Showing posts with label Crime. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரமான உணவு பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக விசேட சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பரிசோதனைகளில், உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

பரிசோதனைகளின் போது உணவுப் பொருட்களின் தரம், அவற்றின் சேமிப்பு முறை, சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக பரிசோதிக்கப்பட்டன.

பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்தகைய பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


பாறுக் ஷிஹான்-


கலாவதியான மருந்துப் பொருட்களை பாவனைக்கு வைத்திருந்த கல்முனை தனியார் வைத்தியசாலைக்கு  100,000/= ரூபாய் அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் இயங்கி வருகின்ற பிரபல தனியார் வைத்தியசாலைக்கு அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி   தலைமையிலான புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த வைத்திசாலையில் பாவனைக்கு வைத்திருந்த காலாவதியான மருந்துப் பொருட்களை கைப்பற்றியதுடன் குறித்த வைத்திய சாலைக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த வழக்கானது   வியாழக்கிழமை(12)  கல்முனை நீதிவான்  நீதிமன்றத்தில் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்ட போது   குற்றத்தை ஏற்றுக் கொண்ட தனியார் வைத்தியசாலையின் முகாமையாளருக்கு நீதிமன்றத்தினால் 100,000/= ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த வழக்கின் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய புலனாய்வு உத்தியோகத்தர் இஷட்.எம் ஸாஜீத் குறித்த வழக்கு சம்பந்தமாக   மன்றில் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

 


பாறுக் ஷிஹான் 


தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றமுறையான அச்சுறுத்தல் மற்றும் பகிரங்க நொத்தாரிசு ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தற்போதைய அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜெயலக்‌ஷி டி சில்வா  என்பவரை, குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு (Discharge)   சட்டமா அதிபரால் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றில் நேற்று (11) விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

வழக்கின் பின்னணியும் குற்றச்சாட்டுகளும்:

கல்முனை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள B/940/22 எனும் இந்த வழக்கு தொடர்பாக பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட 'B' அறிக்கையில், சந்தேகநபரான நீதிபதிக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் 486ஆம் பிரிவு (குற்றமுறையான அச்சுறுத்தல்) மற்றும் 344ஆம் பிரிவு (அரசு உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்தல்) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பொலிஸ் அறிக்கையும் சட்டமா அதிபர் ஆலோசனையும் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் நீதிமன்றில் மேலதிக அறிக்கை (Further Report) ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், கௌரவ சட்டமா அதிபர் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயரத்ன கையொப்பமிட்டு அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பியிருந்த ஆலோசனைப் கோவை சமர்ப்பிக்கப்பட்டது. சந்தேகநபருக்கு எதிராக இனிமேல் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கவில்லை என்பதால், அவரை விடுவிக்க முடியும் என நீதவானுக்கு அறிவிக்குமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பொலிஸார் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையில் சில குறைபாடுகள் காணப்படுவதை அவதானித்த   நீதவான் கே.எல்.எம். சாஜித்  அந்த விடயங்களைத் திருத்தி இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட தரப்பின் வாதங்கள்:

பாதிக்கப்பட்ட தரப்பான முரளிதரன் என்பவர் சார்பில் சட்டத்தரணிகளான எம். முபாறக், அ.நிதான்சன் மற்றும் சுஹால்ஸ் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.  சட்டமா அதிபரின் இந்த ஆலோசனை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பின் எதிர்ப்பையும் அது தொடர்பான விடயங்களை முன்வைக்க ஒரு தினத்தை வழங்குமாறு அவர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

  சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட அரச சட்டத்தரணியான சந்தேகநபர் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள இந்த ஆலோசனையானது, அவரது செல்வாக்கின் பேரிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், அவரது வாக்குமூலத்தை நீதிமன்றில் பகிரங்கமாக பரிசீலிக்காமல் இவ்வாறு விடுவிக்க நடவடிக்கை எடுப்பது அநீதியானது எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் உறுதியாக நம்புகின்றனர். இது தொடர்பான எதிர்ப்புக்கள் மற்றும் சட்டக் காரணங்களை அடுத்த தவணையின் போது நீதிமன்றில் முன்வைக்க சட்டத்தரணிகள் எதிர்பார்க்கின்றனர்.

வழக்கு ஒத்திவைப்பு:

முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதவான்,   சட்டமா அதிபர் ஆலோசனை தொடர்பான பாதிக்கப்பட்ட தரப்பின் எதிர்ப்பைத் தாக்கல் செய்ய சந்தர்ப்பம் வழங்கி, வழக்கினை 2026 மார்ச் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

அடுத்த வழக்குத் தவணையின் போது பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையாகி விடயங்கள் முன்வைப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி (PC) எம். ஏ. சுமந்திரன்  நியமிக்கப்பட்டுள்ளமையும் இதன்போது நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டது

 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்காக ஆஜராகவுள்ளார்.


ஏற்கனவே அவரை விசாரணைக்காக ஆணைக்குழு அழைத்திருந்தபோதும் , சிங்கப்பூர் செல்வதால் தம்மால் வரமுடியாதென கோட்டாபய எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.


17 ஆம் திகதி ஆஜராகும் கோட்டபாயவிடம் சாட்சியம் பதிவு செய்யப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

 


ஜா-எல, புனித ஆனா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


இந்த வீடானது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘பட்டுவத்தே சாமர’ என்பவருடைய மனைவியின் இல்லம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகாலை வேளையில் இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல் இதன் பின்னணியில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

 


போலி பத்திரம் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன இந்த தண்டனையை விதித்தார்.

இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது, மொத்தம் 12 ஆண்டுகள்.

இருப்பினும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும், அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் மொத்தம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

61 வயதான இரண்டு குழந்தைகளின் தாயான வழக்கறிஞருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றது.

பொரளை பகுதியில் உள்ள ஒரு நிலத்திற்கு போலி பத்திரம் தயாரித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள், இவர் மீது சாட்டப்பட்டிருந்தது.

#NewsFirst #NewsFirstEnglish #LKA #SriLanka #LatestNews #HighCourt #Ja


 நூருல் ஹுதா உமர் 


புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தொடர்ச்சியான களப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
​புதன்கிழமை (04) சம்மாந்துறை கல்லரிச்சல், விழினயடி மற்றும் உடங்கா ஆகிய PHI பிரிவுகளில் விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

 இதன்போது ​வீதியோர சிற்றுண்டி விற்பனை நிலையங்கள், ​தயிர் விற்பனை நிலையங்கள், ​பேக்கரிகள், ​பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) ​போன்றன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

​பரிசோதனையின் போது காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் (Medical Certificate) இல்லாமை போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

​இந்த சோதனையில் முதன்முறையாக விதிமீறல்களில் ஈடுபட்ட 6 விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

​ கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அதனைச் சீர்செய்யத் தவறிய 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

​பொதுமக்களுக்கான வேண்டுகோள்: உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் மற்றும் காலாவதித் திகதி என்பவற்றில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். 

சுகாதார நடைமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

 


கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 882 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்


கல்பிட்டியின் ஆனவாசல் மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.


இதன்படி ஆனவாசல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சுமார் முந்நூற்று ஆறு கிலோகிராம் பீடி இலைகளும், முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சுமார் ஐநூற்று எழுபத்தாறு கிலோகிராம் பீடி இலைகளும் கைப்பற்றப்படடன.


கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளும் கெப் வண்டியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.


 


நூருல்  ஹுதா உமர்


சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் புதன்கிழமை  நடைபெற்ற வாராந்த உணவு நிலைய பரிசோதனையின் போது, தயிர் விற்பனை தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வர்த்தக நிலையம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு விற்பனை செய்யப்பட்ட தயிரின் தரம் தொடர்பில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, அதே இரவே கௌரவ நீதிமன்றில் ‘B’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது தயிரின் நிலையை நேரில் பரிசீலித்த சம்மாந்துறை கௌரவ நீதவான், சம்பந்தப்பட்ட விற்பனையாளரை கடுமையாக எச்சரித்ததுடன், சந்தேகத்திற்குரிய 58 தயிர் சட்டிகளையும் உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், வழக்கின் மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி தவணை இடப்பட்டது.

அதோடு, நேற்றைய தினம் மட்டுமே உணவு பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 6 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்களின் நலனை பாதிக்கும் வகையில் தரமற்ற மற்றும் சந்தேகத்திற்குரிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் செயல்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் எனவும், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்தும் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் சம்மாந்துறை சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம், தயாரிப்பு மற்றும் காலாவதித் திகதிகளை கவனமாகச் சரிபார்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பொதுச் சுகாதாரப் பணிகள் மக்களின் நலனுக்காக இடையறாது தொடரும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

 


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையின் நிழல் உலக அதிகாரம் வீழ்ந்ததா?

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மிகப்பெரிய திருப்பமாக, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே இன்று (25-02-2026) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியில் மேற்கொள்ளப்படும் இந்த அதிரடி நடவடிக்கை, கடந்த பல ஆண்டுகால அரசியல் மர்மங்களை உடைக்குமா?

இதேவேளை ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையானின் செயலாளராக பணியாற்றிய அசாத் மௌலானா என்பவர், சுரேஷ் சாலே தொடர்பான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலப்பகுதியில், சுரேஷ் சாலே இராணுவப் புலனாய்வுப் பணிப்பகத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.

எனினும், 2024 நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களால், அவர் தனது பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 தனது பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கைதான அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். 


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், அவர் கைதானார். 


இதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடையில் வைத்து நேற்று (21) கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரியை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்கான உத்தரவு நீதிமன்றத்தால் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.



 மன்னார் நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள் தொடர்சியாக பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுக்கு அமைவாக அடையாளப்படுத்தப்பட்ட சில உணவகங்கள் மீது சுகாதார துறையினர் சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


கடந்த வாரம் மன்னார் நகரசபை சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின்போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கி வந்த 3 உணவகங்கள் மற்றும் சிற்றூண்டிசாலை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறிப்பாக மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி வைத்தியசாலை பகுதியை அண்டிய உணவகங்கள் இரண்டின் மீதும் மன்னார் உப்புக்குளம் மற்றும் பள்ளிமுனை வீதியில் இரு உணவகங்கள் மீதும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறிப்பாக உரிய சுகாதார நடமுறையை பின்பற்றாமை, கழிவகற்றல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படாமை, அதிக அளவு இலையான்கள், கையுறை பயண்படுத்தாமை, சுகாதாரமற்ற முறையில் உணவுகளை களஞ்சியபடுத்தி வைத்திருந்தமை, சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்தமை உள்ளடங்களாக பல்வேறு குற்றங்களை அடிப்படையாக கொண்டு உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஜோசப் நயன்


 கந்தர தெவுந்தர பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 


காயமடைந்தவர் மாத்தறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அடையாளம் தெரியாத குழுவினர் காரொன்றில் வந்தே இத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

*மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தார்* மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ *பிரபாகரன்* .


கடந்த 2015 ஆம் ஆண்டு தை மாதம் 22ஆந் இடம் பெற்ற விவசாய காணி தொடர்பான பிணக்கின் காரணமாக நாகப்போடி மகேஸ்வரலிங்கம் என்பவரை கொலை செய்தார் என்ற அடிப்படையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து நபர்களுக்கு எதிராக கௌரவ சட்டமா அதிபர் அவர்களால் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வு பத்திரத்தை தாக்கல் செய்தார்.


அதில் இரண்டு சந்தேக நபர்கள் இறந்ததன் அடிப்படையில் மூன்று நபர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கை இடம்பெற்றது. 


கடந்த ஐந்து வருடங்கள் இடம் பெற்ற வழக்கில் வழங்கப்பட்ட சாட்சியாங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ *பிரபாகரன்* அவர்கள் 2026.02.20 ஆம் திகதியாகிய இன்று மூன்று எதிரிகளையும் குற்றம்வாளியாக கண்டு அதிமேன்மிகு ஜனாதிபதி குறிப்பிடுகின்ற தினத்தில் மரண த‌ண்டனையை நிறைவேற்றுவதற்கு சிபாரிசும் செய்துள்ளார். 


குறித்த வழக்கை கௌரவ சட்டமா அதிபர் சார்பாக *அரச சட்டத்தரணி எம். ஏ. எம். லாபீர்* அவர்கள் நெறிப்படுத்தியிருந்ததுடன், குற்றவாளிகள் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி பத்தினாதன் சுலோச்சன் ஆஜராகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


 ராவண எல்ல தளப் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் நடத்திய ரோந்துப் பணியின் போது, ராவண எல்ல சரணாலயத்தில் ஒரு குரங்கைக் கொன்று உரித்து இறைச்சியாக்கிய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


சந்தேக நபர்களும் வழக்குப் பொருட்களும் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மூன்று சந்தேக நபர்களுக்கும் ரூ.145,000/= அபராதம் விதிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்

 


அமரகீர்த்தி அத்துகோரல எம்.பி கொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை, 4 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறை, ஏனையோர் விடுதலை

 


ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் இன்று அதிகாலை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இன்று அதிகாலை குறித்த சிறுவன் உட்பட மூவர் அல்லைப்பிட்டி பகுதியால் வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தவேளை வீதி கடமையில் இருந்த பொலிஸார் அவர்களை வழி மறித்தனர். பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்தமையால் பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தினர்.


குறித்த துப்பாக்கி சூட்டில் சித்தங்கேணியை சேர்ந்த குறித்த சிறுவன் பலியாகியுள்ளார். அவருடன் சென்ற நல்லூர் மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த இருவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

 


அக்கரைப்பற்றில் விபத்தினால்,அண்மையில், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு  கடுங்காயமேற்படுத்திய 16 வயது மாணவனை எதிர்வரும் 16ந் திகதி வரை  சிறுவர் காப்பாத்தில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நிதவான் திருமதி. அபிநயா சூரியசிவா உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று, பொலிசார் குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

குறித்த சந்தேக நபர், இம்முறை க.பொ.த (சா/ த) பரிட்சைக்குத் தோற்றும் மாணவர் என்பதாலும்,16 வயது நிரம்பப் பெற்றவர் என்பதனாலும், இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்த முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம், ஊழல் குறித்து விசாரணை ஆணைக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.


இது தொடர்பாக ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, சபாநாயகர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாளர்கள் குழுவின் தலைவருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன, சபாநாயகருக்கு எதிராக நேற்றுமுன்தினம்(07) இலஞ்சம், மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்தார்.


பாராளுமன்ற வட்டாரங்களின்படி, நாட்டின் வரலாற்றில் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் ஒருவர் சபாநாயகர் மீது இந்த வழியில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளமை இதுவே முதல் முறை.


இந்தப் முறைப்பாடு சபாநாயகருக்கு எதிராக குலரத்ன 08 ஊழல், மோசடி மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளை சட்டவிரோதமாகப் பெறுதல், வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், பாராளுமன்ற ஊடகப் பிரிவுக்குச் சொந்தமான உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தாமல் பாராளுமன்றக் கணக்கின் கீழ் கூடுதல் மதிய உணவு வசதிகளைப் பெறுதல், விசாரணை அதிகாரியை சட்டவிரோதமாக நியமித்து பாராளுமன்றக் கணக்கிலிருந்து அவருக்கு பணம் செலுத்தி உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குதல், அரசுக்குச் சொந்தமான இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களை வழங்க சட்டவிரோதமாக மறுத்தல் மற்றும் அவரது ஊழல் மற்றும் மோசடியை மறைக்க முயற்சித்தல், பாராளுமன்ற ஊழியர்களின் நிர்வாகத்தில் சட்டவிரோதமாக தலையிடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளன.



 பாறுக் ஷிஹான்

கட்டாக்காலிகளை  பிடிப்பதில் பொலிஸார் மாநகர சபையினருக்கும்  இழுபறி நிலைமை ஏற்பட்டிருந்தது.அவை யாவும் சீர் செய்யப்பட்டு  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையில் மாநகர சபையினருடன்  தற்போது  இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டாக்காலிகளின் தொல்லை அதிகரித்து வருவதுடன் மக்களும் பல்வேறு சிரமங்களுக்குள் உள்ளாகி வருகின்றனர் என்ற செய்திகள் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வெளியாகி இருந்தன.

 பிடிப்பதில் பொலிஸார் மாநகர சபையினருக்கும்  இழுபறி நிலைமை ஏற்பட்டிருந்தது.அவை யாவும் சீர் செய்யப்பட்டு  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையில் மாநகர சபையினருடன்  தற்போது  இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டாக்காலிகளின் தொல்லை அதிகரித்து வருவதுடன் மக்களும் பல்வேறு சிரமங்களுக்குள் உள்ளாகி வருகின்றனர் என்ற செய்திகள் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வெளியாகி இருந்தன.

இந்த பிரச்சினை தொடர்பில் பொதுமக்கள் உட்பட பல தரப்பினரும் சுட்டி காட்டியுள்ள போதிலும் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்வியுடன் இப்பிரச்சினை தொடர் பிரச்சினையாக அதிகரித்திருந்தது.

கட்டாக்காலி மாடுகள் ஆடுகள் நாய்கள் உள்ளிட்ட மிருகங்களின் நடமாட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்விற்கு அச்சுறுத்தல் விடுகின்ற ஒரு பேசு பொருளாக மாறி  இருந்தது.

இவ்வாறான பிரச்சினைக்கு  கல்முனை வர்த்தக சங்கம் கல்முனை பொதுச்சந்தை சங்கம் பாடசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்கள்  மாநகர சபை மற்றும் பொலிஸாரிடம் குறிப்பிட்டும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை  சுமத்துவதுடன் குறித்த பிரச்சினை தீர்ந்த பாடில்லை என மக்கள் அங்கலாய்த்தனர்.

இது குறித்து  கல்முனை மாநகர சபையினரிடம் கேட்டால் பொலிஸார் தமக்கு ஒத்துழைப்பு இல்லை என கூறுகின்றார்கள்.ஆனால் பொலிஸாரிடம் இவ்வாறு கேள்வி கேட்டால் மாநகர சபை இவ்விடயத்தில் நடவடிக்கை எடுத்தால் பாதுகாப்பு தருவதற்கு தயாராக உள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்திருந்தார்.
 
இதற்கமைய தற்போது கட்டாக்காலி மாடுகள்   மாநகர சபையினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்புடன் இந்நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.