நினைவேந்தல் நிகழ்வும் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும்
சுகிர்தகுமார்
திருக்கோவில் தேவசேனா அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (18) தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்காலில் உயர்நீத்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் திருக்கோவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் வெற்றி பெற்று தவிசாளராக பெயரிடப்பட்டிருக்கும் சுந்தரலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களும் தேவசேனா அமைப்பின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதேநேரம் இங்கு முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மலர்தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த சுந்தரலிங்கம் சசிகுமார் உயிர் நீத்த ஒவ்வொரு உயிர்களுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டியது நமது வரலாற்று கடமை. அதனையே இன்று நாங்கள் நினைவூட்டி வருகின்றோம் என்றார்.
இந்நினைவேந்தல் நிகழ்வில் திருக்கோவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் வெற்றி பெற்று தவிசாளராக பெயரிடப்பட்டிருக்கும் சுந்தரலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களும் தேவசேனா அமைப்பின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதேநேரம் இங்கு முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மலர்தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த சுந்தரலிங்கம் சசிகுமார் உயிர் நீத்த ஒவ்வொரு உயிர்களுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டியது நமது வரலாற்று கடமை. அதனையே இன்று நாங்கள் நினைவூட்டி வருகின்றோம் என்றார்.