Showing posts with label Sri lanka. Show all posts

 


சுகிர்தகுமார்           


 திருக்கோவில் தேவசேனா அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (18) தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்காலில் உயர்நீத்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் திருக்கோவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் வெற்றி பெற்று தவிசாளராக பெயரிடப்பட்டிருக்கும் சுந்தரலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களும் தேவசேனா அமைப்பின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதேநேரம் இங்கு முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மலர்தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.  
பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த சுந்தரலிங்கம் சசிகுமார் உயிர் நீத்த ஒவ்வொரு உயிர்களுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டியது நமது வரலாற்று கடமை. அதனையே இன்று நாங்கள் நினைவூட்டி வருகின்றோம் என்றார்.

 



.சுகிர்தகுமார்            


 இந்திய மற்றும் இலங்கை ரோட்டரி கழகத்தினால் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவும் மற்றும் கல்வித்தேவையுடையோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கினை அடிப்படையாக கொண்டும் 10 துவிச்சக்கர வண்டிகள் கல்முனை ரோட்டரி கழகத்தினால் இன்று  பொத்துவில் மெதடிஷ்த தமிழ் கலவன் மகா வித்தியாலயத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் 2400 துவிச்சக்கர வண்டிகள் இந்திய மற்றும் இலங்கை ரோட்டரி கழகத்தின் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 கல்முனை ரோட்டரி கழகத்தின் தலைவர் ரோட்டரியன் பொறியியலாளர் ரதீஷன் தலைமையில் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் ரோட்டரி கழகத்தின் அங்கத்தவர்களான தரணிதரன் அமிர்தசங்கர் சுபராஜன் பார்த்தீபன் சசிதரன் ரவிச்சந்திரன் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களால் அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இத்திட்டத்தி;ன் ஊடாக முதற்கட்டமாக பொத்துவில் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் மகா வித்தியாலயம், தாண்டியடி மகா வித்தாயலயம் மற்றும் கோளவில் மகா வித்யாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு எதிர்வரும் காலத்திலும் இத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

 



ஓட்டமாவடி மாணவன் #அஸ்லூப் நீரில் மூழ்கி வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சந்தியாற்றில் நீராடச்சென்ற ஓட்டமாவடி-2, பீ.எஸ்.வீதியைச்சேர்ந்த ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) உயர்தரம் கற்கும், துபாயில் தொழில்புரியும் அலிகான் ஆசிரியரின் 19 வயதுடைய மகன் அஸ்லுப் சற்றுமுன்னர் நீரில் மூழ்கி வபாத்தானார்.

 தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் இயக்குநர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது 



நாரஹேன்பிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

அவருக்குச் சொந்தமான ஆவணக் கோப்பு திருடப்பட்டது. - காவல்துறை ஊடகப் பேச்சாளர்- ,
 for

 


பாறுக் ஷிஹான்


கடும் காற்று காரணமாக அம்பாறை மாவட்டத்தில்  இன்று(17)   மரங்கள் முறிந்து விழுந்ததுடன் மக்கள் குடியிருப்புக்கள்  வியாபார நிலையங்கள் என பலதும் சேதமடைந்துள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

மேலும் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ,பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு ,சம்மாந்துறை ,நிந்தவூர், அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று , உள்ளிட்ட பகுதிகளில் கடும் காற்றும்  மழையும் திடிரேன  பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற வானிலை எதிர்வுகூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும்  தற்போதைய காலநிலை மாற்றமானது சிறுவர் முதல் பெரியோர் வரை பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.றியாஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய காலநிலை மாற்றம் குறித்து எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிற்கு தெரிவிக்கையில்

அம்பாறை மாவட்டத்தில்  அடிக்கடி திடீரென  பலத்த காற்று மழை ஏற்பட காலநிலை மாற்றமே  காரணமாகும். எல்-நினோவின் தாக்கம் இலங்கைக்கு தற்போது  ஏற்பட்டிருக்கின்றது. இதன் தாக்கம் காரணமாக இடையிடையே மழை ஏற்படுவதுடன்  பாரிய காற்றும்  10 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கிறது. இது தவிர  அதிக  வெப்பம் நிலவுவதுடன் வழமையை விட இன்று மாத்திரம் பாரிய காற்று வீசியதை அவதானிக்க  கூடியதாக இருந்தது.

 குறிப்பிட்ட ஒரு நேர காலத்திற்குள் இவ்வாறான பாரிய காற்று இடையிடையே மழை வீழ்ச்சி என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.எனவே தற்போது பாரிய காற்று வீசுவதனால் வீடுகளில் உள்ளவர்கள் கடை வைத்திருப்பவர்கள் முன்னேற்பாடான நடவடிக்கையில் ஈடுபடுமாறும் தற்போது வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக வயல்வெளிகளில் வேலை செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்  வெப்பநிலை அதிகரிப்பினால் சிறுவர்கள்  நீராகாரங்களை   உட்கொள்கொள்ளுமாறும் வெளியே அநாவசியமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்  வயல்வெளிகளில் நீண்ட நேரம் வயல்வேலைகளில் ஈடுபடுவதை  தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
 


நடவடிக்கையில் ஈடுபடுமாறும் தற்போது வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக வயல்வெளிகளில் வேலை செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.


அத்துடன்  வெப்பநிலை அதிகரிப்பினால் சிறுவர்கள்  நீராகாரங்களை   உட்கொள்கொள்ளுமாறும் வெளியே அநாவசியமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்  வயல்வெளிகளில் நீண்ட நேரம் வயல்வேலைகளில் ஈடுபடுவதை  தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.



கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக அறை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



முன்னாள் நீதவானுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (19) நீதிமன்றத்திற்கு வந்து, தனது அலுவலக அறையில் உள்ள தனிப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவரை, குறித்த அலுவலக அறைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் கூறினர்.


தற்போது, கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

\

(Tamilan News)


 ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஆதரவு வழக்கில் 10 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் விடுவிக்கப்பட்டனர்


மே 16, 2025 இரவு 8:53 மணிக்கு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் இன்று சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) அவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணைகள் முடிவடைந்ததாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததை அடுத்து, கொழும்பு கூடுதல் நீதிபதி பசன் அமரசிங்க அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.

வழக்கு கோப்பை மறுஆய்வு செய்த பின்னர், ஏப்ரல் 9 அன்று சட்டமா அதிபர் அவர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இந்த அறிவுறுத்தல்களின் பேரில், பன்னிரண்டு நபர்களையும் விடுவிக்க அரசுத் தரப்பு நடவடிக்கை எடுத்தது. 




 மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட் திறப்பு


ஸ்டாண்டை ரோகித் சர்மாவின் அப்பா- அம்மா, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.


#RohitSharma | #WankhedeStadium | #MumbaiIndians | #DailyThanthi

 


கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது..


இத்துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சுமித்ராராம வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 


பிமல் ரத்நாயக்கவின் குற்றச்சாட்டுக்கும் தமிழரசுக்கட்சியினர் நடவடிக்கை எடுப்பார்களா?

தமிழரசுக்கட்சி வாக்கு சேகரிக்க சாராயம் வழங்கிய குற்றச்சாட்டு, முன்னாள் தமிழரசுக்கட்சி எம்பியிடம் 100கோடி கோருகிறார் சுழிபுரக் கிளை உப தலைவர்!

இது தொடர்பான கோரிக்கை கடிதம்,சட்டத்தரணி கீர்த்தனா கமலச் சந்திரன் அவர்களால்,அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



 (  வி.ரி.சகாதேவராஜா)


 உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் 
சுவாமி விபுலானந்த
அடிகளாருக்கு உலகில் 15 அடி உயர முதல் கருங்கல் சிலை நாளை (17) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் திறந்து வைக்கப்படுகிறது.

 அடிகளாரின் துறவற  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு  சுவாமி விபுலானந்தர்  நூற்றாண்டு விழா சபையின்  பூரண ஏற்பாட்டில் ,மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில், இந்திய மாமல்லபுரத்தில் செதுக்கிய கருங்கல்லாலான  சுவாமி விபுலானந்த அடிகளாரின் திரு உருவச்சிலை நிறுவப்படுகிறது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ முன்னிலையில்  சுப வேளையில் கடந்த ஜனவரியில் அடிக்கல் நடும் நிகழ்வு  சிறப்பாக இடம் பெற்றமை தெரிந்ததே. 

 அடிகளாரின் சிலையானது தனி ஒரு     கருங்கல்லால்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   இது இந்தியாவில் மாமல்லபுரத்தில்   திறமை வாய்ந்த தமிழ் நாட்டு சிற்பிகளால்   செதுக்கப்பட்டது .

அடிகளாரின்  சிலை  அமைப்பு   செயற்     குழுவின்    தலைவரான    மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரான  தேசபந்து  முத்துக்குமார் செல்வராஜா  தலைமையில் சிலையமைப்பு பணிகள் நடைபெற்று நாளை அவர் தலைமையில் சிலைதிறப்பு விழா நடைபெறுகிறது.

நாளை முழுநாள் விழாவும் மட்டக்களப்பு நூற்றாண்டு விழாச் சபைத்தலைவர் கே. பாஸ்கரன் தலைமையில்  நடைபெறவுள்ளது .

இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் சிலையைத் திறந்து வைக்கிறார்.

உலகில், சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு தனிக் கருங்கல்லில் சிலை எழுப்பப்படுவதும், கல்லடிப்பாலத்தோடு நெருங்கிய தொடர்பு வரலாறுடைய மண்ணின் மைந்தர் சுவாமிக்கு கல்லடிப் பாலத்தில் சிலை எழுப்பப்படுவதும்  இதுவே முதல் தடவையாகும்.

இது தொடர்பாக- மட்டக்களப்பு
விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் தலைவர் க.பாஸ்கரன் தெரிவிக்கையில்..

முத்தமிழ் வித்தகரும் உலகில் முதலாவது தமிழ்ப்  பேராசிரியருமான சுவாமி விபலானந்தருக்கு  15 அடி உயரமான கற்சிலை  நாளை 17ஆம் திகதி பிற்பகல் 4.30  மணிக்கு  . மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

 முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் மகர யாழை ஆய்வு செய்து  அதற்கு உருவம் கொடுத்து உலகிற்கு தந்தவர் .அவரால் மகரயாழ் இன்றும் உயிர் வாழ்கிறது.

அது மட்டும் இன்றி உலகில் முதலாவது தமிழ் பேராசிரியராக பதவி பெற்று தமிழ் மொழிக்கும்  இனத்திற்கும் நன்கு சேவையாற்றியவர். குறிப்பாக தமிழர்களின் மத்தியில் இருக்கின்ற குல சாதி மத வர்க்க பேதங்களை அறவே ஒழிக்க பாடுபட்டவர் .இதற்கு மேலாக ஆன்மீகத்தில் துறவியாகி ஆன்மீக ஞானத்தை வழங்குவதில் அவர் காட்டிய உற்சாகம், வழிவகைகள் அளப்பெரியன. இப்படியான ஒரு மகான்  வாழ்நாளில் மறக்க முடியாதவர் அவரின் ஞாபகார்த்தமாக  15 அடி உயரமான கற்சிலையை  கல்லடி பாலத்திற்கு அருகாமையில் திறந்து வைப்பதில் விபுலானந்தரின் நூற்றாண்டு விழா சபை மிகவும் சந்தோசம் அடைகிறதென்றாறார்.

 சிலை நிர்மாணக் குழு தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா, சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் பொதுச் செயலாளர் ச.ஜெயராஜா ஆகியோரும் கருத்து கூறினர்.


கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு - வளிமண்டல திணைக்களம்


மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.


இவ்வாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கையானது இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.


மின்னல் தாக்கம் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 


இலங்கையின் சட்ட அமைப்பினுள் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக, உச்ச நீதிமன்றம், மே 15, 2025 அன்று கொழும்பு 12, ஹல்ஃப்ட்ஸ்டோர்ப்பில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற விழாவில், GovPay வழியாக ஆன்லைன் கட்டண ஏற்பு முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.


இந்த டிஜிட்டல் முயற்சி, சட்ட வல்லுநர்களையும் பொதுமக்களையும் GovPay-இயக்கப்பட்ட இணைய வங்கி, மொபைல் வங்கி தளங்கள் மற்றும் FinTech பயன்பாடுகள் மூலம் உச்ச நீதிமன்றம் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான சுருக்கமான கட்டணங்கள், சான்றளிக்கப்பட்ட நகலெடுக்கும் கட்டணங்கள், வணிக உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு தாக்கல் கட்டணம், இழப்பீடு, செலவு, பதிவு கட்டணம் (வழக்கறிஞர்), நல்ல நிலை சான்றிதழ் கட்டணம், புதிய வாதி தாக்கல் கட்டணம் மற்றும் பிரமாணப் பத்திரங்களுக்கான ஆன்லைன் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான நிகழ்நேர, பாதுகாப்பான ஆன்லைன் கட்டணங்களைச் செய்ய உதவுகிறது

ஆரம்ப கட்டத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு GovPay பணம் செலுத்துதல் பல ஆன்லைன் வங்கி தளங்கள் மற்றும் BOC ஸ்மார்ட் பே மொபைல் செயலி, பீப்பிள்ஸ் பே மொபைல் செயலி, NSB ஆன்லைன் வங்கி, பான் ஆசியா ஆன்லைன் வங்கி, சம்பத் விஷ்வா ஆன்லைன் வங்கி, HNB PayFast, செலான் வங்கி ஆன்லைன் வங்கி, DFCC ஆன்லைன் வங்கி, NationsDirect ஆன்லைன் வங்கி / NationsDirect மொபைல் செயலி, ComBank டிஜிட்டல் ஆன்லைன் வங்கி மற்றும் ComBank டிஜிட்டல் மொபைல் செயலி, NDB Neos ஆன்லைன் வங்கி, Helakuru மொபைல் செயலி, iPay மொபைல் செயலி, FriMi மொபைல் செயலி, Genie மொபைல் செயலி உள்ளிட்ட FinTech செயலிகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. GovPay உடனான ஒருங்கிணைப்பு பாதுகாப்பான, தடையற்ற மற்றும் வெளிப்படையான பரிவர்த்தனைகளை உறுதி செய்கிறது, எந்த நேரத்திலும் எங்கிருந்தும் அணுகக்கூடியது, சட்ட சமூகத்திற்கும் நீதிமன்றங்களைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் ஒரு புதிய அளவிலான வசதி மற்றும் செயல்திறனைக் கொண்டுவருகிறது. மேலும், அமைப்பு வழியாக உருவாக்கப்பட்ட ரசீது உட்பட முழு GovPay டிஜிட்டல் செயல்முறையும் 2006 ஆம் ஆண்டு 19 ஆம் எண் மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் (திருத்தப்பட்டபடி) சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும்


 


பாறுக் ஷிஹான்


சுனாமிப் பேரலை தாக்கி 20 வருடங்கள் கடந்துவிட்டது.இலங்கையில் பாதிப்புற்ற அனைத்து பிரதேசங்களிலும் பாதிப்புற்றோர்களுக்கு நியாயமான அடிப்படையில் இழப்புகள் ஈடுசெய்யப்பட்டுவிட்டது.குறிப்பாக சுனாமி பாதுகாப்பு எல்லைக்குட்பட்டவர்களுக்கு அந்தந்த பிரதேசங்களில் பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புக்கான வீடமைப்புக்கள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளன.ஆனால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாத்திரம் நுரைச்சோலை அரச காணியில் அமைக்கப்பட்ட வீடுகளை சுனாமியால் பாதிப்புற்று வீடுகள் முழுமையாக சேதமடைந்த மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டினை செய்வதற்கு வருகைதந்த பாதிப்புற்றோர் சங்கத் தலைவர் ஐ.எல்.ஏ. குத்தூஸ்  கூறுகையில் 15 வருடங்களுக்கு முன்னர் வீடமைப்பு அமைச்சராக இருந்த திருமதி. பேரியல் அஷ்ரஃப் அவர்களுடைய அயராத முயற்சியில் எங்களுக்காக சவுதி நாட்டு நிதியினைக் கொண்டுவந்து நிர்மாணித்து முடிக்கப்பட்ட இந்த வீடுகளை வழங்க ஆயத்தமானபோது. பேரினவாதங் கொண்ட சில இனவாதிகளாலும், இன்னும் சிலருடைய சுயநல அரசியல் இலாபங்களுக்காகவும் அக்கரைப்பற்று மக்களுக்கு இந்த வீடுகளை வழங்கக்கூடாது என திட்டமிட்டு  தடுக்கப்பட்டது.

நடந்த அநியாயங்கள் அனைத்தையும் கண்முன்னே கண்டு அனுபவித்த நான் உட்பட பலர் அவற்றிற்கு சாட்சி என்று கண்கலங்கியவராக கூறினார்.தொடர்ந்து கூறும்போது இதனை மேலும் தடை செய்ய சிலரால் உச்சநீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், அதில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.அவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பு இருப்பதனால் வீடுகளை வழங்க முடியாதுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் முதல் உயர்மட்ட அதிகாரிகளும், மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களும் கூறிவருகின்றனர்.புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று முதன் முதலில் கூறியது நுரைச்சோலை வீடுகள் பாதிப்புற்ற மக்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று,அவ்வாறு கூறி ஆறு மாதங்கள் தாண்டிவிட்டது. அவர்களும் அதைச் செய்யவில்லை. இதற்கு தீர்வை யார்தான் வழங்குவது என தமது துயரை கூறினார்.

இந்த பணிகளில்  பாதிப்புற்ற மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ADALR இணைப்பாளரும், மனித எழுச்சி நிறுவனத்தின் (HEO) பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் அவர்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். 

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

அம்பாறை மாவட்டத்தில் காணி, வீட்டு உரிமைகளுக்காக நீண்டகாலமாக போராடிவரும் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியில்(ADALR) தீர்வு வேண்டிய போராட்டத்தில் இணைந்திருப்பவர்களில் இப் பிரச்சினையில் பாதிப்புற்றோர்களும் உள்ளார்கள். குறிப்பாக அவர்களுடைய பிரதிநிதிகளாக அதன் தலைவர் குத்தூஸ், மற்றும் சுபைறா அவர்களுடனான பிரதிநிதிகள் முறைப்பாட்டினை இன்று ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளார்கள்.

இந்த உரிமைக்காக நீண்டகாலமாக ADALR பல முயற்சிகளையும் செய்து வருகின்றது.கடந்த சுனாமி 20 ஆண்டு நினைவு நாளன்று இவர்களுடன் நானும் சென்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் சந்தித்து எமது கோரிக்கையினை வழங்கி பேசினோம்.

அரசாங்க அதிபர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அவர்கள் என்னை கொழும்பிற்கு அழைத்து நேரில் சந்தித்து வீடுகளை வழங்குவது தொடர்பில் விசாரித்தார் என்றும்,அதன்போது உச்சநீதிமன்ற தீர்ப்பில்  உள்ள சிக்கல்கள் தொடர்பில் பேசியதாக கூறினார்.அதில் குறிப்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தேசிய கொள்கை அடிப்படையில் இந்த வீடுகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் உள்ள சிக்கல்களாலேயே இதனை வழங்க முடியாமல் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் தெரிவித்ததாக கூறினார்.

நிஹால் அவர்கள் மேலும் கூறும்போது,

 உண்மையிலேயே இலங்கையில் தேசிய காணிக் கொள்கை ஒன்று இல்லை. நாட்டு பிரஜைகளுக்கு நிலப் பிரச்சினைகள் இந்தளவு அதிகரிக்க பிரதானமான காரணிகளில் அதுவும் ஒன்றாகும். தேசிய காணிக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று  நீண்ட காலமாக பல சிபாரிசுகளை நாம் அரசுக்கு வழங்கி வந்துள்ளோம்.

கடந்த ஏப்ரல் 24ம் திகதி கல்முனைப் பிராந்தியத்திற்கு களவிஜயத்தினை மேற்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி. கிஹாண் குணதிலக அவர்களுடைய தலைமையிலான குழுவைச் சந்தித்த எமது ADALR பிரதிநிதிகள் முன்வைத்து கலந்துரையாடிய பிரச்சினைகளில் இந்த சுனாமி வீட்டுத்திட்டம், கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வீட்டுப் பிரச்சினையினை முழுதாக கேட்டறிந்த ஆணையாளர்,

"15 ஆண்டுகளுக்கும் அதிகமாக நடைமுறைப்படுத்த முடியாது உள்ள தீர்ப்பு ஒன்று தொடர்பில் உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை ஒன்றினை எழுதிக் கோரும் இயலுமை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உண்டு. எனவே பாதிப்புற்ற மக்களுடைய முறைப்பாடு இருக்குமிடத்து ஆணைக்குழுவால் குறித்த நடவடிக்கையை எடுக்கமுடியும்"என தெரிவித்தார்,

அந்த அடிப்படையில், சுனாமியால் பாதிப்புற்று இதுவரை வீடுகள் கிடைக்காதவர்களும், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் சுனாமி வீட்டுத்திட்டப் பயனாளிகள் பட்டியலில் உள்ளவர்களில் 78 பேர்கள் ஒப்பமிட்ட  முறைப்பாட்டினை இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் இணைப்பாளர் திரு. அப்துல் அஸீஸ் அவர்களிடம் பாரமளித்துள்ளோம்.

இந்த முறைப்பாடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆணைக்குழு விரைவாக எடுக்கவேண்டும் என்பதனையும் பணிவாக வேண்டிக் கொள்கின்றோம் எனக் கூறினார்.இந்த அடிப்படையில் பாதிப்புற்ற மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அதன் மூலமாகவே நாட்டை நேசிக்கும், இனவாதமற்ற நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு இணைந்து பாடுபடும் பிரஜைகள் உருவாகுவார்கள்  என்பதை யாவரும் உணரவேண்டும்.

 



( வி.ரி.சகாதேவராஜா)


கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழா  திகதி  உத்தியோகபூர்வமாக ருகுணு மகா கதிர்காம தேவாலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த அசல பெரஹெரா ஆடிவேல்  திருவிழா - அசல்  பெரஹரா ஜூன் 26ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை 07 ஆம் தேதி தீமிதிப்பு வைபவம் இடம் பெற்று,, ஜுலை 10ஆம் திகதி மஹா பெரஹெரா இடம்பெற்று, ஜூலை 11ஆம் திகதி காலை மாணிக்கங்கையில்  நீர் வெட்டும் சடங்குடன் அதாவது தீர்த்தத்துடன் நிறைவடையும்.

உண்மையில் மேற்கூறப்பட்ட சடங்குகள் தினங்கள் பௌத்த பாரம்பரிய முறைப்படி தீர்மானிக்கப்பட்டது.

சைவ முறை அல்லது இந்துக் கோயில் என்ற ரீதியில் நோக்கினால் கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஆடி மாதத்தில் வரவேண்டும். ஆனால் இங்கு இவ் வருட உற்சவம் ஆனி மாதத்தில் வருகிறது.

எனவே ஆடிவேல் விழா என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமா என்பது வினாவாகும். அப்படி எனின் ஆனிவேல் விழா என்று அழைக்கலாமா? என்பதும் சைவர்களின் அடுத்த வினாவாகும்.


இதேவேளை யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய  ஜெயா வேல்சாமி தலைமையிலான  மிக நீண்ட 59 நாள்  பாதயாத்திரை நேற்று 16 வது நாள் திருமலை மாவட்டத்தை புல்மோட்டையை வந்தடைந்துள்ளது.

யூன் மாதம் 26ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையும் என் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

 

வி.சுகிர்தகுமார்          

 திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட மட்டத்திலான அகில இலங்கை தமிழ் மொழி தினப்போட்டிகள் இன்று (15) அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியலாயத்தில் நடைபெற்றது.
பிரதிக்கல்வி பணிப்பாளரும் கோட்டக்கல்விப்பணிப்பாளருமான க.கமலமோகனதாசன் தலைமையில் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.குலேந்திரன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற தமிழ் மொழி தின அரங்க போட்டி நிகழ்வுகளில் வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள் பாடசாலைகளின் அதிபர்கள் நடுவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு இடம்பெற்றதுடன் இறைவணக்கம் தமிழ்மொழி வாழ்த்துப்பா தமிழ் வாழ்த்துப்பா பாடப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இதன் பின்னராக போட்டியின் நடைமுறைகள் மற்றும் நடுவர்களின் தீர்ப்புகள் தொடர்பில் பிரதிக்கல்விப்பணிப்பாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதேநேரம் தமிழ்மொழி தினத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் பாடசாலைகளில் இருந்து எழுமாறாக மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது தவிர்க்கப்பட்டு முறையாக போட்டிகள் நடாத்தி சிறந்த மாணவர்களை கோட்டமட்ட போட்டிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு அதிபர்கள் முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார்.
ஆங்கில மொழிக்கு வழங்கும் முக்கியத்தும் அதிகமாகவும் தமிழ் மொழிக்கு வழங்கும் முக்கியத்துவம் குறைந்து வருவதையும் தற்காலத்தில் அவதானிக்க முடிகின்றது. இது தவறான விடயமாகும். எப்போதும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இறுதியாக எழுத்தாக்கம் மற்றும் அரங்க நிகழ்வுகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் உடன் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




 (வி.ரி.சகாதேவராஜா)


 தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில்  SuRaLa எனும் கணினி மயப்படுத்தப்பட்ட கணித அறிவு மேம்படுத்தல் ஜப்பானிய நிகழ்ச்சித்திட்டம் action unity lanka (AU Lanka) வுடன் இணைந்து தாராள உள்ளங்கள் அறக்கட்டளை யினால் கல்முனை அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது,

 அறக்கட்டளையின் தலைவர்  ஜெ.ஜெயப்பிரகாஷ் தலைமையில் நேற்று(14) புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ஜெ.அதிசயராஜ்  சிறப்பதிதிகளாக கல்முனை பிரதி கல்விப்பணிப்பாளரும் காரைதீவு கல்முனை தமிழ்பிரிவு கோட்டாக்கல்விப் பணிப்பாளருமாற ஆ. சஞ்ஜீவன் , முன்னாள் முல்லைத்தீவு  மாவட்ட செயலாளர் கே.விமலநாதன்  , கல்முனை HNB முகாமையாளர் என்.அரவிந்தன் , மற்றும் கௌரவ அதிதியாக AU Lanka கிழக்கு மாகாண தலைமை நிர்வாக அதிகாரி கே.கஜேந்திரன் அவர்களும் மற்றும் தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் நிருவாக உறுப்பினர்கள், AU Lanka நிருவாக உறுப்பினர்கள் SuRaLa திட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் AU Lanka கல்முனை அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது


 ஓட்டமாவடியில் இடி விழுந்து தென்னை மரத்தில் தீ! ஒரு பகுதியில் மின்சாரம் துண்டிப்பு!


மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் திடீர் மழையுடன் இடி மின்னல் தாக்கம் இன்று (14) இரவு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், ஓட்டமாவடி பகுதியில் மழையுடன் பாரிய இடி முழக்கம் ஏற்பட்டது.


ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் ஹுஸைனியா வீதியிலுள்ள வீட்டு வளவிலுள்ள தென்னை மரத்தில் இடி விழுந்ததில் தென்னை மரம் தீப்பற்றி, தொடர் மழை காரணமாக தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.


மின்னல் தாக்கம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினருமான தேசிய மக்கள் சக்தியின்  தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இன்று (14.05.2025) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர், நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி, சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.