யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றம் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை சுகாதாரத் தொண்டர்கள் குறித்த போராட்டத்தில் குதித்தனர்.
இதன்போது நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களுக்கும் யாழ்ப்பாணம்போது நான் வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
பின்னர் நேர்முகத் தேர்வுக்கு வந்த அதிகாரி ஒருவர், இன்று பிரச்சினை நடப்பதால் வேறு ஒரு தினத்திற்கு நேர்முகத் தேர்வினை நடாத்தவுள்ளதாக தெரிவித்த நிலையில் நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். இருப்பினும் சுகாதார தொண்டர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
(பு.கஜிந்தன்)
இலங்கை கடற்படை மற்றும் ராடார் கண்காணிப்பு மூலம் உள்ளூர் கடற்பரப்பில் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மீனவர்கள் கண்டறியப்படாததால், இந்தியத் தூதரகம் ஊடாக இந்திய கடற்பரப்பிலும் தேடுவதற்கான அனுமதி மற்றும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், சர்வதேச கடற்பரப்பிலும் தேடுதல் மேற்கொள்ள தனியார் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த அதிபரும் ஆசிரியர் ஒருவரும் பயணிகள் படகை தவறவிட்டமையால் கடற்தொழிலாளி ஒருவரின் சிறிய படகொன்றில் நயினாதீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கி பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கடல் கொந்தளிப்பாக காணப்பட்டமையால் படகு கடல் அலையில் சிக்கியுள்ளது.
இதன்போது படகில் இருந்த அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார்.
கடலில் விழுந்த அதிபரை படகோட்டி மீட்க முற்பட்டபோதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கட்சி வேறாக இருந்தாலும் #மனிதம் நேசிக்கிறது .. #அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சிவாஜி ஐயா வீட்டுக்கு இன்று சனிக்கிழமை சென்றுள்ளார்.
ஒரு #உண்மையை கூற வேண்டும் நேற்று #வெள்ளிக்கிழமை மாலை எனக்கு அமைச்சர் சந்திரசேகரன் தொலைபேசி எடுத்தார்.
#சிவாஜி அண்ணனுக்கு எப்படி முகநூல் போட்டுள்ள தொலைபேசி தொடர்பு எடுத்தேன் தொடர்பு கொள்ள முடியவில்லை நம்பர் ஏதேனும் மாற்றிவிட்டாரா என கேட்டார்.
அன்று மாலை #பார்த்தீபன் அண்ணா சென்று வந்ததை முகநூல் பார்த்தேன் தொடர்பு கொண்டு கேட்டேன் ஏன் சிவாஜி ஐயாவின் தொலைபேசி இயங்கவில்லை என.
#Charge இல்லை நான் சென்ற பின்னர் தான் போட்டுள்ளார் எடுங்கள் இயங்கும் என்றார்.
இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் சக அரசில் வாதியின் #நோய் நிலை பற்றி கேள்வி உற்றதும் செல்ல வேண்டும் என்ற மனம் ஏற்பட்டது.
யாழில் #தமிழ் தேசியம் சார்ந்த பல அரசியல் வாதிகள் இன்னும் சிவாஜி ஐயாவை பார்க்க செல்லாத நிலையில் அரச கட்சி அமைச்சர் சென்றதை #கூறத்தான் வேண்டும்.
சிலர் பாராளுமன்றம் சென்றதால் கொழும்பில் நிக்கிறார்கள்.ஆனால் யாழில் நிப்பவர்கள்.
கட்சி வேறாக இருந்தாலும் #மனிதம் #நேசிக்கிறது.
#வாழ்த்துக்கள்..
🔴யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை பெரும் சோகம் அரங்கேறியுள்ளது! 😭
🛑 என்ன நடந்தது?
இன்று சனிக்கிழமை அதிகாலை, வைத்தியசாலையின் பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இருளைக் கிழித்துக்கொண்டு எழுந்த தீப்பிழம்புகள் மருந்துக் களஞ்சியத்தை முற்றாகச் சூழ்ந்துகொண்டன.
⚔️ தீயுடன் பெரும் போராட்டம்!
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், தீயைக் கட்டுப்படுத்த உயிரைப் பணயம் வைத்துப் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே தீ ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 🚒💦
💊 கோடிக்கணக்கான இழப்பு!
இந்த விபத்தில் புற்றுநோய் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைக்குத் தேவையான பல கோடி ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் தீயில் கருகிச் சாம்பலாகியுள்ளன. இது ஒட்டுமொத்த வடமாகாண சுகாதார சேவையையும் உலுக்கியுள்ளது. 🥹💸
🔍 காரணம் என்ன?
மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது! 🩹🙏
#Jaffna #JaffnaTeachingHospital #Emergency #SriLankaNews #BreakingNews #FireAccident #MedicalCrisis #JaffnaNews #HealthAlert #யாழ்ப்பாணம் #தீவிபத்து #மருத்துவமனை #TrendingNews #lka
வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக கிராம அபிவிருத்திப் பிரிவு நடாத்தும் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் மாவட்ட கண்காட்சியும் விற்பனையும் நேற்றையதினம் (06.05.2026) மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் மு.ப 10.00 மணிக்கு நடைபெற்றது.
விஜய்யின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்றையதினம் யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்தோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், வெற்றியை கொண்டாடும் முகமாக கொடிகள் பறக்க விடப்பட்டதுடன், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன.
தேர்தலுக்கு முன்னரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து காக்கைதீவு பகுதியில் கொடிகள் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், கருத்துச் சுதந்திரத்தை உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
நூல்கள் மீதான தடை நீக்கப்பட்டு, எழுத்தாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் “மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு” யாழில் ஆரம்பமாகியுள்ளது.
யழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் (24.01.2026) காலை இந்த மாநாடு ஆரம்பித்து வைககப்பட்டுள்ளது.
சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் இரண்டாவது மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியிருந்தது
அதன் தொடர்ச்சியாக, சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து மூன்றாவது முறையாக இம்முறை 2026ஆம் ஆண்டிற்கான மாநாட்டை இன்றும் நாளையும் நடத்துகின்றது.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமான இம்மாநாட்டின் முதல் நாள் அமர்வுகளில், நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தததுடன் உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரம்பிள்ளை துரைராஜா மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் ரோஹித்த அபேசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் சட்டத்துறையின் தலைவர் கோசலை மதன், இவர்களுடன் சட்டத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங
நாகை - காங்கேசன் துறை கப்பல் சேவை வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் கடலில் சீற்றம் மற்றும் கன மழை பெய்தது. இந்நிலையில் உருவான டிட்வா புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புயல் தாக்கத்தால் இலங்கை காங்கேசன் துறைமுகம் கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் காங்கேசன் துறைமுக சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதையடுத்து நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறையிலான கப்பல் சேவை மூன்றரை மாதங்களுக்கு பின் வரும் 18ஆம் திகதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த முறை நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவையின் போது பயணிகள் அதிகம் செல்லும் வகையில் புதிய கப்பல் இயக்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்று (29) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வைத்தியசாலை பணிப்பாளரை குறித்த இடத்திற்கு வரவழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், குறித்த மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தனர்.
தொடர்ந்து, குறித்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் இதன்போது மக்களால் மகஜர்களும் கைளிக்கப்பட்டன. அந்தவகையில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
விஜயரத்தினம் சரவணன்