Showing posts with label Janaza. Show all posts

 


போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.


அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது. போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


"அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.


ஆயிரக்கணக்கான மக்களுக்கு "ஈஸ்டர் வாழ்த்துகள்" தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.


விளம்பரம்


சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, "அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துகள்" என்று கூறினார்.


ஆசிர்வாதம் வழங்கிய பிறகு, அவர் வாகனத்தில் ஏறி வாடிகன் சதுக்கத்தைச் சுற்றிவந்தார். அந்த நேரத்தில், பல முறை வாகனத்தை நிறுத்தி, குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.


ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மக்கள் முன்பு தோன்றிய போப்பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மக்கள் முன்பு தோன்றிய போப்

"அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை பிரான்சிஸின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறேன்'' என கார்டினல் ஃபாரெல் தெரிவித்தார்.


''இன்று காலை 7:35 மணிக்கு (உள்ளூர் நேரம்) ரோமின் பிஷப் பிரான்சிஸ், தந்தையிடம் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது''


''நற்செய்தியின் விழுமியங்களை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும் நமக்குக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஏழைகளுக்கு மிகவும் ஆதரவாக வாழ அவர் நமக்கு கற்பித்தார்'' எனவும் அவர் கூறியுள்ளார்.


போப் பிரான்சிஸ், கத்தோலிக்க திருச்சபையில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர். அதே நேரத்தில், பாரம்பரிய நிகழ்வுகள் தொடர வேண்டும் என்று கருதும் பழமைவாதிகளிடையேவும் இவர் பிரபலமாக இருந்தார்.


உலகின் தெற்குப் பகுதியில் இருந்து வந்த முதல் போப் இவர்தான்.


இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஐந்து வார மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து திரும்பினார்.


உலக மக்களுக்கு போப்பின் இறுதி செய்தி

மறைந்த போப் பிரான்சிஸ் ஈஸ்டர் தினத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையே உலக மக்களுக்கான அவரது கடைசி செய்தியாக அமைந்தது. ஈஸ்டர் ஞாயிறன்று போப்பின் அறிக்கையை அவரது உதவியாளர் ஒருவர் வாசித்தார்.


அந்த செய்தியில்,"மத சுதந்திரம், சிந்தனைக்கான சுதந்திரம், கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் இன்றி அமைதி இல்லை" என போப் தெரிவித்திருந்தார்.


காஸா மக்களையும், குறிப்பாக அங்கு வாழும் கிறிஸ்தவ மக்களையும் குறிப்பிட்ட அவர், அங்கு நிகழும் மோதல்கள் மரணத்தையும், அழிவையும் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.


மேலும் இந்த போர் "மோசமான மனிதாபிமான சூழ்நிலையை" உருவாக்குகிறது. உலகளாவிய யூத எதிர்ப்புவாதம் வளர்ந்து வருவது "கவலைக்குரியது" என்றும் அவர் கூறினார்.


"உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மோதல்களில் கொலை செய்வதற்கான தாகம் எவ்வளவு அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார்.


"அனைத்து இஸ்ரேலிய மற்றும் பாலத்தீன மக்களுக்காக எனது அன்பை வெளிப்படுத்துகிறேன். போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுங்கள், பணயக்கைதிகளை விடுவியுங்கள். அமைதியான எதிர்காலத்தை விரும்பும் மக்களுக்கு உதவுங்கள்." எனவும் போப் கூறியுள்ளார்.


யுக்ரேன் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் "நீடித்த அமைதியை அடைவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும்" எனவும் போப்பின் இறுதி அறிக்கை கூறுகிறது.


பவுன்சராக பணியாற்றிய போப்

பியூனஸ் அயர்ஸில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக உயர்ந்தவர் போப் பிரான்சிஸ். அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 1936 டிசம்பர் 17ம் தேதி போப் பிரான்சிஸ் பிறந்தார். பாசிசத்தின் பிடியில் இருந்து தப்பிக்க இத்தாலியில் இருந்து வெளியேறிய போப் பிரான்சிஸ், 5 குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் மூத்த மகன் ஆவார்.


சான் லொரெஞ்சோ நகரின் உள்ளூர் கால்பந்து க்ளப்பின் ஆதரவாளராக இருந்த போப் பிரான்சிஸ், டாங்கே நடனத்திலும் விருப்பம் கொண்டவர்.


இளம் வயதிலேயே கடுமையான நிமோனியா தாக்குதலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் நுரையீரலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தது. இதனால் அவர், தனது வாழ்நாள் முழுவதும் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையும் ஏற்பட்டது.


வயதுமூப்பின் காரணமாக தனது வலது காலில் ஏற்பட்ட மூட்டுவலியால் மிகவும் பாதிக்கப்பட்டார். இந்த பிரச்சனையை போப், 'உடல்ரீதியிலான அவமானம்' என்று குறிப்பிட்டார்.


வேதியியலில் பட்டம் பெறும்வரை, போப் பிரான்சிஸ் பவுன்சராகவும், தரையை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டார்.


உள்ளுர் தொழிற்சாலை ஒன்றில் எஸ்தர் பலெஸ்ட்ரினோவுடன் பணியாற்றிவர் போப் பிரான்சிஸ். எஸ்தர் பலெஸ்ட்ரினோ, அர்ஜெண்டினாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் என்பதால் கடும் சித்திரைவதைக்கு உள்ளானவர், இறுதியில் அவரது சடலம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினரான போப் பிரான்சிஸ், தத்துவயியல் பயின்றவர் என்பதும் இலக்கியம் மற்றும் மனோதத்துவத்தை பயிற்றுவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, துரிதமாக பதவி உயர்வு பெற்ற போப் பிரான்சிஸ், 1973 இல் அர்ஜென்டினா மாகாணத்தின் மேலதிகாரியானார்.



 காத்தான்குடியைப். பிறப்பிடமாகவும்,அக்கரைப்பற்றை வதிவிடமாகவும் கொண்ட

புரோட்வே #BROADWAY_MOTORS உரிமையாளர்

#இஸ்மாயில் காலமானார்


Sabry

Sacky Ismail 

Sathila

ஆகியோரின் தந்தையும்


Dr Munnawwer

இன் மாமனாரும்

ஆவார்


ஜனாஸா

தொழுகை

#9மணிக்கு

#மர்கஸ் #பள்ளிவாசலில்

நடைபெற்று

#தைக்காநகர்

#மையவாடியில்

நல்லடக்கம்

இடம்பெறும்


தகவல்

மகன் சப்ரி

 


Akkaraipattu 17

ஜின்னா வீதியை சேர்ந்த #மஸ்வூவுத்

(#முனீர் - SANA ELECTRICAL) காலமானார்.


அன்னார் 

மர்ஹூம்கள் #யூசுப்_மாஸ்டர் 

முஹம்மது பாத்தும்மா (#மம்மாத்தும்மா_டீச்சர்)

ஆகியோரின்

#மகனும்


#றியாசா 

அவர்களின் #கணவரும் 


#சறபா 

#ஹசீம் 

#சயான் 

ஆகியோரின் 

#தந்தையாரும் 


ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் #தாஹா_GS அவர்களின் 

#மருமகனும் 


மர்ஹூம் #நிஸ்பா_டீச்சர் 

#ஜெஸ்மின்_டீச்சர் 

#நளீர் (GAMA CONSTRUCTION)

ஆகியோரின் 

#சகோதரரும் 


மர்ஹும் 

#தாஜுதீன்_மாஸ்டர் 

ஓய்வு பெற்ற அதிபர் #சஹாப்தீன்

(#அன்சார்_மாஸ்டர்)

ஆகியோரின்

#மைத்துனரும் ஆவார்.


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


Taqwa Emergency service

0742421817

 


அக்கரைப்பற்று ஏவிவி வீதியில் அரசயடி சந்தியில் வசித்துவரும் அப்துல் பதாஃ மௌலவி வபாத் ஆனார்கள்


இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


நுஸ்வியாவின் அன்பு கணவரும்


ஹஸ்ஸான்

சம்ஹா

லெபீபா

ஹஸ்னான் ஆகியோரின் அன்பு தந்தையும் 



இல்யாஸ் மௌலவி யின் அன்பு சகோதரரும் 


அன்சார் தப்லீக் அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்கள்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4.30 மணியளவில் ஜும்மா பட்டியடிப்பிட்டி பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு பட்டியடிப்பிட்டி மையவாடியில் நடைபெறும் 


Taqwa Emergency service

0742421818

 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பியின் தந்தையார் பதியுதீன் ஹாஜியார் நேற்று காலமானார் .


 ஜனாஸா தற்போது இன்று(18) தில்லையடி - அல்மினா புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு

புத்தளம், ரத்மல்யாய அல்- காசிமி சிட்டி மையவாடியில் இன்று அஸர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.






அக்கரைப்பற்று -02 ஓய்வு பெற்ற அதிபர்  S.M. Mohideen வபாத் இன்று காலமானார். இவர்,றகீபாவின் அன்புக் கணவரும்,றெசோனா, றிறானா. றொசானி-ரீச்சர், றிஸ்னி,.றுவைஸ்-லண்டன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னார் ஓய்வுபெற்ற அதிபர்களான 

S.M. Hussain, 

S.M.A. Ghafoor மற்றும் S.M. செயினுதீன் ஓடாவியார் 

மர்ஹும் S.M. Hassan அவர்களின் மூத்த சகோதரர் ஆவார்.

றெசோனா, றிறானா. றொசானி-ரீச்சர், றிஸ்னி,.றுவைஸ்-லுண்டன்,

பெரோஸ்( AI ) சியாம், சக்கீல், முனவ்வறா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு 9.30 மணிக்கு மர்கஸ் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நடைபெறும் 

 


மாவை சேனாதிராஜா காலமானார்
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் இந்நாள் அரசியல் குழுத் தலைவரும் ஏழு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான மூத்த தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் (82வயது )நேற்று 2025, ஜனவரி,29, இயற்கை எய்தினார்.

வரலாறு:

மாவை சேனாதிராசா அவர்களின்  இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா.  தமது சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராசா என அழைக்கப்பட்டார். யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார். வீமன்காமம் பாடசாலையில் ஆரம்ப கல்வியும் நடேஸ்வராக் கல்லூரியிலும் உயர்தரக்கல்வி கற்ற பின்னர், 

இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அரசியலில்…
இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்குபற்றினார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மகசீன், சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.                                       

1977, ல் மாவை சேனாதிராசா மணமகளாக தமது உறவுமுறை பவானி என்பவரை திருமணம் முடித்தார்.
1977, ல் திருமணம் நடந்த பின்னர் அதே ஆண்டு கவிஞர் காசி ஆனந்தனுக்கும் திருமணம் இடம்பெற்றது.
மாவை சேனாதிராசா தம்பதிகளையும், கவிஞர் காசி ஆனந்தன் தம்பதிகளையும் ஒரே நாளில் இரண்டு தம்பதிகளுக்கும் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் வரவேற்பு வைத்து விருந்தோபல் இடம்பெற்றது எனக்கு இப்போதும் ஞாபகம் உண்டு.

1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப், ஈபிஆர்எல்எஃப், டெலோ ஆகிய கட்சிகளுடன் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில ்போட்டியிட்டபோதும் அதில் தெரிவாகவில்லை. அதன் பின்னர்  அப்பாப்பிள்ளை . அமிர்தலிங்கம் 1989 யூலை 13, ல் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு மாவை சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.                                             

அந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கூடுதலாக அம்பாறைமாவட்டத்திற்கே பயன்படுத்தினார்.
பலருக்கு அம்பாறை மாவட்டத்தில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகள், துறைமுக அதிகாரசபை நியமனங்களை வழங்கியதுடன் பன்முகப்படுத்தப்பட் நிதிகளை அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களுக்கே ஒதுக்கியும் இருந்தார் பெரியநீலாவணை வைத்தியசாலை இவருடைய பன்முகப்படுத்தக்பட்ம நிதிமூலம் கட்டடம் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

1994,தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி மூலமாக தேர்தலில் போட்டியிட்டபோதும் தெரிவாகவில்லை.

1999 யூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.

2000, ம்  ஆண்டு தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி  வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.             

விடுதலைப்புலிகளின் வேண்டுகோளால் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முயற்சியால் 2001 அக்டோபர் 20, ல் தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவிய பின்னர் .2001 தேர்தலில் யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.            

அந்த தேர்தலில் வெற்றிபெற்ற தமிழர் விடுதலை கூட்டணி 15 பாராளுமன்ற உறுப்பினர்களில் 14, பேர்  விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதியாக ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை பாராளுமன்ற குழு கூட்ட தீர்மானம் எடுத்தபோது ஆனந்தசங்கரி ஐயா அதை ஏற்கமுடியாது என முட்டுக்கட்டை போட்டபோது, மாவை அண்ணர் விடுதலைபுலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். ஆனந்தசங்கரி மாவை அண்ணர், சம்பந்தன் ஐயா, ஜோசப்பரராசசிங்கம் ஆகியோருடன் முரண்பட்டு தமிழர் விடுதலை கூட்டணியை நீதிமன்றில் நிறுத்தி தடை உத்தரவை பெற்றார்.

2004, ல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் அறிவித்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த கட்சியில் தேர்தலை எதிர்கொள்வது என்ற கலந்துரையாடல் கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.அந்த சந்திப்பில் கலந்து கொண்ட கட்சி தலைவர்கள் தத்தமது கட்சிகளில் பொட்டியிடலாம் என கூறியபோது தலைவர் பிரபாகரன் மாவை அண்ணரிடம்தான் கேட்டார் இலங்கை தமிழரசுக்கட்சி என்ன நிலையில் இருக்குது அண்ணா என கேட்டார். மாவை அண்ணர் எந்த பிரச்சனையும் இல்லை தம்பி நீங்கள் சம்மதித்தால் அதில் போட்டியிடலாம் என கூறினார்.
அதனை கேட்டு தலைவர் இலங்கை தமிழ் அரசுக்கட்சியில் வீட்டு சின்கத்தில் போட்டியிடுமாறு பணித்தார்.

அதன்பின்னர் 2004, 2010, 2015 ,தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2020, தேர்தலில் போட்டியிட்டும் 20358, வாக்குகளை பெற்றும் அவர் தெரிவாகவில்லை.
தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளராக 2004, தொடக்கம் 2014, வரையும் பின்னர்
வவுனியாவில் நடந்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 15, வது தேசிய மாநாடு
2014,செப்டம்பர் ,07,ல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

2024, பொதுத்தேர்தலின் பின்னர் கட்சியில் சிலருடைய கருத்து முரண்பாட்டால் தலைவர் பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாகவும் அந்த பதவியை 2024, ஜனவரி,21, ல் ஜனநாயக ரீதியாக தெரிவாக சிவஞானம் சிறிதரனை பாரம் எடுக்குமாறு கடிதமூலம் கேட்டிருந்தார்.
சிறிதரன் தொடர்ந்தும் அடுத்த மாநாடு வரை நீங்களே தலைவராக இருங்கள் என கூறியதை ஏற்றிருந்தார்.
எனினும் சிறிதரனுக்கு தான் வழங்கிய கடிதப்பிரதியை பதில் பொதுச்செயலாளர் ப சத்தியலிங்கத்துக்கு அனுப்பியபின்னர் 2024, டிசம்பர்,14, ல் வவுனியாவில் நடைபெற்ற மத்தியகுழு கூட்டத்தில் மாவை அண்ணரை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் எடுக்க முற்பட்ட வேளையில் கருத்து முரண்பாடுகள், வேண்டத்தகாத வார்த்தை பிரயோகங்கள் மத்தியகுழு சில உறுப்பினர்களால் பேசப்பட்டது.
தாம் தொடந்தும் தலைவராக செயல்பட போவதாக அவர் மனம்விட்டு கேட்டபோதும் மத்தியகுழுவில் உள்ள ஒரு சாரார் விரும்பவில்லை.
இந்நிலையில் அடுத்த மத்திய செயற்குழு கூட்டம் 2024, டிசம்பர்,28, ல் வவுனியாவில் இடம்பெற்றபோது அந்த கூட்டத்தில் மாவை அண்ணர் கலந்து கொள்ளவில்லை அவருடைய தலைவர் பதவி சி வி கே சிவஞானம் ஐயாவுக்கு பதில் தலைவராக வழங்கப்பட்டது.
மாவை அண்ணருக்கு அரசியல் குழு தலைவர்பதவி வழங்கப்பட்டது ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவராக கடந்த 2014, செப்டம்பர்,07 தொடக்கம் 2024, டிசம்பர்28, வரையும் ஏறக்குறைய 10, வருடங்கள் தலைவராகவும்.
அதற்கு முன்னர் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பொதுச்செயலாளராக 2004, தொடக்கம் 2014, வரை 10, வருடங்கள் பதவியில் இருந்துள்ளார்.
உடல்சோர்வு, மனச்சோர்வு காரணமாக 28/01/2025, அதிகாலையில் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.




அக்கரைப்பற்று -03ஆலிம் வீதியைச் சேர்ந்த றபிலா -(அக்கரைப்பற்று ஆயிசா மகளிர் கல்லுாரி) ஆசிரியை கொழும்பில் .இன்று காலை காலமானார்.

இவர் கணக்காய்வு அத்தியட்சகர் Nizar Yazeen Bawa அவர்களின் அன்பு மனைவியும், மா்ஹீம் அஹமட்லெப்பை- (முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்,  இப்றாஹிம் - ஓய்வு நிலை முகாமையாளர், சட்டத்தரணி ஏஎம்.தாஜ் -ஒலிரப்பாளர், சரினா  ஆசிரியை ஆகியோரின் சகோதரியும்,மனாப் மௌலவி-(ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் மதினியும் ஆவார். 


அவரது ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


 தம்பாளை ஸமட்

நேற்று இரவு(19)கரப்பொல ,முத்துக்கல் குளத்தின் இஸ்பீல் வழியாக மோட்டார் சைக்கிலில்  சேனபுரவிற்கு செல்லும் போது வெள்ள நீரில் மூழ்கிய சேனபுரயில் திருமணம் முடித்து இருந்த ஓட்டமாவடி ரிஸ்வான் அவர்களின் ஜனாஸா இன்று மீட்கப்பட்டுள்ளது-

தம்பாளை ஸமட் JP).

 


அந்தனி ஜீவா (26 மே 1944 ) இலங்கை, மலையக எழுத்தாளர்களில் ஒருவர். இதழியல், நாடகத் துறைகளிலும் பங்களித்து வந்தவர். கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர் இன்று காலமானார்




 ரிஸ்கி ஷரீப் (𝐑𝐢𝐬𝐤𝐲 𝐒𝐡𝐚𝐫𝐞𝐞𝐟) காலமானார்

மாவனல்லை ரிஸ்கி ஷரீப் (Risky Shareef) 2025.01.10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்
ரிஸ்கி க்ஷரீப் நீண்ட காலம் லேக் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் சேவையாற்றி உள்ளார்.
சிறிது காலம் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை செந்தூரம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார்
விஷேட ஓய்வு பெறல் திட்டத்தின் கீழ் தினகரனில் இருந்து ஓய்வு பெற்ற ரிஸ்கி ஷரீப் மாவனல்லை ஹெம்மாதகம வீதியில் Book Mark என்ற பெயரில் புத்தக விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
அனாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டு மேலான ஜன்னதுல் பிர்தெளஸ் என்ற சுவன பாக்கியத்தை அருள்வானாக
ஜனாசா நல்லடக்கம் 2025.01.11 ஆம் திகதி சனிக்கிழமை காலை 12.00 மணிக்கு கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் மைய்யவாடியில் நடைபெறும்

 


 அக்கரைப்பற்று நகர் பிரிவு 4 டீன்ஸ் வீதியில் ல் வசித்துவரும் முர்சித் வபாத் ஆனார்கள் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


இவர் கலீல் (ரேடியோ கடை) உவைஸா தம்பதியரின் அன்பு புதல்வரும்


ஜீனாஸின் அன்பு கணவரும்


சப்ராஸ் Y5 Hut அவர்களின் அன்பு சகோதரரும்

ஆவார்


ஜனாஸா தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ளது


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்

 


காத்தான்குடி 04ம் குறிச்சி அறபிக்கலாசாலை வீதியை பிறப்பிடமாகவும் கொழும்பில் வசித்துவந்த சகோதரர் மாஹிர் ஹாஜியார் அவர்கள் பஸ் விபத்தில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்
அன்னார் மர்ஹூம் றாஸிக்(AA)டபள் ஏ அவர்களின் அன்பு மகனாவார்கள்.

 


கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார், அவருக்கு வயது 91.


கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார்.


அனைவராலும் கொண்டாடப்படும் எழுத்தாளராக மட்டுமல்லாமல், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் திகழ்ந்தார்.


மலையாள எழுத்துலகில் முன்னோடியாகக் கருதப்படும் வாசுதேவன் நாயரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


விளம்பரம்


சமூகப் பொறுப்புள்ள மாற்று சினிமாவின் முன்னோடி 'ஷியாம் பெனகல்'

ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்

இசைவாணி 6 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய ஐயப்பன் பாடல் இப்போது சர்ச்சையாவது ஏன்?

பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து 'நாம் மதமற்றவர்கள்' என்று 167 ஆண்டுக்கு முன்பே முழங்கிய 14 வயது சிறுமி


தீவிர வாசிப்பாளரான வாசுதேவன்

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் 1933-ம் ஆண்டு பிறந்த வாசுதேவன் நாயரின் குடும்பத்தில் வாசிப்பு என்பது ஊக்குவிக்கப்படவில்லை என்றாலும், அவர் தீவிர வாசிப்பாளராக இருந்தார். மிக இளம் வயதிலேயே எழுதத் தொடங்கினார். பல்வேறு இதழ்களில் அவருடைய படைப்புகள் வெளியாகின.


"என் வயதையொத்த சிறுவர்களை போன்று, எனக்கு விளையாட்டில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. நான் தனிமையில் விளையாடும் ஒரே விளையாட்டு 'எழுதுவதுதான்'," என 'அவுட்லுக்' இதழுக்கு அளித்த பேட்டியில் வாசுதேவன் நாயர் தெரிவித்திருந்தார்.


கல்லூரியில் வேதியியல் படித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு கணிதம் கற்பித்தார். பின்னர் அவர், புகழ்பெற்ற மாத்ருபூமி வார இதழில் பணிக்கு சேர்ந்தார். விரைவிலேயே, பல நாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, செய்தித்தாள்களில் கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள் மற்றும் பயணக் கட்டுரைகள் என, எழுத்தாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.


பத்திரிகை ஆசிரியராக பல இளம் எழுத்தாளர்களை கண்டறிந்து, அவர்களின் எழுத்துகளை வெளியிட்டதற்காக வாசுதேவன் நாயர் அதிகம் பாராட்டப்படுகிறார். அந்த இளம் எழுத்தாளர்கள் பலர் தற்போது பிரபலமானவர்களாக உள்ளனர்.


சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?

25 டிசம்பர் 2024

கீழ்வெண்மணி: உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் - 1968, டிசம்பர் 25 அன்று இரவு நடந்தது என்ன?

3 மணி நேரங்களுக்கு முன்னர்

புகழ்பெற்ற புத்தகங்கள்

நாயரின் 'நாலுகெட்டு' எனும் நாவல், கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவருவது குறித்துப் பேசுகிறது. இந்த நாவலுக்கு 1959-ம் ஆண்டுக்கான கேரளாவின் உயர் இலக்கிய விருது கிடைத்தது. பத்தாண்டுகள் கழித்து, இந்த புத்தகத்தைத் தழுவி, அரசாங்கத்தின் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக படமாக எடுக்கப்பட்டது. அப்படத்திற்கு மாநில அரசின் விருது கிடைத்தது.


இந்து புராணமான மகாபாரதத்தை பீமன் கதாபாத்திரத்தின் வாயிலாக கூறிய 'ரந்தமூழம்' எனும் நாவல், இந்திய இலக்கியத்தில் மிக உன்னதமான படைப்பாகக் கருதப்படுகிறது.


சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?


தன்னுடைய வாழ்நாளில் ஞானபீடம் உள்ளிட்ட பல விருதுகளை அவர் வென்றுள்ளார்.


இலக்கியத்தைத் தாண்டி மலையாள சினிமாவில் திரைக்கதையாசிரியராகவும் இயக்குநராகவும் புகழ்பெற்று, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றுள்ளார்.


கேரளாவில் 16-ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட 'ஒரு வடக்கன் வீரகதா' திரைப்படத்தில், பிரபலமான நாட்டுப்புறக் கதையில் வில்லத்தனம் மற்றும் கௌரவம் ஆகியவை குறித்த பொதுவான கருத்தை கேள்விக்குட்படுத்தியிருப்பார்.


மிக வலுவான வசனங்கள் மற்றும் நடிப்புகளுடன் மலையாள சினிமாவின் மிகச்சிறந்த படமாக இது கருதப்படுகிறது.


பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆடுகளம் யாருக்கு சாதகம்? இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என்ன?

25 டிசம்பர் 2024

மோதியுடன் மோகன் பாகவத் மறைமுக யுத்தமா? கோவில் - மசூதி பற்றிய பாகவத் பேச்சுக்கு துறவிகள் எதிர்ப்பு

25 டிசம்பர் 2024

பிரபலங்கள் கூறுவது என்ன?

சமீபத்தில் அவருடைய சிறுகதைகளை தழுவி, மனோரதங்கள் என்ற பெயரில் திரை-தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன் லால், ஃபஹத் ஃபாசில் போன்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.


இந்த தொடரில் நடித்த மோகன்லால், நாயரை 'கேரளாவின் பெருமை' என்று அழைத்துள்ளார்.


"நீங்கள் எந்த ஒரு படத்திலும் அதன் வசனத்தை மாற்ற இயலும். ஆனால் எம்.டி.நாயரின் படத்தில் வரும் வசனங்களை மாற்ற இயலாது. ஏனெனில், கதையை புரிந்துகொள்வதற்கு அவரின் வசனங்கள் மிக முக்கியம்," என்றார் மோகன்லால்.


நேர்காணல்களில் வாசுதேவன் நாயர் பேசும் போது, அடிக்கடி அவர் படிக்கும் புத்தகங்கள் பற்றி பேசுவார்.


கடந்த ஆண்டு அவர் தன்னுடைய 90வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் படி எழுதிய கட்டுரையில், மாத்ரூபூமியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரேயம்ஸ் குமார், "வாசுதேவன் நாயர் எப்போதும் புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாசிப்பார்", என்று குறிப்பிட்டிருந்தார்.


"நான் உட்பட வருங்கால சந்ததியினர் நாயரிடம் இருந்து எதைக் கற்றுக்கொள்ளலாம் என்று யோசிப்பேன். அது நிச்சயமாக அவருடைய கவனம் சிதறாமல் இருக்கும் போக்கு தான். அவரை நான் பார்க்கும் போது, புத்தகங்களுடனே காணப்படுவார். அதில் மொத்தமாக மூழ்கி, கிட்டத்தட்ட ஒரு தவம் மேற்கொள்வது போல் புத்தகங்கள் படிப்பார். மார்குய்ஸ் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் மற்றுமின்றி, சமீப காலங்களில் வெளியான புத்தகங்களும் அவருடைய மேசையில் எப்போதும் இருக்கும்," என்று எழுதினார் ஸ்ரேயம்ஸ் குமார்.

 



பேராசிரியர் அச்சி முஹம்மது இஷாக்.

பேராசிரியர் அச்சிமுகம்மது இஷ்ஹாக் காலமானார். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ - ஏ. ஷபாஅத் அஹமட் - நிந்தவூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசிப்பவரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும், அட்டாளைச்சேனை அரபிக் கல்லூரியின் பொறுப்பாளருமான பேராசிரியர் அல்ஹாஜ். அச்சிமுகம்மது இஷ்ஹாக் அவர்கள் நேற்றிரவு புனித மக்காவில் இறையழைப்பை ஏற்றுக்கொண்டார். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன். தனது பேரப்பிள்ளைகள் சகிதம் புனித மக்காவில் உம்ரா கடமைகளை நிறைவு செய்த கையோடு இலங்கை நேரப்படி இரவு 8.00மணிக்கு அன்னாரின் உயிர் பிரிந்தது. அன்னாரின் ஜனாஸா தற்போது மக்கா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம் பூர்வாங்க நடவடிக்கைகளின் பின்னர் மக்காவிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் இஷ்ஹாக் அவர்கள் நிந்தவூரைச் சேர்ந்த மர்ஹும் முத்துமுகம்மது ஹாஜியார், கதீஜா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற நஸ்லி இஷ்ஹாக்கின் பாசமுள்ள கணவரும், காலஞ்சென்ற பொறியியலாளர் பஸீல் ஏ. மஜீத் அவர்களின் மருமகனும், மெரீனா அப்துல் மஜீத் மஹ்றூப் அவர்களின் மச்சானும், மரியத்தின் சகோதரரும், காலஞ்சென்ற உதவி அரசாங்க அதிபர் இப்றாலெவ்வையின் மைத்துனரும், அல்ஹாஜ். எம். ரி. ஏ. தௌபீக் (ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமாவார். அன்னாரின் மறுமை வாழ்வு பிரகாசமாய் அமைய நிந்தவூர் - எனது மண் பிரார்த்திக்கிறது.


நிந்தவூரின் தீன்.
தொழுகையினை என்றும் இமாம்ஜாமாத்துடன் நிலையாக கடைப்பிடித்தார்.
ஜாவத்த பள்ளியில் இவருக்கு என்று பிரத்தியேக இடம் உண்டு.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் தொடர்ச்சியாக மறைந்த தலைவருக்கு பக்கபலமாக இருந்து பல உதவிகளை கட்சிக்காக செய்தவர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக அதிபராக (Chancellor) தனது ஓய்வு காலத்தில் கடமையாற்றினார்.
நிந்தவூரின் வளர்ச்சியில் மாத்திரம் அன்றி இலங்கையின் பல கிராமங்களில் இவரின் சேவை பலருக்கு தெரியாமல் நடந்துள்ளது.
புனித மக்கா நகரில் தனது உம்றா கடமையினை நிறைவேற்ற குடும்பத்துடன் சென்ற வேளை அவருக்கு இறை அழைப்பு கிடைத்துள்ளது.
அன்னாருக்கும் அன்னாரின் சந்ததிகளுக்கும் இவ்வுலகிலும் மறுமையிலும் இறைவனின் அருள் மென்மேலும் கிடைக்கட்டும்.

 



காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர்) காலமானார்'' என்று மியாட் மருத்துவமனை கூறியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 

முன்னாள் ராஜாங்க அமைச்சரான சேகு இஸ்ஸதீன்  அவர்களுடைய ஜனாஸா தொழுகை இன்று அக்கரைப்பற்று பட்டினின  ஜும்மா பள்ளிவாயலில் தொழுகை நடத்தப்பட்டு பின்பு அ தைக்காதடி மையவாடியில் நல்லடக் கம் செய்யப்பட்டது.  அக்கரைப்பற்றையும்  அயல் கிராமத்தையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கண்ணீர் மல்கி உருகி பிரார்த்தித்து பிரியா விடை கொடுத்து அனுப்பினர் இறுதி ஜனாஸாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, ஹசன் அலி மற்றும் எம் எஸ் உதுமாலெப்பை  எம்பி ஆகியோரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்திருந்தார்கள்


#PulmottaiFirthowze.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....
கிண்ணியா, இடிமனைச்சேர்ந்த முகம்மது காசிம் அமீன் என்பவரின் அன்பு மனைவியும் குறிஞ்சாக்கேணி MOH அலுவலகத்தில் பொதுச்சுகாதார மருத்துவமாதுவாக (PHM) கடமை செய்தவருமான அப்துல் லெத்தீப் #பர்ஷானா என்பவர் இன்று 25-11-2024 அதிகாலை 2.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்.
(நல்லடக்கம் பற்றிய தகவல் விரைவில்)
இவர் வைத்தியசாலையில் கடமை செய்கின்றபோதும் ஏனைய கடமைகளின்போதும் நோயாளிகளுடனும் அவர்களுடைய உறவினர்களிடனும் அன்பாக பேசிப்பழகி தன்னால் முடியுமான உதவி ஒத்தாசைகளையும் செய்யக்கூடிய மிகவும் நல்ல பண்புகளைக் கொண்டவர்.
யா அல்லாஹ்!
இவர் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து இவருடைய மறுமை வாழ்வை சிறப்பாக்கி விடுவாயாக...ஆமீன்!

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.