Showing posts with label Northern. Show all posts



இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், இன்றைய காலத்திலும் அதன் பாதிப்புகள் மக்கள் மத்தியில் இருந்த வண்ணமே காணப்படுகின்றது.

குறிப்பாக மனித புதைக்குழிகள், புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அவ்வப்போது தோண்டப்பட்டு வருகின்ற பின்னணியில் தற்போது யாழ்ப்பாணத்தில் தோண்டப்பட்டு வரும் செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து ஜூன் 17 அன்று வரை சுமார் 360க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் தோண்ட தோண்ட முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான மேலும் பல மனித எலும்புக்கூடுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு தொடர்ந்து அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


செம்மணி மனிதப் புதைகுழி என்றால் என்ன?
யாழ்ப்பாணம் நகருக்குள் பிரவேசிக்கும் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள ஒரு இடமே செம்மணி பிரதேசமாகும்.

இந்த செம்மணி பகுதியில் 1999ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது அந்த இடத்தில் மனிதப் புதைகுழியொன்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

வட பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து (LTTE) யாழ்ப்பாணத்தை, இலங்கை அரசாங்கம் 1995ம் ஆண்டு கைப்பற்றியிருந்தது.

இந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காணாமல் போனதாக கூறப்படும் தமிழர்கள் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு வெளியான தகவல்களின் அடிப்படையில் 1999ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் அந்த இடத்தில் மனிதப் புதைகுழி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகளில் பல எலும்புக்கூடுகள் அந்த காலப் பகுதியில் மீட்கப்பட்டதுடன், அந்நடவடிக்கை இடைநடுவில் கைவிடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், செம்மணி பகுதியிலுள்ள சித்துபாத்தி இந்து மயான பூமியின் அபிவிருத்தி பணிகளுக்கான நடவடிக்கை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழி 
படக்குறிப்பு,மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (கோப்புப்படம்)
செம்மணியில் தோண்டப்படுவது உண்மையாகவே மனிதப் புதைகுழியா? அல்லது மயானமா?
செம்மணி - சித்துபாத்தி இந்து மயானம் என்ற போதிலும், அந்த இடத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள விதம் முறையற்ற முறையில் காணப்படுவதாக, வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''இதுவொரு இந்து மயானம். இந்து மயானத்தில் சடலங்கள் புதைக்கப்படமாட்டாது. தகனம் செய்யப்படும். அவ்வாறு புதைக்கப்படுவதாக இருந்தாலும், அதற்கான முறையொன்று இருக்கின்றது. எந்த பக்கத்தில் தலை வைக்க வேண்டும், கையை எப்படி வைக்க வேண்டும், காலை எப்படி வைக்க வேண்டும் என்ற முறையொன்று இருக்கின்றது. இது அப்படியில்லை. ஒரு சடலத்துக்கு மேல் இன்னுமொரு சடலத்தை வைத்து, ஒரு பக்கத்தில் தலை, மறுபக்கத்தில் மற்றைய தலை உள்ளது, மேலும் கால்கள் மடிக்கப்பட்டு இருக்கின்றன, நீதிமன்றமே இதுவொரு குற்றப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளது." என வி எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

சித்துபாத்தியின் இன்றைய நிலைமை என்ன?

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அரசாங்கத்தின் உதவியுடன் சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஒரே இடத்தில் இரண்டு மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டதாக, வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.

''ஒரே இடத்தில் இரண்டு மனித புதைக்குழிகள் கண்டறியப்பட்டன. இரண்டாவது மனித புதைக்குழியில் 9 மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதை அதன் பின்னர் தற்காலிகமாக நிறுத்திவிட்டோம். சட்டரீதியான முறையில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், சித்துபாத்தி இந்து மயான சபையினரும் அது சம்பந்தமாக சில அறிக்கைகளை சொன்னார்கள்." என்றார்.

இந்து மயானத்தில் வயது குறைந்தவர்களை அடக்கம் செய்வதற்கும், நீதிமன்றத்திலிருந்து வருகின்ற உடல்களை அடக்கம் செய்வதற்கும் என்று இந்த இடத்தை ஒதுக்கியிருந்ததாகவும், அந்த புதைக்குழி தான் இரண்டாவது புதைக்குழியாக வருகின்றமையினால், தாங்கள் தோண்டுகின்ற போது உரிய முறையில் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவித்தார்.

"அது ஒரு சட்டரீதியான முறையில் காணப்பட்டமையினால் அதை நாங்கள் இடையில் நிறுத்தி விட்டோம். முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் தான் தற்போது ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன" என அவர் குறிப்பிடுகின்றார்.

சித்துபாத்தி மனித புதைக்குழியிலிருந்து இதுவரை 366 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 357 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், எலும்புகள் அல்லாத பிற சாட்சி பொருட்கள் 119 அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் குறிப்பிடுகின்றார்.

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்காக 56 நாட்களுக்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

'இதில் என்னுடைய அவதானத்தின் படி, சிறுவர்கள் மூன்றில் ஒரு பகுதியை விடவும் சற்று அதிகமாகவே இருக்கலாம், ஆனால் சரியான கணக்கு இப்போதைக்கு தெரியாது. உரிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் போது தான் அதை சரியாக சொல்ல முடியும். மன்னார் சதொச மனித புதைக்குழியிலிருந்து ஆகக்கூடுதலான 276 மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இந்த தொகையை தற்போது இது மிஞ்சும் என்ற நிலைமை காணப்படுகின்றது." என அவர் குறிப்பிடுகின்றார்.

காணாமல் போனோரின் உறவினர்கள் என்ன சொல்கின்றார்கள்?
லீலா தேவி ஆனந்த நடராஜா பட மூலாதாரம்,Handout
படக்குறிப்பு,இனப்படுகொலை செய்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழங்கும் தண்டனையில் இனியும் தமிழர்கள் மீது கை வைக்க நினைப்போருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று லீலா தேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.
மனித புதைக்குழியிலிருந்து அகழ்வுகளை மேற்கொண்டு, அதிலிருந்து மீட்கப்படுவோருக்கு இறுதி கிரியைகளை செய்வதை விடவும், தமது உறவினர்களுக்கு இந்த நிலைமையை ஏற்படுத்திய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதே முக்கியமானது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலா தேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார்.

அவ்வாறு தண்டனை வழங்கப்படும் பட்சத்திலேயே இவ்வாறான இனப் படுகொலைகள் இனியும் நடக்காது தடுக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

'செம்மணியை மிகப் பெரிய மனித புதைக்குழியாக அடையாளப்படுத்தியதாக சொன்னால், அதில் ஒரு அர்த்தம் இருக்கின்றது, செம்மணியில் பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றது என்பது தான் நேரடியாகவே தெரியவருகின்ற கருத்து. அதை செய்தது யார் என்பதை நாங்கள் முதலில் அறிய வேண்டும்." என்றார் அவர்.

முன்னாள் ராணுவ அதிகாரியான சோமபால ராஜபக்ஸ சாட்சி சொல்ல முன்வந்துள்ளதாகவும், ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகளை எவரும் எடுக்கவில்லை என்றும் கூறிய அவர், பாதிக்கப்பட்ட மக்கள் என்ற விதத்தில் அது பெருமளவான கவலையளிக்கின்றது என்றும் லீலா தேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார்.

மனித புதைகுழியிலிருந்து மீட்கப்படுகின்ற எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து, அது யாருடைய உடல்கள் என்று கண்டறிவதில் என்ன பயன் இருக்கின்றது என்று அவர் கேள்வி எழுப்புகின்றார்.

"இதிலுள்ள எமது உறவுகளை கண்டுபிடித்து அவர்களுக்கான கிரியைகளை செய்ய வேண்டும் என்பது ஆசையில்லை. எமது உறவுகளுக்கு இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனையை வழங்க வேண்டும் என்ற எண்ணமே உள்ளது." என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கம் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குகின்றது?
செம்மணி மனித புதைக்குழியை தொடர்ச்சியாக அகழ்ந்து, அதற்கான ஆய்வுகளை செய்வதற்கான நிதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.

சித்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 27வது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக 56 நாட்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக, பெயர் தெரிவிக்க விரும்பாத உயர்மட்ட அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நீதி அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நீதி அமைச்சர் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் விரைவில் சித்துபாத்தி மனித புதைக்குழியின் அகழ்வு பணிகளை ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அனுமதி நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ள நிலையில், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தரப்பினர் விரைவில் சித்துபாத்தி பகுதிக்கு சென்று எதிர்வரும் நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடரும் மனித புதைக்குழிகளின் அகழ்வுகள்?
வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன்பட மூலாதாரம்,Handout
படக்குறிப்பு,வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன்
இலங்கையில் 24க்கும் அதிகமான மனித புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அவற்றை உரிய முறையில் மேற்கொள்வதற்காக சட்டங்கள் இல்லை என, வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.

அவரது கூற்றுப்படி, இலங்கையில் இதுவரை 56க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் இருக்கின்றன. அவற்றில் 24 மனித புதைகுழிகள் அகழப்பட்டுள்ளன.

திருகேதீஸ்வரம், சதொச, கொக்குத்தொடுவாய், செம்மணி ஆகிய மனித புதைகுழி அகழ்வுகளில் ஈடுபட்டவர் என்ற அடிப்படையில் இதில் இப்போது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும், பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான சட்ட வரையறையொன்று இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"இங்கு எலும்பு மாத்திரமே இருக்கின்றது. அதற்கான சட்டமோ அல்லது சட்டக்கோவையோ இதுவரை உருவாக்கப்படவில்லை." என்றும் அவர் தெரிவித்தார்.

"எமது தண்டனை சட்டகோவையின் கீழ் உள்ள உடற்கூராய்வு என்ற சரத்துக்களின் கீழ் தான் இந்த விடயங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. எலும்புகளுடன் எடுக்கப்பட்ட பிற பொருட்களை ஆய்வு செய்வது காலத்தை கணிக்கக்கூடியதாக இருக்கும். மற்றையது இந்த சட்ட மருத்துவ அதிகாரிகளினால் அந்த எலும்பு எத்தனையாவது வயதில் இருக்கின்றது. ஆணா, பெண்ணா? இறப்புக்கனா காரணத்தை கண்டறிய முடியும் என்றால் இதை சொல்லிவிடுவார்கள். அதற்கான அறிக்கையை கொடுப்பார்கள். ஆனால் அது எந்த ஆண்டு இறந்தார்கள் என்பதை எவரும் சொல்ல மாட்டார்கள். அதை கண்டறிவதற்காக ஆய்வுகளை அமெரிக்காவின் ஃபுளோரிடாவுக்கு கொண்டு சென்றே செய்ய வேண்டும்." என அவர் தெரிவித்தார்.

சதொச மனித புதைக்குழிக்கு மாத்திரம் தான் அந்த ஆய்வுகளை செய்திருப்பதாக தெரிவித்த அவர், அது சரியான காலத்தைக் காட்டாது மாறாக, ஒரு கால எல்லையை மாத்திரமே காட்டும் எனவும் அவர் கூறினார். "அதனால் அதனூடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியுமா என்று சொல்ல முடியாது.' என வி.எஸ்.நிரஞ்ஜன் கூறுகின்றார்.

'காணாமல் போனோர் உறவினர்கள் இன்றும் தமது உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் டிஎன்ஏ மாதிரிகளையும், எலும்பு கூடுகளிலுள்ள மாதிரிகளையும் ஒப்பிட்டு பார்த்தால், ஏதாவது எமக்கு பிரயோசனமானதாக இருக்கும். ஆனால், அதற்காக தொழில்நுட்ப வசதிகளும், அரசாங்கத்தின் நிதி பங்களிப்பும், வசதி வாய்ப்புக்களும், அதற்கான நிறுவன அமைப்புக்களும் இலங்கையில் இல்லை." என அவர் குறிப்பிடுகின்றார்.

 


கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்களினால் திறந்து வைப்பு!

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை விகாராதிபதி உட்பட மதகுருமார்களின் ஆசீர்வாதத்துடன் யாழ் கோப்பாயில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.


 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி நேற்று (06) போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் அது இன்றையதினமும் இடம்பெற்றது.


யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றம் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை சுகாதாரத் தொண்டர்கள் குறித்த போராட்டத்தில் குதித்தனர்.


இதன்போது நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களுக்கும் யாழ்ப்பாணம்போது நான் வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.


பின்னர் நேர்முகத் தேர்வுக்கு வந்த அதிகாரி ஒருவர், இன்று பிரச்சினை நடப்பதால் வேறு ஒரு தினத்திற்கு நேர்முகத் தேர்வினை நடாத்தவுள்ளதாக தெரிவித்த நிலையில் நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். இருப்பினும் சுகாதார தொண்டர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


(பு.கஜிந்தன்)

 


பருத்தித்துறை கடலுக்குச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக இந்தியாவின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


இலங்கை கடற்படை மற்றும் ராடார் கண்காணிப்பு மூலம் உள்ளூர் கடற்பரப்பில் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மீனவர்கள் கண்டறியப்படாததால், இந்தியத் தூதரகம் ஊடாக இந்திய கடற்பரப்பிலும் தேடுவதற்கான அனுமதி மற்றும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


மேலும், சர்வதேச கடற்பரப்பிலும் தேடுதல் மேற்கொள்ள தனியார் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.


   


நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த அதிபரும் ஆசிரியர் ஒருவரும் பயணிகள் படகை தவறவிட்டமையால் கடற்தொழிலாளி ஒருவரின் சிறிய படகொன்றில் நயினாதீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கி பயணம் செய்துள்ளனர்.


இந்நிலையில் குறித்த கடல் கொந்தளிப்பாக காணப்பட்டமையால் படகு கடல் அலையில் சிக்கியுள்ளது. 


இதன்போது படகில் இருந்த அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார்.


கடலில் விழுந்த அதிபரை படகோட்டி மீட்க முற்பட்டபோதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 


கட்சி வேறாக இருந்தாலும் #மனிதம் நேசிக்கிறது .. #அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சிவாஜி ஐயா வீட்டுக்கு இன்று சனிக்கிழமை சென்றுள்ளார்.


ஒரு #உண்மையை கூற வேண்டும் நேற்று #வெள்ளிக்கிழமை மாலை எனக்கு அமைச்சர் சந்திரசேகரன் தொலைபேசி எடுத்தார்.


#சிவாஜி அண்ணனுக்கு எப்படி முகநூல் போட்டுள்ள தொலைபேசி தொடர்பு எடுத்தேன் தொடர்பு கொள்ள முடியவில்லை நம்பர் ஏதேனும் மாற்றிவிட்டாரா என கேட்டார்.


அன்று மாலை #பார்த்தீபன் அண்ணா சென்று வந்ததை முகநூல் பார்த்தேன் தொடர்பு கொண்டு கேட்டேன் ஏன் சிவாஜி ஐயாவின் தொலைபேசி இயங்கவில்லை என.


#Charge இல்லை நான் சென்ற பின்னர் தான்  போட்டுள்ளார் எடுங்கள் இயங்கும் என்றார்.


இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் சக அரசில் வாதியின் #நோய் நிலை பற்றி கேள்வி உற்றதும் செல்ல வேண்டும் என்ற மனம் ஏற்பட்டது.


யாழில் #தமிழ் தேசியம் சார்ந்த பல அரசியல் வாதிகள் இன்னும் சிவாஜி ஐயாவை பார்க்க செல்லாத நிலையில் அரச கட்சி அமைச்சர் சென்றதை #கூறத்தான் வேண்டும்.


சிலர் பாராளுமன்றம் சென்றதால் கொழும்பில் நிக்கிறார்கள்.ஆனால் யாழில் நிப்பவர்கள்.


கட்சி வேறாக இருந்தாலும் #மனிதம் #நேசிக்கிறது. 


#வாழ்த்துக்கள்..

 


🔴​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை பெரும் சோகம் அரங்கேறியுள்ளது! 😭


​🛑 என்ன நடந்தது?

இன்று சனிக்கிழமை அதிகாலை, வைத்தியசாலையின் பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இருளைக் கிழித்துக்கொண்டு எழுந்த தீப்பிழம்புகள் மருந்துக் களஞ்சியத்தை முற்றாகச் சூழ்ந்துகொண்டன.


​⚔️ தீயுடன் பெரும் போராட்டம்!

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், தீயைக் கட்டுப்படுத்த உயிரைப் பணயம் வைத்துப் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே தீ ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 🚒💦


​💊 கோடிக்கணக்கான இழப்பு!

இந்த விபத்தில் புற்றுநோய் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைக்குத் தேவையான பல கோடி ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் தீயில் கருகிச் சாம்பலாகியுள்ளன. இது ஒட்டுமொத்த வடமாகாண சுகாதார சேவையையும் உலுக்கியுள்ளது. 🥹💸


​🔍 காரணம் என்ன?

மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

​யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது! 🩹🙏

​​#Jaffna #JaffnaTeachingHospital #Emergency #SriLankaNews #BreakingNews #FireAccident #MedicalCrisis #JaffnaNews #HealthAlert #யாழ்ப்பாணம் #தீவிபத்து #மருத்துவமனை #TrendingNews #lka

வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக கிராம அபிவிருத்திப் பிரிவு நடாத்தும் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் மாவட்ட கண்காட்சியும் விற்பனையும் நேற்றையதினம் (06.05.2026) மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் மு.ப 10.00 மணிக்கு நடைபெற்றது.

 


விஜய்யின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அந்தவகையில் இன்றையதினம் யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்தோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


மேலும், வெற்றியை கொண்டாடும் முகமாக கொடிகள் பறக்க விடப்பட்டதுடன், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன.


தேர்தலுக்கு முன்னரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து காக்கைதீவு பகுதியில் கொடிகள் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 


யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள உயிரிழந்துள்ளனர்.


பருத்தித்துறை வீதியில் கோப்பாய் நாவட்கட்டு பகுதியில் இன்று அதிகாலை உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


 “யாமார்க்கும் குடியல்லோம்" என்ற கருப்பொருளில், கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் பேரெழுச்சியாய் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வு.



 


கிளிநொச்சியில் உள்ள கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் உட்பட தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதை கண்டித்து இன்று (26) கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது.


இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், கருத்துச் சுதந்திரத்தை உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.


நூல்கள் மீதான தடை நீக்கப்பட்டு, எழுத்தாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.


 


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் “மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு” யாழில் ஆரம்பமாகியுள்ளது. 


யழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில்  (24.01.2026) காலை இந்த மாநாடு ஆரம்பித்து வைககப்பட்டுள்ளது.

சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் இரண்டாவது மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியிருந்தது



மூன்றாவது மாநாடு

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து மூன்றாவது முறையாக இம்முறை 2026ஆம் ஆண்டிற்கான மாநாட்டை இன்றும் நாளையும் நடத்துகின்றது.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமான இம்மாநாட்டின் முதல் நாள் அமர்வுகளில், நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


யாழில் ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு | International Law Conference Begins In Jaffna

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தததுடன் உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரம்பிள்ளை துரைராஜா மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் ரோஹித்த அபேசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் சட்டத்துறையின் தலைவர் கோசலை மதன், இவர்களுடன் சட்டத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங

நாகை - காங்கேசன் துறை கப்பல் சேவை வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.


தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் கடலில் சீற்றம் மற்றும் கன மழை பெய்தது. இந்நிலையில் உருவான டிட்வா புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 இந்த புயல் தாக்கத்தால் இலங்கை காங்கேசன் துறைமுகம் கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் காங்கேசன் துறைமுக சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 


இதையடுத்து நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறையிலான கப்பல் சேவை மூன்றரை மாதங்களுக்கு பின் வரும் 18ஆம் திகதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த முறை நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவையின் போது பயணிகள் அதிகம் செல்லும் வகையில் புதிய கப்பல் இயக்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 


முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.


இந்நிலையில் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்று (29) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அந்தவகையில் சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது வைத்தியசாலை பணிப்பாளரை குறித்த இடத்திற்கு வரவழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், குறித்த மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தனர்.


தொடர்ந்து, குறித்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் இதன்போது மக்களால் மகஜர்களும் கைளிக்கப்பட்டன. அந்தவகையில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


விஜயரத்தினம் சரவணன்


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.