இலங்கையின் மீ உயர்மன்ற நீதியரசரான எஸ்.துரைராஜா அவர்கள் ஓய்வுக்கு வந்திருக்கின்றார்.
இவர் மீது மிகுந்த மரியாதை எனக்குமிருந்தது.
இலங்கை வானொலியில் அன்று நான் பணிபுரிகின்ற போது, சட்டமும் நாமும் என்ற வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் வருவதுண்டு.,இவருடன் பங்கேற்க வருபவர் சிரேஸ்ட சட்டத்தரணி தம்பு சேர் அவர்கள். சட்டம் படிக்கவே கொழும்பு சென்ற எனக்கு, இந்த நிகழ்சி அட்சதை துாவியது.கா
இலங்கைத் திறந்த பல்கலையில் சட்டம் பயின்று இறுதி ஆண்டுப் பரீட்சைக்கு முன்னதான விசேட வழிகாட்டல் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதில் வளவாளராக துரைராஜகா சேர் கலந்திருந்தார். சட்டத்தில் பட்டம் பெற்ற பின்னர், அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று, எடுத்தியம்பினார்.
அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது. சட்டடா அதிபர் திணைக்களத்தில்.. இலங்கை வானொலிப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட் வழக்கு அது. இலங்கை வானொலி அரச நிறுவனம் என்பதால், சட்டமா அதிபரும் அதில் ஒரு பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த வானொலிப் பணிப்பாளரின் வேண்டுதலின் பேரில் சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனைகளைப் பெறுவதற்காக, அங்கு சென்றோம். என்னையும் என்னுடன் வந்தவருக்கும் சட்ட ஆலோசனைகளை இன்முகத்துடன் வழங்கினார் துரைராஜா சேர்.
2010 காலப்பகுதியில் .லங்கை வானொலியை விட்டு விலகி சட்டத்தரணியதக பரிமாணம் எடுக்கும் தருணத்தில், எமக்கான தொடர்புகள் அரிதானது நானும் கிழக்கு மாகாண வழக்காடு மன்றங்களில், பிவேசித்தேன். சேர் நீதியரசாராக பதவி உயர்வு பெற்றார்.
துரைராஜா புஸ்ஸெல்லாவாவில் உள்ள சரஸ்வதி மகா வித்தியாலயத்திலும், கண்டியில் உள்ள புனித அந்தோணியர் கல்லூரியிலும் கல்வி பயின்றார்
அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.மேலும் அவர் தடயவியல் மருத்துவம், வணிக தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி உபகரணங்கள் ஆகியவற்றில் பட்டயங்களைப் பெற்றுள்ளார்
சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு நீதியரசராக உரிய கல்வித் தகமைகள் மற்றும் சேவை மூப்பு ஆகியவற்றின் அடிப்படையிவல் நியமிக்கப்பட்ட அவர், 9 ஜனவரி 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.
பிரதம நீதியரசர் நாட்டில் இல்லாத சமயத்தில், பதில் பிரதம நீதியரசாராகவும் பணி புரிந்தார்.
இலங்கையின் 100 வரு்டங்களைத் தாண்டிய மலையக சமூகத்தில் இருந்து வந்த ஒருவர் பதில் பிரதம நீதியரசராகவும்> நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பிளராகவும் வகிபாகம் செலுத்திய வரலாறு துரைராஜா சேருக்கு மாத்திரம் உரியது. இவரது மகுடத்தில் அதுவொரு மாணிக்கமாகும்.
இவர் வழங்கிய தீர்ப்பு ஒன்றிளை அண்மையில் கல்முணை குடியியல் மேன்முறையீட்டு மன்றில் விளம்பி எனது சமர்ப்பணத்தை செய்திருந்தேன் .SC Appeal 67/2021 என்பதே அந்த வழக்காகும்.
"சிறப்பான பணிக்கு நன்றிகள்!. நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் சில நேரங்களில் காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டாலும், அவரது சட்ட அறிவையும் ஆளுமையையும் எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. "Hulftsdorp" சமூகத்தில் அவரது அந்த நேரடி அணுகுமுறை எப்போதும் பேசப்படும் ஒரு விடயமாகும் என்பதாக சிரேஸ்ட வழக்குரைஞர்கள் துரைராஜா சேர் அவர்கள் பற்றி சொல்லக்கூடிய செல்நெறியாகும்.
நீதித்துறையில் நீங்கள் ஆற்றிய அளப்பரிய சேவை என்றும் நினைவுகூரப்படும். உங்களது அந்த சட்டப் பாரம்பரியத்தை உங்களது புதல்வரும் இத்துறையில் தொடர்வது மகிழ்ச்சிக்குரியது.
ஐயா, உங்களுக்கு இனிய ஓய்வுக்கால வாழ்த்துகள்!
சுஹைலின் கைது-தடுப்புக் காவல் சட்டவிரோதம். பரிகாரமாக 2மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
காலம் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
சுஹைலின் கைது மற்றும் நீண்டகால தடுப்புக்காவல் சட்டவிரோதமானது என இன்று 23 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
♦இஸ்ரேலை எதிர்த்த ஸ்டிக்கர் பதிவுக்காக 9 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் விடயத்தில் மன்னிப்பு கோரி 2 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கினார் பொலிஸ் அதிகாரி .
மாவனல்லை பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் மீது பயங்கரவாதத் தடுப்பு சட்டம் (PTA) கீழ் மேற்கொள்ளப்பட்ட கைது மற்றும் நீண்டகால தடுப்புக்காவல், சட்டவிரோதமானது என இன்று (23) உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியதுடன், நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டார்.
21 வயதான மொஹம்மட் ரிஃபாய் மொஹம்மட் சுஹைல், 2024 அக்டோபரில் சமூக ஊடகங்களில் இஸ்ரேல் கொடியை அவமதிக்கும் வகையில் பதிவிட்டதாகக் கூறி, பொலிஸாரால் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 9 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் இன்று 23ஆம் திகதி திங்கட்கிழமை முன்னிலையாகிய முன்னாள் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி H.M.A.B. ஹேரத், நீதிமன்றத்திற்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார்.
இதன் காரணமாக இளைஞர் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவர் ஏற்றுக்கொண்டார்.
அவர் தனது வருத்தத்தை தெரிவித்ததுடன், இளைஞரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக ஒப்புக்கொண்டு, திறந்த நீதிமன்றத்தில் ரூ. 2 மில்லியன் நஷ்டஈட்டை வழங்கினார்.
இந்த மனு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, சம்பத் விஜேரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இந்த வழக்கில் குற்றச்சாட்டு சுமத்த எந்த அடிப்படையும் இல்லை என சட்ட மா அதிபர் அறிவுறுத்தியதையடுத்து, கல்கிஸ்ஸை மஜிஸ்திரேட் நீதிமன்றம் இளைஞரை விடுதலை செய்ததாக தெரிவித்தார்.
இரு தரப்பினரும் சமரசத்திற்கு இணங்கிய நிலையில், உச்ச நீதிமன்றம் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது.
மேலும், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை திரும்பப் பெற இளைஞரும் இணக்கம் தெரிவித்தார்.
இந்த 21 வயதுடைய இளைஞர், சமூக ஊடகங்களில் இஸ்ரேல் கொடியை அவமதித்ததாக, தவறான தகவல்களின் அடிப்படையில், PTA கீழ் கைது செய்யப்பட்டதன் மூலம், தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நன்றி: Vidiyal.lk
நாடு முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கும் நீதித்துறை அதிகாரிகளின் வருடாந்திர மாநாடு 2025 இன்று தொடங்கியது.
இந்த ஆண்டு மாநாடு, 'டிஜிட்டல் சகாப்தத்தில் நீதித்துறை செயல்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல்' என்ற சரியான நேரத்தில் கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது, இது நாடு பேரழிவைத் தொடர்ந்து மீண்டும் கட்டியெழுப்பி மாற்றியமைக்கும்போது அவசரமாகப் பொருத்தமான ஒரு தலைப்பாகும். தித்வா சூறாவளியின் பின்விளைவுகளை சமாளிக்க சமூகங்களும் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படுவதால், நீதி அமைப்பில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இலங்கையின் நீதித்துறைத் தலைமையின் அர்ப்பணிப்பு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியமானது.
அசுசா குபோடா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் முக்கிய வள நபர்களாக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய சந்திரசூட்; சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஐடன் சூ; மற்றும் CIABOC இன் இயக்குநர் ஜெனரல் நீதிபதி ரங்கா திசாநாயக்க ஆகியோர் அடங்குவர்.
இன்று காலை தொடக்க விழா நடைபெற்றது, இதில் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன; நீதித்துறை சேவை ஆணைய உறுப்பினர்கள் நீதிபதி மஹிந்த சமயவர்தன மற்றும் நீதிபதி எஸ். துரைராஜா; இலங்கையில் கனடா உயர் ஸ்தானிகராலய பொறுப்பாளர்கள், கிரில் இயோர்டனோவ் மற்றும் இலங்கையில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் முக்கிய வள நபர்களாக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய சந்திரசூட்; சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஐடன் சூ; மற்றும் CIABOC இன் இயக்குநர் ஜெனரல் நீதிபதி ரங்கா திசாநாயக்க ஆகியோர் அடங்குவர்.Rep/Lankadeepa
நீதிபதிகள் உட்பட இருபது அதிகாரிகளை நீதித்துறை சேவைக்குள் உள்ள கடமைகளில் இருந்து நீதித்துறை சேவை ஆணையம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
லங்காதீப செய்தித்தாளின்படி, நீக்கப்பட்டவர்களில் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி, பல மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் அடங்குவர்.
இருபது நபர்களில், ஏழு பேரின் சேவைகள் முற்றிலுமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மீதமுள்ள அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர்.
சில நீதித்துறை அதிகாரிகள் மீது பெறப்பட்ட பொது புகார்கள் மீதான விசாரணைகளைத் தொடர்ந்து நீதித்துறை சேவை ஆணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்தது.
ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்கள் மீது முறையாக குற்றம் சாட்டப்பட்டு ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணைகளைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி பிரியந்த ஜெயவர்தன தலைமையிலான நீதித்துறை சேவை ஆணையத்தால் தவறான நடத்தைக்கு ஆளான நபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டனர்.
மேலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா முன் விசாரணையை எதிர்கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வு பெறும் வயதை நெருங்கி வந்த குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு ஓய்வு பெறும் வாய்ப்பை ஆணையம் வழங்கியுள்ளது.
தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டில் மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நீதிச் சேவை ஆணைக்குழு பணிஇடைநீக்கம் செய்துள்ளது.
அதற்கமைய, இந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட மொத்த நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.
பிரத்தியேக விசாரணையைத் தொடர்ந்து, கம்பஹாவில் பணியாற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி, திறமையற்ற செயல்திறன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓய்வு பெற உத்தரவிடப்பட்டுள்ளார்
Source/Vadanthan,Hiru News
நீதித்துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் சேவை தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 05 வருட சம்பளமில்லாத விடுமுறையை வழங்குவதற்காக அரசாங்கம் முன்னதாக விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், தொடர்புடைய சுற்றறிக்கையின்படி, நீதித்துறை அதிகாரிகளின் சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை கோரும் விண்ணப்பங்களை இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை பரிசீலிக்க முடியாது என்று நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நீதிச் சேவை ஆணைக்குழு இந்த தீர்மானம் தொடர்பாக அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்