Showing posts with label Sri lanka. Show all posts

 


🔴இலங்கையில் வெள்ள நிவாரண உதவிற்கு வந்த UAE #வாகனங்கள் . UAE இல் பாதையின் வலது பக்கம் , மற்றும் #திருப்புச் சக்கரம் வலது பக்கம் இருப்பதால் இந்த வாகனங்கள் வருவதை கண்டால் அவற்றுக்கு இடமளித்து உதவிடுங்கள்

 


Flood Relief – 241 Brigade Commander


இலங்கை இராணுவத்தினரின் வெள்ள அனர்த்த மனிதாபிமான நிவாரணப் பணிகள் அம்பாரை மாவட்த்தில் இடம்பெற்று வருகின்றது...


இதற்கமைவாக அக்கரைப்பற்று 241 ஆம் காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாச்சிக்குடா பிரிவில் 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டன.


241ஆம் படைப்பிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சுகத் திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 24 ஆவது காலாட்படைப்பிரிவின் அம்பாரை மாவட்ட கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜயவீர மற்றும் உதவி கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டயஸ் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபான பிராந்திய முகாமையாளர் சஜீவ் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம நிருவாக அதிகாரி பரிமளவாணி சில்வெஸ்டர் கிராம உத்தியோகத்தர் சுஜித் மதுசங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


நிவாரணத்தினை பெற்றுக்கொண்ட மக்கள் இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.


 நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும் அமைப்புகளும் பாராட்டுக்குரிய பங்களிப்பை தற்போது வழங்கி வருவருகின்றன. அவ்வாறு பங்களிப்புச் செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தாராள மனப்பான்மை கொண்ட நன்கொடையாளர்களின் நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அரசாங்கத்தினால் சில வங்கிக் கணக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதிப் பங்களிப்புகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் அமைச்சுக்கள் நேரடியாகப் பொறுப்புக்கூரும்.

 

நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வேறு எந்தவொரு அமைப்பு அல்லது தனியாரின் வங்கிக் கணக்குகளுக்கு இந்த அமைச்சு அனுமதியோ,அங்கீகாரமோ வழங்கவில்லை. அத்தகைய நிதிப் பங்களிப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் அல்லது தனிநபர்களே ஏற்றுக்கொள்வார்கள்.

 

இந்தக் இக்கட்டான தருணத்தில் மக்கள் வழங்கி வரும் பங்களிப்பைப் பாராட்டும் அதே வேளை, மாணவர்களுக்கான நிதிப் பங்களிப்புகளை பெற்றுக்கொடுக்கும் போது, அதன் நம்பகத்தன்மை குறித்து மக்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

அரசாங்கத்தின் வங்கிகணக்குப் பற்றிய தகவல்களுக்கு பிரவேசியுங்கள் www.donate.gov.lk




 இன்று நாட்டின் பல பாகங்களில் கனமழை எச்சரிக்கை! 


​இலங்கையில் வடகிழக்கு பருவமழை நிலை படிப்படியாக உருவாகி வருகிறது.

​வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும்.


​மாலை 1.00 மணிக்கு பின் நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ​மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.


​காலை வேளையின் ஆரம்பப் பகுதியில், மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மூடுபனி நிலைமைகளை எதிர்பார்க்கலாம்.


​இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



நூருல் ஹுதா உமர்


சமீபகாலமாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடி நிதியுதவி வழங்கும் நோக்கில், ஐக்கிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் மற்றும் செயலாளர் நாயகம் திரு. திருமேனி யோகநாயகன் அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், பேரிடரால் வாழ்வாதாரத்தை இழந்து, பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மக்களுக்குச் சில முக்கிய சலுகைகளை உடனடியாக வழங்கக் கருணையுடன் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்பதற்கான தற்போதைய 12 மாத கால அவகாசத்தை மேலும் 06 மாதங்கள் நீட்டித்து, மொத்தம் 18 மாதங்களாக அறிவிக்க வேண்டும்.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்களுக்கான மாதத் தவணைகளைச் செலுத்துவதற்கு 06 மாதங்கள் தாமதிக்க அனுமதிக்க வேண்டும். இந்தத் தாமத காலத்தில் கூடுதல் வட்டி, அபராதம் போன்ற சுமைகள் ஏதும் விதிக்கப்படாமல் இருக்க உத்தரவிட வேண்டும்.


 தொடர்ச்சியையும் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் முன்னணி, நாட்டு மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்குத் தோள் கொடுக்கவும், நிவாரணம் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் என்று திடமாக நம்புகிறது.


அனுர குமார திஸாநாயக்க அவர்கள் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் என்று திடமாக நம்புகிறது.

 .


சுகிர்தகுமார்        


 இலங்கை இராணுவத்தினரின் வெள்ள அனர்த்த மனிதாபிமான நிவாரணப் பணிகள் அம்பாரை மாவட்த்தில் இடம்பெற்று வருகின்றது
இதற்கமைவாக அக்கரைப்பற்று 241 ஆம் காலாட் படைப்பிரிவின்  ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாச்சிக்குடா பிரிவில் 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
241ஆம் படைப்பிவின்  மக்கள் தொடர்பு அதிகாரி மேஜர் திலபவின் ஒருங்கிணைப்பில்   கட்டளை அதிகாரி பிரிகேடியர் சுகத் திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 24 ஆவது காலாட்படைப்பிரிவின் அம்பாரை மாவட்ட கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜயவீர மற்றும் உதவி கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டயஸ் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபான பிராந்திய முகாமையாளர் சஜீவ் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம நிருவாக அதிகாரி பரிமளவாணி சில்வெஸ்டர் கிராம உத்தியோகத்தர் சுஜித் மதுசங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிவாரணத்தினை பெற்றுக்கொண்ட மக்கள் இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.


 பாறுக் ஷிஹான்


சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவில் வாராந்தம் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலையப் பரிசோதனையானது    முன்னெடுக்கப்பட்டது.

இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டதுடன், பிரதேசத்திலுள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) இதன்போது விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.

இச்சோதனையின் போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற, காலாவதியான மற்றும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் B அறிக்கை (B-Report) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மேலும் தற்போதைய காலப்பகுதியில் மின்சார விநியோகத்தில் அடிக்கடி தடங்கள் ஏற்படுவதால், குளிரூட்டிகளில் (Fridge/Freezer) வைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை  கொள்வனவு செய்யும்போது  அதிக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என   பொதுமக்களுக்கான விசேட அறிவித்தலை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி விடுத்துள்ளார்.

--

 


(வி.ரி.சகாதேவராஜா)


மலையகத்தில் குறிப்பாக பசறை லுணுகல பகுதியில் முகாமிட்டுள்ள மட்டக்களப்பு இ.கி.மிசன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையிலான குழுவினர்,  அங்கு வெள்ளத்தினாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்டு அகதிமுகாம்களில் வாழும் மக்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்குவதோடு, ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

கடந்த மூன்று தினங்களாக சுவாமி தலைமையிலான குழுவினர் அங்கு முகாமிட்டு இதர சேவைகளையும் வழங்கி வருகின்றார்கள்.

மேலும்,  இரண்டு தினங்கள் அங்கு தங்கி இருந்து முகாம்களில் வாழும் மக்களை சந்தித்து உளவள ஆற்றுப்படுத்தல்களை வழங்குவதோடு அடிப்படை நிவாரண உதவிகளையும் வழங்க உள்ளனர்.

"இரு வேறுஅகதி முகாம்களில் உள்ள சுமார் 300 குடும்பங்களை சந்தித்து பேசினோம். அவர்களது சோகக் கதைகள் சொல்லி மாளாது.

சுமார் 15 குடும்பங்கள் வீடு வாசல் உறவுகள் எதுவுமின்றி நிர்க்கதியாக உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கை மற்றும் வலிகள் ஆழமானவை" என்று சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் இன்று (4) வியாழக்கிழமை கூறினார்.

 


இலங்கை இராணுவத்தின் 241  படைப்பிரிவு தலைமையகத்தினால், இலவசமாக செல்பேசிகளுக்கான மீள் நிரப்பும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில், பெருந்திரளானவர்கள் கலந்து கொள்கின்றார்கள்



செங்கலடி பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன்னாமுனை கிராம மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.


அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கையளிக்கப்பட்டன,


தொடர்ச்சியாக, எமது மக்களின் துயர் துடைக்க அரச இயந்திரம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது,

செங்கலடி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இவ்வாறான உதவிகள் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்வோம்.


தோழர் பிரபு 


#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment  #dccbatticaloa #JVP #sunilhandunneththi #DCCChairman #Batticaloa #CleanSriLanka

 


சூறாவளியால் பெரும் சேதம்: இலங்கையில் 30% புகையிரத பாதைகள் மட்டுமே பயன்பாட்டில்!

​சமீபத்திய சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான சேதத்தைத் தொடர்ந்து, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் நீள புகையிரத பாதைகளில் 478 கிலோமீட்டர்கள் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது என்று அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி புதன்கிழமை அன்று விரிவான நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


​சந்திரகீர்த்தி அவர்கள், இந்தச் சூறாவளியானது பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகளை கடுமையாக பாதித்துள்ளதாகக் கூறினார்.

​முக்கிய சேத விவரங்கள்


​ரயில்வே சேதம்: மொத்த ரயில்வே நெட்வொர்க்கில் 30% மட்டுமே எஞ்சியுள்ளது.


​விவசாயம்: விவசாய சேவைகள் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாயச் சாலைகள் சேதமடைந்துள்ளன. சுமார் 1,37,265 ஏக்கர் விவசாய நிலங்களும் 305 சிறிய நீர்ப்பாசனக் கால்வாய்களும் அழிந்துள்ளன.


​பாலங்கள் மற்றும் சாலைகள்: சாலை அபிவிருத்தி அதிகாரசபை 246 தடைப்பட்ட சாலைகளை மீண்டும் திறந்துள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் 22 பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, ஊவா மாகாணத்தில் 6 பாலங்களும், வட மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் தலா 4 பாலங்களும் சேதமடைந்துள்ளன.


​மின்சாரம்: பாதிக்கப்பட்ட 3,531,841 மின் இணைப்புகளில் 2,526,264 நுகர்வோருக்கு (72%) மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. பழுதடைந்த 16,178 துணை மின்நிலையங்களில் (substations) 11,315 மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.


​தொலைத்தொடர்பு: தொலைத்தொடர்பு மீட்டெடுப்பு 91 சதவீதம் அடைந்துள்ளது. எனினும், நுவரெலியா மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகள் தொடர்கின்றன.


​நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள்

​சுகாதார அமைச்சகம்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நோயாளிகள் தவறிய மருத்துவமனை வருகைகள், சிகிச்சை அமர்வுகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை நிலைமை மேம்பட்டவுடன் முன்னுரிமை அளித்து மறுதேதியிட மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


​உதவி வழங்கல்: சாலை அணுகல் துண்டிக்கப்பட்டுள்ள அரணாயக்க குடியிருப்பாளர்களுக்கு இன்று உலர்ந்த உணவு விமானம் மூலம் அனுப்பப்பட்டது. அப்பகுதியில் உள்ள மருத்துவக் குழுக்களுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.


​கட்டமைப்பு ஆய்வு: வீடுகள் மற்றும் கட்டிடங்களின் ஸ்திரத்தன்மையை மதிப்பிடுவதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.


​முதலீட்டுத் திட்டம்: வளர்ச்சி பங்காளிகளிடமிருந்து உதவியைத் திரட்டுவதற்காக, காலநிலைக்கு ஏற்ற மீட்பு மற்றும் புனரமைப்பு முதலீட்டுத் திட்டத்தை அவசரமாகத் தயாரிக்குமாறு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு சந்திரகீர்த்தி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறை பிராந்தியத்திலும் கல்முனையின் சில பொது இடங்களுக்கும் மற்றும் மஜீட்புரம் வளத்தாபிட்டி  மல்வத்தை போன்ற பகுதிளுக்கு குடிநீர் வழங்க உதவி செய்த காரைதீவு பிரதேச சபைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .


இவ்வாறு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் நேற்று நமது நிருபரிடம் தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்..
 சம்மாந்துறைப் பிரதேசம் பாரிய ஒரு பிரதேசமாகும். எமது இரண்டு பவுசர்களால் அத்தனை பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க முடியாது.
சம்மாந்துறையின் மேட்டுநிலபகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மின்சாரமில்லாத இன்றைய நிலையில்  போகாது.

 சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலை, போலீஸ் நிலையம், தென்கிழக்கு பல்கலைக்கழக கணித பீடம் மற்றும் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலை  போன்ற இடங்களுக்கு குடிநீரை வழங்கி வருகிறோம் .

அதற்கு இனமதபேதம் பாராமல் எமக்கு உரிய வேளையிலே பௌசர்கள் மற்றும் மனித வளத்தை தந்து உதவிய  காரைதீவு பிரதேச சபைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். என்றார்.

 


நூருல் ஹுதா உமர்


நாட்டின் பல பாகங்களில் சீரற்ற காலநிலை, அதனோடு இணைந்த வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமான மனிதாபிமான நிவாரண உதவி பணிகளை முன்னெடுக்க சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜம்மியதுல் உலமா சபை, சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்புகள், சாய்ந்தமருது-மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக சங்கம், ஊடகவியலாளர்கள், இதர சிவில் சமூக அமைப்புகள், நலன்விரும்பிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து நிவாரண சேகரிப்பு பணிகளை கடந்த இரு நாட்களாக முன்னெடுத்து வருகிறார்கள்.

அனைவரது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு சாத்தியமான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக பிரதேச பொதுமக்களிடம் இருந்து நிவாரண உதவிகளை சேகரிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் உள்ள மக்களும், நாட்டிலுள்ள மக்களும் நிறைய உதவிகளை இந்த பணிக்காக வழங்கி வருகிறார்கள்.



22 மாவட்டங்கள் "தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்" என அறிவிக்கப்பட்டுள்ளன. 

பேரிடரின் அளவு பற்றிய கண்ணோட்டம் 👇🏽

‼️பாதிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள்: இலங்கையின் 88% பகுதிகள் #CycloneDitwa ஆல் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன 

❗️அதாவது #இலங்கையின் 9 மாகாணங்களில் 8 மாகாணங்கள் - தென் மாகாணம் பாதிக்கப்படாமல் உள்ளது 

நாட்டின் மிக மோசமான இரண்டு தசாப்தங்களாக நிலவும் இந்த இயற்கை பேரிடரின் தாக்கம் நிச்சயமாக கடுமையாக உணரப்படும். 

இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானியில், 22 மாவட்டங்கள் "தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்" என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேரிடரின் அளவு குறித்த கண்ணோட்டம் 👇🏽

‼️பாதிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள்: இலங்கையின் 88% மாவட்டங்கள் #CycloneDitwa-வால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன 

 பாதிக்கப்படாமல் உள்ளது 


இரண்டு தசாப்தங்களாக நாட்டின் மிக மோசமான இந்த இயற்கை பேரிடரின் தாக்கம் கடுமையாக உணரப்படும் என்பது உறுதி.


மாகாணங்கள் - தென் மாகாணம் பாதிக்கப்படாமல் உள்ளது 


இரண்டு தசாப்தங்களாக நாட்டின் மிக மோசமான இந்த இயற்கை பேரிடரின் தாக்கம் கடுமையாக உணரப்படும் என்பது உறுதி.

 


🔴  உடைந்து, சிதறிய வட்டுவாகல் பாலம் இரவிரவாக சீரமைக்கப்பட்டுள்ளது, விரைவில் சாதாரண போக்குவரத்துக்கு தயாராகும்!


#srilanka #vaanamlk #UpdateNews #LocalNews

 


வி.சுகிர்தகுமார்        


 வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மலையகம் உள்ளிட்ட நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கு கரம் கொடுத்து அவர்களுக்கான நிவாரணப்பொருட்களை அனுப்பும் மனிதாபிமான பணியில் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சமமேளம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் நிவாரணப்பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம் எனும் அடிப்படையில் இன்றும் நாளையும் (02,03) இடம்பெறும் இப்பணியில் பிரதேச செயலாளர் ஆர்.திரிவியராஜ் உள்ளிட்;ட பலர் கலந்து கொண்டு பங்களிப்பை வழங்கினார்.
வெள்ள அனர்த்தத்தில் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டபோதிலும் மிகவும் பாதிக்கப்பட்ட மலையகம் உள்ளிட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப்பொருட்களை மக்கள் மனமுவந்து வழங்கி வருகின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.