Showing posts with label sports. Show all posts

 



ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நியூசிலாந்தின் கனவு இறுதியாக நனவாகியிருக்கிறது.


நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது மூன்றாவது முயற்சியில் நியூசிலாந்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு முன், 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை சென்றது நியூசிலாந்து மகளிர் அணி.


தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த பிறகும் தென்னாப்பிரிக்காவால் கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் போனது.


கடந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடிய 10 வீராங்கனைகள் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினர். ஆனால் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.


விளம்பரம்


நியூசிலாந்து அணி சாம்பியன் ஆனதும், ஒட்டுமொத்த அணியும் கேப்டன் சோஃபி டிவைனைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அனைத்து வீராங்கனைகளின் கண்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தன.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கேப்டன் சோஃபி டிவைன் என்ன சொன்னார்?

இந்த வெற்றி குறித்துப் பேசிய நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன், "முந்தைய நாள் இரவு எனது அணியுடன் கோப்பையை கைப்பற்றுவது போல் கனவு கண்டேன். பத்து தொடர் தோல்விகளுக்குப் பிறகு கோப்பையை வென்றிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து சரியான திசையில் பயணித்தோம். அதன் பலன்தான் இது,” என்றார்.


தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட், "இறுதி ஆட்டத்தில் எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. ஏழாவது ஓவருக்கும் 11-வது ஓவருக்கும் இடையே எங்களது ஆட்டம் சிறப்பாக இல்லை என்பது என் கருத்து. ஆனால் வெற்றியின் பெருமை நியூசிலாந்து அணிக்கே சேரும்," என்றார்.


நியூசிலாந்துக்கு முதன்முறையாகக் கோப்பையைப் பெற்றுத் தந்ததில் ஒரு வீராங்கனை முக்கியப் பங்கு வகித்தார் என்றால், அது அமெலியா கெர்தான். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, ஐந்து விக்கெட்டுகளுக்கு 158 ரன்களை எட்டச்செய்தார். அவர் 43 ரன்கள் எடுத்தார்.



டி20, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பெண்கள் அணிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தென்னாப்பிரிக்காவின் அனுபவமிக்க அணியால் நியூசிலாந்தைத் தோற்கடிக்க இயலவில்லை

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெலியா

முதல் விக்கெட் வீழ்ந்தபோது ​​களம் இறங்கிய அமெலியா, விக்கெட்டில் திடமாக நின்று அணியை பலப்படுத்தினார்.


தொடக்கத்தில் உறுதுணையாக விளையாடிய அவர், கடைசி நிமிடத்தில் தனது கூர்மையான ஆட்டத்தால் அணி நல்ல ஸ்கோர் பெற உதவினார்.


தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் கூட ‘மேட்ச் சேஞ்சர்’ என்று கருதப்படும் ஒரு வீராங்கனை.


அவர் விளையாடும் போதே தென்னாப்பிரிக்கா தனது கோப்பைக் கனவை நனவாக்க முடியும் என்று தோன்றியது.


ஆனால் பத்தாவது ஓவரின் முதல் பந்தில் அவரது விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தைத் தனது அணிக்குச் சாதகமாக மாற்றினார் அமெலியா.


அமெலியா சிறப்பான சுழற்பந்து வீச்சை வெளிப்படுத்தி நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


அமெலியாவைத் தவிர, தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸை ஒன்பது விக்கெட்டுக்கு 126 ரன்களுக்கு மட்டுப்படுத்தியதில் அந்த அணியின் பவுலர் ரோஸ்மேரி மேயரும் முக்கியப் பங்காற்றினார். அவரும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


அமெலியா, "இந்த வெற்றியைப் பற்றிப் பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. வெற்றி பெற்ற பிறகு நான் கொஞ்சம் உற்சாகமாக இருந்தேன். ஃபீல்டிங் செய்யும் போது எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. ஆனால் அதற்குப் பிறகும் என்னால் எனது பொறுப்பை நிறைவேற்ற முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி," என்றார்.


ஹமாஸ் தலைவர் 'சின்வார் கொல்லப்பட்ட வீடு என்னுடையதுதான்' - பிபிசியிடம் கூறிய காஸா நபர்


டி20, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பெண்கள் அணிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இறுதிப் போட்டியில் அமெலியா கெர் சிறப்பாக விளையாடினார்

ஆண்கள் அணியால் செய்ய முடியாத சாதனை

நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியால், ஒருமுறை மட்டுமே (2021-ஆம் ஆண்டு) ஐசிசி டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை வர முடிந்தது. ஆனால் கோப்பையை வெல்லும் அதன் கனவு இன்னும் நிறைவேறவில்லை.


ஆனால், நியூசிலாந்து மகளிர் அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் சாதித்திருக்கிறது. பெண்கள் அணி சாம்பியனான நிலையில், இப்போது ஆண்கள் அணியும் இதிலிருந்து உத்வேகம் பெறக்கூடும்.


டி20, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பெண்கள் அணிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பவர் பிளேயிலும் தென்னாப்பிரிக்க அணி மோசமாகச் செயல்பட்டது

பவர்பிளேயை இழந்த தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வோல்வார்ட் மற்றும் தாஜ்மின் பிரிட்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 51 ரன்கள் சேர்த்த போது, ​​அணி வெற்றியை நோக்கி நகர்வது போல் இருந்தது.


அந்த நேரத்தில் வூல்வர்ட் முழு ஃபார்மில் விளையாடிக்கொண்டிருந்தார். இந்த ஜோடியை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர்.


தஜ்மினின் விக்கெட் வீழ்ந்ததால் இந்த பார்ட்னர்ஷிப் முறிந்த பிறகு, வோல்வார்ட் மூலம் நியூசிலாந்து அணிக்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால், பத்தாவது ஓவரில் வோல்வார்ட், போஷ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அமெலியா போட்டியை ஓரளவு தனக்குச் சாதகமாக மாற்றினார்.


அடுத்த 13 பந்துகளில் மரிஜான் கேப் மற்றும் டி கிளர்க்கின் விக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டபோது போட்டியின் முடிவு பெரிதும் தீர்மானமாகிவிட்டது.


இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் வெற்றிக்காக தமிழ்நாட்டில் நினைவுச்சின்னம் அமைத்த முஸ்லிம் வணிகர் - எங்கே?


டி20, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பெண்கள் அணிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இப்போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாகச் செயல்பட்டது

சிறந்த பீல்டிங்கால் உருவான அழுத்தம்

நியூசிலாந்து ஆக்ரோஷமாகத் தொடங்க முயற்சித்தது. இதற்குச் சான்றாக இரண்டு ஓவர்களில் நான்கு பவுண்டரிகள் அமைந்தன. ஆனால், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சாளர்கள், குறிப்பாகச் சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களைச் சுதந்திரமாக ஷாட்களை விளையாட அனுமதிக்கவில்லை.


நியூசிலாந்து பேட்டர்களான சுசி பேட்ஸ் மற்றும் அமெலியா கெர் வெளியே வந்து ஷாட்களை ஆடிய போதெல்லாம், அவர்களால் எச்சரிக்கையான பீல்டர்களை ஊடுருவி வெற்றிபெற முடியவில்லை.


பொதுவாக அணிகள் மிடில் ஓவர்களில் வேகமாக ரன்களை எடுக்க முயற்சிக்கும். ஆனால் தென்னாப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக டிரையன் மற்றும் மலாபா ஆகியோர் தொடர்ந்து பந்துவீசி ரன்களின் வேகத்தை அதிகரிக்காமல் தடுத்தனர்.


இதில், பேட்டர்களை பவுண்டரி அடிக்க விடாமல் தடுப்பது முக்கியப் பங்காற்றியது. எட்டாவது மற்றும் 13-வது ஓவர்களுக்கு இடையில் பவுண்டரிகள் அடிக்கப்படாமல் தடுப்பதில் வெற்றி பெற்றனர்.


டி கிளர்க் வீசிய 15-வது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து ரன் வேகத்தை அதிகரித்தார் ஹால்லிடே. இதன் பிறகு, மற்ற பேட்டர்களும் அடித்து ஆட முயன்றனர். இதன் காரணமாக அந்த அணி ஐந்து விக்கெட்டுக்கு 158 ரன்களை எட்டியது.


அரபு உலகின் பாரிஸ் என்று கருதப்பட்ட 'பெய்ரூட்' நகரம் அழிவின் பிடியில் சிக்கியது எப்படி?

1

நியூசிலாந்து அணி எப்படிச் சமாளித்தது?

தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சு மற்றும் சிறந்த பீல்டிங் காரணமாக, நியூசிலாந்து அணி பவுண்டரிகள் அடிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டது.


ஆனால் இதையும் மீறி விக்கெட்டுகளுக்கு இடையே தொடர்ந்து ஓடினர். ரன்களின் வேகத்தை அவர்கள் குறையவிடவில்லை.


கடைசி 5-6 ஓவர்களில் நியூசிலாந்து அணி விரைவாக ரன்களைக் குவித்தது.


அமெலியா கெர் ஒரு முனையைச் சமாளித்தபடி ரன்களை அதிகரித்துக் கொண்டிருந்தார். ப்ரூக் ஹால்லிடே அவருக்கு ஒரு நல்ல துணையாக இருந்தார்.


ஹால்லிடே 135 ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்து 28 பந்துகளில் 38 ரன்களை எடுத்தது மட்டுமின்றி, அமெலியாவை வேகமாக ரன் எடுக்கத் தூண்டினார்.

 

இலங்கை மேற்கு இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இடம் பெற்றது

மரங்களில் கூட போட்டியைக் காண இடமில்லை! இலங்கையர்கள் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறார்கள், அவர்கள் தங்கள் அணியை மிகவும் ஆர்வத்துடன் ஆதரிக்கிறார்கள்

 



டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்,முதல் இன்னிங்ஸில் 500 ஓட்டங்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து,இறுதியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையைப் படைத்தது இங்கிலாந்து!

 




சுற்றுலா நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றி 15 ஆண்டுகளின் பின் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய வரலாற்று சாதனையை பதிவு செய்தது. 


மூன்றாவது ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் (2023 - 2025) அங்கமாக நடைபெற்ற குறித்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. 


நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸூக்காக 5 விக்கெட் இழப்புக்கு 602 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களையும் குவித்தனர். 


பதிலுக்கு தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி இலங்கையின் சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 88 ஓட்டங்களுக்குள்




 “எனக்காக நான் எந்த இலக்கும் நிர்ணயிப்பதில்லை. கும்ப்ளே அவருடைய சாதனையை நான் முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் பொருத்தவரை இலக்குகளை நிர்ணயித்து, அதை அடைந்தபின் கிரிக்கெட் மீதான காதலை நான் இழக்க விரும்பவில்லை.


கடினமான காலங்களுக்குப் பின் என் வாழ்க்கை மாறிவிட்டது என்பதை நான் அறிவேன். கிரிக்கெட் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை இறுகப்பிடித்துள்ளேன். எப்போது அந்த பிடி தளர்கிறதோ அப்போது விலகுவேன்”, என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். தன்னுடைய ஓய்வு குறித்தும், கிரிக்கெட் மீதான காதல் குறித்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார்.


சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் இன்று (செப்டம்பர் 17) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு 38 வயதாகிறது.


செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி வீரர்களோடு சேர்ந்து கடந்த சில நாட்களாக அஸ்வின் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


ஐஸ்கிரீம் உருவான வரலாறு: குளிர் அல்லாத வெப்ப பிரதேசங்களில் ஐஸ்கிரீம் எவ்வாறு தயாரித்தார்கள்?

17 செப்டெம்பர் 2024

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

17 செப்டெம்பர் 2024

அஸ்வின், இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட், சென்னை

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை

அஸ்வின் 1986-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று சென்னையில் பிறந்தார். அவரது தந்தை ரவிச்சந்திரன் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த அஸ்வின், பிடெக் தகவல்தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.


அஸ்வின் தனது 9 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அஸ்வினுக்கு சந்திரசேகர் ராவ், சி.கே.விஜயகுமார் ஆகியோர் கிரிக்கெட் பயிற்சி அளித்துள்ளனர். சுழற்பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கும் முன், மித வேகப்பந்து வீச்சாளராகவே அஸ்வின் பயிற்சி எடுத்து வந்தார்.


சிஎஸ்கே முதல் சர்வதேச போட்டிகள் வரை

2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சைப் பார்த்த பிசிசிஐ (BCCI) தேர்வுக்குழுவினர் இந்திய அணிக்காக விளையாட அஸ்வினை தேர்ந்தெடுத்தனர்.


2010-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கினார். அதன்பின் 2010 ஆசியக் கோப்பையிலும் இந்திய அணிக்காக விளையாடிய அஸ்வின், உள்நாட்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் தேர்வானார். நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலும் அஸ்வின் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இரு போட்டிகளில் மட்டுமே விளையாட அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.


கோயபல்ஸின் காதல் கூடமாக திகழ்ந்த ஆடம்பர மாளிகை தற்போது எப்படி இருக்கிறது?

17 செப்டெம்பர் 2024

முஸ்லிம், யூதர் பின்பற்றும் சுன்னத் சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

17 செப்டெம்பர் 2024

அஸ்வின், இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட், சென்னைபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அஸ்வின் விளையாடினார்.

டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம்

2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வின் முதன்முதலாக இந்த வகை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகினார்.


முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை அஸ்வின் வென்றார். மும்பையில் நடந்த இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார். 1962-ஆம் ஆண்டிற்கு பின், ஒரே போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.


அனில் கும்ப்ளே இடத்தை நிரப்பிய அஸ்வின்

இந்திய அணிக்குள் அஸ்வின் அறிமுகமாகும்போது சற்று நெருக்கடியான சூழல் இருந்தது. அனில் கும்ப்ளேயின் கிரிக்கெட் பயணம் முடிந்து அடுத்ததாக ஒரு வலுவான பந்துவீச்சாளரை இந்திய அணி தேடியபோது அஸ்வினை கண்டுபிடித்தது.


ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் தவிர சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லாத காலகட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் வந்த அஸ்வின், கும்ப்ளே இடத்தை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார்.


அஸ்வின் தனது முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.


கருப்பு நிற நீரை மழையாக பொழிந்த மேகங்கள் - பிரேசிலில் என்ன நடந்தது?

17 செப்டெம்பர் 2024

உணவுப் போட்டியில் அதிக உணவை வேகமாக உண்ணும் போது உடலில் என்ன நடக்கிறது?

16 செப்டெம்பர் 2024

அஸ்வின், இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட், சென்னைபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்திய அணிக்குள் அஸ்வின் அறிமுகமாகும்போது சற்று நெருக்கடியான சூழல் இருந்தது.

500 விக்கெட்டுகள் சாதனை

அஸ்வின் தனது 98வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய அளவில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.


சர்வதேச அளவில் இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்ன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயான் ஆகியோர் இவருக்கு முன் இந்த சாதனையை படைத்துள்ளனர்.


கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அஸ்வின்

அனில் கும்ப்ளே உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த சாதனையை அஸ்வின் முறியடித்து, தற்போது 363 விக்கெட்டுகளுடன் அடுத்த போட்டியில் களம் காண உள்ளார்.


இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.


சேலம் தலைவெட்டி முனியப்பன் சிலை உண்மையில் 'புத்தர் சிலை' என்ற தீர்ப்புக்கு பிறகும் இந்து வழிபாடு தொடர்வது ஏன்?

14 செப்டெம்பர் 2024

பூமியையே 9 நாட்கள் உலுக்கிய மெகா சுனாமி - கடந்த ஆண்டு 656 அடி உயர மெகா அலைகள் எங்கே எழுந்தன?

14 செப்டெம்பர் 2024

அஸ்வின், இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட், சென்னைபட மூலாதாரம்,Getty Images

இடக்கை பேட்டர்களின் எதிரி

அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளில் அதிகபட்ச விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.


டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் தனது 516 விக்கெட்டுகளில் 256 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் எடுக்கும் சதவீதம் 46.6% ஆக இருக்கிறது.


இந்திய கிரிக்கெட்டில் தன்னை காலத்துக்கு ஏற்றார்போல் வளர்த்துக் கொண்டு, தகவமைத்துக் கொண்டு நுட்பமான பந்துவீச்சையும், கூக்ளி, கேரம் பால், பந்தை டாஸ் செய்வது, நக்குல் பால் என வெவ்வேறு முறைகளில் அஸ்வின் பந்து வீசக்கூடியவர்.


இந்திய அணியில் அஸ்வின் கடந்த 2012-ஆம் ஆண்டு அறிமுகமாகி ஏறக்குறைய 12 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.


காத்திருக்கும் சாதனைகள்

உள்நாட்டு மண்ணில் கும்ப்ளே 476 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்து வருகிறார். அதை முறியடிக்க அஸ்வினுக்கு தற்போது 22 விக்கெட்டுகள்தான் தேவைப்படுகிறது.


இதுவரை வங்கதேசத்குக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அஸ்வின் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா அணி பந்துவீச்சாளராக ஜாகீர்கான் உள்ளார். அவர் எடுத்த 31 விக்கெட்டுகளை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.


அஸ்வின் மீதான விமர்சனம்

இந்திய கிரிக்கெட்டிலும், உள்நாட்டளவிலும் பெரிய தாக்கத்தை அஸ்வின் ஏற்படுத்தியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை என்றபோதிலும், அவர் மீதான சில விமர்சனங்கள் இன்னும் தொடர்கின்றன.


ஜென்டில்மேன் கேம் என்று சொல்லக்கூடிய கிரி்க்கெட்டில், ஐபிஎல் டி20 தொடரில் மன்கட் அவுட் செய்து கிரிக்கெட்டின் தார்மீக தர்மத்தை மீறிவிட்டார் என்ற விமர்சனம் அஸ்வின் மீது வைக்கப்பட்டது. கிரிக்கெட் விதியின் கீழ் மன்கட்அவுட் சரி என்றாலும், தார்மீக அடிப்படையில் எந்த வீரரும் எதிரணி வீரருக்கு எதிராக அந்த அஸ்திரத்தை பயன்படுத்துவது அரிது. ஆனால், அஸ்வின் அதை வலுவாகச் செய்தார்.


அதேபோல உள்நாட்டு மைதானங்களில் மட்டும்தான் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார், சேனா நாடுகள் எனச் சொல்லப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மைதானங்களில் அஸ்வின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.


வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற பிட்சுகளாக பெரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும் சேனா(SENA) நாடுகளில் மட்டும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அங்கு அவர் ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.


அஸ்வின் ஒரே ஆசை என்ன?

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஸ்வின் தனக்கு ஒரே ஒரு சாதனையை மட்டும் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அது குறித்து அவர் கூறுகையில் “ டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் எடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இனிமேல் அது நடக்கப்போவதும் இல்லை” என்று கூறினார்.


- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.


70 கிலோ பிரிவில் *பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மல்யுத்தப் போட்டியில்* தொடர்ந்து இரண்டாவது முறையாக *தங்கப் பதக்கம்* வென்ற அகமது இல்ஹாம் (இறுதியாண்டு சட்ட மாணவர்- மாண்புமிகு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாவின் மகன்) அவர்களுக்கு வாழ்த்துகள்! 🥇

கொழும்பு பல்கலைக் கழகத்தில் இந்தப் போட்டி அண்மையில் இடம்பெற்றது


அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பாராக



 இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி பத்து வருடங்களின் பின்னர் இங்கிலாந்து அணியுடன் வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. எனினும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. 


ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தனஞ்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. தொடரின் முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முன்னதாகவே தொடரை வென்ற நிலையில் மூன்றாவது போட்டி கடந்த வெள்ளிக்கிழமை த ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. 


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்படுத்தாடிய இங்கிலாந்து அணி 325 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்களையும் இழந்தது. பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 263 ஓட்டங்களை சேர்த்தது. அதன் அடிப்படையில் 62 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சை தாக்குக்கு பிடிக்க முடியாது 156 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. 


அதன்படி இலங்கை அணி வெற்றிக்காக 219 என்ற இலகுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குறித்த இலக்கை நோக்கி பதிலுக்கு ஆடிய இலங்கை அணி ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பெத்தும் நிசங்க சதம் கடந்து இலங்கையின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இறுதியில் இலங்கை அணி 2 விக்கெட்களை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.


இலங்கை அணி இறுதியாக 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் வைத்து இங்கிலாந்துடன் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்ததன் பின்னர் தற்போது பத்து ஆண்டுகள் கழித்து இங்கிலாந்துடன் வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.


 


மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷெனோன் கேப்ரியல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


 ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் 


 அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகத்தின் 41ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.
 வருடம் தோறும் நடாத்தும் மாபெரும் மென்பந்து சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி (25) அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
 மட்டு அம்பாரை மாவட்ட 64 கழகங்களை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட தொடரில் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் மற்றும் அக்கரைப்பற்று டீன் ஸ்டார் ஆகிய கழகங்கள் பலப்பரீட்சை நடத்தின
நாணைய சுழற்சியிலே வெற்றி பெற்ற ஜொலிபோய்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்தெடுக்க நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்கள் முடிவில் டீன் ஸ்டார் அணியினர் 56 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜொலிபோய்ஸ் அணியினர் ஆரம்பத்திலே தடுமாறினாலும் சாந்தன் மற்றும் துலாஞ்சன் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் 6.4 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்தனர்

சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட ஜொலிபோய்ஸ் அணிக்கு  ஒரு லட்சம் ரூபா பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது.
இரண்டாமிடம் பெற்ற டீன் ஸ்டார் அணிக்கு மற்றும் ஐம்பது ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதுடன் மூன்றாமிடம் பெற்ற அட்டாளைச்சேனை பைனா அணிக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.
தொடர் ஆட்டநாயகனாக ஜொலிபோய்ஸ் அணியின் தினேஸ் மற்றும்  இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் ஜொலிபோய்ஸ் அணியின் சாந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகத்திற்காக ஆரம்ப காலம் முதல் இன்று வரை பல பதவிகளில் வகித்து சேவை புரிந்த கண்ணன் அவ ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக்கொண்டார்.
தலைவரும் கணக்காளருமான புனிதராஜ் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டி நிகழ்வுகளில் அதிதிகளாக ஜொலிபோய்ஸ் அணியின் முன்னைநாள் வீரர்கள் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 


ஒலிம்பிக் போட்டியில் 'வூசு"WUSHU நிகழ்வில் தங்கப் பதக்கம் பெறுவது எனது எதிர்கால இலட்சியமாகும் .


இவ்வாறு தாய்லாந்தில் வூசு WUSHU என்ற வொக்ஷிங் ( boxing) போட்டியில் தங்கம் வென்ற கம்பளை வீரர் கணேசன் சுதாகரன் தெரிவித்தார்.

தாய்லாந்தில்  நடைபெற்ற ஆசிய ‘வூசு’ (WUSHU) போட்டியில் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளையைச் சேர்ந்த கணேசன் சுதாகரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

கம்பளையைச் சேர்ந்த அதிபர்களான கணேசன்- புவனேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது புத்திரன் சுதாகரன் ஈட்டிய கடல் கடந்த ஆசிய சாதனை தொடர்பாக பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது .

இந்த சர்வதேச சாதனை காரணமாக இலங்கை வான்படையில் அவருக்கு தொழிலும் கிடைத்துள்ளது. 
 சுதாகரனின் தந்தை தங்கையா கணேசன் மட்டக்களப்பு  ஆசிரியர் கலாசாலையில் 1991/92 காலப் பகுதியில் விஞ்ஞான பயிற்சி ஆசிரியராக இருந்தவர். தற்பொழுது புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபராக இருக்கிறார். அவரது புதல்வரின் இந்த சர்வதேச சாதனையை பாராட்டு முகமாக மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் 91/ 92 புலன அணியினர் அதன் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை ( 10) கம்பளைக்கு சென்று அவரது இல்லத்தில் பாராட்டை நிகழ்த்தினர்.
வாழ்த்தினர்.
இலங்கை வான்படையில் பணியாற்றும் மிக இள வயது(22) தமிழ் இளைஞரான கணேசன் சுதாகரன் மும் மொழியிலும் தேர்ச்சி பெற்றவராவார்.

கம்பளையில் அவரது இல்லத்தில்  அவரிடம் செவ்வி காணப்பட்டது. 

தங்கள் ஆரம்பகாலம் பற்றி கூறுங்கள்?
நான் கம்பளையில் பிறந்தேன். எனக்கு வயது 22  எனது தந்தையார் கணேசன் அவர் புசல்வாவ சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபர் மற்றும் தாய் புவனேஸ்வரி. அவர் மாவத்துறை கலைமகள் வித்தியாலய அதிபராக இருக்கின்றார். எனக்கு ஒரு தங்கையும் தம்பியும் இருக்கின்றார்கள் .

கல்வி நிலை பற்றி கூறுங்கள்?

நான் ஆரம்பக் கல்வியை கம்பளை இந்து கல்லூரியில் பயின்றேன். பின்னர் ஆறாம் தரத்திலிருந்து உயர்தரம் வரை கண்டி கன்னொறுவை றணவிம றோயல் கல்லூரியில் பயின்றேன். அப்பொழுது எனக்கு இந்த தாய்லாந்து இடம் பெற்ற ஆசிய பூசு போட்டியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது .

அது பற்றி கூறுங்கள்?

நாங்கள் இலங்கையிலிருந்து 14 பேர் அங்கு சென்றிருந்தோம். அங்கு எனக்கு முதலிடம் கிடைத்தது. தங்கப்பதக்கமும் கிடைத்தது. மகிழ்ச்சி அளித்தது.
அதை தொடர்ந்து இலங்கை வந்த போது அரசாங்கமும் எமது சமூகமும் பெரிய வரவேற்பளித்தன. அவை என்னை பெரிதும் ஊக்கப்படுத்தியது.

பின்னர் என்ன நடந்தது?
இலங்கை வான்படைக்கு விண்ணப்பித்தேன். அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த பொழுதிலும் அங்கு 200 பேர் தெரிவானார்கள். அவர்களுள் தமிழரான நானும் தெரிவு செய்யப்பட்டேன். அதற்கு தங்கப்பதக்கம் பெரிதும் உதவியது.
 Aircraft man என்கின்ற பதவியில் நான் இருக்கின்றேன்.  இலங்கை வான்படை அணிக்காக விளையாடுகிறேன். அத்துடன் பயிற்சியிலே ஒரு பயிற்றுவிப்பாளராகவும்( coach ) கடமை ஆற்றுகின்றேன்.

 பயிற்றுவிப்பாளர் தகுதியையடைய ஏலவே பயிற்சி மற்றும் அங்கீகாரம் பெற்றிருந்தீர்களா?

ஆம்.நான் ஏலவே அகில இலங்கை வூசு போட்டிக்கான பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்று அதற்கான பரீட்சையில் சித்தி பெற்று பயிற்றுவிப்பாளர் அனுமதி( licence)பெற்று இருக்கின்றேன் .

தங்கள் எதிர்கால இலட்சியம் என்ன?

அந்த வகையிலே எனது எதிர்கால இலட்சியம் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வூசு போட்டியிலே  தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்பது.

நல்லது. இளம் சந்ததியினருக்கு இளைஞராகிய நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?

 எதிர்கால சந்ததிக்கு நான் சொல்ல வேண்டியது விளையாட்டின் மூலம் நாங்கள் உயர்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன .ஆகவே விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் அதனை நீங்கள் கவனமாக எடுத்துக் கொண்டால் நீங்கள்  நிச்சயமாக உயர முடியும். நிறைய வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்துங்கள்.

 



சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் ஷிகர் தவான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


 பாறுக் ஷிஹான்

 
அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியின் 21.1கிலோமீற்றர் போட்டியில் ஆண்கள் பிரிவில் அவிசாவளயை சேர்ந்த விமல் காரியவசம் முதலாமிடத்தினையும், வெலிமடயை சேர்ந்த ரீ.டபள்யூ.ரத்னபால இரண்டாமிடத்தினையும், டென்மார்க்கை சேர்ந்த பெஸ்டியன் குலோஸ்கோ மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார். பெண்கள் பிரிவில் கென்யாவைச் சேர்ந்த அனிக்கா பேலிம் முதலாமிடத்தினையும், ஜேர்மனியை சேர்ந்த டீ.அனிக்கா டோன் இரண்டாமிடத்தினையும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த சஸாலி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (18) பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 260பேர் கலந்துகொண்ட குறித்த மரதன் ஓட்டப்போட்டியானது 21.1 கிலோமீற்றர் அரை மரதன், 10கிலோமீற்றர் மற்றும் 5கிலோமீற்றர் என மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது. 5கிலோமீற்றர் போட்டியில் சிறுவர்கள், முதியவர்கள் கலந்துகொண்டனர். ஏனைய இரு பிரிவுகளிலும் பிரபல மரதன் ஓட்ட வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது 10கிலோமீற்றர் மரதன் போட்டியின் ஆண்கள் பிரிவில் வெலிமடையை சேர்ந்த டீ.எம்.எரந்த தென்னகோன் முதலாமிடத்தினையும், மகியங்கனையை சேர்ந்த கே.எம்.சரத்குமார் இரண்டாமிடத்தினையும், நுவரெலியாவை சேர்ந்த எம்.சௌந்தரராஜன் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார். பெண்கள் பிரிவில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெல்லா றுஸல் முதலாமிடத்தினையும், றீஸ்கா கிஸ்ஜெஸ் இரண்டாமிடத்தினையும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த டெஃப்னா டென்போமா மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார்.

சிறுவர்களுக்கான 5கிலோமீற்றர் மரதன் ஓட்டப்போட்டியில் கே.றினோஸ் முதலாமிடத்தினையும் எம்.ரீ.எம்.இன்ஷாப் இரண்டாமிடத்தினையும், என்.அனீஸ் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார். வளந்தோருக்கான 5கிலோமீற்றர் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஏ.எஸ்.மொஹானி முதலாமிடத்தினையும், மொனிசா டில்சான் இரண்டாமிடத்தினையும், தோமஸ் பீபர் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார். பெண்கள் பிரிவு போட்டியில் அலன் கோல்ப் முதலாமிடத்தினையும், ரைகா வேன்டியர் ஸ்ட்ரியட்டர் இரண்டாமிடத்தினையும், லரீசா பலஸ் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார்.

அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகவும், இராணுவத்தின் 242வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் களன அமுனுபுர, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.உவைஸ் மற்றும் பெடிவே உல்லாச விடுதியின் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் பீ.சப்றாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

குறித்த மரதன் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றுதழ்களுடன் பணப்பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது. அறுகம்பே அரைமரதன் போட்டியினை அறுகம்பே அபிவிருத்தி போரம் 6வது தடவையாகவும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது

 



எந்த நாடு அதிக பதக்கங்கள் வென்றுள்ளது தெரியுமா? 32 விளையாட்டுகளில் 329 பதக்கங்களுக்காக உலகம் முழுவதும் 200 நாடுகளில் இருந்து வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்..


 ( வி.ரி. சகாதேவராஜா)


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற் கமைவாக ‌சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக  மாணவர்களுக்கான மாணவத் தூதுவர் மாவட்ட ரீதியான தமிழ்மொழி மூலமான நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்  காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வானது  உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன்   தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

இந்நிகழ்வை அம்பாறை மாவட்ட உள சமுக உத்தியோகத்தர் யூ.எல்.அசாடீன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார் .

 அம்பாறை, சம்மாந்துறை காரைதீவு அம்பாறை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

 இதன் போது காரைதீவு சம்மாந்துறை நிந்தவூர்.சாய்ந்தமருது ஆகிய பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றி ‌ மாணவ தூதுவர் நிகழ்வு தொடர்பான பயிற்சியை பெற்றுக் கொண்டனர். 

 



இந்திய அணியுடனான 3ஆவது ஒருநாள் போட்டியில் 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 2-0 என்ற அடிப்படையில் வென்று சாதனை

 


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கான 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் தொடருக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வென்றது. 


இதன்படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


 இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் ரிட்ச்பரி(Ritzbury) நிறுவனத்தின் அனுசரனையில் நாடு பூராக நடைபெறும் 53 வது Sir John Tarbat கனிஷ்ட மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியின் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடாத்தப்படும் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நேற்று (03) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் எம்.எம்.எம். ஆகில் மிகா 15 வயதுப் பிரிவு ஆண்களுக்கான 80m தடைதாண்டல் ஓட்டத்தில் முதலாம் இடத்தையும் 100m ஓட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் 12 வயது ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் மாணவன் ஏ.எம்.லயிஸ் 3.92m தூரம் பாய்ந்து அதி சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கான சான்றிதழையும் பெற்றுள்ளார். 

இம்மாணவர்களையும் அவர்களை பயிற்றுவித்து அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களையும் "பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக்,உட்பட ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் பாடசாலை சமூகம் பார்ட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

 


101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை 230 ரன்கள் சேர்க்கவிட்டு, கடைசி 18 பந்துகளில் வெற்றிக்கான 5 ரன்களை அடிக்க முடியாமல் சமன் செய்து வெற்றியை கோட்டை விட்டது இந்திய அணி.


கொழும்பு நகரில் நேற்று பகலிரவாக நடந்த இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் சமனில்(டை) முடிந்தது.


முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. 231 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.



தவறுகளை திருத்திய இலங்கை அணி

டி20 தொடரில் தொடக்கத்தை சிறப்பாக அளித்த இலங்கை அணி நடுப்பகுதி பேட்டிங் வரிசையிலும், பின் வரிசையிலும் சொதப்பி, மோசமான தோல்விகளைச் சந்தித்தது. ஆனால், ஒருநாள் ஆட்டத்தில் முதல் போட்டியிலேயே அந்தத் தவறை திருத்திக்கொண்டது.


ஒருகட்டத்தில் 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறிய நிலையில் நடுவரிசை பேட்டர் வெல்லாலகே அரைசதம் அடித்து கவுரவமான ஸ்கோருக்கு உயர்த்தினார். நிதானமாக ஆடி, ரன்களைச் சேர்த்து 230 ரன்கள் வரை இலங்கை அணியின் ஸ்கோர் உயர்வதற்கு வெல்லாலகே முக்கியக் காரணம்.


தமிழ்நாட்டில் இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் எத்தனை பேர்? புதிய அறிக்கையில் தகவல்


இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

பொறுப்பை உணர்ந்த பந்துவீச்சாளர்கள்

இந்திய அணியின் பந்துவீச்சு நேற்று கட்டுக்கோப்பாகவே இருந்தது. பவர்ப்ளேயில் சிராஜ், அர்ஷ்தீப் சிறப்பாக செயல்பட்டு 45 டாட் பந்துகளை வீசியதால் இலங்கை அணியால் 33 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.


இலங்கை அணியின் நடுவரிசை பேட்டிங்கை குலைத்து 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 9 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 46 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.


குல்தீப், அக்ஸர் இருவருமே 10 ஓவர்களை நிறைவு செய்து ஓவருக்கு 3.3 ரன் வீதமே வழங்கியதுடன், தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய பந்துவீச்சைப் பொருத்தவரை தங்களின் பொறுப்பை உணர்ந்து நேற்று பந்துவீசியதால்தான் இலங்கை அணியை 230 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது.


இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

வாய்ப்புகளை தவறவிட்ட இந்திய அணி

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இந்த ஆட்டத்தில் இடம் பெற்றிருந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா தனது இருப்பை தனது அதிரடியால் வெளிப்படுத்தி, அரைசதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரை ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது, நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துச் சென்றார்.


ஆனால், டி20 தொடரிலும் பெரிதாக ஸ்கோர் செய்யாத வருங்கால கேப்டன் என வர்ணிக்கப்படும் சுப்மன் கில், முதல் ஒருநாள் போட்டியிலும் 16 ரன்களில் ஆட்டமிழந்து பெரிய ஏமாற்றத்தை அளித்தார்.


இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா, விராட் கோலியின் பலவீனம் என்ன என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால் கோலி பேட் செய்யத் தொடங்கியதும் ஹசரங்கா பந்துவீச அழைக்கப்பட்டார். தொடக்கத்திலிருந்தே திணறிய விராட் கோலி, அதை வெளிப்டுத்தாமல் பவுண்டரி அடித்தார். ஆனால், ஹசரங்காவின் லெக் ஸ்பின்னுக்கு கோலி 24 ரன்கள் சேர்த்த நிலையில் பலியாகினார்.


ஒரு கட்டத்தில் இந்திய அணி 189 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வலுவாக இருந்தது. 12 ஓவர்களில் வெற்றிக்கு 42 ரன்களே தேவைப்பட்டது, 5 விக்கெட்டுகள் கைவசம் இருந்த. 42வது ஓவர் வரை இந்திய அணி வெற்றி பெறவே 83 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணினி கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், கடைசி 41 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியைக் கோட்டை விட்டது.


'கோடி ரூபாய் கொடுத்தாலும் ராகுல் காந்தி தைத்த செருப்பை விற்க மாட்டேன்' - உறுதியுடன் கூறும் ஏழைத் தொழிலாளி

2 ஆகஸ்ட் 2024

'பாக்கெட்டில் கை, வெள்ளி பதக்கம்'- துருக்கி துப்பாக்கி சுடும் வீரர் யூசுஃப் டிகெக்கின் பாணி கைதட்டல் பெற்றது ஏன்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி 18 பந்துகளில் இந்திய அணி வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தன. ஷிவம் துபே களத்தில் இருந்தார். வெற்றியின் விளம்பில் இருந்த இந்திய அணி, 48-வது ஓவரில் அசலாங்கா பந்துவீச்சில் முதல் இரு பந்துகளை கோட்டைவிட்ட ஷிவம் துபே, 3வது பந்தில் பவுண்டரி அடித்து சமன் செய்தார். 4வது பந்தில் துபே கால்காப்பில் வாங்கி 25 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த அர்ஷ்தீப்பும் கால் காப்பில் வாங்கி ஆட்டமிழந்து வெற்றியைக் கோட்டைவிட்டனர்.


ஐபிஎல் தொடரில் சுழற்பந்துவீச்சை வெளுத்து வாங்கக்கூடிய பேட்டர் என்று பெயர் பெற்ற ஷிவம் துபே சர்வதேச தளத்துக்கு வந்தபின் பெரிதாக எந்த போட்டியிலும் தனது சிக்ஸர் அடிக்கும் திறமையை வெளிப்படுத்தவில்லை.


இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

சுழற்பந்துவீச்சு பலம்

இலங்கை அணி அதிகமான சுழற்பந்துவீச்சாளர்களுடன் போட்டியை எதிர்கொண்டது. தீக்சனாவுக்குப் பதிலாக அசலங்கா, ரிஸ்ட் ஸ்பின்னர் ஹசரங்கா, மிஸ்ட்ரி ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா, இடதுகை சுழற்பந்துவீச்சாளர் துனித் வெலாலகே ஆகியோர் இந்திய அணியை மிரட்டினர்.


இந்திய அணியின் தொடக்கவரிசை, நடுவரிசை பேட்டிங் வலுவாக இருப்பது தெரிந்தாலும், சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள் என்பதை இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்திவிட்டது. முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, கில் கூட்டணி 75 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கத்தை அளித்தனர்.


ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் வெலாலகே 13-வது ஓவரில் சுப்மான் கில்லையும், 15-வது ஓவரில் ரோஹித் சர்மாவையும் ஆட்டமிழக்கச் செய்தார். 4வது நிலையில் வழக்கமாக ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் களமிறங்குவர், இந்தஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார். ஆனால், தனஞ்செயாவின் சுழற்பந்துவீச்சில் சுந்தர் 5 ரன்களில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை பறிகொடுத்தார்.


விராட் கோலியின் பலவீனத்தை அறிந்து ஹசரங்காவை வைத்து அவரை இலங்கை கேப்டன் அசலங்கா வெளியேற்றினார். அது மட்டுமல்லாமல் கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஹசரங்கா முக்கியத் துருப்புச் சீட்டாக இருந்தார்.


இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

இடதுகை சுழற்பந்துவீச்சாளரான வெல்லாலகே அரைசதம் அடித்தது மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார்.


கடைசி நேரத்தில் கேப்டன் அசலங்கா தார்மீகப் பொறுப்பேற்று 48-வது ஓவரை வீசி அடுத்தடுத்த பந்துகளில் ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை டையில் முடிக்க முக்கியக் காரணமாக அமைந்தார். டி20 தொடரில் இந்திய அணியில் சூர்யகுமார் கடைசி நேரத்தில் பந்துவீசி 2 விக்கெட் வீழ்த்திய அதே துணிச்சலை, அசலங்கா இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தினார்.


இலங்கை அணியில் வெலாலகே, தனஞ்செயா, அசலங்கா, ஹசரங்கா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த 4 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 37.5 ஓவர்கள் வீசி, 167 ரன்கள் அதாவது சராசரியாக ஓவருக்கு 4.3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


ரோஹித், கோலி வருகை ஏமாற்றமா?

2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் நேற்று களமிறங்கினர். இதில் டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஒய்வுபெற்ற நிலையில் இருவரும் விளையாடும் முதல் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது.


அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் அமைந்திருந்தது. 3 சிக்ஸர், 7 பவுண்டரிகள் என 33 பந்துகளில் அரைசதம் அடித்து ரோஹித் சர்மா தனது ஃபார்மை வெளிப்படுத்தினார். கேப்டன் ரோஹித் களத்தில் இருந்தவரை, இந்திய அணியின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது. இந்திய அணி 71 ரன்கள் சேர்த்திருந்தபோது அதில் 54 ரன்கள் ரோஹித் சேர்த்ததுதான்.


கோலியின் பேட்டிங் எதிர்பார்ப்பைவிட சுமாராகவே அமைந்தது. சுழற்பந்துவீச்சுக்கு எளிதாக பலியாகிவிடும் கோலி, இந்த ஆட்டத்திலும் தப்பவில்லை. ஹசரங்காவின் 10 பந்துகளை எதிர்கொண்ட கோலி, அவரிடமே விக்கெட்டையும் இழந்து 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.


இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

நடுவரிசை பேட்டர்கள் பொறுப்பு

கேப்டன் ரோஹித் சர்மா, கில் கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்துவிட்டு சென்ற நிலையில் அதை காப்பாற்றி எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நடுவரிசை பேட்டர்களுக்கு இருக்கிறது. ஆனால் கோலி 24 ரன்களில் ஆட்டமிழந்தபின், சுந்தர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 230 ரன்கள் இலக்கு என்பது எளிதாக அடைந்துவிடக்கூடியது.


ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர்(23), கேஎல் ராகுல்(31), அக்ஸர் படேல்(33) ஆகியோர் இன்னும் சிறிது நேரம் நிலைத்து ஆடியிருந்தால், ஆட்டம் இந்திய அணியின் பக்கம் சென்றிருக்கும். இருப்பினும் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தபின், அக்ஸர், கே.எல்.ராகுல் கூட்டணி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர்.


ஆனால், கடைசி வரிசையில் களமிறங்கிய ஷிவம் துபே தன்னுடைய ஆட்டத்தில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 25 ரன்கள் சேர்த்த போதிலும், வெற்றிக்கான ஒரு ரன்னை சேர்க்காதது அனைத்து உழைப்பையும் வீணாக்கிவிட்டதாகவே உணர்த்துகிறது. அர்ஷ்தீப், குல்தீப், சிராஜ் ஆகியோர் டெய்லெண்டர் பேட்டர்கள் என்பதால் அவர்கள் மீது ரன் அழுத்தத்தை திணிக்க முடியாது. ஆல்ரவுண்டராக அணியில் இருக்கும் துபேதான் கடைசிவரை இருந்து ஆட்டத்தை முடித்திருந்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும்.


இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

14 பந்துகளில் ஒரு ரன் அடிக்க முடியவில்லை

ஆட்டம் சமனில் முடிந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ இந்த ஸ்கோர் எளிதாக அடைந்துவிடக்கூடியதுதான். பேட்டர்கள் சிறப்பாக ஆடினார்கள் என்றாலும் நிலையான ஆட்டத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை. சிறப்பான தொடக்கத்தை அளித்தோம், ஆனால், சுழற்பந்துவீச்சு வந்தபின்புதான் உண்மையான ஆட்டம் தொடங்கும் என்பது எங்களுக்குத் தெரியும். தொடர்ச்சியாக சில விக்கெட்டுகளை கடைசியில் இழந்து தவறு செய்தோம். 14 பந்துகள் கைவசம் இருந்த நிலையில் ஒரு ரன்னை எடுக்க முடியாதது வேதனையாக இருக்கிறது.


இந்த போட்டித் தொடர் நாங்கள் உலகக் கோப்பைக்கோ அல்லது சாம்பியன்ஸ் டிராபிக்கு எங்களைத் தயார்படுத்தும் ஆட்டம் அல்ல. இது பயிற்சிக்கான மைதானமும் அல்ல. இது சர்வதேச ஆட்டம். நாம் எதை அடையப்போகிறோமோ அதை மனதில் வைத்து விளையாட வேண்டும். நல்ல கிரிக்கெட்டை விளையாட இங்கு வந்துள்ளோம். சிறந்த தொடராக மாற்றுவோம்” எனத் தெரிவித்தார்


இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் ‘டை’ ஆட்டம்

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எந்த முடிவும் இன்றி 0-0 என்ற கணக்கில் இருக்கிறது. கொழும்பு பிரமதேசா மைதானத்தில் இதுவரை 149 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளதில் இதில் ஒரு ஆட்டம்கூட சமனில் முடிந்தது இல்லை. மைதானத்தின் வரலாற்றிலேயே முதல் போட்டியாக இந்த ஆட்டம் டையில் முடிந்துள்ளது.


9,840 நாட்கள் வரலாறு

அடுத்துவரும் 2 போட்டிகளையும் இந்திய அணி வென்றால்தான் ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்றைத் தக்கவைக்க முடியும். இல்லாவிட்டால், 9,840 நாட்களாக காப்பாற்றி வைத்திருந்த வரலாற்றை இந்திய அணி இழக்க நேரிடும்.


தாய்ப்பால் கொடுத்தால் மார்பகங்கள் தளர்ந்துவிடுமா?மருத்துவர்கள் சொல்வது என்ன?

2 ஆகஸ்ட் 2024

பாலின பரிசோதனை சர்ச்சை: 46 விநாடிகளில் போட்டியில் இருந்து வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி

2 ஆகஸ்ட் 2024

இந்தியா vs இலங்கைபட மூலாதாரம்,GETTY IMAGES

அதாவது, கடைசியாக 1997ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியை வென்று 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றுள்ளது. ஏறக்குறைய 27 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக எந்த ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றவில்லை.


இந்த முறை இலங்கையிடம் இந்திய அணி ஒருநாள் தொடரை ஒருவேளை இழந்தால், 27 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த வரலாற்றை இழக்க நேரிடும்.


அது மட்டுமல்லாமல் இந்த முறை இலங்கை பயணத்தில் 2வது முறையாக ஆட்டம் டையில் முடிந்துள்ளது. டி20 தொடரில் 3வது ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவர் முறையில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. ஒருநாள் தொடரில் முதல் போட்டியே சமனில் முடிந்துள்ளது.

 


பாறுக் ஷிஹான்


அறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் போரத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தெரிவித்தார்.


அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழன் மாலை (01) அறுகம்பே paddyway உல்லாச விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


 உலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே அரை மரதன் போட்டியும் இடம்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில், அறுகம்பே மரதன் ஓட்டப்போட்டியினை நடாத்தி வருகின்றோம். இம்முறை 6வது தடவையாகவும் குறீத்த மரதன் ஓட்டப்போட்டியினை மிகவும் சிறப்பாக நடாத்தவுள்ளோம். அறுகம்பே அரை மரதன் ஓட்டப் போட்டியானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அறுகம்பை பிரதேசத்தை நோக்கி அதிகரித்துக் காணப்படுகிறது. இக்காலகட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டும் இம்மரதன் ஓட்டப் போட்டியினை சர்வதேச தரத்தில் நடாத்துவதற்குரிய ஒழுங்குகளை செய்துள்ளோம்.
 

இப்போட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 200பேர் பங்கேற்கவுள்ளனர். இதில் 150 உள்நாட்டு வீரர்களும் 50 வெளிநாட்டு வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் பிரதேச மரதன் ஓட்ட வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த  போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெரும் வீரர்களுக்கு பெறுமதியான பரிசில்களும்,  சான்றுதழ்களும் வழங்கவுள்ளோம்.

இந்த மரதன் போட்டியானது 21.1 கிலோமீற்றர், 10கிலோமீற்றர், 5கிலோமீற்றர் என 3பிரிவுகளாக நடைபெறவுள்ளது. 21.1 கிலோமீற்றர் பிரிவில் 17வயதுக்கு மேற்பட்டவர்களும் 10கிலோமீற்றர் பிரிவில் 17 வயதுக்கு மேற்பட்டவர்களும் 5கிலோமீற்றர் பிரிவில் 12- 17 வயதினையுடைய சிறுவர்களும் பங்குபற்ற முடியும்.


இந்நிகழ்வில் போரத்தின் பிரதி தலைவர் எம்.எஸ்.அப்துல் நாசர், பொதுச்செயலாளர் எம்.எச்.சுபுஹான் உள்ளிட்ட போரத்தின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்,

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.