Showing posts with label criminal. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே ஒரு குற்றவாளியாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபராகவோ பார்ப்பதை விட, அவர்களின் முழுமையான வாழ்க்கைச் சூழலைக் கருத்தில் கொண்டு தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் தெரிவித்தார்.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இறுதியாண்டு பயிற்சி மாணவர்களான ஏ.என். அஹமட் அத்னாப், எம்.கே.எப். சனா அப்ரி மற்றும் ஆர்.எம். ஹஸ்ஸான் ஆகிய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமூகப்பணி தலையீட்டு முயற்சி வேலைத்திட்டம் தொடர்பாக உரையாற்றிய அவர், தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல் திட்டத்தின் தேசிய செயற்குழு உறுப்பினராகச் செயற்படுவதையும், அதன் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதியுடன் ஒரே மேடையில் உரையாற்றியதையும் தமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டங்களில் ஜனாதிபதி தொடர்ந்து வலியுறுத்தும் விடயம், அரச சேவைகளின் இறுதிப் பயன் பொதுமக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்பதோடு, மக்களை தனித்த பிரச்சினைகளின் அடிப்படையில் அல்லாது, அவர்களது அனைத்து சமூக, பொருளாதார, குடும்ப மற்றும் உளவியல் தேவைகளுடனும் அணுக வேண்டும் என்பதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“சமூகப் பணியில் இதனை ‘முழுமையான அணுகுமுறை’ என அழைக்கின்றோம். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவருக்கு போதைப்பொருள் பிரச்சினை மட்டுமல்லாது, பொருளாதார நெருக்கடி, குடும்ப சிக்கல்கள், சமூகத் தடைகள், தொழில் வாய்ப்பு குறைபாடுகள், ஆன்மீக மற்றும் கல்விசார் பிரச்சினைகளும் இருக்கலாம். ஆகவே ஒரு பிரச்சினையை மட்டும் தீர்ப்பதன் மூலம் அவரை முழுமையாக மாற்ற முடியாது. அவரை ஒரு முழுமையான மனிதராகக் கருதி, அவரது அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து சேவைகளை வழங்க வேண்டும்” என அவர் விளக்கமளித்தார்.

முன்னைய பல அரசாங்கத் திட்டங்களில் சமூகப் பணியாளர்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் சமூகப் பணியாளர்கள், உளவளத் துணையாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களை இணைத்து சமூக மற்றும் உளவியல் தலையீடுகளை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்க விடயமாகும் என்றார்.

மேலும், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் சிறப்பம்சமாக, மக்களின் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களது பார்வையில் இருந்து பிரச்சினைகளை அணுகும் பண்பை அவர் பாராட்டினார். இம்முறை முன்னெடுக்கப்படும் திட்டம் ஒரு முன்னோடி (Pilot Project) முயற்சி எனக் குறிப்பிட்ட ரஷாத், அதன் பெறுபேறுகள் மற்றும் அனுபவங்களை முறையாக ஆவணப்படுத்தி, தேசிய மட்டத்தில் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதனுடன் தொடர்புபடுத்தி, 2017 ஆம் ஆண்டு சம்மாந்துறையில் தாம் முன்னெடுத்த “சந்தோஷமான குடும்பம்” திட்டத்தின் கீழ் 49 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் அறிக்கை அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் அதே கருத்தாக்கம் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சமூகப் பணி தலையீட்டு முயற்சியும் எதிர்காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு பயனளிக்கும் தேசியத் திட்டமாக வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்ட அவர், மாணவர்களின் ஒத்துழைப்புடன் அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

“பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பிரச்சினைகளற்ற வாழ்க்கையை வாழக்கூடியவர்களாகவும் மாற வேண்டும். அவர்களது வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். அரச சேவைகள் மக்களின் காலடிக்கே சென்று சேர வேண்டும். இதுவே எங்களது இறுதி நோக்கம். அந்த இலக்கை அடைவதற்காகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது” என எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை பெண் வைத்தியர் மரணம்: ஐடி காதலனின் மறுபக்கம் அம்பலம்!

அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை வைத்தியர் (Physiotherapist) ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. 


அவரது காதலனே சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது. 


இதற்கமைய, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இடமொன்றில் கார் ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக நேற்று (17) பிற்பகல் 2.00 மணியளவில் தெல்தெனிய பொலிஸாருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. 


பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, பூட்டப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் சடலம் இருப்பதைக் கவனித்துள்ளனர். 


அதனைத் தொடர்ந்து, பொலிஸார் அந்த காரின் கதவை உடைத்து அவரது சடலத்தை வெளியே எடுத்து சோதனையிட்டனர். 


அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது. 


அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். 


அதன்படி, அந்த ஹோட்டலின் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தபோது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. 


சந்தேக நபரான காதலன் கன்​னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் என்றும், அவர் தற்போது அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. 


இதனால், அவரைக் கண்டுபிடிப்பதற்காகப் போலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 


தமது தங்கை நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருப்பதாகவும், அவர் பல நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என்பதால் அந்த இடத்தை சோதனையிட உதவி தேவை என்றும் கூறி கோட்டவெவ, தலாவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (17) காலை நுவரெலியா போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 


அதற்கமைய, நுவரெலியா பொலிஸ் குழுவினர் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று சோதனையிட்ட போது அங்கு யாரும் இருக்கவில்லை. 


எனினும், அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்த போது, கடந்த 16ஆம் திகதி இரவு 9.50 மணியளவில் அந்தப் பெண்ணின் காதலன் அங்கு வரும் காட்சி பதிவாகியிருந்தது. 


அங்கு சுமார் 40 நிமிடங்கள் தங்கியிருந்த அந்த நபர், பின்னர் இரவு 10.30 மணியளவில் மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணைத் தூக்கிக்கொண்டு வெளியேறியுள்ளார். 


அதன் பின்னர், அவர் அந்தப் பெண்ணைக் காரில் ஏற்றிச் சென்றுள்ளார். 


இளம்பெண் காணாமல் போனமை குறித்து நுவரெலியா பொலிஸார் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்திருந்த பின்னணியில், தெல்தெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. 


தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் ஒன்றில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக அந்த அழைப்பில் கூறப்பட்டுள்ளது. 


அதற்கமைய, தெல்தெனிய பொலிஸ் குழுவினர் அந்த இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது, காரின் முன் இருக்கை நீட்டப்பட்டு, கருப்பு நிற துணியால் மூடப்பட்டிருந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. பூட்டப்பட்டிருந்த காரின் கதவை உடைத்து பொலிஸார் சடலத்தை வெளியே எடுத்தனர். 


அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச் சடலம் நுவரெலியாவில் காணாமல் போன இளம்பெண்ணுடையது என்பது உறுதி செய்யப்பட்டது. 


ஷம்யா தர்ஷனி என்ற 34 வயதுடைய அவர், அம்பாறை பொது வைத்தியசாலையில் இயன்முறை மருத்துவ நிபுணராக பணிபுரிந்தவர் என்பதைப் பொலிஸார் கண்டறிந்தனர். 


கண்டி, கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான அவருக்கும், உயிரிழந்த பெண்ணுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகின்றது. 


குறித்த பெண் தனது காதலனுடன் கனடா செல்லும் நோக்கத்தில், வட்டிக்கு மற்றும் சில நபர்களிடமிருந்தும், வங்கியிலிருந்தும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கடனாகப் பெற்று காதலனிடம் கொடுத்துள்ளார். 


இருப்பினும், இதுவரை வெளிநாடு செல்வதற்கான எந்த ஏற்பாடுகளும் நடக்காத பின்னணியில், கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டதால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


இத்தகைய சூழ்நிலையில் தான், அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளார். 


இதற்கிடையில், அவர் தனது சகோதரனைத் தொலைபேசியில் அழைத்து, தான் 3 நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். 


மேலும், அம்பாறை வைத்தியசாலையின் மனநல மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து, தான் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


அதற்கு அந்த மருத்துவர், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார். 


எனினும், கடந்த 16ஆம் திகதி மாலை 4 மணிக்குப் பிறகு பெண்ணின் கைபேசி செயலிழந்ததை அடுத்து, அவரது சகோதரர் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 


மேலதிக விசாரணைகளில், பெண்ணின் உடலைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட கார், அவரது காதலனின் அம்பாறை பகுதியைச் சேர்ந்த மற்றொரு காதலிக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. 


இதற்கிடையில், சடலம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையின் பின்னர், மரணத்திற்கான காரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்ட மரணமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 


இதற்கமைய, பெண்ணின் காதலனான தினேத் திஸாநாயக்க என்பவரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாரவின் நேரடி மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகின்றன.

 


ஏறாவூர் சவுக்கடி தளவாய் பகுதியில் 16 வயது சிறுவனை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சிறுவனின் ஆடைகளை அகற்றி மரத்தில் தலைகீழாக கட்டி தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து குறித்த சிறுவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


குறித்த காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் (IGP), குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் .


 யால தேசிய பூங்காவில் வனவிலங்கு சட்டங்களை மீறியதாக கூறப்படும் ஐந்து சுற்றுலா பயணிகளை வனவிலங்கு அதிகாரிகள் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


சபாரிக்காக வந்த இரண்டு ஜீப் வண்டிகளில் பயணித்த குழுவினர் பூங்கா விதிகளை மீறி நடமாடியதுடன், அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என யால ஜீப் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சரண குணவர்தனவுக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளின் தீர்ப்பை அறிவித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.


இதன்படி, பிரதிவாதிக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளதுடன், அது தொடர்பான விடயங்களை முன்வைக்கும் பணிகளில் சட்டத்தரணிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த 2006ஆம் ஆண்டு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, "ஊழல்" குற்றச்சாட்டின்கீழ் கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இலங்கையின் தெற்குக் கடற்கரையோர சொகுசு பங்களா ஒன்றின் கதவுகள் எப்போதும் பூட்டப்பட்டே இருந்தன. உள்ளே 24 மணிநேரமும் குளிரூட்டி இயங்கியதுடன், நள்ளிரவிலும் கணினித் திரைகளின் வெளிச்சம் அறைகளை நிறைத்திருந்தது. அங்கு தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் சுற்றுலாத் தலங்களை ரசிக்க வெளியே வரவில்லை.


"மாதத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வாடகை தருகிறோம் என்று முன்பணத்துடன் வந்தபோது எனக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை," என்கிறார் இலங்கையின் தென்பகுதியில் தனது சொகுசு பங்களாவை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விட்ட வீட்டு உரிமையாளர் ஒருவர். பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத அவர், பிபிசி தமிழிடம் தனது அதிர்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்:


"சுற்றுலாப் பயணிகள் என்றுதான் கூறினார்கள். ஆனால், காவல்துறையினர் எனது வீட்டைச் சோதனையிட்டபோதுதான், உலகளாவிய இணையதள மோசடி வலையமைப்பு ஒன்று எனது வீட்டிற்குள் இயங்கிய அதிர்ச்சி உண்மை எனக்குத் தெரிந்தது. இப்போது விசாரணை, நீதிமன்றம் என்று எனது குடும்பமே அச்சத்தில் உள்ளது" என்கிறார் அவர்.


இது ஏதோ ஒரு தனிப்பட்ட வீட்டின் கதையல்ல. இலங்கை தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் சர்வதேச சைபர் குற்றச் செயல்களின் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது என்பதற்கான நேரடிச் சான்று.



ஆயிரம் பேர் கைது

ஆசியாவின் பிற பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட அதிநெருக்கடி மிக்க இணைய மோசடிக் கும்பல்கள், இலங்கையைத் தங்களின் முதன்மைச் செயல்பாட்டுத் தளமாக மாற்றி வருவதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.


இதன் உச்சகட்டமாக, தெற்கு மாகாணத்தின் மிதிகம, ஹிக்கடுவ, காலி ஆகிய பகுதிகளில் அதிகளவான கைதுகள் இடம்பெற்றுள்ளன.


இலங்கை காவல்துறையினரால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட இறுதிப் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் மே மாத இறுதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் விசா விதிமீறல்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஒட்டுமொத்த வெளிநாட்டுப் பிரஜைகளின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது.


கடந்த 2024ஆம் ஆண்டு முழுவதுமே இக்குற்றச்சாட்டில் 430 பேர் மட்டுமே கைதாகியிருந்தனர். தொடர்ந்து 2025ஆம் ஆண்டில் இணைய நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக 12,650க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகி அச்சுறுத்தல் அதிகரித்திருந்த பின்னணியில், 2026இல் இந்தக் கைதுகளின் எண்ணிக்கை முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளதை இது காட்டுகிறது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

கோடைக் காலத்தில் இரவு குளித்துவிட்டு உறங்கச் செல்வது நல்லதா?


இரவில் தூங்கும் முன் குளிப்பதில் யாருக்கு எச்சரிக்கை அவசியம்? வெப்ப அலையை சமாளிக்க எளிய டிப்ஸ்

மாதவிடாய் சுகாதாரம், வெப்ப அலை, ஆடை தொழிற்சாலைகள்  


'ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்': திருப்பூரில் பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்னைகள் - பிபிசி கள ஆய்வு

செபி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், ரூ.15.15 லட்சம் கோடி வருவாய்

சுமார் ரூ.15 லட்சம் கோடி வருவாய் எப்படி வந்தது? ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் விளக்கம்

அமெரிக்கா, இஸ்ரேல் - இரான், மத்திய கிழக்கு

இரான் - இஸ்ரேல் மீண்டும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்; டிரம்ப் கூறியது என்ன?

End of அதிகம் படிக்கப்பட்டது

அண்மைய முக்கிய சோதனைகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இலங்கை காவல்துறை பகிர்ந்த தகவல்களின் படி, மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தென்னிலங்கையில் நடத்தப்பட்ட 5 அதிரடிச் சோதனைகளில் 173 முதல் 192 வரையான இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி பகுதியில் மட்டும் இரு விடுதிகளில் 110 இந்தியர்களும், மிதிகமவில் 28 பேரும், ஹிக்கடுவவில் 35 பேரும் கைதாகியுள்ளனர்.


மார்ச் மாதத்தில் மிகிந்தலை மற்றும் அனுராதபுரத்தில் ஒரே நாளில் 135 சீனப் பிரஜைகளும், ஏப்ரல் தொடக்கத்தில் சிலாபத்தில் 133 சீனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரியில் கொழும்பு கறுவாத்தோட்டத்தில் 21 பேரும் கைதாகினர்.


கொழும்பு கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு ஸ்ரீ உத்தரானந்த மாவத்தையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் மே 6 அன்று ஒரே சோதனையில் 74 வியட்நாம் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.


இவர்களுடன் நேபாளம், மியான்மர், பிலிப்பின்ஸ், மலேசியா, தைவான், இந்தோனீசியா (77 பேர்) ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிநவீன கணினிகள்/மடிக்கணினிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் மில்லியன் கணக்கான உள்ளூர், வெளிநாட்டு கரன்சிக்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இலங்கையில் மே 12ஆம் தேதியன்று சைபர் குற்ற வேலைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாள பிரஜைகள்பட மூலாதாரம்,Handout

படக்குறிப்பு,இலங்கையில் மே 12ஆம் தேதியன்று சைபர் குற்ற வேலைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாள பிரஜைகள்

"மியான்மரில் ஒடுக்குமுறை; இலங்கையில் புகலிடம்"

சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சைபர் மோசடி வளாகங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தன.


கம்போடியா, மியான்மர், லாவோஸ், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இந்த இணைய மோசடி மையங்களுக்கு எதிராகக் கடும் ஒடுக்குமுறைகளை மேற்கொண்டதால், இந்தக் கும்பல்கள் முற்றாக அழியாமல் தங்கள் செயல்பாடுகளை இலங்கை நோக்கி நகர்த்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இதுகுறித்து டிஜிட்டல் உரிமைகள் ஆர்வலரான சஞ்சன ஹத்துட்டுவ பிபிசி தமிழிடம் கூறும்போது, "கம்போடியா மற்றும் மியான்மரில் உள்ள மோசடி முகாம்கள் மீதான ஒடுக்குமுறைகள் அவற்றை முற்றாக ஒழிக்கவில்லை, மாறாக இடமாற்றம் செய்துள்ளன. அந்த இடப்பெயர்வின் நடைமுறை வடிவம்தான் இலங்கை. தாராளமான சுற்றுலா விசா, நல்ல டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள், மலிவான தங்குமிடங்கள் மற்றும் எவ்வித கேள்விகளும் கேட்காமல் வீடுகளை வாடகைக்கு விடும் முறை ஆகியவை இந்த சர்வதேசக் குற்றக் கும்பல்களுக்கு இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றியுள்ளன" என்றார்.


இதில் உள்ள மற்றொரு சோகமான உண்மை என்னவென்றால், இலங்கை ஒரே நேரத்தில் வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளின் தளமாகவும், அதே நேரத்தில் உள்ளூர் தமிழ், சிங்கள இளைஞர்கள் போலி வேலைவாய்ப்பு என்ற பெயரில் மியான்மர் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படும் மனிதக் கடத்தலின் இரையாகவும் மாறியுள்ள இரட்டை நெருக்கடியைச் சந்திப்பதாகும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


இதற்கிடையே, வெலிசறை தடுப்பு முகாமில் நாடு கடத்தப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த 21 சீனர்கள், 9 வியட்நாமியர்கள் உள்ளிட்ட 30 பேர் அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பாதுகாப்புப் பிரிவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பின்னர் அவர்கள் பொரலஸ்கமுவையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டனர்.


வியப்பூட்டும் விதமாக, "அவர்கள் தப்பியோடிய சில நாட்களிலேயே 10 கணினிகள் மற்றும் 29 ஐபோன்களுடன் மீண்டும் ஒரு புதிய மோசடி மையத்தைத் தொடங்கிச் செயற்பட்டு வந்துள்ளனர்" என காவல்துறையினர் கூறுகின்றனர்.


"ஒரு தடுப்பு முகாமில் இருந்து தப்பித்து, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, உள்கட்டமைப்பை அமைத்து, மீண்டும் ஒரு மோசடி மையத்தை யாராலும் தற்செயலாகத் தொடங்க முடியாது. இந்த அமைப்பிற்குள் ஏதோவொரு பெரிய முறைகேடு அல்லது ஊழல் நடந்துள்ளது என்பதை இது காட்டுகிறது" என்று சஞ்சன ஹத்துட்டுவ சுட்டிக்காட்டினார்.


இலங்கையில் மே 12ஆம் தேதியன்று சைபர் குற்ற வேலைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாள பிரஜைகள்பட மூலாதாரம்,Handout

அரசு கூறுவது என்ன?

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, "இலங்கை சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த நெருக்கடியைக் கையாள்வதற்குப் போதுமான சட்டங்கள் நாட்டில் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.


முன்னதாக இலங்கையில் சைபர் குற்றங்கள் 2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணினிக் குற்றங்கள் சட்டத்தின் மூலமே நிர்வகிக்கப்பட்டன. எனினும், சில குற்றங்கள் கணினி மூலமே செய்யப்பட்டன என்பதை நிரூபிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எல்லை கடந்த குற்றங்களை எதிர்கொள்வதில் தற்போதைய சட்டத்தில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை நிவர்த்தி செய்ய இரண்டு புதிய சட்டமூலங்கள் அவசரமாகத் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.


டிஜிட்டல் பொருளாதாரச் சட்டம் (Digital Economy Act): நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை ஒழுங்குபடுத்த புதிய விசேட அதிகார சபை இதன் கீழ் நிறுவப்படும்.

சைபர் பாதுகாப்புச் சட்டம் (Cyber Security Act): இச்சட்டத்தின் கீழ் "சைபர் குற்றங்கள் ஒழுங்குமுறை அதிகார சபை" (Cyber Crimes Regulatory Authority) 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறுவப்படும்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால இதுகுறித்து பிபிசி தமிழுக்கு கூறுகையில், புதிய சட்டத்தின் கீழ் நிறுவப்படும் இந்த அதிகார சபைக்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்களைக் கண்காணிக்கும் முழுமையான சட்டபூர்வ அதிகாரம் வழங்கப்படும் என்றார்.


புதிய சட்டவிதிகளுக்கு அமைய செயற்படத் தவறும் நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்றும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சைபர் பாதுகாப்புத் தயார்நிலை உத்திகளை வருடாந்தரம் நடைமுறைப்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


இலங்கையில் மே 12ஆம் தேதியன்று சைபர் குற்ற வேலைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாள பிரஜைகள்பட மூலாதாரம்,Getty Images

உள்நாட்டு சட்டங்கள் இன்னும் வரைவு நிலையில் இருக்கும் சூழலில், எல்லை கடந்த இந்த சைபர் மாஃபியாக்களை ஒடுக்குவதற்கு சர்வதேச நாடுகளின் கூட்டு உதவி அவசியம் என்பதை இலங்கை உணர்ந்துள்ளது. இதற்கமைய, வியட்நாமிய தலைநகர் ஹனோயில் நடைபெற்ற ஐநா-வின் உத்தியோகபூர்வ மாநாட்டில், 'சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்தில்' (UN Cybercrime Convention) இலங்கை முறைப்படி கைச்சாத்திட்டுள்ளது.


இதன் மூலம், வெளிநாட்டு வலையமைப்பிற்கு டிஜிட்டல் தடயங்களை சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவும், குற்றவாளிகளை அந்தந்த நாடுகளுக்குத் துரிதமாக நாடு கடத்தவும் இலங்கைக்கு சர்வதேச சட்ட பலம் கிடைக்கிறது.


இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரெட்ரிக் வூட்லர் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், "கைது செய்யப்படும் வெளிநாட்டுச் சந்தேக நபர்கள் உடனடியாக நாடுகடத்தப்பட மாட்டார்கள். அவர்கள் அனைவரும் சுற்றுலா விசா ஒழுங்குவிதிகளை மீறி, சட்டவிரோதமாகப் பணிபுரிந்து விசா காலத்தையும் மீறி தங்கியுள்ளனர். இவர்கள் கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்கள் கொழும்பு நீதவான் உத்தரவின் பேரில் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாடுகடத்தல் பற்றித் தீர்மானிக்கப்படும்.


மோசடிக் கும்பல்களுக்கு இடமளிக்கும் சொத்து உரிமையாளர்கள், குற்றச் செயல்களுக்குத் துணை நின்ற குற்றச்சாட்டின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வர். பொலிஸ் கட்டளை சட்டத்தின் 76வது பிரிவின்படி, தற்காலிக குடியிருப்பாளர்களின் விவரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதோடு, "இலங்கையின் திறைசேரி (கருவூலம்) மீது அண்மையில் நடத்தப்பட்டு, சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பை ஏற்படுத்திய பாரிய சைபர் தாக்குதலுக்கும், தற்போது பிடிபட்டுள்ள சர்வதேச சைபர் மோசடிக் கும்பல்களுக்கும் ஏதேனும் பின்னணித் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் மே 12ஆம் தேதியன்று சைபர் குற்ற வேலைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாள பிரஜைகள்பட மூலாதாரம்,Getty Images

சீன அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடு

இலங்கையில் கைது செய்யப்படுவோரில் கணிசமானோர் சீனப் பிரஜைகளாக உள்ள நிலையில், கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதுகுறித்து உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


எல்லையைக் கடந்த இணைய சூதாட்டமும், தொலைத்தொடர்பு மோசடிகளும் சர்வதேச அளவிலான ஒரு திட்டமிடப்பட்ட குற்றவியல் வடிவமாக உருவெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளதை சீனத் தூதரகம் நினைவு கூர்ந்துள்ளது.


சீனத் தூதரகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில், "எல்லையைக் கடந்த சூதாட்டம் குறித்த சீன அரசின் நிலைப்பாடு மிகவும் தெளிவானதும் உறுதியானதுமாகும். சீன மூலதனத்தை வெளிநாட்டு சூதாட்ட விடுதிகளில் முதலீடு செய்யக்கூடாது, சீனக் குடிமக்கள் வெளிநாட்டு சூதாட்ட விடுதிகளை இயக்குவதில் பங்கேற்கக் கூடாது. இத்தகைய நடவடிக்கைகள் மோசடி, பணமோசடி, கடத்தல், மனிதக் கடத்தல், சட்டவிரோதமாக எல்லை தாண்டுதல் போன்ற பிற குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன. சீன குற்றவியல் சட்டத்தின் புதிய திருத்தங்கள், எல்லையைக் கடந்த சூதாட்ட நடவடிக்கைகளைக் குற்றவியல் செயலாக அறிவித்துள்ளன" என்று தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இக்குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் இலங்கைக்கு இடம்பெயரும் போக்கு அதிகரித்து வருவதை அடுத்து, சீனாவும் இலங்கையும் கூட்டுச் சட்ட அமலாக்க முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மோசடிக் குற்றங்களுடன் தொடர்புடைய பல சீனப் பிரஜைகள் ஏற்கெனவே சீன தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தூதரகம், குடிவரவு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளைப் பெரிதும் பாராட்டியுள்ளது.


இதற்கிடையே, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இயங்கும் திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்கள் "மேலும் தொலைதூர மற்றும் சட்ட அமலாக்கம் பலவீனமான" பிராந்தியங்களை நோக்கி விரிவடைந்து வருவதன் நேரடிப் பிரதிபலிப்பே இலங்கையின் தற்போதைய நிலைமை என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.


இந்த விவகாரம், 2026ஆம் ஆண்டில் அதிவேகமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் எல்லைக் கட்டுப்பாடு, விசா கண்காணிப்பு, நிதி மேற்பார்வை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த சைபர் பாதுகாப்புத் திறன் குறித்துப் பல கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

 

வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள  வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் மறுநாள் வியாழக்கிழமை(04) முறைப்பாடும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது.குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின்  வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில்  செயற்பட்ட   கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம்.  சுவர்ணகாந்தி  கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன்  ஏ. ஆதம்பாவா மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்ததுடன் வெள்ளிக்கிழமை (05) அன்று  குறித்த வழக்கானது  மன்றில்  விசாரணைக்கு   கல்முனை நீதிமன்ற  நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை சந்தேக நபரான  இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.


குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது

கல்முனை மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க சிறுமி(பாடசாலையை விட்டு இடைவிலகியவர்)   தனது தாயுடன் ஆடை கொள்வனவிற்காக சென்றுள்ளார்.இவ்வாறு ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞனுக்கும் அங்கு  சென்ற சிறுமிக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டு தொலைபேசி இலக்கம் பரிமாறப்பட்டுள்ளது.அதன் பின்னர் இருவரும் 2 மாதங்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO /WHATAPPS ) தொடர்பில் இருந்துள்ளனர்.இவ்வாறான சூழ்நிலையில்  தான் குறித்த இளைஞன் கடந்த புதன்கிழமை(03) இரவு 11.30 மணியளவில்  வாடகைக்கு பெறப்பட்ட வேன் ஒன்றுடன்   தான் பணியாற்றிய  ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றும் மற்றுமொரு  56 வயது மதிக்கத்தக்க நபரையும் வேனின் சாரதியாக அழைத்துக் கொண்டு சிறுமி தங்கி இருக்கின்ற வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு தொலைபேசி ஊடாக அழைத்த  அவ்விளைஞன்  முகவரி ஒன்றினை காட்டுமாறு கூறியுள்ளார்.அப்போது வீட்டில் இருந்து வீதிக்கு வந்த சிறுமியை  சந்தேக நபரான இளைஞன் உடனடியாக செயற்பட்டு சிறுமியின்   வாயை பொத்தி வேனில் கடத்தி சென்று அம்பாறை  மாவட்டத்தில் உள்ள மத்திய முகாம் பிரதேசத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அழைத்து செல்லப்பட்ட குறித்த சிறுமி  பாழடைந்த வர்த்தக் கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலில் சந்தேக நபரான இளைஞன்  சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.அதன் பின்னர் மற்றுமொரு சந்தேக நபரான 56 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் சிறுமியை துஸ்பிரயோகம் செய்து பின்னர்  இரு சந்தேக நபர்களும் மாறி மாறி துஸ்பிரயோகத்திற்கு  உட்படுத்தி  அக்கரைப்பற்று பகுதிக்கு அச்சிறுமியை  இறுதியாக அழைத்துச் சென்று விட்டுச் சென்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பின்னர் சிறுமி அப்பகுதியால் வருகை தந்த பேரூந்தின் உதவியுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த விடயங்களை உரிய பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.சிறுமியின் வாக்குமூலத்தினை பெற்ற பொலிஸார் உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேக நபரான 2 பிள்ளைகளின் தந்தையான  56 வயது மதிக்கததக்க  சந்தேக நபரை பொலிஸார்  தேடி வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சிறுமியை கடத்தி செல்ல உதவிய வேன் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.அத்துடன் சிறுமியின் தாய் மனஅழுத்தம் காரணமாக வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 


ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் 03ஆம் திகதி மாலை முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.


 ( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கின் இறுதிநாளான இன்று (1) திங்கட்கிழமை மடிப்பிச்சை  எடுக்கின்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

காலையில் மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
 
சுமார் 2000 பெண் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். வழிநெடுகிலும் மக்கள் அவர்களுக்கு நெல்லை வாரி வழங்கினார்கள்.

 அவர்கள் அதனை மடியில் ஏந்திக்கொண்டு நேராக 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்து அங்கு சடங்குகள் சகிதம் அந்த நெல்லை அங்கு பெற்றுக் கொண்டார்கள்.

 அதனை உரலில் இட்டு குற்றி அரிசியாக்கி பொங்குவார்கள். மீதியை வசதி குறைந்த மக்களுக்கு வழங்குவது வழக்கம்.


 வெல்லவ, நிக்கதலுபொத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்யொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அதே வீட்டில் ஆண் ஒருவரும் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ளார்.


இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர் ஒருவரும் பெண் ஊழியர் ஒருவரும், நீதிமன்ற வழக்கேடு ஒன்று காணாமற்போன சம்பவம் தொடர்பில் நேற்று (29.05.2026) கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரையும் எதிர்வரும் 1 ந் திகதி வரை விளக்க மறியலில் வைப்பதற்கு திருமலை நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த வழக்கு பிரிவிடல் சம்பந்தப்பட்ட வழக்காகும். இது  வழக்கானது, திருமலை நீதிமன்ற மாவட்ட கௌரவ  நீதிபதி திருமதி ஜீவராணி கருப்யைா அவர்கள் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், குறித்த வழக்குத்  தொடர்பான  வழக்குக் கோவைகள் காணாமல் போயிருந்தன.


குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில், திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரால் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

விசாரணைகளின் போது, காணாமற்போனதாகக் கூறப்படும் வழக்கேடு, கைது செய்யப்பட்ட ஆண் ஊழியரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொது சொத்துக்களை களவாடியமை, பொது சொத்துக்களை சட்டவிரோதமாக உடமையில் வைத்திருந்தமை மற்றும் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்

குறித்த வழக்கின் சந்தேக நபர்கள் எதிர்வரும் திங்கட்கிழமையன்று, திருமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

 


🔴"முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு"!


இலங்கை அரசியலில் அதிரடித் திருப்பம்! முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்திற்காகச் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபாய் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இந்த உத்தரவு வந்துள்ளது. எனினும் சி.ஐ.டி அதிகாரிகள் தேடிச் சென்றபோது அவர்கள் வீடுகளில் இல்லை என்பதால் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இந்த வீடியோவில் விரிவாகக் காணுங்கள்.


#tubetamil #tubetamil24x7 #BasilRajapaksa #ArrestOrder #SriLankaPolitics #CIDNews #CorruptionSL #BreakingNewsTamil #JaffnaTamil #LKANews #TravelBanSL #SriLankaNews

 


களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் மேலும் ஒரு வாகனம் களுத்துறை - மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


வெள்ளை நிற சிறிய ரக வேன் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ள நிலையில், கொலைச் சம்பவத்துக்கு முன்பு சந்தேக நபர்கள் வந்த வாகனம் இதுவென்றும் குறித்த வேனில் இருந்தே துப்பாக்கிதாரிகள் கார் ஒன்றுக்கு மாறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 


இந்நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் வந்த கார், தெபுவன - நேபட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.


இச் சம்பவம் தொடர்பில் தற்போது இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


 மட்டு முறக்கொட்டான்சேனை 8 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது—

(கனகராஜா சரவணன்)

மட்டு முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக ஆசிரியர் பெற்றோரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த சிறுவனான மகனுக்கு வாயில் குறுக்கால்  கம்பியால் சூடு வைத்த தந்தையாரை இன்று வியாழக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்



இது பற்றி தெரியவருவதாவது



குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்துள்ளார்.



இது தொடர்பாக குறித்த சிறுவனின் பெற்றோரிடம் ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து குறித்த சிறுவனின் தந்தையார் மகன் மீது கோபங் கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை (26) மகனை பிடித்து இரும்பு கம்பியை சூடாக்கி அவரது வாயில் செங்குத்தாக சூடு வைத்துள்ளார்.



இவ்வாறு சிறுவனுக்கு நடந்த கொடூரம் அந்த பகுதி கிராம உத்தியோகத்தருக்கு தெரிய வந்த நிலையில் அவர் பொலிசாருக்கு பொலிசார் சம்பவ தினமான இன்று வியாழக்கிழமை (28) முறைப்பாடு செய்தார்.



இதனை தொடர்ந்து பொலிசார் சிறுவனுக்கு சூடு வைத்த சிறுவனின் தந்தையாரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்தனர்



இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


 களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமக்கடை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தொழிலதிபர் மீது காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.


இதில் காயமடைந்த தொழிலதிபர் நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


அக்கரைப்பற்று பகுதியில் தனது மகளை பாலியல் வன்புணர்வு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தைக்கு 25 வருட சிறைத் தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் வழக்கு நேற்று(15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் சந்தேகநபருக்கு எதிராக கடந்த 2024 ஆம் ஆண்டு இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சட்ட மாஅதிபர் சார்பில் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆஜராகியிருந்தார்.

முதலாவது குற்றப்பத்திரிக்கையில் தமது மகளை மூன்று தடவைகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாகவும், இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் தமது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகவும் தெரிவித்து சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் இந்த குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சந்தேகநபரான தந்தை, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தமது மனநலம் குன்றிய மனைவியுடன் தலைமறைவாகியிருந்தார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மகள் அக்கரைப்பற்று பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றின் கண்காணிப்பில் உள்ளார்.

இந்தநிலையில், 2018 மற்றும் 2019 ஆம் வருடங்களில், மூன்று சந்தர்ப்பங்களில் தமது தந்தை தம்மை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், மற்றுமொரு முறை 
பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகவும் சந்தேகநபரின் மகள்  கூறியுள்ளார்.

இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை அறிவித்த கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய மூன்று குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டுக்கு, சந்தேகநபரை குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.

அத்துடன், 5000 ரூபா அபராதம் விதித்ததுடன் ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்தார்.

பாரதூரமான பாலியல் துஷ்பிரயாகத்துக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சந்தேகநபரான தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 


காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


சிறைக்குள் இருந்த இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


இதில் காயமடைந்த கைதி கராப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.