Showing posts with label Crime. Show all posts

p>


 பாறுக் ஷிஹான்


மருமகனின் தாக்குதலினால் மரணமடைந்த மாமனாரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குபட்ட வொலிவேரியன் கிராமத்தில் பிரிவு 09  இன்று(21)  அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபரான 32 வயதுடைய சந்தேக நபர் றிஸ்வி முகமட் அன்சார்  தலைமறைவாகியுள்ளார்.

திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடே கொலையில் முடிவடைந்துள்ளதாக அடிப்படை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அடிக்கடி இவ்விடயத்தினால் தனது மாமாவுடன் தகராறு செய்து வந்த மருமகன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிஸாரும்  சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி  மரணடைந்த 62 வயதுடய  மீராசாயிப் சின்னராசா என்பவரின் சடலம் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 


மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் பிரதான  பொலிஸ் பரிசோதகர் என் டி அபூபக்கர் விடுவிப்புச்  செய்யப்பட்டார்.


 ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும்  மஹேந்திரானி புலஸ்தினி என்று அறியப்பட்ட சாரா ஜெஸ்மின் என்பவருக்கு  பாதுகாப்பு வழங்கியமை   அல்லது மறைத்து வைத்தல் என்பனவற்றை குற்றச்சாட்டுகளாக உள்ளடக்கி  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழாக என் டி அபூபக்கருக்கு எதிராக மட்டக்களப்பு  மேல் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


குறித்த வழக்கு   கடந்த 18/07/2024 ம் திகதி அழைக்கப்பட்ட போது   வழக்கு தொடுனர் சார்பாக    பிரதி மன்றாடி யோகான் அபேவிக்கிரம  பிரசன்னமாகியதுடன்   எதிரி சார்பாக  சிரேஷ்ட சட்டத்தரணி   என் எம் ஷஹீட் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக. சட்டத்தரணி முஹம்மட்  சப்றாஸ்  பிரசன்னமாகினார்.


 கடந்த வியாழக்கிழமை வழக்கு அழைக்கப்ட்ட போது பிரதி மன்றாடியார் வழக்கை மேற் கொண்டு நடாத்துவதில்லை என்று விண்ணப்பம் செய்ததை அடுத்து,  மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ டீ ஜே பிரபாகரன் வழக்கிலிருந்து எதிரியை முற்றாக விடுவிப்புச் செய்து கட்டளையாக்கினார்.


குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட  முன்னாள் பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமார் வருட காலத்திற்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 



நெக்டர் குடிபானத்தில்,  சேர்க்கக்கூடாத  நிற மூட்டிகளைச்  சேர்த்து, விற்பனைக்கு காட்சிப் படுத்தி விற்பனை செய்த இரண்டு குற்றவாளிகளுக்கும் ரூபா 20 000/- அபராதம் விதிக்கப்பட்டது.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் குறித்த குற்றவாளிகளுக்கு எதிராக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


 முன்னாள் நாடாளு பமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்டமா அதிபர் இன்று ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார்.


இந்த விண்ணப்பம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் பிணை விண்ணப்பத்திற்கு எதிராக எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்வதற்கு மேலதிக திகதியை கோரினார்.


இதன்படி, கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தை ஜூலை 11ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.


டிஃபென்டர் பயன்படுத்தி இளைஞரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தண்டனையை சவால் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.


தெமட்டகொடையில் கடத்தப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட அமில பிரியங்கரவை அச்சுறுத்தல், தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் போன்ற 18 குற்றச்சாட்டுகளில் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றவாளியாக காணப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஒன்பதாவது குற்றவாளி, மேலும் அவர் குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டதால் அவர் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடரப்பட்டன. மேலும் நீதிமன்றம் ரூ. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது 20,000.

மிளகாய்த் துாளுக்குள், அரைத்த மா 30 சத வீதமும், உப்பும் கலந்து, நிற மாற்றம் செய்த குற்றத்திற்காகவும்,கலப்படம் செய்து விற்ற பொருளைக் காட்சிப்படுத்திய குற்றத்திற்காகவும், உணவுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்  விதிமுறைகளை மீறிய குற்றவாளிக்கு, ரூபா இருபதினாயிரம் தண்டப் பணம் விதித்து, அக்கரைப்பற்று நீதிமன்ற  கௌவ நீதிபதி, இன்றைய தினம் அபராதம் விதித்தார்.

 


முன்னாள் எம்.பி ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இளைஞர் ஒருவரை 2015 ஆம் ஆண்டு டிபெண்டரில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த இளைஞன் ஒருவனை கடத்திச் சென்று தவறான முறையில் தடுத்து வைத்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பை அறிவித்தார்.

இதன்படி, குற்றம் சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 20,000 ரூபா அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 06 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, பிரதிவாதி, இளைஞன் ஒருவரை கடத்திச் செல்வதுற்கு சதி செய்தமை மற்றும் அதற்கு உதவிய குற்றத்திற்காக குற்றவாளியாக அறிவிக்கப்படுவதாக நீதிபதி அமல் ரணராஜா திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.

ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதியின் ஆதரவாளர்கள் 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்ததை தண்டனைக்கு முன்னர் வாதி சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நினைவு கூர்ந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப, அவருக்கு 69 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிக்கும் திறன் நீதிமன்றத்துக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதிவாதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்துக்கொண்டு, விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரிந்த சாதாரண குடிமகனைக் கடத்திச் சென்று குடும்பத் தகராறுகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தமை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத விடயம் என சுட்டிக்காட்டிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பொதுமக்களின் நம்பிக்கையுடன் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இவ்வாறு செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

இது மிகவும் பாரதூரமான விடயம் எனவும், இந்த பிரதிவாதி சிறையில் அடைக்கப்பட வேண்டிய குற்றம் இது எனவும், தண்டனையை ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றுவது பொருத்தமற்றது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

மேலும், இந்த பிரதிவாதியின் போக்கில் யாராவது பயணிக்கத் தயாராக இருந்தால், சட்டரீதியாக வாழ்பவர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை சுட்டிக்காட்டும் வகையிலான தண்டனை இந்த பிரதிவாதிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் மேலும் கோரினார்.

பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், பிரதிவாதிக்கு மூன்று, நான்கு மற்றும் ஐந்து வயதுடைய மூன்று சிறு பிள்ளைகள் இருப்பதாகவும், அவர் சிறையில் அடைக்கப்பட்டால், அந்த பிள்ளைகளுக்கு பாரபட்சம் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எனவே, பிரதிவாதியை சிறையில் அடைக்காமல், அவருக்கு தளர்த்தப்பட்ட தண்டனை ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.

அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிபதி, பின்னர் இந்த தீர்ப்பை அறிவித்தார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி  மத்தேகொட நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அதன்படி இன்று மதியம் 12.30 மணியளவில் தண்டனை விதிக்கப்பட்ட  ஹிருணிகா பிரேமச்சந்திரவை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, தெமட்டகொட பிரதேசத்தில் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றிய அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு டிஃபென்டர் வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில்  ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 



அக்கரைப்பற்று நீர்ப்பாசனப்  பொறியியலாளர்,மற்றும் சாரதி ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த வழக்கு  கொழும்பு நீதவான் நீதிமன்றில் இனிமேல் அழைக்கப்படவுள்ளது.

 


பாறுக் ஷிஹான்)


ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதியில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய கடந்த புதன்கிழமை (19) இரவு குறித்த சந்தேக நபரை கல்முனை மத்ரஸா வீதிக்கு அண்மையில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர் வசம் இருந்து 5 கிராம் 80  மில்லி கிராம்  பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரின் தந்தை ஒய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தராவார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை(20)  கல்முனை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து 72 மணித்தியாலங்கள் சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் பல்வேறு  போதைப்பொருளுடன் பல தடவை கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


காத்தான்குடியில்  துப்பாக்கிச்சூடு; சித்தீக் சிபானியா காயம்!


காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில் இன்று (14) வெள்ளிக்கிழமை முற்பகல் வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்


இந்த வீட்டில் வசித்த இளம் பெண் ஒருவர் காயஙகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்


முற்பகல்  வேளை குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கியுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு துப்பாக்கி தாரி தப்பிச் சென்றுள்ளார்.


சித்தீக் சிபானியா (வயது32)  என்பவரே இச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதுடன் இப் பெண்ணின் கணவர்  அவுஸ்த்ரேலியா வில் இருப்பதாகவும்  பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர் 


ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்ட  காத்தான்குடி பொலிஸார் குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.வி‌ கமராக்களையும் சோதனை செய்து சந்தேக நபர் அடையாளப்படுத்தப்பட்டதையடுத்து சந்தேக நபரை தேடிய  பாதுகாப்பு துறையினர் இன்று மாலை ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கிலுள்ள வீடொன்றில் வைத்து சந்தேக நபரை  கைது  செய்துள்ளனர்.


சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின்  வீட்டில்  தடவியல் பொலீஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து  துப்பாக்கி ரவைகளையும் மீட்டுள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர் 


எம் எஸ் எம் நூர்தீன்

14.06.2024

 


யாழ் அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது "திருநங்கைகளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வீசிய இனந்தெரியாத குழு ஊடகவியலாளரின் வீட்டின் மீதும் தாக்குதல்.

பல லட்சம் பெறுமதியான சொத்துக்கள் நாசம்.


இலஞ்ச ஊழல் ஆணை குழுவினால் நேற்று மாலை, கைது செய்யப்பட்ட நீர்ப்பாசன பொறியியலாளரையும், அவரது சாரதியையும், இந்த மாதம் 27 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று கட்டளை பிறப்பித்துள்ளது 

குறித்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேற்றைய தினம் கொழும்பிலிருந்து வந்த இளைஞர் ஊழல் ஆணை குழு அதிகாரிகளால், அக்கரைப்பற்றில் வைத்து,கைது செய்யப்பட்டு இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் அவர்கள் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டிருந்த வேளையில் இந்த கட்டளை அக்கரைப்பற்று,  நீதிமன்ற கௌரவ நீதிபதி அவர்களினால் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

குறித்த சந்தேக குறித்த குற்றச்சாட்டப்பட்டவர்கள் ரூபா 2 லட்சத்தினை லஞ்சமாக பெற்றிருந்ததாக லஞ்ச ஊழல் ஆணை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.


 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்னவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு கம்பஹா நீதவான் சிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

 


றோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு அரசியலமைப்பை மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 


கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஒஸ்மன் புஸ்பராஜை 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் தெமட்டகொட ஒஸ்மன் புஷ்பராஜ், சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டியின் கூட்டு நடவடிக்கையில் நேற்று கொழும்பில் கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் அவரை 72 மணிநேரம் காவலில் வைத்து விசாரிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 


அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதியில், வாள்வீட்டு தாக்குதல் இன்று மாலை ஏழு முப்பது அளவில், நடத்தப்பட்டிருக்கிறது. 

இதில் ஆறு பேர் கடுங்காயமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறித்த வாள் வெட்டுச்  
 சம்பவத்துடன் தொடர்புற்றவர்களை தேடும் பணியில்  காவல் துறையினர், ஈடுபட்டுள்ளனர். இவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது.

 


இரண்டரை வயது மற்றும் 11 வயது இரு சிறுவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சித்திரவரை செய்த தாயார் கைது – மட்டு ஏறாவூரில் சம்பவம்.


(கனகராசா சரவணன்))


மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் வயது சிறுவன் ஒருவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கம்பால் அடித்து சித்திவதை செய்துடன் இரண்டரைவயது ஆண் குழந்தையை அடித்து துன்புறுத்திய  28 வயதுடைய தாய் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


 இதுபற்றி தெரியவருவதாவது


தமிழராகிய குறித்த தாயார் திருமணம் முடித்த பின்னர் கணவரைவிட்டுவிட்டு அவருக்கு பிறந்த குழந்தையடன் முஸ்லீம் மதத்திற்கு மதம்மாறி முஸ்லீம் நபர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார்.


அதன்பின்னர் அவனை விட்டுவிட்டு புத்தளம் பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவரை திருமணம் முடித்து அவருக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அவரை விட்டுவிட்டு இரு குழந்தைகளுடன் மீண்டும் ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்தில் வந்து தங்கி வாழ்ந்து கொண்டுவருகின்றார்.


இந்த நிலையில் கடந்த ஏப்பிரல் மாதம் தனது 11 வயதுடைய மூத்த பிள்ளை புகைத்தலில் ஈடுபட்டார் என அந்த சிறுவனை பிடித்து மரம் ஒன்றில் தலைகீழக கட்டி தொங்க விட்டு கம்பால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.


அதேவேளை இரண்டாவது இரண்டரை வயது மகனையும் அடித்து துன்புறுத்தி வருவதாக அந்த பிள்ளையின் தகப்பனான புத்தளத்தைச் சேர்ந்த சிங்;களவருக்கு தெரியவந்ததையடுத்து அவர் உடனடியாக ஏறாவூருக்கு சென்று தாயாரிடம் தனது மகனை தருமாறு கேட்ட நிலையில் சிறுவனை தரமுடியாதது என அவர் மறுத்துள்ளார்.


இதனையடுத்து குறித்த தந்தையார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவதினமான நேற்று இரவு பொலிசார் குறித்த தாயாரின்  கையடக்க தொலைபேசியை பரிசோதித்த போது இரு சிறுவர்களை துன்புறத்தும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கண்டுபிடித்துள்ளதையடுத்து அவரை கைது செய்ததுடன் இஇரு குழந்தைகளையும் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.


இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொhலிசார் தெரிவித்தனர்


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



அக்கரைப்பற்று மாநகர முன்னாள் முதல்வரான அதாவுல்லா சக்கி அவர்களினால், அக்கரைப்பற்று மாநகர சிற்றூழியரான றிஸ்வான் ஸனாஸ் என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தீங்கியல், அவதூறு தொடர்பான வழக்கானது இன்றைய தினம் அக்கரைப்பற்று மாவட்ட கௌரவ நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் அவர்களினால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த வழக்கானது தன்னையும், தனது தந்தையான  அதாவுல்லா அவர்களையும், முகநூலின் ஊடாக, அவமதிக்கும் விதமாக, மிகவும் அவதூறான பொய்யான அல்லது உண்மைக்கு புறம்பான பதிவுகளை பதிவு செய்தற்கு எதிராக  வழக்காளியின் சார்பில் சட்டத்தரணி சஸ்னா என்பவரால் தாக்கல், செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் எதிராளியோ அவரது சட்டத்தரணிகளோ, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் வழக்கு நடவடிக்கைளின் போது, தோன்றியிருக்கவில்லை என்பதால் இந்த வழக்கானது ஒருமுக விளக்கத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த தீங்கியல் வழக்கானது, குறித்த வழக்கு ஒருமுக விளக்கத்திற்கு எடுக்கப்பட்டிருந்தது. வழக்காளி தரப்பில் சாட்சியம் அளிக்கின்ற போது குறித்த எதிராளியினால் முகநூலில் பதிவு செய்யப்பட்டிருந்த பதிவுகள் அல்லது, தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை அல்லது அவதூறானவை என்பது பற்றி நிகழ்தகவுச் சமநிலையின் அடிப்படையில் நிரூபிக்க தவறி இருந்தமையினால், குறித்த வழக்கினை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பினை  வழங்கியது.

குறித்த வழக்கில், இத்தகைய தீர்ப்புக்கு மாவட்ட நீதிமன்றம் வருவதற்கான வழக்குச் சட்டங்களையும் தீர்ப்பு சட்டங்களையும் இன்றைய தினம் திறந்த நீதிமன்றத்தில் விளக்கி  வழக்காளிக்க்கு வாசித்து இந்த தீர்ப்பினை வழங்கி இருக்கின்றது.

 


 

 


சாய்ந்தமருது உணவகங்களில் இன்றும் திடீர் சோதனை; பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு!


நூருல் ஹுதா உமர் 


சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் இன்று (25) சாய்ந்தமருது பிரதேச உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்.


சில வாரங்களுக்கு முன்னர் உணவகங்களை பார்வையிட்ட அவர் உணவக உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவகங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.


அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம். ஜெரின், ஜே.எம்.நிஸ்தார் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள் மீது இன்று திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியத்தை கொண்டிருந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டது.


மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியங்களை கொண்ட உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டது. அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

 


யாழ். தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட போது குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.


இதனை அடுத்து குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. எனினும், குறித்த சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதரால் அன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இருப்பினும் குறித்த நபர் கடையிலிருந்து உணவிற்காக பற்றுச்சீட்டு, குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.


அதனைத் தொடர்ந்து மோசமான இறைச்சியை வழங்கியமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டது.


இந்த முறைப்பாட்டிற்கு அமைய நேற்றையதினம் குறித்த உணவகத்தை சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.


அத்துடன் தூய்மையற்ற முறையிலே உணவுகளை கையாண்டமை இறைச்சியினை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன்போது தெரிய வந்தன.


அதனைத் தொடர்ந்து குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நேற்று நீதிமன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், உணவகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.