Showing posts with label Accident. Show all posts


-மன்னார் நிருபர் லெம்பட்-

மன்னார்- முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் ரயில் கடவை பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (24) மாலை 5 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து சென்ற தென் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்தும், வவுனியா பகுதியில் இருந்து முருங்கன் வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் முருங்கன்- கற்கிடந்தகுளம் கிராமத்திற்கு இடையில் உள்ள  ரயில்வே கடவைப் பகுதியில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் உயிரிழந்தவர்  நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் நாக செட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தீபன்   (வயது-35) என்ற இளம் குடும்பஸ்தர் என தெரிய வருகிறது.

 சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



-மன்னார் நிருபர் லெம்பட்-

 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 50 பேருக்கு காயம்



கடுவளை ரனால பகுதியில் இன்று மதியம் இரு தனியாருக்கு சொந்தமான  பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

 எம்பிலிப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸே பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பஸ்ஸிடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

 


(எஸ்.அஷ்ரப்கான்)


அம்பாரை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழகம் முன்பாக பிரதான வீதியில் நேற்று இரவு 07.45 மணியளவில் கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்துக்குள்ளானது.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மோட்டார் வாகனத்தில் வந்த நபர் குடிப்பதிலிருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


கங்குவேலி - புளியடிச்சோலை பாலத்திற்கு அருகே இன்று (16) அதிகாலை பஸ் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பஸ்ஸில் சாரதி மாத்திரம் இருந்துள்ளதாகவும் எவருக்கும் எந்த ஆபத்தும் இல்லை எனவும் தெரியவருகின்றது.

 


மட்டக்களப்பு  தாளங்குடா  பகுதியில் அதிசொகுசு கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


 பொத்துவிலில் இருந்து வந்து கொண்டிருந்த போது தாளங்குடா பிரதான வீதியில் வைத்து இன்று அதிகாலை 2.25 மணியளவில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


மேலும் சம்பவம் தெரிய வருகையில் விபத்துக்குள்ளான காரில் மூன்று நபர்கள் வந்து கொண்டிருந்த வேளை சாரதியின் தூக்க கலக்கமே இவ்விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.


வாகன சாரதி சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் பயணியர் ஆதார வைத்திய சாலையிலும்  மற்றும் ஒரு நபர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.






(கனகராசா சரவணன்;)
வாழைச்சேனையில் ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 3 மீனவர்கள்  உயிருடனும் ஒருவரை சடலமாகவும் கடற்படையினர் மீட்பு ஒருவர் காணாமல் போயுள்ளார்--

வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இயந்திர படகு உடைந்து நீரில் மூழ்கியதையடுத்து அதிலிருந்த் தப்பி கடலில் தத்தளித்த 3 மீனவர்களை இன்று வெள்ளிக்கிழமை (17)  மாலையில் உயிருடனும் ஒருவரை சடலமாகவும் கடற்படையினர்  மீட்டகப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

அம்பாறை நிந்தவூர்; 9 ம் பிரிவு அரசடி மையவாடி வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமது அலியார் இபிறாலெப்பை என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கல்முனையைச் சேர்ந்த 5 மீனவர்கள்  வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக கடந்த 12 ம் திகதி கடலுக்கு இயந்திர படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஆழ்கடலில் படகு உடைந்து நீரிழ் மூழ்கியதையடுத்து அதில் இருந்த மீனவர்கள் தப்பி கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதன் போது கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினார் மீனவர்கள் கடலில் தத்தளிப்பதை இன்று வெள்ளிக்கிழமை மாலை கண்டதையடுத்து தத்தளித்துக் கொண்டிருந்த  3  மீனவர்களை உயிருடனும் ஒருவரை சடலமாக மீட்டனர் ஒருவர் காணாமல் போயுள்ளார். 

இதில் உயிருடன் மீட்டகப்பட்ட ஒருவர்  ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவரை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஏனைய இருவரையும் மீட்கப்பட்ட சடலத்தையும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு இரவு கடற்படையினர்  கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனா


 #Rep/Faslin

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து மட்டக்களப்பு பகுதியில் 
கோர விபத்து!

கல்முனையிலிருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில்  விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசாரணை
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து செங்கலடி சந்தியிலுள்ள ரான்ஸ்போமர் தூணை உடைத்து கடையொன்றினுள் புகுந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்  விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செங்கலடிப் பிரதேசத்தில், அரச முறைப் பேருந்து, மின்மாற்றியை முத்தமிட்டது. மின் தடைப்பட்டது


UpDated  
தியத்தலாவை, ஓட்டப் பந்தய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.

தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொக்ஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.


 


Rep/Fasmir

மருதமுனை பிரதான வீதியில் வாகன விபத்து; கார், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி ஒன்றுடன் ஒன்று மோதியதில் சிலர் வைத்தியசாலையில் அனுமதி

=====================================

(எமது செய்தியாளர்)


மட்டக்களப்பில் இருந்து நிந்தவூர் பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கார் வாகனம் இன்று (12) மாலை மருதமுனை பிரதான வீதியில் திரும்ப எத்தனித்த போது, குறித்து வீதியினால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மோட்டார் சைக்கில், முச்சக்கர வண்டி, பஸ் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டது என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.


மோட்டார் சைக்கில், முச்சக்கர வண்டிகளில் வந்தவர்கள் விபத்தில் காயமடைந்து வைத்து சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


தற்போது, சீரற்ற காலநிலை நிலவுவதால் வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 






இன்று காலை 11.30 அளவில், அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் ஏற்பட்ட வீதி விபத்து. முச்சக்கர வண்டியொன்று, காரினை முந்திச் செல்ல முட்பட்ட வேளையில் இந்த விபத்து இடம்பெற்றது. காரின் பின் சக்கரத்திற்கு மேலுள்ள பகுதி சேதமடைந்துள்ளது. 



Rep/Saravanan.
பொத்துவிலிருந்து- கல்முனை நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்து மோதியதில். ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் பயணமாகி இருக்கின்றார். இவ்வாறு உயிரிழந்தவர் அஹமட்லெப்பை மீரால்லெப்பை என்றும் இறக்கும் போது அவரத வயது 72 என்பதாகவும் நிந்நதவுர் பொலிசார் தெரிவிக்கின்னறனர்.


 


அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதம் ஓமந்தைக்கும் புளியங்குளத்துக்கும் இடையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வாகனத்தை மோதித்தள்ளியது.


இருவர் படுகாயம். ZZ

 


BREAKING NEWS

Rep/Faslin

சற்றுமுன் மட்டக்களப்பு ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் கொழும்பிலிருந்து வந்த பஸ் விபத்து. பலருக்கு காயம். 


சில வர்த்தக நிலையங்கள் தரைமட்டம்


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர் . கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.


இவ் விபத்துச் சம்பவத்தின் போது சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது


விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்




#முல்லைத்தீவு மாவட்ட பதில் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளரும் முன்னாள் #வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் கு.அகிலேந்திரன் இன்று புதன்கிழமை மாலை வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பலி. 
 முல்லைத்தீவு RDHS டாக்டர் அகிலேந்திரன் அவர்கள் வாகன விபத்தில் காலமானார்!

 #ஜனாஸா_அறிவித்தல்! 


மாத்தளை (Futsal) உள்ளக விளையாட்டு அரங்கத்திற்கு முன்னால் இடம்பெற்ற கோர விபத்தில் வரக்காமுறையைச் சேர்ந்த மொஹமட் #இம்ரான் என்பவர் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....


யா அல்லாஹ்!

புனிதமிகு ரமழானில் அன்னாரைப் பொருந்திக்கொள்வாயாக! ஆமீன்🤲

 


#TrincoMedia 

மதுவெறியர்களின் கவனயீனத்தால் அப்பாவி இளைஞன் உயிரிழப்பு! 


#திருகோணமலை - புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்விபத்து இன்று (17) மாலை இடம் பெற்றுள்ளது.


இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பின்புறமாக மூவருடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் அம்மூவர் மதுபோதையில் வேகமாக வந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.


இவ்விபத்தில் திருகோணமலை- கோனேசபுரி ஆறாம் கட்டையைப் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.தேவானந் (39வயது) என்பவரே உயிரிழந்ததாகவும் அவருடன் பயணித்து அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய யூ.தனூஸன் காயம் அடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.


அத்துடன் வேகமாக சென்று கொண்டிருந்த மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் 21, 30, 39 வயது உடையவர்கள் எனவும் தெரிவித்தனர். 


உயிரிழந்தவருடன் பயணித்த இளைஞர் உட்பட மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவருமாக மொத்தமாக நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 அடம்பன் சந்தியில் நேற்று(04) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த அருட்தந்தை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.