Showing posts with label Sri lanka. Show all posts

 


சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் இதுவரையில் கிடைக்கப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் அது தொடர்பில் அறியப்படுத்துமாறு, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக இன்று கடமையேற்கும்


AC.Ahamed Shafir (SLAS) Sir

Ahamed Shafir Abdul Cader

அவர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூர்த்தி பிரிவின் சார்பில் வாழ்த்துக்கள்!

 


காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக  மலர் வளையம் ஒன்று வைக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


நூருல் ஹுதா உமர் 


மனித அபிவிருத்தி தாபனமும் பெண்கள் ஒத்துழைப்பு முன்னனியும் இணைந்து கல்முனை இஸ்லாமபாத் பொது கட்டிடத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வினை இன்று நடத்தியது.

வேள்வி பெண்கள் அமைப்பின் உப தலைவி எம். றிலீபா பேகம் தலைமைல் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பெண்கள் ஒத்துழைப்பு முன்னனியின் செயலாளரும், மனித அபிவிருத்தி தாபன நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளருமாகிய திருமதி எஸ். லோகேஷ்வரி கலந்து கொண்டு பிரதான உரை வழங்கினர்.

 பெண்கள் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் அபிவிருத்தி போன்றவற்றில் சமத்துவமாக செயற்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் அதற்கு இந்தியாவில் கேரளா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பஞ்சாயத்து முறையை பின்பற்ற வேண்டும் என்ற விளக்க உரையினை வழங்கினார்.

இந்நிகழ்வில் மனித அபிவிருத்தி தபான உதவி இணைப்பாளர் எம். ஐ. றியால், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தார்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் , பெண்கள் அமைப்புகள், சிவில் அமைப்புகளின், இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

 


#TrincoMedia 

மதுவெறியர்களின் கவனயீனத்தால் அப்பாவி இளைஞன் உயிரிழப்பு! 


#திருகோணமலை - புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்விபத்து இன்று (17) மாலை இடம் பெற்றுள்ளது.


இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பின்புறமாக மூவருடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் அம்மூவர் மதுபோதையில் வேகமாக வந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.


இவ்விபத்தில் திருகோணமலை- கோனேசபுரி ஆறாம் கட்டையைப் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.தேவானந் (39வயது) என்பவரே உயிரிழந்ததாகவும் அவருடன் பயணித்து அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய யூ.தனூஸன் காயம் அடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.


அத்துடன் வேகமாக சென்று கொண்டிருந்த மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் 21, 30, 39 வயது உடையவர்கள் எனவும் தெரிவித்தனர். 


உயிரிழந்தவருடன் பயணித்த இளைஞர் உட்பட மற்றைய மோட்டார் சைக்கிள் பயணித்த மூவருமாக மொத்தமாக நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்து தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இப்போது அனைத்து முன்பதிவு இருக்கைகளும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இ-டிக்கெட்டுகள் இயக்கப்பட்டுள்ளன, அரசாங்கத்தின் டிஜிட்டல் மாற்றத்திற்கு நன்றி! மேலும் அச்சிடப்பட்ட டிக்கெட்டுகள் தேவையில்லை. உங்களுக்கு விருப்பமான இருக்கையை சீட்ரீசர்வேஷன்.railway.gov.lk/mtktwebslr/ என்ற இணையதளத்தில் சிரமமின்றி முன்பதிவு செய்யும் வசதியை அனுபவிக்கவும்

 


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

 


நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தோலில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றல் மற்றும் தோலில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.


குறித்த நோய் நிலைமைக்கு சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 


காத்தான்குடியை சேர்ந்த ரஹீம், சஜி ஊடகக்குழுவின் முயற்சி யூடியூப்பில் வரலாற்று சாதனை..!

(ஊடகப்பிரிவு)


காத்தான்குடி வரலாற்றில் காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய தஃவா சமூக ஊடக வலைத்தளமான R Islamic Bayans Media Unit யூடியூப் பக்கத்தில் ஒரு இலட்சம் (100K) விரும்பும் நேயர்களை தன்பக்கம் ஈர்த்தும் 24193611 பார்வையாளர்களை கொண்டும்  வரலாற்று சாதனை படைத்துள்ளது.

காத்தான்குடியை சேர்ந்த ஊடக செயற்பாட்டாளரும் R Islamic Bayans Media Unit ஊடகத்தின் ஸ்தாபகருமான  ஏ.எல். அப்துர் ரஹீம், ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜீ உள்ளிட்ட R Islamic Bayans Media Unit ஊடகக் குழுவிரின் ஆறு வருட விடா முயற்சியினால் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.


இஸ்லாமிய தஃவா பணியினை உலகம்பூராக வழங்கிய யூடியூப் பக்கமான திகழும் R Islamic Bayans Media Unit இச்சாதனையினை நிகழ்த்தியதையடுத்து இஸ்லாமிய தஃவா பணியை உலக மக்களுக்கு வழங்கிய முதலாவது காத்தான்குடியை தளமாக கொண்டு இயங்கும் யூடியூப் பக்கமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.


இஸ்லாமிய தஃவா பணிகளை உலகலாவிய மக்களுக்கு கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய R Islamic Bayans Media Unit ஊடகக் குழுவினருக்கும்  நேயர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக R Islamic Bayans Media Unit சமூக ஊடகத்தின் நடப்பு விவகாரங்களுக்கான பொறுப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். சஜீ தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக யூடியூப் ஆர்வளர்களுக்கு இலவசமாக பயிற்ச்சி வழங்க எமது ஊடக குழு தயாராகவுள்ளதாகவும் R Islamic Bayans Media Unit பிரிவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


R Islamic Bayans Media Unit

https://youtube.com/@r_islamic_official?si=IVO_tEDcp33cnPZe ஊடகப்பிரிவானது Islam is My Life https://youtube.com/@Islamic_My_life?si=f_wcrNvlC2M7yMjX மற்றும் 

Islamic Motivation Tv https://youtube.com/@Islamic_motivation_Tv?si=hye3j92fR2RtQZ4O ஆகிய உப இஸ்லாமிய தஃவா யூடியூப் பக்கங்களை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 


பெண்ணின் ஆடைகளுடன், பரமேஸ்வரி எனும் பெயருடன் யாழ் வடமராட்சி கிழக்கு கட‌ற்கரையில் இன்றுகாலை கரையொதுங்கிய மர்ம மிதவையால் பரபரப்பு...

மர்ம மிதவையை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

 


வி.சுகிர்தகுமார் 0777113659  

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நேற்றிரவு (15) வீடொன்றில் கூரையின் வழியே உள் நுழைந்த இனந்தெரியாதவர்கள் உள்ளே இருந்த பொருட்களுக்கு தீவைத்துள்ளதுடன் வீட்டின் வெளியே இருந்த வாழை மரங்களையும் வெட்டி வீசியுள்ளனர்.
வீட்டில் யாருமற்ற நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இன்று (16) காலை வீட்டை பார்வையிட சென்றபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளதை உரிமையாளர் அறிந்துள்ளார்.
சம்பவத்தினால் வீட்டின் அலுமாரியில் இருந்த பெறுமதியான ஆடைகள் மற்றும் காணி உறுதி, ஆலயம் ஒன்றின் ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர் ஆலயம் ஒன்றின் பொருளாளராக இருப்பதுடன் அவரது  மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் தனியாக வசித்து வருகின்றார்.
இருப்பினும் அவர் சில நாட்களில் இரவு வேளைகளில் தனது மகளின் வீட்டில் தங்கிவருதும் வழமை. அதுபோன்றே நேற்றிரவும் மகளது வீட்டில் தங்கியிருந்த நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேநேரம் குறித்த வீட்டின் உரிமையாளர் பொருளாளராக செயற்பட்டுவரும் ஆலயம் ஒன்றின் ஒலிபெருக்கி சாதனங்களும் அன்மையில் திருடப்பட்டுள்ளமை அறிய முடிகின்றது.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் அக்கரைப்பற்று பொலிசாரிடம் தகவல் வழங்கிய நிலையில் பொலிசாரும் வீட்டினை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


 காத்தான்குடியைச்சேர்ந்த மாணவன் யாழ்பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் உயர் தேர்ச்சியில் தங்கபதக்கம் பெற்றார்

காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது அஷ்ரஃப் றுஸ்னி அஹ்மத் Eng, நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் பொறியியல் பீடத்தில் உயர் தேர்ச்சி பெற்று தங்கபதக்கம் பெற்றார்.
ا
இவர் காத்தான்குடி 05 முஸ்தபா ஹாஜியார் வீதியில் வசிக்கும் முகம்மது அஷ்ரப் ரிஹானா தம்பதிகளின் இரண்டாவது புதல்வராவார்.
இவர் ஆரம்பக் கல்வியை மட்/ அல்ஹிறா மஹா வித்தியாலயத்தில் கற்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் வெற்றி பெற்று கல்வி பொதுத் தராதர சாதாரண பரிட்சையில் 9A சித்தி பெற்று காத்தான்குடி மத்திய கல்லூரியில் உயர்தரக் கணித பிரிவில் கல்வி கற்றார்..
பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கிளிநொச்சியில் உள்ள அதன் வளாகத்தில் பொறியியல் மாணவராக கற்று முதன்மையான இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

 


தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய உடன் அமுலாகும் வகையில் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் 8 பேர் உட்பட 18 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

 


எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்பது தொடர்பில் கண்டறிய காபன் பரிசோதனை என ஒன்று உள்ளது. அதனை அமெரிக்க ஆய்வுக்கூடத்தில் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு மாதிரிகளை நாம் எடுத்துள்ளோம். அதனை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற கட்டளை ஒன்றும் உள்ளது. அந்த மாதிரிகள் நீதிமன்ற வழக்கு பொருட்கள் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாதிரிகளை அமெரிக்க ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கு செலவு ஒன்று ஆகும்தானே? அதிகாரி ஒருவர் செல்ல வேண்டும். மரண பரிசோதனையை செய்தவர் என்ற அடிப்படையில் நான்தான் மாதிரிகளை எடுத்துக்கொண்டு அமெரிக்காச் செல்ல வேணடும். சென்று ஒப்படைக்க வேண்டும். மாதிரியை பரிசோதிப்பதற்கு கொடுப்பனவு ஒன்றை ஆய்வுக்கூடத்திற்கு செலுத்த வேண்டும். ஆகவே இந்த நிதியை நீதிமன்றத்தால் வழங்க முடியாதல்லவா? ஆகவே ஓஎம்பியிடம் இதற்கு நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம். எனினும் அரசாங்கம் நிதியை கொடுத்தால் நான் நான் அமெரிக்காச் சென்று பணிகளை மேற்கொள்ள முடியும்.”

ஒரு தசாப்தம்

2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் நீர் விநியோகத்திற்கென அகழ்வுப் பணியில் ஈடுபட்டவர்களினால் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மன்னார் பொலிஸார் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட குறித்த பகுதியை பார்வையிட்டதோடு, 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய, திருக்கேதீஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது பாரிய மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டடது.

தொடர்ந்து இடம்பெற்ற அகழ்வுப் பணிகளுக்கு அமைய 81 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் தொடர்ந்து முன்னிலையாகிவரும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் வலிந்து காணாமலாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை எவ்வித தகவல்களும் வெளியவரவில்லை.

திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுடையதாக இருக்கலாம் என 2,000 நாட்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களான தமிழ்த் தாய்மார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 


Rep/SajumLaafir

சாய்ந்தமருது 09 வொலிவேரியன் கிராமத்தில் வசித்து வந்த வயது 30 மதிக்கத்தக்க முஹம்மது இப்றாஹீம் அலீம் ( றிஸ்லின்( மீன் வாடி) மர்லீன்( மீன் வாடி) .அலாலின்( மீன் வாடி) ஆகியோரின் சகோதரரும் ஆவார்) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பான  விசாரனைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து  வருகின்றனர்.

இது தொடர்பான விரிவான செய்திகளை விரைவில் எதிர்பாருங்கள்...

 


இறக்காமம் 09 பிரிவைச் சேர்ந்த MS. Sameem (Cheaf Inspector of Police) அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார்கள். 


02 ஆண்களும், 02 பெண் பிள்ளைகளினதும் தந்தையான இவர் அமைச்சர் அதாஉள்ளாஹ் அவர்களின் முன்னை நாள் பாதுகாப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்தவர், 


தற்போது சம்மாந்துறை பொலிசில் கடமை புரிந்த இவர். முன்னை நாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான ரீ. ஹினாயாவின் அன்புக் கணவருமாவார். 


ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப் படும்.

 


2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.