Showing posts with label Sri lanka. Show all posts

 


ஒட்டமவாடி மயானத்திற்கான போக்குவரத்து வசதி: கொழும்பு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்


நூருல் ஹுதா உமர் 


கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்து ஒட்டமவாடி மஜ்மா நகர் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் கல்லறைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்துமாறு கோரி முன்வைக்கப்பட்ட தீர்மானம், கொழும்பு மாநகர சபையின் மாதாந்திரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


இத்தீர்மானத்தை ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் கலிலூர் ரஹ்மான் முன்வைத்தார். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஆதிஃப் அவர்களால் வழிமொழியப்பட்ட இத்தீர்மானம் பின்னர் சபையில் அங்கீகரிக்கப்பட்டது.


கொரோனா சூழ்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள், கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் கொரளைப்பத்து மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒட்டமவாடி மஜ்மா நகர் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்களில், கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட குடிமக்களும் அடங்கியுள்ளனர்.


இஸ்லாமிய சமய மரபின்படி, கல்லறைகளுக்கு சென்று பிரார்த்தனை மற்றும் பிற சமயச் சடங்குகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். குறிப்பாக ரமலான் மற்றும் ஹஜ் போன்ற விசேஷ காலங்களில் இந்த தேவையானது அதிகரிக்கிறது.


இதனை முன்னிட்டு, பெருநாளுக்கு அடுத்த முதல் சனிக்கிழமையன்று மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்ற நாளொன்றில், போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாநகர சபையிடம் கோரப்பட்டுள்ளது.


இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய ஜன மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய குடியரசு முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்கூட்டத்தின் போது சபை அறையில் இல்லாதமை கவனிக்கப்பட்டது.

 (வி.ரி. சகாதேவராஜா)


 இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும்  “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான கம்பன் விழா
 மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில்,  எதிர்வரும் மார்ச் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வை கதிரவன் கலைக் கழக தலைவர் த. இன்பராசா தலைமையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போபால் கம்பன் கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகள் இடம்பெறுகின்றன.

காலை அமர்வு “அயோத்தி அரங்கு” எனப் பெயரிடப்பட்டு, காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். தொடர்ந்து, மாலை அமர்வு “இராவணேஸ்வரர் அரங்கு” எனப் பெயரிடப்பட்டு, பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

தமிழ் இலக்கிய மேதை கம்பனைப் போற்றும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், புகழ் பாடல்களும் இடம்பெறவுள்ளன.
 “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்விற்கு இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

+94759175981 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்று கதிரவன் இன்பராசா தெரிவித்தார்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நாளை (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், தெய்வீக கானங்கள் இறுவெட்டு வெளியீடு இடம்பெறவிருக்கின்றது.

ஆலயத்தலைவர் பிரபல தமிழாசான் வே.செவ்வேட்குமரன் முன்னிலையில்,  இறுவெட்டு நெறியாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இவ் இறுவெட்டு வெளியீடு இடம்பெறவிருக்கின்றது.

காரைதீவு தெய்வீக கான சபையின் ஸ்தாபகர் விபுலமணி இ.கோபாலசிங்கம் தயாரித்த 24 சிவ கானங்கள் அடங்கிய இறுவெட்டு நாளை பகல் 12 மணிக்கு ஆலய சந்நிதானத்தில் வெளியீடு செய்யப்படும்.



மோட்டர் சைக்கிள் ஒன்று  கார் மீது மோதி இன்றைய தினம் விபத்துக்குள்ளானது.இதில் மோட் பார் வாகனச் சாரதி காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்

 


(நூருல் ஹுதா உமர்)

அக்கரைப்பற்றில் நடைபெற்ற நோன்புப்பெருநாள் தொழுகையும், பெருநாள் குத்பாவும் (நூருல் ஹுதா உமர்)

 

உலகலாவிய முஸ்லிம்கள் அனைவருக்கும், புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!

நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) என்பது ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று முடித்த பின், ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய இஸ்லாமியப் பண்டிகை ஆகும். இது இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், ஏழைகளுக்கு உணவளித்து மகிழும் (சதக்கத்துல் ஃபித்ர்) ஈகைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. 2026-ல் மார்ச் 21 சனிக்கிழமை கொண்டாடப்பட




 


வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு இரண்டரை வயது குழந்தையுடன் நேற்று (19) சென்று காணாமல்போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தும் குழந்தை வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில் இருந்தும் உயிருக்கு போராடிய நிலையில் உயிருடன் இன்று (20) மீட்கப்பட்டதுடன் அந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது.


இது பற்றி தெரியவருவதாவது,


வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் அவரது இரண்டரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து எடுப்பதற்காக நேற்று காலையில் வீட்டில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்ததுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.


இந்நிலையில் இன்று காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் மாட்டுபட்டியில் பால் எடுப்பதற்காக சிலர் சென்று கொண்டிருந்தபோது அப் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.


இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் கிணற்றில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதாக அப் பெண் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.


இதேவேளை குறித்த குழந்தை கொத்தியாவலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரம் கொண்ட வயல் பகுதியில் கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.


குழந்தை மீட்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து தாய் மீட்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  


இதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற அனுமதியை பெற்று தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்த அழுகிய நிலையில் இருந்த சுமார் 20 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டு பிரேத பரிசோதணைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்.


இதேவேளை இச் சம்பவத்தில் உயிர் தப்பிய தாய் தான் சம்பவதினம் மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்துக்கொண்டு ஈட்டு கடையில் 34 ஆயிரம் ரூபாவுக்கு அடைவில் இருந்த தங்க ஆபரணம் ஒன்றை மீட்டெடுத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறி வவுணதீவு கொத்தியாவலையில் உள்ள தனது வீட்டிற்கு பிரயாணித்து தாண்டியடி பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு நோக்கி சென்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


அதேவேளை இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அவர் பெரும் அதிர்சியடைந்து பயந்த நிலையில் இருந்து வருவதால் அவரிடம் தொடர்ந்து தற்போது விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இதேவேளை குறித்த இளம் தாய் கடத்தப்பட்டாரா? கொள்ளையர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனரா? தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா? என பல கோணத்தில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, பொலிஸார், மாவட்ட புலனாய்வு பிரிவினர், விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


(கனகராசா சரவணன்)


 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்        

 அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்ல ஸ்தாபகர் தின நிகழ்வுகளும் இந்தியாவில் இருந்து வருகைதந்த வளவாளர்களையும் வள்ளல்களையும் வரவேற்கும் நிகழ்வும் அறநெறி ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் (19) இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் திருச்சி உதயா உணவுகள் பதப்படுத்தல் உற்பத்தி பயிற்சியாளர் எஸ்.பொன் செல்வி சரவணன் தொழில் ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் எம்.ஞானசேகரன் சமூக சேவகர் எம்.பி.பழனிச்சாமி திருமதி கண்ணம்மாள் சண்முகம் சட்டத்தரணி மற்றும் ரோட்டறி கழகத்தின் செயலாளர் எப்.டபிளியு.பிறங்கிளின் விஜயகுமார் பணியகம் சார்ந்த தரச்சான்று உத்தியோகத்தர் சதீஸ்பாபு உள்ளிட்ட பிரதேச சபை தவிசாளர் தர்மதாச அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜி என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபகராக இருந்து வழிநடத்திவரும் த.கயிலாயபிள்ளை அவர்களை முன்னிறுத்தி ஸ்தாபகர் தினமாக மார்ச் மாதம் 17ஆம் திகதியாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் பின்னராக இந்தியாவில் இருந்து வருகை தந்த வளவாளர்களும்; வள்ளல்களும் இணைந்து இல்ல வளர்ச்சிக்காக உதவி செய்வதாக உறுதி அளித்ததோடு பிரதேச உற்பத்தியாளர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முன்வருவதாகவும் கூறினர்.
இறுதியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சேவை செய்யும் அறநெறி ஆசிரியர்கள் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்து இளைஞர் மன்றத்தின் நிதியினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

 


நூருல் ஹுதா உமர்


கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட இணைந்த சேவை உத்தியோகத்தர்கள் 2026 ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கட்டளைக்கமைய இதுவரை விடுவிக்கப்படாத உத்தியோகத்தர்களை 20 ந் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்


இது தொடர்பாக (17.03.2026) ந் திகதி ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாகாண அமைச்சர்களின்  செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களின் மாதாந்த கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார்


இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,


ஆளுநரின் உத்தரவின்படி, 03.03.2026 முதல் இடமாற்ற உத்தரவுகளில் உள்ள அனைத்து அலுவலர்கள்/பணியாளர்களையும் வரும் வெள்ளிக்கிழமை, 20.03.2026-க்குள் விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த உத்தரவை மீறினால்,  இலங்கை அரசாங்க தாசன விதி கோவை மற்றும் கிழக்கு மாகாண அரச ஒழுங்கு விதி (E.Code) விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மேலும் வலியுறுத்தி உள்ளதாக  ஆளுநரின் செயலாளர் பி. வாகேஷன், அறிவித்துள்ளார்.

 


உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக, காத்தான்குடி பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் கடற்கரை திடலில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த திடல் தொழுகையில், பெருமளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக பங்கேற்று ஒன்றுபட்ட சமுதாய உணர்வுடன் தொழுகையை நிறைவேற்றினர்.

பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) நடத்தி வைத்தார். அவர் தனது உரையில் ஒற்றுமை, அமைதி மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வு அமைதியான சூழலில் சிறப்பாக நடைபெற்றதுடன், மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


(Rep/Yusuf Ahamed)
புனித ரமழான் மாதத்தில் உபவாசம்  இருப்பவர்கள, நோன்பு திறப்பதற்காக, அனைத்துப் பள்ளிவாயல்களிலும், நோன்புக் கஞ்சி விநியோகம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. 

குறித்த கஞ்சியினைப் பெற மாற்றுமத சகோதரர்களும் வருகின்றார்கள். அவர்களுக்கும், கஞ்சி இலசவமாக வழங்க்கப்படுகின்றது. 

 


இலங்கையில் நோன்பை முப்பதாக பூர்த்தி செய்வோம்.! இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (21.03.2026) சனிக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

 


அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், பொலிஸார் அவரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 


தடுப்புக்காவலில் இருந்த வசந்த முதலிகே சார்பில் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் உடன்பாட்டுடன், உயர்நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா இந்தத் தீர்ப்பை வழங்கினார். 


2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, அதன் அப்போதைய ஒருங்கிணைப்பாளரான வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.


இதனை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


நீண்ட விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள் குழாம், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்குத் தேவையான நியாயமான சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விடயங்களை பிரதிவாதிகள் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டியது. 


அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க பிரதிவாதிகள் தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


(காரையூர் வேதசகா )


கல்முனை ஆதார  வைத்தியசாலையில் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம் (17) செவ்வாய்க்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விமரிசையாக நடைபெற்றது.

வைத்தியசாலையின் ஊழியர் சமூக நலன்புரிச் சங்கம் இந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

 இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, ஓய்வு நிலை உதவிக் கல்வி பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமாகிய வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா   கலந்து சிறப்பித்தார்.


 இந்நிகழ்வின் போது தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, கல்வி பொது தராதர சாதாரண தரத்தில் சித்தி அடைந்த, பல்கலைக்கழகத்துக்கு தெரிவான,  வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த காலங்களில் இவ் வைத்தியசாலை முன்னேற்றத்தில் பங்களித்தமைக்காக,  பிரதம அதிதியான வி.ரி.சகாதேவராஜா,  மேடையில் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கு.சுகுணன் மற்றும் பொருளாளர் ரி.மதுரா ஆகியோரால் பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 நிகழ்வின்போது 120 மாணவர்களுக்கு நலன்புரி சங்கம்  ஏழு லட்சம் ரூபாய் செலவில் பரிசுகளையும் கௌரவிப்பையும் வழங்கியிருந்தது.

நிகழ்வில் வைத்தியசாலை கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, நிருவாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள், தாதியபரிபாலகர் என்.சசிதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


நலன்புரி சங்க செயலாளர் எஸ்.மனோஜினி பொருளாளர் ரி.மதுரா ஆகியோர் நெறிப்படுத்திய இந் நிகழ்வை ,சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தர் ப. செல்வகுமார் தொகுத்து வழங்கினார்.

 


நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்டம் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ள மாவட்டமாக காணப்படுவதால், தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, தற்போது வாரத்திற்கு 75 லீட்டர் என்ற அளவில் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு விவசாய நடவடிக்கைகளுக்கு முற்றிலும் போதாது. ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள குறைந்தது 20 லீட்டர் எரிபொருள் தேவையாகும் நிலையில், இந்த ஒதுக்கீடு நடைமுறையில் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, குறிப்பாக உழவு இயந்திரங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை சீராக செய்ய வாரத்திற்கு குறைந்தபட்சம் 300 லீட்டர் எரிபொருளாவது ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், உழவு இயந்திரங்களை கலப்பையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், மற்ற வாகனப் பயணிகளுக்கும் ஆபத்து விளைவிக்கும் சூழல் உருவாகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், எரிபொருளை கலன்களில் (containers) வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது விவசாய நடவடிக்கைளை மேற்கொள்ளும் காலம் என்பதால் விவசாயத்தை பாதுகாக்கவும், உற்பத்தியை நிலைநிறுத்தவும் ஜனாதிபதி, பிரதமர், விவசாய அமைச்சர், எரிசக்தி அமைச்சர் போன்றோர்கள் தலையிட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 


நூருல் ஹுதா உமர்)


சாய்ந்தமருது அல்-அமானா நற்பணி மன்றத்தினால் தேவை உடைய மக்களுக்கான உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வும், அமைப்பின் பொதுக்கூட்டமும், வருடாந்த இப்தார் நிகழ்வும் புதன்கிழமை மாலை சாய்ந்தமருது அல்-அமானா நற்பணி மன்ற காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு அல்-அமானா நற்பணி மன்றத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல். பரீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் போது பொருளாதார தட்டுப்பாட்டில் உள்ள குடும்பங்கள், பெருநாளை கொண்டாட வசதியற்ற ஏழைகள், அங்கவீனர்கள், அனாதைகள், விதவைகள் மற்றும் வாழ்வாதாரம் இழந்த பலருக்கு பண உதவிகளும் உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உலமாக்கள், பிரதேச செயலக அதிகாரிகள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்தார் நிகழ்வில் விசேட மார்க்க உரையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சாய்ந்தமருது கிளைத்தலைவர் எம்.எம்.எம். சலீம் (சர்க்கி) நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மன்றத் தலைவர் ஏ.எல். பரீட், அமைப்பின் வரலாற்றை நினைவுகூர்ந்தார். 1986 ஆம் ஆண்டு “அன்ஸாரிகள் சங்கம்” என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ஆரம்பத்தில் மீனவர்களின் நலன், மத நடவடிக்கைகள் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக “சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றியம்” என மாற்றம் பெற்று பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார்.

பின்னர் மக்களின் தேவைகள் அதிகரித்ததை முன்னிட்டு, 2008 ஆம் ஆண்டு அப்போதைய பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் “அல்-அமானா நற்பணி மன்றம்” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக உருவெடுத்து தற்போது பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்த பின்னர் அரசு மேற்குப் பகுதிகளில் காணிகளை வழங்கி குடியிருப்புகளை அமைத்தாலும், அனைவரும் வீடுகளை பெற முடியாத சூழல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் பலர் அருகிலுள்ள பகுதிகளில் சிறு நிலப்பகுதிகளை வாங்கி தங்களது குடியிருப்புகளை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வீதி அமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மன்றம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், தேவையுடைய மக்களின் நியாயமான ஆதரவின் மூலம் அவற்றை வெற்றிகரமாக சமாளித்ததாகவும் தெரிவித்தார். வீதிகளுக்கு பெயரிடுதல் தொடர்பாகவும் அவர் கருத்துகளை வெளியிட்டார்.

இந்த நிகழ்வு சமூக ஒற்றுமையையும், சேவை மனப்பான்மையையும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

 


Teacher Center ல் பணியாற்றிய நிலாஸ் சகோதரர் ரியாத்தில் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818 வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று

பாவங்களை மன்னித்து மேலான

#ஜன்னத்துல்_பிர்தௌஸ்

எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲


அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲


🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ

⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷

 🄷🄾🅃🄻🄸🄽🄴 

    0773024111

    0742421818

 


யாழில் இளவயது சட்டத்தரணியும் இரட்டை குழந்தைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் பலி!🔴👇🔴👇🔴👇🔴👇🔴👇


மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் யா/ வட இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் விஸ்வேதிகா அவர்களின் கணவரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.


நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியிடம் கூற, மனைவி இஞ்சி போட்டு தேநீர் வழங்கி உள்ளார். பின்னர் இரவு 7 மணியளவில் உடல்நலம் குறைவினால் உடனடியாக நெல்லியடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த இளவயது மரணம் அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

#news #NewsUpdate #newsfeed #sltnews #BreakingNews

 


வீரவில பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.


திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் வீரவில பகுதியில் வைத்து, அரச பேருந்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதுண்டன.


இந்த அனர்த்தில் சிக்குண்டவர்களே உயிரிந்தனர்.


சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 நூருல் ஹுதா உமர்


சிட்டிசன் வலையமைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் உலமாக்கள், பல்துறை சாதனையாளர்கள் மற்றும் மகளிர் சாதனையாளர்களை கௌரவிக்கும் சிறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

சமூக முன்னேற்றத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பு செய்துள்ள நபர்களை பாராட்டும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மத அறிஞர்கள் (உலமாக்கள்), கல்வி, சமூக சேவை, தொழில், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்கள் மற்றும் பெண்களின் பங்கு சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டது. பெண்கள் சமூக முன்னேற்றத்தில் வகிக்கும் முக்கிய பங்கினை வலியுறுத்தும் வகையில் மகளிர் சாதனையாளர்களுக்கான தனிப்பட்ட கௌரவிப்பும் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக பொலிஸ் உயரதிகாரிகள், பிரதிக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித், ஹில்மாஸ் லங்கா பணிப்பாளர் எம்.ஐ.எம். இல்யாஸ், டெக்னோ பெப் நிறுவுனர் எம்.ஐ. ஹதீப் முஹம்மட் உட்பட சமூக முக்கியஸ்தர்கள், கல்வியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்டவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு சமூக ஒற்றுமையையும், திறமைகளை அங்கீகரிக்கும் பண்பையும் ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. நிகழ்வின் இறுதியில் கௌரவிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.
 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.