Showing posts with label Eastren. Show all posts



(வி.ரி.சகாதேவராஜா)

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவமானது நேற்று (16) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் மாங்காடு சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
 
அரசாங்கத்தினால் நிலையான கட்டமைப்பில் ஆரம்பிக்கப்பட்ட "கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டமானது நெறிமுறை கொள்கைகள், தூய்மையான பெளதீக சூழல்மற்றும் சுற்றுசூழல் நிலைத்தன்மையை அபிவிருத்தி செய்வதற்கான நாடுதழுவிய தார்மீக அர்ப்பணிப்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த நோக்கங்களை அடைவதற்காக "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம், தேசிய ரீதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமங்கள் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு இணையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தெரிவு செய்யப்பட்ட கிராமத்தில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் உடல்நலம், வீட்டு முகாமை மற்றும் சமூக நல்வாழ்வு, கலாசார மற்றும் ஆன்மீக அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாக அக் கிராமங்களை உற்பத்தித் திறன் ஊடக அபிவிருத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

இதன்போது  பிரதேச செயலாளரினால் சமூக உற்பத்தித்திறன் திட்டம் மற்றும் அதன் நோக்கங்களை பற்றிய தெளிவூட்டல் இடம்பெற்றதுடன், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை தவிசாளர்  மே. வினோராஜ்  மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா பிரதேச ஒருங்கிணைப்பாளர்  எம். சனுஜன் ஆகியோரின் விசேட உரைகள்  இடம்பெற்றது. 

மேலும் கிளீன் ஸ்ரீலங்கா தொடர்பான காணொளிகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உற்பத்திதிறன் உத்தியோகத்தர்களினால்    அடையாளம் காணப்பட்ட மற்றும் எதிர்கால சமூக உற்பத்தித்திறன் அபிவிருத்தி திட்டமும் பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திணைக்களங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாங்காடு கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், மாங்காடு கிராம ஆலயங்கள்  மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 ( வி.ரி.சகாதேவராஜா)


மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா அதிபர் ஆ.கிருபாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அங்கு நேர்முகத் 
தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்டு இருநாள் பயிற்சிகளை முடித்துக்கொண்ட மாணவர் 
தலைவர்களுக்கு மேலங்கி அணிவித்து சின்னம் சூட்டும் நிகழ்வும் விளையாட்டில் 
பங்குபற்றவுள்ள மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வும் மாகாண மட்ட 
கணித ஒலிம்பியாட் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு 
செய்யப்பட்ட மாணவன் தட்சணாமூர்த்தி நதுஜனைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் 
நடைபெற்றன. 


முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அபிவிருத்திக்குப் 
பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தேவரஜனி உதயகரன் 
கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் அ.தேகதாஸ்
கலந்துகொண்டார்.

 பெற்றோர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் 
கலந்து சிறப்பித்திருந்தனர்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை வைஎம்சீஏ( YMCA)  அனுசரணையுடன், கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று (14) சனிக்கிழமை காலை கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது.

 இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமைகுரு அருட்திரு.  ரவி முருகப்பிள்ளை மற்றும் அருட் செல்வி சலோஜினி ஆகியோர் கலந்து கொண்டதுடன் திருச்சபையின் மக்களும் இணைந்து கொண்டனர்.
 சேகரிக்கப்பட்ட குப்பைகளை அகற்றுவதற்கு கல்முனை மாநகர சபையினால் வாகன ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 அதேபோல,  குறித்த பணியில் ஈடுபட்டவர்களுக்கு கல்முனை இராணுவத்தினரால்  குளிர்பானம் வழங்கி  வைக்கப்பட்டது.

  


( வி.ரி. சகாதேவராஜா)


 திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன்  இன்று (13) வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

பதவியேற்றகையோடு ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார்.

அவருடன் லாகுகலை பிரதேச செயலாளர் எஸ்.நவநீதராஜா காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பிரணவரூபன், சீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பதவியேற்பு விழாவிற்கு தம்பலகாமம் சென்றிருந்தனர்.

அங்கு பிரதேச செயலாளராக இருந்த திருமதி ஸ்ரீபதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபராக பதவியுயர்வு பெற்ற காரணத்தால் அங்கு வெற்றிடம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவைச் சேர்ந்த சதிசேகரன்( சதீஷ்) இறுதியாக லாகுகல உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றியிருந்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் சதீஷ் , காரைதீவில் பயின்று,  திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரம் இந்து கல்லூரியில் 2012 முதல், ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார்.


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (12) காரைதீவு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில், காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி.அருணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தின் போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களால் மாவடிப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கி பல முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

இதன்படி, மாவடிப்பள்ளி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு (PMCU) நிரந்தரமாக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிற்றூழியர்களை நியமித்தல், மாவடிப்பள்ளி ஆதம் வீதி – ஆதம் குறுக்கு வீதியை 900 மீற்றர் நீளத்திற்கு கார்பட் வீதியாக அமைத்தல், மாவடிப்பள்ளி பிரதான வீதியில் உள்ள அரச காணியில் அரச காரியாலயங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் மூன்று மாடிகள் கொண்ட பல்தேவைக் கட்டடம் அமைத்தல் ஆகியவை முன்மொழியப்பட்டன.

மேலும் மாவடிப்பள்ளியில் I Project மூலம் அமைக்கப்பட்டுள்ள கார்பட் வீதிகளுடன் தொடர்புடைய வடிகாண்களுக்கு மூடி அமைப்பதற்கும், மாவடிப்பள்ளி தபாலக வீதியில் 120 மீற்றர் நீளத்திற்கு மூன்று அவத்தை மின் இணைப்பு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனுடன், பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மாவடிப்பள்ளி கமு/கமு/ அல் அஷ்ரஃப் மகா வித்தியாலய கேட்போர் கூடத்திற்கான நாற்காலிகள் கொள்வனவிற்காக 5 இலட்சம் ரூபாவும், மளிகைக்காடு நூரா பிந்து சாலிஹ் அத்தாயிஸ் பள்ளிவாசல் நிர்மாணத்திற்காக மேலும் 5 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட முன்மொழிவுகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று, தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை பதில் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 


(ஸப்பான் மௌலவி)
அக்கரைப்பற்றில் வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு  ஊர்வலம் இன்று இடம் பெற்றது. அக்கரைப்பற்று தக்காவடியில்  ஆரம்பித்து மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் வந்து சேர்ந்தது.

 


ஹிஸ்புல்லா அமைப்பினரால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் இருக்கும் இலங்கையர்கள், தமது பாதுகாப்பு குறித்து அதிக அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.


ஹைஃபா, நஹாரியா, அர்கோ, கலிலி, அஃபுலா, கர்மெல் மலைத்தொடர், நாசரேத் மற்றும் திபெரியா உள்ளிட்ட வடக்கு பிராந்திய நகரங்களில் வசிப்பவர்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவும் பட்சத்தில், தூதரகத்தினால் வழங்கப்படும் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 ( வி.ரி. சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது.

இன்றைய தினம் (4) புதன்கிழமை பட்டப்பகலில் காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வளத்தாப்பிட்டி பிரதான வீதி ஊடாக யானைகள் பட்டாளமாக பயணித்தது.
 
பிரதான வீதியில் பயணித்தவர்கள் சிலமணிநேரம் தாமதித்து பயணிக்க வேண்டி இருந்தது.

எதிர்வரும் விதைப்பு காலத்துக்கு முன்பதாக இந்த யானைகளின் அட்டகாசம் மேலும் தொடரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

 


நூருல் ஹுதா உமர்


மனிதநேயம், ஒற்றுமை மற்றும் சேவை உணர்வை உயர்த்திப் பேசும் புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு, களப் பணிகளை மேலும் செயல்திறன் மிக்கதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் மாற்றும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக புதிய மேலங்கி வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது புதிய மேலங்கிகள் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

நோன்பு மாதம் கருணை, பகிர்வு மற்றும் சமூகப் பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் காலமாக இருப்பதை குறிப்பிட்ட டாக்டர் ஜே. மதன் அவர்கள், இந்த காலப்பகுதியில் சமூக நல சேவைகளை அதிக அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் மேற்கொள்ளுமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

புதிய மேலங்கிகள் களப்பணிகளில் ஒருமைப்பாட்டையும் ஒழுங்கையும் பிரதிபலிப்பதுடன், பொதுமக்களுக்கு தரமான மற்றும் நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பகுதியில் மனித குடியேற்றத்திற்கு பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகள் வளர்க்கப்பட்டதால் அயல் வீட்டாருக்கு கடும் அசௌகரியங்களும் சுகாதாரத் தொந்தரவுகளும் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்க்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அயல் வசிப்பிடத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே. மதன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுற்றுச்சூழல் பிரிவிற்கு பொறுப்பான சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் அதிகாரிகள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட இடத்தில் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.

பரிசோதனையின் போது, குடியிருப்பு பகுதியின் மத்தியில் எருமை மாடுகள் வளர்க்கப்பட்டு, கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படாததன் காரணமாக துர்நாற்றம் மற்றும் கொசு பெருக்கம் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக பொதுமக்கள் தொல்லை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பொதுச் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் வளர்ப்பதை தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் எதிர்காலத்திலும் கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


 


( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா)


  அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் கடலரிப்பின் உக்கிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும் அவதியிலும் வாழ்ந்து வருகின்றனர். 

பல ஆண்டுகளாக இடம்பெற்று வரும் கடலரிப்பு சமீப காலங்களில் மிகவும் வேகமடைந்துள்ளதாகவும், இதனால் குடியிருப்புகள் மற்றும் நிலப்பரப்புகள் கடலுக்குள் இழுக்கப்பட்டுள்ளது.


கடந்த சில வாரங்களில் பல வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சில குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு உறவினர்களின் இல்லங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களின் படகு நிறுத்தும் இடங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கியிருந்த போதிலும், இதுவரை நிலையான தீர்வு எதுவும் அமுல்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். 

தற்காலிக கற்கள் அடைப்போ அல்லது கடற்கரை பாதுகாப்புச் சுவர் அமைப்பதற்கான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என மக்கள் குறைபடுகின்றனர்.

“ஒவ்வொரு நாளும் கடல் மேலும் மேலும் கரையை உடைத்து வருகிறது. எங்கள் வாழ்வாதாரமும், வீடுகளும் ஆபத்தில் உள்ளன. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை கட்டுக்கட்டுப்பாடுகளை மீறிவிடும்” என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


சமூக அமைப்புகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் அவசரமாக சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், நிரந்தர கடற்கரை பாதுகாப்புத் திட்டம் ஒன்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


அட்டப்பள்ளம் கடலரிப்பு பிரச்சினை தற்போது அவசர தீர்வு தேவைப்படும் சூழ்நிலையாக மாறியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துறைகள் எப்போது செயல்படுகின்றன என்பது மக்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது.

அங்குள்ள கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில்..

 


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர் தெரிவித்துள்ளார்.

அவரின் ஊடக அறிக்கையில் மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் மழையால் உரிய முறையில் உலர்த்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக நெல் முலை விடத் தொடங்கியுள்ளதுடன், பெருமளவிலான விளைச்சல் பயன்பாடற்றதாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வேளாண்மை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“கடந்த அரசாங்கங்கள் செய்தது போல, ஈர நெல்லை கிலோ 100 ரூபாய்க்கு அரசாங்கம் உடனடியாக கொள்வனவு செய்திருந்தால் இவ்வாறான இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும். தற்போதைய அரசாங்கம் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்யத் தவறியதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்” என அவர் குற்றம் சாட்டினார். மேலும் தற்போதைய அரசாங்கம் ஈர நெல்லை விவசாயிகளிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தனார்.

தற்போதைய அவசரநிலையை கருத்தில் கொண்டு, அனுர குமார திசாநாயக்க மற்றும் கே.டி. லால் காந்த ஆகியோர் நேரடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எம்.ஏ. நளீர் வலியுறுத்தினார்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், அரசாங்கம் அவசர நிவாரண திட்டம் ஒன்றை அறிவித்து, ஈர நெல் கொள்வனவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 


நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மனார் பள்ளிவாசலில் பெண்கள் தராவீஹ் தொழுகைக்காக மேல் தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டிட நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான சீமெந்து பைகளை வழங்குமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்கள் உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளை ஏற்று, தனது சொந்த நிதியில் குறித்த 20 சீமெந்து பைகளையும் அவர் வழங்கியுள்ளார். இவ்வுதவி பெண்கள் தொழுகை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு முக்கிய ஆதரவாக அமையும் என பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் கெளரவ பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் அஹமட் அவர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான முஹம்மட் லாபீர், முஹம்மட் இக்றாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசியலைத் தாண்டி, மக்கள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுவோம் என்பதையும், மத மற்றும் சமூக தேவைகளுக்கு ஆதரவு வழங்குவது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாகும் என்பதையும் அமீர் அப்னான் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


இன்று பேசுபொருளாக இருக்கக் கூடிய கிவுலோயா திட்டத்தின்  பிரதான நோக்கம் மகாவலியினூடான  நீர்ப்பாசனமே. மாறாக அங்கு எந்த குடியேற்றமும் ஒருபோதும் இடம்பெறாது .

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு கந்தசாமி தெரிவித்தார்.
 
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் எமது செய்தியாளர் சகா நேற்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மக்கள் உட்பட நாடுபூராக தேசிய மக்கள் சக்தி மீதும், எமது ஜனாதிபதி மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்து  இருக்கின்றார்கள் .அது ஒருபோதும் வீணாகாது. குறிப்பாக வடகிழக்கு மக்களை எமது அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என்றார் .

அவர், எமது செய்தியாளரின் கேள்விகளுக்கு மேலும்  பதிலளிக்கையில்..
 
எதிர்க்கட்சியினர் கிவுல்ஓயாத் திட்டம் மற்றும் பிரஜா சக்தி போன்றவற்றை தமது அரசியல் எதிர்காலம் கருதி எதிர்த்து வருகிறார்கள். அது மக்களை பாதிக்கலாம். 

எனது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் உள்ள 3000 ஏக்கரில் 1400 ஏக்கர் நிலம் மகாவலிக்கும்,  மீதி 1600 ஏக்கர் வனவள திணைக்களத்திற்கும் சொந்தமானது.
நான் அந்த பண்ணையாளர்களை கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர்கள் சகிதம் சென்று சந்தித்தேன். அவர்களது தேவைகள் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினோம்.
அவர்கள் நலன் கருதி முதற்கட்டமாக மகாவலிக்குச் சொந்தமான 1400 ஏக்கரை விடுவிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

நான் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுதும்,  இனமத பேதமின்றி மட்டக்களப்பு மாவட்டத்திலே  கடந்த ஒரு வருடத்தில் 100 மில்லியன் ரூபாவுக்கு  மேலதிகமான அபிவிருத்தியை செய்திருக்கின்றேன்.

பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை தேவைகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் தான் அது வேடிக்கையாக கேலியாக மாறி வருகிறது.
 உறுப்பினர்கள் சிலர் அதனை தேர்தல் களமாக மாற்ற முயற்சிப்பதால் வேடிக்கையாக இருக்கின்றது. இனி அதற்கு இடமளிக்க முடியாது.அதனை மாற்ற சுற்று நிருபமும் வந்துள்ளது.

கடந்த ஆட்சியாளர்கள் போல் இனவாதத்தை ஆயுதமாக வைத்து நாங்கள் செயல்பட போவதில்லை .எம்மில் இனவாதப் போக்கு இல்லை .நாம் அதற்கு எதிரானவர்கள். ஜனாதிபதி திறமையாக எவ்வித பேதமின்றி செயல்பட்டு வருகின்றார். அவரிடமும் இனவாத போக்கு இடமில்லை. எனவே எமது அரசாங்கம் மக்களது பிரச்சினைகளை இனமதபேதம் கடந்து பொதுவாகவே தீர்த்து வைக்கும். யாரும் அஞ்சத்தேவையில்லை என்றார்

 


நூருல் ஹுதா உமர்


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் தலைவராக திருமதி ஆரிக்கா காரியப்பர் அவர்கள் மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (18) கல்முனையில் நடைபெற்றது. அதில் 2026ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தலைவராக போட்டியின்றி மீண்டும் திருமதி ஆரிக்கா காரியப்பர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் முன்னதாகவும் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டு, சட்டத்துறையில் தொழில்முறை தரநிலைகளை உயர்த்தும் முயற்சிகள், சட்டத்தரணிகளின் நலன், இளம் சட்டத்தரணிகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் சமூக நீதிக்கான செயற்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.

அவரது மீண்டும் தெரிவு, கல்முனை சட்டத்தரணிகள் மத்தியில் அவருக்கு உள்ள நம்பிக்கையையும் மதிப்பையும் வெளிப்படுத்துவதாக சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

புதிய நிர்வாக சபை விரைவில் தனது பணிகளைத் தொடங்கவுள்ளது என்றும், சட்டத்துறையின் மேம்பாடு மற்றும் நீதித்துறையுடன் இணைந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் மேலும், இவ்வருட செயலாளராக சட்டத்தரணி ஏ.ஜி. பிரேம் நவாத் அவர்களும் பொருளாளராக சீ.ஐ. சஞ்சித் அஹமட் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

  


பாறுக் ஷிஹான்



பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் ஓய்வூதிய‌ம் ர‌த்து செய்யப்பட்டமையானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிறந்த முன்னெடுப்பாகும் என ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் தலைவர் முஸ்னத் முபாறக் தெரிவித்தார்.


சம கால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில்  மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.


பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் ஓய்வூதிய‌த்தை நீக்கும் ச‌ட்ட‌ம் 152 மேல‌திக‌ வாக்குக‌ளால் நிறைவேற‌ப்ப‌ட்டுள்ள‌மையான‌து  தேசிய மக்கள் சத்தி அர‌சாங்க‌த்தின் மிக‌ச்சிற‌ந்த‌ ந‌ட‌வ‌டிக்கையாகும்.இத‌ன் மூல‌ம் ம‌க்க‌ளின் பெரும் ப‌ண‌ம் மிச்ச‌மாகும் ந‌ல்ல‌ நிலை வ‌ந்துள்ள‌து.

இந்த‌ ஓய்வூதிய‌ நீக்க‌த்துக்காக‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் தொட‌ர்ந்து குர‌ல் கொடுத்து வ‌ந்த‌து.பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌த‌வி என்ப‌து  ஒரு தொழில் அல்ல‌.அது ம‌க்க‌ள் ந‌ல‌ன்புரி சேவையாகும். அச்சேவையை செய்ய‌ வ‌ருப‌வ‌ர் ச‌ம்ப‌ள‌மோ  ஓய்வூதிய‌மோ எதிர்பார்க்க‌ கூடாது.

ப‌ல‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பாராளும‌ன்றுக்கும் ஒழுங்காக செல்வ‌தில்லை.போனாலும் தூக்க‌ம்தான் பெரிது. இன்னும் சில‌ர் 25 ம‌ற்றும் 30 வ‌ருட‌ங்க‌ளாக‌ பாராளும‌ன்ற‌த்தில் இருந்தும் அவ‌ர்க‌ளால் ச‌மூக‌ம் உருப்ப‌டியாக‌ எதையும் பெற‌வில்லை.ஐந்து வ‌ருட‌ம் பாராளும‌ன்ற‌த்தில் கால‌த்தை க‌ட‌த்திவிட்டால் ஓய்வூதிய‌ம் என்ப‌து ந‌ம‌து நாட்டுக்கு கொஞ்ச‌மும் பொருத்த‌ம‌ற்ற‌ம‌தாகும்.

உண்மையில் இந்த‌ ஓய்வூதிய‌ம் என்ப‌து பொது ம‌க்க‌ளின் ப‌ண‌த்துக்கு செய்து வ‌ந்த‌ அநியாய‌மாகும்.எம்பீக்க‌ளின் சொகுசு வாழ்க்கைக்காக‌ ம‌க்க‌ள் ப‌லியாக‌ வேண்டுமா?என்ற‌ நிலை இருந்த‌து.எந்த‌ அர‌சும் முன்னெடுக்க‌ முடியாம‌ல் இருந்த‌ இந்த‌ ஓய்வூதிய‌ ஒழிப்பை மிக‌வும் தைரிய‌மாக‌ செய்து காட்டிய‌ ஜ‌னாதிப‌தி அனுர‌குமார‌ அர‌சுக்கு வாழ்த்துக்க‌ள்.

இது போல் எம்பீக்க‌ளின் ச‌ம்ப‌ள‌மும் நிறுத்த‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌ அம‌ர்வுக‌ளில் க‌ல‌ந்து கொள்ளும் ஒவ்வொரு அம‌ர்வுக‌ளுக்கு ம‌ட்டும் கொடுப்ப‌ண‌வு கொடுக்கும் சிஸ்ட‌ம்  வேண்டும் என்ப‌தும் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் கோரிக்கையாகும் என அவர் மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நூருல் ஹுதா உமர்


ஒலுவில் ஷஹ்வா அரபுக் கல்லூரியின் நீண்ட நாள் தேவையாக இருந்த நவீன தொழில்நுட்ப பாடத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான கணிணிகளின் தேவை குறித்து கல்லூரி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால், கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஊடாக பெறுமதியான கணிணிகள் (02) கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினரும் கட்சியின் பிரதி செயலாளருமான எம்.ஏ. அன்சில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.சிறாஜ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா, கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


ஒந்தாச்சிமட. கடற்கரைப் பகுதியில்.ரொக்கற்றின் பாகங்கள்  என்று நம்பக்கதாக, சிதைந்த பாகமொன்று நேற்று மாலை கரை ஒதுங்கியுள்ளது.

இது சம்மந்தமாக,  களுவாஞ்சிக்குடி, பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி, கபில அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை, களுவாஞ்சிகுடி கௌரவ நீதிவான் பிரதீபன் அவர்கள் ஒந்தாச்சிமடப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.


 


கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை வெள்ளப் பெருக்கினால் 45,387 குடும்பங்களைச் சேர்ந்த 144,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். 



திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 153 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் இடம்பெயர்ந்து தொடர்ந்தும் 05 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்ததுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (07) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


இதுரை 122 வீடுகள் முழுமையாகவும் 2,156 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இருவர் உயிரிழந்ததுடன் 12,469 குடும்பங்களைச் சேர்ந்த 34,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றினால் இதுரை 11 வீடுகள் முழுமையாகவும் 946 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.

 

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டடு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை அரசாங்கம் மற்றும் பொது அமைப்புகள் வழங்கிக்கொண்டிருக்கின்றன.

 

 நூருல் ஹுதா உமர்


கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட  எம்.எஸ்.ஹலால்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேற்சை உறுப்பினர், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவுகளை வழங்கி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஏலவே,  தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடத்திற்கான தெரிவு இன்று (20) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.