Showing posts with label Eastren. Show all posts



 (பாறுக் ஷிஹான்)


அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று(15) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் பெய்த திடீர் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை தடைப்பட்டிருந்தது.எனினும் தற்போது காலநிலை சிரமைந்துள்ளதன் காரணமாக மீண்டும் பொத்துவில் ,அக்கரைப்பற்று ,சம்மாந்துறை,நிந்தவூர்,அம்பாறை ,இறக்காமம் ,மத்திய முகாம் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட வேளாண்மை விவசாயிகளினால் நெல் அறுவடை இயந்திரங்கள் மூலமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.

நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,விளைச்சல் கடந்த போகங்களை விட திடீர் மழை வீழ்ச்சி காரணமாக குறைவடைந்த போதிலும் நெல்லுக்கான கேள்வி அதி உச்சத்தில் காணப்படுகின்றது.இது தவிர தாம் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கடன் பட்டு வேளாண்மை செய்கை மேற்கொண்ட போதிலும் தமது வேளாண்மை மழையினால் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அறுவடை செய்யப்படும் நெல்லினை கொள்வனவு செய்வதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்களை விட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும்,அரிசி ஆலை உரிமையாளர்களுமே அதிகளவில் நெல்லினை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்து வருகின்றனர்.இப்பேரும் போக வேளாண்மைச் செய்கை காலநிலை மாற்றம் விலைவாசி காரணமாக எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக அறுவடை இயந்திரங்கள் வயல் நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதனால் நெல் அறுவடையில் ஈடுபடுவது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.வேளாண்மை அறுவடை இடம்பெறும் நேரத்தில் கடும் மழை ஏற்பட்டதால் தமது வேளாண்மை நீரில் மூழ்கிக் காணப்படுவதால் அறுவடை செய்ய முடியாது உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.


ஏனைய போகங்களை விட இப்பெரும் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளதால் பாரிய நஸ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அடுத்த சிறுபோகத்தில் மீண்டும் எவ்வாறு நெற்செய்கையில் ஈடுபடுவது என்பது பற்றி பிரதேச விவசாயிகள் பெரும் கவலையினை தெரிவித்தனர்.

இது தவிர அண்மையில் பெய்த மழை மற்றும் காட்டு யானைகளின் வரவினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மையை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்

 

( வி.ரி.சகாதேவராஜா)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை   ஆதார வைத்திய சாலையில் சர்வதேச மகளிர் தின விழா பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று  (14) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

 மகளிர் தினத்தினை முன்னிட்டு பல வகையான நிகழ்வுகள் இடம் பெற்றன.
 
பெண்களுக்கான பற் சுகாதாரம் பேணும் நடவடிக்கை மற்றும் மகளிர் சுகவாழ்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சமகாலத்தில் நடைபெற்றன.

 வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்ட, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முதற்கட்டமாக ஒரு தொகை கண் வில்லைகள் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் வெள்ளிக்கிழமை  (14) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் டீ.பிரபா சங்கர் அவர்களிடம் கையளித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பவுண்டேஷன் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


 SLMC இல் களமிறங்குகிறார்  ஏ எச் நுபையில்


நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு  ஒட்டமாவடி சபைக்காக பதுரியா மாஞ்சோலை  வட்டாரங்களை பிரதிநிதுத்துவப்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(SLMC) கட்சியில் களமிறங்கியுள்ளார்

 


(  வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தில் தினமும் காரைதீவு மாவடிப்பள்ளி பிரதான வீதியினூடாக நூற்றுக்கணக்கான  யானைகள் கடந்து செல்கின்றன.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்து சிலமணி நேரம் ஸ்தம்பிதமடைகின்றது. மக்கள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்கின்றனர்.

இன்றும் நூற்றுக்கணக்கான யானைகள் பிரதான வீதியை குறுக்கறுத்துச் சென்றன.

அச் சமயம் வன விலங்குகள் பொறுப்பு உத்தியோகத்தர்கள் அங்கு கடமையில் நின்றனர்.

அம்பாறை கரையோரப் பகுதிகளில் அறுவடை நடைபெறும் சமகாலத்தில் யானைகளின் வருகை பலத்த சேதத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

அண்மையில் காரைதீவு நிந்தவூர் எல்லையில் உள்ள  அறுவடைக்கு தயாராக இருந்த இருவேறு விளைந்த வயல்கள் யானைகளின் அட்டகாசத்தால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நேற்று (13) கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வீதி போக்குவரத்து சீர்கேடு, கலாச்சார சீர்கேடு உள்ளிட்டவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார் அவர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கும் போது அல்லது முடிவடையும் போது பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்யும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியில் பற்றிய தகவல்கள் தெரிந்தால் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் குறித்த விடயம் தொடர்பில் தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என இக்கலந்துரையாடலில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள்கள் திருடுதல், பொதுப் போக்குவரத்தை சீர்குலைத்தல், சட்டவிரோதமாக பொதுப்போக்குவரத்திற்கு பங்கம் விளைவித்தல், தான்தொன்றித்தனமாக வாகன தரிப்பு செய்தல்,

வர்த்தக நிலையங்களின் விளம்பர பலகைகளை பிரதான வீதியின் நடைபாதையில் காட்சிப்படுத்துவதை தவிர்த்தல், சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுதல், கல்மனை மாநகரப் பகுதியில் மீண்டும் வழமை போன்று ஒரு வழிப்பாதையை மீண்டும் உருவாக்குதல், நீர் தங்கி காணப்படும் வீதிகளை இனங்கண்டு சீர் செய்தல், கலாச்சார சீரழிவுகளை தடுப்பத்கான பொறிமுறைகள், கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்டவைகள் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.

மேலும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு குறித்த சந்தேக நபர்கள் பற்றிய தகவலை அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.

 

பாறுக் ஷிஹான்

கல்முனை தலைமைய  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள்   பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இன்று (13) கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வீதி போக்குவரத்து சீர்கேடு கலாச்சார சீர்கேடு உள்ளிட்டவைகள் தொடர்பான முறைப்பாடுகள்  மற்றும்  சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் பங்கேற்புடன் ஆரம்பமானது.

இதன் போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் , சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  ஏ.எல்.ஏ.வாஹிட் ,கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து  பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி.நஸீர், உட்பட கல்முனை மாநகர பகுதியில் உள்ள அம்மன் கோயில் வீதி ,ஆர். கே. எம். வீதி ,உடையார் வீதி ,பொதுமக்கள், சிவில் பாதுகாப்பு அங்கத்தவர்கள், வர்த்தக உரிமையாளர்கள், பிரத்தியேக வகுப்பு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது   மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கும் போது அல்லது முடிவடையும் போது பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்யும் குறித்த நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் குறித்த விடயம் தொடர்பில்  தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என இக்கலந்துரையாடலில்  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் அண்மைக் காலமாக   மோட்டார் சைக்கிள்கள் திருடுதல் பொதுப் போக்குவரத்தை சீர்குலைத்தல் சட்டவிரோதமாக   பொதுப்போக்குவரத்திற்கு பங்கம் விளைவித்தல் தான்தொன்றித்தனமாக வாகன தரிப்பு செய்தல் வர்த்தக நிலையங்களின் விளம்பர பலகைகளை பிரதான வீதியின் நடைபாதையில்  காட்சிப்படுத்துவதை தவிர்த்தல் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுதல் கல்மனை மாநகரப் பகுதியில் மீண்டும் வழமை போன்று ஒரு வழிப்பாதையை மீண்டும் உருவாக்குதல் நீர் தங்கி காணப்படும் வீதிகளை இனங்கண்டு சீர் செய்தல்  கலாச்சார சீரழிவுகளை தடுப்பத்கான பொறிமுறைகள் கட்டாக்காலி மாடகள் நாய்களை கட்டுப்படுத்தல்  உள்ளிட்டவைகள் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.

மேலும்   பல்வேறு திருட்டுச் சம்பவம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்  பற்றிய தகவல் தெரிந்தால்   பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் குறித்த விடயம் தொடர்பில்  தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்  கல்முனை தலைமையக பொலிஸ்   நிலையத்தை   தொடர்பு கொண்டு  குறித்த சந்தெக  நபர்கள் பற்றிய தகவலை   அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர்



 நூருல் ஹுதா உமர்


திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (2025.03.08) மாலை மக்கள் சந்திப்பை மேற்கொள்வதற்காக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் மற்றும் தேசிய காங்கிரஸின் உப தலைவர் டாக்டர் ஏ.உதுமான் லெப்பை, தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் டாக்டர் எம்.வை.எம்.சியா மற்றும் மூதூர் மத்திய குழு தலைவர் ஏ.எஸ்.எம்.நிஹார் கலந்து கொண்டனர்.

இதன் போது நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் மக்கள் தேவைகளை கேட்டறிந்து. அவற்றினை மிக விரைவாக நிவர்த்தி செய்வதாகவும் மற்றும் மூதூர் பிரதேசங்களுக்கு பல அபிவிருத்திக்கான வேலை திட்டங்கள் செய்ய இருப்பதாகவும் மற்றும் பல வேலை திட்டங்கள் செய்திருப்பதாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தி இருந்தார். மற்றொரு மக்கள் சந்திப்பு மிக விரைவாக மூதூர் பிரதேசங்களில் மேற்கொள்ள இருப்பதாகவும் மக்களுக்கு தெரிவித்திருந்தார்.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகளில் இன்று திடீர் பரிசோதனை செய்யப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில்  பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். அஸ்லம் மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் பல்நோக்கு  அபிவிருத்தி உதவியாளர் ஏ. முஸம்மில் முதலானோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நொறுக்கு தீனிகளும், நிறக்குறியீடு இல்லாத பானங்களும் கைப்பற்றப்பட்டது டன் அக்கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் களும் செய்ய  உத்தேசிக்கப்பட்டுள்ளது. மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும். ஆகவே பொதுமக்கள் உங்கள் முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு 0753333453, 0776702703 , 077 375 1749 எனும் விளக்கங்களுக்கு அறியத்தாருங்கள் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
 



 பாறுக் ஷிஹான்

 
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள வியாபார நிலையங்கள், உணவகங்களின் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும், கல்முனை மாநகர சபை ஆணையாளருக்குமிடையிலான கலந்துரையாடலொன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்களை பதிவு செய்கின்ற போது சுகாதார ரீதியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள், முறையான திண்மக் கழிவகற்றல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத், கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகளான டொக்டர் என்.ரமேஷ், டொக்டர் திருமதி சரப்டீன், டொக்டர் என்.மதன், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் கலந்துகொண்டனர்


 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கடற்கரை வீதியில் உள்ள உணவகங்கள் இன்று (05)  திடீர் பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்ட துடன் QR ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்  பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். அஸ்லம் மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர் ஏ. முஸம்மில் முதலானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது  மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதுடன்  அவ்  உணவகங்களில் கடமை புரியும் ஊழியர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என  பொது சுகாதார பரிசோதகரினால் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்கள் உணவு கையாளும் நிறுவனங்களில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக அறிவிப்பதற்கு QR ஸ்டிக்கரும் உணவகங்களில் ஒட்டப்பட்டமையால் பொதுமக்கள்  தங்களது முறைப்பாடுகளை QR scan செய்வதன் மூலம் உணவகங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் தெரிவித்தார்.


 பாறுக் ஷிஹான்


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக 10 வீடுகள்  பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 28 வீடுகள் 2024ல் அமைப்பதற்காக நிதி உதவி வழங்கப்பட்டிருந்தன.

அத் திட்டத்தில் இன்றைய தினம் (05) கல்முனை, சேனைக்குகுடியிருப்பு பகுதிகளில் 10 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன .

இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ்  தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீ ரங்கன்  மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. குமுதராஜ்  உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருந்தாலும் வீடுகளை பெற்றுக் கொண்ட பயனாளிகளின் பங்களிப்புடனும் வீடுகள் அமைக்கப்பட்டிருந்தது.

 


நூருல் ஹுதா உமர்


வருடாவருடம் நாபீர் பௌண்டேசன் மேற்கொள்ளும் புனித ரமழான் நோன்பு காலத்திற்கான உலருணவு விநியோகம் திங்கட்கிழமை(3) மாலை சம்மாந்துறை புறநகர் பகுதியில் நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் ECM நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் பொறியியலாளரான உதுமான் கண்டு நாபீர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது பிரதான மார்க்க சொற்பொழிவுடன் கிறாஅத் ஓதப்பட்டு ஆரம்பமானதுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது நிகழ்வின் ஏற்பாட்டாளர் உதுமான் கண்டு நாபீர் தற்சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றியது டன் சகல மக்களும் நாட்டின் அபிவிருத்திக்காக கைத்தொழில் ஒன்றினை மேற்கொள்ளுதல் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.நிகழ்வில் ஊடகவியலாளர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த உலருணவு பொருட்களில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் சுமார் இதுவரை 100 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் நோன்புக்கஞ்சி தயாரித்து விநியோகம் செய்யும் பள்ளிவாசல்கள் முதலானவை இன்று (04) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஜே.எம். நிஸ்தார், ஏ.எல்.எம். அஸ்லம், ஏ. வாசித் அஹமட் மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது உணவகங்களில் மனித நுகர்வுக்கு  பொருத்தமற்ற முறையில் உணவைக் கையாண்ட  இரண்டு உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன்  மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு  அவ் உணவுப் பண்டங்கள் உணவக உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் உணவு கையாளும் நிறுவனங்களில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக அறிவிப்பதற்கு QR ஸ்டிக்கரும் உணவகங்களில் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

 


பாறுக் ஷிஹான்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட  பள்ளிவாசல்களில் விசேடமாக ரமழான் காலத்தில் வழங்கப்படும் நோன்புக்கஞ்சி  இன்று( 03 ) திடீர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன்   தலைமையில்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள்  முதலானோர் கலந்து கொண்டனர்

இதன் போது  நோன்பு கஞ்சி தயாரித்தல் , விநியோகித்தல் என்பனவற்றில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியம் பற்றி தெளிவூட்டப்பட்டதுடன்  பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் என்பனவற்றில் சூடான கஞ்சி விநியோகிப்பதனால் ஏற்படும் உடற் பாதிப்புகள்  சம்மந்தமான அறிவுரைகளும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 



பாறுக் ஷிஹான்


வயல் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்ற நிலையில் அப்பகுதியில் நரிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நெய்னாகாடு    மல்கம்பிட்டி பகுதிகளில் இவ்வாறு நரிகளின் நடமாட்டம் தென்படுகின்றது.

இலங்கை நரிகள் ( Sri Lankan Jackal) அல்லது தென்னிந்திய குள்ள நரிகள் என அழைக்கப்படும், Canis aureus naria எனப்படும்   நரிகள் என குறிப்பிடப்படுகின்றது.

வயல்வெட்டுக்கள் அல்லது அறுவடை முடிந்து செம்பு நிறத்தில் காணப்பட்ட வயற்பகுதிக்குள் செம்பு நிறங்களில்   நரிகளின் நடமாட்டம் தென்படுகின்றது.

வயலின் அடிக்கட்டை எது? நரி எது? என்று தெரியாத உருமறைப்புடன் அப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது.இவ்வாறான  நரிகள் ஒரு சூழற்றொகுதியின் சமனிலைக்கு மிக முக்கியமானது. நரிகள் மயில்கள் போன்ற பீடைகளைக் கட்டுப்படுத்தியும்இ மற்ற சிறு வேட்டையாடிகளின் குடித்தொகைகளை சமனிலைப்படுத்தியும் விவசாயிகளுக்கும்இ மக்களுக்கும் நன்மைகள் பயக்கின்றன என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும்இ பிரிவுத் தலைவருமான ஏ.எம்.றியாஸ் அகமட் குறிப்பிட்டுள்ளார்.


 

 பாறுக் ஷிஹான்

 
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நுகர்வோர் நீண்ட வரிசையில் இன்று (1) இருப்பதனை காணமுடிந்தது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள்  விநியோகஸ்தர்களுக்கான 03வீத தள்ளுபடியை நிறுத்தியை அடுத்து பெட்ரோலிய விநியோகஸ்தர் சங்கம் இன்று முதல் புதிய எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.

இதனால்  இன்று சம்மாந்துறை பகுதியில் உள்ள  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
இதே வேளை  சம்மாந்துறை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் இல்லை என்று அறிவித்தல் போடப்பட்டிருந்தது.

 
சம்மாந்துறை பகுதியில் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வாகன சாரதிகள்  தொழிலாளர்கள் மற்றும் சாதாரண பயணிகள்  பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

 


நூருல் ஹுதா உமர்


"கிளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka) வேலைத் திட்டத்தை வினைதிறன் மிக்கதாக சம்மாந்துறை தொகுதியின் செயல்படுத்தும் பொருட்டு (26) சம்மாந்துறை கல்லரிச்சல் பொட்டியர் சந்தியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக அம்பாறை கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ கமல் நெத்திமி, சம்மாந்துறை பிராந்திய நீர்பாசன பொறியியலாளர் ஆர்.வேல் கஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ரிசாட் எம் புஹாரி, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ,கே.முஹம்மட், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி எஸ் ஜெயலத், மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் குறிப்பாக சம்மாந்துறை மஸ்ஜிதுல் உம்மாவினை அண்மித்த பிரதேசம், அல் மர்ஜான் பாடசாலை அருகாமையில் போன்ற இடங்களில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்றது.



 ( வி.ரி.சகாதேவராஜா)


சர்வதேச தாய்மொழி தினம் காரைதீவு இ.கி.மி பெண்கள் பாடசாலையில் அதிபர் எஸ்.ரகுநாதன்  தலைமையில் பாடசாலையில் வெகுவிமர்சையாக இன்று (21) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

 இந் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள்,  கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

இந் நிகழ்வின் போது தமிழ் மொழி வாழ்த்து மற்றும் தமிழ் மொழி தின சிறப்புரையும் இடம்பெற்றது.

 


நூருல் ஹுதா உமர்


சவூதி அரேபியா அன்பளிப்பு செய்த ஈச்சம் பழங்கள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் இருந்து    சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும்  மாவடிப்பள்ளி பிரதேச பள்ளிவாயலுக்கு கிடைக்க பெற்றிருந்தது.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற ஈத்தம் பழங்கள் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் வைத்து சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும்  மாவடிப்பள்ளி பிரதேச பள்ளிவாசல்களுக்கு அந்தந்த பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த ஈத்தம்பழ விநியோகம் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தரினால் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

ஒரு பள்ளிவாயலுக்கு 18 கிலோ ஈத்தம்பழம் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பொருளாளர் எம்.எம்.சலீம், மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் நூருல் ஹுதா உமர், ஸாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஜெமீல் ஹாஜியார், மாவடிப்பள்ளி

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.