பெற்றதுடன் பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் பெளசுல் அமீர் ஆகியோரினால் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக விளக்கவுரைகளும் நடைபெற்றதுடன் தொடர்ந்தும் உத்தியோகக்கர்களுக்கு ட்ரோன் மற்றும் அதன் பிரயோகம் தொடர்பாக விரிவுரையும் செயற்பாட்டு பயிற்சியும் புவியியற்துறை தலைவரினால் நடாத்தப்பட்டது.
அது இந்த வேலையில் என்னுடைய முதல் நாள். என்னுடைய தொடக்கம் அவ்வளவு சிறப்பானதாக அமைந்திருக்கவில்லை.
அந்த நாள் முதலே ட்விட்டர் நிறுவனம் மூடப்பட்டு விடுமா என்று என்னிடம் எத்தனை முறை கேட்கப்பட்டது என்பது தெரியவில்லை. அது நடக்காது என்றே நான் எப்போதும் சொல்லி வந்தேன்.
ஆனால், இப்போது சில காரணங்களால் அதனை அவ்வளவு நிச்சயமாக கூற முடியாது.
பிலாவல் பூட்டோவின் கோவா பயணம் - 12 வருடங்களுக்கு பிறகு பிறகு இந்தியா வரும் பாகிஸ்தான் அமைச்சர்
ட்விட்டரின் புதிய அவதாரம்
முற்றிலும் புதிய ட்விட்டரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனி ட்விட்டரில் ப்ளூ டிக் என்பது அந்த கணக்கு குறிப்பிட்ட நபருடைய உண்மையான கணக்கு என்பதற்கானதாக இருக்கப் போவதில்லை. அவை எல்லாமே மாதச் சந்தா செலுத்தப்படுபவை.
பணம் செலுத்தப்படும் போது குறிப்பிட்ட கணக்கை சரிபார்க்கும் நடைமுறை இருந்தாலும், பெரும் அந்தஸ்துடைய தனி நபர்கள், நிறுவனங்களின் பெயரில் போலி கணக்குகள் பணம் செலுத்தி ப்ளூ டிக் வைத்திருப்பதை காண முடிகிறது.
இம்மாத தொடக்கத்தில் தனிநபர் நிதி நிபுணர் மார்ட்டின் லீவிஸ் தன்னுடைய பெயரில் ப்ளூ டிக் கொண்ட ஒரு கணக்கில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களுக்கு கிரிப்டோகரன்சி விளம்பரப்படுத்தப்பட்டதைக் கண்டு அதிரச்சியடைந்தார். ஏனெனில், அது அவரது உண்மையான கணக்கு அல்ல என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
Twitter பதிவை அனுமதிக்கலாமா?
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
ட்விட்டரில் இன்றைய நிலையில் பயனர்களால் தேர்வு செய்யப்படும் நபர்களைக் காட்டிலும் பணம் செலுத்தும் நபரே அந்த தளம் முழுவதும் தெரியவரக் கூடிய நபராக இருக்கிறார்.
அதனால், இனி வரும் நாட்களில் நம்மிடம் வந்து சேரும் புதிய ட்விட்டர் கணக்குகள் உண்மையில் யாருடையவை என்பதை நாம் காண விருக்கிறோம்.
ஈலோன் மஸ்க் கூறிய 'அனைவருக்கும் சம வாய்ப்பு' இதுதானா?
ஈலோன் மஸ்க் வசமாகும் முன்பு, ட்விட்டரில் யார்யார் முக்கியமானவர்கள் என்பதை தீர்மானிக்கும் முறை சரியானதாக இல்லை என்று அவர் கூறியிருந்தார். அவரது கூற்று ஓரளவு சரியாகவும் இருந்தது.
இன்று அவரது நேரடி மேற்பார்வையின் கீழ் சிலருக்கு மட்டும் ப்ளூ டிக் சரிபார்ப்பு இலவசமாக வழங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. புலனாய்வு தளமான பெல்லிங்கேட் நிறுவனர் தன்னுடைய நிறுவனமும் அவ்வாறு சரிபார்ப்பு உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று என்னிடம் உறுதி செய்தார்.
ட்விட்டரின் மாத சந்தா திட்டத்தை விமர்சிக்கும் ஸ்டீபன் கிங், லெப்ரான் ஜேம்ஸ், வில்லியம்ஸ் ஷாட்னர் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் தாமே பணம் செலுத்தி இருப்பதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Twitter பதிவை அனுமதிக்கலாமா?
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு, 2
வர்த்தகத்தைப் பொருத்தவரை, சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் மட்டுமே விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படும், இல்லாவிட்டால் மாதத்திற்கு 1,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
டிஜிட்டல் விளம்பர வருவாயைப் பொருத்தவரை, பெருநிறுவனங்களைக் காட்டிலும் சிறிய, தொடர்ச்சியாக விளம்பரம் செய்யும் நிறுவனங்களின் கூட்டுத்தொகையே அதிகம் என்று நமக்கு தெரியவருகிறது.
தன்னை பேச்சுரிமைக்கான காவலராக பறைசாற்றிக் கொள்ளும் ஈலோன் மஸ்க் தலைமையிலான ட்விட்டர், அதனை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்குகிறதா என்பதை மேற்கூறியவை கேள்விக்குள்ளாக்குகின்றன.
ரொனால்டோ, பியான்ஸேவின் 'ப்ளூ டிக்' நீக்கம்
மக்கள் பொதுவாக சமூகத்தை விட்டு விலகியிருக்க விரும்ப மாட்டார்கள். ட்விட்டர் மிகச்சிறியதாக, குழப்பமான ஒன்றாக இருந்தாலும் சமூகத்தில் செல்வாக்கும் செலுத்தும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
அது மிகவும் மோசமாக நடத்தப்படுகிறது. மற்ற தளங்களைப் போலவே அதன் நிதியும் இக்கட்டான நிலையில் இருந்தது. துஷ்பிரயோகம் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுக்குள் வைத்திருக்க அது போராடியது.
கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கம்
ஈலோன் மஸ்க் பெரும் பணக்காரர் என்பதுடன், ஏராளமான பின்தொடர்வோரையும் கொண்ட ஒரு புத்திசாலியான தொழிலதிபர்.
ட்விட்டரில் அவர் செய்த மாற்றங்களின் விளைவாக ட்வீட் செய்வதை நிறுத்திய செய்தி நிறுவனங்களில் கனடியன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் மற்றும் NPR ஆகியவை முக்கியமானவை. பாடகர் எல்டன் ஜான், நகைச்சுவை நடிகர் ஸ்டீபன் ஃப்ரை மற்றும் மாடல் ஜிகி ஹடிட் போன்ற பிரபலங்கள் ட்விட்டரை மஸ்க் கையகப்படுத்திய பிறகு ட்விட்டரை விட்டு வெளியேறி விட்டனர்.
ட்விட்டர் நிறுவனம், ஏற்கனவே அறிவித்தபடி, மாதச் சந்தா செலுத்தாத பிரபலங்களின் கணக்கில் இருந்த சரிபார்ப்பு அடையாளக் குறியான ப்ளூ டிக்கை நீக்கும் நடவடிக்கையை கடந்த வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
அதன்படி ஆயிரக்கணக்கான கணக்குகளில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பியான்ஸே ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
ட்விட்டரில் கணக்கு சரிபார்ப்புக்கு பணம் செலுத்த மாட்டோம் என்று கூறும் பிபிசி, ஒரு செய்தி நிறுவனமாக சரிபார்ப்பதில் ஏற்கெனவே "தங்க" நிற டிக்கை இழந்துவிட்டது. பிபிசி நியூஸ் ட்விட்டர் கணக்கு என்னைப் போன்ற தனிப்பட்ட பத்திரிகையாளர்களைப் பின்தொடரத் தொடங்கியது, நம்பகத்தன்மைக்கு எதிரானதாக உள்ளது.
ப்ளூ டிக்கை இழந்ததால் ஏராளமானோர் மகிழ்ந்துள்ளனர்.
"புளூ டிக்கை இழந்ததை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சி," என்று எனது நண்பர் ஒருவர் வியாழக்கிழமை குழு ஒன்றில் பதிவிட்டார். மற்றவர்கள் "டிக்ட் ஆஃப்" என்று கேலி செய்தார்கள்.
பலரைப் போலவே நானும், ஒரு வேலை மற்றும் சமூகத் தளம் என்ற அடிப்படையில் ட்விட்டர் எடுக்கும் புதிய திசையை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன்.
ட்விட்டர் நிறுவனரின் புதிய தளம் 'ப்ளூஸ்கை'
ட்விட்டரை உருவாக்கிய ஜாக் டோர்சி, ப்ளூஸ்கை என்ற புதிய தளத்தை தொடங்குகிறார். அதன் வடிவமைப்பு கிட்டத்தட்ட ட்விட்டரைப் போன்றே இருக்கிறது.
ட்விட்டருக்கு ஈலான் மஸ்க் முடிவுரை?
இது மிகவும் சிறியது, அழைப்பின் பேரில் மட்டுமே இணைய முடியும். ஆனால் இது ஒரு பெரிய உற்சாகத்தை உருவாக்குகிறது. ஏனெனில் இது எதிர்காலத்தில் இயங்கக்கூடியதாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. அதாவது மற்ற தளங்களுடன் அது இணக்கமானது. நானும் அதில் இருக்கிறேன். தற்போது நாம் அனைவரும் ஒரு விருந்துக்கு வந்து, அலங்காரத்தை ரசிப்பது போல் உணர்கிறேன்.
ஆனால் ஒரு புதிய, சிறிய ஆனால் செல்வாக்கு மிக்க இடத்திற்கான வாசல் இருக்கலாம்.
அது புளூஸ்கையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ட்விட்டரை விற்றதிலிருந்து ஒரு வணிகத்தை நடத்துவது பற்றி ஒன்றிரண்டு விஷயங்களை டோர்சி கற்றுக் கொண்டார் என்று நம்புவோம்.
பெரும் பணம் படைத்த தொழிலதிபரான எலான் மஸ்க் தகுந்த நபர் கிடைத்தால் டிவிட்டரை தான் விற்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நேர்காணல் டிவிட்டரின் தலைமையகத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிகப்படியான நபர்களை பணியிலிருந்து நீக்கியது, போலி செய்திகள், ஈலோன் மஸ்கின் பணி வழக்கங்கள் குறித்து இந்த நேர்காணலில் பேசப்பட்டது.
அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய ஈலோன் மஸ்க், கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மற்றும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றையும் நிர்வகித்து வருகிறார்.
டிவிட்டரை வாங்கியது குறித்து வருந்துகிறீர்களா என எலான் மஸ்கிடம் கேட்டதற்கு, “இது ஏதோ ஒரு பார்ட்டிக்கு செல்வது போல அல்ல. அந்த வலி மிக அதிகம்.” என தெரிவித்தார்.
டிவிட்டரை நிர்வகிப்பது குறித்து கேட்டதற்கு, “அது சலிப்பாக இல்லை. அது ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வு” என தெரிவித்தார்.
“கடந்த பல மாதங்களாக அழுத்தம் நிறைந்துள்ளது” என்று தெரிவித்தாலும் நிறுவனத்தை வாங்கியது சரியான முடிவு என்றே தான் நினைப்பதாக மஸ்க் தெரிவித்தார்.
மேலும் டிவிட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று தெரிவித்த எலான் மஸ்க், அதிகப்படியான வேலை பளுவால் சில நேரங்களில் தான் அலுவலகத்தில் தூங்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக தெரிவித்தார். “நூலகத்தில் நான் தூங்குவதற்கு என்று ஒரு இடம் உண்டு அங்கு யாரும் செல்ல மாட்டார்கள்.” என்றார்.
சில நேரங்களில் சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகளை பதிவிடுவது குறித்து கேட்டதற்கு, “நான் அதிகாலை 3க்கு பிறகு டிவீட் செய்யக்கூடாது என நினைக்கிறேன்” என்றார்.
பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில் “அரசால் நிதி வழங்கப்படும் ஊடகம்” என மாற்றியது குறித்து கேட்டதற்கு, “பொதுவாக பிபிசி, அரசு ஊடகம் என சொல்வதை விரும்புவதில்லை என்பது எனக்கு தெரியும்” என்றார்
இந்த வாரத் தொடக்கத்தில், பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில் “அரசால் நிதி வழங்கப்படும் ஊடகம்” என மாற்றியது குறித்து “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை சரி செய்ய வேண்டும்” என பிபிசி டிவிட்டரிடம் கேட்டுக் கொண்டது.
“பிபிசி எப்போதும் சுதந்திரமாக செயல்படும். பிரிட்டன் மக்கள் செலுத்தும் அனுமதி கட்டணத்திலிருந்தே பிபிசிக்கு நிதி வருகிறது.” என பிபிசி தெரிவித்திருந்தது.
பிபிசியின் அடையாளத்தில் “வெளிப்படையான நிதி” என டிவிட்டர் மாற்ற முயன்றதாக தெரிவித்த ஈலோன் மஸ்க் “நாங்கள் முடிந்தவரை துள்ளியமாக இருக்க விரும்புகிறோம்,” என்று தெரிவித்தார்.
“எனக்கு பிபிசியின் மீது மிகுந்த மரியாதை உள்ளது” என்று தெரிவித்த மஸ்க், இந்த நேர்காணல் சில கேள்விகளை கேட்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது என்று தெரிவித்தார். மேலும் நாங்கள் வித்தியாசமாக செய்யும் சில விஷயங்கள் குறித்து கருத்துகளை பெறுவதற்கு இது உதவியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய ஃபயர்போல்ட் ராக் மாடலில் 1.3 இன்ச் வட்ட வடிவிலான ஆல்வேஸ் ஆன் AMOLED டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட், 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், மெட்டாலிக் கேசிங், ஏராளமான வசதிகளை வழங்கும் கிரவுன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் உள்ள 260 எம்ஏஹெச் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச்-இல் ஹெல்த் சூட், ஹார்ட் ரேட் டிராக்கர், SpO2 டிராக்கர் மற்றும் ஸ்லீப் சைக்கிள் மாணிட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதியை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கியது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்களின் வாய்ஸ் நோட்-களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். இந்த அம்சம் தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.5.77 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனர்கள் வாய்ஸ் நோட்-ஐ ஸ்டேட்டஸ் ஆக வைக்க செய்கிறது. புதிய அம்சத்தை பெற ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியை தேர்வு செய்து, அப்டேட் செய்ய வேண்டும். செயலியை அப்டேட் செய்ததும் இந்த வசதி வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.
கூகுள் SMS சான்றளிக்கும் தளத்தில் புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஹெச்டிசி டேப்லெட் தற்போது டெஸ்டிங் கட்டத்தில் உள்ளது. மேலும் இது பிப்ரவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் மிட்-ரேன்ஜ் அல்லது பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. இதையும் படியுங்கள்: இணையத்தில் லீக் ஆன போக்கோ X5 GT - வெளியீடு எப்போ தெரியுமா? இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹெச்டிசி A102 மாடலில் 4ஜி வைபை வசதி, 11.0 இன்ச் 2K டிஸ்ப்ளே, 2000x1200 பிக்சல் ரெசல்யூஷன், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், Arm கார்டெக்ஸ் A75 மற்றும் Arm கார்டெக்ஸ் A55 கோர்கள் முறையே 2GHz மற்றும் 1.8GHz இயங்குகின்றன. இத்துடன் 20MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஹெச்டிசி A102 டேப்லெட் ஃபேஸ் டிடெக்ஷன் மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் வசதி, ஆண்டராய்டு 12, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் 8000 எம்ஏஹெச் பேட்டரி, ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைபை வசதி, யுஎஸ்பி டைப் சி 3.0 போர்ட், OTG சப்போர்ட் கொண்டிருக்கும் என தெரிகிறது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு மற்றும் அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு ஏற்ற பட்ஜெட் பிரிவில் புதிய டேப்லெட் வாங்க நினைப்போருக்கு ஏற்ற மாடலாக இது இருக்கும் என தெரிகிறது. புதிய ஹெச்டிசி A102 மாடல் முதற்கட்டமாக ஆப்ரிக்க சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகமாக இருக்கிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வரும் நிறுவனங்களின் பட்டியலில், கூகுள் நிறுவனமும் இப்போது இணைந்துள்ளது.
'முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன்'
கூகுள் சுந்தர் பிச்சை
ஜனவரி 20ஆம் தேதி காலை கூகுள் மற்றும் ஆல்ஃப்பெட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, அதன் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் 12 ஆயிரம் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த இமெயிலில் கூகுள் நிறுவனம், 12 ஆயிரம் பேர் வரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்து இருப்பதாக, சுந்தர் பிச்சை குறிப்பிட்டு இருந்தார்.இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் பிளாக் பக்கத்தில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.
இது கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6% ஆகும்.
சுந்தர் பிச்சை அனுப்பிய இமெயில், "நான் பகிர்ந்து கொள்ள சில கடினமான செய்திகள் உள்ளன. எங்கள் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம். இதனால் வேலையை இழக்கும் அமெரிக்க ஊழியர்களுக்கு ஏற்கனவே தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். மற்ற நாடுகளில் வேலை செய்யும் நபர்களுக்கு, உள்ளூர் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக இந்த செயல்முறை நீண்ட நேரம் எடுக்கும்.
இதன் மூலம் திறமைமிக்க சில நபர்களுக்கு நாங்கள் குட்பை சொல்கிறோம். மேலும் இப்போது எடுக்கப்பட்டு இருக்கும் முடிவுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்," என அந்த மெயிலில் குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள் வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளது. அந்த வளர்ச்சிக்கு தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் வகையில், இன்றைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என சுந்தர் பிச்சை அந்த மெயிலில் தெரிவித்து இருந்தார்.
2023ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எப்படி இருக்கும்? பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு
பொருளாதார வலிமை மிக்க நாடுகள் இந்த ஆண்டு மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கடந்த ஆண்டு எச்சரித்து இருந்தார்.
அந்த அமைப்பின் தலைவரான கிறிஸ்டலீனா ஜியார்ஜீவா, 2022ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு சற்று கடினமாக இருக்கும் எனவும், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் என அவர் தெரிவித்து இருந்தார்.
இதையொட்டி நிதி நிலைமையை சீராக்க, உலகின் முன்னணி டெக் நிறுவனங்களாக மெட்டா, அமெசான், டிவிட்டர் நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்தன.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், கடந்த ஆண்டு 11 ஆயிரம் ஊழியர்களை பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கியது. இது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 13% ஆகும். இந்த எண்ணிக்கை 87 ஆயிரம் வரை அடுத்து வரும் நாட்களில் உயரும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்து இருந்தார்.
அமெசான் நிறுவனமும் செலவுகளை குறைக்க இந்த ஆண்டு 18 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
வேலையை விட்டு நீக்கும் இந்திய நிறுவனங்கள்
ஸ்விக்கி
பட மூலாதாரம்,GETTY IMAGES
சர்வதேச நிறுவனங்களை போலவே இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனக்களும் பலரை வேலையில் இருந்து நீக்கத் தொடங்கியுள்ளன.
அண்மையில் இந்தியாவின் யுனிகார்ன் ஸ்டார் அப் நிறுவனமான ஷேர் சாட்(Sharechat), தனது ஊழியர்களில் 600 பேர் வரை வேலையில் இருந்து நீக்கியது. பொருளாதார நிலைமைகளை கவனத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.
இந்த வேலை நீக்கத்தால் ஷேர் சாட் நிறுவனத்தின் 20% பேர் வேலையை இழந்தனர்.
இதே போல மற்றொரு ஸ்டார்ட் அப் நிறுவனமான கோ மெக்கானிக்(GoMechanic), தனது ஊழியர்களில் 70% பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
இது குறித்து லிங்க்ட்இன்(LinkedIn) சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருந்த அந்நிறுவனத்தில் முதன்மை அதிகாரி, "தவறான நிதி தணிக்கையின் காரணமாக வளர்ச்சிக்கான குறியீடுகளை அதிகரித்து காட்டப்பட்டது. இதனை அறிந்து கொண்ட முதலீட்டு நிறுவனம், தனது முதலீடுகளை திரும்பப்பெற்று விட்டது. இதன் விளைவாக எங்கள் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யும் நிலைமைக்கு ஆளாகி இருக்கிறோம்," எனக் குறிப்பிட்டு இருந்தார்.
பிரபல இந்திய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, தனது ஊழியர்களில் 380 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து பிடிஐ செய்தி முகமை வெளியிட்ட செய்தியில், அந்நிறுவனம் மோசமான கணிப்புகள் மூலமாக தேவைக்கு அதிகமான நபர்களை பணியில் அமர்த்தியது. இன்றைய சூழலை கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை எடுத்து இருப்பதாக, அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
வேலைநீக்கத்தில் இணைந்த மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட்
பட மூலாதாரம்,GETTY IMAGES
மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், தனது ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. அதன் மொத்த பணியாளர்களில், 5% ஊழியர்களை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்க இருக்கிறது.
இதன் மூலம் 10 ஆயிரம் பேர் வேலை இழக்கக்கூடும். இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யா நாதெல்லா, கூடுதல் கவனத்துடன் இருக்கும் நோக்கில் இந்த ஆட்குறைப்பு நடக்கிறது என்று தனது பணியாளர்களிடன் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூகுள் தேடுபொறிக்கு(Google Search Engine) போட்டியாக, சாட் ஜிபிடி(Chat GPT) என்ற தேடுபொறியை உருவாக்கி இருக்கிறது. இந்த தேடு பொறி, செயற்கை நுண்ணறிவுன் உதவியுடன் சிறப்பாக செயல்படுவதால், இதன் வளர்ச்சிக்காக இந்த நிறுவனம் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.
வேலைநீக்கத்தின் மூலமாக ஊழியர்களுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஊழியர்களுக்கு இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
கூகுள் நிறுவனமும் வேலை இழப்பால் பாதிக்கப்படும் அமெரிக்காவை சேர்ந்த ஊழியர்களுக்கு சில பொருளாதார இழப்பீடுகளை அறிவித்துள்ளது
குறைந்தபட்சம் 60 நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படும்
2022ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்கப்படும்
மீதமுள்ள விடுமுறை நாட்கள் ஊதியமாக வழங்கப்படும்
6 மாதம் வரை மருத்துவ காப்பீடு, விசா, வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்
வேலைநீக்கத்திற்கான 16 வார தொகுப்பூதியம்
அமெரிக்காவுக்கு வெளியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உள்ளூர் விதிமுறைகளை பின்பற்றி இழப்பீடு வழங்கப்படும்.
தொழில்நுட்பம் குறித்த அமெரிக்க இணையதளமான Layoffs.fyi, தனது தளத்தில் 2022ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் வரை வேலையை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. இதில் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களின் எண்ணிக்கையை சேர்க்கும் போது இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும்.
எப்போது சந்தை மீளும்?
இது குறித்து பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் பேசும் போது, "நாம் ஒரு மந்தநிலையைக் காணப் போகிறோம். இதன் காரணமாக ஏற்பட இருக்கும் விளைவுகளினால், 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் வரை சந்தைகள் மந்தநிலையில் இருக்கும்," என அவர் தெரிவித்தார்.