Showing posts with label Eastren. Show all posts

 


(வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவில் நடப்பாண்டின் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

காரைதீவு விளையாட்டு கழகத்தின் 41 வது வருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குறித்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 கழகத் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கபொத சாதாரண தரத்தில் 9ஏ பெற்ற மற்றும் கபொத உயர்தர பரீட்சையில் 3ஏ சித்தி பெற்ற மாணவர்கள் 29 பேர் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றோரால் பாராட்டப்பட்டார்கள்.

பிரதம அதிதியான விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்
ஏனைய அதிதிகளான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்    காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் 
கழக போசகர்களான  வே.இராஜேந்திரன், வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டு கௌரவித்தனர்.


வி.சுகிர்தகுமார் 0777113659
 

 ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் இன்று (26) சிரமானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் யு.எல்.எம்.சகீல் வேண்டுகோளுக்கமைய இச்சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற சிரமதானப்பணியில்; அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் வைத்தியர் குணாளினி சிவராஜ் மேற்பார்வை செய்தார்.
வைத்தியசாலையின் வெளிச்சுழலில் காணப்பட்ட ; புற்கள் குப்பைகள் அகற்றப்பட்டது.
அகற்றப்பட்ட குப்பைகள் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டதுடன் அவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள பொது இடங்கள் ஆலயங்கள் என துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பினராகிய ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினருக்கு வைத்தியசாலை நிருவாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.


 நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருதில் கடலரிப்பின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளதால் இப்பிரதேச மக்கள் பொழுதுபோக்கிற்காக ஒன்றுகூடும் மருதூர் சதுக்கம் என அழைக்கப்படும் கடற்கரை திடல் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. அது மட்டுமல்லாது, இந்த சதுக்கத்தோடு இணைந்ததாக காணப்படும் கொங்றீட் வீதியின் ஒரு பகுதி கடலுக்குள் உள்வாங்கப்படுள்ளதுடன், இவ்விடத்தில் அமைந்துள்ள மீனவர் பல்தேவை கட்டிடமும் இடிந்துவிழும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
கடந்த காலங்களில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் கடலரிப்பு ஏற்பட்டபோது கல் அணைகள் அமைக்கப்பட்டபோதும் இந்த பிரதேசத்தை அண்டியதாக கடலரிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படாமையினால் மருதூர் சதுக்கம் கடலரிப்புக்குள்ளாகியுள்ளது.
எனவே, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை பாதுகாக்க கரையோரம் பேணல் திணைக்களம், பிரதேச செயலகம் என்பன இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இது குறித்து பிரதேச அரசியல்வாதிகள் கவனத்திலெடுத்து கல் அணை அமைப்பதற்கான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசங்களில் கல் அணை அமைத்து எஞ்சியிருக்கும் கற்களைப் போட்டு முதற்கட்ட ஏற்பாடுகளையேனும் செய்ய முயற்சிக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக  சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, அவர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை மேலதிகமாக கடமையாற்றவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக, அம்பாந்தோட்டை வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த  வைத்திய கலாநிதி டாக்டர்.  ஏ.பி.ஆர்.எஸ்.சந்திரசேன  நியமிக்கப்பட்டு அவர் கடந்த 2ஆம் திகதி கடமையேற்றுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் நேற்று வியாழக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இது இவ்வாறிருக்க, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் கடமைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் மேலதிக பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் நியமிக்கப்பட்டார் .

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய பணிப்பாளராக கடமையேற்ற வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரனை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர்.நவலோஜிதன் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வரவேற்றதனைத் தொடர்ந்து அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக பதவியேற்றுள்ள நிலையில் குறித்த கடமைக்கு மேலதிகமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைப் பொறுப்பினை  ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த எட்டு வருட காலமாக அர்ப்பணிப்புடன் சிறந்த சேவை செய்து வைத்தியசாலையின் பாரிய வளர்ச்சியில் அபரிமிதமான பெரும் பங்காற்றிய டாக்டர் இரா முரளீஸ்வரன் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 நூருல் ஹுதா உமர் 


மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் 
பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். 

நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நல்லூரில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து நல்லூர் பிரதேசத்தை ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டு, வெளி ஆக்கிரமிப்பாளர்களால் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது குறித்து ஆராய்ந்ததுடன் பழங்குடியின மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர். 

இதன்பின் அவர்களின் பிரச்சினைகளை ஆராயவும், பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் உடனடியாக குழுவொன்றை நியமிக்குமாறு திருகோணமலை அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.


 (எஸ்.அஷ்ரப்கான்)                               

சம்மாந்துறை சமூர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் ஹுதா வங்கிப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட சௌபாக்கியா வீடுகள் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனிபா  தலைமையில் இன்று (02) இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் எம்.ஏ.சி.அஹமது ஷாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடுகளை திறந்து கையளித்தார்.            
இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக  உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.எம்  சலீம்,மாவட்ட சமூக அபிவிருத்தி முகாமையாளர்,அபிவிருத்தி உதவியாளர்,வங்கிச் சங்க முகாமையாளர்,திட்ட முகாமையாளர்,வலய முகாமையாளர்,சமூக அபிவிருத்தி உதவியாளர்,வலய உதவி முகாமையாளர்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச மட்டத் தலைவர்,வங்கி கட்டுப் பாட்டுச் சபைத் தலைவர் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 


நூருல் ஹுதா உமர்


140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால்  திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி அபிவிருத்தி, திறன் விருத்தி, மகளிர் அபிவிருத்தி, நீர் விநியோகத் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ.கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 வி.சுகிர்தகுமார்  

 ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னப்பனங்காடு கிராமத்தில் யானையின் தாக்குதலால் தென்னங்கன்றுகள் பல சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (03) இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த கிராமம் மாத்திரமன்றி அயல் கிராமங்களும் நாளாந்தம் யானையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது.
மிகுந்த சிரமத்தியின் மத்தியில் பராமரிக்கப்பட்டுவரும் தென்னங்கன்றுகள் நாளாந்தம் சேதமாக்கப்படுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளதுடன் தங்களது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகின்றனர்.
யானைகள் அருகில் உள்ள களப்பில் பகல் வேளையில் இருப்பதுடன் இரவு வேளைகளில் கிராமங்களுக்குள் நுழைந்து மக்களது உடமைகளையும் அவ்வப்போது அழித்து வருகின்றது.
இதேநேரம் நிம்மதியாக வீடுகளில் தூங்கி பல மாதங்கள் ஆகின்றது. வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர இனி வேறு வழியில்லை என்கின்றனர் அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கண்ணகிகிராமம் கவாடப்பிட்டி புளியம்பத்தை மகாசக்தி கிராமம் சின்னப்பனங்காடு உள்ளிட்ட கிராமங்களில் வாழும் மக்கள்.
இதேநேரம் அன்மைக்காலமாக கவடாப்பிட்டி புளியம்பத்தை மகாசக்திபுரம் கண்ணகிகிராமம் உள்ளிட்ட அயலில் உள்ள சிறு கிராமங்களிலும் யானையின் தொல்லை அதிகரித்து வருவதானால் அங்கு வாழும் மக்கள் தூக்கத்தை தொலைத்து வீதிகளில் அலைவதுடன் விவாசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
மேலும் யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அரசாங்கமோ எந்த அரசியல்வாதிகளோ இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடர்ந்தும் யானையின் அச்சுறுத்தல் இடம்பெறுவதாக பொதுமக்களும் கூறுகின்றனர்.
ஆகவே குறித்த யானையினை வெளியேற்ற அரசாங்கமும் அரச அதிகாரிகளும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இல்லாத பட்சத்தில் தாங்கள் தொடர்ந்தும் வீதிமறியல் போராடத்தில் ஈடுபட வேண்டிய நிலைவரும் எனவும் தெரிவித்தனர். 

 


நூருல் ஹுதா உமர் 


சம்மாந்துறை சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் ஸ்தாபகரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான அஸ்மி யாஸீன் அவர்கள் பிராந்தியத்தில் பல்வேறு சமூக நல உதவிகளை செய்து வருகின்றார். அதன் அடிப்படையில் புனித ரமழானை முன்னிட்டு இன்று 2024.03.26 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்விசாரா ஊழியர்களின் அமைப்பான நவ்ஸ் எனும் அமைப்புக்கு ஒரு தொகுதி ஈத்தம் பழங்கள் அன்பளிப்புச் செய்தார்.

சமூக செயற்பாட்டாளர் அஸ்மி யாஸீன் அவர்களது சார்பில் அமைப்பின் முக்கியஸ்தர்களான சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பிரதி அதிபரும் அமைப்பின் ஆலோசகருமான எம்.சி. பர்ஷான் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் அமைப்பாளர் ஏ. அபூபக்கர் ஆகியோர் குறித்த ஈத்தம் பழங்களை நவ்ஸ் அமைப்பின் தலைவர் எம்.ஏ. றிபாயிஸ் முகம்மட் ஊடாக ஊழியர்களுக்கு வழங்கி வைத்தனர்.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட அரச சேவைகள் ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 17 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிதியத்தின் தலைவர் அல் ஹாஜ் ஐ. அப்துல் குத்தூஸ் அவர்களது தலைமையில் 202403.09 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் திருமதி என்.வி.எம். லரீப் அவர்களும் சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட ஓய்வூதிய நிதியத்தின் செயலாளர் அல் ஹாஜ் ஏ. உதுமாலெப்பை அவர்களும் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஸான் அவர்களும் CMSO ஏ.சி. முகம்மட் அவர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ. சாஜிதா அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது நிதியத்திலிருந்து மரணித்த அங்கந்தினருக்காக துஆ பிராத்தனை இடம்பெற்றது. பின்னர் நிகழ்வின் தலைவர் முன்னெடுக்கப்படவேண்டிய பல்வேறு திட்டங்கள் தொடர்பில் தனது முன்மொழிவை முன்வைத்தார். இங்கு பிரதம அதிதி மற்றும் சிறப்பு அதிதிகளும் உரையாற்றினர்.
நிகழ்வில் நிதியத்தில் 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்ற எம்.ஐ.ஏ. ஜப்பார் அவர்கள் கௌரவிக்கப்பட்டு அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

இறுதியாக இடம்பெற்ற நிர்வாகிகள் தெரிவின்போது தலைவராக எம்.எம்.எம். இஸ்மாயில் அவர்களும் செயலாளராக ஏ.எல். மீராலெப்பை அவர்களும் பொருளாளராக ஐ.எல். ஹம்ஸா அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவராக யூ.எல்.ஏ. அஸீஸ் அவர்களும் உபசெயலாளராக இசட். ஏ. லத்தீப் அவர்களும் நிர்வாக உத்தியோகத்தர்களாக ஏ.எம். றசீட் மற்றும் எம்.சி. ஜமால்டீன் ஆகியோரும் இசட்.ஏ. முனீர் கணக்கு பரிசோதகராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இங்கு ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தில் அங்கம் வகிப்பதிலுள்ள நன்மைகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டு நிதியத்தில் இதுவரை இணைந்து கொள்ளாதவர்களை புதிய நிர்வாகம் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது அல் அமானா நற்பணி மன்றத்தினால் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வும், மன்றத்தின் ஒன்றுகூடலும், ஊடக சந்திப்பும் அமைப்பின் தலைவர் ஏ.எல்.ஏ. பரீட் ஹாஜி அவர்களது தலைமையில் சாய்ந்தமருது பிரதான வீதியிலுள்ள அமைப்பின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது.

இங்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த சகோதரி ஒருவரின் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை தேவைக்காக ஒருதொகை நிதியை அவரது உறவினரிடம் கையளிக்கப்பட்டது. நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அல் அமானா நற்பணி மன்றத்தின் செயற்பாடுகள் அதன் உருவாக்கம் தொடர்பில் விரிவாக அமைப்பின் தலைவர் எடுத்துரைத்தார்.

1986 ஆம் ஆண்டு அன்ஸாரிகள் சங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, அந்த சங்கத்தினூடாக மீனவர்களின் இழப்புக்கள் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் பின்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட (கடல் பேரலை) சுனாமியின் பின்னர் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் அந்த மக்களுக்கு உதவுவதற்காக அன்ஸாரிகள் சங்கம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றியம் என்ற பெயரில் உருமாறி மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கு உதவியதாகவும் தெரிவித்தார்.

காலப்போக்கில் மக்களின் தேவைகள் அதிகரித்துச் சென்றதன் காரணமாகவும் அரசாங்கம் மற்றும் உதவு நிறுவனங்களிடம்  மக்களின் பிரச்சனைகளை கொண்டுசெல்ல பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் தேவை உணரப்பட்டதால் அப்போதைய பிரதேச செயலாளரின் உதவியுடன் கடந்த 2008 ஆம் ஆண்டு அல் அமானா நற்பணி மன்றம் என்ற பெயரில் மன்றம் பதிவு செய்யப்பட்டு மிகுந்த வீரியத்துடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஏ.எல்.ஏ. பரீட் ஹாஜி, மிகக்குறுகிய நிலப்பரப்புக்குள் வாழும் சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்கள் சுனாமி கடல் பேரலையின் காரணமாக தாங்கள் வாழ் இடங்களை இழந்து தவித்தபோது அரசு ஊரின் மேற்குப் புறமாகவுள்ள காணிகளை சுவீகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்தது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் வீடுகளை பெறவில்லை குறித்த பாதிக்கப்பட்டோர் ஸ்தாபிக்கப்பட்ட புதிய குடியிருப்புக்களை அண்டிய பிரதேசங்களில் காணிகளை சிறு சிறு துண்டுகளாக கொள்வனவு செய்து அவர்களது வாழ்விடங்களை அமைத்துள்ளனர்.

இவ்வாறான மக்களின் பிரதான தேவைகளான வீதி அமைத்தல் உட்கட்டமைப்புகளுக்கு உதவுதல் மற்றும் வாழ்வாதாரத்துக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல் போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். மக்கள் நல திட்டங்களை கொண்டு செல்வதில் தாங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும் அவைகள் தேவையுடைய மக்களின் நீதியான போராட்டம் காரணமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதன்போது வீதிகளுக்கு பெயர்களை வைப்பது தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.

நிகழ்வின்போது அமைப்பின் செயலாளர் எம்.எஸ். முபாறக், பொருளாளர் ஏ.சி.எம். பளீல், ஆலோசகர் எம்.ஐ.எம். பிர்தௌஸ் உள்ளிட்டவர்களுடன் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் எஸ்.எச். ஆதம்பாவா (ராசாதி) அவர்களும் உரையாற்றினர். நிகழ்வில் மன்றத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


நூருல் ஹுதா உமர்

இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் கீழ் இறக்காமம்-05 ஆம் பிரிவு  நியூ குன பிரதேசத்தில் இயங்கும் யஷோதரா மகளிர் சங்கமும், உளச் சுகாதார முன்னேற்றத்திற்கான நிறுவனத்திலும் (Foundation for Promotion of Mental Health) இணைந்து பொதுமக்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மகிழ்ச்சி முகாமை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த கிராமத்தில் உள்ள முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், விசேட தேவையுடையவர்கள்,  கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் இம் மகிழ்ச்சி முகாம் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஷ்ஷான் (நளீமி) அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் உளச் சுகாதார முன்னேற்றத்திற்கான நிறுவனத்தின் தலைவரும் சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு பிரகீத், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுரேகா எதிரிசிங்க, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.கே. சாஜிதா மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இம் மகிழ்ச்சி முகாமில் உளவியல் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள், மகிழ்ச்சிகரமாக வாழும் கலை, முரண்பாடுகளை இனங்காணலும் முகாமை செய்தலும், இளைஞர்களுக்கான வழிகாட்டல்கள் நிகழ்வுகள், குழுப் பயிற்சி மற்றும் செயற்பாடுகள், சிறுவர் விளையாட்டுகள், சித்திரம் வரைதல் போட்டிகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள்  என முழு நேரத்தையும்  பங்குபற்றுநர்கள் மகிழ்ச்சிகரமாக வைத்திருக்கும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் தீச் சுடர் முகாம் நடைபெற்றது. பங்குபற்றுநர்களின் விசேட கலைத் திறமைகள், ஆற்றல்கள் என்பது  அரங்கேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.



#Rep/Maathavan

மோட்டார் வாகன வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு -2024  இன்றைய தினம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்டசகர் Dr. ரஜாப் அவர்களின் வழிகாட்டலில் இன்று இடம்பெற்றது.


( வி.ரி.சகாதேவராஜா)
 தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் கல்லாற்று பிராந்திய நிலைய பொறுப்பதிகாரி விஜயரெத்தினம்  விஜயசாந்தனுக்கு சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது.

 கல்லாறு நிலைய பொறுப்பதிகாரி பொறியியல் உதவியாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தன் கல்லாறு பணிமனையில் இருந்து காரைதீவு பணிமனைக்கு இடமாற்றம் பெற்றதையடுத்து இச் சேவைநலன் பாராட்டு விழா நேற்று முன்தினம் (15) வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வேளையில் கல்லாறு தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் கல்லாறு நிலைய அலுவலக உத்தியோகத்தர்களினால்  விஜயசாந்தனுக்கு சேவை நலம் பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கு ம் சேவைநலன் பாராட்டு விழா நடைபெற்றது.

அவ்வமயம் முன்னாள் ஓய்வு நிலை  நிலையப்பொறுப்பதிகாரி பொறியியல் உதவியாளர் ஏகாம்பரம் அருள்பிரகாசமும் கலந்து சிறப்பித்தார்.


 ( வி.ரி.சகாதேவராஜா)

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் குருமண்வெளி -11, மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரன்விமன வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

 பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் நேற்று முன்தினம் இன்றைய தினம் (2024.02.15) அவ் வீட்டை பயனாளியிடம் கையளித்தார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை சமூக ரீதியாக மேலுயர்த்துவது மற்றும் வீடற்றவர்களுக்கு வீடு வழங்குவது நோக்கமாகக் கொண்டு 2023ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது இவ்  ரன்விமன வீட்டு வேலைத்திட்டம் ஆகும்.
அதன் கீழ் திருமதி.கருணாகரமூர்த்தி ராதிகா அவர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ரூபா 750,000/- வழங்கப்பட்டிருந்ததோடு, பயனாளியின் பங்களிப்பாக ரூபா 1700,000/-வுமாக மொத்தம் 2450,000/- செலவில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன், தலைமையக முகாமையாளர் திருமதி.புவனேஸ்வரி ஜீவகுமார், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.விமலராணி யோகேந்திரன், எருவில் வங்கி முகாமையாளர் .எஸ்.ஆனந்தமோகன், சமூக அபிவிருத்தி உதவியாளர் தெ.உதயசுதன், கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி.நிரோசினி பிரசாந்த,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பே.அச்சுதன், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருமதி.மதனப்பிரியா சுந்தரலிங்கம், எஸ்.ஜெயகாந்தன், அலுவலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


நூருல் ஹுதா உமர் 

இறக்காமம் பிரதேச சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, அபிவிருத்தி, சிறுவர் நலன் மற்றும் மேம்பாடு மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள், பெண்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள், அவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் என்பவை தொடர்பாக காலாண்டுக்கு ஒரு முறை இக்கூட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரதேச மட்ட சமுதாய சீர்திருத்தக் குழு, சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் இன்று இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவை தொடர்பில் சமூக மட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அம்பாறை நீதிமன்ற நீதிபதி அவர்கள் விசேட உத்தரவையடுத்து மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் என்.எம். இக்ராம் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி வி.யசோதா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச சிறுவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை இடைவிலகல், கல்வி ரீதியான பிரச்சினைகள், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு, பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள், சிறுவர்களை மையப்படுத்திய போதைப் பாவனை, இளவயது திருமணம், சிறுவர்களின் சுகாதார மேம்பாடு, விசேட தேவையுடைய சிறுவர்களின் நலனோம்பல் தொடர்பான விடயங்கள் மற்றும் சமுதாய சீர்திருத்தக் குழு, கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் (VCDC) 2024 ஆம் ஆண்டு வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. 

மேலும், பால்நிலை வன்முறை மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிரதேச மட்டத்தில் தங்கள் அமைப்பு சார்ந்த வேலைத்திட்டங்கள், குடும்ப வன்முறை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் அவற்றை குறைப்பதற்கும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

மேற்படி கூட்டத்திற்கு குவாசி நீதவான் சட்டத்தரணி எஸ்.எல். பாறூக், பிரதேச சபை செயலாளர் எல்.எம். இர்பான், சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எம்.என்.எப். றஸ்கா ஆஸ்மி, பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரி எம்.வை. ஜௌபர், (GN) எச்.பி. யசரட்ன பண்டார, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எல். நௌபீர் சமுர்த்தி வங்கி முகாமையாளர் டி. கே. ரஹ்மதுல்லாஹ் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ. சபீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
 
மேலும் சிறுவர் , சமய நிறுவனங்களின் தலைவர்கள், ஜம்இய்யதுல் உலமா சபை, பொதுச் சுகாதார பரிசோதகர், இஸ்லாமிக் ரிலீப், மனித எழுச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மகளிர் சங்க பிரதிநிதிகள், கிராம மட்டத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.ஆர். றியாஸ், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். முஹம்மட் இம்டாட், பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 


Ameer Mohamed,இற்கு வாழ்த்துக்கள்!

1985 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 39 வருட சமுக சேவைக்காக கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்.
"International Human Rights Global Mission" நிறுவனம் நடாத்திய தேர்வில் தெரிவு செய்யப்பட்டேன்.
அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த 2023.11.28 ஆம் திகதி Colombo BMICH இல் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்வில் சர்வதேச பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தேறியது.
சுகயீனமுற்று நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் எனக்கான விருது என்னைத் தேடி வந்துள்ளது.
எனது சமுக சேவையானது சிறு பிராயத்திலிருந்து தொடங்கினாலும் அதி தீவிரமாக யுத்தகாலமான 1988 ஆம் ஆண்டே எனது பாடசாலைக் காலத்தைக் காணலாம்.
இதனால் முழு பிரிவிலும் மூதலாம் இடத்திலும் அனைத்துப் பாடங்களிலும் 100 புள்ளிகளைப் பெற்றும் வந்த வேளை சமுக அவலத்திற்காக ஒரு வருட பாடசாலை வாழ்க்கையையும் இழந்தேன்.
இரண்டே மாத இடைவெளியை ஏற்றுக் கொள்ளாத அந்த Sectional Head எனது அன்பின் காரணமாகவோ தெரியாது பரீட்சைக்கு அனுமதிக்க மறுத்து விட்டு என் முன்னே அழுது விட்டார்.
மீண்டும் அடுத்த வருடம் இணைந்தே திறமையாக படித்து முன்னேறி அல்ஹம்துலில்லாஹ் இன்று நல்லதொரு நிலையில் இருக்கின்றேன்.
மீண்டும் முயன்று South Eastern University of Srilanka வில் எனது Degree ஐயும் முடித்தேன்.
மட்டுமன்றி
யுத்தகால மனிதாபிமானப் பணிகள்.
2004 ஆம் ஆண்டின் சுனாமி உள்கட்டுமானப் பணிகள் மற்றும் மனிதாபிமான பணிகள்.
கொடிய கொரோணா கால விழிப்புணர்வுப் பணிகள்,நிவாரணப்பணிகள்.
கல்விப்பணிகள்.
சுகாதார உதவிப் பணிகள்.
Welfare Council of Srilanka மூலமான நூற்றுக்கணக்கான பல்துறைசார் சமுகசேவைகள்.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியான இலக்கிய பணிகள்.
மற்றும்..........
முதலில் என்னைப் படைத்து பரிபாலித்து பாதுகாக்கும் இறைவனுக்கும்
என் குடும்பத்தினர்களுக்கும்.
தோளோடு தோள் கொடுக்கும் தோழமைகளுக்கும்
நன்றிகள்



( வி.ரி.சகாதேவராஜா)

அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகமானது, காரைதீவு முன்னாள் 
தவிசாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு  சமூக சேவைக்கான மதிப்புறு முனைவர்( Honorary Doctorate) கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

சர்வதேச பட்டமளிப்பு விழா (  International Graduation ceremony) நேற்று முன்தினம் (10) சனிக்கிழமை இரவு கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றபோது மேற்படி விருது வழங்கப்பட்டது.

உலகத் தமிழ் பல்கலைக்கழகம்( World  Tamil university - America)  உள்ளிட்ட 11 அமைப்புக்கள் இணைந்து வருடாந்தம் சமுதாயத்தில் அரசியல் கல்வி கலை வாழ்வியல் வியாபாரம் மற்றும் சமூக சேவைகள் செய்த பிரமுகர்களுக்கு இவ்வாறான மதிப்புறு முனைவர் கலாநிதி பட்டத்தை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இவ் ஆண்டுகான சர்வதேச பட்டமளிப்பு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்ற போது 25 பிரமுகர்களுக்கு இப் பட்டம் வழங்கி வைக்கப்பட்டன. பல்கலைக்கழக வேந்தர் மற்றும் உபவேந்தர் ஒப்பமிட்ட சான்றிதழ் மற்றும்  பதக்கங்களை வழங்கி வைத்தனர்.

காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான கலாநிதி கி.ஜெயசிறில் கிழக்கில் மிகவும் நன்குஅறியப்பட்ட சமூக சேவையாளராவார். இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவராவார்.
 அனர்த்த காலங்களில் கிழக்கு மலையகம் என நேரடியாக சென்று மக்களுக்கு உதவி வருபவர்.

துணிச்சலும் சிறந்த ஆளுமையும் மிக்க பரோபகாரியான இவர் கலாநிதி பட்டத்தை தனது அயராத தொடர் சமூகப் பணிக்காக இள வயதில் (40) பெற்றுள்ளார்.
இவருக்கு கலாநிதி பட்டம் கிடைத்ததையிட்டு இந்திய தமிழகத்தின் சீமான் பழநெடுமாறன் இலங்கையில் இரா.சம்பந்தன் மனோகணேசன் சி.சிறிதரன் மாலை சேனாதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

 இவரது சமூகப்பணி மேலும் தொடர வேண்டுமென பல்வேறு அமைப்புகள் பல்வேறு பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்

 


கல்முனை யங் பேட்ஸ்  ஜனாஸா நலன்புரி அமைப்புடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளை விசேட சந்திப்பு.


(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை யங் பேட்ஸ்  ஜனாஸா நலன்புரி அமைப்புக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளை நிர்வாகத்திற்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (10) மாலை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளை காரியாலயத்தில் இடம் பெற்றது.

கல்முனை யங் பேட்ஸ்  ஜனாஸா நலன்புரி அமைப்பின் இவ் உயரிய சேவைக்கு ஆதரவு வழங்கி, ஊக்குவிக்கும் நோக்கில்  இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, ஜனாஸா நலன்புரி சேவை வாகன கொள்வனவுக்கான ஒரு தொகை நிதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளை உயர்பீடத்தினரால் ஜனாஸா நலன்புரி அமைப்பினரிடம் ஸகதாவாக கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கல்முனை கிளை தலைவர் மெளலவி ஏ.எல்.எம் முர்ஷித் (முப்தி),  செயலாளர் மெளலவி எம்.எச்.எப்.எம்.  ரஹ்மத்துல்லாஹ், பொருளாளர் மெளலவி எம்.ஐ.எம்.ஆஸிக் அலி,   உப தலைவர் மெளலவி கே.எல்.எம்.சியானுடீன் (முப்தி), செயற்குழு உறுப்பினர்களான மெளலவி ஐ.எல்.நஸீர், மெளலவி ஏ.எம்.றஸீன், மெளலவி எச்.எம். ஆஸிப்  
ஆகியோரும் கல்முனை யங் பேட்ஸ்  ஜனாஸா நலன்புரி அமைப்பின்  தலைவர் எம்.எம்.மர்சூக் தலைமையில், செயலாளர் எம்.வை.பாயிஸ், பொருளாளர் எம்.எச்.எம்.நியாஸ், 
உப தலைவர் எஸ்.அஷ்ரப்கான்,
உப செயலாளர் மிப்றாஸ் மன்சூர்,  உட்பட அமைப்பின் அங்கத்தவர் களும் கலந்து கொண்டனர். 

இங்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  கல்முனை கிளை தலைவர் முர்சித் முப்தி உரையாற்றும்போது,

இஹ்லாசான எண்ணத்துடன் எமது இந்த சேவையை செய்து வருகின்றபோது சகல தேவைகளையும் இறைவன் பூரணமாக்கி தருவான் என்றும் மிகச் சிறப்பான இந்த சேவைக்கு எங்களால் ஆன சகல ஒத்துழைப்புகளையும் தருவோம் என்றும் அது போன்று,  அமைப்புக்கு இருக்கின்ற தேவைகளை நிவர்த்தி செய்ய  எங்களுடைய முழு பங்களிப்பையும் செய்வோம் என்றும் குறிப்பிட்டார்.

 


அம்பாறை - சாய்ந்தமருதில் மர ஆலை ஒன்றில் பரவிய தீயினால் மர ஆலை பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சாய்ந்தமருதிலுள்ள மர ஆலையில் இன்று அதிகாலை தீ பரவியது.

இதனையடுத்து, கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு பிரிவினரும் பொதுமக்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.