Showing posts with label Eastren. Show all posts

 

அக்கரைப்பற்று இராம கிருஸ்ணன் பாடசாலைக்கு பஸ் வண்டியினைஅன்பளிப்புச் செய்யும் நோக்கில், எதிர் கட்சித் தலைவரும் கௌவர  நாடாளுமன்ற உறப்பினருமான  சஜித் பிரேமதாச அக்கரைப்பற்றுக்கு தற்சமயம் விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் குறித்த பஸ்ஸினைச் செலுத்திச் செல்லும் காட்சியே இது






களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளியில் இடிமின்னல் தென்னைமரத்தில் தாக்கியதால் தென்னைமரம் தீபற்றி எரிந்தது இந்த நிலையில் வீடு தெய்வாதீனமாக தப்பிய சம்பவம் இன்று புதன்கிழமை (27) மாலை 3.45 மணிக்கு இடம்பெற்றுள்ளது

நாட்டில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாக மட்டு மாவட்டத்தில் சில தினங்களான மாலையில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்த நிலையில் இன்று மாலை 3.45 மணியளவில் இடிமின்னல் தாக்கும் வெல்லாவெளியில் யாசோத என்பவரின் வீட்டிலுள்ள தென்னை மரத்தை தாக்கியதையடுத்து வீடு மின்னல் தாக்குதலில் இருந்து தெய்வாதீனமாக தப்பியுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்கள் பயந்துள்ளதாக தெரிவித்தனர்.

 




அக்கரைப்பற்று இசங்கனிச் சீமையில், நேற்று மாலையில் பெய்த அடை மழை
 மற்றும் கடுங்காற்றினால், மரம் முறிந்து, மின் கம்பத்தினால் வீட்டில் வீழ்ந்ததால், சுமார் மூன்று இலட்சத்திற்கு மேல் வீட்டு உடைமையாளருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி வீட்டுரிமையாளர், முறையீடு செய்துள்ளார்.

 


பொத்துவில் யூரியுப்பர் நஹ்மத் மீது காண்டுமிராண்டித்தனமான தாக்குதல் 


இது வன்மையாக கண்டிக்கத்தக்கது 


தாக்கியர்வர்களுக்கு எதிராக  கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்

 


பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று    நிந்தவூர் நாவிதன்வெளி  சம்மாந்துறை பிரதேச   பகுதிகளில் வாழும் மக்கள்  மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வீதி கிடையாது மின் சார வசதி இல்லை நீர் வடிந்தோட ஒழுங்கான வடிகால்கள் இல்லை. சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல கஸ்டப்படுகின்றனர்.தொழில் செய்வது சிரமமாக உள்ளது இது தான் அம்மக்களின் நிலையாக உள்ளது

 


நூருல் ஹுதா உமர் 


கடந்த சில வாரங்களாக அகோரமாக கடலரிப்பை சந்தித்துள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடலரிப்பில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீன்பிடி நடவடிக்கையும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுடனான கலந்துரையாடல் இன்று சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

அதிக மீன் உற்பத்தியை கொண்ட இந்த பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளை கள விஜயம் மேற்கொண்டு கேட்டறிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் இராஜங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேலதிக நடவடிக்கை எடுக்கும் வகையில் நகர திட்டமிடல், கரையோரம் பேணல், கரையோர பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோவை தொடர்பு கொண்டு விளக்கி அவசரமாக இந்த பிரச்சினைக்கான நிரந்தர தீர்வின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தினார்.

மீனவர்களின் குறைநிறைகளை பற்றிய விடயங்களை களத்தில் நின்ற மீனவர்களுடனும், கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளுடனும் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கரையோரம் பேணல் திணைக்கள பிராந்திய பொறியலாளருடன் தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். இவ்விடயம் தொடர்பில் மேலதிக விடயங்கள் தொடர்பில் ஆராயும் உயரமட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை நடத்த ஏற்பாடுக்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த கள விஜயத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக், சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கரையோரம் பேணல் திணைக்கள சாய்ந்தமருது பிரதேச அதிகாரிகள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 


 நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் "வாழ்வில் வசந்தம்" கிராமிய எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும்  பகுதி அளவான 13 வது வீட்டுக்கான நிர்மாண வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (17)  இடம்பெற்றது

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, பொருளாளர் எஸ் ஏ பாஸித், நிந்தவூர் சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் நிதி உதவியாளர் ஏ அன்வர், நிந்தவூர் பிர்தௌஸ் ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் அல் ஹாபிழ் சிம்லி ஆதம் உட்பட  பலரும் கலந்து கொண்டனர்

நிந்தவூரில் வீடற்றோருக்கான  வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் பெஸ்ட் ஒப் யங் அமைப்பு, சீ.ஓ.லெஸ்தகீர் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் இந்த பகுதி அளவான விட்டு நிர்மாணித்து கொடுக்க உள்ளனர். இதற்கென நிந்தவூர்-7 ம் பிரிவில் இருந்து  தந்தை இல்லாத,  வீட்டு வசதியற்ற, திருமண வயதை அடைந்த பயனாளி ஒருவருக்கு இந்த பகுதி அளவான வீட்டை நிர்மாணித்து வழங்க உள்ளனர்

நிந்தவூரை சேர்ந்த கல்விமான் மர்ஹும் சீ ஓ லெஸ்தகீர் அவர்களின் புதல்வரும், சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளருமான முன்னாள் சுங்க அத்தியட்சகர் ஓ.எல்.சப்ரி இஸ்மத்  அவர்களின் ஒருங்கிணைப்பில் சீ ஓ லெஸ்தகீர் குடும்ப நிதியத்தின் பங்களிப்புடன் இந்த பகுதி அளவான வீடு நிர்மாணிக்கப்பட உள்ளது.  இதன் மூலம்  வாழ்வதற்கு ஓரளவேனும் வசதியான வீடின்றி கஷ்டப்படும் ஏழைக் குடும்பத்தின் நிரந்தர வீட்டுக்கான கனவு நிறைவேறுகிறது குறிப்பிடத்தக்கதாகும்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


நேற்று முன் தினம்(13) புதன்கிழமை மாலை வீசிய அடிகாற்றில் பாரியவேம்பு மரம்  விழுந்து பாடசாலை ஒன்று சேதமடைந்துள்ளது.

 இச்சம்பவம் சம்மாந்துறை அல்மதினா வித்தியாலயத்தில் இடம் பெற்றுள்ளது.

 நேற்று முன்தினம் வீசிய கடும் காட்டில் அங்கிருந்த வேம்பு மரம் பாடசாலை வகுப்பறை கட்டடத்தின் மீது விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்று பாடசாலை அதிபர் ஜனாபா.எம். டி. சரினா தெரிவித்தார் .

நேற்று(14) வியாழக்கிழமை காலை அப்பாடசாலையின் இணைப்பாளர் எ. சிராஜுதீன் அங்கு சென்று பார்வையிட்ட பொழுது மிகவும் பெரிய சேதம் ஏற்பட்டு இருப்பதை அறிந்தார்.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானாவிற்கு அறிவிக்கப்பட்டது.

இணைப்பாளர் சிராஜுதீன் உடனடியாக சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிக்கும், போலீசாருக்கும், பிரதேச செயலாளருக்கும் அறிவித்தார்.
 அதன் பிற்பாடு அந்த மரங்கள் அகற்றப்பட்டன.

சுமார் 100 பிள்ளைகள் இருந்து கற்கும் வகுப்பறைகள் இந்த அனர்த்தத்தில் சேதமாய் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் இரவு கல்முனை காரைதீவு சம்மாந்துறை கரையோரப் பகுதிகளில் பாரிய இடி மின்னல் முழக்கத்துடன்   கடுங் காற்று வீசியது. தொடர்ந்து கனமழை பொழிந்தது. அத்தருணத்தில் மின்சாரம் தடைபட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரட்சிக்கு மத்தியில் இந்த மழை பொழிந்ததமையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 


வி.சுகிர்தகுமார் 0777113659 

 ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு வடக்கு வங்கியின் காணிக்குரிய ஆவணங்கள் இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பெயரில் மாற்றப்பட்டு அதற்கான ஆவணங்களும் இன்று சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய உரிய காணியின் ஆவணங்கள் மாற்றப்பட்டு அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் அவர்களிடம் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில்  சமுர்த்தி  மாவட்ட காரியாலய
கணக்காளர் எம்.எப்.பர்ஹான் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கீழ் வசிக்கும் தேவையுடைய பயனாளிகளுக்கு விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள சாய்ந்தமருது அரச கால்நடை வைத்திய காரியாலயத்தில் வைத்து வளர்ப்பு ஆடுகள் இன்று (11) சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது அரச கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட்,  கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது அரச கால்நடை வைத்திய அதிகாரி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.
 

 




நூருல் ஹுதா உமர்


அண்மையில் கிழக்கு மாகாண சபையினால் பலநோக்கு அபிவிருத்தி செயலணி ஊழியர்கள் 886 பேருக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அலுவலகங்களுக்கு நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் 161 பேருக்கான நான்கு நாள் விசேட பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபகமும், கலை நிகழ்ச்சியும் இன்று (09) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இங்கு தலைமையுரை நிகழ்த்திய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தனதுரையில் நோயாளர்களை எப்படி கையாள வேண்டும் என்பது முதல் சுகாதாரத் துறையின் பல்வேறு விடயங்களையும், நேர முகாமைத்துவத்தையும், சுகாதார பணியின் மாண்பையும் கற்றுக்கொண்ட நீங்கள் தொடர்ந்தும் உங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். நாட்டினுடைய பொருளாதார சிக்கல் நிறைந்த இந்த காலகட்டத்தில் இலங்கையில் எங்குமில்லாது இப்படியான ஒரு பணியை கல்முனை பிராந்திய காரியாலயம் செய்திருப்பது எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. என்றார் 


மேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர், அரசியலுக்காக இனவாதம், மதவாதம் பேசுபவர்களை தோற்கடித்து இங்கு பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த 101 தமிழ் மொழி பேசுபவர்களும், 60 சிங்கள மொழி பேசுவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரச பணம் பல்வேறு தேவைகளுக்காக வீணடிக்கப்படும் இன்றைய நிலையில் அரசுக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் உங்கள் பணியை முன்னெடுக்க தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 


இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம்.வாஜித், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹிர், உயிரியல் மருத்துவ பொறியியலாளர், பிரிவுத்தலைவர்கள் உட்பட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர் 


காரைதீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 2023 ம் ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தும் 250000/= அரச பங்களிப்புடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட வீடு (ஜெய விம) காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம். பார்த்திபன், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


அண்மையில் கிழக்கு மாகாண சபையினால் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி ஊழியர்கள் 886 பேருக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அலுவலகங்களுக்கு நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் 160 பேருக்கான வரவேற்பும், பயிற்சியின் தொடக்கமும் இன்று (05) காலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள், சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிதாக நியமனம் பெற்ற சுகாதார ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். தனது உரையில் இலங்கையிலையே முன்மாதிரியான பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையாக கல்முனை எப்போதும் திகழ்கிறது. இந்த விடயத்திலும் புதிய ஆடை, பயிற்சி நூல்கள், இனிப்பு, உணவு போன்றன வழங்கி அவர்கள் தமது முன்மாதிரியை வெளிக்காட்டியுள்ளார்கள். வேலைப்பழு காரணமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் முழு விருப்பம் எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை. என்றாலும் சீருடையுடன் 160 புதிய சுகாதார ஊழியர்களை இங்கு கண்டது எனக்கு புத்துணர்ச்சி தருகிறது. சுகாதார சேவை தொழிலல்ல. அது விலைமதிப்பற்ற உன்னத சேவை என்றார்.

இங்கு தலைமையுரை நிகழ்த்திய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தனதுரையில் நோயாளர்களை முதலில் சந்திப்பதும் அவர்கள் வீடு திரும்பும்போது அவர்களை வழியனுப்பி வைப்பதும் சுகாதார ஊழியர்களே. தமது வேலையை கடமைக்கு செய்வது போலல்லாது இறை பணியாக நினைத்து செய்ய வேண்டியவர்கள் நீங்கள். நோயாளர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு திருப்தியான சேவையை வழங்க முன்வருகின்ற போது அவர்களின் மனம் நிரம்பி நமது சேவை மீதும் மருத்துவ துறை மீதும் அவர்களுக்கு நம்பிக்கை வரும். என்றார்

இன்று ஆரம்பித்துள்ள இந்த பயிற்சியானது வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள், சுகாதார பணிமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மருந்தகம், களஞ்சியம் போன்ற பல்வேறு இடங்களில் களப் பயிற்சியாகவும் நடைபெறவுள்ளது. முதல் நாள் பயிற்சியை சம்மாந்துறை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் எம். ஹனீபா, அக்கரைப்பற்று வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரீ.எஸ். ஆர்.ரீ. ஆர்.ரஜாப் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம். வாஜித் உட்பட பிரிவுத்தலைவர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

 

(S,T,Jamaldeen)
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் தற்சமயம் புதிய இணைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்காகவே நீர் வினியோகம் தடைப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. இன்னும் ஓரிரு மணித்தியாலங்களுக்கள் இவை சீர் செய்யப்படும் என்பதாக தெரியவருகின்றது.



 



அக்கரைப்பற்றினது அனைத்து சமய மற்றும் சமூகு அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிரான தன்னிலை் பிரகடனம் ஒன்றை ஏந்பாடு செய்துள்ளன. 

இன்று ஜிம் ஆத் தொழுகையின் பின்னர், அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்  கோபுரத்திற்கு அருகில் அமையப்பட்டுள்ள பொது மேடையில் இந் நிகழ்வு இன்று இடம்பெறும்

 


நூருல் ஹுதா உமர்


சமூக அபிவிருத்தி நிறுவனம் காரைதீவு ஸ்பீட் நிறுவனத்துடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் 10 கிராமங்களை உள்ளடக்கியதாக  சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இச் செயற்பாடுகள் ஊடாக 10 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கிராம ஒத்துழைப்பு மன்ற அங்கத்தவர்களின் இயலுமையை வழுப்படுத்தி அவர்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பல்வேறு சமூக முரண்பாடுகளையும் ஏற்படுத்துகின்றது. இதனை குறைக்கும் நோக்குடன். குறிப்பிட்ட கிராம ஒத்துழைப்பு மன்றத்தின் அங்கத்தவர்களுக்கு வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை  ஊக்கப்படுத்தும் நோக்குடன் பயிர் செய்கையை மேற்கொள்வதற்கான உபகரணங்களும், உலர் உணவு பொதியும் வழங்கும் நிகழ்வு காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் சமூக அபிவிருத்தி நிறுவன பிராந்திய  இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக்க அபேவிக்கிரம அவர்களும், கௌரவ அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மற்றும் சிறப்பதிதியாக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ.எல்.எம்.இர்பான், பங்காளர் நிறுவனமான ஸ்பீட் நிறுவன செயலாளர்  வீ ஜனார்த்தனன், உண்மைக்கும்  நல்லிணக்கத்திற்குமான  வலையமைப்பு (TRF) மற்றும் இத் திட்டத்துக்கான ஸ்பீட் நிறுவன இணைப்பாளர்  எம்.ஐ.றியால், அதன் அங்கத்தவர்களும் கிராம ஒத்துழைப்பு மன்ற அங்கத்தவர்களும் கலந்து கொண்டார்கள்.

இன் நிகழ்வில் காரைதீவு, கல்முனை வடக்கு மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 75  கிராம ஒத்துழைப்பு மன்ற  அங்கத்தவர்களுக்கு இவ் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

 



அரசாங்கத்தினால், இன்றைய தினம் அரச வங்கிகிகளில் அவுவெசும கொடுப்பனவு வழங்கப்பபவுள்ளது. அதனைப் பெற்றுக் கொள்வதாக மக்கள் காத்திருப்பு

 


நூருல் ஹுதா உமர்


“இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பால்நிலை சமத்துவத்தை கட்டி எழுப்புவோம்“ எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக கல்முனை பிராந்திய உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.நௌபல் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட  தாதிய உத்தியோகத்தர்களுக்கான பால்நிலை சமத்துவம் தொடர்பான விசேட பயிற்சி நெறி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் விரிவுரை மண்டபத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
பிரபல வளவாளரும் பிராந்திய உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான டாக்டர் எம்.ஜே.நௌபல், உளமருத்துவ சமூக  உத்தியோகத்தர் எம்.ஆர்.எம். ஹமீம் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த நிகழ்வில் விரிவுரைகளை நடத்தியதுடன் பங்குபற்றுனர்களுடன் கலந்தாலோசனைகளிலும் ஈடுபட்டனர்.
 
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ. அப்துல் வாஜித் கலந்து கொண்டிருந்ததுடன் விசேட கலந்தாலோசனையிலும் ஈடுபட்டிருந்தார். இந்நிகழ்வில் விசேடமாக வேலைத்தளங்களில் பால்நிலை அசமத்துவங்களை எதிர்கொள்ளுதல் ஓர் உளவியல் கண்ணோட்டம் என்ற தலைப்பிலும் பெண்களுக்கான சட்ட ரீதியான பாதுகாப்பு பால் ரீதியாக பாரபட்சம் காட்டப்படுதலில் இருந்து விடுகை பெறுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

 


நூருல் ஹுதா உமர்


இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் அதன்  அனுசரணை வலையமைப்பு  நிறுவனமான "இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலாவின் ஒருங்கமைப்பில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எம்.எஸ். அன்ஸார் மௌலானா  தலைமையில் போதையொழிப்பு பேரணியும், வீதி நாடகமும் இன்று கல்முனையில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எப்.எம். பழீல் கல்முனை பிரதேச செயலக முன்றலில் வைத்து போதையொழிப்பு பேரணியை தொடக்கி வைத்தார். கல்முனை பிரதான வீதியூடாக சென்ற பேரணி பொதுச்சந்தையை ஊடறுத்து கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்டத்தை சென்றடைந்தது. அதனை தொடர்ந்து அக்கரைப்பற்று அருவி கலை மன்ற கலைஞர்களினால் போதையொழிப்பு, சிறுவர் துஸ்பிரயோகம், பெண்கள் கொடுமை போன்றன உள்ளடக்கிய கருவை கொண்ட வீதிநாடகம் அரங்கேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் ஊடக செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை இணைப்பாளர் ஏ.எல்.எம். அஸீஸ், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரும், இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் செயற்குழு உறுப்பினருமான பீ. ஜெனிட்டா, இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழுவின் செயலாளர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா, அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களில் உள்ள பெண் தலைவிகள், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் உத்தியோகத்தர் ஆர். அனுஸ்கா, ஒருங்கிணைப்பு குழு செயலாளரும், ஆசிரியருமான எம்.எம். விஜிலி மூஸா, முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் உத்தியோகத்தர்கள், இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 


பாறுக் ஷிஹான்


டெங்கு பெருக்கம் அதிகரித்திருப்பதை தடுப்பதுடன்  மிக நீண்டகால காடு மண்டி காணப்பட்ட அன்னமலை பிரதேச  வைத்தியசாலை வளாகத்தில்  சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்  எனும் தொனிப் பொருளுக்கமைவாக சிரமதான நிகழ்வு ஒன்று   ஞாயிற்றுக்கிழமை(20)  நடைபெற்றது.

இதற்கமைய 157 வருட பொலிஸ் தினத்தை முன்னிட்டு    சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  டீ.எம்.எஸ்.கே தசநாயக்க ஆலோசனையில்  சவளக்கடை பொலிஸ் நிலைய பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான ஏ.எம் ஜௌபர் நெறிப்படுத்தலில்   டெங்கு ஒழிப்புச் சிரமதானம் பிரதேச வைத்திய அதிகாரி ஆர்.வீ.ஏ.பி பண்டார தலைமையில்  தலைமையில் இடம்பெற்றது.

இச்சிரமதான நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சீனித்தம்பி சுமதி  வழிகாட்டலில் அப்பிரிவிற்குட்பட்ட  சமுர்த்திப் பயனாளிகள் பங்கேற்று காடு மண்டி காணப்பட்ட வைத்தியசாலை  வளாகத்தை துப்பரவு செய்தனர்.

மேலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இச்சிரமதான நடவடிக்கையின் போது விச ஜந்துக்கள்  அழிக்கப்படுவதுடன்  சவளக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சமூர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டு தத்தமது  பங்களிப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.