ரிஸ்கி ஷரீப் (𝐑𝐢𝐬𝐤𝐲 𝐒𝐡𝐚𝐫𝐞𝐞𝐟) காலமானார்
அக்கரைப்பற்று நகர் பிரிவு 4 டீன்ஸ் வீதியில் ல் வசித்துவரும் முர்சித் வபாத் ஆனார்கள் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்
இவர் கலீல் (ரேடியோ கடை) உவைஸா தம்பதியரின் அன்பு புதல்வரும்
ஜீனாஸின் அன்பு கணவரும்
சப்ராஸ் Y5 Hut அவர்களின் அன்பு சகோதரரும்
ஆவார்
ஜனாஸா தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ளது
நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார், அவருக்கு வயது 91.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அனைவராலும் கொண்டாடப்படும் எழுத்தாளராக மட்டுமல்லாமல், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
மலையாள எழுத்துலகில் முன்னோடியாகக் கருதப்படும் வாசுதேவன் நாயரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விளம்பரம்
சமூகப் பொறுப்புள்ள மாற்று சினிமாவின் முன்னோடி 'ஷியாம் பெனகல்'
ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்
இசைவாணி 6 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய ஐயப்பன் பாடல் இப்போது சர்ச்சையாவது ஏன்?
பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து 'நாம் மதமற்றவர்கள்' என்று 167 ஆண்டுக்கு முன்பே முழங்கிய 14 வயது சிறுமி
தீவிர வாசிப்பாளரான வாசுதேவன்
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் 1933-ம் ஆண்டு பிறந்த வாசுதேவன் நாயரின் குடும்பத்தில் வாசிப்பு என்பது ஊக்குவிக்கப்படவில்லை என்றாலும், அவர் தீவிர வாசிப்பாளராக இருந்தார். மிக இளம் வயதிலேயே எழுதத் தொடங்கினார். பல்வேறு இதழ்களில் அவருடைய படைப்புகள் வெளியாகின.
"என் வயதையொத்த சிறுவர்களை போன்று, எனக்கு விளையாட்டில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. நான் தனிமையில் விளையாடும் ஒரே விளையாட்டு 'எழுதுவதுதான்'," என 'அவுட்லுக்' இதழுக்கு அளித்த பேட்டியில் வாசுதேவன் நாயர் தெரிவித்திருந்தார்.
கல்லூரியில் வேதியியல் படித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு கணிதம் கற்பித்தார். பின்னர் அவர், புகழ்பெற்ற மாத்ருபூமி வார இதழில் பணிக்கு சேர்ந்தார். விரைவிலேயே, பல நாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, செய்தித்தாள்களில் கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள் மற்றும் பயணக் கட்டுரைகள் என, எழுத்தாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
பத்திரிகை ஆசிரியராக பல இளம் எழுத்தாளர்களை கண்டறிந்து, அவர்களின் எழுத்துகளை வெளியிட்டதற்காக வாசுதேவன் நாயர் அதிகம் பாராட்டப்படுகிறார். அந்த இளம் எழுத்தாளர்கள் பலர் தற்போது பிரபலமானவர்களாக உள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
25 டிசம்பர் 2024
கீழ்வெண்மணி: உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் - 1968, டிசம்பர் 25 அன்று இரவு நடந்தது என்ன?
3 மணி நேரங்களுக்கு முன்னர்
புகழ்பெற்ற புத்தகங்கள்
நாயரின் 'நாலுகெட்டு' எனும் நாவல், கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவருவது குறித்துப் பேசுகிறது. இந்த நாவலுக்கு 1959-ம் ஆண்டுக்கான கேரளாவின் உயர் இலக்கிய விருது கிடைத்தது. பத்தாண்டுகள் கழித்து, இந்த புத்தகத்தைத் தழுவி, அரசாங்கத்தின் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக படமாக எடுக்கப்பட்டது. அப்படத்திற்கு மாநில அரசின் விருது கிடைத்தது.
இந்து புராணமான மகாபாரதத்தை பீமன் கதாபாத்திரத்தின் வாயிலாக கூறிய 'ரந்தமூழம்' எனும் நாவல், இந்திய இலக்கியத்தில் மிக உன்னதமான படைப்பாகக் கருதப்படுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
தன்னுடைய வாழ்நாளில் ஞானபீடம் உள்ளிட்ட பல விருதுகளை அவர் வென்றுள்ளார்.
இலக்கியத்தைத் தாண்டி மலையாள சினிமாவில் திரைக்கதையாசிரியராகவும் இயக்குநராகவும் புகழ்பெற்று, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றுள்ளார்.
கேரளாவில் 16-ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட 'ஒரு வடக்கன் வீரகதா' திரைப்படத்தில், பிரபலமான நாட்டுப்புறக் கதையில் வில்லத்தனம் மற்றும் கௌரவம் ஆகியவை குறித்த பொதுவான கருத்தை கேள்விக்குட்படுத்தியிருப்பார்.
மிக வலுவான வசனங்கள் மற்றும் நடிப்புகளுடன் மலையாள சினிமாவின் மிகச்சிறந்த படமாக இது கருதப்படுகிறது.
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆடுகளம் யாருக்கு சாதகம்? இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என்ன?
25 டிசம்பர் 2024
மோதியுடன் மோகன் பாகவத் மறைமுக யுத்தமா? கோவில் - மசூதி பற்றிய பாகவத் பேச்சுக்கு துறவிகள் எதிர்ப்பு
25 டிசம்பர் 2024
பிரபலங்கள் கூறுவது என்ன?
சமீபத்தில் அவருடைய சிறுகதைகளை தழுவி, மனோரதங்கள் என்ற பெயரில் திரை-தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன் லால், ஃபஹத் ஃபாசில் போன்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
இந்த தொடரில் நடித்த மோகன்லால், நாயரை 'கேரளாவின் பெருமை' என்று அழைத்துள்ளார்.
"நீங்கள் எந்த ஒரு படத்திலும் அதன் வசனத்தை மாற்ற இயலும். ஆனால் எம்.டி.நாயரின் படத்தில் வரும் வசனங்களை மாற்ற இயலாது. ஏனெனில், கதையை புரிந்துகொள்வதற்கு அவரின் வசனங்கள் மிக முக்கியம்," என்றார் மோகன்லால்.
நேர்காணல்களில் வாசுதேவன் நாயர் பேசும் போது, அடிக்கடி அவர் படிக்கும் புத்தகங்கள் பற்றி பேசுவார்.
கடந்த ஆண்டு அவர் தன்னுடைய 90வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் படி எழுதிய கட்டுரையில், மாத்ரூபூமியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரேயம்ஸ் குமார், "வாசுதேவன் நாயர் எப்போதும் புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாசிப்பார்", என்று குறிப்பிட்டிருந்தார்.
"நான் உட்பட வருங்கால சந்ததியினர் நாயரிடம் இருந்து எதைக் கற்றுக்கொள்ளலாம் என்று யோசிப்பேன். அது நிச்சயமாக அவருடைய கவனம் சிதறாமல் இருக்கும் போக்கு தான். அவரை நான் பார்க்கும் போது, புத்தகங்களுடனே காணப்படுவார். அதில் மொத்தமாக மூழ்கி, கிட்டத்தட்ட ஒரு தவம் மேற்கொள்வது போல் புத்தகங்கள் படிப்பார். மார்குய்ஸ் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் மற்றுமின்றி, சமீப காலங்களில் வெளியான புத்தகங்களும் அவருடைய மேசையில் எப்போதும் இருக்கும்," என்று எழுதினார் ஸ்ரேயம்ஸ் குமார்.
பேராசிரியர் அச்சி முஹம்மது இஷாக்.
பேராசிரியர் அச்சிமுகம்மது இஷ்ஹாக் காலமானார். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ - ஏ. ஷபாஅத் அஹமட் - நிந்தவூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசிப்பவரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும், அட்டாளைச்சேனை அரபிக் கல்லூரியின் பொறுப்பாளருமான பேராசிரியர் அல்ஹாஜ். அச்சிமுகம்மது இஷ்ஹாக் அவர்கள் நேற்றிரவு புனித மக்காவில் இறையழைப்பை ஏற்றுக்கொண்டார். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன். தனது பேரப்பிள்ளைகள் சகிதம் புனித மக்காவில் உம்ரா கடமைகளை நிறைவு செய்த கையோடு இலங்கை நேரப்படி இரவு 8.00மணிக்கு அன்னாரின் உயிர் பிரிந்தது. அன்னாரின் ஜனாஸா தற்போது மக்கா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம் பூர்வாங்க நடவடிக்கைகளின் பின்னர் மக்காவிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் இஷ்ஹாக் அவர்கள் நிந்தவூரைச் சேர்ந்த மர்ஹும் முத்துமுகம்மது ஹாஜியார், கதீஜா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற நஸ்லி இஷ்ஹாக்கின் பாசமுள்ள கணவரும், காலஞ்சென்ற பொறியியலாளர் பஸீல் ஏ. மஜீத் அவர்களின் மருமகனும், மெரீனா அப்துல் மஜீத் மஹ்றூப் அவர்களின் மச்சானும், மரியத்தின் சகோதரரும், காலஞ்சென்ற உதவி அரசாங்க அதிபர் இப்றாலெவ்வையின் மைத்துனரும், அல்ஹாஜ். எம். ரி. ஏ. தௌபீக் (ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமாவார். அன்னாரின் மறுமை வாழ்வு பிரகாசமாய் அமைய நிந்தவூர் - எனது மண் பிரார்த்திக்கிறது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர்) காலமானார்'' என்று மியாட் மருத்துவமனை கூறியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னாள் ராஜாங்க அமைச்சரான சேகு இஸ்ஸதீன் அவர்களுடைய ஜனாஸா தொழுகை இன்று அக்கரைப்பற்று பட்டினின ஜும்மா பள்ளிவாயலில் தொழுகை நடத்தப்பட்டு பின்பு அ தைக்காதடி மையவாடியில் நல்லடக் கம் செய்யப்பட்டது. அக்கரைப்பற்றையும் அயல் கிராமத்தையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கண்ணீர் மல்கி உருகி பிரார்த்தித்து பிரியா விடை கொடுத்து அனுப்பினர் இறுதி ஜனாஸாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, ஹசன் அலி மற்றும் எம் எஸ் உதுமாலெப்பை எம்பி ஆகியோரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்திருந்தார்கள்
#PulmottaiFirthowze.
ஊர்,விலாசம் தெரியாத B. அமீர்டீன் என பெயர் குறிப்பிடப்பட்ட 63 வயது உடைய நபர் சுகயீன முற்று கல்முனை அஷ்ரப் ஞாப கார்த்த வைத்தியசாலையில் 2024. 7.9.ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2024.9.17ஆம் திகதி காலை 11. 00 மணியளவில் வைத்தியசாலை 08ஆம் இலக்க விடுதியில் மரணமடைந்துள்ளார். சுமார் 42 நாட்களாக பிரேத அறையில் ஜனாஸா வைக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் அவருடைய உறவினர் யாரும் தெரியப்படவில்லை. ஆகவே இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்.
சாமசிறீ,தேச கீர்த்தி, அல்ஹாஜ் மௌலவி ஐ. எல்.
எம்.முஸ்தபா (JP) அல் உஸ்வா ஜனாஸா சேவைப் பிரிவு சம்மாந்துறை
0773269035
ஒரு சகாப்தம் படைத்த சகோதரி ஆயிஷா
ஜுனைதீன் அவர்களது மறைவு அவரை
அறிந்த அனைவரையுமே கவலையில்
ஆழ்த்தியுள்ளது!
மாதம்பையைச் சேர்ந்த பட்டதாரியான இவர் 1973ஆம் ஆண்டளவில் இலங்கை
வானொலி முஸ்லிம் சேவையில் மாதர்
மஜ்லிஸ் நிகழ்ச்சிக்குப் பிரதிகள் எழுதி
வந்ததோடு 1976ல் அந்நிகழ்ச்சியின்
தயாரிப்பாளராக இணைந்து கொண்டார்!
அது தவிர இன்னும் பல நிகழ்ச்சிகளையும்
கலந்துரையாடல்களையும் தயாரித்துள்ள
அவர் பின்னாட்களில் தொலைக்காட்சியிலும் அறிவிப்பாளராக
மட்டுமன்றிச் சிறந்த செய்தி வாசிப்பாளராகவும் ரசிகர்களை வசீகரித்தார்!
நான் இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் பகுதிநேர அறிவிப்பாளராக
நியமனமான 1979.05.15 தினத்திலேயே
ஏற்கனவே தயாரிப்பாளராக இருந்த
சகோதரி ஆயிஷாவுக்கும் அதே நியமனம்
கிடைத்தது! 2012ல் கலாசாரத் திணைக்கள
கலாபூஷண விருதும் அவருக்கு வழங்கப்பட்டது! சிங்களப் புலமை மிகுந்த
அவர் மொழிபெயர்ப்புப் பணிகளிலும்
ஈடுபட்டுவந்தார்!
அவர் பணியாற்றிய காலத்தில் அர்ப்பணிப்போடு ஆற்றிய பணிகள் இன்றும் மூத்த ஒலிப்பாளர்களால் நன்றியோடு நினைவுகூரப்படுகிறது!
அல்லாஹ் அச் சகோதரியின் பாவங்களை
மன்னித்து மேலான சுவன வாழ்வை அருள்வானாக!
காத்தான்குடி 6யைச் சேர்ந்த MHM.பெளசர் Bcom (இலங்கை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய அலுவலக கணக்காளர்) சற்று முன் மாத்தளையில் வபாத்தானார்
(இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
இவர் றிஸ்வானா (நீதிமன்ற இலிகிதர்) அவர்களின் கணவரும். ரசூல் M.A. (ஆசிரியர் மீரா பாலிகா மகா வித்தியாலயம்) வைத்தியர் அஸ்ஹர் Dr . மர்ஹூம் அமான் மற்றும் சப்றான் ரிஸ்மியா கபீர் ஆகியோரின் சகோதரரும் K.L.M.பரீட் JP அவர்களின் சகலனருமாவார்.
ஜனாசா மாத்தளை வைத்தியசாலையில் உள்ளது
காத்தான்குடிக்கு கொண்டு வர நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது
ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
மருதமுனையைச் சேர்ந்த A.றஸ்மின் அவர்களின் தந்தையும்
*ஓய்வு பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தருமான "சேஹுமுஹம்மது அலியார்(76 வயது) அவர்கள் இன்று காலமானார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று இன்று (27) இரவு 10.30 மணிக்கு மருதமுனை மத்திய பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
கல்முனை காணிப்பதிவக உத்தியோகத்தர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
சம்மாந்துறையைச் சேர்ந்தசட்டத்தரணியும், பிரசித்த நொத்தாரிசுமான *A.M.M.பிர்னாஸ்* அவர்களின் தந்தையும் *திருமணப் பதிவாளரும் சம்மாந்துறை தப்லீகுல் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஹசனார் மௌலவி* நேற்று சனிக்கிழமை காலமானார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை ளுகர் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும்.