Showing posts with label Central. Show all posts

 


Rep/ MIM.Aslam

அக்குறணையில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ, வரிசையிலுள்ள பல கடைகளுக்கும் பரவியுள்ளது #LKA 


AQL INTERNATIONAL SCHOOL 

MILANO BAKER'S ஆகிய நிறுவகங்கள் தீ இற்கு இரையாகி உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி - மாத்தளை (A9 வீதி) அக்குறணை நகரில் உள்ள கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீயினால் அக்குறணையில் இருந்து மூடப்பட்டது. 
வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்

 


கண்டி நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் வெடிகுண்டு காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கண்டி நீதிமன்றத்தின் வழக்கு நடவடிக்கைகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்திற்கு வருகை தந்த மக்களை பாதுகாப்புக்காக வெளியேற்றியுள்ளனர்.

வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவு, இராணுவம் மற்றும் பொலிஸார் சோதனை கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். (

 


கொழும்பிலிருந்து பதுளைக்கு சென்ற பொடி மெனிக்கே ரயிலின் இயந்திர பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக தெற்கின் பல இடங்களில் இயல்பு நிலை பாதித்துள்ளது.

 


இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் நுவரெலியா முக்கிய சுற்றுலா நகரமாக விளங்குகிறது. இதில் ஏப்ரல் மாதத்தில் ஆண்டுதோறும்

ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர் . சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரில் சுகாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.


குறிப்பாக நகரில் போதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாத நிலையில் குப்பைகளை கண்ட இடங்களில் வீசிச் செல்வதால் நகரம் அசுத்தப்பட்டு சுகாதார சீர்கேடான நிலையில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இவ்விடயத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் நுவரெலியா மாநகரசபை சற்று பின்தங்கியுள்ளது.


நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் சென்று உணவு சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். பெரும்பாலானவர்கள் வாகனங்களில் வரும் நிலையில் வரும் போதே உணவை சமைத்து எடுத்து வருகின்றனர் .

 


ஹாலிஎல எஸ்டேட் வீட்டின் கூரையில் சுமார் 50 கிலோ எடையுள்ள ஆலங்கட்டி மழை விழுந்தது. அது கரைந்து தரையில் எடுக்கப்பட்ட போது 5 கிலோ துண்டு இருந்தது.

மேற்கூரை பலத்த சேதமடைந்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
#இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் கூறுகையில், இது எல்காவில் மிகவும் அரிதான நிலை.


 Photographic credit  goes /Yannik Tissera

இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டத்தில் புகைப்படக் கலைஞர் யானிக் திசேரா (Yannik Tissera) 12 விலங்கு இனங்களை இணைத்து புகைப்படம் எடுத்துள்ளார், ஒவ்வொன்றும் ஜனவரியில் மூன்று வாரங்களில் வெவ்வேறு நாட்களில் trap camera வைத்து பதிவு செய்யப்பட்டது

 


கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்தார்

 


மண்சரிவு காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் அந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 




இலங்கைகு, இந்திய அரசாங்கத்தினால், மேலும் பத்தாயிரம்  வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது என்பதாக மலையகம் 200 என்ற விழாவில் கலந்து கொண்ட  இந்திய மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீத்தாராமன்  இன்று தெரிவித்துள்ளார்.

 


இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம ஒலி 


கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் பூமிக்கு கீழ் அசாதாரண சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.


இதன் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

 


கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெவெல்தெனிய தித்தவேல்மங்கட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து  மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 15 பேர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் வெலிமடை - கொழும்பு பேருந்தில் பயணித்தவர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட  கிழக்கு  ஆளுநர் செந்தில் தொண்டமான்! !



கவரகல தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தால் சேதமடைந்த வீடுகளை இ.தொ.கா.வின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.


அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன்னர் வழங்கிய கூரைத்தகடுகளை அம்மக்களுக்கு உடனடியாக வழங்குமாறும், தீயினால் சேதமடைந்த வீடுகளின் பழுதுபார்க்கும் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டு வருமாறும் தோட்ட நிர்வாகத்திற்கு அவர் பணிப்புரையும் விடுத்தார்.

 


உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து – சாரதி பலி

 


பூண்டுலோயா - துனுகேதெனிய பகுதியில் பஸ் விபத்திற்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

 


தொல்லியல் இடிபாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி குருந்துர் மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டது. 


சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு நீதிபதி இன்று தளத்திற்கு விஜயம் செய்தனர்


 ஹந்தானை மலையில் ஏற வந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (01) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி தாக்கியதில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் காயமடைந்ததாகவும், அவர்களை பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து 1990 அம்புலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீபே பல்கலைக்கழக மாணவர்கள் 276 பேரும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேரும் ஹந்தானை மலையில் ஏற  வந்துள்ளதாகவும் ஏனைய மாணவர்கள் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



🔴பேராதெனிய பல்கலைக்கழகத்தை பார்வையிட வந்துள்ள மக்கள் கூட்டம் , தற்போதைய நிலை


80 வருடங்களை பூர்த்தி செய்வதையொட்டி பேராதெனிய பல்கலைக்கழகம் இன்று முதல் பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.