Showing posts with label OverToYou. Show all posts



 மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று  (09) 7 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் தீவு பகுதியில் 2ஆவது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக மக்களும்,பொது அமைப்புக்கள் இணைந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில்,மக்களின் எதிர்ப்பையும் மீறி காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் மன்னார் நகர பகுதிக்கு பலத்த பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.

எனினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வந்தது. இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மூலம் இன்று வருகை தந்து குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர்.

குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் ஏற்கனபேவ அமைக்கப்பட்ட காற்றாலை மின் கோபுரங்களினால் மீனவர்கள் பாரிய அளவில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள்,குறிப்பாக வயோதிபர்கள், சிறுவர்கள், கர்ப்பினித்தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும்  காற்றாலை கோபுரங்கள் அமைத்ததன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பேசாலை கிராமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய வெள்ள நீர் தேங்கிய நிலையில் அவற்றை கடலுக்குள் செலுத்த தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.
மேலும் மன்னார் தீவு பகுதியில் முன்னெடு முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வுக்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் எனவும் மன்னார் தீவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் குறித்த இரு திட்டங்களையும் நிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக சென்று மீண்டும் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர்.

பின்னர் நகர சுற்றுவட்ட பகுதியில் தமது போராட்டத்தை தொடர்ந்து  முன்னெடுத்து வருகின்றனர்.

 


கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்.






குடிநீருக்காக அல்லாடும் கல்லரிப்பு பழங்குடி மக்கள்!
அரசியல்வாதிகள் அதிகாரிகள் கவனிப்பார்களா?

 "நீர் இன்றி அமையாது இவ்வுலகு" என்று கூறுகின்றார் தெய்வப்புலவர் வள்ளுவர். 
ஆனால் இந்த நவீன யுகத்தில் நீர் இல்லாமல் ஒரு முழுக்கிராமமே தத்தளித்துக் கொண்டிருக்கின்றது என்றால் நம்ப முடியுமா? 

ஆம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற  முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கின்றது அந்த கிராமம்.

 கல்லரிப்பு என்பது அக் கிராமத்தின் பெயர். அந்த கிராமத்தில் ஆக 41 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் கடந்த காலங்களிலே தமது குடிநீர் மற்றும் தேவைகளுக்காக  ஆற்றிலும் ஓடையிலும் தங்கியிருந்தார்கள்.

அந்த மக்களிடம் குடிநீர் பிரச்சினை பற்றி கேட்ட போது அவர்கள் கூறியதாவது...

 சுத்தமான நீர் எடுக்க வேண்டுமாக இருந்தால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து அதனை பெற வேண்டிய தேவையுள்ளது.

நாளடைவில் பிரதேச சபையூடாக  குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது . அதுவும் சில நேரங்களில தாமதமாகிதான் கிடைக்கும்.
அவ் வேளைகளில் ஆற்றில் இருந்து நீரை பெறுவோம். எமது ஊரில் பாடசாலை இல்லை.
 மாணவர்கள் சீருடைகளை இங்கு கழுவினால் பழுப்பு நிறத்தில் காணப்படும். அருகிலுள்ள பாடசாலைக்கு செல்லும் எமது மாணவர்களுக்கு அது சிரமம். ஆசிரியர்கள் சிலவேளைகளில் இந்த நிறம் பற்றி கேள்விகள் கேட்பதுண்டு.

இந் நிலையில் இங்கு ஒரு குடிநீர் திட்டம் ஒன்றை மேற்கொள்ள வெளிநாட்டு உதவியோடு அரச சார்பற்ற நிறுவனமொன்று முன்வந்தது.

Bright future international  UK என்ற நிறுவனம் தான் இத் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கியது.
இந்த குடிநீர் திட்டம் 31_3_2023 ல் ஆரம்பிக்கப்பட்டது.  

 ஆற்றில் இருந்து நீரை பெற்று சுத்திகரிப்புச் செய்து அதனை வழங்குவதற்காக மின்சார செலவுக்காக மாதம் 100 ரூபாய் வழங்குமாறு மக்களிடம் கோரப்பட்டது. மக்களும் மகிழ்ச்சியில் அந்த நூறு ரூபாய் வழங்கினார்கள்.

 ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரே ஒரு மாதம் வரைதான் நீடித்தது.

ஒருமாதமே குடிநீர் கிடைத்தது. அதுவும் எதிர்பார்த்த சுத்தமான நீர் இல்லை.

அதனக்கூட  ஏப்ரல் மாதம் மாத்திரமே அதனை வழங்கியிருந்தார்கள். அதன் பின்பு குடிநீர் வழங்கப்படவில்லை.

தற்போது இக் குடிநீர்த் திட்டமும் நிறுத்தப் பட்டு விட்டது. தற்போது நாங்கள் குடிநீருக்காக  வெகு தூரம் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. 

இந் நிலையில் மக்கள் வெகுண்டெழுந்து அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவிய ஒப்பந்தக்காரரிடம் கேட்ட பொழுது அதற்குரிய இரசாயன திரவம் ஒன்று வரும். அது வருகின்ற பொழுது குடிநீர் தருவோம் என்று கையை விரித்து விட்டார்.
அதனால் குடிநீருக்காக அல்லாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. என்றார்.

தற்பொழுது அந்த மக்கள் குடிநீருக்காக மீண்டும் மீண்டும் தொலைதூரம் பயணிக்க வேண்டி இருக்கின்றது .

இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்று அந்த மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.

கவனிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.