இலங்கையின் மீ உயர்மன்ற நீதியரசரான எஸ்.துரைராஜா அவர்கள் ஓய்வுக்கு வந்திருக்கின்றார்.
இவர் மீது மிகுந்த மரியாதை எனக்குமிருந்தது.
இலங்கை வானொலியில் அன்று நான் பணிபுரிகின்ற போது, சட்டமும் நாமும் என்ற வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் வருவதுண்டு.,இவருடன் பங்கேற்க வருபவர் சிரேஸ்ட சட்டத்தரணி தம்பு சேர் அவர்கள். சட்டம் படிக்கவே கொழும்பு சென்ற எனக்கு, இந்த நிகழ்சி அட்சதை துாவியது.கா
இலங்கைத் திறந்த பல்கலையில் சட்டம் பயின்று இறுதி ஆண்டுப் பரீட்சைக்கு முன்னதான விசேட வழிகாட்டல் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதில் வளவாளராக துரைராஜகா சேர் கலந்திருந்தார். சட்டத்தில் பட்டம் பெற்ற பின்னர், அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று, எடுத்தியம்பினார்.
அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது. சட்டடா அதிபர் திணைக்களத்தில்.. இலங்கை வானொலிப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட் வழக்கு அது. இலங்கை வானொலி அரச நிறுவனம் என்பதால், சட்டமா அதிபரும் அதில் ஒரு பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த வானொலிப் பணிப்பாளரின் வேண்டுதலின் பேரில் சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனைகளைப் பெறுவதற்காக, அங்கு சென்றோம். என்னையும் என்னுடன் வந்தவருக்கும் சட்ட ஆலோசனைகளை இன்முகத்துடன் வழங்கினார் துரைராஜா சேர்.
2010 காலப்பகுதியில் .லங்கை வானொலியை விட்டு விலகி சட்டத்தரணியதக பரிமாணம் எடுக்கும் தருணத்தில், எமக்கான தொடர்புகள் அரிதானது நானும் கிழக்கு மாகாண வழக்காடு மன்றங்களில், பிவேசித்தேன். சேர் நீதியரசாராக பதவி உயர்வு பெற்றார்.
துரைராஜா புஸ்ஸெல்லாவாவில் உள்ள சரஸ்வதி மகா வித்தியாலயத்திலும், கண்டியில் உள்ள புனித அந்தோணியர் கல்லூரியிலும் கல்வி பயின்றார்
அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.மேலும் அவர் தடயவியல் மருத்துவம், வணிக தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி உபகரணங்கள் ஆகியவற்றில் பட்டயங்களைப் பெற்றுள்ளார்
சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு நீதியரசராக உரிய கல்வித் தகமைகள் மற்றும் சேவை மூப்பு ஆகியவற்றின் அடிப்படையிவல் நியமிக்கப்பட்ட அவர், 9 ஜனவரி 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.
பிரதம நீதியரசர் நாட்டில் இல்லாத சமயத்தில், பதில் பிரதம நீதியரசாராகவும் பணி புரிந்தார்.
இலங்கையின் 100 வரு்டங்களைத் தாண்டிய மலையக சமூகத்தில் இருந்து வந்த ஒருவர் பதில் பிரதம நீதியரசராகவும்> நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பிளராகவும் வகிபாகம் செலுத்திய வரலாறு துரைராஜா சேருக்கு மாத்திரம் உரியது. இவரது மகுடத்தில் அதுவொரு மாணிக்கமாகும்.
இவர் வழங்கிய தீர்ப்பு ஒன்றிளை அண்மையில் கல்முணை குடியியல் மேன்முறையீட்டு மன்றில் விளம்பி எனது சமர்ப்பணத்தை செய்திருந்தேன் .SC Appeal 67/2021 என்பதே அந்த வழக்காகும்.
"சிறப்பான பணிக்கு நன்றிகள்!. நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் சில நேரங்களில் காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டாலும், அவரது சட்ட அறிவையும் ஆளுமையையும் எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. "Hulftsdorp" சமூகத்தில் அவரது அந்த நேரடி அணுகுமுறை எப்போதும் பேசப்படும் ஒரு விடயமாகும் என்பதாக சிரேஸ்ட வழக்குரைஞர்கள் துரைராஜா சேர் அவர்கள் பற்றி சொல்லக்கூடிய செல்நெறியாகும்.
நீதித்துறையில் நீங்கள் ஆற்றிய அளப்பரிய சேவை என்றும் நினைவுகூரப்படும். உங்களது அந்த சட்டப் பாரம்பரியத்தை உங்களது புதல்வரும் இத்துறையில் தொடர்வது மகிழ்ச்சிக்குரியது.
ஐயா, உங்களுக்கு இனிய ஓய்வுக்கால வாழ்த்துகள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் “மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு” யாழில் ஆரம்பமாகியுள்ளது.
யழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் (24.01.2026) காலை இந்த மாநாடு ஆரம்பித்து வைககப்பட்டுள்ளது.
சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் இரண்டாவது மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியிருந்தது
அதன் தொடர்ச்சியாக, சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து மூன்றாவது முறையாக இம்முறை 2026ஆம் ஆண்டிற்கான மாநாட்டை இன்றும் நாளையும் நடத்துகின்றது.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமான இம்மாநாட்டின் முதல் நாள் அமர்வுகளில், நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தததுடன் உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரம்பிள்ளை துரைராஜா மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் ரோஹித்த அபேசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் சட்டத்துறையின் தலைவர் கோசலை மதன், இவர்களுடன் சட்டத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங
நாடு முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கும் நீதித்துறை அதிகாரிகளின் வருடாந்திர மாநாடு 2025 இன்று தொடங்கியது.
இந்த ஆண்டு மாநாடு, 'டிஜிட்டல் சகாப்தத்தில் நீதித்துறை செயல்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல்' என்ற சரியான நேரத்தில் கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது, இது நாடு பேரழிவைத் தொடர்ந்து மீண்டும் கட்டியெழுப்பி மாற்றியமைக்கும்போது அவசரமாகப் பொருத்தமான ஒரு தலைப்பாகும். தித்வா சூறாவளியின் பின்விளைவுகளை சமாளிக்க சமூகங்களும் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படுவதால், நீதி அமைப்பில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இலங்கையின் நீதித்துறைத் தலைமையின் அர்ப்பணிப்பு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியமானது.
அசுசா குபோடா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் முக்கிய வள நபர்களாக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய சந்திரசூட்; சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஐடன் சூ; மற்றும் CIABOC இன் இயக்குநர் ஜெனரல் நீதிபதி ரங்கா திசாநாயக்க ஆகியோர் அடங்குவர்.
இன்று காலை தொடக்க விழா நடைபெற்றது, இதில் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன; நீதித்துறை சேவை ஆணைய உறுப்பினர்கள் நீதிபதி மஹிந்த சமயவர்தன மற்றும் நீதிபதி எஸ். துரைராஜா; இலங்கையில் கனடா உயர் ஸ்தானிகராலய பொறுப்பாளர்கள், கிரில் இயோர்டனோவ் மற்றும் இலங்கையில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் முக்கிய வள நபர்களாக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய சந்திரசூட்; சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஐடன் சூ; மற்றும் CIABOC இன் இயக்குநர் ஜெனரல் நீதிபதி ரங்கா திசாநாயக்க ஆகியோர் அடங்குவர்.
நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின் முதல் தர நீதவான் பதவிக்கான தகுதிகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பதவிக்கு நிறைவேற்றப்பட வேண்டிய 4 தகுதிகளை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கு செயற்பாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபட்டிருக்கும் சட்டத்தரணியாக இருத்தல், சட்டத்தரணியாகப் பதவிப் பிரமாணம் செய்து 3 வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலத்தைக் கொண்டுள்ள, உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது சட்ட ஆராய்ச்சி அதிகாரியாகப் பணியாற்றிய சட்டத்தரணியாக இருத்தல் ஆகியவை குறித்த தகுதிகள் ஆகும்.
அத்துடன் ஏதேனும் அமைச்சு, திணைக்களம், அரச கூட்டுத்தாபனம் அல்லது பிற அரச நிறுவனமொன்றில் 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் அக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் ஆஜரான சட்டத்தரணியாக இருத்தலும் குறித்த தகுதிகளில் அடங்கும்.
ஏதேனும் நிறுவனம், வங்கி அல்லது நிறுவனத்தில் 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் அக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் ஆஜரான சட்டத்தரணியாக இருத்தலும் நீதிச் சேவை இரண்டாம் தரத்தின் முதலாம் தர நீதவான் பதவிக்கான தகுதியாகும் என நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் குறித்த பதவிக்கு, சட்டத்தரணியாக 4 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சேவையாற்றி இருக்க வேண்டும் என்ற தகுதியே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சேவைக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கு இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#Ismial_UvaizurRahman
மேல் நீதிமன்றின் புதிய நீதிபதிகள் 18 பேர், இன்று மாலை பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர். குறித்த நீதிபதிகளுக்கான சேவையாற்றும் நீதிமன்றங்களும் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை - மட்டக்களப்பு குடியியல் மேல் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ றியாழ் அவர்களும்,
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ ஜூட்சன் அவர்களும்,
யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கௌரவ றிஸ்வி அவர்களும்,
மட்டக்களப்பு - கல்முனை குடியியல் மேல் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ கஜநிதிபாலன் அவர்களும்,
வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதியாக கௌரவ ஆனந்தராஜா (வலன்) அவர்களும்,நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்
மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதிக்கு மூதூர் நீதிமன்றத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், பொலிஸாரினால் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மூதூர் நீதிமன்றத்தில் சுமார் 4 அரை வருடங்களாக கடமையாற்றிய தஸ்னீம் பௌஸான் நாளை (15) முதல் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அவருக்காக இந்தப் பிரியாவிடை நிகழ்வு மூதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் தீர்க்க வேண்டும் என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு அனைத்து மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள் என அனைவருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவற்றின் தீர்வுகளை தாமதமின்றி வழங்குமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அகற்றுவதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
உள்ளூர் ரீதியான விடயங்களை ஆணைக்குழு கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ் விடயத்தில் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரிப்பதும் தீர்ப்பதும் அனைத்து நீதிமன்ற ஊழியர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு பொறுப்பாகும். மேலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறும் எந்தவொரு ஊழியருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
(Tamilan)
நீதித்துறை இடமாற்றங்களில் அரசியலைக் கொண்டுவர வேண்டாம்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று. நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அரசாங்கம் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கையாளும் நீதிபதிகள் குறிவைக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் வசந்த சமரசிங்க நிராகரித்தார், ராஜபக்சேவை பாசாங்குத்தனம் என்று குற்றம் சாட்டினார்.
தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டில் மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நீதிச் சேவை ஆணைக்குழு பணிஇடைநீக்கம் செய்துள்ளது.
அதற்கமைய, இந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட மொத்த நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.
பிரத்தியேக விசாரணையைத் தொடர்ந்து, கம்பஹாவில் பணியாற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி, திறமையற்ற செயல்திறன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓய்வு பெற உத்தரவிடப்பட்டுள்ளார்
Source/Vadanthan,Hiru News
ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு தடவை நீதித்துறை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களை சோதனையிடுவதற்கு தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக மேல் நீதிமன்ற வளாகங்களில் சோதனைகளை மேற்கொள்ள இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ இல்லங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் வௌியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையாக துப்பரவு செய்யப்படாமையால் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் தகவல் வௌியாகியுள்ளது.
உத்தியோகபூர்வ இல்லங்களை முறையாக பராமரிப்பது அதிகாரிகளின் கடமையென நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் தெரிவித்துள்ளார்.
மஸாஹிமாவுக்கு கிடைத்த நீதி
தர்மச்சக்கரம் வரையப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்
என்ற பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது. - ஹஸலக பொலிஸ் OIC சொந்த நிதியில் நஷ்டயீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஈஸ்டர் தாக்குதலைத்தொடர்ந்து இலங்கை இஸ்லாமியர்கள் பலரும் அநியாயமாக கைது செய்யப்பட்ட நிலையில் தனது தர்மசக்கர புகைப்படம் கொண்ட ஆடை (கப்டான்) அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மஹியங்கனை, ஹஸலகவைச்சேர்ந்த சகோதரி மஸாஹிமா அநியாயமாகக்கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார். உண்மையில் கப்பலின் சுக்கான் கொண்ட புகைப்படம் வரையப்பட்ட ஆடையைத் தான் அவர் அணிந்தார்.
இந்நிலையில், பின்நாட்களில் விடுதலையான சகோதரி மஸாஹிமா தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாகக்கூறி உயர் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வெளியானது.
நீதியரசர்களான யசந்த கொடேகொட, குமுதினி விக்கிரமசிங்க, ஷிரான் கொனேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வெளியிட்டது.
அதற்கமைய, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் விதி 12(1), 13(1), 13(2) மஸாஹிமா விவகாரத்தில் மீறப்பட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.
அத்துடன், அப்போதைய ஹஸலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி OIC ஜெ.பி ஷந்தன நிஷாந்த தனது சொந்த நிதியிலிருந்து 30 ஆயிரம் ரூபா நஷ்டயீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், வழக்கு செலவுகளை (Cost) அரசு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கியது.
4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற குறித்த வழக்கில் சட்டத்தரணி பாத்திமா நுஷ்ராவின் வழிகாட்டலில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவமன்ன, சட்டத்தரணி ஹரினி ஜயவர்தன, சட்டத்தரணி இர்பானா இம்ரான் ஆகியோர் பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் ஆஜராகினர்.
நீதிக்காக போராடிய சகோதரி மஸாஹிமாவுக்கு நீதி கிடைத்தது. (C)
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதியரசர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்தி மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி பிராங்க் குணவர்தன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்படுவதற்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
இந்த நியமனங்கள், பிரதம நீதியரசர் முர்து பெர்ணான்டோவின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்மொழியப்பட்டன.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான அரசியலமைப்புப் பேரவை, சமீபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த நியமனங்களுக்கு தனது அனுமதியை வழங்கியது.