Showing posts with label Janaza. Show all posts



 சம்மாந்துறையைச் சேர்ந்தசட்டத்தரணியும், பிரசித்த நொத்தாரிசுமான *A.M.M.பிர்னாஸ்* அவர்களின் தந்தையும் *திருமணப் பதிவாளரும் சம்மாந்துறை தப்லீகுல் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஹசனார் மௌலவி* நேற்று சனிக்கிழமை காலமானார்.


 அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை ளுகர் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும்.






அக்கரைப்பற்று 5/6 பொது வீதியைச் சேர்ந்த இர்ஷாத் ஓய்வு பெற்ற ஆசிரியர் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.


இவர் அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் ஆரம்பகால உறுப்பினரும் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகருமாவார்


சகோதரி செல்வியின் அன்பு கணவரும் 


அப்துல் கபூர் சேரின் (முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி,)

முர்சலீன் ஆசிரியர்

ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்



காத்தான்குடி ஜாமியத்துல்  பலாஹ்  அரபுக் கல்லூரியில் முதற்கால பகுதிகளில் ஹாபிழ் பட்டம் பெற்ற காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின்  உறுப்பினர் பாலமுனையைச் சேர்ந்த பி PTM. அலியார்  ஹாபிழ் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னார் இலங்கையின் பல பாகங்களில் நிர்வகிக்கப்படும் அல்குர்ஆன் மனன பீடங்களின் உஸ்தாதாக இருந்து 100க்கும் மேற்பட்ட அல்குர்ஆனை சுமந்த ஹாபிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.


அமைதியான நடையும் முகத்தில் புன் சிரிப்பும் எளிமையான வாழ்வும் அவரது உயர்வுக்கு காரணமாக அமைந்தது


 அவர்களது சகல பாவங்களையும் மன்னித்து கிருபை செய்து வல்ல அல்லாஹ் சுவனபதியை நசீபாக்குவானாக


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 


 மர்ஹூம்  அல்ஹாபிழ் PTM. அலியார் அவர்களின் ஜனாஸா தொழுகை 22.06.2024 சனிக்கிழமை காலை 08.00am க்கு பாலமுனை நடுவோடை மீரா ஜும்மா பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


தலைவர்/ செயலாளர்

ஆலோசனைக்கும் வழிகாட்டல் குமார ஆலீம்கள் அழைப்பு காத்

 

#Rep/NT.Mashoor.
மரண அறிவித்தல்.


ஹாதீ ட்ரவல்ஸ் நிறுவனத்தின் ஊடாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் என்பவர் இன்று காலை 8 மணியளவில் காலமானார்.

انا لله وانا اليه راجعون


இவருடைய மரணம் மக்கா கிங் அப்துல் அஸீஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.


அறஃபா மினாவில் நிறைவேற்றப்பட வேண்டிய ஹஜ் கடமைகளை பூர்த்தி செய்த பின்னர், இறுதியாக ஹஜ்ஜுடைய தவாஃபுக்காக வேண்டி மக்கா திரும்பிய நிலையிலே இவருடைய திடீர் மரணம் சம்பவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஹஜ் கடமைகளின் இடைநடுவே காலமான அன்னாரை வல்ல நாயன் ஷுஹதாக்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக!

ஆமீன்.

 


*ஜனாஸா அறிவித்தல்*


*2024/6/5*


அக்கரைப்பற்று 10

டீன்ஸ் வீதியில் வசித்துவரும் சித்தி பஸீறா வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


ஹாசிம் (மீன் வியாபாரி மார்கெட் அக்கரைப்பற்று) ன் அன்பு மனைவியும் 


ஹாபிழ் சித்தீக் மௌலவி 

(தலைவர் ஜம்மியத்துல் உலமா சபை அக்கரைப்பற்று)

றிம்ஸான்

பௌமி (மர ஆலை )

ஆகியோரின் அன்பு தாயாரும்


ஜிப்ரி (Rtd எக்கவுண்டன்)

பரீட் (டெய்லர்)

றபீக்

சித்தி பரீதா

றகுமா

சல்மா

உசைமா

நபீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


வீடு:- யூனியன் வீதியும் டீன்ஸ் வீதியும் சந்திப்பில்


மேலதிக விபரங்களுக்கு 776555183 ஹமீட் அலி (IPHS)


 பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவின் தாயார் பிரிடா ஜயசூரிய காலமானார்.


இவர் தனது 80வது வயதில் அவரின் தனது சொந்த ஊரான மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.


இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக அமெரிக்கா சென்றிருந்தபோது தனது தாயார் காலமானா செய்தியை அறிந்த நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை மாத்தறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


 


அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அமைத்தவர் அலி ரசா அவர்களின் உம்மம்மா இன்று காலமானார்.

*ஜனாஸா அறிவித்தல்*


2/6/2024


அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியில் வசித்துவரும் மரியம் வீவி வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


இவர் மரணித்த உதுமாலெப்பை (கிளாக்கர்) இன் அன்பு மனைவியும்


கலீல் ஆசிரியர் (அமெரிக்கா)

முக்தார் (மார்கெட் அக்கரைப்பற்று)

அக்கீம் ஓய்வு பெற்ற ஆசிரியர்

சபறுல்லாஹ்

அமினுதீன் (மார்கெட் அக்கரைப்பற்று)

நௌஷாட் ( MR CLARK SERVICE)

ஆகியோரின் அன்பு தாயாரும்


இஸ்ஸதீன் (பெயிண்ட் கடை) இன் மாமியாரும்


அலி றஷா (சட்டத்தரணி) உம்மம்மாவும் ஆவார்கள் 


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்

 


*ஜனாஸா அறிவித்தல்*


அக்கரைப்பற்று கிழக்கு வீதி, கோயா சந்தியில் வசித்துவரும் றபீக் (சியான் றபீக்- ஓய்வு பெற்ற SP ஓபீஸ் கணக்காளர்) காலமானார்


இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


சியான் ( வோட்டர் போட்)

சிபிலி

சறோ

சிபானா ஆகியோரின் அன்புத் தந்தையும்


மரணித்த OM.இஸ்மாயிலின் அன்பு மருமகனும் 


ஜிப்ரி காரியப்பர்

(Rtd; ஆசிரியர்)

டொக்டர் ஜப்பார்

டொக்டர் பஷீர் (ஜௌபர்) ஆகியோரின் அன்புச் சகலனும்


அஷ்ரப்

ஜுனைதீன் (இஸ்மாயில் ஸ்டோர்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்கள்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


NT.M


சிரேஷ்ட சட்டத்தரணி காமினி மாரப்பன காலமானார்.


சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று (25) காலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.


காமினி மாரப்பன முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பனவின் சகோதரர் ஆவார்.


சட்டத்தரணி காமினி மாரப்பன பல சர்ச்சைக்குரிய வழக்குகளை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணியாகக் கருதப்படுகிறார்.


2021ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் தலைவராக அவரை நியமித்தார்.


மறைந்த காமினி மாரப்பனவின் இறுதிக் கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 


ஒலுவில், பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை மரணித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், பர்வத் உமர் உஸ்மான் என்னும் ஆண் குழந்தை ஆகும்


 அக்கரைப்பற்று பட்டியடிப்பட்டியில் தனது சகோதரான 5 வயதுச் சிறுவரினம் இருந்து விழுந்த குழந்தை மட்டக்களப்பு வைத்தியசாலையில், மரணித்துள்ளது.

குறித்த மரணித்தவர் 3 வயது நிரம்பிய ஹாலிக் என்பதாக தெரியவருகிறது. தனது மூத்த சகோதரனான 3 வயதுக் குழந்தையை இடுப்பில் வைத்திருந்த வேளையில், குறித்த இந்த சிறிய  குழந்தை தவறி விழுந்து அக்கரைப்பற்று கல்முனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, மட்டக்களப்பு வைத்தியசாலையில், சத்திர சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தது.


 (வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர். எஸ் எம் எம்.
உமர் மௌலானா இன்று (10) வெள்ளிக்கிழமை காலமானார் .

மருதமுனையைச் சேர்ந்த பணிப்பாளர் உமர் மௌலானா திடீர் சுகவீனமுற்று 
கடந்த ஒரு சில தினங்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் பனிரெண்டு மணி அளவில் காலமானார்.

டாக்டர் உமர் மௌலானா 1984 இல் ஆசிரியராக நியமனம் பெற்று அதிபராக பிரதிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி வந்தார்.

2007 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார்.

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபராக சீரிய சேவையாற்றியிருந்தார்.

 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் ஒன்பதாவது  பணிப்பாளராக 20.01. 2023 சேவையில் இணைந்தார் .
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 60 வயதில் ஓய்வு பெறவிருந்தார்.

சம்மாந்துறை வலயத்தில் 15 மாதங்கள் கடமையாற்றி வந்தவேளையில் இன்று இம் மரணம் சம்பவித்திருக்கின்றது.

 சம்மாந்துறை வலய கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் கல்விசார் கவ்வி சாரா ஊழியர்கள் மாணவர் அனைவரும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகிறார்கள்.




அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் கரீம் கியாஸ் என்பவர் இன்று வபாத்தாஹியுள்ளார்.


*انا لله وانا اليه راجعون*


அன்னார்..


✓மர்ஹும் அப்துல் கரீம் GS (மறைகாம் விதானை)

 ✓ குழந்தையும்மா (பாத்திமா)

ஆகியோரின் மகனும்


✓மர்ஹும் நஜிமுதீன் (DS)

✓ சிறாஜ் (ADR)

✓ நியாஸ் (ACN)

✓ சல்மா

✓ நைமா 

✓ ஜரீனா   

என்பவர்களின் சாகோதருமாவார்


மற்றும்..

✓ உபைத்துள்ளா Lecture 

✓சலீம் GS 

✓மர்ஹும் ஹுசைன் TA

ஆகியோரின் மச்சானும் ஆவார் 


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

 




அக்கரைப்பற்று யூனியன் வீதியில் வசித்துவரும் மக்கீன் மாஸ்டர் வபாத் ஆனார்கள் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


றபா ஆசிரியர்

றமீஸா டீச்சர்

றூஸா

ஜீனா டீச்சரின் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்


றிபாய் (ஓய்வு பெற்ற AO

ஹாறூன் ஆசிரியர்

மர்ஹும் ஹாசிம் (MBS)

ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


வீடு:- அஸ்ஸாஹிறா பாடசாலைக்கு முன்

 


அட்டாளைச்சேனை 04 ஆம் பிரிவை  வசிப்பிடமாகக் கொண்டிருந்த கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மூத்த ஆலிம் மௌலவி ஏ. ஸீ.முகம்மது (பாகவி) இன்று கிண்ணியாவில் காலமானார்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னாரின் ஜனாஸா கிண்ணியா துறையடி வீதியிலுள்ள அவரது மகன் முகம்மது இர்பான் அவர்களது இல்லத்திலிருந்து அசர் தொழுகையுடன் ரஹ்மாணியா ஜும்மா பள்ளிவாசலில்  தொழுகை நடாத்தப்படு ரஹ்மானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.                 அன்னாருக்காக துஆ செய்துகொள்ளுங்கள்!  அன்னாரின்  மறுமை  வாழ்விற்காக பிராத்திப்போம் இரக்கமுள்ள ரஹ்மானே! இவர் முற்படுத்திவைத்த எல்லா நல்லமல்களையும் அங்கீகரித்து, அருள் புரிந்தும் விடுவாயாக  ‎اَللّهُمَّ اغْفِرْ لَه وَارْحَمْه وَعَافِهِ وَاعْفُ عَنْه وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبر  இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!  ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!   (ஹதீஸ் : முஸ்லிம்)





#Rep/KaderGS

ஜனாஸா


அக்கரைப்பற்று பிரதான வீதி (கடற்கரை வீதி) யை பிறப்பிடமாகவும்,


தெஹிவலையை வசிப்பிடமாகவும் கொண்ட


#முத்து_மீரா_லெப்பை #நபீஸா - (பூ உம்மா) வபாத்தானார்.


மர்ஹூம் இஸ்மாயில் மாஸ்டரின் மனைவியும் ஆவார். 


Hajiyani Nafeesa Ismail (Poo umma) of Akkaraippattu passed away.


loving mother of Hajiani Rinoza (United Motors),


Al Haj Riyaz (Mitec), and


Al Haj Fahmy (Technocity),


Nusha & Shahana.


Janasa lying at No. 14, School Avenue, Kalubowila, Dehiwala. 


Janaza prayers will be held

 In Sha Allah after Asar prayers on Saturday, 13th April 2024 at Dehiwala Grand Masjid.


Allahumma agfirlaha warahamha. 


May Allah grant her Jannathul firdouz.


Mohamed Murshid Mohamed Musthapha

Marzook K Lebbe

 


ஜனாசா அறிவித்தல்!


Akkaraipattu 01 [TD - 01

#HYDER [#நூல்_கடை]

அவர்கள் 

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் 

காலமானார்.


அன்னார் மர்ஹும்.முஹம்மது அலியார் [#நூல்_கடை_மம்மலியார்] அவர்களின் #மகனும் 


#உவைஷா அவர்களின் 

#கணவரும் 


#AFRATH 

#RASEEN 

ஆகியோரின் 

#தந்தையாரும் 


#நயீம் [நயீம் சாப்]

#சமீம்[SAMEEM TRADERS - #பட்டோலைக்_கடை ]

#கஸ்ஸாலி [ஆசிரியர்]

#ஆரிஃப் [  Mufeetha Ariff ]

ஆகியோரின் 

#சகோதரரும் 


#மசூர் [Manager - RDB Mashoor Mohamed ]

#அஷ்ரப் [ஆசிரியர் ]

ஆகியோரின் 

#சகலனும் 


#பைரூஸ் 

#முபீஸ் 

#உவைஸ் 

[Sun City Marketing / Battery கடை ]

சகோதரர்களின் 

#மச்சானும் 

ஆவார்.


ஜனாசா கொழும்பில் உள்ளது 

#நல்லடக்கம் இரவு 10.30 இற்கு இடம்பெறும்.


 ஜனாஸா அறிவித்தல்*!!

அட்டாளைச்சேனை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவர் மௌலவி PT. அபுல் ஹஸன் (ஷர்க்கி) ஹஸ்ரத் அவர்கள் இறைவனின் அழைப்பில் மறு உலகபயணத்தை தொடர்ந்தார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்!!




இலங்கை ஜமாஅத் இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் ,ஆயிஷா சித்தீகா கலாபீடத்தின் ஸ்தாபகத் தலைவருமான மெளலவி I.L.M.இப்றாகீம் அவர்கள் வபாத்தானார்கள். 


இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர், ஆயிஷா சித்தீக்கா உயர்கல்வி கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர்


இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிஊன். 


இவர் அக்கரைப்பற்று ரயீஸ் முஸ்தபா டாக்டரின் Dr Rayes Musthafa மாமனாரும் ஆவார் 


●ஜனாஸா நல்லடக்கம்


அன்னாரின் ஜனாஸா கோட்டே ரோட், கோட்டே  941/26 இலக்க அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது  ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 4 மணியளவில் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 


ஜனாஸா அறிவித்தல்


நிந்தவூரைச் சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான எம். சஹாப்தீன் சேர் அவர்களின் அன்புத் தந்தை அல் ஹாஜ் முகம்மத் தம்பி மீரா சாஹிபு அவர்கள் இன்று வபாத்தாகியுள்ளார்.

இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி ராஜிஊன் 


2024-03-26


நிந்தவூர் 05 ம் குறிச்சி,  கிட்டங்கி வீதி, நயீம் மஹல்லாவைச் சேர்ந்த  அல் ஹாஜ் முகம்மத் தம்பி மீரா சாஹிபு ( சோக் மேசன்) அவர்கள் இன்று (2024-03-26)  செவ்வாய் கிழமை வபாத்தானார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் மர்ஹூம்களான முகம்மத் தம்பி  கலந்தர் நாச்சியின்   புதல்வரும் மர்ஹூம்மா  சாரா உம்மாவின் அன்புக் கணவரும்  ஊடகவியலாளரும் ஆசிரியருமான எம். சஹாப்தீன் ( மதீனா தேசிய பாடசாலை, நிந்தவூர்)  எம். மைனத்துல் சித்தினா, ஆசிரியை எம். விஸ்தினா ரியாஸ் ( அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை), எம். றிபாய்தீன்  (மேசன்) , எம். றசிதா றம்சானியா, எம். றசீலா பர்வின் ( அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் , நிந்தவூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும் உபைத்துல்லா (கட்டார்), றியாஸ் ( கல்முனை பிராந்திய சுகாதார காரியாலயம்), கியாஸ், ஹனீபா (மெனேஜர் கொவேகா இன்ஜினியரிங்) ஆகியோரின் அன்பு மாமனாரும் அல் ஹாஜ் ஏ. ஆப்தீன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)  அவர்களின் சிறிய தந்தையும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா    தொழுகை இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 7.00 மணியளவில் நயீம்  பள்ளிவாசலில் ஜனாஷா தொழுகை நடாத்தப்பட்டு றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அறிவிப்பவர்

மகன் ஆசிரியர் எம்.சஹாப்தீன்.

ஊடகவியலாளர் 

26.03.2024

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.