Showing posts with label criminal. Show all posts

 


அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.


சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 

அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும்.

 

அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வருமான அறிக்கையில் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கைகள்) குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகமான சொத்துக்களைக் கொண்டிருந்தால், அவர்கள் அவற்றை எவ்வாறு பெற்றார்கள் என்பதை நீதிமன்றத்தில் விளக்க வேண்டும் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 


மரணமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மேற்பார்வை செய்தார். மேலும், அம்பாறை தடயவியல் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் மற்றும் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். 

இந்தக் கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

 




பாறுக் ஷிஹான்


அம்பாறை பிரதேசத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபரை    அம்பாறை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை நகரில் இன்று (23)  40  கொகைன் போதைப் பொருள் பாக்கெட்டுகளுடன்    நடமாடிய சந்தேக நபரை  விசேட  சோதனை நடவடிக்கையின்போது அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை நகருக்கு குறித்த போதை பொருளை  கொண்டு வந்து விநியோகம் செய்யும் பிரதான சந்தேக நபராக  அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் போதைப்பொருள் மற்றும் ஐஸ் வலையமைப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை  அம்பாறை தலைமையக பிரதான  பொலிஸ் பொறுப்பதிகாரி  அசேல கே. ஹேரத்தின் மேற்பார்வையின்  கீழ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள்    மேற்கொண்டு வருகின்றனர்.

 


கசிப்பு உற்பத்தி பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் திங்கட்கிழமை(19) அன்று மீட்கப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள வயல்வெளியில் நீண்ட காலமாக இயங்கி வந்த மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதே வேளை பொருட்களை மீட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட பொருட்களில் 2 பரள் கோடா பழ வகைகள் கொள்கலன்கள் என்பன உள்ளடங்குவதுடன் பொருட்கள் யாவும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சட்ட நடவடிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

அத்துடன் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழு குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.



 பாறுக் ஷிஹான்


9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு  தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறை நகர அரச  பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை  பாடசாலை  அதிபரான பௌத்த துறவி   கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

கடந்த 15 ஆம்  திகதி அன்று  பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக  வகுப்புகள் நடைபெற்றன.இதன் போது  அன்றைய தினம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது  ​​கழிப்பறைக்குச் சென்ற பல குழந்தைகள் தண்ணீர் விசிறி  சிறு விளையாட்டில் ஈடுபட்டதாக  வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மறுநாள் 16.05.2025 அன்று  பிற்பகல் சுமார் 3.00 மணியளவில்  பாடசாலை அதிபர் தனது  கையில் மூன்று பிரம்புகளை எடுத்து  ஒன்பது குழந்தைகளையும் வரவழைத்து  முழங்காலில் நிற்க வைத்து  அவர்களின் கைகளை சுவரில் வைத்து பிரம்புகள் உடையாத அளவுக்கு பிள்ளைகளின்  முதுகில்  கொடூரமாக அடித்துள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பிள்ளைகள்  நடந்த சம்பவத்தை  பெற்றோரிடம் தெரிவித்தனர். பின்னர்  பெற்றோர்கள் பிள்ளைகளை  பரிசோதித்தபோது  ​​அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம்  காண முடிந்தது.

பின்னர்  இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு  மேற்கொள்ள  தயாராகிக் கொண்டிருந்தபோது  ​​அந்தப் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் குழு  தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட  குழந்தைகளை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது.

எனினும் இன்று  சிறுவர் மறுவாழ்வு மையம் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர்  மற்றும் அம்பாறை  மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஆகியோர் இந்த பிள்ளைகள்  மீதான தாக்குதல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இதே வேளை அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர்   இந்த தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என கூறினார்.

தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின்  ஒரு தாய் 

நாங்கள் எங்கள் குழந்தைகளை கற்றுக்கொள்ள பள்ளிக்கு அனுப்புகிறோம். குழந்தைகள் வித்தியாசமான செயல்களைச் செய்பவர்கள். இந்தக் குழந்தைகள் சிறு  வயதுடையவர்கள்.   கால்நடைகளை அடிப்பது போல் அவர்களை அடிக்க முடியுமா?' என்று கூறினார். என் குழந்தைகள் அந்தப் பள்ளிக்குத் திரும்பப் போக முடியாது என்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் இம்முறை   தரம் 5 பரீட்சை  எழுதுகிறார்கள். அந்தக் குழந்தைகளின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது?என்றார்.


தாக்குதலுக்கு உள்ளான பிள்ளை  இது குறித்து கருத்து தெரிவிக்கையில்

 நாங்கள் இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்றதாகவும்  பல பிள்ளைகள்  தண்ணீரைப் பயன்படுத்தி விளையாடி  கொண்டிருந்ததாகவும் கூறினார். நாங்கள் வகுப்புக்குத் திரும்பியதும்  வகுப்பு ஆசிரியர் பாடசாலை அதிபரான துறவியிடம்  இதைப் பற்றிச் சொன்னார். அதன் பிறகு  அவர் மூன்று பிரம்புகளைக் கொண்டு வந்து எங்கள் முதுகு வலிக்கும் வரை அடித்தார். நாங்கள் சத்தமாக அழுதோம் ஆனால் அவர்  எங்களை அடித்தார்  அடிக்க வேண்டாம் என்று சொன்னோம். அவர்  எங்களை அடித்தார்.எனவே  இப்போது இந்தப் பள்ளிக்குப் போக முடியாது என்றார்.

 


தெஹிவளை நெதிமால பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.கடையொன்றின்மீது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.


கடையொன்றின் மீது இடம்பெற்ற இத்துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஆதரவு வழக்கில் 10 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் விடுவிக்கப்பட்டனர்


மே 16, 2025 இரவு 8:53 மணிக்கு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் இன்று சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) அவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணைகள் முடிவடைந்ததாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததை அடுத்து, கொழும்பு கூடுதல் நீதிபதி பசன் அமரசிங்க அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.

வழக்கு கோப்பை மறுஆய்வு செய்த பின்னர், ஏப்ரல் 9 அன்று சட்டமா அதிபர் அவர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இந்த அறிவுறுத்தல்களின் பேரில், பன்னிரண்டு நபர்களையும் விடுவிக்க அரசுத் தரப்பு நடவடிக்கை எடுத்தது. 

 


பொது உதவி🚨

சீதுவாவில் 2 பேர் கொல்லப்பட்டு 1 பேர் காயமடைந்ததில் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.


ஏதேனும் தகவல் உள்ளதா? சீதுவா காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும்

📞071 8591637

📞011 2253522


#SriLanka #Seeduwa #LKA


@SL_PoliceMedia

சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டது


 #UpDate:

டான் பிரியசாத் சூடு தனது வீட்டில் இருந்தபோது சுடப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


 40ற்கும் அதிகமான பொதிகளில் தலைமன்னார் கடலில் மிதந்து வந்த 124kg கேரள கஞ்சா  மீட்பு! 


மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. 

 


சைக்கில் திருடன் பிடிபட்டான்

- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
காத்தான்கு ஜாமியுழாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு சென்ற நபர் ஒருவரின் துவிச்சக்கர வண்டியினை திருடிய நபர் CCTV கமரா மூலம் கண்காணிக்கப்பட்டு இளைஞர்களின் ஒத்துழைப்புடன் உடன் செயற்பட்டதன் மூலம் திருடன் மடக்கி பிடிபட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட் டான்.
மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், இன்று (11) காலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


நிக்கவரெட்டிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


பாறுக் ஷிஹான்


30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களையும்  கல்முனை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்த சந்தேக நபர்கள் கல்முனை மாநகரில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் வைத்து வெள்ளிக்கிழமை(16) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பகுதியில் இருந்து கல்முனைக்கு நீண்ட காலமாக குறித்த போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதுடன் 36 வயது மற்றும் 49 வயது மதிக்கத்தக்க கல்முனை அனுராதபுரம் பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் ஆடம்பர உல்லாச விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த போதைப்பொருட்கள் பொலித்தீன் பைகளில் உறையிடப்பட்டு மிக சூட்சுமமாக கடத்தி வரப்பட்டுள்ள நிலையில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர்கள் மற்றும் சான்றுப்பொருட்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைக்கவுள்ளனர்.

மேலும்  இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை   அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு அம்பாறை  மாவட்ட    உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான  சம்பத் குமார,அசித ரணசூரிய  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான  அதிகாரிகள்   இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 தற்போது கைதான  சந்தேக நபர்கள்  தொடர்பில்  மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.அத்துடன் அம்பாறை மாவட்ட வரலாற்றில்  மீட்கப்பட்ட பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


பாறுக் ஷிஹான்)


ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதியில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய கடந்த புதன்கிழமை (19) இரவு குறித்த சந்தேக நபரை கல்முனை மத்ரஸா வீதிக்கு அண்மையில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர் வசம் இருந்து 5 கிராம் 80  மில்லி கிராம்  பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரின் தந்தை ஒய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தராவார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை(20)  கல்முனை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து 72 மணித்தியாலங்கள் சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் பல்வேறு  போதைப்பொருளுடன் பல தடவை கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


(சுகிர்தகுமார்) 


 அக்கரைப்பற்று 7/4 பிரிவில் 15 வயதுடைய மாணவன் தூக்கில் தொங்கிய  நிலையில் மீட்க்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (09)மாலை இடம்பெற்ற நிலையில் மாணவன் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தூக்கில் தொங்கிய மாணவன் ஆண்டு 10 இல் கல்வி கற்றுவந்த நிலையில் சில நாட்களாக பாடசாலைக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளதுடன் வர்ணப்பூச்சு வேலைக்கும் சென்று வந்துள்ளான்.
இவ்வாறு இருக்கையில் நேற்று சில நண்பர்களுடன் வெளியே சென்று வந்துள்ளதுடன் தந்தை வெளியே சென்று வந்ததையும் தேவையற்ற நண்பர்களின் நட்பை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதன் பின்பாக அருகில் இருந்த அப்பம்மாவின் வீட்டில் தூக்கிட்டுள்ளதுடன் இதனை அவதானித்த உறவினர்கள் உடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது இவ்வாறிருக்க மாணவர்கள் மீதும் சிறிய வயதுடைய இளைஞர்கள் மீதும் இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரிகள் தமது வியாபாரத்தை மிகச்சூட்சுமமான முறையில் முன்னெடுத்துச் செல்வது அதிகரித்து வருகின்றமையும் அறிய கிடைக்கின்றது.
ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது உணர்த்தப்படுகின்றது.

 



யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 பெண்களும், 2 ஆண்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் வெட்டு காயங்களுடனும் மீட்பு. இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
2

 


பாறுக் ஷிஹான்


கல் ஓயா பெருந்தோட்ட அதிகாரிகளால் விவசாயிகள் மற்றும் நில உரிமை ஆர்வலர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என   நில உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினரும் (PARL), மனித எழுச்சி அமைப்பின் (HEO) இயக்குநருமான கே. நிஹால் அஹமட் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பகுதியில் குறித்த சம்பவம் தொடர்பில் இன்று  விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் 

அம்பாறை மாவட்டத்தில் பல விவசாயிகளது நிலப் போராட்டங்களில்  என்னை இணைத்துக்கொண்டு  நில உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் மனித எழுச்சி அமைப்பின்   இயக்குநராகவும் செயற்பட்டு நான்   சிலருடன் இணைந்து ஆய்வுக்காக சென்ற நிலையில்  கடந்த  ஏப்ரல் 5 ஆம் திகதி கல் ஓயா பெருந்தோட்டக் கம்பனியின் அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு  தகாத வார்த்தைகளால் பேசப்பட்டு மற்றும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளேன்.மொரவில் ஆறு பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன்  எமது  குழுவினர் களப்பயணத்தில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை   வன்மையாகக் கண்டிப்பதுடன்  மேலும் நில உரிமைகளுக்காகப் போராடும் ஆர்வலர்களுக்கு எதிரான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  நாம் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் தாக்குதலுக்கு உள்ளான தானும் தனது குழுவினரும் இரு நாட்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தோம்.


அண்மைக்காலமாக அம்பாறை மாவட்ட விவசாயிகளது பாரம்பரிய நில உரிமை இழப்பு மற்றும்கரும்புப் பயிர்ச்செய்கை தொடர்பாக அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பாக காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி தலையீடு செய்து வருவதுடன் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இது தொடர்பில பலமுறை தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் 2023 ஏப்ரல் 5 ஆம் திகதி விவசாயிகள் இழந்த நிலம் தொடர்பான தகவல்களை சேகரிக்க நிஹால் அகமட் அம்பாறை மாவட்டத்தின் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் தலைவர் பீ கயிருதீன் ஆலோசகர் எம் எம் எம் இப்திகார் மற்றும் விவசாயிகள் சிலரை உள்ளடக்கிய குழு குறித்த பிரதேசத்தில் களப்பயணத்தை மேற்கொண்டு சில பிரதேசங்களிலுள்ள விவசாய காணிகள் தொடர்பான முறைப்பாடுகளின்படி இழந்த நிலப் பிரதேசங்களை அடையாளம் காண சென்றிருந்த நிலையில் இவ்வாறு தாக்குதலுக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதே வேளை கல் ஓயா பெருந்தோட்ட அதிகாரிகளால் விவசாயிகள் மற்றும் நில உரிமை ஆர்வலர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

2023 ஏப்ரல் 5 ஆம் திகதி சம்மாந்துறையில் உள்ள மொறவில் ஆறு பகுதியில் மனித எழுச்சி அமைப்பின் (HEO) இயக்குனர் திரு. நிஹால் அஹமட், அவரது குழு உறுப்பினர்கள் மற்றும் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கல் ஓயா பிளான்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் அதிகாரிகளாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட ஆட்கள் உட்பட சுமார் இருபத்தைந்து நபர்களால் பல மணிநேரம் தாக்கப்படனர். இவ் சம்பவத்தினை காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி (PARL) வன்மையாகக் கண்டிக்கிறது. திரு. நிஹால் அஹமட் PARL இன் முதன்மை உறுப்பினராகவும், அம்பாறை மாவட்டத்தின் காணி உரிமைக்கான கூட்டணியின் இணைப்பாளராகவும், இலங்கையின் ஏழைகளது நில உரிமைகள் உட்பட்ட மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளராகவும் பல வருடங்கள் செயல்பட்டு வருகின்றார்

PARL க்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 1950 ஆம் ஆண்டில், அம்பாறை மாவட்டத்தில் நெல் விவசாயிகள் பாரம்பரியமாக பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட சுமார் 7250 ஏக்கர் நிலம் அப்போதைய அரசாங்கத்தால் கரும்புச் செய்கைக்காக ஒதுக்கப்பட்டது. அரச சீனி கூட்டுத்தாபனத்தின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியின் பாரம்பரிய நெல் விவசாயிகள் அப்புறப்படுத்தப்பட்டனர் கரும்பு பயிர்ச்செய்கைக்காக மட்டுமே ஈடுபட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையின் கீழ் சிலருக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டது. அபகரிக்கப்பட்ட மற்றும் விவசாயம் செய்வதற்கு நிலம் கிடைக்காத மற்றவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை அல்லது அவர்களின் வாழ்வாதார இழப்புக்கு எந்த நிவாரணமும் அல்லது தீர்வும் வழங்கப்படவில்லை. அரசு எடுத்த மற்றொரு நடவடிக்கை, பாரம்பரிய நெல் விவசாயிகள் வெளியேற்றப்பட்ட நிலத்தில் மற்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை நிறுவியது இந்த விவசாய சமூகங்களுக்கு இடையே பதற்ற நிலைமையை ஏற்படுத்தியது.  Hinguran அரச சீனி கூட்டுத்தாபனம் செயல்படுவதை நிறுத்தியது மற்றும் விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காக இந்த பகுதிகளில் நெல் பயிரிட்டனர் மற்றும் நெல் சாகுபடி அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருந்தது 2007 ஆம் ஆண்டு முதல், அரசாங்க தனியார் பங்காளியான கல் ஓயா பிளான்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் நிலங்கள் நிர்வகிக்கப்பட்டன. இதில் அரசாங்கம் 51% பங்குகளைக் கொண்டுள்ளது நில பயன்பாடு முழுவதும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரும்பு இப்பகுதியில் பயிரிடுவதற்கு பொருத்தமற்ற பயிராக இருந்ததாகவும், பயிரிடலில் ஏற்பட்ட தோல்வியால் பல விவசாயிகளும் அவர்களது குடும்பங்களும் நிர்க்கதியாகியுள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேற்குறித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி சம்மாந்துறை பொலிஸ் நிலையம் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 பாறுக் ஷிஹான்


லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வயோதிபர் கைது

லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரை நிந்தவூர்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம்   நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட   பல  பகுதிகளிலும் தொடர்ச்சியாக லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக  இன்று   மாலை  நிந்தவூர் பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இதற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம் .நஜீம்  ஆலோசனையில்  சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும்  உப பொலிஸ் பரிசோதகருமான  குணரட்ன, பொலிஸ்   விசேட புலனாய்வு பிரிவினரும் மேற்கொண்ட நடவடிக்கையினால்  சுமார் 50க்கும் மேற்பட்ட லேகியம்  போதைப்பொருட்னள் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது கைதான  73 வயது மதிக்கத்தக்க  சந்தேக நபர் உட்பட சான்று  பொருட்கள்    சட்ட நடவடிக்கைக்காக   நீதிமன்றத்தில ஆஜர்படுத்த  நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.