Showing posts with label criminal. Show all posts



 ஹங்கம, ரன்ன, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன.


கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவரும் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் 28 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில்

குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது சிறையில் உள்ளார், மேலும் அந்த தம்பதியினர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் இன்று குறித்த உடல்களின் பிரேத பரிசோதனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் குறித்து ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.


இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



 

முல்லைத்தீவில் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி 

முல்லைத்தீவு, முத்தையன்கட்டுப் பகுதியில் அண்மையில் இராணுவ முகாம் ஒன்று விடுவிக்கப்படவிருந்த நிலையில், அங்கிருந்த தகரங்களை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்த முகாமில் இருந்து தகரங்கள் தருவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இராணுவ வீரர் ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

இதையடுத்து, தகரங்களை எடுப்பதற்காக ஐந்து இளைஞர்கள் அந்த இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்ற இளைஞர்களை இராணுவத்தினர் தடிகள் மற்றும் கம்பிகளால் தாக்கி விரட்டியதாகவும், அதனால் பயந்து ஓடியதாகவும் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்பு மற்றும் விசாரணை

இராணுவ முகாமுக்குச் சென்ற ஐந்து பேரில் நான்கு பேர் திரும்பிய நிலையில், ஒரு இளைஞர் காணாமல் போயிருந்தார். காணாமல் போன இளைஞன் ஓடும்போது முகாமுக்குப் பின்னால் உள்ள முத்தையன்கட்டு குளத்தில் விழுந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது. இதனால் கிராம மக்கள் குளத்தில் இறங்கித் தேடியபோது, அந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இறந்த இளைஞரின் சகோதரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தனது தம்பியை இராணுவத்தினர் அடித்துக் கொலை செய்து குளத்தில் போட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இறந்த இளைஞரின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 


கவர்ச்சிகரமான பெண்களின் பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்களுடன் ஆபாசக் கதைகளையும் இடம்பெற்ற யூடியூப் சேனலை நடத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு, கொழும்பு தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி ஜெயதுங்க நேற்று ஐந்து ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தார். 

குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு தாக்கல் செய்த வழக்கில் சந்தேக நபரான "டோபியா" என்றும் அழைக்கப்படும் திமுத்து சாமர. 


கொழும்பு பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடங்கப்பட்டது. பாலியல் ரீதியாக வெளிப்படையான கதைகளை ஒளிபரப்பும் யூடியூப் சேனலில் தனது புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக ஆசிரியை குற்றம் சாட்டினார். 


வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜரானார். 


சந்தேக நபரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே ஆபாச ஒளிபரப்புகளை நிறுத்திவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது வாடிக்கையாளர் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்கு அனுமதிக்கும் வகையில் மறுவாழ்வு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். 


புகார்தாரர் சந்தேக நபரிடமிருந்து ஏதேனும் இழப்பீடு எதிர்பார்க்கிறாரா என்று நீதிபதி விசாரித்தார். ஆசிரியை இழப்பீடு கோரவில்லை என்று பதிலளித்தார். 


சந்தேக நபர் முன்கூட்டியே குற்றத்தை ஒப்புக்கொண்டது மற்றும் ஆபாச உள்ளடக்கத்தை நிறுத்துவதற்கான அவரது முடிவு உள்ளிட்ட உண்மைகளை பரிசீலித்த பிறகு, தலைமை நீதிபதி ஐந்து ஆண்டுகளுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையையும், ரூ. 2,500 அபராதத்தையும் விதித்தார்.



கனகராசா சரவணன்


இனிய பாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து இன்று (29) மாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு சிஐடியினர் கைது செய்துள்ளனர்.

ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ஆம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு.சந்திவெளி பகுதிகளில் வைத்து சி.ஐ.டியினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்த இனிய பாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டுவந்தவரும் இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சம்பவதினமான இன்று மாலை 4.00 மணியளவில் சி.ஐ.டியினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஐடியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இனியபாரதியை கைது செய்து விசாரணையின் பின்னர் இனிய பாரதியின் முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனிய பாரதியின் சகாக்கள் ஆகிய 4 பேரை சி.ஐ.டியினர் தொடர்ச்சியாக கைது செய்துவருவதையிட்டு இனிய பாரதி மற்றும் பிள்ளையானுடன் தொடர்புபட்டவர்கள் பயப் பீதியில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது .

 

 

கனகராசா சரவணன்



 கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில் பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (28) முன்னாள் கடற்படைத் தளபதியைக் கைது செய்தனர்.

 

அதன்படி, முன்னாள் கடற்படைத் தளபதி இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 


செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று (08) பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர்,"குற்றப்புலனாய்வு திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட விசாரணையாளர்கள் அதற்காகவே செயற்பட்டு வருகின்றனர். 

நீதிமன்ற தேவைக்கு அமைய அதற்கு உரிய விசாரணைகள் அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும். 

நீதவான், பொலிஸார், அகழ்வுடன் தொடர்புடைய நிபுணர் குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றில் முன்வைப்பர். 

அதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. 

அதன் பெறுபேறுகள் என்னவென்று பார்ப்போம்" என்றார்.

 


அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.


சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 

அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும்.

 

அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வருமான அறிக்கையில் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கைகள்) குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகமான சொத்துக்களைக் கொண்டிருந்தால், அவர்கள் அவற்றை எவ்வாறு பெற்றார்கள் என்பதை நீதிமன்றத்தில் விளக்க வேண்டும் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 


மரணமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மேற்பார்வை செய்தார். மேலும், அம்பாறை தடயவியல் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் மற்றும் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். 

இந்தக் கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

 




பாறுக் ஷிஹான்


அம்பாறை பிரதேசத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபரை    அம்பாறை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை நகரில் இன்று (23)  40  கொகைன் போதைப் பொருள் பாக்கெட்டுகளுடன்    நடமாடிய சந்தேக நபரை  விசேட  சோதனை நடவடிக்கையின்போது அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை நகருக்கு குறித்த போதை பொருளை  கொண்டு வந்து விநியோகம் செய்யும் பிரதான சந்தேக நபராக  அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் போதைப்பொருள் மற்றும் ஐஸ் வலையமைப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை  அம்பாறை தலைமையக பிரதான  பொலிஸ் பொறுப்பதிகாரி  அசேல கே. ஹேரத்தின் மேற்பார்வையின்  கீழ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள்    மேற்கொண்டு வருகின்றனர்.

 


கசிப்பு உற்பத்தி பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் திங்கட்கிழமை(19) அன்று மீட்கப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள வயல்வெளியில் நீண்ட காலமாக இயங்கி வந்த மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதே வேளை பொருட்களை மீட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட பொருட்களில் 2 பரள் கோடா பழ வகைகள் கொள்கலன்கள் என்பன உள்ளடங்குவதுடன் பொருட்கள் யாவும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சட்ட நடவடிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

அத்துடன் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழு குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.



 பாறுக் ஷிஹான்


9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு  தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறை நகர அரச  பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை  பாடசாலை  அதிபரான பௌத்த துறவி   கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

கடந்த 15 ஆம்  திகதி அன்று  பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக  வகுப்புகள் நடைபெற்றன.இதன் போது  அன்றைய தினம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது  ​​கழிப்பறைக்குச் சென்ற பல குழந்தைகள் தண்ணீர் விசிறி  சிறு விளையாட்டில் ஈடுபட்டதாக  வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மறுநாள் 16.05.2025 அன்று  பிற்பகல் சுமார் 3.00 மணியளவில்  பாடசாலை அதிபர் தனது  கையில் மூன்று பிரம்புகளை எடுத்து  ஒன்பது குழந்தைகளையும் வரவழைத்து  முழங்காலில் நிற்க வைத்து  அவர்களின் கைகளை சுவரில் வைத்து பிரம்புகள் உடையாத அளவுக்கு பிள்ளைகளின்  முதுகில்  கொடூரமாக அடித்துள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பிள்ளைகள்  நடந்த சம்பவத்தை  பெற்றோரிடம் தெரிவித்தனர். பின்னர்  பெற்றோர்கள் பிள்ளைகளை  பரிசோதித்தபோது  ​​அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம்  காண முடிந்தது.

பின்னர்  இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு  மேற்கொள்ள  தயாராகிக் கொண்டிருந்தபோது  ​​அந்தப் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் குழு  தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட  குழந்தைகளை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது.

எனினும் இன்று  சிறுவர் மறுவாழ்வு மையம் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர்  மற்றும் அம்பாறை  மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஆகியோர் இந்த பிள்ளைகள்  மீதான தாக்குதல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இதே வேளை அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர்   இந்த தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என கூறினார்.

தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின்  ஒரு தாய் 

நாங்கள் எங்கள் குழந்தைகளை கற்றுக்கொள்ள பள்ளிக்கு அனுப்புகிறோம். குழந்தைகள் வித்தியாசமான செயல்களைச் செய்பவர்கள். இந்தக் குழந்தைகள் சிறு  வயதுடையவர்கள்.   கால்நடைகளை அடிப்பது போல் அவர்களை அடிக்க முடியுமா?' என்று கூறினார். என் குழந்தைகள் அந்தப் பள்ளிக்குத் திரும்பப் போக முடியாது என்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் இம்முறை   தரம் 5 பரீட்சை  எழுதுகிறார்கள். அந்தக் குழந்தைகளின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது?என்றார்.


தாக்குதலுக்கு உள்ளான பிள்ளை  இது குறித்து கருத்து தெரிவிக்கையில்

 நாங்கள் இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்றதாகவும்  பல பிள்ளைகள்  தண்ணீரைப் பயன்படுத்தி விளையாடி  கொண்டிருந்ததாகவும் கூறினார். நாங்கள் வகுப்புக்குத் திரும்பியதும்  வகுப்பு ஆசிரியர் பாடசாலை அதிபரான துறவியிடம்  இதைப் பற்றிச் சொன்னார். அதன் பிறகு  அவர் மூன்று பிரம்புகளைக் கொண்டு வந்து எங்கள் முதுகு வலிக்கும் வரை அடித்தார். நாங்கள் சத்தமாக அழுதோம் ஆனால் அவர்  எங்களை அடித்தார்  அடிக்க வேண்டாம் என்று சொன்னோம். அவர்  எங்களை அடித்தார்.எனவே  இப்போது இந்தப் பள்ளிக்குப் போக முடியாது என்றார்.

 


தெஹிவளை நெதிமால பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.கடையொன்றின்மீது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.


கடையொன்றின் மீது இடம்பெற்ற இத்துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஆதரவு வழக்கில் 10 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் விடுவிக்கப்பட்டனர்


மே 16, 2025 இரவு 8:53 மணிக்கு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் இன்று சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) அவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணைகள் முடிவடைந்ததாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததை அடுத்து, கொழும்பு கூடுதல் நீதிபதி பசன் அமரசிங்க அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.

வழக்கு கோப்பை மறுஆய்வு செய்த பின்னர், ஏப்ரல் 9 அன்று சட்டமா அதிபர் அவர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இந்த அறிவுறுத்தல்களின் பேரில், பன்னிரண்டு நபர்களையும் விடுவிக்க அரசுத் தரப்பு நடவடிக்கை எடுத்தது. 

 


பொது உதவி🚨

சீதுவாவில் 2 பேர் கொல்லப்பட்டு 1 பேர் காயமடைந்ததில் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.


ஏதேனும் தகவல் உள்ளதா? சீதுவா காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும்

📞071 8591637

📞011 2253522


#SriLanka #Seeduwa #LKA


@SL_PoliceMedia

சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டது


 #UpDate:

டான் பிரியசாத் சூடு தனது வீட்டில் இருந்தபோது சுடப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.