Showing posts with label Eastren. Show all posts



 வி.சுகிர்தகுமார் 0777113659     


 ஜனாதிபதியின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கமைய கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கமைவாக திருக்கோவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் இன்று (09) முன்னெடுக்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தில் உப தவிசாளர் மற்றும் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் பிரதேச சபை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தம்பட்டை பெரிய முகத்துவாரம் கடற்கரை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப்பணியில் நாளாந்தம் பொதுமக்களால் போடப்படும் கழிவுகள் அகற்றப்பட்டன.
அத்தோடு கழிவுகள் வகைப்படுத்தி பிரதேச சபை கழிவகற்றல்  வாகனங்களின் ஊடாக அகற்றப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் அரசாங்கத்தின் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு அனைத்து திணைக்களங்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் இதன் அடிப்படையில் அழைப்பு விடுத்து வருகை தந்த அனைத்து திணைக்கள அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.



 ( வி.ரி சகாதேவராஜா)


மட்டக்களப்பு விவேகானந்தபுரம் ராமகிருஷ்ண மிஷன் சுவாமி விவேகானந்தர் பாலர் பாடசாலையில் சுவாமி ஜீவானந்தர் ஞாபகார்த்த பாலர்  விளையாட்டரங்கு இன்று (5) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது .

இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி  அக்சராத்மானந்தா ஜீ மகராஜ் அதனை திறந்து வைத்தார் .

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீ சுவாமி உமாதீசானந்தா ஜீ ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.

 முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

 

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஆ. தர்மதாச தெரிவு.....


ஜே.கே.யதுர்ஷன்


அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றது இத் தெரிவில்  இலங்கை  தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஆ. தர்மதாச (தொண்டமான்) திறந்தவெளி வாக்கெடுப்பு மூலம் தெரிவாகினார்......


மேலும் ஆலையடி வேம்பு பிரதி தவிசாளராக சுயேட்சை குழு ஊடக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் க.ரகுபதி போட்டி இன்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இதன் போது தவிசாளராக தெரிவாகி இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஆ.தர்மதாச அவர்கள் ஊடகங்களூக்கு கருத்து தெரிவிக்கையில் ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துடன் குறித்த பிரதேசத்தின் ஊழல் அற்ற அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதுடன் மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என அவர்தெரிவித்தார்.....


மேலும் குறித்த நிகழ்வானது கிழக்கு மகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் MR.ALM.AZMI தலைமையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது



 ( வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச மாளிகைக்காடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக எம்.எச். நாசர் நியமிக்கப்பட்டுள்ளார்


இவர் 2018ம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் நேரடி அரசியலுக்கு வந்தார்.

அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு பிரதேசத்தின் முதலாவது அமைப்பாளராக மறைந்த கட்சியின் தவிசாளர் முழக்கம் மஜீட் பணியாற்றினார்.
அவரைத் தொடர்ந்து 
25 வருடங்களாக தற்போதைய காரைதீவு பிரதேச சபையின் உபதவிசாளர் எம்எச்எம். இஸ்மாயில் அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளராட்சி மன்றத் தேர்தலில் 23 சொற்ப வாக்குகளால் நாசர் மாளிகைக்காடு கிழக்கில் தோல்வியுற்றார்.

மாளிகைக்காடு பிரதேசத்தில் பல அமைப்புக்களில் தலைவராக இருந்து சமூக சேவையில் ஈடுபட்டுவரும் நாசர் இன நல்லுறவுக்காக பாடுபட்டதற்காக காரைதீவு பிரதேச செயலகத்தால் "விபுல நேசன்" என்ற பட்டத்துடன் 2009 இல்  கெளரவிக்கப்பட்டார்.

 


செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது மேலும் இரு மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டது.



 நூருல் ஹுதா உமர்


காரைதீவு சபை புதிய தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் மற்றும் புதிய உப தவிசாளர் முஹமட் ஹனிபா முஹமட் இஸ்மாயில் ஆகியோரின் பதவியேற்பு வைபவம் காரைதீவு பிரதேச சபையில் இன்று (27) காலை சுபவேளையில் பிரதேச சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் வை.கோபிநாந்த், என்.எம்.றணீஸ், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர், ஏ.ஆர்.எம். ஹில்மி, ஏ.பர்ஹாம், பிரதேச சபை செயலாளர்  உட்பட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பதவியேற்பு வைபவம் முடிவுற்றதும் தவிசாளர் அறையில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

 


நூருல் ஹுதா உமர்


போசாக்கு மாதத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினரின் ஏற்பாட்டில், பல்வேறு வகையான போசணை  மிக்க உணவுகளை அறிமுகப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

போசணை மிக்க உணவுகளை வீட்டில் எளிமையாகவும், குறைந்த செலவில் தயாரிக்க கூடிய வகையில் தயாரித்து, அவற்றை தாய்மார்களுக்கு அறிமுகப்படுத்தும் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வாக இது அமைந்தது.
நிகழ்வில் விற்றமின் மாமா உட்பட அனைத்து வகையான போசணை மிக்க உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உண்ணக் கூடாத உணவுகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினரின் ஏற்பாட்டில்  அன்னையர் ஆதரவு குழு அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டதுடன்.  மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் போசணை மிக்க மதிய உணவும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் அலுவலகத்தின் பொதுச் சுகாதார தாதிய சகோதரி, மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது, பொது சுகாதார மாதுக்கள் மற்றும் பிற சுகாதார உத்தியோகத்தர்கள் இணைந்து சமகால பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்டதுடன் தாய்மார்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வையும் வழங்கினர்.

மேலும்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்கள் நிகழ்வில் உரையாற்றும் போது
"சத்து  என்பது ஒரு குழந்தையின் அடித்தள வளமாகும்".சத்தான உணவுடன் அவர்களின் எதிர்கால வளர்ச்சியும் அமைந்துள்ளது, சிறு வயதிலேயே போசணை மிக்க உணவுகளை வழங்குவது வாழ்நாள் முழுவதும் நோயற்ற வாழ்க்கைக்கு வழிகோலும் என்று கூறினார்.



 ( வி.ரி. சகாதேவராஜா)

திருக்கோவில்  பிரதேச செயலகத்தின் பதில் உதவி பிரதேச செயலாளராக ரெட்னம் சுபாகர்  நியமிக்கப்பட்டுள்ளார் .

ஆலையடிவேம்பு  பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளரான  ரெட்னம் சுபாகர்  திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் முன்னிலையில் நேற்று  தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

ஏலவே உதவி பிரதேச செயலாளராகவிருந்த திருமதி நிருபா வைத்திய விடுமுறையில் நிற்பதால் திரு சுபாகர் பதிலாக நியமிக்கப்பட்டார்.



 ( குமுக்கனிலிருந்து  வி.ரி.சகாதேவராஜா)

 
கதிர்காம பாதயாத்திரையை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கான 24 மணி நேர வைத்திய சேவையொன்று குமுக்கன் நதியோரத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது .

கிழக்கு மாகாணத்தையும் ஊவா மாகாணத்தையும் பிரிக்கும் எல்லையில் உள்ள குமுக்கன் நதி தீரத்தில் வைத்திய முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் நிசங்கவின் ஏற்பாட்டில் அந்த சேவை நடைபெற்று வருகிறது.
 
அம்பாறை பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ரங்க சந்திரசேன தலைமையிலான வைத்தியர் குழுவினர் இச் சேவையை 24 மணி நேரமும் நிகழ்த்தி வருகின்றனர்.

இச் சேவை தொடர்பாக பணிப்பாளர் டாக்டர் நிஸங்க, பணிப்பாளர் டாக்டர் ரங்க, சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் சுப்பிரமணியம் புனிதராஜன் மற்றும் வைத்தியர்கள் களத்தில் நின்று கண்காணித்து வருகின்றார்கள்.

இங்கு இம்முறை புதிதாக நடமாடும் வைத்திய  பஸ் சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது .
அவசர அவசிய சிகிச்சைகள் மற்றும் ஏனைய விடயங்களுக்காக இந் நடமாடும் பஸ் சேவை 
நடைபெற்றுவருகிறது.

அத்துடன் 24   மணி நேரமும் இயங்கக்கூடிய வண்ணம் அன்புலன்ஸ் சேவை ஒன்றும் அங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது . நாவலடியில் இயங்கிவரும் மருத்துவ முகாமில் இருந்து மேலதிக அவசர அவசிய சிகிச்சைகளுக்காக குமுக்கன் பிரதான வைத்திய முகாமிற்கு நோயாளிகள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அருகில் கல்முனை ஆதரவைத்தியசாலையின் சேவையும் தொடர்கிறது.

திருவிழா மற்றும் யாத்திரைக்காக வழமைபோல் நியமிக்கப்படும் பிராந்திய சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் சுப்பிரமணியம் புனிதராஜன்   24 மணி நேரமும் களத்தில் நின்று வழமைபோல் பாதயாத்திரீகர்களின் சுகாதார சேவைகளை கவனித்து வருகின்றார்.
 
இதேவேளை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் குமண வனஜீவராசிகள் திணைக்கள பொறுப்பதிகாரி விமலசேன உள்ளிட்ட குழுவினர் பாதையாத்திரை நலன்புரிவசதிகளை கண்காணித்து வருகின்றார்கள்..

 


( வி.ரி.சகாதேவராஜா)


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று  (21) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ. சுமந்திரன் கலந்து சிறப்பித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கல்முனை தொகுதி அமைப்பாளர் அருள்.நிதான்சன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் திருக்கோவில் தவிர்ந்த பொத்துவில் ஆலையடிவேம்பு காரைதீவு சம்மாந்துறை நாவிதன்வெளி ஆகிய 05சபைகளின் 24 உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தலைமையில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் தொடர்பாக பிறிதொரு அறையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.



 (பாறுக் ஷிஹான்)


ஈரான் - இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில்  அம்பாறை  மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ,பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு ,சம்மாந்துறை ,நிந்தவூர், அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று , உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்வதுடன் இதையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு குறித்து போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என   மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே வேளை  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் தற்போது  ஏற்பட்டு வருகின்றது.அம்பாறை   மாவட்டத்தில்  உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன் சில இடங்களில் இல்லை என்ற வாசகத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் தற்போது  சில இடங்களில் மின்சாரம் தடைப்படுவதனாலும் எரிபொருள் நிலையங்கள் சில மூடப்பட்டுள்ளதை இன்று அவதானிக்க முடிகின்றது.மேலும் பொலிஸார்  எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எரிபொருள் இன்மையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக என்றுமில்லாதளவில் நீண்ட வரிசைகளில் மக்கள் முண்டியடிக்க ஆரம்பித்துள்ளனர்.இதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கையிருப்பு சடுதியாக தீர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயங்களில்  எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நின்ற வரிசைகளை விட  தற்போதே நீளமான வரிசைகளில் மக்கள் நிற்பதை அவதானிக்க முடிகிறது.

மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ வாகனங்களையே அதிகமாக பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காணப்பட்டது.

இதேநேரம் டீசலை பெற்றுக்கொள்ளும் பொருட்டும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் காத்திருந்தன.

இதேநேரம் அரச உத்தியோகத்தர்களும் பெற்றோல் தட்டுப்பாடு உருவாகலாம் எனும் அச்சத்தில் நீண்டதூரம் கடமைக்கு செல்வது தொடர்பிலும் கவலை அடைந்துள்ளனர்.

இருந்தபோதிலும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தற்போதைய நிலைக்கு உருவாக வாய்ப்பில்லை என்பதும் அறியக்கூடியதாக அமைந்துள்ளது.


எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
 
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானித்துள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும்இ முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெற தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

எனவேஇ பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

 


( வி.ரி. சகாதேவராஜா)


இரண்டாவது காலாண்டிற்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்  சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார்  தலைமையில் நேற்று  நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு அம்பாறை மாவட்ட தேசிய கணக்காய்வு அத்தியட்சகர்  எவ்.நிஸார்டீன்  மற்றும் கிழக்கு  மாகாணக் கணக்காய்வு உத்தியோகத்தர் எம்.ஜெமீல்  ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலைகளில் அவதானிக்கப்படும் ஐயவினா தொடர்பான  சந்தேகங்களுக்கான  விளக்கங்களும் வழங்கப்பட்டது.

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகக் கணக்காளர் சீ.திருப்பிரகாசம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான  வை.அரபாத் முகைடீன் ,  திருமதி நுஸ்றத் நிலோபறா, பி.பரமதயாளன் ஏஎம்எம்..சியாத், கோட்டக் கல்விப்பணிப்பாளர் மஹ்மூத் லெவ்வை மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.


காரைதீவில் களைகட்டிய மகளிருக்கான பவளவிழா எல்லே கார்னிவெல் !!!
கோலாகலமான விபுலானந்தா மைதானம்!
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவு பவளவிழாவினை முன்னிட்டு  2003 O/L  மற்றும் 2006 A/L மாணவர் ஒன்றியம் நடாத்திய மகளிருக்கான பவளவிழா எல்லே சுற்றுப்போட்டி கடந்த இரண்டு தினங்களாக களைகட்டியது.

2000 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான 20 பழைய மாணவிகள் அணியினர் இவ் எல்லே சுற்றுப்போட்டி யில் இரண்டு நாட்கள் பலத்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஒன்றியத்தலைவர் என்.றிஷான்த் தலைமையில் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கோலாகலமாக நடைபெற்றது.

ஊரே திரண்டிருந்த இவ்வரலாற்று நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன் கலந்து சிறப்பித்தார்.

 கௌரவ அதிதிகளாக  பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.சஞ்சீவன், ஏ. பார்த்தீபன் , கல்லூரி அதிபர் எம். சுந்தரராஜன் ,ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்களான வி.ரி. சகாதேவராஜா, கே. செல்லத்துரை, ஆசிரிய ஆலோசகர் எஸ்.சிவபரன் , பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திருமதி டாக்டர் ஜீவராணி, பழைய மாணவர் சங்க செயலாளர் எல்.சுலக்ஷன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .

20 அணிகள் இரண்டு நாட்களாக கலந்து கொண்ட இச் சுற்றுப்போட்டியில் 38 போட்டிகள் இடம்பெற்று இறுதிப்போட்டி 2017 ராவணா அணியினருக்கும் 2019 ஸ்பார்ட்டன் அணியினருக்கும் இடையே நடந்தது.

 இறுதிப்போட்டியில் 2017 ராவணா அணி வெற்றி பெற்று  வரலாற்று சாதனை படைத்தது.

அவர்களுக்கான வெட்டிக்கிண்ணங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. கற்பித்த ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட்டார்கள்.

 


பாறுக் ஷிஹான்


வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூன் மாதம் 04ம் திகதி மூடப்படும் என, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம  தெரிவித்தார்.

கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா 26 ம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவ அத்துடன் நிறைவடையும் என கூறினார்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன் ஆலயத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்து கதிர்காமத்தை சென்றடைவது வழக்கமாகும்.

வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி காலை உகந்தமலை முருகன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் ஆரம்ப வைபவத்தை அடுத்து காட்டுப்பாதை காலை ஆறு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை மாத்திரமே திறந்து இருக்குமெனவும் அக் காலப்பகுதிக்குள் மட்டுமே காட்டுக்குள் செல்ல யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்

 


நூருல் ஹுதா உமர் 


அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் நகரத்தில் அமைந்துள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் இம்மானுவேல் க்ரெய்க் (Emmanuel Kreike) கடந்த 2025.06.03 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைகழகத்துக்கு விஜயம் செய்திருந்தார் 

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் புவியல் துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிரின் அழைப்பின்பேரில் பேரில் வருகைதந்திருந்த பேராசிரியர் இம்மானுவேல் க்ரெய்க், உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் அவர்களை சிநேகபூர்வ அடிப்படையில் சந்தித்து பல்வேறு விடயங்களையும் கலந்துரையாடினார்.



 நூருல் ஹுதா உமர்


சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை மையமாக கொண்டு டயகோணியா மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி என்பனவற்றின் அனுசரணையில் இன்று ஐந்தாம் திகதி விழிப்பூட்டல் ஊர்வலமும், கருத்தரங்கும் கல்முனையில் நடைபெற்றது.

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.ஏ. றிசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.எல்.எம். முதர்ரீஸ், வலய ஆணையாளர் எம்.எம். சியாம், சுற்றாடல் அதிகார சபை உயர் அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னோடி மாணவர்கள், கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். 

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயம், மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலயம், கல்முனை ஆர்.கே.எம். வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்- அக்ஸா மகா வித்தியாலயம், சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயம் ஆகியவற்றின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஏனைய பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்கள் போன்றோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவது, அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமான விடயங்கள் தொடர்பான விடயங்களை கருத்தரங்கின் வளவாளர் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப்பணிப்பாளர் எம்.எ.சி.எம். றியாஸ் நிகழ்த்தினார்.

மேலும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மாவட்ட இணைப்பாளர் யூ.எல். ஹபீலா உட்பட முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

 


வி.சுகிர்தகுமார்                   


 திருக்கோவில் பிரதேச சபைத்தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் பதவியேற்றதன் பின்னர் இன்று முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைவாக பிளாஸ்டிக் மூலமான மாசுபடுத்தலை முடிவுக்கு கொண்டுவரல் எனும் கருப்பொருளுக்கமைய உலக சுற்றாடல் தினம் வாரத்தின் இறுதி நாளான இன்று 05ஆம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதனை முன்னிட்டு பெரிய முகத்துவாரம் களப்பினை அன்மித்த களப்பு பூங்கா மற்றும் அதனோடிணைந்;த, கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்று(05) இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில்; இடம்பெற்ற பூங்கா மற்றும் அதனோடிணைந்;த, கரையோரப் பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் பிரதேச சபை உபதவிசாளர் செயலாளர் சீ.திவாகரன் வைத்தியர் மோகனகாந்தன் பிரதேச செயலக அதிகாரிகள் பொலிசார் பிரதேச சபை ஊழியர்கள் அரச திணைக்களங்கள், பொது சமூக நலன் தன்னார்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்களால்; பாவனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கழிவுகளாக ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் யாவும் அகற்றப்பட்டுச் சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அகற்றப்பட்ட கழிவுப்பொருட்கள் பிரதேச சபை வாகனங்களின் உதவியுடன் கழிவுகள் அகற்றப்பட்டன.
இதேநேரம் களப்பின் கரையோரங்களில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதன் பின்னராக கருத்து தெரிவித்த தவிசாளர் புவி வெப்பமாதலை தடுக்கும் நடவடிக்கையின் பிரகாரம் பிளாஸ்டிக் பாவனையை தடுத்து சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையோடு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இதற்காக அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 


நூருல் ஹுதா உமர்


வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை நிலைப்படுத்தும் நோக்கில் கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தினால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று (04) கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை கால்நடை வைத்தியர்  திருமதி நிவர்த்திகா அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அம்பாறை காரியாலய பிரதிப்பணிப்பாளர் எம்.ஜே. நௌசாத் ஜமால்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட 50 பண்ணையாளர்களுக்கு தலா 16 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கோழிக்குஞ்சிகளை வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண குறிப்பிட்ட மேம்பாட்டு மானியம் (PSDG) நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட இந்த உதவி மூலம் பண்ணையாளர்கள் பயனடைந்துள்ளனர். இந்நிகழ்வில் கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 



வி.சுகிர்தகுமார்                   


 நிதி அமைச்சின் ஊடாக வழங்கப்படுகின்ற ஆலையடிவேம்பு பிரதேச மத்தியஸ்த குழாமினருக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (04) நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மத்தியஸ்த சபையின் பயிற்றுவிப்பாளர் எம்.ஜ.எம்.ஆசாத் மற்றும் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா மத்தியஸ்த சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள தேசமான்ய ஸ்ரீ மணிவண்ணன் உப தவிசாளர் ஜெ.ஜெய்கணேஸ் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.லாவண்யா
உள்ளி;ட்ட நியமனம் பெற்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மத்தியஸ்த சபையினுடைய கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் உரையாற்றியதுடன் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
இதேநேரம் மத்தியஸ்த சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் தேசிய ரீதியில் வருடத்திற்கு இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிணக்குகள் தீர்க்கப்படுவதாகவும் இதனால் அரசாங்கம் சுமார் 2000 ஆயிரம் பில்லியன் ரூபாவினை மீதப்படுத்தி அதனூடாக பல்வேறு சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் மத்தியஸ்த சபையின் பயிற்றுவிப்பாளர் எம்.ஜ.எம்.ஆசாத் கூறினார்.
மேலும் நியமனங்கள் யாவும் எவ்வித தடைகளுமின்றி நேர்மையான முறையில் பரீட்சைகள் இடம்பெற்று அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேநேரம் புதிதிதாக நியனம் பெற்றவர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அனைவரும் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டர்.
புதிய தவிசாளர் தனது கன்னி உரையில் மிக வினைத்திறானான பக்கச்சார்பின்றிய சேவையினை மக்களுக்கு வழங்குவோம் என உறுதியளித்தார்.




(வி.ரி.சகாதேவராஜா)

புனித ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரும் சம்மாந்துறை வலய முன்னாள் சமாதான இணைப்பாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான ஆதம்பாவா அச்சிமொகமட்( வயது 65) மதீனாவில் சுகயீனமுற்று இன்று (2) திங்கட்கிழமை  திடீரென காலமானார்.

நைfப் என அன்பாக அழைக்கப்பட்ட அவர் தம் மனைவி எம்.ஜ.தஸ்லிமாவுடன் ஹஜ் கடமைக்காக மக்காசென்றிருந்த வேளையில் மதீனாவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவரது பூதவுடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கல்விப் பணியில் 29 வருடகாலம் நிறைபணியாற்றிய சம்மாந்துறை வலய சமாதானக்கல்வி உத்தியோகத்தரான ஆதம்பாவா அச்சிமொகமட் 2020 இல் தனது 60வது வயதில் ஓய்வுபெற்றார்.




இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் சபையின் உபதவிசாளராகவிருந்த வெ.ஜெயச்சந்திரன் இராஜினாமாச்செய்ததையடுத்து சபையின் உபதவிசாளராக சேவையாற்றிவந்தார்.

சம்மாந்துறை கபூரியா பள்ளிவாசல் தலைவராகவும் பொன்னன்வெளி விவசாயஅமைப்பின் தலைவராகவும் சம்மாந்துறை பொலிஸின் சிவிலபாதுகாப்புக்குழுத்தலைவராகவும் மேலும் பல அமைப்புகளில் பதவிகளை வகித்துவந்த முக்கியஸ்தராவார்.


 சேவையாற்றிவந்தார்.


சம்மாந்துறை கபூரியா பள்ளிவாசல் தலைவராகவும் பொன்னன்வெளி விவசாயஅமைப்பின் தலைவராகவும் சம்மாந்துறை பொலிஸின் சிவிலபாதுகாப்புக்குழுத்தலைவராகவும் மேலும் பல அமைப்புகளில் பதவிகளை வகித்துவந்த முக்கியஸ்தராவார்.




மக்கள்பணியாற்றினார். இரண்டாவது தடவையும் அவர் தெரிவாகினார்.


இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் சபையின் உபதவிசாளராகவிருந்த வெ.ஜெயச்சந்திரன் இராஜினாமாச்செய்ததையடுத்து சபையின் உபதவிசாளராக சேவையாற்றிவந்தார்.

சம்மாந்துறை கபூரியா பள்ளிவாசல் தலைவராகவும் பொன்னன்வெளி விவசாயஅமைப்பின் தலைவராகவும் சம்மாந்துறை பொலிஸின் சிவிலபாதுகாப்புக்குழுத்தலைவராகவும் மேலும் பல அமைப்புகளில் பதவிகளை வகித்துவந்த முக்கியஸ்தராவார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.