Showing posts with label Shooting. Show all posts

 


ஓட்டமாவடி பிரதேசத்தில் வேட்டைக்குச் சென்ற போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 30 வயது இளைஞர் ஒருவர் வபாத்; ஒருவர் கைது!


(எச்.எம்.எம்.பர்ஸான்)


ஓட்டமாவடி - மஜ்மா நகரில் 

துப்பாக்கி வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தச் சம்பவம் இன்று (12) செவ்வாய்க்கிழமை மாலை ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


நண்பர்கள் இருவர் வேட்டைக்கு சென்ற போது அவர்கள் பயன்படுத்திய வேட்டைத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஓட்டமாவடி - நாவலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இம்தியாஸ் எனும் இளைஞன் வபாத்தாகியுள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.


அவருடன் வேட்டைக்குச் சென்ற நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்,


இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 மஹாபாகே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் என சந்தேகிக்கப்படும் நபர், சூரியவெவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையின் போது STF இனால் சுட்டுக் கொல்லப்பட்ட மேலும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்தவர் - பொலிசார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.