வாழ்த்துக்கள் வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ்
ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக எதிர்வரும் 11.05.2026 அன்று BH/Mahaoya வைத்தியசாலையில் பதவியேற்பதற்கான பெயர் பட்டியல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகங்கள் அமைச்சால் இன்றையதினம் (08) வெளியிடப்பட்டுள்ளது.
எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக பதவியேற்கவுள்ள வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக எதிர்வரும் 11.05.2026 அன்று BH/Mahaoya வைத்தியசாலையில் பதவியேற்பதற்கான பெயர் பட்டியல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகங்கள் அமைச்சால் இன்றையதினம் (08) வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரியாக பதவியேற்கவுள்ள வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
ஆலையடிவேம்பு நிருபர்
🟡 காத்தான்குடி கடற்கரை வீதியில் ஒற்றைநாள், இரட்டை நாள் முறையினை நடைமுறைப்படுத்த தீர்மானம்
டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் 06.05.2026 அன்று நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் பீச் வே மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது போக்குவரத்து நடைமுறைகள், வர்த்தக நிலையங்களை ஒழுங்கு படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் நடாத்தப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
01. டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் ஒற்றைநாள், இரட்டை நாள் முறையினை நடைமுறைப்படுத்துதல்.
2. Transport வாகனங்கள் காலை 8 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை மாத்திரம் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை (கடற்கரை வீதி)யில் பொருட்களை ஏற்றி இறக்க அனுமதி.
3. வியாபார நிலையங்களுக்கு முன்னால் உரிமையாளரின் ஒரு மோட்டார் சைக்கிள் மாத்திரம் நிறுத்த அனுமதி.
4. Gas Company வாகனங்கள் மாற்றுப்பதையாக முதியோர் இல்ல வீதியினை பயன்படுத்தல்.
ஆகிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேற்படி நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், செயலாளர், கணக்காளர், உத்தியோகத்தர்கள், போக்குவரத்து பொலிஸார், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், காத்தான்குடி ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள்,
காத்தான்குடி வர்த்தக சங்கத்தினுடைய பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.
இந்திய அரசியலமைப்பின் 164-வது சரத்தின்படி, முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுவார் என்றும், மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நியமனம் முறைப்படி ஆளுநரால் செய்யப்பட்டாலும், மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற்ற நபரை அரசாங்கத்தை அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என அரசியலமைப்பு மரபுகள் வலியுறுத்துகின்றன. எனவே, ஆளுநரின் விருப்புரிமை வரையறுக்கப்பட்டதாகும், அதைத் தன்னிச்சையாகப் பயன்படுத்த முடியாது. பெரும்பான்மை ஆதரவு குறித்த இறுதி முடிவு மாநில சட்டமன்றத்தின் அவையிலேயே எடுக்கப்பட வேண்டும். இதன் விளைவாக, ஒரு முதலமைச்சரை நியமிப்பதிலோ அல்லது மாநில அரசை அமைப்பதிலோ ஏற்படும் தேவையற்ற தாமதம், ஜனநாயகக் கொள்கைகளையும் நாடாளுமன்ற அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திட்டத்தையும் மீறுவதாக அமையக்கூடும்.
மட்டக்களப்பு வாவியில் மிதந்த இருவரின் உடலங்கள் : கொலையா? தற்கொலையா? - காவல்துறையினர் தீவிர விசாரணை
மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு வாவியிலிருந்து (மே 7) இரண்டு ஆண்களின் உடலங்கள் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு காவல்துறையினர் உடலங்களை மீட்டுள்ளனர் . உடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தவறான அபிவிருத்தித் திட்டங்களால் பல தலைமுறைகள் பாதிப்பு – மக்கள் வேதனை
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் அச்சமும் நிலவி வருகிறது. குறிப்பாக ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர் கடலின் இயல்பான நீரோட்ட அமைப்புகள் மாற்றமடைந்ததன் விளைவாக கரையோர நிலப்பரப்புகள் வேகமாக கடலால் விழுங்கப்பட்டு வருவதாக மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்படும் காலகட்டத்திலேயே பல கடலியல் நிபுணர்களும், மீனவ சமூக பிரதிநிதிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்காலத்தில் கடுமையான கரையரிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அரசியல் அதிகாரமும், ஒப்பந்த நிறுவனங்களின் பொருளாதார நோக்கங்களும் அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்ததாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போது ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் கடல் வேகமாக உள்வாங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மருதமுனை, பாண்டிருப்பு, கல்லாறு போன்ற பகுதிகளும் கடலரிப்பின் ஆபத்தில் சிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மாளிகைக்காடு பகுதியில் அமைந்திருந்த மையவாடி முழுமையாக கடலுக்குள் சென்று அழிந்துள்ளதாகவும், பல இடங்களில் வீடுகள், மரங்கள், மக்கள் பயன்படுத்திய கடற்கரைப் பகுதிகள் ஆகியவை கடலால் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் வலை உலர்த்திய மணற்பரப்புகள் கூட இன்று கடலின் பகுதியாக மாறியுள்ளன.
“ஒரு துறைமுகத்தை அமைப்பது மட்டுமே அபிவிருத்தி அல்ல; அது மனித வாழ்வையும் இயற்கை சமநிலையையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், கடந்தகாலத்தில் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப ஆய்வுகளை புறக்கணித்த அதிகாரிகள் மற்றும் நிர்மாணப் பொறுப்பை ஏற்ற நிறுவனங்கள் ஆகியோர் இந்த சூழ்நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நடைபெறுவது சாதாரண கரையரிப்பு அல்ல; தவறான அபிவிருத்தித் திட்டங்கள் ஒரு சமூகத்தின் வாழ்வுரிமை, பாரம்பரியம் மற்றும் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான நேரடி எடுத்துக்காட்டாக இது மாறியுள்ளது என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் சடலம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது .
அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன
🚨 BREAKING - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன சடலமாக மீட்பு! 😱✈️
🔴ஸ்ரீலங்காவை உலுக்கியுள்ள அதிர்ச்சித் தகவல்! ஏர்பஸ் விமானக் கொள்வனவில் பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன, கொழும்பு 07 இல் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்! 🏠
🔴 என்ன நடந்தது? (Quick Highlights):
♦️திடீர் மரணம் - இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார். பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 👮♂️🔍
♦️நேற்று வந்த உத்தரவு - 2 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 60 கோடி ரூபாய்க்கும் மேல்!) இலஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், இவரை உடனடியாகக் கைது செய்யுமாறு நேற்று (மே 7) தான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது! ⚖️🚫
🔴சர்ச்சை பின்னணி - கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருந்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட இருந்த தருணத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 🤔❓
🔍 அடுத்தது என்ன?
மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன? இது தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பது பிரேதப் பரிசோதனையின் பின்னரே தெரியவரும். 🏥🧪
🔴விமான சேவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் முக்கிய சாட்சி/குற்றவாளி மறைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 📉🔥
#SriLankanAirlines #KapilaChandrasena #BreakingNewsSriLanka #ColomboNews #AirbusScandal #SrilankaCrime #TrendingNow #VpReport #VisionPoint #CurrentAffairsSL #CorruptionScandal #SrilankaUpdates #lka
போரதீவுப்பற்றில் தமிழ்த்தினப் போட்டிக்குச் சென்ற மூன்று மாணவிகள் விபத்தில் காயம்.!
தமிழ்த்தினப் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்ற பாடசாலை மாணவிகள் பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவிகள் காயமடைந்துள்ளனர்.
இன்று (07.05.2026) வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள், கோவில்போரதீவு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள கோட்டமட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.
வெல்லாவெளி - பொறுகாமம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டியின் முன் டயர் திடீரென வெடித்துள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் காரணமாக முச்சக்கரவண்டிக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்தின் போது வாகனத்திலிருந்த நான்கு மாணவிகளில் மூவர் காயமடைந்த நிலையில், உடனடியாகக் களுவாஞ்சிகுடி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவிகளுக்குப் பொறுப்பான ஆசிரியர் இது குறித்துத் தெரிவிக்கையில்.
சிகிச்சை பெற்ற மாணவிகளில் இருவர், தங்களது திறமையை வெளிப்படுத்தும் ஆர்வத்துடன் சிகிச்சை முடிந்து உடனடியாகத் தமிழ்த்தினப் போட்டிக்குச் சமூகமளித்துள்ளனர்.
ஒரு மாணவி மட்டும் மேலதிக சிகிச்சைக்காகத் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுமத்ரா மாகாணத்தில் உள்ள லுபுக்லிங்காவ் நகரிலிருந்து ஜாம்பி நோக்கி 20 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தில் திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்துஎதிரில் வந்த லொறி மீது மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் லொறியில் இருந்த டீசல் கொட்டியதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளன.
பேருந்துக்குள் இருந்தவர்களால் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை உயர்நீதிமன்றம், சாய்ந்தமருது நகர சபை சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக நடைமுறையில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகியவற்றை வட்டாரங்களாகப் பிரிப்பதற்காக இரண்டு மாதங்களுக்குள் தேசிய எல்லை நிர்ணயக் குழுவை நிறுவுமாறு உள்ளூராட்சி அமைச்சர் பணிக்கப்பட்டார்.
எல்லை நிர்ணயம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டவுடன், கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகிய இரண்டிற்கும் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.
JustNow || த.வெ.க. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநர்... JustNow || த.வெ.க. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநர்... உச்ச நீதிமன்றத்தை உடனடியாக நாட த.வெ.க முடிவு
#TVK | #TVKVijay | #Governor | #SupremeCourt | #Politics | #PolimerNews
#TVK | #TVKVijay | #Governor | #SupremeCourt | #Politics | #PolimerNews
குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை அவர் நேற்று (06) தன்னிடம் கையளித்ததாக குருநாகல் மேயர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்து குறிப்பிட்டுள்ளார்.
மாநகர சபைக்குள் நிலவும் முறையற்ற நிர்வாகம், மோசடி, ஊழல் மற்றும் வீண் விரயங்களைக் குறைக்க முடியாமையினால் தாம் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்ததாக பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாநகர சபையின் முதலாம் இலக்க கங்கோட தொகுதியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று இவர் மாநகர சபைக்குத் தெரிவாகியிருந்தார்.
அங்கீகரிக்கப்படாத வர்த்தக நடவடிக்கைகள், சட்டவிரோத கட்டுமானங்கள், முறையற்ற எரிபொருள் பயன்பாடு, முறையற்ற மேலதிக நேர கொடுப்பனவுகள், சேவைக்கு வருகை தந்துவிட்டு இடையில் வெளியேறுதல், நகரை சுத்தமாக பராமரிக்க முடியாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தான் பதவி விலகுவதாக பிரேமச்சந்திர தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் திடீரென புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு தரப்பினரும், தரக்கூடாது என மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின.
ஆட்சி அமைக்க உரிமை வழங்குமாறு விஜய் அளித்த கோரிக்கையில் "ஆளுநர் அர்லேக்கர்" திருப்தி இல்லை என தகவல் கிடைத்துள்ளது.
118 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் வாய் மொழியாக மட்டுமே கூறியதாகவும் அவர்களின் ஆதரவு கடிதத்தை விஜய் அளிக்கவில்லை எனவும் மேலும் கிடைத்த தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால் உண்மையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல என சில அரசியல் ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
✒️கார்த்திக் நாயகம்.
06.05.2026
ஆட்சி அமைக்க உரிமை வழங்குமாறு விஜய் அளித்த கோரிக்கையில் "ஆளுநர் அர்லேக்கர்" திருப்தி இல்லை என தகவல் கிடைத்துள்ளது.
118 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் வாய் மொழியாக மட்டுமே கூறியதாகவும் அவர்களின் ஆதரவு கடிதத்தை விஜய் அளிக்கவில்லை எனவும் மேலும் கிடைத்த தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால் உண்மையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல என சில அரசியல் ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
✒️கார்த்திக் நாயகம்.
06.05.2026
தற்போதைய சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி பி.அருகொட இன்று (05) தனது சேவைக்காலத்தை நிறைவு செய்கிறார்.
அதன்படி, லியனகம நாளை (06) முதல் சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Rep/OluvilMedia)
மின்சாரம் தாக்கியதில் ஒலுவிலைச் சேர்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு
ஒலுவில் - 06 ம் பிரிவைச் சேர்த்த மர்ஹும் லத்தீப் (வண்டிக்கார) அவர்களின் மகன் உசாமா எனும் 20 வயது இளைஞன் வேலைத்தளத்தின் மின்சார பயன்பாட்டின் போது மின்சாரம் தாக்கியதில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்.
தற்போது நிந்தவூர் வைத்தியசாலையில் உள்ள ஜனாஸாவின், நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.