Showing posts with label sports. Show all posts



 ( வி.ரி.சகாதேவராஜா)


வடக்கு- கிழக்கில் 35 வது தியாகிகள் தினம் நாளை (19) வியாழக்கிழமை அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபா உள்ளிட்ட உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமாகும்.

 அதனை முன்னிட்டு 
மோகன் - கணேஸ்" ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்று போட்டி காரைதீவில் நடைபெற்றுவந்தது.

காரைதீவு விவேகானந்த விளையாட்டுக் கழகம் தனது 38 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு பெருமையுடன் நடாத்தும் "மோகன் கணேஷ்" ஞாபகார்த்த தியாகிகள் தினம் (யூன் 19)  உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப தொடர் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி 
மைதானத்தில் கடந்த 08/06/2025 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 8 அணிகள் கலந்து இருந்தன. 
தொடர்ந்து இச்சுற்றுப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நாளை 19/06/2025 அன்று சிறப்பாக இடம்பெறவிருக்கிறது.

 வருடா வருடம் நடைபெறும் இப்போட்டிக்கு புலம்பெயர் வாழ் தோழர்கள் அனுசரணை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


கிழக்கு பிராந்திய முன்னணி மற்றும் மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான மருதமுனை கோல்ட் மைண்ட் விளையாட்டு கழகத்தின் தலைவர் அல்ஹாஜ் கலீல் முஸ்தபா அவர்களினால் கோல்ட் மைன்ட் கிரிகெட் கழகத்தினருக்கு புதிய சீருடை மற்றும்  விளையாட்டு உபகரணங்கள் என்பனவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வு மருதமுனை பிரதான வீதி முஸ்தபா ட்ரேட் காம்ப்ளக்சில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மருதமுனை கோல்ட் மைண்ட் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபகரும், ஓய்வுநிலை மாவட்ட காணி பதிவாளருமான முஸத்திக் ஜே முஹம்மட், கழக நிறைவேற்று பணிப்பாளர் ஆசிரியர் எம்.பி.எம்.ரசீட்,  கழக செயலாளர் அதிபர் எம்.சி.ஏ.நஸார், பொருளாளர் ஏ.எம். றியாஸ் ஆசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளர்  எஸ்.எம். நுபைஸ், ஆர்.எம்.றிஸாப், அணித் தலைவர் ஜே.எம்.சாதிர், கிங்ஸ் லெவன் அணியின் செயலாளர் இசட்.எம். ஹுசைன், மற்றும் அணியின் சிரேஷ்ட வீரர்களும் கலந்து கொண்டனர்.

 



நிறவெறித் தடையால் நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 1992ம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் அந்த அணிக்கு தடை நீக்கப்பட்டது.

அந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க மோதலில் மழைகுறுக்கிடவே வலுவான தென் ஆப்ரிக்கா டக்வொர்த் லிவிஸ் விதிப்படி தோல்வி அடைந்தது.

1998ம் ஆண்டு ஐசிசி சார்பில் முதல்முறையாக நடத்தப்பட்ட நாக்அவுட் கோப்பையை மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இதுதான் தென் ஆப்ரிக்கா வென்ற முதல் ஐசிசி கோப்பையாகும். அதன்பின் கடந்த 27 ஆண்டுகளாக பலமுறை போராடியும் அது தோல்வியில் முடிந்தது.

1999ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தோல்வியை தென் ஆப்ரிக்கா மறக்காது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வெல்ல வேண்டிய நிலையில் போட்டி டையில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடியிருந்த காரணத்தால் அந்த அணி பைனலுக்கு முன்னேறி, தென் ஆப்ரிக்கா வாய்ப்பை இழந்தது. கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்ரிக்காவை தோல்வி துரத்திய நிகழ்வும், பதற்றத்தில் வெற்றியை நழுவவிடும் சோக்கர்ஸ் என்ற பெயரும் வந்தது.

2015ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தென் ஆப்ரிக்கா பறிகொடுத்தது.

2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது. பர்படாஸில் நடந்த பைனல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் 7 ரன்னில் தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் தென் ஆப்ரிக்க அணி ஐசிசி போட்டிகளில் பலமுறை அரையிறுதி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை நழுவவிட்டிருந்தது. 27 ஆண்டுகால காத்திருப்புக்குப்பின் முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது.

 


வி.ரி. சகாதேவராஜா)


இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 23 வயதிற்குட்பட்ட வீரர்களை உள்ளடக்கிய Vaaj junior premier league தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் அம்பாறை மாவட்ட அணி முதலிடத்தைப் பெற்று சாம்பியனாக வெற்றி வாகை சூடியுள்ளது.

அம்பாறை மாவட்ட கூடைப்பந்தாட்ட அணியாக காரைதீவு கூடைப்பந்தாட்ட கழக அணியினர் பிரதிநிதித்துவப் படுத்தினர்.

இலங்கையின் 15 மாவட்டங்களின் பங்குபற்றுதலுடன் மாத்தறையில் கடந்த 9,10,11,12 திகதிகளில் இச் சுற்றுப் போட்டி இடம்பெற்றது.

இச் சுற்றுப்போட்டி தொடரில் அம்பாறை மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் காரைதீவு  அணியானது குழு A யில் இடம்பிடித்து முதலாவது போட்டியில் வவுனியா மாவட்ட அணியினருடன் மோதி 19:74 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டி 2 வது போட்டியில் மாத்தளை மாவட்ட அணியுடன் மோதி 71:25 எனும் புள்ளியினை பெற்று மாத்தளை மாவட்ட அணியினை 46 புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி அம்பாறை மாவட்ட அணி கால் அரையிறுதி போட்டிக்கு தெரிவானது.

கால் அரையிறுதி போட்டியில் நுவரெலியா மாவட்டத்தினை அம்பாறை மாவட்ட அணி எதிர்கொண்டு 59:40 எனும் புள்ளி அடிப்படையிலும்  அரையிறுதி போட்டியில் மாத்தற மாவட்டத்தினை அம்பாறை மாவட்ட அணி எதிர்கொண்டு 58:46 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டி இறுதி  போட்டிக்கு முன்னேறியது.

இச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியானது நேற்று வியாழக்கிழமை 12.06.2025 மாலை  4.00 மணிக்கு மாத்தறை Lebeema உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் அம்பாறை மாவட்ட அணியானது பதுளை மாவட்ட அணியை 53:50 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டு சம்பியனானது. 

வரலாற்றில் முதல் தடவையாக காரைதீவு கூடைப்பந்தாட்ட அணி தேசிய ரீதியில் சாம்பியனாக வெற்றி வாகை சூடியுள்ளமையையிட்டு பல தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

"அழுத்தத்தின் போதும் நிதானமாக இருக்கும் இயல்புடனும், ஒப்பிடமுடியாத கிரிக்கெட் திறமையுடனும், குறுகிய வடிவ கிரிக்கெட்டின் முன்னோடியாக கொண்டாடப்படுகிறார் எம்.எஸ். தோனி. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகவும், கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருக்கும் தோனி, ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதன் மூலம் கௌரவிக்கப்படுகிறார்" என்று ஐசிசி-யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (ஜூன் 9) லண்டனில் நடைபெற்ற ஐசிசி நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது. எம்.எஸ்.தோனி, தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூஸிலாந்தைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி உள்பட 5 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 கிரிக்கெட் வீராங்கனைகள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 



இந்த கோஷம், 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி ரசிகர்களுக்கு இறுதியாக நனவாகிவிட்டது. ஒருமுறை அல்ல, 3 முறை இறுதிப்போட்டி, 18 ஆண்டுகள் போராட்டம், வலி, காயம், வேதனை அனைத்தும் இந்த சீசனில் ஆர்சிபிக்கு ஆற்றப்பட்டுவிட்டது. இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றுள்ளது.

ஐபிஎல் கோப்பையில் 8வது அணியாக இனிமேல் தன்னுடைய பெயரையும் ஆர்சிபி அணி பொறித்து வரலாற்றில் இடம் பிடித்தது. ராகுல் திராவிட், அணில் கும்ப்ளே, விராட் கோலி, டூப்ளெஸ்ஸி என ஜாம்பவான்களால் நிகழ்த்த முடியாத சாதனையை அன்கேப்டு, சர்வதேச அனுபவமே இல்லாத வீரர் ரஜத் பட்டிதார் ஆர்சிபிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக ஆடி 10 ஆண்டுகள் கேப்டன் பொறுப்பேற்று பலமுறை இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்ட விராட் கோலிக்கு இந்த வெற்றியின் ஆழம், மதிப்பு என்னவென்று தெரியும். அதனால்தான் கடைசிப் பந்து வீசப்பட்டவுடன் மைதானத்தின் தரையில் தலை கவிழ்ந்து கோலி தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கண்ணீர் சிந்தி அழுதார்.

 


( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு பிரதேச செயலக மட்ட பூப்பந்தாட்ட போட்டிகளில் காரைதீவு விளையாட்டு கழகம்  இம்முறையும் ஆண் பெண் இரண்டுக்குமான போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்று சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலக மட்ட விளையாட்டு விழாவின் பூப்பந்தாட்ட  போட்டிகள் நிந்தவூர் எம்ஏசி விளையாட்டு பூங்காவில் (MAC Sports Park) மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றன. 

ஆண்களுக்கான போட்டியில் காரைதீவு வி.க முதலிடத்தையும், இரண்டாமிடத்தை காரைதீவு பூப்பந்தாட்ட வி.க உம் பெற்றுக் கொண்டன.

பெண்களுக்கான போட்டியில் காரைதீவு வி.க முதலிடம் பெற்றுக்கொண்டது.



 தனது தடாலடி ஆட்டத்தால் அணியின் வெற்றிக்கு வித்திட்ட அபிஷேக் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய போது களத்தில் பரபரப்புக் காட்சிகள் அரங்கேறின. நடப்பு சீசனில் எதிரணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும் போது வித்தியாசமாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள திக்வேஷ் ராதி, இந்த முறையும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தனது ஸ்டைலில் வழக்கமான கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட, அவரிடம் அபிஷேக் சர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முடிவில், நடுவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.


நூருல் ஹுதா உமர்

2025 ஆம் ஆண்டுக்கான சாய்ந்தமருது கோட்டமட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் கடந்த வாரம் கல்முனை சாஹிரா கல்லூரி மைதானத்தில் சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா அப்துல் மலீக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றிய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் 16 முதலாமிடங்கள், 14 இரண்டாமிடங்கள்,18 மூன்றாம் இடங்கள் அடங்கலாக மொத்தமாக 48 வெற்றியிடங்களப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் இணைப்பாடவிதான பொறுப்பதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாத்தீம் அவர்களின் தலைமையில் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம். றிபாஸ், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ. ஆபாக் ஆகியோர்களின் அயராத பெரு முயற்சியினால் மாணவர்கள் இவ் வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கும், மற்றும் பயிற்றுவித்த ஆசான்களுக்கும் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், ஏனைய ஆசிரியர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மேற்படி போட்டிகளில் 1ஆம்,2ஆம் இடங்களைப் பெற்றவர்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள வலயமட்ட போட்டிகளில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.




 மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட் திறப்பு


ஸ்டாண்டை ரோகித் சர்மாவின் அப்பா- அம்மா, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.


#RohitSharma | #WankhedeStadium | #MumbaiIndians | #DailyThanthi

 


இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்? கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பும்ரா, இதற்கு முன் இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். பும்ரா தலைமையில் 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 1 போட்டியில் வெற்றியடைந்துள்ளது. 2024-25ஆம் ஆண்டில் இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் ரோஹித் ஷர்மா தனிப்பட்ட காரணத்தால் முதல் டெஸ்ட் போட்டிக்கானஅணியில் இடம்பெறவில்லை. இந்த சமயத்தில் இந்திய அணியை அவர் வழிநடத்தினார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும், இந்த தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா அணியிலிருந்து விலக அந்த போட்டியிலும் பும்ரா இந்திய அணியை வழிநடத்தினார். ரோஹித், விராட் வரிசையில் அனுபவமிக்க வீரர்களில் ஒருவராக பும்ரா கருதப்படுகிறார். கே.எல். ராகுலும் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தியுள்ளார். விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். இவரின் தலைமையில் 3 போட்டிகள் விளையாடியுள்ள இந்திய அணி 2 போட்டிகளில் வென்றுள்ளது. 2022ஆம் ஆண்டு வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியை வழிநடத்தி இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினார் கே.எல். ராகுல். 58 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் 3257 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர். 43 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 2948 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 42 ரன்கள் சராசரி வைத்திருக்கிறார். 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கில் 1893 ரன்கள் எடுத்துள்ளார். அவருடைய உடல் தகுதி சிறப்பாக உள்ளதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். சிலர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கில் வரலாம் என ஊகிக்கின்றனர். ஆனால் அயல்நாடுகளில் அவரது பேட்டிங் சிறப்பாக இல்லை. இதுவரை ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார்.





 🚨பாதுகாப்பு காரணங்களுக்காக Punjab king மற்றும் delhi capital அணிகளுக்கு இடையிலான IPL கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.


Dharmasala மைதானத்தை விட்டு வெளியேறுமாறு IPL அதிகாரிகள் அணிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


 நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி 125 ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கல்முனை வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான  வலைப்பந்தாட்டம் மற்றும் எறிபந்தாட்டப் போட்டிகளில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 16,18 வயதுக்கு உட்பட்ட பெண் மாணவர்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள், 17,20 வயதுக்கு உட்பட்ட பெண் மாணவர்கள் மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண் மாணவர்களுக்கான எறிபந்தாட்டப் போட்டிகளில் இந்த பாடசாலையின் அணிகள் சம்பியனாக  வெற்றி ஈட்டியுள்ளதோடு மாகாண மட்டப் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வலைப்பந்தாட்ட மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி ஹயாளினி சிவாகரன் அவர்களுக்கும், பயிற்றுவிப்பாளரான க.தரிஷாந்தன் அவர்களுக்கும் , எறிபந்தாட்டப் போட்டியின் பயிற்சிக்கு பொறுப்பாக இருந்த அருட்.சகோ.ஏ.தேவராஜா அவர்களுக்கும் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் பங்குபற்றுவதற்கு மாணவர்களை ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

 


2025 ஐபிஎல் டி20 சீசனில் தமிழக வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ள அணி குஜராத் டைட்டன்ஸ்.


சாய் சுதர்சன், சாய் கிஷார், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் என அனைவருமே தமிழக மண்ணின் மைந்தர்கள். இவர்கள் 4 பேரும் கிடைக்கின்ற வாய்ப்பில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி, முத்திரை பதித்து வருகிறார்கள். அதிலும் தொடக்க வீரராகக் களமிறங்கும் சாய் சுதர்சன் ஆட்டம் இந்த சீசனில் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


மிரட்டல் ஜோடி

சாய் சுதர்சன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,குஜராத் அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர்கள் சுப்மான் கில், சாய் சுதர்சன் ஜோடி அமைத்துக் கொடுக்கும் அடித்தளம் பல போட்டிகளில் வெற்றியைக் கொடுத்துள்ளது

இந்த சீசனில் குஜராத் கேப்டன் சுப்மான் கில்லுடன் சேர்ந்து சாய் சுதர்சன் அமைக்கும் கூட்டணி பெரும்பாலான ஆட்டங்களில் பெரிய ஸ்கோருக்கும், வெற்றிக்கும் வழிவகுத்துள்ளது.


ஆமதாபாத்தில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்கூட இருவரின் பார்ட்னர்ஷிப்பும் குஜராத் அணி 200 ரன்களுக்கு மேல் கடக்க உதவியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.


இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்களை சேஸ் செய்யும் முனைப்பில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.


வெளியேறும் சன்ரைசர்ஸ்?

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 10 போட்டிகளில் 7 வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது.


ஆர்சிபி அணியை விட நிகர ரன்ரேட்டில் 0.867 என வலுவாக இருப்பதால் குஜராத் அணி 2வது இடம் பிடித்தது. அதேசமயம், சன்ரைசர்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கணிதரீதியாக முடியாவிட்டாலும், நிதர்சனத்தில் அந்த அணி அடுத்துவரும் 4 போட்டிகளிலும் வென்றாலும் 14 புள்ளிகளைக் கடக்க முடியாது.


ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கவும்கூட இந்த 14 புள்ளிகள் போதாது என்பதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் சன்ரைசர்ஸ் அணி வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


சாய் சுதர்சன்பட மூலாதாரம்,Getty Images

சிம்மசொப்ன தொடக்க வீரர்கள்

குஜராத் அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர்கள் சுப்மான் கில், சாய் சுதர்சன் ஜோடி அமைத்துக் கொடுக்கும் அடித்தளம் பல போட்டிகளில் வெற்றியைக் கொடுத்துள்ளது.


இதுவரை 10 இன்னிங்ஸ்களில் சாய் சுதர்சன், கில் ஜோடி 627 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளனர். இதில் 6 முறை 50 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்துள்ளனர், இருவரின் சராசரி 60.27 ரன்களாக வைத்துள்ளனர்.


பவர்ப்ளேயில் இருவரின் பேட்டிங்கிலும் இருக்கும் ஆக்ரோஷம், ஆவேசம்தான் குஜராத் அணிக்கு பவர்ப்ளேயில் பெரிய ஸ்கோரைப் பெற்றுக் கொடுத்துள்ளது.


சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில்கூட 43 பந்துகளில் இருவரும் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர், இதில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்களும் அடங்கும்.


இருவரின் பேட்டிங்கிலும் பவர்ப்ளேயில் 6 புல்ஷாட்கள், 2 ப்ளிக் ஷாட்கள், 2 கவர் ட்ரைவ் ஷாட்கள், ஒரு ஸ்ட்ரைட் ட்ரைவ், ஒரு ஸ்டீர், ஒரு கட்ஷாட் ஆகியவற்றின் மூலம்தான் பவுண்டரி, சிக்ஸர் கிடைத்தது. பவர்பளேயில் இருவரும் சேர்ந்து 82 ரன்கள் சேர்த்தது இந்த சீசனில் 6வது அதிகபட்சமாகும்.


சாய் சுதர்சன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அணியை தூக்கி நிமர்த்துவதில் பட்லரின் பேட்டிங் முக்கியமானதாகும்

இந்த சீசன் முழுவதும் கில், சுதர்சன் இருவரும் மிரட்டலான ஃபார்மில் இருப்பதால் எந்த பந்துவீச்சாளர் மோசமாக பந்துவீசினாலும் தண்டிக்கத் தவறுவதில்லை. நேற்றைய ஆட்டத்தில் ஷமியின் 3வது ஓவரில் இருவரும் சேர்ந்து 21 ரன்களை விளாசினர்.


ஐபிஎல் சீசனில் வேறு எந்த அணியிலும் அமையாத வகையில் குஜராத் அணிக்கு தொடக்க ஜோடி அமைந்துள்ளது. இருவரின் ரன்வேட்கையும், ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்கிறது. அதிரடியாக ஆட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் நிதானமாக, பேட்டிங்கில் கட்டுப்பாட்டுடன், மோசமான பந்துகளை தேர்வு செய்து மட்டுமே ஷாட்களை அடித்து நங்கூரம் அமைக்கிறார்கள்.


இந்த ஆட்டத்தில்கூட சுதர்சன், கில் இருவரின் பேட்டிங்கிலும் 15 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன, ஷாட்களில் கன்ட்ரோல் சதவீதம் 94 ஆக இருக்கிறது. ஒரு ரன்னுக்கு குறைந்தபட்சம் 2 ரன்கள் சேர்க்கவேண்டும் என்ற சராசரியில் இருவரும் விளையாடுகிறார்கள்.


ஐபிஎல் சீசனில் குஜராத் அணி வெற்றிகரமாக மாறுவதற்கு சாய் சுதர்சன் , கில் கூட்டணி மட்டுமல்லாமல் மற்றொரு அதிரடி வீரர் ஜாஸ் பட்லரும் குறிப்பிடத்தகுந்தவர்.


கில், சுதர்சன் இருவரில் யாரேனும் ஒருவர் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் அணியை தூக்கி நிமர்த்துவதில் பட்லரின் பேட்டிங் முக்கியமானதாகும்


ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த பேட்டர்கள் வரிசையில் குஜராத் அணியின் டாப்-3 பேட்டர்கள் இடம் பெற்றுள்ளனர். சுதர்சன், கில், பட்லர் மூவருமே இடம் பெற்றள்ளது குறிப்பிடத்தக்கது.


சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன் - குஜராத்தின் வெற்றிக்கு தூணாக இருக்கும் மூவர்பட மூலாதாரம்,Getty Images

சச்சினை முந்திய சுதர்சன்

தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்த முதல் பேட்டர் என்ற பெருமையையும், ஆர்ஞ்சு தொப்பியையும் கைப்பற்றியுள்ளார். 10 போட்டிகளில் 5 அரைசதங்கள் உள்பட 504 ரன்கள் குவித்து 50 ரன்களுக்கும் மேல் சுதர்சன் சராசரியும், 154 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.


சாய் சுதர்சன் பேட்டிங்கில் இருக்கும் நிலைத்தன்மையைப் பார்த்து " மிஸ்டர் கன்சிஸ்டென்சி" என அழைக்கிறார்கள்.


சுதர்சன் நேற்றைய ஆட்டத்தில் 23 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 54 இன்னிங்ஸ்களில் 2ஆயிரம் ரன்களை எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனையை சுதர்சன் முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 59 இன்னிங்ஸ்களில்தான் 2000 ரன்களை எட்டினார், சுதர்சன் விரைவாக 54இன்னிங்ஸ்களில் எட்டினார்.


மிகவிரைவாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை ஷான் மார்ச் 53இன்னிங்ஸ்களில் வைத்துள்ளார். சுதர்சன் 2வது இடத்தில் இருக்கிறார்.


சுதர்சன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஐபிஎல் தொடரில் 54 இன்னிங்ஸ்களில் 2ஆயிரம் ரன்களை எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனையை சுதர்சன் முறியடித்துள்ளார்.

குஜராத்தின் 3 தூண்கள்

குஜராத் அணியின் பேட்டிங் வெற்றிக்கு டாப்-3 வரிசையில் இருக்கும் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மான் கில், ஜாஸ் பட்லர் ஆகிய 3 பேரும்தான் காரணம். குஜராத் அணி 10 இன்னிங்ஸ்களில் நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் பேட்டிங் செய்ய குறைவாகவே வாய்ப்பு கிடைத்துள்ளது.


ஏனென்றால் இந்த 3 பேருமே பெரும்பாலான ஆட்டத்தை, ஓவர்களை ஆக்கமிரத்து ஆடுவதால் நடுவரிசை பேட்டர்களுக்கு களமிறங்க வாய்ப்புக் குறைவாக இருக்கிறது. இந்த 3 பேரும் சேர்ந்து சுதர்சன்(48),கில்(76),பட்லர்(64) என நேற்றைய ஆட்டத்தில் 188 ரன்கள் சேர்த்தனர். 218 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த குஜராத் அணி கடைசி ஓவரில் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.


சுதர்சன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சுப்மான் கில் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்

சர்ச்சை ரன்வுட்: கில்லுக்கு தண்டனை?

இந்த ஆட்டத்தில் சுப்மான் கில் 76 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹர்சல் படேல் வீசிய த்ரோவில் விக்கெட் கீப்பர் கிளாசனால் ரன்அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.


ஆனால், இந்த ரன்அவுட் குறித்து 3வது நடுவரிடம் அப்பீல் செய்யவே, அதில் உறுதியற்ற தன்மை நிலவியநிலையிலும் கில்லுக்கு அவுட் வழங்கினர். அதாவது ஹர்சல் படேல் வீசிய த்ரோவில் பந்து ஸ்டெம்பில் படுவதற்குமுன்பாகவே கிளாசனின் க்ளோவ் ஸ்டெம்பில் பட்டது தெரிந்தது. அதேநேரம், பந்தும் ஸ்டெம்பில் பட்டது. இரு சம்பவங்களும் மைக்ரோ வினாடிகள் இடைவெளியில் நடந்ததால், 3வது நடுவர் அவுட் வழங்கினார்.


இதைப் பார்த்து அதிருப்தி அடைந்த சுப்மான் கில் பெவிலியனுக்கு கோபத்துடன் சென்றார். அங்கிருந்த நடுவர்களிடம் சுப்மான் கில் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார்.அது மட்டுமல்லாமல் பந்துவீச களமிறங்கும்போதும், கள நடுவர்களிடம் தன்னுடைய ரன்அவுட் குறித்து வாக்குவாதம் செய்தார். இது ஐபிஎல் விதிகளின்படி தவறாகும், இதனால் நடுவர்கள் புகார் அளிக்கும்பட்சத்தில் சுப்பான் கில்லுக்கு தண்டனை விதிக்கப்படலாம்.


நம்பிக்கையிழந்த சன்ரைசர்ஸ்

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன் - குஜராத்தின் வெற்றிக்கு தூணாக இருக்கும் மூவர்பட மூலாதாரம்,Getty Images

சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசன் கடந்த சீசன்போல் நம்பிக்கையானதாக அமையவில்லை. குறிப்பாக தொடக்க ஜோடி ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இந்த சீசனில் பெரிய அளவுக்கு வெற்றிகரமான ஜோடியாக இல்லாதது அந்த அணியின் பெரும்பாலான தோல்விகளுக்கு காரணமாகும்.


இருவரில் ஒருவர் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழப்பது, யாரேனும் ஒருவர் மட்டுமே நிலைத்து ஆடுவது சாதகமாக அமையவில்லை.


அதிலும் இந்த சீசனில் அபிஷேக் சர்மா 314 ரன்களும், டிராவிஸ் ஹெட் 281 ரன்களும் மட்டுமே சேர்த்துள்ளனர். ஹெட் இதுவரை 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார், அபிஷேக் ஒரு சதம், ஒருஅரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.


இந்த ஆட்டத்திலும் டிராவிஸ் ஹெட்(20) ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அபிஷேக் களத்தி்ல் இருந்தவரை சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கை இருந்தது, இவர் ஆட்டமிழந்தபின் படிப்படியாக குறைந்தது. கிளாசன் 23, அனிகேத் வர்மா(3) , கமிந்து மெண்டிஸ்(0) என ஆட்டமிழந்தனர்.


பிரசித் கிருஷ்ணா கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


சுதர்சன்பட மூலாதாரம்,Getty Images

வெற்றிக்குப்பின் குஜராத் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் " கறுப்பு மண் ஆடுகளத்தில் சிக்ஸர் அடிப்பது கடினமாக இருந்தது. ஆனாலும் டாப் ஆர்டர் பேட்டர்கள் ஆடியவிதம் சிறப்பாக இருந்தது, ஸ்கோரை உயர்வாக கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கம்தான் இருந்தது. எங்களால் முடிந்தவரை சிறப்பான ரன்களை அடிக்கவே முயல்கிறோம். எங்கள் அணியின் பீல்டிங் இந்த சீசனில் சராசரிக்கும் குறைவாகவே இருந்தது,ஆனால் இன்று நன்றாக இருந்தது. பிரசித், இசாந்த், கோட்ஸி ஆகியோர் ஸ்கோரை டிபெண்ட் செய்ய சரியாகப் பந்துவீசினர்.களத்தில் வீரர்கள் அனைவரும் 110% பங்களிப்பை வழங்கினர்" எனத் தெரிவித்தார்.

 


மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.


இதன்மூலம், தொடரில் முதல் வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.


கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.


இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ஓட்டங்களைப் பெற்றது.


பதிலுக்கு ஆடிய இலங்கை அணி, 47வது (46.3) ஓவரில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 237 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப்பெற்றது.
 

இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்கிரம 77 ஓட்டங்களையும், கவீஷா தில்ஹாரி 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.


இவர்கள் இருவரும் 4வது விக்கெட்டுக்கு 128 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர்.


93 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்ற ஹர்ஷிதா, போட்டியின் ஆட்டநாயகியாக விருது பெற்றார்.


இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளையும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


தென்னாப்பிரிக்க அணி, இலங்கை மற்றும் இந்தியாவுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



 ( காரைதீவு சகா)


விசுவாவசு சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 42வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாகவும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமுக நிலையமும் இணைந்து ASCO மற்றும் சொர்ணம் நகைமாளிகையினதும் இணை அனுசரணையுடன் கடந்த சனிக்கிழமை நடாத்திய
'27வது மாபெரும் கலாசார விளையாட்டு விழாவின் காலைநிகழ்வாக மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பித்தத இம் மரதன் ஓட்டம் ஊர் வீதிகளூடாக வலம் வந்து விளையாட்டு கழகத் தலைமையகத்தை வந்தடைந்தது.

கழகத் தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கழக போசகர்களான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் மற்றும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.



 ஐபிஎல்லில் அறிமுக போட்டியில் கவனத்தை ஈர்த்த 14வயது சூர்யவன்ஷி

ராஜஸ்தான் அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ. 1.1 கோடி கொடுத்து 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியிருந்தது. லக்னௌ அணிக்கெதிரான நேற்றைய(ஏப்ரல் 19) போட்டியில் சூர்யவன்ஷி இம்பாக்ட் வீரராக களமிறங்கினார். இந்தப் போட்டியில் லக்னௌ அணியின் மூன்று பௌலர்களுக்கு எதிராக 3 சிக்ஸ் அடித்த வைபவ் 20 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார்.

 


வி.சுகிர்தகுமார்      


 ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலகங்களின் எல்லைக்குட்பட்ட பிரபல விளையாட்டுக்கழகங்களின் 40 வயிதிற்கும் மேற்பட்ட மூத்த 78 கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கி அணிக்கு 6 அணிகளாக மோதிக்கொள்ளும் 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது நேற்று (18)ஆரம்பமானது.
13 வீரர்களை கொண்டதாக பிரிக்கப்பட்டு ஆறு அணிகளாக தங்களுக்குள் மோதும் சுற்றுப்போட்டியானது 20ஆம் திகதிவரை  தம்பிலுவில் ஆதவன், தம்பட்டை லெவன் ஸ்டார் மைதானங்களில் நடைபெறவுள்ளது.
லெஜன் ஸ்டார்,  லெஜன் வோரியஸ்,  லெஜன்ட் கிங்,      லெஜன்ட் போஸ், சுப்பர் லெஜன்ட்,  பிளாஸ் லெஜன்ட் என  கடந்த காலங்களில் கிரிக்கட் விளையாட்டில் கிழக்கு மைதானங்களில் பிரகாசித்த பல நட்சத்திர வீரர்களை உள்ளடக்கி அணிகள் களம் காணுகின்றன.
பொறியியலாளர் ரதீசன் மற்றும் மாகாண கல்வித்திணைக்களத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் சிறிதரன் ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெறும் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளரும் மூத்த வீரருமான ஜெயச்சந்திரன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் உதவிக்கல்விப்பணிப்பாளர் சிறிதரன் 40 பிளஸ் கழக கொடியினை ஏற்றிவைத்தார்
தொடர்ந்து போட்டித்தொடரில் பங்குபற்றும் அணிகளின்  கொடிகளை அணித்ததலைவர்கள் ஏற்றி வைத்து போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அணிகளின் தலைவர்களாக லக்ஷ்மிகாந்த் யுவேந்திரா - மகேந்திரன்  சுரேஸ்குமார் - அகிலன் - ஜெயராஜ் ஆகியோர் தலைமை தாங்கி வழிநடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.