Showing posts with label Sri lanka. Show all posts


 ஓட்டமாவடி எகோ கல்வி நிலையத்தின்  கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கந்தசாமி பிரபு


ஓட்டமாவடியில் இயங்கி வரும் எகோ கல்வி நிலையம் ஏற்பாடு செய்த மாணவர் கௌரவிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (12-12-2025) அதன் பணிப்பாளர் எம்.எம்.நவாஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.


இதில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக பொறியியலாளர் ஏ.எச்.எஸ்.எம்.றம்ஸீன், ஓட்டமாவடி -பிரஜா சக்தி  தலைவர்களும் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment  #dccbatticaloa #JVP #sunilhandunneththi #DCCChairman #Batticaloa #CleanSriLanka

#AKD #ANURAKUMARADISSANAYAKE #PresidentAKD

 


அரச அறிவிப்பு | கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் – உடனடி புகார் வழிமுறை


கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அரசாங்க தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது.


தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:

📞 1905

📞 ஜனாதிபதி செயலகம்:

011 235 4354

011 235 4655

011 248 4500 / 600 / 700


முறைப்பாடு செய்யும்போது வழங்க வேண்டிய விவரங்கள்:


1. கிராம சேவகரின் பெயர்


2. அவர் பணியாற்றும் கிராம சேவை பிரிவு


3. சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவு


4. மாவட்டம்


5. நீங்கள் பாதிக்கப்பட்ட விவரம் அல்லது

– கிராம சேவகர் ஊடாக பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படும் மோசடி கொடுப்பனவுகள் / முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்


மொழி வசதி:

🗣️ தமிழ், சிங்களம், ஆங்கிலம் – மூன்று மொழிகளிலும் உங்கள் புகார்களை பதிவு செய்ய முடியும்.


அரசின் உறுதி:

யாரிடமும் சென்று கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. உங்கள் உரிமையை முதலில் உங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரிடம் கேளுங்கள். தவறு தொடர்ந்தால், அரசு அறிவித்துள்ள மேற்கண்ட தொடர்பு இலக்கங்கள் மூலம் நேரடியாக புகார் செய்யுங்கள்.

நிச்சயமாக, உங்கள் உரிமைக்கான நீதி காலதாமதமின்றி கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது.


இந்த தகவலை பொதுமக்களின் நலனுக்காக பகிருங்கள்.


#anifasi #Aaliya #Mannar #kalpitiya #NewsUpdate




முதன்மைப்படுத்தி வழங்கப்பட்டு வருகின்றது. அதை போன்று அரசாங்கம், அரச சாரா நிறுவனங்களும் இச்செயற்திட்டத்தில் பாரிய ஒரு பங்கினை வகுத்து வருகின்றது.

இவ்வனர்த்தத்தில் முழுமையாக தங்கள் வாழ்விடத்தை இழந்தவர்கள், பகுதியாக தங்கள் வாழ்விடத்தை இழந்தவர்கள் மற்றும் அனர்த்தத்தின் அவதானத்தில் இருந்து வாழ்விடங்களை கொண்ட மக்கள் கடந்த 02 வாரமாக முகாம்களில் தஞ்சமடைந்தார்கள். தற்போது அவதானமான இடங்களிலிருந்து முகாம்களில் தங்கியிருந்த மக்கள் படிப்படியாக தங்கள் வாழ்விடத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளார்கள். மீண்டும் மழை காலம் ஏற்பட்டால் மிக அவதானமான பகுதிகளில் வாழும் மக்களும், பூரணமாக தங்கள் வாழ்விடத்தின் மக்களும், பகுதியளவில் வாழ்விடத்தை இழந்த மக்களும் அனர்த்த முகாம்களில் பதிவாகி இருக்கின்றார்கள். அதை போன்று உறவினர் வீடுகளிலும் வசித்து வருகின்றார்கள்.
 
இம் மக்களின் வாழ்வாதாரம் தேயிலை தோட்டங்களிலும், கூலி வேலைக்கு செல்பவர்களாகவும், நகர்ப்புறங்களில் வியாபார புறங்களில் வேலை செய்பவர்களாக பெரும்பாலானவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்களின் வாழ்வாதார வீழ்ச்சி என்பது மிக பாரிய பிரச்சினையாக உள்ளது. தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய இயலாத தன்மை, வியாபார தலங்களுக்கு செல்ல பாதை இல்லாத தன்மை காரணமாக நேரடியாக இவ்வனரத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் பாதிக்கப்படாத மக்களும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலானவர் நாட்கூலிகளாக சென்று சிறு சேமிப்பை கைவசம் வைத்திருப்பவர்கள். அந்த சேமிப்பு தற்போது முடிந்த நிலையில் பாதிக்கப்படாத மக்களும் நிர்க்கதியாக நிற்கும் நிலையினை இந்த தித்வா புயல் ஏற்படுத்தியுள்ளது.
எனவே மனித அபிவிருத்தி தாபனம் தித்வா அனர்த்தத்தில் நேரடியாக, மறைமுகமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராம மட்ட குழுக்களை உருவாக்கி மிக நேர்த்தியான முறையில் நேரடியாக பாதிக்கப்பட்ட, மறைமுகமாக பாதிக்கப்பட்ட சேவைகள் வழங்கி வருகின்றது. 

 குடியேற்றம் நிகழ்வுகள் படிப்படியாக நடைபெறும்.


மனித அபிவிருத்தி தாபனம் மற்றும் ஏனைய சிவில் அமைப்புகளும் தற்காலிகமாக இம்மக்கள் வாழ்வதற்கான வதிவிடங்களுக்கு உதவி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது. தற்போது இவ்வனர்த்தத்தில் நிர்க்கதியான பெரும்பாலான மக்கள் பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், தோட்ட கம்பனிக்கு சொந்தமான கட்டிடங்கள், சமய தலங்கள், உறவினர்கள் வீடுகள் போன்றவற்றில் தற்காலிகமாக வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கான உளவியல் சுகாதார ஆலோசனைகள் வழங்குவதோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மீள் ஆரம்பம் செய்ய வேண்டிய பட்சத்தில் தொழிற்சாலைகள் மீண்டும் உற்பத்தியை செய்யத் தொடங்கும் தருணத்தில் இம்மக்களுக்கு வதிவிடங்கள் அவசியப்படும் என்பது கடந்தகால அனுபவங்கள் உணர்த்துகின்றது. யாரேனும் தற்காலிக வதிவிடங்கள் அமைத்து தருவதற்கு உதவும் பட்சத்தில் எம்முடன் இணைந்து இம்மீள் கட்டுமானத்தை உண்மையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்க முடியும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம். என்றார்.

வி.ரி.சகாதேவராஜா
( காரைதீவு  நிருபர் )

 


நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக உயர்ந்துள்ளதாகவும் 184 பேர் இன்னும் காணவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


நாட்டின் 25 மாவட்டங்களும் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 


(கல்எலவிலிருந்து  வி.ரி .சகாதேவராஜா)


 அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட பொலனறுவை கல்எல கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும்  ஒரு தொகுதி பேரிடர் நிவாரண பொருட்களை இன்று (13) சனிக்கிழமை வழங்கி வைத்தது.

இந்நிகழ்வு ஒருங்கிணைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினருமானவெ.ஜெயச்சந்திரன் தலைமையில்  நடைபெற்றது .

அவுஸ்திரேலியாவில் வாழும் காரைதீவைச் சேர்ந்த வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் விவேகானந்தமூர்த்தி நுறோஜன் இதற்கான பூரண அனுசரணை வழங்கியிருந்தார்.

ஒஸ்கார்  தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையிலான  குழுவினரின் பூரண ஒத்துழைப்பில் பேரிடர் நிவாரண திட்டத்தின் முதற்கட்டமாக பொலனறுவை கல்எல கிராமத்திற்கு முதல் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு அவற்றை வழங்கி வைத்தார்.

 ஒஸ்கார் சார்பில் உ. சஜானந்த் , எம் .டிலுஷாந், என். அமரீசன் மற்றும் ஓய்வு நிலை அதிபர் பூ.நவரெத்தினராஜா ஆகியோர் தொண்டர்களாக கலந்து கொண்டனர்.

இதனை ஒஸ்கார் அமைப்பின் சமூக சேவைக்கான இணைப்பாளர் பொருளாளர் வீ. விவேகானந்தமூர்த்தி மற்றும் செயலாளர் தி.லாவண்யன் ஆகியோர் அவுஸ்திரேலியாவிலிருந்து  ஒழுங்கமைப்பு செய்து ஏற்பாடு செய்திருந்தனர். 

 ஒஸ்கார்  தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையிலான ஒஸ்கார் குழுவினர் இன்னொரன்ன பல  சேவைகளை செய்து வருகின்றார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.


 சுகாதார அமைச்சின் தலைமை சட்ட அதிகாரி திருமதி அஹமத் ரியாசா அஹமத், 28 வருட  சேவையின் பின்னர் 10.12.25 இல் ஓய்வு பெறுகிறார்.


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )


சுகாதார அமைச்சின் தலைமை சட்ட அதிகாரி திருமதி அஹமத் ரியாசா அஹமத், 28 ஆண்டுகள் பாராட்டத்தக்க சேவைக்குப் பிறகு 10.12.25 முதல் பொது சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.


நிந்தவூரில் உள்ள அல்- மஷ்ஹர்  பெண்கள் பாடசாலை, மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் உயர்நிலைப் பாடசாலை மற்றும் கல்முனை வெஸ்லி உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி பயின்றார். 1993 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், 1994 இல் வழக்கறிஞர் பட்டம் பெற்றார், 2007 இல் அதே பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் (LLM) பெற்றார்.


ஒரு வழக்கறிஞராக, அவர் 1995 முதல் ஜூலை 1997 வரை சிலோன் ஷிப்பிங் கார்ப்பரேஷனின் தேசிய கேரியர்ஸில் சட்டம் மற்றும் காப்பீட்டு நிர்வாகியாக தனது பணியைத் தொடங்கினார், மேலும் அவர் 1.8.1997 முதல் சுகாதார அமைச்சில் சட்ட அதிகாரியாக இணைக்கப்பட்டார். இந்த நியமனத்துடன் சட்டப் பிரிவு நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டு முதல் தலைமை சட்ட அதிகாரியின் கடமைகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட அவர், 2014 முதல் தரம் I சட்ட அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார், பின்னர் தலைமை சட்ட அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார், ஓய்வு பெறும் வரை அந்தப் பொறுப்பில் பணியாற்றினார்.

 தனது சேவைக் காலத்தில், சுகாதாரத் துறை தொடர்பான பல சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் திருத்தங்களைத் தொடங்குவதற்கு அவர் பங்களித்தார், மேலும் சட்டமா அதிபர் துறை மற்றும் சட்ட வரைவாளர் துறையுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்தார். மனித உரிமைகள் தொடர்பான செயல் திட்டம் உட்பட அமைச்சினால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுக்களில் பணியாற்றினார், மேலும் கொள்கைகளை வகுப்பதில் உதவினார். திரிபோஷா வாரியங்கள் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் நிறுவன உறுப்பினராகவும் அவர் இருந்தார்.


ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம்.ஏ.அஹமட், ஓய்வு பெற்ற ஆசிரியை உம்மூ ஹமீமா தம்பதிகளின் புதல்வியுமான திருமதி .றியாஸா அஹமட் அவர்கள்   சிரேஷ்ட பொறியலாளர் யூ.எல்.எம்.யூசூப் அவர்களின் அன்பு மனைவியுமாவார்.


 நாங்கள் அவருக்கு அமைதியான ஓய்வு மற்றும் அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 



பாறுக் ஷிஹான்

நாட்டின் பல்வேறு பகுதிகளை தாக்கிய டித்வா புய‌ல் அன‌ர்த்த‌ம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை  ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ்   வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.


இதற்கமைய இன்று   அம்பாறை மாவட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு டித்வா புய‌ல் அன‌ர்த்த‌ம் தொடர்பில் பொதுமக்களை விழிப்பூட்டும் செய்திகளை ஊடகங்கள் வாயிலாக வெளியீட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான  நிதியுத‌வி  கல்முனையில் அமைந்துள்ள  ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைமை காரியால‌ய‌த்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த அனர்த்தம்   ச‌ம்ப‌ந்த‌மாக‌ செய்திக‌ளை திர‌ட்டும் ப‌ணியில்  பாதிப்புற்ற‌ சில‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள் இனங்கண்டு    ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் குறித்த நிதியுத‌வியை அவர்களுக்கு  வ‌ழ‌ங்க‌ தீர்மானித்திருந்தது.அத்துடன் அவர்களை கௌரவப்படுத்தி புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் முஸ்ன‌த் முபாற‌க் செயலாளர் எம்.எம். இர்பான் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் முபாற‌க் முப்தி உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து  கொண்டனர்.மேற்படி நிகழ்வு  ஶ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரசின்  வருடாந்த நிர்வாக சபை பொதுக்கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது.


நூருல் ஹுதா உமர்


கல்முனை பிரதேசத்தில் அடிக்கடி நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை மற்றும் மின்சார தடை காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் நோக்கில், சமூக நலப்பணிகளில் முன்னணியில் செயல்பட்டு வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஒரு முக்கியமான மனிதநேய உதவியை மேற்கொண்டுள்ளது.

யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு, உடனடி தீர்மானம் எடுத்து மின்தோற்றி (Generator) ஒன்றை கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபக தலைவரும், கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் வழங்கி வைத்தார்.

இந்த உத்தியோகபூர்வ மின்தோற்றி வழங்கும் நிகழ்வு அன்று கல்முனை யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசனின் உறுப்பினர்கள், யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

தற்போதைய சவாலான சூழ்நிலையில், ஜனாஸா தொடர்பான சேவைகள் உள்ளிட்ட அவசியமான சமூக பணிகளை இடையூறின்றி முன்னெடுக்க இந்த மின்தோற்றி பெரிதும் உதவியாக இருக்கும் என யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினர் தெரிவித்தனர்.

மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த மனிதநேய செயல், சமூகத்தில் பெரும் நம்பிக்கையையும் நிவாரணத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

 


நூருல் ஹுதா உமர்


கல்வி அமைச்சு மற்றும் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தை பாடசாலை ஆரம்பத்திற்கு தயார்படுத்தும் வகையில் சாய்ந்தமருது–மாளிகைக்காடு ஐக்கிய முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தினரால் சிரமதானம் ஒன்று இன்று (13) முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நடைபெற்ற இச்சிரமதானத்தில் பாடசாலை வளாகத்தின் சுற்றுப்புற சுத்திகரிப்பு, தேங்கியிருந்த குப்பைகள் அகற்றல், நடைபாதைகள் சீரமைத்தல், நீர் வடிகால் பகுதிகள் தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அண்மைய காலநிலை பாதிப்புகளால் ஏற்பட்டிருந்த அசுத்தங்களை அகற்றி, மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சாய்ந்தமருது–மாளிகைக்காடு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டு தன்னார்வமாக பணியாற்றினர். சமூக பொறுப்புணர்வுடன் கல்வி நிலையங்களை பாதுகாப்பதும், மாணவர்களின் நலனை முன்னிறுத்துவதும் தங்களின் கடமை என சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

பாடசாலை நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இத்தகைய சமூக ஒத்துழைப்புக்கு நன்றியினை தெரிவித்து, அரச சுற்றுநிருபத்திற்கிணங்க பாடசாலை ஆரம்பம் சிறப்பாக நடைபெற இது பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

இந்த சிரமதான பணியில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா, உறுப்பினர்கள், பாடசாலை கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


பேரிடரால் 211 பேர் காணமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


மேலும் 473,138 குடும்பங்களைச் சேர்ந்த 1,637,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 26,103 குடும்பங்களைச் சேர்ந்த 82,813 பேர் இன்னும் 847 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


பேரிடர்களால் 5,713 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

 


#அனர்த்தங்களால் #பாதிக்கப்பட்ட_வழிபாட்டு #தலங்களுக்கு_ரூ.25,000; #அமைச்சரவை_அனுமதி #வழங்கியது


பேரிடர் காரணமாக அனர்தத்திற்குள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 


அதற்கமைய, வழிபாட்டுத் தலங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 


தேவையான நிதி ஒதுக்கீட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சுக்கு  ஒதுக்கீடு செய்வதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் இதற்குரிய யோசனையை ஜனாதிபதி முன்வைத்திருந்தார். 


தித்வா சூறாவளியால் ஏற்பட்ட அழிவால் சுமார் 764 மதஸ்தலங்கள் சேதமாகியுள்ளதாக புத்த சாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். 


379 விகாரைகள், 165 கோவில்கள், 63 தேவாலயங்கள் மற்றும் 157 மசூதிகள் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 


அத்துடன், பேரிடர் சூழ்நிலை காரணமாக பல மாவட்டங்களில் 18 கலாசார மையங்களும் சேதமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 


அனைத்து மதத் தலங்களையும் மீட்டெடுத்து புனரமைக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இது பல கட்டங்களில் செய்யப்படும் என்றும், சுத்தம் செய்தல் மற்றும் மத நடைமுறைகளைத் தொடங்குவதற்கான பி,ற ஆரம்பப் பணிகளுக்கு மேற்படி ரூ. 25,000 ஆரம்ப மானியத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

  (எம். என். எம். அப்ராஸ் ) 


கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் ஜம்இய்யதுல் உலமா,பொது நிறுவனங்கள் சம்மேளனம், வர்த்தக சங்கங்கள், ஊர் மக்கள் ஆகியோரின் பங்களிப்பில் கல்முனை அனர்த்த நிவாரண முகாவைத்துவ பணிமனையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வைக்கப்பட்டது.

சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட வெல்லம்பிடிய மெகடகொலன்னாவ பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் கடந்த (10) புதன்கிழமை கையளிக்கப்பட்டது. இங்கு 850 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

 இதேவேளை மேற்குறித்த நிவாரண பணியின் மற்றுமொரு ஒரு தொகுதி மல்வான ரக்ஷபான பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் கடந்த (10) புதன்கிழமை 450 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மல்வானை விதானகொடை மற்றும் காந்தியவெலவ பிரதேச மக்களுக்கான நிவாரணப் பொதிகள் விதானகொடை ஹிதாயா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் காந்தியவெலவ ஜும்ஆ மஸ்ஜித் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டது. மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (11) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. 

பொலனறுவைக்கு நிவாரணப் பொதிகள் திவுலான அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதின் ஆலோசனைகளுக்கமைய பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (11) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. பொலனறுவை மானிக்கம்பிடிய மக்களுக்கு மானிக்கம்பிடிய ஹுதா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் கிராம சேவகரின் ஆலோசனைகளுக்கமைய நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன .

மேலும் மூதூர் பால நகர் பகுதியில் ஜாமிஉல் அல்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (11) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.

 (வி.ரி. சகாதேவராஜா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக சமூக சேவகர் விசு கணபதி பிள்ளையின் உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் நேற்று (12) மண்முனை ஒல்லிக்குளம் கிராம  70 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகளும், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும். வழங்கி வைக்கப்பட்டன.

 மட்டக்களப்பு மாவட்ட உதவும் பொற்கரங்கள் அமைப்பின் இணைப்பாளர். குணராஜா கணபதிப்பிள்ளையின் ஏற்பாட்டில். ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் என். சௌவியதாசன், ஓய்வுபெற்ற உதவிக் கல்வி பணிப்பாளர் கண. வரதராஜன். சமூக சேவகர் திலகன். சமூக சேவகர் திருமதி சுரேஷ்குமார் சகாயநாயகி. ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொதிகளை மக்களுக்கு கையளித்திருந்தனர்.

 இற்க்கான நிதி உதவியை உதவும் பொற்கரங்கள்  அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான திரு  விசு கணபதி பிள்ளை அவர்களுடன் இணைந்து. நியூசிலாந்தில் வசிக்கின்ற. கனிஷ்ரராணி தம்பியப்பா ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உதவும் பொற்கரங்கள் அமைப்பின் நிவாரண பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.பணிகளுக்கான பூரண ஒத்துழைப்பை பெரியநீலாவணை நெக்ஸ் ரெப் இளைஞர்கள் செய்து வருகின்றனர்

ஆலையடிவேம்பு நிருபர

வி.சுகிர்தகுமார்         


இலங்கையில் கிராமப்புறங்களில் நிலவும் வறுமையை ஒழித்து, சமூகங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தேசிய வேலைத்திட்டமான 'பிரஜா சக்தி குழுக்களின் தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வும் அவர்களுக்கான பயிற்சி செயலமர்வும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (12) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு  பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் ஆகியோர்  கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தனர்.
நாட்டின் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் அனைத்து மக்களையும் சமூகக் கட்டமைப்போடு இணைத்து, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துதல் எனும் கோட்பாட்டோடு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது 'மக்களின் சக்தி' அல்லது 'சமூக சக்தி' என்பதே ஆகும்.
நாடு முழுவதும் உள்ள 14,000 கிராம அலுவலர் பிரிவுகளிலும் சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டு, அடிமட்ட மக்களின் பங்களிப்புடன் தேவைகளைக் கண்டறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


 நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். 


போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை - நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில் மீண்டும் மண்மேடு சரிந்து வீதி தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாவட்ட செயலாளர், நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாகத் தொடர்ந்தும் வீதிகளில் மண்மேடுகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 


'திட்வா' புயலினால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,


அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத சில தரப்பினர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.


 


நிலவும் சீரற்ற  வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சையை (GIT) ஜனவரி 11, 2026 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் தங்கள் தேர்வு மையத்தில் தேர்வுக்கு வர முடியாவிட்டால், அவர்கள் தங்கள் பாடசாலையின் அதிபருக்குத் தெரிவிக்க வேண்டுமெனவும்


அதேபோல், சம்பந்தப்பட்ட அதிபர்கள் தங்கள் பாடசாலையில் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் குறித்து அறிவிக்கவேண்டும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது


கல்முனை மேல் நீதிமன்ற  கௌரவ நீதிபதி A. Judsan அவர்கள் ,8g ஹெரோயின்  வைத்திருந்து  விற்பனை செய்த குற்றவாளிக்கு, ஆயுள் தண்டணை வழங்கி தீர்பளித்தார்.

குறித்த குற்றச்சாட்டுக்கு,.குற்றஞ்சாட்டப்பட்டவர்,  குற்றஞ்சாட்டினை சுயமாக ஏற்றுக் கொண்டதன் பின்பு குற்றவாளியான அட்டாளைச்சேனையை சாஜித் என்பவருக்கு இத் தண்டனை இன்றைய தினம்  விதிக்கப்பட்டது.

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியானதன் பின்பு, கௌரவ நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜீட்சன் அவர்களால் விதிக்கப்பட்ட முதல் ஆயுள் தண்டனை. இதுவாகும்.



நூருல் ஹுதா


உமர் 



நாவிதன்வெளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டம்( நிதியறிக்கை) இன்று காலை 9:30 மணியளவில் (11) வியாழக்கிழமை நிறைவேறியது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் மாதாந்த கூட்டம் பிரதேச சபை சபா மண்டபத்தில் இன்று நடைபெற்றபோதே மேலதிக 08 வாக்குகளால் நிதியறிக்கை வெற்றி பெற்றது.

முன்னதாக , அண்மைய பேரிடரில் உயிர்நீத்த உறவுகளுக்கு இரண்டு நிமிடம் நினைலவஞ்சலி செலுத்தப்பட்டது.

 அடுத்த வருடத்திற்கான இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு 08 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் கோபாலசிங்கம் உதயகுமார், தெய்வேந்திரன் கிருபாகரன், த.சித்திர குமார், சோ.கமலேஸ்வரன் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.பி.நிவாஸ்,மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் லத்தீப் சுயேட்சை குழு உறுப்பினரும் உதவி தவிசாளருமாகிய கு. புவனரூபன் , உறுப்பினர் யொணிபஸ் யூஜின் ஆகியோர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.

சுயேட்சை குழு உறுப்பினர்கள் அ.நளீர்,அ.சௌதியா ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குஞ்சரமூர்த்தி நிரோஜன் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சமயம் சபையின் 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் சுயேட்சை குழு உறுப்பினரும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் அமரதாஸ ஆனந்த சபையில் பிரசன்னமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

 அதன்படி தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையிலான முதலாவது வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது.



 


( வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடறிந்த கதிரவன் கலைக் கழகத்தின் "தூய இலங்கை"( க்ளீன் ஸ்ரீலங்கா- clean srilanka) வீதி நாடகம் இன்று (11) வியாழக்கிழமை காரைதீவு பிரதேச செயலக  முன்றலில் நடைபெற்றது.

 நாடறிந்த கதிரவன் கலைக் கழகத்தின் 2500 ஆவது வீதி நாடகம் இதுவாகும் .

தூய இலங்கை க்ளீன் ஸ்ரீலங்கா என்ற தொனிப்பொருளில் கதிரவன் கலைக்கழகத் தலைவர் த. இன்பராசா தலைமையிலான குழுவினரின் வீதி நாடகம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. பார்த்தவர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தார்கள்.

காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ.அருணன் ,உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரணவரூபன், கணக்காளர் திருமதி ஏஎல்.பாத்திமா றிம்ஷியா மற்றும் செயலக உத்யோகத்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் த. இன்பராசா விளக்க உரை நிகழ்த்த,   ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி விரி.சகாதேவராஜா நன்றியுரையாற்றினார்.


இறுதியில்,  கதிரவன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் மண்சரிவு புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் சேகரிக்கும் பணியும் இடம்பெற்றது .பலரும் கற்றல் உபகரணங்களை வழங்கினார்கள்.

 


டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது.


பேரிடரின் விளைவாக ஒரு நபர், உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் காணாமல்போனதாக அறிவித்தால், அத்தகைய காணாமல்போனவர்களின் இறப்புகளை அதிகாரபூர்வமாக பதிவுசெய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு திணைக்களத்தால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


திணைக்களத்தின் அறிவித்தலின்படி, தேசிய பேரிடர் பகுதிகள் மற்றும் நிர்வாக மாவட்டங்களில் இறப்புகளைப் பதிவுசெய்வதற்கான தற்காலிக ஏற்பாடுகள் தொடர்புடைய சட்டத்தின்படி டிசம்பர் 02 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.


இந்த விதிகளின் கீழ் காணாமல்போனவரின் மரணத்தைப் பதிவுசெய்வதற்குத் தேவையான தகவல்களைக்கொண்ட விண்ணப்பப் படிவம், உண்மைகளை உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்துடன், அந்த நபர் கடைசியாக வசித்த பகுதியின் கிராம அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கிராம அலுவலர் விண்ணப்பத்தை பிரதேச செயலாளருக்கு அனுப்பவேண்டும்.


பின்னர், கோரிக்கை பொதுமக்களின் ஆட்சேபனைகளுக்காக இரண்டு வாரங்களுக்கு பிரதேச செயலகம் மற்றும் அந்தந்த கிராம அலுவலர் அலுவலகம் இரண்டிலும் காட்சிப் படுத்தப்படும்.


எந்த ஆட்சேபனையும் எழுப்பப்படாவிட்டால், பிரதேச செயலாளர் விண்ணப்பத்தை அங்கீகரிக் கப்பட்ட மண்டலத்துக்குப் பொறுப்பான உதவி அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்திடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பார்.


ஆட்சேபனைகள் எழும் சந்தர்ப்பங்களில், பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு முன் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் வருகைப் பதிவுச் சான்றிதழ்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு, அதே நடைமுறையின்கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, முறையான விசாரணைகளை நடத்தி, அதற்கேற்ப சான்றிதழ்களை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் திணைக்களம் மேலும் குறிப்பிடடுள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.