ஓட்டமாவடி எகோ கல்வி நிலையத்தின் கௌரவிப்பு
ஓட்டமாவடி எகோ கல்வி நிலையத்தின் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கந்தசாமி பிரபு
ஓட்டமாவடியில் இயங்கி வரும் எகோ கல்வி நிலையம் ஏற்பாடு செய்த மாணவர் கௌரவிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (12-12-2025) அதன் பணிப்பாளர் எம்.எம்.நவாஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.
இதில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக பொறியியலாளர் ஏ.எச்.எஸ்.எம்.றம்ஸீன், ஓட்டமாவடி -பிரஜா சக்தி தலைவர்களும் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment #dccbatticaloa #JVP #sunilhandunneththi #DCCChairman #Batticaloa #CleanSriLanka
#AKD #ANURAKUMARADISSANAYAKE #PresidentAKD




















