Showing posts with label sports. Show all posts


  ஆண்களில் Fire Horses ; பெண்களில் Revengers அணியினர் சம்பியன்!

( வி.ரி.சகாதேவராஜா)


2011 உயர்தர மாணவர்கள் மற்றும் டைனமிக் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்திய அமரர் சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த கிண்ணம் Batch Battle League -2026 சுற்றுத் தொடரானது இம் முறை ஆறாவது வருடமாக,காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில், டைனமிக் விளையாட்டுக்கழகத் தலைவர் எஸ். டனிஸ்காந் தலைமையில் நடைபெற்றது.


கோலாகலமான முறையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் 

சிறப்பாக இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன்  கலந்துகொண்டார்.

மேலும் பல அதிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இருபது அணிகள் கலந்துகொண்ட ஆண்களுக்கான போட்டியில் சம்பியனாக Fire Horses (2012 A/L Batch) அணியினர் தெரிவு செய்யப்பட்டதுடன் இரண்டாமிடத்தை Scorpions (2022 A/L Batch) அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர்.


மேலும் எட்டு அணிகள் கலந்துகொண்ட பெண்களுக்கான போட்டியில் சம்பியனாக Revengers (2021 A/L Batch) அணியினர் தெரிவு செய்யப்பட்டதுடன் இரண்டாமிடத்தை Royal Blasters (2025 A/L Batch) அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மூன்று நாட்களாக இடம்பெற்ற இச்சுற்றுத்தொடரில் இறுதிப்போட்டிக்கு பயர் கோஸஸ் மற்றும் ஸ்கோபியன் அணி தெரிவாகியிருந்தது. 


அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பயர் கோஸஸ் அணியினர் 52 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். 53 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்திய ஸ்கோபியன் அணி  47 ஓட்டங்களை மாத்திரமே பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தது.


 இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை பயர் கோர்சஸ் அணி வீரர் சர்மிலகாந்த் பெற்றுக் கொண்டதுடன், சிறந்த பந்துவீச்சாளர் விருதை சனோசன் தனதாக்கிக் கொண்டார். தொடர் ஆட்ட நாயகன் விருதை  டைட்டன்ஸ் அணியின் சுலக்ஷன் பெற்றுக் கொண்டார்.


அதிதிகளால் வெற்றிபெற்றவர்களுக்கு கிண்ணங்களும் பதக்கங்களுக்கும் பணப்பரிசில்களும் மேலும் பல சிறப்பு பரிசில்களும் வழங்கப்பட்டன.


ஆறு வருடங்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் பிபிஎல் சுற்றுத்தொடரில் பயர் கோஸஸ் அணி நான்கு தடவைகள் சாம்பியனாகவும் இரண்டு தடவைகள் ரன்னர்ஸ் அப் ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 


ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.


விளையாட்டு துறை அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.


ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்க் குழு உறுப்பினர்கள் விலகியிருந்தனர்.


இதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இடைக்கால தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


இதன்படி, இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ரொஷான் மஹநாம, குமார் சங்கக்கார மற்றும் துசிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாப்டர், உபுல் குமாரப்பெரும , தினால் பிலிப்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


 

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தனது தலைமைப்பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அதேசமயம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் தமது பதவிகளை துறந்துள்ளனர்.


 சேப்பாக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக எதிர்பாராத வகையில் ஒரு பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆடுகளம் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை எவ்வித சிக்கலும் இல்லாமல் நிதானமாக 16.4 ஓவர்களிலேயே சேஸ் செய்துவிட்டது குஜராத் டைட்டன்ஸ்.

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் பௌலர்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார்கள். அதன்பிறகு தன் சொந்த மண்ணில் சாய் சுதர்ஷன் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஒட்டுமொத்தமாக பேட்டிங், பௌலிங் என அனைத்து ஏரியாவிலும் சூப்பர் கிங்ஸை எளிதாக வீழ்த்திவிட்டது டைட்டன்ஸ்.

மும்பைக்கு எதிராக ஒரு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டு இந்தப் போட்டிக்குள் வந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனால், இந்த செயல்பாடு எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்திருக்கிறது. மேலும், இந்தப் போட்டியை அவர்கள் அணுகியவிதம் கேள்வியை எழுப்பும் விதமாகவும் அமைந்திருக்கிறது

 


கொழும்பு ரேஸ்கோர்ஸ் சர்வதேச ரக்பி மைதானத்தில் இன்று (25) மாலை நடைபெற்ற நியூசிலாந்து 85 கிலோவிற்கும் குறைந்த எடையுடைய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை டஸ்கர்ஸ் அணி 27-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியடைந்தது.


பலமிக்க நியூசிலாந்து அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி இரண்டு ட்ரை (Try)களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக ஆகாஷ் மதுஷங்க மற்றும் ஜனிந்து டில்ஷான் ஆகியோர் தலா ஒரு ட்ரை வீதம் பெற்றனர். அதேவேளை தேனுக நாணயக்கார இரண்டு பெனால்டி வாய்ப்புகளைப் புள்ளிகளாக மாற்றினார்.


இலங்கை அணியின் திடீர் தாக்குதல் மற்றும் பலமான தடுப்பாட்டத்தை எதிர்கொள்ள நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும், இறுதியில் அந்த அணி மூன்று ட்ரைகளை விளாசியது. இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 16-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் இரண்டாவது போட்டி மே மாதம் 3 ஆம் திகதி கண்டி நித்தவெல ரக்பி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


 ஈரான் உடனான அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் திட்​ட​மிட்டுள்​ளது.


போர் காரண​மாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மூடியுள்ளது. இதே​போல இந்த நீரிணை​யின் இரு​புற​மும் அமெரிக்க போர்க்கப்பல்​கள் நிறுத்​தப்​பட்டு உள்ளன. இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “காலம் கடந்து சென்று கொண்​டிருக்​கிறது. ஈரான் தரப்பு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்’’ என்று எச்சரித்துள்​ளார்.


ஈரான் உயர் தலை​வர் மோஜ் தபா கொமெய்னி நேற்று வெளியிட்ட அறிக்கை​யில், “ஈரான் தேசப்​பற்றாளர்​களின் ஒற்​றுமை​யால் எதிரிகளின் கூட்ட​ணி​யில் விரிசல் ஏற்​பட்டு இருக்​கிறது. ஈரான் மக்களின் மனதில் அச்சத்தை விதைக்க எதிரி நாடு முயற்சி செய்​கிறது. இதற்கு இடம் கொடுக்கக்​ கூ​டாது’’ என்று தெரி​வித்​துள்​ளார்.


இதனிடையே அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய பாகிஸ்​தான், துருக்​கி, எகிப்து உள்​ளிட்ட நாடு​கள் தீவிர முயற்சி செய்து வரு​கின்​றன. இதுதொடர்​பாக அமெரிக்க இராணுவ வட்டாரங்​கள் கூறியதாவது: சீனா​வில் இருந்து ஈரானுக்கு ஆயுதங்​கள், வெடிபொருட்​கள் கொண்டு செல்​வதை தடுக்க ஹோர்முஸ் நீரிணை பகுதியை முழு​மை​யாக முடக்கி உள்​ளோம்.


ஈரானின் சரக்கு கப்​பல்​களை அடுத்​தடுத்து கைப்​பற்றி வரு​கிறோம். இதனால் இராணுவ, பொருளாதா​ர ரீ​தியி​லான நெருக்​கடியை சமாளிக்க முடி​யாமல் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்​திடும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு​வேளை அமைதி பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்தால் ஹோர்முஸ் நீரிணையில் மிகப்​பெரிய தாக்​குதல் நடத்தப்படும். தற்​போது 19 போர்க்கப்பல்​கள் மத்​திய கிழக்​கில் முகாமிட்டுள்​ளன.


மேலும் மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் சுமார் 300-க்​கும் மேற்பட்ட போர் விமானங்​கள் உள்​ளன. ஹோர்முஸ் நீரிணை பகு​தி​யில் வீசப்​பட்டு உள்ள கண்ணிவெடிகளை படிப்​படி​யாக அகற்றி வரு​கிறோம். மேலும் கண்​ணிவெடிகளை வீசும் ஈரான் படகு​களை சுட்டு வீழ்த்த ஜனாதிபதி ட்ரம்ப் உத்​தர​விட்டுள்​ளார். இவ்​வாறு அமெரிக்​க இராணுவ வட்டாரங்கள்​ தெரி​வித்​தன.

 


ஐபிஎல் 2026 தொடரின் 29வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தியது.


6 போட்டிகளில் விளையாடியிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணி இன்னும் ஒரு போட்டியில் கூடத் தோற்கவில்லை.


லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் இதுவரை விளையாடியிருக்கும் 6 போட்டிகளில் 2 வெற்றியும், 4 தோல்விகளும் சந்தித்திருக்கிறது.


டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 254/7 என்று தங்கள் இன்னிங்ஸை முடித்தது. அந்த அணிக்காக கானலி 87 ரன்களும், பிரியான்ஷ் ஆர்யா 93 ரன்களும் விளாசினர்.


விளம்பரம்


அடுத்து விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது.


அதிரடி காட்டிய பிரியான்ஷ் - கானலி

93 ரன்கள் 4 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் விளாசினார்பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,93 ரன்கள் 4 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் விளாசினார்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே பிரப்சிம்ரன் சிங் அவுட்டானார். மொஹம்மது ஷமி வீசிய பந்தில் டக் அவுட் ஆகி அவர் வெளியேறினார். ஆனால், அதன்பிறகு களமிறங்கிய கூப்பர் கானலி, பிரியான்ஷ் ஆர்யாவுடன் இணைந்து ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்.


ஆரம்பத்தில் கானலி நிதானமாக ஆட, பிரியான்ஷ் ஆர்யா வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். மோசின் கான் வீசிய ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் தன் வேகத்தை இன்னும் பன்மடங்கு அதிகப்படுத்தினார் பிரியான்ஷ். அந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட, பவர்பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்தது கிங்ஸ்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

தேர்தலை புறக்கணிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிராமம், தமிழ்நாடு தேர்தல் 2026

'ஊர் பெயரால் பள்ளி, கல்லூரி, வங்கிகளில் அவமானம்' - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு கிராமத்தில் பிபிசி கள ஆய்வு

கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி. கேட்சை தவறவிட்டு வெற்றியையும் தவறவிட்டதா ராயல்ஸ்?

கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி - கேட்சை தவறவிட்டு வெற்றியையும் தவறவிட்டதா ராயல்ஸ்?

தொகுதி மறுவரையறை, வடக்கு, தெற்கு, தமிழ்நாடு

'தமிழ்நாட்டிற்கு 59 எம்.பி.க்கள்' என்ற அமித் ஷா வாக்குறுதியை ஏற்பதில் என்ன சிக்கல்? நீலகண்டன் பதில்

பாக் நீரிணையின் அமைப்பைக் காட்டும் வரைபடம்

பாக் நீரிணையில் முட்டிமோதும் இலங்கை - இந்திய மீனவர்கள்: வாழ்வாதாரப் போராட்டமும் தீர்வற்ற நிலையும்

End of அதிகம் படிக்கப்பட்டது

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதன்பிறகு கானலியும் அதிரடியில் இணைந்தார். அவர்கள் இருவரையும் லக்னோ பௌலர்களால் அவுட்டாக்கவும் முடியவில்லை. அவர்களின் வேகத்தையும் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.


பிரியான்ஷ் ஆர்யா 19 பந்துகளில் அரைசதம் அடிக்க, கானலி 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 13.2 ஓவர்களில் 182 ரன்கள் சேர்த்தது. 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த கானலி, பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே பிரியான்ஷ் ஆர்யா விக்கெட்டைக் கைப்பற்றினார் எம்.சித்தார்த். 37 பந்துகளை சந்தித்த பிரியான்ஷ் 93 ரன்கள் விளாசினார்.


அதன்பிறகு வந்த வீரர்கள் அதிரடி காட்டினாலும் சீக்கிரம் வெளியேறினார்கள். ஸ்டாய்னிஸ் மட்டும் சில நேரம் நிலைத்து நின்று விளையாடி 29 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ்.


லக்னோ அணி தரப்பில் பிரின்ஸ் யாதவ் மற்றும் தமிழ்நாடு ஸ்பின்னர் எம்.சித்தார்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


பஞ்சாப் இன்னிங்ஸ் முடிந்த பிறகு பேசிய கூப்பர் கானலி, "தொடக்கத்தில் பந்தின் தன்மைக்கேற்ப நிதானமாக விளையாடினேன், 22 பந்துகளில் 19 ரன்கள் என்பது சற்று நெருக்கடியான சூழல்தான், ஆனால் இறுதியில் சிக்ஸர்கள் அடிக்க எனக்கு நானே வாய்ப்பளித்துக் கொண்டேன். சில பந்துகள் பேட்டின் நடுப்பகுதியில் பட்டு தெறிக்க ஆரம்பித்தவுடன், அந்த வேகம் தானாக வந்துவிடும். பிரியான்ஷ் என்னிடம் அதிகம் பேச மாட்டார், ஆனால் பந்தை வெகுதூரம் அடிக்கக்கூடிய ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்டர்." என்று கூறினார்.


பஞ்சாப் ஐந்தாவது வெற்றி

ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ். லக்னோவுக்கு எதிராக 55 ரன்களில் வெற்றிபட மூலாதாரம்,ANI

மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்யவேண்டிய நெருக்கடி ஆரம்பத்தில் இருந்தே எல்எஸ்ஜி அணிக்கு இருந்தது. ஓவருக்கு சராசரியாக 13 ரன்கள் தேவைப்பட்டிருந்த நிலையில் ஆரம்ப கட்டத்தில் எப்படியும் 10 ரன்ரேட்டுக்கு குறையாமல் இன்னிங்ஸை எடுத்துச் சென்றார்கள் அந்த அணியின் ஓப்பனர்களாகக் களமிறங்கிய மிட்செல் மார்ஷ், ஆயுஷ் படோனி இருவரும்.


பவர்பிளேவின் கடைசி பந்தில் படோனி அவுட் ஆக, 6 ஓவர்கள் முடிவில் 61/1 என்ற ஸ்கோரில் இருந்தது லக்னோ. இது பஞ்சாப் அணியின் பவர்பிளே ஸ்கோரை விட 2 ரன்கள் தான் குறைவு.


ஆனால், மிடில் ஓவர்களில் பஞ்சாப் போல் லக்னோவால் வேகமாக ஆட முடியவில்லை. 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த மிட்செல் மார்ஷ், யுஸ்வேந்திர சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் கேப்டன் ரிஷப் பன்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார் அர்ஷ்தீப் சிங். அவர் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அடுத்த வந்த பூரன் இந்தப் போட்டியிலும் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாமல் 9 ரன்களில் வெளியேறினார்.


தொடர்ந்து தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்துக்கொண்டே போக, லக்னோ வீரர்கள் ரன்ரேட்டைப் பாதுகாத்துக்கொள்வதில் கவனம் செலுத்தினார்கள். 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் எய்டன் மார்க்ரம். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. அதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.


பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தபோது அவர்களுக்கு நிறைய பெரிய ஓவர்கள் அமைந்தன. அவர்கள் இன்னிங்ஸில் 7 ஓவர்களில் 15 அல்லது அதற்கு அதிகமான ரன்கள் எடுக்கப்பட்டன. அதில் 2 ஓவர்களில் 20 ரன்களும், 1 ஓவரில் 32 ரன்களும் வந்தன.


லக்னோ பேட்டிங் செய்தபோது இப்படிப் பெரிய ஓவர்கள் அதிகமாகக் கிடைக்கவில்லை. அவர்களால் 4 ஓவர்களில் மட்டுமே 15 அல்லது அதற்கு மேலான ரன்கள் எடுக்க முடிந்தது. அதில் 1 ஓவர் மட்டுமே மிடில் ஓவரில் (ஓவர்கள் 7-15) வந்தது. இது லக்னோவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.


இந்த சீசனில் ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ், 11 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.


பன்ட் சொன்னது என்ன?

போட்டி முடிந்ததும் இந்தத் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய எல்எஸ்ஜி கேப்டன் ரிஷப் பன்ட், "குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் சுட்டிக்காட்டுவது கடினம், பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். கவலைப்பட வேண்டிய சில விஷயங்கள் இருந்தாலும், பேட்டிங்கில் சில சாதகமான அம்சங்கள் இருந்தன." என்று கூறினார்.


ஆயுஷ் படோனி தொடக்க வீரராக இறங்கியது பற்றிப் பேசிய அவர், "இது இன்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல, ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான். முன்வரிசை வீரர்களின் அழுத்தத்தைக் குறைக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டோம். எங்கள் அணியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி மிகச் சிறப்பாகவும், உறுதியாகவும் விளையாடியதை பாராட்டியே ஆக வேண்டும்." என்றார்.


போட்டிக்குப் பிறகு பேசிய பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் வைஷாக் விஜயகுமார், "பயிற்சியாளர்கள் மற்றும் வீடியோ ஆய்வாளர்களிடம் நிறைய திட்டமிடல்கள் உள்ளன. அவர்களின் ஆதரவு இல்லாமல் இது கடினமாக இருந்திருக்கும். கடந்த இரண்டு போட்டிகள் எனக்கு சரியாக அமையவில்லை. பிரின்ஸ் இந்தப் போட்டியில் நன்றாக பந்துவீசினார், அவரிடமிருந்து சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். யார்க்கர் மற்றும் ஸ்லோயர் பந்துகளை நம்பி வீசினேன்.


எங்கள் பேட்டர்கள் விளையாடிய விதம் பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு பந்தும் சிக்ஸருக்குச் செல்லும் என்பது போலவே இருந்தது. லென்த் பந்துகள் இங்கு எடுபடாது என்று வீடியோ ஆய்வாளர்கள் சொன்னார்கள், அதனால் ஷார்ட் பந்துகளாக வீசினேன். சூழ்நிலை எதுவாக இருந்தாலும், நான் எத்தனை ஓவர்கள் வீசினாலும், சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே எனது அணுகுமுறை." என்று கூறினார். இவர் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.


டாஸில் என்ன நடந்தது?

டாஸ் வென்ற ரிஷப் பன்ட், "நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். அவர்கள் ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்கள் இந்தத் தொடரில் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்துள்ளனர், அதே சமயம் அது நாங்கள் சுதந்திரமாக விளையாடுவதற்கும் வழிவகை செய்கிறது. 200 ரன்களை விட 220 ரன்களை நோக்கி விளையாடுவது சிறந்தது. ராத்தி அணியில் இல்லை, அவருக்குப் பதிலாக சித்தார்த் உள்ளே வருகிறார்." என்று கூறினார்.


பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ், "நாங்கள் டாஸ் தோற்றதைப் பற்றி கவலைப்படவில்லை. இது எங்களுக்கு ஒரு சிறந்த சவால். முதல் இன்னிங்ஸில் எப்படி விளையாட வேண்டும் என்பதைப் பற்றி இது எங்களுக்கு ஒரு யோசனையைத் தரும். அவ்வப்போது உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்; இது நமக்கும் நமக்குமான போட்டி, எதிரணியைப் பற்றியது அல்ல. நாம் நிகழ்காலத்தில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். நாம் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறோம், ஆனால் இன்னும் நாம் அடையாத ஒரு தருணம் உள்ளது. ஒரு முழுமையான வெற்றியைப் பெறும் போட்டியாக இது அமையும் என்று நம்புகிறேன்." என்று கூறினார்.


டாஸ் வென்ற ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார் பட மூலாதாரம்,Surjeet Yadav/MB Media/Getty Images

படக்குறிப்பு,டாஸ் வென்ற ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார் (கோப்புப் படம்)

பிளேயிங் லெவனில் யார்?

பஞ்சாப் கிங்ஸ்


இந்தப் போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.


பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், நேஹல் வதேரா, சஷாங்க் சிங், மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல், ஜேவியர் பார்ட்லட்.


சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: வைஷாக் விஜயகுமார், ஹர்ப்ரீத் பிரார், சுயான்ஷ் ஷெட்கே, விஷ்ணு வினோத், யஷ் தாக்கூர்


லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்


இந்தப் போட்டிக்கான லக்னோ அணியில் திக்வேஷ் ராத்திக்கு பதிலாக தமிழ்நாடு ஸ்பின்னர் மணிமாறன் சித்தார்த் சேர்க்கப்பட்டார்.


பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், ரிஷப் பன்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), நிகோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, முகுல் சவுத்ரி, மொஹம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், எம்.சித்தார்த், மோசின் கான், ஆவேஷ் கான்.


சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: அப்துல் சமத், ஹிம்மத் சிங், மேத்யூ பிரிட்ஸ்கி, மயாங்க் யாதவ், திக்வேஷ் ராத்தி.

 


(வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு விளையாட்டு கழகம் (KSC) தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “ மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா ” என்ற சிறப்பு நிகழ்வை நாளை மறுநாள் (18) சனிக்கிழமை நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

காலையில் மரதன் ஓட்டம் இடம்பெறவிருக்கிறது.

மாலை கலாச்சார விளையாட்டு விழா  காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் கழகத் தலைவர் வை.கோபிகாந் தலைமையில் நடைபெறவுள்ளது.

விழாவில் பல்வேறு மரபு வழி கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகள், சிறப்பு கலைநிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

 பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிகஅரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன்  கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நிகழ்வை சிறப்பிக்க  மேலும் பல முக்கிய அதிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கழகத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் இதில் பங்கேற்க இருக்கிறார்கள்.

காரைதீவு விளையாட்டு கழகம் கடந்த 28 ஆண்டுகளாக விளையாட்டு மற்றும் சமூக ஒற்றுமையை, கலாச்சாரத்தை, அடையாளத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன், இவ்விழா அதன் சாதனைகளை கொண்டாடும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 2026 ஐபிஎல் சீசனின் 18வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

இதற்குமுன் விளையாடிய 3 போட்டிகளிலுமே தோற்றிருந்த சிஎஸ்கே இந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தி இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

மேலும், சேப்பாக்கத்தில் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸ் தோற்றிருந்தது. இன்று (ஏப்ரல் 11) அதற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் அக்‌ஷர் பட்டேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய டெல்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதரடியாக ஆடி சதமடித்து சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

 


மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி.


முடிவு எப்படி இருந்தாலும் சரி, பிடித்த அணி ஆடுவதை கண்கொட்டாமல் பார்த்துவிடவேண்டும் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் ஆசை. அந்த ஆசையை முன்தினம் கொல்கத்தா, பஞ்சாப் அணி ரசிகர்களிடமிருந்து பறித்துக்கொண்டது மழை. நேற்று கவுஹாத்தியில் நடைபெற்ற மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திலும் தன் வருகையைப் பதிவு செய்ய மழை தவறவில்லை.


கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை ஒருவழியாக 9 மணி அளவில் தன் ஆட்டத்தை நிறுத்தி கிரிக்கெட் ஆட்டத்திற்கு வழிவிட்டது. அவகாசமின்மை காரணமாக தலா 11 ஓவர்கள் என மாற்றியமைக்கப்பட்ட ஆட்டத்திற்கு டாஸ் போட வந்தார்கள் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்கும் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும்.



பொதுவாக இப்படியான மழைநாட்களில் டாஸ் ஜெயிக்கும் அணி கண்ணை மூடிக்கொண்டு பீல்டிங் தேர்வு செய்வதுதான் வழக்கம். இரண்டாவது இன்னிங்சில் பனி இறங்கி பவுலர்கள் கையில் இருந்து பந்து கைக்கொள்ளாமல் வழுக்கியபடி வரும், மீண்டும் மழை வரும்பட்சத்தில் டிஎல்எஸ் (DLS) முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்படும், ஸ்கோர் போர்ட் பிரஷர் இல்லாமல் தெளிவாக இலக்கு தெரிந்து ஆடலாம் என்பன போன்றவைதான் இந்த பீல்டிங் முடிவிற்கு காரணங்கள்.


ஆனால் முன்னெப்போதும் இல்லாத புதுப்பழக்கமாக முன்தினம் நடந்த கொல்கத்தா - பஞ்சாப் அணி டாஸின்போது பேட்டிங்கை தேர்வு செய்தார் கொல்கத்தா கேப்டன் ரஹானே. விளையாடிய சில ஓவர்களிலேயே அதற்கான விலையையும் கொடுத்தது அந்த அணி. அப்போதே அஸ்வின் போன்ற வீரர்களால் இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கவும்பட்டது. ஒருவேளை ஆட்டம் முழுமையாக ஆடப்பட்டிருந்து அதில் கொல்கத்தா தோற்றிருக்குமானால் இன்னும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பார் ரஹானே.


நேற்றைய ஆட்டத்தில் பாண்ட்யா கவனமாக டாஸ் வென்றவுடன் பீல்டிங்கை தேர்வு செய்தார். பாண்ட்யா மீண்டும் அணிக்குள் வந்திருப்பதால் ரூதர்போர்ட் இம்பேக்ட் வீரர்கள் பட்டியலுக்குப் போனார்.


ஆட்டத்தின் போக்கை மாற்றிய பவர்ப்ளே:

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐபிஎல்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

ரசிகர்களை பதற்றத்தில் நகம் கடிக்கவைத்து இறுதி ஓவர் வரை இழுத்துச்சென்று ஆட்டத்தை முடிப்பதை எல்லாம் ஐ.பி.எல் அருங்காட்சியகத்தில்தான் இனி காணமுடியும் போல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பவர்ப்ளே ஸ்கோர்கள் தான் ஆட்டத்தின் முடிவையே தீர்மானிக்கின்றன. எதிரில் எப்படிப்பட்ட பவுலராக இருந்தாலும் துணிந்து முதல் பந்திலேயே தூக்கியடிக்கும் இளம் வீரர்களின் வருகையே இதற்கு முக்கியக் காரணம்.


அப்படிப்பட்ட வீரர்கள் இருவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கொண்ட அணி ராஜஸ்தான். ஒருபக்கம் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் ஜெய்ஸ்வால், மறுபக்கம் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் வைபவ் சூர்யவன்ஷி. தீபக் சாஹர் வீசிய முதல் பந்து பவுண்டரிக்கு, அடுத்த பந்து சிக்ஸ், மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவது பந்தில் பவுண்டரி என ராஜஸ்தானுக்கு முதல் ஓவரிலேயே 22 ரன்கள்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

டிரம்ப்

இரான்-அமெரிக்கா இடையே 2 வார "போர் நிறுத்த" ஒப்பந்தம் : ஹோர்மூஸ் நீரிணையை திறக்கவும் ஒப்புதல்

அமெரிக்காவின் எஃப் 15 விமானம் வீழ்த்தப்பட்டது எப்படி? 

அமெரிக்க போர் விமானத்தை வீழ்த்திய 'தோளில் வைத்து ஏவப்பட்ட ஏவுகணை' - பாதுகாப்பு அமைப்பை ஊடுருவியது எப்படி?

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வால் – சூர்யவன்ஷி அதிரடி: ராஜஸ்தானிடம் மும்பை அணி சரிந்தது எப்படி?

'வேண்டாம்' என்று தோனி சொன்ன திட்டத்தைக் கடைபிடித்த சூப்பர் கிங்ஸ். டெத் ஓவர்களில் பிரச்னை ஏன்?

'தோனி நிராகரித்த திட்டத்தை செயல்படுத்தும் சிஎஸ்கே' - ஹாட்ரிக் தோல்வி பற்றி அலசும் முன்னாள் வீரர்கள்

End of அதிகம் படிக்கப்பட்டது

அடுத்த ஓவரை, இன்றைய தேதியில் மூன்று பார்மட்களிலும் சிறந்த பவுலராக அறியப்படும் பும்ரா வீச வருகிறார். அவர் வீசிய முதல் பந்தையே மிட் ஆன் பக்கம் தூக்கி சிக்ஸ் அடித்தார் சூர்யவன்ஷி. அவர் பும்ராவை எதிர்கொள்வது இதுவே முதல்முறை. ஆனாலும் உலகின் முதல்தர பவுலரை எதிர்கொள்கிறோம் என்கிற பதற்றம் துளியும் இல்லை அந்த 15 வயது பதின்பருவ இளைஞரிடம்.


மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐபிஎல்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய மாற்றம் இதுதான். எதற்கும் துணிந்த இளைஞர்கள் அனுபவம் வாய்ந்த சீனியர்களை கொஞ்சமும் தயக்கமில்லாமல் களத்தில் எதிர்கொள்கிறார்கள். வெற்றிக்காக சரிக்குச் சமமாய் முட்டி மோதுகிறார்கள்.


பும்ரா வீசிய நான்காவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ். இம்முறை டீப் ஸ்கொயர் லெக் பக்கம். பேட்ஸ்மேன்களுக்கு லெக் சைடில் மட்டுமே போடுங்கள் என மும்பை கோச் உத்தரவிட்டாரோ என்னவோ, தொடர்ந்து அதே பக்கம் போட்டு ரன்களை வாரிக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள் பவுலர்கள்.


மூன்றாவது ஓவர் போல்ட். மீண்டும் லெக் சைடில் பட்டு எகிறிய பந்துகள். மீண்டும் சிக்ஸர்கள். பவர்ப்ளேவில் ராஜஸ்தான் அணி 59 ரன்கள் எடுத்தது. சூர்யவன்ஷி ஒருகட்டத்தில் அவுட்டாகிவிட்டாலும் இறுதிவரை ஜெய்ஸ்வால் நின்று ஆட, 11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் 150/3.


மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐபிஎல்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சூர்யவன்ஷி ஒருகட்டத்தில் அவுட்டாகிவிட்டாலும் இறுதிவரை ஜெய்ஸ்வால் நின்று ஆடினார் (கோப்புப் படம்)

மறுமுனையில் மும்பை பேட்டிங்கில் கோட்டைவிட்ட இடமும் அதுவே. மும்பையின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ரோஹித், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மூவருமே களத்தில் பொறுமையாக நின்று பந்துவரும் போக்கை அவதானித்து கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கூட்டுபவர்கள்.


ஆனால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களின் அதிரடி இம்முறை இவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கவே இல்லை. முதல் ஓவரில் ரிக்கெல்டன், அடுத்த ஓவரில் சூர்யா, மூன்றாவது ஓவரில் ரோஹித் என அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்க முனைந்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பவர்ப்ளே முடிவில் மும்பை அணியின் ஸ்கோர் 30/3.


46 பந்துகளில் 121 ரன்கள் எடுக்கவேண்டும். ஓவருக்கு கிட்டத்தட்ட 16 ரன்கள். இதனால் 'அடி அல்லது அவுட் ஆகு' என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வெளியேறிக்கொண்டே இருந்தார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். ரவி பிஸ்னோய், சந்தீப் ஷர்மா என பந்துவீசிய அனைவருக்கும் ஏதோவொரு வகையில் விக்கெட்கள் வந்துகொண்டே இருந்தன. இறுதியாக 11 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்களை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை அணி.


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...


படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐபிஎல்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

திரும்புமா 2008-ன் மேஜிக்?

ஐ.பி.எல்லின் முதல் சீஸனின்போது எல்லா அணிகளுக்கும் ஒரு நட்சத்திர வீரர் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்யப்பட்டார். சென்னைக்கும் கூட ஏலத்தில் தோனி கிடைத்தார். ஆனால் அப்படியான வீரர்கள் யாருமில்லாமல் தொடருக்குள் நுழைந்த ஒரே அணி ராஜஸ்தான். ஏலத்தில் ராஜஸ்தான் அணிக்காக எடுக்கப்பட்ட ஜஸ்டின் லாங்கர், டேரன் லீமன், யூனிஸ் கான் போன்ற வீரர்களும் டி20 போட்டிகளில் அதிகம் ஆடியிராதவர்கள். முழுக்க முழுக்க இளைஞர்களின் துணைகொண்டு மட்டுமே அந்த முறை கோப்பையை வென்றார் கேப்டன் ஷேன் வார்னே.


ஸ்வப்னில் அஸ்னோத்கர், சித்தார்த் திரிவேதி என வார்னே பட்டைதீட்டிய வைரங்கள் ஏராளம். அவரின் பட்டறையிலிருந்து இந்தியாவிற்கு ரவீந்திர ஜடேஜா கிடைத்தார், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் உருவானார்.


அதன்பின் சில ஆண்டுகள் மற்ற அணிகளைப் போலவே சூப்பர்ஸ்டார்களுக்கும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வந்தது ராஜஸ்தான் அணி நிர்வாகம். அதில் பெரிய பலன் கிடைக்கவில்லை என்பதால் சமீபத்திய ஆண்டுகளில் மீண்டும் இளைஞர்கள் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறது.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பழைய மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த பஹ்ரியன் பிரீமியர் லீக் – 3ம் சீசனுக்கான ரியல் சம்பியன் 2K03 அணியின் ஜெர்சி வெளியீட்டு விழா 26.03.2026 அன்று கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ரியல் சம்பியன் 2K03 அணியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அணியின் எதிர்வரும் போட்டித் தொடருக்கான தயாரிப்புகளும், அணியின் ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் நிகழ்வு அமைந்தது.

மேலும், இவ்விழாவிற்கான முழுமையான அனுசரணை, கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் 2003 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயின்று தற்போது மத்திய கிழக்கில் வசித்து வரும் நண்பர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வு, பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து விளையாட்டு வளர்ச்சிக்காக வழங்கும் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

 


 வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு விளையாட்டு கழகத்தின் 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட
கயிறிழுத்தல் போட்டியில் "நல்லமா" அணி வெற்றிவாகை சூடியது.


காரைதீவு காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ,  பலரையும் கவர்ந்த இப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக அவுஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு விளையாட்டு கழகத்தின் முன்னாள் வீரரும்,   ஒஸ்கார் அமைப்பின் செயலாளருமான திருச்செல்வம் லாவண்யன் கலந்து சிறப்பித்தார். அவர் முன்னிலையில்,  விளையாட்டு உத்தியோகத்தர் எல்.சுலக்ஷன் ஆரம்பிப்பாளராக இருந்து நடாத்தி வைத்தார். ஆனந்தன் அமிர்தானந்தன் களத்தில் இருந்து நேர்முக வர்ணனை செய்தார்.

 கௌரவ அதிதிகளாக கழகப் போசகர்களான 
உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே . இராஜேந்திரன் , ஓய்வு நிலை உதவிக் கல்விப்ணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 மூன்று அணிகள் போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற "நல்லமா" அணியினருக்கும் ஏனையோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

 


(  வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவில் நேற்று முன்தினம்  காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் இடம்பெற்ற நடைபெற்ற  “KPL premier league  Trophy 2026” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் விஜயசாந்தன் தலைமையிலான அணி வெற்றிவாகை சூடியது.

வழமை போல் காரைதீவு விளையாட்டு கழகத்தின் நான்கு அணிகள் சிநேகபூர்வமாக பங்கேற்றன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அவுஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு விளையாட்டு கழகத்தின் முன்னாள் வீரரும்,   ஒஸ்கார் அமைப்பின் செயலாளருமான திருச்செல்வம் லாவண்யன் கலந்து சிறப்பித்தார்.

 கௌரவ அதிதிகளாக கழகப் போசகர்களான 
உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே . இராஜேந்திரன் , ஓய்வு நிலை உதவிக் கல்விப்ணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சுற்றுப் போட்டிக்கான அனுசரணையை ஆனந்தகுமாரசுவாமி துஸ்யந்தன் மற்றும் தி.லாவண்யன் ஆகியோர் வழங்கினர்.

இறுதியாக நடைபெற்ற பலரையும் கவர்ந்த கயிறிழுத்தல் போட்டியில் "நல்லமா" அணி வெற்றிவாகை சூடியது.
 
காரைதீவு விளையாட்டு கழகத்தின் 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


இலங்கை கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேனவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு ஒன்று அளித்துள்ளது.


பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்னரும் பங்களாதேஷ் அணி மூன்றாவது நடுவரிடம் மதிப்பாய்வு செய்ய குமார் தர்மசேன அனுமதித்தார் என்று குற்றம் சுமத்தி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 T20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான இறுதிப்போட்டி சற்றுமுன் தொடங்கியது.


இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.


அதன்படி முதலில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.


இதில் முதலில் களமிறங்கிய அபிசேக் ஷர்மா சஞ்சு செம்சொன் ஜோடி தங்களது அதிரடி ஆட்டத்தின் மூலம் இருவருமே அரைசதங்களை விலாசி அணிக்கு ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தனர்.


முதல் இன்னிங்ஸ் முடிவில் 05 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து அணிக்கு 256 ஓட்டங்களை வெற்றியிலகாக நிர்ணயித்தது இந்திய அணி.


பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு 10 ஓவர்கள் நிறைவிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன. எனினும் மேரியெட்போன்வோய் அரை சதம் விளாசியிருந்தார்.


அதன் படி நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்து 2026 ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தை தனதாக்கியது இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

இந்த இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

13வது ஓவரில், அக்சர் படேல் இந்தியாவிற்கு மற்றொரு திருப்புமுனையை வழங்கினார். அவர் டேரில் மிட்செலை ஆட்டமிழக்கச் செய்தார். இது சாண்ட்னர் மற்றும் டேரில் மிட்செல் இடையேயான 52 ரன்கள் கூட்டணியை முறியடித்தது.

முன்னதாக, நியூசிலாந்து அணி 8.1 ஓவர்களில் 72 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

அக்சர் - பும்ரா அபாரம்:  நியூசிலாந்து ஐந்து விக்கெட்டுகளை இழந்தது

பட மூலாதாரம்,Getty Images

வருண் சக்ரவர்த்தி 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த டிம் சீஃபர்ட்டின் விக்கெட்டை வீழ்த்தினார்.

நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த க்ளென் பிலிப்ஸை அக்சர் படேல் அவுட் ஆக்கினார்.

ஜஸ்பிரித் பும்ரா ரச்சின் ரவீந்திராவை ஒற்றை ரன்னில் பெவிலியன் திருப்பி அனுப்பினார்.

அக்சர் படேல் இந்தியாவுக்கு முதல் திருப்புமுனையை வழங்கினார். நியூசிலாந்து தொடக்க வீரர் ஃபின் ஆலனை 9 ரன்களுக்கு அவர் வீழ்த்தினார்.

முன்னதாக சஞ்சு, அபிஷேக் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அரைசதங்களால், இந்தியா 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீஷம் நான்கு ஓவர்களில் 46 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சஞ்சு சாம்சன் அதிரடி

பட மூலாதாரம்,Getty Images

அபிஷேக், சஞ்சு, கிஷன் அரை சதம்

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். இருப்பினும், முதல் ஓவரில் ஏழு ரன்களும், இரண்டாவது ஓவரில் ஐந்து ரன்களும் மட்டுமே எடுத்தனர்.

மூன்றாவது ஓவரில் சஞ்சுவும் அபிஷேக்கும் 15 ரன்கள் எடுத்து ரன் விகிதத்தை அதிகரித்தனர்.

நான்காவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அபிஷேக் சர்மா பவுண்டரிகள் அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது.

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா நல்ல தொடக்கம்

2026 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக, இந்திய தொடக்க வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்

அபிஷேக் சர்மா 18 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இந்தியாவின் ஸ்கோர் பவர்பிளேயில் 92 ரன்களை எட்டியது. இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பவர்பிளேயில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.

இருப்பினும், எட்டாவது ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திராவின் பந்து வீச்சில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்தார்.

அபிஷேக் சர்மா அரைசதம்

பட மூலாதாரம்,Getty Images

இஷான் கிஷனும் சஞ்சு சாம்சனும் ரன்களின் வேகத்தைக் குறைக்க விடவில்லை. அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 127 ரன்களை எட்டியது.

சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இது சாம்சனின் தொடர்ச்சியான மூன்றாவது அரைசதமாகும். டி20 உலகக் கோப்பையின் இறுதி மற்றும் அரையிறுதி இரண்டிலும் அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

14வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில், ரச்சின் ரவீந்திராவின் பந்து வீச்சில் சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.

சஞ்சு, அபிஷேக் மற்றும் இஷான் கிஷன் அரைசதம் - இந்தியா 255 ரன்கள் குவிப்பு

பட மூலாதாரம்,Getty Images

இதற்கிடையில், இஷான் கிஷன் 23 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 45 பந்துகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தியாவின் ஸ்கோர் வெறும் 15 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது.

16வது ஓவரில் சஞ்சு, கிஷன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை வீழ்த்தி, நீஷம் நியூசிலாந்தை மீண்டும் ஆட்டத்திற்குக் கொண்டு வந்தார்.சஞ்சு சாம்சன் 89 ரன்களும், கிஷன் 54 ரன்களும் எடுத்தனர்.

சிவம் துபே

இதற்கிடையில், கேப்டன் சூர்யகுமார் முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ஹர்திக் பாண்ட்யாவும் நீண்ட நேரம் கிரீஸில் நீடிக்க முடியாமல் 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

சிவம் துபே 8 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து இறுதியில் அதிரடி காட்டினார். திலக் வர்மா எட்டு ரன்கள் எடுத்தார். இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஃபைனல்: இந்தியா முதலில் பேட்டிங்

பட மூலாதாரம்,Getty Images

கேப்டன்கள் கூறியது என்ன?

"நாங்களில் முதலில் பேட்டிங் செய்வதை சிறப்பாக செய்துகொண்டிருப்பதால், இன்று முதலில் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி தான். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி போன்ற ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த பெரிய ஸ்கோர் பதிவு செய்து எப்போதுமே நல்ல விஷயம்" என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், "இந்திய அணியில் நிறைய அதிரடி பேட்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை சேஸ் செய்யக்கூடிய ஒரு ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தவேண்டும்" என்று கூறினார்.

நியூசிலாந்து அணியில் ஆஃப் ஸ்பின்னர் ஆல்ரவுண்டர் கோல் மெக்கான்கீ நீக்கப்பட்டு வேகப்பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டார்.

இந்தத் தொடரில் சேஸ் செய்த 4 போட்டிகளிலுமே நியூசிலாந்து வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை ஃபைனல் - இந்தியா முதலில் பேட்டிங்

பட மூலாதாரம்,Getty Images

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

இந்தியா: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்‌ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா.

நியூசிலாந்து: டிம் செய்ஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, மார்க் சேப்மேன், கிளென் ஃபிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, லாக்கி ஃபெர்குசன்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.