Showing posts with label Accident. Show all posts


Reo/TheHotLine.

 கிழக்கு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவன் மஸூத் விபத்தில் மரணம். 


இன்று (24/11/2025)  மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில்  வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவன் முஹம்மத் மஸூத் காலமானார். 


கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று வாழைச்சேனை நோக்கி வரும் வழியிலேயே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளார். 


23 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், மீராவோடையை பிறப்பிடமாகவும் வாழைச்சேனை ஹைராத் வீதியை  வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


ஜனாஷா தற்போது மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.


தகவல் - பெளசுல் ஹமீட்

 


அநுராதபுரம் - தலாவ வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பஸ் விபத்தில் ஒருவர் மாத்திரம் உயிரிழந்ததாகவும், விபத்தில் காயமடைந்த 38 பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும், 4 பேர் தலாவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


 


புத்தல - மொனராகலை பிரதான வீதியில் 11ஆம் மைல்கல் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


இன்று (10) மதியம் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்த நிலையில், புத்தல பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் பேருந்தில் பயணித்த சில பயணிகளுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


விபத்து தொடர்பில் புத்தல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 



(வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவின் முதலாவது பட்டம் பெற்ற சித்த வைத்தியராக மருத்துவர் செல்வி கோணேஸ்வரன் குகராணி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ  பீடத்தில் பயின்று 2019 இல் பட்டம் பெற்று காரைதீவின் முதலாவது சித்த  மருத்துவ பட்டதாரியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் .

இவருக்கான பதவி  நியமனக் கடிதம் கடந்த வாரம் கொழும்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால்  கையளிக்கப்பட்டது.
 
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓந்தாச்சிமடம் ஆயுர்வேத மருந்தகத்திற்கு வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அங்கு அவர் நேற்று முன்தினம் கடமையை பொறுப்பேற்றுள்ளார்

 


ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் உள்ள நானுஓயா ஹுலங்வங்குவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


தலவாக்கலையிலிருந்து நுவரெலியா உடப்புசல்லாவையை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் கவிழ்ந்ததில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்து இடம்பெற்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் முச்சக்கரவண்டியில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 


விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


அக்கரைப்பற்று -கல்முனை  பிரதான வீதியில் இன்று மாலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. பிரதான வீதியில் பின்னால் வந்த கென்ரர் ரக வாகனம் முன்னால் சென்ற வேனில் பின் பகுதியில் மோதியது. தெய்வாதீனமாக அதிலிருந்த குழந்தையும் பெண்ணும் உயிர் தப்பினர். குறித்த வேன், தனக்கு முன் எதிரே சென்ற  வெசல் ரக காரில் மோதுண்டது. இதனால், குறித்த காரின் பின் பகுதியும் சேதமடைந்தது.



 


வாழைச்சேனை, வாகனேரி  விபத்தில் மரணமடைந்த குடும்பஸ்தரின் ஜனாஷா உறவினர்களிடம் கையளிப்பு 


எஸ்.எம்.எம்.முர்ஷித் 


மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில் வாழைச்சேனை, வாகனேரி பிரதேசத்தில் நேற்று (23) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று மரணமடைந்த சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் பொலன்னறுவை, வெலிகந்த, நவசேனபுரயை வசிப்பிடமாகவும் முஹம்மது புஹாரி அவர்களின் ஜனாஷா உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. 


குறித்த ஜனாஷா பெற்றுக்கொள்வதிலும் விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு சேர்ப்பதிலும் காத்தான்குடி ஜனாஷா சேவை, கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை, கட்டுவம்வில ஜனாஷா சேவையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்ததுடன், கடுவன்வில ஜனாஷா சேவை அமைப்பினர் ஜனாஷாவை வீட்டுக்கு கொண்டு சேர்ப்பதற்கான வாகன வசதியையும் செய்திருந்தனர். 


நேற்றைய தினம் (23) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகனேரி பிரதேசத்தில் சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து பொலன்னறுவை, நவசேனபுர நோக்கிப்பயணித்த வேனும் வெலிகந்த பிரதேசத்திலிருந்து வாழைச்சேனை நோக்கிப்பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த கோர விபத்து இடம்பெற்றிருந்தது.


இதில், வேனின் சாரதி உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஆறு பெண்கள் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 74 வயது முஹம்மது புஹாரி என்பவர் மரணமடைந்த நிலையில், பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் தற்போது தேறி வருவதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தையும் தற்போது தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


குறித்த வேன் அதே திசையில் முன்னால் சென்ற பவுசர் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியே இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது. 


விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியும் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி சென்ற சொகுசு பேருந்து மதவாச்சிக்கும் மன்னாருக்கும் இடையில் விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர். 

மன்னார் நீதவான் நீதிமன்ற கெளரவ நீதிபதி றிஸ்வான் அவர்களும், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உட்பட  பலர் காயமுற்றுள்ளனர். இதேவேளை,இருவர் உயிரிழந்துள்ளனர் என்பதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்தில், காயமுற்ற கெளரவ நீதிபதி தற்சமயம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கொழும்பிலிருந்து மன்னார் நேற்று செவ்வாய்க்கிழமை (21) நள்ளிரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார் - மதவாச்சி பிரதான வீதியின் பெரிய கட்டு பகுதியில் இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது.


சாரதியின் நித்திரை கலக்கம், விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


 


🔴 கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி சென்ற சொகுசு பேருந்து மதவாச்சிக்கும் மன்னாருக்கும் இடையில் விபத்து, பலர் காயம்!


கொழும்பிலிருந்து மன்னார் நேற்று செவ்வாய்க்கிழமை (21) நள்ளிரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார் - மதவாச்சி பிரதான வீதியின் பெரிய கட்டு பகுதியில் இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது.


சாரதியின் நித்திரை கலக்கம், விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.


இச் சம்பவம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.


விபத்தில் மின்சார சபையின் மின்கம்பங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு திருமண வீடொன்றுக்கு பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


 (எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து - ஐவர் காயம்

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் பிரதேசத்தில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.


கல்முனை பகுதியிலிருந்து கண்டி பகுதியை நோக்கிச் சென்ற காரும் வாழைச்சேனை பகுதியிலிருந்து கிரான் பிரதேசத்தை நோக்கிச்சென்ற சிறிய எல்ப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்ட சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


இவ்விபத்து சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றறனர்.


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

 


#பஸ் #லொறி #விபத்துக்குள்ளாகி #மூவர் #மரணம் 


நாரம்மல  குருநாகல் வீதியில் விமான நிலையம் இருந்து அக்கறைபற்று நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபை (CTB)  பஸ் லொறியும்  விபத்துக்கள்ளாகி உள்ளது


இன்று (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது 


குருநாகலில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறியின் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்திற்கு சென்று கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது இதனால் மூவர் உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது 


மேலும் காயமடைந்தவர்கள் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த, 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

 


வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் காரமுனை பிரதேசத்தில் இராணுவத்தினருக்கு சொந்தமான உழவு இயந்திரத்துடன் ஜீப் வண்டி மோதி விபத்து சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

 அதிகாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதுண்டு பயணிகள் பஸ் விபத்து 



கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வழியே  அக்கரைப்பற்று நோக்கிபயணித்த பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ்விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது,  கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப்பயணித்த பேரூந்தானது வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பேரூந்தின் பின்னால் பயணித்த முச்சகர வண்டியும் சிக்கியுள்ளது


விபத்தின் போது முச்சக்கர வண்டி மற்றும் சொகுசு பேரூந்தின் முன் பகுதி என்பன பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.


இதன் போது, பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும், பேரூந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் முச்சக்கர வண்டிச்சாரதி ஆகியோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கடோ

 .


(சுகிர்தகுமார் )  


 திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் திருக்கோவில் பிரதான வீதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சுந்தரலிங்கம் அர்ச்சனா எனும் இளம் பெண் ஒருவர் பலியானதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய அவரது வருங்கால கணவர் பலத்த காயங்களுடன் அம்பாரை போதானா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் கார் விபத்திலேயே இவ்வாறு இளம் பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் அவரது வருங்கால கணவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில்  தம்பிலுவிலை சேர்ந்த 24வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்திருமணத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் செய்து கொண்டவர்கள் திருமண நாளை எதிர்பார்த்திருந்த நேரத்திலேயே இத்துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து தம்பிலுவிலை நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்திலேயே காரினால் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் திரும்கோவில் ஆதாரவைத்திய சாலையில் வைக்கப்பட்டு;ள்ள நிலையில் காரில் பயணம் செய்தவர்கள் திருக்கோவில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் விபத்துப்பற்றிய மேலதிக விசாரனையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முறையற்ற வாகன ஓட்டுனர்களால் அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது எப்போது நிறுத்தப்படும். 

 


கொழும்பு - பதுளை பிரதான வீதியில் இன்று (11) மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பெல்மடுல்லவிலிருந்து பலாங்கொடை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தொன்றும் பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான மற்றுமொரு பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Rep/SriHaran, Yathursan

திருக்கோவில் தாண்டியடி பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் பலி..


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது....


குறித்த விபத்தில்  திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....மேலும் காயமடைந்தவர் திருக்கோவில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...


குறித்த விபத்தானது திருக்கோவில் தாண்டியடி தங்கவேலாயுதபுரம் சந்திக்கு அண்மித்த பகுதியில்  இடம்பெற்றுள்ளது....


விபத்து குறித்து மேலதிக விசாரனையை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்...

 

p>

 எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லவாய பிரதான வீதி கரந்த கொல்ல ஒன்பது கட்டைப் பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்து மேலதிக சிகிச்சைக்கென மொனராகலை தள வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.                                                                                       


நேற்று முந்தினம் (30) இரவு முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்திலேயே குறித்த விபத்து சம்பவதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ் விபத்தில் உயிரிழந்தவர் இரத்னபுரியைச் சேர்ந்த நாற்பத்திரண்டு வயதுடையவர் எனவும் வெல்லவாய கரந்த கொல்ல பகுதியில் இடம் பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் முச்சக்கர வண்டியில் இரவு நேரம் திரும்பிக் கொண்டிருக்கையிலேயே ஒன்பது கட்டைப் பகுதியிலுள்ள வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.


மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்.



 


(Rep/Rijaan)

அட்டாளைச்சேனையை சேர்ந்த ஜஃபர் ரிஸ்லான் ( வயது 18 )என்பவர் காலமானார்,இன்று அதிகாலை தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளிலில் பயணம் செய்த வேளையில், பிரதான வீதிக்கு குறுக்காக வந்து மாடு குத்தியதால்,இவர் உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்தவர். காயமுற்று அக்கரைப்பற்று ஆதார தை்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாசா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைகளின் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 🤲

 



பொத்துவில் -கோமாரியில் கோர விபத்து பலர் அவசர பிரிவில். 😥


இன்று வெலிமடையை சேர்ந்தவர்கள் அறுகம்பைக்கு சுற்றுலா வந்த பேருந்து கோமாரி பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் பலர் பலத்த காயமடைந்துள்ளார்கள்.  உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


பாதிக்கப்பட்டவர்கள் பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

2025.08.30

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.