Showing posts with label Technology. Show all posts



Google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் ரெனே மேயர்ஹோஃபர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.


அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒப்பந்தத்தில் நிறுவனம் ஈடுபட்டதும், கார்பன் சமநிலை இலக்கிலிருந்து விலகியதாக அவர் குற்றம்சாட்டியதும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


“நிர்வாகம் தனது ஒழுக்கநெறி திசையை இழந்துவிட்டது” என குறிப்பிட்ட அவர், நிறுவனத்தின் தற்போதைய திசையுடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


 இந்தியாவில் மின்சார வாகனங்கள் தற்போது பிரபலமடைந்து வருகின்றனவா? இந்த மாற்றம் அதிகரித்து வருவதை பல விஷயங்கள் உணர்த்துகின்றன.


2026ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில், மின்சாரக் கார்களின் சந்தை 25 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே வேளையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்கள் 5 சதவீதம் என்ற முக்கிய எல்லையைத் தாண்டின.


"இந்த மாற்றம் இனி வெறும் திசை சார்ந்தது மட்டுமல்ல, மாறாக அது கணிசமானது" என்று இந்தியாவின் வாகன விநியோகஸ்தர்கள் சங்கம் சமீபத்தில் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


குறிப்பாக பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிக விலையுள்ள பெரிய ரகக் கார்களில் மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.


விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு 10 வாகனங்களிலும் ஒன்று இப்போது மின்சார வாகனமாக உள்ளது. மின்சார மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஏற்கனவே அவற்றின் பிரிவுகளில் முறையே 30 சதவீதத்திற்கும் மற்றும் 15 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனையைப் பதிவு செய்துள்ளன.


விளம்பரம்


கடந்த சில மாதங்களில், குறிப்பாக மத்திய கிழக்கு மோதலின் பின்னணியில், மின்சாரக் கார்கள் மீதான ஆர்வம் கணிசமாக உயர்ந்துள்ளது.


இந்தியா தனது கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலைகள் 50 சதவீதம் வரை உயர்ந்ததால், கடந்த நான்கு ஆண்டுகளாக எரிபொருள் விலைகளை ஓரளவிற்கு நிலையாக வைத்திருந்த அரசு எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள், தற்போது எரிபொருள் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.


எரிபொருளைச் சேமிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோதியும் இந்தியர்களைக் கார்களைப் பகிர்ந்துகொள்ளுமாறும் , பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும், வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

மனித உடலில் அக்குளில் மட்டும் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

மனித உடலில் அக்குளில் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?

DMK, Appavu, MLA, 2016, Case, Victory

10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்ட அப்பாவுக்கு என்ன பலன் கிடைக்கும்?

வைபவ் சூர்யவன்ஷி, ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்திய ஆண்கள் டி20 அணி, ஸ்ரேயாஸ் ஐயர்

சச்சின் சாதனையை சூர்யவன்ஷி தகர்ப்பாரா? ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்திய டி20 அணி விவரம்

கொச்சி, மட்டஞ்சேரி, யூத நகரம், யூதர்கள் 

கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்றார்கள்?

End of அதிகம் படிக்கப்பட்டது

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

" அதிகரித்து வரும் இந்த நிச்சயமற்ற தன்மையும், உயர்ந்த எரிபொருள் விலைகளும் மின்சார வாகனங்களுக்கான தேவையை வலுப்படுத்தும் கூடுதல் காரணியாகச் செயல்படுகின்றன" என்று ஜப்பானிய தரகு நிறுவனமான நோமுரா கூறுகிறது.


ஆனால் இந்த உடனடித் தூண்டுதல்களுக்கு அப்பாற்பட்டு, மேலும் பல நீண்டகால காரணிகளும் கார் வாங்குபவர்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன.


அவற்றில் மிக முக்கியமானது, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வந்து 2032 மார்ச் வரை நடைமுறையில் இருக்கத் திட்டமிடப்பட்டுள்ள சிஏஎப்ஃஈ - 3 என்று அறியப்படும் வரவிருக்கும் ஒழுங்குமுறை விதிகளாகும்.


இவை "ஒழுங்குமுறைகளை அர்த்தமுள்ள வகையில் கடுமையாக்குவதோடு மின்சார வாகன பயன்பாட்டில் மிகவும் வெளிப்படையான வேகத்தையும் ஏற்படுத்தக்கூடும்" என்று பெர்ன்ஸ்டீன் நிறுவனத்தின் ஆய்வாளர்களான வேணுகோபால் கர்ரே மற்றும் பரம் ஷா ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


இந்த சிஏஎப்ஃஈ - 3 வரைவு விதிகள், கார்களில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வை 2032 ஆம் ஆண்டுக்குள் 113 கிராமிலிருந்து 76 கிராமாகக் குறைக்க முயல்கின்றன. இது 33 சதவீத வீழ்ச்சியாகும்.


மேலும், வாகன பாகங்களை உற்பத்தி செய்யும் எட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட சுமார் ஒரு பில்லியன் டாலர் அபராதம் இதுவரை வசூலிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால், எதிர்வரும் காலத்தில் தற்போதைய சூழ்நிலையைப் போலல்லாமல், "சிஏஎப்ஃஈ - 3 இன் அபராதங்கள் வசூலிக்கப்படலாம்" என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறது.


இவை அனைத்தும் மின்சார வாகனங்களுக்கான தேவையை முன்னெடுத்துச் செல்லும்.


நாட்டில் மிக அதிகமான மாசடைந்த பகுதிகளில் ஒன்றான டெல்லி போன்றவை, பெட்ரோல் டீசல் வாகனங்களை படிப்படியாக நிறுத்தவும், 2027க்குள் இந்த வகை புதிய வாகனங்களின் பதிவை நிறுத்தவும் முன்மொழியும் லட்சிய வரைவுக் கொள்கைகளைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளன.


இந்தியா தற்போது தனது மின்சார வாகனங்களுக்கான சலுகைகளைக் கடுமையான இலக்குகள் அல்லது அபராதங்களுடன் இணைக்கவில்லை, ஆனால் CAFE-3  (சிஏஎப்ஃஈ - 3 ) விதிகள் இதைக் கட்டாயமாக்கும் என்று கர்ரே மற்றும் ஷா கூறுகின்றனர்.

பட மூலாதாரம்,Bloomberg via Getty Images

படக்குறிப்பு,அதிகமான புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாலும், சாதகமான ஒழுங்குமுறைகளாலும் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"தொடர்ச்சியாக புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படவிருப்பது" மற்றொரு சாதகமான காரணியாக இருக்கும் என்று நோமுரா கூறுகிறது.


இது 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்களின் பங்களிப்பு 9 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கிறது.


இருசக்கர வாகனப் பிரிவிலும் கூட, புதிய மலிவு விலை மாடல்களின் வருகையால் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதே நேரத்தில் 2030க்குள் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை, மின்சாரம் அல்லாத பிற வாகனங்களின் விற்பனையை விட அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது; இது இந்த மாற்றத்தை மேலும் வேகப்படுத்தும்.


"இந்தியாவின் இந்த மாற்றம், மூன்று சக்கர வாகனங்கள் போன்ற அதிகப் பயன்பாடு கொண்ட, அதே சமயம் விலை குறைவான பிரிவுகளில் அதிகமாகக் குவிந்துள்ளது. இது இந்த மாற்றத்தின் வளர்ச்சி சீரற்றதாக இருக்க வாய்ப்புள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.


விலை மலிவாகும் போதும் , சார்ஜிங் உள்கட்டமைப்பு விரிவடையும் போதும், கொள்கை ரீதியான ஆதரவு வலுவடையும் போதும் காலப்போக்கில் பயணிகள் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு வேகமெடுக்கும்" என்று நோமுரா கூறுகிறது.


இருப்பினும், இத்தகைய ஊக்கமளிக்கும் அறிகுறிகள் இருந்தபோதிலும், மின்சார வாகனப் பயன்பாட்டில் முக்கிய உலகளாவிய பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கியே உள்ளது.


நோமுரா தரவுகளின்படி, பயணிகள் கார்களில் சீனாவின் மின்சார வாகனங்களின் பயன்பாடு , 2020 இல் வெறும் 5.7 சதவீதமாக இருந்ததிலிருந்து கடந்த ஆண்டில் 53.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதத்திலும், அமெரிக்கா 8 சதவீதத்திலும் உள்ளன.


மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகச் சார்ஜிங் உள்கட்டமைப்பு இன்னும் நீடிக்கிறது.


பொது சார்ஜிங் நிலையங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 2,000-லிருந்து 10,000 க்கும் அதிகமாக வளர்ந்துள்ளன, இருப்பினும் இந்தியாவின் 28 மாநிலங்களில் வெறும் நான்கு மாநிலங்கள் மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகமான சார்ஜர்களைக் கொண்டுள்ளதால், பிராந்தியங்களுக்கு இடையே இத்தகைய உள்கட்டமைப்பு சீரற்றதாகவே உள்ளது.


மேலும், சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள இடைவெளி மிக வியக்க வைக்கிறது. சீனா இப்போது 20 மில்லியன் பொது சார்ஜிங் பாயிண்டுகளைக் கொண்டுள்ளது; ஆனால் இந்தியாவிடம் உள்ள சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கை வெறும் 10,000 மட்டுமே ஆகும்.


சார்ஜிங் செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளின் விளைவாக, "ரேன்ஜ் ஆன்சைட்டி" அதாவது ஒருமுறை சார்ஜ் செய்தால் பயணம் முழுவதையும் முடிக்க பேட்டரி போதுமானதாக இருக்குமா என்ற கவலை நுகர்வோருக்கு ஒரு முக்கியத் தடையாக நீடிக்கிறது என்று நோமுரா கூறுகிறது.


உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், கேபிஎம்ஜி நிறுவனத்தின்படி, லித்தியம் மற்றும் கோபால்ட் சுத்திகரிப்பில் சுமார் 70-80 சதவீதத்தையும், அரிய கனிமங்களைப் பிரித்தெடுப்பதில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தையும் சீனாவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

பட மூலாதாரம்,NurPhoto via Getty Images

படக்குறிப்பு,கடந்த மூன்று ஆண்டுகளில் பொது சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கை 2,000-லிருந்து 10,000-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விநியோகச் சங்கிலியில் உள்ள இடைவெளிகள் ஆய்வாளர்களின் மற்றொரு முக்கியக் கவலைக்குரிய புள்ளியாகும்.


பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படும் அரிய கனிமங்களின் உலகளாவிய விநியோகத்தை இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது.


உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், கேபிஎம்ஜி நிறுவனத்தின்படி, லித்தியம் மற்றும் கோபால்ட் சுத்திகரிப்பில் சுமார் 70-80 சதவீதத்தையும், அரிய கனிமங்களைப் பிரித்தெடுப்பதில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தையும் சீனாவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.


இவை இந்த மாற்றத்தில் உள்ள உலக அரசியல் சூழல் சார்ந்த அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


மேலும் இவை இரண்டும் "இந்தியாவின் மின்சார வாகன அறிமுகத்தைத் தாமதப்படுத்தலாம் மற்றும் அதன் விலை போட்டித்தன்மையைப் பாதிக்கலாம்" என்று அந்த ஆலோசனை நிறுவனம் சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


இந்தச் சவாலுக்கு உடனடித் தீர்வுகள் எதுவும் இல்லை. சுரங்கத் தொழிலில் இருந்து பேட்டரி பேக் அல்லது காந்தத் தயாரிப்பு வரையிலான ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியைக் கட்டமைக்க பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகலாம் .


இந்தியாவிற்குப் பாதுகாப்பான விநியோகத்திற்கான "குறுகிய கால நடவடிக்கைகளும், உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீண்ட கால முயற்சிகளும்" தேவைப்படும் என்று கேபிஎம்ஜி கூறுகிறது.


இருப்பினும், வாங்குபவர்களின் பார்வையில் இருந்து பார்க்கும்போது, சிஏஎப்ஃஈ - 3 ஒழுங்குமுறை விதிகளைச் சரியான நேரத்தில் செயல்படுத்துவது ஒரு முக்கிய உந்துசக்தியாக இருக்கும் என்று அரசின் சிந்தனைக் குழுவான நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் சமீபத்தில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் எழுதியுள்ளார்.


கடந்த மூன்று ஆண்டுகளாக விவாதத்தில் இருந்தபோதிலும் இதன் இறுதி வரைவு மிக விரைவில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.


"ஒழுங்குமுறை சார்ந்த தெளிவு இல்லாத நிலையில், உற்பத்தியாளர்கள் தங்களின் முதலீட்டு முடிவுகளைத் தள்ளிப்போடுகிறார்கள், விநியோகச் சங்கிலிகள் மிக மெதுவாகவே உருவாகின்றன, மேலும் ஒட்டுமொத்த சூழலும் நிச்சயமற்றதாகவே நீடிக்கிறது" என்று எழுதியுள்ள காந்த், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை வேகப்படுத்துவது கொள்கை தொடர்பான உறுதி தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


கிளீன் ஸ்ரீலங்கா ( Clean Srilanka )வேலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்படுத்தும் இரசாயன திரவங்களின் வெற்றுக் கொள்கலன்களை அகற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட வளைந்தவட்டைக் கிழல் கண்டத்தில் இந்த நிகழ்வு நேற்று முதல் முறையாக நடைபெற்றது.

காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.

 விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் ஒரு செயல் திட்டமாக இந்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது .

விவசாய குழு பிரதிநிதி இரா.திருநாவுக்கரசு உள்ளிட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் பயன்படுத்தும் கிருமிநாசினிகள் ஏனைய இரசாயன பொருட்களின் வெற்றுக் கொள்கலன்களை முறையாக மூன்று வேறு கொள்கலன்களில் இடுவதன் மூலம் சூழலை பாதுகாப்பதுடன் அவற்றை பயன்படுத்தவும் முடியும் என்று கூறப்படுகிறது.

பச்சை நிற கொள்கலனில் பொலித்தீன் சார்ந்த கழிவுகளும், சிவப்பு நிற கொள்கலனில் கண்ணாடி சார்ந்த கழிவுகளும், நீல நிற கொள்கலனில் பிளாஸ்டிக் சார்ந்த கழிவுகளும்  போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இச் செயற்திட்டம்  விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.


 (வி.ரி. சகாதேவராஜா)

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட முகந்தெனிய சிங்கள வித்தியாலய மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்காக இரண்டு கணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு நேற்று  20 ஆம் திகதி புதன்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் அப்பாடசாலையில்  இடம்பெற்றது.


இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் இலங்கைக்கான இணைப்பாளருமான சமூகசேவகர் க.துரைநாயகம், செயலாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், பொருளாளர் எஸ். கருஸ்ராஜ், உபதலைவர் ஒய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன், பிரதிச்செயலாளர் ஊடகவியலாளருமான  சா.நடனசபேசன், உறுப்பினர்களான அதிபர் இ.ஜீவராஜ் கண்ணன் பாடசாலையின் அதிபர் கே.ராமநாயக்க மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Rep/Jathees

WhatsApp-ல இப்போ வந்திருக்கும் முக்கியமான புதிய updates மற்றும் features இதுதான் 👇


🔒 1. Incognito Chat with Meta AI

இது ஒரு புதிய privacy feature.

Meta AI-ஐ பயன்படுத்தி chat பண்ணினாலும், அந்த conversation-ஐ WhatsApp அல்லது Meta கூட பார்க்க முடியாத மாதிரி பாதுகாப்பாக இருக்கும். Messages automatic-ஆ disappear ஆகும். �

Reuters +1


🤖 2. Side Chat with Meta AI

நீங்க ஒரு chat-ல இருக்கும்போதே private-ஆ Meta AI help கேட்கலாம்.

உதாரணம்:

message reply idea

translation

quick info

இதை மற்றவர்களுக்கு தெரியாது. �

Reuters +1


📢 3. Channels Directly in Chats Tab

Follow பண்ணுற Channels-ஐ தனியாக “Chats” section-லேயே பார்க்கும் feature test ஆகுது. Updates tab போகாம easy access கிடைக்கும். �

WABetaInfo


👋 4. Group Greeting Message

New member group-க்கு join ஆனதும் admin ஒரு welcome/greeting message set பண்ணலாம். இது இன்னும் beta testing-ல இருக்கு. �

WABetaInfo


🎥 5. Better Video & Voice Calls

screen sharing

filters

backgrounds

clearer calls

இவை improve பண்ணப்பட்டிருக்கிறது. �

Cashify +1


🌐 6. Auto Message Translation

வேறு language-ல வரும் messages automatic-ஆ translate பண்ணும் feature rollout ஆகுது. �

I Create Brand


🔐 7. Advanced Privacy Features

Chat Lock

Secret Code

Silence Unknown Calls

View Once Voice Messages

போன்ற security features இன்னும் strong ஆக்கப்பட்டிருக்கிறது. �

Odysense +1


💾 8. Easier Storage Management

Chats delete பண்ணாம media files மட்டும் clean பண்ணலாம். Channels storage clean-up கூட வருது. �

WABetaInfo +1


🎨 9. New UI & Themes

iPhone users க்கு புதிய “Liquid Glass” design style test பண்ணுறாங்க. Chat interface இன்னும் modern ஆகும். �

The Times of India


⭐ 10. WhatsApp Plus Subscription (Testing)

Paid subscription மாதிரி ஒரு feature test ஆகுது:

custom themes

extra stickers

more pinned chats

custom ringtone

போன்ற வசதிகள் கிடைக்கும். �

theverge.com +1👇


🔒 1. Incognito Chat with Meta AI

இது ஒரு புதிய privacy feature.

Meta AI-ஐ பயன்படுத்தி chat பண்ணினாலும், அந்த conversation-ஐ WhatsApp அல்லது Meta கூட பார்க்க முடியாத மாதிரி பாதுகாப்பாக இருக்கும். Messages automatic-ஆ disappear ஆகும். �

Reuters +1


🤖 2. Side Chat with Meta AI

நீங்க ஒரு chat-ல இருக்கும்போதே private-ஆ Meta AI help கேட்கலாம்.

உதாரணம்:

message reply idea

translation

quick info

இதை மற்றவர்களுக்கு தெரியாது. �

Reuters +1


📢 3. Channels Directly in Chats Tab

Follow பண்ணுற Channels-ஐ தனியாக “Chats” section-லேயே பார்க்கும் feature test ஆகுது. Updates tab போகாம easy access கிடைக்கும். �

WABetaInfo


👋 4. Group Greeting Message

New member group-க்கு join ஆனதும் admin ஒரு welcome/greeting message set பண்ணலாம். இது இன்னும் beta testing-ல இருக்கு. �

WABetaInfo


🎥 5. Better Video & Voice Calls

screen sharing

filters

backgrounds

clearer calls

இவை improve பண்ணப்பட்டிருக்கிறது. �

Cashify +1


🌐 6. Auto Message Translation

வேறு language-ல வரும் messages automatic-ஆ translate பண்ணும் feature rollout ஆகுது. �

I Create Brand


🔐 7. Advanced Privacy Features

Chat Lock

Secret Code

Silence Unknown Calls

View Once Voice Messages

போன்ற security features இன்னும் strong ஆக்கப்பட்டிருக்கிறது. �

Odysense +1


💾 8. Easier Storage Management

Chats delete பண்ணாம media files மட்டும் clean பண்ணலாம். Channels storage clean-up கூட வருது. �

WABetaInfo +1


🎨 9. New UI & Themes

iPhone users க்கு புதிய “Liquid Glass” design style test பண்ணுறாங்க. Chat interface இன்னும் modern ஆகும். �

The Times of India


⭐ 10. WhatsApp Plus Subscription (Testing)

Paid subscription மாதிரி ஒரு feature test ஆகுது:

custom themes

extra stickers

more pinned chats

custom ringtone

போன்ற வசதிகள் கிடைக்கும். �

theverge.com +1

 


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடந்து வரும் போரின் பிற பாதிப்புகளைத் தவிர, இரானில் இணையக் கட்டுப்பாடுகளால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரானில் சுமார் 10 மில்லியன் மக்கள் தங்கள் பணிக்காக நிலையான இணைய இணைப்பையே நம்பியுள்ளனர்.

ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின்படி, இணையத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. சில சுயாதீன மதிப்பீடுகள் இதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் பொருளாதாரம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனுடன், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைகளுக்கும் பரவலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

 


( வி.ரி.சகாதேவராஜா)


மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் 14வது ஆண்டு நிறைவு விழா கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் முன்னிலையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

 இதனை சிறப்பிக்கும் முகமாக, கல்லூரி பயிலுனர்களுக்கிடையே Presentation, Quiz போன்ற அறிவு மற்றும் மென் திறன் போட்டிகளும், Chess மற்றும் Carrom போன்ற உள்ளரங்க திறன் விளையாட்டுகளும்  இடம்பெற்றன. 

இதில் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகள் உட்பட கரடியனாறு மற்றும் காரைதீவு சமுதாயக் கல்லூரிகளிலும் பயிலும் 130-க்கும் மேற்பட்ட பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.

Presentation, Quiz, Chess, Carrom போன்ற நான்கு கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டிகளில், பயிலுனர்கள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இதன் மூலம், கல்லூரி பயிலுனர்கள் மத்தியில் மறைந்துள்ள ஆற்றல்களை வெளிப்படுத்தும் முக்கியமான சேவையை நிகழ்த்தி வருகிறது.

இறுதியாக, போட்டிகளில் கலந்து கொண்ட பயிலுனர்களுடன்  கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன்   மற்றும் நடுவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், போட்டியாளர்கள் தமது திறமைகளை மேலும் மேம்படுத்திக்கொள்ள ஆக்கபூர்வமான கருத்துகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன.


 Artemis II: நிலவின் மறுபக்கத்தில் 40 நிமிட திக் திக்! - இணைப்பு தூண்டிக்கப்பட்டு மீண்ட ஆர்டெமிஸ் II

நாசா மனிதர்களை விண்வெளியின் முன்னெப்போதையும் விட ஆழமான பகுதிகளுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது; ஆனால், இதில் ஒரு தொழில்நுட்பக் கருவியில் மட்டும் இன்னும் சில குறைபாடுகள் நீடிக்கின்றன — அதுதான் ஓரியன் விண்கலத்தின் கழிப்பறை. புதன்கிழமை பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்டதிலிருந்து, ஆர்டெமிஸ் II திட்டத்தின் ஓரியன் விண்கலத்திலுள்ள நான்கு விண்வெளி வீரர்களும், தங்கள் கழிப்பறையில் விட்டுவிட்டு ஏற்படும் சில சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். சனிக்கிழமை ஒரு கட்டத்தில், கழிப்பறையின் காற்றோட்டக் குழாய் உறைந்துபோனதன் காரணமாக, அதனால் கழிவுகளை வெளியேற்ற இயலவில்லை என்று நாசா தெரிவித்தது. அதற்கு மாற்றாக, விண்வெளி வீரர்கள் ஒரு மாற்று அமைப்பைப் பயன்படுத்தினர்; இது, அவர்களின் சிறுநீரைச் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, மடித்து வைக்கக்கூடிய பிளாஸ்டிக் கொள்கலன்களை உள்ளடக்கியதாகும். கழிப்பறை தொடர்பான சில சிக்கல்கள் இருந்தபோதிலும், நிலவைச் சுற்றி மேற்கொள்ளப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க 10 நாள் பயணத்தின் ஐந்தாவது நாளை, 'ஆர்டெமிஸ் II' விண்கலம் வெற்றிகரமாக எட்டியுள்ளது. அதில் உள்ள நாசாவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி முகமையைச் சேர்ந்த ஜெர்மி ஹான்சன் ஆகியோர் சிறியளவிலான கேம்பர் வேனின் அளவே கொண்ட, வெறும் 5 மீட்டர் (15 அடி) அகலமும் 3 மீட்டர் (9 அடி) உயரமும் உடைய ஒரு சிறிய அறையில் உள்ளனர். வியாழக்கிழமை காணொளி இணைப்பு மூலம் உரையாடிய போது, ​​விண்வெளிப் பயணச் சிறப்பு நிபுணர் கோச், கழிப்பறையில் ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். "என்னை ஒரு 'விண்வெளி பிளம்பர்' என்று அழைத்துக்கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்; விண்கலத்தின் உள்ளே இருக்கும் கருவிகளிலேயே இதுதான் அநேகமாக மிக முக்கியமான கருவி என்று சொல்ல விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். பின்னர், கழிவுநீர் வெளியேற்றக் குழாய் ஒன்று அடைத்துக் கொண்டதாக, நாசா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது 'வேண்டாம்' என்று தோனி சொன்ன திட்டத்தைக் கடைபிடித்த சூப்பர் கிங்ஸ். டெத் ஓவர்களில் பிரச்னை ஏன்? 'தோனி நிராகரித்த திட்டத்தை செயல்படுத்தும் சிஎஸ்கே' - ஹாட்ரிக் தோல்வி பற்றி அலசும் முன்னாள் வீரர்கள் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு 'கடையை மூடுவதில் தொடங்கிய பிரச்னை' - சாத்தான்குளம் வழக்கில் இதுவரை நடந்தது என்ன? முழு பின்னணி மொஜ்தபா கமேனி அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி வெளியில் தோன்றாதது இரானில் யாருக்கு சாதகம்? (இடமிருந்து: குடியரசுக் கட்சித் தலைவர் மார்ஜரி டெய்லர் கிரீன், ஜனநாயக கட்சி செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் அன்சாரி) இரான் குறித்து கெட்ட வார்த்தை - அமெரிக்காவிலேயே டிரம்ப் எதிர்கொள்ளும் விமர்சனம் என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது அடைப்பை நீக்க உதவும் வகையில், விண்கலத்தின் துவாரத்தைச் சூரியனை நோக்கித் திருப்புமாறு விண்கலக் குழுவினர் விண்கலத்தைச் சரிசெய்ய வேண்டியிருந்தது. இந்த நடவடிக்கை, அவர்களின் பயணப் பாதையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அந்த முகமை தெரிவித்துள்ளது. ஆர்டெமிஸ் 2, ஓரியன் விண்கலம், கழிப்பறையில் அடைப்புபட மூலாதாரம்,NASA வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும் வாட்ஸ்அப் விளம்பரம் - படம் வாட்ஸ்ஆப்பில் பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு அவர்களால் கழிவு மேலாண்மை அமைப்பின் தொட்டியில் இடத்தை காலி செய்ய முடிந்தது; ஆனால், அது பிரச்னையை முழுமையாகத் தீர்க்கவில்லை என்று நாசா (NASA) தெரிவித்துள்ளது. "குழாயை அடைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியமுள்ள பனியை உருக்குவதற்கு, பொறியாளர்கள் துவார வெப்பமூட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்," என்று நாசா தெரிவித்தது; அத்துவாரத்தை சூரியனை நோக்கித் திருப்பும் பணியைத் தாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது. "கழிவுநீர் தொட்டி நிரம்பவில்லை, கழிப்பறையும் செயல்பாட்டில் உள்ளது; இருப்பினும், தேவைப்பட்டால் இரவில் மாற்றுச் சேகரிப்புக் கருவிகளைப் பயன்படுத்துமாறு குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று நாசா தெரிவித்தது. ஆர்டெமிஸ் II திட்ட மேலாண்மைக் குழுவின் தலைவரான ஜான் ஹனிகட், சனிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ​​விண்வெளி கழிப்பறை மீதான பொதுமக்களின் ஆர்வத்தைச் சுருக்கமாக விவரித்தார். "கழிப்பறை குறித்த இந்த அதீத கவனம் ஒருவகையில் மனித இயல்பே என்று நான் கருதுகிறேன்," என்று அவர் கூறினார். "பூமியில் வாழும் நமக்கு அது எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விண்வெளியில் அதைக் கையாள்வது மிகவும் கடினமான ஒன்றாகும்." தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... சிஎன்என்-இன் ஸ்டேட் ஆஃப் தி யூனியன் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில் நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் கழிவுப் பிரச்னையைக் குறிப்பிட்டு, "தற்போது எங்களால் விண்வெளியில் பல அசாதாரணமான விஷயங்களைச் செய்ய முடியும், ஆனால் இந்தத் திறனை முழுமையாக்குவதில் நாங்கள் நிச்சயமாகப் பணியாற்ற வேண்டும்" என்று கூறினார். ஆர்டெமிஸ் II (Artemis II) தற்போது ஒரு வளைவுப் பாதையில் (loop) பயணித்து வருகிறது; இப்பாதை, அதில் பயணிக்கும் குழுவினரை நிலவின் மறுபக்கத்தைச் சுற்றி அழைத்துச் சென்று மீண்டும் திரும்பக் கொண்டுவரும். 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மனிதர்கள் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். நான்கு பேர் கொண்ட இந்தக் குழு நிலவில் தரையிறங்காமல், அதனைச் சுற்றி வரும்; இதன் மூலம், 1960 மற்றும் 70-களுக்குப் பிறகு முதன்முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்குவதற்கான களத்தை அமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது, ​​ஓரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விண்வெளி வீரர்கள் சோதிப்பார்கள். இதன் ஒரு பகுதியாக, பூமியின் சுற்றுவட்டப்பாதையில் அந்த விண்கலத்தை மனிதர்களே இயக்கி விண்கலம் திரும்பும் விதத்தை சரிபார்ப்பதும் அடங்கும்.

 



இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம்.


இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.


இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். 


இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணத்தை முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. 


இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் எவ்வித கூடுதல் செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.


தற்போது இலங்கையில் மிகவும் வலுவான டிஜிட்டல் நிதி உட்கட்டமைப்பு காணப்படுவதுடன், நாட்டின் வயதுவந்த மக்களில் 89% பேருக்கு வங்கி வசதிகள் உள்ளன.


மேலும், ஒரு காலாண்டில் 6.3 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான 68 மில்லியன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் CEFTS கட்டமைப்பும், 20க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 450,000 வர்த்தக நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள LankaQR கட்டமைப்பும் இன்று செயலில் உள்ளன.


இருப்பினும், பொருளாதாரத்தில் இன்னும் 1.48 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன. 


2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு நிலவரப்படி, LankaQR மூலம் மாதத்திற்கு சுமார் 395,000 ரூபாய் பெறுமதியான மிகக்குறைந்த அளவிலான கொடுக்கல் வாங்கல்களே இடம்பெற்றுள்ளன. 


இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக இன்று ஆரம்பிக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் சில விசேட மூலோபாயங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.


அத்துடன், QR பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக விசேட அதிர்ஷ்ட லாபப் போட்டித் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.


இதில் வாராந்தம் மற்றும் மாதாந்தம் வெற்றிபெறும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு 1,000,000 ரூபாய் வரையிலான பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.


இத்திட்டத்தின் வெற்றிக்காக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேசிய அளவிலான பிரச்சார நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. 


25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 'சமூக கற்புல சுட்டெண்' மூலம் இத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தத் திட்டம் தொழில்நுட்ப ரீதியான ஒரு நடவடிக்கை மட்டுமல்லாது, நாட்டின் எதிர்கால கொடுப்பனவு முறையை டிஜிட்டல் மயப்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பொருளாதாரமாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். 


QR கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்படுவதன் ஊடாக வேகமான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் பரிமாற்றம் பழக்கத்தை ஏற்படுத்தி எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்காளிகளாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 நூருல் ஹுதா உமர்

அம்பாறை, 28 மார்ச் 2026 – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2026 மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் “பேரிடர் நிலைத்தன்மைக்கான Geo-AI” (Geo-AI for Disaster Resilience) என்ற தலைப்பில் இரண்டு நாள் தொழில்நுட்ப பயிற்சிநெறி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பயிற்சி மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு உலக தரமான புவியியல் தகவல் அமைப்புகள் (GIS) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களில் நேரடி அனுபவத்தை வழங்கியது.

இந்த தேசிய அளவிலான திட்டத்தை இலங்கையின் அனர்த்த அபாய முகாமைத்துவ நிபுணர்கள் சங்கம் (ADRMP) தலைமையில், கொழும்பு பல்கலைக்கழகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து, அமெரிக்க தூதரகத்தின் ஆதரவுடன் முன்னெடுத்தது. திட்டத்தை அமெரிக்க மாநிலத் துறை பழைய மாணவர்களான டாக்டர் நோவில் விஜேசேகர மற்றும் டாக்டர் அஸ்லம் சாஜா வடிவமைத்து வழிநடத்தினர்.

பயிற்சி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் புவியியல் துறையினால் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் அனுமதியுடன், பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல் (அனர்த்த தடுப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்) மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் ஒருங்கிணைத்தனர்.

தொடக்க விழாவில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், நகர மையங்களுக்கு வெளியே உள்ள மாணவர்களுக்கும் இத்தகைய நவீன தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைப்பது முக்கியம் எனக் குறிப்பிட்டு, தொழில்நுட்ப அறிவும் அனர்த்த முகாமைத்துவ திறன்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தமது உரையில், பல்துறை ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனச் சுட்டிக்காட்டி,
“இன்றைய உலகில் கல்வியும் பிரச்சினை தீர்வும் பல்துறை அணுகுமுறையில் தான் அமைகின்றன. Geo-AI போன்ற புதிய துறைகள் அனர்த்த எதிர்ப்புத் திறன் கொண்ட சமூகங்களை உருவாக்க முக்கிய பங்காற்றும்,” எனக் கூறினார்.

ADRMP செயலாளர் மேனக விஜேசிங்க, இளைஞர்களின் பங்கு அனர்த்த முகாமைத்துவத்தில் மிக முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

இரண்டு நாட்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற பயிற்சியில் சுமார் 20 மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதில் தென் கிழக்கு பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் களனியா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.

ArcGIS தளத்தை அடிப்படையாகக் கொண்ட பயிற்சியை GIS Solutions (Pvt) Ltd நிறுவன நிபுணர்கள் முன்னெடுத்தனர். GIS ஆதரவு பகுப்பாய்வாளர் கணிஷ்க நடீஷன், மாணவர்களுக்கு நடைமுறை அறிவை வழங்குவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார்.

முதல் நாள் அமர்வுகளில் GIS அடிப்படைகள், பேரிடர் மேலாண்மை, Geo-AI ஒருங்கிணைப்பு, புவியியல் தரவுகள், ArcGIS Pro அறிமுகம், ஒருங்கிணைப்பு அமைப்புகள் (CRS), மற்றும் ஆழ்மையான கற்றல் கருவிகள் கற்பிக்கப்பட்டன. Geo-AI தொடர்பான புதுமை பணிப்பயிற்சியும் நடைபெற்றது.

இரண்டாம் நாள் நடைமுறை அமர்வுகளில் பட வகைப்பாடு (Image Classification), பொருள் அடையாளம் காண்தல் (Object Detection), Geo-AI தரவு தயார் செய்தல், வெள்ளப் பகுப்பாய்வு, மாதிரி துல்லிய மதிப்பீடு மற்றும் Model Builder தானியக்க செயல்முறை கற்றுக்கொடுக்கப்பட்டது.

பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், ட்ரோன் தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் இணைப்பதன் மூலம் அனர்த்த காலங்களில் விரைவான தரவு சேகரிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் எளிதாகும் என்று விளக்கியார். குறிப்பாக வெள்ள பாதிப்புகளில் Geo-AI பயன்பாடு உயிர்களை காப்பாற்ற உதவும் என அவர் தெரிவித்தார்.

இந்த பயிற்சியை கணிஷ்க நடீஷன், தேஷன் செல்லஹேவா, மினூஷியா ஹசரங்க, அமிஷா பிரத்தியங்க முன்னெடுத்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தில்ஷான் லேகம், ரசாங்கனி மதுபானி மற்றும் ரஷ்மினி வாசனா பங்கேற்றனர்.

“Geo-AI for Disaster Resilience” முயற்சி, மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அனர்த்த முகாமைத்துவத்தில் செயல்படக்கூடிய திறமையான நிபுணர்களை உருவாக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.

பல்துறை கலாசார பின்னணிகளை உடைய மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, அறிவு பகிர்வு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஒருங்கிணைக்கும் முன்மாதிரியாக பரவலாக பாராட்டப்பட்டது.


 "தற்போது எல்பிஜியுடன் 8 சதவீத டிஎம்இ-யைக் கலந்து சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எல்பிஜியுடன் 8 சதவீத டிஎம்இ-யைக் கலந்தால், அதனை அடுப்புகள் மற்றும் சிலிண்டர்களில் பயன்படுத்த முடியும்."


"மொத்த எல்பிஜி நுகர்வில் 8 சதவீதம் என்று நாம் சொன்னால், அது இறக்குமதி அளவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் 8 சதவீதத்தில் தொடங்கி பின்னர் அதனை 20 சதவீதமாக அதிகரிக்கலாம்."


மேலும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 10.5 கோடி எரிவாயு இணைப்புகளுக்கு 8 சதவீத டிஎம்இ பயன்படுத்தப்பட்டால், ஒரு நாளைக்கு 1300 டன் டிஎம்இ உற்பத்தி தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வினையூக்கி மற்றும் டிஎம்இ உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கான திட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா 2024-ஆம் ஆண்டில் 21 மில்லியன் டன் எல்பிஜியை இறக்குமதி செய்தது. இதில் வெறும் 8 சதவீத டிஎம்இ-யைக் கலப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 9500 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும்.


பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 10.5 கோடி எரிவாயு இணைப்புகளுக்கு 8 சதவீத டிஎம்இ பயன்படுத்தப்பட்டால், ஒரு நாளைக்கு 1300 டன் டிஎம்இ உற்பத்தி தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.


இது எல்பிஜியுடன் கலக்கப்படுவதால், இதற்கெனத் தனியாக அடுப்பு அல்லது சிலிண்டரைத் தயார் செய்ய வேண்டிய அவசியமில்லை.


இத்தகைய டிஎம்இ பல நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், அந்தத் தொழில்நுட்பம் யாருக்கும் வழங்கப்படவில்லை.


தற்போது, இந்தியாவிலேயே வினையூக்கி மற்றும் டிஎம்இ உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.


என்சிஎல் நிறுவனம், தற்போது ஒரு பொறியியல் கூட்டாளருடன் இணைந்து 6-9 மாதங்களுக்குள் நாளொன்றுக்கு 2.5 டன் திறன் கொண்ட ஒரு தொழில் செயல்முறை ஆலையை அமைக்கத் தயாராகி வருகிறது.


இந்தத் திட்டம் நாளொன்றுக்கு 500-1000 டன் திறன் கொண்ட ஒரு வணிக ரீதியான திட்டத்தை அமைப்பதற்கு வழிவகுக்கும்.

 நாட்டில் மீண்டும் QR குறியீடு அமுலில்..

அது பற்றிய விழிப்புணர்வு கட்டுரை இது..

சமகாலத்தில் QR குறியீடு என்பது பரவலாக பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது.

QR குறியீடு என்றால் (Quick Response Code) எனப் பொருள்படும்.

தகவல்களை வேகமாக பகிர்ந்து கொள்ள உதவும் நவீன டிஜிட்டல் குறியீடு.

QR குறியீடு பயன்பாடு குறித்து விழிப்புணர்வின் தேவை அதிகரித்து வருகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல்களை விரைவாகப் பெறவும் பகிரவும் உதவும் முக்கியமான தொழில்நுட்பமாக QR குறியீடு (Quick Response Code) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாட்டில் எரிபொருள் விநியோகத்தை முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கம் மீண்டும் இந்த கியூஆர் முறைமையை அமல்படுத்தியிருக்கின்றது.

இது எரிபொருள் நிலையங்களில் நெரிசலை குறைக்கவும் வினைத்திறனுடனான சேவையை உறுதிப்படுத்தவும் அனைவருக்கும் எரிபொருள் தங்கு தடையின்றி கிடைக்கவும் வகை செய்கின்றது.

1994 ஆம் ஆண்டு ஜப்பானிய நிறுவனமான Denso Wave மூலம் உருவாக்கப்பட்ட QR குறியீடு தற்போது உலகம் முழுவதும் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக இணையதள இணைப்புகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, நிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகள், பொருட்களின் தகவல்கள் மற்றும் தொடர்பு விபரங்களை பகிர்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

கருப்பு மற்றும் வெள்ளை சதுர வடிவங்களில் அமைந்துள்ள இந்த இரு-அளவீட்டு (2D) குறியீட்டை ஸ்மார்ட்போன் கேமரா அல்லது QR ஸ்கேனர் பயன்பாட்டின் மூலம் எளிதாக வாசிக்க முடிகிறது.

மேலும் Google Pay போன்ற மொபைல் பணப்பரிவர்த்தனை பயன்பாடுகள் மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து உடனடியாக பணம் செலுத்தும் வசதியும் பொதுமக்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிறிய இடத்தில் அதிக தகவல்களை சேமித்து, வேகமாக அணுகக்கூடிய தன்மையால் QR குறியீடு இன்று கல்வி, வணிகம், வங்கிகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல துறைகளில் முக்கியமான தகவல் தொடர்பு கருவியாக உருவெடுத்துள்ளது.

சரி. எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை (Fuel Pass) பெறுவது எப்படி?

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

1. இணையதளத்திற்குச் செல்லுங்கள்: முதலில் https://share.google/UVQADndNCRXt8x8Ew என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

2. பதிவு செய்தல்: அங்கு கோரப்பட்டுள்ள விவரங்களை வழங்கி, பதிவு நடைமுறைகளை நிறைவு செய்யுங்கள்.

3. QR குறியீட்டைப் பெறுதல்: பதிவு முடிந்ததும், உங்களுக்கு என பிரத்யேகமான QR குறியீடு (QR Code) திரையில் தோன்றும்.

4. சேமித்து வைத்தல்: அந்த QR குறியீட்டை உங்கள் கைப்பேசியில் (Mobile Device) சேமித்துக்கொள்ளலாம் அல்லது அச்சிட்டு (Print) கைவசம் வைத்திருக்கலாம்.

ஏலவே இந்த குறியீடு வைத்திருப்பவர்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக புதிதாக வாகனம் வாங்கியவர்கள், உரிமை மாற்றம் செய்தவர்கள்,  தொலைபேசி இலக்கத்தை மாற்றியவர்கள் மாத்திரம் பதிவு செய்து புதிய கியூஆர்  பெற்றுக் கொள்ளலாம்

முக்கிய குறிப்பு: எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது, இந்த QR குறியீட்டைக் காண்பித்து உங்கள் எரிபொருள் தேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இது இது விடயத்தில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் 1919 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்யலாம்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர் 

 


அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு, கடந்த 12 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


‘AI for Transforming Public Service’ என்ற தலைப்பின் கீழ், ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் ஆதரவுடன் சப்ரகமுவ மாகாண சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த அரச நிறைவேற்று அதிகாரிகள் பங்கேற்றனர்.


அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் விசேட நடவடிக்கையாக, அரச அதிகாரிகளை தெளிவூட்டுதல், தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஜனாதிபதி அலுவலகத்தால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல்/செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் வளவாளரான, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) முன்னாள் பணிப்பாளர்களான ஹர்ஷ புரசிங்க, சமிச அபேசிங்க ஆகியோர் இந்த செயலமர்வில் வளவாளர்களாக பங்களித்தனர்.


சபரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனீதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர்/அரச அதிபர் கே.ஜி.எஸ். நிஷாந்த மற்றும் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த நிறைவேற்றுத் தர அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.