Showing posts with label Crime. Show all posts

 தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் இயக்குநர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது 



நாரஹேன்பிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

அவருக்குச் சொந்தமான ஆவணக் கோப்பு திருடப்பட்டது. - காவல்துறை ஊடகப் பேச்சாளர்- ,
 for

 



பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டம் கல்முனை   பிராந்தியத்தில்    விசேட   போக்குவரத்து பொலிஸாரின்   திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்று மாலை   இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது    கல்முனை புற நகரப்பகுதி  முதல் சாய்ந்தமருது  புறநகர் கடற்கரை வீதி  போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டது.

இத் திடீர் சோதனையில்    சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது,   தலைக்கவசம் அணியாது செல்வது,    ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது,   அதிவேகமாக செல்வது, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள்  தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள்  பொலிஸாரினால் வழங்கப்பட்டன.
 

இச்சோதனை நடவடிக்கையானது     அம்பாரை மாவட்ட  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார்  வழிகாட்டலில் இடம்பெற்றது.இதன் போது     கல்முனை  சம்மாந்துறை சவளைக்கடை சாய்ந்தமருது   பொலிஸ் நிலைய    பொலிஸார்   இணைந்து  முக்கிய சந்திகள்  பிரதான  புற நகர வீதிகளில்  திடீர் சோதனை நடவடிக்கை  மேற்கொண்டனர்.

குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது  82  பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  



கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக அறை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



முன்னாள் நீதவானுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (19) நீதிமன்றத்திற்கு வந்து, தனது அலுவலக அறையில் உள்ள தனிப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவரை, குறித்த அலுவலக அறைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் கூறினர்.


தற்போது, கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

\

(Tamilan News)


 ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஆதரவு வழக்கில் 10 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் விடுவிக்கப்பட்டனர்


மே 16, 2025 இரவு 8:53 மணிக்கு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் இன்று சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) அவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணைகள் முடிவடைந்ததாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததை அடுத்து, கொழும்பு கூடுதல் நீதிபதி பசன் அமரசிங்க அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.

வழக்கு கோப்பை மறுஆய்வு செய்த பின்னர், ஏப்ரல் 9 அன்று சட்டமா அதிபர் அவர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இந்த அறிவுறுத்தல்களின் பேரில், பன்னிரண்டு நபர்களையும் விடுவிக்க அரசுத் தரப்பு நடவடிக்கை எடுத்தது. 

 


கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது..


இத்துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சுமித்ராராம வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

அக்கரைப்பற்று கடற்கரையில் கச்சான் வியாபாரம் செய்யும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஹமட்லெப்ப (கச்சான் கொட்ட மாமா) 0715500198

என்பவரின் சைக்கிளினை கச்சான் பெட்டியுடன் இன்று இரவு 7.45 மணியளவில் யாரோ திருடிச் சென்றுள்ளனர் தகவல் தெரிந்தவர்கள் மேலுள்ள அப்பாவின் இலக்கத்திற்கு அறியத்தரவும்


மொனராகலையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுமார் 680 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஜனவரி 2023 இல் கைது செய்யப்பட்ட எஸ்எஸ்பி சிசிர குமார ஹேரத் இன்று சேவையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்

 


அதிகபட்ச சில்லறை விலையை விட ரூ.130க்கு 1 லிட்டர் பாட்டில் குடிநீரை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஒரு முன்னணி பல்பொருள் அங்காடி சங்கிலிக்கு எதிராக நுகர்வோர் விவகார ஆணையம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.


கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடி கிளைகளில் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, மே 8, 2025 அன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் எண். 5 இல் வழக்குத் தொடரப்பட்டது.


விசாரணையின் போது, ​​பல்பொருள் அங்காடி பிரதிநிதிகள் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். பின்னர் நீதிமன்றம் நிறுவனத்திற்கு ரூ.2 மில்லியன் அபராதம் விதித்தது.


விலை நிர்ணய விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக மேலும் ஆய்வுகள் தொடரும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது. (நியூஸ்வைர்)


பாட்டில் குடிநீருக்கான MRP பின்வருமாறு;


500 – 999 மில்லி பாட்டில்கள் – ரூ.70


01 -1.499 லிட்டர் பாட்டில்கள் – ரூ.100


1.5 -1.999 லிட்டர் பாட்டில்கள் – ரூ.130


02 – 2.499 லிட்டர் பாட்டில்கள் – ரூ.160


05 – 6.999 லிட்டர் பாட்டில்கள் – ரூ.350


 இதோ, நீதிமன்றத்தில் அவரது தொலைபேசி ஒலித்தது, அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, தடுப்புக் காவலில் இறந்தார். ஆனால் கேள்வி என்னவென்றால் - இது யாருக்கும் தற்செயலாக நடக்கலாம். இது வழக்கறிஞர்களுக்கு தினமும் நடக்கும். இது ஒரு தீவிரமான பிரச்சினை. நீதித்துறை சேவைகள் ஆணையத்துடன் விவாதித்து, நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் இந்த முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். - நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா #இலங்கை #பாராளுமன்றம் #கொழும்பு #SLnews

 


பொது உதவி🚨

சீதுவாவில் 2 பேர் கொல்லப்பட்டு 1 பேர் காயமடைந்ததில் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.


ஏதேனும் தகவல் உள்ளதா? சீதுவா காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும்

📞071 8591637

📞011 2253522


#SriLanka #Seeduwa #LKA


@SL_PoliceMedia

சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டது

 


மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர், பாலேந்திரன் சஷி மகேந்திரன் அவர்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி இன்று (28) அனுமதி வழங்கியுள்ளார்.


நீதிபதி பாலேந்திரன் சஷி மகேந்திரன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக, குறித்த சமூக ஊடக கணக்குகளுக்கு ஒன்பது கேள்விகளை அனுப்பி, அதற்கு தொடர்புடைய பதில்களைப் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு புலனாய்வு பிரிவு கோரியிருந்தது.


இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


நாட்டில் பரவலாகப் பேசப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் தனக்கும் அவதூறு விளைவிக்கும் வகையில், குறித்த சமூக ஊடக கணக்குகளில் பொய்யான தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளதாக நீதிபதி தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், இதற்காக தனது உத்தியோகபூர்வ உடையுடன் கூடிய புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




 பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 




 .சுகிர்தகுமார்           


  அசுவெசும கொடுப்பனவை பெற்றுத்தருவதாக கூறி நூதன திருட்டில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அவ்வாறு யாராவது உங்களை தொடர்பு கொண்டால் பிரதேச செயலக அசுவேசு நலன்புரி பிரிவுடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
இவ்வாறானதொரு சம்பவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கோளாவில் 3 பிரதேசத்தில் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக அறிய கிடைத்துள்ளது.
குறித்த பிரிவில் வாழும் அசுவெசும கொடுப்பனவு இதுவரை கிடைக்கப்பெறாத குடும்பம் ஒன்றிற்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட பெண் ஓருவர் உங்களது அசுவெசும கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் இதற்காக அவரது கணக்கிலக்கத்தை வழங்குமாறு கேட்டுள்ளார். அத்தோடு இரகசிய இலக்கம் வருகின்ற தொலைபேசி இலக்கத்தையும் அனுப்புமாறு கேட்டுள்ளார்.
பின்னராக ஆண் ஒருவர் தொடர்பு கொண்டு குறித்த கணக்கில் ஒரு தொகைப்பணத்தை வரவிலிடுமாறும் மேலதிக அசுவெசும பணம் அக்கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (28) பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த அசுவெசு கிடைக்கப்பெறாத பெண் உரிய உத்தியோகத்தரிடம் சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கிய நிலையில் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவ்வாறு யாராவது அழைத்தால் உடன் பிரதேச செயலக அசுவெசும பிரிவு உத்தியோகத்தரை நாடுமாறும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதேச செயலாளர் சார்பாக உதவிப்பிரதேச செயலாளர் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றார்


 நூருல் ஹுதா உமர்


பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற QR code மூலமான முறைப்பாட்டினை  தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  உணவகத்தில் நேற்று (25) திடீர் சோதனை செய்யப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின் அவர்கள் உடனடியாக செயல்பட்டு உணவு கையாளும் நிறுவனத்தினை பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

இதன் போது குறித்த நிறுவனத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்காக வெளிக்காட்டப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உணவாக உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும். ஆகவே உங்களது முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு அறியத்தாருங்கள் QR code ஊடாக வழங்கப்படும் பட்சத்தில் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.




 கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த  துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


 சம்பவத்தில் காயமடைந்த 29 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



பாறுக் ஷிஹான்

போதை மாத்திரைகளை நீண்ட காலமாக  இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில்   29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு   கிடைக்கப்பெற்ற   தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது செவ்வாய்க்கிழமை(22) இரவு  அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில்   சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது  சுமார் 700 க்கும் அதிகமான   போதை மாத்திரைகளை  தன்வசம் வைத்திருந்த  29 வயது சந்தேக நபர் கைதானார்.
 

மேலும்  சந்தேக நபர்  உள்ளிட்ட  சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம்  தொடர்பில்  பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில்   பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 


 


பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டம் கல்முனையில்  அமைந்துள்ள   இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து  பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் ஒருவரிடம் இருந்து  இலஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் ஒருவரையும் அங்கு கடமையாற்றும்  பாதுகாப்பு உத்தியோகத்தரையும்  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின்  கல்முனையில்  அமைந்துள்ள  பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றிவரும் கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர்    தன்னிடம் 01 லட்சம் ரூபாய் இலஞ்சம் கோருவதாக பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் ஒருவர்  கொழும்பிலுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (22)  கல்முனையில்  அமைந்துள்ள   இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் கூறியமைக்கு அமைவாக அவரின் காரியாலய பாதுகாப்பு உத்தியோகத்தரிடம்   இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதியை   பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் வழங்கியுள்ளார்.

இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகரையும் அங்கு கடமையாற்றும்  பாதுகாப்பு உத்தியோகத்தரையும்  கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர்(வயது-53)   மற்றும்   பாதுகாப்பு உத்தியோகத்தர் (வயது-47) இருவரையும் கல்முனை  நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) முன்னிலைப்படுத்திய போது  14 நாட்கள்  சந்தேக நபர்களை  விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் கடந்த காலத்தில் திருகோணமலை இலங்கை போக்குவரத்து சபையில் கடமையாற்றும் பேருந்து நடத்துநர் ஒருவர் மேற்கொண்ட நிதி மோசடி காரணமாக பணியில்  இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் அதற்கு  எதிராக விசாரணையின் போது   சட்ட நடவடிக்கை எடுக்காமலிருக்கும் பொருட்டும் மீண்டும் பணியில் குறித்த பேருந்து நடத்துநரை இணைத்து கொள்வதற்காகவும்  குறித்த பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநரிடம் இருந்து   மேற்படி கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் இலஞ்சம் கோரியதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


 #UpDate:

டான் பிரியசாத் சூடு தனது வீட்டில் இருந்தபோது சுடப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 


விவாகரத்து வழக்கின் தீர்ப்பை விரைவுபடுத்துவதற்காக ரூ. 200,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் (CIABOC) அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார். - Hirunews தெரிவிக்கிறது 


லஞ்ச ஒழிப்பு ஆணைய ஹாட்லைன் ☎️ 1954

 


பெரிய வெள்ளி தினமான நேற்றிரவு பொலன்னறுவை மன்னம்பிட்டியில் தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிதாரி கைது. தேவாலயத்தின் பாதிரியாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.