Showing posts with label Sri lanka. Show all posts




 அக்கரைப்பற்று பொத்துவில் வீதி, மீன் சந்தைக்கு முன்பாக, புதிதாக உதயமாகி இருக்கின்றது, தாசிம் ஹோட்டேல்.
யூதர்களுடைய பால்மாக்களோ, பொருட்களோ இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை.

 


காலி முகத்திடலுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ITC Ratnadipa (ஐடிசி ரத்னதீப) ஹோட்டல் மற்றும் அதிசொகுசு வீட்டுத் தொகுதி இன்று (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ITC நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

– ITC ரத்னதீப ஹோட்டல் திறப்பு விழாவில் ஜனாதிபதி

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்ததென தெரிவித்த ஜனாதிபதி, சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.

 



நூருல் ஹுதா உமர் 


ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் யோச­னையின் பேரில் காஸா பகு­தியில் இடம்­பெற்ற மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு கல்முனை வலயக்கல்வி அலுவலகம், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் ஆகிய பொதுநிறுவனங்களினால் 50 லட்சம் ரூபாய் நிதி நன்­கொ­டை­யாக இன்று (26) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. 


முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிதி கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்த்தன உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். 


காஸா சிறுவர்களின் நல திட்டத்திற்காக கல்முனை கல்வி வலய உத்தியோகத்தர்கள், அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் பங்களிப்பில் 3,128,500/- நிதியும், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தனவந்தர்களின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற 1,589,000/- நிதியும், ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் சார்பில் 300,000/- ரூபாய் நிதியுமாக ஐந்து மில்லியன் ரூபாய் பணத்தை இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர். 


ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் சார்பில் நிதியை பௌண்டஷனின் தவிசாளர் திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கல்முனை கல்வி வலய நிதியை பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையிலான பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபீர், கணக்காளர் வை. ஹபீபுல்லா, அதிபர், ஆசிரியர் சார்பில் நவாஸ் சௌபி அடங்கிய குழுவும், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் பள்ளிவாசல் தலைவர் ஏ.எம். இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகளும் கையளித்தனர்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவில் நடப்பாண்டின் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

காரைதீவு விளையாட்டு கழகத்தின் 41 வது வருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குறித்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 கழகத் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கபொத சாதாரண தரத்தில் 9ஏ பெற்ற மற்றும் கபொத உயர்தர பரீட்சையில் 3ஏ சித்தி பெற்ற மாணவர்கள் 29 பேர் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றோரால் பாராட்டப்பட்டார்கள்.

பிரதம அதிதியான விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்
ஏனைய அதிதிகளான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்    காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் 
கழக போசகர்களான  வே.இராஜேந்திரன், வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டு கௌரவித்தனர்.

 


(  வி.ரி.சகாதேவராஜா)

 காரைதீவைச் சேர்ந்த திருமதி ஜெயகோபன் நந்தினி தனது 60 வது வயதில் இன்று ஓய்வு பெற்றார்.

அவர் இறுதியாக கற்பித்த நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மஹா வித்தியாலயத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை பிரியாவிடை நிகழ்வு நடாத்தப்பட்டது.

 2000ம் ஆண்டு தொடங்கிய அவரது ஆசிரியர் சேவை 2024 உடன் நிறைவு பெற்றது.

2000 - 2008 வரை விபுலானந்த மத்திய கல்லூரி காரைதீவு 
2009- 2019 வரை அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயம் . இறுதியாக 
2020- 2024 வரை: இமாம் கஸ்ஸாலி மஹா வித்தியாலயத்தில் இன்று வரை சேவையாற்றினார்.

நிகழ்வில் அவரது குடும்பம் கலந்துகொண்டது.

தன்னுடைய இந் நிகழ்வை மேலும் சிறப்பித்து பிரியாவிடை நிகழ்வை அளித்த  சகோதர பாடசாலை இமாம் கஸ்ஸாலி மஹா வித்தியாலய அதிபர் ஆசிரிய மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் என்று அவர் நன்றிகள் தெரிவித்தார்.


வி.சுகிர்தகுமார் 0777113659
 

 ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் இன்று (26) சிரமானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் யு.எல்.எம்.சகீல் வேண்டுகோளுக்கமைய இச்சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற சிரமதானப்பணியில்; அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் வைத்தியர் குணாளினி சிவராஜ் மேற்பார்வை செய்தார்.
வைத்தியசாலையின் வெளிச்சுழலில் காணப்பட்ட ; புற்கள் குப்பைகள் அகற்றப்பட்டது.
அகற்றப்பட்ட குப்பைகள் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டதுடன் அவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள பொது இடங்கள் ஆலயங்கள் என துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பினராகிய ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினருக்கு வைத்தியசாலை நிருவாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

 


அமெரிக்கா CEOWORLD சஞ்சிகையால், 2024 ஆம் ஆண்டில், உங்கள் வாழ்நாளில் சென்று பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகளில் #SriLanka 5வது இடத்தைப் பிடித்துள்ளது. 🇱🇰


 முதல் 10 நாடுகள்....

 


80 ரூபாய்க்கு பால் தேநீர் வழங்கவும்


இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரை  80 ரூபாய்க்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


அத்துடன், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மா இறக்குமதியாளர்கள் பால் மாவின்  சில்லறை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.


அண்மைகாலமாக பால்மா விலை உயர்வு காரணமாக, பால் தேநீர் அருந்துவதற்கு ஹோட்டல்களுக்கு வருவதை மக்கள் தவிர்த்து வந்தனர்.


தற்போது அந்த நிலை மாறி, மீண்டும் 80 ரூபாய்க்கு ஒரு கோப்பை பால் தேநீர் குடிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



இறக்குமதிக்கான நடவடிக்கைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்திருந்த தடை இலங்கைக்கு மாத்திரம் உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் அறிவித்திருந்தது.



  இஸ்ரேல் உடனான பதற்றத்திற்கு நடுவே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இன்று இலங்கைக்குச் சென்றுள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இரான் அதிபர் இலங்கைக்குச் சென்றிருப்பது இதுவே முதல்முறை. அதேநேரம், அமெரிக்க கடற்படை குழுவொன்றும் திருகோணமலைக்குச் சென்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.


இரான் அதிபர் இலங்கைக்குச் சென்றிருப்பது ஏன்? இந்த பயணத்தின் பின்னணி என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.


இரான் இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரைஸி தொடங்கி வைத்த திட்டத்தின் மதிப்பு சுமார் 514 மில்லியன் டாலர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிக்கிறது

இரான் - இஸ்ரேல் மோதல்

ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் உள்ள இரான் தூதரக வளாகத்தின் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இரான் – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மோதல் வலுத்தது. தங்கள் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இஸ்ரேலை குற்றம்சாட்டிய இரான், அந்நாட்டின் மீது ஏப்ரல் 13ம் தேதி வான்வழித் தாக்குதலை தொடுத்தது. இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை கிளப்பியது.


இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க, இரானின் இஸ்ஃபஹான் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருநாடுகளும் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.


இப்படியாக, இருநாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், ஏப்ரல் 21ம் தேதி இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, பாகிஸ்தானில் 3 நாள் பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், ஜனாதிபதி ஆசிஃப் அலி ஜர்தாரி , இராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் உள்ளிட்டோரை ரைஸி சந்தித்துப் பேசினார்.


பாகிஸ்தான் பயணத்தை முடித்த பிறகு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி புதன்கிழமை காலையில் இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அவரை இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார்


தென் கொரியாவில் பிரமாண்ட 'பாலியல் திருவிழா' கடைசி நேரத்தில் ரத்து - எதிர்ப்பு எழுந்தது ஏன்?

24 ஏப்ரல் 2024

தனியார் பள்ளிகளில் 25% இடங்களை கட்டணமின்றி ஏழைக் குழந்தைகளுக்கு வழங்குவதில் என்ன சிக்கல்?

24 ஏப்ரல் 2024

இரான் இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இலங்கைக்கு பயணம் வந்த இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

புதிய திட்டம் தொடக்கம்

இலங்கை இரான் இருதரப்பு நிதியுதவியில் உமா ஓயா பல்நோக்கு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நீர் மின் நிலையத்தை ரைஸி திறந்து வைத்தார். தொடர்ந்து ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையே 5 புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின


உமா ஒயா திட்டம் இலங்கையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என இலங்கை ஜனாதிபதி மாளிகை தெரிவிக்கிறது.


ஜனாதிபதி மாளிகையின் செய்திக்குறிப்பின் படி, இலங்கையின் தென்கிழக்கில் வறண்ட பகுதிகளில் நிலவும் நீர்ப் பற்றாக்குறையைப் தனிப்பதற்காக, உமா ஓயாவில் ஆண்டுதோறும் சேரும் 145 கன மீட்டர் தண்ணீருக்கும் மேலதிகமான தண்ணீரை கிரிந்தி ஓயவிற்கு திருப்பிவிடுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.


ஓய என்பது நீர்நிலைகளை குறிப்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதி கிடைப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் இத்திட்டத்தின் மூலம் 290 ஜிகாவாட் மின் சக்தியும் கிடைக்கும் என இலங்கை அரசு கூறுகிறது.


பிராய்லர் கோழி சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

24 ஏப்ரல் 2024

காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவு மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டி - வெற்றிக்கான வியூகமா? பலவீனமா?

23 ஏப்ரல் 2024

இரான் இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரான்-இஸ்ரேல் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், ஏப்ரல் 21ம் தேதி இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, பாகிஸ்தானில் 3 நாள் பயணம் மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது, இந்திய பெருங்கடலில் இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என இரான் அதிபர் ரைஸி உறுதியளித்தார். அனைத்து ஆசிய நாடுகள், அண்டை நாடுகள், இறையாண்மை மற்றும் சுதந்திர நாடுகளுடன் இருதரப்பு உறவை விரிவுபடுத்த இரான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.


ரைஸி தொடங்கி வைத்த திட்டத்தின் மதிப்பு சுமார் 514 மில்லியன் டாலர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிக்கிறது.


2008-ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்காக இரான் இலங்கைக்கு நிதியுதவி செய்வதாகக் கூறியிருந்தது. இதன் அடிப்படையில் 2013-ம் ஆண்டு வரை 50 மில்லியன் டாலர்களை இலங்கைக்கு இரான் வழங்கியது. அதன் பிறகு இரானால் நிதிப் பங்களிப்பு செய்ய முடியவில்லை. அந்த சமயம், அமெரிக்கா, இரான் மீது சர்வதேச தடைகளை விதித்ததால் மேற்கொண்டு இலங்கைக்கு பொருளாதார பங்களிப்பை இரானால் செய்ய முடியவில்லை.


ஈரான் அதிபர் தனது ஆசிய சுற்றுப்பயணத்தின் போது இலங்கைக்கு வந்து, இந்த திட்டத்தை திறந்து வைப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.


கடந்த பத்து ஆண்டுகளில் இழந்த சந்தையை மீட்டெடுத்து, இலங்கையின் தேயிலை ஏற்றுமதி சந்தையை பலப்படுத்தியதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் அதிக தேயிலையை கொள்வனவு செய்யும் நாடாக இரான் மாறியிருப்பதாகவும் அவர் கூறினார்.


சோலியஸ்: உங்கள் உடலின் இந்தப் பகுதி இரண்டாவது இதயம் என அழைக்கப்படுவது ஏன் தெரியுமா?

24 ஏப்ரல் 2024

மோதி சர்ச்சை பேச்சு: எதிர்க்கட்சிகளின் புகார் மீது நடவடிக்கை என்ன? தேர்தல் ஆணையம் மீது எழும் கேள்விகள்

23 ஏப்ரல் 2024

இரான் இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இரான் அதிபரின் இலங்கை பயணம் அமெரிக்காவுக்கு சங்கடத்தை கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா அதிருப்தி?

இரான் அதிபர் இலங்கைக்கு வருவது குறித்து அமெரிக்கா அதிருப்தி அடைந்திருப்பதாக சில செய்திகள் வெளியாகின. இது குறித்து பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, "உண்மையில், யாரும் எங்களுக்கு கவலையோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. மற்றவர்களின் எதிரிகள் எங்களுக்கும் எதிரிகள் அல்ல. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை அனைவருக்கும் நட்பு கரங்களை நீட்டுகிறது. இரான் அதிபரின் பயணம் திடீரென திட்டமிடப்பட்டது அல்ல. இந்த வளர்ச்சித் திட்டத்திற்கான பணிகள் முடிந்ததும் திறப்பு விழாவுக்கு அவரை அழைக்க வேண்டும் என முன்பே முடிவு செய்திருந்தோம்" என்றார்.


தொடர்ந்து பேசிய அலி சப்ரி, "கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் இரானுக்கு பயணம் மேற்கொண்ட போது, அதிபர் ரைஸிக்கு, இலங்கை அரசு சார்பில் அழைப்பிதழை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில்தான் தற்போது இரான் அதிபர் இலங்கை வந்திருக்கிறார். சுதந்திர நாடாக, நாங்கள் அணிசேரா வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறோம்" என கூறினார்


இரான் ஜனாதிபதியின் இலங்கை பயணம், சர்வதேச ரீதியாகவும் பொருளாதார, அரசியல் ரீதியாகவும் இலங்கை மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச உறவுகள் தொடர்பான ஆராய்ச்சியாளரும் ஆலோசகருமான கலாநிதி ஹசித் கந்தவுடஹேவாவிடம் பிபிசி சிங்களம் கேட்டது..


இதற்குப் பதிலளித்த அவர், இரான் அதிபரின் இலங்கை பயணத்தில் சாதகமும் பாதகமும் இருப்பதாகக் கூறினார்.


இஸ்ரேலின் யூத பழமைவாத ராணுவப் பிரிவு மீது தடை விதிக்க அமெரிக்கா திட்டம் - காஸாவில் என்ன நடந்தது?

9 மணி நேரங்களுக்கு முன்னர்

குழந்தைகள் உணவின் தரத்திலும் இந்தியா - ஐரோப்பா இடையே பாரபட்சம்: நெஸ்லே கூறுவது என்ன?

23 ஏப்ரல் 2024

இரான் இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இலங்கையின் தேயிலை மற்றும் ஏனைய ஏற்றுமதிப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இரான் திகழ்கிறது.

ஏப்ரல் 13ம் தேதி இஸ்ரேலுக்கும் இரானுக்கும் மோதல் தீவிரம் அடைவதற்கு முன்பே, இரான் அதிபர் ரைஸி இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது இலங்கை ஒரு வகையான இராஜ தந்திர சிக்கலை எதிர்கொண்டது. காரணம், இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது இராணுவ ஆதரவை வழங்கிய நாடாக இஸ்ரேல் இருந்தது.


மறுபுறம், இஸ்ரேலும் இலங்கையும் தற்போது பல்வேறு பொருளாதார, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளன.


இதன் காரணமாக இரான் அதிபரின் இலங்கை பயணம், இஸ்ரேலுடன் தற்போதுள்ள உறவுகளுக்கு ஏதோ ஒரு வகையில் பின்னடைவை ஏற்படுத்தலாம்.


"தற்போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் உள்ளது. எனவே இந்த திட்டத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெறுவது அவசியம். இந்த கோணத்தில் பார்த்தால், இரான் அதிபரின் பயணத்திற்காக இலங்கைக்கு அமெரிக்கா நேரடியாக தமது எதிர்ப்பை பதிவு செய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளன" என்கிறார் கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா.


இலங்கையின் தேயிலை மற்றும் ஏனைய ஏற்றுமதிப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இரான் திகழ்கிறது. எனவே, இந்த சூழலில், ரைஸி வருகை தர வேண்டாம் என இலங்கை முடிவெடுத்தால், அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பலத்த அடியாக அமையும். எதிர்காலத்தில் இரானிடம் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய பொருளாதார ஒத்துழைப்பை இலங்கை இழக்க நேரிடும் என கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா குறிப்பிடுகிறார்.


அமெரிக்க கடற்படையினர் என்ன செய்கிறார்கள்?

இரான் அதிபரின் வருகைக்கு நடுவே, இலங்கையின் திரிகோணமலைக்கு அமெரிக்க கடற்படையினரும் சென்றுள்ளனர். அமெரிக்கா கடற்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி நடவடிகைக்களுக்காக ஏப்ரல் 22 முதல் 26 வரை திருகோணமலையில் இருப்பார்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.


கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற மரைன் கார்ப்ஸின் சிறப்புப் பிரிவான FAST எனும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃப்ளீட் ஆண்டி டெரரிசம் செக்யூரிட்டி டீம் (ஃபாஸ்ட்) இந்த பயிற்சியில் பங்கேற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது


 கடந்த 2024.04.23 திகதி இடம்பெற்ற PPA புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம்...

________________________________

தலைவர் ALM.பாயிஸ் (Pr)   

உப தலைவர் ARM.சாதிக் (Lec)

செயலாளர்  MSM. இக்ராம் (CCO)    

உப செயலாளர்  AL .நூபைஸ் (Tr)

பொருளாளர்  MSM. பாஹிம் (Pr)     

உப பொருளாளர் AL.நளீம்        

கணக்கு பரிசோதகர் SM.ஹுஸ்ரி (FA)   

குழு உறுப்பினர்கள்

1.AM. அஸ்மி (Pr)

2.KM. அக்ரம் (Tr)

3.AM.அர்பான் 

4.MALM.றிஸ்வான் (SDO)

5.Uk.முஸம்மில் (Tr)

6.S.சிஹாப்தீன் (Sec)

7.AL.பௌஸர் 

8.MS.ஜெனிஸ் 

9.ASM.உவைஸ் (Mps)

10.AM.நபீஸ்தீன் (DO)

11.I.முனாஸ் (Law)

12.IL.ஹாரூன்

 



#Rep.Asraf. a.Samad,.

இலங்கைக்க விஜயம் மேற்கொண்டுள்ள இரான் ஜனாதிபதி, கொழும்பு கொள்ளுப்பிட்டி பள்ளிவாயலுக்கு இன்று மாலை விஜயம் செய்தார்.

 




அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இணைப்பாட விதான அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய 42 வகையான குழுக்கள் உருவாக்கம்

....................................


எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு கழகங்கள்/சங்கங்கள்/படையணிகள் என 42 வகையான குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன்‌ அவர்களுக்கான கடமைப் பொறுப்புக்களும் இன்று 24/04/2024 கையளிக்கப்பட்டது.


இக்கடமைப் பொறுப்புக்கள் யாவும் அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்களின் பணிப்புரைக்கமைவாக‌ இணைப்பாடவிதான விதான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான‌ பிரதி அதிபர் லெப்டினன் NM.முஹமட் ஸாலிஹ் (SLPS) அவர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதற்கிணங்க இக்குழுக்கள் யாவும் குறித்த பொறுப்பாசிரியர்களுடன் எமது மாணவச் செல்வங்களின் பல்வேறு நலன்சார் விடயங்களுக்காக (மாணவ உறுப்பினர்களுடன்) தொடர்ச்சியாக பயணிக்கவுள்ளது.

 


(நூருல் ஹுதா உமர் )


குறைந்த வருமானம் பெறும் குடும்பபங்களுக்கு ஆதரவு வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முழு நாட்டையும் உள்ளடக்கும் விதமாக குறைந்த வருமானம் பெறும் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ கிராம் நாட்டு அரிசியை இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இவ் வேலைத்திட்டம் தேசிய ரீதியாக (21) அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
இதன் தொடரச்சியாக காரைதீவில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முசாரப் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன், உதவி பிரதேச செயலாளர் செ.பாத்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் இராஐகுலேந்திரன், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம் .எம் அச்சுமுகமட் உட்பட பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி வழங்கி வைத்தனர். 

 


புத்தளத்தைச் சேர்ந்த காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டில் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த காதி நீதிமன்ற நடுவர் 5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 


தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்ட 13 வருடங்களில், 99 ஆயிரத்து 375 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. 


Sugirthakumar Vijayarajah
.


40 வயதிற்கு மேற்பட்ட Legend Premier League கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் லெஜன்ட் கிங்ஸ் அணி சம்பியனானது.
10 ஓவர்களில் 124 எனும் இலக்கை நிர்ணயித்த லெஜன்ட் வோரியஸ் அணியின் இலக்கை தாண்டி வெற்றி வாகை சூடியது.

குறிப்பாக இறுதி ஆட்டத்தில் ஆரம்ப இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த பிரபு மற்றும் மேகசுதன் ஆகிய இருவருக்கும் அணியை வழிநடத்திய தலைவர் தயகாரன் சிரேஸ்ட வீரர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பாராட்டுக்குரியோர்.

இச்சுற்றுப்போட்டி தொடரை ஏற்பாடு செய்து கடந்த கால நினைவுகளை நினைவூட்டியதுடன் பதவி நிலைகளுக்கு அப்பால் முன்னாள் கிரிக்கெட் நண்பர்களை சந்திக்க வாய்பேற்படுத்திய ஏற்பாட்டாளர்கள் அனுசரணையாளர்கள் ஊக்கமளித்த அத்தனை பேருக்கும் நன்றி.

அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களை உள்ளடக்கிய 40 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய லெஜன்ட் பிரிமிய லீக் சுற்றுத்தொடர் கடந்த மாதம் (29) ஆரம்பமாகியது.
.
ஆரம்ப நிகழ்வு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றதுடன் இதில் சுப்பர் லெஜன்டஸ்; பிளாஷ் லெஜன்;டஸ்; லெஜன்ட் வோரியஸ் லெஜன்ட் ஸ்டார்ஸ் லெஜன்ட் கிங்கஸ் ஆகிய அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்று வந்தன.
இறுதிப்போட்டி அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிபோட்டியில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரரும் சுப்பர் லெஜன்ட் அணி தலைவரும் நீதிபதியுமாகிய த.கருணாகரன் சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தார்


 இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, நீதியைக் கோருவது மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த கலந்துரையாடலுக்காக சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து எனது மட்டக்களப்புப் பயணத்தை முடித்தேன்.


 (நூருல் ஹுதா உமர் )


ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகர் கொழும்பில் வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் விஜயத்தை நிறைவு செய்து, நாளை மறுதினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஐ. ஏ. கலீலுர் ரஹ்மான், எம்.காதர், எம்.முசம்மில் போன்றோர்களினால் இந்த வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.