Showing posts with label Janaza. Show all posts


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை முன்னாள் அத்தியட்சகர்,முன்னாள் சுகாதார வைத்திய அதிகாரி  Dr. Jahfer (MBBS) சற்று முன்னர் கொழும்பில் வபாத்தானார்.

இவர் தம்பி போடியாரின் மகனும், இஸ்மாயில் ஸ்ரோர்ஸ் இன் மருமகனும், Eng. Haarun, Prof. Muzaathik, Eng.Rasaak, Asroff (Bsc)ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவரது ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இன்னாலில்லாஹ்





அக்கரைப்பற்று 12 உபதபாலக வீதி முதலாம் குறுக்கு தெருவை (#மாநகரசபை_முன்_வீதி ) சேர்ந்த



#ஒஸாமா (23 வயது) அவர்கள் வபாத்தானார்கள்.


#இன்னாலில்லாஹி_வ_இன் னா_இலைஹி_ராஜிஊன்


இவர்

#அஸ்மி Azmy Abdul Cader மற்றும்

#நிம்ஸா தம்பதியினரின் அன்பு #மகனும்

#ஹம்தான்

#நதா

#லுக்மான்


ஆகியோரின் அன்பு

#சகோதரரும்

Saneej Ahamed அவர்களின் #மருமகனும்


மர்ஹும் சுபைத்தீன் மாஸ்டர் (#SAFCO_SUBAIDEEN) அவர்களின் மருமகளின் மகனும்

Naleer Abdul Cader

ஆகியோரின் சகோதாரரின் மகனும் ஆவார்.


#ஜனாஸா_

#அம்பாரை_வைத்தியாசலைய ல் உள்ளது


நல்லடக்கம் பற்றி இன்ஷா அல்லாஹ்! பின்னர் அறிவிக்கப்படும்.

 


தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிந்தவூர் நீர்வழங்கல் திட்ட காரியாலயத்தில் மாணி வாசிப்பாளராக கடமையாற்றும்


அக்கரைப்பற்றைச் சேர்ந்த Mia Juman அவர்களின் அன்பு மகனார் அக்சத் அலி (தரம் -04 பாடசாலை மாணவர்) இன்று (27) இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.


#இன்னாலில்லாஹி_வ_இன் னா_இலைஹி_ராஜிஊன்

இறைவா, அந்த பச்சிளம் சிறுவனது நற்கிரிகைகளை ஏற்று மேலான


#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக...


அவரின், பெற்றோர், சகோதர்கள் மற்றும் குடும்பத்திற்கு பொறுமையையும் வழங்குவாயாக ஆமீன்.


ஜனாஸா நல்லடக்கம் காலை 10:00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள பட்டின பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

(Rep/Fathima Safnaaz(AA.L)

கண்டி உடதவின்னயினைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி AM.வைஸ் அவர்கள் இன்று பேராதனை வைத்தியசாலையில் காலமானார். 

சட்டத்தரணியாக கடந்த 3 தசாப்தங்களக்கு மேலாக தொழில் புரிந்து வந்த மர்ஹீம் வைஸ் சட்டதரணியாக, தேசிய சேமிப்பு வங்கியிலும், பின்பு மத்திய மாகாண சபையில் சட்ட ஆலோசகராகவம் பணிபுரிந்து வந்த மூத்த வழக்கறிஞர் ஆவார்.

 அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தவர்களுக்கு  www.ceylon24.com  தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது.


 ( வி.ரி. சகாதேவராஜா)

 சர்வதேச ஆசிரியர் தினத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த பிரபல ஆசிரியரும் எழுத்தாளருமான கலைவேள் மாறன் யூ ஸெயின் என அழைக்கப்படும் உதுமாலெப்பை ஸெயின் இன்று (6) திங்கட்கிழமை காலை காலமானார்.

சம்மாந்துறை கலாபிவிருத்தி கழகம் உருவாக்கிய  இலக்கிய ஆளுமைகளில் ஒன்றான மாறன் யூ ஸெயின் தனது 86 வது வயதில் காலமானார்.

ஆசிரியராக அதிபராக பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி இலக்கிய உலகத்திலும் கலாபிவிருத்தி கழகம் தேசியகலைஇலக்கியதேனகம் சம்மாந்துறை  தமிழ்எழுத்தாளர்சங்கம் போன்ற பல்வேறு இலக்கிய அமைப்புகளூடாக தமிழ் இலக்கியத்திற்கும் சம்மாந்துறையின் இலக்கியத்திற்கும் பெரும் பங்காற்றியவர் .

புரட்சிமாறன் என்பது அவரைப் பொறுத்தளவில் பெயரில் மட்டுமல்ல குணத்திலும் அச்சுட்டாக அவரிடம் ஒட்டி இருந்தது. 
கவிதை நாடகம் இலக்கிய விமர்சனம் என்பதில் ஈடுபாடு கொண்டிருந்த ஒரு இலக்கியவாதியாகவும் மனித தர்மங்களை பேணுகிற மானுடம் விழுமிய மனிதராகவும் கொள்கையளவில் இல்லாமல் செயற்பாட்டளவில்  வாழ்ந்த ஒருவர். 

அவருடைய விருந்தோம்பல் இன்னும் ஒருவருக்கு சாத்தியமாகுமா என்று யோசிக்கும் அளவுக்கு அவர் வாழும் காலத்தில் இருந்தது..

அனாயாசமான அவருடைய நடையும் எப்பொழுதும் அவருடன் கூட இருக்கும் ஜின்னா தொப்பியும் கக்கத்தில் இருக்கும் பத்திரிகைக் கட்டும் நிமிர்ந்து குனிந்து தான் உண்டு தன் பாடுண்டு எனும் நடையும்   அவரை நினைவு கூர்வன. 


அவரது முற்போக்கு கொள்கைகளோடு இந்த சமரசத்தையும் செய்து கொள்ளாத ஒரு இறுக்கமான கொள்கையோடு வாழ்ந்த ஒருவர்.

அன்னாரின் புதல்வர் சம்மாந்துறை வலய ஆசிரிய ஆலோசகர் கவிஞர் இசட் .எம்.றிஸ்வி மரணச் செய்தியை வெளியிட்டார்.

இன்று மாலை  5 மணியளவில் சம்மாந்துறை சலாம் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார் 




காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவரான ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப். MCM. ஜௌபர் JP அவர்கள் சற்று முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.


இ்ன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


اللهم اغفرله والرحمه.....


அன்னார்  MJ. ஹஸனுல் ஜெஹீர்  (Medical Final Year Student) அவர்களின் அன்பு தந்தையும், சம்மேளன உப தலைவர் ஜனாப். MAM. ஸுஹைர்  B.Com  (Accountant - RDA) அவர்களின் மச்சானும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் ஜனாப். MCM. அன்வர் அவர்களின் சகோதரரும் ஆவார்கள்.


அன்னாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கமானது இன்ஷா அள்ளாஹ் இன்றைய தினம் 2025.09.22 ஆம் திகதி இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து காத்தான்குடி - 01 மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அன்னாரின் மறுமை வாழ்விற்காவும் ஈடேற்றத்திற்காகவும் இரு கரம் ஏந்தி பிரார்த்தித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


ஊடகப் பிரிவு,

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,

காத்தான்குடி.

 


#மட்டக்களப்பில்  பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் #நிமலரஞ்சன்  காலமானார்.


 மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட  காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள்   திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  இன்றைய தினம் இயற்கை எய்தினார் .


திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர் மட்டக்களப்பு மக்களாலும் போதனா வைத்தியசாலை சமுகத்தாலும் பார்க்கப்படுகிறார். தனது வைத்தியத் திறமையினால்  நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த  வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல  முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.


அன்னாரின் இழப்புக்கு மட்டக்களப்பு மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர் ஆற்றிய சேவை அவரது ஆத்மாவை நிச்சயம் இறைவன் திருப்பாதம் சேர்க்கும்.


 கல்முனை நீதிமன்ற முதலியார்கு .மதிக்குமார்    08/09/2025 இரவு 11 45 மணியளவில் இயற்கையெய்தினார்.   


இவர் அக்கரைப்பற்று. நிதிமன்ற. அலுவலர் யாழினியின் அன்புக்கணவருமாவார்.

 அன்னாரின் நல்லடக்கம் 09/09/2025 பிற்பகல் 4 மணியளவில் இடம்பெறும்1


பொத்துவிலைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளரும், கவிஞரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஐ.ஆதம்லெப்பை அவர்கள் இன்று காலமானார்.


(எஸ்.எம்.அறூஸ்)


பொத்துவிலைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளரும், கவிஞரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஐ.ஆதம்லெப்பை அவர்கள் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


அன்னார்இ  ஆதம் கண்டு அலிமாக் கண்டு என்பவரது கணவரும் சட்டத்தரணி ஏ.எல் ஹில்மி, கிழக்கு மாகாண விவசாய,  காணி நிர்வாகம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரம், மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி,   சட்டத்தரணி ஏ.எல்.பௌமி , ஏ எல் றிஸ்மி, மர்ஹூமா  பாத்திமா றிஸ்னா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். 


பொத்துவில் பிரதேசத்தின் உயரிய குடும்பத்தில் பிறந்து கல்விப் புலத்திலும், இலக்கியப் புலத்திலும் சிறந்த  ஆளுமையாக விளங்கியதுடன் அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக பணியாற்றி தனது பிரதேசத்தின் வளர்ச்சிக்காகவும், கல்வி முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் மர்ஹூம் ஆதம்லெப்பை அவர்களாகும்.


பொத்துவில் பிரதேசம் அம்பாரை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்தாலும் கல்வி,இலக்கியம், விளையாட்டு, அரசியல் ரீதியாக தேசிய  பல அடைவுகளை ஏற்படுத்திய பலரும் பிறந்து வளர்ந்த மண்ணாகும். அந்த  வகையில் தனது பல்துறை  ஆற்றலினால் பொத்துவில் பிரதேசத்தை முதன்மைப்படுத்திய தலைவராக மர்ஹூம் ஆதம்லெப்பை பார்க்கப்படுகின்றார்.


இலங்கையின் பாடப்புத்தகத்தில் ஆதம்லெப்பை அவர்களின் வெண்ணிலா என்கின்ற கவிதை இடம்பெற்றுள்ளதையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களான இருந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆகியோருடன் மிக நெருக்கமாக செயற்பட்டு பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும், தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதிலும் முன்னின்று உழைத்த  அரசியல் தலைவராவார்.

ஏழை,பணக்காரன் என்று வயது வித்தியாசமில்லாமல் எல்லோருடனும் அன்பாகப்பழகும் ஆதம்லெப்பை அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தான் பிறந்த மண்ணிற்கும், சமூகத்திற்கும் அளப்பரிய பணிகளை ஆற்றிய  ஆதம்லெப்பை அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

  


முன்னாள்.அமைச்சர்,திகாமடுல்ல மாவட்டத்தின் முன்னாள் எம்.பி தயாரத்ன காலமானார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் அவர் முக்கிய அமைச்சு பொறுப்புகளை வகித்தவராவார்.


#Jameel

நிந்தவூர் 17 ஐ சேர்ந்த மர்ஹும் தமீம் ஆலீம் அவர்களின் மகன்  MT ஐனுல் ஹுதா  (முகாமையாளர் காகோ நிறுவனம் அட்டாளைச்சேனை ) அவர்கள் சற்று முன் காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஐிஊன்

 


சட்டத்தரணி அஷாம் சாதிக் துபாயில் காலமானார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் ஜன்னத்தை அல்லாஹ் அளித்திடட்டும்!

குறிப்பு:
ஜனாஸா தற்போது UAE சார்ஜா அஜ்மான் மெடிக்கல் சிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 
See less



(Rep/Lafir-(SC)

 சட்ட உதவி ஆணைக்குழுவைச்.சேர்ந்த சட்டத்தரணி சாபிர் காலமானார்.

சட்டத்தரணியும், கல்முனை காணிப்பதிவகத்தின் கீழ் பிரசித்த நொத்தாரிசுவாக கடமையாற்றுபவரும், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான பணிப்பாளரும் (Legal Aid Commission), சம்மாந்துறை, நீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதியுமான M.T.சபீர் அகமட் அவர்கள் இன்று காலமானார்கள்.


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஸா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறையில் நல்லடக்கம் செய்யப்படும். 


 


போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.


அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது. போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


"அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.


ஆயிரக்கணக்கான மக்களுக்கு "ஈஸ்டர் வாழ்த்துகள்" தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.


விளம்பரம்


சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, "அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துகள்" என்று கூறினார்.


ஆசிர்வாதம் வழங்கிய பிறகு, அவர் வாகனத்தில் ஏறி வாடிகன் சதுக்கத்தைச் சுற்றிவந்தார். அந்த நேரத்தில், பல முறை வாகனத்தை நிறுத்தி, குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.


ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மக்கள் முன்பு தோன்றிய போப்பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவிக்க மக்கள் முன்பு தோன்றிய போப்

"அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை பிரான்சிஸின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறேன்'' என கார்டினல் ஃபாரெல் தெரிவித்தார்.


''இன்று காலை 7:35 மணிக்கு (உள்ளூர் நேரம்) ரோமின் பிஷப் பிரான்சிஸ், தந்தையிடம் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது''


''நற்செய்தியின் விழுமியங்களை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும் நமக்குக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஏழைகளுக்கு மிகவும் ஆதரவாக வாழ அவர் நமக்கு கற்பித்தார்'' எனவும் அவர் கூறியுள்ளார்.


போப் பிரான்சிஸ், கத்தோலிக்க திருச்சபையில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர். அதே நேரத்தில், பாரம்பரிய நிகழ்வுகள் தொடர வேண்டும் என்று கருதும் பழமைவாதிகளிடையேவும் இவர் பிரபலமாக இருந்தார்.


உலகின் தெற்குப் பகுதியில் இருந்து வந்த முதல் போப் இவர்தான்.


இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஐந்து வார மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து திரும்பினார்.


உலக மக்களுக்கு போப்பின் இறுதி செய்தி

மறைந்த போப் பிரான்சிஸ் ஈஸ்டர் தினத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையே உலக மக்களுக்கான அவரது கடைசி செய்தியாக அமைந்தது. ஈஸ்டர் ஞாயிறன்று போப்பின் அறிக்கையை அவரது உதவியாளர் ஒருவர் வாசித்தார்.


அந்த செய்தியில்,"மத சுதந்திரம், சிந்தனைக்கான சுதந்திரம், கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் இன்றி அமைதி இல்லை" என போப் தெரிவித்திருந்தார்.


காஸா மக்களையும், குறிப்பாக அங்கு வாழும் கிறிஸ்தவ மக்களையும் குறிப்பிட்ட அவர், அங்கு நிகழும் மோதல்கள் மரணத்தையும், அழிவையும் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.


மேலும் இந்த போர் "மோசமான மனிதாபிமான சூழ்நிலையை" உருவாக்குகிறது. உலகளாவிய யூத எதிர்ப்புவாதம் வளர்ந்து வருவது "கவலைக்குரியது" என்றும் அவர் கூறினார்.


"உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மோதல்களில் கொலை செய்வதற்கான தாகம் எவ்வளவு அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார்.


"அனைத்து இஸ்ரேலிய மற்றும் பாலத்தீன மக்களுக்காக எனது அன்பை வெளிப்படுத்துகிறேன். போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுங்கள், பணயக்கைதிகளை விடுவியுங்கள். அமைதியான எதிர்காலத்தை விரும்பும் மக்களுக்கு உதவுங்கள்." எனவும் போப் கூறியுள்ளார்.


யுக்ரேன் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் "நீடித்த அமைதியை அடைவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும்" எனவும் போப்பின் இறுதி அறிக்கை கூறுகிறது.


பவுன்சராக பணியாற்றிய போப்

பியூனஸ் அயர்ஸில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக உயர்ந்தவர் போப் பிரான்சிஸ். அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 1936 டிசம்பர் 17ம் தேதி போப் பிரான்சிஸ் பிறந்தார். பாசிசத்தின் பிடியில் இருந்து தப்பிக்க இத்தாலியில் இருந்து வெளியேறிய போப் பிரான்சிஸ், 5 குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் மூத்த மகன் ஆவார்.


சான் லொரெஞ்சோ நகரின் உள்ளூர் கால்பந்து க்ளப்பின் ஆதரவாளராக இருந்த போப் பிரான்சிஸ், டாங்கே நடனத்திலும் விருப்பம் கொண்டவர்.


இளம் வயதிலேயே கடுமையான நிமோனியா தாக்குதலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் நுரையீரலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தது. இதனால் அவர், தனது வாழ்நாள் முழுவதும் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்ற நிலையும் ஏற்பட்டது.


வயதுமூப்பின் காரணமாக தனது வலது காலில் ஏற்பட்ட மூட்டுவலியால் மிகவும் பாதிக்கப்பட்டார். இந்த பிரச்சனையை போப், 'உடல்ரீதியிலான அவமானம்' என்று குறிப்பிட்டார்.


வேதியியலில் பட்டம் பெறும்வரை, போப் பிரான்சிஸ் பவுன்சராகவும், தரையை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டார்.


உள்ளுர் தொழிற்சாலை ஒன்றில் எஸ்தர் பலெஸ்ட்ரினோவுடன் பணியாற்றிவர் போப் பிரான்சிஸ். எஸ்தர் பலெஸ்ட்ரினோ, அர்ஜெண்டினாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் என்பதால் கடும் சித்திரைவதைக்கு உள்ளானவர், இறுதியில் அவரது சடலம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினரான போப் பிரான்சிஸ், தத்துவயியல் பயின்றவர் என்பதும் இலக்கியம் மற்றும் மனோதத்துவத்தை பயிற்றுவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, துரிதமாக பதவி உயர்வு பெற்ற போப் பிரான்சிஸ், 1973 இல் அர்ஜென்டினா மாகாணத்தின் மேலதிகாரியானார்.



 காத்தான்குடியைப். பிறப்பிடமாகவும்,அக்கரைப்பற்றை வதிவிடமாகவும் கொண்ட

புரோட்வே #BROADWAY_MOTORS உரிமையாளர்

#இஸ்மாயில் காலமானார்


Sabry

Sacky Ismail 

Sathila

ஆகியோரின் தந்தையும்


Dr Munnawwer

இன் மாமனாரும்

ஆவார்


ஜனாஸா

தொழுகை

#9மணிக்கு

#மர்கஸ் #பள்ளிவாசலில்

நடைபெற்று

#தைக்காநகர்

#மையவாடியில்

நல்லடக்கம்

இடம்பெறும்


தகவல்

மகன் சப்ரி

 


Akkaraipattu 17

ஜின்னா வீதியை சேர்ந்த #மஸ்வூவுத்

(#முனீர் - SANA ELECTRICAL) காலமானார்.


அன்னார் 

மர்ஹூம்கள் #யூசுப்_மாஸ்டர் 

முஹம்மது பாத்தும்மா (#மம்மாத்தும்மா_டீச்சர்)

ஆகியோரின்

#மகனும்


#றியாசா 

அவர்களின் #கணவரும் 


#சறபா 

#ஹசீம் 

#சயான் 

ஆகியோரின் 

#தந்தையாரும் 


ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் #தாஹா_GS அவர்களின் 

#மருமகனும் 


மர்ஹூம் #நிஸ்பா_டீச்சர் 

#ஜெஸ்மின்_டீச்சர் 

#நளீர் (GAMA CONSTRUCTION)

ஆகியோரின் 

#சகோதரரும் 


மர்ஹும் 

#தாஜுதீன்_மாஸ்டர் 

ஓய்வு பெற்ற அதிபர் #சஹாப்தீன்

(#அன்சார்_மாஸ்டர்)

ஆகியோரின்

#மைத்துனரும் ஆவார்.


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


Taqwa Emergency service

0742421817

 


அக்கரைப்பற்று ஏவிவி வீதியில் அரசயடி சந்தியில் வசித்துவரும் அப்துல் பதாஃ மௌலவி வபாத் ஆனார்கள்


இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்


நுஸ்வியாவின் அன்பு கணவரும்


ஹஸ்ஸான்

சம்ஹா

லெபீபா

ஹஸ்னான் ஆகியோரின் அன்பு தந்தையும் 



இல்யாஸ் மௌலவி யின் அன்பு சகோதரரும் 


அன்சார் தப்லீக் அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்கள்


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4.30 மணியளவில் ஜும்மா பட்டியடிப்பிட்டி பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு பட்டியடிப்பிட்டி மையவாடியில் நடைபெறும் 


Taqwa Emergency service

0742421818

 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பியின் தந்தையார் பதியுதீன் ஹாஜியார் நேற்று காலமானார் .


 ஜனாஸா தற்போது இன்று(18) தில்லையடி - அல்மினா புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு

புத்தளம், ரத்மல்யாய அல்- காசிமி சிட்டி மையவாடியில் இன்று அஸர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.





இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.