Showing posts with label Northern. Show all posts

 


பெண்ணின் ஆடைகளுடன், பரமேஸ்வரி எனும் பெயருடன் யாழ் வடமராட்சி கிழக்கு கட‌ற்கரையில் இன்றுகாலை கரையொதுங்கிய மர்ம மிதவையால் பரபரப்பு...

மர்ம மிதவையை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

 


எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்பது தொடர்பில் கண்டறிய காபன் பரிசோதனை என ஒன்று உள்ளது. அதனை அமெரிக்க ஆய்வுக்கூடத்தில் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு மாதிரிகளை நாம் எடுத்துள்ளோம். அதனை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற கட்டளை ஒன்றும் உள்ளது. அந்த மாதிரிகள் நீதிமன்ற வழக்கு பொருட்கள் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாதிரிகளை அமெரிக்க ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கு செலவு ஒன்று ஆகும்தானே? அதிகாரி ஒருவர் செல்ல வேண்டும். மரண பரிசோதனையை செய்தவர் என்ற அடிப்படையில் நான்தான் மாதிரிகளை எடுத்துக்கொண்டு அமெரிக்காச் செல்ல வேணடும். சென்று ஒப்படைக்க வேண்டும். மாதிரியை பரிசோதிப்பதற்கு கொடுப்பனவு ஒன்றை ஆய்வுக்கூடத்திற்கு செலுத்த வேண்டும். ஆகவே இந்த நிதியை நீதிமன்றத்தால் வழங்க முடியாதல்லவா? ஆகவே ஓஎம்பியிடம் இதற்கு நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம். எனினும் அரசாங்கம் நிதியை கொடுத்தால் நான் நான் அமெரிக்காச் சென்று பணிகளை மேற்கொள்ள முடியும்.”

ஒரு தசாப்தம்

2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் நீர் விநியோகத்திற்கென அகழ்வுப் பணியில் ஈடுபட்டவர்களினால் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மன்னார் பொலிஸார் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட குறித்த பகுதியை பார்வையிட்டதோடு, 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய, திருக்கேதீஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது பாரிய மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டடது.

தொடர்ந்து இடம்பெற்ற அகழ்வுப் பணிகளுக்கு அமைய 81 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் தொடர்ந்து முன்னிலையாகிவரும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் வலிந்து காணாமலாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை எவ்வித தகவல்களும் வெளியவரவில்லை.

திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுடையதாக இருக்கலாம் என 2,000 நாட்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களான தமிழ்த் தாய்மார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா!


இன்று, நாளை, நாளை மறுதினம் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. 


2 ஆயிரத்து 873 பேருக்குப் புதிதாக பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. 

 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் குருதி கொடை வழங்குமாறு இரத்த வங்கியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


யாழில் இரத்த தான முகாம்களை நடத்த விரும்புவோர் தொடர்புகொள்க - 0772105375


 இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமானது.


 அடம்பன் சந்தியில் நேற்று(04) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த அருட்தந்தை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


தலைமன்னாரில் நேற்று (16) இரவு காணாமல் போன 10 வயதான சிறுமி ஒருவர் இன்று அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி அவர்கள் இன்று அதிகாலை 10.02.2024 காலமடைந்தாக அறியக் கிடைக்கிறது. 


கலாநிதி தம்பிஐயா கலாமணி அவர்கள் இலங்கையின் தமிழ் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. 


அன்னாரின் மறைவினால் துயறுற்றுள்ள அவரது குடும்பத்தினர்,  மாணவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


යාපන විශ්වවිද්‍යාලයේ අධ්‍යාපන දෙපාර්තමේන්තුවේ ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය ආචාර්ය දම්බයියා කලාමණී මහතා  2024.02.10 වන දින උදෑසන අභාවප්‍රාප්ත වූ බව දැනගන්නට ඇත.


 ශ්‍රී ලංකාවේ දෙමළ අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ උන්නතිය සඳහා ආචාර්ය දම්බයියා කලාමණීගේ දායකත්වය අතිමහත්ය.


ආචාර්ය දම්බයියා කලාමණීගේ වියෝවෙන් විපතට පත් වූ ඔහුගේ පවුලේ අයට සහ සිසුන්ට අපගේ බලවත් ශෝකය ප්‍රකාශ කරමු.


 இந்திய முன்னணி நடிகையான ரம்பா, பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் வந்தார்.


பிரபல நடிகை தனது குடும்பத்தினருடன் வந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வரவேற்கப்பட்டார்.

கடந்த டிசம்பரில் முதலில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ரம்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், ரம்பா எட்டு மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் தவிர, சில பெங்காலி, போஜ்புரி மற்றும் ஆங்கில படங்களுடன்.


இலங்கை தமிழரசு கட்சி தலைவர் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் @ImShritharan வெற்றி பெற்றுள்ளார் அவருக்கு எமது வாழ்த்துக்கள்..

S சிறிதரன் - 184
MA  சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றுள்ளனர்


 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் வெற்று பெற்று புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுடன் தான் ஒன்றாக சேர்ந்து பயணிக்கவுள்ளதாக சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.


திருகோணமலையில் இன்றைய தினம் (21) இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 


சிறீதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம் இன்றைய தினம் எமது தமிழரசுக் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் முன்மாதிரியாக நிகழ்த்திக் காட்டி இருக்கின்றது.


இதில் வெற்றி பெற்ற சக வேட்பாளர் மற்றும் எனது நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என தெரிவித்தார்.



 தொடர்கதையாகும் ஆக்கிரமிப்புக்கள் ❤️💛 புதன் கால மாணவர் அரங்கு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் வரும் 17.01.2024 (புதன்கிழமை), நண்பகல் 01.00 மணிக்கு, புதன் கால மாணவர் அரங்கு - கலைப்பீட பரீட்சை மண்டபத்தில் நடைபெறவுள்ளது


 இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் சட்டத்தரணி திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் @GGPonnambalam அவர்களுக்கு #50ஆவது பிறந்தநாள்

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் உள்ள RIO ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திற்கு விஜயம் செய்தார்


 


வடமாகாண வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு!
வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில் வடக்கிற்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், வடமாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு செயலூக்கமான நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யாழ்.மாவட்ட தொழில்துறையினர், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், மீனவ சமூகம் மற்றும் விவசாயிகள் உள்ளடங்கிய சுமார் 300 பேர் கொண்ட குழு இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், தமது தொழில்துறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் புதிய முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில பிரச்சினைகளுக்கு அதே நேரத்தில் தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.
வடமாகாணத்திற்கு கைத்தொழில் வலயமொன்றை வழங்குமாறு கைத்தொழில்துறையினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்குத் தேவையான காணியை இனங்காணுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், மாகாண வர்த்தக ஊக்குவிப்பு நிலையமொன்றை வடமாகாணத்திற்கு விரைவாக வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வடமாகாணம், தேசிய பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிப்பதற்கு தொழில்துறைகளை அபிவிருத்தி செய்வது இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் யாழ்.பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று (06) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா உட்பட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டதுடன், யாழ்.பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான திட்டமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்துடன் பல்கலைக்கழக துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அதற்காக தற்போதுள்ள மனித வளப் பற்றாக்குறையைத் தீர்க்க தொலைக் கல்வி முறைகளைப் பயன்படுத்துவதற்கான இயலுமையையும், அதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற புலம்பெயர் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான திறனையும் ஜனாதிபதி விளக்கினார். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் விரிவுரையாளர் பரிமாற்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு மாணவர்களையும் கவரக்கூடிய வகையில் இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் மற்றும் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.