Showing posts with label Law. Show all posts

 



இந்தியாவில் பழைய ‘நீதி தேவதை’யை அகற்றிவிட்டு திறக்கப்பட்ட கண்களுடன், அரசியல் சாசன புத்தகத்தை ஏந்திய ‘நீதி தேவதை’யின் புதிய சி லையை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நேற்று (16) திறந்து வைத்துள்ளார்.


காலனித்துவ பாரம்பரியத்தை அகற்றும் முயற்சியாக, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் கருப்புத் துணியால் கண்கள் கட்டப்பட்டு, கையில் வாளுடன் இருந்த பழைய நீதி தேவதை சிலை அகற்றப்பட்டுள்ளது.


நீதி தேவதையின் கண்கள் மூடப்பட்டதற்கான காரணம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், நீதி என்பது பணம், அரசியலுக்கு அப்பாற்பட்டது, இது எதுவும் நீதியை பாதிக்கக் கூடாது என்பதாகும்.


மேலும், நீதி தேவதையின் இடது கையில் உள்ள வாள், வரலாற்று ரீதியில் அநீதியை தண்டிக்கவும், அதிகாரத்தை நிலை நாட்டுவதையும் குறிக்கிறது.


புதிதாக திறக்கப்பட்டுள்ள நீதி தேவதை சிலையின் இடது கையில் வாளுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீதி தேவதை கண்ணில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணியும் அகற்றப்பட்டு, கண்கள் திறந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


நீதியை வழங்குவதற்கு வாள் தேவையில்லை, அரசியலமைப்பு சாசனம்தான் தேவை என்பதை புதிய நீதி தேவதை சிலை குறிக்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், பழைய சிலையின் வலது கையில் இடம்பெற்றிருந்த தராசு, புதிய சிலையிலும் இடம்பெற்றுள்ளது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை தராசு குறிக்கிறது.


மேலும், புதிய நீதி தேவதை சிலையின் நெற்றியில் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



வழங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை தராசு குறிக்கிறது.


மேலும், புதிய நீதி தேவதை சிலையின் நெற்றியில் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 



இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் செயலாளரை நியமித்துள்ளனர்.


அந்தவகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பி.சி அனுர மத்தேகொடவையும், துணைத் தலைவராக பி.சி ராசிக் சரூக்கையும் நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார்.


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கௌசல்ய நவரத்ன மற்றும் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இந்ததிஸ்ஸ ஆகியோர் பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

 



யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருமதி சரோஜினி இளங்கோவன் அவர்கள்.கடந்த  5 தசாப்தங்களாக வட இலங்கையில் சட்டத்தரணியாகத் தொழில் புரிந்து வருபவர்.  வட இலங்கையில் சிரேஸ்ட வழக்கறிஞர்ளில் இவரும் ஒருவர்.இவரிடம் 35 கனிஸ்ட சட்டத்தரணிகள் பணி புரிந்துள்ளார்கள்.மல்லாகம் நீதிமன்ற நீதிபதியாகவும் தொழில்பட்டவர்.37 வருடங்களின் பின்னர்,மீள் உருவாக்கம் பெற்ற ஊர் காவற்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்வர்.

சட்டத்துறையில் இவர் 50 வருட காலங்களில் ஆற்றிய சமூகஞ்சார் அரும் பணிகளைக் கௌரவிக்கும் முகமாகஈ அண்மையில், யாழ்ப்பாணத்தில் பொன் விழாக் பொண்டாட்டம் இடம்பெற்றது. இதில்,  நீதிபதிகள், சட்டத்தரணிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சட்டத்துறையில் பொன் விழாக் காணும்,சிரேஷ்ட சட்டத்தரணி சரோஜினிதேவி இளங்கோவன் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் பணிபுரிய www.ceylon24.com குழுமம் சார்பில் நாமும் வாழ்த்துகின்றோம்!


 


இலங்கையில் சித்திரவதைகளை கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் தடுப்பது தொடர்பான செயலமர்வு.


அம்பாறை மொண்டி உணவகத்தில் இன்று காலை 2023.07.22 முதல் இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட சட்டத்தரணிகள்  கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.