"அழகான கடற்கரை - கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்''
ஸ்ரீலங்கா #கிளீன் #ஸ்ரீலங்கா...2025....
ஜே.கே.யதுர்ஷன்
கிளீன் சிறீலங்கா தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் "அழகான கடற்கரை - கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்'' எனும் தொனிப்பொருளில்
திருக்கோவில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சின்ன முகத்துவாரம் பகுதி
தொடர்க்கம் சங்கமன் கிராமவரையான கடற்கரை சூழல் சிரமதான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது...
குறித்த நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் பெரியமுகத்துவாரதாதில் நிகழ்வு கொடியேற்ற நிகழ்வுடன் வைபவ ரிதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.....
இன் நிகழ்வில் முப்படையினர் மற்றும் அதன் உயர் அதிகாரிகள் சுகாதார வைத்திய அதிகாரி அதன் உத்தியோத்தர்கள் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் , தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச குழுவினர் மற்றும் பிரதேச சபை செயலாளர் மற்றும் ஊழியர்கள் பொது அமைப்புகள் கழகங்கள் பொதுமக்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்....