Showing posts with label Eastren. Show all posts



நூருல் ஹுதா உமர்


பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை (30.04.2026) அன்று கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் இனம், பிரதேச வேறுபாடுகள் பாராமல் மே 06ம் திகதி நீதிமன்றுக்கு சமூகமளித்து அந்த  இளைஞர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

நாளுக்கு நாள் முஸ்லிங்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலை இலங்கையில் உருவாகி வருகிறது. முஸ்லிம் பெயர் தாங்கியவர்களாக, அடையாளம் தாங்கியவர்களாக இருந்தால் அரச பாதுகாப்பு இயந்திரம் உற்றுநோக்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள் பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்திற்கு கடந்த வாரம் சுற்றுலா சென்று அங்கு உணவருந்தவும், தங்குவதற்கும் நல்ல ஹோட்டல் தொடர்பில் விசாரித்தபோது பிரதேசவாசிகள் இஸ்ரேல் நாட்டவர்கள் தங்கும் பிரதேசம் நல்ல இடம் என்றும் அங்கே தான் நல்ல உயர்ரக ஹோட்டல்கள் இருப்பதாகவும் பரிந்துரைத்துள்ளனர்.

அதனடிப்படையில் அங்கு செல்ல முச்சக்கர வண்டி சாரதியிடம் கோரிய போதே பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை (30.04.2026) அன்று அவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா செல்லும் எல்லோரும் ஒழுங்கான உணவகங்களை சுற்றுலா தளங்களில் தேடுவது வழமையே. அதற்காக கைது செய்வதென்பது எந்த வகையில் நியாயம்?

இனிவரும் காலங்களில் உதிர்ந்து விழும் இஸ்ரேல் நாட்டவர்களின் முடியை முஸ்லிங்கள் மிதித்தால் கூட பாதுகாப்பு தரப்பு கைது செய்வார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த இளைஞர்களுக்கு உதவிய அவர்களின் குடும்பத்தினரை கூட தீவிரமாக பாதுகாப்பு துறையினர் கண்காணிக்கும் நிலை இருக்கிறது. இஸ்ரேல் நாட்டவர்களினால் நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை விட அவர்களின் பாதுகாப்புக்கே அரசாங்கம் அதிக நிதியை செலவிடவேண்டியிருக்கிறது.

பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களும் நீதித்துறை சரியாக செயற்பட்டமையால் 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் வழக்கு விசாரணை மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது கிழக்கில் உள்ள 100 கணக்கான சட்டத்தரணிகள் வேறுபாடுகள் பாராமல் நீதிமன்றுக்கு சமூகமளித்து சட்டத்தை காத்து மனித உரிமையை நிலைநாட்டி அந்த  இளைஞர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் பாராளுமன்ற அமர்வுகளில் இந்த அநீதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படியான நிலை தொடர்ந்தால் வெள்ளையர்கள் முதல் இப்போதைய ஆட்சி வரை நாட்டுக்கு விசுவாசமாக வாழும் முஸ்லிங்கள் இலங்கையில் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ்வதில் பாரிய சவால் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

 


நூருல் ஹுதா உமர்


காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், பிரதேச சபை உறுப்பினர் சின்னத்தம்பி சிவகுமார் அவர்களின் நேரடி கண்காணிப்பில் வீதி மின்விளக்குகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த வீதி மின்விளக்குகள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை விரைவாக நிறைவேற்றும் நோக்கில், பிரதேச சபையின் மின்னிணைப்பு ஊழியர்கள் இணைந்து பல்வேறு பகுதிகளில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், செயலிழந்த மின்விளக்குகள் பழுது பார்க்கப்பட்டதுடன், தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இரவு நேரங்களில் மக்களின் பாதுகாப்பு மேம்படும் என்பதுடன், போக்குவரத்து சீராக நடைபெறவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த பணிகள் கட்டுக்கோப்பாக அனைத்து வார்டுகளிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என பொறுப்புக்கூறிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்களும் இந்த நடவடிக்கையை வரவேற்று, தங்களது பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் வகையில் செயல்படும் பிரதேச சபைக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.


நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கி வரும் தாய் சேய் சுகாதார நிலையங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவற்றின் சேவைத் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (28) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் கலந்து கொண்டு, பிரதேச மக்களின் சுகாதார தேவைகள் மற்றும் நிலையங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார்.

குறிப்பாக நிந்தவூர்-22 மற்றும் நிந்தவூர்-11 பிரிவுகளில் அமைந்துள்ள தாய் சேய் சுகாதார நிலையங்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அங்கு வழமையாக இடம்பெற்று வந்த கிளினிக் சேவைகள் தற்காலிகமாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் அட்டப்பள்ளம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் குறித்த சேவைகளைப் பெற வருகை தரும் பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையை கருத்திற் கொண்டு, உடனடியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் குறித்த நிலையங்களின் நிலுவைப் பட்டியல்களை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த கட்டிடங்களை தொடர்ச்சியாக பராமரித்து சேவைகளை இடையூறு இன்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவதானிக்கப்பட்டன.

மேலும், குறித்த சுகாதார நிலையங்களின் பெளதீக சூழலில் காணப்படும் திருத்தப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. அவை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபை தனது முழுமையான கவனத்தையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் கண்காணிப்பு சிறப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் மாஹிர், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் சுல்பிகார், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, சிரேஷ்ட சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

பொதுமக்களின் சுகாதார சேவைகள் இடையூறு இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மாதாந்த சுகாதார ஒன்றுகூடல் இன்று, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு தங்களின் செயற்பாட்டு அனுபவங்கள் மற்றும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

மேலும், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர் கலந்து கொண்டு, பாடசாலை மருத்துவ பரிசோதனை (SMI) மற்றும் வர்த்தக நிலையங்களின் சுகாதார பரிசோதனை (Trade Inspection) தொடர்பான செயல்முறைகள், எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை முன்னெடுத்தார்.

அத்துடன், மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் கஃபூர் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார். தனது உரையில், 2035ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் காசநோயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான தேசிய நோக்கு, முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதில் சுகாதார பணியாளர்களின் பங்கு குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

மேலும், கல்முனை பிராந்திய தாய்-சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் டேனியல் கலந்து கொண்டு, பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் தொடர்பான விடயங்களில் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இறுதியாக, ஊழியர்களின் கருத்துப் பரிமாற்றத்துடன் இம்மாதாந்த ஒன்று கூடல் சிறப்பாக நிறைவு பெற்றது.


 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கமு/கமு/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில், தரம் 1 மற்றும் 4 மாணவர்களுக்கு பாடசாலை மருத்துவ பரிசோதனை (SMI Program) இன்று (27) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மாதன் அவர்களின் தலைமையில் ஒழுங்குபடுத்தப்பட்டதுடன், சுகாதார துறையினரின் பங்கேற்புடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்களின் உடல் நலம், வளர்ச்சி நிலை, பார்வை, கேள்வித்திறன் உள்ளிட்ட அடிப்படை சுகாதார அம்சங்கள் இப்பரிசோதனையின் போது மதிப்பீடு செய்யப்பட்டன. இதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே மாணவர்களில் காணப்படும் சுகாதாரப் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றிற்கு தேவையான சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்குவது முக்கிய நோக்கமாகக் காணப்படுகிறது.

பாடசாலை நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது. இத்தகைய சுகாதார பரிசோதனைகள் மாணவர்களின் நலனை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


 (  வி.ரி.சகாதேவராஜா)

அனுமதியின்றி அமைக்கப்பட்ட கல்குவாரி தொடர்பில் 
அப்பகுதி பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இச் சம்பவம் நேற்று  வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட 
திருக்கோவில் பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட நேருபுரம் பகுதியில் இடம்பெற்றது.

திருக்கோவில் பிரதேச சபையின் அனுமதியின்றி கல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு நேற்று முன்தினம் அப் பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நிலைமையினை சீராக்கும் வகையில் அவ்விடத்திற்கு விரைந்து விஜயம் செய்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  திருக்கோவில் பிரதேச சபையின்  தவிசாளர் சு. சசிகுமார்  திருக்கோயில் பிரதேச செயலாளர்  த. கஜேந்திரன்  மூவரும் இணைந்து, குறித்த கல்குவாரியானது அவ்விடத்திலிருந்து அகற்றப்படும் எனவும் இது சட்டத்துக்கு எதிரானது என்றும் மக்களின் கோரிக்கையை  கருத்தில் கொண்டு தெரிவித்தனர்.

 திருக்கோயில் பிரதேச செயலாளர் இது விடயம் தொடர்பாக தெரிவிக்கையில் குறித்த இடமானது குளத்திற்கு சொந்தமான இடம் எனவும் அது ஒரு அரச காணி எனவும் அவற்றில் கட்டடம் அமைக்க முடியாது எனவும் மக்களுக்கு தெரிவித்தார். மேலும்பாராளுமன்ற உறுப்பினர்  குறித்த கட்டடம் சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என அம்பாரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு குறித்த கற்குவாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது 

மேலும் அவ்விடமானது பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் குறித்த கட்டடமானது அகற்றப்படும் எனவும் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.

 


வி.சுகிர்தகுமார்      


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நடத்தப்படும் புற்றுநோய் மரணங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண மக்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சி திட்டத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று (24)விழிப்பூட்டும் செயலமர்வு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் ஒருங்கிணைப்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில் கிழக்கு மாகாண சுகாதாரம் சுதேச வைத்தியம் சிறுவர் நன்நடத்தை சமூக சேவை மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திசாநாயக்க கலந்து கொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.
கிழக்கில் அதிகரித்துவரும் புற்றுநோயினை தடுப்பதற்கு மக்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய அவசியம் தொடர்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் எஸ்.கரன் மற்றும் சிறுவர் நன்நடத்தை ஆணையாளர் சுபியான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸடீன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொதுமக்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கில் 300 ஆக பதிவு செய்யப்பட்டிருந்த புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை 3000 ஆயிரம் வரையில் வேகமாக அதிகரித்து வரும் நிலை தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் இவ்வாறு அதிகரிப்பதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கப்பட்டது.
அத்தோடு புற்று நோய் தொடர்பான விளக்கத்தினை கல்முனை பிராந்திய தொற்றாநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் பௌசாட் வளவாளராக கலந்து கொண்டு விரிவுரை மூலம் தெளிவூட்டினார்.

 


திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ற்றில் நீராடச் சென்ற ஒரே குடு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.


மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த இவர்கள் நேற்று (14) அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட செந்நெல் கிராமம் 2 பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி புற்கள் மற்றும் புதர்களால் மூடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் இருந்த பாதை, தற்போது சீரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதை பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு இடையூறாக இருந்ததுடன், அப்பகுதி மக்களால் பலமுறை அதிகாரிகளிடம் முறையிடப்பட்டிருந்தது. இருப்பினும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இருந்தது.

இந்நிலையில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் உடனடி சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது, பாதையில் காணப்பட்ட புதர்கள் மற்றும் புற்கள் அகற்றப்பட்டதுடன், வீதி மட்டப்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பாகப் பயணிக்கக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, அப்பகுதி மக்களின் நீண்டநாள் தேவையை பூர்த்தி செய்ததோடு, பிரதேசத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முயற்சியாகவும் பாராட்டப்படுகிறது.

மேலும், இவ்வாறான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என பிரதேச சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்      



புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின்  கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக 'சமுர்த்தி அபிமானி' புத்தாண்டு சந்தையினை நடாத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில்; சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தையினை இன்று(10) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் அருகாமையில் நடாத்தப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் க.நேசராஜா தலைமையில் இடம்பெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில்; பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாக  கலந்து கொண்டதுடன்; மற்றும் கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாபாவின் இணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளருமான ஆர்.ரதீசன் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூசைன்டீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.நிம்சத் முகாமைத்துவ பணிப்பாளர் த.பரமானந்தம் சிரேஸ்ட கருத்திட்ட முகாமையாளர் ரி.கமலபிரபா கருத்திட்ட முகாமையாளர் சிவப்பிரியா சுதாகரன்; சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான கவிதா கிருதாசன் எஸ்.சுரேஸ்காந் நிருவாக கிராம அலுவலர் பரிமளவாணி சில்வெஸ்டார்; உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி பிரிவினரால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்ட அதிதிகள் வியாபார நிலையங்களை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.
இதன் பின்னராக சிறந்த தொழில் முயற்சியாளர் இருவருக்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் 10 இலட்சம் கடன் ஒருவருக்கும் வீடு அமைப்பிற்கான காசோலை இருவருக்கும்; வழங்கி வைக்கப்பட்டது.
பின்னர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டனர்.
இதேநேரம் பல்வேறு உற்பத்தி பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சமுர்த்தி அபிமானி' வர்த்தகக் கண்காட்சியும், விற்பனைச்சந்தையும் இன்று (09) கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி. டீ.எம். முஹம்மட் அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளரும், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான எஸ்.ஜெகராஜன் அவர்கள் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.அன்வர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம் பழீல் ஆகியோரும் ஏனைய அதிதிகளாக சமுர்த்தி வங்கிச்சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எம்.அம்சார்,கருத்திட்ட முகாமையாளர் எஸ்.எல் அஸீஸ்,சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான ஐ.எல்.எஸ்.ஹிதாயா,எஸ்.எஸ் பரீரா,எம்.ஏ.எம் பைசால்,சிறுகைத்தொழில் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எல்.ஏ. ஜலீல் மற்றும் பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பின் தலைவர் ஏ.எச்.ஏ. நஜீம் ஆகியோரும் கலந்து கொண்டதுடன்,சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,
பிராஜா சக்தி பிரிவு தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வினை கல்முனை பிரதேச செயலக சிறுகைத்தொழில் அபிவிருத்திப் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.


சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட 
சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதாரவைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர் பதவியேற்பு 
( வி.ரி. சகாதேவராஜா)

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர், நேற்று (8) புதன்கிழமை, வைத்தியசாலையின் பணிப்பாளர் பணிமனையில் பதவியேற்றனர்.

சுகாதாரம் மற்றும் வெகுஜனஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட 16 உறுப்பினர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் முன்னிலையில் பதவியேற்றனர்.

புதிய வைத்தியசாலை குழுவின் தவிசாளராக, கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் அமைச்சரினால் நேரடியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இப் பதவியேற்பு வைபவத்தில்,   பிரதித் தவிசாளராக ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா மற்றும் பொருளாளராக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இ.
ரூபசாந்தன் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய சபையின் செயலாளராக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மருத்துவர் எஸ். ராகுலன் பதவிவழியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய உறுப்பினர்களாக 
வி. சந்திரன்,
செ. சுரேஷ்,  செ. சதீஸ்குமார் ,
ஆ .கதிரமலை , லெ. லெட்சுமிகாந்தன்,  ந. சௌவியதாசன்,செ. தங்கவேல் ,  எஸ். காந்தரூபன், கே. பிரகலாதன் , நி. நிமோஜனா,  க. சிவலிங்கம்,சி. சிவராஜகுமார், கா. மகேந்திரராசா  ஆகியோர் பதவியேற்றனர்.

இவர்களுக்கான, அமைச்சரின் நியமனக் கடிதங்களை பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

நிகழ்வில்,  நிருவாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள், தாதிய பரிபாலகர் என்.
சசிதரன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் திருமதி ரோஸி சுகுமார் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
( வி.ரி. சகாதேவராஜா)

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர், நேற்று (8) புதன்கிழமை, வைத்தியசாலையின் பணிப்பாளர் பணிமனையில் பதவியேற்றனர்.

சுகாதாரம் மற்றும் வெகுஜனஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட 16 உறுப்பினர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் முன்னிலையில் பதவியேற்றனர்.

புதிய வைத்தியசாலை குழுவின் தவிசாளராக, கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் அமைச்சரினால் நேரடியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இப் பதவியேற்பு வைபவத்தில்,   பிரதித் தவிசாளராக ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா மற்றும் பொருளாளராக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இ.
ரூபசாந்தன் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய சபையின் செயலாளராக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மருத்துவர் எஸ். ராகுலன் பதவிவழியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய உறுப்பினர்களாக 
வி. சந்திரன்,
செ. சுரேஷ்,  செ. சதீஸ்குமார் ,
ஆ .கதிரமலை , லெ. லெட்சுமிகாந்தன்,  ந. சௌவியதாசன்,செ. தங்கவேல் ,  எஸ். காந்தரூபன், கே. பிரகலாதன் , நி. நிமோஜனா,  க. சிவலிங்கம்,சி. சிவராஜகுமார், கா. மகேந்திரராசா  ஆகியோர் பதவியேற்றனர்.

இவர்களுக்கான, அமைச்சரின் நியமனக் கடிதங்களை பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

நிகழ்வில்,  நிருவாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள், தாதிய பரிபாலகர் என்.
சசிதரன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் திருமதி ரோஸி சுகுமார் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

 


நூருல் ஹுதா உமர் 



சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நவ்ஷாத் முஸ்தபா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவினர் இன்று (08) சம்மாந்துறையில் இயங்கும் இரண்டு அரபுக் கல்வி நிறுவனங்களில் விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இதன்படி, தப்லீகுள் இஸ்லாம் ஆண்கள் அரபிக் கலாசாலை மற்றும் திராசதுல் பெண்கள் அரபிக் கலாசாலை ஆகியவற்றில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, குறித்த கல்வி நிறுவனங்களின் பொதுவான சுகாதார நிலைமைகள், சமையலறை மற்றும் உணவுக் கூடங்களின் தூய்மை, கழிப்பறை வசதிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலை, உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்ட சில குறைபாடுகளை சரிசெய்வது தொடர்பில், குறித்த கலாசாலைகளின் நிர்வாகத்தினரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதன்போது, சுகாதாரத் தரநிலைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நிர்வாகத்தினருடன் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குவதே இவ்வாறான சுகாதார பரிசோதனைகளின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


 நூருல் ஹுதா உமர் 


மறைந்த சிறந்த ஊடகவியலாளர் "கலாபூசணம்" ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவாக நிந்தவூரில் ஒரு வீதிக்கு அவரது பெயரை சூட்டுமாறு கோரி அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்களிடம் இன்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.

இம்மகஜர் மூலம், ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றி சமூகத்திற்கு சிறப்பான சேவைகளை வழங்கிய ஏ.எல்.எம். சலீம் அவர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரின் பெயரை நிலைநிறுத்துவது அவசியம் என சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மேலும், அவரது ஊடகச் சேவைகள், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய பணிகள் மற்றும் பொதுமக்கள் நலனில் ஆற்றிய அர்ப்பணிப்புகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது முக்கியம் எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 (எம்.என்.எம்.அப்ராஸ்) 


 எதிர்வரும் தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜே.எம். நிஜாமுதீன் தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கல்முனை பொது சந்தை பகுதியில் உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று (08) பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. 

இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த மரக்கறி வகைகள் ,உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு சுகாதார விதிமுறைகளை மீறிய விற்பனையாளர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் சுகாதார விதிமுறைகள்,உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. 


பொது சுகாதார பரிசோதகர்களான எம். ஜூனைதீன், ஐ.எல்.எம் இத்ரீஸ், கே.எல். மன்சூர் , ஆர். எம். முஹ்சீன் ஆகியோர் மேற் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 வி.சுகிர்தகுமார்      


இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த மில்லர் புவுண்டேசன் நிறுவனத்தின் உரிமையாளரும் சந்தைப்படுத்தல் முகாமையாளமான டாக்டர் எஸ்.சுந்தர் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் அழைப்பின் பேரில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நலிவுற்ற பெண்களை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபிள்ளையின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் (08)இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் மூலம் வலுவூட்டி அவர்களை சிறந்த முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பில் தெளிவூட்டினார்.
மலேசியா நாட்டில் அன்மையில் இடம்பெற்ற சிறுதானிய உற்பத்தியினை ஊக்குவிக்கும் உலக தமிழ் வர்த்தக மாநாட்டில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் சார்பில் மன்ற இணைப்பாளர் அசோகா ஆறுமுகம் கலந்து கொண்டார்.
இதன் பயனாக இலங்கைக்கான விஜயத்தின்போது அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகைதந்த அவர் சுயதொழில் முயற்சி தொடர்பிலும் இதன் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது தொடர்பிலும் கலந்து கொண்ட பெண்களுக்கு விளக்கமளித்தார்.
இதற்கான இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் விளக்கினார்.
இதேநேரம் குறித்த வேலைத்திட்டத்தின் மூலம் ஆலையடிவேம்பு பிரதேசம் அடையவுள்ள நன்மை தொடர்பிலும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கும் மில்லர் புவுண்டேசன் நிறுவனத்திற்கும் பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்தார்.
இந்து இளைஞர் மன்றம் முன்னெடுத்திருக்கும் இப்பணி பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு சிறப்பாக முன்கொண்டு செல்லப்படும் என தலைவர் த.கயிலாயபிள்ளை குறிப்பிட்டார்.
அத்தோடு சுந்தர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்கள்  நேற்று (07) சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தனது கன்னி விஜயத்தை மேற்கொண்டார். 

இவ் விஜயத்தின் முக்கிய அம்சமாக, நீண்டகாலமாக காணி உரிமைக்காகக் காத்திருந்த சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 50 பயனாளிகளுக்கு காணி அனுமதிப் பத்திரங்களை அரசாங்க அதிபர் வழங்கி வைத்தார்.

 அத்துடன் சமூக நலன்புரித் திட்டங்களின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவுகளும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வித் தரத்தை ஊக்குவிக்கும் வகையிலான விசேட கல்விப் உதவிக்கான காசோலைகளும் இதன்போது கையளிக்கப்பட்டன. 

மாவட்ட அரசாங்க அதிபராகப் பதவியேற்றதன் பின்னர் சம்மாந்துறைப் பகுதிக்கு அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். 




(நூருல் ஹுதா உமர்)
சம்மாந்துறை விளையாட்டு தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், அதனை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே நீண்ட நாளாக நிலவி வந்த கவலைகளை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் குழு கடந்த 06.04.2026 அன்று ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தது.
அப்போது, குறித்த விளையாட்டு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். குறிப்பாக நீச்சல் தடாகத்தின் சேதமடைந்த நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இளம் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும், பிரதேச விளையாட்டு மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தடாகத்தை உடனடியாக சீரமைப்பது அவசியம் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, பிரதேச சபை தவிசாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நீச்சல் தடாகத்தை விரைவாக சீரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், சம்மாந்துறை பகுதியில் நீச்சல் விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும், இளைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த சிறந்த சூழல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கள விஜயத்தில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான், ஏ.சி.எம். நயீம், முஹம்மட் ஆசிக், முஹம்மட் ஹாலீத், பஹ்மி சுலைமான், எம்.எல்.ஏ. கபூர் முஹம்மது ரிஸ்விகான், ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத்தொகுதி அப்துல் ஸலாம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 


வரிப்பத்தான்சேனை பெரியபாலம் ஒளியூட்டல் – நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு


நூருல் ஹுதா உமர் 


வரிப்பத்தான்சேனை பகுதியில் அமைந்துள்ள இறக்காமம் பிரதேச சபையின் நுழைவாயிலாக விளங்கும் பெரியபாலம் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த ஒளியூட்டல் குறைபாடு தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.


சுற்றுலா அமைச்சின் “நகரங்களை அழகுபடுத்தல்” திட்டத்தின் கீழ் இந்த ஒளியூட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இறக்காமம் பிரதேச சபை தலைவர் கௌரவ எம்.எல்.எம். முஸ்மி அவர்களின் வழிகாட்டலில், முன்னாள் உதவி தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான என்.எம். ஆஷீக் மற்றும் உறுப்பினர் ஏ.ஜி.எம். சாக்கீர் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.


மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவி செய்த உதவி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், சபை செயலாளர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் வரிப்பத்தான்சேனை பிரதேச மக்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இத்திட்டத்தின் மூலம், இரவு நேரங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பும், பகுதியின் அழகும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


 நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் முன்னோடித் திட்டமிடல் மற்றும் ஆலோசனைக்கமைய, சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (02 ) பாடசாலை சுகாதார மருத்துவ பரிசோதனை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் குழுவினரும், பொதுச் சுகாதார பரிசோதகர்களும், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களும் கலந்து கொண்டு, மாணவர்களின் சுகாதார நிலைகளை விரிவாக மதிப்பீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் உடல்நலத்தை மேம்படுத்த தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

மேலும், பாடசாலை சுற்றுச்சூழல் பரிசோதனை மற்றும் சிற்றுண்டி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனையின் போது, மாணவர்கள் உட்கொள்ள தகாத உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனுடன், மாணவர்களின் உடல் நலன் மற்றும் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கை, மாணவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.