தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி
56 களில் தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி.
பாறுக் ஷிஹான்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பகுதியில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து நான்கு பிரதான எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14 – 15: முதலாவது கப்பலும் ஏப்ரல் 17 – 18: இரண்டாவது கப்பலும் ஏப்ரல் 21 – 22: மூன்றாவது கப்பலும் ஏப்ரல் 29 – 30: நான்காவது கப்பலும் நாட்டுக்கு வந்தடையவுள்ளது.
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் மங்கள விக்ரமாராச்சி கடமையினைப் பொறுப்பேற்றார்!
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி இன்று(12) காலை 09.21 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.
மத்துகமவைச் சேர்ந்த இவர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தினை சேர்ந்தவராவார். இவர் கல்முனை,மகாஒயா,உகண, பதியத்தலாவ,திகன ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும், அனுராதபுரம் மோட்டார் வாகன திணைக்களத்தின் ஆணையாளராகவும் கடமையேறியுள்ளார்.
இவர் இறுதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப் பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன்,அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஆலையடிவேம்பு நிருபர்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், ஈரான் முன்வைக்கும் மூன்று முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்த நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் அடிப்படையில்,
தெஹ்ரானின் இறையாண்மை மற்றும் அதன் சட்டபூர்வமான உரிமைகளை சர்வதேச சமூகம் முழுமையாக அங்கீகரிக்க வேண்டும்.
இதுவரை ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
வருங்காலத்தில் மீண்டும் இத்தகைய ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் நடைபெறாது என்பதற்கு பலமான மற்றும் உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும்.
"இந்த அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே இப்பகுதியில் நிலையான அமைதி என்பது சாத்தியமாகும்," என ஜனாதிபதி பெசெஷ்கியான் சுட்டிக்காட்டியுள்ளார்.
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவோம் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு
நூருல் ஹுதா உமர்
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் நோக்கில் “Cancer Early Detection & Prevention Programme” எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 2026 மார்ச் 11 ஆம் திகதி இன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீட கேட்போர் அரங்கில் நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன்புரி சேவைகள் பிரிவு மற்றும் பல்கலைக்கழக சுகாதார நிலையம் இணைந்து, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஷ்ஹர், பல்கலைக்கழக நிர்வாகிகள், சுகாதார அதிகாரிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் வரவேற்பு உரையையும் பிரதான உரையையும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க உரையாற்றினார். கடந்த ஆண்டில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை மாவட்டங்களில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான மருத்துவ முகாம்கள் குறித்து அவர் நினைவுபடுத்தினார். அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெற்றதுடன், மூன்றுசக்கர வண்டிகள், சைக்கிள்கள், வீல் சேர், நடைக்கோல்கள் போன்ற உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குழுக்களை இலக்காகக் கொண்டு 100க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கிழக்கு மாகாணம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் போது சுகாதார துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் பலரும் அறிவியல் விளக்கக் கருத்துரைகளை வழங்கினர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றாத நோய்கள் பொறுப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் பௌசாத் விளக்க உரை வழங்கினார்.
அதேபோல் பிராந்திய பல் சிகிச்சை நிபுணர் டாக்டர் யு. ஹபீப் முகம்மட், வாய் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆரம்ப அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பாத்திமா ஷாபிரா முகம்மட் வாசீம் மார்பகப் புற்றுநோய் தொடர்பாக விரிவான விளக்க உரை வழங்கினார். இந்த நிகழ்வின் மூலம் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், தடுப்பு வழிமுறைகள் மற்றும் முன்கூட்டியே கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன்புரி சேவைகள் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி ஏ.என்.எம். முபாறக் நன்றி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்முனை பிராந்திய மீனவர்களுக்கு மீன் பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
நூருல் ஹுதா உமர்
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில் கல்முனை பிராந்தியத்தைச் சேர்ந்த மீனவர்களுக்காக இலங்கையின் மீன்பிடித் துறை, மீனவர்களுக்கு நிலவும் சவால்கள் மற்றும் மீன்பிடி தொடர்பான சட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று இன்று (11) கடற்தொழில், நீரியல்வளங்கள் திணைக்கள அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.
மீனவர்களின் தொழில் முன்னேற்றத்தையும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், மீன்பிடி நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகள், கடல் வளங்களை பாதுகாக்கும் முறைகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் தற்போதைய சவால்கள் குறித்து விரிவான விளக்கங்கள் கடற்தொழில், நீரியல்வளங்கள் திணைக்கள மாவட்ட காரியாலய உதவிப்பணிப்பாளர் ஆர். சி.குரூஸ் அவர்களினால் வழங்கப்பட்டன.
மேலும், நிலைத்தன்மை வாய்ந்த மீன்பிடி நடைமுறைகள், கடல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியம் ஆகியவை தொடர்பாகவும் மீனவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்தியத்தைச் சேர்ந்த பல மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது தொழிலுடன் தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் தேவைகளை முன்வைத்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். அதிகாரிகளும் அதற்கு உரிய விளக்கங்களை வழங்கியதுடன், எதிர்காலத்தில் மீனவர்களின் நலனை முன்னிறுத்தும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தனர்.
மீனவர்களின் விழிப்புணர்வை அதிகரித்து சட்டபூர்வமான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாகும்.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே. யாட்சன் பிகிறாடோ அவர்களினால் மெசிடோ நிறுவனத்தின் வரலாறு மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கினார். மேலும் இந்நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திரு S.S. யாண்சன் மற்றும் உத்தியோகத்தர்கள், கடற்தொழில், நீரியல்வளங்கள் திணைக்கள மாவட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மொத்தத்தில், மீனவர்களின் விழிப்புணர்வை அதிகரித்து சட்டபூர்வமான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது. இது மீனவர்களின் தொழில் வளர்ச்சிக்கும் கடல் வளங்களின் பாதுகாப்புக்கும் முக்கிய பங்களிப்பாக அமையும் என கூறப்பட்டது.
(வி.ரி.சகாதேவராஜா)
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதியை மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும், வருடாந்த இப்தார் வைபவமும் பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடத்தில் இன்று (10) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து மாணவர்களுக்குக் கையளித்தார்.
இதன் போது உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம், கல்முனை கல்வி வலயம் கடந்த காலங்களில் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதன் விளைவாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் மாணவர்கள் பல்வேறு கல்விச் சாதனைகளைப் பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும், மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதும் வலயக் கல்வி அலுவலகத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த புனரமைப்பு திட்டம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு மேலும் உந்துதலாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் தலைவருமான ரஹ்மத் மன்சூர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுடீன், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜே.டி. சில்வா, பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், வரணியா சாந்தரூபன், எம்.என்.எம்.ஏ. மலிக், அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், உதவி கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் அனுசரணையில் சிறப்பு இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமழான் மாதத்தின் ஆன்மிகச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்தனர். இதன்போது கணித ஒலிம்பியாட் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய தரம் 11 மாணவரான எம்.என்.எம். அன்சிப் தேசிய மட்டத்துக்கு தெரிவானமையை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.ம், வருடாந்த இப்தார் வைபவமும் பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடத்தில் இன்று (10) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து மாணவர்களுக்குக் கையளித்தார்.
இதன் போது உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம், கல்முனை கல்வி வலயம் கடந்த காலங்களில் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதன் விளைவாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் மாணவர்கள் பல்வேறு கல்விச் சாதனைகளைப் பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும், மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதும் வலயக் கல்வி அலுவலகத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த புனரமைப்பு திட்டம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு மேலும் உந்துதலாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் தலைவருமான ரஹ்மத் மன்சூர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுடீன், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜே.டி. சில்வா, பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், வரணியா சாந்தரூபன், எம்.என்.எம்.ஏ. மலிக், அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், உதவி கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் அனுசரணையில் சிறப்பு இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமழான் மாதத்தின் ஆன்மிகச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்தனர். இதன்போது கணித ஒலிம்பியாட் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய தரம் 11 மாணவரான எம்.என்.எம். அன்சிப் தேசிய மட்டத்துக்கு தெரிவானமையை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும், வருடாந்த இப்தார் வைபவமும் பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடத்தில் இன்று (10) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து மாணவர்களுக்குக் கையளித்தார்.
இதன் போது உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சாஹுதுல் நஜீம், கல்முனை கல்வி வலயம் கடந்த காலங்களில் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதன் விளைவாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் மாணவர்கள் பல்வேறு கல்விச் சாதனைகளைப் பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும், மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதும் வலயக் கல்வி அலுவலகத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த புனரமைப்பு திட்டம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு மேலும் உந்துதலாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் தலைவருமான ரஹ்மத் மன்சூர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுடீன், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஜே.டி. சில்வா, பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், வரணியா சாந்தரூபன், எம்.என்.எம்.ஏ. மலிக், அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், உதவி கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் அனுசரணையில் சிறப்பு இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமழான் மாதத்தின் ஆன்மிகச் சூழலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நோன்பு திறந்தனர். இதன்போது கணித ஒலிம்பியாட் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய தரம் 11 மாணவரான எம்.என்.எம். அன்சிப் தேசிய மட்டத்துக்கு தெரிவானமையை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் ‘பராமரிப்புப் பிரிவு’ திறப்பு
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நோயாளர் சேவைகளை தடையின்றி முன்னெடுக்கும் நோக்கில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிதாக பராமரிப்புப் பிரிவொன்று (Maintenance Unit) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள், நேற்று (09) குறித்த பிரிவினை நாடாவெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட இப்பிரிவு, பிராந்திய திட்டமிடல் பிரிவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளது. இதற்கென Plumber, Electrician, Carpenter போன்ற துறையில் அனுபவமுள்ள ஊழியர்கள் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார நிறுவனங்களில் ஏற்படும் பின்வரும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதே இப்பிரிவின் பிரதான நோக்கமாகும்.
வைத்தியசாலைகளில் திடீரென ஏற்படும் மின்சாரத் தடைகள் மற்றும் நீரிணைப்புப் பிரச்சினைகளை உடனுக்குடன் சீர்செய்தல்.
சேதமடைந்த கட்டடப் பகுதிகள் மற்றும் ஏனைய தளபாடப் பழுதுகளை இனங்கண்டு அவற்றை விரைவாகத் திருத்தியமைத்தல்.
இப்பராமரிப்புப் பிரிவு இயங்குவதன் ஊடாக வைத்தியசாலைகளில் ஏற்படும் சிறிய தொழில்நுட்பக் கோளாறுகளால் நோயாளர் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், நீண்டகாலம் காத்திருக்காமல் உடனுக்குடன் தீர்வுகளை வழங்கவும் முடியும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்காக ஆஜராகவுள்ளார்.
ஏற்கனவே அவரை விசாரணைக்காக ஆணைக்குழு அழைத்திருந்தபோதும் , சிங்கப்பூர் செல்வதால் தம்மால் வரமுடியாதென கோட்டாபய எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.
17 ஆம் திகதி ஆஜராகும் கோட்டபாயவிடம் சாட்சியம் பதிவு செய்யப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், அங்கு வாழ்வாதாரத்திற்காகச் சென்றுள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அரசாங்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் குறிப்பிட்டாலும், போர் இடம்பெறும் நாடுகளில் உள்ள இலங்கையர்கள் துயரத்தையும் தினசரி மரண அச்சத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
'நான் பார்த்த தெஹ்ரான் இதுவல்ல'
இரானின் தலைநகர் தெஹ்ரானில் வாகனச் சாரதியாகப் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் (பாதுகாப்பு கருதி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது), அங்குள்ள தற்போதைய கோரமான சூழலை பிபிசி தமிழுக்கு விவரித்தார்.
"நாங்கள் இவ்வளவு காலம் பார்த்த தெஹ்ரான் இப்போது இல்லை. எங்கு பார்த்தாலும் குண்டுத் தாக்குதல்களின் அழிவுகளையே காண முடிகிறது. குடியிருப்பு வீடுகள், வர்த்தக நிலையங்கள் என அனைத்துமே ஏவுகணைத் தாக்குதலில் சிதைந்து போயுள்ளன," என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதை உணர முடிகிறது. இவ்வாறான அழிவுகளில் நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதே தெரியவில்லை. இறைவன் எம்மோடு இருப்பான் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.''
விளம்பரம்
இரான், இஸ்ரேல், சௌதி, துபையில் வசிக்கும் இலங்கை மக்கள் பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,துபையில் தாக்குதலுக்கு பிறகு எழுந்த புகை
இஸ்ரேல் - 'வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல்'
இலங்கையில் 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, குடும்ப வாழ்வாதாரத்திற்காக இஸ்ரேல் சென்ற சமிந்த, அங்கிருந்து தனது இக்கட்டான சூழலை விவரித்தார்.
"இலங்கையில் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாத காரணத்தினாலேயே கஷ்டப்பட்டு இங்கே வேலைக்கு வந்தேன். ஆனால் தற்போது இங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கும் யுத்த சூழலில் நிம்மதியாகச் சம்பாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் பாதுகாப்பு பலமாக இருந்த போதிலும், தற்போது பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நான் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அண்மையிலேயே ஏவுகணைகள் விழுந்துள்ளன. எம்மை குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது," என்கிறார் சமிந்த.
தொடர்ந்து பேசிய அவர், "வடக்கு இஸ்ரேலில் இருந்து ஏனைய பாதுகாப்பான பகுதிகளுக்கு மக்களை அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தூதரகத்தின் ஊடாக எம்மைப் பாதுகாக்கும் முயற்சிகள் நடந்தாலும், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியாத சூழல் உள்ளது. எனது குடும்பத்தினர் என்னை எப்படியாவது வரவழைக்க முயற்சி செய்கின்றனர். அவர்களின் வேதனையை என்னால் விளங்கிக்கொள்ள முடிகின்றது, ஆனால் இப்போதைக்கு இங்கேயே பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்," எனத் தெரிவித்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டிடம் முக்கியமான ஆயுதங்கள் “கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் உள்ளன” என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா - இரானின் ஆயுத கையிருப்பு குறைந்தால் போர் எப்படி மாறும்?
அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் தொடர்ச்சியான கூட்டு வான்வழித் தாக்குதல்கள் இரானின் ராணுவத் திறன்களைக் கணிசமாகக் குறைத்துள்ளதாகக் கூறுகின்றன.
அமெரிக்காவை வெல்ல முடியாது என தெரிந்தும் இரான் போரை தொடர்வது ஏன்?
தோனி முதல் ஷோயப் அக்தர் வரை அனைவரும் கௌதம் கம்பீரின் ரசிகர்களானது எப்படி?
தோனி முதல் ஷோயப் அக்தர் வரை அனைவரும் கம்பீரின் ரசிகர்களானது எப்படி?
இரான் - அமெரிக்கா, இரான், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள், சௌதி அரேபியா
இஸ்ரேலை விட சௌதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது இரான் அதிக ஏவுகணைகளை ஏவியது ஏன்?
End of அதிகம் படிக்கப்பட்டது
இரானில் ஏற்பட்ட பாதிப்பு பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரானில் ஏற்பட்ட பாதிப்பு
ஜோர்டான் - 'வானில் ஏவுகணைகள் மாறி மாறிப் பறக்கின்றன'
மத்திய மாகாணத்தின் கந்தப்பளையைச் சேர்ந்த மதுசான், ஜோர்டானில் இருந்து தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.
"இங்கே நிலைமைகள் சாதரணமாகத் தெரிந்தாலும், எமது இருப்பிடங்களில் இருந்து பார்க்கையில் வானில் ஏவுகணைகள் செல்வதை தெளிவாகப் பார்க்க முடிகின்றது. இஸ்ரேல் - இரான் நாடுகளின் ஏவுகணைகள் மாறி மாறி வானில் பறப்பதைக் காண முடிகின்றது. இதனால் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருக்கின்றது. யுத்தம் நிகழும் ஏனைய நாடுகளில் உள்ள எமது உறவுகளை நினைக்கையில் நிம்மதியை இழந்தவர்களாகவே நாமும் உள்ளோம்," என்கிறார் மதுசான்.
"எங்கள் தலைக்கு மேலே ஏவுகணைகள் சீறுகின்றன": மத்திய கிழக்கு போர்முனையில் தவிக்கும் இலங்கையர்களின் நேரடி சாட்சியங்கள்பட மூலாதாரம்,Madushan
படக்குறிப்பு,மதுசான்
சௌதி அரேபியா மற்றும் துபையில் பரவும் பதற்றம்
ரியாத்தில் பணியாற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த மொஹம்மத் ரிகாஸ் கூறுகையில், "பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கே கடுமையாக்கப்பட்டுள்ளன. எண்ணெய் குதங்கள் மற்றும் தூதரகங்கள் மீதான தாக்குதல் முயற்சி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த யுத்தம் முடியும் வரை நிம்மதியாக வாழ முடியாது என்பதை உணர முடிகிறது," எனத் தெரிவித்தார்.
இதேவேளை, துபையின் பால்ம் ஜுமேரா பகுதியில் பணியாற்றும் இலங்கையர் ஒருவர், "கடந்த ஒரு வாரமாகத் தூக்கத்தைத் தொலைத்து மிகுந்த அச்சத்துடன் விழித்திருக்கிறோம். நான் பணிபுரியும் பகுதியில் மிகப்பாரிய சத்தத்துடன் தீ பரவியது. அந்த அதிர்ச்சி எம்மை மனதளவிலும் உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தியுள்ளது," எனத் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தாக்குதலுக்கு பிறகு எழுந்த புகைபட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தாக்குதலுக்கு பிறகு எழுந்த புகை
தூதரகங்கள் சொல்வது என்ன?
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தற்போதைய கள நிலவரம் குறித்துக் கூறுகையில், "இங்கு போர்ச் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது. குறிப்பாக வடக்கு இஸ்ரேல் பகுதிகள் கடும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்," எனத் தெரிவித்தார்.
மேலும், "இதுவரை ஓர் இலங்கையர் காயமடைந்து சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளார். ஏனையோருக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்ற போதிலும், இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால், அவர்களுக்கான விசா மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளையும் தூதரகம் செய்து கொடுத்துள்ளது," என அவர் உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இலங்கை தூதர் அருஷா குரே, இலங்கையர்களுக்குப் பாதிப்புகள் இல்லை என்றும், விமானச் சேவைகளின் மட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாதுகாப்பான பயணங்களை உறுதிப்படுத்த தூதரகம் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
லெபனானின் உள்ள 7,500 இலங்கையர்களில் 22 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
"எங்கள் தலைக்கு மேலே ஏவுகணைகள் சீறுகின்றன": மத்திய கிழக்கு போர்முனையில் தவிக்கும் இலங்கையர்களின் நேரடி சாட்சியங்கள்பட மூலாதாரம்,Arusha Cooray
படக்குறிப்பு,அருஷா குரே
ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தரவாதம்
மத்திய கிழக்கு நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, "வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிந்த மற்றும் பதியாத சுமார் 10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்தால், இராஜதந்திர உறவுகளின் ஊடாக அவர்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன," எனக் குறிப்பிட்டார்.
"எங்கள் தலைக்கு மேலே ஏவுகணைகள் சீறுகின்றன": மத்திய கிழக்கு போர்முனையில் தவிக்கும் இலங்கையர்களின் நேரடி சாட்சியங்கள்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
நாடு வாரியாக இலங்கையர்களின் விபரங்கள்
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மத்திய கிழக்கின் முக்கிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை விபரங்களை முன்வைத்தார்.
அதற்கமைய குவைத்தில் 3,22,437 பேரும், சௌதி அரேபியாவில் 2,43,593 பேரும், கத்தாரில் 2,03,182 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1,70,468 பேரும், ஓமனில் 36,812 பேரும், இஸ்ரேலில் 27,472 பேரும், ஜோர்டானில் 24,182 பேரும், பஹ்ரைனில் 14,374 பேரும், லெபனானில் 7,925 பேரும், இராக்கில் 641 பேரும், ஏமனில் 16 பேரும், இரானில் 10 பேரும், சிரியாவில் 7 பேரும் பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.
இதுவே அரசாங்கத்திடம் உள்ள உத்தியோகபூர்வ எண்ணிக்கையாகும் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"எங்கள் தலைக்கு மேலே ஏவுகணைகள் சீறுகின்றன": மத்திய கிழக்கு போர்முனையில் தவிக்கும் இலங்கையர்களின் நேரடி சாட்சியங்கள்பட மூலாதாரம்,Vijitha Herath
படக்குறிப்பு,அமைச்சர் விஜித ஹேரத்
மேலும், "இந்த யுத்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள சகல தரப்பினரும் மோதல்களைக் கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு," என அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.