்கள் மற்றும் கட்டிடத்தின் முகப்புப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளன.

 அதிகாலை நேரம் என்பதால் வீதியில் நடமாட்டம் குறைவாக இருந்தமையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சாரதியின் கவனக்குறைவு அல்லது தூக்க கலக்கமே விபத்திற்கு காரணமானதா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதவான் திரு.RPJ  ரஞ்சித் குமார் அவர்களை, மே மாதம் 4ம் திகதி வரை (இன்றிலிருந்து 14 நாட்களுக்கு), விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி கெளரவ நீதவான் திரு. பிரதீபன் கட்டளையிட்டார்.

இவருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி  பொலிசார், பொதுச் சொத்துக்களை கையாடல் செய்த வழக்கில் சந்தேக நபராக உட்படுத்தி,  களுவாஞ்சிக்குடி  நீதிமன்றத்தில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்திருந்தனர்.

இதேவேளையில், இதே நீதிமன்றில் பதில் பதிவாளராகப் பணியாற்றி வந்த திரு.ரமேஸ் என்பவர் சுமார் 18 மில்லியன் பெறுமதியான (தங்க நகைகளை) சான்றுப் பொருளைக் கையாடல் செய்த குற்றத்திற்காக, விளக்க மறியலில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் பணிப்பின் பேரில், களுவாஞ்சிக்குடியில் ்இட்ம்பெற்ற மோசடிகள் தொடர்பாக, நீதிமன்றில் பணிபுரியும்  அதிகாரிகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி திரு. பிரபாகரன் அவர்களினால்,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்கள்.

நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு நீதிபதிகள் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில்  விசாரணைகளை அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.

களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதிபதியாகவிருந்த திரு.ரஞ்சித்துமார் 2026 முதல் சம்மாந்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

நீதிச்சேவை ஆணைக்குழு. 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில், ஒழுக்காற்று விசாரணைகளின் பின்பு இவரை இடைநிறுத்தியுமிருந்தது.

களுவாஞ்சிக்குடி பொலிசார், களுவாஞ்சிக்குடியில் காணமல் போயிருந்த  1.5 மில்லியன் பெறுமதியான மரக்குற்றிகள் தொடர்பில் சந்தேக நபராக திரு.ரஞ்சித் குமாரைப் பெயரிட்டிருந்தனர்.

இன்றைய தினம், நகர்வு மனு ஒன்றினை சிரேஸ்ட சட்டத்தரணி மனார்தீன் மூலமாக, திரு.ரஞ்சித் குமார் ஆஜராகியிருந்தார். சிரேஸ்ட சட்டத்தரணிகளான பாறுாக், முபீத். இஹ்லாஸ்,மற்றும் இயாஸ்தீன் சுஜிதாஸ் தனுசியா, பசீல், கிருபாகரண், ஆகியோர் சந்தேக நபரான ரஞ்சித்குமார் ஆகியோர் சார்பில் ஆஜராகினர்.

சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களின் பின்பு, ரஞ்சித் குமார் அவர்களை, மே மாதம் 4ம் திகதி வரை (இன்றிலிருந்து 14 நாட்களுக்கு), விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி கெளரவ நீதவான் திரு. பிரதீபன் கட்டளையிட்டார்.
 

 

 


அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரீவ்போர்ட் நகரில் ஷ்ரீவ்போர்ட் நகரில்   ஷ்ரீவ்போர்ட் நகரில்  1 முதல் 14 வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை ஒரு குடும்பத் தகராறு என காவல்துறை விவரித்துள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று, தாக்குதல் நடத்தியவர் 10 பேரைச் சுட்டுவிட்டு ஒரு காரில் தப்பிச் சென்றார். பின்னர், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் அந்த சந்தேக நபர் கொல்லப்பட்டார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.