Showing posts with label Crime. Show all posts

 


அமரகீர்த்தி அத்துகோரல எம்.பி கொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை, 4 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறை, ஏனையோர் விடுதலை

 


ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் இன்று அதிகாலை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இன்று அதிகாலை குறித்த சிறுவன் உட்பட மூவர் அல்லைப்பிட்டி பகுதியால் வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தவேளை வீதி கடமையில் இருந்த பொலிஸார் அவர்களை வழி மறித்தனர். பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்தமையால் பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தினர்.


குறித்த துப்பாக்கி சூட்டில் சித்தங்கேணியை சேர்ந்த குறித்த சிறுவன் பலியாகியுள்ளார். அவருடன் சென்ற நல்லூர் மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த இருவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

 


அக்கரைப்பற்றில் விபத்தினால்,அண்மையில், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு  கடுங்காயமேற்படுத்திய 16 வயது மாணவனை எதிர்வரும் 16ந் திகதி வரை  சிறுவர் காப்பாத்தில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நிதவான் திருமதி. அபிநயா சூரியசிவா உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று, பொலிசார் குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

குறித்த சந்தேக நபர், இம்முறை க.பொ.த (சா/ த) பரிட்சைக்குத் தோற்றும் மாணவர் என்பதாலும்,16 வயது நிரம்பப் பெற்றவர் என்பதனாலும், இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்த முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம், ஊழல் குறித்து விசாரணை ஆணைக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.


இது தொடர்பாக ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, சபாநாயகர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாளர்கள் குழுவின் தலைவருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன, சபாநாயகருக்கு எதிராக நேற்றுமுன்தினம்(07) இலஞ்சம், மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்தார்.


பாராளுமன்ற வட்டாரங்களின்படி, நாட்டின் வரலாற்றில் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் ஒருவர் சபாநாயகர் மீது இந்த வழியில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளமை இதுவே முதல் முறை.


இந்தப் முறைப்பாடு சபாநாயகருக்கு எதிராக குலரத்ன 08 ஊழல், மோசடி மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளை சட்டவிரோதமாகப் பெறுதல், வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், பாராளுமன்ற ஊடகப் பிரிவுக்குச் சொந்தமான உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தாமல் பாராளுமன்றக் கணக்கின் கீழ் கூடுதல் மதிய உணவு வசதிகளைப் பெறுதல், விசாரணை அதிகாரியை சட்டவிரோதமாக நியமித்து பாராளுமன்றக் கணக்கிலிருந்து அவருக்கு பணம் செலுத்தி உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குதல், அரசுக்குச் சொந்தமான இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களை வழங்க சட்டவிரோதமாக மறுத்தல் மற்றும் அவரது ஊழல் மற்றும் மோசடியை மறைக்க முயற்சித்தல், பாராளுமன்ற ஊழியர்களின் நிர்வாகத்தில் சட்டவிரோதமாக தலையிடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளன.



 பாறுக் ஷிஹான்

கட்டாக்காலிகளை  பிடிப்பதில் பொலிஸார் மாநகர சபையினருக்கும்  இழுபறி நிலைமை ஏற்பட்டிருந்தது.அவை யாவும் சீர் செய்யப்பட்டு  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையில் மாநகர சபையினருடன்  தற்போது  இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டாக்காலிகளின் தொல்லை அதிகரித்து வருவதுடன் மக்களும் பல்வேறு சிரமங்களுக்குள் உள்ளாகி வருகின்றனர் என்ற செய்திகள் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வெளியாகி இருந்தன.

 பிடிப்பதில் பொலிஸார் மாநகர சபையினருக்கும்  இழுபறி நிலைமை ஏற்பட்டிருந்தது.அவை யாவும் சீர் செய்யப்பட்டு  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையில் மாநகர சபையினருடன்  தற்போது  இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டாக்காலிகளின் தொல்லை அதிகரித்து வருவதுடன் மக்களும் பல்வேறு சிரமங்களுக்குள் உள்ளாகி வருகின்றனர் என்ற செய்திகள் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வெளியாகி இருந்தன.

இந்த பிரச்சினை தொடர்பில் பொதுமக்கள் உட்பட பல தரப்பினரும் சுட்டி காட்டியுள்ள போதிலும் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்வியுடன் இப்பிரச்சினை தொடர் பிரச்சினையாக அதிகரித்திருந்தது.

கட்டாக்காலி மாடுகள் ஆடுகள் நாய்கள் உள்ளிட்ட மிருகங்களின் நடமாட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்விற்கு அச்சுறுத்தல் விடுகின்ற ஒரு பேசு பொருளாக மாறி  இருந்தது.

இவ்வாறான பிரச்சினைக்கு  கல்முனை வர்த்தக சங்கம் கல்முனை பொதுச்சந்தை சங்கம் பாடசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்கள்  மாநகர சபை மற்றும் பொலிஸாரிடம் குறிப்பிட்டும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை  சுமத்துவதுடன் குறித்த பிரச்சினை தீர்ந்த பாடில்லை என மக்கள் அங்கலாய்த்தனர்.

இது குறித்து  கல்முனை மாநகர சபையினரிடம் கேட்டால் பொலிஸார் தமக்கு ஒத்துழைப்பு இல்லை என கூறுகின்றார்கள்.ஆனால் பொலிஸாரிடம் இவ்வாறு கேள்வி கேட்டால் மாநகர சபை இவ்விடயத்தில் நடவடிக்கை எடுத்தால் பாதுகாப்பு தருவதற்கு தயாராக உள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்திருந்தார்.
 
இதற்கமைய தற்போது கட்டாக்காலி மாடுகள்   மாநகர சபையினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்புடன் இந்நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.

 


திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.


இதன் பிரகாரம் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன்  இன்று உத்தரவிட்டுள்ளார்.

திருமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமானமும், சர்ச்சைக்குரிய புத்தர்சிலையும்;

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 28 வரை விளக்கமறியல் நீடிப்புp

--------------------------------------------------------------------------

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.


திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (19) திங்கட்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் குறித்த வழக்கானது விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். 


குறித்த வழக்கானது இன்று காலை (19) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் தரப்பில் பிணைக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதன்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சட்டத்தின்கீழ் பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை எனவும் குறித்த சட்டவிரோத கட்டுமானத்தை அகற்றுகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த குற்றம் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரிவுகளில் திருத்தம் மேற்கொண்டு அதன் கீழ் பிணை வழங்க முடியும் எனவும், வழக்காளி தரப்புடன் கலந்துரையாடி ஓர் இணக்கப்பாட்டிற்கு வருமாரும் நீதிபதியால் கோரப்பட்டு வழக்கானது மதியம் 2.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்படாமல். மதியம் வழக்கு மீண்டும் ஆரம்பமானது.


குறித்த வழக்கானது மீண்டும் மதியமளவில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் தரப்பில் குறித்த இடம் விகாரைக்குரியது எனவும், குறித்த கட்டுமானம் நிரந்தர கட்டுமானம் இல்லை, நான்கு தூண்களை வைத்து கூரை போட்டு மேசையின் மீது புத்தர்சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் இது சட்டவிரோத கட்டுமானம் இல்லை எனவும் பொய்யான வழக்கு ஒன்றை பொலிஸாரும், கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினரும் தாக்கல் செய்திருப்பதாகவும் நீண்ட நேரமாக விவாதம் இடம்பெற்றது.


இதனை செவிமடுத்த நீதிபதி வழக்காளியான கடலோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரிடம் குறித்த கட்டுமானம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, அங்கு எத்தனை அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது? அங்கு சீமேந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? என்பதை வினாவியபோது குறித்த கட்டுமானம் 11 மீட்டற் தூரத்தில் இருப்பதாகவும், 300 மீற்றர் தூரத்திற்குள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றே தற்காலிக கட்டுமானமோ, நிரந்தர கட்டுமானமோ கட்டப்பட வேண்டும் எனவும் கடலோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் தெரிவித்திருந்தார்.

குறித்த வழக்கில் பிணை வழங்க வேண்டுமாயின் குறித்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றிவிட்டு வந்தால் குற்றப்பிரிவுகளில் மாற்றம் செய்து பிணை வழங்க முடியும் அல்லது குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டப்பணத்தை கட்டிவிட்டு, குறித்த கட்டடம் நீதிமன்றால் அகற்றப்படுவதோடு பிணை வழங்க முடியும் எனவும் தெரிவித்து குற்றவாளிகளுக்கு எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலை நீடித்து வழக்கை அதே தினத்தித்திற்கு ஒத்தி வைத்தார்.


இதேவேளை குறித்த புத்தர்சிலையை பொலிஸார்தானே வைத்தார்கள் எனவும் எதிராளிகள் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதன்போது கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவ்வாறு நாங்கள் வைத்திருந்தால் நாங்கள் எடுக்கின்றோம் என்ற உரையாடலும் நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது.

குறித்த வழக்கிற்காக சரத் வீரசேகர, முன்னாள் ஆளுநர் அனுராத ஜகம்பத், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.


குறித்த வழக்கானது கடந்த புதன்கிழமை (14) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஸ்ஸப  தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட 9 பேரை 19ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இருவருக்கு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றையதினம் (19) ஒருவர் சரணடைந்திருந்தார், இதனால் 10 பேரும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


திருகோணமலை பிரதான டச்பே கடற்கரைக்கு அருகில்  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2025 நவம்பர் மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் கட்டுமானங்களை மேற்கொண்டமைக்கு எதிராகவும், புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 4 பொத்த பிக்குகள் உட்பட 11 பேருக்கு எதிராக கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை துறைமுக பொலிஸார் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு 17.11.2025 அன்று திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் சார்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை 


இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை குறித்த வழக்கானது மீள விசாரனைக்காக அழைக்கப்பட்டபோது வருகை தந்திருந்த 4 பொளத்த பிக்குகள் உள்ளிட்ட 09 பேருக்கும் 19ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கில் குறித்த நபர்களுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

 


கடுமையான வெள்ளப்பெருக்கின் போது நீரில் மூழ்கிய கலா ஓயா பாலத்தின் வழியாக பேருந்தை ஓட்ட முயன்றதற்காக, இரண்டு பயணிகளின் மரணத்திற்கு காரணமானதாகவும், உயர் நீதிமன்ற நீதிபதி உட்பட 66 பேரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருமலை கடற்கரை சர்ச்சைக்குரிய புத்தர் சிலை 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேருக்கு எதிர்வரும் 19 வரை விளக்கமறியல்.

-------------------------------------------------------------------------

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (14) உத்தரவு பிறப்பித்துள்ளது.


திருகோணமலை நீதவான் நீதிமன்றின் குறித்த வழக்கானது இன்றையதினம் (14) புதன்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். 


குறித்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரு தரப்பினராலும் சமர்ப்ணங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் சமாதானமான முறையில் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவ்வாறாயின் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்டபோது எதிர் தரப்பினர் அதற்கு இணங்கிக் கொள்ளாத நிலையில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கின்ற கைதுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்து குறித்த எதிரிகளுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.


குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்த 11 பேரில் 9 பேர் இன்றையதினம் (14) நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப  தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருகோணமலை பிரதான கடற்கரைக்கு அருகில்  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2025 நவம்பர் மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியதாக கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை துறைமுக பொலிஸார் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு 17.11.2025 அன்று திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் சார்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

தெஹிவளை, மெரைன் டிரைவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஹோட்டல் உரிமையாளர், களுபோவில மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் .

 


( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு விபுலாந்த  மைதானத்தின் அரங்கு அறையினுள் வைக்கப்பட்டிருந்த கடின பந்து கிரிகட் விளையாடும் மூன்று கயிற்றுப்பாய் விரிப்புகள்(Matin) இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

இன்று (5) திங்கட்கிழமை அதிகாலை தீமூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

இதில் சுமார் 5 இலட்சத்துக்கு மேலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
 காரைதீவு விளையாட்டுக்கழகம் ,விவேகானந்தா விளையாட்டுக்கழகம் மற்றும் 
 ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு சொந்தமான மூன்று பாய்களே இவ் விதம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.


இது தொடர்பாக காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 காரைதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஜயரத்ன மைதானத்துக்கு வருகைதந்து பார்வையிட்டதுடன் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளதாகவும் தெரிவித்தார்.

கொஹுவளை போதியவத்தை பகுதியில் இளம் பெண்ணை சுட்டுக் கொல்ல முயன்றது தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 



கல்கிசைப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (03) தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 



கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 



இந்தக் குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர், துப்பாக்கிக்குப் பொறுப்பாக இருந்தவர், துப்பாக்கியைக் கடத்திச் சென்றவர் மற்றும் குற்றவாளிகளுக்குத் தங்குமிட வசதி செய்து கொடுத்தவர் என நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 



சந்தேகநபர்களிடமிருந்து 3 ரிவோல்வர் ரக துப்பாக்கிகள், 9 மி.மீ ரகத்தின் 10 தோட்டாக்களும், 50 கிராம் ஹெரோயினும், 55 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 



குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




 


நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் அவர்களின் தலைமையின் கீழ் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவானது இன்றைய தினம் சாய்ந்தமருது பிரிவுக்குட்பட்ட ஆட்டிறைச்சி கடைகளை பரிசோதனை செய்தது

இந்த பரிசோதனையின் மூலம் உரிமம் இல்லாத இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டது.

மேலும் எதிர்வரும் காலங்களில் சாய்ந்தமருது பிரதேசத்தில் உணவு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


கல்முனை மேல் நீதிமன்ற  கௌரவ நீதிபதி A. Judsan அவர்கள் ,8g ஹெரோயின்  வைத்திருந்து  விற்பனை செய்த குற்றவாளிக்கு, ஆயுள் தண்டணை வழங்கி தீர்பளித்தார்.

குறித்த குற்றச்சாட்டுக்கு,.குற்றஞ்சாட்டப்பட்டவர்,  குற்றஞ்சாட்டினை சுயமாக ஏற்றுக் கொண்டதன் பின்பு குற்றவாளியான அட்டாளைச்சேனையை சாஜித் என்பவருக்கு இத் தண்டனை இன்றைய தினம்  விதிக்கப்பட்டது.

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியானதன் பின்பு, கௌரவ நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜீட்சன் அவர்களால் விதிக்கப்பட்ட முதல் ஆயுள் தண்டனை. இதுவாகும்.



 வெள்ளம் மற்றும் மின்வெட்டால் பழுதடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சி பறிமுதல்:


​அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்குத் தகுதியற்றது எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 8) சீல் வைக்கப்பட்டது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


​வெள்ள நீர் பண்ணைக்குள் நுழைந்ததாலும், குளிரூட்டும் வசதிக்கு இடையூறு ஏற்பட்ட மின்வெட்டாலும் இந்த இறைச்சி கெட்டுப்போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ அவசர தொலைபேசி இலக்கமான (1926) க்கு அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.


​பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பின்னர் பண்ணைக்குச் சென்று, மொத்த இறைச்சி இருப்பையும் சீல் வைத்தனர் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் போரலேச தெரிவித்துள்ளார்.


​இறைச்சியின் மாதிரிகள் இன்று (8) மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க ஆய்வாளரிடம் அனுப்பப்பட உள்ளன. ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


திருகோணமலையிலுள்ள சீன துறைமுக நகர், 5ஆம் கட்டை பகுதியில் இன்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனம் தெரியா இருவர் இத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதே பகுதியைச் சேர்ந்த 59 வயதான நபரே இச் சம்பவத்தில் உயிரழந்தவர் ஆவார்.


மேலதிக விசாரணைகளை சீன துறைமுக நகர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகின்றது

களுவாஞ்சிக்குடி நீதிமன்ற பதில் பதிவாளர், களுவாஞ்சிகுடி பொலிசாரால் . நீதிமன்ற  காப்பகத்திலிருந்த சுமார் 1 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட  நகைகள் காணாமல் போனதை அடுத்து 20.11.2025 அன்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார். 

குறிப்பிட்ட நகைகள் அனைத்தும் வழக்குகளுடன் தொடர்புடையாதாகும். குறிப்பிட்ட நகைகள் நீதிமன்ற  சான்றுப் பொருட்கள் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து காணாமல் போயிருந்தது, கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த சந்தேக நபரான பதில் பதிவாளரின் சொந்த ஊரான வாழைச்சேனைக்கும் சென்று களுவாஞ்சிக்குடி பொலிசார்  இன்றைய தினம் விசாரணைகளை  மேற்கொண்டிருந்ததாக தெரியவருகின்றது. 

விசாரணைகளின் பின்னர், இவர் இன்று மாலை களுவாஞ்சிக்குடி கௌரவ நீதிபதி திரு.பிரதிபன் முன்னிலையில், களுவாஞ்சிக்குடி பொலிசாரால், ஆஜர் படுத்திய வேளையில் குறித்த பதிவாளரை டிசம்பர் மாதம் 5 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற கௌரவ நீதிபதி இன்று கட்டளை பிறபிப்பித்தார்.



 *மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்பு* 


தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 21.11.2025ஆந் திகதி  மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி TJ பிரபாகரன் ஐயா தீர்ப்பளித்துள்ளார்.


குறித்த சிறுமியை கடைக்கு போகவேண்டும் என்று கூட்டிச்சென்று தனது வீட்டிற்க்கு அழைத்து சென்று  கதவை அடைத்து குற்றம் புரிந்ததாக நீதிமன்றில் அழுத வண்ணம் சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.


குறித்த சிறுமி, பின்னர் பாடசாலையில் பாலியல் விடயங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் சொல்லித்தந்தார்கள் எனவும், அவ்வாறு நடந்தால் சொல்லவேண்டும் என ஆசிரியர் சொன்னார்கள் என்றும், பின்னர் சிறுமி சோகமாக இருப்பதை பார்த்து காரணம் ஆசிரியர் கேட்டதாகவும், சிறுமி நடந்ததை ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும். அதனைதொடர்ந்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், நீதிபதி TJ பிரபாகரன் 12 வயது நிரம்பிய சிறுமி மீது மாமா மேற்கொண்ட இந்த சம்பவத்தை அடுத்து, குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுழிய சிறையும் 3 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று ஆண்டு சிறை மற்றும் 30,000 ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


அரச சட்டத்தரணி MAM லாபீருடன் அரச சட்டத்தரணி அனுசங்கன், சட்டமா அதிபர், சார்பில் வழக்கை நெறிப்படுத்தினார்கள்.

குற்றவாளி சார்பில் சட்டத்தரணி.பிரகாஸ் ஆஜரானார்.


பாறுக் ஷிஹான்


கேரளா கஞ்சாவுடன்  கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்  நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே   தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) இச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்  போது  தாய்  தந்தை  மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இச்சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட நிலையில்   மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே நிந்தவூர் பொலிஸாரினால்  போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த  சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நிந்தவூர் பகுதியில் கஞ்சா கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் வகையில் பொலிஸார் விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன் போது  302 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் கைதானார்.குறித்த கைதான பெண்  வீட்டில் கேரளா கஞ்சாவை விற்பனை செய்பவர் என்பதுடன் கைதான பெண் சந்தேக நபரின்  தகவலுக்கமைய வீட்டின் பின்னால் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ கேரளா கஞ்சா தொடர் விசாரணையின் போது பிளாஸ்டிக் பீப்பாயில்  புதைக்கப்பட்டிருந்த  நிலையில் கேரளா கஞ்சா  பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது



 கைதான சந்தேக நபரின்  வாக்குமூலத்திற்கமைய  அருகிலுள்ள வெற்று காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சா

பொலிஸாரால் மீட்கப்பட்டது.

அத்துடன் இக்கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதான  ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்  தந்தை  மகன் உள்ளிட்டோர் விள்க்கமறியல் மற்றும் தடுப்பக்காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை   குறிப்பிடத்தக்கது.


 இச்சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான  சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான  பிரதி பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரில்  அம்பாறை  மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்   பிரதீப் குமாரவின் மேற்பார்வையில்   அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி தந்த நாணயக்காரவின்  நெறிப்படுத்தலில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே   தலைமையிலான குழுவினரால்   முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இச்சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நடவடிக்கை நிந்தவூர் பிராந்தியத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த கஞ்சா கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியாகும் என்றும்  தொடர்ந்தும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


23 வயதான, இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். 

 
முன்னதாக, வெளிநாட்டு யுவதி ஒருவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
குறித்த யுவதியினால் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட காணொளியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 


வெளிநாட்டுப் பெண் ஒருவரின் முன் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் கூறப்படும் நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

 

 

 

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பில் இந்தச் சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

இது சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

 

பொத்துவில் பொலிஸ் நிலையம்: 063 2248022

 

பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591168


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.