Showing posts with label Judge. Show all posts

 


நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட ஊதியம் இல்லாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடுப்பு கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டாம் என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


நீதித்துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் சேவை தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 05 வருட சம்பளமில்லாத விடுமுறையை வழங்குவதற்காக அரசாங்கம் முன்னதாக விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், தொடர்புடைய சுற்றறிக்கையின்படி, நீதித்துறை அதிகாரிகளின் சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை கோரும் விண்ணப்பங்களை இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை பரிசீலிக்க முடியாது என்று நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நீதிச் சேவை ஆணைக்குழு இந்த தீர்மானம் தொடர்பாக அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

 


கௌரவ ஓய்வு பெற்ற வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திரு இராமச்சந்திரன் அவர்கள் 07-01-2023ம் திகதி சனிக்கிழமை காலமானார்.  முல்லைத்தீவு நீதமன்றிலும், வவுனியா மேல் நீதிமன்றிலும் கடமையாற்றியவர் அவர். அவர் எந்த உத்தியோகத்தரையும் சினந்து, கடிந்து பேசியது கிடையாது, எவருக்கும் உதவி செய்யும் மனம் கொண்ட உன்னதமான ஒருவர் ஆவார்


அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.