Showing posts with label Law. Show all posts



 ( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் "நிருத்தியார்ப்பணம்"  பரதநாட்டிய நிகழ்ச்சி காரைதீவு விபுலானந்தா கலாசார  மண்டபத்தில்,  கலைக் கூடத்தின் தலைவர் சிவசிறி அடியவன்  பிரமின் தலைமையில் சனிக்கிழமை(16) நடைபெற்றது .

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன  பணிப்பாளர்  பேராசிரியர்  கலாநிதி பாரதி கென்னடி கலந்து சிறப்பித்தார் .

கௌரவ அதிதிகளாக  நிறுவனத்தின்  நடனம் அரங்காற்றுகை திணைக்கள சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி துரைசிங்கம் உஷாந்தி , மட்டக்களப்பு வலயக் கல்வி பணிமனையின் அழகியகல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்  கலாநிதி மலர்விழி சிவஞானசோதிகுரு,  ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .

அழைப்பு அதிதிகளாக கல்முனை வலய நடன ஆசிரிய ஆலோசகர் ரிகே.றீசா பத்திரண மற்றும் திருக்கோவில் ஆசிரிய ஆலோசகர் திருமதி.தங்கமாணிக்கம் சிறப்பித்தார்கள் .
நடனத் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த ஐந்து மாணவிகளின் நடன ஆற்று கைகள் சிறப்பாக நடைபெற்றன.

 மஸாஹிமாவுக்கு கிடைத்த நீதி 


தர்மச்சக்கரம் வரையப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்

என்ற பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது. - ஹஸலக பொலிஸ் OIC சொந்த நிதியில் நஷ்டயீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு.


ஈஸ்டர் தாக்குதலைத்தொடர்ந்து இலங்கை இஸ்லாமியர்கள் பலரும் அநியாயமாக கைது செய்யப்பட்ட நிலையில் தனது தர்மசக்கர புகைப்படம் கொண்ட ஆடை (கப்டான்) அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மஹியங்கனை, ஹஸலகவைச்சேர்ந்த சகோதரி மஸாஹிமா அநியாயமாகக்கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார். உண்மையில் கப்பலின் சுக்கான் கொண்ட புகைப்படம் வரையப்பட்ட ஆடையைத் தான் அவர் அணிந்தார்.  


இந்நிலையில், பின்நாட்களில் விடுதலையான சகோதரி மஸாஹிமா தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாகக்கூறி உயர் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வெளியானது. 


நீதியரசர்களான யசந்த கொடேகொட, குமுதினி விக்கிரமசிங்க, ஷிரான் கொனேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வெளியிட்டது. 


அதற்கமைய, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் விதி 12(1), 13(1), 13(2) மஸாஹிமா விவகாரத்தில் மீறப்பட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.


அத்துடன், அப்போதைய ஹஸலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி OIC ஜெ.பி ஷந்தன நிஷாந்த தனது சொந்த நிதியிலிருந்து 30 ஆயிரம் ரூபா நஷ்டயீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், வழக்கு செலவுகளை (Cost) அரசு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கியது. 


4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற குறித்த வழக்கில் சட்டத்தரணி பாத்திமா நுஷ்ராவின் வழிகாட்டலில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவமன்ன, சட்டத்தரணி ஹரினி ஜயவர்தன, சட்டத்தரணி இர்பானா இம்ரான் ஆகியோர் பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் ஆஜராகினர். 


நீதிக்காக போராடிய சகோதரி மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது. (C)

 


"வருடாந்த சட்ட இளைஞர் மாநாடு 2025” கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது. 


நீதிபதி நவாஸ்: “அர்ப்பணிப்பு, ஒழுக்கம்—டிஜிடல் கருவிகளைப் பொறுப்புடன் பயன்படுத்துங்கள்”


கொழும்பு, 12 ஜூலை மாதம் 2025 — இலங்கை சட்ட இளைஞர் சமூகம் (legal youth community Sri Lanka) தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் சட்ட மாநாடு 2025 இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேசிய அருங்காட்சியக அரங்க ம், கொழும்பில் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து சட்ட மாணவர்கள், இளம் சட்டத்தரணிகள் மற்றும் சட்ட ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.


மாநாட்டில் 10 சிறந்த பேச்சாளர்கள் பங்கேற்று, குற்றவியல், அரசியலமைப்பு சட்டம், செயற்கை நுண்ணறிவு மற்றும் சட்டம், வர்த்தக சட்டம், சர்வதேச சட்டம், புலமைச் சொத்துச் சட்டம் மற்றும் மாற்று பிணக்குத்தீர்ப்பு முறைமைகள் போன்ற 8 முக்கிய சட்டத் துறைகளில் விரிவுரைகள் நடைபெற்றன.



பிரதம அதிதியின் சிறப்புறை


பிரதம அதிதி, நீதியரசர்  A.H.M.D. நவாஸ், இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி, இளம் வழக்கறிஞர்களை நோக்கி உரையாற்றினார். சட்டத்தின் அடிப்படைகளை ஆழமாகப் படித்து, வழக்குகளால் பிரயோக பயிற்சி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.


நீதியரசர் A.H.M.D. நவாஸ் அவர்கள் மூன்று முதுமானிப்பட்டங்கள் பெற்றிருந்தாலும், “Master’s அல்லது PhD பட்டங்கள் மட்டும் நல்ல வழக்கறிஞரை உருவாக்காது. மாறாக அர்ப்பணிப்பு, தெளிவான சிந்தனை, தொடர்ந்து வாசிப்பதே ஒருவரை நல்ல வழக்கறிஞராக்கும்.” என கருத்து தெரிவித்தார்.



மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில், ChatGPT போன்ற AI உபகரணங்களால் உருவாக்கப்பட்ட பொய்யாக புனைய்யப்பட்ட வழக்குப்பதிவுகளை சமர்ப்பித்த ஒரு வழக்கை உதாரணமாக எடுத்தார். “AI‑ஐ நம்பிக்கையோடு பயன்படுத்தாதீர்கள். ஒவ்வொரு தகவலையும் சரிபார்க்கும் பொறுப்பும் விமர்சன சிந்தனையும் அவசியம்” என குறிப்பிட்டார்.


அவருடைய நண்பர்களான இந்திய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் — தலைமை நீதிபதி பூஷன் கவாய், நீதிபதி சூர்ய காந்த்  ஆகியோர் கூட இதே பேச்சுக்களை விவாதித்து வருவதாகவும், மலிந்துபோன AI கருவிகள் உண்டாக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சிறிந்த நடைமுறை தேவை என்றும் தெரிவித்தார்.


இலங்கை வழக்குகளில் பிரசித்தம் பெற்ற “Queen v. kularathne ” வழக்கு Privy Council‑இல் மேற்கோள்காட்டபட்டதை நினைவூட்டினார். இது இலங்கையின் சட்ட மரபின் வலிமையை வெளிப்படுத்தும் சிறந்த உதாரணம் என்றும், “நமது நாட்டின் முன்னேற்றம் ஒரு பொறுப்புள்ள, அறிவாய்ந்த சட்ட நடைமுறையைக் கொண்டுள்ளது” என்றும் கூறினார்.



சிறப்புரை : அரசியலமைப்பு சட்டம்  மற்றும் குடிமக்கள் கடமை


சிறப்புரை உரையாளர், கனம். Dr. விஜயதாச ராஜபக்ஷ, ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய பங்கு குறித்து உரையாற்றினார். சமூகத்தையும், சட்ட மேலாண்மையையும் பாதுகாக்கும் விதமாக இளைஞர்  ஈடுபட வேண்டியது பற்றியும் அவர் வலியுறுத்தினார்.



 கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துக்கள் 


மாநாட்டில் பங்கேற்ற முக்கிய பிரபல வழக்கறிஞர் குழு:

யு. ஆர். டி.  சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி– குற்றவியல் சட்டம்

வசந்த பெரேரா , துணை சொலிசிடர் ஜெனரல் – குற்றவியல் சட்டம்

பேராசிரியர் சனத் விஜேசிங்க – பதிப்புரிமை மற்றும் காப்புரிமை.

Dr. சரணி குணதிலக – நடுவர் தீர்வு vs இணக்கம்

லக்மாலி மனம்பெரி – சர்வதேச சட்டம்

அஸ்வினி நடேசன், , Dr. சதுர வர்ணசூரிய – ஆய்வு மற்றும் பரீட்சை ஆய்வு

Dr. சுனில் அபேரத்ண – செயற்கை நுண்ணறிவு மற்றும் சட்டம்


பங்கேற்பாளர்கள் வெறும் கேட்போராக மட்டும் இல்லாமல்,   கலந்துரையாடல்களில்  பங்கேற்று கருத்துக்களைப் பரிமாறினர்.



சட்ட எதிர்காலத்திற்கான ஒரு வலுவான செய்தி


வருடாந்த சட்ட இளைஞர் மாநாடு 2025  கட்டமைப்பு மற்றும் நவீன சட்டத் சூழலுக்கு பொருந்திய வழிகாட்டியைக்கூடப் பெற்றது. இது நீதி, கடமை, தகுந்த மாற்றம் மற்றும் நீதிக்கு அர்ப்பணிப்பு கொண்ட சட்ட இலக்குகளை உருவாக்கும் மறுமொழியை வழங்கியது.



இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் O/L and A/L மாணவர்களுக்கான  விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ், ஹமீதியா மத்திய கல்லூரி அதிபருடன் இணைந்து, இவ்வழி காட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது.

இந்த நிகழ்ச்சி ஹமீதியா மத்திய கல்லூரியில் நடைபெற்றது. மாணவர்கள் தங்களது கல்விப் பயணத்தில் சிறந்த முறையில் முன்னேற உதவும் வகையில் ஊக்கமளிக்கும் மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள், நெறிமுறை மற்றும் தனிநபர் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

இது இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸின் சமூக சேவைக் திட்டங்களின் ஒரு பகுதியாகும். இளைய தலைமுறையை கல்வி மற்றும் உந்துதலின் மூலம் சக்திவாய்ந்தவர்களாக மாற்றுவது இதன் முக்கிய நோக்கமாகும். பல சட்டக் கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் அறிவுரைகளையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பில் முக்கிய பங்கு வகித்த ஹமீதியா மத்திய கல்லூரி அதிபர், முஸ்லிம் மஜ்லிஸின் ஒத்துழைப்புக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். இவ்வாறான நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க முக்கிய பங்களிப்பு அளிக்கின்றன என அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் பாராட்டுக்களுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது, மேலும் அதில் பங்கேற்ற அனைவருக்கும் தெளிவு மற்றும் விழிப்புணர்வு உருவானது.



இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பராட்டே சட்டம் (Parate Law) இன்று (01) முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 


நபர் ஒருவர் வங்கியில் அடகு வைத்த சொத்தை மீட்கவில்லை என்றால், அந்த சொத்துகளை பகிரங்க ஏலத்தில் விற்று, அதன் மூலம் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டி தொகையை மீட்டெடுக்கும் வகையில் இந்த பராட்டே சட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்த சட்டம் பொருளாதார நெருக்கடியின் போது (2022-2023) தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள்  சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

 யாழ்.காரைநகரை பிறப்பிடமாக கொண்ட இவர் கொழும்பு பல்கலை கழகத்தில் 2005ம் ஆண்டு சட்டமானி பட்டத்தினையும் 2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டதரணியாக பதவி ஏற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அப்துல்சலாம் யாசீம்

 



சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிஸின் (LSMM) ஏற்பாட்டில் இலங்கை சட்டக் கல்லூரியில் பெப்ரவரி 20ஆம் திகதி (Ghazal'24) கசல் ‘24’ எனும் கலாசார நிகழ்வோடு  57வது மீஸான் சஞ்சிகை வெளியீட்டு விழா நடைபெற்றது. மாலை 4:00 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில், சட்டப் புலமை மற்றும் கலாச்சார வெளிப்பாடு ஆகிய இரண்டையும் கொண்டாடும் வகையில் நீதித்துறைப் பிரமுகர்கள், சட்ட அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர்  ஒன்றுகூடினர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை சமாதான சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா மற்றும்  நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் , நீதிபதி எம்.டி. லாஃபர் மற்றும் அவரது  நீதிபதி கே.எம்.ஜி.எச். குலத்துங்க,  இலங்கை சட்டக்கல்லூரியின் அதிபர் கலாநிதி பிரசாந்த லால் டி அல்விஸ் ஆகியோர்  பங்குபற்றினர்.

LSMM  75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அதேவேளையில் 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில் மீசான்  1962 ஆம் ஆண்டு A.M.M இன் தலைமையின் கீழ் முதன்முதலில் வெளியிடப்பட்டது. சட்டத்தரணி சுபைர் மற்றும் சட்டத்தரணி எம். தசூக்கி மொஹமட் ஆகியோரினதும் பங்களிப்பு இதில் அளப்பரியது.


இந்நிகழ்வில்  தலைமை உரையை ஆற்றிய கலாநிதி ஜெஹான் பெரேரா, நீதி மற்றும் சமத்துவத்தின் மீது கவனம் செலுத்தியதோடு நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கையை குறிப்பிட்டோடு உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் குறித்த கடந்தகால ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார். சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் பரிந்துரைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சொற்பொழிவைச் தொடர்ந்து அவரது  நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் சட்ட மற்றும் கல்வித் துறைகளில் பெண்கள் தலைமைப் பாத்திரங்களுக்கு உயர்வதைக் கண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும்  கமிஷன் அறிக்கையை உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்கைப் பற்றியும் புறநிலை உண்மையைத் தேடுவதில் அதன் முக்கியத்துவத்தையும்  எடுத்துக்காட்டினார்.


எதிர்பார்க்கப்பட்ட தருணமான மீசான் 57வது பதிப்பின் அதிகாரப்பூர்வ வெளியீட்டைத் தொடர்ந்து, நீதிபதி நவாஸுக்கு LSMM இன் தலைவர், செயலாளர் மற்றும் இதழாசிரியரினால் மீஸான் பிரதி  வழங்கப்பட்டது. கலாநிதி பிரசாந்த லால் டி அல்விஸ், தனது உரையில், இலங்கை சட்டக் கல்லூரியின் பாரம்பரியம் மற்றும் எதிர்கால சட்ட வல்லுனர்களிடையே நீதி மற்றும் சமத்துவத்தை வளர்ப்பதில் சட்டக் கல்வியின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார். பத்திரிகையின் மதிப்புரை தொடர்பில்  திரு. எம்.ஏ.எம். ஹக்கீம் (கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் , சட்டத்தரணி)  நுண்ணறிவு விமர்சனத்தை வழங்கினார்.

இறுதியில் கசல் '24   கலைக் கூறுகளைப் புகுத்திய இலக்கியம் மற்றும் இசை ஆகியவற்றைக் கலந்த புதுமைப்படைப்பின் வெளியீடு இனிதே நிறைவுற்றது.

 



இந்தியாவில் பழைய ‘நீதி தேவதை’யை அகற்றிவிட்டு திறக்கப்பட்ட கண்களுடன், அரசியல் சாசன புத்தகத்தை ஏந்திய ‘நீதி தேவதை’யின் புதிய சி லையை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நேற்று (16) திறந்து வைத்துள்ளார்.


காலனித்துவ பாரம்பரியத்தை அகற்றும் முயற்சியாக, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் கருப்புத் துணியால் கண்கள் கட்டப்பட்டு, கையில் வாளுடன் இருந்த பழைய நீதி தேவதை சிலை அகற்றப்பட்டுள்ளது.


நீதி தேவதையின் கண்கள் மூடப்பட்டதற்கான காரணம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், நீதி என்பது பணம், அரசியலுக்கு அப்பாற்பட்டது, இது எதுவும் நீதியை பாதிக்கக் கூடாது என்பதாகும்.


மேலும், நீதி தேவதையின் இடது கையில் உள்ள வாள், வரலாற்று ரீதியில் அநீதியை தண்டிக்கவும், அதிகாரத்தை நிலை நாட்டுவதையும் குறிக்கிறது.


புதிதாக திறக்கப்பட்டுள்ள நீதி தேவதை சிலையின் இடது கையில் வாளுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீதி தேவதை கண்ணில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணியும் அகற்றப்பட்டு, கண்கள் திறந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


நீதியை வழங்குவதற்கு வாள் தேவையில்லை, அரசியலமைப்பு சாசனம்தான் தேவை என்பதை புதிய நீதி தேவதை சிலை குறிக்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், பழைய சிலையின் வலது கையில் இடம்பெற்றிருந்த தராசு, புதிய சிலையிலும் இடம்பெற்றுள்ளது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை தராசு குறிக்கிறது.


மேலும், புதிய நீதி தேவதை சிலையின் நெற்றியில் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



வழங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை தராசு குறிக்கிறது.


மேலும், புதிய நீதி தேவதை சிலையின் நெற்றியில் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 



இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் செயலாளரை நியமித்துள்ளனர்.


அந்தவகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பி.சி அனுர மத்தேகொடவையும், துணைத் தலைவராக பி.சி ராசிக் சரூக்கையும் நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார்.


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கௌசல்ய நவரத்ன மற்றும் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இந்ததிஸ்ஸ ஆகியோர் பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

 



யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருமதி சரோஜினி இளங்கோவன் அவர்கள்.கடந்த  5 தசாப்தங்களாக வட இலங்கையில் சட்டத்தரணியாகத் தொழில் புரிந்து வருபவர்.  வட இலங்கையில் சிரேஸ்ட வழக்கறிஞர்ளில் இவரும் ஒருவர்.இவரிடம் 35 கனிஸ்ட சட்டத்தரணிகள் பணி புரிந்துள்ளார்கள்.மல்லாகம் நீதிமன்ற நீதிபதியாகவும் தொழில்பட்டவர்.37 வருடங்களின் பின்னர்,மீள் உருவாக்கம் பெற்ற ஊர் காவற்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்வர்.

சட்டத்துறையில் இவர் 50 வருட காலங்களில் ஆற்றிய சமூகஞ்சார் அரும் பணிகளைக் கௌரவிக்கும் முகமாகஈ அண்மையில், யாழ்ப்பாணத்தில் பொன் விழாக் பொண்டாட்டம் இடம்பெற்றது. இதில்,  நீதிபதிகள், சட்டத்தரணிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சட்டத்துறையில் பொன் விழாக் காணும்,சிரேஷ்ட சட்டத்தரணி சரோஜினிதேவி இளங்கோவன் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் பணிபுரிய www.ceylon24.com குழுமம் சார்பில் நாமும் வாழ்த்துகின்றோம்!


 


இலங்கையில் சித்திரவதைகளை கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் தடுப்பது தொடர்பான செயலமர்வு.


அம்பாறை மொண்டி உணவகத்தில் இன்று காலை 2023.07.22 முதல் இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட சட்டத்தரணிகள்  கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.