மதுவெறியர்களின் கவனயீனத்தால் அப்பாவி இளைஞன் உயிரிழப்பு!
#திருகோணமலை - புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (17) மாலை இடம் பெற்றுள்ளது.
இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பின்புறமாக மூவருடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் அம்மூவர் மதுபோதையில் வேகமாக வந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் திருகோணமலை- கோனேசபுரி ஆறாம் கட்டையைப் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.தேவானந் (39வயது) என்பவரே உயிரிழந்ததாகவும் அவருடன் பயணித்து அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய யூ.தனூஸன் காயம் அடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அத்துடன் வேகமாக சென்று கொண்டிருந்த மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் 21, 30, 39 வயது உடையவர்கள் எனவும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவருடன் பயணித்த இளைஞர் உட்பட மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவருமாக மொத்தமாக நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தோலில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றல் மற்றும் தோலில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த நோய் நிலைமைக்கு சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
(ஊடகப்பிரிவு)
காத்தான்குடி வரலாற்றில் காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய தஃவா சமூக ஊடக வலைத்தளமான R Islamic Bayans Media Unit யூடியூப் பக்கத்தில் ஒரு இலட்சம் (100K) விரும்பும் நேயர்களை தன்பக்கம் ஈர்த்தும் 24193611 பார்வையாளர்களை கொண்டும் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
காத்தான்குடியை சேர்ந்த ஊடக செயற்பாட்டாளரும் R Islamic Bayans Media Unit ஊடகத்தின் ஸ்தாபகருமான ஏ.எல். அப்துர் ரஹீம், ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜீ உள்ளிட்ட R Islamic Bayans Media Unit ஊடகக் குழுவிரின் ஆறு வருட விடா முயற்சியினால் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய தஃவா பணியினை உலகம்பூராக வழங்கிய யூடியூப் பக்கமான திகழும் R Islamic Bayans Media Unit இச்சாதனையினை நிகழ்த்தியதையடுத்து இஸ்லாமிய தஃவா பணியை உலக மக்களுக்கு வழங்கிய முதலாவது காத்தான்குடியை தளமாக கொண்டு இயங்கும் யூடியூப் பக்கமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய தஃவா பணிகளை உலகலாவிய மக்களுக்கு கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய R Islamic Bayans Media Unit ஊடகக் குழுவினருக்கும் நேயர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக R Islamic Bayans Media Unit சமூக ஊடகத்தின் நடப்பு விவகாரங்களுக்கான பொறுப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். சஜீ தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக யூடியூப் ஆர்வளர்களுக்கு இலவசமாக பயிற்ச்சி வழங்க எமது ஊடக குழு தயாராகவுள்ளதாகவும் R Islamic Bayans Media Unit பிரிவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
R Islamic Bayans Media Unit
https://youtube.com/@r_islamic_official?si=IVO_tEDcp33cnPZe ஊடகப்பிரிவானது Islam is My Life https://youtube.com/@Islamic_My_life?si=f_wcrNvlC2M7yMjX மற்றும்
Islamic Motivation Tv https://youtube.com/@Islamic_motivation_Tv?si=hye3j92fR2RtQZ4O ஆகிய உப இஸ்லாமிய தஃவா யூடியூப் பக்கங்களை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு தசாப்தம்
2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் நீர் விநியோகத்திற்கென அகழ்வுப் பணியில் ஈடுபட்டவர்களினால் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மன்னார் பொலிஸார் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட குறித்த பகுதியை பார்வையிட்டதோடு, 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய, திருக்கேதீஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது பாரிய மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டடது.
தொடர்ந்து இடம்பெற்ற அகழ்வுப் பணிகளுக்கு அமைய 81 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் தொடர்ந்து முன்னிலையாகிவரும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் வலிந்து காணாமலாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை எவ்வித தகவல்களும் வெளியவரவில்லை.
திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுடையதாக இருக்கலாம் என 2,000 நாட்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களான தமிழ்த் தாய்மார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சாய்ந்தமருது 09 வொலிவேரியன் கிராமத்தில் வசித்து வந்த வயது 30 மதிக்கத்தக்க முஹம்மது இப்றாஹீம் அலீம் ( றிஸ்லின்( மீன் வாடி) மர்லீன்( மீன் வாடி) .அலாலின்( மீன் வாடி) ஆகியோரின் சகோதரரும் ஆவார்) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரனைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான விரிவான செய்திகளை விரைவில் எதிர்பாருங்கள்...
02 ஆண்களும், 02 பெண் பிள்ளைகளினதும் தந்தையான இவர் அமைச்சர் அதாஉள்ளாஹ் அவர்களின் முன்னை நாள் பாதுகாப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்தவர்,
தற்போது சம்மாந்துறை பொலிசில் கடமை புரிந்த இவர். முன்னை நாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான ரீ. ஹினாயாவின் அன்புக் கணவருமாவார்.
ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப் படும்.