Showing posts with label Sri lanka. Show all posts

 


பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் புத்தளத்தில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த ஆசிரியர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானவர் பிரதான நிலை பாடசாலையின் கணித பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.



அக்கரைப்பற்று வலய ஆங்கில தினப் போட்டி, அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலத்தில், இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. அக்கரைப்பற்று பாடசாலைகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

  


பாறுக் ஷிஹான்


இன மத மொழி வேறுபாடுகளின்றி மக்கள் சேவையை முன்னெடுத்த மாமனிதர் மர்ஹும் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் மறைந்து கடந்த வியாழக்கிழமை (25)  07 ஆண்டுகள்  பூர்த்தியாகின்றது.
 
கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களாலும் போற்றப்படும் அரசியல்வாதியாக விளங்கிய முன்னாள் அமைச்சரும் கல்முனைத் தொகுதியின் முன்னாள் எம்.பியுமான ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் 07 ஆவது  நினைவுதினம்   அனுஷ்டிக்கப்பட்டது.
 
முன்னாள் அமைச்சர்  மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர்  மரணமடைந்து  07 வருடங்கள் நிறைவினை  தொடர்ந்து அவருக்காக வேண்டி கத்முல் குர்ஆன் நிகழ்வு மற்றும் விஷேட துஆப் பிரார்த்தனைகள் செவ்வாய்க்கிழமை  (25) இரவு  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்  கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகரும்  கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர்  தலைமையில் காசிம் வீதி கல்முனையில் அமைந்திருக்கும்   இல்லத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக, முல்லைத்தீவு_ யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராக, மறைந்த முன்னாள் ஜனாதிபதிஆர். பிரேமதாச காலத்தில் வர்த்தக வாணிப கப்பல்துறை அமைச்சராக, கிழக்கு மாகாண பாதுகாப்பு கவுன்ஸிலின் உயர்பீட அங்கத்தவராக, 2003ஆம் ஆண்டில் குவைத் நாட்டின் தூதுவராக பல பதவிகளை வகித்தவர் அவர்.
 
1933.05.30 இல் கல்முனைக்குடியில் எக்கீன் தம்பி ஆலிம் அப்துல் றஸாக் அவர்களுக்கும், முகம்மது அப்துல் காதர் சரீபா உம்மா அவர்களுக்கும் ஆறாவது பிள்ளையாக பிறந்த இவர் 1939-_1943 காலப்பகுதியில் கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் பாடசாலையில் ஆரம்பக்கல்வியைப் பெற்று 1943 ஆண்டு ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தார். அதன் பின்னர் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் ஆங்கிலத்தை ஆர்வமாக கற்றதன் காரணமாக மட்டக்களப்பு சிவானந்தா உயர்தரப் பாடசாலையில் இரண்டாம் நிலைக் கல்வியை கற்று உயர்கல்விக்காக கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார்.
 
பின்னர் 1955 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து 1958 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற சட்டத்தரணியானார். கல்முனைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பரின் மூன்றாவது புதல்வியான ஸொஹறா காரியப்பரை திருமணம் செய்து கொண்டார்.
 
1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கல்முனை தொகுதியில் ஐ.தே. கட்சி அபேட்சகராக போட்டியிட்டு 5547 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகி,1979 இல் யாழ்ப்பாண மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சரானார். 1989 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும், அதே வருடத்தில் வர்த்தக கப்பல்ததுறை அமைச்சராகவும், அதன் பின்னர் வர்த்தக கப்பற்துறை, வாணிபத்துறை அமைச்சராகவும் நியமனம் பெற்றார்.
 
17 வருடங்கள் தனது அரசியலை புனிதமாகவும், நேர்மையாகவும், களங்கமில்லாமலும் ஆற்றியவர் இவர். கல்முனை நவீனசந்தை. பொதுநூலகம், நீதிமன்றக் கட்டடத் தொகுதி,பிரதேச செயலகங்கள், கல்முனை செயலகக் கட்டடம், பாடசாலைகள், இஸ்லாமாபாத் குடியேற்றத் திட்டம், கல்முனை இலங்கை வங்கிக் கட்டடம், கல்முனை பொலிஸ் நிலையக் கட்டடம், மருதமுனை மக்கள் மண்டபம், மருதமுனை இரு பெரும் வீட்டுத் திட்டங்கள் உட்பட அன்னார் ஆற்றிய பணிகள் ஏராளம். அநேக இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தார்.1992 ஆம் ஆண்டு அநேக தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்கள் இவரின் சிபாரிசிலேயே வழங்கப்பட்டன.
 
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 20.03.2016 இல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இவரின் சேவையைப் பாராட்டி கலாநிதி பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்னார் இப்பிரதேச மக்கள் உள்ளத்தில் என்றும் வாழ்கின்றார்.முதுபெரும் முஸ்லிம் அரசியல்வாதியும் முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சரும் சிரேஸ்ட இராஜதந்திரியும் சட்ட விற்பனருமான கலாநிதி ஏ.ஆர். மன்சூர்  தனது 83வது வயதில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானார்.மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் அமைச்சர் ஏ.ஆர் மன்சூர் கல்முனையின் அபிவிருத்தி நாயகன்  கரை படியா கரம் கொண்டவர் என மக்களினால் அழைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை ஆதார வைத்தியசாலையில் இயங்கும் என்பு  முறிவு நெரிவு பிரிவு( orthopetic unit ) கடந்த காலங்களை விட மிகவும் சிறப்பாக பல வசதிகளுடன் இயங்கி வருகின்றது.

 "சி"ஆம் ( C Arm) என்று சொல்லப்படுகிற நவீன ரக எக்ஸ் கதிர் கருவியுடன் சிறப்பாக சத்திர சிகிச்சைகள் இடம் பெற்று வருகின்றன.

பிரபல என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் பததிநாதன் கலாவேந்தன் தலைமையிலான குழுவினர் வார்டில் இயங்கி வருகின்றார்கள்.

 அங்கு ஆண்கள் பெண்களுக்கு என்று தனியான சத்திர சிகிச்சை கூடம் 24 மணிநேரமும் அங்கு தயார் நிலையில் இருக்கின்றது.
கூடவே அம்பாறை மாவட்டத்தில் எங்கு மில்லாத சிற்றி நவீன எக்ஸ் கதிர் இயந்திரமும் உள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரனின் முழு முயற்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த என்புமுறிவு நெரிவு சிகிச்சைப் பிரிவு இன்றைய பணிப்பாளர் டாக்டர் ரங்கா சந்திரசேகரவின்  வழிகாட்டலில் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது .

தற்போது பணிப்பாளருக்காக பதில் கடமை புரியும் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் எஸ் ராஜேந்திரனிடம் நேற்று அங்கு சென்று கேட்ட பொழுது ..

தற்போது என்பு முறிவு நெரிவுப் பிரிவு பல நவீன உபகரணங்களுடன் அளப்பரிய சேவைகளை அங்கு செய்துவருகின்றது. எங்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் சொத்து என்பு முறிவு வைத்திய நிபுணர் டாக்டர் கலாவேந்தன் அவர்கள்.
அங்கு வயது வந்தோர் முதல் சிறுபிள்ளை வரை வளை பாத கிளினிக் ஏனைய கிளினிக்குகளை சிறப்பாக நடத்தி வருகின்றார்.

 அர்ப்பணிப்பு ஊழியர்களுடன்  சத்திர சிகிச்சை கூடம் அங்கு தனியாக இயங்கி வருகின்றது. இதனால் அங்கு நோயாளிககளின் எண்ணிக்கை தினம் கூடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது . முன்னாள் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரனின் பணி பாராட்டத்தக்கது.இன்றைய பணிப்பாளர் டாக்டர் ரங்கா சந்ரசேன அதனை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுத்து வருகிறார் என்றார்.

என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் பத்திநாதன் கலாவேந்தன் சத்திர சிகிச்சை கூடத்தில் மிகவும் பிஸியாக இயங்கி கொண்டிருக்கும் வேளையில் சந்தித்து கேட்டபோது....

விபத்து மற்றும் அவசர பிரிவில் இருந்து இந்த எலும்பு முறிவு நெரிவு பிரிவு இயங்க ஆரம்பிக்கின்றது. இங்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முதியோர்களுக்கான கிளினிக் நடைபெறுகிறது. அதேபோன்று வெள்ளிக்கிழமைகளில் சிறுவர்களுக்கான கிளினிக் நடைபெறுகிறது.

எமது வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சக வைத்திய அதிகாரிகள் தாதிய உத்தியோகத்தர்கள் ஏனைய ஊழியர்கள் பலத்த ஒத்துழைப்பை வழங்கி வருவதே இன்றைய வெற்றிக்கு காரணம்.

நிர்வாகத்தோடு இணைந்து இந்த வேலைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் .பொது மக்களும் ஏனைய வைத்திய சாலைகளும் நிறைந்த ஒத்துழைப்பு தருகிறார்கள். என்றார்.

 



பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (ஜூலை 26)அதிகாரப்பூர்வமாக தொடக்க விழாவுடன் துவங்குகிறது. ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டிகள் வரை நடைபெறுகின்றன.

கடந்த 100 ஆண்டுகளில் பிரான்ஸ் தலைநகர் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

1900 மற்றும் 1924 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரத்தில் நடைபெற்றன. இப்போது மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெறுகின்றன.

இதன் மூலம் லண்டன் நகரத்​திற்குப் பிறகு மூன்​றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரம் என்ற பெரு​மையைப் பெற்றிருக்கிறது பாரிஸ். இதற்காக பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


 


பல்வேறு குழப்பங்களுக்கிடையே இலங்கையின் 2024-ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தேதி இன்று (வெள்ளி, ஜூலை 26) அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேஷ வர்த்தமானியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழர் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தமிழ் தரப்பிற்கு இடையிலேயே மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.


இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதை முன்னிலைப்படுத்தி, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கு இடையில் உடன்படிக்கையொன்று ஜூலை 22-ஆம் தேதி கைச்சாத்திடப்பட்டது.


மொத்தம் 9 புரிந்துணவர்களை ஏற்றுக்கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள், யாழ்ப்பாணத்தில் இந்த உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டிருந்தனர்.


தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியன இணைந்து இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டன.


இந்த உடன்படிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.


இலங்கையின் முக்கிய தமிழ் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.


அமெரிக்காவின் ரகசிய ராணுவ தளத்தில் சிக்கிக் கொண்ட இலங்கைத் தமிழர்கள் - என்ன நடக்கிறது?


முதல் தடவையாக தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர்

இலங்கையில் 1978-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்காக இதுவரை 8 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.


இதன்படி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதலாவது தேர்தல் 1982-ஆம் ஆண்டு நடைபெற்றதுடன், இந்த தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார்.


1982-ஆம் ஆண்டுக்கு பின்னர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலேயே தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறங்கியிருந்தார்.


இதன்படி, சுயேட்சை வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.


அதன்பின்னர், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுந்தரம் மகேந்திரன் போட்டியிட்டதுடன், இறுதியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சுப்ரமணியம் குணரத்னம் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.


இலங்கையில் இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் வேட்பாளர்கள் சுயேட்சையாக களமிறங்கியிருந்த நிலையில், பொது வேட்பாளராக இன்று வரை எவரும் களமிறக்கப்படவில்லை.


இந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அந்த பொது வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?

தமிழ் பொது வேட்பாளருக்கு தெற்கில் ஆதரவு உண்டா?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் முயற்சியிலேயே தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுகின்ற நிலையில், தென் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை.


இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலையில், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி, மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே காலத்திற்கு பொறுத்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.


''என்னுடைய தனிப்பட்டக் கருத்து, ஒரு தமிழர் வேட்பாளர் ஜனாதிபதியாவது என்றால், முதலில் வேட்பாளரை நாங்களே நிறுத்த வேண்டும். ஆனாலும், இலங்கையில் தமிழ் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியகூறு இல்லை என்கின்ற பட்சத்தில் அடுத்த கட்டமாக யார் ஜனாதிபதியாக போகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவு வழங்கி, எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தான் காலத்திற்கு பொறுத்தமானது என நான் நம்புகின்றேன்,” என்றார்.


"எனினும், கட்சியின் நிலைப்பாடு என்று பார்க்கும் போது, நான் கட்சியின் தலைவராக இருந்தாலும், கட்சியின் தேசிய சபையில் எடுக்கும் முடிவை மாத்திரமே அறிவிக்க முடியும். தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் கட்சியின் தேசிய சபை இதுவரை முடிவெடுக்கவில்லை," என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.



தென்னிலங்கை தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இந்திய வம்சாவளித் தமிழர்களிடம், தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு கிடையாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.


''தமிழ் பொது வேட்பாளர் விஷயத்தில் மூன்று விஷயங்கள் காணப்படுகின்றன. இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குத் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் உடன்பாடு வராது. வடக்கு, கிழக்கு மக்களுக்கும் பெரும்பாலும் அந்த விடயத்தில் உடன்பாடு இல்லை. சிங்கள வேட்பாளருடன் தான் போக வேண்டும்,” என்றார்.


"தென்னிலங்கையிலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளர் களமிறங்குவதை நாம் பிழை எனச் சொல்லவில்லை. ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிட் முடியும். தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதன் ஊடாக, தமது பேரம் பேசும் சக்தியை தமிழர்கள் இழக்கின்றார்கள். அதைவிட சிங்கள வேட்பாளர்களிடம் சென்று பேரம் பேசி எதையாவது சாதித்தால் அது நல்லது என நினைக்கின்றேன்," என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.


இந்த நிலையில், தென்னிலங்கையிலுள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிக்கின்றமை காண முடிகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மாத்திரமே தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்திவருகின்றன.


ஆனால், இலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், தமிழர் ஒருவர் ஜனதிபதியாக தெரிவாவத்றகான சாத்தியம் மிகமிகக் குறைவு என மலையகத் தமிழ்க் கட்சியினர் கருதுகின்றனர்.

 


ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.


அதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி அதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்

 



யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருமதி சரோஜினி இளங்கோவன் அவர்கள்.கடந்த  5 தசாப்தங்களாக வட இலங்கையில் சட்டத்தரணியாகத் தொழில் புரிந்து வருபவர்.  வட இலங்கையில் சிரேஸ்ட வழக்கறிஞர்ளில் இவரும் ஒருவர்.இவரிடம் 35 கனிஸ்ட சட்டத்தரணிகள் பணி புரிந்துள்ளார்கள்.மல்லாகம் நீதிமன்ற நீதிபதியாகவும் தொழில்பட்டவர்.37 வருடங்களின் பின்னர்,மீள் உருவாக்கம் பெற்ற ஊர் காவற்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்வர்.

சட்டத்துறையில் இவர் 50 வருட காலங்களில் ஆற்றிய சமூகஞ்சார் அரும் பணிகளைக் கௌரவிக்கும் முகமாகஈ அண்மையில், யாழ்ப்பாணத்தில் பொன் விழாக் பொண்டாட்டம் இடம்பெற்றது. இதில்,  நீதிபதிகள், சட்டத்தரணிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சட்டத்துறையில் பொன் விழாக் காணும்,சிரேஷ்ட சட்டத்தரணி சரோஜினிதேவி இளங்கோவன் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் பணிபுரிய www.ceylon24.com குழுமம் சார்பில் நாமும் வாழ்த்துகின்றோம்!



( காரைதீவு ர் சகா)

அதி கஸ்ரப்பிரதேசமான  அக்கரைப்பற்று 
கண்ணகி கிராமத்தில் இயங்கி வரும் மாதர் சங்க பாலர் 
பாடசாலைக்கு தேவையான பெயர் பலகையையும் இரண்டு ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும்.கல்வி கற்கும் (20) மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் இணைந்த கரங்கள் அமைப்பு வழங்கி வைத்துள்ளது.

 பாடசாலை சமுகத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  இணைந்த கரங்கள் உறவுகளோடு இணைந்து பயணிக்கும்
திரு,தருஷன்,புவனேஸ்ராஜா அவருடைய நிதி பங்களிப்பில்
மாதர் சங்க பாலர் பாடசாலையின்
இரண்டு ஆசிரியர்களுக்கு மாதாந்தம்(Rs:8000)ரூபாவும்,
(20) மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களும், 
பாடசாலைக்கு தேவையான பெயர் பலகையும் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பெயர்ப் பலகை முன்பள்ளி வெளிக்கள உத்தியோகத்தர் பி. மோகனதாஸ், கண்ணகி வித்தியாலய அதிபர் த.இராசநாதன், கண்ணகி கிராமம் சமூக சேவையாளர் கோகுலன் ஆகியோருடன் இணைந்த கரங்கள் உறுப்பினர்களான 
காந்தன்.
சுரேஸ் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது...


 ( வி.ரி.சகாதேவராஜா)

நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில்  போசாக்கு குறைந்த கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் சிறுவர்களுக்கான போசாக்கு பொதி வழங்கும் நிகழ்வு இன்று (25)வியாழக்கிழமை நாவிதன்வெளி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர்பா. சதீஷ்கரன் தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில் பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். பாயிஸ் கலந்து சிறப்பித்தார்.

 கௌரவ அதிதியாக பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அ. சுதர்சன் மற்றும் சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

 நிகழ்வில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான  பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ்  இச்சமூக சேவை பொதி வழங்கி வைக்கப்பட்டது என்று சபையின் நிதிப் பொறுப்பு உத்தியோகத்தர் மு.ரகுநந்தன் தெரிவித்தார். 

 



கீர்த்திபெற்ற இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன (81 வயது )காலமானார்.

 


பாறுக் ஷிஹான்


கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம்  இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த   ரிவோல்வர் ரக துப்பாக்கி  ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரை பகுதியில் கடலரிப்பினால் வெளியாகியுள்ள நிலையில் அங்கு  விளையாட்டில் ஈடுபட்டவர்களால்  கண்டெடுக்கப்பட்டு   குறித்த துப்பாக்கி  மீட்டு செவ்வாய்க்கிழமை(23)  மாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி 2 தோட்டாக்களுடன் (ரிவோல்வர்) இயங்குநிலையில் காணப்படுவதுடன் ஜேர்மனி  நாட்டு தயாரிப்பில் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் எந்தவொரு சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக  பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



உலக கைகழுவுதல்
 தினத்தினை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பான நிகழ்வு இன்று (24.07.2024) புதன்கிழமை காலை 10 மணிக்கு இடம் பெற்றது .

இந்நிகழ்வு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் எஸ் எல்.தாஹிரா  தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு  வைத்திய  அதிகாரி டாக்டர் ஜே.மதன் ,தாதிய பரிபாலகர்கள் மற்றும் பொறுப்பு தாதிய உத்தியோகத்தரகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தாரகள்.

இந் நிகழ்வினில் பிரதி பணிப்பாளர் டாக்டர் தாஹிராவின் தலைமை உரையுடன் ஆரம்பித்து வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு  வைத்திய  அதிகாரி டாக்டர் மதன்   சிறப்பு விரிவுரை வழங்கினார் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான செய்முறைப் பயிற்சி  வழங்கப்பட்டது.


மாளிகைக்காடு செய்தியாளர்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ அல்- ஹம்றா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கை 03 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைக்கும் பணிகள் இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கமு/அக்/ அல்- ஹம்றா மகா வித்தியாலய அதிபர் யூ.கே. அப்துல் ரஹீம் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மைதான பார்ப்போர் அரங்க புனரமைப்பு பணியை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சஹ்வா அரபு கல்லூரி அதிபர் ஐ.எல். ஜலால்தீன் (ஸஹ்வி), ஒலுவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், ஒலுவில் வைத்தியசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு தலைவர் எம்.எஸ்.எம். நிஹால் உட்பட உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பீ.ரீ. ஜமால், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தினர், பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இப்பாடசாலை தேவைக்கான தளபாட கொள்வனவுக்கு பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


 நூருல் ஹுதா உமர்


கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காணிப் பயன்பாடு தொடர்பான விளக்கமளித்தலும் வலுவூட்டலும் இன்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதிபர் திரு.ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் திரு.ஐ.எம் ஜௌபர் அவர்களும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் திரு. ஏ.எச். எம்.சஞ்சீர் அவர்களும் மாணவர்களுக்கு காணிப் பயன்பாடுகள் தொடர்பான விளக்கங்களை அளித்தனர்.

மேலும், காணிப் பயன்பாடுகளை நாம் எவ்வாறு  கையாளவேண்டும், அதன் தன்மைகள், அமைப்புக்கள் பற்றி அறிந்து  எவ்வாறான வேலைத் திட்டங்களை இலகுவாக மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விளக்கங்களையும் காணொளி மூலம் மாணவர்களுக்கு முன்வைத்தனர்.

இந்நிகழ்வில் ஆலோசனை வழிகாட்டல் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியரும், மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

  


நூருல் ஹுதா உமர்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் நிர்மாணிக்கப்படவுள்ள வரவேற்பு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.
கமு/சது/சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் எம்.டீ. முஹம்மட் ஜனூபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கேட்போர் கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனை நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் பி.எம்.வை. அரபாத் முகைதீன், சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்-சூரா தலைவர் ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷேக் எம்.ஐ. அமீர் (நளீமி), சம்மாந்துறை உலமா சபை தலைவர் மௌலவி எம்.எல்.எச்.பஷீர் (மதனி), திருகோணமலை மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எம்.எம். மஹ்ரூப் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஏ.ஆர். நியாஸ் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


 (மாளிகைக்காடு, நாவிதன்வெளி செய்தியாளர்கள்)

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் பயனாக சம்மாந்துறை கல்வி வலய சம்மாந்துறை கமு/சது/ அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆய்வு கூட மேம்பாட்டுக்கு இன்று (24) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவணம் கையளிக்கப்பட்டது.
கமு/சது/ அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் எச்.எம். அன்வர் அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஒன்றரை மில்லியன் ரூபாய்க்கான நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை கையளித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாபா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர், பாடசாலை பிரதி உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 


தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐஜிபியாக அவர் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்களின் இறுதித் தீர்மானம் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 9 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நீதியரசர் யசந்த கோதாகொட, நீதியரசர் அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சார்பாக ரொமேஷ் டி சில்வா ஆஜரானார். அட்டர்னி ஜெனரல் சார்பில் மூத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே ஆஜரானார்.

 


மாளிகைக்காடு செய்தியாளர்


முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் பயனாக கல்முனை கல்வி வலய கமு/கமு/ கல்முனை ரோயல் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள சுற்றுமதில் நிர்மாணப்பணி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (23) இடம்பெற்றது.

கமு/கமு/கல்முனை ரோயல் வித்தியாலய அதிபர் எம்.எச்.எம். அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.ஏ. கலீல் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாபா, இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர், ஊடக செயலாளர் ரியாத் ஏ மஜீத், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.