Showing posts with label Accident. Show all posts



அக்கரைப்பற்றில் அண்மைய நிகழ்ந்த விபத்தினால், கடுங்காயமுற்ற , முச்சக்கர வண்டிச் சாரதி சகோதரர் பைறூன் இன்று அதிகாலை அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலை அதி.தீவிர சிகிச்சைப். பிரிவில், காலமானார்.

இவர், நிலூபா ( தாதி உத்தியோகத்தர் ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று) அவர்களின் அன்பு கணவரும் 


ஸைனா

ஹாமித்

ஹைதா

ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார் 


நல்லடக்க விபரம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்





 


அக்கரைப்பற்றில் விபத்தினால்,அண்மையில், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு  கடுங்காயமேற்படுத்திய 16 வயது மாணவனை எதிர்வரும் 16ந் திகதி வரை  சிறுவர் காப்பாத்தில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நிதவான் திருமதி. அபிநயா சூரியசிவா உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று, பொலிசார் குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

குறித்த சந்தேக நபர், இம்முறை க.பொ.த (சா/ த) பரிட்சைக்குத் தோற்றும் மாணவர் என்பதாலும்,16 வயது நிரம்பப் பெற்றவர் என்பதனாலும், இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


உடவலவ-தனமல்வில வீதியின் இடம்பெற்ற கோர விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.


பேரியல் சந்திப் பகுதியிலிருந்து தனமல்வில நோக்கி அதிவேகமாகச் சென்ற லொறி ஒன்று, வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது மோதியுள்ளது. இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.


விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக உடவலவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். உடவலவ பொலிஸார்  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




(இச் செய்தி புதுப்பிக்கப்பட்டுவருகின்றது)

அக்கரைப்பற்று  முதலியார் வீதியில், இன்று மாலை 6.30 அளவில் விபத்து ஒன்று நிகழ் ந்துள்ளது..

 மிக வேகமாக செலுத்திய கார்-சாரதி முச்சக்கர வண்டியில்  மோதுண்டதால், குறித்த முச்சக்கர வண்டிச் சாரதி கடுங்காயமுற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், அவசர சிகிச்சப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.

தற்போது, மேலதிக சிகிச்சைகளுக்காக, கடுங்காயமுற்றவர்,  மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த காரைச் செலுத்திய சாரதி, இம்முறை  சா/த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர் என்பதாகவும் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனத்தைச் செலுத்தி வந்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த விபத்தில், முச்சக்கர வண்டி முச்சக்கர.வண்டி முழுமையாக.சேதமடைந்துள்ளது.

அக்கரைப்பற்று பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



நூருல் ஹுதா உமர்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.அஷ்ரப் தாஹிர் அவர்களின் தலைமையில், அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, இன்று நிந்தவூர் அஸ்ரப் ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்தில் அல்ஹிக்மா பவுண்டேஷன் அமைப்பின் அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டம், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக அமையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அஷ்ரப் தாஹிர் எம்.பி. அவர்கள் இந்த நிகழ்வில் உரையாற்றுகையில், கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் எனக் குறிப்பிட்டதுடன், மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு இத்தகைய கல்வி ஆதரவு முயற்சிகள் மிக அவசியமானவை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் இங்கு பேசிய அவர்கள், ஏழை மற்றும் பலவீனமுள்ள குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் சுகாதார சேவைகள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் வறியோருக்கான நல உதவிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் வழங்குதல் போன்ற பல்வேறு சமூகப் பணிகள் எங்கள் அமைப்பினால் இடம்பெற்று வருகின்றன.

அதேபோன்று, கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “Education for All” திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கு கல்வி ஆதரவு வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று இந்த ரூ. 6,250 பெறுமதியான கல்விப் பொதியை, 500 மாணவர்களுக்கு ரூ. 3,125,000 ரூபாய் செலவில் வழங்குகிறோம். ஒவ்வொரு கல்விப் பொதியிலும், புத்தகப்பை, பயிற்சி புத்தகங்கள், பென்சில்கள், பேனாக்கள்,  ரப்பர்கள்,  பென்சில் சீவிகள், டிபன் பெட்டி, குடிநீர் போத்தல், வண்ண கலர் பெட்டி மற்றும் குடை ஆகியவை அடங்கியுள்ளன.

அல்-ஹிக்மா பவுண்டேஷன், வறுமை நீக்கம், சமூக பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம், சமுதாயத்தில் சமத்துவமான வளர்ச்சியை உருவாக்கும் நோக்குடன் தனது சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.சமூக நலன் மற்றும் கல்வி முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தி, தொடர்ச்சியாக பல்வேறு மனிதாபிமான சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் இத்தகைய திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட செயற்குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பிலான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


கடுமையான வெள்ளப்பெருக்கின் போது நீரில் மூழ்கிய கலா ஓயா பாலத்தின் வழியாக பேருந்தை ஓட்ட முயன்றதற்காக, இரண்டு பயணிகளின் மரணத்திற்கு காரணமானதாகவும், உயர் நீதிமன்ற நீதிபதி உட்பட 66 பேரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். 


மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பரந்தன் - முல்லைத்தீவு வீதியில், முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தின் போது காருக்குள் சிக்கி நசுங்கிய நிலையில் இருந்த இருவரது உடல்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. 

படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். 

 

இந்த விபத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த 32, 34, 46 வயதானவர்களே உயிரிழந்தனர்.

மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். 

 

கிளிநொச்சி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

 


🛑#கந்தளாய் வைத்தியசாலைக்கு முன்னால் இருந்த பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கர வண்டிகள் சேதம்!


இன்று 11 காலை இடம்பெற்றுள்ளது.


திருகோணமலை கந்தளாய் தள வைத்தியசாலைக்கு முன்பாக நின்றிருந்த ஒரு பாரிய மரம் திடீரென முறிந்து வீழ்ந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.


வைத்தியசாலைக்கு வருகை தந்தவர்கள் மற்றும் நோயாளர்களை ஏற்றிச் செல்லும் நோக்கில் தரித்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளே இவ்வாறு மரத்தின் கீழ் சிக்கி நசுங்கியுள்ளன.


அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் பாரிய காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என

தகவல்கள் தெரிவிக்கின்றன


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் நடத்தி வருகின்றனர்

 



ஹட்டனில் சதொச கொள்கலன் ஊர்தி தாழிறக்கம்: வீதியை நோக்கி சாய்ந்து ஆபத்தான நிலையில்!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் மல்லியாப்பு சந்தியில் அமைந்துள்ள சதொச கிளைக்கு முன்னால், இன்று (10) காலை பொருட்கள் ஏற்றிய பாரிய கொள்கலன் (Container) ஊர்தியொன்று தாழிறங்கியதால் ஆபத்தான நிலையும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.


வீரவில பகுதியில் இருந்து பெருமளவிலான அரிசி மற்றும் வாசனைத் திரவியங்களை ஏற்றிக்கொண்டு ஹட்டன் சதொச கிளைக்கு வந்த இந்தக் கொள்கலன் ஊர்தி, இன்று காலை 9.00 மணியளவில் பொருட்களை இறக்குவதற்காக சதொச நிறுவனத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டது. இதன்போது, வீதியில் போடப்பட்டிருந்த கொன்கிரீட் தளம் ஊர்தியின் பாரத்தைத் தாங்க முடியாமல் உடைந்ததில், அதன் சில்லொன்று நிலத்திற்குள் புதைந்து போயுள்ளது.


இந்தத் தாழிறக்கத்தினால் கொள்கலன் ஊர்தி பிரதான வீதியை நோக்கி சாய்ந்து காணப்படுவதுடன், அது வீதியில் கவிழ்ந்து விழக்கூடிய ஆபத்தான நிலை காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். ஊர்தியில் உள்ள அதிகப்படியான பாரம் காரணமாக, அதனை அந்த இடத்திலிருந்து அகற்றும் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், பிரதான வீதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டதால் ஹட்டன் - கொழும்பு வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


 தற்போது ஊர்தியிலுள்ள பொருட்களை வேறொரு வாகனத்திற்கு மாற்றி, கொள்கலன் ஊர்தியை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


ஏ-9 பிரதான வீதியில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த  பகுதியில் விபத்து


அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கழிவுநீர்க் கால்வாய்க்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்து   இன்று 27 காலையில் இடம்பெற்றுள்ளது.

லாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் ராசிக் அவர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது.

ஓட்டமாவடியிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த  வாழைச்சேனை  சட்டத்தரணி ராசிக் அவர்களின் கார் சற்று முன் கொழும்பு - மட்டக்களப்பு வீதியில் பிள்ளையாரடி 103 கட்டையில் குடைசாய்ந்து விபத்து - தெய்வாதீனமாக பயணித்த எவருக்கும் எந்தவித ஆபத்துமில்லை.


சட்டத்தரணி ராசீக் அவர்களுடன் ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏம்.எம்.ஹலீம் இஸ்ஹாக், மாவடிச்சேனை டொப் ஸ்டீல் உரிமையாளர் எம்.எச்.முஸம்மில் மற்றும் சாரதியும் பயணித்துள்ளனர்.


#Rep/TrincoVoice

 திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹிந்தபுர சந்தியில் வைத்து பஸ்வண்டி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.


திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (25) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அக்கரைப்பற்றிலிருந்தி திருகோணமலைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்தே இவ் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.


விபத்தில் காயமடைந்த 9 பேர் மூதூர் தள வைத்தியசாலையிலும் 3 பேர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


மட்டக்களப்பு கிரான் பகுதியில் டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழில்நுட்ப கல்லூரி மாணவன் பலி!


பலியான மாணவன் நாளை கற்கை நெறி முடித்து பயிற்சி கடிதம் பெற இருந்த மாணவன் என்பது குறிப்பிட தக்கது!


Reo/TheHotLine.

 கிழக்கு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவன் மஸூத் விபத்தில் மரணம். 


இன்று (24/11/2025)  மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில்  வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவன் முஹம்மத் மஸூத் காலமானார். 


கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று வாழைச்சேனை நோக்கி வரும் வழியிலேயே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளார். 


23 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், மீராவோடையை பிறப்பிடமாகவும் வாழைச்சேனை ஹைராத் வீதியை  வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


ஜனாஷா தற்போது மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.


தகவல் - பெளசுல் ஹமீட்

 


அநுராதபுரம் - தலாவ வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பஸ் விபத்தில் ஒருவர் மாத்திரம் உயிரிழந்ததாகவும், விபத்தில் காயமடைந்த 38 பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும், 4 பேர் தலாவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


 


புத்தல - மொனராகலை பிரதான வீதியில் 11ஆம் மைல்கல் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


இன்று (10) மதியம் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்த நிலையில், புத்தல பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் பேருந்தில் பயணித்த சில பயணிகளுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


விபத்து தொடர்பில் புத்தல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 



(வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவின் முதலாவது பட்டம் பெற்ற சித்த வைத்தியராக மருத்துவர் செல்வி கோணேஸ்வரன் குகராணி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ  பீடத்தில் பயின்று 2019 இல் பட்டம் பெற்று காரைதீவின் முதலாவது சித்த  மருத்துவ பட்டதாரியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் .

இவருக்கான பதவி  நியமனக் கடிதம் கடந்த வாரம் கொழும்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால்  கையளிக்கப்பட்டது.
 
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓந்தாச்சிமடம் ஆயுர்வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அங்கு அவர் நேற்று முன்தினம் கடமையை பொறுப்பேற்றுள்ளார்

 


ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் உள்ள நானுஓயா ஹுலங்வங்குவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


தலவாக்கலையிலிருந்து நுவரெலியா உடப்புசல்லாவையை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் கவிழ்ந்ததில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்து இடம்பெற்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் முச்சக்கரவண்டியில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 


விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


அக்கரைப்பற்று -கல்முனை  பிரதான வீதியில் இன்று மாலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. பிரதான வீதியில் பின்னால் வந்த கென்ரர் ரக வாகனம் முன்னால் சென்ற வேனில் பின் பகுதியில் மோதியது. தெய்வாதீனமாக அதிலிருந்த குழந்தையும் பெண்ணும் உயிர் தப்பினர். குறித்த வேன், தனக்கு முன் எதிரே சென்ற  வெசல் ரக காரில் மோதுண்டது. இதனால், குறித்த காரின் பின் பகுதியும் சேதமடைந்தது.



 


வாழைச்சேனை, வாகனேரி  விபத்தில் மரணமடைந்த குடும்பஸ்தரின் ஜனாஷா உறவினர்களிடம் கையளிப்பு 


எஸ்.எம்.எம்.முர்ஷித் 


மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில் வாழைச்சேனை, வாகனேரி பிரதேசத்தில் நேற்று (23) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று மரணமடைந்த சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் பொலன்னறுவை, வெலிகந்த, நவசேனபுரயை வசிப்பிடமாகவும் முஹம்மது புஹாரி அவர்களின் ஜனாஷா உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. 


குறித்த ஜனாஷா பெற்றுக்கொள்வதிலும் விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு சேர்ப்பதிலும் காத்தான்குடி ஜனாஷா சேவை, கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை, கட்டுவம்வில ஜனாஷா சேவையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்ததுடன், கடுவன்வில ஜனாஷா சேவை அமைப்பினர் ஜனாஷாவை வீட்டுக்கு கொண்டு சேர்ப்பதற்கான வாகன வசதியையும் செய்திருந்தனர். 


நேற்றைய தினம் (23) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகனேரி பிரதேசத்தில் சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து பொலன்னறுவை, நவசேனபுர நோக்கிப்பயணித்த வேனும் வெலிகந்த பிரதேசத்திலிருந்து வாழைச்சேனை நோக்கிப்பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த கோர விபத்து இடம்பெற்றிருந்தது.


இதில், வேனின் சாரதி உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஆறு பெண்கள் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 74 வயது முஹம்மது புஹாரி என்பவர் மரணமடைந்த நிலையில், பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் தற்போது தேறி வருவதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தையும் தற்போது தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


குறித்த வேன் அதே திசையில் முன்னால் சென்ற பவுசர் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியே இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது. 


விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியும் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.