Showing posts with label Accident. Show all posts

 


நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி கிளைக்கு பொருட்கள் ஏற்றி வந்த லொறியின் பின் பகுதியில் சிக்குண்டு, அதன் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது


குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியிலுள்ள பல்பொருள் அங்காடியின் கிளைக்கு உணவுப் பொருட்களை ஏற்றி வந்த கனரக லொறியொன்று, இன்று (01) காலை பொருட்களை இறக்குவதற்காக பிரதான வீதியிலிருந்து பின்னோக்கி (Reverse) சென்றுள்ளது.


அப்போது, லொறியின் பின்புறத்திற்கும் அங்கிருந்த கிடங்குச் சுவருக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் லொறியின் உதவியாளர் எதிர்பாராத விதமாக சிக்குண்டுள்ளார்.


இதில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்தில் உயிரிழந்தவர் சுமார் 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


செ.திவாகரன்



 ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளனதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.


குறித்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு இடமளிக்க முற்பட்டபோதே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.


விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா மருத்துவமனையின் மருத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


 


பொகவந்தலாவையில் பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


பொகவந்தலாவ ராணிக்காடு பகுதியிலிருந்து பாடசாலை  மாணவர்களை பொகவந்தலாவ நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு ஏற்றிச் சென்ற பேருந்து இன்று (28) காலை விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, 34 மாணவர்கள் பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொகவந்தலாவ பிராந்திய வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜெயசூரய தெரிவித்தார்.


ராணிக்காடு - பொகவந்தலாவ பிரதான வீதியில் கேம்பியன் தோட்டப் பகுதியில் காலை சுமார் 7:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


விபத்தில் காயமடைந்த 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள் என்றும், பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மீதமுள்ள காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.


பேருந்தில் தடையாளி முறையாக இயங்காமை காரணமாக ஏற்பட்ட இயந்திர கோளாறே, இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பொகவந்தலாவ பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



செ.திவாகரன்

 எஹெலியகொட நகரில் காரொன்று மேலும் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இன்று இரவு 7 மணியளவில் எஹெலியகொட நகரில் பயணித்த காரொன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள், மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு கார்கள் என மொத்தமாக ஆறு வாகனங்கள் மீது மோதியுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


(காரையூர் வேதசகா )


கல்முனை ஆதார  வைத்தியசாலையில் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம் (17) செவ்வாய்க்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விமரிசையாக நடைபெற்றது.

வைத்தியசாலையின் ஊழியர் சமூக நலன்புரிச் சங்கம் இந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

 இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, ஓய்வு நிலை உதவிக் கல்வி பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமாகிய வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா   கலந்து சிறப்பித்தார்.


 இந்நிகழ்வின் போது தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, கல்வி பொது தராதர சாதாரண தரத்தில் சித்தி அடைந்த, பல்கலைக்கழகத்துக்கு தெரிவான,  வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த காலங்களில் இவ் வைத்தியசாலை முன்னேற்றத்தில் பங்களித்தமைக்காக,  பிரதம அதிதியான வி.ரி.சகாதேவராஜா,  மேடையில் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கு.சுகுணன் மற்றும் பொருளாளர் ரி.மதுரா ஆகியோரால் பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 நிகழ்வின்போது 120 மாணவர்களுக்கு நலன்புரி சங்கம்  ஏழு லட்சம் ரூபாய் செலவில் பரிசுகளையும் கௌரவிப்பையும் வழங்கியிருந்தது.

நிகழ்வில் வைத்தியசாலை கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, நிருவாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள், தாதியபரிபாலகர் என்.சசிதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


நலன்புரி சங்க செயலாளர் எஸ்.மனோஜினி பொருளாளர் ரி.மதுரா ஆகியோர் நெறிப்படுத்திய இந் நிகழ்வை ,சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தர் ப. செல்வகுமார் தொகுத்து வழங்கினார்.



 சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் ஆராதனை மண்டப திறப்பு விழா  !


நூருல் ஹுதா உமர்

சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மாணவர்கள் அதிகமாகக் கொண்டுள்ள சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் புதியதாக அமைக்கப்பட்ட ஆராதனை மண்டபத்தின் திறப்பு விழாவும் வருடாந்த இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்வும் இன்று (15) பாடசாலை அதிபர் எம்.எஸ். ஆரிப் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், மாணவர்களின் ஆன்மீக மற்றும் ஒழுக்க வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆராதனை மண்டபம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மேலும் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி அஸ்மா அப்துல் மலிக், மட்டக்களப்பு கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம். அஸ்மி, ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், ஏனைய பாடசாலை அதிபர்கள், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் போது ரமலானின் ஆன்மீக முக்கியத்துவம், கல்வியின் அவசியம் மற்றும் சமூக ஒற்றுமையின் மதிப்பு குறித்து மார்க்க சொற்பொழிவை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சாய்ந்தமருது கிளை செயலாளர் மௌலவி நப்ராஸ் ஹனிபா நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் இப்தார் நோன்பு திறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பின்தங்கிய சூழ்நிலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆன்மீகமும் ஒழுக்கமும் சார்ந்த சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த ஆராதனை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மாணவர்களின் கல்வி மற்றும் நல்லொழுக்க வளர்ச்சிக்கு ஆதரவாக சமூகத்தின் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற

 


நூருல் ஹுதா உமர்


புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரமான உணவு பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக விசேட சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பரிசோதனைகளில், உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

பரிசோதனைகளின் போது உணவுப் பொருட்களின் தரம், அவற்றின் சேமிப்பு முறை, சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக பரிசோதிக்கப்பட்டன.

பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்தகைய பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


நூருல் ஹுதா உமர்


மனிதநேயம், ஒற்றுமை மற்றும் சேவை உணர்வை உயர்த்திப் பேசும் புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு, களப் பணிகளை மேலும் செயல்திறன் மிக்கதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் மாற்றும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக புதிய மேலங்கி வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது புதிய மேலங்கிகள் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

நோன்பு மாதம் கருணை, பகிர்வு மற்றும் சமூகப் பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் காலமாக இருப்பதை குறிப்பிட்ட டாக்டர் ஜே. மதன் அவர்கள், இந்த காலப்பகுதியில் சமூக நல சேவைகளை அதிக அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் மேற்கொள்ளுமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

புதிய மேலங்கிகள் களப்பணிகளில் ஒருமைப்பாட்டையும் ஒழுங்கையும் பிரதிபலிப்பதுடன், பொதுமக்களுக்கு தரமான மற்றும் நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


 வ.சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (27) அதிகாலை பாரிய விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


காத்தான்குடி பகுதியிலிருந்து மருதமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனமே தேற்றாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலிருந்து மின் கம்பத்தில் மோதுண்டு வித்துள்குள்ளாகியுள்ளது.


வட்டாரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி இதன்போது எதுவித ஆபத்துக்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் பிளைத்துள்ளார். எனினும் குறித்த வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மின்கம்பமும் உடைந்து வீழ்ந்துள்ளது. 


இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


சற்றுமுன் வவுனியா கனகராயன்குளம் பகுதியால் பயணித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதில் காரில் பயணித்தோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அக்கரைப்பற்றில் அண்மைய நிகழ்ந்த விபத்தினால், கடுங்காயமுற்ற , முச்சக்கர வண்டிச் சாரதி சகோதரர் பைறூன் இன்று அதிகாலை அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலை அதி.தீவிர சிகிச்சைப். பிரிவில், காலமானார்.

இவர், நிலூபா ( தாதி உத்தியோகத்தர் ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று) அவர்களின் அன்பு கணவரும் 


ஸைனா

ஹாமித்

ஹைதா

ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார் 


நல்லடக்க விபரம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்





 


அக்கரைப்பற்றில் விபத்தினால்,அண்மையில், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு  கடுங்காயமேற்படுத்திய 16 வயது மாணவனை எதிர்வரும் 16ந் திகதி வரை  சிறுவர் காப்பாத்தில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நிதவான் திருமதி. அபிநயா சூரியசிவா உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று, பொலிசார் குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

குறித்த சந்தேக நபர், இம்முறை க.பொ.த (சா/ த) பரிட்சைக்குத் தோற்றும் மாணவர் என்பதாலும்,16 வயது நிரம்பப் பெற்றவர் என்பதனாலும், இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


உடவலவ-தனமல்வில வீதியின் இடம்பெற்ற கோர விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.


பேரியல் சந்திப் பகுதியிலிருந்து தனமல்வில நோக்கி அதிவேகமாகச் சென்ற லொறி ஒன்று, வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது மோதியுள்ளது. இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.


விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக உடவலவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். உடவலவ பொலிஸார்  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




(இச் செய்தி புதுப்பிக்கப்பட்டுவருகின்றது)

அக்கரைப்பற்று  முதலியார் வீதியில், இன்று மாலை 6.30 அளவில் விபத்து ஒன்று நிகழ் ந்துள்ளது..

 மிக வேகமாக செலுத்திய கார்-சாரதி முச்சக்கர வண்டியில்  மோதுண்டதால், குறித்த முச்சக்கர வண்டிச் சாரதி கடுங்காயமுற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், அவசர சிகிச்சப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.

தற்போது, மேலதிக சிகிச்சைகளுக்காக, கடுங்காயமுற்றவர்,  மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த காரைச் செலுத்திய சாரதி, இம்முறை  சா/த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர் என்பதாகவும் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனத்தைச் செலுத்தி வந்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த விபத்தில், முச்சக்கர வண்டி முச்சக்கர.வண்டி முழுமையாக.சேதமடைந்துள்ளது.

அக்கரைப்பற்று பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



நூருல் ஹுதா உமர்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.அஷ்ரப் தாஹிர் அவர்களின் தலைமையில், அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, இன்று நிந்தவூர் அஸ்ரப் ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்தில் அல்ஹிக்மா பவுண்டேஷன் அமைப்பின் அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டம், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக அமையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அஷ்ரப் தாஹிர் எம்.பி. அவர்கள் இந்த நிகழ்வில் உரையாற்றுகையில், கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் எனக் குறிப்பிட்டதுடன், மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு இத்தகைய கல்வி ஆதரவு முயற்சிகள் மிக அவசியமானவை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் இங்கு பேசிய அவர்கள், ஏழை மற்றும் பலவீனமுள்ள குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் சுகாதார சேவைகள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் வறியோருக்கான நல உதவிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் வழங்குதல் போன்ற பல்வேறு சமூகப் பணிகள் எங்கள் அமைப்பினால் இடம்பெற்று வருகின்றன.

அதேபோன்று, கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “Education for All” திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கு கல்வி ஆதரவு வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று இந்த ரூ. 6,250 பெறுமதியான கல்விப் பொதியை, 500 மாணவர்களுக்கு ரூ. 3,125,000 ரூபாய் செலவில் வழங்குகிறோம். ஒவ்வொரு கல்விப் பொதியிலும், புத்தகப்பை, பயிற்சி புத்தகங்கள், பென்சில்கள், பேனாக்கள்,  ரப்பர்கள்,  பென்சில் சீவிகள், டிபன் பெட்டி, குடிநீர் போத்தல், வண்ண கலர் பெட்டி மற்றும் குடை ஆகியவை அடங்கியுள்ளன.

அல்-ஹிக்மா பவுண்டேஷன், வறுமை நீக்கம், சமூக பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம், சமுதாயத்தில் சமத்துவமான வளர்ச்சியை உருவாக்கும் நோக்குடன் தனது சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.சமூக நலன் மற்றும் கல்வி முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தி, தொடர்ச்சியாக பல்வேறு மனிதாபிமான சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் இத்தகைய திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட செயற்குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பிலான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


கடுமையான வெள்ளப்பெருக்கின் போது நீரில் மூழ்கிய கலா ஓயா பாலத்தின் வழியாக பேருந்தை ஓட்ட முயன்றதற்காக, இரண்டு பயணிகளின் மரணத்திற்கு காரணமானதாகவும், உயர் நீதிமன்ற நீதிபதி உட்பட 66 பேரின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.