( வி.ரி.சகாதேவராஜா)
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (12) காரைதீவு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில், காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி.அருணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்தின் போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களால் மாவடிப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கி பல முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
இதன்படி, மாவடிப்பள்ளி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு (PMCU) நிரந்தரமாக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிற்றூழியர்களை நியமித்தல், மாவடிப்பள்ளி ஆதம் வீதி – ஆதம் குறுக்கு வீதியை 900 மீற்றர் நீளத்திற்கு கார்பட் வீதியாக அமைத்தல், மாவடிப்பள்ளி பிரதான வீதியில் உள்ள அரச காணியில் அரச காரியாலயங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் மூன்று மாடிகள் கொண்ட பல்தேவைக் கட்டடம் அமைத்தல் ஆகியவை முன்மொழியப்பட்டன.
மேலும் மாவடிப்பள்ளியில் I Project மூலம் அமைக்கப்பட்டுள்ள கார்பட் வீதிகளுடன் தொடர்புடைய வடிகாண்களுக்கு மூடி அமைப்பதற்கும், மாவடிப்பள்ளி தபாலக வீதியில் 120 மீற்றர் நீளத்திற்கு மூன்று அவத்தை மின் இணைப்பு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனுடன், பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மாவடிப்பள்ளி கமு/கமு/ அல் அஷ்ரஃப் மகா வித்தியாலய கேட்போர் கூடத்திற்கான நாற்காலிகள் கொள்வனவிற்காக 5 இலட்சம் ரூபாவும், மளிகைக்காடு நூரா பிந்து சாலிஹ் அத்தாயிஸ் பள்ளிவாசல் நிர்மாணத்திற்காக மேலும் 5 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேற்கண்ட முன்மொழிவுகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று, தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை பதில் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஹைஃபா, நஹாரியா, அர்கோ, கலிலி, அஃபுலா, கர்மெல் மலைத்தொடர், நாசரேத் மற்றும் திபெரியா உள்ளிட்ட வடக்கு பிராந்திய நகரங்களில் வசிப்பவர்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவும் பட்சத்தில், தூதரகத்தினால் வழங்கப்படும் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பகுதியில் மனித குடியேற்றத்திற்கு பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகள் வளர்க்கப்பட்டதால் அயல் வீட்டாருக்கு கடும் அசௌகரியங்களும் சுகாதாரத் தொந்தரவுகளும் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்க்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அயல் வசிப்பிடத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே. மதன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுற்றுச்சூழல் பிரிவிற்கு பொறுப்பான சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் அதிகாரிகள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட இடத்தில் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.
பரிசோதனையின் போது, குடியிருப்பு பகுதியின் மத்தியில் எருமை மாடுகள் வளர்க்கப்பட்டு, கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாததன் காரணமாக துர்நாற்றம் மற்றும் கொசு பெருக்கம் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக பொதுமக்கள் தொல்லை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பொதுச் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் வளர்ப்பதை தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் எதிர்காலத்திலும் கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா)
நூருல் ஹுதா உமர்
நூருல் ஹுதா உமர்
( வி.ரி.சகாதேவராஜா)
நூருல் ஹுதா உமர்
பாறுக் ஷிஹான்
நூருல் ஹுதா உமர்
ஒந்தாச்சிமட. கடற்கரைப் பகுதியில்.ரொக்கற்றின் பாகங்கள் என்று நம்பக்கதாக, சிதைந்த பாகமொன்று நேற்று மாலை கரை ஒதுங்கியுள்ளது.
இது சம்மந்தமாக, களுவாஞ்சிக்குடி, பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி, கபில அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.
இதேவேளை, களுவாஞ்சிகுடி கௌரவ நீதிவான் பிரதீபன் அவர்கள் ஒந்தாச்சிமடப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை வெள்ளப் பெருக்கினால் 45,387 குடும்பங்களைச் சேர்ந்த 144,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 153 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் இடம்பெயர்ந்து தொடர்ந்தும் 05 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்ததுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (07) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுரை 122 வீடுகள் முழுமையாகவும் 2,156 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இருவர் உயிரிழந்ததுடன் 12,469 குடும்பங்களைச் சேர்ந்த 34,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றினால் இதுரை 11 வீடுகள் முழுமையாகவும் 946 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டடு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை அரசாங்கம் மற்றும் பொது அமைப்புகள் வழங்கிக்கொண்டிருக்கின்றன.
நூருல் ஹுதா உமர்