Showing posts with label sports. Show all posts

 


ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையில் இந்தியாவின் சீனியர் அணி விளையாடுவதைக் காண வேண்டும் என்ற இந்திய கால்பந்து ரசிகர்களின் கனவு இந்த முறை நிறைவேறவில்லை.


இருப்பினும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சில வீரர்கள் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் களம் இறங்குகிறார்கள்.


ஜூன் 11 அன்று தொடங்கிய இந்தத் தொடரை மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன, மேலும் இந்த முறை 48 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு கால்பந்து வீரர்கள், பல்வேறு நாடுகளின் அணிகளில் விளையாடுவதைக் காணலாம்.


2006-ல் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணிக்காக விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற பெருமையை விகாஷ் தோரசூ பெற்றார். ஆனால், அவரது சர்வதேச கால்பந்து செயல்பாடு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.


இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களான சர்பிரீத் சிங் (நியூசிலாந்து), நிஷான் வேலுப்பிள்ளை (ஆஸ்திரேலியா), தஹ்சீன் முகமது ஜம்ஷெத் (கத்தார்) மற்றும் சாமுவேல் முத்துசாமி (டிஆர் காங்கோ) ஆகியோர் உலகக் கோப்பையில் விளையாடுவதை இந்திய ரசிகர்கள் காண உள்ளனர்.


இந்த நால்வர் யார் என்று தெரிந்துகொள்வோம்.


சர்ப்ரீத் சிங் – நியூசிலாந்து

சர்பிரீத் 

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சர்பிரீத் நியூசிலாந்து அணிக்காக 24 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி மூன்று கோல்களை அடித்துள்ளார்.

1999 இல் ஆக்லாந்தில் பிறந்த சர்பிரீத், நியூசிலாந்து கால்பந்து அணியின் மிட்ஃபீல்டர் ஆவார்.


இவரது பெற்றோர் பஞ்சாபிலிருந்து நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவர்களது குடும்பம் நியூசிலாந்தில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வந்தது.


சர்பிரீத் சிறுவயதில் பல விளையாட்டுகளை விளையாடினார், ஆனால் கால்பந்து தான் அவரது முதல் விருப்பமாக இருந்தது. 2015 இல், தனது 16 ஆவது வயதில், வெலிங்டன் பீனிக்ஸ் கால்பந்து கிளப்புக்காக சீனியர் பிரிவில் அறிமுகமானார்.


2018 ஆம் ஆண்டில், மும்பையில் நடந்த இன்டர்காண்டினென்டல் கோப்பையில் நியூசிலாந்து சீனியர் தேசிய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றார் சர்பிரீத் .


அந்தத் தொடரில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. சர்பிரீத் அந்த இரண்டு கோல்களுக்கும் உதவினார் .


ஒரு வருடம் கழித்து, 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு, ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணியின் திறனாய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.


விரைவில் அவர் ஜெர்மனியின் உயர்மட்ட கால்பந்து லீக் ஆன பன்டெஸ்லிகாவில் பேயர்ன் முனிச் அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றார்.


பன்டெஸ்லிகாவில் விளையாடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் வீரர் என்ற பெருமையை சர்பிரீத் பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் ஐரோப்பிய கால்பந்து லீக்குகளில் உள்ள பல கிளப்புகளுக்காக விளையாடினார்.


தற்போது 27 வயதாகும் சர்பிரீத், நியூசிலாந்துக்காக 24 சர்வதேச போட்டிகளில் விளையாடி மூன்று கோல்களை அடித்துள்ளார். மேலும் கிளப் கால்பந்திலும் 34 கோல்களை அடித்துள்ளார்.


தஹ்சீன் முகமது ஜம்ஷெட் - கத்தார்

தஹ்சீன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தஹ்சீன், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் அறிமுகமானார்.

ஜூன் 16 அன்று 20 வயதை எட்டிய தஹ்சீன் முகமது ஜம்ஷெத், இந்த ஆண்டு உலகக் கோப்பையில் கத்தாருக்காக விங்கராக விளையாடவுள்ளார்.


தஹ்சீனின் தந்தை ஜம்ஷெத், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரியைப் பூர்வீகமாகக் கொண்டவர், அவரது தாய் ஷியாமா, வளப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர். இந்த குடும்பம் 2006 முதல் கத்தாரில் வசித்து வருகிறது.


ஜம்ஷெத் கோழிக்கோடு பல்கலைக்கழகத்துக்காக கால்பந்து விளையாடியுள்ளார், மேலும் தனது மகனின் பயிற்சியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.


கத்தாரில் உள்ள ஆஸ்பியர் அகாடமியில் பயிற்சி பெற்ற தஹ்சீனுக்கு, இளம் வயதிலேயே அல்-துஹைல் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்காக விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. விரைவில் அவர் தேசிய அணியிலும் இடம் பிடித்தார்.


அவர் 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.


தோஹாவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற சர்ச்சைக்குரிய 2024 உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியிலும் அவர் களத்தில் இருந்தார்.


அந்தப் போட்டியில் கத்தார் அணி இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது, ஆனால் நடுவரின் முடிவு விமர்சனத்துக்கு உள்ளானது.


அவர் சர்வதேச அளவில் இதுவரை எந்த கோலும் அடிக்கவில்லை.


நிஷான் வேலுப்பிள்ளை - ஆஸ்திரேலியா

நிஷான் ஆஸ்திரேலியாவில் பிறந்து மெல்போர்னில் வளர்ந்தார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,நிஷான், ஆஸ்திரேலிய தேசிய அணியான 'சாக்கரூஸ்'-இல் ஒரு தாக்குதல் ஆட்டக்காரராக அறியப்படுகிறார்.

25 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, ஓர் ஆங்கிலோ-இந்திய தாய் மற்றும் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியத் தந்தை ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.


நிஷான் ஆஸ்திரேலியாவில் பிறந்து மெல்போர்னில் வளர்ந்தார்.


கிளப் கால்பந்தில், அவர் மெல்போர்ன் விக்டரி அணிக்காக விளையாடுகிறார். ஆஸ்திரேலிய தேசிய அணியான சாக்கரூஸின் தாக்குதல் ஆட்டக்காரராக அவர் அறியப்படுகிறார்.


2024 ஆம் ஆண்டில், சீனாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பை அவர் பெற்றார், மேலும் அதே போட்டியில் அவர் தனது முதல் சர்வதேச கோலையும் அடித்தார்.


இதுவரை ஏழு சர்வதேசப் போட்டிகளில் மூன்று கோல்களை அடித்துள்ளார் நிஷான் .


சாமுவேல் முத்துசாமி - காங்கோ ஜனநாயகக் குடியரசு

சாமுவேல் பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சாமுவேல் 2019 முதல் காங்கோ ஜனநாயகக் குடியரசு அணிக்காக விளையாடி வருகிறார்.

சாமுவேல் முத்துசாமியின் தந்தை இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் கரீபியன் பிராந்தியமான குவாடலூப்பைச் சேர்ந்தவர். அவரது தாய் காங்கோவை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பிறந்தார்.


ஃபிஃபா விதிகளின்படி, ஒரு வீரர் தனது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியின் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும், ஆனால் அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.


2019 முதல் காங்கோ ஜனநாயகக் குடியரசு அணிக்காக விளையாடி வரும் சாமுவேல் முத்துசாமி, இதுவரை 57 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.


சர்வதேச அளவில் அவர் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை, ஆனால் கிளப் கால்பந்தில் 14 கோல்களை அடித்துள்ளார்.

 


இலங்கை வந்தடைந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


மேலும், இலங்கையின் விளையாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

 

குறித்த சந்திப்பின்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தற்போதைய இடைக்காலக் குழு தொடர்பான விவகாரம் குறித்து மிக முக்கியமாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் அதன் எதிர்கால நகர்வுகள் குறித்து இருதரப்பிற்கும் இடையில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.


 


உலகக் கிண்ண கோப்பையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியா தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.


23-வது உலகக் கிண்ண கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 


சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த 'ஜெ' பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியா, அறிமுக அணியான ஜோர்டானை எதிர்கொண்டது. 


28 ஆண்டுக்கு பிறகு உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் ஆஸ்திரியா ஆரம்பம் முதலே தாக்குதல் யுக்தியில் கவனம் செலுத்தியது.


முடிவில் ஆஸ்திரியா 3-1 என்ற கோல் கணக் கில் ஜோர்டானை வீழ்த்தி 3 புள்ளிகளை பெற்றது. 


உலகக் கோப்பையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கடைசியாக 1990ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்தி இருந்தது.

 


அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் இன்று ஒரே நாளில் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார்.


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த உலகக் கோப்பையில் களமிறங்கிய மெஸ்ஸி, அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அவரது ஹாட்ரிக் காரணமாக அர்ஜெண்டினா அணி 3-0 என வெற்றி பெற்றது.


அதிக வயதில் உலகக் கோப்பை ஹாட்ரிக் அடித்தவர், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோலடித்தவர், அதிக உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றவர் எனப் பல்வேறு சாதனைகளைப் படைத்தார் மெஸ்ஸி.


அதேசமயம், இந்தப் போட்டியின்போது சிவப்பு அட்டை கொடுத்து மெஸ்ஸி வெளியேற்றப்பட்டிருக்கவேண்டும் என்றும், அவர் மெஸ்ஸி என்பதால் அவருக்கு சலுகை வழங்கப்பட்டதாகவும் ஒருபக்கம் விவாதம் எழுந்திருக்கிறது.


மெஸ்ஸியின் ஹாட்ரிக்கால் வென்ற அர்ஜெண்டினா

கான்சாஸ் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே மெஸ்ஸி மிகச் சிறப்பாக விளையாடினார். வலது விங்கில் தொடங்கியிருந்தாலும், நடுப்பகுதிக்கு நகர்ந்து வந்து டிஃபண்டர்களுக்கு சவால் கொடுப்பது, அவ்வப்போது நடுகளத்தோடு இணைந்து அட்டாக்கைத் தொடங்குவது என முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


விளம்பரம்


ஆட்டத்தின் 6-ஆவது நிமிடத்திலேயே பந்தை கோலுக்குள் அனுப்பினார் மெஸ்ஸி. ஆனால், ஆஃப் சைட் காரணமாக அந்த கோல் மறுக்கப்பட்டது. இருந்தாலும் விரைவிலேயே தன் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் அவர்.


ராட்ரிகோ டி பால் கொடுத்த பாஸை பெற்று பாக்சை நோக்கி முன்னேறிய மெஸ்ஸி, பாக்சுக்கு வெளியே இருந்து தன் இடது காலால் அடித்த அதிவேக ஷாட்டை, அல்ஜீரிய கோல் கீப்பரால் தடுக்க முடியவில்லை. கோல்கீப்பரின் கையில் பட்டும் பந்து கோலுக்குள் செல்ல, அர்ஜெண்டினா இந்த உலகக் கோப்பையில் தங்கள் முதல் கோலை அடித்தது.


மெஸ்ஸின் இரண்டாவது கோல் 60ஆவது நிமிடத்தில் வந்தது. பாக்சுக்கு வெளியே இருந்து அலெக்சிஸ் மெக்காலிஸ்டர் அடித்த ஷாட்டை அல்ஜீரிய கோல்கீப்பர் லூகா ஜிடேன் சரியாகத் தடுக்காமல் விட்டுவிட்டார். அவர் மீது பட்டு வந்த பந்தை, துரிதமாக செயல்பட்டு கோலாக்கினார் மெஸ்ஸி.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

शहबाज़ शरीफ़

அமெரிக்கா-இரான் ஒப்பந்தத்தால் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம்; இந்தியாவுக்கு பின்னடைவா?

சில நேரங்களில் இது இரவில் அதிக தண்ணீர் குடிப்பது, காஃபின் அல்லது ஆல்கஹால் அருந்துவது போன்ற எளிய விஷயங்களால் ஏற்படலாம். 

ஆண்கள் இரவில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது? 2-3 முறை கண்விழிப்பது ஆபத்தானதா?

| நீங்கள் அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் விழித்தால் மீண்டும் தூக்கம் வரவில்லையா? நன்றாக தூங்க 4 டிப்ஸ் | 


நீங்கள் அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் விழித்தால் மீண்டும் தூக்கம் வரவில்லையா? நன்றாக தூங்க 4 டிப்ஸ்

ஆகாஷ் டெலிசன், தமிழக அரசு, மதுரை

'100 நாட்களுக்குப் பிறகு ஆகாஷ் டெலிசனின் உடல் தகனம்'- குடும்பத்தினர் எதிர்ப்பது ஏன்?

End of அதிகம் படிக்கப்பட்டது

தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்த மெஸ்ஸி, 76வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்து ஹாட்ரிக்கை நிறைவு செய்தார். இடது விங்கில் இருந்து நிகோ கொன்சாலஸ் கொடுத்த பாஸை, பாக்சுக்கு வெளியே இருந்து அடித்து கோலாக்கினார் மெஸ்ஸி.


இந்தப் போட்டியில் மொத்தம் அவர் கோல் நோக்கி அடித்த 4 ஷாட்களில் 3 கோலாகின. அது மட்டுமல்லாமல், 2 வாய்ப்புகளையும் உருவாக்கினார் மெஸ்ஸி. 54வது நிமிடத்தில் மெஸ்ஸி உருவாக்கிக்கொடுத்த ஒரு வாய்ப்பை லௌடாரா மார்டினஸ் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவர் அந்த ஷாட்டை நிதானமாக அடித்திருந்தால் அது கோலாகியிருக்கும்.


அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி 3 கோல்களை அடித்தார்

மெஸ்ஸி அடித்த கோலின் சிறப்பு என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தப் போட்டியில் மெஸ்ஸியின் செயல்பாடு பற்றி பிபிசி தமிழிடம் பேசிய இந்திய முன்னாள் கால்பந்து வீரரும், தமிழ்நாடு சந்தோஷ் டிராபி அணியின் பயிற்சியாளருமான தர்மராஜ் ராவணன், "இதுவொரு முழுமையான செயல்பாடு. இந்த வயதிலும் கூட அவரால் அனைத்து வீரர்களை விடவும் சிறப்பாக செயல்பாட்டைக் கொடுக்க முடிந்தது என்று நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. வாய்ப்புகளை உருவாக்குவது, முடிப்பது என அனைத்தும் செய்தார். சொல்லப்போனால், மெஸ்ஸியைத் தவிர்த்து மற்ற அர்ஜெண்டினா வீரர்கள் பெரிதாக வாய்ப்புகளை உருவாக்க தவறினார்கள். இன்னமும் அவர் அந்த அணிக்கு எவ்வளவு முக்கியமானவராக இருக்கிறார் என்பதையும் இந்த செயல்பாடு உணர்த்தியது." என்றார்.


""மெஸ்ஸி 'ஜோன் 14' பகுதியிலிருந்து அடித்த அவரது முதல் மற்றும் மூன்றாவது கோல்கள் உலகத்தரம் வாய்ந்தவை. அல்ஜீரிய டிஃபண்டர்கள் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்த வெளியை அவர் தனக்கு நன்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். அதேசமயம், எளிமையானதாகக் கருதப்படும் அந்த 2வது கோல் மெஸ்ஸியின் தரத்தைக் காட்டியது."


"அந்த கோல் வெறுமனே 'டேப் இன்' (tap in) கோலாகத் தோன்றலாம். ஆனால், அதை எல்லோராலும் கோலாக்கிவிட முடியாது. பந்து அந்த இடத்தில் ஒரு வாய்ப்பு உருவாவதை சரியாக மோப்பம் பிடிக்கவேண்டுமே! அதை மிகச் சிறந்த கோல் ஸ்கோரர்கள் மட்டுமே செய்வார்கள். அங்கு வாய்ப்பு உருவானதை விரைந்து உணர்ந்தது, உடனடியாக அதற்கு ரியாக்ட் செய்து அதை கோலாக்கியது போன்றவை தான் அவர் ஏன் மெஸ்ஸி என்பதை உணர்த்துகிறது. அல்ஜீரிய டிஃபண்டர்கள் கூட யாருமே அந்த இடத்தில் எதிர்பார்த்து பந்தை நோக்கி நகரவில்லை. அதுதான் மெஸ்ஸியின் தரம்" என்று கூறினார்.


மெஸ்ஸி பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்தபடி இரண்டு கோல்களை அடித்தார் மெஸ்ஸி

ஒரே போட்டியில் மெஸ்ஸி படைத்த சாதனைகள்

இந்தப் போட்டியில் களமிறங்கியபோதே பல்வேறு சாதனைகள் படைத்தார் மெஸ்ஸி. ஆறு ஃபிஃபா உலகக் கோப்பை தொடர்களில் களமிறங்கிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அவர். 2006 உலகக் கோப்பையில் அறிமுகமான மெஸ்ஸி, தொடர்ந்து ஆறாவது தொடரில் தற்போது களமிறங்கியிருக்கிறார்.


இந்தப் போட்டி மெஸ்ஸிக்கு 200ஆவது சர்வதேசப் போட்டியாகவும் அமைந்தது. இதன்மூலம் 200 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய முதல் அர்ஜெண்டீன வீரர் என்ற சாதனையும் படைத்தார் அவர். உலக அரங்கில் இந்த மைல்கல்லை எட்டும் மூன்றாவது வீரர் மெஸ்ஸி. இதற்கு முன் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் குவைத்தின் பாடெர் அல்-முடாவா ஆகியோர் மட்டுமே ஆண்கள் கால்பந்தில் தங்கள் நாட்டுக்காக 200 போட்டிகளுக்கும் மேல் விளையாடியவர்கள்.


அல்ஜீரியாவுக்கு எதிராக தன் முதல் கோலை அடித்தபோது தொடர்ந்து 5 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளில் கோலடித்து முதல் அர்ஜெண்டினா வீரர் என்ற சாதனையைப் படைத்த மெஸ்ஸி, இரண்டாவது கோல் அடித்தபோது அதிக வயதில் ஒரு ஃபிஃபா உலகக் கோப்பையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோல் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.


76-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த மூன்றாவது கோல் இரண்டு சாதனைகளைப் படைத்தது. இது மெஸ்ஸியின் முதல் உலகக் கோப்பை ஹாட்ரிக்காக அமைந்தது. மேலும், உலகக் கோப்பையில் அதிக வயதில் ஹாட்ரிக் அடித்தவர் என்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை உடைத்தார் மெஸ்ஸி.


மேலும், அந்த கோல் ஃபிஃபா உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடித்த 16வது கோல். இதன்மூலம், ஃபிஃபா உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவரான ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசாவின் சாதனையை சமன் செய்தார் மெஸ்ஸி.


மெஸ்ஸி, மண்டிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அல்ஜீரிய தடுப்பரண் வீரர் மண்டியின் கால்களை மிதித்த மெஸ்ஸி அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

மெஸ்ஸிக்கு சலுகை வழங்கப்பட்டதா?

இந்தப் போட்டியில் மெஸ்ஸி பல்வேறு சாதனைகள் படைத்தாலும், ஒரு மிகப் பெரிய சர்ச்சையும் தற்போது எழுந்திருக்கிறது.


ஆட்டத்தின் 32-ஆவது நிமிடத்தில் அல்ஜீரிய கேப்டன் ஐசா மண்டி மெஸ்ஸியால் ஃபவுல் செய்யப்பட்டார். பின்னால் இருந்து மண்டியை டேக்கிள் செய்த மெஸ்ஸி, மண்டியின் காலின் பிற்பகுதியில் தன் காலால் மிதித்தார். நடுவர் சைமன் மார்சினியாக் அதற்கு ஃபவுல் கொடுத்தாலும், மஞ்சள் அட்டையோ, சிவப்பு அட்டையோ கொடுக்கவில்லை. அது இற்போது விவாதத்துக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.


அந்த ஃபவுலுக்காக மெஸ்ஸி சிவப்பு அட்டை பெற்றிருக்கவேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு வீரர் மற்றொரு வீரரை இதுபோல் மிதிக்கும்போது பல தருணங்களில் சிவப்பு அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மெஸ்ஸியின் இந்த ஃபவுல் மெஸ்ஸிக்கு மஞ்சள் அட்டை பெறாததாலும், விஏஆர் (VAR) தலையீடே செய்யாததாலும், மெஸ்ஸிக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் பலரும் கருதுகிறார்கள்.


இந்தப் போட்டிக்கான இஎஸ்பிஎன் கால்பந்து நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கால்பந்து வீரர்களான அலெஹான்ட்ரொ மொரேனோ மற்றும் நெதும் ஒனோஹா இருவரும் மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று பேசினார்கள்.


மெஸ்ஸியின் ஃபவுல் பற்றியும், அவருக்கு சலுகை வழங்கப்படுகிறது என்ற விவாதங்கள் பற்றியும் பேசிய மொரேனோ, "இது 100 சதவிகிதம் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டிருக்கவேண்டிய தருணம். இதில் இன்னும் பிரச்னைக்குறிய விஷயத்தையும் நான் சொல்கிறேன்... 'பெரிய வீரர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன' என்பதற்கு ஏற்ப நடந்தவொரு விஷயம். மெஸ்ஸி ஹாட்ரிக் அடிப்பதற்கு முன் அடித்த ஒரு ஷாட்டை கோல்கீப்பர் ஜிடேன் தடுத்ததும், கேமரா ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோவைக் காட்டியது. அவர் சிரித்துக்கொண்டே, 'அது கிட்டத்தட்ட கோலாகிவிட்டது' என்பதுபோல் ரியாக்ட் செய்தார். இவையெல்லாம், இந்த வீரர் வித்தியாசமாக நடத்தப்படுகிறார் என்று சொல்வதற்கேற்பவே நடக்கிறது.


நாம் நிறுத்தப்பட்ட காட்சிகளைப் பார்க்கவேண்டியதில்லை, நேரலை வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது அது மோசமான ஃபவுல் என்று. யாராவது அதை மீண்டும் பார்த்திருக்கவேண்டும். ஏன் கள நடுவரை விஏஆர் அழைக்கவில்லை? நான் என்னதான் மெஸ்ஸியை விரும்பினாலும், அது மோசமான ஃபவுல், முழுங்காலுக்குக் கீழே காலின் பின்பகுதியில் ஒரு வீரரை மிதிக்கும்போது அங்கு நிச்சயம் சிவப்பு அட்டைக் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்" என்று கூறினார்.


அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மண்டியின் கால்களை மிதித்ததற்காக மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தி அத்லெடிக் தளத்தில் இதுபற்றி எழுதிய ஆலிவர் மெக்கே, "மெஸ்ஸிக்கு சலுகை வழங்கப்பட்டதா என்று சொல்ல முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நடுவர் தாராளமான மனதோடு முடிவெடுத்தார் என்று சொல்லலாம். ஒரு மஞ்சள் அட்டை அநேகமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முடிவாக இருந்திருக்கும் - இரண்டாவதாக ஒரு சிவப்பு அட்டை - ஆனால் மெஸ்ஸி எந்தவித தண்டனையுமின்றி தப்பியது நிச்சயமாக அவரது அதிர்ஷ்டம் தான்" என்று குறிப்பிட்டார்.


மறுபக்கம், வீரரைக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் மெஸ்ஸி இதை செய்யாததால், இது சிவப்பு அட்டை தரக்கூடிய தருணமாகக் கருதவேண்டியதில்லை என்ற விவாதங்களும் எழவே செய்கின்றன.


இந்நிலையில், இந்த சர்ச்சை பற்றி பிபிசி தமிழிடம் பேசிய தர்மராஜ் ராவணன், "காயப்படுத்தும் நோக்கம் இருந்ததா, இல்லையா என்பதெல்லாம் இரண்டாவது விஷயம், அது நிச்சயம் மோசமான ஃபவுல். பல தருணங்களில் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் குறைந்தபட்சம் மஞ்சள் அட்டையாவது கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். 100% மஞ்சள் அட்டை பெறுவதற்கான ஃபவுல் தான் அது. ஆனால், இந்த விஏஆர் காலகட்டத்தில் அதுகூட கொடுக்கப்படாதது தான் ஆச்சர்யமாக இருக்கிறது" என்று கூறினார்.


மெஸ்ஸிக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது என்ற விவாதம் பற்றிப் பேசிய அவர் இன்னொரு பார்வையை முன்வைத்தார். "உண்மையைச் சொல்லப்போனால் கிறிஸ்டியானோ ரொனால்டோவாக இருந்திருந்தாலும் இதுவே நடந்திருக்கும். பொதுவாகவே கால்பந்து அட்டாக்கர்களுக்கு சாதகமாகத்தானே இருக்கிறது. அது பெரிய பெயர் கொண்ட அட்டாக்கர்களுக்கு சாதகமாகவே இருக்கும். இந்த இடத்தில் அதுவே ஒரு டிஃபண்டர் மேற்கொண்ட டிஃபன்ஸிவான நகர்வாக இருந்தால், முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். இந்தப் பார்வை நிச்சயம் மாறவேண்டும்" என்று கூறினார். தான் விளையாடிய காலத்தில் ராவணன் ஒரு டிஃபண்டராக இருந்தவர்.


மெஸ்ஸியின் சாதனைகள் ஒருபக்கம் கொண்டாடப்பட்டுவந்தாலும், இந்த சர்ச்சையும் மறுபக்கம் பேசப்பட்டு வருகிறது.


இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 


டி20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை ரோவ்மன் பவல் பெற்று, அந்த கிரிக்கெட் வரலாற்றில் பொறித்துள்ளார் 💪

 


மிகவும் அழகான ஒரு சிறிய கரீபியன் தீவு, டச்சுக்காரர்களின் பெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தாலும் தங்களது சொந்த பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் ஒரு நாடு - குராசோவா. இதுவரை அநேகமாக அதே பெயரைக் கொண்ட மதுபானத்திற்காகத்தான் அது மிகவும் பிரபலமாக இருந்திருக்கலாம்.


ஆனால், உலகக் கோப்பையில் பங்கேற்கும் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகச்சிறிய நாடு என்ற வரலாற்றைப் படைக்க அவர்கள் தயாராகி வருவதால், அது இப்போது முற்றிலும் மாறப்போகிறது.


1,58,000 மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு பிரிட்டனின் 40 நகரங்களை விடக் குறைவு. அவர்கள் முழுமையான இறையாண்மை கொண்ட நாடு கூட அல்ல, நெதர்லாந்து ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே அவர்கள் இருக்கிறார்கள்.


"இது இந்தத் தீவுக்கு விவரிக்க முடியாத அளவுக்குப் பெருமகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. தீவு முழுவதுமே நீல நிறமாக மாறிவருகிறது," என்று குராசோவா கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கில்பர்ட் மார்டினா பிபிசி ஸ்போர்ட்டிடம் தெரிவித்தார்.


அவர்களது உலகக் கோப்பை அணியில் இருக்கும் வீரர்களில் டஹித் சோங் மட்டும்தான் இந்தத் தீவில் பிறந்தவர் - மற்ற 25 வீரர்களும் நெதர்லாந்தில் இருந்து வந்தவர்கள்.


விளம்பரம்


நெதர்லாந்தில் பிறந்த வீரர்கள் குராசோவாவுக்கு ஆட முன்வந்தது ஏன்?

இந்த அணியில் உள்ள சுமார் 18 வீரர்கள் இளையோர் பிரிவில் நெதர்லாந்து அணிக்காக விளையாடியுள்ளனர், அதில் ரிச்செட்லி பாசூர் மற்றும் ஜோசுவா ப்ரினெட் ஆகிய இருவர் சீனியர் அணிக்காகவும் விளையாடியுள்ளனர்.


குராசோth தேசிய அணி, உள்ளூர் அமெச்சூர் வீரர்களிடமிருந்து மாறி, வெளிநாடுகளில் வாழும் தங்களது வம்சாவளி வீரர்களைச் சேர்க்கத் தொடங்கியது, அவர்கள் டச்சு மேலாளர்களை வேலைக்கு அமர்த்தியதில் இருந்துதான் ஆரம்பித்தது. இது 2015 இல் பேட்ரிக் க்ளுய்வெர்ட் உடன் தொடங்கியது.


மயாமி எஃப்சி கிளப்பின் 37 வயது கோல்கீப்பர் எலோய் ரூம்தான் அந்த ஆண்டில் குராசோவாவிற்காக விளையாடிய இந்த அணியின் முதல் வீரர் ஆவார். அவரைத் தொடர்ந்து 2016 இல் ஆஸ்டன் வில்லா மற்றும் கார்டிஃப் அணியின் முன்னாள் மிட்ஃபீல்டர் லியான்ட்ரோ பகுனாவும் இதில் இணைந்தார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

நீங்கள் அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் விழித்தால் மீண்டும் தூக்கம் வரவில்லையா? நன்றாக தூங்க 4 டிப்ஸ்


நீங்கள் அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் விழித்தால் மீண்டும் தூக்கம் வரவில்லையா? நன்றாக தூங்க 4 டிப்ஸ்

கோழி முட்டையை சிறிதாகவும், அதன் ஓட்டை மெல்லியதாகவும் மாற்றும் வெப்ப அலை - முட்டையில் சத்துகள் குறையுமா?

கோழி முட்டையை சிறிதாகவும், அதன் ஓட்டை மெல்லியதாகவும் மாற்றும் 'வெப்ப அலை' - அதில் சத்துகளும் குறையுமா?

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா அபார வெற்றி பெற்றது (ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத்)

ஸ்மிருதி மந்தனா சாதனை: பாகிஸ்தானை இந்திய மகளிர் அணி எளிதில் வீழ்த்தியது எப்படி?

आर्यन

ஆமதாபாத் விமான விபத்தை வீடியோவில் பதிவு செய்த சிறுவன் நகரை விட்டு விரைவில் வெளியேறியது ஏன்?

End of அதிகம் படிக்கப்பட்டது

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"நாங்கள் குராசோவாவிற்காக மிகவும் சிறப்பான ஒன்றைச் செய்திருக்கிறோம். நான் இந்தப் பயணத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன், குராசோவா மக்களைப் பெருமைப்படுத்த விரும்பினேன்," என பகுனா கூறினார்.


"நாங்கள் இன்னும் எங்கள் இலக்கை முடிக்கவில்லை என்று மேலாளர் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். நாங்கள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும், எங்களுக்குப் பெரிய இதயம் இருக்கிறது என்பதை மக்களுக்குக் காட்ட விரும்புகிறோம். உங்களுக்குப் பெரிய இதயம் இருந்தால், உங்களால் வெகுதூரம் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்."


ஹடர்ஸ்ஃபீல்ட், ரேஞ்சர்ஸ் மற்றும் பர்மிங்காம் அணிகளுக்காக விளையாடிய அவரது சகோதரர் ஜுனின்ஹோ, 2019 இல் இவர்களைப் பின்தொடர்ந்தார்.


28 வயதான அவர் பிபிசியிடம்: "இது நாங்கள் எப்போதும் ஆசைப்பட்ட ஒரு விஷயம் - நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது ஒரே மைதானத்தில் ஒரே அணியில் ஒன்றாக விளையாட வேண்டும் என்று கனவு கண்டோம்." என்று கூறினார்.


"அதனால்தான் நான் அவருடன் ஒரே அணியில் இருக்கவும், என் பெற்றோரைப் பெருமைப்படுத்தவும், இந்தத் தீவைப் பெருமைப்படுத்தவும் குராசோவாவிற்காக விளையாட ஆரம்பத்திலேயே முடிவு செய்தேன்."


நெதர்லாந்தில் பிறந்த திறமையாளர்களின் மிகப்பெரிய வருகை மிகச் சமீபத்தில்தான் நடந்துள்ளது, இந்த அணியில் உள்ள 15 வீரர்கள் 2023-க்குப் பிறகே அறிமுகமாகியுள்ளனர்.


கடந்த ஆண்டு குராசோவாவிற்கு மாறுவதற்கு முன்பு, 21 வயதுக்குட்பட்டோர் பிரிவு வரை நெதர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்திய சோங்கும் இதில் அடங்குவார்.


"நெதர்லாந்தில் விளையாடிக் கொண்டிருந்த பல வீரர்கள் எங்களிடம் உள்ளனர், அவர்கள் குராசோவாவிற்காக விளையாடுவோம் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை," என்று தொடர்ந்தார் ஜுனின்ஹோ பகுனா.


"ஆனால் அவர்களிடம் உள்ள இதயம், நம்பிக்கை மற்றும் குராசோவாவுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பை உங்களால் பார்க்க முடிகிறது.


"அவர்கள் மக்களின் அன்பை உணர்கிறார்கள், தீவின் அனைத்தையும் உணர்கிறார்கள், அதனால் அவர்களுக்கான தொடர்பு மேலும் மேலும் வலுவடைந்தது."


மற்ற நாடுகளில், உள்ளூர் வீரர்களை அதிகம் அழைக்காமல் இருப்பது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கலாம்.


ஆனால் நெதர்லாந்தில் வாழும் குராசோவாவின் வம்சாவளியினருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் (இது தோராயமாக இந்தத் தீவின் மக்கள் தொகைக்குச் சமம்) இதை வித்தியாசப்படுத்துகிறது.


"இது ஒரு பிரச்னையே இல்லை என்று நான் நினைக்கிறேன்," என்று எஃப்எஃப்கே-வின் (FFK) டிஜிட்டல் பார்ட்னர்களான ப்ரோஃபவுண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் குராசோவைச் சேர்ந்தவருமான பௌடினோ டி ஜாங் கூறினார்.


"எங்கள் வம்சாவளியினர் தீவுக்கு வெளியேயும் இருப்பதற்கு நாங்கள் மிகவும் பழகிவிட்டோம். எனவே எங்களை நாங்கள் அடையாளப்படுத்திக் கொள்வதில் அது ஒரு முக்கியக் காரணியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீரர் இங்கு பிறக்காவிட்டாலும், அவர்கள் ஒரு தீவிரமான தொடர்பை உணர்கிறார்கள் மற்றும் தங்களைக் குராசோவாவாசிகள் என்றே அடையாளப்படுத்துகிறார்கள்."


'பெரிய இதயம் கொண்ட சிறிய தீவு'

உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற, முழுமையான சுதந்திரம் இல்லாத 6 நாடுகளில் குராசோவும் ஒன்று.


ஏனென்றால், அவர்கள் தங்களது அண்டை நாடுகளான அருபா மற்றும் சின்ட் மார்டன் ஆகியவற்றுடன் சேர்ந்து நெதர்லாந்து ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே இன்னும் இருக்கிறார்கள்.


மற்ற நாடுகள் பிரிட்டனின் ஒரு பகுதியாக இருக்கும் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து - மற்றும் 1938 இல் தகுதி பெற்ற டச்சு கிழக்கு இந்தியத் தீவுகள் (இப்போது இந்தோனேசியா).


குராசோவாவில் பிறந்த அனைவரும் டச்சு பாஸ்போர்ட் வைத்துள்ளனர். 2010 வரை இது கரீபியன் தீவுகளின் கூட்டமைப்பான நெதர்லாந்து அண்டிலிஸின் ஒரு பகுதியாக இருந்தது.


அதற்குப் பிறகுதான் குராசோவாவிற்கு என்று சொந்தமாகத் தேசிய அணி உருவானது. இந்த அணி டச்சு அண்டிலிஸின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.


"இவ்வளவு பெரிய மேடையில் நாங்கள் குராசோவாவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முன்பு, பல தசாப்தங்களாக எங்களில் பெரும் பகுதியினர் டச்சு அணியின் தீவிர ரசிகர்களாக இருந்தனர்," என்று டி ஜாங் கூறினார். "ஆனால் இப்போது நாங்கள் குராசோவாவிற்குத்தான் முதலிடம் கொடுக்கிறோம்."


நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்தைச் சந்தித்தால் அது எதைக் குறிக்கும்?


கடந்த சீசனை வோலெண்டம் கிளப்பில் விளையாடி முடித்த ஜுனின்ஹோ பகுனா கூறுகையில்"அது நடந்தால், நான் 100 அல்ல, 200 அல்ல, நான் எப்போதும் கொடுப்பதை விட 1000% அதிகமாக என் உழைப்பைக் கொடுப்பேன்." என்றார்.


"நாங்கள் ஒரு சிறிய தீவுதான், ஆனால் எங்களிடம் பெரிய இதயம், நம்பிக்கை மற்றும் நிறைய திறமைகள் உள்ளன என்பதை உலகிற்குக் காட்ட விரும்புகிறோம்."


குராசோவாவை உலகக்கோப்பைக்கு அழைத்து வந்த அட்வகாட் 'அலை விளைவு'

குராசோவாவின் எஃப்ஏ தலைவர் மார்டினா தங்களது வெற்றிக்கு "இரண்டு விஷயங்களை" காரணமாகக் கூறுகிறார். அவை 2024-இல் புகழ்பெற்ற அட்வகாட்டின் வருகை மற்றும் அணிக்குச் சரியாக நிதியளிக்க முடிந்தது ஆகியவை ஆகும்.


"டிக் அட்வகாட் போன்ற ஒரு உயர்தர பயிற்சியாளர், ஒரு அலை போன்ற விளைவை உருவாக்குகிறார், அது ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறது," என்று அவர் கூறுகிறார்.


"ஜாலிக்காக விளையாடுவதற்குப் பதிலாக, வெற்றிக்கான முடிவுகளுக்காக விளையாட பழக வேண்டும் என்ற மனநிலையை அவர் உருவாக்கினார்."


48 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பைக்கு கான்காகாஃப் (Concacaf) பிரிவில் இருந்து முன்பை விட அதிகமான நாடுகள் தகுதி பெற்றாலும் (மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவை இணை நடத்துநர்களாக நேரடியாகத் தகுதி பெற்றன) குராசோவா தகுதிச் சுற்றில் 7 வெற்றிகள் மற்றும் 3 டிராக்களுடன் தோல்வியே அடையாமல் முன்னேறியது.


ஆனால் அட்வகாட் தங்களது தகுதியை உறுதி செய்த போட்டியான (ஜமைக்காவுக்கு எதிரான கோல் இல்லாத டிராவான ஆட்டம்) குடும்பக் காரணங்களால் தவறவிட்டார்.


ஹடர்ஸ்ஃபீல்ட், பார்ன்ஸ்லி மற்றும் பிளாக்பூல் அணிகளுக்காக விளையாடிய உதவி பயிற்சியாளர் டீன் கோர் அந்தப் போட்டிக்காக குராசோவா அணியை வழிநடத்தினார்.


"அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளது, ஏனென்றால் திடீரென்று தீவு மக்கள் அனைவரும் உற்றுநோக்கும் ஒரு விஷயத்திற்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள். நாங்கள் தோற்றிருந்தால், அது என் மேல் பழி வந்திருக்கும், அதுதான் மிகப்பெரிய அழுத்தம்." என அவர் பிபிசி வேர்ல்ட் சர்வீஸிடம் கூறினார்.


ஸ்வான்சீ அணியின் முன்னாள் வீரரான கென்ஜி கோர், டீன் கோரின் மகன் ஆவார். அவர் குராசோவா அணியில் ஒரு வீரராகவும் இருக்கிறார்.


பிரிட்டனில் வளர்ந்த 31 வயதான அவர், "குராசோவா வரலாற்றின் மிகப்பெரிய போட்டியை அவர் வழிநடத்துவதைப் பார்ப்பது, அதை அவருடன் வாழ்வது மற்றும் அவர் பயிற்சியாளராக இருக்கும்போது நான் மைதானத்தில் விளையாடுவது என்பது ஒரு தனித்துவமான சூழ்நிலை." என்றார்.


ஜுனினோ பகுனா மேலும் கூறுகையில் "டிக் அட்வகாட் எங்களுக்காகச் செய்த எல்லாவற்றிற்கும் நான் அவருக்குப் பெருமை சேர்க்கிறேன், ஏனென்றால் அவர் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் இறுதியில், நாம் இப்போது இருக்கும் இடத்திற்கு வருவதற்கு பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் இந்த வீரர்கள்தான்."


தனது நோய்வாய்ப்பட்ட மகளைக் கவனித்துக் கொள்வதற்காக அட்வகாட் பிப்ரவரி மாதம் பணியில் இருந்து விலகினார்.


அனுபவம் வாய்ந்த டச்சுக்காரரான ஃப்ரெட் ரட்டன் அவருக்குப் பதிலாக வந்தார். ஆனால் மார்ச் மாதத்தில் நடந்த இரண்டு போட்டிகளிலும் குராசோவா தோற்றதால் அட்வகாட்டை மீண்டும் கொண்டு வர வீரர்கள் மற்றும் ஸ்பான்சர்களிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


கடந்த மாதம் ரட்டன் பதவியிறங்கிய போது அந்தப் பிரச்னைகளை ஒப்புக்கொண்டார். அதன்பின் அட்வகாட் மீண்டும் திரும்பினார்.அவரது குடும்ப சூழ்நிலை இப்போது மேம்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.


பின்னர் அந்த அணி ஹாம்டன் பூங்காவில் (Hampden Park) ஸ்காட்லாந்திடம் 4-1 என்ற கணக்கில் தோற்றனர். ஆனால் பின்னர் தங்களது உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் அண்டை நாடான அருபாவை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.


"தொடக்கத்திலிருந்தே, இந்த போட்டிகளில், அவர்தான் தலைவராக இருந்துள்ளார்," என்று அவரது உதவியாளர் கோர் கூறினார்.


"வீரர்கள் அவரது குரலுக்கும், அவரது பாணிக்கும் பழகிவிட்டனர், மேலும் அவருடன் ஒரு சிறப்பு வழியில் ஒன்றாக வளர்ந்துள்ளனர்."


தீவு நீல நிறமாக மாறுகிறது'

குராசோவா, உலகக்கோப்பை கால்பந்துபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உலகக் கோப்பைத் தகுதி என்பது குராசோவாவின் வரலாற்றிலேயே மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்

டி ஜாங் அவர்களின் தகுதியை "இந்தத் தீவின் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு விஷயம்" என்று அழைத்தார். இது மேலும் சுற்றுலாவையும் முதலீட்டையும் கொண்டு வரும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.


"நாங்கள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற அந்த கடைசிப் போட்டியின் தாக்கத்தை நான் பார்த்தேன்," என்று அவர் கூறினார்.


"போக்குவரத்து அப்படியே நின்றுவிட்டது. அனைத்து கார்களும் சாலையில் நிறுத்தப்பட்டன, அனைவரும் தங்கள் காரில் இருந்து வெளியே வந்தனர். தேசிய அளவில் இவ்வளவு பெரிய ஒட்டுமொத்தக் கொண்டாட்டத்தை நான் பார்த்ததே இல்லை.


"வரவிருக்கும் போட்டிகளில் நாம் பார்க்கப் போவதற்கெல்லாம் இது ஒரு ஆரம்பம் என்று நான் நினைக்கிறேன். இங்குள்ள அனைத்து குராசோவாவாசிகளுடனும் சேர்ந்து போட்டிகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் இந்தத் தீவுக்கு வருகிறார்கள் என்று எனக்குத் தெரியும்."


"கட்டடங்களில் நீல அலை அலங்காரங்களை உங்களால் பார்க்க முடிகிறது. கொடிகளுடன் கூடிய கார்களைப் பார்க்க முடிகிறது, நீல நிறத்தில் சுற்றப்பட்ட கார்களைப் பார்க்க முடிகிறது. எனவே இது பெருமைக்கும் தேசத்தை உருவாக்குவதற்கும் ஒரு மிகப்பெரிய தூண்டுதலாகும்," என எஃப்எஃப்கே தலைவர் மார்டினா கூறினார்.


சிறந்த மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகளில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முயற்சிப்பதே தங்களது இலக்கு என்றும் அவர் மேலும் கூறினார்.


உலகக் கோப்பையில் விளையாடுவது தனது குடும்பத்திற்கும் தேசத்திற்கும் எவ்வளவு பெருமையைத் தரும் என்பதைப் பற்றி ஜுனினோ பகுனா பேசியுள்ளார்.


"நான் குராசோவாவிற்காக விளையாட முடிவு செய்த நாளில், என் அம்மாவும் அப்பாவும் குராசோவாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பெருமைப்பட்டனர்," என்று அவர் கூறினார்.


"நாங்கள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றபோது, அவர்கள் வாயடைத்துப் போயினர். தங்களது இரு மகன்களும் தாங்கள் பிறந்த தீவுக்காகக் கால்பந்தின் மிகப்பெரிய மேடையில் விளையாடுவதை அவர்களால் பார்க்க முடிந்தது."


"இது கோர் குடும்பத்திலும், குராசோவா உலகிலும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கதையாக இருக்கும்."

#யாழில் இருந்து இலங்கை தேசிய அணிக்கு தெரிவானார் #லூட்சி_றெஜினஸ்


தெற்காசிய நாடுகளிற்கிடையிலான Under-18 பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக யாழ்ப்பாணம்  

திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரியை சேர்ந்த மாணவி லூட்சி றெஜினஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.


இவ்வாறான தெற்காசியமட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமாகாண பாடசாலை மாணவி ஒருவர்  தேர்வு செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும்.


இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற போட்டியில் இந்தியாவுடன் மோதிய இலங்கை அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


குறித்த மாணவியின் பயிற்சியாளராக தனுஷ் ராஜசோபனா அவர்கள் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


வாழ்த்துகள்

உலக கோப்பை ⚽ போட்டியில் நடுவராக பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட

 Omar _க்கு‌ விசா மறுத்துள்ளது அமெரிக்கா!


அதற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம் அவர் சோமாலியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தான்!


~ அமெரிக்கா

உலகக்கோப்பையை நடத்துவதே..,

கால்பந்து-க்கு

உலக நாடுகள் இழைத்த துரோகம்!

நூருல் ஹுதா உமர்


ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி தனது விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. கொழும்பு சுகததாச விளையாட்டரங்க நீச்சல் தடாகத் தொகுதியில் நடைபெற்ற 17வது அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், கல்லூரியின் நீச்சல் அணி முதன்முறையாக பங்கேற்று குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.


கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்ட நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற மாணவராக எம்.எஸ்.எம். ராயீத் இடம்பிடித்துள்ளார். அவர் 50 மீற்றர் பின்நீச்சல் (Backstroke) போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், 50 மீற்றர் சுதந்திர நீச்சல் (Freestyle) போட்டியிலும் தகுதி நேரத்தைப் பதிவு செய்து மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


அதேவேளை, எம்.எஸ்.எம். ராஷித் 50 மீற்றர் பின் நீச்சல் மற்றும் 200 மீற்றர் தனிநபர் கலப்பு நீச்சல் (Individual Medley) போட்டிகளில் தகுதி நேரத்தை பதிவு செய்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எச்.எம். ஹம்தான், எம்.எஸ்.எம். ராஹிக், ஏ.எச். ஹுஸைபா, எம்.எச்.எம். ஹுமைத், எப். மஹ்தி, எம்.ஆர்.எம். ரஹீஷ், எம்.எஸ்.எம். ராஷித், எம்.எஸ்.எம். ராயீத் ஆகிய எட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். நீச்சல் அணி ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் போட்டியிட்டு கல்லூரியின் கீர்த்தியை உயர்த்தியுள்ளனர்.


இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு கல்லூரி அதிபர், நிர்வாகம், விளையாட்டுக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் முழு பாடசாலை சமூகமும் மாணவர்களுக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளன. “இது எமது கல்லூரியின் நீச்சல் விளையாட்டு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். இம்மாணவர்களின் அர்ப்பணிப்பும் முயற்சியும் எதிர்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளுக்கு வழிவகுக்கும்” என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


நூருல் ஹுதா உமர்


ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி தனது விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. கொழும்பு சுகததாச விளையாட்டரங்க நீச்சல் தடாகத் தொகுதியில் நடைபெற்ற 17வது அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், கல்லூரியின் நீச்சல் அணி முதன்முறையாக பங்கேற்று குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.


கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்ட நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற மாணவராக எம்.எஸ்.எம். ராயீத் இடம்பிடித்துள்ளார். அவர் 50 மீற்றர் பின்நீச்சல் (Backstroke) போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், 50 மீற்றர் சுதந்திர நீச்சல் (Freestyle) போட்டியிலும் தகுதி நேரத்தைப் பதிவு செய்து மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


அதேவேளை, எம்.எஸ்.எம். ராஷித் 50 மீற்றர் பின் நீச்சல் மற்றும் 200 மீற்றர் தனிநபர் கலப்பு நீச்சல் (Individual Medley) போட்டிகளில் தகுதி நேரத்தை பதிவு செய்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எச்.எம். ஹம்தான், எம்.எஸ்.எம். ராஹிக், ஏ.எச். ஹுஸைபா, எம்.எச்.எம். ஹுமைத், எப். மஹ்தி, எம்.ஆர்.எம். ரஹீஷ், எம்.எஸ்.எம். ராஷித், எம்.எஸ்.எம். ராயீத் ஆகிய எட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். நீச்சல் அணி ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் போட்டியிட்டு கல்லூரியின் கீர்த்தியை உயர்த்தியுள்ளனர்.


இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு கல்லூரி அதிபர், நிர்வாகம், விளையாட்டுக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் முழு பாடசாலை சமூகமும் மாணவர்களுக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளன. “இது எமது கல்லூரியின் நீச்சல் விளையாட்டு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். இம்மாணவர்களின் அர்ப்பணிப்பும் முயற்சியும் எதிர்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளுக்கு வழிவகுக்கும்” என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மகளிர் ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதியன்று இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ஆரம்பமாகவுள்ளது. 


இது குறித்து இங்கிலாந்தில் நடந்த இதன் அறிமுகக் கூட்டத்தில், ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


இக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த ரி20 உலகக் கோப்பை தொடர் மகளிர் கிரிக்கெட்டிற்கு ஒரு மைல்கல் எனவும் இதுவரை நடத்தப்பட்ட மகளிர் ரி20 உலகக் கோப்பை தொடர்களில் இது மிகவும் விறுவிறுப்பாக மற்றும் குறிக்கோளுடன் இருக்கும் என நம்புவதாக கூறினார். 


முன்னதாக இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுள்ளன. 


இருப்பினும் இதுவரை இடம்பெற்ற ரி20 உலக கோப்பையில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கம் செலுதித்ய நிலையில் 2010 முதல் 2023 வரை நடைபெற்ற போட்டிகளில் இதுவரை ஆறு முறை கோப்பையை கைப்பற்றி சாதனை செய்துள்ளது.


மேலும் முக்கியமாக 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் ஹர்ட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

 

பெரும்பாலும் இறுதிப் போ ட்டிகளில் அவுஸ்திரேலியா அணி இடம்பெறுகிறது. ஆயினும் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போ ட்டியில் அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்து, இங்கிலாந்து மகளிர் அணி கோப்பையை வென்றுள்ளது. 


இந்நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, 50 ஓவர் உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்த ரி20 கோப்பையையும் வெல்லும் தீவிர பயிற்சியிலுள்ளதாக தெரியவந்துள்ளது.



 நூருல் ஹுதா உமர்


ஹமீடியன்ஸ் 7-A-Side கால்பந்து சுற்றுப்போட்டி 2026 தொடர்பான ஊடக சந்திப்பும், அணிகளின் உத்தியோகபூர்வ ஜெர்சி அறிமுக நிகழ்வும் கொழும்பு ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியின் அல்-ஹாஜ் ஏ.ஹெச்.எம். பௌஸி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி அதிபர், போட்டியின் அனுசரணையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், அணித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் ஹமீதியன்ஸ் எப்.சி.நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

வரவேற்புரையாற்றிய போட்டிக் குழுத் தலைவர் மொஹமட் இம்ரான் ஹுசைன், இவ்வருடாந்த போட்டியின் நோக்கங்களை விளக்கினார். பழைய மாணவர்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நட்புறவையும் விளையாட்டின் ஊடாக வலுப்படுத்துவதோடு, தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்களிடையே கால்பந்து திறன்களை மேம்படுத்துவதே இதன் பிரதான இலக்காகும் என அவர் குறிப்பிட்டார்

நிகழ்வில் உரையாற்றிய ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி அதிபர் திருமதி ஷானியாதீன், கல்லூரியில் கால்பந்தாட்ட வளர்ச்சிக்காக ஹமீதியன்ஸ் எப்.சி. மேற்கொண்டு வரும் பணிகளை பாராட்டியதுடன், பாடசாலை விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்காக பழைய மாணவர்கள் வழங்கிவரும் பங்களிப்பையும் பாராட்டினார்

பழைய  மாணவர் சங்கத்தின் கல்விக் குழுத் தலைவர் அஸ்ரீன் ஸாஹித், எதிர்கால மாணவர் தலைமுறையை உருவாக்குவதில் பழைய மாணவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்

இவ்வாண்டுக்கான பிரதான அனுசரணையாளராக இணைந்துள்ள இலங்கையின் வளர்ந்து வரும் பயண சேவை நிறுவனமான TruRout, இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. இதன்போது, நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் முனாஸர் அவர்களால் உத்தியோகபூர்வ அனுசரணை காசோலை ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி அதிபருக்கும் ஹமீதியன்ஸ் எப்.சி. நிர்வாக உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது

நிகழ்வின் முக்கிய அம்சமாக, போட்டியில் பங்கேற்கும் அணிகளின் புதிய ஜெர்சிகள் அனுசரணையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், போட்டிக்கு ஆதரவு வழங்கிய அனைத்து அனுசரணையாளர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

 

#Ismai UvaizurRahman.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாத்தின் முக்கிய அடிப்படை கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்றிய பிறகு தங்களது வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், இதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் 'சுல்தான் ஆஃப் ஸ்விங்' என்று பிரபலமாக அழைக்கப்படுபவருமான வசீம் அக்ரம், ஒரு வைரல் வீடியோ காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதோடு இது குறித்து முடிவற்ற விவாதமும் கிளம்பியுள்ளது.


இந்த வீடியோவில், வசீம் அக்ரம் மினாவில் சாத்தான் மீது கல் எறிவதைக் காண முடிகிறது. இது 'ரமி' என்று அழைக்கப்படுகிறது.


ஆனால் வசீம் அக்ரம் சாத்தான் மீது கல் எறியக் கையாண்ட முறை சாதாரணமான ஒன்றாக இருக்கவில்லை. அவர் தனது பந்துவீச்சு பாணியில் இந்தச் செயலைச் செய்தார்.


கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளராக வசீம் அக்ரம் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தனது பந்துவீச்சு பாணியில் கல் எறிந்த அவரது இந்த விதம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


விளம்பரம்


ஒருபுறம் இது சுவாரசியமான விதம் என்று கூறப்பட்டாலும், மறுபுறம் சாத்தான் மீது கல் எறியும் இந்தச் செயல் தீவிரத்தன்மை, கண்ணியமான விதம் மற்றும் மரியாதையுடன் செய்யப்பட வேண்டும் என்று விமர்சனம் எழுந்தது. எனவே, பந்துவீச்சு பாணியில் கல் எறிய வேண்டிய அவசியம் இல்லை என பலரும் கூறினர்.


இந்த விவாதத்தில் வெளிவந்த எதிர்வினைகளில், சாத்தான் மீது கல் எறியும்போது வசீம் அக்ரமுக்குத் தனது கிரிக்கெட் காலம் நினைவுக்கு வந்திருக்கும் என்று பலர் கூறினர், அப்போது அவர் பெரிய பெரிய பேட்ஸ்மேன்களைத் தனது ஸ்விங் பந்துவீச்சால் நிலைகுலையச் செய்தார். மேலும் அவர் ரமியின் இந்தச் செயலிலும் அதே பாணியைக் கையாண்டுவிட்டார் என்றனர்.


சமூக ஊடகங்களில் சில எதிர்வினைகள், ஹஜ் என்பது பொழுதுபோக்கு அல்ல, இதில் மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றவாறு இருந்தன. வசீம் அக்ரமின் இந்தச் செயலை ஆதரிப்பவர்கள், கல் எறிவதன் நோக்கம் எதுவோ, அதை வசீம் அக்ரம் நிறைவேற்றிவிட்டார் என்று பதிலடி கொடுத்தனர்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

சென்னை மாநகராட்சி, பள்ளி நிகழ்ச்சி, தவெக எம்எல்ஏ பல்லவி, திமுக மேயர் பிரியா

தன்னை அவமதித்ததாக கூறும் தவெக எம்எல்ஏ பல்லவி, மறுக்கும் மேயர் பிரியா - பள்ளி நிகழ்ச்சியில் என்ன நடந்தது?

Mother, Children, Bond, Naxalite, Pregnancy

'குழந்தை இல்லையே என ஏங்கிய காலம் உண்டு' - கருத்தடை செய்துகொண்ட முன்னாள் நக்சல்கள் குழந்தை பெறுவது எப்படி?

ஸ்போர்ட்ஸ் டிராமா, ராம் சரண், டோலிவுட், திரைப்படம், பெத்தி திரைப்படம், பெத்தி

பெத்தி விமர்சனம்: 2 ஆண்டு உழைப்புக்கு பிறகு பெரும் ஹிட் கொடுத்தாரா ராம் சரண்?

உடலில் வாயு வெளியேறும்போது துர்நாற்றம் வீசுவது ஏன்? சரிசெய்ய முடியுமா?

நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?

End of அதிகம் படிக்கப்பட்டது

Play video, "மினாவில் சாத்தான் மீது கல் எறியும் வசீம் அக்ரம்", கால அளவு 3,51

03:51


காணொளிக் குறிப்பு,

பாகிஸ்தான் உலமா கவுன்சில் என்ன சொல்கிறது?

பாகிஸ்தான் உலமா கவுன்சிலின் தலைவரான ஆலிமா தாஹிர் அஷ்ரஃபி இது பற்றிக் கூறும்போது, "வசீம் அக்ரமின் அனைத்து ஹஜ் வழிபாடுகளையும் விட்டுவிட்டு, எல்லாரும் அவரது பந்துவீச்சு பாணியில் சாத்தான் மீது கல் எறிந்ததை மட்டுமே விமர்சிக்க விரும்புகிறார்கள், ஏதோ அவர் ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டது போல. இதை கூறுகிறார்கள்" என்கிறார்.


"ஹஜ் என்பது ஒரு தீவிரமான செயல் மற்றும் ரமி நேரத்திலும் தீவிரத்தன்மை இருக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், ஒரு நபர் தடையோ அல்லது அதனால் எந்தப் பாவமும் ஏற்படாத ஒரு செயலைச் செய்திருக்கும்போது, இதுபோன்ற விமர்சனங்கள் எந்தப் பொருளும் அற்றவை."


"ஒருவேளை தவறு ஏதேனும் செய்திருந்தாலும் கூட, அதைச் சீர்திருத்தும் முறை இதுவல்ல, இதைத்தான் பலர் கையாண்டுள்ளனர். மற்றவர்களின் சிறிய சிறிய தவறுகளையும் குறைபாடுகளையும் நாம் மன்னிக்க அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக" என்று கூறுகிறார் அஷ்ரஃபி.


இந்த வீடியோ உருவான கதை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த ஹஜ் பயணத்தில் வசீம் அக்ரமுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மற்றொரு முன்னாள் கேப்டனான மிஸ்பா-உல்-ஹக் மற்றும் பிரபல விளையாட்டுத் தொகுப்பாளர் ஃபகர் ஆலம் ஆகியோரும் இருந்தனர்.


ஃபகர் ஆலம் இந்த வீடியோவைப் பற்றி பிபிசி ஹிந்தியிடம் பேசும்போது, "நாங்கள் மூவரும் அதிகாலையிலேயே ரமிக்காகச் சென்றுவிட்டோம், அந்த நேரத்தில் அதிகக் கூட்டமும் இல்லை. நாங்கள் மிகுந்த நிம்மதியுடனும் அமைதியுடனும் சாத்தான் மீது கல் எறிந்தோம். இந்த நேரத்தில், மக்கள் பொதுவான முறையிலிருந்து மாறியும் கல் எறிந்துள்ளனர் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது," என்கிறார்.


"யாரோ துப்பாக்கியால் சுடுவது போன்ற பாணியில் கல் எறிவதையும், யாரோ ஓடி வந்து கல் எறிவதையும் போன்ற பல வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் ஒவ்வொரு முஸ்லிமின் ஆர்வமும் உணர்வும் மிகவும் நிறைந்து காணப்படும். நான் தான் வசீம் அக்ரமிடம், நான் வீடியோ எடுப்பதற்காக நீங்கள் உங்கள் பந்துவீச்சு பாணியில் கல் எறியுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன்."


ஃபகர் ஆலம் மேலும் கூறுகையில், "வசீம் அக்ரம் முதலில் நன்றாக இருக்காது, மக்கள் என்ன சொல்வார்கள் என்று கூறினார். ஆனால் நான் அவரிடம், இதன் நோக்கம் எந்த வகையான விளம்பரமும் இல்லை என்று கூறினேன். நமது துணைக்கண்டத்தில் உங்களுக்கு ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இருப்பதால், அவர்களுக்கு இந்த விஷயம் வித்தியாசமாகத் தெரியும் மற்றும் அவர்கள் இதனால் நிச்சயம் ஈர்க்கப்படுவார்கள் என்றேன். நான் அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது, அதன்பிறகு நான் இந்த வீடியோவை எடுத்தேன்" என்றார்.


"இதை பெரும்பாலான மக்கள் மிகவும் விரும்பினர். சில தரப்பிலிருந்து ஆட்சேபனைகள் வந்தன, அதற்கு நான் என்ன சொல்வேன் என்றால் அல்லாஹ் அனைவரின் இதயங்களையும் பெரிதாக்கி, அவற்றில் வெளிச்சத்தைப் பாய்ச்சட்டும். மனிதனால் தவறு நடக்கும் என்பதை அறிந்த அல்லாஹ், அதை மன்னிப்பார். அவன் தன் அடியாரின் எண்ணத்தையும் நன்கு அறிவான், அவனே தீர்ப்பு வழங்கும் ஆற்றல் கொண்டவன். தீர்ப்புகளைச் சொல்லிக் கொண்டு திரிய பூமியில் யாரும் இல்லை. இந்த வீடியோவின் பின்னணியில் இருந்த எண்ணத்தையும் அல்லாஹ் நன்றாக அறிவார். வசீம் அக்ரமை இந்த பாணியில் பார்த்துவிட்டு, பல மக்கள் ஹஜ்ஜின் பக்கம் ஈர்க்கப்படுவார்கள் என்பதுதான் இந்த வீடியோவின் நோக்கமாக இருந்தது."


ஹஜ் எண்ணம் எப்படி வந்தது?

மினாவில் வசீம் அக்ரம் பந்துவீச்சு பாணியில் சைத்தான் மீது கல் எறிந்ததற்காக அவர் விமர்சிக்கப்படுகிறார்.l

படக்குறிப்பு,மினாவில் வசீம் அக்ரம் பந்துவீச்சு பாணியில் சாத்தான் மீது கல் எறிந்ததற்காக அவர் விமர்சிக்கப்படுகிறார்.

"இந்த ஹஜ்ஜில் எங்களுடன் இருந்த என் நண்பர் உஸ்மான், மூன்று நான்கு ஆண்டுகளாக என்னிடம் ஹஜ் செய்யுமாறு கூறிக்கொண்டிருந்தார். நான் அவரிடம், நேரம் வரும்போதெல்லாம் நான் நிச்சயம் செய்வேன் என்று கூறி வந்தேன். மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு மிஸ்பா, ஃபகர் மற்றும் நான் இந்த முறை ஹஜ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். எனக்கு இப்போது அறுபது வயதாகப் போகிறது என்பதால், நான் இந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியெடுத்தேன்." என்று வசீம் அக்ரம் கூறுகிறார்.


"இது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. கடினமாக இருந்தபோதிலும், ஹஜ் என்பதே சிரமங்களைச் சகித்துக் கொள்வதன் பெயர் தான். நண்பர்களுடன் ஹஜ் செய்வதில் ஒரு தனி மகிழ்ச்சி இருக்கிறது. நீங்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் நிறையப் புரிந்து கொள்கிறீர்கள் மற்றும் கற்றுக் கொள்கிறீர்கள்," என்கிறார் வசீம் அக்ரம்.


வசீம் அக்ரம் ஹஜ் கடமையை முடித்த பிறகு தனது எக்ஸ் கணக்கிலும், தன்னைப்போன்ற பல சகோதர சகோதரிகளும் இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்ளத் துணிச்சல் பெற்று, ஹஜ்ஜின் பாக்கியத்தைப் பெற வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக எழுதினார்.


வசீம் அக்ரமின் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது, அதில் அவர் மதினாவில் முஹம்மது நபியின் புனித ரௌசா முன்பு நின்று கொண்டிருக்கிறார். அவரது கண்களில் கண்ணீர் வருவது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அனைவரும், இந்த இடம் அப்படிப்பட்டது தான், யாரும் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது மற்றும் கண்களில் கண்ணீர் வருவது இயல்பான விஷயம் என்று கருத்து தெரிவித்தனர்.


'ஸ்பான்சர் செய்யப்பட்ட ஹஜ் அல்ல'

வசீம் அக்ரம், மிஸ்பா-உல்-ஹக் மற்றும் ஃபகர் ஆலம் ஆகியோர் இந்த ஹஜ்ஜின் போது, அவர்களின் இந்த ஹஜ் பணம் செலுத்தப்பட்ட அல்லது ஸ்பான்சர் செய்யப்பட்டது என்ற பேச்சுகளையும் கேட்க நேரிட்டது.


ஃபகர் ஆலம் தனது ஒரு வீடியோவில் இதை மறுத்து, "அல்லாஹ்வின் பேரருளால் நாங்கள் மூவரும் இந்த ஹஜ்ஜை எங்கள் சொந்தச் செலவில் செய்தோம். அல்லாஹ் எங்களுக்கு நிறையக் கொடுத்துள்ளான், எங்களுக்கு ஏன் ஒரு ஸ்பான்சர் தேவைப்படப் போகிறது" என்று கூறினார்.





4 வருடங்​களுக்கு ஒரு முறை நடை​பெறும் உலகக் கோப்பை கால்பந்து திரு​விழா வரும் 11ஆம் திகதி கோலாகல​மாக தொடங்​க​வுள்​ளது.


கால்பந்து விளை​யாட்​டில் மாபெரும் திரு​விழா என்று அழைக்கப்படும் ஃபிஃபா (உலக கால்​பந்து சம்​மேளனம்) நடத்​தும் கால்​பந்து உலகக் கோப்பை வரும் 11ஆம் திகதி தொடங்கி ஜூலை 19ஆம் திகதி வரை மிக​வும் பிர​ம்மாண்​ட​மான முறை​யில் நடை​பெறவுள்​ளது. 


ஒலிம்​பிக் போட்​டிகளைப் போலவே மிக பிரம்மாண்ட​மான முறை​யில் நடை​பெறும் போட்​டிகளில் இது முக்கி​யத்​து​வம் வாய்ந்த போட்​டி​யாகக் கருதப்​படு​கிறது.


வழக்​கத்​துக்கு மாறாக இந்த முறை 32 அணி​களுக்​குப் பதிலாக மொத்​தம் 48 அணி​கள் பங்​கேற்​கும் இந்த உலகக் கோப்பை கால்​பந்து திரு​விழாவை அமெரிக்​கா, கனடா, மெக்​ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்​துகின்​றன. 


3 நாடு​களில் மொத்​தம் 16 மைதானங்​களில் போட்டி நடை​பெறும். போட்​டிகள் இந்​திய நேரப்​படி நள்​ளிரவு 12.30 மணி, அதி​காலை 3.30 மணி, காலை 6.30 மணி, 9.30 மணி ஆகிய நேரங்​களில் நடை​பெற உள்​ளன.


குழு சுற்​றின் முடி​வில், ஒவ்​வொரு குரூப்​பிலும் முதல் 2 இடங்​கள் பிடிக்​கும் அணி​கள் மற்​றும் குழுக்களுக்கிடையில் இடம்பெறும் 8 அணி​களும் அடுத்த சுற்​றுக்கு தகுதி பெறும். அதன்​பின்​னர் கால், அரை, இறு​திச் சுற்​றுப் போட்​டிகள் இடம்பெறும். 


104 போட்டிகள்


மொத்​தம் 104 ஆட்​டம், 16 நகரங்​களில் மிக பிர​மாண்​ட​மாக அமைந்​துள்ள மைதானங்​களில் விளை​யாடப்​பட​வுள்​ளன. இறு​திப் போட்​டி, ஈஸ்ட் ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள ‘மெட்​லைஃப் ஸ்டேடி​யத்​தில்’ நடை​பெறும். 


இத்​தொடர் 16 வெவ்​வேறு நகரங்​களில் அமைந்​துள்ள 16 மைதானங்​களில் நடை​பெறவுள்​ளது. 


அமெரிக்​கா​வில் அமைந்​துள்ள 11 மைதானங்​களில் ஒன்​றான, நியூ ஜெர்​சி​யின் ஈஸ்ட் ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள மெட்​லைஃப் மைதானம் 82,500 பார்​வை​யாளர்​கள் அமரும் திறன் கொண்​டது.


கலி​போர்​னி​யா​வின் இங்​கிள்​வுட்​டில் அமைந்​துள்ள சோஃபி மைதானத்​தில் 70,240 பேரும், டெக்​சாஸின் ஆர்​லிங்​டனில் உள்ள ஏடி அன்ட் டி மைதானத்​தில் 80,000 பேரும், டெக்​சாஸின் ஹூஸ்டனில் உள்ள என்​ஆர்ஜி மைதானத்​தில் 72,220 பேரும், மிசவுரி​யின் கன்​சாஸ் நகரில் உள்ள ஏரோஹெட் மைதானத்​தில் 76,416 பேரும், ஜோர்​ஜி​யா​வின் அட்​லாண்​டா​வில் உள்ள மெர்​சிடிஸ் பென்ஸ் மைதானத்​தில் 71,000 பேரும் ரசிக்கலாம்.


மேலும், ஃபுளோரி​டா​வின் மியாமி கார்டன்ஸில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்​தில் 64,767 பேரும், கலிபோர்​னி​யா​வின் சாண்டா கிளா​ரா​வில் உள்ள லெவிஸ் மைதானத்​தில் 68,500 பேரும் பென்​சில்​வேனி​யா​வின் பிலடெல்பியா​வில் உள்ள லிங்​கன் ஃபை​னான்​சி​யல் ஃபீல்ட் மைதானத்​தில் 69,796 பேரும் வாஷிங்​டனின் சியாட்​டிலில் உள்ள லூமன் ஃபீல்ட் மைதானத்​தில் 68,740 பேரும், மாசாசூசெட்​ஸின் ஃபாக்​ஸ்​பரோ​வில் உள்ள ஜில்​லெட் மைதானத்​தில் 65,878 பேரும் போட்​டியை ரசிக்​கலாம்.


கனடா நாட்​டில் 2 மைதானங்​களில் போட்​டிகள் நடை​பெறும். 


பிரிட்​டிஷ் கொலம்​பி​யா​வின் வான்​கூவரில் அமைந்​துள்ள பிசி பிளேஸ் மைதானத்​தில் 54,500 பேரும், டொராண்​டோ​வில் உள்ள பிஎம்ஓ ஃபீல்ட் மைதானத்​தில் 45,736 பேரும் அமர்ந்து போட்​டியைக் கண்​டு​களிக்​கலாம். 


மெக்​ஸிகோ​வில், எஸ்​டாடியோ அஸ்​டெகா மைதானத்​தி​லும், (87,523 இருக்​கைகள்), குவாடலஜா​ரா​வில் உள்ள எஸ்​டாடியோ அக்​ரான் மைதானத்​தி​லும் (49,850 இருக்​கைகள்), மான்​டோரி​யில் உள்ள எஸ்டாடியா பிபி​விஏ மைதானத்​தி​லும் (53,500 இருக்​கைகள்​) போட்​டிகள்​ நடை​பெறும்​.


குழுவில் இடம்பெற்றுள்ள அணிகள் விவரம்


குழு ‘ஏ’: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, செக் குடியரசு


குழு ‘பி‘: கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா, கட்டார், சுவிட்சர்லாந்து


குழு‘சி’: பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்கொட்லாந்து


குழு ‘டி’: அமெரிக்கா, பராகுவே, அவுஸ்திரேலியா, துருக்கி


குழு ‘இ‘: ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வாடோர்


குழு ‘எஃப்: நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், துனிசியா


குழு ‘ஜி’: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து


குழு ‘ஹெச்’: ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே


குழு ‘ஐ’: பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே


குழு ‘ஜே’: அர்ஜெண்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்


குழு ‘கே’: போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா


குழு ‘எல்’: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.