Showing posts with label Law. Show all posts



இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பராட்டே சட்டம் (Parate Law) இன்று (01) முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 


நபர் ஒருவர் வங்கியில் அடகு வைத்த சொத்தை மீட்கவில்லை என்றால், அந்த சொத்துகளை பகிரங்க ஏலத்தில் விற்று, அதன் மூலம் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டி தொகையை மீட்டெடுக்கும் வகையில் இந்த பராட்டே சட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்த சட்டம் பொருளாதார நெருக்கடியின் போது (2022-2023) தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள்  சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

 யாழ்.காரைநகரை பிறப்பிடமாக கொண்ட இவர் கொழும்பு பல்கலை கழகத்தில் 2005ம் ஆண்டு சட்டமானி பட்டத்தினையும் 2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டதரணியாக பதவி ஏற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அப்துல்சலாம் யாசீம்

 



சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிஸின் (LSMM) ஏற்பாட்டில் இலங்கை சட்டக் கல்லூரியில் பெப்ரவரி 20ஆம் திகதி (Ghazal'24) கசல் ‘24’ எனும் கலாசார நிகழ்வோடு  57வது மீஸான் சஞ்சிகை வெளியீட்டு விழா நடைபெற்றது. மாலை 4:00 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில், சட்டப் புலமை மற்றும் கலாச்சார வெளிப்பாடு ஆகிய இரண்டையும் கொண்டாடும் வகையில் நீதித்துறைப் பிரமுகர்கள், சட்ட அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர்  ஒன்றுகூடினர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை சமாதான சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா மற்றும்  நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் , நீதிபதி எம்.டி. லாஃபர் மற்றும் அவரது  நீதிபதி கே.எம்.ஜி.எச். குலத்துங்க,  இலங்கை சட்டக்கல்லூரியின் அதிபர் கலாநிதி பிரசாந்த லால் டி அல்விஸ் ஆகியோர்  பங்குபற்றினர்.

LSMM  75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அதேவேளையில் 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில் மீசான்  1962 ஆம் ஆண்டு A.M.M இன் தலைமையின் கீழ் முதன்முதலில் வெளியிடப்பட்டது. சட்டத்தரணி சுபைர் மற்றும் சட்டத்தரணி எம். தசூக்கி மொஹமட் ஆகியோரினதும் பங்களிப்பு இதில் அளப்பரியது.


இந்நிகழ்வில்  தலைமை உரையை ஆற்றிய கலாநிதி ஜெஹான் பெரேரா, நீதி மற்றும் சமத்துவத்தின் மீது கவனம் செலுத்தியதோடு நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கையை குறிப்பிட்டோடு உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் குறித்த கடந்தகால ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார். சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் பரிந்துரைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சொற்பொழிவைச் தொடர்ந்து அவரது  நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் சட்ட மற்றும் கல்வித் துறைகளில் பெண்கள் தலைமைப் பாத்திரங்களுக்கு உயர்வதைக் கண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும்  கமிஷன் அறிக்கையை உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்கைப் பற்றியும் புறநிலை உண்மையைத் தேடுவதில் அதன் முக்கியத்துவத்தையும்  எடுத்துக்காட்டினார்.


எதிர்பார்க்கப்பட்ட தருணமான மீசான் 57வது பதிப்பின் அதிகாரப்பூர்வ வெளியீட்டைத் தொடர்ந்து, நீதிபதி நவாஸுக்கு LSMM இன் தலைவர், செயலாளர் மற்றும் இதழாசிரியரினால் மீஸான் பிரதி  வழங்கப்பட்டது. கலாநிதி பிரசாந்த லால் டி அல்விஸ், தனது உரையில், இலங்கை சட்டக் கல்லூரியின் பாரம்பரியம் மற்றும் எதிர்கால சட்ட வல்லுனர்களிடையே நீதி மற்றும் சமத்துவத்தை வளர்ப்பதில் சட்டக் கல்வியின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார். பத்திரிகையின் மதிப்புரை தொடர்பில்  திரு. எம்.ஏ.எம். ஹக்கீம் (கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் , சட்டத்தரணி)  நுண்ணறிவு விமர்சனத்தை வழங்கினார்.

இறுதியில் கசல் '24   கலைக் கூறுகளைப் புகுத்திய இலக்கியம் மற்றும் இசை ஆகியவற்றைக் கலந்த புதுமைப்படைப்பின் வெளியீடு இனிதே நிறைவுற்றது.

 



இந்தியாவில் பழைய ‘நீதி தேவதை’யை அகற்றிவிட்டு திறக்கப்பட்ட கண்களுடன், அரசியல் சாசன புத்தகத்தை ஏந்திய ‘நீதி தேவதை’யின் புதிய சி லையை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நேற்று (16) திறந்து வைத்துள்ளார்.


காலனித்துவ பாரம்பரியத்தை அகற்றும் முயற்சியாக, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் கருப்புத் துணியால் கண்கள் கட்டப்பட்டு, கையில் வாளுடன் இருந்த பழைய நீதி தேவதை சிலை அகற்றப்பட்டுள்ளது.


நீதி தேவதையின் கண்கள் மூடப்பட்டதற்கான காரணம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், நீதி என்பது பணம், அரசியலுக்கு அப்பாற்பட்டது, இது எதுவும் நீதியை பாதிக்கக் கூடாது என்பதாகும்.


மேலும், நீதி தேவதையின் இடது கையில் உள்ள வாள், வரலாற்று ரீதியில் அநீதியை தண்டிக்கவும், அதிகாரத்தை நிலை நாட்டுவதையும் குறிக்கிறது.


புதிதாக திறக்கப்பட்டுள்ள நீதி தேவதை சிலையின் இடது கையில் வாளுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீதி தேவதை கண்ணில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணியும் அகற்றப்பட்டு, கண்கள் திறந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


நீதியை வழங்குவதற்கு வாள் தேவையில்லை, அரசியலமைப்பு சாசனம்தான் தேவை என்பதை புதிய நீதி தேவதை சிலை குறிக்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், பழைய சிலையின் வலது கையில் இடம்பெற்றிருந்த தராசு, புதிய சிலையிலும் இடம்பெற்றுள்ளது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை தராசு குறிக்கிறது.


மேலும், புதிய நீதி தேவதை சிலையின் நெற்றியில் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



வழங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை தராசு குறிக்கிறது.


மேலும், புதிய நீதி தேவதை சிலையின் நெற்றியில் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 



இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் செயலாளரை நியமித்துள்ளனர்.


அந்தவகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பி.சி அனுர மத்தேகொடவையும், துணைத் தலைவராக பி.சி ராசிக் சரூக்கையும் நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார்.


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கௌசல்ய நவரத்ன மற்றும் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இந்ததிஸ்ஸ ஆகியோர் பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

 



யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருமதி சரோஜினி இளங்கோவன் அவர்கள்.கடந்த  5 தசாப்தங்களாக வட இலங்கையில் சட்டத்தரணியாகத் தொழில் புரிந்து வருபவர்.  வட இலங்கையில் சிரேஸ்ட வழக்கறிஞர்ளில் இவரும் ஒருவர்.இவரிடம் 35 கனிஸ்ட சட்டத்தரணிகள் பணி புரிந்துள்ளார்கள்.மல்லாகம் நீதிமன்ற நீதிபதியாகவும் தொழில்பட்டவர்.37 வருடங்களின் பின்னர்,மீள் உருவாக்கம் பெற்ற ஊர் காவற்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்வர்.

சட்டத்துறையில் இவர் 50 வருட காலங்களில் ஆற்றிய சமூகஞ்சார் அரும் பணிகளைக் கௌரவிக்கும் முகமாகஈ அண்மையில், யாழ்ப்பாணத்தில் பொன் விழாக் பொண்டாட்டம் இடம்பெற்றது. இதில்,  நீதிபதிகள், சட்டத்தரணிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சட்டத்துறையில் பொன் விழாக் காணும்,சிரேஷ்ட சட்டத்தரணி சரோஜினிதேவி இளங்கோவன் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் பணிபுரிய www.ceylon24.com குழுமம் சார்பில் நாமும் வாழ்த்துகின்றோம்!


 


இலங்கையில் சித்திரவதைகளை கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் தடுப்பது தொடர்பான செயலமர்வு.


அம்பாறை மொண்டி உணவகத்தில் இன்று காலை 2023.07.22 முதல் இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட சட்டத்தரணிகள்  கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.