Showing posts with label Judiciary. Show all posts

 



(பாறுக் ஷிஹான்)

கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத  வைத்தியசாலைகளுக்கான   வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்திற்கு மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆந் திகதி வரை   தடை உத்தரவினை  கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் பிறப்பித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன  விடயத்தை  தடுத்து நிறுத்துகின்ற வகையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் ரீட் மனு  மீதான விசாரணை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன்  முன்னிலையில் திங்கட்கிழமை  (17) மறு  விசாரணைக்காக  அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த நேர்முகப்பரீட்சை மற்றும்   நியமனத்தால் பாதிக்கப்பட்ட பிரதிவாதியான வைத்தியர்   சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் கிழக்கு மாகாண  பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர்  ஜெ. லியாகத் அலி உட்பட 14 பேர் கொண்ட   பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரிணிகளின் வாதப் பிரதிவாதங்களை அடுத்து இரு தரப்பினரின் எழுத்து மூல சமர்ப்பணத்தை செய்யுமாறும் பணிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பவர் மாதம் 8 ஆந் திகதி குறித்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் தொடர்பில் மீண்டும் நீடிக்கப்பட்ட   தடை  உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின் முதல் தர நீதவான் பதவிக்கான தகுதிகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, குறித்த பதவிக்கு நிறைவேற்றப்பட வேண்டிய 4 தகுதிகளை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கு செயற்பாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபட்டிருக்கும் சட்டத்தரணியாக இருத்தல், சட்டத்தரணியாகப் பதவிப் பிரமாணம் செய்து 3 வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலத்தைக் கொண்டுள்ள, உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது சட்ட ஆராய்ச்சி அதிகாரியாகப் பணியாற்றிய சட்டத்தரணியாக இருத்தல் ஆகியவை குறித்த தகுதிகள் ஆகும். 

அத்துடன் ஏதேனும் அமைச்சு, திணைக்களம், அரச கூட்டுத்தாபனம் அல்லது பிற அரச நிறுவனமொன்றில் 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் அக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் ஆஜரான சட்டத்தரணியாக இருத்தலும் குறித்த தகுதிகளில் அடங்கும். 

ஏதேனும் நிறுவனம், வங்கி அல்லது நிறுவனத்தில் 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் அக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் ஆஜரான சட்டத்தரணியாக இருத்தலும் நீதிச் சேவை இரண்டாம் தரத்தின் முதலாம் தர நீதவான் பதவிக்கான தகுதியாகும் என நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னர் குறித்த பதவிக்கு, சட்டத்தரணியாக 4 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சேவையாற்றி இருக்க வேண்டும் என்ற தகுதியே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சேவைக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கு இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



 


#Ismial_UvaizurRahman

மேல் நீதிமன்றின் புதிய நீதிபதிகள் 18 பேர், இன்று மாலை பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர். குறித்த நீதிபதிகளுக்கான சேவையாற்றும் நீதிமன்றங்களும்  இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.


திருகோணமலை - மட்டக்களப்பு குடியியல் மேல் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ றியாழ் அவர்களும், 


கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ ஜூட்சன் அவர்களும், 


யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கௌரவ றிஸ்வி அவர்களும், 


மட்டக்களப்பு - கல்முனை குடியியல் மேல் நீதிமன்ற  நீதிபதியாக கௌரவ கஜநிதிபாலன் அவர்களும்,


வவுனியா  மேல்நீதிமன்ற  நீதிபதியாக கௌரவ ஆனந்தராஜா (வலன்) அவர்களும்,நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

 


மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதிக்கு மூதூர் நீதிமன்றத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், பொலிஸாரினால் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


மூதூர் நீதிமன்றத்தில் சுமார் 4 அரை வருடங்களாக கடமையாற்றிய தஸ்னீம் பௌஸான் நாளை (15) முதல் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அவருக்காக இந்தப் பிரியாவிடை நிகழ்வு மூதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


www.ceylon24.com
18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.நீதிச்சேவை ஆணைக்குழுவினால், தேர்வுகளுக்கு அமைவாக,இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். 

கல்முனை கெளரவ மாவட்ட நீதிபதி A.M.M றியால், பருத்தித்துறை கெளரவ மாவட்ட நீதிபதி ஜே. கஜநிதிபாலன், யாழ்ப்பாணம் கெளரவ நீதிவான் A.A.ஆனந்தராஜா, சாவகச்சேரி கெளரவ மாவட்ட நீதிபதி A.யூட்சன் மற்றும் வாழைச்சேனை கெளரவ நீதிவான் M.I.M றிஷ்வி ஆகியோர் உட்பட 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்கள். நியமனத்தின் பின்பு ஜாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுடன் எடுத்துக் கொண்ட படம். 

 


நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் தீர்க்க வேண்டும் என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது. 


இந்த உத்தரவு அனைத்து மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள் என அனைவருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


அண்மைக் காலங்களில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவற்றின் தீர்வுகளை தாமதமின்றி வழங்குமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 


மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அகற்றுவதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. 


உள்ளூர் ரீதியான விடயங்களை ஆணைக்குழு கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ் விடயத்தில் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரிப்பதும் தீர்ப்பதும் அனைத்து நீதிமன்ற ஊழியர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு பொறுப்பாகும். மேலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறும் எந்தவொரு ஊழியருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. 

(Tamilan)

 

நீதித்துறை இடமாற்றங்களில் அரசியலைக் கொண்டுவர வேண்டாம்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று. நாடாளுமன்றில்  தெரிவித்தார்.

அரசாங்கம் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கையாளும் நீதிபதிகள் குறிவைக்கப்படுவதாக அவர் கூறினார்.

 இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் வசந்த சமரசிங்க நிராகரித்தார், ராஜபக்சேவை பாசாங்குத்தனம் என்று குற்றம் சாட்டினார்.

 


தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டில் மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நீதிச் சேவை ஆணைக்குழு பணிஇடைநீக்கம் செய்துள்ளது.

அதற்கமைய, இந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட மொத்த நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.

பிரத்தியேக விசாரணையைத் தொடர்ந்து, கம்பஹாவில் பணியாற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி, திறமையற்ற செயல்திறன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓய்வு பெற உத்தரவிடப்பட்டுள்ளார்

Source/Vadanthan,Hiru News 

 



ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு தடவை நீதித்துறை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களை சோதனையிடுவதற்கு தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக மேல் நீதிமன்ற வளாகங்களில் சோதனைகளை மேற்கொள்ள இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் வௌியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறையாக துப்பரவு செய்யப்படாமையால் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் தகவல் வௌியாகியுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களை முறையாக பராமரிப்பது அதிகாரிகளின் கடமையென நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் தெரிவித்துள்ளார்.

 மஸாஹிமாவுக்கு கிடைத்த நீதி 


தர்மச்சக்கரம் வரையப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்

என்ற பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது. - ஹஸலக பொலிஸ் OIC சொந்த நிதியில் நஷ்டயீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு.


ஈஸ்டர் தாக்குதலைத்தொடர்ந்து இலங்கை இஸ்லாமியர்கள் பலரும் அநியாயமாக கைது செய்யப்பட்ட நிலையில் தனது தர்மசக்கர புகைப்படம் கொண்ட ஆடை (கப்டான்) அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மஹியங்கனை, ஹஸலகவைச்சேர்ந்த சகோதரி மஸாஹிமா அநியாயமாகக்கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார். உண்மையில் கப்பலின் சுக்கான் கொண்ட புகைப்படம் வரையப்பட்ட ஆடையைத் தான் அவர் அணிந்தார்.  


இந்நிலையில், பின்நாட்களில் விடுதலையான சகோதரி மஸாஹிமா தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாகக்கூறி உயர் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வெளியானது. 


நீதியரசர்களான யசந்த கொடேகொட, குமுதினி விக்கிரமசிங்க, ஷிரான் கொனேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வெளியிட்டது. 


அதற்கமைய, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் விதி 12(1), 13(1), 13(2) மஸாஹிமா விவகாரத்தில் மீறப்பட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.


அத்துடன், அப்போதைய ஹஸலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி OIC ஜெ.பி ஷந்தன நிஷாந்த தனது சொந்த நிதியிலிருந்து 30 ஆயிரம் ரூபா நஷ்டயீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், வழக்கு செலவுகளை (Cost) அரசு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கியது. 


4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற குறித்த வழக்கில் சட்டத்தரணி பாத்திமா நுஷ்ராவின் வழிகாட்டலில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவமன்ன, சட்டத்தரணி ஹரினி ஜயவர்தன, சட்டத்தரணி இர்பானா இம்ரான் ஆகியோர் பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் ஆஜராகினர். 


நீதிக்காக போராடிய சகோதரி மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது. (C)


 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதியரசர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.



அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்தி மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி பிராங்க் குணவர்தன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்படுவதற்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி கிடைத்துள்ளது.



இந்த நியமனங்கள், பிரதம  நீதியரசர் முர்து பெர்ணான்டோவின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்மொழியப்பட்டன.

 


சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான அரசியலமைப்புப் பேரவை, சமீபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த நியமனங்களுக்கு தனது அனுமதியை வழங்கியது.

 


சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 


இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக நாளை கூடவிருக்கும் நிலையில், இன்று இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது. 

2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவரும் அந்தந்தச் சபை எல்லைப் பரப்புக்குள் தம்மை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்குத் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புரிமைகளையும் இரத்துச் செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுவைப் பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடியதாக இடைக்காலத் தடை விதிக்கும் படியும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

இந்த இரு மனுக்களும் இன்று நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

வழக்குத் தாக்கல் செய்தவர் சார்பில் இன்று சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ முன்னிலையாகி வழக்கின் விபரத்தை எடுத்துரைப்பார். 

சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வான இரண்டு உறுப்பினர்கள் சார்பிலும் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-யாழ். நிருபர் பிரதீபன்-



கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக அறை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



முன்னாள் நீதவானுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (19) நீதிமன்றத்திற்கு வந்து, தனது அலுவலக அறையில் உள்ள தனிப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவரை, குறித்த அலுவலக அறைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் கூறினர்.


தற்போது, கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

\

(Tamilan News)

 


கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதியும் இன்று (27) விசாரணையிலிருந்து விலகினார். 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன, இன்று காலை வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

பின்னர் வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இதன்போது தானும் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவும் அறிவித்துள்ளார். 

அதன்படி, வழக்குக்கு பொருத்தமான நீதிபதியை நியமிப்பதற்காக, மே 21 ஆம் திகதி கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

 

#Rep/புவனேந்திரன்.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் நீதிபதித்தம்பதியினர் என்ற பெருமையுடன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது, முஸ்லிம் பெண் நீதிபதியாக மௌலவியா எம்.எம்.எஃப்.ஷிஹாரா ஹிபதுல்லா


காத்தான்குடியைப் பிறப்பிடமாகக்கொண்ட எம்.எம்.எஃப்.ஷிஹாரா ஹிபதுல்லா பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடப்பட்டதாரியாவார். இவர் ஓர் மௌலவியா என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மொனறாகலை மாவட்ட நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.எஸ்.ஹிபத்துல்லாஹ்வின் பாரியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


இதன் மூலம் இலங்கையின் முதலாவது முஸ்லிம் நீதிபதித்தம்பதியினர் என்ற பெருமைக்குரியவர்களாகின்றனர்.


இவரது தகைமைகள் 

Masters in law (LLM)

Masters in Labor relation and Human resources management(MLHRM)

Diploma in Forensic Medicine ( Col )

Higer national Diploma in IT

Diploma in Sinhala

 


மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.


அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ. கே. எஸ். யு.பிரேமசந்திர, கே. பிரியந்த பெர்னாண்டோ ,ஏ. பிரேமசங்கர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.



கடந்த 18.09.2024 முதல்  அமுலுக்கு வரும் வகையில், மீஉயர் நீதிமன்ற ஓய்வு நிலை  நீதியரசர் சித்ரசிறி மற்றும் மேல் நீதிமன்ற ஓய்வு நிலை நீதிபதி திருமதி.எஸ்.நந்தசேகரன், ஆகியோர்  (Administartive Appeals Tribunal) நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக நீதிச் சேவை ஆணைக் குழுவினால் நியமிக்கப்படுள்ளனர் 

2002 ஆம் ஆண்டின் 04 ஆம்   நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயச் சட்டத்தின் பிரிவு 2 இன் விதிகளின் மூலம் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் நீதிச் சேவை ஆணைக்குழு, கட்டுரையின் கீழ் நிறுவப்பட்ட நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக இவர்கள் தற்சமயம்  செயற்படுகின்றனர்





 


-றிப்தி அலி-


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று (06) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

 

இந்த தீர்ப்பினை அடுத்து அமைச்சர் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கட்சியின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.

இந்த நீக்கலுக்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

 

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் அக்கட்சியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இந்த வழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது. 

 

-றிப்தி அலி-


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.