மாளிகைக்காடு நிருபர்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமான வழக்கு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டு கடந்த பத்து மாதங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் இந்த வழக்கில் மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் அவரது சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகி வாதாடி வருகின்றனர். இவர்கள் இடைக்கால தீர்வாக கல்முனை உப பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக இயங்க செய்ய வேண்டும் என்பது உட்பட இன்னும் மூன்று நிவாரணங்களை கோரியுள்ளனர்.
இது தொடர்பிலான இடையீட்டு தீர்வொன்று கடந்த மேமாதம் 23ம் திகதி கட்டளையாக பிறப்பிக்கப்பட இருந்த நிலையில் மே முதலாம் வாரமளவில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீலுர்ரஹ்மான் அவர்களும் இணைந்து தங்களை இடையீட்டு மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளுமாறு நீதிமன்றத்தை கோரி இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனடிப்படையில் இடையீட்டு தீர்வொன்றை வழங்க கூடாது என்று இடையீட்டு மனுதாரர்களும், இடையீட்டு தீர்வை வழங்க கோரி சுமந்திரன் தரப்பினரும் வாதிட்டு பின்னர் தமது பக்க நியாயங்களை எழுத்து மூல சமர்ப்பிப்புக்களாகவும் செய்திருந்தனர்.
இருதரப்பு சமர்ப்பனங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் இம்மாதம் 15ம் திகதி இடைக்கால கட்டளையை பிறப்பிக்க இருந்த நிலையில் இன்று (24) வரை ஒத்திவைத்து இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் கௌரவ பந்துல கருணாரத்ன அவர்கள் தனது தீர்மானத்தை மன்றுக்கு அறிவித்தார். அவரது அறிவிப்பில் கல்முனை உப பிரதேச செயலக வழக்கில் இடையீட்டு தீர்வை கோரிய மனுவையும் அதற்கு எதிரான மனுவையும், வாதங்களையும் பரிசீலித்து ஆராய்ந்த பின்னர் இந்த இடையீட்டு நிவாரணத்தை நிராகரிப்பதாகவும் அந்த தீர்வை வழங்க முடியாது என்றும் மன்றுக்கு அறிவித்திருந்தார். இதனடிப்படையில் சுமந்திரன், கலையரசன் தரப்பினர் நீதிமன்றத்தை கேட்டிருந்த இடைக்கால தீர்வை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதே நேரம் வழக்கை தொடர்ந்தும் விசாரிக்க எதிர்வரும் 2024.01.17ம் திகதி வரை குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீலுர்ரஹ்மான் அவர்களும் இணைந்து கடைசி நேரத்தில் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக கல்முனை மாநகர முஸ்லிம்களுக்கு ஏற்பட இருந்த இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும், பொது அமைப்புக்களின் பிரதானிகளும் கருத்து வெளியிட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மனுக்கள் இன்று (05) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட மனுதாரர்கள், முன்பு செலுத்தும் வரி என அழைக்கப்படும் அட்வான்ஸ் தனிநபர் வருமான வரி (APIT) நீதித்துறை உறுப்பினர்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைக் கோரியிருந்தனர்.
இலங்கை நீதித்துறை சேவை சங்கம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் நீதிமன்ற தலைவர்கள் சங்கம் ஆகிய மூன்று மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
குறித்த குற்றவாளிகளுக்கு ரூபா 2000 தண்டப் பணமாக விதிக்கப்பட்டதுடன், அவர்களது உபகரணங்கள் சிலவும் விடுவிக்கப்பட்டன
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் -பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு மாற்றம்?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு கடந்த திங்கட்கிழமை (5) வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி வழக்கானது விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் கடந்த தவணையின் போது குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.
இதற்கமைய குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி மன்றிற்கு தெரிவித்தார்.
மேலும் குறித்த விசாரணையின் போது மன்றில் பிரதான பரிசோதகரின் கைது தொடர்பில் ஆட்சேபனை முன்வைத்ததுடன் பிரதி வாதியான பொலிஸ் பரிசோதகரை குறித்த வழக்கில் இருந்து பிணையில் விடுதலை செய்யுமாறு விண்ணப்பங்களை முன்வைத்திருந்தனர்.
இதனையடுத்து மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதிக்கு குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவமாக கல்முனை - சாய்ந்த மருது பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புக்கள் குறித்த விசாரணைகளில் பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் அவரைக் கைது செய்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் அம்பாறை பொலிஸ் உப கராஜின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் சிரேஷ்ட ஆலோசகர் ஹேமந்த விதானகே உட்பட சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பூச்சிகொல்லிகள் பதிவாளர், விவசாயம் அமைச்சர், சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். .
கிளைபோசேட் பூச்சி கொல்லிக்கு 2017 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தற்போது வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிளைபோசேட்டின் பயன்பாடு நீர்நிலைகள், மண், தாவரம், மீன்கள், பறவைகள் உட்பட மனிதர்களின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிப்பதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிளைபோசேட் மீதான தடையை நீக்குவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்று தீர்ப்பளிக்குமாறும் தடையை நீக்குவதற்கான உத்தரவை இரத்துச் செய்யுமாறும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியலாளர் றியாஸ் சார்பாக சட்டத்தரணி பாத்திமா பெனாஸிரின் அறிவுறுத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரியாவுடன் சட்டத்தரணிகளான திலினி விதானகமகே மற்றும் ஏ.எல்.ஆஸாத் ஆகியோர் மன்றில் தோன்றினர்.
குறித்த வழக்கின் விசாரணையானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க சென்ற பெப்ரவரி மாதம் 02ம் திகதி திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கடமையேற்பதற்காக சென்றிருந்த பஹ்மிதா றமீஸ் அவர்கள் கடமையேற்க விடாது பல குழப்பங்களை ஏற்படுத்தி, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது சட்டரீதியான கடமையை செய்யத் தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பெயரின் திருகோணமலை திரு ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சென்ற மார்ச் மாதம் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். குறிப்பிட்ட வழக்கில் ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஆதரவாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான் றதீப் அஹமட், ஹஸன் றுஷ்தி, முஹைமின் காலித் மற்றும் ஸாதிர் அஹமட் ஆகியோர் ஆஜராகி சமர்ப்பணம் செய்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இம்மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டத்தரணிகளான முபஸ்லீன் மற்றும் றிஸ்வான் ஆகியோர் வாதிதரப்பில் ஆஜராகி இருந்தனர். ஏலவே மன்றின் நீதிபதியவர்கள் குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் செய்ய சமர்ப்பணத்தை ஏற்று பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்ப நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார். இவ்வழக்கானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.
குறிப்பிட்ட இவ்வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரி நீதிமன்று குற்றவாளியாகக் காணூமிடத்து இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகள் 162,183,184,486 அடிப்படையில் சிறைத்தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஷண்முஹா ஹபாயா விவகாரத்தில் ஆரம்பம் தொட்டு குரல்கள் இயக்கம் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று (10) இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தனிப்பட்ட காரணங்களுக்காக மனு மீதான பரிசீலனையிலிருந்து விலகுவதாக நீதியரசர் A.H.M.D நவாஸ் இன்று (10) அறிவித்ததை தொடர்ந்து, மனு மீதான பரிசீலனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அசாத் சாலி கடந்த மார்ச் 9 ஆம் திகதி ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தடுத்துவைக்கப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி அசாத் சாலி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இருதயபுரத்தை சேர்ந்த 21 வயதான சந்திரன் விதுஷன் என்பவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த போது உயிரிழந்தார்.
அதிக போதைப்பொருள் பாவனையே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், பொலிஸாரின் தாக்குதல் காரணமாக சந்திரன் விதுஷன் உயிரிழந்ததாகவும் அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் அவரின் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.
பத்திரிகையாளர் வினோத் துவா மீதான தேசத்துரோக வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.
யூடியூப் ஒளிபரப்பில் பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் எதிரான விமர்சனக் கருத்துக்களுக்காக மூத்த பத்திரிகையாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான வினோத் துவா மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது, அதன் 59 ஆண்டுகால தீர்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டியது. ஆளும் ஆட்சியைப் பற்றிய மறுப்பு தேசத் துரோகத்திற்கு உட்பட்டது அல்ல.
நீதிபதி யு.யூ தலைமையிலான பெஞ்ச். சட்டபூர்வமான வழிமுறைகளின் மூலம் அவற்றை மேம்படுத்த அல்லது மாற்றுவதற்கான நோக்கத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும், கொடூரமாக கூட விமர்சிக்க ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் உள்ள உரிமையை லலித் உறுதிப்படுத்தினார். ஒரு பத்திரிகையாளரின் சுதந்திரமான பேச்சு தேசத்துரோக குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
அரசாங்கங்களை விமர்சிப்பது தேசத்துரோகத்தை உருவாக்க போதுமானதாக இருந்த காலம் நீண்ட காலமாகிவிட்டது. நேர்மையான மற்றும் நியாயமான விமர்சனங்களை உச்சரிப்பதற்கான உரிமை ஒரு சமூகத்திற்கு பலவீனம் என்பதை விட ஒரு பலத்தை அளிக்கிறது, தீர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது 1962 ஆம் ஆண்டு கேதார் நாத் சிங் தீர்ப்பின் ஆவி மற்றும் நோக்கத்தை உறுதிப்படுத்தியது, இது "அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அல்லது அதன் நடவடிக்கைகள் அல்லது அதன் ஏஜென்சிகள் குறித்து வலுவான கருத்துக்களைக் கூறி, மக்களின் நிலைமையை சீர்செய்வதற்காக அல்லது ரத்து செய்யப்படுவதை அல்லது மாற்றத்தை பாதுகாப்பதற்காக" அந்தச் செயல்கள் அல்லது நடவடிக்கைகள் சட்டபூர்வமான வழிமுறைகளால், அதாவது பகைமை மற்றும் விசுவாசமின்மை போன்ற உணர்ச்சிகளை உற்சாகப்படுத்தாமல், பொதுக் கோளாறுக்கு உற்சாகத்தைத் தருகின்றன அல்லது வன்முறையைப் பயன்படுத்துவது தேசத்துரோகம் அல்ல ”.
நீதிபதி லலித், “கேதார் நாத் சிங் தீர்ப்பின் கீழ் ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் பாதுகாப்பு உரிமை உண்டு” என்று அறிவித்தார்.
1962 ஆம் ஆண்டு தீர்ப்பில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (தேசத்துரோகம்) பிரிவு 124 ஏ, சட்டபூர்வமாக நிறுவப்பட்ட அரசாங்கத்தை வன்முறை வழிமுறைகளின் மூலம் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டது.
OVID-19 இலிருந்து மீட்கப்படுகிறது
தற்போது COVID-19 இலிருந்து மீண்டு வரும் திரு. துவா சமர்ப்பித்ததை நீதிமன்றம் ஒப்புக் கொண்டது, “ஊடகங்களுக்கு எதிராக ஒரு சமீபத்திய போக்கு உள்ளது, அங்கு ஒரு குறிப்பிட்ட ஒளிபரப்பைக் காணாத மாநில அரசுகள் தங்கள் அரசியல் சித்தாந்தங்களுடன் ஒத்திசைந்திருக்கின்றன என்று FIR களைப் பதிவு செய்கின்றன ஊடகங்களின் நபர்களுக்கு எதிராக முதன்மையாக அவர்களைத் துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் அவர்கள் அரசின் நிலைக்கு அடிபணிவார்கள், இல்லையெனில் காவல்துறையினரின் கைகளில் இசையை எதிர்கொள்வார்கள் ”.
எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழுவால் அழிக்கப்படாவிட்டால், 10 வருட அனுபவமுள்ள ஊடகவியலாளர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கூடாது என்ற திரு. துவாவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த குழுவில் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லது அவர் நியமித்த நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஆகியோர் இருக்க வேண்டும் என்று திரு.
அத்தகைய குழு தற்போதைய சட்டரீதியான கட்டமைப்பிற்கு வெளியே இருப்பதாக நீதிமன்றம் கூறியது. பிரார்த்தனையை வழங்குவதன் மூலம், அது சட்டமன்றத்தின் களத்தில் நுழைந்துவிடும்.
இந்த தீர்ப்பு அரசாங்கத்திற்கு ஒரு அடியாக வந்தது, இது பத்திரிகையை சட்டப்பூர்வமாக ஒரு தொழில் என்று அழைக்க முடியுமா என்ற கேள்வியை கூட எழுப்பியது.
விமர்சன ஊடகவியலாளர்கள், குடிமக்கள், வக்கீல்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது கண்மூடித்தனமாக தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் இருந்து இந்த தீர்ப்பு வழங்கப்படலாம். சமீபத்தில், உச்சநீதிமன்றத்தின் மற்றொரு பெஞ்ச், ஆந்திர அரசாங்கத்தால் இரண்டு தெலுங்கு சேனல்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் குறித்த தனி வழக்கில், தேசத்துரோக சட்டத்தின் வரம்புகளை வரையறுக்க வேண்டிய நேரம் இது என்று கூறியிருந்தது.
புகார்
திரு துவா மீது புகார் பாஜக தலைவரால் பதிவு செய்யப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் போலி செய்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. தேசத்துரோகத்தைத் தவிர, மற்ற குற்றச்சாட்டுகள் பொதுத் தொல்லைகளை ஏற்படுத்துதல், அவதூறான விஷயங்களை அச்சிடுதல் மற்றும் பொது குறும்புகளுக்கு உகந்த அறிக்கைகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி இமாச்சல காவல்துறையினர் அவரது இல்லத்தில் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பாக மறுநாள் தொலைதூர குமார்சேன் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதையடுத்து