Showing posts with label Crime. Show all posts

 


திருகோணமலையிலுள்ள சீன துறைமுக நகர், 5ஆம் கட்டை பகுதியில் இன்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனம் தெரியா இருவர் இத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதே பகுதியைச் சேர்ந்த 59 வயதான நபரே இச் சம்பவத்தில் உயிரழந்தவர் ஆவார்.


மேலதிக விசாரணைகளை சீன துறைமுக நகர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகின்றது

களுவாஞ்சிக்குடி நீதிமன்ற பதில் பதிவாளர், களுவாஞ்சிகுடி பொலிசாரால் . நீதிமன்ற  காப்பகத்திலிருந்த சுமார் 1 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட  நகைகள் காணாமல் போனதை அடுத்து 20.11.2025 அன்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார். 

குறிப்பிட்ட நகைகள் அனைத்தும் வழக்குகளுடன் தொடர்புடையாதாகும். குறிப்பிட்ட நகைகள் நீதிமன்ற  சான்றுப் பொருட்கள் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து காணாமல் போயிருந்தது, கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த சந்தேக நபரான பதில் பதிவாளரின் சொந்த ஊரான வாழைச்சேனைக்கும் சென்று களுவாஞ்சிக்குடி பொலிசார்  இன்றைய தினம் விசாரணைகளை  மேற்கொண்டிருந்ததாக தெரியவருகின்றது. 

விசாரணைகளின் பின்னர், இவர் இன்று மாலை களுவாஞ்சிக்குடி கௌரவ நீதிபதி திரு.பிரதிபன் முன்னிலையில், களுவாஞ்சிக்குடி பொலிசாரால், ஆஜர் படுத்திய வேளையில் குறித்த பதிவாளரை டிசம்பர் மாதம் 5 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற கௌரவ நீதிபதி இன்று கட்டளை பிறபிப்பித்தார்.



 *மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்பு* 


தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 21.11.2025ஆந் திகதி  மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி TJ பிரபாகரன் ஐயா தீர்ப்பளித்துள்ளார்.


குறித்த சிறுமியை கடைக்கு போகவேண்டும் என்று கூட்டிச்சென்று தனது வீட்டிற்க்கு அழைத்து சென்று  கதவை அடைத்து குற்றம் புரிந்ததாக நீதிமன்றில் அழுத வண்ணம் சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.


குறித்த சிறுமி, பின்னர் பாடசாலையில் பாலியல் விடயங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் சொல்லித்தந்தார்கள் எனவும், அவ்வாறு நடந்தால் சொல்லவேண்டும் என ஆசிரியர் சொன்னார்கள் என்றும், பின்னர் சிறுமி சோகமாக இருப்பதை பார்த்து காரணம் ஆசிரியர் கேட்டதாகவும், சிறுமி நடந்ததை ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும். அதனைதொடர்ந்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், நீதிபதி TJ பிரபாகரன் 12 வயது நிரம்பிய சிறுமி மீது மாமா மேற்கொண்ட இந்த சம்பவத்தை அடுத்து, குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுழிய சிறையும் 3 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று ஆண்டு சிறை மற்றும் 30,000 ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


அரச சட்டத்தரணி MAM லாபீருடன் அரச சட்டத்தரணி அனுசங்கன், சட்டமா அதிபர், சார்பில் வழக்கை நெறிப்படுத்தினார்கள்.

குற்றவாளி சார்பில் சட்டத்தரணி.பிரகாஸ் ஆஜரானார்.


பாறுக் ஷிஹான்


கேரளா கஞ்சாவுடன்  கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்  நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே   தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) இச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்  போது  தாய்  தந்தை  மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இச்சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட நிலையில்   மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே நிந்தவூர் பொலிஸாரினால்  போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த  சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நிந்தவூர் பகுதியில் கஞ்சா கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் வகையில் பொலிஸார் விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன் போது  302 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் கைதானார்.குறித்த கைதான பெண்  வீட்டில் கேரளா கஞ்சாவை விற்பனை செய்பவர் என்பதுடன் கைதான பெண் சந்தேக நபரின்  தகவலுக்கமைய வீட்டின் பின்னால் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ கேரளா கஞ்சா தொடர் விசாரணையின் போது பிளாஸ்டிக் பீப்பாயில்  புதைக்கப்பட்டிருந்த  நிலையில் கேரளா கஞ்சா  பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது



 கைதான சந்தேக நபரின்  வாக்குமூலத்திற்கமைய  அருகிலுள்ள வெற்று காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சா

பொலிஸாரால் மீட்கப்பட்டது.

அத்துடன் இக்கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதான  ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்  தந்தை  மகன் உள்ளிட்டோர் விள்க்கமறியல் மற்றும் தடுப்பக்காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை   குறிப்பிடத்தக்கது.


 இச்சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான  சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான  பிரதி பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரில்  அம்பாறை  மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்   பிரதீப் குமாரவின் மேற்பார்வையில்   அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி தந்த நாணயக்காரவின்  நெறிப்படுத்தலில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே   தலைமையிலான குழுவினரால்   முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இச்சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நடவடிக்கை நிந்தவூர் பிராந்தியத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த கஞ்சா கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியாகும் என்றும்  தொடர்ந்தும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


23 வயதான, இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். 

 
முன்னதாக, வெளிநாட்டு யுவதி ஒருவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
குறித்த யுவதியினால் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட காணொளியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 


வெளிநாட்டுப் பெண் ஒருவரின் முன் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் கூறப்படும் நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

 

 

 

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பில் இந்தச் சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

இது சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

 

பொத்துவில் பொலிஸ் நிலையம்: 063 2248022

 

பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591168


 


2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, நகராட்சிப் பகுதிக்குள் காற்று மாசுபாட்டைக் குறைக்க, குறிப்பாக குப்பைகளை எரிப்பதைத் தவிர்ப்பதன் மூலம், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று யாழ்ப்பாண மாநகர சபை உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.


மருத்துவ பயிற்சியாளரான டாக்டர் உமாசுகி நடராஜா தாக்கல் செய்த ரிட் மனு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


2017 ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் (கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பிற எரியக்கூடிய பொருட்களை திறந்தவெளியில் எரிப்பதைத் தடை செய்தல்) விதிமுறைகள் எண் 1 இன் கீழ், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 2017 ஆம் ஆண்டு ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் ரவீந்திரநாத் தாபரே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.



பாக்கிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் லோவர் டிர் பகுதியில் உள்ள வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், சந்தேகநபர்கள் நஷீம் ஷாவின் வீட்டின் வாயில் கதவை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக நஷீம் ஷாவின் தந்தை பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.


இந்நிலையில், இலங்கை அணியுடனான ஒருநாள் தொடர் போட்டிகளில் பங்கேற்பதற்காக நஷீம் ஷா தற்போது ராவல்பிண்டியில் தங்கியுள்ளார். சம்பவம் அவரது கிரிக்கெட் தொடரில் பங்கேற்புக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என பாக்கிஸ்தான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.


மேலும், அவர் இன்று நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

 


வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற கார் ஒன்றை வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் துரத்திச் சென்று நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

 

குறித்த கைது நடவடிக்கையின்போது கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நேற்று (08) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் கைத் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

அதன்படி, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் இந்த துப்பாக்கியை மற்றொரு நபரிடம் வழங்குவதற்காக எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

 

இதனை அடுத்து குறித்த நபரையும் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாபொல பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தெஹிபால மல்லி என்றழைக்கப்படும் பாதாள உலக பிரமுகரின் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த மீனவர்களை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



 அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் இன்று (4) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

 

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


 


பாறுக் ஷிஹான்


நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   அல் மஸ்ஹர் வீதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(2) 32 வயதுடைய குறித்த குடும்பஸ்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 1000 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 750 மில்லி கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருளுடன் கைதான  குறித்த சந்தேக நபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான  சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான  பிரதி பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரில்  அம்பாறை  மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்   பிரதீப் குமாரவின் மேற்பார்வையில்  உதவி  பொலிஸ் அத்தியட்சகர்  1 சம்பத் விக்ரமரத்ன மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும்   போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின்  பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா  தலைமையிலான பொலிஸ் குழுவினர்    இந்த சோதனையினை  மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

 


ஐஸ், ஹெரோயினுடன் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட படகிலிருந்த 06 சந்தேகநபர்களையும் வழிநடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் காலியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.


 


குச்சவெளி பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக இலஞ்சம் வாங்கும்போது, ​​இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் இன்று (31) காலை கைதுசெய்யப்பட்டார்.


கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான பிரதேச சபைத் தலைவர், நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சோதனை அதிகாரிகளால் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.  சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் முபாரக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், மேலும் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழ் அரசு  


 கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துக்கு உதவியாக இருந்தார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணியை மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய, தடுப்புக் காவல் உத்தரவைப் பெற எதிர்ப்பார்ப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.


இக் கொலையின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான கெஹெல்பத்தர பத்மே தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விடயங்களை சமர்ப்பித்தபோதே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை 


 


நீதித்துறை சேவை ஆணையம் (JSC), வெல்லவாய மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் மஞ்சுள ரத்நாயக்கவை இடைநீக்கம் செய்துள்ளது.


காவல்துறை மா அதிபர்இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IGP) அவரது நீதிமன்ற தீர்ப்புகள் பல தொடர்பாக பிரதம நீதியரசருக்கு  அளித்த புகாரைத் தொடர்ந்து JSC நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


வெளிநாட்டு பயணத் தடைகளை நீக்குதல் மற்றும் நீதிமன்றக் காட்சிப் பொருட்களாக சமர்ப்பிக்கப்பட்ட பொருட்களை விடுவித்தல் தொடர்பான வழக்குகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை கவனம் செலுத்துகிறது.


முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒரு நீதவானாகப் பணியாற்றிய மஞ்சுள ரத்நாயக்க, சமீபத்தில் வெல்லவாய நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

Rep//AsianMirror

 


தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவானந்தனின் வீட்டிற் விஷமிகளினால்  தீ வைக்கப்பட்டு வீடு முற்றாக எரிந்துள்ள நிலையில் அவ் சம்பவம் தொடர்பில் நான் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தேன். என்னுடன் ஏறாவூர் பற்று  துணைத் தவிசாளர் சர்வானந்தன் அவர்களும் சமூகமளித்திருந்தார்.


தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று பிரதேச புல்லுமலை வட்டார உறுப்பினர் சிவானந்தன் அவர்கள் மக்களின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக மிகவும் தீவிரமாக செயற்பட்டு வரும் ஒருவர். அவர் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையை நிறுவப்படுவதற்கு எதிராக மிகத் தீவிரமாக செயற்பட்டு அதற்கு எதிராக பிரதேச சபையினால் பிரேரணை ஒன்றை முன்வைத்து அதன் ஊடாக புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்துவதற்கான பிரேரணை நிறை வேற்றப்பட்டுள்ளது.


இவ்வாறான சூழ்நிலைகளில்  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவருடைய வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


இரு கிழமை சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத விடத்து எமது வலியுறுத்தலில் விசாரணைகள் மேற்கொள்ளப் படுகின்றது.  இவ் விசாரணைகளை நடாத்தி குறித்த சம்பவம் யாரால்? எதற்காக? என்ன நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது குறித்து மிக வரைவில் கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள்,‌ உறுப்பினர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


#Shanakiyan #MP #TNA #ITAK #Tamil #Parliament #lka



கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் ஒருவர் இன்று லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


வழக்கு கோப்பின் சான்றளிக்கப்பட்ட நகலை வழங்குவதற்காக ரூ. 10,000 லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக CIABOC அறிக்கை தெரிவிக்கிறது.


இன்று காலை கெசல்வத்த காவல் நிலையத்திற்கு அருகில் இந்த கைது நடந்தது. சந்தேக நபர் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்

 


Rep/ModernGhana.com
இலங்கை  பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது ஹிஸ்புல்லா 2 மில்லியன் டாலர் மோசடியில் ஏமாற்றப்பட்டார்
கானாவின் ஊடக அறிக்கைகளின்படி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது ஹிஸ்புல்லா, போலி தங்க ஒப்பந்தத்தில் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇭
கானா நாட்டின், ​அக்ராவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

​குற்றம் சாட்டப்பட்ட பதினொருவருக்கும் தலா 500,000 கானா செடிகள் (சுமார் $33,000) ஜாமீன் தொகை விதிக்கப்பட்டது.

​சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பணத்தைப் பெற்ற பிறகு, அந்த குழுவினர் தங்கத்தை வழங்கத் தவறியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

​தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் தங்கமாக இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் உலோகப் பொருட்களைக் கைப்பற்றினர். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஆய்வகச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

​குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றம் செய்யச் சதி செய்தல், பொய்ப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் மேலும் அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.


 


வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் மஹரகமவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.