Showing posts with label Accident. Show all posts

  


மூதூர் விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த CTB பஸ் நடாத்துனர் ரிபாஸ் வபாத்தானார்


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


காத்தான்குடியைச் சேர்ந்த CTB பஸ் நடாத்துனர் ரிபாஸ் (வயது 38) இன்று (16) வெள்ளிக்கிழமை காலை வபாத்தானார்.


கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மூதூர் வைத்தியசாலைக்கு அருகாமையில் வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான றிபாஸ் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் வபாத்தானார்.

 


கண்டியில் வெசாக் #Vesak யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




 ஹக்கீம் காங்கிரஸை மக்கள் துரத்த ஆரம்பித்து விட்டார்கள் : கல்முனையில் இருந்தும் துரத்தி மக்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுப்போம் - ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர்


நூருல் ஹுதா உமர்


பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நிந்தவூர், இறக்காமம், மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு, நாவிதன்வெளி போன்ற இடங்களில் இருந்து மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக கல்முனை தொகுதியில் இருந்தும் எதிர்காலத்தில் படுதோல்வியுடன் மு.கா வெளியேறும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 93 உயர்பீட உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கல்முனைக்கு வந்தாலும் ஹரீஸின் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியுடன் வெளியேறி செல்வார்கள் என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. எஹியா கான் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் படிப்படியாக அழிந்து இப்போது ஹக்கீம் காங்கிரஸாக மாறியிருக்கிறது. இதனால் ஹக்கீம் காங்கிரசுக்கு இம்முறை முஸ்லிம் வாக்காளர்கள் நல்ல பாடம் படிப்பித்திருக்கிறார்கள். ஒரு சிலரின் தனியார் கம்பெனி போன்று இயங்கும் இவர்களின் ஆணவத்தை முஸ்லிம் மக்கள் நிராகரித்து ஹக்கீமின் தலைமைத்துவத்தை தோற்கடித்திருக்கிறார்கள். அவருக்கு மாற்றீடான தலைமைத்துவமாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.


வாயிருப்பவர்களிடம் வாக்கு இல்லை. வாக்கு இருப்பவர்களிடம் வாயில்லை. எனும் நிலையில் ஹக்கீமின் பின்னால் இருப்பவர்கள் வாயை மட்டும் வைத்துக்கொண்டு இருப்பவர்கள். வாக்கில்லாதவர்களே என்பதை மக்கள் இம்முறை நிரூபித்துள்ளார்கள். தலைவரின் சூழ்ச்சியால் கட்சிக்குள் பிரமுகர்களிடையே பிரச்சினையை உருவாக்கி அதில் அவர் குளிர்காய்ந்து கொள்கிறார். அக்கரைப்பற்று மக்கள் அதாஉல்லாவின் பக்கம் ஒன்றிணைந்தது போல, முஷாரஃபின் பின்னால் பொத்துவில் மக்கள் ஒன்றிணைந்தது போல, மாஹிருடன் சம்மாந்துறை மக்கள் ஒன்றிணைந்தது போல, கல்முனை தொகுதி மக்கள் ஹரீஸுடன் இருக்கிறார்கள் என்பதை ஒரு தேர்தல் வந்தால் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்.


முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடான ஹக்கீம் காங்கிரசை தோற்கடிக்க சகோதரர் ஹரீஸின் அணியில் இணைந்து பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கல்முனை தொகுதியில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபையிலும், மாகாண சபையிலும் நாங்கள் ஹக்கீம் காங்கிரசை துரத்தி மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுப்போம். கல்முனையையும்- சாய்ந்தமருதையும் கசப்புணர்வுடன் மாத்தியமைக்க ஹக்கீம் காங்கிரஸ் செய்த சதிகளை நாங்கள் அறிவோம். பொத்துவில் மக்கள் மு.காவை வெறுத்து முஷாரப்புடன் கைகோர்த்துள்ளார்கள். பொத்துவிலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து முஷாரப் ஆட்சியமைப்பாராயின் அடுத்த முறை அவர் ஒரு வட்டாரத்தையும் வெல்ல மாட்டார்.


விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தேசிய மக்கள் சக்தி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருக்கும். அவர்களை பலப்படுத்தி சமூக தேவைகளை அடைந்து கொள்வதே புத்திசாலித்தனம். அதை விடுத்து ஹக்கீம் காங்கிரஸின் பின்னால் சென்று நாம் நஷ்டமடைய முடியாது என்றார்.

 


மட்டக்களப்பு-கிரான்குளம் பகுதியில் இன்று (2025.05.11) அதிகாலை சம்மாந்துறை நோக்கிlச் சென்ற டிப்பர் விபத்து

காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் சீமூன் ஹோட்டலுக்கு அருகாமையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
எம்பிலிப்பிட்டியவில் இருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு மட்டு கல்முனை பிரதான வீதி வழியே சம்மாந்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமே கிரான்குளம் பகுதியால் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பயணிக்கும் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்ப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்ற அதே வேளை வாகனம் பாரியளவான சேதத்தை எதிர்கொண்டுள்ளது
Like
Comment
Share



 சோகம் 😢 


இன்று (11) காலை ரம்பொட, கெரண்டி எல்ல பகுதியில் நுவரெலியா - கம்பளை பிரதான சாலையில் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சுமார் 25 பேர் நுவரெலியா மற்றும் கொத்மலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இறந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

விபத்துக்குள்ளான பேருந்து இலங்கை போக்குவரத்து வாரியத்திற்கு சொந்தமானது என்றும், கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகலுக்கு இயக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
~ அடதெரன

 



அக்கரைப்பற்று  பொத்துவில் வீதியில், நேற்று இரவு திருக்கோவில் காஞ்சிரங்குடா பகுதியில் காரில் பயணித்தவர்களின் மீது, சாலையில் சடுதியாக குறுக்கறுத்த  மாடு குத்தியதனால், தைக்கா நகரைச் சேர்ந்த சைனாஸ் என்ற ஒன்பது மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த காரில் குறித்த காரை செலுத்திய தந்தையும்,  இந்தக் குழந்தையும் தாயும் பணித்துள்ளனர். இந்த குழந்தையின் தாய் குறித்த 9 வயது குழந்தையை தனது தாய் மடியில் வைத்துச் சென்றுள்ளார். 

   அக்கரைப்பற்று  பொத்துவில் வீதியில், சடுதியாக குறுக்கறுத்த மாடு காரில் கண்ணாடியில் மோதியுள்ளது. காரின் கண்ணாடி உடைந்து பிள்ளையில் தலையில் ஏறியிருக்கின்றது. கடுங்காயமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்  இந்த ஒன்பது மாத குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது  இதேவேளையில் குறித்த வாகனத்தைச் செலுத்திய குழந்தையின் தந்தையும் தாயும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 


மிஹிந்தலை, வெல்லமோரண பகுதியில் இன்று (15) காலை ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 


கெப் வண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், கெப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விபத்தில் சாரதியும் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 37 வயதுடைய இருவர் என்றும், அவர்கள் அனுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் ஒன்றுடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளாது.


இவ்விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பில் இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 


(மீரா நகர் நிருபர்)

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை- அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு டிப்பர்கள் மற்றும் அதன் அருகில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிள் பயணித்த இரண்டு நபர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்விபத்துச் சம்பவம் இன்று (23) அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் உள்ள பிரதான தபால் நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 




நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டொன்றின் மீது மோதி விபத்துள்குள்ளாகியுள்ளது. 


இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காயமடைந்தவர்கள் சிலாபம் மற்றும் முந்தலம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



(கனகராசா சரவணன்)

காத்தான்குடி 04ம் குறிச்சி முகைதீன் தைக்கா பள்ளிவாயலின் பிரதான இமாம் மெளலவி சபீர் பலாஹி காலமானார்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பஸ் மோட்டார் சைக்கிள் மோதிய வீதி உயிரிழந்ததுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளதாகவும் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாக மட்டு.தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் காத்தான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டு. நகர் லேடி மெனிங் வீதி ஊடாக கல்லடி பாலத்து சந்தியில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்தபோது காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கி பயணித்த பஸ் கல்லடிபால சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு.தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

(கனகராசா சரவணன்)


அட்டானைச்சேனை விரதான வீதியில் மீனஓடைக் கட்டுக்கு அருகில், வீதியை விட்டு வேன்  நீருக்குள் இறங்கியது. இன்று கொழும்பிலிருந்து இ கல்முனை றோக்கிப் புறப்பட்ட  வேனனொன்று, வீதியை விட்டு இறங்கியது. இதில்பயணித்தவர்களும் சாரதியும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.சாரதியின் துாக்கமே இதற்கு காரணமாகும்

 


அக்கரைப்பற்று – அரசயடியில் மோட்டார் சைக்கிள் விபத்து இருவர் உயிரிழப்பு.!


அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அரசயடியில் இன்று மாலை (20) கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.


சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.


மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 


கல்லோயா புகையிரத நிலையத்துக்கு அருகே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மேலும் இரு யானைகள் காயமடைந்துள்ளன.


விபத்தின் காரணமாக அந்த பிரதேசத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுள்ளதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த விபத்து இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.


 பாறுக் ஷிஹான்


இரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்கு உள்ளானதில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

இச்சம்பவம் இன்று  அம்பாறை கல்முனை பிரதான வீதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில்  இருவர் சிறு காயங்களுடன் சம்மாந்துறை ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 யாழ் MP இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து.. வைத்தியசாலையில் அனுமதி.!

இளங்குமரன் MP வாகன விபத்தில் காயம்!

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் பயணித்த வாகனம் யாழ் தனங்கிளப்பு  பகுதியி்ல் விபத்துக்குள்ளானது. 

சிறிய கன்டர் ரக வாகனத்துடன் மோதுண்டு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் காயம் அடைந்த இளங்குமரன் MP உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.