Showing posts with label sports. Show all posts

 


நூருல் ஹுதா உமர்


07 வது  அகில இலங்கை திறந்த முதுநிலைகள் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் (07 th Open Masters Athletics Championship) போட்டி நிகழ்ச்சிகள் 2025, மார்ச் 07,08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நிட்டம்புவ வது பிடிவல  சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டி நிகழ்ச்சிகளில் ௧ல்முனை ௧ல்வி வலயத்துக்குட்பட்ட மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் கடமையாற்றும் சிரேஷ்ட உடற்௧ல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் அவர்கள் 100 மீட்டர் தடை தாண்டுதல் (Hurdles) மற்றும் உயரம் பாய்தல் (High Jump) ஆகிய போட்டி௧ளில் பங்கேற்று வெள்ளி மற்றும் வெண்௧ல பத௧்௧ங்௧ளைப் பெற்று ௧ல்முனை ௧ல்வி வலயத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது சேவை காலத்தில் கடமையாற்றி பாடசாலைகளில் விளையாட்டு துறை, இணைப்பாடவிதானம், இல்ல விளையாட்டுப்போட்டி, வலய, மாகாண, தேசிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகளுக்கு மேலதிக பயிற்சி, ஆலோசனைகளை வழங்கி பல வெற்றிகளை பெற்று கொடுப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்படுகின்ற பல் துறை ஆளுமை கொண்ட எமது கல்லூரியின் சிரேஷ்ட உடற்௧ல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் அவர்கள் வரலாற்று சாதனையை பாராட்டி கெளரவிப்பதில் பாடசாலை சமூகம் பெருமிதம் கொள்கிறது என கல்லூரி முதல்வர் ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ் தெரிவித்துள்ளார்.

 

இது உண்மையில் எங்களுக்கு மிகப்பெரிய, மிகப்பெரிய மைல்கல். இந்த வெற்றி மூலம் நாங்கள் எப்படிப்பட்ட அணி என்பதை வெளிப்படுத்தியுள்ளோம். ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில்கூட தோற்காத நாங்கள் இறுதிப்போட்டியில் தோற்றோம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், டி20 உலகக் கோப்பையில் ஒருபோட்டியில் கூட தோற்காமல், கோப்பையை வென்றோம். அதேபோல சாம்பியன்ஸ் டிராபியிலும் ஒரு போட்டியில்கூட தோற்காமல் கோப்பையை வென்றுள்ளோம்"

இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனை படைத்த போது உற்சாகத்தில் கேப்டன் ரோஹித் சர்மா பேசியது.

 

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நாணய சுழற்சியில் அதிக தோல்விகளை சந்தித்த தலைவர் என்ற மோசமான சாதனையை பிரையன் லாராவுடன் சமன் செய்தார் ரோஹித் ஷர்மா!.

 


(வி.ரி.சகாதேவராஜா)


 காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய 65 வருட கால சரித்திரத்தில், முதலாவது  இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (8) சனிக்கிழமை வித்தியாலய அதிபர் சீ.திருக்குமார் தலைமையில் விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம அதிதியாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம் எச் எம்.ஜாபீர் கலந்து சிறப்பித்தார்.

கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன், பிரதிக் கல்விப் பணிப்பாளரும் காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளருமான ஆ.சஞ்சீவன் , ஓய்வு நிலை காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஜே.டேவிட், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட அதிபர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக ஒஸ்கார் வழங்கிய சிறுவர் பாண்ட் வாத்தியம் முதல்தடவையாக இசைக்க அதிதிகள் வரவேற்கப்பட்டார்கள்.

கன்னி விளையாட்டு போட்டியில் விவேகானந்த இல்லம் விபுலானந்தா இல்லம் ஆகிய இரு இல்லங்கள் ஆசிரியர்களான உதயநாதன் மற்றும் பாஸ்கரன் தலைமையில் பங்கேற்றன.

65வருட வரலாற்றில் முதல் முறையாக இடம்பெற்ற முதல் விளையாட்டு போட்டியில் விவேகானந்த இல்லம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. 

இல்ல ஆசிரியர்கள் இல்லத் தலைவர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு என்பதை முடிவு செய்ய நாளை துபையில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.


இரு அணிகளுமே ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில்தான் கடந்த காலங்களில் ஐசிசி கிரிக்கெட் பயணத்தைக் கடந்துள்ளனர். இந்த சாம்பியன்ஸ் தொடருக்கு முன்பாக இந்திய அணி மீதும், ரோஹித் சர்மா மற்றும் கோலி மீதும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.


ஆனால், அவை அனைத்தும் போட்டித் தொடர் முடியும் தருவாயில் கரைந்துவிட்டன. இதுவரை 3 லீக், அரையிறுதி என 4 போட்டிகளிலும் வென்று இந்திய அணி வீறுநடை போடுகிறது. லீக் சுற்றில் இந்திய அணியிடம் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தாலும் மற்ற போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.



மறக்க முடியாத 2000

நியூசிலாந்தும், இந்தியாவும், 25 ஆண்டுகளுக்கு முன்பு 2000ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோதின. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 265 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி, இரண்டு பந்துகள் மிச்சமிருந்தபோது இலக்கை எட்டி, இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


இப்போது மீண்டும் அதே நியூசிலாந்து அணியுடன் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி 25 ஆண்டுகளுக்குப் பின் மோதுகிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்த போட்டியை இந்திய அணி பயன்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


40 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியைக் காண ரசிகர்கள் மத்தியில் அதீத ஆர்வம் காணப்படுகிறது. துபை கிரிக்கெட் நிர்வாகம் டிக்கெட் விற்பனையைத் தொடங்கிய 40 நிமிடங்களில் மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.


ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்சம் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 25 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய அரங்கில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகிவிட்டதால், அரங்கு நிறைந்து ரசிகர்கள் ஆட்டத்தை ரசிப்பார்கள்



ஐசிசி தொடரில் யார் ஆதிக்கம்?

கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 86 ஐசிசி போட்டிகளில் பங்கேற்று அதில் 70 போட்டிகளில் வென்றுள்ளது. அடுத்த இடத்தில் தலா 49 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. 3 அணிகளுமே தலா 77 போட்டிகளில் விளையாடியுள்ளன.


2011-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்துள்ள 14 ஐசிசி போட்டித்தொடர்களில் 12 முறை இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 4 முறை அரையிறுதியிலும், 5 முறை இறுதிப்போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. 3 முறை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.


நியூசிலாந்து அணியும் ஐசிசி தொடர்களில் நிலையாக, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது. 8 முறை நாக்அவுட் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, 4 முறை அரையிறுதியிலும் 3 முறை இறுதிப்போட்டியிலும் தோற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியனானது.



சுழற்பந்துவீச்சு பலம்

இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சு பலமாக இருக்கிறது. இந்திய அணியில் மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, ஜடேஜா, அக்ஸர் படேல், ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என வெவ்வேறு கோணங்களில் பந்துவீசக் கூடியவீரர்கள் உள்ளனர். நியூசிலாந்து அணியில் சான்ட்னர், பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திரா, பிலிப்ஸ் என 4 சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.


இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கியதிலிருந்து துபையை விட்டு வேறு எங்கும் விளையாடவில்லை. ஆனால் நியூசிலாந்து அணியோ பாகிஸ்தான், துபை என இரு இடங்களிலும் மாறி, மாறி விளையாடிவிட்டது.


துபை மைதானத்தை நன்கு அறிந்திருப்பது இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறது. இதுவரை 4 போட்டிகளில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


இந்திய அணிக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போல் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


நியூசிலாந்து அணியில் கான்வே, வில் யங், சான்ட்னர், ஹென்றி ஆகிய 4 முக்கிய வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்,


இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிபட மூலாதாரம்,Getty Images

ரோஹித், கோலி இருவரும் மீண்டும் சாதிப்பார்களா?

இந்திய அணியில் உள்ள வீரர்கள் வெற்றிக்கு பலமுறை பங்களிப்பு செய்துள்ளார்கள் என்றாலும், விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் மற்றவர்களை விஞ்சி நிற்கிறார்கள்.


2023 உலகக் கோப்பைத் தொடரில் 765 ரன்கள் குவித்து கோலி சாதனை படைத்தார். சாம்பியன்ஸ் டிராபியில் கெயில் சாதனையான 791 ரன்களை முறியடிக்க கோலிக்கு இன்னும் 46 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.


ரோஹித் சர்மா ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் 7 சதங்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு பலமுறை உதவியுள்ளார். இதில் 5 சதங்கள் 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா அடித்தவை.


டி20 உலகக் கோப்பைத்தொடரில் 50 சிக்ஸர்களை ரோஹித் விளாசியுள்ளார். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை ரோஹித் பெரிதாக ரன்களைக் குவிக்கவில்லை. ஒருவேளை இன்று நடைபெறும் ஆட்டத்தில் ரோஹித் விஸ்வரூமெடுத்தால் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டும்.



சாம்பியன்ஸ் டிராபியில் ஜடேஜா அதிகபட்சமாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், தங்கப்பந்தையும் ஜடேஜா வென்றார் என்பதால் இந்த முறையும் இவரின் ஆட்டம் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது.


கடந்த 2023 உலகக் கோப்பைத் தொடரில் பாதியில் இருந்து ஆட்டங்களில் பங்கேற்ற ஷமி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இந்த 4 பேரும் இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கக் கூடியவர்கள்.


'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?

5 மார்ச் 2025

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்தியா - 14 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறிய கனவு

4 மார்ச் 2025

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிபட மூலாதாரம்,Getty Images

கோலியும் லெக் ஸ்பின்னும்

விராட் கோலி சமீபகாலமாக லெக் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின்னுக்கு தடுமாறுகிறார், திணறுகிறார் என்றால் கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறுப்பதற்கில்லை. 2024 தொடக்கத்தில் இருந்து ஒருநாள் போட்டிகளி்ல் கோலி 5 முறை லெக் ஸ்பின்னர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்துள்ளார். லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலி 48 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே வைத்துள்ளார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கூட கோலி சுழற்பந்துவீச்சை பெரிதாக அடித்தாடவில்லை. அவர் ஆடம் ஸம்பாவுக்கு எதிராக 24 பந்துகளில் 23 ரன்களும், தன்வீர் சங்கா பந்துவீச்சில் 12 பந்துகளில் 9 ரன்களும் சேர்த்தார்.


தன் மீதான விமர்சனங்களுக்கு கோலி, இந்தத் தொடரில் ஒரு சதம், 84 ரன்கள் சேர்த்து பதில் அளித்துள்ளார். இருப்பினும் கோலி சுழற்பந்துவீச்சுக்கு திணறுவார் என்ற சந்தேக ஆயுதத்தை நியூசிலாந்து சாதகமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.


ஆபத்தான நியூஸி. வீரர்கள்

நியூசிலாந்து அணி தனது சமீப வெற்றிகளில் வில்லியம்ஸன் இல்லாமல் கடந்து வந்திருக்க முடியாது. அந்த அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக அவர் கருதப்படுகிறார். ஐசிசி தொடர்களில் நியூசிலாந்தின் 6-வது பைனலில் வில்லியம்ஸன் விளையாடி வருகிறார்.


ஐசிசி வெள்ளைப் பந்துப் போட்டிகளில் வில்லியம்ஸன் போல் எந்த நியூசிலாந்து வீரரும் அதிக ரன்களைச் சேர்த்தது இல்லை. 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பைனல் வரை செல்லும்போது அதிக ரன்களை சேர்த்த வீரராக வில்லியம்ஸன் இருந்தார்.


அதேபோல மிட்ஷெல் சான்ட்னர் முதல்முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தலைமை ஏற்று அணியை வழிநடத்துகிறார். கடந்த 10 ஆண்டுகளில் டேனியல் வெட்டோரிக்குப் பின், நியூசிலாந்துக்கு கிடைத்த சிறந்த சுழற்பந்துவீச்சாளராக சான்ட்னர் கருதப்படுகிறார்.


2016-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய சான்ட்னர், அரையிறுதிவரை செல்ல உதவினார். இந்த சாம்பியன்ஸ் டிராபியிலும் இதுவரை 7 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.


ஹென்றியும் கடந்த 2019 உலக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் நியூசிலாந்து அணிக்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ளார். 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு ஹென்றி தொடக்கத்தில் வீழ்த்திய 2 விக்கெட்டுகளே முக்கிய காரணம். நடப்பு சாம்பியன்ஸ் டிராபியிலும் 10 விக்கெட்டுகளுடன் ஹென்றி முன்னணியில் இருக்கிறார்.


இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிபட மூலாதாரம்,Getty Images

இந்தியா - பாகிஸ்தான் 'ஆயுதமில்லா போரை' இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது எது? ஒரு பகுப்பாய்வு

26 பிப்ரவரி 2025

பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மிதாலி ராஜ் - இவர் யார்?

20 பிப்ரவரி 2025

ஹென்றி விளையாடுவாரா?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி தோள்பட்டை வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.


தோள்பட்டை காயத்திலிருந்து ஹென்றி முழுமையாக குணமாகவில்லை எனத் தெரிகிறது. நியூசிலாந்து அணி நிர்வாகமும் ஹென்றி உடல்நிலை குறித்து எதுவும் பேசாமல் கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.


நடப்புத் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ஹென்றி ஒருவேளை பந்துவீச முடியாமல், விளையாடாவிட்டால் இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.


இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிபட மூலாதாரம்,Getty Images

ஆடுகளம் எப்படி?

அரையிறுதி ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே புதிய ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டன. துபை ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு ஓரளவு ஒத்துழைக்கும் ஆனால், சிறப்பாக இருக்கும என்று கூற இயலாது.


துபாய் ஆடுகளங்கள் பெரும்பாலும் முதல் 10 ஓவர்கள் வேகப்பந்துவீச்சுக்கும், அதன்பின் சுழற்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும், நடுவரிசை ஓவர்களில் ஆடுகளம் மெதுவாகிவிடுவதால் ஸ்கோர் செய்ய பேட்டர்களுக்கு கடினமாக இருக்கும்.


இரவில் பனியின் தாக்கம் இருக்காது என்பதால், பந்துவீசுவதில் சிரமம் இருக்காது. இதனால், சேஸிங் செய்யும் அணி ரன் சேர்க்க போராட வேண்டியதிருக்கும். டாஸ் வெல்லும் அணி குறைந்தபட்சம் 270 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டால் வெற்றி எளிதாகும்.

 


ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி 3வது முறையாக தகுதி பெற்றுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி 3வது முறையாக தகுதி பெற்றுள்ளது.

2வது முறை மோதல்

சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில் இந்திய அணியை 2வது முறையாக நியூசிலாந்து அணி சந்திக்கிறது. ஏற்கெனவே 2000ம் ஆண்டில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நினைவிருக்கும். அதன்பின், 25 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியை ஃபைனலில் நியூசிலாந்து சந்திக்கிறது.


ஆனால், 2009ம் ஆண்டில் 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இப்போது, 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராஃபிக்கு தகுதி பெற்றுள்ளது.


7-வது ஐசிசி ஃபைனல்

ஒட்டுமொத்தத்தில் ஐசிசி ஒருநாள் ஃபார்மெட்டில் நியூசிலாந்து அணி பங்கேற்கும் 5வது இறுதிப்போட்டியாகும். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 2015, 2019 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000, 2009, 2025 ஆகிய ஆண்டுகளிலும், டி20 உலகக் கோப்பையில் 2021ம் ஆண்டில் இறுதிப்போட்டியிலும், 2021ம் ஆண்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் பங்கேற்றது.


நியூசிலாந்து அணி இதுவரை ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000-ம் ஆண்டிலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் மட்டும்தான் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலுக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

 


( வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 
 125ஆவது ஆண்டு நிறைவினை  சிறப்பிக்கும் வகையில்  இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக நேற்று  (6) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது .

 பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் யாவும்  பாடசாலையின் அதிபர் அருட்சகோ.எஸ்.இ.றெஜினோல்ட் FSC  தலைமையில் நடைபெற்றது .

நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்எஸ்.சஹதுல் நஜீம்
கலந்து சிறப்பித்தார்.

மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் இமனுவல் இல்லம் முதலிடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடியது.

டொரதியா இல்லம் இரண்டாம் இடத்தையும், மத்தியூ இல்லம் மூன்றாம் இடத்தையும், மேபில் இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டது .

அணி நடை மற்றும் உடற்பயிற்சி கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்வுகள் பலரையும் கவர்ந்தன.

போட்டிகள் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக  வடிவமைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

  


(வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின்  
75ஆவது ஆண்டு நிறைவினை  சிறப்பிக்கும் வகையில்  இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக நேற்று  (7) வியாழக்கிழமை நடைபெற்றது .

ஆறு ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் யாவும்  பாடசாலையின் அதிபர்  ம.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது .

நிகழ்வில் பிரதம அதிதியான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் , 
கௌரவ அதிதியான கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்எச்எம்.ஜாபீர் 
ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.


மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் மருதம் இல்லம் முதலிடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடியது.

முல்லை இல்லம் இரண்டாம் இடத்தையும்,  குறிஞ்சி இல்லம் மூன்றாம் இடத்தையும்  பெற்றுக் கொண்டது .

அணி நடை மற்றும் உடற்பயிற்சி கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்வுகள் பலரையும் கவர்ந்தன.

போட்டிகள் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக  வடிவமைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


ICC இந்தியாவுக்காகவே நடத்தி முடிச்ச T20 உலக கோப்பைய போல அடுத்து ஒரு ICC tournament நடத்திட்டு இருக்கு..

Tournament தொடக்கத்துல இருந்து இறுதி வரைக்கும் ப்ளேயர்ஸ்க்கு ஹோட்டல் ரூம் கூட மாற்ற அவசியமில்லை.. ஒரே பயிற்சி மைதானம்.. தொடர் முழுக்க ஒரே மைதானத்தில் போட்டி என வேறு எந்த அணிக்கும் கிடைக்காத சொகுசுகளுடன் ஒரு தொடரை விளையாடி வருகிறது.
எவ்வளவு சீரும் சிறப்புமாக ஒரு அணிக்காக ஒரு ICC Tournament நடந்தேறி வருகிறது. கிரிக்கெட்டில் இந்தியாவின் எழுச்சி உலக கிரிக்கெட்டின் பேரழிவு..
England Former Captain Nasser Hussain..

 


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு 5வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றது.


இதற்கு முன் 2000, 2002, 2013,2017 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இப்போது 5வது முறையாக தகுதியானது.


துபையில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.


முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 265 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


 


துபையில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது.

50 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி நாக்அவுட் போட்டிகளில் வென்றதில்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தியது.

 


பாறுக் ஷிஹான்


நிந்தவூரின் விளையாட்டுத்துறை பின்தங்கிய நிலையில் உள்ளதற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு புத்துயிரளிக்கும் நோக்கில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நிந்தவூரின் விளையாட்டு துறை சார்ந்த பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை (03) மேற்கொண்டிருந்தார்.
இக்கலந்துரையாடலில் பாடசாலை முதல் சர்வதேச மட்டத்திற்கு விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் உள்ள தடைகள் முன் வைக்கப்பட்ட நிலையில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தீர்வு திட்டங்களும் ஆலோசிக்க பட்டிருந்தது.
மேலும், தொடர் முயற்சியின் மூலம் எமது வீரர்களை உருவாக்குவது என்ற அடிப்படையில் நாம் தொடர்ச்சியாக செயல்படுவதை உறுதி எடுக்கப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் விளையாட்டு ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில் துபையில் இன்று(மார்ச்4) நடக்கும் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து களமிறங்குகிறது இந்திய அணி.


நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த 3 ஆட்டங்களுமே துபையில்தான் நடந்துள்ளன.


துபை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருப்பது இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் இந்திய அணி பலமானதாக கருதப்பட்டாலும், சில பலவீனங்கள் இருக்கவே செய்கின்றன.


ஓர் அணியை வீழ்த்துவதற்கு அந்த அணியில் உள்ள வீரர்களின் பலவீனத்தை தொட்டுவிட்டாலே எதிரணிக்கு வெற்றி கிடைத்துவிடும். அந்த வகையில் வெளித்தோற்றத்தில் இந்திய அணி பந்துவீச்சு, பேட்டிங்கில் வலிமையாக இருந்தாலும் சில பலவீனங்களும் மறைந்துள்ளன. அத்தகைய, இந்திய அணியின் 7 முக்கிய பலவீனங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


நாக்அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் - இந்தியா வெற்றி பெற இந்த உத்திகள் கைகொடுக்குமா?

வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்: நியூசிலாந்தை வென்ற இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள்

தென் ஆப்ரிக்காவை வெளியேற்றி, ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா?

சாம்பியன்ஸ் டிராபி: துபையில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதன் மூலம் இந்தியா பயனடைகிறதா?

இந்தியா - ஆஸ்திரேலியா, ரோகித் - கோலி, சாம்பியன்ஸ் டிராபி

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கோலி, ரோஹித்தை அச்சுறுத்தும் பலவீனம்

இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்டர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் ஆகிய 3 பேருமே தரமான சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறுகின்றனர். ஆடம் ஸம்பா பந்துவீச்சில் சரியான லென்த்தை பிக் செய்து விளையாடுவதில் ரோஹித், கோலி இருவருக்கும் குழப்பம் இருக்கிறது. இருவருமே லெக் ஸ்பின்னில் அதிக முறை ஆட்டமிழந்துள்ளனர். ரோஹித் சர்மா சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 67.33 சராசரிதான் வைத்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 97 வைத்துள்ளார்.


விராட் கோலி சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 68 ரன்கள் சராசரியும், 92 ஸ்ட்ரைக் ரேட்டும்தான் வைத்துள்ளார். ஆகவே இருவருமே சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவதில் திணறக் கூடியவர்கள். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக டாப்ஆர்டர் பேட்டர்கள் சற்று நம்பிக்கை குறைந்தவர்களாகவே இருப்பது பலவீனமாகும்.


அதிலும் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலியின் பேட்டிங் சமீபகாலத்தில் மோசமாகவே இருந்துள்ளது. கடந்த 7 இன்னிங்ஸ்களில் கோலி 5 முறை லெக்ஸ்பின்னில் ஆட்டமிழந்துள்ளார். 2020ம் ஆண்டுவரை கோலி லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக 72 சராசரி வைத்திருந்தாலும், 2020ம் ஆண்டுக்குப்பின் அது 41 ஆகக் குறைந்துவிட்டது. ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியை 5 முறை ஆடம் ஸம்பா ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆதலால் ஆடம் ஸம்பா பந்துவீச்சு கோலிக்கு எதிராக பெரிய ஆயுதமாக இருக்கும்.


இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஏன்? 8 கேள்விகளும் பதில்களும்

2 மார்ச் 2025

புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து

1 மார்ச் 2025

இந்தியா - ஆஸ்திரேலியா, ரோகித் - கோலி, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images

நம்பிக்கை குறைவு, தடுமாற்றம்

ஆஸ்திரேலிய அணி 2023 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக வங்கதேசம், தென் ஆப்ரிக்காவிடம் ஒருநாள் தொடர்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அந்த உலகக் கோப்பைத் தொடரில் தொடக்கமும் அந்த அணிக்கு மோசமாகவே இருந்தது. ஆனால், பின்னர் விஸ்வரூமெடுத்து ஆடிய ஆஸ்திரேலிய சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.


ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் ஆஸ்திரேலிய அணிக்கு புது உற்சாகமும் புது தெம்பும் வந்து விட்டது போல ஆடுவார்கள். களத்தில் கிரிக்கெட் மட்டுமல்ல, களத்திற்கு வெளியேயும் எதிரணியின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் வார்த்தை விளையாட்டிலும் ஈடுபடுவார்கள். தங்களது வியூகங்களை களத்தில் செயல்படுத்துவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பதால்தான் ஆஸ்திரேலிய அணியால் சாம்பியன் பட்டத்துக்கான பைனலில் பதற்றமின்றி விளையாட முடிகிறது.


ஆனால் இந்திய அணியைப் பொருத்தவரை, டி20, ஒருநாள் உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற ஐசிசி தொடர்களில் இந்திய வீரர்கள் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், நாக் அவுட் மற்றும் இறுதிப்போட்டி ஆகிய முக்கியமான கட்டங்களில் சொதப்பிவிடுகிறார்கள். முக்கியமான கட்டங்களில் இந்திய வீரர்கள் பதற்றம் அடைந்து ஆட்டத்தில் கோட்டை விடுவது அணிக்கு பெரிய பலவீனமாகும்.


உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?

28 பிப்ரவரி 2025

சென்னை நீர்நிலைகளில் நச்சுக் கழிவுகளா? ஐஐடி ஆய்வும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மறுப்பும்

28 பிப்ரவரி 2025

அனுபவமற்ற வேகப்பந்துவீச்சு

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சில் முகமது ஷமி மட்டுமே 100 ஒருநாள் போட்டிகளுக்கும் மேல் விளையாடிய அனுபவம் கொண்டவர். ஆனால், நிதிஷ் ராணா, அர்ஷ்தீப் சிங் இருவரும் 20 போட்டிகளுக்குள் விளையாடிய அனுபவம் உடையவர்கள்.


மினி உலகக் கோப்பை எனப்படும் இந்த பெரியதொடரில் அனுபவமற்ற இந்திய வீரர்களின் வேகப்பந்துவீச்சு பலவீனமாகும். முக்கியக் கட்டத்தில் எவ்வாறு விக்கெட் வீழ்த்துவது, பேட்டர்களின் பலவீனம் அறிந்து பந்துவீசுவது, எவ்வாறு வியூகங்களை அமைப்பது போன்றவற்றில் போதிய அனுபவம் இல்லாதது பலவீனமாக இருக்கிறது.


இந்தியா - ஆஸ்திரேலியா, ரோகித் - கோலி, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images

தலைவலியாக திகழும் டிராவிஸ் ஹெட்

ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சமாளிப்பதில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடந்த 2 ஆண்டுகளாகவே தோல்வி அடைந்துள்ளனர். டிராவிஸ் ஹெட்டும் கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகியவற்றில் 1,260 ரன்களைக் குவித்துள்ளார். இதுவரை இந்திய அணிக்கு எதிராக இவ்வளவு ரன்களை குறுகியகாலத்தில் குவிக்கவில்லை.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட், பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் ஆகியவற்றில் டிராவிஸ் ஹெட்டின் ஆட்டம் இந்திய அணிக்கு சவாலாக இருந்துள்ளது, அவரை சமாளிப்பதிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் பலவீனமாக இருக்கிறார்கள்


டிராவிஸ் ஹெட்டை பலமுறை ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்கச் செய்துள்ளார், ஷமியின் பந்துவீச்சுக்கு எதிராக ஹெட் 73 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பதுதான் ஆறுதலாகும்.


குடல் ஆரோக்கியம்: ஒரு நாளில் எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியமானது?

28 பிப்ரவரி 2025

ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?

27 பிப்ரவரி 2025

சுப்மான் கில்லின் முக்கிய பலவீனம்

இந்தியா - ஆஸ்திரேலியா, ரோகித் - கோலி, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images

கடந்த சில ஆண்டுகளாக சுப்மான் கில் பேட்டிங் செய்யும் குறிப்பிட்ட தவறை, பலவீனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை. கில்லின் பலவீனத்தைக் கண்டறிந்து இதுவரை நியூசிலாந்தின் கெயில் ஜேமிஸன், சவுத்தி, ஹென்றி ஆகியோரும் ஐபிஎல் தொடரில் ரபாடா, ஆன்டர்ஸன், ஷமி ஆகியோரும் ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.


அதாவது ஸ்டெம்பிலிருந்து 6 முதல் 8 மீட்டருக்கு முன்பாக லென்த்தில் பந்து பிட்ச் ஆகினால் பிரண்ட்புட் எடுத்து விளையாடுவதில் இன்னும் சுப்மன் கில்லுக்கு குழப்பம் நீடிக்கிறது. சாம்பியன்ஸ் டிராபியில் ஹென்றியின் பந்துவீச்சிலும் இதேபோலத்தான் சுப்மன் கில் காலை முன்தூக்கி வைத்து ஆடுவதில் குழப்பமடைந்து கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். இதே தவறை ஆஸ்திரேலிய அணியிடம் கில் செய்தால் விரைவாக விக்கெட்டை இழக்க நேரிடும். ஏனென்றால், ஆஸ்திரேலிய வீரர்கள் ஐசிசி தொடர்களின்போது நன்றாக ஹோம் ஓர்க் செய்துதான் களத்துக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி 6-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது.


துபையில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.


முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. 250 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்து 44 ரன்களில் தோல்வி அடைந்தது.


இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று, முதலிடத்தைப் பிடித்தது. குரூப் பி பிரிவில் 2வது இடம் பெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நாளை மோதுகிறது.



ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி 6-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது.

துபையில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. 250 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்து 44 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று, முதலிடத்தைப் பிடித்தது. குரூப் பி பிரிவில் 2வது இடம் பெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நாளை மோதுகிறது.

டாப்ஆர்டர் தோல்வி

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சுப்மான் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நேற்று 7 வது ஓவருக்குள்ளேயே விரைவாக ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளையும் இழந்தது. 2வது முறையாக டாப்ஆர்டர் பேட்டர்கள் இந்த 3 பேரும் விரைவாக ஆட்டமிழந்துள்ளனர். இதற்குமுன் 2023ல் ஈடன்கார்டனில் நடந்த ஆட்டத்திலும் இந்த 3 பேட்டர்களும் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்திருந்தனர்.


15 ஓவர்களில் இந்திய அணி நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்திருந்தது. 15 ஓவர்களில் இந்த அளவு குறைவாக ரன்கள் சேர்த்தது 2020ம் ஆண்டுக்குப்பின் இது2வது முறையாகும். 2022ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களை இந்திய அணி சேர்த்தது. ஆனால் தொடக்கத்தில் மந்தமாக இந்திய அணி பேட் செய்தாலும், அடுத்த 25 ஓவர்களில் 139 ரன்கள் சேர்த்தது.


இந்திய அணி பேட்டிங்கில் டாப் ஆர்டர் சொதப்பினாலும், நடுவரிசையில் அக்ஸர் படேல்(42), ஸ்ரேயாஸ் அய்யர்(79), ஹர்திக் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டம் ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை பெற்றுக்கொடுத்தது.


இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images

ஆபத்பாந்தவன் ஸ்ரேயாஸ்

இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கிற்கு தூணாக கிடைத்துள்ளார் ஸ்ரேயாஸ் அய்யர். சிறந்த பேட்டராக இருந்தபோதிலும் இன்னும் "அன்சங் ஹீரோவாகவே" இருந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து, சாம்பியன்ஸ் டிராபி வரை இந்திய அணியின் டாப்ஆர்டர்கள் சறுக்கிய போதெல்லாம் அணியை தூக்கி நிறுத்தியது ஸ்ரேயாஸ் பேட்டிங்தான்.


எந்த நேரத்தில் எப்படிப்பட்ட பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கைதேர்ந்தவராகி, அதற்கேற்றபடி ஸ்ரேயாஸ் பேட் செய்வது சிறப்பாகும். ஆடுகளம் மெதுவாக இருக்கிறது, டாப் ஆர்டர்கள் வீழ்ந்துவிட்டார்கள் எனத் தெரிந்தவுடன் ரன் சேர்க்கும் வேகக்தைக் குறைத்து ஆங்கர் ரோல் எடுத்து ஸ்ரேயாஸ் பேட் செய்தார்


அக்ஸர், ஸ்ரேயாஸ் இருவரும் 51 பந்துகளாக ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் இருந்தனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 75 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவரின் ஒருநாள் போட்டி வாழ்க்கையில் மெதுவாக அடிக்கப்பட்ட அரைசதமாகும், இதற்கு முன் 2022ல் அகமதாபாத்தில் 74 பந்துகளில் ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்திருந்தார்.


இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images

நியூசிலாந்துக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஸ்ரேயாஸ் இதுவரை 4 அரைசதங்கள், 2 சதங்கள் என 563 ரன்கள் குவித்துள்ளார். வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சை பிரமாதமாக ஆடக் கூடியவராக ஸ்ரேயாஸ் உள்ளார். 8 முறையுமே வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ் 394 ரன்களும், சுழற்பந்துவீச்சுக்கு ஆட்டமிழக்காத ஸ்ரேயாஸ் 175 பந்துகளில் 169 ரன்கள் சேர்த்துள்ளார்.


ஹர்சித் ராணாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் 2வது பிரதான பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா பந்துவீசினார். தொடக்கத்திலேயே அப்பர் கட் ஷாட்டில் ரச்சின் ரவீ்ந்திரா விக்கெட்டை சாய்த்து ஹர்திக் பலம் சேர்த்தரா். பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி 45 ரன்கள் சேர்த்து சிறந்த ஆல்ரவுண்டர் என்பதையும் நிரூபித்தார்.


பிளாஸ்டிக் தாளில் வேக வைத்த இட்லியால் என்ன ஆபத்து? மருத்துவர்கள் விளக்கம்

2 மார்ச் 2025

இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்

2 மார்ச் 2025

வில்லியம்ஸன் ஆறுதல்

நியூசிலாந்து அணிக்கு நேற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் மாட் ஹென்றி எடுத்த 5 விக்கெட்டுகள், வில்லியம்ஸனின் போராட்ட பேட்டிங்தான். 120 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸன் தவிர வேறு எந்த பேட்டர்களும் 25 ரன்களைக் கடக்கவில்லை. அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும் 43 ரன்களைக் கடக்காததும் நியூசிலாந்து தோல்விக்கு முக்கியக் காரணமாகும். எந்த பேட்டரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை வழங்காதது தோல்விக்கு பெரிய காரணம்.


இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நேற்று டேரல் மிட்ஷெல், லேதம், பிரேஸ்வெல், பிலிப்ஸ் ஆகியோர் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். 30 ஓவர்கள் முடியும் வரை நியூசிலாந்து வெற்றிக்கான பாதி இலக்கை கடந்துவிட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், லேதம் ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் நியூசிலாந்து பேட்டர்கள் விக்கெட்டை இழந்தவாறு இருந்தனர்.


சான்ட்னர் நேற்று வருண் சக்ரவர்த்தியின் அற்புதமான பந்தில் போல்டாகினார். ஆட்டமிழந்த பின் சில வினாடிகள் ஸ்டம்பையும், வருணையும் பிரமிப்புடன் பார்த்துவிட்டு சான்ட்னர் பெவிலியன் திரும்பினார். வருண் தனது 10-வது ஓவரில் சான்ட்னரையும், ஹென்றி விக்கெட்டையும் வீழ்த்தினார்.


இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images

சுழற்பந்துவீச்சுக்கு சாதகம்

ஆடுகளம் நேரம் செல்லச்செல்ல சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியது. அங்கே, பனிப்பொழிவும் இல்லாமல் இருந்ததால், பந்துவீச்சாளர்களுக்கு நல்ல 'கிரிப்' கிடைத்தது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருந்ததாகவே தோன்றியது. அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ், வில்லியம்ஸன் இருவருமே அதிக பந்துகளை எதிர்கொண்டனர்.


நியூசிலாந்து அணி 133 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்ததால், ஆட்டம் அந்த அணிக்கு சாதகமாக இருப்பது போல் தோன்றியது. ஆனால், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதியில் நெருக்கடி அளித்ததால், அடுத்த 72 ரன்களுக்குள் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி இழந்தது.


இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஏன்? 8 கேள்விகளும் பதில்களும்

2 மார்ச் 2025

இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்?

21 பிப்ரவரி 2025

இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images

14 ஆண்டுகளுக்குப் பின்..

இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களான ஷமி, ஹர்திக் பாண்டியா இருவருமே 8 ஓவர்கள் மட்டுமே வீசினர். ஆனால், சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் சேர்ந்து 37 ஓவர்கள் வீசி, 166 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குல்தீப் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, அக்ஸர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 5-வது முறையாகும். 2011-ம் ஆண்டுக்குப்பின் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


அதேபோல நியூசிலாந்து அணியும் சுழற்பந்துவீச்சாளர்களிடம் 9 விக்கெட்டுகளை இழப்பது 3வது முறை, இதற்கு முன் இலங்கை அணியிடம் 1998, 2001 ஆண்டுகளில் சுழற்பந்துவீச்சாளர்களிடம் 9 விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்திருந்தது.


நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் 25 ஓவர்கள் வீசி 128 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர்.மாறாக, வேகப்பந்துவீச்சாளர் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா?

2 மார்ச் 2025

உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?

28 பிப்ரவரி 2025

இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images

வருண் சக்ரவர்த்தி அறிமுகமே அசத்தல்

ஐசிசி சாம்பியன்ஸ் போட்டித் தொடரில் முதல் முறையாக விளையாடிய தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.


சாம்பியன்ஸ் டிராபியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பந்துவீச்சாளர் வருண், இதற்குமுன் ஜடேஜா, ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அது மட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் டிராப அறிமுக ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் வருண் பெற்றார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட், முகமது ஷமி ஆகியோர் இந்த பெருமையைப் பெற்றிருந்தனர்


நடுப்பகுதி ஓவர்களில் நியூசிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த வருண் சக்வர்த்தி, அந்த அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார்.


பாகிஸ்தானின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? கோலி, ரோஹித் சரியாக பயன்படுத்துவார்களா?

23 பிப்ரவரி 2025

குடல் ஆரோக்கியம்: ஒரு நாளில் எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியமானது?

28 பிப்ரவரி 2025

அரையிறுதி புள்ளிவிவரங்கள் யாருக்கு சாதகம்?

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு 6-வது முறையாக முன்னேறியுள்ளது இதற்கு முன் 1998, 2000, 2002, 2013, 2017 ஆண்டுகளில் அரையிறுதி வரை இந்திய அணி வந்துள்ளது. இந்த முறை பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் இந்திய அணி எதிர்கொள்கிறது.


துபை ஆடுகளம் இந்திய சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான அம்சம், ஆஸ்திரேலிய அணியில் 3 பிரதான வேகப்பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் ஆகியோர் இல்லாதது சாதகமான அம்சமாகும். மற்ற வகையில் அனுபவம் குறைந்த வீரர்களை வைத்திருந்தாலும், கடுமையான சவால்களை அளிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக 350 ரன்களை சேஸ் செய்து தனது பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியா.


ஐசிசி தொடர்களில் நாக்அவுட் சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதினாலே கடுமையான போட்டியாகத்தான் இருக்கும். இரு அணிகளும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்றாலும், கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய அணியின் கைதான் ஓங்கியுள்ளது.


ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் 7 முறை மோதியுள்ளன. ஒருநாள் போட்டி உலகக் கோப்பைத் தொடரில் 4 முறை மோதியதில் ஆஸ்திரேலிய அணி 3 முறையும், இந்திய அணி ஒருமுறையும் வென்றது.


டி20 உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் இந்திய அணி 4 வெற்றியும், ஆஸ்திரேலிய அணி 2 வெற்றியும் பெற்றுள்ளன.


பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட 2024 YR4 விண்கல் நிலவில் மோதப் போகிறதா? நாசா புதிய தகவல்

26 பிப்ரவரி 2025

ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?

27 பிப்ரவரி 2025

இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றில் 2003 காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியும், 2011 காலிறுதியில் இந்திய அணியும் வென்றன. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.


சாம்பியன்ஸ் டிராபியைப் பொருத்தவரை இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 2 முறை இந்திய அணியும், ஒருமுறை ஆஸ்திரேலிய அணியும் வென்றன. ஆனால் இந்திய அணி பெற்ற இரு வெற்றிகளும் காலிறுதியில் நாக்அவுட் சுற்றில் பெற்றதாகும், ஆஸ்திரேலியா லீக் சுற்றில்தான் இந்திய அணியை வென்றுள்ளது.


புள்ளிவிவரங்களைப் பொருத்தவரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் ஆதிக்கமே ஓங்கியுள்ளது. ஒட்டுமொத்த ஐசிசியின் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 தொடர் , டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் என 4 வகையான தொடர்களிலும் இரு அணிகளும் ஏறக்குறைய சிறிய வித்தியாசத்தில்தான் உள்ளன.


38 போட்டிகளில் இரு அணிகளும் மோதிய நிலையில் அதில் இந்திய அணி 16 வெற்றிகளும், ஆஸ்திரேலிய அணி 18 வெற்றிகளும் பெற்றுள்ளன, 4 போட்டிகளில் முடிவில்லை.


ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை இரு அணிகளும் 151 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளன அதில் ஆஸ்திரேலிய அணி 84 முறையும், இந்திய அணி 57 முறையும் வென்றுள்ளன, 10 போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை.


இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள்

இந்தியா - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபிபட மூலாதாரம்,Getty Images

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்தான் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மெக்ருக், ஸ்மித், அலெக்ஸ் கேரெ, ஹார்டி ஆகியோர் பெரிய தலைவலியாக இருப்பார்கள்.


ஹெட் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என அனைத்திலுமே சிறப்பாக பேட் செய்யக்கூடியவர் டிராவிஸ் ஹெட். இவரின் விக்கெட்டை தொடக்கத்திலேயே எடுத்துவிட்டாலே பாதி வெற்றி கிடைத்ததுபோலத்தான்.


பந்துவீச்சில் அனுபவமான வீரர்கள் பெரிதாக யாருமில்லை. ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லீஸ் தவிர மற்றவர்கள் பெரிதாக அச்சுறுக்கும் அளவுக்கு பந்துவீசுவதில்லை. சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் என்பதால் ஆடம் ஸம்பா, தன்வீர் சங்கா, மேக்ஸ்வெல் பலம் சேர்ப்பார்கள். ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை நம்புவதைவிட பேட்டர்களை நம்பியே களமிறங்குகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள பேட்டர்களில் பெரும்பாலானவர்களுக்கு முறையான சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடி பழகியதில்லை என்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும்.


துபை ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் முதல்முறையாக ஆடுவதால், பிட்ச்சின் தன்மையை அறிந்து பந்துவீசுவது கடினம். ஆடுகளத்துக்கு ஏற்றபடி பேட்டிங்கையும், பந்துவீச்சையும் மாற்ற வேண்டிய சவால்கள் உள்ளன.


காலிறுதி ஆட்டம் துபையில் நடப்பது இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும். இதுவரை 3 லீக் ஆட்டங்களையும் இதே மைதானத்தில் ஆடியுள்ளதால் ஆடுகளத்தின் தன்மை இந்திய அணிக்கு நன்கு தெரியும், இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிய பலமாக உள்ளனர்.


சாம்பியன்ஸ் டிராபி தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், பி பிரிவில் ஆஸ்திரேலியா தவிர, அரையிறுதிக்கு முன்னேறும் இன்னொரு அணி எது என்பதற்கான கோதாவில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இருக்கின்றன.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபையில் நடக்கின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றாலும் எந்த அணி முதலிடம் பெறுவது என்பதில் இன்னும் போட்டி நீடிக்கிறது.

பி பிரிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்பதில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து போட்டித் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.

அதேசமயம், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளில் யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா ஆட்டத்தின் முடிவில்தான் தெரியும்.

ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முழுமையாக நடந்திருந்தால் உறுதியான நிலை கிடைத்திருக்கும். ஆனால், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி தரப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால், தென் ஆப்ரிக்கா 3 புள்ளிகளுடன் 2.140 வலுவான நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியும் 3 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட்டில் தென் ஆப்ரிக்க அணியைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது.

ஜெலன்ஸ்கியை நேருக்கு நேர் எச்சரித்த டிரம்ப் - என்ன நடந்தது?
இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி
இந்தியா - பாகிஸ்தான் 'ஆயுதமில்லா போரை' இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது எது? ஒரு பகுப்பாய்வு
இந்தியாவிடம் தோல்வி - பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன?
சாம்பியன்ஸ் டிராபி, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
லாகூரில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

274 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேரத்திருந்த போது மழை குறுக்கிட்டது. டிராவிஸ் ஹெட் 59 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நீண்ட நேரமாகியும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. மழை நின்றபின் போட்டியை நடத்தும் சாத்தியங்கள் குறித்து நடுவர்கள் பலமுறை மைதானத்தை ஆய்வு செய்தனர். ஆனால், மைதானத்தில் மழைநீர் வடியவில்லை என்பதால், ஆட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, போட்டி ரத்து கைவிடப்படுவதாக போட்டி நடுவர் அறிவித்தார். ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

தென் ஆப்ரிக்காவுக்கு என்ன வாய்ப்பு?
தென் ஆப்ரிக்க அணிக்கு பி பிரிவில் இங்கிலாந்து அணியுடன் கடைசி லீக் ஆட்டம் மட்டும் இருக்கிறது. ஏற்கெனவே தென் ஆப்ரிக்கா 3 புள்ளிகளுடன் 2.140 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால், 5 புள்ளிகளுடன் அரையிறுதியை உறுதி செய்வதுடன் பி பிரிவில் முதலிடத்தையும் தென் ஆப்ரிக்கா பிடிக்கும். தோல்வி அடைந்தாலும் மோசமான தோல்வியாக இல்லாமல் இருந்தால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு தென் ஆப்ரிக்காவுக்கு உண்டு.
ஒருவேளை இங்கிலாந்து - தென்ஆப்ரிக்க ஆட்டமும் மழையால் ரத்தானால், தென் ஆப்ரிக்க அணி 4 புள்ளிகள் மற்றும் வலுவான நிகர ரன்ரேட்டுடன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதி முன்னேறும்.
சாம்பியன்ஸ் டிராபி, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,Getty Images
ஆப்கானிஸ்தானுக்கு நூலிழை வாய்ப்பு
பி பிரிவில் 3 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி -0.99 நிகர ரன்ரேட்டுடன் 3வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல வேண்டுமானால், அது இங்கிலாந்து அணியின் கரங்களில்தான் இருக்கிறது.

அதாவது, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 301 ரன்களை சேஸிங் செய்யும் போது, 207 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி சேஸிங் செய்தால் தென் ஆப்ரிக்க அணி நிர்ணயிக்கும் 300 ரன்கள் இலக்கை 12 ஓவர்களுக்குள் சேஸிங் செய்ய வேண்டும்.

இந்தியா அரையிறுதிக்கு தகுதி, பாகிஸ்தான் வெளியேற்றம்: நியூசிலாந்து - வங்கதேசம் ஆட்டத்தில் என்ன நடந்தது?
25 பிப்ரவரி 2025
சச்சின் சாதனை தகர்ந்தது: ஷோயிப் அக்தர் வார்த்தைகளை நிஜமாக்கிய 'சேஸிங் மாஸ்டர்'
24 பிப்ரவரி 2025
சாம்பியன்ஸ் டிராபி, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்காபட மூலாதாரம்,Getty Images
ஆகவே, ஏதேனும் ஆச்சர்யம் நிகழ்ந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பது தற்போதைய நிலை. இல்லாவிட்டால் தென் ஆப்ரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். பி பிரிவில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

ஏ பிரிவைப் பொருத்தவரை, இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டன. எனினும், அந்த இரு அணிகளும் மோதும் போட்டிக்குப் பிறகு ஏ பிரிவில் எந்த அணி முதலிடம் என்பது தெரியவரும் . அதன் பிறகே, அரையிறுதியில் எந்த அணி, எந்த அணியுடன் மோதும் என்ற விவரம் தெரியவரும்.



நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் சாய்ந்தமருது பொலிவேரியன் மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹிதுல் நஜீம் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், கல்முனை கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம் ஜாபீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் உடற்கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரிஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் அத்துடன் பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், பாலர் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஜஹாங்கிர், ஈ.பி.எஸ்.ஐ. இணைப்பாளரும் ஆசிரிய ஆலோசகருமான எஸ்.எம்.எம். அன்ஸார் ஆகியோர் நிகழ்வில் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதேச பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள்,  மாணவர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாடசாலையில் பல வருட காலமாக நடை பெறாமல் இருந்த இந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது இம்முறை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதில் சிறப்பாக விளையாடியதோடு மட்டுமல்லாமல், இயற்கை முறையில் இல்லத்தையும் அமைத்து முதலாம் இடத்தை தனதாக்கிய கஸ்மன் இல்லம் (பச்சை) 226 புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை பெற்று வெற்றி வாகை சூடியது. இரண்டாமிடத்தை 200 புள்ளிகளைப் பெற்று ரையான் இல்லம் (நீலம்) பெற்றுக் கொண்டதுடன், 191 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடம் சலா இல்லம் (மஞ்சள்) பெற்றுக் கொண்டது.

 


பாறுக் ஷிஹான்


ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிமின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரிக்கான உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டரங்கு   வியாழக்கிழமை (27) திறந்து வைக்கப்பட்டது.


சுகாதார பிரதி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணிஏ.எம். ரகீப்பின்    கோரிக்கைக்கு அமைவாக மருதமுனை அல்- மனார் கல்லூரிக்கு 5.2 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டரங்கு அமைக்கும் ஆரம்ப கட்ட வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் அதன் இறுதிகட்ட பணிகளுக்கு  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.   முஷாரப்பின்   நிதி ஒதுக்கீட்டில் பூர்த்தி செய்யபட்டன.

குறித்த பூப்பந்தாட்ட விளையாட்டரங்கினை  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் இஎஸ்.எம்.எம்  முஷாரப்  ஆகியொர் இணைந்து   திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் ,கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் , கல்லூரியின் அதிபர் , பிரதி அதிபர் , ஆசிரியர் குழாம் , பாடசாலை அபிவிருத்தி  குழுவின் உறுப்பினர்கள் , பழைய மாணவ சங்க உறுப்பினர்கள்  போன்றோரும் பிரசன்னமாகி இருந்தனர்.
 

 


( வி.ரி.சகாதேவராஜா)


 காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய 65 வருட கால வரலாற்றில், முதல் தடவையாக  இல்ல விளையாட்டுப் போட்டி மிக விரைவில் நடைபெறவிருக்கிறது.

அதனையொட்டி, விளையாட்டுக் கொடிகளை வெளியிடும்  கால்கோள் விழா இன்று (25) செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை அதிபர் சீனித்தம்பி திருக்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம அதிதியாக, ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி வருகைதரு விரிவுரையாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

முதலில், பாடசாலை கொடி அதிபரிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் இல்லங்களுக்கான கொடிகள் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டன.

விவேகானந்த இல்லம், விபுலானந்தா இல்லம் ஆகிய இரு இல்லங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இல்ல ஆசிரியர்கள் இல்லத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


விராட் கோலியின் ஆகச் சிறந்த சதத்தால் துபையில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.


முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலையில் இருந்தநிலையில் தற்போது 3-3 என்ற கணக்கில் இந்தியா-பாகிஸ்தான் சமநிலையில் இருக்கிறது.


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு வரை விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் பெரிய கவலையாக இருந்தது.


விளம்பரம்


பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்கள் கோலியின் ஃபார்ம் பற்றி குறிப்பிடத் தவறவில்லை, விமர்சிக்கத் தவறவில்லை. ஆனால், அனைத்துக்கும் இந்த ஒற்றை சதத்தின் மூலம் கோலி பதில் அளித்துள்ளார்.


இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்?

மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா?

'நான் எழுவேன்' - பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2024 விருது பெற்ற மனு பாக்கரின் உத்வேக பயணம்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சதம் மூலம் பதில்

விராட் கோலி போன்ற ஆல்டைம் கிரேட் பேட்டர்கள், இதுபோன்ற ஏதாவது ஒரு இன்னிங்ஸ் சிக்கிவிட்டால் இழந்த ஒட்டுமொத்த ஃபார்மையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள்.


ரசிகர்கள் கிங் கோலி என்பதற்கு விளக்கமாக இன்றைய கோலியின் ஆட்டம் அமைந்திருந்தப்பதாக சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.


கோலிபட மூலாதாரம்,Getty Images

பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக ஆடக்கூடிய விராட் கோலி இந்த ஆட்டத்திலும் தனது மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை.


சதம் அடிப்பாரா, அதற்கான வாய்ப்பு இருக்குமா என்ற நிலையில் கடைசியில் பவுண்டரி அடித்து 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கோலி இருந்தார். அவருக்கே ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்டது. சர்வதேச அரங்கில் தனது 51வது ஒருநாள் சதத்தையும் கோலி நிறைவு செய்துள்ளார்.


இந்தியாபட மூலாதாரம்,Getty Images

அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் வெளியேறுகிறதா?

இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. அதேநேரம் பாகிஸ்தான் அணி ஏறக்குறைய தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.


பாகிஸ்தான் அணிக்கு ஒரே வாய்ப்புதான் இருக்கிறது, வங்கதேச அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும், நியூசிலாந்து அணி அடுத்த 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். இப்படி நடந்தால் அரையிறுதிக்குள் பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இது நடக்குமா என்பது நிச்சயமில்லை.


இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் சுப்மன் கில்(46), ஸ்ரேயாஸ் அய்யர்(56) ஆகியோரின் பேட்டிங்கும் குறிப்பிடத்தக்கது.


இருவரும் சேர்ந்து கோலியுடன் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சுப்மன் கில், கோலி கூட்டணி 70 ரன்களும், ஸ்ரேயாஸ், கோலி கூட்டணி 114 ரன்களும் சேர்த்தது.


ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள்

23 பிப்ரவரி 2025

போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைத் தடை செய்த இந்தியா

23 பிப்ரவரி 2025

ஹர்திக் அற்புதமான பந்துவீச்சு

இந்தியாபட மூலாதாரம்,Getty Images

இந்திய அணியின் பந்துவீச்சும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. பாபர் ஆசம் விக்கெட்டை வீழ்த்தி ஹர்திக் பாண்டியா தொடங்கி வைத்தார். பாண்டியாவின் பந்துவீச்சில் இன்று ஏகப்பட்ட வேரியேஷன்கள், ஸ்லோபால், ஸ்விங் என அற்புதமாக இருந்தது. 8 ஓவர்களையும் 3.4 ரன்ரேட்டில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்டியா.


ஜடேஜா, அக்ஸர், குல்தீப் ஆகியோர் சேர்ந்து 26 ஓவர்களை வீசி, 129 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த 3 பேருமே, 4 ரன்ரேட்டுக்கு மேலாக ரன்களை வழங்கவில்லை.


குறிப்பாக நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்தாமல் இந்திய அணி திணறுகிறது என்ற விமர்சனத்துக்கு இந்த முறை பதில் அளித்து நடுப்பகுதியில் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தைத் திருப்பினர்.


சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா

23 பிப்ரவரி 2025

நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை

22 பிப்ரவரி 2025

'கோலியின் ஆட்டம் வியப்பைத் தரவில்லை'

கோலிபட மூலாதாரம்,Getty Images

வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் "பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு அருமையாகத் தொடங்கினோம். இந்த விக்கெட் பற்றி நன்கு தெரியும் என்பதால் எங்கள் பேட்டர்கள் நிதானமாக ஆடினர். குல்தீப், அக்ஸர், ஜடேஜா சிறப்பாகப் பந்துவீசினர். ரிஸ்வான், சவுத் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷமி, ஹர்திக் மற்றும் ராணா சரியான நேரத்தில் சிறப்பாகப் பந்துவீசினர்.


ஒவ்வொரு வீரரும் என்ன விதமான பணியைச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டனர். பேட்டர்களுக்கு யார் அதிகமாக தொந்தரவு கொடுப்பார்கள் என்பதை அறிந்து பந்துவீசச் செய்தேன். கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டார். ஓய்வறையில் இருப்போர் கோலியின் ஆட்டத்தைப் பார்த்துப் பெரிதாக வியப்படையவில்லை" எனத் தெரிவித்தார்.


5 முறை ஆட்டமிழப்பு

இந்திய அணி, 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா வழக்கம்போல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அதிரடியாகத் தொடங்கினார்.


ஆனால், அப்ரிடி வீசிய 5வது ஓவரின் கடைசிப் பந்து கணிக்க முடியாத வகையில் வந்த இன்-ஸ்விங் யார்க்கரில் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.


டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 8 முறை அப்ரிடி பந்துவீச்சை சந்தித்துள்ள ரோஹித் சர்மா, அதில் 5 முறை ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அதன்பின் விராட் கோலி களமிறங்கி, சுப்மன் கில்லுடன் சேர்ந்தார். அப்ரிடி வீசிய 7வது, 9வது ஓவர்களில் 4 பவுண்டரிகள் விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்த்தது.


பிரான்சில் பிரிட்டிஷார் பிடியில் இருந்து தப்ப, கப்பலில் இருந்து கடலில் குதித்த சாவர்க்கர் - என்ன நடந்தது?

22 பிப்ரவரி 2025

பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?

20 பிப்ரவரி 2025

சச்சினை முந்தைய கோலி

கோலிபட மூலாதாரம்,Getty Images

ஹாரிஸ் ராஃப் வீசிய 13வது ஓவரில் கோலி பவுண்டரி அடித்தபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 14 ஆயிரம் ரன்களை எட்டி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்தார். சச்சின் 350 இன்னிங்ஸிலும், சங்கக்கரா 378 இன்னிங்ஸிலும் இந்தச் சாதனையைச் செய்த நிலையில், கோலி 287 இன்னிங்ஸில் 14 ஆயிரம் ரன்களை எட்டினார். அதே ஓவரில் கோலி கவர் டிரைவில் அற்புதமான பவுண்டரியும் விளாசினார்.


அப்ரார் அகமது வீசிய 18வது ஓவரில் கில் 46 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.


கோலி 2வது அரைசதம்

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், கோலியுடன் இணைந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்திருந்தது. 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது.


நசீம் ஷா வீசிய 27வது ஓவரில் டீப் கவர் திசையில் பவுண்டரி அடித்து தனது 74வது அரைசதத்தை கோலி நிறைவு செய்தார். கடந்த 3 போட்டிகளில் விராட் கோலி அடித்த 2வது அரைசதம் இது.


இந்திய அணி, 36வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 63 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 56 ரன்கள் சேர்த்திருந்தபோது, குஷ்தில் வீசிய 39வது ஓவரில் இமாம் உல்ஹக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பவுண்டரி அடித்தநிலையில் 8 ரன்களில் அப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.


அக்ஸர் படேல் 3 ரன்களிலும், கோலி பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்தும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 42.3 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்து இலக்கை அடைந்தது.


சர்வதேச தலைவர்களை சந்திக்கும் போதும் ஈலோன் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வது ஏன்?

17 பிப்ரவரி 2025

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? இந்தி எதிர்ப்பின் நெடிய வரலாறு

18 பிப்ரவரி 2025

பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் என்ன?

பாகிஸ்தான்பட மூலாதாரம்,Getty Images

பாகிஸ்தான் அணி கவனமாக ஆட வேண்டும், விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற கவனத்தோடு ஆடியதே தவிர ரன்சேர்ப்பில் கவனம் செலுத்தவில்லை.


தொடக்கத்தில் இருந்தே மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்ப்ளேவில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்த பாகிஸ்தான் அடுத்த 10 ஓவர்களில் 27 ரன்களையே சேர்த்தது.


பாகிஸ்தான் தரப்பில் சவுத் ஷகில்(62), கேப்டன் ரிஸ்வான்(42) தவிர வேறு எந்த பேட்டர்களும் பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை


இந்திய பந்துவீச்சாளர்கள் ஹர்திக், குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகிய 4 பந்துவீச்சாளர்களும் நடுவரிசையில் பாகிஸ்தான் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்ததால் பாகிஸ்தான் பேட்டர்களின் பேட்டிலிருந்து பெரிய ஷாட்களும் வரவில்லை, பெரிதாக ரன்களும் வரவில்லை.


பாகிஸ்தான்பட மூலாதாரம்,Getty Images

கேப்டன் ரிஸ்வான் ஆட்டமிழந்தவுடன் பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி தொடங்கியது. அவர் ஆட்டமிழந்தபின் அடுத்த 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்து தடுமாறியது. நடுவரிசை மீது மிகுந்த நம்பிக்கை வைத்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களும், கேப்டன் ரிஸ்வானும் ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தாமல் விக்கெட்டை தக்க வைப்பதிலேயே கவனம் செலுத்தினர். ஆனால், அவர்கள் நினைப்புக்கு மாறாக நடுவரிசை பேட்டர்கள் சொதப்பலாக பேட் செய்தனர்.


பாகிஸ்தான் அணி, 200 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்த 41 ரன்களுக்கு மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. நடுவரிசை பேட்டர்களை நம்பி பாகிஸ்தான் கேப்டனும், தொடக்க வீரர்களும் ஏமாந்தனர்.


பாகிஸ்தான் அணி தேவையின்றி பந்துகளை வீணடித்தது அந்த அணியின் ஸ்கோர் குறைவுக்கு முக்கியக் காரணம். பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் மட்டும் 152 டாட் பந்துகளை விட்டுள்ளது, இது ஏறக்குறைய 25 ஓவர்களுக்கு சமம். ஒருநாள் போட்டியில் இந்த அளவு டாட் பந்துகளை விடுவது ஸ்கோரை பெரிய அளவு பாதிக்கும். டாட் பந்துகளை விட்டதற்கு விலையாக பாகிஸ்தான் அணி ஸ்கோரை பறிகொடுத்துள்ளது.


பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் என 3 பேருக்கும் கேட்சை கோட்டைவிட்டனர். இந்த கேட்சுகளை பிடித்திருந்தாலே ஆட்டத்தை நெருக்கடியில் கொண்டு சென்றிருக்கலாம்.



 ( காரைதீவு  சகா)


காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் 75 வது வருட " "பவளவிழா" ஆண்டின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் 
நேற்று  (20) வியாழக்கிழமை அதிபர் ம. சுந்தரராஜன் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

பெரு விளையாட்டுகளில் முதல் நிகழ்வாக எல்லே விளையாட்டுப் போட்டி காலையில் விபுலானந்தா மைதானத்தில் ஆரம்பமாகியது.

முதல் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் போஷகரும் ,  ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

முன்னதாக, பாடசாலை விளையாட்டு கொடி சகிதம் அதிபர் அதிதி மற்றும் விளையாட்டு குழுவினர் இல்லக் கொடி சகிதம் எல்லே வீர வீராங்கனைகள் பாடசாலையில் இருந்து ஊர்வலமாக மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மைதானத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய இல்லங்கள் இம் முதல் எல்லே போட்டியில் ஆண் பெண் பிரிவுகளாக  பங்கேற்றன.

விளையாட்டுக் குழுவின் செயலாளர் விளையாட்டு ஆசிரியர் ஜெ.சோபிதாஸ் ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை காலை மரதன் ( வீதி ஓட்டம்) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.