Showing posts with label Northern. Show all posts

நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்ததாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் , நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

அவரது பதவி விலகலை, நீதி சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை, அடுத்து , நேற்றைய தினம் புதன்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி, மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு விஜயம் செய்த நிலையில், நீதவானின் சமாதான அறை மற்றும் நீதிமன்றத்தில் நீதவானின் கட்டுப்பாட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் என்பன மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், நீதவான், நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவினால், மல்லாகம் மேலதிக நீதிபதிக்கு எதிரக  நேற்றைய தினம் 23.9.2025 அன்று விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இதனடிப்படையில், மல்லாகம் மேலதிக நீதவான் இராஜினாமாச் செய்ததாகக தெரியவருகின்றது.




 யாழ் மாவட்ட சிறப்பு போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட சிறப்பு போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் போக்குவரத்து சிக்கல்கள், அவற்றிற்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சாலை மேம்பாட்டு தேவைகள், சில பகுதிகளில் பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், தீவுக் குடியிருப்பாளர்களுக்கான கடல்சார் போக்குவரத்து பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.


மேலும், யாழ்ப்பாணத்துடன் நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் பொதுப் போக்குவரத்து, வணிகப் போக்குவரத்து மற்றும் சந்தைச் சார்ந்த போக்குவரத்து நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


வடமாகாண ஆளுநர் என்.ஏ. வேதநாயகன், மாவட்டச் செயலாளர் எம். பிரதீபன், தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றக் குழுத் தலைவர் ச. சிறிதரன், மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து #JIA மருத்துவ விமானசேவை முதல்முறையாக இன்று இடம்பெற்றது.

ஹைதராபாத்திலிருந்து வந்த ஒரு சிறப்பு #MEDEVAC விமானம் #யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இருவரை ஏற்றிச்சென்றது.

 


வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளன!

#Announced #northeast  #shutdown #Jaffna #normaloperations



 மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று  (09) 7 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் தீவு பகுதியில் 2ஆவது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக மக்களும்,பொது அமைப்புக்கள் இணைந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில்,மக்களின் எதிர்ப்பையும் மீறி காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் மன்னார் நகர பகுதிக்கு பலத்த பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.

எனினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வந்தது. இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மூலம் இன்று வருகை தந்து குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர்.

குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் ஏற்கனபேவ அமைக்கப்பட்ட காற்றாலை மின் கோபுரங்களினால் மீனவர்கள் பாரிய அளவில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள்,குறிப்பாக வயோதிபர்கள், சிறுவர்கள், கர்ப்பினித்தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும்  காற்றாலை கோபுரங்கள் அமைத்ததன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பேசாலை கிராமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய வெள்ள நீர் தேங்கிய நிலையில் அவற்றை கடலுக்குள் செலுத்த தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.
மேலும் மன்னார் தீவு பகுதியில் முன்னெடு முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வுக்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் எனவும் மன்னார் தீவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் குறித்த இரு திட்டங்களையும் நிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக சென்று மீண்டும் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர்.

பின்னர் நகர சுற்றுவட்ட பகுதியில் தமது போராட்டத்தை தொடர்ந்து  முன்னெடுத்து வருகின்றனர்.

 


இன்று ஆரம்பமான யாழ் செம்மணி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வில் 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!


ஏற்கனவே 65 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 




(வி.சுகிர்தகுமார்)



எவரும் எதையும் செய்துவிட்டு கட்சியில் தொடர்ந்திருக்கலாம் என நினைக்கக்கூடாது. கட்சிக்கு ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் யாரும் இரகசிய வாக்கெடுப்பில் ஈடுபடவோ அல்லது இரகசிய வாக்கெடுப்பிற்கு கோர முடியாது. பகிரங்க வாக்கெடுப்பிற்கே வாக்களிக்க வேண்டும்.
தவிசாளர் பிரதி தவிசாளர்களை கட்சியே தீர்மானிக்கும். கட்சி முன்மொழிகின்றவர்களுக்கே உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று  (21) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் அக்கரைப்பற்றில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ. சுமந்திரன் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்; சிறப்பித்தார்.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கல்முனை தொகுதி அமைப்பாளர் அருள்.நிதான்சன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் திருக்கோவில் தவிர்ந்த பொத்துவில் ஆலையடிவேம்பு காரைதீவு சம்மாந்துறை நாவிதன்வெளி ஆகிய 05சபைகளின் 24 உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

 


யாழ் ஊர்காவற்துறையில் மக்கள் வெடி கொளுத்தி கொண்டாட்டம்!

பல வருடங்களாக EPDP வசமிருந்த ஊர்காவற்துறை பிரதேச சபை தமிழ்த்தேசிய பேரவையிடம்.

தமிழரசுக்கட்சி இரண்டுபட ஈபிடிபியின் கோட்டை எனப்படும் ஊர்காவற்துறையில் ஈபிடிபி @ITAKOrg சதி முறியடிப்பு.

யாழ்ப்பாணம் நூலக #JaffnaPublicLibrary எரிப்பின் 44ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் நூலக நுழைவாயிலில் , தமிழ்த்தேசிய பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

 


முல்லையில் செல்பி மோகத்தால் பறிபோன இரு உயிர்கள்!


#முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி எடுப்பதற்காக சென்ற முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவிகள் (15) இருவர் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக மரணம்.

 


கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்.


 


யாழ் நல்லூர் ஆலயச்சூழலில் புதிதாக அமைக்கப்பட்ட அனுமதி அளிக்கப்படாத அசைவ உணவகத்திற்கு எதிராக இடம்பெற்ற மக்கள் போராட்டங்களை அடுத்து, உணவகத்தின் பெயர்ப்பலகையை யாழ் மாநகர சபையினர் தற்போது அகற்றியுள்ளனர்.

 


வடக்கு, கிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகள் முன்னிலை!

ஆனாலும் பெரும்பான்மை இல்லை! நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயக பிரதேசங்களில் தமிழ்த்தேசிய கட்சிகளே முன்னிலை பெற்றுள்ளன. #Tamil #Elections #LKA #WWTnews #WorldwideTamils

 


மூன்று கோமாளிகளும்,

ஒரு பைத்தியமும் போதும், இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்! எனக்கோரி யாழ்ப்பாணம் கல்விச் சமூகம் என்ற பெயரில் யாழில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


 


யாழில் சாதனை!


சற்றுமுன் வெளியாகியுள்ள கபொத உயர்தர பரீட்சை 2024பெறுபேறுகளில் யாழ் மருத்துவர் ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்கள் சாதனை!


இருவரும் உயிரியலில் 3A பெற்று மாவட்ட ரீதியில் 1ஆம், 2ஆம் இடங்களையும், நாடு தழுவிய ரீதியில் 3ஆம், 5ஆம் இடங்களையும் பெற்றுள்ளனர்.




மன்னார் நிருபர் லெம்பட்-

வீதியில் நேற்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில், குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர். 

இதன்போது, குறித்த டிப்பர் வாகனத்தில் 4 பேர் பயணித்திருந்தனர். 

சம்பவத்தில் பெரியமடு பகுதியைச் சேர்ந்த கே.சத்திய பிரபாகரன் (வயது-31) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர். 

இந்த நிலையில் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தெரியவந்துள்ளது. 

அதன்படி, வாகன சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார். 

மேலும் காயமடைந்த மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு சகோதரர்களில் ஒருவர் வீடு திரும்பியுள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-மன்னார் நிருபர் லெம்பட்-

 


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.

 

காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பருத்தித்துறை பகுதியில் இன்று காலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பரை பொலிஸார் வழிமறித்தனர். பொலிஸாரின் கட்டளையை மீறி டிப்பர் பயணித்த நிலையில் டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

 

இதன்போது ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் இன்னொருவர் காயமடைந்தார்.

 

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 பு.கஜிந்தன்

 




ஓய்வுநிலை நீதிபதி இளஞ்செழியனுக்கான பிரியாவிடை சனிக்கிழமையன்று வுவுனியாவில் நடைபெற்றது.


வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது.


வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் வவுனியா - ஈரப்பெரியகும் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


முன்னதாக ஏ - 9 பிரதான வீதியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து நீதிபதி மா.இளஞ்செழியன் வரவேற்கப்பட்டதுடன்,  அவரது 27 வருட நீதித்துறை சேவையைப் பாராட்டிய வடக்கு - கிழக்கு பகுதிகளில் இருந்து வருகை தந்த மேல் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற, நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த சட்டத்தரணிகள் ஆகியோர் கௌரவிப்புக்களையும் வழங்கினர்.


நீதித்துறையில் 27 வருடத்தைப் பூர்த்தி செய்த நீதிபதியாக கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேன்முறையீட்டு நீதிமன்ற  நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் அரசின் இழுத்தடிப்புகளாலும், காலதாமங்களாலும் அவர் ஓய்வுநிலைக்குச் செல்கின்றார். இருப்பினும் அந்தப் பதவி  நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் இதன்போது கருத்துத் தெரிவித்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.