“கம்பன் புகழ் பாடும் கதிரவன்”
(வி.ரி. சகாதேவராஜா)
(வி.ரி. சகாதேவராஜா)
(வி.ரி.சகாதேவராஜா)
நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) என்பது ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று முடித்த பின், ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய இஸ்லாமியப் பண்டிகை ஆகும். இது இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், ஏழைகளுக்கு உணவளித்து மகிழும் (சதக்கத்துல் ஃபித்ர்) ஈகைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. 2026-ல் மார்ச் 21 சனிக்கிழமை கொண்டாடப்பட
வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு இரண்டரை வயது குழந்தையுடன் நேற்று (19) சென்று காணாமல்போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தும் குழந்தை வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில் இருந்தும் உயிருக்கு போராடிய நிலையில் உயிருடன் இன்று (20) மீட்கப்பட்டதுடன் அந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது,
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் அவரது இரண்டரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து எடுப்பதற்காக நேற்று காலையில் வீட்டில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்ததுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் மாட்டுபட்டியில் பால் எடுப்பதற்காக சிலர் சென்று கொண்டிருந்தபோது அப் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.
இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கிணற்றில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதாக அப் பெண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
இதேவேளை குறித்த குழந்தை கொத்தியாவலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரம் கொண்ட வயல் பகுதியில் கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.
குழந்தை மீட்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து தாய் மீட்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற அனுமதியை பெற்று தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்த அழுகிய நிலையில் இருந்த சுமார் 20 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டு பிரேத பரிசோதணைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்.
இதேவேளை இச் சம்பவத்தில் உயிர் தப்பிய தாய் தான் சம்பவதினம் மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்துக்கொண்டு ஈட்டு கடையில் 34 ஆயிரம் ரூபாவுக்கு அடைவில் இருந்த தங்க ஆபரணம் ஒன்றை மீட்டெடுத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறி வவுணதீவு கொத்தியாவலையில் உள்ள தனது வீட்டிற்கு பிரயாணித்து தாண்டியடி பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு நோக்கி சென்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அவர் பெரும் அதிர்சியடைந்து பயந்த நிலையில் இருந்து வருவதால் அவரிடம் தொடர்ந்து தற்போது விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த இளம் தாய் கடத்தப்பட்டாரா? கொள்ளையர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனரா? தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா? என பல கோணத்தில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, பொலிஸார், மாவட்ட புலனாய்வு பிரிவினர், விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(கனகராசா சரவணன்)
ஆலையடிவேம்பு நிருபர்
நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட இணைந்த சேவை உத்தியோகத்தர்கள் 2026 ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கட்டளைக்கமைய இதுவரை விடுவிக்கப்படாத உத்தியோகத்தர்களை 20 ந் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இது தொடர்பாக (17.03.2026) ந் திகதி ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாகாண அமைச்சர்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களின் மாதாந்த கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார்
இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
ஆளுநரின் உத்தரவின்படி, 03.03.2026 முதல் இடமாற்ற உத்தரவுகளில் உள்ள அனைத்து அலுவலர்கள்/பணியாளர்களையும் வரும் வெள்ளிக்கிழமை, 20.03.2026-க்குள் விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த உத்தரவை மீறினால், இலங்கை அரசாங்க தாசன விதி கோவை மற்றும் கிழக்கு மாகாண அரச ஒழுங்கு விதி (E.Code) விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மேலும் வலியுறுத்தி உள்ளதாக ஆளுநரின் செயலாளர் பி. வாகேஷன், அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
தடுப்புக்காவலில் இருந்த வசந்த முதலிகே சார்பில் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் உடன்பாட்டுடன், உயர்நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, அதன் அப்போதைய ஒருங்கிணைப்பாளரான வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
இதனை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள் குழாம், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்குத் தேவையான நியாயமான சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விடயங்களை பிரதிவாதிகள் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டியது.
அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க பிரதிவாதிகள் தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(காரையூர் வேதசகா )
நூருல் ஹுதா உமர்
நூருல் ஹுதா உமர்)
Teacher Center ல் பணியாற்றிய நிலாஸ் சகோதரர் ரியாத்தில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று
பாவங்களை மன்னித்து மேலான
#ஜன்னத்துல்_பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲
அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲
🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ
⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷
🄷🄾🅃🄻🄸🄽🄴
0773024111
0742421818 வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று
பாவங்களை மன்னித்து மேலான
#ஜன்னத்துல்_பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲
அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲
🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ
⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷
🄷🄾🅃🄻🄸🄽🄴
0773024111
0742421818வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று
பாவங்களை மன்னித்து மேலான
#ஜன்னத்துல்_பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲
அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲
🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ
⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷
🄷🄾🅃🄻🄸🄽🄴
0773024111
0742421818
யாழில் இளவயது சட்டத்தரணியும் இரட்டை குழந்தைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் பலி!🔴👇🔴👇🔴👇🔴👇🔴👇
மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் யா/ வட இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் விஸ்வேதிகா அவர்களின் கணவரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியிடம் கூற, மனைவி இஞ்சி போட்டு தேநீர் வழங்கி உள்ளார். பின்னர் இரவு 7 மணியளவில் உடல்நலம் குறைவினால் உடனடியாக நெல்லியடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த இளவயது மரணம் அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
#news #NewsUpdate #newsfeed #sltnews #BreakingNews
திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் வீரவில பகுதியில் வைத்து, அரச பேருந்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதுண்டன.
இந்த அனர்த்தில் சிக்குண்டவர்களே உயிரிந்தனர்.
சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நூருல் ஹுதா உமர்
வி.சுகிர்தகுமார்