Showing posts with label sports. Show all posts

 


ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்திய 35 ஆவது பிரதேச விளையாட்டு விழா இன்று அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஜெயராஜ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ்  கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச தேசிய இளைஞர் சேவை மன்ற மாவட்ட உதவிப்பணிப்பாளர் கங்கா சகாரிக தேசிய இளைஞர் மன்ற உதவிப்பணிப்பாளர் முபாறக்அலி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஸ்ரீவர்த்தன ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக தலைவர் மிருஜன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசிய கொடியேற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. ஒலிம்பிக் தீபத்தினை பிரதேச செயலாளர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னராக போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.
போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வெற்றி பெற்ற கழகங்கள் மற்றும் வீரர்களுக்கான சான்றிதழ்கள் நினைவுச்சின்னங்கள் என்பன அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்;டன.
இவ்விளையாட்டு விழாவிற்காக  பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிய நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இணைந்து ஒரு மாத சம்பளத்தினை வெற்றிக்கிண்ணங்கள் பெற்றுக்கொள்வதற்காக அன்பளிப்பாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 


AMANJOT KAUR இந்திய வீராங்களை

ஒரு ஏழை பஞ்சாபி தந்தை, ஒரு பெண் குழந்தையின் தச்சராக வேலை செய்தார். அவரது மகள் கிரிக்கெட் விளையாட முடிவு செய்தபோது, ​​அவர் அவளுக்கு ஆதரவளித்தார். அவளை தொழில்முறை கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுத்தினார். அவரது சக ஊழியர்கள் அவரை கேலி செய்து சிரித்தனர். தனது மகள் சிறப்பு வாய்ந்தவள் என்று அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. அந்தப் பெண் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக மாறினார். உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக டீம் இந்தியா போராடிக்கொண்டிருந்தபோது, ​​அவர் தீர்க்கமான ரன்களை எடுத்து, இந்தியாவுக்கு வெற்றிகரமான தொடக்கத்தை அளித்தார். அவர் தொடர்ந்து பேட்டிங் & பந்தில் ஒழுக்கமாக இருந்தார். ஒரு விரைவான கேமியோவை எடுத்து அரையிறுதியில் வெற்றி ரன்களை அடித்தார், இறுதிப் போட்டியில் மீண்டும் பேட்டிங் & பந்தில் ஒழுக்கமாக இருந்தார், லாரா வால்வார்ட்டை வீழ்த்த மிக முக்கியமான கேட்சை எடுத்தார். அவரது தந்தை கிராமவாசிகளுடன் ஒரு பெரிய திரையில் இறுதிப் போட்டியைப் பார்த்தார், ஒருவேளை அவரைப் பார்த்து சிரித்தவர்களுடன் கூட. நேற்று தனது மகள் உலக சாம்பியனான பிறகு அந்த நபர் கோபமடைந்தார். பெயர் அமன்ஜோட் கவுர். 

ஆணாதிக்கத்திற்கும், அதிக பெண் கருக்கலைப்புக்கும், தொந்தரவான ஆண் பெண் விகிதத்திற்கும் பெயர் பெற்ற ஹரியானா மாநிலத்தில் நான் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு தென்னாப்பிரிக்க விக்கெட்டிற்கும் பிறகும் பட்டாசு சத்தம் கேட்க முடிந்தது, இறுதி விக்கெட் விழுந்ததும் நகரம் வெறிச்சோடியது. இங்கே தீபாவளி மாதிரி இருந்தது. அது மிகவும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது. 


 

பெண்கள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்தது இந்திய அணி.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்திடமும் தோல்வியைச் சந்தித்திருந்தது.

இந்த போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் இந்தியாவின் கைகளில் இருந்து நழுவியது போல தோன்றியது.

251 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா, 144/6 என்ற நிலையில் இருந்தது. இருந்தாலும், இந்தியா அந்தப் போட்டிடியில் தோற்றது.

ஆஸ்திரேலியாவோ சேஸிங்கில் உலக சாதனை (அன்றைய தேதிக்கு) படைத்து இந்தியாவை வீழ்த்தியது.

விளம்பரம்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட 10 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் இந்தியா இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்க, இந்திய பேட்டர்கள் இலக்கை எட்டிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது, இருந்தாலும் தோல்வியே மிஞ்சியது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
இந்தியாவில் கிடைத்த வாசுகி பாம்புதான் உலகிலேயே நீளமானதா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
இந்தியாவில் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி' பாம்பின் உணவும் வேட்டை முறைகளும் என்ன? ஆய்வாளர்கள் தகவல்
'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, ஆனால்..!' ஏர் இந்தியா விபத்தில் தப்பியர் கூறுவது என்ன?
ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய ஒரேயொரு நபர் இப்போது எப்படி இருக்கிறார்?
ஆந்திர கூட்ட நெரிசல், ஸ்ரீகாகுளம் கோட்டா நெரிசல், கோவில் கூட்ட நெரிசல் 
'திருப்பதியில் முழுமையான தரிசனம் கிடைக்காததால் தனியே கோவில் கட்டினேன்' - யார் இவர்?
மகளிர் உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - தென் ஆப்ரிக்கா
சச்சின், கோலி வாழ்த்து: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசு எவ்வளவு?
End of அதிகம் படிக்கப்பட்டது
பலமான அணியாகக் கருதப்பட்ட இந்தியா சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பையில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளைச் சந்தித்தது.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது இந்தியா
ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து இப்போது இந்த ஞாயிறு இந்தியாவுக்கானதாக மலர்ந்தது. அன்று தொடர் தோல்விகளைச் சந்தித்த அதே அணி, இன்று உலக சாம்பியன் ஆகியிருக்கிறது.

மூன்று தொடர் தோல்விகளுக்கும் வெற்றிக்கும் இடையிலான இந்த இரண்டு வாரங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன? அந்தத் தோல்விகளில் இருந்து இந்தியா மீண்டு வந்தது எப்படியென்று, சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரனிடம் பிபிசி தமிழ் பேசியது.

பொறுப்பெடுத்துக்கொண்ட சீனியர்கள்
இந்திய அணியின் எழுச்சிக்கு மிக முக்கியக் காரணமாக ஆர்த்தி சங்கரன் சொல்வது, ''இந்திய சீனியர் வீராங்கனைகள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான்''

"அந்தத் தோல்விகளுக்குப் பின் சீனியர் வீராங்கனைகள் தங்கள் கைகளில் பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர். தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இது அணிக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்" என்று கூறினார் அவர்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 60 பந்துகளுக்கு 62 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றுவிடும் நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.

இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருக்க, 88 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த ஸ்மிரிதி மந்தனா, ஒரு பந்தை தூக்கி அடித்து அவுட் ஆனார். அதன்பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ 4 ரன்களில் தோல்வியடைந்தது இந்தியா.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கையில் எடுத்துக்கொண்டது மாற்றத்தை ஏற்படுத்தியது என்கிறார் ஆர்த்தி சங்கரன்
இந்தத் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி மந்தனா, "எங்கள் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம். அந்த சரிவு என்னிடம் இருந்து தொடங்கியதால் நான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆட்டத்தை இறுதி வரையிலும் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். என் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம்" என்று கூறினார்.

இப்படி ஒரு முன்னணி வீராங்கனை பொறுப்பை தன் மீது எடுத்துக்கொண்டது திருப்புமுனை ஏற்படுத்திய விஷயம் என்கிறார் ஆர்த்தி.

இந்த அணுகுமுறையை கடைசி இரண்டு போட்டிகளில் தீப்தி ஷர்மாவின் பேட்டிங்கிலுமே பார்க்க முடிந்தது. களமிறங்கியதும் செட்டில் ஆக சில பந்துகள் எடுத்துக்கொண்டு, மெல்ல தன் ஆட்டத்துக்குள் செல்பவர் தீப்தி ஷர்மா. அதுதான் அவரது அணுகுமுறை. ஆனால், அரையிறுதியிலும் இறுதிப் போட்டியிலும் வேறொரு அணுகுமுறையை அவரிடம் பார்க்க முடிந்தது.

அரையிறுதியில் 338 ரன்களை இந்திய அணி சேஸ் செய்ததால், செட்டில் ஆக தீப்தி ஒரு பந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வந்ததில் இருந்தே அதிரடி காட்டியவர், 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டே டாட் பால்கள்தான் ஆடினார். கடினமான சிங்கிள்களைத் தவிர்க்கும் அவர், ரிஸ்க் எடுத்து ஓடி ரன் அவுட்டும் ஆனார்.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,நாக் அவுட் போட்டிகளில் பேட்டிங்கில் தீப்தியின் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது
இறுதிப் போட்டியில் கூட தீப்தி அதைத்தான் செய்தார். "ஷஃபாலி, ஜெமி இருவரும் அடுத்தடுத்து அவுட்டான பிறகு, ஹர்மனும் மெதுவாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் ரன் ரேட் பெரிய அடி வாங்கியிருக்கும். ஆனால், அப்படி ஏற்படாமல் தீப்திதான் பார்த்துக்கொண்டார். இல்லையெனில் இந்தியா அந்த கட்டத்தில் பின் தங்கியிருந்திருக்கும்" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.

இறுதிப் போட்டியில் தீப்தி 58 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வெளியேறிய பிறகும் இந்தியாவின் ரன் ரேட் சீராக இருந்ததற்கு முக்கியக் காரணமாக விளங்கியிருந்தார் தீப்தி.

சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டதை முக்கியக் காரணமாகக் கூறும் ஆர்த்தி சங்கரன், சில டெக்னிக்கலான காரணங்களையும் குறிப்பிட்டார்.

சரியான காம்பினேஷனும், மாறிய பேட்டிங் ஆர்டரும்
"காம்பினேஷனை சரியாகக் கண்டறிந்து, ஆறாவது பௌலரை சேர்த்தது இந்த மாற்றத்துக்கான முக்கியமான விஷயம். அது ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிக்குத் தேவைப்பட்டது" என்கிறார் ஆர்த்தி சங்கரன்.

அதிக பேட்டிங் ஆப்ஷன்கள் வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் இந்திய அணி 5 பௌலர்களை மட்டுமே அணியில் எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 330 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாததற்கும் அது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அதை சரிசெய்தது இந்திய அணி. அடுத்த போட்டிகளில் 6 பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதுபோல் அணியை மாற்றினார்கள்.

அதேபோல், பேட்டிங் ஆர்டரையும் ஒரேபோல் வைத்திருக்காமல் மாற்றியதும் முக்கியக் காரணம் என்றும், குறிப்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸை நம்பர் 3 இடத்தில் ஆடவைத்ததும் இந்த மாற்றத்துக்கான ஒரு முக்கியம் என்றும் ஆர்த்தி சங்கரன் குறிப்பிட்டார்.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஜெமிமா நம்பர் 3 பொசிஷனில் களமிறங்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
வழக்கமாக ஐந்தாவது ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு வந்த ஜெமிமாவை, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெளியே அமர்த்தியது இந்திய நிர்வாகம்.

ஆனால், அடுத்த போட்டியிலேயே அவரை அணிக்குக் கொண்டு வந்ததோடு, மூன்றாவது வீரராகவும் களமிறக்கினார்கள். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார் ஜெமிமா.

அதற்கு முன் ஆடிய 55 போட்டிகளில் மூன்று முறை மட்டுமே மூன்றாவது வீரராகக் களமிறங்கியிருந்தார் ஜெமிமா.

அந்த நியூசிலாந்து போட்டியில் கூட அவர் முதலில் ஐந்தாவது இடத்தில் தான் ஆடுவதாக இருந்தது. ஓப்பனர்கள் 33 ஓவர்கள் ஆடிவிட்டதால் அவரை மூன்றாவது வீரராகக் களமிறக்கினார்கள்.

அதேபோல் அரையிறுதியில் கூட களமிறங்குவதற்கு 10 நிமிடம் முன்புதான்தான் அந்த இடத்தில் விளையாடப்போவது பற்றி அணி நிர்வாகம் கூறியதாகச் சொல்லியிருந்தார் ஜெமிமா.

அந்த மாற்றம் அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தக் காரணமாக அமைந்தது.

இப்படி முன்கூட்டியே செய்திருந்த பேட்டிங் ஆர்டர் திட்டங்களை மாற்றியது சாதகமான அம்சம் என்று குறிப்பிட்டார் ஆர்த்தி சங்கரன்.

ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி
அந்தத் தோல்விகளுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்ஸியிலும் நல்ல மாற்றங்கள் தெரிந்ததாகக் குறிப்பிட்டார் ஆர்த்தி. குறிப்பாக ஃபீல்ட் செட் அப் பல தருணங்களில் மிகவும் துல்லியமாக இருந்ததாக அவர் கூறினார்.

"சமீபத்திய போட்டிகளில் இந்தியா ஃபீல்டிங் செய்தபோது பௌண்டரிகள் தடுக்கப்பட்ட விகிதம் அதிகரித்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஃபீல்டிங் திறன் சிறப்பாக இருந்ததோடு, சரியான இடங்களில் சரியான ஃபீல்டர்களை நிற்க வைத்ததும் இதில் முக்கியக் காரணம்" என்றார் ஆர்த்தி.

இறுதிப் போட்டியில் கூட இதைப் பார்க்க முடிந்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் விக்கெட் வீழ்ந்ததே இப்படி நல்ல ஃபீல்டிங் செட் அப் மற்றும் துல்லியமான ஃபீல்டிங்கால்தான்.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஃபீல்டிங்கில் ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்த முடிவுகள் சிறப்பாக இருந்ததாகக் கூறுகிறார் ஆர்த்தி சங்கரன்
அவுட் ஆவதற்கு முந்தைய பந்தை டாஸ்மின் பிரிட்ஸ் கவர் திசையில் அடித்துவிட்டு ஓட முயற்சி செய்தார். ஆனால், சிறப்பாக ஃபீல்டிங் செய்து ரன் ஓட விடாமல் ஜெமிமா தடுத்தார்.

அடுத்த பந்தை மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு பிரிட்ஸ் ரன் எடுக்க முயற்சி செய்ய, டைரக்ட் ஹிட் மூலம் அவரை அவுட்டாக்கினார் அமஞ்சோத் கவுர்.

இந்தியாவின் இரண்டு சிறந்த ஃபீல்டர்களை முக்கியமான அந்த இடங்களில் நிறுத்தி வைத்திருந்ததும், அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டதும்தான் விக்கெட் கணக்கை தொடங்கிவைத்தது.

அதுமட்டுமல்ல, ஜாஃப்தா அவுட்டானபோது, அந்த கேட்சைப் பிடித்த ராதா யாதவ் ஷார்ட் மிட் ஆன் பொசிஷனில் வழக்கத்தைவிட மிகவும் நேராக நின்றிருந்தார்.

அதுபோக, பிரிட்ஸுக்கு 'சில்லி மிட் ஆன்' ஃபீல்டர் கூட (அங்கும் ஜெமிமா) வைத்திருந்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். இப்படியான ஃபீல்ட் பொசிஷன்கள் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்தின.

ஆனால், இதற்கு முன்பாக இதே ஃபீல்டிங் செட் அப் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன், இந்தியாவின் ஃபீல்டிங் செட் அப் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அது அந்தத் தோல்விகளுக்குப் பின் நன்றாகவே மாறியிருக்கிறது.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரு வாரங்கள் முன்பு தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்த இந்தியா, இப்போது உலக சாம்பியன் ஆகியிருக்கிறது
"ஆட்டம் பற்றிய விழிப்புணர்வு இறுதிப் போட்டியில் ஹர்மனிடம் நன்றாகத் தெரிந்தது" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.

அந்தத் தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்திய அணி தங்கள் தவறுகளை ஏற்றுத் திருத்திக் கொண்டதும், சீனியர் வீராங்கனைகள் பொறுப்புகளை தங்கள் கைகளிலும் எடுத்துக்கொண்டது இந்த மாற்றத்தின் மிக முக்கியமாகக் காரணமாக விளங்கியது என்று கருதுகிறார் ஆர்த்தி.


பெண்கள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்தது இந்திய அணி.


தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்திடமும் தோல்வியைச் சந்தித்திருந்தது.


இந்த போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் இந்தியாவின் கைகளில் இருந்து நழுவியது போல தோன்றியது.


251 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா, 144/6 என்ற நிலையில் இருந்தது. இருந்தாலும், இந்தியா அந்தப் போட்டிடியில் தோற்றது.


ஆஸ்திரேலியாவோ சேஸிங்கில் உலக சாதனை (அன்றைய தேதிக்கு) படைத்து இந்தியாவை வீழ்த்தியது.




இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட 10 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் இந்தியா இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்க, இந்திய பேட்டர்கள் இலக்கை எட்டிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது, இருந்தாலும் தோல்வியே மிஞ்சியது.



இந்தியாவில் கிடைத்த வாசுகி பாம்புதான் உலகிலேயே நீளமானதா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி' பாம்பின் உணவும் வேட்டை முறைகளும் என்ன? ஆய்வாளர்கள் தகவல்

'


மகளிர் உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - தென் ஆப்ரிக்கா

சச்சின், கோலி வாழ்த்து: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசு எவ்வளவு?

End of அதிகம் படிக்கப்பட்டது

பலமான அணியாகக் கருதப்பட்ட இந்தியா சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பையில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளைச் சந்தித்தது.


இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது இந்தியா

ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து இப்போது இந்த ஞாயிறு இந்தியாவுக்கானதாக மலர்ந்தது. அன்று தொடர் தோல்விகளைச் சந்தித்த அதே அணி, இன்று உலக சாம்பியன் ஆகியிருக்கிறது.


மூன்று தொடர் தோல்விகளுக்கும் வெற்றிக்கும் இடையிலான இந்த இரண்டு வாரங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன? அந்தத் தோல்விகளில் இருந்து இந்தியா மீண்டு வந்தது எப்படியென்று, சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரனிடம் பிபிசி தமிழ் பேசியது.


பொறுப்பெடுத்துக்கொண்ட சீனியர்கள்

இந்திய அணியின் எழுச்சிக்கு மிக முக்கியக் காரணமாக ஆர்த்தி சங்கரன் சொல்வது, ''இந்திய சீனியர் வீராங்கனைகள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான்''


"அந்தத் தோல்விகளுக்குப் பின் சீனியர் வீராங்கனைகள் தங்கள் கைகளில் பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர். தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இது அணிக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்" என்று கூறினார் அவர்.


இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 60 பந்துகளுக்கு 62 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றுவிடும் நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.


இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருக்க, 88 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த ஸ்மிரிதி மந்தனா, ஒரு பந்தை தூக்கி அடித்து அவுட் ஆனார். அதன்பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ 4 ரன்களில் தோல்வியடைந்தது இந்தியா.


இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கையில் எடுத்துக்கொண்டது மாற்றத்தை ஏற்படுத்தியது என்கிறார் ஆர்த்தி சங்கரன்

இந்தத் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி மந்தனா, "எங்கள் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம். அந்த சரிவு என்னிடம் இருந்து தொடங்கியதால் நான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆட்டத்தை இறுதி வரையிலும் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். என் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம்" என்று கூறினார்.


இப்படி ஒரு முன்னணி வீராங்கனை பொறுப்பை தன் மீது எடுத்துக்கொண்டது திருப்புமுனை ஏற்படுத்திய விஷயம் என்கிறார் ஆர்த்தி.


இந்த அணுகுமுறையை கடைசி இரண்டு போட்டிகளில் தீப்தி ஷர்மாவின் பேட்டிங்கிலுமே பார்க்க முடிந்தது. களமிறங்கியதும் செட்டில் ஆக சில பந்துகள் எடுத்துக்கொண்டு, மெல்ல தன் ஆட்டத்துக்குள் செல்பவர் தீப்தி ஷர்மா. அதுதான் அவரது அணுகுமுறை. ஆனால், அரையிறுதியிலும் இறுதிப் போட்டியிலும் வேறொரு அணுகுமுறையை அவரிடம் பார்க்க முடிந்தது.


அரையிறுதியில் 338 ரன்களை இந்திய அணி சேஸ் செய்ததால், செட்டில் ஆக தீப்தி ஒரு பந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வந்ததில் இருந்தே அதிரடி காட்டியவர், 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டே டாட் பால்கள்தான் ஆடினார். கடினமான சிங்கிள்களைத் தவிர்க்கும் அவர், ரிஸ்க் எடுத்து ஓடி ரன் அவுட்டும் ஆனார்.


இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,நாக் அவுட் போட்டிகளில் பேட்டிங்கில் தீப்தியின் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது

இறுதிப் போட்டியில் கூட தீப்தி அதைத்தான் செய்தார். "ஷஃபாலி, ஜெமி இருவரும் அடுத்தடுத்து அவுட்டான பிறகு, ஹர்மனும் மெதுவாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் ரன் ரேட் பெரிய அடி வாங்கியிருக்கும். ஆனால், அப்படி ஏற்படாமல் தீப்திதான் பார்த்துக்கொண்டார். இல்லையெனில் இந்தியா அந்த கட்டத்தில் பின் தங்கியிருந்திருக்கும்" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.


இறுதிப் போட்டியில் தீப்தி 58 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வெளியேறிய பிறகும் இந்தியாவின் ரன் ரேட் சீராக இருந்ததற்கு முக்கியக் காரணமாக விளங்கியிருந்தார் தீப்தி.


சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டதை முக்கியக் காரணமாகக் கூறும் ஆர்த்தி சங்கரன், சில டெக்னிக்கலான காரணங்களையும் குறிப்பிட்டார்.


சரியான காம்பினேஷனும், மாறிய பேட்டிங் ஆர்டரும்

"காம்பினேஷனை சரியாகக் கண்டறிந்து, ஆறாவது பௌலரை சேர்த்தது இந்த மாற்றத்துக்கான முக்கியமான விஷயம். அது ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிக்குத் தேவைப்பட்டது" என்கிறார் ஆர்த்தி சங்கரன்.


அதிக பேட்டிங் ஆப்ஷன்கள் வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் இந்திய அணி 5 பௌலர்களை மட்டுமே அணியில் எடுத்திருந்தது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 330 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாததற்கும் அது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அதை சரிசெய்தது இந்திய அணி. அடுத்த போட்டிகளில் 6 பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதுபோல் அணியை மாற்றினார்கள்.


அதேபோல், பேட்டிங் ஆர்டரையும் ஒரேபோல் வைத்திருக்காமல் மாற்றியதும் முக்கியக் காரணம் என்றும், குறிப்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸை நம்பர் 3 இடத்தில் ஆடவைத்ததும் இந்த மாற்றத்துக்கான ஒரு முக்கியம் என்றும் ஆர்த்தி சங்கரன் குறிப்பிட்டார்.


இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜெமிமா நம்பர் 3 பொசிஷனில் களமிறங்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

வழக்கமாக ஐந்தாவது ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு வந்த ஜெமிமாவை, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெளியே அமர்த்தியது இந்திய நிர்வாகம்.


ஆனால், அடுத்த போட்டியிலேயே அவரை அணிக்குக் கொண்டு வந்ததோடு, மூன்றாவது வீரராகவும் களமிறக்கினார்கள். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார் ஜெமிமா.


அதற்கு முன் ஆடிய 55 போட்டிகளில் மூன்று முறை மட்டுமே மூன்றாவது வீரராகக் களமிறங்கியிருந்தார் ஜெமிமா.


அந்த நியூசிலாந்து போட்டியில் கூட அவர் முதலில் ஐந்தாவது இடத்தில் தான் ஆடுவதாக இருந்தது. ஓப்பனர்கள் 33 ஓவர்கள் ஆடிவிட்டதால் அவரை மூன்றாவது வீரராகக் களமிறக்கினார்கள்.


அதேபோல் அரையிறுதியில் கூட களமிறங்குவதற்கு 10 நிமிடம் முன்புதான்தான் அந்த இடத்தில் விளையாடப்போவது பற்றி அணி நிர்வாகம் கூறியதாகச் சொல்லியிருந்தார் ஜெமிமா.


அந்த மாற்றம் அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தக் காரணமாக அமைந்தது.


இப்படி முன்கூட்டியே செய்திருந்த பேட்டிங் ஆர்டர் திட்டங்களை மாற்றியது சாதகமான அம்சம் என்று குறிப்பிட்டார் ஆர்த்தி சங்கரன்.


ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி

அந்தத் தோல்விகளுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்ஸியிலும் நல்ல மாற்றங்கள் தெரிந்ததாகக் குறிப்பிட்டார் ஆர்த்தி. குறிப்பாக ஃபீல்ட் செட் அப் பல தருணங்களில் மிகவும் துல்லியமாக இருந்ததாக அவர் கூறினார்.


"சமீபத்திய போட்டிகளில் இந்தியா ஃபீல்டிங் செய்தபோது பௌண்டரிகள் தடுக்கப்பட்ட விகிதம் அதிகரித்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஃபீல்டிங் திறன் சிறப்பாக இருந்ததோடு, சரியான இடங்களில் சரியான ஃபீல்டர்களை நிற்க வைத்ததும் இதில் முக்கியக் காரணம்" என்றார் ஆர்த்தி.


இறுதிப் போட்டியில் கூட இதைப் பார்க்க முடிந்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் விக்கெட் வீழ்ந்ததே இப்படி நல்ல ஃபீல்டிங் செட் அப் மற்றும் துல்லியமான ஃபீல்டிங்கால்தான்.


இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஃபீல்டிங்கில் ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்த முடிவுகள் சிறப்பாக இருந்ததாகக் கூறுகிறார் ஆர்த்தி சங்கரன்

அவுட் ஆவதற்கு முந்தைய பந்தை டாஸ்மின் பிரிட்ஸ் கவர் திசையில் அடித்துவிட்டு ஓட முயற்சி செய்தார். ஆனால், சிறப்பாக ஃபீல்டிங் செய்து ரன் ஓட விடாமல் ஜெமிமா தடுத்தார்.


அடுத்த பந்தை மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு பிரிட்ஸ் ரன் எடுக்க முயற்சி செய்ய, டைரக்ட் ஹிட் மூலம் அவரை அவுட்டாக்கினார் அமஞ்சோத் கவுர்.


இந்தியாவின் இரண்டு சிறந்த ஃபீல்டர்களை முக்கியமான அந்த இடங்களில் நிறுத்தி வைத்திருந்ததும், அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டதும்தான் விக்கெட் கணக்கை தொடங்கிவைத்தது.


அதுமட்டுமல்ல, ஜாஃப்தா அவுட்டானபோது, அந்த கேட்சைப் பிடித்த ராதா யாதவ் ஷார்ட் மிட் ஆன் பொசிஷனில் வழக்கத்தைவிட மிகவும் நேராக நின்றிருந்தார்.


அதுபோக, பிரிட்ஸுக்கு 'சில்லி மிட் ஆன்' ஃபீல்டர் கூட (அங்கும் ஜெமிமா) வைத்திருந்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். இப்படியான ஃபீல்ட் பொசிஷன்கள் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்தின.


ஆனால், இதற்கு முன்பாக இதே ஃபீல்டிங் செட் அப் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன், இந்தியாவின் ஃபீல்டிங் செட் அப் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அது அந்தத் தோல்விகளுக்குப் பின் நன்றாகவே மாறியிருக்கிறது.



படக்குறிப்பு,இரு வாரங்கள் முன்பு தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்த இந்தியா, இப்போது உலக சாம்பியன் ஆகியிருக்கிறது

"ஆட்டம் பற்றிய விழிப்புணர்வு இறுதிப் போட்டியில் ஹர்மனிடம் நன்றாகத் தெரிந்தது" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.


அந்தத் தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்திய அணி தங்கள் தவறுகளை ஏற்றுத் திருத்திக் கொண்டதும், சீனியர் வீராங்கனைகள் பொறுப்புகளை தங்கள் கைகளிலும் எடுத்துக்கொண்டது இந்த மாற்றத்தின் மிக முக்கியமாகக் காரணமாக விளங்கியது என்று கருதுகிறார் ஆர்த்தி.

 


பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இன்று (நவம்பர் 2) தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டு அணிகளுமே அரையிறுதியில் களமிறக்கிய அதே பிளேயிங் லெவனையே இந்தப் போட்டிக்கும் தேர்வு செய்திருக்கின்றன. மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பிக்கையோடு வருகிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இவ்விரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை

மழையால் தாமதம்

3 மணிக்குத் தொடங்கியிருக்கவேண்டிய ஆட்டம், நவி மும்பையில் தொடர்ந்து மழை பெயததால் தாமதம் ஆனது. இறுதிப் போட்டிக்கு கூடுதலாக 2 மணி நேர 'கட்-ஆஃப்' (cut off) இருப்பதால், ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாமல் இது முழுமையான 50 ஓவர் ஆட்டமாகவே நடக்கும்.

 


#SportsUpdate |

 மகளிர் உலகக்கோப்பை 2025: நவி மும்பையில் நடைபெற்ற 2-ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது!


#WomensWorldCup2025 | #WomensWorldCupSemiFinal | #WorldCupFinal | #JemimahRodrigue | #CWC | #INDvAUS | #INDWvAUSW | #WWC | #ICC | #DailyThanthi

 


ஒரு முன்னோடி, ஒரு தலைவி, ஒரு ஜாம்பவான். என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு பாரம்பரியத்துடன் சோஃபி டெவின் ஒய்வுக்கு காலடி எடுத்து வைக்கிறார்.

 


2025ஆம் ஆண்டின் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் விக்னராஜ் வக்‌ஷன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.


வக்‌ஷன் வெறும் 14 நிமிடங்கள் 23.21 வினாடிகளில் இந்த தூரத்தை கடந்துள்ளதோடு, இந்த சம்பியன்ஷிப்பில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.





 ஏழுவர் கொண்ட ஆடவருக்கான ஆசிய ரக்பி தொடரில் சீனாவை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 


கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நேற்று இந்தப் போட்டி நடைபெற இருந்தது. 

மழைக் காரணமாக குறித்த போட்டி இன்று காலை ஆரம்பமானது. 

இந்த போட்டியில் சீனாவை 34 - 7 என்ற கோல் கணக்கில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. 

அடுத்தப் போட்டியில் இலங்கை அணி ஜப்பானை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


ஒக்டோபர் 18 ஆம் திகதி இந்தியாவில் அந்நாட்டின் பார்வையற்ற பெண்கள் கிரிக்கெட் அணியை சந்தித்தேன். பார்வையற்ற பெண்களுக்கான மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க இந்த அணி நவம்பர் மாதம் இலங்கை வர உள்ளது.


I met with the visually impaired women’s cricket team in India on 18 October. The team will visit Sri Lanka in November 2025 to participate in the Women’s T20 World Cup for Visually Impaired Women.


#HariniAmarasuriya #indiantourism #cricket #cricketlovers




ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக மற்றும் மிகவும் இளம் வயதில் 5000 ஓட்டங்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

 


ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக்கிண்ண  தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றைய  போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில்  நாணயச்சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தெரிவு  செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.

 


இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக பிரதீகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. நடப்பு உலகக்கிண்ண தொடரில் முதல் மூன்று போட்டிகளில் பெரிய அளவில் ஓட்டங்களை  குவிக்கத் தவறிய ஸ்மிருதி மந்தனா, இன்றையப் போட்டியில் அரைசதம் விளாசியுள்ளார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வரும் பிரதீகா ராவலும் அரைசதம் கடந்துள்ளார்.

 


இன்றையப் போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாகவும், மிகவும் இளம் வயதிலும் 5000 ஓட்டங்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். 112 இன்னிங்ஸ்களில் ஸ்மிருதி மந்தனா 5000 ஓட்டங்களைக் கடந்து அசத்தியுள்ளார்.

 



 13 ஆவது மகளிர் உலகக் கிண்ண போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2ஆம் திகதி வரை இந்தியாவின் கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், மும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது. 


இதில் இந்தியா, நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.



இந்திய அணியில் ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், கிரந்தி கவுட், அமன்ஜோத் கவுர், சினே ராணா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, ராதா யாதவ்.


இலங்கை: சமாரி அத்தபத்து (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவனி, கவிஷா தில்ஹரி, இமிஷா துலானி, விஷ்மி குணரத்ன, அச்சினி குலசூர்ய, சுகந்திகா குமாரி, மால்கி மதர, ஹாசினி பெரேரா, வத்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரனவீர, ஹர்ஷிகா சமரவிக்ரமா, நிலக்ஷிகா சில்வா, தேமி விஹாங்க.


இன்று பிற்பகல் 3 மணியளவில் இப்போட்டி தொடங்கவுள்ளது  

 


ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.

பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 19.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது.

முதலில் இந்திய அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. நான்கு ஓவர்களில் மூன்று பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.

இந்தியாவின் வெற்றியின் நாயகனாக திலக் வர்மா 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்தார், சிவம் துபே 33 ரன்கள் எடுத்தார்.



 ( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு பிரதேச செயலக கூடைப்பந்தாட்ட இளைஞர் அணி இவ்வருடமும் 12 வது தடவையாக அகில இலங்கை தேசிய 
போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான அம்பாறை மாவட்ட மட்ட இளைஞர் கழக கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.  

இறுதிப் போட்டியில் காரைதீவு அணியும் கல்முனை அணியும் மோதின.

காரைதீவு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய கூடைபந்தாட்ட இளைஞர் கழக அணி கூடைப்பந்தாட்ட போட்டியில்  2025 ம் ஆண்டின் மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு  தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.



 பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக மீண்டும்

தென்னாபிரிக்க அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் குயின்டன் டி கொக்



இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் என்றாலே அது பாக்ஸ் ஆபிஸ்தான். இத்தனை வருடங்கள் கடந்த பின்பும், சுவாரஸ்யம் குறையாத ஒன்றாகவே அது திகழ்கிறது.


தற்போது இரு அணிகளும் சமபலத்தில் இல்லாவிட்டாலும், களத்துக்கு வெளியே நிகழும் சம்பவங்கள் இந்தியா–பாகிஸ்தான் ஆட்டத்துக்கு பரபரப்பை குறையாமல் பார்த்துக்கொள்கின்றன. சமீபத்திய உதாரணம், ஆசிய கோப்பை லீக் போட்டியில் இரு அணி கேப்டன்களும் பரஸ்பரம் கைக்குலுக்காததும், அதையடுத்து ஏற்பட்ட சர்ச்சைகளும்.


இந்தியா–பாகிஸ்தான்: மாறுபட்ட கிரிக்கெட் பாரம்பரியங்கள்

ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் என்றபோதும், இரு அணிகளின் கிரிக்கெட் பாரம்பரியம் முற்றிலும் மாறுபட்டவை. தொடக்கம் முதலே இந்தியா பேட்டிங்கிலும் பாகிஸ்தான் பந்துவீச்சிலும் பலம்வாய்ந்ததாக திகழ்கின்றன. இந்தக் கதை தேசப் பிரிவினைக்கு முன்பாக ஆரம்பிக்கிறது.


பாகிஸ்தான் என்கிற தேசம் மட்டுமல்ல; பாகிஸ்தான் கிரிக்கெட்டும் எப்போதுமே ஒரு புதிர்தான் என்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாறு குறித்து எழுதிய பீட்டர் ஓபான்.


1947 வரை ஒரே தேசமாக இருந்தாலும் கிரிக்கெட் பாரம்பரியத்தைப் பொறுத்தவரை இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரெதிர்த் துருவங்கள். 1845 வரை இன்றைக்குப் பாகிஸ்தான் வரைபடத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருக்கவில்லை. அதனால் மேற்கத்திய ஆட்டமான கிரிக்கெட்டும் மேற்கத்திய நாகரிகமும் தாமதமாகப் பாகிஸ்தானுக்கு அறிமுகமாயின.



'கடவுளே பேசிய இடம்' என்று பைபிள், குர்ஆன் குறிப்பிடும் மலையில் இப்போது என்ன நடக்கிறது? புதிய சர்ச்சை

பெருந்துறை சிப்காட், நிலத்தடி நீர், மாசுபாடு, தமிழ்நாடு

பெருந்துறை சிப்காட்டால் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் என்ன பிரச்னை? பிபிசி தமிழ் கள ஆய்வு

End of அதிகம் படிக்கப்பட்டது

கிரிக்கெட் இந்தியர்களுக்குக் கிழக்கிந்திய கம்பெனி வணிகர்கள் மூலமாகவும் பாகிஸ்தானியர்களுக்கு பிரிட்டிஷ் ராணுவத்தினர் மூலமாகவும் அறிமுகமானது. பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள இதுவொரு முக்கியமான கண்ணி.


பிரிவினைக்குப் பிறகு முதல் தர கிரிக்கெட்டின் தரத்தைத் தக்கவைப்பதற்குப் பாகிஸ்தானிடம் போதிய நிதி வலிமையோ உள்கட்டமைப்பு வசதிகளோ இருக்கவில்லை. இந்தக் கட்டமைப்பு குறைபாடு இன்றளவும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நீடித்துவருகிறது.


இந்தியா Vs பாகிஸ்தான், கிரிக்கெட், கவாஸ்கர், சச்சின், கோலி, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இம்ரான் கான்

"நல்ல பேட்ஸ்மேன் உருவாவதற்குக் கட்டமைப்பு தேவை. ஆனால் பந்துவீச்சாளருக்கு அது பெரிதாகத் தேவையில்லை" என்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன்.


பாகிஸ்தானில் பேட்டிங் ஒரு பாரம்பரியமாக எழுந்து நிற்காதற்கு பாகிஸ்தானியர்கள் தங்கள் சுற்றத்தாரை நகலெடுத்து அவர்களை போல அப்படியேச் செய்யும் கேட்ச் பிஹேவியர் (Catch Behaviour) ஒரு காரணம் என்கிறார் பீட்டர் ஓபான்.


அப்படி பிந்தொடர்வதற்கு பாகிஸ்தானியர்களுக்கு ஃபாசல் மகமூத் தொடங்கி இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயிப் அக்தர் என வெற்றிகரமான வேகப்பந்துவீச்சுப் படை இருக்கிறது.


இந்திய ரசிகர்களுக்கு கவாஸ்கர், சச்சின், கோலி ஆதர்சம் என்றால் பாகிஸ்தானியர்களுக்கு வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர் போன்றவர்களே ஆதர்ச நட்சத்திரங்கள்.


இத்தனை குறைபாடுகளுக்கு பிறகும், பாகிஸ்தானில் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்கவர்ந்த விளையாட்டாக உள்ளது. பாகிஸ்தான் என்ற தேசத்தின் இருப்புக்கும் கருத்துக்கும் ஏதோவொரு வகையில் கிரிக்கெட் பங்களிக்கிறது என்கிறார் பீட்டர் ஓபான்.


இந்தியா–பாகிஸ்தான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு அணிகளின் கிரிக்கெட் பாரம்பரியமும் (பேட்டிங், பவுலிங்) துலக்கமாக வெளிப்பட்ட இரு முக்கிய போட்டிகள் குறித்து பார்க்கலாம்.


2007 டி20 ஃபைனல்: கடைசி ஓவர் திரில்லரில் சொதப்பிய மிஸ்பா–உல்–ஹக்

இந்தியா Vs பாகிஸ்தான், கிரிக்கெட், காவஸ்கர், சச்சின், கோலி, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர்


பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தோனி தலைமையிலான இந்திய அணி, 2007 டி20 உலகக்கோப்பையை வென்றது.

2007 டி20 உலகக்கோப்பை ஃபைனல் இந்தியா–பாகிஸ்தான் மோதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுகிறது.


டி20 ஃபார்மட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சச்சின், டிராவிட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஒதுங்கிக்கொள்ள, இளம் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு பறந்தது.


இந்த தொடரில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி சமனில் முடிய, பெனால்டி ஷூட் அவுட் பாணியில் நடைபெற்ற பவுல்–அவுட் டை-பிரேக்கரில், சேவாக், உத்தப்பா, ஹர்பஜன் ஆகியோர் ஸ்டம்புகளை தகர்த்து, இந்தியாவை 3-0 என்ற கணக்கில் பவுல் அவுட் முறையில் வெற்றி பெறவைத்தனர்.


பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக், முன்னணி பந்துவீச்சாளர்கள் யாசர் அராஃபத், உமர் குல், ஷாஹித் அஃப்ரிடி ஆகியோரிடம் பொறுப்பை ஒப்படைக்க, சொல்லி வைத்தது போல அனைவரும் சொதப்பினர்.


டை-பிரேக்கர் நிலை ஏற்பட்டால் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த தோனி, ஆட்டத்துக்கு முன்பாக சேவாக், உத்தப்பா, ஹர்பஜன் ஆகியோரை அதற்கேற்றவாறு பயிற்சிபெற அறிவுறுத்தினார். தோனியின் மதிநுட்பமான கேப்டன்சி வெளிப்பட்ட தருணம் அது.


இந்தியா Vs பாகிஸ்தான், கிரிக்கெட், காவஸ்கர், சச்சின், கோலி, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என நினைக்கையில், தனி ஒருவனாக தாக்குப்பிடித்தார் மிஸ்பா–உல்–ஹக்

ரோஹித்தின் அதிரடி கேமியோ

ஐசிசி கூட்டத்தில் டி20 உலகக்கோப்பைக்கு கடைசிவரை எதிர்ப்பு தெரிவித்த, இந்தியா–பாகிஸ்தான் அணிகள் ஃபைனலில் பலப்பரீட்சை நடத்தியது வரலாற்று நகைமுரண். கடைசியாக 83–ல் உலகக்கோப்பை வென்ற இந்தியாவும், 92–ல் உலகக்கோப்பை வென்ற பாகிஸ்தானும் மல்லுக்கட்டுவதால் இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவியது.


ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. காயம் காரணமாக சேவாக் விலக, கம்பீருடன் தொடக்க ஆட்டக்காரராக யூசுஃப் பதான் களமிறங்கினார். அதிரடி தொடக்கத்துக்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தபோதும், 14–வது ஓவரிலேயே இந்திய அணி 100 ரன்களை எட்டியதால், 170–180 ரன்கள் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


ஆனால், யுவராஜ் சிங், தோனி விக்கெட்களை அடுத்தடுத்த ஓவர்களில் உமர் குல் கைப்பற்றியதால், இந்திய அணியின் ரன் வேகம் மட்டுப்பட்டது. கடைசிக் கட்டத்தில் ரோஹித் சர்மாவின் (30) அதிரடி கைகொடுக்க, இந்தியா இன்னிங்ஸ் முடிவில் 157 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கம்பீர் அதிகபட்சமாக 75 (54) ரன்கள் குவித்தார்.


தோனியின் நம்பிக்கையை காப்பாற்றிய ஜோஹிந்தர் சர்மா

இந்தியா Vs பாகிஸ்தான், கிரிக்கெட், காவஸ்கர், சச்சின், கோலி, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இன்றளவும் இரு அணி ரசிகர்களுக்கும் மறக்க முடியாத போட்டியாக இது திகழ்கிறது.

முதல் ஓவரிலேயே ஹபீஸ் (1) விக்கெட்டை கைப்பற்றிய ஆர்பி சிங், தனது இரண்டாவது ஓவரில் கம்ரான் அக்மலை டக் அவுட் செய்து பெவிலியன் அனுப்பினார். அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தபோதும் அதிரடியை குறைக்காத இம்ரான் நசீர், புயல் வேகத்தில் ரன் சேர்க்க, 6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 53 ரன்களை குவித்தது.


ஆனால், நசீர், யூனிஸ் கான், மாலிக், அஃப்ரிடி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 12–வது ஓவரில் 77 ரன்களுக்கு 7 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என நினைக்கையில், தனி ஒருவனாக தாக்குப்பிடித்த மிஸ்பா–உல்–ஹக், ஹர்பஜன் வீசிய 17–வது ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார்.


ஶ்ரீசாந்த் வீசிய அடுத்த ஓவரில், தன்வீர் 2 சிக்சர்களை அடிக்க, கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ஆட்டம் சூடுபிடித்தது; களத்தில் இருந்தது கடைசி விக்கெட் என்பதால் இந்தியாவுக்கும் நம்பிக்கை இருந்தது. ஹர்பஜனின் முந்தைய ஓவரை மிஸ்பா சிதறடித்ததால் வேறு வழியின்று அனுபவமற்ற மித வேகப்பந்து வீச்சாளர் ஜோஹிந்தர் சர்மாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார் தோனி.


முதல் பந்தை வைடாக வீசிய ஜோஹிந்தர் சர்மா, மாற்றுப்பந்தை சரியாக வீசினார். பதற்றத்தில் அடுத்த பந்தை ஃபுல் டாஸாக ஜோஹிந்தர் வீச, அதை அநாயாசமாக சிக்சருக்கு அனுப்பினார் மிஸ்பா. 4 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய ரசிகர்கள் கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்துவிட்டனர்.


கடும் அழுத்தத்தில் இருந்த ஜோஹிந்தரிடம், கேப்டன் தோனி ஓடிச்சென்று ஆற்றுப்படுத்தி சில ஆலோசனைகளை கூறினார். ஓவரின் மூன்றாவது பந்தை முழு நீளத்தில் ஸ்டம்ப் லைனில் ஜோஹிந்தர் வீச, அதை தனக்கு பிடித்தமான ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்ற மிஸ்பா, ஶ்ரீசாந்த்திடம் கேட்ச் கொடுத்து பாகிஸ்தான் ரசிகர்களின் கனவை தகர்த்தார். இன்றளவும் இரு அணி ரசிகர்களுக்கும் மறக்க முடியாத போட்டியாக இது திகழ்கிறது.


1999 சென்னை டெஸ்ட்: சிவசேனா எதிர்ப்பும் சச்சின் போராட்டமும்

இந்தியா Vs பாகிஸ்தான், கிரிக்கெட், காவஸ்கர், சச்சின், கோலி, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,1999 ஜனவரி 28 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் வாசிம் அக்ரம் (இடது) மற்றும் இந்திய அணியின் கேப்டன் முகமது அசாருதீன் (வலது).

இந்திய–பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளின் வரிசையில், 1999 சென்னை டெஸ்ட்டுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இந்த டெஸ்ட், முதலில் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடத்தப்படவிருந்தது.


பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சியின் தொண்டர்கள் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை சேதப்படுத்தியதால், சென்னை சேப்பாக்கத்துக்கு மாற்றப்பட்டது.


சென்னை டெஸ்ட் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக, பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் பிசிசிஐ தலைமையகம் அடித்து நொறுக்கப்பட்டது.


டெஸ்ட் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, சென்னையில் பாகிஸ்தான் உடனான போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்தார்.


இதன் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 9 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் மோதும் டெஸ்ட் என்பதால், கிரிக்கெட் உலகம் சென்னை டெஸ்ட்டை உன்னிப்பாக கவனித்தது.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டக் அவுட்டாகி ஏமாற்றிய சச்சின்

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம், இந்திய அணியை பந்துவீச பணித்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பாகிஸ்தானின் முகமது யூசுஃப், விக்கெட் கீப்பர்–பேட்டர் மொயின் கான் தலா 60 ரன்கள் எடுத்தனர்.


இந்திய அணி தரப்பில் அனில் கும்ப்ளே 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் டிராவிட், அசாருதீன் இருவரின் அரை சதங்களின் உதவியுடன் 16 ரன்கள் முன்னிலை பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக தனது ஐந்தாவது டெஸ்ட்டை விளையாடிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், முதல் இன்னிங்ஸில் சக்லைன் முஷ்டாக்கின் தூஸ்ராவை கணிக்க முடியாமல் டக் அவுட்டாகி 3 பந்துகளில் வெளியேறினார்.


பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சக்லைன் முஷ்டாக் 5 விக்கெட்களும் அப்ரிடி 3 விக்கெட்களும் கைப்பற்றினர். பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஷாஹித் அப்ரிடியின் அதிரடி சதத்தின் (141) துணை கொண்டு 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்தியாவுக்கு 271 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.


பாகிஸ்தானை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சென்னை ரசிகர்கள்

இந்தியா Vs பாகிஸ்தான், கிரிக்கெட், காவஸ்கர், சச்சின், கோலி, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் முதுகு காயத்தையும் பொருட்படுத்தாமல் வெற்றி இலக்கை துரத்திய சச்சின் 136 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சுழலுக்கு சாதகமான களத்தில் இலக்கை விரட்டிய இந்தியா, ஒருகட்டத்தில் 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. சச்சின்– நயன் மோங்கியா இணை 136 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தது. அரைசதம் அடித்த மோங்கியா ஆட்டமிழந்தவுடன் அணியை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பு சச்சின் தலையில் இறங்கியது.


ஒருபக்கம் சீட்டுக்கட்டு போல விக்கெட்டுகள் சரிந்தாலும் முதுகு காயத்தையும் பொருட்படுத்தாமல் அதிரடியாக வெற்றி இலக்கை துரத்திய சச்சின், கடைசியில் சக்லைன் முஷ்டாக் பந்தில் 136 ரன்களில் ஆட்டமிழந்தார்.


இந்திய அணி தோற்றபோதும் சிறந்த டெஸ்ட் ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த டெஸ்ட்டில் இந்தியா ஒரு மகத்தான போராட்டத்தை வெளிப்படுத்தியும் 12 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணிக்கு சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்கள் பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்தி, பாகிஸ்தான் அணியினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.