Teacher Center ல் பணியாற்றிய நிலாஸ் சகோதரர் ரியாத்தில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று
பாவங்களை மன்னித்து மேலான
#ஜன்னத்துல்_பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲
அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲
🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ
⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷
🄷🄾🅃🄻🄸🄽🄴
0773024111
0742421818 வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று
பாவங்களை மன்னித்து மேலான
#ஜன்னத்துல்_பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲
அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲
🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ
⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷
🄷🄾🅃🄻🄸🄽🄴
0773024111
0742421818வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று
பாவங்களை மன்னித்து மேலான
#ஜன்னத்துல்_பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲
அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲
🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ
⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷
🄷🄾🅃🄻🄸🄽🄴
0773024111
0742421818
சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி , நேற்று மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார்.
ஆசிரியர் சண்முகவேல் பிரஷாந்தி, கலை இலக்கிய ஆர்வமிக்க ஒருவராக திகழ்ந்தவராவர் . சிறந்த குரல் வளமிக்க பாடகியும் அனைத்து இசைகருவிகளையும் இசைக்கும் திறமையான இசை ஞானம் கொண்டவர் இசையமைப்பில் அதீத ஆர்வத்தோடு புத்தாக்கமிக்கவராக புதிய படைப்புகளை உருவாக்க கூடியவர்,
இந்திய முன்னணி இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், தீனா , ஆகியோரது பாராட்டையும் பெற்றவர் ,
அன்மையில் நாட்டில் ஏற்பட்ட ' தித்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் நாட்டையும் மக்களையும் மீளெழுச்சி பெரும் நோக்கில் தனது தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கிய "Rebuild Sri Lanka " எனும் ஆங்கிலம் ,சிங்களம் ,தமிழ் , என மும்மொழியில் தானே பாடி இசையமைத்து பாடல் ஒன்றினை வெளியிட்டார்.
அதுபோல கடந்த காலங்களில் பல்வேறுபட்ட பாடல் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவரது பாடல் தொகுப்பானது சமூக ஊடகங்களிலும் சமுக ஆர்வலர்கள் மற்றும் கலை உலகத்தினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடதக்கது. இதுபோன்று மேலும் எதிர்வரும் காலங்களில் பல்வேறுபட்ட பாடல் தொகுப்புகள் அடங்கிய அல்பம்களையும் வெளியீடு செய்வதற்கான ஆர்வத்தோடு தயாராகியிருந்தார்,
தீராத இசை ஆர்வமிக்க படைப்பாளியாகவும் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்த செல்வி சண்முகவேல் பிரஷாந்தினியின் இழப்பு, மலையக கல்வி சமூகத்திற்கும் கலை உலகிற்கும் பெரும் பேரிழப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.
-தலவாக்கலை குணா-
UpDated.
அம்பாறை-சியம்பலாண்டுவ சாலையில் பரணிகம பகுதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், இன்று (14) நடந்த விபத்தைத் தொடர்ந்து துரதிர்ஷ்டவசமாக முன்னால் வந்த லாரியுடன் மோதியது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள், இருவர் சென்ற மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றுடன் மோதி விபத்து நிகழந்துள்ளது.
இதில் அக்கரைப்பற்று அபுசாலி வீதி அருகில் வசித்து வந்த சேர்ந்த நுஸ்ரத் என்பவரும், டீன்ஸ் வீதியைச் சேர்ந்த சிமாஸ் என்பவரும் உயிரிழந்துள்ளார்கள்.
அக்கரைப்பற்றில் அண்மைய நிகழ்ந்த விபத்தினால், கடுங்காயமுற்ற , முச்சக்கர வண்டிச் சாரதி சகோதரர் பைறூன் இன்று அதிகாலை அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலை அதி.தீவிர சிகிச்சைப். பிரிவில், காலமானார்.
இவர், நிலூபா ( தாதி உத்தியோகத்தர் ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று) அவர்களின் அன்பு கணவரும்
ஸைனா
ஹாமித்
ஹைதா
ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்
நல்லடக்க விபரம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
வடக்கு- கிழக்கு மாகாணங்களின் கல்வி அமைச்சின் முன்னாள் கல்வி செயலாளர்.
அல்- ஹாஜ்.எம்.ஏ.சி. முகைதீன் சற்று முன் கொழும்பில் காலமாகினார். மரணிக்கும்
சமயம் இவரது வயது 88 ஆகும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
இராஜி ஊன்.
அன்னார் அக்கரைப்பற்றை பிறப்பிடமாக
கொண்டும் சாய்ந்தமருதுவில் புகுவிடமாக
கொண்டவர். அரச சேவையிலிருந்து ஓய்வு
பெற்ற பின் கொழும்பு தெஹிவளையில்
வசித்து வந்தார்.
இலங்கை கல்வி நிருவாக சேவையின் மிக
மூத்த அதிகாரியான இவர் அம்பாறை,
கல்முனை, மட்டக்களப்பு மாவட்டங்களில்
பிரதம கல்வி அதிகாரியாகவும் மன்னார்
மாவட்டக் கல்விப்பணிப்பாளராகவும்கடமை
புரிந்ததுடன் கொழும்பு கல்வியமைச்சிலும்
சிறிது காலம் கடமையாற்றினார்.
அக்கரைப்பற்று மத்திய கல்லூரி, காத்தான்
குடி மத்திய கல்லூரிஆகியவற்றில்பட்டதாரி
ஆசிரியராக கடமையாற்றி அக்கரைப்பற்று
மத்திய கல்லூரியின் அதிபராகவும் கடமை
புரிந்தார்.
வடக்கு- கிழக்கு மாகாண கல்வி செயலராக
கடமையாற்றிய சமயம் மாகாண கல்வி
அமைச்சுக்கான தனியான கட்டிடமொன்றை
அமைத்தார். அதே போல் கிழக்கு மாகாணத்
தில் முதலாவது தேசிய பாடசாலையாக
அக்கரைப்பற்று மத்திய கல்லூரியை உரு
வாக்க கால்கோளாக இருந்தார்.
வடக்கு- கிழக்கு மாகாண விவசாய, கூட்டு
றவு அமைச்சின் செயலாளராகவும் , வகிமா
முகாமைத்து பயிற்சி நிறுவன பணிப்பாளர்
ஆகவும் சிறிது காலம் கடமையாற்றினார்.
அரசியல்வாதிகளுக்கு அடிபணியாத ஒரு
உயர் அதிகாரி.தனக்கு எது நியாயமெனப்
பட்டதோ அதை துணிந்து செய்தார். இவர்
மும்மொழி வித்தகர். இவரது காலதாதில்
தான் வடகிழக்கில் ஆயிரக்கணக்கானவர்
களுக்கு தொண்டர் பயிலுனர் ஆசிரியர்
நியமனத்தை வழங்கினார்.
அரச தாபனக்கோவை, பொதுநிருவாக
சுற்று நிருபங்கள், நிதிப்பிரமாணம் ஆகிய வற்றை துறை போகக் கற்றவர்.
சாய்ந்தமருதுவை சேர்ந்தஅகமதுதுரையின்
மருமகனான இவர்மௌலவியாநஜீமாவின்
( ஓய்வு பெற்ற ஆசிரியை) கணவனான
இவர் 05 பிள்ளைகளின் தந்தையார் ஆவார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை முன்னாள் அத்தியட்சகர்,முன்னாள் சுகாதார வைத்திய அதிகாரி Dr. Jahfer (MBBS) சற்று முன்னர் கொழும்பில் வபாத்தானார்.
இவர் தம்பி போடியாரின் மகனும், இஸ்மாயில் ஸ்ரோர்ஸ் இன் மருமகனும், Eng. Haarun, Prof. Muzaathik, Eng.Rasaak, Asroff (Bsc)ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவரது ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னாலில்லாஹ்
அக்கரைப்பற்று 12 உபதபாலக வீதி முதலாம் குறுக்கு தெருவை (#மாநகரசபை_முன்_வீதி ) சேர்ந்த
#ஒஸாமா (23 வயது) அவர்கள் வபாத்தானார்கள்.
#இன்னாலில்லாஹி_வ_இன் னா_இலைஹி_ராஜிஊன்
இவர்
#அஸ்மி Azmy Abdul Cader மற்றும்
#நிம்ஸா தம்பதியினரின் அன்பு #மகனும்
#ஹம்தான்
#நதா
#லுக்மான்
ஆகியோரின் அன்பு
#சகோதரரும்
Saneej Ahamed அவர்களின் #மருமகனும்
மர்ஹும் சுபைத்தீன் மாஸ்டர் (#SAFCO_SUBAIDEEN) அவர்களின் மருமகளின் மகனும்
Naleer Abdul Cader
ஆகியோரின் சகோதாரரின் மகனும் ஆவார்.
#ஜனாஸா_
#அம்பாரை_வைத்தியாசலைய ல் உள்ளது
நல்லடக்கம் பற்றி இன்ஷா அல்லாஹ்! பின்னர் அறிவிக்கப்படும்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிந்தவூர் நீர்வழங்கல் திட்ட காரியாலயத்தில் மாணி வாசிப்பாளராக கடமையாற்றும்
அக்கரைப்பற்றைச் சேர்ந்த Mia Juman அவர்களின் அன்பு மகனார் அக்சத் அலி (தரம் -04 பாடசாலை மாணவர்) இன்று (27) இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.
#இன்னாலில்லாஹி_வ_இன் னா_இலைஹி_ராஜிஊன்
இறைவா, அந்த பச்சிளம் சிறுவனது நற்கிரிகைகளை ஏற்று மேலான
#ஜன்னத்துல்_பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக...
அவரின், பெற்றோர், சகோதர்கள் மற்றும் குடும்பத்திற்கு பொறுமையையும் வழங்குவாயாக ஆமீன்.
ஜனாஸா நல்லடக்கம் காலை 10:00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள பட்டின பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
(Rep/Fathima Safnaaz(AA.L)
கண்டி உடதவின்னயினைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி AM.வைஸ் அவர்கள் இன்று பேராதனை வைத்தியசாலையில் காலமானார்.
சட்டத்தரணியாக கடந்த 3 தசாப்தங்களக்கு மேலாக தொழில் புரிந்து வந்த மர்ஹீம் வைஸ் சட்டதரணியாக, தேசிய சேமிப்பு வங்கியிலும், பின்பு மத்திய மாகாண சபையில் சட்ட ஆலோசகராகவம் பணிபுரிந்து வந்த மூத்த வழக்கறிஞர் ஆவார்.
அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தவர்களுக்கு www.ceylon24.com தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவரான ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப். MCM. ஜௌபர் JP அவர்கள் சற்று முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.
இ்ன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
اللهم اغفرله والرحمه.....
அன்னார் MJ. ஹஸனுல் ஜெஹீர் (Medical Final Year Student) அவர்களின் அன்பு தந்தையும், சம்மேளன உப தலைவர் ஜனாப். MAM. ஸுஹைர் B.Com (Accountant - RDA) அவர்களின் மச்சானும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் ஜனாப். MCM. அன்வர் அவர்களின் சகோதரரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கமானது இன்ஷா அள்ளாஹ் இன்றைய தினம் 2025.09.22 ஆம் திகதி இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து காத்தான்குடி - 01 மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காவும் ஈடேற்றத்திற்காகவும் இரு கரம் ஏந்தி பிரார்த்தித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஊடகப் பிரிவு,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் இயற்கை எய்தினார் .
திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர் மட்டக்களப்பு மக்களாலும் போதனா வைத்தியசாலை சமுகத்தாலும் பார்க்கப்படுகிறார். தனது வைத்தியத் திறமையினால் நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
அன்னாரின் இழப்புக்கு மட்டக்களப்பு மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர் ஆற்றிய சேவை அவரது ஆத்மாவை நிச்சயம் இறைவன் திருப்பாதம் சேர்க்கும்.
பொத்துவிலைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளரும், கவிஞரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஐ.ஆதம்லெப்பை அவர்கள் இன்று காலமானார்.
(எஸ்.எம்.அறூஸ்)
பொத்துவிலைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளரும், கவிஞரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஐ.ஆதம்லெப்பை அவர்கள் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார்இ ஆதம் கண்டு அலிமாக் கண்டு என்பவரது கணவரும் சட்டத்தரணி ஏ.எல் ஹில்மி, கிழக்கு மாகாண விவசாய, காணி நிர்வாகம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரம், மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, சட்டத்தரணி ஏ.எல்.பௌமி , ஏ எல் றிஸ்மி, மர்ஹூமா பாத்திமா றிஸ்னா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
பொத்துவில் பிரதேசத்தின் உயரிய குடும்பத்தில் பிறந்து கல்விப் புலத்திலும், இலக்கியப் புலத்திலும் சிறந்த ஆளுமையாக விளங்கியதுடன் அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக பணியாற்றி தனது பிரதேசத்தின் வளர்ச்சிக்காகவும், கல்வி முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் மர்ஹூம் ஆதம்லெப்பை அவர்களாகும்.
பொத்துவில் பிரதேசம் அம்பாரை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்தாலும் கல்வி,இலக்கியம், விளையாட்டு, அரசியல் ரீதியாக தேசிய பல அடைவுகளை ஏற்படுத்திய பலரும் பிறந்து வளர்ந்த மண்ணாகும். அந்த வகையில் தனது பல்துறை ஆற்றலினால் பொத்துவில் பிரதேசத்தை முதன்மைப்படுத்திய தலைவராக மர்ஹூம் ஆதம்லெப்பை பார்க்கப்படுகின்றார்.
இலங்கையின் பாடப்புத்தகத்தில் ஆதம்லெப்பை அவர்களின் வெண்ணிலா என்கின்ற கவிதை இடம்பெற்றுள்ளதையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களான இருந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆகியோருடன் மிக நெருக்கமாக செயற்பட்டு பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும், தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதிலும் முன்னின்று உழைத்த அரசியல் தலைவராவார்.
ஏழை,பணக்காரன் என்று வயது வித்தியாசமில்லாமல் எல்லோருடனும் அன்பாகப்பழகும் ஆதம்லெப்பை அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தான் பிறந்த மண்ணிற்கும், சமூகத்திற்கும் அளப்பரிய பணிகளை ஆற்றிய ஆதம்லெப்பை அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.