Showing posts with label Sri lanka. Show all posts



 ஸ்ரீலங்கா #கிளீன் #ஸ்ரீலங்கா...2025....


ஜே.கே.யதுர்ஷன்




கிளீன் சிறீலங்கா தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் "அழகான கடற்கரை - கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்''  எனும் தொனிப்பொருளில் 


திருக்கோவில்  பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சின்ன முகத்துவாரம்  பகுதி 

தொடர்க்கம் சங்கமன் கிராமவரையான  கடற்கரை சூழல் சிரமதான நிகழ்வு  ஒன்று முன்னெடுக்கப்பட்டது...


குறித்த நிகழ்வானது  திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் பெரியமுகத்துவாரதாதில் நிகழ்வு கொடியேற்ற நிகழ்வுடன் வைபவ ரிதியாக  ஆரம்பித்து வைக்கப்பட்டது.....


இன் நிகழ்வில் முப்படையினர் மற்றும் அதன் உயர் அதிகாரிகள் சுகாதார வைத்திய அதிகாரி அதன்  உத்தியோத்தர்கள் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் ,  தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச குழுவினர் மற்றும்  பிரதேச சபை செயலாளர் மற்றும் ஊழியர்கள் பொது அமைப்புகள்  கழகங்கள் பொதுமக்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்....


 ( வி.ரி. சகாதேவராஜா)


கல்முனை
பெரிய நீலாவணையிலுள்ள இரண்டு மதுபானசாலைகளும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரிஜே. அதிசயராஜ் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று (16) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் தற்காலிகமாக மூடப்பட்டன.

பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் அங்கு அமைதியில்லா நிலைமையும் காணப்பட்டது. 

இதனை கருத்தில் கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டு மதுபானசாலைகளும் தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஏலவே, இவ்வாறு ஒரு தடவை புதிய மதுபான சாலை  பிரதேச செயலாளரால் தற்காலிகமாக மூடப்பட்டமை தெரிந்ததே.

 


துயரம்.
தீயில் எரிந்த உதவிப்பிரதேச செயலாளர் பலி
சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளராகப் பணி புரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீக்காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த உதவிப்பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம்பெற்றது.
இன்றைய தினம் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுக்கையறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக தனது வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரித்துள்ளார்.
சம்பவத்தில் நீர் வேலி பகுதியைச்சேர்ந்த தமிழினி சதீஸ் வயது 35 என்ற உதவிப்பிரதேச செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு ஆறு வயதில் பெண் குழந்தையொன்றும் உள்ளது கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராகப் பணிபுரிந்து வருகின்றார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. (யாழில் 
சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் உயிரிழப்பு..!

ஆழ்ந்த இரங்கல்கள்..😥😥

 


பாறுக் ஷிஹான்

 
அரசின் கிளீன்  ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று பல்வேறு தரப்பினரின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

அம்பாறை  மாவட்டத்தின் பாணமை தொடக்கம் பெரியநீலாவணை வரையான சுமார் 110 கிலோ மீட்டர் நீளமான கடற்கரையோரத்தினை சுத்தம் செய்ய  கிளீன்  ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட நிலையில் இன்று காலை ஆரம்பமானது.இதன் போது இவ்வேலைத்திட்டத்தை பொத்துவில் அறுகம்பையில் அம்பாறை மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம ஆரம்பித்து வைத்தார்.

இதன் அடிப்படையில் கல்முனை பிரதேச செயலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், காரைதீவு பிரதேச செயலகம், நிந்தவூர் பிரதேச செயலகம், நாவிதன்வெளி  பிரதேச செயலகம், சம்மாந்துறை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை, காரைதீவு பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை,  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை , சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கல்முனை தெற்கு  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை , பெரிய நீலாவணை, சாய்ந்தமருது  ,காரைதீவு ,நிந்தவூர், நிலையங்கள் , கல்முனை தலைமையக பொலிஸ்,   கடற்படையினர், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பாடசாலை மாணவர்கள்,  என பல தரப்பினரும் பங்கெற்றனர்.


இதன் போது கடற் கரையோரத்தினை சுத்தம் செய்வது தொடர்பான வேலைத்திட்டம்   நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 



நூருல் ஹுதா உமர்


தூய்மையான இலங்கை வேலைத் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி கிராம நிலதாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலில் மாளிகைக்காடு அந்நூர் கலாசார மத்திய நிலைய முன்றலில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச பிரதான நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கலந்து கொண்டு தூய்மையான இலங்கை வேலைத் திட்டத்தின் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர், காரைதீவு பிரதேச சபை செயலாளர் அ.சுந்தர குமார், மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், ஸாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், பாதுகாப்பு படையினர், காரைதீவு பிரதேச செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள், அல்- மீஸான் பௌண்டஷன், ஜனாஸா நலன்புரி அமைப்பு, மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை, வை.எம்.எம்.ஏ., சமுர்த்தி அடிப்படை ஆதாய சங்கம் போன்றவற்றின் பிரதிநிதிகள் இந்த கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த காரைதீவு பிரதேச கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வானது காரைதீவு பிரதேசத்தை மூன்று வலயங்களாக பிரித்து இடம்பெறுகின்றது குறிப்பிடத்தக்கது.

ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வட்டமடு காணிகளில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக,கால் நடை வளர்ப்புக்கார்கள், விவசாயிகள் ஆகியோருக்கு இடையில் இளுபறி நிலை காணப்பட்டிருந்தது.

குறித்த காணிகளின் சுமார் 300 ஏக்கர் காணிகள் முதற்கட்டமாக விவசாய நடவடிக்கைகளுக்கு அனுமதி அரச அதிபர் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கென அண்மைக் காலத்தில் அயராது பாடுபட்டு உழைத்த தேசிய மக்கள் சக்தியினருக்கு விவசாயிகள் நன்றி நவிலுகின்றனர். 



 


பாறுக் ஷிஹான்


 அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவை  வரவேற்று வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (15) அவரது தாய்ப்பாடசாலையான கல்முனை கமு/கமு/ சாஹிரா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.


கல்லூரியின் முதல்வர் எம். ஐ. ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ .ஆதம்பாவாவிற்கு பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போற்றி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள், மற்றும் கல்வி சாரா உத்யோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்


 யாழ் MP இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து.. வைத்தியசாலையில் அனுமதி.!

இளங்குமரன் MP வாகன விபத்தில் காயம்!

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் பயணித்த வாகனம் யாழ் தனங்கிளப்பு  பகுதியி்ல் விபத்துக்குள்ளானது. 

சிறிய கன்டர் ரக வாகனத்துடன் மோதுண்டு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் காயம் அடைந்த இளங்குமரன் MP உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 


3 பணயக் கைதிகள் இன்றைய தினம் ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்டனர்.

இந்த முறை பாலஸ்தீன் கொடுத்த நினைவு பரிசில் 

"Time is Running Out" - என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது! இதன் அர்த்தம் இனப்படுகொலை Zionist Entity -க்கு தெரியும்!
Image

 


பாறுக் ஷிஹான் 


சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட  இந்திய பெண்  வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.

 நகைத் தொழில் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் மற்றும்  விசேட பொலிஸ் பிரிவினர் ஆகியோரிடம் இருந்து கிடைக்கபெற்ற முறைப்பாட்டிற்கமைய சோதனை நடவடிக்கை மேற்கொண்ட கல்முனை தலைமையக பல்வேறு  குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்  அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம் அருகில் வைத்து சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  இந்திய தமிழ்நாட்டை சேர்ந்த 48 வயதுடைய அழகச்சாமி தமிழ்ச்செல்வி ஆவார்.அத்துடன் அவர் வசம் இருந்து  மாதிரி நகைகளுடன் ஏனைய சில பொருட்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அன்றைய தினம் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது 1 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை(17) ஆந் திகதி வரை வழக்கு மறுதவணை இடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்விடயம் குறித்து  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில்    பல்வேறு  குற்றத்தடுப்பு பிரிவு  பொலிஸ் குழுவினர்     தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 சமீப காலமாக சுற்றுலா விஸாவில் இலங்கை வரும் இந்திய வியாபாரிகள் வீடு வீடாகச் சென்று தங்கநகைகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாதாந்தத் தவணை மற்றும் கடன் அடிப்படையிலும் நகை விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக மிகுந்த சிரமங்களின் மத்தியில் பல இலட்சம் ரூபாவில் உள்ளூரில் முதலீடு செய்து நகைத் தொழிலில் ஈடுபடும் வர்த்தகர்கள் பெரும் நஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவர்கள் மீது பொலிஸாரும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளீட்டு நகைத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 


வி.சுகிர்தகுமார்      

 அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் படைப்பிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட க.பொ.சா.தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச கணிதபாட கல்விக்கருத்தரங்கு இன்று (15) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட       06 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் காலாட் படைப்பிவின் கட்;டளை அதிகாரி கேணல் சுகத் திசாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கில் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளரும் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான க.கமலமோகனதாசன் இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர் சஜீவ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் வளவாளர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து கருத்தரங்கினை ஏற்பாடு செய்த இராணுவத்தினரின் பணிக்கு கல்விச்சமூகம் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் இங்கு தெரிவித்ததுடன் மாணவர்கள் இதனை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டு கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.
காலை முதல் ஆரம்பமான கருத்தரங்கின் வளவாளர்களாக ஆசியர் வாசவன் மற்றும் சர்மிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 (சுகிர்தகுமார)    


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் 2 கிராமத்தில் புலன் வளவொன்றிலிருந்து ஆண் ஓருவரின் சடலம் இன்று(15) மீட்க்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் கோளாவில் 3 இல் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சுந்தரலிங்கம் கமலஹாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று தனது வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன் இரவு வரை வீடு திரும்பாத நிலையில் அவரது மகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டதுடன் பதில் கிடைக்காத நிலையில் உறவினர்களுடன் இணைந்து அவரை தேடி உள்ளனர்.
இந்நிலையில் கோளாவில் 2 கிராமத்தில் புலன் வளவொன்றில் ஒருவர் கிடப்பதை அவதானித்த அயலவர்கள் கிராம உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கி அவர் ஊடாக சம்மந்தப்பட்ட குடும்பத்தினருக்கும் பொலிசாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதேநேரம் 119 ஊடாக தொடர்பு கொண்டதன் பிரகாரம் அங்கு வந்த அவர்கள் குறித்த நபர் இறந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிசார் மரணம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

 


எல்ல-வெல்லவாய வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. 


ராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மலை உச்சியில் உள்ள பாறைகள் உறுதியற்ற தன்மையால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது.


இரண்டு நாட்களாக எரிந்து கொண்டிருந்த தீயை, தீவிர முயற்சிகளுக்குப் பிறகு இன்று காலை அணைத்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்துள்ளார்.


முப்படைகள், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்புடன் தீ அணைக்கப்பட்டுள்ளது.


இத் தீ விபத்து ராவணா எல்ல வனப்பகுதிக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


 


கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவின் நிகழ்வுகளில் ஒன்றாக (14/02/2025 தொடக்கம் 16/02/2025 இடம்பெறவுள்ள) Scout Campன் ஆரம்ப நிகழ்வுகள் அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்ற போது..

 

Reports/SathyaPiragaash,SakatheveRaja,FaarukShihaan


அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி   காரைதீவில் இன்று (15) சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை  ஆரம்பித்திருந்தனர்.

காரைதீவு விபுலானந்தா சதுக்கத்தில் உள்ள பொலிஸ் சாவடிக்கு அருகில்  பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள் கொளுத்தும் வெயிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர்.

 இதுவரை வேலைவாய்ப்பு தொடர்பில் எமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் வெளிப்படையாக பட்டதாரிகளின் நிலைமை குறித்து தகவல்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

 குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக ஏனைய வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பி உரிய தரப்பினர் தீர்வினை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எஸ்.ஜெகத் வருகை தந்து பார்வையிட்டதுடன் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 நூருல் ஹுதா உமர்


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் ஆசிரியர்களாக கடமையாற்றி இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா இன்று ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மஹ்மூத் மகளிர் கல்லூரியின் மூன்று ஆசிரியர்களான எஸ்.எம். உவைஸ், றிஸ்லியா முகம்மது உவைஸ், ஏ.பீ. றோஷன் டிப்றாஸ் ஆகியோர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

ஆசிரியர்களாக இருந்து அதிபர் சேவையில் இணைந்திருக்கும் இவர்கள் எமது கல்லூரியின் கல்வி அபிவிருத்தி, பெளதீக வள முகாமைத்துவம், ஒழுக்கம், சமூக விஞ்ஞான மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தங்களை முன் நிலைப்படுத்தி பல்வேறு அதிபர்களுடன் இணைந்து பணியாற்றி கல்லூரி
வளர்ச்சி அடைய செய்வதில் முக்கிய  பாத்திரத்தை வகித்தவர்கள். இவ்வாறானவர்களின் ஆசிரியத்தின் சேவையை பாராட்டி கெளரவிப்பதில் பாடசாலை சமூகம் பெருமிதம் கொள்கிறது என இதன்போது வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர்களான எம்.எஸ். மனூனா, என்.டி. நதீகா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பிரதி மற்றும் உதவி அதிபர்கள், பதவி உயர்வு பெற்ற இந்த ஆசிரியர்கள் பற்றிய நினைவுகள் மற்றும் வரலாற்று நினைவலைகளை சபையினர் மத்தியில் பகிர்ந்து கொண்டனர்



 பாறுக் ஷிஹான்


சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு விழா இன்று(14)  சம்மாந்துறை  
நீதிமன்ற நீதிவான் 
ரி. கருணாகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி  கலந்து  கொண்டார்.

மேலும்   கௌரவ அதிதிகளாக  நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் மேலதிக செயலாளர் (பொறியியல்)  பொறியியலாளர் எஸ். ஏ. கே.சுபசிங்க ,விசேட அதிதிகளாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் பணிப்பாளர்( பொறியியல்) பொறியியலாளர் பி.எஸ்.சி.கே. முணசிங்க,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா,நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரி.சஞ்ஞீவன்,விசேட அதிதிகளாக மேல் நீதிமன்ற பதிவாளர் எஸ்.எச்.எஸ். ஹக்கீமுள்ளாஹ்,மேல் நீதிமன்ற வலயக் கணக்காளர் ஏ.எல் நஜிமுடீன்,மேல் நீதிமன்ற தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்  றிப்கான் மற்றும் சட்டத்தரணிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 


பாறுக் ஷிஹான்


கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி   வருண ஜெயசுந்தர   மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனையில் இன்று    கடமைகளை பெறுப்பேற்றார்.

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை கந்தளாய் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான சீரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட மாகாண உயர்பொலிஸ் அதிகாரிகள் அடங்லாக சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஏற்றுக்கொண்டார். புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக  கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 



பாறுக் ஷிஹான்


2025 புதிய ஆண்டின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைந்து
“Clean Srilanka”( தூய இலங்கை)என்ற புதிய ஆண்டின் வேலைத் திட்டத்தின் கீழ்   வியாழக்கிழமை(13)  சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

பாடசாலையின் ஒன்றுகூடலின் போது கல்லூரியின் முதல்வர் ஐ.உபைதுல்லா தலைமையில் அனைவரும் சத்தியப்பிரமான உறுதிமொழி எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


 புத்தளம் மாவட்ட NPP பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் வாகனம் பாராளுமன்றத்திற்குச் செல்லும் வழியில் வென்னப்புவவில் ஒருவர் மோதி கொல்லப்பட்டார். 

வாகனத்தை ஓட்டிச் சென்ற அவரது சகோதரர் கைது செய்யப்பட்டதாக அததெரன தெரிவித்துள்ளது

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.