Showing posts with label Crime. Show all posts

 


நேற்றிரவு, காலியில் உள்ள சில்லறை ஜவுளிக் கடையொன்றின் உரிமையாளர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


அதிகாரிகளின் கூற்றுப்படி, காலியில் உள்ள டிக்சன் வீதியில் காருக்குள் இருந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் வகையில் கூச்சலிட்டு, சத்தமிட்டு, அநாகரிகமாகச் செ செயற்பட்டவருக்கு 6 மாத கடூழிய சிறைத் தண்டனையும் ரூபா 1500.00 அபராதமும் அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நீதிபதி ஹம்சா அவர்களினால் விதிக்கப்பட்டது.

நேற்று வியாழக் கிழமை இந்தச் சம்பவம் இடம் பெற்றது.

குறித்த குற்றவாளி ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா பகுதியினைச் சேர்ந்தவர்.

 


மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிய பின் பணம் கொடுக்காது முச்சக்கரவண்டியில் தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து கடந்த சனிக்கிழமை (09) முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


மட்டு நகரிலுள்ள மதுபானசாலைகள் இரண்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை பகல் முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று மதுபானசாயில் அரைப் போத்தல் மதுபானத்தை வாங்கிவிட்டு பணம் முச்சக்கரவண்டியில் இருப்பாதாகவும் கொண்டுவந்து தருவதாக தெரிவித்து மதுபானத்தை வாங்கி கொண்டு பணத்தை கொடுக்காது முச்சக்கரவணடியில் தப்பி ஓடிய சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.சி. கமராவில் பதிவாகியதுடன் அது ஊடகங்களில் செய்தியாகவும் வெளியாகியது.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் பரிசோதகர் வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவராவார்.

அவர் சம்பவதினத்தன்று பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்று இந்த மோசடியில் ஈடுபட்ட பின்னர் அவர் வாகரை பொலிஸ் நிலையத்திற்கு திரும்பாது தலைமறைவாகியுள்ளார்.

குறித்த பொலிஸ் பரிசோதகர் ஏற்கனவே தங்க நகையை கொள்ளையடித்த குற்றச்சாட்டு மற்றும் இதுபோன்று 7 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 7 முறை பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்க்கது

 


அக்கரைப்பற்றில் ஆயிரக்கணக்கான  

மக்கள் உணர்வுபூர்வமாக ஒன்று கூடி போதைப் பொருளுக்கு எதிரான பிரகடனம் 


அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்று வட்டத்தில்  போதை பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிரான தன்னிலை பிரகடனம் இன்று (01) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வெகு சிறப்பாக நடை பெற்றது


 


(வி.சுகிர்தகுமார்) 


 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னப்பனங்காடு பிரதேச வீடொன்றில் தாலி மாலை உள்ளிட்ட சுமார் 14 இலட்சம் மதிப்பிடத்தக்க 9 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று (26) அதிகாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் வீட்டின் உரிமையாளரால் அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டின் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் பூர்த்தி செய்யப்படாத மேல் தளத்தின் கதவு வழியாக உள் நுழைந்த இரு கள்வர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியினையும் மாலையினையும் வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாக வீட்டு உரிiமாளரால் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தாலியும் மாலையும் வெட்டப்படுவதை உணர்ந்த பெண் நித்திரையில் இருந்த மீண்டு கள்வனை தடுக்க முற்பட்டபோது பெண்ணை கீழே தள்ளிவிட்டு கள்வன் தப்பித்துச் சென்றதாகவும் அவரால் கூறப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அன்மைக்காலமாக கொள்ளை போதைப்பொருள் கைது என்பன அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 38 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் தடுப்புக்காவலில் 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா இன்று (21)உத்தரவிட்டார்.
திருக்கோவில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாசக்தி கிராமத்தின் வீதியில் வைத்து; திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் நேற்று (20)மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது அதிக நிறையுடைய போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதிக நிறையுடன் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி குறித்த நபரை அம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதிக்கமைய அக்கரைப்பற்று பொலிசார் நீதிமன்றில் ஆஜர்படுத்தி பொலிஸ் தடுப்புக்காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரியபோதே நீதவான் இவ்வாறு அனுமதி வழங்கினார்.
தடுத்து வைக்கப்பட்ட நபரை 72 மணித்தியாலங்களின் பின்னர் நீதிமன்றில் மீண்டும் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அக்கரைப்பற்று பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
அதிகளவான நிறையுடன் ஜஸ் போதைப்பொருள் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
5 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்படுமிடத்து அவருக்கு மரண தண்டனை வழங்க முடியும் என சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் 38 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் இன்று ஒருவர் நபர் கைது செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

 பாறுக் ஷிஹான்




கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை(9) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஆஜர்படுத்தப்பட்ட  இரு சந்தேக நபர்களையும்  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகளை பொறுப்பேற்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் கடந்த 7.8.2023 அன்று சாய்ந்தமருது பகுதியில் வைத்து   கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில்  தற்காலிக சிற்றுழியர்களாக  கடமையாற்றிய இரு சந்தேக நபர்களை   கைது செய்திருந்தனர்.முஹமது நகீப் அஸ்மத் சஹி(வயது-25) மற்றும்   அப்துல் கரீம் முஹம்மது பர்சான் (வயது-26) ஆகிய இருவருமே கடந்த காலங்களில் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளில் வரி அறவீடு செய்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களாவர்.கைதானவர்கள் முக்கிய வாக்குமூலங்களை வழங்கியுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் குறித்த வரிமோசடியுடன் தொடர்புடைய பல நபர்கள்  கைது செய்யப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

காலங்களில் இவ்வரி மோசடி தொடர்பில்  விசாரணைகள் பல தரப்பினரால்  மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்    பலர் கைது செய்யப்பட்டு    பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.


அத்துடன் இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்தில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அத்துடன் இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்தில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அத்துடன் குறித்த நிதிகையாடல் சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில்  கல்முனை பொலிஸ் நிலையம் அம்பாறை விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் விசாரணை  பொறுப்பளிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில்   குற்றப்புலனாய்வு பிரிவிடம் இவ்வழக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


பாறுக் ஷிஹான்

 மனித பாவனைக்கு உதவாத மல்லியை  பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலை மீது  அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினர்  திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற  முறைப்பாட்டிற்கமைய அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன வழிகாட்டலில்   நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின்  புலன் விசாரணை அதிகாரிகளினால் கல்முனை-03   அம்மன் கோயில் வீதியில்  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த 84875 கிலோ  மல்லி மற்றும் 300 கிலோ நிறச்சாயம் (டை) என்பன   பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலையே இவ்வாறு     முற்றுகையிடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை(8) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே  மனித பாவனைக்கு உதவாத மல்லி நிறச்சாயம் இட்டு  விற்பனை செய்வதற்கு தயார் படுத்தபட்டு  களஞ்சிய அறையில் பதுக்கி வைத்திருந்த  மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்   44 வயது மதிக்கத்தக்க  சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு    குறித்த  களஞ்சியசாலை   பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்பட்டு  எச்சரிக்கையுடனான  அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழக்கு தாக்கல் நடவடிக்கையும்  முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையுடன் இணைந்து இச்சுற்றி வளைப்பில் திருக்கோவில்  விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வு பிரிவினரும் பங்கேற்றதுடன்   அம்பாறை மாவட்டத்தில்  இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத பொருட்களை களஞ்சியப்படுத்தும்  வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கெதிராக நீதவான் நீதிமன்றில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்துக்கமைய வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம், அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்வதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இவ் உர விற்பனை நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.


 


பொத்துவிலில், பெளத்த மதகுருவினை அண்மையில் தாக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட 9 சந்தேக  நபர்களுக்கு எதிராக, பொத்துவில் நீதிமன்றில் இன்றைய தினம் ஆள் அடையாள அணிவகுப்பு நடத்தப் பெற்றது.

 தாக்குதலுக்கு இலக்கான சங்கைக்குரிய பெளத்த மதகுரு , அடையாள அணிவகுப்பில் உரிய சந்தேக நபர்கள் எவர்களையும் அடையாளம் காட்டாடததால், இவர் களை பிணையில் விடுவிக்குமாறு, சந்தேக நபர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளான ஹில்மி, முனாசுடீன், வதூத், சாதிர் ஆகியோர் வாதிட்டனர்.

பொத்துவில் நீதிமன்ற கெளரவ  நீதிபதி A C றிஸ்வான் குறித்த சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்துள்ளார்.

 


அட்டாளைச்சேனையில் அண்மையில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்கள் இருவர், வியாழக்கிழமை அன்று அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரையும்  அச்சுவேலி  சீர்திருத்தப் பாடசாலையில்  எதிர்வரும் பத்தாம் திகதி வரை வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நீதிபதி ஹம்சா அவர்கள் கட்டளை பிறப்பித்தார்.

குறித்த இந்த மாணவர்களின் தாக்குதலினால், காயமுற்றுப் பாதிப்புற்ற ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் தொடுத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றிருந்தது.


 



அட்டாளைச்சேனை  மத்திய கல்லூரி இரு மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் ஆசிரியர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில்  அனுமதி 




கடந்த  (26) ந் திகதியன்று அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் கற்பிக்கும் T.கோகுலவாசன் Bsc  ஆசிரியர் மீது அதே கல்லூரியில் உயர் தரம் கற்றும் இரு மாணவர்கள் , ஒரு மாணவரின்  சகோதரர் மற்றும் மற்ற மாணவனின் பெற்றோர் ஆகியோரால் பாடசாலை முடிவடைந்த நேரத்தில் சரமாரியாக  தாக்குதல் நடாத்தப்பட்டதில்   ஆசிரியரின்  கண்ணில் காயம் ஏற்பட்டதில்  அவர்  தற்போது அக்கரைப்பற்றில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


குறித்த ஆசிரியரின் மணிக்கணனி  மோட்டார் வண்டி  மூக்குக்கண்ணாடி என்பன சேதமடைந்துள்ளது 


பாடசாலையின் ஒழுக்க கோவையை  செயல்படுத்துவதில் எற்பட்ட முரண்பாட்டில் இத்தாக்குல் நடை பெற்றதாக பாதிக்கப்பட்ட  ஆசிரியர் Akpnews க்கு தெரிவித்தார் 


இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு செயல் 


தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன்  தண்டிக்கப்பட வேண்டும்


 பாறுக் ஷிஹான்




நீண்ட காலமாக கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொலைபேசிகள் சூட்சுமமாக களவாடி செல்லப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இந்த முறைப்பாடுகளின்  அடிப்படையில்  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில்    கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்   ஆலோசனையில்    கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் தலைமையில் சென்ற  பொலிஸ்   குழுவினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட பிரிவின் தகவல் ஒருங்கிணைப்பிற்கமைய திங்கட்கிழமை(24) மாலை கைது செய்துள்ளனர்.

இந் நடவடிக்கையில் கைதாகிய  2  சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டு ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு  பொலிஸாரினால்   விசாரணைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்விசாரணையின் போது கைதானவர்களின் வாக்குமூலத்தின் படி  வைத்தியசாலைகள் நோயாளிகள் பார்வையாளர்கள் ஆகியோரை பிரதானமாக இலக்கு வைத்து சக நோயாளர்களாகவும் சிற்றுழியர்களாகவும் நடித்து சூட்சுமமாக இக்கைத்தொலைபேசிகளை திருடியுள்ளனர்.

மேலும் குறித்த திருட்டு சம்பவத்தில் தலைவராக 32 வயதுடைய சந்தேக நபர் செயற்பட்டு வந்துள்ளதுடன் கல்முனை புறநகர் பகுதியில் ஆசிரியர் ஒருவரை இரண்டாவது  திருமணம் செய்து இத் திருட்டு குழுவை வழிநடத்தியுள்ளார். மற்றைய சந்தேக நபர் கல்முனை  மாநகரில் கைத்தொலைபேசி கடையை நடாத்தி வருபவராவார்.இவர் 39 வயது மதிக்க தக்கவர் என்பதுடன் குறித்த கைத்தொலைபேசி திருட்டு கும்பலினால் களவாடப்பட்டு வருகின்ற கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்து விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இது தவிர குறித்த சந்தேக நபர்கள் பொது இடங்கள்  கல்முனை பிரதான பேரூந்து நிலையம் மற்றும் பேரூந்துகளில் பயணம் செய்பவர்களையும் இலக்கு வைத்து இத்திருட்டை சாதுரியமாக மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் மண்டூர் நிந்தவூர் சம்மாந்துறை கல்முனை நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்தவர்கள் இக்கைத்தொலைபேசி திருட்டினால் தமது பெருமதியான கைத்தொலைபேசிகளை  இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பொலிஸாரினால் தற்போது கைப்பற்றப்பட்டள்ள  தொலைபேசிகளின் பெறுமதி ரூபா 5 இலட்சத்திற்கும் பெறுமதியானவை என்பதுடன் சில கைத்தொலைபேசிகளின் உரிமையாளர்கள் தத்தமது  தொலைபேசிகளை இனங்கண்டு வருகின்றனர்.

எனவே பொதுமக்கள்  கடந்த காலங்களில் கைத்தொலைபேசிகளை தொலைத்திருந்தால் தம்மை தொடர்பு கொள்ளுமாறு   கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் கேட்டுள்ளார்.

 


கண்டி பிரதேசத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை சேர்ப்பதற்காக போலி சான்றிதழை தயாரித்த குற்றச்சாட்டில் கிராமசேவகர் ஒருவர் கண்டி விசேட குற்றப்புலாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வரெல்லகம பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய கிராம அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


தனது பெயரையும் கல்வி அமைச்சின் தலைப்பையும் பயன்படுத்தி போலியான ஆவணங்களையும் தயாரித்து வழங்கிய இவர் 29 பிள்ளைகளை பாடசாலையில் அனுமதித்துள்ளார்.

 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புட்டம்பை பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 55 வயதுடைய ஒருவரின் சடலம் அக்கரைப்பற்று பொலிசாரால் மீட்க்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனங்காட்டை சேர்ந்த செல்லையா தேவராஜன் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டார்.

வீட்டில் இருந்து வெளியேறி இரு நாட்கள் கடந்த நிலையில் புட்டம்பை பிரதேச மலையடிவார ஓரமொன்றில் சடலமொன்று தொங்குவதாக மக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த கிராம உத்தியோகத்தர் பொலிசாருக்கு தகவலை வழங்கிய நிலையில் அக்கரைப்பற்று பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மரணம் தொடர்பான விசாரணைகள் அக்கரைப்பற்று பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 


கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


இன்று (21) காலை 8.00 மணியளவில் கல்லூரிக்கு அருகில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளாா்.

உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

இதேவேளை ஹோமாகம - நியந்தகல மற்றும் காலி- இத்தருவா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கி பிரயோகங்களில் இருவா் உயிாிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 (சுகிர்தகுமார்)  0777113659 


 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 8 பிரிவின் பழைய ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றிரவு (18) இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தில் கொள்ளையிடப்பட்ட தொலைக்காட்சி பெட்டியுடன் புதைக்கப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று பொதுமயானத்தில் இருந்து இன்று நண்பகல் பொலிசாரால் மீட்க்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சதாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மீட்பு நடவடிக்iயில் ஈடுபட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீட்டில் இருந்த ஜந்தரை பவுன் அளவான தாலி மற்றும் பெறுமதியான தொலைக்காட்சி ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரின் தந்தையினால் பொலிசாரிடம் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட தொலைக்காட்சியின் பெட்டியுடன் மயானத்தில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர்களான கணவனும் மனைவியும்; வெளியூரில்  தொழிலின் நிமித்தம் வாழ்ந்துவரும் நிலையில் வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்திலேயே இச்சம்பவம் நடைபெறுள்ளதாக அறிய முடிகின்றது.
குறித்த வீட்டின் முன்னால் வசித்துவரும் வீட்டு உரிமையாளரின் தந்தை வழமைபோன்று வீட்டினை பார்வையிடுவதற்காக இன்று காலை சென்றவேளையிலேயே ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். இதன் பின்னராக வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோதே மறைத்து வைக்கப்பட்டிருந்த தாலி உள்ளிட்ட தொலைக்காட்சி பெட்டியும் திருடப்பட்டுள்ளதை அறிந்து பொலிசாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிசார் விசாரணையினை ஆரம்பித்ததுடன் விசேட தடயவியல் பொலிசாருக்கும் தகவலை வழங்கியுள்ளனர்.
இதேநேரம் அக்கரைப்பற்று பொதுமயானத்திற்கு மரணமடைந்த ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக சென்ற சிலர் அங்கு பெட்டி ஒன்று புதைக்கப்பட்டுள்ளதை அவதானித்து அக்கரைப்பற்று பொலிசாருக்கு தகவலை வழங்கினர். இந்நிலையில் அங்கு விரைந்த பொலிசார் தொலைக்காட்சி பெட்டியினை அடையாளம் காட்ட உரிமையாளரை அழைத்ததுடன் அவரும் தங்களது தொலைக்காட்சி பெட்டி என அடையாளம் காட்டியுள்ளார்.
இதனை அடுத்து மீட்க்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


FAROOK SIHAN


போதைப்பொருட்களுடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 3  சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை   சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும்   கஞ்சா  தம்வம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய கடந்த  திங்கட்கிழமை(12) இரவு முந்திரியடி வீதியில்  சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். சம்சுதீன் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு  பொறுப்பதிகாரி ஏ.எஸ்.மேகவர்ண  உள்ளிட்ட குழுவினர் மேற்குறித்த   சந்தேக நபர்களை மாறுவேடத்தில் சென்று கைது செய்துள்ளனர்.

இதன் போது சந்தேக நபர்கள் வசம் இருந்து ஒரு தொகுதி கஞ்சா ஹெரோயின் என்பன  மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட மூவரும் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளர்.

 


கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நிலையிலேயே நடாஷா எதிரிசூரிய சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நடாஷா எதிரிசூரியவிற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்த பின்னணியிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்


 




பாறுக் ஷிஹான்


மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற இளைஞனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட  சோதனை நடவடிக்கையின் போது இன்று ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக எடுத்து செல்லப்பட்ட கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது


மேலும் கைதான சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் யாவும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக  ஒப்படைக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


பாறுக் ஷிஹான்

 
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்   றயீஸின்  வழிகாட்டலில் பழக்கடைகள் திங்கட்கிழமை (22) முதல்  பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

பழக்கடைகளின் தரத்தைப்பேணும் வகையிலும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அனைத்து பழக்கடைகளிலும்
 பரிசோதனை நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.
 
இதன் போது  மக்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற பழங்கள் மற்றும் செயற்கையாக பழங்களை பழுக்கவைப்பதற்காக பயன்படுத்தகூடிய இரசாயனங்களும் கைப்பற்றப்பட்டு அனைத்தும் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பழங்களை செயற்கையாக பழுக்கவைக்க பயன்படுத்தப்படும் இரசாயனம் கலந்து தெளிக்கப்பட்ட பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அதன் இரசாயன தாக்கதின் விளைவுகளை அறியாமல் அதனை உட்கொண்டு பல நோய்களுக்குள்ளாகின்றனர்.

எனவே  இதனை தடுக்கும் பொருட்டு இவ்வாறு இரசாயனம் கலந்து தெளிப்பதனையும் இரசாயனம் தெளிப்பதற்கு பயன்படுத்தகூடிய உபகரணங்களையும் மற்றும் அழுகிய நிலையில் பழங்களையும் கண்டால் மக்கள் விழிப்புடன் இருந்து 0672250834 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இப்பரிசோதனை நடவடிக்கையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி  மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர்  பொது சுகாதாரப் பரிசோதகர்கள்  மற்றும் அலுவலக ஊழியர்களும் இப்பரிசோதனை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்

 


வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு, கொழும்பு இலக்கம் 04 பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உயிரிழந்த 42 வயதான R. ராஜகுமாரி சார்பில் சட்டத்தரணி சேனக்க பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் இன்று மன்றில் ஆஜராகினர்.

சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் தகவல்கள் பதிவு செய்யப்படும் ஆவணத்தில் சந்தேகநபரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததா என வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பினர்.

குறித்த ஆவணத்தில் சந்தேகநபரான பெண்ணின் பெயர் இருக்கவில்லை என வெலிக்கடை பொலிஸார் இதன்போது மன்றில் தெரிவித்ததாக சட்டத்தரணி சேனக்க பெரேரா கூறினார்.

பெயர் குறிப்பிடப்பட்டமைக்கான பதிவு இல்லையென்பதனூடாக இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், இந்த விடயம் தொடர்பில் உரிய தீர்ப்பை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

விடயங்களை ஆராய்ந்த கொழும்பு இலக்கம் 04 பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல, எதிர்வரும் 24 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் நுகேகொடை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் ஆஜராக வேண்டுமெனவும் அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

இன்றைய வழக்கு விசாரணையின் பின்னர் மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி சேனக்க பெரேரா ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்.

இந்த மரணம் தொடர்பில் பொலிஸாரினால் 10,000 ரூபா பணம் இறந்த பெண்ணின் கணவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த மரணத்தை மறைப்பதற்காகவா இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, தனது மனைவியின் உடலில் தாக்குதலுக்குள்ளான காயங்களே காணப்பட்டதாக சம்பவத்தில் உயிரிழந்த R.ராஜகுமாரியின் கணவர் செல்வதுரை ஜேசுராஜ் தெரிவித்துள்ளார். 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.