Showing posts with label Northern. Show all posts

 


வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து மரணம்!

அவரது வயிற்றில் இருந்த சிசுவை காப்பாற்ற எடுத்த முயற்சியும் தோல்வி.

 வெளியேறு : வெளியேறு!

டக்ளசுக்கு எதிராக மக்கள் போராட்டம்! பூநகரியில் அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்கு விஜயம் செய்த டக்ளசுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம்.



ஆசிரியர்களின் அபிமாணமிகு வடமாகாண ஆசிரியர் மாநாடு என்ற பெயரில் மாநாடு ஒன்று #JVP தலைவர் அனுரகுமார திசாநாயக்காவின் தலைமையில் இன்று யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. 

 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு எதிர்வரும் காலங்களில் மாலை ஆறு மணி வரை இயங்கும் என அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்

 


பெண்ணின் ஆடைகளுடன், பரமேஸ்வரி எனும் பெயருடன் யாழ் வடமராட்சி கிழக்கு கட‌ற்கரையில் இன்றுகாலை கரையொதுங்கிய மர்ம மிதவையால் பரபரப்பு...

மர்ம மிதவையை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

 


எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்பது தொடர்பில் கண்டறிய காபன் பரிசோதனை என ஒன்று உள்ளது. அதனை அமெரிக்க ஆய்வுக்கூடத்தில் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு மாதிரிகளை நாம் எடுத்துள்ளோம். அதனை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற கட்டளை ஒன்றும் உள்ளது. அந்த மாதிரிகள் நீதிமன்ற வழக்கு பொருட்கள் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாதிரிகளை அமெரிக்க ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கு செலவு ஒன்று ஆகும்தானே? அதிகாரி ஒருவர் செல்ல வேண்டும். மரண பரிசோதனையை செய்தவர் என்ற அடிப்படையில் நான்தான் மாதிரிகளை எடுத்துக்கொண்டு அமெரிக்காச் செல்ல வேணடும். சென்று ஒப்படைக்க வேண்டும். மாதிரியை பரிசோதிப்பதற்கு கொடுப்பனவு ஒன்றை ஆய்வுக்கூடத்திற்கு செலுத்த வேண்டும். ஆகவே இந்த நிதியை நீதிமன்றத்தால் வழங்க முடியாதல்லவா? ஆகவே ஓஎம்பியிடம் இதற்கு நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம். எனினும் அரசாங்கம் நிதியை கொடுத்தால் நான் நான் அமெரிக்காச் சென்று பணிகளை மேற்கொள்ள முடியும்.”

ஒரு தசாப்தம்

2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் நீர் விநியோகத்திற்கென அகழ்வுப் பணியில் ஈடுபட்டவர்களினால் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மன்னார் பொலிஸார் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட குறித்த பகுதியை பார்வையிட்டதோடு, 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய, திருக்கேதீஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது பாரிய மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டடது.

தொடர்ந்து இடம்பெற்ற அகழ்வுப் பணிகளுக்கு அமைய 81 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் தொடர்ந்து முன்னிலையாகிவரும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் வலிந்து காணாமலாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை எவ்வித தகவல்களும் வெளியவரவில்லை.

திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுடையதாக இருக்கலாம் என 2,000 நாட்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களான தமிழ்த் தாய்மார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா!


இன்று, நாளை, நாளை மறுதினம் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. 


2 ஆயிரத்து 873 பேருக்குப் புதிதாக பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. 

 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் குருதி கொடை வழங்குமாறு இரத்த வங்கியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


யாழில் இரத்த தான முகாம்களை நடத்த விரும்புவோர் தொடர்புகொள்க - 0772105375


 இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமானது.


 அடம்பன் சந்தியில் நேற்று(04) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த அருட்தந்தை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


தலைமன்னாரில் நேற்று (16) இரவு காணாமல் போன 10 வயதான சிறுமி ஒருவர் இன்று அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி அவர்கள் இன்று அதிகாலை 10.02.2024 காலமடைந்தாக அறியக் கிடைக்கிறது. 


கலாநிதி தம்பிஐயா கலாமணி அவர்கள் இலங்கையின் தமிழ் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. 


அன்னாரின் மறைவினால் துயறுற்றுள்ள அவரது குடும்பத்தினர்,  மாணவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


යාපන විශ්වවිද්‍යාලයේ අධ්‍යාපන දෙපාර්තමේන්තුවේ ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය ආචාර්ය දම්බයියා කලාමණී මහතා  2024.02.10 වන දින උදෑසන අභාවප්‍රාප්ත වූ බව දැනගන්නට ඇත.


 ශ්‍රී ලංකාවේ දෙමළ අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ උන්නතිය සඳහා ආචාර්ය දම්බයියා කලාමණීගේ දායකත්වය අතිමහත්ය.


ආචාර්ය දම්බයියා කලාමණීගේ වියෝවෙන් විපතට පත් වූ ඔහුගේ පවුලේ අයට සහ සිසුන්ට අපගේ බලවත් ශෝකය ප්‍රකාශ කරමු.


 இந்திய முன்னணி நடிகையான ரம்பா, பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் வந்தார்.


பிரபல நடிகை தனது குடும்பத்தினருடன் வந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வரவேற்கப்பட்டார்.

கடந்த டிசம்பரில் முதலில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ரம்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், ரம்பா எட்டு மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் தவிர, சில பெங்காலி, போஜ்புரி மற்றும் ஆங்கில படங்களுடன்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.