Showing posts with label Crime. Show all posts





அக்கரைப்பற்று வெள்ளப் பாதுகாப்பு வீதியில் இன்று மாலை நான்கு மணி அளவில் தேனீர்சாலை ஒன்றில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாஜித் என்பவர் என்பவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் 28 வயது நிரம்பியவர் என்பதாக, தெரிவிக்கப்படுகிறது 


இவர் அக்கரைப்பற்று நீதிமன்ற சமுதாய சீர்த்திருத்த நடவடிக்கைளுக்கு உட்பட்டிருந்தவராவார். நேற்றைய தினம் அக்கரைப்பற்று, ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 4 மணிவரை அங்குள்ள நோயாளர் சாதாரண விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  அங்கிருந்து வியாழக்கிழமை மாலை 4.15  அளவில் எவரது முன் அனுமதியுமின்றி வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.  பின்பு அவர் வெளியாகி 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தேனீர்ச் சாலைக்கு வந்து கதிரையில் அமர்ந்த பின்னர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் கூறுகின்றன 

இதுபற்றிய விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்ற அதே வேளையில், அம்பாறை சொக்கோ பிரிவினரும், இன்று மாலை குறித்த இடத்திற்கு  விஜயம் செய்து, தடயவியல் சான்றிதழ் சம்பந்தமான பதிவுகளை மேற்கொண்டிருந்தார்கள் 


 


பாறுக் ஷிஹான்


கல்முனை நீதிவான்  நீதிமன்ற வளாகத்தில்  இருந்து  தப்பியோடிய சந்தேக நபர் தொடர்பில்   சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு  அறியத்தருமாறு  பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்  ஐஸ் போதைப்பொருள்,  ஆடு  மாடு சட்டவிரோதமாக கடத்தல்,   தங்க நகைகள் தொலைபேசி  திருட்டு,  போன்ற பல்வேறு  சம்பவங்களுடன்   தொடர்புடையவராவார்.

21 வயது மதிக்கத்தக்க "அகில்" என்ற பெயரை உடைய சந்தேக நபர் தொடர்பில் அறிந்தால்   0672 260 222 / 0771319631 ஆகிய இரு தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று கல்முனை நீதிவான்  நீதிமன்ற வளாகத்தில்  இருந்து  தப்பியோடிய சந்தேக நபர் துவிச்சக்கரவண்டி ஊடாக  அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதிக்கு வருகை தந்து அங்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (EP-VO-2377) எனும் மோட்டார் சைக்கிளை    திருடி சென்றுள்ளதாக  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில்  மோட்டார் சைக்கிள் உரிமையாளரினால் இன்றைய தினம் (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்குறித்த  முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் ஆலோசனையில்  பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ்  குழுவினர் மேலதிக  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

செய்தி பின்னணி


சந்தேக நபர் தப்பியோட்டம் -கல்முனை  நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

பாறுக் ஷிஹான்

நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை   தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று குறித்த சந்தேக நபர்  அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அழைத்து வரப்பட்டு விசாரணையின் பின்னர்   பிணை  வழங்கப்பட்டிருந்தது.இருப்பினும் குறித்த சந்தேக நபருக்கு பிணையாளிகள்  இன்மையினால் நீதிமன்ற உள்ளக வளாகத்தில் உள்ள    சிறை கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவ்வேளை குறித்த சந்தேக நபர்  சிறைச்சாலை   அதிகாரிகளிடமிருந்து தப்பி நீதிமன்ற சுவர் மேல் குதித்து தப்பி சென்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டில்  குறித்த சந்தேக நபர்    சந்தேகத்தில்     கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தப்பி சென்ற  சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்  என்பதுடன் சுமார் 21 வயது மதிக்கத்தகக்கவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.


 

பாறுக் ஷிஹான்


நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை   தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று குறித்த சந்தேக நபர்  அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அழைத்து வரப்பட்டு விசாரணையின் பின்னர்   பிணை  வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த சந்தேக நபருக்கு பிணையாளிகள்  இன்மையினால் நீதிமன்ற உள்ளக வளாகத்தில் உள்ள    சிறை கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவ்வேளை குறித்த சந்தேக நபர்  சிறைச்சாலை   அதிகாரிகளிடமிருந்து தப்பி நீதிமன்ற சுவர் மேல் குதித்து தப்பி சென்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டில்  குறித்த சந்தேக நபர்    சந்தேகத்pல்    கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தப்பி சென்ற  சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்  என்பதுடன் சுமார் 28 வயது மதிக்கத்தகக்கவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.


 

 


சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், இன்று (11) காலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


நிக்கவரெட்டிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


பாறுக் ஷிஹான்


சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலை சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

குறித்த முறைப்பாடுக்கு அமைய திங்கட்கிழமை  (10) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய குறித்த சிற்றுண்டிசாலை உரிமையாளருக்கு எதிராக  சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் மேறடகொள்ளப்பட்டு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியவேளை  ரூபா 20 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன்  எச்சரிக்கையையும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



பாறுக் ஷிஹான்

50 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய கேரளா கஞ்சாவினை சூட்சுமமாக கட்டிலின் கீழ் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர்  கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை திங்கட்கிழமை (10) மாலை மேற்கொள்ளப்ட்டது.

இதன் போது கடந்த   புதன்கிழமை(5) இரு  சந்தேக நபர்கள் பெருந்தொகையான கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு  சந்தர்ப்பங்களில்   கைது செய்யப்பட்டிருந்தனர்.5 நாட்களாக தடுப்புகாவலில் வைக்கப்பட்ட  மேற்படி இரு  சந்தேக நபர்களிடம் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினர்  மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.


 பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர்  குணசிறியின்  அறிவுறுத்தலுக்கமைய     மட்டக்களப்பு வலய  உதவி பொலிஸ் அத்தியட்சகர்   சம்பத்  ஆகியோரின் வழிகாட்டலில்    கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட  அதிரடிப்படை  அதிகாரிகள்  இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 


பாறுக் ஷிஹான்


கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற  தீ வைப்பு சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட குழு ஆரம்பித்துள்ளது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) முதல் லெஜன்ஸ் கிறிக்கட் 7 என்ற பெயரில் கடின பந்து சுற்றுக்போட்டியை நடாத்தும் லெஜன்ஸ்   விளையாட்டு கழகத்திற்கு சொந்தமான மைதான ஆடுகள விரிப்பு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக லெஜன்ஸ் கழகம் சார்பாக அதன் செயலாளரினால் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய  கல்முனை பொலீஸ் நிலைய பொலிஸாரும் அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவினரும் ( SOCO )  வரைவழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எரியூட்டப்பட்ட  மைதான ஆடுகள விரிப்பின்  பெறுமதி 120000  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது மைதானத்தில் கடமையாற்றும் காவலாளி கடமையில் இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதே போன்ற சம்பவம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 







ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.S.நளீம் இன்று காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து சிலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.



 பாறுக் ஷிஹான்


ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

 
இந்தச் சம்பவம்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை(2)  இரவு  அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்   இடம்பெற்றுள்ளது.


திருக்கோவில் விசேட அதிரடிப்படையினருக்கு  கிடைக்கப்பெற்ற   தகவலின் அடிப்படையில்  சோதனை நடவடிக்கை  மற்றும்  வீதி ரோந்து நடவடிக்கையின் போது  கல்முனைக்குடி 10  பகுதியை  சேர்ந்த  44 வயது சந்தேக நபர்  ஐஸ் போதைப் பொருளுடன் கைதானார்.


இவ்வாறு கைதான சந்தேக நபர் வசம் இருந்து  1 கிராம் 280 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபர் மற்றும்  சான்றுப் பொருள்கள் யாவும்  சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும்  இது தொடர்பான மேலதிக விசாரணைகள்  திருக்கோவில்  விசேட அதிரடிப் படையினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, சற்று முன்னர் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் –





 (கனகராசா சரவணன்)

ஏறாவூரில் நண்பியை தேடி வீட்டுக்கு சென்ற சிறுவர் நன்னநடத்தை இல்லத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நண்பின் தந்தையார் கைது ---


(கனகராசா சரவணன்)



ஏறாவூரில் நண்பியின் வீட்டுக்கு அவரை தேடிச் சென்ற சிறுவர் நன்னநடத்தை இல்லம் ஒன்றில் பராமரிப்பில் இருந்துவந்த 10 வயது சிறுமியை பாலியல்  துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 37 வயதுடைய நண்பின் தந்தையாரை நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



அம்பாறை மாவட்டதிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 10 வயது சிறுமியின் தாய் தந்தை சிறுமியை விட்டுவிட்டு வேவ்வேறு திருமணங்கள் செய்ததையடுத்து; கைவிடப்பட்ட  சிறுமியை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் அவரை பராமரிக்க சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் ஒப்படைத்தனர்.



இதனடிப்படையில் ஏறாவூரிலுள்ள சிறுவர் நன்னநடத்தை இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டுவந்த சிறுமி சம்பவதினமான நேற்று அருகிலுள்ள பாடசாலைக்கு சென்று பாடசாலை முடிந்தும்  பகல் 2.00 மணியாகியும் மீண்டும் இல்லத்துக்கு திரும்பாததையடுத்து நன்னடத்தை உத்தியோகத்தர்கள் அவரை தேடி பாடசாலைக்கு சென்றபோது அவர் அங்கிருந்து காணாமல் போயுள்ளார்  



இதனையடுத்து அவரை அந்த பகுதியில் தேடிவந்த நிலையில் அவர் அவரது நண்பியின் வீட்டுக்கு சென்றுள்ளர் என கண்டறிந்த உத்தியோகத்தர்கள் அங்கு சென்றபோது அங்கு சிறுமியின் நண்பி அவரது தாயார் வீட்டில் இருந்து வெளியே சென்றிள்ளதாகவும் அவரது தந்தையார் தனிமையில் இருந்த நிலையில் நண்பியை தேடி சென்ற சிறுமியை வீட்டினுள் கூட்டிச் சென்று அவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட நிலையில் சிறுமியை அங்கிருந்து மீட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது



இதனை தொடர்ந்து குறித்த நண்பின் 37 வயதுடைய கூலி தொழிலாழியான தந்தையாரை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

 

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கி தாரிகளை கைது செய்ய மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.


L

 


பாறுக் ஷிஹான்


காட்டு யானையொன்று பிரதான வீதி ஓரத்தில்   உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்துவில்-விக்டர் ஏத்தம்  பிரதேச   வீதி ஓரத்தில்  காட்டு யானையொன்று இன்று(17) காலை   உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
 
குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் காரணத்தை அறிவதற்காக பிரேத பரிசோதனை நடைபெறுவதுடன்  மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும்  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும்  பொத்துவில்  பொலிஸார் இணைந்து   தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


 மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

 



 


பாறூக் ஷிஹான்



கண்டி கெலிஓயா பிரதேசத்தில் பாத்திமா ஹமிரா என்ற 18 வயது பாடசாலை மாணவியை கடத்தி 50 இலட்சம் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர் பாடசாலை மாணவியுடன் ‌அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது ​​கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான்  ‌தெரிவித்தார்.

நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இளைஞன்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் தாயின் தம்பியான தனது மாமாவின் மகளையே இவ்வாறு அழைத்து வந்ததாக குறித்த கடத்தலை  நடத்திய இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜப்பானில் பணிபுரிந்ததாகவும், மாமாவிடம் தனது பணம் கொடுக்கப்பட்டதாகவும், பணத்தை தராததால் தான் இதுபோன்ற நடவடிக்கை எடுத்ததாகவும்  போலீசார் மேற்கொண்டு விசாரணையில் கூறியுள்ளார்.


இதேவேளை கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.


 


கண்டி, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தவுலகல மற்றும் கம்பளை பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக தனது நண்பி ஒருவருடன் தவுலகல நகருக்கு சென்று கொண்டிருந்தபோது, நேற்று முன்தினம் (11) காலை 7.15 மணியளவில் கறுப்பு நிற வேனில் வந்த சிலர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளனர்.

மாணவியை கடத்திச் சென்று மறைத்து வைத்த இளைஞன் முதலில் 50 இலட்சம் ரூபாவை மாணவியின் தந்தையான வர்த்தகரிடம் கப்பமாக கோரிய பின்னர் அதனை 30 இலட்சமாக குறைத்துள்ளார்.


அதன் பின்னர் மாணவியின் தந்தைக்கு சொந்தமான வேனைக் கேட்டு, 02 இலட்சம் வங்கியில் வரவு வைக்குமாறு மிரட்டியுள்ள நிலையில், அதற்கு பதிலளித்த மாணவியின் தந்தை 50000 ஆயிரம் ரூபாவை உரிய கணக்கில் வரவு வைத்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அறியவருவதாவது,

குறித்த கடத்தலை நடத்தியவர் மாணவியின் மைத்துனர் என தகவல் வெளியாகியுள்ளது.


மாணவி பாடசாலை சீருடை அணிந்து தனது தோழியுடன் வகுப்புக்கு சென்று கொண்டிருந்த போது, வழியில் நிறுத்தப்பட்ட வேனில் இருந்து கீழே இறங்கிய உறவினர் அவளை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றியுள்ளமை சி.சி. ரீ. வி கெமராக்களில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.


அப்போது, மாணவியை காப்பாற்றுவதற்காக வாலிபர் ஒருவர் வேனில் தொங்கிக் கொண்டு சுமார் 500 மீட்டர் தூரம் சென்று அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும் சந்தேக நபர் அவரை அடித்து வீழ்த்தியுள்ளார்.


பாடசாலை ஆசிரியர் ஒருவர் அருகில் இருந்த மோட்டார் சைக்கிளில் வேனை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்றுள்ளார் எனவும் கட்டுகஸ்தோட்டை நகரில்வைத்து அவர் வேனை தவறவிட்டதாகவும், பின்னர் பொலன்னறுவை நகருக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில், குறித்த வேனை பொலிஸார் நேற்று முன்தினம் (11) பிற்பகல் கண்டெடுத்துள்ளனர்.


கார் வாடகைக்கு விடப்பட்ட இடத்தில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்ததால் வேனைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவி கடத்தப்பட்டபோது வேனை ஓட்டிச்சென்ற நபர் பொலன்னறுவையில் வேனை கைவிட்டு வீடு திரும்பும்போது தவுலகல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


19 வயதுடைய மாணவி, சந்தேக நபரின் தாயின் சகோதரரின் மகள் எனவும், அவருக்கு மகளை திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறித்த சந்தேக நபர், ஜப்பானில் சில காலமாக தொழில் செய்து வருவதாகவும் சந்தேக நபர் மாணவி தரப்பில் விருப்பமில்லாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாணவியை கண்டுபிடித்த பின்னரே அவர் மூலம் பெறும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் தெளிவான தகவல்களை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலன்னறுவை பிரதேசத்தில் குறித்த மாணவியை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பேரில் தவுலாகல மற்றும் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 



வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் வகுப்பு தவணை பரீட்சை வினாத்தாள்கள் மூன்று, தேர்வுக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.


அது மாகாண கல்விச் செயலாளரின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட குழு 5 உறுப்பினர்களைக் கொண்டதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


மேலும், சம்பவம் தொடர்பாக சிறப்பு தணிக்கையை தொடங்க மாகாண கல்வி செயலாளர் சிறிமேவன் தர்மசேன அறிவுறுத்தியுள்ளார்.


இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண தரம் 11 பரீட்சையை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தற்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


இதுவரை கிடைத்த தகவல்களின் படி, தவணைப் பரீட்சைக்கான சிங்கள இலக்கியம், அறிவியல் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.


இந்த சம்பவம் குறித்து பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.

 


இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.


அத்துடன் , 1,500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பை அறிவித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, உத்தரவிட்டார்.


2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதியன்று கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், "இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதை துடைத்தெறிய வேண்டும்" என்ற கருத்தின் ஊடாக இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி தண்டனைச் சட்டத்தின் பிரிவு 291இன் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர்.

இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற இல.03 இல் கௌரவ

நீதவான் இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் கீழ் 291B சட்டப்பிரிவின் கீழ் குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாக காணப்பட்டார்.


குற்றம் சாட்டப்பட்ட ஞானசார தேரரின் சட்டத்தரணிகள், மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்து அவரது உடல்நிலையை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனையை வழங்குமாறு மன்றாடினர்.


கடந்த 2016ஆம் ஆண்டு சந்தேகநபர் “இஸ்லாம் ஒரு புற்று நோய், அதை அவர் துடைத்தெறிவார்” என்று மேற்கோள் காட்டி வெறுப்புணர்வை ஏற்படுத்திய உரையின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.


இந்த அறிக்கையைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் முறைப்பாடுகளை முன்வைத்தனர்.


கிருலப்பனை பொலிஸாரால் நீண்ட கால விசாரணையின் பின்னர் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


மூத்த சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினால் முதலாவது முறைப்பாட்டாளரின் நலன்கள் கவனிக்கப்பட்ட

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.