Showing posts with label Technology. Show all posts

 நாட்டில் மீண்டும் QR குறியீடு அமுலில்..

அது பற்றிய விழிப்புணர்வு கட்டுரை இது..

சமகாலத்தில் QR குறியீடு என்பது பரவலாக பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது.

QR குறியீடு என்றால் (Quick Response Code) எனப் பொருள்படும்.

தகவல்களை வேகமாக பகிர்ந்து கொள்ள உதவும் நவீன டிஜிட்டல் குறியீடு.

QR குறியீடு பயன்பாடு குறித்து விழிப்புணர்வின் தேவை அதிகரித்து வருகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல்களை விரைவாகப் பெறவும் பகிரவும் உதவும் முக்கியமான தொழில்நுட்பமாக QR குறியீடு (Quick Response Code) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாட்டில் எரிபொருள் விநியோகத்தை முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கம் மீண்டும் இந்த கியூஆர் முறைமையை அமல்படுத்தியிருக்கின்றது.

இது எரிபொருள் நிலையங்களில் நெரிசலை குறைக்கவும் வினைத்திறனுடனான சேவையை உறுதிப்படுத்தவும் அனைவருக்கும் எரிபொருள் தங்கு தடையின்றி கிடைக்கவும் வகை செய்கின்றது.

1994 ஆம் ஆண்டு ஜப்பானிய நிறுவனமான Denso Wave மூலம் உருவாக்கப்பட்ட QR குறியீடு தற்போது உலகம் முழுவதும் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக இணையதள இணைப்புகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, நிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகள், பொருட்களின் தகவல்கள் மற்றும் தொடர்பு விபரங்களை பகிர்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

கருப்பு மற்றும் வெள்ளை சதுர வடிவங்களில் அமைந்துள்ள இந்த இரு-அளவீட்டு (2D) குறியீட்டை ஸ்மார்ட்போன் கேமரா அல்லது QR ஸ்கேனர் பயன்பாட்டின் மூலம் எளிதாக வாசிக்க முடிகிறது.

மேலும் Google Pay போன்ற மொபைல் பணப்பரிவர்த்தனை பயன்பாடுகள் மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து உடனடியாக பணம் செலுத்தும் வசதியும் பொதுமக்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிறிய இடத்தில் அதிக தகவல்களை சேமித்து, வேகமாக அணுகக்கூடிய தன்மையால் QR குறியீடு இன்று கல்வி, வணிகம், வங்கிகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல துறைகளில் முக்கியமான தகவல் தொடர்பு கருவியாக உருவெடுத்துள்ளது.

சரி. எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை (Fuel Pass) பெறுவது எப்படி?

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

1. இணையதளத்திற்குச் செல்லுங்கள்: முதலில் https://share.google/UVQADndNCRXt8x8Ew என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

2. பதிவு செய்தல்: அங்கு கோரப்பட்டுள்ள விவரங்களை வழங்கி, பதிவு நடைமுறைகளை நிறைவு செய்யுங்கள்.

3. QR குறியீட்டைப் பெறுதல்: பதிவு முடிந்ததும், உங்களுக்கு என பிரத்யேகமான QR குறியீடு (QR Code) திரையில் தோன்றும்.

4. சேமித்து வைத்தல்: அந்த QR குறியீட்டை உங்கள் கைப்பேசியில் (Mobile Device) சேமித்துக்கொள்ளலாம் அல்லது அச்சிட்டு (Print) கைவசம் வைத்திருக்கலாம்.

ஏலவே இந்த குறியீடு வைத்திருப்பவர்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக புதிதாக வாகனம் வாங்கியவர்கள், உரிமை மாற்றம் செய்தவர்கள்,  தொலைபேசி இலக்கத்தை மாற்றியவர்கள் மாத்திரம் பதிவு செய்து புதிய கியூஆர்  பெற்றுக் கொள்ளலாம்

முக்கிய குறிப்பு: எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது, இந்த QR குறியீட்டைக் காண்பித்து உங்கள் எரிபொருள் தேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இது இது விடயத்தில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் 1919 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்யலாம்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர் 

 


அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு, கடந்த 12 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


‘AI for Transforming Public Service’ என்ற தலைப்பின் கீழ், ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் ஆதரவுடன் சப்ரகமுவ மாகாண சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த அரச நிறைவேற்று அதிகாரிகள் பங்கேற்றனர்.


அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் விசேட நடவடிக்கையாக, அரச அதிகாரிகளை தெளிவூட்டுதல், தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஜனாதிபதி அலுவலகத்தால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல்/செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் வளவாளரான, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) முன்னாள் பணிப்பாளர்களான ஹர்ஷ புரசிங்க, சமிச அபேசிங்க ஆகியோர் இந்த செயலமர்வில் வளவாளர்களாக பங்களித்தனர்.


சபரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனீதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர்/அரச அதிபர் கே.ஜி.எஸ். நிஷாந்த மற்றும் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த நிறைவேற்றுத் தர அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


 


( வி.ரி.சகாதேவராஜா)


"ஒளிரும் கரங்கள்" Raising Hands நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் ஒன்று இன்று(10) செவ்வாய்க்கிழமை கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது .

ஒளிரும் கரங்கள் (Raising Hands)அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் விசேட தேவையுள்ள பிள்ளை நல அமைப்பின்(Disabled child care) தலைவருமான ரி. இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.

தேசிய பயிலுனர்  கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்( NAITA) அம்பாறை மாவட்ட பணிப்பாளர் மொகான்  அபேசுந்தர,  மாவட்ட பரிசோதகர்  கே .செல்வபிரகாஷ்,  விவேகானந்த  தொழில்நுட்பக் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே. பிரதீஸ்வரன்,  ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் மதகுருமார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

தற்போது இப் பயிற்சி நிலையத்தில் அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான பிரதேசங்களில் இருந்து 30 மாற்றுத் திறனாளிகள் இணைந்துள்ளனர்.

அவர்களுக்கு கைத்தறி பயிற்சி, அலைபேசி திருத்தம் பயிற்சி , சிரட்டை அலங்கார பொருட்கள் தயாரிப்பு பயிற்சி  போன்ற பயிற்சி நெறிகள் கொடுப்பனவுடன் வழங்கப்பட இருக்கின்றன.

 இவர்களுக்கு நய்ட்டா (  NAITA)  நிறுவனம் மாதா மாதம் ஒவ்வொரு பயிலுனருக்கும் 7500 ரூபாவை நன்கொடையாக வழங்குகின்றது.

 இவர்களுக்கு இதேபோன்று மேலும் பல உதவிகள்  வழங்கப்பட இருக்கின்றன.

 இந்த நிறுவனத்தில் இணைந்து பயிற்சி பெற மேலும் மாற்றுத் திறனாளிகளை ஒளிரும் கரங்கள் அமைப்பு எதிர்பார்க்கின்றது.

கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு டெப்லிங் ( Deaflink)ஸ்தாபகர் வண.ஜி.ஜி.ஞானராஜா,  மட்டக்களப்பு லடர் ஆப் ஹோப் ( Ladder of hope) பொதுமுகாமையாளர் செல்வி எஸ் .ஆர். மதிதரன் ஆகியோர் அன்பளிப்புகளை வழங்கி வைத்தார்கள்.

 


வி.சுகிர்தகுமார்          


 அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளாந்தம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருந்து பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகின்ற எரிபொருள் யாவும் ஒரு சில மணித்தியாலங்களில் தீர்ந்து போவதையும் காண முடிகின்றது.
ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் விற்பனை நிலையத்திலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் எனும் அச்சத்தில் அதிகளவான வாகன உரிமையாளர்கள் தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுவருவதையும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இரவு பகலாக சேவையினை வழங்கி வருவதையும் உணர முடிகின்றது.
இந்நிலையில் விவசாயிகள் வயலை பண்படுத்தும் வேலைகளுக்கான டீசலை பெற்றுக்கொள்வதற்கு வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதையும் அவதானிக்க கிடைத்தது.
எரிபொருளை பதுக்கி வைக்கின்றவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேநேரம் QR  முறையினை நடைமுறைப்படுத்துமாறு அரசிடம் பலரும் கோரிக்கையினை முன்னெடுத்து வருவதுடன் அத்தியாவசிய தேவையுடைய அரச உத்தியோகத்தர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட நடைமுறையொன்றினை மேற்கொள்வதன் மூலம் அரச சேவையினை தடையின்றி முன்கொண்டு செல்ல முடியும் எனவும் அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 


டெல்லியில் நடந்துவரும் ஏஐ உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் (திங்கள் கிழமை) கலந்துகொண்டவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசாங்கத்தின் "முழுமையான குழப்பம் மற்றும் கடுமையான நிர்வாகச் சீர்கேடு" என விமர்சித்துள்ளார்.

இந்த உச்சிமாநாட்டின் தொடக்கத்தின்போது நிரம்பி வழிந்த அரங்குகள், நீண்ட வரிசைகள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் நுழைவுக்கான அறிவுறுத்தல்களில் குழப்பமான நிலை ஆகியவை காணப்பட்டன.

அதிகப்படியான கூட்டம் காரணமாகப் பாதுகாப்புப் பரிசோதனை செயல்முறையினாலும் மக்களுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.

பிரதமர் நரேந்திர மோதி மாநாட்டின் எக்ஸ்போவுக்கு வருவதற்கு முன்னதாக சில அரங்குகள் தற்காலிகமாக காலி செய்யப்பட்டன

 குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், மெட்டா (Meta Platforms) நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளது.


அமெரிக்காவின் நியூ மெக்சிகோ (New Mexico) மாநில அரசு தொடர்ந்த இந்த வழக்கு, சமூக ஊடக நிறுவனமொன்றுக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டில் ஜூரி சபையினூடாக (Jury Trial) விசாரணைக்கு வரும் முதலாவது வழக்காகும்.


பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வட்ஸ்அப் (WhatsApp) ஆகிய தளங்கள் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை மெட்டா நிறுவனம் ஊக்குவிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


சிறுவர்களை இலக்கு வைக்கும் நபர்களுக்கு (Predators) எவ்வித கட்டுப்பாடும் இன்றி மெட்டா நிறுவனம் அனுமதி அளித்துள்ளதாகவும், இதன் மூலம் சிறுவர்கள் மனித கடத்தல் மற்றும் நேரடி சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இத்தகைய ஆபத்தான உள்ளடக்கங்களை (Content) அனுமதிப்பதன் மூலம் நிறுவனம் இலாபம் ஈட்டுவதாகவும் சட்டமா அதிபர் சாடியுள்ளார்.


சமூக ஊடகங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து உலகளவில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த வழக்கு மெட்டா நிறுவனத்திற்கு பெரும் சவாலாக அமையவுள்ளது. பாலியல் குற்றவாளிகள் சிறுவர்களைத் தொடர்பு கொள்வதை மெட்டா நிறுவனம் தடுக்கத் தவறிவிட்டது என்பதே இந்த வழக்கின் மையக்கருத்தாகும்.



 நூருல் ஹுதா உமர்


இலக்கியம், விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள், கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் மாகாண மற்றும் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சம்மாந்துறையின் புகழுக்கு வித்திடும் மாணவர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபை தேசிய மட்டத்தில் புத்தாக்கப் போட்டியில் வெற்றி பெற்ற இரு மாணவர்களை கௌரவித்துள்ளது.

அதன்படி, சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் மாணவி எம்.ஐ.எப். ஹிமா மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவன் எம்.ஏ.ஏ. அஸ்ரிப் ஆகியோர், பாடசாலை ரீதியாக நடைபெற்ற புத்தாக்கப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றமைக்காக, சம்மாந்துறை பிரதேச சபையினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்தக் கௌரவிப்பு நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபையின் 05ஆவது சபையின் 07ஆவது அமர்வு இடம்பெற்றபோது, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில், சபா மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்றது.

குறித்த இரு மாணவர்களின் புத்தாக்க மற்றும் கண்டுபிடிப்பு திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஆதரவுடனும், அவர்களுக்கு பணப்பரிசு, பொன்னாடை போர்த்தல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், மாணவர்களின் சாதனை சம்மாந்துறை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச சாதனைகள் பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 


(செய்தியாளர், பாத்திமா றிப்கா)

முதல் தடவையாக நவீன தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டம் காத்தான் குடியில் அங்குரார்பணம்.


(செய்தியாளர், பாத்திமா றிப்கா)


பெண்களின் வாழ்வாதாரத்தினை நவீன தொழில் வாய்ப்பு மூலமாக வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக நவீன தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


டெலன்ட் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நாஸ் கெம்பஸின் ஆலோசகர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் காத்தான்குடி நாஸ் கெம்பஸ் பிரதான மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது.


இதன் போது நவீன தொழில்நுட்பம், சந்தை வாய்ப்பு தொடர்பாக, ஒளிபரப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். சஜீ விரிவுரையினை வழங்கியதுடன் அதன் செயற்பாடுகள் மற்றும் தொழில் விருத்தி தொடர்பாக நாஸ் கெம்பஸின் பகுதி நேர மாணவ விரிவுரையாளர்களான எம்.என்.என். கரீப், றுஸ்த் நௌபர், நவீன விற்பனை வாய்ப்பின் சமூக ஊடக உக்திகள் எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சஜித் அஹமட், சந்தை விரிவாக்கள் மற்றும் நுணுக்குகள் தொடர்பாக சட்டமாணி ஏ.ஜி.எம். ஸாமில் ஆகியோர் பங்கேற்று விரிவுரையாற்றினர்.


இதன் போது அதிகளவிலான சுய தொழில் பெண் ஆர்வலர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

 


உலகளாவிய இணையத்தள  பொருட்கள் விற்பனையாளர்களான ஷீன், டெமு, அலிஎக்ஸ்பிரஸ் மற்றும் விஷ் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்

 

சிறார்களுக்கு ஆபாச உள்ளடக்கங்களை  தங்கள் தளங்களில் அணுக அனுமதித்த குற்றம் தொடர்பிலேயே இவ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 


( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறையில் புதிய ரக கலப்பை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

அறுவடை செய்யப்பட்ட வயலில் உள்ள வைகோலை மீண்டும் புரட்டி அதே மண்ணில்  தாளிடுவதற்கு இந்த கலப்பை உபயோகப்படுத்தப்படுகிறது. 

அம்பறையில் சம்மாந்துறை பகுதியில் இந்த புதிய கலப்பையை ஒரு விவசாயி கொள்வனவு செய்து வயலில் பயன் படுத்தி வருகிறார்.

 அண்மையில் சம்மாந்துறை நீர்ப்பாசன திணைக்கள பங்களாவடி பணிமனையில் இப் புது கலப்பை அறிமுகப்படுத்தப்பட்டது .

விவசாயிகள்  சங்கத்தின் தலைவர் ஏ. எம் .நௌஷாட் மற்றும் விவசாய பிரதிநிதிகள் இதனை பார்வையிட்டார்கள்.

நிலத்துக்கு தேவையான முக்கிய அரிய கனிப்பொருள் சிலிக்கனாகும். அந்த சிலிக்கன் என்ற கனிப் பொருள் வைக்கோலில் நிறையவே இருக்கின்றது  எனவே வைக்கோலை எரிக்காது நிலத்திலே தாளிடுதல் மிகுந்த பிரயோசனப்படும். மண்ணும் வளமாகும். பயிரும் செழிப்பாக வளர்ந்து நல்ல அறுவடையை தரும் 
என்றார் விவசாயிகள் சங்க தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான 
ஏ.எம். நவ்ஷாட் 
இந்த புதிய ரக கலப்பை தொடர்பாக குறிப்பிட்டார்

 

Ranking of the 10 Most Influential LinkedIn Profiles in Sri Lanka 🇱🇰 according to Favikon’s Global Thought Leaders list:

Congratulations to all 👏👏👏

1️⃣ Dhanika Perera

2️⃣ Otara Gunewardene

3️⃣ Harsha de Silva

4️⃣ Heminda Jayaweera

5️⃣ Chalinda Abeykoon

6️⃣ Abdus Salaam

7️⃣ Vidusha Nathavitharana

8️⃣ Amitha Amarasinghe

9️⃣ Nelson Sivalingam

🔟 Dilhan C. Fernando

\


 கூகுளின் பிரபலத்திற்கு ஒரு காரணம், நாம் அதனை பயன்படுத்தும் விதத்திலிருந்து நம்மை பற்றி கற்றுக்கொள்வதாகும் என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் Human Compatible AI-க்கான மையத்தில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானியான ஜோனதன் ஸ்ட்ரே (Jonathan Stray)

பெரும்பாலும் பயனரின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்றபடி, தேடல்களின் முடிவுகளை கூகுள் வழங்குகிறது. நீங்கள் யார்? எங்கு வசிக்கிறீர்கள்? போன்றவற்றை கூகுள் தெரிந்து வைத்திருப்பதாக ஜோனதன் ஸ்ட்ரே கூறுகிறார்.

உங்களுடைய கேள்விகளுக்கு முந்தைய தேடல்களை நினைவில் வைத்துக் கொண்டு முடிவுகளை இது வழங்குகிறது. உங்களுடைய முந்தைய தேடல்களை கவனத்தில் கொண்டு தேடல் முடிவுகள் வழங்கப்படுவதன் பொருள் கூகுள் அதன் பயனர்களின் தரவுகள் பலவற்றைச் சேகரிக்கிறது என்பதுதான்.

தொடர்ந்து பேசிய அவர், "கூகுள் ஒவ்வொரு தேடலின் பதிவையும் வைத்திருப்பதோடு, கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஒரு பயனர் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதையும் தெரிந்து வைத்திருக்கும். இணைப்பைத் திறந்த சிறிது நேரத்தில் ஒரு பயனர் அதனை மூடினால், அந்தப் பக்கம் பயனரின் தேடலுக்குப் பயனுள்ளதாக இல்லை என்பதை கூகுள் புரிந்துகொள்கிறது." என்று தெரிவித்தார்.

இதனை ஒரு எடுத்துக்காட்டுடன் அவர் விளக்கினார். "உதாரணமாக Python என்கிற கணினி புரோகிராம் மொழியை ஒருவர் தேடினால், அவருடைய முந்தைய தேடல்களில் இருந்து அவர் கணினி தொடர்புடைய தகவலைத் தேடுகிறார் என்பதை புரிந்துக் கொண்டு, அது தொடர்பான பக்கங்களையே காட்டும். Python பாம்புகளைப் பற்றிய பக்கங்களை காட்டாமல் இருக்கலாம்."

இதன் பொருள் கூகுள் நமது தேடலுக்கு ஏற்ப அது வழங்கும் முடிவுகளை தகவமைக்கிறது. அப்படியென்றால், நமக்கு உண்மையிலேயே தேவையான முடிவுகளைத் தருவதில்லை, மாறாக நாம் பார்க்க விரும்பும் முடிவுகளையே அதுவே தீர்மானித்து கொண்டு கூகுள் தருகிறது என்ற சந்தேகத்தை பலர் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அத்தகைய சாத்தியக்கூறு குறைவு என்று ஜோனாதன் ஸ்ட்ரே கூறுகிறார்.

இருப்பினும் தேடல் முடிவுகளை வரிசைபடுத்துதல் அல்லது வழங்கப்படும் முடிவுகளில் மேலே இருக்கவேண்டிய பக்கம் எவை? கீழே இருக்கவேண்டிய பக்கங்கள் எவை என்பவை எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன? இது குறித்து விளக்கம் சொல்லாமல் கூகுள் அமைதியாக காக்கிறது.

நிதி ஆதரவு பெற்றுகொண்டு சில நிறுவனங்கள் அல்லது இணைய உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களின் பக்கங்களை தேடல் முடிவுகளில் கூகுள் முதலில் தோன்ற செய்வதாக சிலர் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் இந்த சந்தேகத்தை நிரூபிப்பது கடினம். பயனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களை மனதில் கொண்டு அனைத்து நிறுவனங்களும் சமூகப் பொறுப்புடன் செயல்படுவது முக்கியம் என்று ஜோனாதன் ஸ்ட்ரே கூறுகிறார். ஆனால் பல நேரங்களில் இந்த நிறுவனங்கள் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் கருதப்படுகிறது.

கூகுளின் எதிர்காலம்:

கூகுள், கூகுள் வரலாறு, தொழில்நுட்பம்

பட மூலாதாரம்,Getty Images

ஐரோப்பிய ஒன்றியமும் கூகுளுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது என்றாலும், இந்த முடிவு அமெரிக்க நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதால் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார் பொருளாதார மற்றும் வணிக போட்டியாற்றல் துறை நிபுணரான கிறிஸ்டினா கஃபாரா,

வெற்றிகரமான அமெரிக்க நிறுவனம் ஒன்று, உண்மையில் தவறாக நடந்து கொள்வதாகவும், அதை சரிசெய்யவேண்டும் என்று அமெரிக்காவே சொல்லும்போது விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், அது உலக அளவில் உண்மையிலேயே ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி கிறிஸ்டினா சந்தேகிக்கிறார்.

"அமெரிக்க நீதிமன்றம் ஒன்று, உலகின் சிறந்த அமெரிக்க நிறுவனங்களில் முதன்மையானதாக கருதப்படும் நிறுவனம் ஒன்று தவறான முறையில் செயல்படுவதாக கூறுவதால், இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது." என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், தேடுபொறி சந்தையிலும் விளம்பர தொழில்நுட்பத்திலும் மிகவும் வலுவான இடத்தைப் பிடித்துள்ள கூகுள் நிறுவனத்தை அசைப்பது சுலபமல்ல என்று கிறிஸ்டினா கஃபாரா எச்சரிக்கிறார். தற்போது வெர்ஜீனியாவில் கூகுள் மீது தொடங்கப் போகும் வழக்கு, அந்நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பத்துடன் தொடர்புடையது.

"தொடர்ந்து பல ஆண்டுகளாக, ஐரோப்பாவில் இணையத் தேடலில் கூகுளின் சந்தைப் பங்கு 98 சதவீதமாக இருந்தால், அது அமெரிக்காவில் 93 சதவீதமாக உள்ளது. இப்போதும் அந்த நிலை மாறவில்லை. எனவே வலுவாக இருக்கும் கூகுளின் இடத்தை யார் பிடிப்பார்கள் என்பதுதான் கேள்வி. விளம்பர தொழில்நுட்பம் மற்றும் விளம்பர நிறுவனங்கள் பெரும்பாலும் கூகுளையே சார்ந்து உள்ளன. நாம் இணையத்தில் திறக்கும் ஒவ்வொரு வலைத்தளம், விளம்பரங்களைக் கொண்ட ஒவ்வொரு பயன்பாடு பற்றிய நமது அன்றாட அனுபவம் அடிப்படையில் ஏதோ ஒரு வகையில் கூகுளின் மூலம் இயக்கப்படுகிறது." என்கிறார் கிறிஸ்டினா.

தொடர்ந்து பேசிய அவர், "தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த நாம் அனுமதித்துவிட்டோம். இது உலக அரசியலின் ஒரு பகுதி. இப்போது அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம், ஏனென்றால் இந்த நிறுவனங்கள் வேறு நிறுவனங்களை வாங்குவதன் மூலம் ஏகபோகத்தைப் பெற்றுவிட்டால், அவற்றைக் கட்டுப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடுகிறது." என்றும் தெரிவித்தார்.

இது அரசாங்கங்களின் தவறு என்று கிறிஸ்டினா கூறுகிறார். ஒரு புவிசார் அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏகபோகமாக செயல்படுவதற்கு அனுமதித்துவிட்டோம். கூகுளின் சந்தைப் பங்கை குறைக்க அதன் போட்டி நிறுவனங்கள் என்ன செய்யும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

ஆப்பிள் ஒரு தேடுபொறியைத் தொடங்கப் போகிறதா? இல்லை. அதேபோல், பிங் என்றென்றும் மைக்ரோசாப்டின் இயந்திரமாக இருந்து வருகிறது, பிங்கில் AI அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட, சந்தைப் பங்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, கிறிஸ்டினாவின் கருத்துப்படி, கூகுள் ஒரு ஏகபோக ஆதிக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

ஆனால், இந்தக் கூற்றை மறுக்கும் கூகுள் நிறுவனம், போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வதாகக் கூறுகிறது. இருப்பினும், கூகுள் சர்ச், அதனுடன் போட்டியிடும் சர்ச் எஞ்சின்களை விட சிறந்தது என்பதை அமெரிக்க நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதும் உண்மை.

இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றம் கூகுளுக்கு என்ன தண்டனை அளிக்கிறது என்பதை முடிவு செய்ய நேரம் எடுக்கும். ஆனால் நீதிமன்றத்தின் முடிவு பாதகமாக இருந்தால், மேல்முறையீடு செய்யப்போவதாக கூகுள் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவர் கென்ட் வாக்கர் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் இணையதளம் மற்றும் யூ-டியூப் பக்கத்தில் ஒலி மற்றும் ஒளி வடிவில் வெளியாகும் உலகின் கதை என்கிற தொடரில் வெளியான ஒரு பாகத்தின் கட்டுரை வடிவம் இது.

 


கடந்த ஒரு வருடத்தில், கூகுள் ஒரு மாற்றத்தைச் செய்துள்ளது, நீங்கள் அதைக் கவனித்திருக்கலாம்.


முன்பு, நீங்கள் இணையத்தில் எதையாவது தேடும்போது, அது தொடர்பான இணைப்புகளின் பட்டியல் கிடைக்கும்.


ஆனால் இப்போது அதற்கு பதிலாக, செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய பதில்கள் கிடைக்கிறது.


இந்த பதில்களை "செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) " என்று அழைக்கிறது கூகுள் .


சில நேரங்களில் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

கூகுள் டயலர், ஸ்மார்ட்போன் திரை, கூகுள் அப்டேட்

ஸ்மார்ட்போனில் மீண்டும் பழைய கால் செட்டிங்ஸ் பெறுவது எப்படி? படங்களுடன் எளிய விளக்கம்

அமெரிக்க வரி, டிரம்ப் வரி, இந்தியா 50% வரி, trump tariffs, america tariff on india, usa tariff, tariff news today 

அமெரிக்காவின் 50% வரியை எதிர்கொள்ள இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் 5 விஷயங்கள்

ராமலிங்க விலாசம் மாளிகை

கட்டபொம்மன் - ஜாக்சன் 'சந்தித்த' மாளிகையில் உள்ள ஓவியங்களும் சுரங்கப்பாதையும் உணர்த்தும் ரகசியம்

தொற்று பாதித்த பசுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்க்ரூவர்ம் ஈயின் புழுக்கள், ஒரு வெள்ளை பாத்திரத்தில் வைத்து ஆய்வு செய்யப்படுகின்றன. 

சதை உண்ணும் ஒட்டுண்ணி பாதிப்பு அமெரிக்காவில் ஒருவரிடம் முதன் முறையாக கண்டுபிடிப்பு

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால் சில நேரங்களில், தவறான தகவல்களை அளித்து, மக்களை குழப்புகின்றன.


அதேபோல், இந்த செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) நீங்கள் அடுத்து என்ன செய்யத் தேர்வு செய்கிறீர்கள் என்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன.


இந்த ஆண்டு, 900 அமெரிக்க இணைய பயனர்கள் இணையத்தில் தாங்கள் தேடுபவற்றைக் கண்காணிக்க, பியூ ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி கொடுத்தனர்.


"செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தோன்றும் தேடல்களில், இவர்கள் இணைப்புகளை கிளிக் செய்யும் வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும், அவர்கள் தேடுவதை முழுவதுமாக நிறுத்துவதற்கும் அதிக வாய்ப்பு இருந்தது," என பியூவின் டேட்டா லேப்ஸ் இயக்குநர் ஆரோன் ஸ்மித் கூறுகிறார்.


கூகுளில் தேடும்போது, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தோன்றும்போது, பயனர்கள் இணையதள இணைப்புகளை கிளிக் செய்யும் வாய்ப்பு கிட்டத்தட்ட இரு மடங்கு குறைவாக இருந்தது. மேலும், 26% சமயங்களில், அவர்கள் தேடுவதையே நிறுத்திவிட்டனர் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.


இது மிக முக்கியமானது, ஏனென்றால் மக்கள் ஆண்டுக்கு ஐந்து பில்லியன் முறை கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்துகின்றனர். இணையதள செயல்பாடுகள் தொடங்கும் இடமும் இதுதான்.


பெரும்பாலான வலைத்தளங்கள், அதிலும் குறிப்பாக, பொருட்களை விற்காமல் தகவல் மற்றும் உள்ளடக்கம் வழங்கும் வலைத்தளங்கள் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுகின்றன.


இந்த டிஜிட்டல் சூழல் பார்வையாளர்களின் எண்ணிக்கையைச் சார்ந்து இயங்குகிறது. ஆனால், கூகுளின் தேடல் முடிவுகளில் வலைத்தளங்கள் தோன்றுவதை குறைத்து, ஒரே இரவில் வணிகங்களை அழித்துவிடலாம்.


இணைய பயன்பாடு 

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பல தளங்கள், கூகுளில் உள்ள இணைப்புகள் மூலம் பயனர்கள் பார்வையிடுவதை தான் நம்பியுள்ளன.

"பெரும்பாலான வலைத்தளங்கள் இயங்குவதற்கு கூகுள் பார்வையாளர்கள் தேவை," என மார்க்கெட்டிங் நிறுவனமான ஆம்சிவ் நிறுவனத்தின் தேடுபொறி குறித்த பிரிவின் துணைத் தலைவர் லில்லி ரே கூறுகிறார்.


"ஆனால், செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) பார்வையாளர்களை பெருமளவு குறைத்து, வலைத்தளங்களின் வருமானத்தை 20%, 30%, அல்லது 40% வரை சரியச் செய்கின்றன. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான ஊக்கத்தைக் குறைக்கிறது."


கூகுளின் புதிய செயற்கை நுண்ணறிவு பயன்முறை, பாரம்பரிய தேடல் முடிவுகளை முற்றிலும் நீக்குவதால், இது மேலும் மோசமாகலாம்.


லில்லி ரே மற்றும் நிபுணர்கள் இது பேரழிவை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர்.


சிலர் இது நாம் அறிந்த இணையத்தை அழித்துவிடலாம் என அஞ்சுகின்றனர்.


வலைத்தளங்களை செயற்கை நுண்ணறிவு அழித்துவிடுமா?

வலைத்தளங்களைப் பார்வையிடுவதற்காக மக்கள் வருவதை, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) குறைக்கின்றன என்று சொல்லப்படும் கருத்தை 'முட்டாள்தனம்' எனக்கூறி மறுக்கிறது கூகுள்.


"நாங்கள் ஒவ்வொரு நாளும் வலைத்தளங்களுக்கு பில்லியன் கணக்கான கிளிக்குகளை இயக்குகிறோம், அதில் பெரிய சரிவு இல்லை",


மேலும், "இந்த ஆய்வு தவறான முறையையும், தேடல் போக்குவரத்தை சரியாக பிரதிநிதித்துவப்படுத்தாத, ஒரு சார்பு கொண்ட கேள்விகளையும் பயன்படுத்துகிறது"என கூகுளின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.


ஆனால், பியூ நிறுவனம் தங்களது ஆராய்ச்சியில் உறுதியாக உள்ளது.


"எங்கள் முடிவுகள், வலை பகுப்பாய்வு நிறுவனங்களின் சுயாதீன ஆய்வுகளுடன் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன," என ஆரோன் ஸ்மித் கூறுகிறார்.


கூகுளில் தேடப்படும் விஷயங்களைப் பொறுத்து, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தேடல் போக்குவரத்தை 30% முதல் 70% வரை குறைக்கின்றன என பல அறிக்கைகள் கூறுகின்றன.


நூற்றுக்கணக்கான வலைத்தளங்களின் தரவைப் பயன்படுத்தி இதை தானே சோதித்ததாக ரே கூறுகிறார்.


ஆனால், கூகுள் இதை ஏற்கவில்லை.


ஆராய்ச்சி தவறானது, தரவுகள் சார்புடையவை, மற்றும் அர்த்தமற்ற தரவுகளை மேற்கோள் காட்டி, அதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பிபிசியிடம் கூறுகிறது கூகுள்.


மக்கள் வலைத்தளங்களுக்கு சென்று தேடுவது பல காரணங்களால் மாறுபடுவதாகவும், செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) பலவகையான இணைப்புகளை வழங்கி, வலைத்தளங்களைக் கண்டறிய புதிய வழிகளை உருவாக்குவதாகவும் கூகுள் கூறுகிறது.


செயற்கை நுண்ணறிவு சுருக்கங்களில் (AI summaries) இருந்து வரும் தரவுகள் உயர்தரமானவை, ஏனெனில் பயனர்கள் அந்தத் தளங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர் என கூகுள் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார்.


ஆனால் அதற்கு முரணாக, கூகுளின் சொந்த செயற்கை நுண்ணறிவு, அதன் மக்கள் தொடர்பு துறையின் கருத்தை மறுக்கிறது.


கூகிள் ஜெமினியிடம் கேட்டால்,செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) வலைத்தளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கூறும்.


ஆதாரம் தெளிவாக உள்ளது. "கூகுள் தகவல்களை மாற்றி, உண்மையை மறைக்க முயல்கிறது, ஏனெனில் அது மக்களை பயமுறுத்தும்," என்கிறார் ரே.


ஆனால் கூகுள் நிறுவனம் தாங்கள் வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளதாகக் கூறுகிறது.


 கூகுள்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த காலத்தில், கூகுள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இணைப்புகளை வழங்கியது.

குழப்பும் செயற்கை நுண்ணறிவு

ஆனால், இதைத்தான் நாம் அனைவரும் விரும்புகிறோமா என்ற மற்றொரு கேள்வியும் உள்ளது.


"மக்கள் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் அனுபவங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். தேடலில் உள்ள செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மக்கள் மேலும் கேள்விகளைக் கேட்க உதவுகின்றன, இது வலைத்தளங்களுடன் இணைவதற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது," என கூகுள் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார்.


ஆனால், இது அர்த்தமற்றது என ரே கூறுகிறார்.


"கூகுள் 'இனி யாரும் கிளிக் செய்ய விரும்பவில்லை' என்று சொல்லலாம். ஆனால் அது மற்றவர்களின் கடின உழைப்பில் லாபம் ஈட்டுகிறது. தகவல்களை உருவாக்கிய தளங்களுக்கு பார்வையாளர்கள் செல்வதை, கூகுளின் செயற்கை நுண்ணறிவு தடுக்கிறது" என்கிறார் ரே.


வலைத்தளங்களை விடுங்கள், ஏஐயின் தவறான தகவல்களைத் தரும் பழக்கம் உங்களுக்கும் கெடுதல் தரும் என்று ரே கூறுகிறார்.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் 

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"செயற்கை நுண்ணறிவு பற்றிய பொதுவான விளக்கங்கள் பெரும்பாலும் தவறாக இருக்கின்றன," என்கிறார் அவர்.


"இது வலைத்தளங்களில் இருந்து பார்வையாளர்களை பறிப்பது மட்டுமல்ல, பயனர்கள் வெவ்வேறு தகவல்களை ஆராய்ந்து, விரும்பியவற்றைத் தேர்ந்தெடுத்து, முடிவுகளை எடுக்கும் திறனைக் கொள்ளையடிப்பது போன்றது."


ஏஐயின் பதில்கள் உதவிகரமாகவும், புறநிலை அம்சம் கொண்டதாகவும், மற்ற தேடல் அம்சங்களுடன் ஒப்பிடக்கூடிய துல்லியத்துடனும் உள்ளன என்கிறது கூகுள்.


ஒருவேளை இந்த ஒப்பந்தத்தில் நாமும் சேர்ந்திருக்கலாம்.


ஏனென்றால், பதில்கள் விரைவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.


நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் குறைகிறது.


செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே முடிவுகளை எடுத்துக் கொடுத்து விடுவதால், வெவ்வேறு ஆதாரங்களை ஆராய வேண்டிய தேவையும் குறைகிறது அல்லவா?.


ஆனால், கூகுள் தவறு செய்து வலைத்தளங்கள் மறையத் தொடங்கினால், அது நாம் தவறான இணைப்பை கிளிக் செய்ததால் இருக்காது. நாம் தேடுவதை முற்றிலும் நிறுத்தியதால் தான் இருக்கும்.

 


நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் என்றால், சில நாட்களுக்கு முன்பு உங்கள் போனில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம்.


ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆச்சரியத்தில் உள்ளனர்.


இந்நிலையில், தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.


சிலர் இது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.


ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீங்கள் ஒருவரை அழைக்கும்போதோ அல்லது அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

கழிப்பறை இருக்கைகளிலிருந்து நோய்கள் பரவுமா?

"பொது கழிப்பறையை விட வீட்டு கழிப்பறை ஆபத்தானது" - காரணத்துடன் விளக்கும் சுகாதார நிபுணர்கள்

ஒருவரை அழைக்கும்போதோ அல்லது ஆண்ட்ராய்டு போனில் இருந்து அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம். 

உங்கள் ஸ்மார்ட் ஃபோன் திரை தானாகவே மாறிவிட்டதா? - காரணம் இதுதான்

ஹைபர்சோனிக் ஏவுகணை 

ஒரு விநாடிக்கு 3.2 கி.மீ. பாயும்: அமெரிக்காவையே அச்சுறுத்தும் ரஷ்ய ஏவுகணை - சீனா என்ன செய்கிறது?

 இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 

மோதி அரசின் வெளியுறவு கொள்கை தோல்வியா? அமெரிக்கா, சீனாவுடனான உறவு பற்றிய ஓர் அலசல்

End of அதிகம் படிக்கப்பட்டது

எந்த அமைப்புகளையும் மாற்றாமல், இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என பலரும் குழப்பமடைந்துள்ளனர். சிலர் தங்களது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.


ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இது குறித்த தகவல்களை பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துள்ளனர்.


உலகம் முழுவதிலுமிருந்து ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிப்பவர்கள் தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


இந்த மாற்றங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளன. ஆப்பிள் போன்களில் இந்த மாதிரியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதால், அந்த போன்களைப் பயன்படுத்துபவர்கள் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.


ஆனால், ஆண்ட்ராய்டு போன்களில் மட்டும் இந்த மாற்றங்கள் ஏற்பட்டதற்கு என்ன காரணம்?, இந்த அமைப்புகள் எவ்வாறு மாற்றப்பட்டன, அவற்றை பழைய படி மாற்ற முடியுமா என்பதற்கான பதில்களைத் தேட முயற்சித்தோம்.


'ஹேக்கிங்' செய்யப்பட்டதா? உண்மையான காரணம் என்ன?

ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இந்த பிரச்னைக்கு பதில்களைத் தேடியுள்ளனர்.


சிலர் இதை 'ஹேக்கிங்' என்று கூறியுள்ளனர், மற்றவர்கள் இந்த மாற்றம் அரசு நிறுவனங்களின் கண்காணிப்பு முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.


"வாழ்த்துக்கள், உங்கள் தொலைபேசி அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. ஒரு மென்பொருளும் தானாகவே நிறுவப்பட்டுள்ளது" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.


மற்றொரு பதிவில் "உங்கள் கையில் இருக்கும் மொபைல் போனின் அமைப்புகள் திடீரென்று மாறிவிட்டன. நீங்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்வியை ஒருவர் எழுப்பியுள்ளார்.


 டயலர் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.பட மூலாதாரம்,Google

படக்குறிப்பு,பலர் தங்கள் தொலைபேசிகளில் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

ஆனால், போனின் காட்சி அமைப்புகள் மாறியுள்ளதால், அதற்கு 'ஹேக்கிங்' என்றோ, அல்லது அந்த நிறுவனம் உங்கள் புகைப்படங்கள் அல்லது செய்திகளைத் திருடுகிறது என்றோ அர்த்தமல்ல என மற்றொருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மொபைல் போன் நிறுவனங்கள் அவ்வப்போது தொலைபேசிகளைப் புதுப்பிக்கின்றன. இதனால் அவை முன்பை விட சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் மாறுகின்றன என்பது தான் அவரது கருத்து.


இந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி ?

அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது, அதே நிறுவனத்தால் புதுப்பிக்கவும் படுகிறது (அப்டேட் செய்யப்பட்டுள்ளது ).


'மே 2025' இல், 'மெட்டீரியல் 3D எக்ஸ்பிரசிவ்' என்ற புதிய அமைப்பை வெளியிடுவதாக கூகுள் அறிவித்தது. இது கடந்த சில ஆண்டுகளில் வந்த மிகப்பெரிய அப்டேட்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


இது, தொலைபேசியின் மென்பொருளையும், அமைப்பையும் எளிதாகவும், வேகமாகவும், பயன்படுத்த உதவும் வகையில் மாற்றும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.


தொலைபேசியின் மென்பொருளையும் காட்சியையும் எளிதாகவும், வேகமாகவும், பயன்படுத்த உதவும் வகையில்  மாற்றும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது

முன்னதாக, எங்கள் ஆண்ட்ராய்டு போன்கள் 'மெட்டீரியல் 3D' என்ற வடிவமைப்பில் இயங்கியது. 'இதன் வழக்கமான பயன்பாட்டின் காரணமாக பில்லியன் கணக்கான நபர்கள் அதற்குப் பழக்கமாகிவிட்டனர்' என கூகுள் கூறியது.


புதிய அப்டேட்டில் அறிவிப்புகள், வண்ண தீம்கள், புகைப்படங்கள், ஜிமெயில் மற்றும் வாட்ச் போன்ற பல விஷயங்கள் மாற்றப்பட்டு வருவதாக கூகிள் தெரிவித்துள்ளது. புதிதாக செய்யப்பட்ட மாற்றங்களும் அதில் ஒரு பகுதியாகும்.


பயனாளர் அனுமதியின்றி எவ்வாறு மாற்றப்பட்டன?

'மெட்டீரியல் 3D எக்ஸ்பிரஸிவ்' என்ற அப்டேட்டின் கீழ், ஆண்ட்ராய்டு போனின் அழைப்பு செயலியுடைய வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.


இந்த அப்டேட் முதலில் ஜூன் மாதத்தில் சிலருக்கு மட்டும் வெளியிடப்பட்டது. பின்னர் அது படிப்படியாக பரவலாக வெளியிடப்பட்டது.


அழைப்பு மேற்கொள்ளும் செயலியை மேலும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவது தான் இதன் நோக்கம் என கூகுள் கூறியது.


'சமீபத்திய' (சமீபத்திய அழைப்புகள்) மற்றும் 'முக்கிய எண்கள்' போன்றவற்றை நீக்கிய கூகுள், அவற்றை 'முகப்பு' என்ற பகுதியில் ஒன்றிணைத்துள்ளது. எனவே இப்போது நீங்கள் அழைப்பு செயலியைத் திறக்கும் போது, 'முகப்பு' மற்றும் 'கீபேட்' என்ற இரண்டு பகுதிகளை மட்டுமே காண்பீர்கள்.


ஒரே எண்ணிலிருந்து வரும் அனைத்து அழைப்புகளும் இனி ஒன்றாகவோ அல்லது ஒரே இடத்திலோ காட்டப்படாது.


யாரை எந்த நேரத்துக்கு அழைத்தீர்களோ அந்த வரிசைப்படி தனித்தனியாகக் காட்டப்படும். இதனால் நீங்கள் அந்த தொடர்பை மீண்டும் மீண்டும் தேட வேண்டிய அவசியம் இருக்காது.


தங்கள் அழைப்பு வரலாற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த மாற்றம் உதவும் என்று கூகிள் கூறுகிறது.பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பல மொபைல் போன்களில் அழைப்பு மற்றும் டயல் அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தால் பயனர்கள் குழப்பமடைந்தனர், பலர் சமூக ஊடகங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.

தங்கள் அழைப்பு வரலாற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த மாற்றம் உதவும் என்று கூகிள் கூறுகிறது.


எத்தனை தவறவிட்ட அழைப்புகள் உள்ளன அல்லது எத்தனை அழைப்புகள் பெறப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஒவ்வொரு எண்ணையும் தனித்தனியாகத் திறக்க வேண்டிய அவசியமில்லை என்று கூகுள் விளக்கியுள்ளது.


இதற்குப் பிறகு, மொபைல் போன் உபயோகிப்பவர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் 'அழைப்பு' மற்றும் 'இன்-கால்' வடிவமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன.


புதிய வடிவமைப்பின்படி, அழைப்பின் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போனை உபயோகிப்பவர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து தொலைபேசியை எடுக்கும்போது தற்செயலாக அழைப்புகளைப் பெறவோ அல்லது துண்டிக்கவோ மாட்டார்கள்.


கூகுளின் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வரும் எதிர்வினைகளைப் பார்க்கும்போது, பலருடைய தொலைபேசி செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் பலருடைய தொலைபேசியில் இந்த அப்டேட்கள் இடம்பெறவில்லை.


போன் செயலியை டயலர் செயலியாக அமைத்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.பட மூலாதாரம்,Google

படக்குறிப்பு,கூகுள், போன் செயலியை டயலர் செயலியாக அமைத்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

சிலர் தங்கள் தொலைபேசிகளில் கூகிள் பிளே ஸ்டோரில் ஆட்டோமேட்டிக் அப்டேட்கள் (தானியங்கி புதுப்பிப்புகளை) ஆன் செய்திருப்பதால், சில செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்படுகின்றன என கூகுள் வலைப்பதிவில் ஒருவர் கூறியுள்ளார்.


மொபைல் போனை உபயோகிப்பவர்கள், இந்த ஆட்டோமேட்டிக் அப்டேட்டகளுக்கான அனுமதியை ஆப் செய்துவிட்டு, தொலைபேசி செட்டிங்ஸ்க்கு சென்று 'Uninstall Updates' என்பதை கிளிக் செய்து, தொலைபேசி அழைப்பின் காட்சி அமைப்புகளை பழைய நிலைக்கு மாற்றி அமைக்கலாம் என்று அவர் கூறினார்.


பிரபல மொபைல் நிறுவனமான ஒன்பிளஸும் இதே விளக்கத்தைத் தான் வழங்கியுள்ளது.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, "இது ஒன்பிளஸ்ஸிலிருந்து அல்ல, கூகுள் போன் செயலியின் அப்டேட்டில் இருந்து வந்தது. உங்கள் தொலைபேசியில் இருந்த பழைய முறையே பிடித்திருந்தால், அப்டேட்களை நீக்கவும்"என நிறுவனம் பதில் அளித்தது.


எனவே, நீங்களும் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்திருந்தால் குழப்பமடைய வேண்டாம்.


பழைய முறையிலேயே உங்களது போன் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த புதிய அப்டேட்களை விரும்பவில்லை என்றால், 'Uninstall Updates'-இன் மூலம் பழைய முறையையே நீங்கள் தேர்வு செய்யலாம்



 நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான நவீன முறையில் கற்றல் செயல்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ளுதல் என்பது தொடர்பான கருத்தரங்கு அதிபர் ஏ. ஜீ.எம். றிஷாத் அவர்களின் தலைமையில் 2025.08.19ம் திகதி  நடைபெற்றது.

உலக வங்கியின்"Gem project"திட்டத்தின் கீழ்  நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு வளவாளராக,  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஆங்கில பாட இணைப்பாளர் திரு. ஏ.எல்.எம். ஆரிப் அவர்கள் கலந்து கொண்டார்.

தற்காலத்தில் மாணவர்கள் எவ்வாறு நவீன முறையிலான கற்றல்களுக்கு முகம் கொடுக்க வேண்டும், அவற்றிற்கு பயன் படுத்தக்கூடிய மென்பொருள் செயலிகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் போன்றவைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விளக்கங்களையும் செயன்முறை மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.

மேலும் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் மௌலவி எம்.ரீ.ஏ.முனாப் , மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் 

 

ஒரு மாணவர் தனது பட்டத்தைப் பெற ஒரு ஹியூமனாய்டு ரோபோவை (Humanoid Robot) அனுப்பினார்.


இது என்னங்கடா புதுசா இருக்கு?! 🤯 சீனால ஒரு புத்திசாலிப் பையன், தன் பட்டமளிப்பு விழாவுக்கு (Graduation Ceremony) நேர்ல போகாம, ஒரு ரோபோவை (Robot) அனுப்பி பட்டத்தைப் வாங்கிட்டு வந்திருக்கான்! 


கை குலுக்கறதுல இருந்து, சர்டிபிகேட் வாங்குறது வரைக்கும் எல்லாமே ரோபோதான் (Robot) பாத்துக்கிச்சு.

 


செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.


ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. குளிரூட்டுவதற்கும், அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீர் அவசியமாகிறது.


உலகில் பாதி மக்கள் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். பருவநிலை மாற்றமும், வளர்ந்து வரும் தேவையும் இந்தப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.


இந்நிலையில், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தால், தண்ணீர் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்குமா?


விளம்பரம்


ஏஐ எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறது?

சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு ஒரு டீஸ்பூன் தண்ணீரில் 15-ல் ஒரு பகுதி பயன்படுகிறது என்கிறார் ஓபன்ஏஐயின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

சரோஜா தேவி விருதுபெறும் காட்சி

வெறுக்கப்பட்ட மகளாக பிறந்து திரையுலக ராணியாக வலம் வந்த சரோஜா தேவியின் சாதனை பயணம்

லார்ட்ஸ் டெஸ்ட்

போராடிய ஜடேஜா: லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய ஸ்டோக்ஸின் அஸ்திரங்கள் எவை?

 நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர்.

கர்நாடகா: மலை குகையில் 2 குழந்தைகளுடன் ரகசியமாக வசித்த ரஷ்ய பெண் - அங்கு என்ன செய்தார்?

அரசுப்பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  தமிழ்நாடு அரசு   

ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் அரசு வேலை - இளைஞர்கள் ஏமாற்றப்படுவதாக புகார்

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால், கலிஃபோர்னியா மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த அமெரிக்க கல்வியாளர்களின் ஆய்வு, வேறு கருத்தைக் முன்வைக்கிறது. GPT-3 மாதிரியில் 10 முதல் 50 பதில்களுக்கு அரை லிட்டர் தண்ணீர் (அதாவது, ஒரு பதிலுக்கு 2 முதல் 10 டீஸ்பூன் தண்ணீர்) பயன்படுவதாக அவர்கள் கண்டறிந்தனர்.


கேள்வியின் வகை, பதிலின் நீளம், பதில் செயலாக்கப்படும் இடம் மற்றும் கணக்கீட்டில் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளைப் பொறுத்து தண்ணீர் பயன்பாட்டின் அளவு மாறுபடுகிறது.


10-50 கேள்விகளுக்கு 500 மில்லி தண்ணீர் தேவைப்படுவதாக அமெரிக்க கல்வியாளர்களின் மதிப்பீடு செய்துள்ளனர். இது நிலக்கரி, எரிவாயு அல்லது அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காகப் பயன்படும் தண்ணீரையும் உள்ளடக்கியது.


ஆனால், சாம் ஆல்ட்மேனின் கணக்கு இதை உள்ளடக்காமல் இருக்கலாம். பிபிசி கேட்டபோது, ஓபன்ஏஐ தனது கணக்கீடுகளின் விவரங்களை அளிக்கவில்லை.


இருப்பினும் தண்ணீர் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது.


ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் (100 கோடி) கேள்விகளுக்கு சாட்ஜிபிடி பதிலளிக்கிறது. இது பல ஏஐ (செயற்கை நுண்ணறிவு) புரோகிராம்களில் ஒன்று மட்டுமே எனக் கூறுகிறது ஓபன்ஏஐ.


2027 ஆம் ஆண்டுக்குள், ஏஐ தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் டென்மார்க் முழுவதும் பயன்படுத்தும் தண்ணீரை விட 4 முதல் 6 மடங்கு அதிக தண்ணீரை பயன்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது.


"நாம் எவ்வளவு அதிகமாக ஏஐ உபயோகிக்கிறோமோ , அவ்வளவு தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம்," என்று அந்த ஆய்வு ஆசிரியர்களில் ஒருவரான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷோலி ரென் கூறுகிறார்.


ஏஐ தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகிறது?

'கதை படித்தால் பணம் வரும்' - லுக் ஆப் மோசடியின் பெண்கள் சிக்கியது எப்படி?

11 ஜூலை 2025

ஸ்டார்லிங்க் இணைய வேகம், கட்டணம் எப்படி இருக்கும்? இந்தியாவில் என்ன மாற்றம் நிகழும்?

8 ஜூலை 2025

கீழடி: மண்டை ஓடுகளின் அடிப்படையில் முகத்தை மறுஆக்கம் செய்தது எப்படி? ஆய்வாளர்கள் விளக்கம்

5 ஜூலை 2025

ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு, குறிப்பாக படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவது, மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னஞ்சல் எழுதுவது, கட்டுரைகள் எழுதுதல் அல்லது டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்குதல் போன்ற ஆன்லைன் செயல்பாடுகள், தரவு மையங்கள் எனப்படும் பெரிய கட்டடங்களில் உள்ள கணினி சேவையகங்களால் செயலாக்கப்படுகின்றன.


இந்த தரவு மையங்கள் சில நேரங்களில் பல கால்பந்து மைதானங்களைப் போன்று, பெரிய அளவில் கட்டப்படுகின்றன.


கணினிகள் வழியாக மின்சாரம் பாய்வதால் இந்த அமைப்புகள் சூடாகின்றன.


இவற்றை குளிர்விக்க, பொதுவாக சுத்தமான நன்னீர் பயன்படுத்தப்படுகிறது. குளிரூட்டல் முறைகள் வேறுபடுகின்றன, ஆனால் சில முறைகள் பயன்படுத்தும் தண்ணீரில் 80% வரை வளிமண்டலத்தில் ஆவியாகிவிடுகிறது.


ஷாப்பிங் அல்லது இணையத்தில் தேடுதல் போன்ற வழக்கமான ஆன்லைன் செயல்பாடுகளை விட, ஏஐ பணிகளுக்கு, குறிப்பாக படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்குவது போன்ற சிக்கலான செயல்பாடுகளுக்கு, அதிக கணினி சக்தி தேவை. எனவே, இவை மிக அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன.


சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) மதிப்பீட்டின்படி, சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு, கூகுளிடம் கேட்கப்படும் கேள்வியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த வித்தியாசத்தை துல்லியமாக அளவிடுவது கடினம்.


அதிக மின்சார பயன்பாடு அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இதனால், கணினிகளை குளிர்விக்க அதிக அளவு குளிர்ச்சி தேவைப்படுகிறது.


ஏஐ க்கான நீர் பயன்பாடு எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது?

தரவு மையம் பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தரவு மையங்களில் ஆன்லைன் செயல்பாட்டைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் கணினி சேவையகங்களின் நீண்ட அடுக்குகள் உள்ளன.

பெரிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஏஐ செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவை தனியாக வெளியிடவில்லை. ஆனால், அவற்றின் மொத்த தண்ணீர் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


கூகுள், மெட்டா, மற்றும் மைக்ரோசாப்ட் (ஓபன் ஏஐயில் முக்கிய முதலீட்டாளர்) ஆகியவற்றின் சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, 2020 முதல் அவற்றின் தண்ணீர் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கூகுளின் தண்ணீர் பயன்பாடு இந்த காலத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) இதுவரை தண்ணீர் பயன்பாட்டு புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை.


ஏஐக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 2030 ஆம் ஆண்டளவில் தரவு மையங்களின் நீர் பயன்பாடு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) கணித்துள்ளது. இதில் மின்சார உற்பத்திக்கும், கணினி சிப்கள் தயாரிப்பதற்கும் பயன்படும் தண்ணீரும் அடங்கும்.


2024 இல் அதன் தரவு மையங்கள் 37 பில்லியன் லிட்டர் தண்ணீரை நீர் ஆதாரங்களில் இருந்து எடுத்தன. இதில் 29 பில்லியன் லிட்டர் தண்ணீர் "நுகரப்பட்டது", அதாவது பெரும்பாலும் ஆவியாகிவிட்டது என கூகுள் கூறுகிறது.


இந்த அதிகமான அளவா என்றால்? அது எதனோடு ஒப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தது.


இந்த அளவு தண்ணீரால், ஐ.நா. பரிந்துரைப்படி, 1.6 மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 50 லிட்டர் என்ற குறைந்தபட்ச தேவையை ஒரு வருடத்திற்கு வழங்க முடியும். அல்லது, கூகுள் கூறுவதன்படி, தென்மேற்கு அமெரிக்காவில் 51 கோல்ஃப் மைதானங்களுக்கு ஒரு வருடத்திற்கு நீர்ப்பாசனம் செய்யலாம்.


கூகுள் இணையத்தையே அழிக்கப் போகிறதா? அதன் புதிய AI என்ன செய்யும்?

19 ஜூன் 2025

ஃபாஸ்டேக்: 'ரூ. 3000 செலுத்தினால் 200 ட்ரிப்' - புதிய அறிவிப்பு குறித்த சந்தேகங்களுக்கான பதில்கள்

19 ஜூன் 2025

ராக்கெட் விண்வெளிக்குப் புறப்படும் போது சவாலான முதல் சில நிமிடங்களில் என்ன நடக்கும்?

8 ஜூன் 2025

வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை ஏன் உருவாக்க வேண்டும்?

சமீப ஆண்டுகளில், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் அமெரிக்காவின் அரிசோனா போன்ற வறட்சி பாதிப்பு உள்ள பகுதிகளில் தரவு மையங்களுக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்பு, தலைப்பு செய்தியாகியுள்ளது.


ஸ்பெயினில், தரவு மையங்களின் விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, 'யுவர் கிளவுட் இஸ் ட்ரையிங் அப் மை ரிவர்' என்ற சுற்றுச்சூழல் குழு உருவாக்கப்பட்டது.


சிலி மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு, தண்ணீர் பயன்பாடு குறித்த பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, கூகுள் தனது தரவு மையத் திட்டங்களை இடைநிறுத்தியோ அல்லது மாற்றியோ உள்ளது.


சுற்றுச்சூழல் குழுக்கள் பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சிலியில், கூகுளின் புதிய தரவு மையம் அதிக தண்ணீரைப் பயன்படுத்தும் என்று அஞ்சி, சுற்றுச்சூழல் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

என்டிடி டேட்டா நிறுவனம், உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட தரவு மையங்களை இயக்குகிறது. வெப்பமான, வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை அமைப்பதற்கு "ஆர்வம் அதிகரித்து வருவதாக" அதன் தலைமை நிர்வாகி அபிஜித் துபே கூறுகிறார்.


நிலம் கிடைப்பது, மின் உள்கட்டமைப்பு, சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மற்றும் சாதகமான விதிமுறைகள் ஆகியவை இந்தப் பகுதிகளை ஈர்க்கக்கூடியதாக மாற்றுகின்றன என்று அவர் விளக்குகிறார்.


ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, அரிப்பு (கொரோஷன்) ஏற்படுகிறது. மேலும், கட்டடங்களை குளிர்விக்க அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால், வறண்ட பகுதிகள் தரவு மையங்களுக்கு சிறந்த இடங்களாகக் கருதப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


கூகுள், மைக்ரோசாப்ட், மற்றும் மெட்டா ஆகியவை தங்கள் சுற்றுச்சூழல் அறிக்கைகளில், வறண்ட பகுதிகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றன.


அந்த நிறுவனங்களின் சமீபத்திய சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, கூகுள் பயன்படுத்தும் தண்ணீரில் 14%, "அதிக" தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும், மற்றொரு 14% "நடுத்தர" பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும் எடுக்கப்படுகிறது.


மைக்ரோசாப்டின் 46% தண்ணீர், "தண்ணீர் அழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து" எடுக்கப்படுகிறது.


மெட்டாவின் 26% தண்ணீர் "அதிக" அல்லது "மிக அதிக தண்ணீர் அழுத்தம்" உள்ள பகுதிகளிலிருந்து எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிறுவனங்கள் வெளியிட அறிக்கைகளின் படி அறியமுடிகிறது.


அமேசான் வெப் சர்வீஸ் (AWS) தண்ணீர் பயன்பாடு குறித்து எந்த புள்ளிவிவரமும் வெளியிடவில்லை.


2024-ல் ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின்  காரணமாக, பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2024-ல் ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக, பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. இதனால், நீர் பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் அதிக கவலை உருவாகியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் 

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குளிரூட்டக்குவதற்கு வேறு வழிகள் உள்ளதா?

உலர் அல்லது காற்றால் குளிரூட்டும் முறைகளைப் பயன்படுத்த முடியும், ஆனால் இவை நீர் குளிரூட்டல் முறைகளை விட அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன என பேராசிரியர் ரென் கூறுகிறார்.


மைக்ரோசாப்ட், மெட்டா, மற்றும் அமேசான் ஆகியவை closed loop குளிரூட்டல் அமைப்புகளை உருவாக்கி வருவதாகக் கூறுகின்றன. இவற்றில், நீர் அல்லது வேறு திரவம் ஆவியாகவோ அல்லது மாற்றப்படவோ தேவையில்லாமல், கணினி உள்ளேயே சுழற்சி செய்யப்படுகிறது.


எதிர்காலத்தில் வறண்ட பகுதிகளில் இத்தகைய மூடிய வளைய அமைப்புகள் பரவலாகத் தேவைப்படும் என்று துபே கருதுகிறார். ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தேவைப்படும் அந்த தொழில்துறை "இன்னும் ஆரம்ப கட்டத்தில்" தான் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.


ஜெர்மனி, பின்லாந்து, மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில், தரவு மையங்களில் இருந்து வெப்பத்தை மீட்டெடுத்து உள்ளூர் வீடுகளுக்கு பயன்படுத்தும் திட்டங்கள் இயங்குகின்றன அல்லது திட்டமிடப்பட்டுள்ளன.


தரவு மையங்களை குளிர்விக்க, நிறுவனங்கள் பொதுவாக சுத்தமான நன்னீரை (குடிநீர் போன்றவை) பயன்படுத்த விரும்புகின்றன. இது பாக்டீரியா வளர்ச்சி, குழாய் அடைப்பு, மற்றும் அரிப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஆனால், சில நிறுவனங்கள் கடல் நீர் அல்லது தொழிற்சாலை கழிவுநீர் போன்ற குடிநீருக்கு தகுதியற்ற நீர் ஆதாரங்களையும் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.


குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்களில் புதைந்துள்ள ஆபத்து

6 ஜூன் 2025

ஐபோன் உற்பத்தி: டிரம்ப் அறிவிப்பால் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் 40 ஆயிரம் பேரின் வேலைக்கு ஆபத்தா?

26 மே 2025

நடிகர்களே இல்லாமல் வெறும் ரூ.10 லட்சத்தில் தயாரான காதல் சினிமா - ஏ.ஐ மூலம் சாத்தியமானது எப்படி?

21 மே 2025

சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்குமா ?

ஏஐ தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உதவவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, சக்திவாய்ந்த கிரீன்ஹவுஸ் வாயுவான மீத்தேன் கசிவைக் கண்டறிய ஏஐ உதவுகிறது. எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்தை மறுவழிப்படுத்தவும் ஏஐ பயன்படுகிறது.


ஏஐயால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் "அளப்பரிய மாற்றத்தை" ஏற்படுத்த முடியும் என்று யுனிசெஃப் (ஐநா குழந்தைகள் நிறுவனம்) புத்தாக்க அலுவலகத்தின் உலகளாவிய இயக்குநர் தாமஸ் டேவின் கூறுகிறார்.


சில தரவு மையங்கள் வறண்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன, பட மூலாதாரம்,Meta

படக்குறிப்பு,சில தரவு மையங்கள் வறண்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன, ஆனால் நிறுவனங்கள் தண்ணீரை திறம்பட பயன்படுத்தவும், விநியோகங்களை நிரப்ப உதவுவதாகவும் கூறுகின்றன.

ஏஐ (செயற்கை நுண்ணறிவு) நிறுவனங்கள் "மிகவும் சக்திவாய்ந்த மாதிரிகளை உருவாக்குவதற்கு பதிலாக", "திறமையான மற்றும் வெளிப்படையான" முறைகளை நோக்கி போட்டியிட வேண்டும் என தாமஸ் டேவின் கூறுகிறார்.


தொடர்ந்து பேசிய அவர், நிறுவனங்கள் தங்கள் ஏஐ மாதிரிகளை ஓப்பன் சோர்ஸ் ஆக்க வேண்டும். அதாவது, அனைவரும் இந்த மாதிரிகளை பயன்படுத்தவும், மாற்றியமைக்கவும் முடியும் வகையில் உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.


இது பயிற்சி செயல்முறையில் பயன்படும் அதிக மின்சாரம் மற்றும் தண்ணீரின் தேவையைக் குறைக்கும் என்கிறார் டேவின். இந்த செயல்முறையில், பெரிய அளவு தரவு உள்ளீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பதில்கள் உருவாக்கப்படுகின்றன.


ஆனால், லோரெனா ஜாமே-பலாசி எனும் ஒரு சுயாதீன ஆய்வாளர் மற்றும் எத்திக்கல் டெக் சொசைட்டியின் நிறுவனர், வேறொரு கருத்தை முன்வைக்கிறார்.


பல ஐரோப்பிய அரசுகள், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஐநா அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கிய அவர், ஏஐயின் அதிக வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு நிலையானதாக (sustainable) ஆக்குவதற்கு "எந்த வழியும் இல்லை" என்று கூறுகிறார்.


"நாம் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை திறமையாக செய்ய முடியும். ஆனால், அதை மிகவும் திறமையாக்குவது, அதிக பயன்பாட்டை உருவாக்கும்."


"நீண்ட காலத்தில், பெரிய மற்றும் வேகமான ஏஐ அமைப்புகளை உருவாக்கும் இந்த போட்டியைத் தொடர, நம்மிடம் போதுமான மூலப்பொருட்கள் இல்லை" என்றும் அவர் கூறுகிறார்.


ஐபோன் தயாரிப்பை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மாற்றினால் யாருக்கு இழப்பு?

17 மே 2025

ஏ.ஐ வல்லுநராக விருப்பமா? கல்லூரி படிப்பை தேர்வு செய்கையில் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

17 மே 2025

சென்னை மாநகராட்சி சேவைகளை விரைவில் வாட்ஸ்ஆப் மூலம் பெறலாம் - ஆணையர் தகவல்

4 மே 2025

தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?

கூகுள், மைக்ரோசாப்ட், ஏடபிள்யூஎஸ் (Amazon Web Services), மற்றும் மெட்டா ஆகியவை, உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்து குளிரூட்டல் தொழில்நுட்பங்களை கவனமாகத் தேர்ந்தெடுப்பதாகக் கூறுகின்றன.


இந்நிறுவனங்கள் அனைத்தும் 2030-க்குள் "வாட்டர் பாசிட்டிவ்" (water positive) ஆக இருக்க இலக்குகளை நிர்ணயித்துள்ளன. அதாவது இதன் பொருள் என்னவென்றால் , தங்கள் செயல்பாடுகளில், எடுக்கும் தண்ணீரை விட அதிக தண்ணீரை சுற்றுச்சூழலுக்கு திருப்பி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


இதற்காக, அவர்கள், காடுகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கின்றனர். நீர் கசிவுகளைக் கண்டறிய உதவுகின்றனர். நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் திட்டங்களை ஆதரிக்கின்றனர்.


ஏடபிள்யூஎஸ் , தனது இலக்கை 41% அடைந்துள்ளதாகக் கூறுகிறது. மைக்ரோசாப்ட் இந்த இலக்கை "நோக்கி முன்னேறி வருவதாகக்" கூறுகிறது. கூகுள் மற்றும் மெட்டாவின் புள்ளிவிவரங்கள், அவர்கள் திருப்பி நிரப்பும் தண்ணீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. ஆனால், யுனிசெஃப்பைச் சேர்ந்த தாமஸ் டேவின், இந்த இலக்குகளை அடைய இன்னும் "நீண்ட தூரம் செல்லவேண்டும் " எனக் கூறுகிறார்.


நீர் மற்றும் ஆற்றல் திறனை மேம்படுத்த "கடினமாக உழைப்பதாக" ஓபன் ஏஐ கூறுகிறது. மேலும், "கணினி ஆற்றலை சிறப்பாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்" என்று வலியுறுத்துகிறது.


ஆனால், தண்ணீர் பயன்பாடு குறித்து ஒரே மாதிரியான, தரப்படுத்தப்பட்ட அறிக்கைகள் தேவை. "நாம் அதனை அளவிட முடியாவிட்டால், நிர்வகிக்க முடியாது."என்கிறார் பேராசிரியர் ஷோலி ரென் .

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.