Showing posts with label Janaza. Show all posts



மூத்த ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயானந்தமூர்த்தி அவர்கள் காலமானார்.

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சிறுவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிளினால், விபத்துக்குள்ளான    அக்கரைப்பற்றைச் சேர்ந்த   Mohamed Quare Atham Lebbai  ஏ.எல்.எம். காரி Rtd. BOC officer  பெற்ற வங்கியாளர்,Mohamed Quare Atham Lebbai  ஏ.எல்.எம். காரி Rtd. BOC officer காலமானார்.

இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த ஒரு மாத காலமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த. வாரம் இவர் அம்பாரை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தடிருந்தார்.

அங்கு அதி தீவிர அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டுமிருந்தார்.

அக்கரைப்பற்று 2ஆம் குறிச்சி, பட்டினப் பள்ளி வீதியைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி (Bank of Ceylon) அலுவலரான

ஏ.எல்.எம். காரி அவர்கள்

இன்று அம்பாறை வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ளார்.இவர் திருமதி பரீதா இஸ்மாயில்  அவர்களின் அன்புக் கணவரும்,மர்ஹூம்  Dr. Jahfer Ismail மருமகன்ஸியாத் (சவூதி அரேபியா)நஜாத்சாஜித் (சவூதி அரேபியா) இம்தாத் (சவூதி அரேபியா)ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.


இவர் மர்ஹூம் ரபியுதீன் அவர்களினதும், மர்ஹூம் முபஷ்ஷிர் (former Registrar) அவர்களினதும் சகோதரரும், நிஸார் (மாஸூர், ஓய்வுபெற்ற C.C.) அவர்களின் சகோதரரும் ஆவார்.


மேலும், மர்ஹூமா மஸயீனா (திருமதி ஜமால்தீன்) அவர்களினதும், நசீரா அவர்களினதும் சகோதரரும் ஆவார்.

இவர் Ameen S.S.O. அவர்களின் மச்சானும்,

RDHS பைரூஸ் மற்றும் Sober சறுக் அவர்களின் மாமாவும் ஆவார்.


அத்துடன், Elens Trade உரிமையாளர் எம்.ஐ.எம். யெஹியா அவர்களின் மச்சானும் ஆவார்.


அல்லாஹ் (ஸுப்ஹானஹு வதஆலா) மர்ஹூமின் பாவங்களை மன்னித்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனப் பதவியை வழங்குவானாக.

ஆமீன்.


 ஜனாஸா மற்றும் நல்லடக்க விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

நிந்தவூர்-16, பிரதான வீதியயைச் சேர்ந்தவரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தின் ஆரம்பகால பீடாதிபதியும், ஓய்வுபெற்ற சிரேஸ்ட விரிவுரையாளருமான அல்ஹாஜ். ஏ. நசீர் அஹமட் அவர்கள் இன்று (2026.06.02)காலை இறையழைப்பை ஏற்றுக்கொண்டார்.


இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன்.


அன்னார் காலஞ்சென்றவர்களான ஓய்வுபெற்ற அதிபர் அல்ஹாஜ். ஏ. எம். அகமத், ஹாஜியானி. துஹ்பா ஆகியோரின் புதல்வரும்,


ஓய்வுபெற்ற ஆசிரியை யாக்கூப் சாதுனாவின் அன்புத் துணைவரும்,


ஓய்வுபெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ். எம். எச். யாக்கூப் ஹஸன், ஹாஜியானி செயின் றாஹிலா ஆகியோரின் மருமகனும்,


தௌசீப் அஹமட்(கட்டார்), வாசீப் அஹமட் (No limit)ஆகியோரின் அன்புத் தந்தையும்,


மர்ஹுமா பௌசுல் மின்னா(பரீதா), ஹாஜிகளான ஏ. ஷபாஅத் அஹமட் (விவாகப் பதிவாளர்), ஓய்வுபெற்ற தொழினுட்ப உத்தியோகத்தர் ஏ. சஹீட் அஹமட், ஏ. ஷபீக் அஹமட்(ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்), ஹாஜியானிகளான ஏ. நூறுல் ஹிதாயா, ஏ. சித்தி ஜெமீலா (சபீனா), ஏ. ஷர்புன் நிசா, ஏ. அஷ்றப் அஹமட், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏ. இப்திகார் அகமட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,


காலஞ்சென்றவர்களான    அல்ஹாஜ். எம். ஐ. அகமட், JP, - (முன்னாள் தவிசாளர், பிரதேச சபை, நிந்தவூர்), ஓய்வுபெற்ற ஆசிரியரான எம். மீராலெவ்வை, அல்ஹாஜ். எஸ். பதுறுதீன்(ஓய்வுபெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழக தலைமைப் பாதுகாப்பு அதிகாரி) ஆகியோரின் மைத்துனரும், 


ஓய்வுபெற்ற தபாலதிபர் அல்ஹாஜ். வை. வை. வொகார் ஹஸன், வை. ஜாஹிட் ஹஸன்(பட்டயக் கணக்காளர்), வை. ஜாயிசா ஹஸன், வை. றஸ்மி ஹஸன்(பட்டய கணக்காளர்) ஆகியோரின் மச்சானும்,


எஸ். றுசைக்கா(ஆசிரியை), எப். அஸ்ரா (வைத்தியர், மாவட்ட வைத்தியசாலை, சம்மாந்துறை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,


அல்ஹாஜ். எச். அப்துல் சத்தார் (பணிப்பாளர், நைட்டா) அவர்களின் சகலனும்,


மரீஹா, மஹ்தியா, மஸீயா, சாஸியா, பாதில் ஹஸன், ஆகியோரின் பாசமுள்ள அப்பாவுமாவார். 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு இஷா தொழுகையின் பின்னர் நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு, வைத்தியசாலை வீதியிலுள்ள றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அன்னாரின் மறுமை வாழ்வு பிரகாசிக்க உங்களது பிரார்த்தனைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


                     (ஏ.ஷபாஅத் அஹமத்)

 அக்கரைப்பற்று முதலாம் குறிச்சியை சேர்ந்த அக்கரைப்பற்று  (சுள்ளியர் பெமிலி) வபாத் ஆனார்கள் 


இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி றாஜிஹுன் 


இவர் 

லியாகத் அலி ( BMC)

ஜெமீல் (BMC)

இஸ்ஸதீன் (BMC)

அப்துல் ஹமீட் மௌலவி ஆகியோரின் அன்பு சகோதரரும் 


சபறுல்லாஹ் அவர்களின் அன்பு மருமகனும் 


சிராஜ் (சிங்கர்) அன்பு மைத்துனரும் ஆவார்கள் 


நல்லடக்க விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


Taqwa jummah mosque

Taqwa emergency service 

Akkaraipattu

 


சமூக நீதிக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சகோதரர் Irfan Ahamed - Banna அவர்களின் அன்புத் தந்தை, சமூக நீதிக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சகோதரர் Irfan Ahamed - Banna அவர்களின் அன்புத் தந்தை, மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ஒய்வுநிலை அதிபர் A.R. அப்துல் றாசிக் அவர்கள் காலமானார். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


மர்ஹூம் அப்துல் றாசிக் அவர்கள் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களினது முன்னேற்றத்திற்காகவும், மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்ட ஒருவர். 


அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவர்க்கத்தை வழங்கிடுவானாக. ஆமீன்!


அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


மர்ஹூம் அப்துல் றாசிக் அவர்கள் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களினது முன்னேற்றத்திற்காகவும், மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்ட ஒருவர். 


அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவர்க்கத்தை வழங்கிடுவானாக. ஆமீன்!


அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



 பொத்துவில் - 02  மர்ஹும் மூசா GS அவர்களின் மூத்த மகனும், பிரதேச செயலக முகாமைத்துவ உத்தியோகத்தருமாகிய

MLM. ஹாபிழ் அவர்கள் இன்று காலமாகிவிட்டார் 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



 


மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட வேடுவத்தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார். 


வெலிசர காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர், தனது 62ஆவது வயதில் காலமானார்.


 


ஓர் அழகிய இறை அழைப்பு


பொத்துவிலில் இருந்து முல்தஸம் ட்ரெவல்ஸில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற  வந்த  #அப்துல்_றவூப் (றஹீம் மனேஜர்) அவர்கள் தனது உம்ரா கடமையை நிறைவேற்றி விட்டு மக்கா 🕋 ஹரத்தில் தஹஜ்ஜத்துடைய நேரத்தில் இஹ்ராமுடைய ஆடையில் தஹஜ்ஜத் தொழுது விட்டு தவாஃப் செய்யும் இடத்தில் சுபஹ் அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் 2026-05-03 ம் திகதி இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொள்வானாக. ஆமீன்


தகவல்: றயீஸ் முப்தி

 


பேராசான் அப்துல் மலிக் அவர்களின் திடீர் மறைவு செய்தி அளவிட முடியாத துயரத்தை அளிக்கிறது.


மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அல்-மனாரின் பழைய மாணவர். உயர் கல்விக்காக பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவை அவர் தெரிவு செய்தார். கல்வி எனும் பெருங்கடலில் நீந்தி, கடல் கடந்து இஸ்லாமாபாத் சர்வதேச பல்கலைக்கழகத்தில் மத ஒப்பீட்டியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சர்வதேச அளவில் பல ஆய்வு மாணவர்களை உருவாக்கியவர்.


இடையறாத பணிக்கு மத்தியில் இலங்கையில் வெளியாகும் இஸ்லாமிய சிந்தனை, அல் ஹஸனாத் போன்ற சஞ்சிகைகளுக்கு அவர் எழுதி வந்த ஆய்வுக் கட்டுரைகள் மிகப் பெறுமதியானவை. 


மணிக்கணக்கில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அன்பர். மாணவப் பருவத்திலேயே அவருடன் உரையாடிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுவாரசியம் நிறைந்த உரையாடல்கள் அவரது புலமையை வெளிப்படுத்தி எமது ஆர்வத்தை தூண்டுபவை. பெரியார் குறித்தும் அவரது சமூக நீதி கருத்துக்கள் குறித்தும் அண்மையில்  என்னுடன் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் நினைவில் வந்து போகின்றன...


மதம், அரசியல், தத்துவம் என விரியும் அறிவார்ந்த உரையாடல்கள், குடும்ப நலன் வரை பரவியவை. கள யதார்த்தங்களை நன்கறிந்தவர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இயங்கியலையும் அதற்குள் இருக்கும் நுண்ணரசியல் குறித்தும் தெளிவான புரிதலுடையவர். 


என்னுடன் தனிப்பட்ட அன்பு கொண்ட அவர், எனது தொழில் வாழ்க்கையைப் பற்றியும் அக்கறையுடன் கேட்டறிவார்.


வெளிநாட்டு வாழ்கையை முடித்து தாய் நாடு திரும்பி கல்விப் பணியாற்றும் எண்ணம் கொண்டிருந்தார். மருதமுனையின் சமய, சமூக, கல்வி நிலைமைகள் குறித்து அக்கறையுடன் அவ்வப்போது கேட்டறிவார்.


இன்று, ஒரு மூத்த சகோதரனை இழந்த துயரத்தை உணர்கிறேன். நிலையற்ற உலகின் யதார்த்தத்தை இத்தகைய திடீர் மறைவுகள் எமக்கு உணர்த்துகின்றன.


எல்லாம் வல்ல இறைவன், அன்னாரின் பாவங்களை மன்னித்து, தனது அருளும் அன்பும் கொண்ட இறக்கைகளுக்குள் அவரை அரவணைத்தருள்வானாக. ஆமீன். அவர்களின் திடீர் மறைவு செய்தி அளவிட முடியாத துயரத்தை அளிக்கிறது.


மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அல்-மனாரின் பழைய மாணவர். உயர் கல்விக்காக பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவை அவர் தெரிவு செய்தார். கல்வி எனும் பெருங்கடலில் நீந்தி, கடல் கடந்து இஸ்லாமாபாத் சர்வதேச பல்கலைக்கழகத்தில் மத ஒப்பீட்டியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சர்வதேச அளவில் பல ஆய்வு மாணவர்களை உருவாக்கியவர்.


இடையறாத பணிக்கு மத்தியில் இலங்கையில் வெளியாகும் இஸ்லாமிய சிந்தனை, அல் ஹஸனாத் போன்ற சஞ்சிகைகளுக்கு அவர் எழுதி வந்த ஆய்வுக் கட்டுரைகள் மிகப் பெறுமதியானவை. 


மணிக்கணக்கில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அன்பர். மாணவப் பருவத்திலேயே அவருடன் உரையாடிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுவாரசியம் நிறைந்த உரையாடல்கள் அவரது புலமையை வெளிப்படுத்தி எமது ஆர்வத்தை தூண்டுபவை. பெரியார் குறித்தும் அவரது சமூக நீதி கருத்துக்கள் குறித்தும் அண்மையில்  என்னுடன் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் நினைவில் வந்து போகின்றன...


மதம், அரசியல், தத்துவம் என விரியும் அறிவார்ந்த உரையாடல்கள், குடும்ப நலன் வரை பரவியவை. கள யதார்த்தங்களை நன்கறிந்தவர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இயங்கியலையும் அதற்குள் இருக்கும் நுண்ணரசியல் குறித்தும் தெளிவான புரிதலுடையவர். 


என்னுடன் தனிப்பட்ட அன்பு கொண்ட அவர், எனது தொழில் வாழ்க்கையைப் பற்றியும் அக்கறையுடன் கேட்டறிவார்.


வெளிநாட்டு வாழ்கையை முடித்து தாய் நாடு திரும்பி கல்விப் பணியாற்றும் எண்ணம் கொண்டிருந்தார். மருதமுனையின் சமய, சமூக, கல்வி நிலைமைகள் குறித்து அக்கறையுடன் அவ்வப்போது கேட்டறிவார்.


இன்று, ஒரு மூத்த சகோதரனை இழந்த துயரத்தை உணர்கிறேன். நிலையற்ற உலகின் யதார்த்தத்தை இத்தகைய திடீர் மறைவுகள் எமக்கு உணர்த்துகின்றன.


எல்லாம் வல்ல இறைவன், அன்னாரின் பாவங்களை மன்னித்து, தனது அருளும் அன்பும் கொண்ட இறக்கைகளுக்குள் அவரை அரவணைத்தருள்வானாக. ஆமீன்.

சாஜித் ஜி எஸ் காலமானார். இவர்மர்ஹும் அப்துல் ஜப்பார்   அவர்களின் அன்பு மகனும் 


அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர் 

ஹரிஸ்பா அவர்களின் அன்புக் கணவரும்


ஹசீயா 

ஹசீபா ஆகியோரின் அன்பு தந்தையும் 



#பிர்னாஸ் (டுபாய்) 

#ரிப்கா ஆகியோரின் அன்பு சகோதரரும் 


ஹாரித் 

ஹனாஸ் ஆகியோரின் அன்பு மச்சானும் 


மஜீத் ஹாஜியார் (டயர் கடை, அரசடி)

அன்பு மருமகனும் 


மர்ஹும் பெரிய மோதினாரின் அன்பு பேரனும் 


மர்ஹும் பாறூக்

(கீப்பர்- ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தர்) இன் சகோதரியின் அன்பு மகனும் 


#சியாத் (ஆயுர்வேத வைத்தியசாலை ) ஆகியோரின் 

மைத்துனரும் ஆவார்.


"இன்ஷாஅல்லாஹ்"

இன்று இரவு 11.30 மணியளவில் அக்கரைப்பற்றில் அவரது வீட்டில் பார்வையிட சாத்தியப்படுவதுடன்

நாளை காலையில் 6 மண

 


மட்டக்களப்பின் பிரபல ஆசிரியரும் -  கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரீ.ஜெயசிங்கம் அவர்களின் துணைவியாருமான ஜெயசிங்கம் புஷ்பலதா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் ஆழ்ந்த அனுதாபங்கள்


 சிறுநீரக மருத்துவமத் துறையின் முன்னோடியுமான

பேராசிரியர் ரிஸ்வி ஷெரிப் அவர்கள் காலமானார்கள்.

அக்கரைப்பற்று *PTM GOLD HOUSE உரிமையாளர் PTM மன்சூர்*  காலமானார்.

அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

ஜன்னத்துல் பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

 


Teacher Center ல் பணியாற்றிய நிலாஸ் சகோதரர் ரியாத்தில் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818 வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818


 (வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை ரோட்டரி கழகத்தின் செயலாளர் ரோட்டரியன்  கணபதிப்பிள்ளை குகதாஸ்( வயது 67) நேற்று(4) புதன்கிழமை இரவு கொழும்பில் காலமானார்.

பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் குகதாஸ் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும்,  தனியார் பல்கலைக்கழக மட்டக்களப்பு இணைப்பாளராகவும் சேவையாற்றி வந்தவர். 
இவரது காலத்தில்தான் சர்வதேச வர்த்தக கண்காட்சி மட்டக்களப்பில் தலைவர் வி.ரஞ்சிமூர்த்தி தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இருதய சத்திரசிகிச்சையின் பின்னர் கொழும்பில் தங்கியிருந்த வேளையில் மரணமானார்.

துபாயில் பணியாற்றும் துஜிப்சாந்த் மற்றும் ஹபித் ஆகியோரின் தந்தையான இவர் சமூக சேவையாளர் ஆவார்.
 
அன்னாரின் ஈமக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 4 மணிக்கு பெரியகல்லாறு உறவுகள் உறங்கும் இல்லத்தில் இடம்பெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தை சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கே சங்கக்கார காலமானார்.


அன்னாரின் பூதவுடன் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிச் சடங்குகள் நாளை (04) மாலை 6 மணிக்கு கண்டி, மஹய்யாவ பொது மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 




 சென் தோமஸ் கல்லூரியின்  ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி , நேற்று மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார்.

  

ஆசிரியர்  சண்முகவேல் பிரஷாந்தி,  கலை இலக்கிய ஆர்வமிக்க ஒருவராக திகழ்ந்தவராவர் . சிறந்த குரல் வளமிக்க பாடகியும் அனைத்து இசைகருவிகளையும் இசைக்கும் திறமையான  இசை ஞானம் கொண்டவர் இசையமைப்பில் அதீத ஆர்வத்தோடு புத்தாக்கமிக்கவராக புதிய படைப்புகளை உருவாக்க கூடியவர்,  



இந்திய முன்னணி இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், தீனா , ஆகியோரது பாராட்டையும் பெற்றவர் , 

அன்மையில்  நாட்டில் ஏற்பட்ட ' தித்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் நாட்டையும் மக்களையும் மீளெழுச்சி பெரும் நோக்கில்  தனது தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கிய "Rebuild Sri Lanka " எனும் ஆங்கிலம் ,சிங்களம் ,தமிழ் , என  மும்மொழியில் தானே பாடி இசையமைத்து பாடல் ஒன்றினை வெளியிட்டார்.


அதுபோல கடந்த காலங்களில் பல்வேறுபட்ட பாடல் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவரது பாடல் தொகுப்பானது  சமூக ஊடகங்களிலும்  சமுக ஆர்வலர்கள் மற்றும் கலை உலகத்தினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடதக்கது. இதுபோன்று மேலும் எதிர்வரும் காலங்களில் பல்வேறுபட்ட பாடல் தொகுப்புகள் அடங்கிய அல்பம்களையும் வெளியீடு செய்வதற்கான ஆர்வத்தோடு தயாராகியிருந்தார்,



தீராத இசை ஆர்வமிக்க படைப்பாளியாகவும் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்த செல்வி சண்முகவேல் பிரஷாந்தினியின் இழப்பு, மலையக கல்வி சமூகத்திற்கும் கலை உலகிற்கும் பெரும் பேரிழப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.


-தலவாக்கலை குணா-




UpDated.

அம்பாறை-சியம்பலாண்டுவ சாலையில் பரணிகம பகுதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், இன்று (14) நடந்த விபத்தைத் தொடர்ந்து துரதிர்ஷ்டவசமாக முன்னால் வந்த லாரியுடன் மோதியது. 

அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள், இருவர் சென்ற மோட்டார் சைக்கிள்  லொறி ஒன்றுடன் மோதி விபத்து நிகழந்துள்ளது.

 இதில்   அக்கரைப்பற்று அபுசாலி வீதி அருகில்  வசித்து வந்த  சேர்ந்த நுஸ்ரத் என்பவரும், டீன்ஸ் வீதியைச் சேர்ந்த சிமாஸ் என்பவரும் உயிரிழந்துள்ளார்கள்.





அக்கரைப்பற்றில் அண்மைய நிகழ்ந்த விபத்தினால், கடுங்காயமுற்ற , முச்சக்கர வண்டிச் சாரதி சகோதரர் பைறூன் இன்று அதிகாலை அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலை அதி.தீவிர சிகிச்சைப். பிரிவில், காலமானார்.

இவர், நிலூபா ( தாதி உத்தியோகத்தர் ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று) அவர்களின் அன்பு கணவரும் 


ஸைனா

ஹாமித்

ஹைதா

ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார் 


நல்லடக்க விபரம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்





 


வடக்கு- கிழக்கு மாகாணங்களின் கல்வி அமைச்சின் முன்னாள் கல்வி  செயலாளர்.

அல்- ஹாஜ்.எம்.ஏ.சி. முகைதீன் சற்று முன் கொழும்பில் காலமாகினார். மரணிக்கும்

சமயம் இவரது வயது 88 ஆகும்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி

இராஜி ஊன்.


அன்னார் அக்கரைப்பற்றை பிறப்பிடமாக

கொண்டும் சாய்ந்தமருதுவில் புகுவிடமாக

கொண்டவர். அரச சேவையிலிருந்து ஓய்வு

பெற்ற பின் கொழும்பு தெஹிவளையில்

வசித்து வந்தார்.


இலங்கை கல்வி நிருவாக சேவையின் மிக

மூத்த அதிகாரியான இவர் அம்பாறை,

கல்முனை, மட்டக்களப்பு மாவட்டங்களில்

பிரதம கல்வி அதிகாரியாகவும் மன்னார்

மாவட்டக் கல்விப்பணிப்பாளராகவும்கடமை

புரிந்ததுடன் கொழும்பு கல்வியமைச்சிலும்

சிறிது காலம் கடமையாற்றினார்.


அக்கரைப்பற்று மத்திய கல்லூரி, காத்தான்

குடி மத்திய கல்லூரிஆகியவற்றில்பட்டதாரி

ஆசிரியராக கடமையாற்றி அக்கரைப்பற்று

மத்திய கல்லூரியின் அதிபராகவும் கடமை

புரிந்தார்.


வடக்கு- கிழக்கு மாகாண கல்வி செயலராக

கடமையாற்றிய சமயம் மாகாண கல்வி

அமைச்சுக்கான தனியான கட்டிடமொன்றை

அமைத்தார். அதே போல் கிழக்கு மாகாணத்

தில் முதலாவது தேசிய பாடசாலையாக

அக்கரைப்பற்று மத்திய கல்லூரியை உரு

வாக்க கால்கோளாக இருந்தார்.


வடக்கு- கிழக்கு மாகாண விவசாய, கூட்டு

றவு அமைச்சின் செயலாளராகவும் , வகிமா

முகாமைத்து பயிற்சி நிறுவன பணிப்பாளர்

ஆகவும் சிறிது காலம் கடமையாற்றினார்.


அரசியல்வாதிகளுக்கு அடிபணியாத ஒரு

உயர் அதிகாரி.தனக்கு எது நியாயமெனப்

பட்டதோ அதை துணிந்து செய்தார். இவர்

மும்மொழி வித்தகர். இவரது காலதாதில்

தான் வடகிழக்கில் ஆயிரக்கணக்கானவர்

களுக்கு தொண்டர் பயிலுனர் ஆசிரியர்

நியமனத்தை வழங்கினார்.


அரச தாபனக்கோவை, பொதுநிருவாக

சுற்று நிருபங்கள், நிதிப்பிரமாணம் ஆகிய வற்றை துறை போகக் கற்றவர்.


சாய்ந்தமருதுவை சேர்ந்தஅகமதுதுரையின்

மருமகனான இவர்மௌலவியாநஜீமாவின்

( ஓய்வு பெற்ற ஆசிரியை) கணவனான

இவர் 05 பிள்ளைகளின் தந்தையார் ஆவார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.