Showing posts with label Central. Show all posts

 



இந்த நாட்களில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.


நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்தில் பராமரிக்க குறித்த வான் கதவு திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.


அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள நுவரெலியா சினிசிட்டா  மண்டபத்தில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக இன்று (08) பிற்பகல் சென்று, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி  அவர்களின் தேவைகள் மற்றும்  தகவல்களை கேட்டறிந்து கொண்டார்.

 மலையக நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 8 உடல்களை மீட்க #UAE பேரிடர் நிவாரணக் குழு இன்று உதவியது.


@UAEEmbColombo ஆதரவுக்கு நன்றி 
#cycloneditwa | #Srilanka


 🔴 கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டு தற்போதுள்ள நிலையிலிருந்து விரைவாக மீண்டுவருவது குறித்து ஆலோசனை நடாத்தினார், இதன்போது இந்த ஒரு மாதகாலத்தில் சாதாரண அரச நடவடிக்கைகளில் இருந்து விலகி அனைத்து அரச இயந்திரங்களுடனும் இணைந்து துரிதமாக செயற்படுமாறும் அழைப்பு விடுத்தார்.


#AKD #srilanka #vaanamlk #SriLankaFloods

ண்டி - கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதி ஊடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் விற்பனை நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

 

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

மேலும் சில நபர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இவர்களை மீட்கும் நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், வீதியின் வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Comments
0

MOST READ
title

    இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

    Powered by Blogger.