Showing posts with label Technology. Show all posts

 


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடந்து வரும் போரின் பிற பாதிப்புகளைத் தவிர, இரானில் இணையக் கட்டுப்பாடுகளால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரானில் சுமார் 10 மில்லியன் மக்கள் தங்கள் பணிக்காக நிலையான இணைய இணைப்பையே நம்பியுள்ளனர்.

ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின்படி, இணையத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. சில சுயாதீன மதிப்பீடுகள் இதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் பொருளாதாரம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனுடன், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைகளுக்கும் பரவலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

 


( வி.ரி.சகாதேவராஜா)


மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் 14வது ஆண்டு நிறைவு விழா கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் முன்னிலையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

 இதனை சிறப்பிக்கும் முகமாக, கல்லூரி பயிலுனர்களுக்கிடையே Presentation, Quiz போன்ற அறிவு மற்றும் மென் திறன் போட்டிகளும், Chess மற்றும் Carrom போன்ற உள்ளரங்க திறன் விளையாட்டுகளும்  இடம்பெற்றன. 

இதில் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகள் உட்பட கரடியனாறு மற்றும் காரைதீவு சமுதாயக் கல்லூரிகளிலும் பயிலும் 130-க்கும் மேற்பட்ட பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.

Presentation, Quiz, Chess, Carrom போன்ற நான்கு கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டிகளில், பயிலுனர்கள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இதன் மூலம், கல்லூரி பயிலுனர்கள் மத்தியில் மறைந்துள்ள ஆற்றல்களை வெளிப்படுத்தும் முக்கியமான சேவையை நிகழ்த்தி வருகிறது.

இறுதியாக, போட்டிகளில் கலந்து கொண்ட பயிலுனர்களுடன்  கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன்   மற்றும் நடுவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், போட்டியாளர்கள் தமது திறமைகளை மேலும் மேம்படுத்திக்கொள்ள ஆக்கபூர்வமான கருத்துகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன.


 Artemis II: நிலவின் மறுபக்கத்தில் 40 நிமிட திக் திக்! - இணைப்பு தூண்டிக்கப்பட்டு மீண்ட ஆர்டெமிஸ் II

நாசா மனிதர்களை விண்வெளியின் முன்னெப்போதையும் விட ஆழமான பகுதிகளுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது; ஆனால், இதில் ஒரு தொழில்நுட்பக் கருவியில் மட்டும் இன்னும் சில குறைபாடுகள் நீடிக்கின்றன — அதுதான் ஓரியன் விண்கலத்தின் கழிப்பறை. புதன்கிழமை பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்டதிலிருந்து, ஆர்டெமிஸ் II திட்டத்தின் ஓரியன் விண்கலத்திலுள்ள நான்கு விண்வெளி வீரர்களும், தங்கள் கழிப்பறையில் விட்டுவிட்டு ஏற்படும் சில சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். சனிக்கிழமை ஒரு கட்டத்தில், கழிப்பறையின் காற்றோட்டக் குழாய் உறைந்துபோனதன் காரணமாக, அதனால் கழிவுகளை வெளியேற்ற இயலவில்லை என்று நாசா தெரிவித்தது. அதற்கு மாற்றாக, விண்வெளி வீரர்கள் ஒரு மாற்று அமைப்பைப் பயன்படுத்தினர்; இது, அவர்களின் சிறுநீரைச் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, மடித்து வைக்கக்கூடிய பிளாஸ்டிக் கொள்கலன்களை உள்ளடக்கியதாகும். கழிப்பறை தொடர்பான சில சிக்கல்கள் இருந்தபோதிலும், நிலவைச் சுற்றி மேற்கொள்ளப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க 10 நாள் பயணத்தின் ஐந்தாவது நாளை, 'ஆர்டெமிஸ் II' விண்கலம் வெற்றிகரமாக எட்டியுள்ளது. அதில் உள்ள நாசாவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி முகமையைச் சேர்ந்த ஜெர்மி ஹான்சன் ஆகியோர் சிறியளவிலான கேம்பர் வேனின் அளவே கொண்ட, வெறும் 5 மீட்டர் (15 அடி) அகலமும் 3 மீட்டர் (9 அடி) உயரமும் உடைய ஒரு சிறிய அறையில் உள்ளனர். வியாழக்கிழமை காணொளி இணைப்பு மூலம் உரையாடிய போது, ​​விண்வெளிப் பயணச் சிறப்பு நிபுணர் கோச், கழிப்பறையில் ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். "என்னை ஒரு 'விண்வெளி பிளம்பர்' என்று அழைத்துக்கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்; விண்கலத்தின் உள்ளே இருக்கும் கருவிகளிலேயே இதுதான் அநேகமாக மிக முக்கியமான கருவி என்று சொல்ல விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். பின்னர், கழிவுநீர் வெளியேற்றக் குழாய் ஒன்று அடைத்துக் கொண்டதாக, நாசா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது 'வேண்டாம்' என்று தோனி சொன்ன திட்டத்தைக் கடைபிடித்த சூப்பர் கிங்ஸ். டெத் ஓவர்களில் பிரச்னை ஏன்? 'தோனி நிராகரித்த திட்டத்தை செயல்படுத்தும் சிஎஸ்கே' - ஹாட்ரிக் தோல்வி பற்றி அலசும் முன்னாள் வீரர்கள் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு 'கடையை மூடுவதில் தொடங்கிய பிரச்னை' - சாத்தான்குளம் வழக்கில் இதுவரை நடந்தது என்ன? முழு பின்னணி மொஜ்தபா கமேனி அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி வெளியில் தோன்றாதது இரானில் யாருக்கு சாதகம்? (இடமிருந்து: குடியரசுக் கட்சித் தலைவர் மார்ஜரி டெய்லர் கிரீன், ஜனநாயக கட்சி செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் அன்சாரி) இரான் குறித்து கெட்ட வார்த்தை - அமெரிக்காவிலேயே டிரம்ப் எதிர்கொள்ளும் விமர்சனம் என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது அடைப்பை நீக்க உதவும் வகையில், விண்கலத்தின் துவாரத்தைச் சூரியனை நோக்கித் திருப்புமாறு விண்கலக் குழுவினர் விண்கலத்தைச் சரிசெய்ய வேண்டியிருந்தது. இந்த நடவடிக்கை, அவர்களின் பயணப் பாதையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அந்த முகமை தெரிவித்துள்ளது. ஆர்டெமிஸ் 2, ஓரியன் விண்கலம், கழிப்பறையில் அடைப்புபட மூலாதாரம்,NASA வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும் வாட்ஸ்அப் விளம்பரம் - படம் வாட்ஸ்ஆப்பில் பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு அவர்களால் கழிவு மேலாண்மை அமைப்பின் தொட்டியில் இடத்தை காலி செய்ய முடிந்தது; ஆனால், அது பிரச்னையை முழுமையாகத் தீர்க்கவில்லை என்று நாசா (NASA) தெரிவித்துள்ளது. "குழாயை அடைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியமுள்ள பனியை உருக்குவதற்கு, பொறியாளர்கள் துவார வெப்பமூட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்," என்று நாசா தெரிவித்தது; அத்துவாரத்தை சூரியனை நோக்கித் திருப்பும் பணியைத் தாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது. "கழிவுநீர் தொட்டி நிரம்பவில்லை, கழிப்பறையும் செயல்பாட்டில் உள்ளது; இருப்பினும், தேவைப்பட்டால் இரவில் மாற்றுச் சேகரிப்புக் கருவிகளைப் பயன்படுத்துமாறு குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று நாசா தெரிவித்தது. ஆர்டெமிஸ் II திட்ட மேலாண்மைக் குழுவின் தலைவரான ஜான் ஹனிகட், சனிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ​​விண்வெளி கழிப்பறை மீதான பொதுமக்களின் ஆர்வத்தைச் சுருக்கமாக விவரித்தார். "கழிப்பறை குறித்த இந்த அதீத கவனம் ஒருவகையில் மனித இயல்பே என்று நான் கருதுகிறேன்," என்று அவர் கூறினார். "பூமியில் வாழும் நமக்கு அது எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விண்வெளியில் அதைக் கையாள்வது மிகவும் கடினமான ஒன்றாகும்." தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... சிஎன்என்-இன் ஸ்டேட் ஆஃப் தி யூனியன் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில் நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் கழிவுப் பிரச்னையைக் குறிப்பிட்டு, "தற்போது எங்களால் விண்வெளியில் பல அசாதாரணமான விஷயங்களைச் செய்ய முடியும், ஆனால் இந்தத் திறனை முழுமையாக்குவதில் நாங்கள் நிச்சயமாகப் பணியாற்ற வேண்டும்" என்று கூறினார். ஆர்டெமிஸ் II (Artemis II) தற்போது ஒரு வளைவுப் பாதையில் (loop) பயணித்து வருகிறது; இப்பாதை, அதில் பயணிக்கும் குழுவினரை நிலவின் மறுபக்கத்தைச் சுற்றி அழைத்துச் சென்று மீண்டும் திரும்பக் கொண்டுவரும். 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மனிதர்கள் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். நான்கு பேர் கொண்ட இந்தக் குழு நிலவில் தரையிறங்காமல், அதனைச் சுற்றி வரும்; இதன் மூலம், 1960 மற்றும் 70-களுக்குப் பிறகு முதன்முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்குவதற்கான களத்தை அமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது, ​​ஓரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விண்வெளி வீரர்கள் சோதிப்பார்கள். இதன் ஒரு பகுதியாக, பூமியின் சுற்றுவட்டப்பாதையில் அந்த விண்கலத்தை மனிதர்களே இயக்கி விண்கலம் திரும்பும் விதத்தை சரிபார்ப்பதும் அடங்கும்.

 



இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம்.


இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.


இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். 


இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணத்தை முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. 


இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் எவ்வித கூடுதல் செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.


தற்போது இலங்கையில் மிகவும் வலுவான டிஜிட்டல் நிதி உட்கட்டமைப்பு காணப்படுவதுடன், நாட்டின் வயதுவந்த மக்களில் 89% பேருக்கு வங்கி வசதிகள் உள்ளன.


மேலும், ஒரு காலாண்டில் 6.3 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான 68 மில்லியன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் CEFTS கட்டமைப்பும், 20க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 450,000 வர்த்தக நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள LankaQR கட்டமைப்பும் இன்று செயலில் உள்ளன.


இருப்பினும், பொருளாதாரத்தில் இன்னும் 1.48 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன. 


2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு நிலவரப்படி, LankaQR மூலம் மாதத்திற்கு சுமார் 395,000 ரூபாய் பெறுமதியான மிகக்குறைந்த அளவிலான கொடுக்கல் வாங்கல்களே இடம்பெற்றுள்ளன. 


இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக இன்று ஆரம்பிக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் சில விசேட மூலோபாயங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.


அத்துடன், QR பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக விசேட அதிர்ஷ்ட லாபப் போட்டித் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.


இதில் வாராந்தம் மற்றும் மாதாந்தம் வெற்றிபெறும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு 1,000,000 ரூபாய் வரையிலான பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.


இத்திட்டத்தின் வெற்றிக்காக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேசிய அளவிலான பிரச்சார நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. 


25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 'சமூக கற்புல சுட்டெண்' மூலம் இத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தத் திட்டம் தொழில்நுட்ப ரீதியான ஒரு நடவடிக்கை மட்டுமல்லாது, நாட்டின் எதிர்கால கொடுப்பனவு முறையை டிஜிட்டல் மயப்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பொருளாதாரமாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். 


QR கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்படுவதன் ஊடாக வேகமான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் பரிமாற்றம் பழக்கத்தை ஏற்படுத்தி எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்காளிகளாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 நூருல் ஹுதா உமர்

அம்பாறை, 28 மார்ச் 2026 – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2026 மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் “பேரிடர் நிலைத்தன்மைக்கான Geo-AI” (Geo-AI for Disaster Resilience) என்ற தலைப்பில் இரண்டு நாள் தொழில்நுட்ப பயிற்சிநெறி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பயிற்சி மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு உலக தரமான புவியியல் தகவல் அமைப்புகள் (GIS) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களில் நேரடி அனுபவத்தை வழங்கியது.

இந்த தேசிய அளவிலான திட்டத்தை இலங்கையின் அனர்த்த அபாய முகாமைத்துவ நிபுணர்கள் சங்கம் (ADRMP) தலைமையில், கொழும்பு பல்கலைக்கழகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து, அமெரிக்க தூதரகத்தின் ஆதரவுடன் முன்னெடுத்தது. திட்டத்தை அமெரிக்க மாநிலத் துறை பழைய மாணவர்களான டாக்டர் நோவில் விஜேசேகர மற்றும் டாக்டர் அஸ்லம் சாஜா வடிவமைத்து வழிநடத்தினர்.

பயிற்சி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் புவியியல் துறையினால் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் அனுமதியுடன், பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல் (அனர்த்த தடுப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்) மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் ஒருங்கிணைத்தனர்.

தொடக்க விழாவில் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், நகர மையங்களுக்கு வெளியே உள்ள மாணவர்களுக்கும் இத்தகைய நவீன தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைப்பது முக்கியம் எனக் குறிப்பிட்டு, தொழில்நுட்ப அறிவும் அனர்த்த முகாமைத்துவ திறன்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தமது உரையில், பல்துறை ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனச் சுட்டிக்காட்டி,
“இன்றைய உலகில் கல்வியும் பிரச்சினை தீர்வும் பல்துறை அணுகுமுறையில் தான் அமைகின்றன. Geo-AI போன்ற புதிய துறைகள் அனர்த்த எதிர்ப்புத் திறன் கொண்ட சமூகங்களை உருவாக்க முக்கிய பங்காற்றும்,” எனக் கூறினார்.

ADRMP செயலாளர் மேனக விஜேசிங்க, இளைஞர்களின் பங்கு அனர்த்த முகாமைத்துவத்தில் மிக முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

இரண்டு நாட்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற பயிற்சியில் சுமார் 20 மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதில் தென் கிழக்கு பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் களனியா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.

ArcGIS தளத்தை அடிப்படையாகக் கொண்ட பயிற்சியை GIS Solutions (Pvt) Ltd நிறுவன நிபுணர்கள் முன்னெடுத்தனர். GIS ஆதரவு பகுப்பாய்வாளர் கணிஷ்க நடீஷன், மாணவர்களுக்கு நடைமுறை அறிவை வழங்குவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார்.

முதல் நாள் அமர்வுகளில் GIS அடிப்படைகள், பேரிடர் மேலாண்மை, Geo-AI ஒருங்கிணைப்பு, புவியியல் தரவுகள், ArcGIS Pro அறிமுகம், ஒருங்கிணைப்பு அமைப்புகள் (CRS), மற்றும் ஆழ்மையான கற்றல் கருவிகள் கற்பிக்கப்பட்டன. Geo-AI தொடர்பான புதுமை பணிப்பயிற்சியும் நடைபெற்றது.

இரண்டாம் நாள் நடைமுறை அமர்வுகளில் பட வகைப்பாடு (Image Classification), பொருள் அடையாளம் காண்தல் (Object Detection), Geo-AI தரவு தயார் செய்தல், வெள்ளப் பகுப்பாய்வு, மாதிரி துல்லிய மதிப்பீடு மற்றும் Model Builder தானியக்க செயல்முறை கற்றுக்கொடுக்கப்பட்டது.

பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், ட்ரோன் தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் இணைப்பதன் மூலம் அனர்த்த காலங்களில் விரைவான தரவு சேகரிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் எளிதாகும் என்று விளக்கியார். குறிப்பாக வெள்ள பாதிப்புகளில் Geo-AI பயன்பாடு உயிர்களை காப்பாற்ற உதவும் என அவர் தெரிவித்தார்.

இந்த பயிற்சியை கணிஷ்க நடீஷன், தேஷன் செல்லஹேவா, மினூஷியா ஹசரங்க, அமிஷா பிரத்தியங்க முன்னெடுத்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தில்ஷான் லேகம், ரசாங்கனி மதுபானி மற்றும் ரஷ்மினி வாசனா பங்கேற்றனர்.

“Geo-AI for Disaster Resilience” முயற்சி, மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அனர்த்த முகாமைத்துவத்தில் செயல்படக்கூடிய திறமையான நிபுணர்களை உருவாக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.

பல்துறை கலாசார பின்னணிகளை உடைய மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, அறிவு பகிர்வு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஒருங்கிணைக்கும் முன்மாதிரியாக பரவலாக பாராட்டப்பட்டது.


 "தற்போது எல்பிஜியுடன் 8 சதவீத டிஎம்இ-யைக் கலந்து சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எல்பிஜியுடன் 8 சதவீத டிஎம்இ-யைக் கலந்தால், அதனை அடுப்புகள் மற்றும் சிலிண்டர்களில் பயன்படுத்த முடியும்."


"மொத்த எல்பிஜி நுகர்வில் 8 சதவீதம் என்று நாம் சொன்னால், அது இறக்குமதி அளவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் 8 சதவீதத்தில் தொடங்கி பின்னர் அதனை 20 சதவீதமாக அதிகரிக்கலாம்."


மேலும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 10.5 கோடி எரிவாயு இணைப்புகளுக்கு 8 சதவீத டிஎம்இ பயன்படுத்தப்பட்டால், ஒரு நாளைக்கு 1300 டன் டிஎம்இ உற்பத்தி தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வினையூக்கி மற்றும் டிஎம்இ உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கான திட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா 2024-ஆம் ஆண்டில் 21 மில்லியன் டன் எல்பிஜியை இறக்குமதி செய்தது. இதில் வெறும் 8 சதவீத டிஎம்இ-யைக் கலப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 9500 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும்.


பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 10.5 கோடி எரிவாயு இணைப்புகளுக்கு 8 சதவீத டிஎம்இ பயன்படுத்தப்பட்டால், ஒரு நாளைக்கு 1300 டன் டிஎம்இ உற்பத்தி தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.


இது எல்பிஜியுடன் கலக்கப்படுவதால், இதற்கெனத் தனியாக அடுப்பு அல்லது சிலிண்டரைத் தயார் செய்ய வேண்டிய அவசியமில்லை.


இத்தகைய டிஎம்இ பல நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், அந்தத் தொழில்நுட்பம் யாருக்கும் வழங்கப்படவில்லை.


தற்போது, இந்தியாவிலேயே வினையூக்கி மற்றும் டிஎம்இ உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.


என்சிஎல் நிறுவனம், தற்போது ஒரு பொறியியல் கூட்டாளருடன் இணைந்து 6-9 மாதங்களுக்குள் நாளொன்றுக்கு 2.5 டன் திறன் கொண்ட ஒரு தொழில் செயல்முறை ஆலையை அமைக்கத் தயாராகி வருகிறது.


இந்தத் திட்டம் நாளொன்றுக்கு 500-1000 டன் திறன் கொண்ட ஒரு வணிக ரீதியான திட்டத்தை அமைப்பதற்கு வழிவகுக்கும்.

 நாட்டில் மீண்டும் QR குறியீடு அமுலில்..

அது பற்றிய விழிப்புணர்வு கட்டுரை இது..

சமகாலத்தில் QR குறியீடு என்பது பரவலாக பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது.

QR குறியீடு என்றால் (Quick Response Code) எனப் பொருள்படும்.

தகவல்களை வேகமாக பகிர்ந்து கொள்ள உதவும் நவீன டிஜிட்டல் குறியீடு.

QR குறியீடு பயன்பாடு குறித்து விழிப்புணர்வின் தேவை அதிகரித்து வருகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல்களை விரைவாகப் பெறவும் பகிரவும் உதவும் முக்கியமான தொழில்நுட்பமாக QR குறியீடு (Quick Response Code) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாட்டில் எரிபொருள் விநியோகத்தை முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கம் மீண்டும் இந்த கியூஆர் முறைமையை அமல்படுத்தியிருக்கின்றது.

இது எரிபொருள் நிலையங்களில் நெரிசலை குறைக்கவும் வினைத்திறனுடனான சேவையை உறுதிப்படுத்தவும் அனைவருக்கும் எரிபொருள் தங்கு தடையின்றி கிடைக்கவும் வகை செய்கின்றது.

1994 ஆம் ஆண்டு ஜப்பானிய நிறுவனமான Denso Wave மூலம் உருவாக்கப்பட்ட QR குறியீடு தற்போது உலகம் முழுவதும் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக இணையதள இணைப்புகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, நிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகள், பொருட்களின் தகவல்கள் மற்றும் தொடர்பு விபரங்களை பகிர்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

கருப்பு மற்றும் வெள்ளை சதுர வடிவங்களில் அமைந்துள்ள இந்த இரு-அளவீட்டு (2D) குறியீட்டை ஸ்மார்ட்போன் கேமரா அல்லது QR ஸ்கேனர் பயன்பாட்டின் மூலம் எளிதாக வாசிக்க முடிகிறது.

மேலும் Google Pay போன்ற மொபைல் பணப்பரிவர்த்தனை பயன்பாடுகள் மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து உடனடியாக பணம் செலுத்தும் வசதியும் பொதுமக்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிறிய இடத்தில் அதிக தகவல்களை சேமித்து, வேகமாக அணுகக்கூடிய தன்மையால் QR குறியீடு இன்று கல்வி, வணிகம், வங்கிகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல துறைகளில் முக்கியமான தகவல் தொடர்பு கருவியாக உருவெடுத்துள்ளது.

சரி. எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை (Fuel Pass) பெறுவது எப்படி?

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

1. இணையதளத்திற்குச் செல்லுங்கள்: முதலில் https://share.google/UVQADndNCRXt8x8Ew என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

2. பதிவு செய்தல்: அங்கு கோரப்பட்டுள்ள விவரங்களை வழங்கி, பதிவு நடைமுறைகளை நிறைவு செய்யுங்கள்.

3. QR குறியீட்டைப் பெறுதல்: பதிவு முடிந்ததும், உங்களுக்கு என பிரத்யேகமான QR குறியீடு (QR Code) திரையில் தோன்றும்.

4. சேமித்து வைத்தல்: அந்த QR குறியீட்டை உங்கள் கைப்பேசியில் (Mobile Device) சேமித்துக்கொள்ளலாம் அல்லது அச்சிட்டு (Print) கைவசம் வைத்திருக்கலாம்.

ஏலவே இந்த குறியீடு வைத்திருப்பவர்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக புதிதாக வாகனம் வாங்கியவர்கள், உரிமை மாற்றம் செய்தவர்கள்,  தொலைபேசி இலக்கத்தை மாற்றியவர்கள் மாத்திரம் பதிவு செய்து புதிய கியூஆர்  பெற்றுக் கொள்ளலாம்

முக்கிய குறிப்பு: எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது, இந்த QR குறியீட்டைக் காண்பித்து உங்கள் எரிபொருள் தேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இது இது விடயத்தில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் 1919 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்யலாம்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர் 

 


அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு, கடந்த 12 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


‘AI for Transforming Public Service’ என்ற தலைப்பின் கீழ், ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் ஆதரவுடன் சப்ரகமுவ மாகாண சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த அரச நிறைவேற்று அதிகாரிகள் பங்கேற்றனர்.


அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் விசேட நடவடிக்கையாக, அரச அதிகாரிகளை தெளிவூட்டுதல், தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஜனாதிபதி அலுவலகத்தால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல்/செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் வளவாளரான, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) முன்னாள் பணிப்பாளர்களான ஹர்ஷ புரசிங்க, சமிச அபேசிங்க ஆகியோர் இந்த செயலமர்வில் வளவாளர்களாக பங்களித்தனர்.


சபரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனீதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர்/அரச அதிபர் கே.ஜி.எஸ். நிஷாந்த மற்றும் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த நிறைவேற்றுத் தர அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


 


( வி.ரி.சகாதேவராஜா)


"ஒளிரும் கரங்கள்" Raising Hands நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் ஒன்று இன்று(10) செவ்வாய்க்கிழமை கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது .

ஒளிரும் கரங்கள் (Raising Hands)அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் விசேட தேவையுள்ள பிள்ளை நல அமைப்பின்(Disabled child care) தலைவருமான ரி. இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.

தேசிய பயிலுனர்  கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்( NAITA) அம்பாறை மாவட்ட பணிப்பாளர் மொகான்  அபேசுந்தர,  மாவட்ட பரிசோதகர்  கே .செல்வபிரகாஷ்,  விவேகானந்த  தொழில்நுட்பக் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே. பிரதீஸ்வரன்,  ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் மதகுருமார்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

தற்போது இப் பயிற்சி நிலையத்தில் அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான பிரதேசங்களில் இருந்து 30 மாற்றுத் திறனாளிகள் இணைந்துள்ளனர்.

அவர்களுக்கு கைத்தறி பயிற்சி, அலைபேசி திருத்தம் பயிற்சி , சிரட்டை அலங்கார பொருட்கள் தயாரிப்பு பயிற்சி  போன்ற பயிற்சி நெறிகள் கொடுப்பனவுடன் வழங்கப்பட இருக்கின்றன.

 இவர்களுக்கு நய்ட்டா (  NAITA)  நிறுவனம் மாதா மாதம் ஒவ்வொரு பயிலுனருக்கும் 7500 ரூபாவை நன்கொடையாக வழங்குகின்றது.

 இவர்களுக்கு இதேபோன்று மேலும் பல உதவிகள்  வழங்கப்பட இருக்கின்றன.

 இந்த நிறுவனத்தில் இணைந்து பயிற்சி பெற மேலும் மாற்றுத் திறனாளிகளை ஒளிரும் கரங்கள் அமைப்பு எதிர்பார்க்கின்றது.

கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு டெப்லிங் ( Deaflink)ஸ்தாபகர் வண.ஜி.ஜி.ஞானராஜா,  மட்டக்களப்பு லடர் ஆப் ஹோப் ( Ladder of hope) பொதுமுகாமையாளர் செல்வி எஸ் .ஆர். மதிதரன் ஆகியோர் அன்பளிப்புகளை வழங்கி வைத்தார்கள்.

 


வி.சுகிர்தகுமார்          


 அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளாந்தம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருந்து பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகின்ற எரிபொருள் யாவும் ஒரு சில மணித்தியாலங்களில் தீர்ந்து போவதையும் காண முடிகின்றது.
ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் விற்பனை நிலையத்திலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் எனும் அச்சத்தில் அதிகளவான வாகன உரிமையாளர்கள் தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுவருவதையும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இரவு பகலாக சேவையினை வழங்கி வருவதையும் உணர முடிகின்றது.
இந்நிலையில் விவசாயிகள் வயலை பண்படுத்தும் வேலைகளுக்கான டீசலை பெற்றுக்கொள்வதற்கு வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதையும் அவதானிக்க கிடைத்தது.
எரிபொருளை பதுக்கி வைக்கின்றவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேநேரம் QR  முறையினை நடைமுறைப்படுத்துமாறு அரசிடம் பலரும் கோரிக்கையினை முன்னெடுத்து வருவதுடன் அத்தியாவசிய தேவையுடைய அரச உத்தியோகத்தர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட நடைமுறையொன்றினை மேற்கொள்வதன் மூலம் அரச சேவையினை தடையின்றி முன்கொண்டு செல்ல முடியும் எனவும் அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 


டெல்லியில் நடந்துவரும் ஏஐ உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் (திங்கள் கிழமை) கலந்துகொண்டவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசாங்கத்தின் "முழுமையான குழப்பம் மற்றும் கடுமையான நிர்வாகச் சீர்கேடு" என விமர்சித்துள்ளார்.

இந்த உச்சிமாநாட்டின் தொடக்கத்தின்போது நிரம்பி வழிந்த அரங்குகள், நீண்ட வரிசைகள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் நுழைவுக்கான அறிவுறுத்தல்களில் குழப்பமான நிலை ஆகியவை காணப்பட்டன.

அதிகப்படியான கூட்டம் காரணமாகப் பாதுகாப்புப் பரிசோதனை செயல்முறையினாலும் மக்களுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.

பிரதமர் நரேந்திர மோதி மாநாட்டின் எக்ஸ்போவுக்கு வருவதற்கு முன்னதாக சில அரங்குகள் தற்காலிகமாக காலி செய்யப்பட்டன

 குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், மெட்டா (Meta Platforms) நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளது.


அமெரிக்காவின் நியூ மெக்சிகோ (New Mexico) மாநில அரசு தொடர்ந்த இந்த வழக்கு, சமூக ஊடக நிறுவனமொன்றுக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டில் ஜூரி சபையினூடாக (Jury Trial) விசாரணைக்கு வரும் முதலாவது வழக்காகும்.


பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வட்ஸ்அப் (WhatsApp) ஆகிய தளங்கள் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை மெட்டா நிறுவனம் ஊக்குவிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


சிறுவர்களை இலக்கு வைக்கும் நபர்களுக்கு (Predators) எவ்வித கட்டுப்பாடும் இன்றி மெட்டா நிறுவனம் அனுமதி அளித்துள்ளதாகவும், இதன் மூலம் சிறுவர்கள் மனித கடத்தல் மற்றும் நேரடி சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இத்தகைய ஆபத்தான உள்ளடக்கங்களை (Content) அனுமதிப்பதன் மூலம் நிறுவனம் இலாபம் ஈட்டுவதாகவும் சட்டமா அதிபர் சாடியுள்ளார்.


சமூக ஊடகங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து உலகளவில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த வழக்கு மெட்டா நிறுவனத்திற்கு பெரும் சவாலாக அமையவுள்ளது. பாலியல் குற்றவாளிகள் சிறுவர்களைத் தொடர்பு கொள்வதை மெட்டா நிறுவனம் தடுக்கத் தவறிவிட்டது என்பதே இந்த வழக்கின் மையக்கருத்தாகும்.



 நூருல் ஹுதா உமர்


இலக்கியம், விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள், கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் மாகாண மற்றும் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சம்மாந்துறையின் புகழுக்கு வித்திடும் மாணவர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபை தேசிய மட்டத்தில் புத்தாக்கப் போட்டியில் வெற்றி பெற்ற இரு மாணவர்களை கௌரவித்துள்ளது.

அதன்படி, சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் மாணவி எம்.ஐ.எப். ஹிமா மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவன் எம்.ஏ.ஏ. அஸ்ரிப் ஆகியோர், பாடசாலை ரீதியாக நடைபெற்ற புத்தாக்கப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றமைக்காக, சம்மாந்துறை பிரதேச சபையினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்தக் கௌரவிப்பு நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபையின் 05ஆவது சபையின் 07ஆவது அமர்வு இடம்பெற்றபோது, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில், சபா மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்றது.

குறித்த இரு மாணவர்களின் புத்தாக்க மற்றும் கண்டுபிடிப்பு திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஆதரவுடனும், அவர்களுக்கு பணப்பரிசு, பொன்னாடை போர்த்தல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், மாணவர்களின் சாதனை சம்மாந்துறை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச சாதனைகள் பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 


(செய்தியாளர், பாத்திமா றிப்கா)

முதல் தடவையாக நவீன தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டம் காத்தான் குடியில் அங்குரார்பணம்.


(செய்தியாளர், பாத்திமா றிப்கா)


பெண்களின் வாழ்வாதாரத்தினை நவீன தொழில் வாய்ப்பு மூலமாக வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக நவீன தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


டெலன்ட் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நாஸ் கெம்பஸின் ஆலோசகர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் காத்தான்குடி நாஸ் கெம்பஸ் பிரதான மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது.


இதன் போது நவீன தொழில்நுட்பம், சந்தை வாய்ப்பு தொடர்பாக, ஒளிபரப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். சஜீ விரிவுரையினை வழங்கியதுடன் அதன் செயற்பாடுகள் மற்றும் தொழில் விருத்தி தொடர்பாக நாஸ் கெம்பஸின் பகுதி நேர மாணவ விரிவுரையாளர்களான எம்.என்.என். கரீப், றுஸ்த் நௌபர், நவீன விற்பனை வாய்ப்பின் சமூக ஊடக உக்திகள் எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சஜித் அஹமட், சந்தை விரிவாக்கள் மற்றும் நுணுக்குகள் தொடர்பாக சட்டமாணி ஏ.ஜி.எம். ஸாமில் ஆகியோர் பங்கேற்று விரிவுரையாற்றினர்.


இதன் போது அதிகளவிலான சுய தொழில் பெண் ஆர்வலர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.