Showing posts with label Crime. Show all posts

 


இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் பூஜ்ய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 09 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது.


குறித்த சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகக் கூறி, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.


வழக்கு விசாரணைகளின் பின்னர், இந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் 42 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.



குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (19) முதல் தொடராக காலை முதல் மாலை வரை  மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்தலில்   கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் தலைமையில் இந்த நடவடிக்கையில் சம்மாந்துறை பொலிஸ்  போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஏ.டி.ஆர் விஜயவர்த்தன உட்பட    பொலிஸ்  குற்றப் புலனாய்வு பிரிவு  ஊழல் ஒழிப்பு பிரிவு சுற்றாடல் பிரிவு பெண்கள் சிறுவர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் போக்குவரத்து பிரிவு அக்கரைப்பற்று உள்ளிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் பங்கேற்று தத்தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

இது தவிர சம்மாந்துறை பள்ளிவாசல் நிர்வாகத்தின் வீதி ஒழுங்கு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும்  சிலரின் சட்டவிரோத நடவடிக்கையினால் மேற்படி தொடர் விசேட திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

இதன் போது மதுபானம் அருந்தி மோட்டார் சைக்கிள் செலுத்திய  ஒருவர் உட்பட தலைக்கவசம் அணியாமை சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் மோட்டார் சைக்கிளில் மூவர் உள்ளிட்ட 3hன்கு பேர் பாதுகாப்பற்ற முறையில் பயணித்தல்  உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த மோட்டார் சைக்கிள்கள்  கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு வீதி போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு எதிராக இவ்வாறான அதிரடி சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறு வாகன ஓட்டுநர்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் மூலம்  இப்பகுதியில் தொடர்ச்சியாகப் இடம்பெறும் பல விபத்துகளையும்  உயிரிழப்புகளும் குறைப்பதுடன்   இன்றைய விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளுக்கு எதிராக மிக விரைவில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிஷாந்த பிரதீப் குமார தெரிவித்தார்


கட்டுநாயக்க விமான நிலையத்தின் 'கோல்ட் ரூட்' முனையத்தைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்த முயன்ற டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயது மாணவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கனடாவிலிருந்து டுபாய் வழியாக இலங்கை வந்த விமானத்தில் போதைப்பொருட்களைக் கொண்டு வந்துள்ளார்.அவரது 2 பயணப் பொதிகளில் 146 பாக்கெட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 37.639 கிலோ கிராம் ஹசீஸ் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி சுமார் 37 கோடியே 70 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.


விமான நிலைய வரலாற்றிலேயே 'கோல்ட் ரூட்' வசதியைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறை. சந்தேகநபர் தற்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


அம்பாறை பெண் வைத்தியர் மரணம்: ஐடி காதலனின் மறுபக்கம் அம்பலம்!

அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை வைத்தியர் (Physiotherapist) ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. 


அவரது காதலனே சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது. 


இதற்கமைய, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இடமொன்றில் கார் ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக நேற்று (17) பிற்பகல் 2.00 மணியளவில் தெல்தெனிய பொலிஸாருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. 


பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, பூட்டப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் சடலம் இருப்பதைக் கவனித்துள்ளனர். 


அதனைத் தொடர்ந்து, பொலிஸார் அந்த காரின் கதவை உடைத்து அவரது சடலத்தை வெளியே எடுத்து சோதனையிட்டனர். 


அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது. 


அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். 


அதன்படி, அந்த ஹோட்டலின் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தபோது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. 


சந்தேக நபரான காதலன் கன்​னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் என்றும், அவர் தற்போது அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. 


இதனால், அவரைக் கண்டுபிடிப்பதற்காகப் போலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 


தமது தங்கை நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருப்பதாகவும், அவர் பல நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என்பதால் அந்த இடத்தை சோதனையிட உதவி தேவை என்றும் கூறி கோட்டவெவ, தலாவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (17) காலை நுவரெலியா போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 


அதற்கமைய, நுவரெலியா பொலிஸ் குழுவினர் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று சோதனையிட்ட போது அங்கு யாரும் இருக்கவில்லை. 


எனினும், அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்த போது, கடந்த 16ஆம் திகதி இரவு 9.50 மணியளவில் அந்தப் பெண்ணின் காதலன் அங்கு வரும் காட்சி பதிவாகியிருந்தது. 


அங்கு சுமார் 40 நிமிடங்கள் தங்கியிருந்த அந்த நபர், பின்னர் இரவு 10.30 மணியளவில் மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணைத் தூக்கிக்கொண்டு வெளியேறியுள்ளார். 


அதன் பின்னர், அவர் அந்தப் பெண்ணைக் காரில் ஏற்றிச் சென்றுள்ளார். 


இளம்பெண் காணாமல் போனமை குறித்து நுவரெலியா பொலிஸார் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்திருந்த பின்னணியில், தெல்தெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. 


தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் ஒன்றில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக அந்த அழைப்பில் கூறப்பட்டுள்ளது. 


அதற்கமைய, தெல்தெனிய பொலிஸ் குழுவினர் அந்த இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது, காரின் முன் இருக்கை நீட்டப்பட்டு, கருப்பு நிற துணியால் மூடப்பட்டிருந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. பூட்டப்பட்டிருந்த காரின் கதவை உடைத்து பொலிஸார் சடலத்தை வெளியே எடுத்தனர். 


அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச் சடலம் நுவரெலியாவில் காணாமல் போன இளம்பெண்ணுடையது என்பது உறுதி செய்யப்பட்டது. 


ஷம்யா தர்ஷனி என்ற 34 வயதுடைய அவர், அம்பாறை பொது வைத்தியசாலையில் இயன்முறை மருத்துவ நிபுணராக பணிபுரிந்தவர் என்பதைப் பொலிஸார் கண்டறிந்தனர். 


கண்டி, கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான அவருக்கும், உயிரிழந்த பெண்ணுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகின்றது. 


குறித்த பெண் தனது காதலனுடன் கனடா செல்லும் நோக்கத்தில், வட்டிக்கு மற்றும் சில நபர்களிடமிருந்தும், வங்கியிலிருந்தும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கடனாகப் பெற்று காதலனிடம் கொடுத்துள்ளார். 


இருப்பினும், இதுவரை வெளிநாடு செல்வதற்கான எந்த ஏற்பாடுகளும் நடக்காத பின்னணியில், கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டதால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


இத்தகைய சூழ்நிலையில் தான், அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளார். 


இதற்கிடையில், அவர் தனது சகோதரனைத் தொலைபேசியில் அழைத்து, தான் 3 நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். 


மேலும், அம்பாறை வைத்தியசாலையின் மனநல மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து, தான் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


அதற்கு அந்த மருத்துவர், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார். 


எனினும், கடந்த 16ஆம் திகதி மாலை 4 மணிக்குப் பிறகு பெண்ணின் கைபேசி செயலிழந்ததை அடுத்து, அவரது சகோதரர் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 


மேலதிக விசாரணைகளில், பெண்ணின் உடலைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட கார், அவரது காதலனின் அம்பாறை பகுதியைச் சேர்ந்த மற்றொரு காதலிக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. 


இதற்கிடையில், சடலம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையின் பின்னர், மரணத்திற்கான காரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்ட மரணமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 


இதற்கமைய, பெண்ணின் காதலனான தினேத் திஸாநாயக்க என்பவரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாரவின் நேரடி மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகின்றன.

 தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் நலின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மீதான மேலதிக பரிசீலனையை 25ஆம் தேதி வரை ஒத்திவைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சர்ச்சைக்குரிய கேரம் பலகை வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரால் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நிராகரிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த மனு, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் பி. குமரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


வழக்கின் விசாரணையின் போது, ​​பிரதிவாதிக்காக சட்டமா அதிபர் ராம்சி பாச்சாவின் அறிவுறுத்தலின் பேரில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி- அலி சப்ரி, இதே சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் தனது கட்சிக்காரர் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுவிட்டார் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.


கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றத்தின் விசாரணைத் தீர்ப்பாயம் தனது கட்சிக்காரருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


இருப்பினும், அதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார் என்பதை ஜனாதிபதி சட்ட ஆலோசகர் சுட்டிக்காட்டினார். ஒரே குற்றத்திற்காக இருமுறை சட்ட நடவடிக்கை எடுப்பது சட்டத்திற்கு முரணானது என்று அவர் வாதிட்டார்.


உயர் நீதிமன்ற விசாரணையின் போது தனது கட்சிக்காரர் இது தொடர்பாக ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தபோதிலும், விசாரணை நீதிபதி அந்த ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டார் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சப்ரி மேலும் தெரிவித்தார்.


அதன்படி, பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.


அதன்பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனு மீதான மேலதிக பரிசீலனையை 25ஆம் தேதி வரை ஒத்திவைத்தது. அந்நாளில், மனுதாரரின் கோரிக்கைகள் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை சட்டமா அதிபர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், 14,000 கேரம் பலகைகளும் 11,000 தாரை பலகைகளும் சத்தோசா வலையமைப்பு மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக அரசுக்கு ரூ. 39 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து இந்த வழக்கு உருவாகியுள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபர், முன்னாள் அமைச்சர் நலின் பெர்னாண்டோ மீது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார்.


 முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


அரசாங்க நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 


கொட்டக்கலை நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் (17) இன்று இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரிகளை அந்தக் குழுவினர் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.


கொட்டக்கலை நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தலவாக்கலை வட்டக்கொட பகுதியைச் சேர்ந்த குழு ஒன்று திருமண விழாவில் இன்று மாலை சுமார் 4:00 மணியளவில் திருமண விழாவிற்கு வந்திருந்த மதுபோதையில் இருந்த இரு குழுக்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.


தொடர்ந்து மோதலை அமைதிப்படுத்தச் சென்ற பணியில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளை இரு குழுக்களாலும் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.


இதனை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு மேலும் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிற பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று அங்கு வந்தபோது, ​​அதிகாரிகளும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சிக்குப் பிறகு கைதுசெய்துள்ளனர்.


தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டதைக் நேரடியாக கண்ட பிரதேசவாசிகள் தாக்குதலில் ஈடுபட்ட மேலும் தாக்கிய சந்தேக நபர்களைக் கைதுசெய்ய உதவி செய்துள்ளனர் .


கடுமையாக மோதலில் ஈடுபட்ட மூன்று பேரும், தாக்கப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கொட்டக்கலை பிராந்திய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


கொட்டகலை நகரில் நடந்த மோதலைத் தொடர்ந்து அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது மேலும் குறித்த மோதலை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பிற்காகவும் தலவாக்கலை, லிந்துலை மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையங்களிலிருந்து கூடுதல் பொலிஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டது.


(செ.திவாகரன்)

 


யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


 


ஏறாவூர் சவுக்கடி தளவாய் பகுதியில் 16 வயது சிறுவனை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சிறுவனின் ஆடைகளை அகற்றி மரத்தில் தலைகீழாக கட்டி தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து குறித்த சிறுவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


குறித்த காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் (IGP), குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் .

1996 ஏப்ரல் 17ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பான நேருக்குநேர் நிகழ்ச்சியில், நக்கீரன் கோபால் வீரப்பனை சந்தித்து எடுத்த பேட்டி ஒளிபரப்பப்பட்டது.


அந்த பேட்டியில், முன்னாள் பிரதமர் ஒருவரின் மகனுடன் நடிகை சுகன்யாவுக்கு தவறான தொடர்பு இருந்ததாக வீரப்பன் பேசியிருந்தார். 


இந்த விஷயம் அப்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து, "இது முழுக்க முழுக்க பொய்யான அவதூறு" என்று கூறி நடிகை சுகன்யா நீதிமன்றத்தை நாடினார்.


 அந்த பேட்டியால் தனது நற்பெயர் பாதிக்கப்பட்டதோடு, சினிமா வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டதாகவும், மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறி ரூ.10 லட்சம் நஷ்டஈடு கேட்டிருந்தார்.


வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம், சுகன்யாவுக்கு ரூ.10,00,500 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சன் டிவி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


 "நக்கீரன் கொடுத்த பேட்டியை அப்படியே ஒளிபரப்பினோம். வீரப்பன் சொன்ன கருத்துகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என்று சன் டிவி தரப்பில் வாதிடப்பட்டது.


ஆனா, அந்த பேட்டியை எடிட் பண்ண முழு அதிகாரமும் சன் டிவிக்கே இருந்தது. அதுமட்டுமில்லாமல், ஒளிபரப்புக்கு முன்னாடி குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவோ, சுகன்யாவிடம் விளக்கம் கேட்கவோ எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


அதனால், "நாங்கள் பொறுப்பல்லன்னு சொல்லி சன் டிவி தப்பிக்க முடியாது" என்று கூறிய நீதிபதி, கீழமை நீதிமன்றம் விதித்த ரூ.10 லட்சம் இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


மேலும், அந்த அவதூறான பகுதியை இனிமேல் எந்த சூழலிலும் ஒளிபரப்பக் கூடாது என்ற நிரந்தர தடையும் தொடரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


1996இல் தொடங்கிய இந்த வழக்கில், கிட்டத்தட்ட 30 வருட சட்டப் போராட்டத்துக்கு பிறகு நடிகை சுகன்யாவுக்கு தற்போது சாதகமான தீர்ப்பு கிடைத்திருக்கிறது. 


முப்பது வருடங்களின் பின்னும் நீதி நின்று நிலைத்த தருணமாக இதைப் பார்க்கலாம்.


 யால தேசிய பூங்காவில் வனவிலங்கு சட்டங்களை மீறியதாக கூறப்படும் ஐந்து சுற்றுலா பயணிகளை வனவிலங்கு அதிகாரிகள் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


சபாரிக்காக வந்த இரண்டு ஜீப் வண்டிகளில் பயணித்த குழுவினர் பூங்கா விதிகளை மீறி நடமாடியதுடன், அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என யால ஜீப் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

 


 இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) நேற்று (13) இரவு நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.


பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான 'மோதர நிபுண' என்பவரின் சகோதரர் மற்றும் 'புளூமெண்டல் சங்கா' ஆகிய இருவருமே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இந்த சந்தேகநபர்கள் இருவரும், சட்ட அமலாக்கப் பிரிவினரிடமிருந்து தப்பிப்பதற்காக அபுதாபியில் மறைந்து வாழ்ந்து வந்தனர்.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தங்களது கைபேசிகளில் வைத்திருந்த குற்றத்திற்காக அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் இவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்தே அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.



கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்கள் இருவரையும் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.


'மோதர சத்துர' இவரிடம் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


'புளூமெண்டல் சங்கா': இவரிடம் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


இவர்களிடம் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில், இலங்கையிலுள்ள இவர்களது ஏனைய சகாக்கள் மற்றும் போதைப்பொருள் வலைப்பின்னல்கள் குறித்தும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


sihanfarook

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில்  சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.


அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த   குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில்   விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய சிறைக் கூடத்தில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை (7) இரவு இச் சம்பவம் இடம்பெற்ற வேளை கடமையில் இருந்த இரு பொலிஸ் சார்ஜன்ட்கள்   இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன்  காரைதீவு  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஐ.பி ஜெயரட்ணவிற்கும் உள்ளக விசாரணை மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் குறித்த விசாரணையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்லில்   அக்கரைப்பற்று   பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண  நெறிப்படுத்தலில் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

மேலும் இச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான  காரைதீவு 1 பிரிவு  மாதவி வீதியைச் சேர்ந்த  சாமித்தம்பி பாக்கியராசா ஆவார்.இவர்  முன்னாள் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் என்பவர் ஆவார்.அத்துடன் உயிரிழந்த குடும்பஸ்தரின்  சடலமானது அண்மையில் நல்லடக்கத்திற்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் இருந்து   பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை  கேலி செய்து  காணொளி  பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை(5) முதல் திங்கட்கிழமை(8) வரையான காலப்பகுதியில் திடீர் போக்குவரத்து விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக பத்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


குறித்த நடவடிக்கையின் போது  தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியமை   சாரதி அனுமதி பத்திரம்   இல்லாமல் வாகனம் ஓட்டுதல்  கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 10 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதுடன் அவற்றை செலுத்தியவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது தவிர டிக்டொக் செயலி  ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை  கேலி செய்து  காணொளி  பதிவிட்டவர்கள்  அடையாளம் காணப்பட்ட நிலையில் இருவர் கைதாகினர்.

மேலும் இச்சேதனை நடவடிக்கையின் போது சாரதி அனுமதி பத்திரம்   வருமான வரிச் சான்றிதழ்  காப்பீட்டுச் சான்றிதழ்  தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களுக்காக நடவடிக்கைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மேலும் இந்த சந்தேக நபர்களில் ஒருவருக்கு நீதிமன்றத்தால் ரூ. 38000 அபராதம் விதிக்கப்பட்டமை சுட்டிககாட்டத்தககது. ஏனைய  சந்தேக நபர்கள் மீது எதிர்வரும் நாட்களில்  சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


 மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில்   கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய  மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.