Showing posts with label Accident. Show all posts

 


Rep/ Vaaskaren Suthakaren

வவுனியாவை அண்மித்த ஏ9 வீதி (கண்டிவீதி) பூநாவைக்கு அண்மையில் இன்று காலை இவ்விபத்து


மரணமடைந்தவர் ஒரு பாடசாலையின் பெண் ஆசிரியர்


இன்று காலை தனது பாடசாலை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கச் சென்றுகொண்டிருந்தபோது இந்த துயரமான விபத்தில் சிக்கியுள்ளார். 


பிரதான வீதியிலேயே தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்ட அவர், வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை மீண்டும் உணர்த்திச் சென்றுள்ளார்.


ஒரு கணத்தில் அனைத்தும் முடிந்துவிடலாம்…


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். 


அதேவேளை, மோட்டார் சைக்கிளை இயக்கும் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் ஒரு கணத்தில் அனைத்தும் முடிந்துவிடலாம் என்பதை மனதில் கொண்டு, மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புடனும் சாலையில் பயணியுங்கள்….

 


மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியையை உடனடியாக மீட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த, தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது மட்டக்களப்பு பூம்புகார் பகுதியில் வசித்து வந்தவருமான திருமதி பிரேமநந்தினி மிதுலோஜன் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சிறிய காயங்களுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 கண்டி – யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் இன்று (15) பிற்பகல் பாடசாலை வேனும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.


இந்த விபத்தில் 17 பாடசாலை மாணவ, மாணவிகளும் வேன் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் கட்டுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலையிலும், கண்டி தேசிய வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 (செ.திவாகரன்)

நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹட்டன் வீதிக்கருகிலுள்ள சந்தியில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்களும் ஒரு பெண் அடங்களாக மூவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


பதுளை பிரதான வீதியிலிருந்து நுவரெலியா பிரதான நகர் நோக்கி பயணித்த வேனொன்றும் நுவரெலியா நகரில் இருந்து நானுஓயா நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.


குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


(செ.திவாகரன்)


 


மாணவன் உட்பட மூவர் பலியானநாவலப்பிட்டி விபத்து..


இன்று(4) காலை நாவலபிட்டி  மாபாகந்த பகுதியில் முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று சட்டென சரிந்து விழுந்ததில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவனும், இரண்டு பெண்களும் உயிரிழந்தனர். 


மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கணப்பொழுதில் நிகழ்ந்த இந்த துயரம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


காலி - கொழும்பு பிரதான வீதியின் தடல்ல பகுதியில் இன்று (04) காலை பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.


ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்தை சந்தித்துள்ளது. விபத்து நடந்த சமயத்தில் பேருந்தினுள் சுமார் 20 பயணிகள் வரை இருந்துள்ளனர்.



பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, பேருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதிக்கு திடீரென ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் பேருந்து பாதையை விட்டு விலகி, அருகில் இருந்த சுவருடன் பலமாக மோதியுள்ளது. இந்த அதிவேக மோதலினால் பேருந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


சற்று முன் கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியின் புனாணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் மோதி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.


பொலன்னறுவை பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.


விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் கார் ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தெரிவித்துள்ளது.


விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவத்தில் 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.


இந்த கொடூர விபத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவசர அவசரமாக ஹோமாகம பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விபத்தை ஏற்படுத்திய கேப் ரக வாகனத்தின் ஓட்டுநர், விபத்து நடக்கும் போது கடுமையான மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதனை அடுத்து, சம்மந்தப்பட்ட ஓட்டுநரை மீகொடை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 26 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



 அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று (20) நடந்த ஒரு வாகன விபத்தில் இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமுற்றவர்கள், அம்பத்துஒய பகுதியினைச் சேர்ந்தவர்கள், கூலி வேலை செய்து விட்டு,வீடு நோக்கிப் புறப்ட்ட போது அக்கரைப்பற்று தேசிய பாடசாலைக்கு அருகில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஐந்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கார் ஒன்றினை மிக வேகமாக செலுத்தி சென்று  இவர்கள் மீது மோதிவிட்டு விபத்தை ஏற்படுத்தி விட்டு அக்கரைப்பற்று, அம்பாறை வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் 

குறித்த வாகனம் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கார் எனத் தெரியவந்துள்ளது குறித்த காரின் உரிமையாளர் தான் எனவும் தானே இந்த வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் ஒருவர் அக்கரைப்பற்று போலீசில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது இருப்பினும் இது முற்றிலும் பொய்யானது.எனவும் குறித்த சிறுவர்களே குறித்த காரில் பயணித்திருந்ததாகவும்  நேரில் கண்ட சாட்சிகள் அந்த இடத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்து இருக்கின்றார்கள் 

குறிப்பிட்ட சிறுவர்களை, கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றார்கள் அவ்விடத்திற்கு விஜயம் செய்த அக்கரைப்பட்டி போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள் இதனால் அந்த இடத்தில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது


#Akkaraipattu #RoadAccident #SrilankaNews #Justice #PoliceInvestigation #BreakingNews #qknews

 

#S. Haran.

அக்கரைப்பற்று தம்பட்டை பகுதியில் விபத்து

பிற்பகல் 5 மணி அளவில் அக்கறை பெற்று பெரிய மோத்துவார வடைக்காரி என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு விபத்து நடந்து நடந்துள்ளது அந்த விபத்து நான் வரும் முன்னதாக எனக்கு முன்னோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் குடை சாய்ந்து பணம் மரத்தில் மோதி அந்த வாகனம் முற்று முழுதாக அழிந்துவிட்டது.
 துரோஷ்டவசமாக அந்த சாரதி உயிர் பிழைத்து விட்டார் அல்லாவின் அருளால் இதற்கு காரணம் முழுக்க முழுக்க எனக்கு பின்புறமாக வந்த ஒரு பிரைவேட் லேண்ட் பஸ் இந்த சாரதி என்னை ஓவர் டேக் பண்ணி மத்த லாரியையும் ஓவர் டேக் பண்ணிய காரணத்தினால் இடவசதி போதாமை அந்த பஸ் நகர்ந்து சென்றதை அவதானித்த முன்னாள் சென்ற லொரி சாரதி அந்த பஸ்ஸுக்கு வழி விட்டமை காரணத்தினால் அவருடைய வாகனம் பாதையை விட்டு விலகி சென்று கொண்டிருந்தது கண் சிமிட்டும் நேரத்தில் அந்த வாகனத்தை அவர் அந்தப் பாதைக்கு ஏற்ற முற்பட்டபோது அந்த வாகனம் ஓடிவந்த வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதனுடைய வீல் தகட்டையும் உடைத்து ஒரு சுத்து சுத்தி ரோட்டை மறுபக்கம் திருப்பி பாதையை விட்டு மாறி அடுத்த பக்கத்தில் இருந்த பணம் மரத்தில் கொண்டு மோதி உள்ளது நான் பின்னால் வந்து கொண்டிருந்த நான் எனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி அந்த சாரதியை எழுப்பினேன் அவருடைய சத்தங்கள் ஓய்ந்து விட்டன அந்த வாகனம் முழுக்க முழுக்க சேதம் அடைந்து அவர் மீண்டும் உயிர் பிழைத்து விட்டார்  சத்தமே போட்டு அவரை நாங்கள் காப்பாற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டு அந்த வாகனம் தற்போதும் அவ்விடத்தில் தான் உள்ளது அந்த பஸ் சாரதி அவர் எதையும் கணக்கிடாமல் அவர் பறந்து சென்று விட்டார் அவர் செய்த செயலால் அவர் நினைத்த ஓவர்டேக் பண்ண நினைத்ததால் இன்னொருத்தண்ட வாழ்க்கை முற்றும் முழுதாக அழிவை நோக்கி சென்று இருக்கின்றது ஒரு செகண்ட் ஒரு நிமிடம் ஐந்து நிமிடம் பொறுமை இழக்காத மனிதன் இந்த உலகில் அவனுடைய வாழ்நாளை ஒரு செக்கனில் இழந்து விடுவான் இது நிச்சயம்

 


வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.



இன்று அதிகாலை 3:25 மணிக்கு பொல்கஹவெலையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு, அதன் பயணிகள் பெட்டியொன்று தண்டவாளத்திற்கு அருகில் கவிழ்ந்துள்ளது.



விபத்தில் காயமடைந்த 12 பயணிகளில், பெரும்பாலானோர் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர். எனினும், கடுமையான காயங்களுக்கு உள்ளான ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த விபத்து காரணமாக பிரதான ரயில் பாதையின் போக்குவரத்து தற்போதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை வழமைக்குக் கொண்டு வர ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


 


🚨 அதிர்ச்சிச் செய்தி - திக்வெல்லவில் பாடசாலை பஸ்ஸுடன் இ.போ.ச பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து! 🚌💥

🔴 மழையினால் ஏற்பட்ட விபரீதம் - மாணவர்கள் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானது! 🌧️⚠️

இன்று (மே 13) காலை பெய்த கடும் மழையினால ஏற்பட்ட வழுக்கல் நிலை காரணமாக, கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் பயங்கர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

🔴 நடந்தது என்ன? 🤔

அம்பாந்தோட்டையிலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸும், இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் நிகழ்ந்துள்ளது. 🚍⚡

🔴 தற்போதைய நிலவரம்: 📉

♦️ மீட்பு பணிகள்: விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் பொலிஸாரும் மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 🚑👮‍♂️

♦️ உத்தியோகபூர்வ விபரம்: விபத்தினால் ஏற்பட்ட காயங்கள் அல்லது சேதங்கள் குறித்த முழுமையான விபரங்களை பாதுகாப்பு அதிகாரிகள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 📋✍️

⭕ மழைக்காலங்களில் வாகனங்களை செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனைத்து சாரதிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்! 🙏🛡️

#Dikwella #AccidentNews #SriLankaNews #StudentSafety #SLTB #BreakingNews #RoadSafety #SriLanka #sjreoprt

 


நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி கிளைக்கு பொருட்கள் ஏற்றி வந்த லொறியின் பின் பகுதியில் சிக்குண்டு, அதன் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது


குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியிலுள்ள பல்பொருள் அங்காடியின் கிளைக்கு உணவுப் பொருட்களை ஏற்றி வந்த கனரக லொறியொன்று, இன்று (01) காலை பொருட்களை இறக்குவதற்காக பிரதான வீதியிலிருந்து பின்னோக்கி (Reverse) சென்றுள்ளது.


அப்போது, லொறியின் பின்புறத்திற்கும் அங்கிருந்த கிடங்குச் சுவருக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் லொறியின் உதவியாளர் எதிர்பாராத விதமாக சிக்குண்டுள்ளார்.


இதில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்தில் உயிரிழந்தவர் சுமார் 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


செ.திவாகரன்



 ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளனதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.


குறித்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு இடமளிக்க முற்பட்டபோதே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.


விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா மருத்துவமனையின் மருத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


 


பொகவந்தலாவையில் பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


பொகவந்தலாவ ராணிக்காடு பகுதியிலிருந்து பாடசாலை  மாணவர்களை பொகவந்தலாவ நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு ஏற்றிச் சென்ற பேருந்து இன்று (28) காலை விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, 34 மாணவர்கள் பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொகவந்தலாவ பிராந்திய வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜெயசூரய தெரிவித்தார்.


ராணிக்காடு - பொகவந்தலாவ பிரதான வீதியில் கேம்பியன் தோட்டப் பகுதியில் காலை சுமார் 7:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


விபத்தில் காயமடைந்த 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள் என்றும், பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மீதமுள்ள காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.


பேருந்தில் தடையாளி முறையாக இயங்காமை காரணமாக ஏற்பட்ட இயந்திர கோளாறே, இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பொகவந்தலாவ பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



செ.திவாகரன்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.