Showing posts with label Judiciary. Show all posts

நீதித்துறை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டார் சட்டத்தரணி எம்.என். முஹம்மது ஹிஷாம்"


நூருல் ஹுதா உமர் 


சட்டத் துறையில் தனது கல்வி மற்றும் தொழில்முறை அர்ப்பணிப்பின் மூலம் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்து வந்த சட்டத்தரணி எம்.என். முஹம்மது ஹிஷாம் அவர்கள், அண்மையில் நீதித்துறை அதிகாரி (Magistrate) பதவிக்குத் தெரிவாகியுள்ளார். 


கௌரவ எம்.என். முஹம்மது ஹிஷாம் அவர்கள், எம்.எல்.எம். நசீர் மற்றும் சித்தி மர்லியா ஆகியோரின் புதல்வராவார். இவர் மாவனல்லை தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராக இருந்து தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.


சட்டத் துறையில் உயர்ந்த இலக்குடன் பயணித்த அவர், 2017 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்து வழக்கறிஞராகத் தகுதி பெற்றார். அதன் பின்னர் மாவனல்லை, கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களிலும் வழக்கறிஞராகப் பணியாற்றி பின்னர் சம்மாந்துறை, அம்பாறை பிரதேசங்களிலும் பணியாற்றி சட்டத் துறையில் பெறுமதிமிக்க அனுபவங்களைப் பெற்றார்.


தற்போது சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினராகவும் செயற்பட்டு வந்த அவர், தனது தொழில்முறைப் பணிகளுடன் கல்விப் பயணத்தையும் தொடர்ந்தார். அதன் பயனாக, ஐக்கிய இராச்சியத்தின் Buckinghamshire New University பல்கலைக்கழகத்தில் சட்டமுதுமானி (LL.M.) பட்டத்தைப் பெற்று தனது கல்வித் தகைமையை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். இவர் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்புலமை கொண்டவராவார் 


இவர் சம்மாந்துறையைச் சேர்ந்த சட்டத்தரணி திருமதி யூ.எல். ஷிபானா அவர்களைத் திருமணம் செய்து கொண்டு, சம்மாந்துறை சட்டத்தரணி சங்கத்தில் தனது சட்டப் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். தற்போது நீதித்துறை அதிகாரி (Magistrate) பதவிக்குத் தெரிவாகியுள்ளமை அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி, கல்விச் சாதனை மற்றும் தொழில்முறை நேர்மைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.


அவரது இந்த மகத்தான சாதனையை முன்னிட்டு சட்டத்தரணிகள், நீதித்துறை சார்ந்தவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்திலிந்து நீதித்துறை அதிகாரியாக தெரிவான இரண்டாமவர் எனும் பெருமையை இவர் பெறுகிறார். 


சமூகத்தின் இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழும் இந்தச் சாதனை, அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் பயணிக்கும் போது உயரிய இலக்குகளை அடைய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 அரசியலமைப்பு உத்தரவாதங்கள், நீதித்துறைப் பணிக்காலங்களைத் தாமதப்படுத்துதல் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்தல்.


ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு 63 வயதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு 65 வயதாகவும் ஓய்வு பெறும் வயதை அரசியலமைப்புத் தெளிவாக நிர்ணயித்துள்ளது என்றும், இது புதிய நீதித்துறைத் திறமையாளர்களின் வருகையுடன் அனுபவத்தைச் சமநிலைப்படுத்தும் ஒரு திட்டமிட்ட வடிவமைப்பு என்றும் வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். வலுவான அரசியலமைப்பு ரீதியான நியாயம் இல்லாமல் இந்த விதிகளை மாற்றுவது, பெரும் முறைகேடாகவும், அரசுக்கும் அதன் குடிமக்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீண்டும் எழுதுவதாகவும் அமையும் என்று அவர்கள் வாதிட்டனர்.


பதவிக்காலத்தை நீட்டிப்பது, காலிப் பணியிடங்களை முடக்குவதன் மூலமும், நீண்ட காலமாகப் பதவி உயர்வு பெற விரும்பிய அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகளை மறுப்பதன் மூலமும் நீதித்துறைச் சேவைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்தனர். இது, பணிக்கால முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தும், மன உறுதியைக் குலைக்கும் மற்றும் பொதுச் சேவையில் நியாயமான எதிர்பார்ப்பு என்ற கொள்கையை மீறும் என்றும் அவர்கள் கூறினர்.


நீதிமன்றப் பதவிக்காலத்தில் நிர்வாகத் தலையீடு குறித்த எந்தவொரு கருத்தும் பாரபட்சமற்ற நீதியின் மீதான நம்பிக்கையைச் சேதப்படுத்தும் என்று குறிப்பிட்ட அந்தச் சங்கம், பொதுமக்களின் நம்பிக்கை சிதைந்துவிடும் என்றும் எச்சரித்தது. நீட்டிக்கப்பட்ட நீதிபதிகள், தங்களின் சேவைக்காலத்தை நீட்டித்த அதே சட்டங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நேரிடலாம் என்றும், இது நலன் முரண்பாடுகளை உருவாக்கி, சட்டப்பூர்வத்தன்மையைச் சீர்குலைக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.


தேவை என்ற வாதங்களை நிராகரித்த வழக்கறிஞர்கள், இலங்கையில் தகுதிவாய்ந்த நீதித்துறை அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை இல்லை என்று வலியுறுத்தினர். உயர் நீதிமன்றங்கள், நீதித்துறை சேவை, சட்டத்துறைத் தலைவர் திணைக்களம் மற்றும் வழக்கறிஞர் சங்கம் ஆகியவற்றிலிருந்து திறமையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றும், இவை அனைத்தும் திறமையான வேட்பாளர்களின் களஞ்சியமாக விளங்குகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.


மேலும், உயர் நீதிமன்றங்களில் தற்போதுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பத் தவறிய அரசாங்கத்தின் செயலை, அரசியலமைப்பு கடமையிலிருந்து தவறிய செயல் என்று அவர்கள் விமர்சித்தனர். இந்தத் தோல்வி, ஏற்கனவே நீதிமன்றங்களுக்குச் சுமையை ஏற்படுத்தியுள்ளது, விசாரணைகளைத் தாமதப்படுத்தியுள்ளது, மேலும் விளக்கமறியலில் உள்ள குற்றவாளிகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான தீர்ப்புகளுக்காகக் காத்திருக்கும் குடிமக்கள் உட்பட வழக்காடுபவர்களுக்கு உரிய நேரத்தில் நீதியை மறுத்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.


முன்மொழியப்பட்ட மாற்றத்திற்கு எந்தவொரு நியாயமான காரணமும் கூறப்படவில்லை என்றும், இது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்பு ரீதியாகச் சந்தேகத்திற்குரியது என்றும் அந்தச் சங்கம் வலியுறுத்தியது. நீதித்துறையின் பதவிக்காலம் நிர்வாகத்தின் விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்; வெளிப்படையான நியாயப்படுத்தல் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் நீதித்துறையின் சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் என்றும் எச்சரித்தனர்.


இறுதியாக, அதிகாரப் பிரிவினையின் பரந்த அரசியலமைப்பு அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்; நீதித்துறையின் பதவிக்காலத்தில் நிர்வாகம் தலையிட அனுமதிப்பது ஜனநாயக ஆட்சியின் மையத்தையே தாக்குகிறது என்றும், மற்ற நாடுகளில் காணப்பட்ட வரலாற்றுத் தோல்விகளை மீண்டும் நிகழ்த்தும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.


தங்கள் மேல்முறையீட்டில், வழக்கறிஞர்கள் குடியரசுத் தலைவரிடம் நான்கு தெளிவான கோரிக்கைகளை முன்வைத்தனர்: ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், உயர் நீதிமன்றங்களில் தற்போதுள்ள காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நீதித்துறை சுதந்திரத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட வேண்டும், மற்றும் எதிர்கால சீர்திருத்தங்களில் சட்டத் தொழில் மற்றும் பிற பங்குதாரர்களை வெளிப்படையாக ஈடுபடுத்த வேண்டும்.

 


தற்சமயம் பதவியில் இருக்கும், மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனது உத்தியோகபூர்வ கடமைகளின் போது எடுக்கப்பட்ட நீதித்துறை முடிவுகள் தொடர்பாக வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, மூன்று சிரேஷ்ட சட்ட வல்லுநர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். 


இத்தகைய நடவடிக்கை நீதித்துறை சுதந்திரத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.



இந்த மனுவை ஜனாதிபதி சட்டத்தரணி உதித எகலஹேவ, ஜனாதிபதி  சட்டத்தரணி ஃபர்மான் காசிம் மற்றும் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் சுகத் கல்தேரா ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.


எதிர்மனுதாரர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க, சட்டமா அதிபர் மற்றும் அவிசவெல்ல உயர் நீதிமன்ற நீதிபதி சஹான மாபா பண்டார ஆவர்.


இந்த விவகாரம் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த கே. பெர்னாண்டோ ஆகியோர் முன்பாக அழைக்கப்பட்டபோது, ​​மனுவின் மீதான இறுதித் தீர்மானம் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்ற அறிவித்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தும், நீதிபதியின் வருகையைக் கட்டாயப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளைத் தடுத்தும் நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. ஜூன் 12 அன்று ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் அறிவிப்புகளையும் பிறப்பித்தது.


மனுவின்படி, உயர் நீதிமன்ற நீதிபதி மாபா பண்டாரா ஒரு உயர் நீதிமன்ற வழக்கு தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார். நுகேகொட மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியபோது அவர் பிறப்பித்த நீதித்துறை உத்தரவுகள் குறித்து நீதிபதியிடம் கேள்வி கேட்பதே அந்த அழைப்பாணையின் நோக்கம் என்று நம்புவதற்குத் தங்களிடம் நம்பகமான காரணங்கள் இருப்பதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.



சாட்சிகளின் அசல் பட்டியலில் நீதிபதி மாபா பண்டாராவின் பெயர் சேர்க்கப்படவில்லை என்றும், ஆனால் பின்னர் மார்ச் 2026-ல் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் சாட்சிகள் பட்டியலில் அவர் நுவகொட மாவட்ட நீதிபதியாக அடையாளம் காணப்பட்டு சேர்க்கப்பட்டார் என்றும் மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.



நீதித்துறை அதிகாரிகள் தங்களது நீதித்துறைச் செயல்கள் தொடர்பாகப் பாதுகாப்புரிமை பெற்றுள்ளனர் என்றும், நீதிபதிகளால் எடுக்கப்பட்ட முடிவுகளைச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மேல்முறையீட்டு அல்லது மறுஆய்வு நடைமுறைகள் மூலம் மட்டுமே சவால் செய்ய முடியும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். நீதித்துறைத் தீர்மானங்கள், மூல அதிகார வரம்பைக் கொண்ட மற்றொரு நீதிமன்றத்தின் முன் துணை ஆய்வுக்கு உட்படுத்தப்படக் கூடாது என்று மனு வாதிடுகிறது.


நீதிபதிகள் விசாரிக்கும் வழக்குகளில் அவர்களின் வாதம், முறைமை அல்லது நீதித்துறை விவேகத்தைப் பயன்படுத்தியது குறித்து அவர்களை வரவழைத்து கேள்வி கேட்பதற்கு அனுமதிப்பது, நீதித்துறை சுதந்திரத்தின் மீது ஒரு அச்சமூட்டும் விளைவை ஏற்படுத்துவதோடு, நீதி நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் குலைத்துவிடும் என்று மனுதாரர்கள் எச்சரிக்கின்றனர்.


மனுதாரர்களுக்காக, சனத் விஜேவர்தன அசோசியேட்ஸ் நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில், டாக்டர் ரொமேஷ் டி சில்வா பி.சி., அவருடன் இக்ராம் முகமது பி.சி., மனோகரா டி சில்வா பி.சி., ரோகன் சஹபந்து பி.சி., சஞ்சீவ ஜெயவர்தன பி.சி., சலியா பியரிஸ் பி.சி., என்.ஆர். சிவேந்திரன், நிரன் அங்கேடெல் மற்றும் பசிந்து பண்டார ஆகியோர் ஆஜரானார்கள்.

 


அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான்  அவர்களை நீதிச்சேவை ஆணைக்குழு 2026.5.22 ந் திகதி வெள்ளிக்கிழமை முதல் இடை நிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல்  நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இவருக்கு எதிரான, ஒழுக்காற்று விசாரணைகள் நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் .இந்த ஆண்டும் முன்னெடுத்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

 


#வாழ்த்துக்கள் மேல் நீதிமன்ற நீதிபதி தர்மரெத்தினம் கருணாகரன் ஐயா. 


அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதி எனும் பெருமை கொள்கின்றார்  திருவாளர் தர்மரெத்தினம் கருணாகரன் அவர்கள்.


(கட்டுரையாளர்.இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)


இலங்கையின் மீ உயர்மன்ற நீதியரசரான எஸ்.துரைராஜா அவர்கள் ஓய்வுக்கு  வந்திருக்கின்றார்.

இவர் மீது மிகுந்த மரியாதை எனக்குமிருந்தது.

 இலங்கை வானொலியில் அன்று நான் பணிபுரிகின்ற போது, சட்டமும் நாமும் என்ற வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் வருவதுண்டு.,இவருடன் பங்கேற்க வருபவர் சிரேஸ்ட சட்டத்தரணி தம்பு சேர் அவர்கள். சட்டம் படிக்கவே கொழும்பு சென்ற எனக்கு, இந்த நிகழ்சி அட்சதை துாவியது.கா

இலங்கைத் திறந்த பல்கலையில் சட்டம் பயின்று இறுதி ஆண்டுப் பரீட்சைக்கு முன்னதான விசேட வழிகாட்டல் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதில் வளவாளராக துரைராஜகா சேர் கலந்திருந்தார். சட்டத்தில் பட்டம் பெற்ற பின்னர், அடுத்த கட்டமாக  என்ன செய்யலாம் என்று, எடுத்தியம்பினார்.

அடுத்த  சந்திப்பு  நிகழ்ந்தது. சட்டடா அதிபர் திணைக்களத்தில்.. இலங்கை வானொலிப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட் வழக்கு அது. இலங்கை வானொலி அரச நிறுவனம்  என்பதால், சட்டமா அதிபரும் அதில் ஒரு பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த வானொலிப் பணிப்பாளரின் வேண்டுதலின் பேரில் சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனைகளைப் பெறுவதற்காக, அங்கு சென்றோம். என்னையும் என்னுடன் வந்தவருக்கும்  சட்ட ஆலோசனைகளை இன்முகத்துடன் வழங்கினார் துரைராஜா சேர். 

2010 காலப்பகுதியில் .லங்கை வானொலியை விட்டு விலகி சட்டத்தரணியதக பரிமாணம் எடுக்கும் தருணத்தில், எமக்கான தொடர்புகள் அரிதானது நானும் கிழக்கு மாகாண வழக்காடு மன்றங்களில், பிவேசித்தேன். சேர் நீதியரசாராக  பதவி உயர்வு பெற்றார்.

துரைராஜா புஸ்ஸெல்லாவாவில் உள்ள சரஸ்வதி மகா வித்தியாலயத்திலும், கண்டியில் உள்ள புனித அந்தோணியர் கல்லூரியிலும் கல்வி பயின்றார் 

அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.மேலும் அவர் தடயவியல் மருத்துவம், வணிக தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி உபகரணங்கள் ஆகியவற்றில் பட்டயங்களைப் பெற்றுள்ளார்

சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு நீதியரசராக உரிய கல்வித் தகமைகள் மற்றும்  சேவை மூப்பு ஆகியவற்றின் அடிப்படையிவல் நியமிக்கப்பட்ட அவர், 9 ஜனவரி 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். 

பிரதம நீதியரசர் நாட்டில் இல்லாத சமயத்தில், பதில் பிரதம நீதியரசாராகவும் பணி புரிந்தார். 

இலங்கையின் 100 வரு்டங்களைத் தாண்டிய மலையக சமூகத்தில் இருந்து வந்த ஒருவர் பதில் பிரதம நீதியரசராகவும்> நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பிளராகவும்  வகிபாகம் செலுத்திய வரலாறு துரைராஜா சேருக்கு மாத்திரம் உரியது. இவரது மகுடத்தில் அதுவொரு மாணிக்கமாகும்.

இவர் வழங்கிய தீர்ப்பு ஒன்றிளை அண்மையில் கல்முணை குடியியல் மேன்முறையீட்டு மன்றில் விளம்பி எனது சமர்ப்பணத்தை செய்திருந்தேன் .SC  Appeal  67/2021   என்பதே அந்த வழக்காகும்.

 "சிறப்பான பணிக்கு நன்றிகள்!. நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் சில நேரங்களில் காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டாலும், அவரது சட்ட அறிவையும் ஆளுமையையும் எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. "Hulftsdorp" சமூகத்தில் அவரது அந்த நேரடி அணுகுமுறை எப்போதும் பேசப்படும் ஒரு விடயமாகும் என்பதாக சிரேஸ்ட வழக்குரைஞர்கள் துரைராஜா சேர் அவர்கள் பற்றி சொல்லக்கூடிய செல்நெறியாகும்.

நீதித்துறையில் நீங்கள் ஆற்றிய அளப்பரிய சேவை என்றும் நினைவுகூரப்படும். உங்களது அந்த சட்டப் பாரம்பரியத்தை உங்களது புதல்வரும் இத்துறையில் தொடர்வது மகிழ்ச்சிக்குரியது.

ஐயா, உங்களுக்கு இனிய ஓய்வுக்கால வாழ்த்துகள்!

 


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் “மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு” யாழில் ஆரம்பமாகியுள்ளது. 


யழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில்  (24.01.2026) காலை இந்த மாநாடு ஆரம்பித்து வைககப்பட்டுள்ளது.

சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் இரண்டாவது மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியிருந்தது



மூன்றாவது மாநாடு

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து மூன்றாவது முறையாக இம்முறை 2026ஆம் ஆண்டிற்கான மாநாட்டை இன்றும் நாளையும் நடத்துகின்றது.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமான இம்மாநாட்டின் முதல் நாள் அமர்வுகளில், நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


யாழில் ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு | International Law Conference Begins In Jaffna

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தததுடன் உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரம்பிள்ளை துரைராஜா மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் ரோஹித்த அபேசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் சட்டத்துறையின் தலைவர் கோசலை மதன், இவர்களுடன் சட்டத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங


 சம்மாந்துறை நீதிமன்ற கெளரவ நீதிபதியாக, ஜனாப் சர்ஜுன் அவர்கள், எதிர்வரும் திங்களன்று முதல் கடமையேற்கவுள்ளார்  என்பதாகத் தெரியவருகின்றது.


 


நாடு முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கும் நீதித்துறை அதிகாரிகளின் வருடாந்திர மாநாடு 2025 இன்று தொடங்கியது.

இந்த ஆண்டு மாநாடு, 'டிஜிட்டல் சகாப்தத்தில் நீதித்துறை செயல்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல்' என்ற சரியான நேரத்தில் கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது, இது நாடு பேரழிவைத் தொடர்ந்து மீண்டும் கட்டியெழுப்பி மாற்றியமைக்கும்போது அவசரமாகப் பொருத்தமான ஒரு தலைப்பாகும். தித்வா சூறாவளியின் பின்விளைவுகளை சமாளிக்க சமூகங்களும் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படுவதால், நீதி அமைப்பில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இலங்கையின் நீதித்துறைத் தலைமையின் அர்ப்பணிப்பு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியமானது.



அசுசா குபோடா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் முக்கிய வள நபர்களாக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய சந்திரசூட்; சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஐடன் சூ; மற்றும் CIABOC இன் இயக்குநர் ஜெனரல் நீதிபதி ரங்கா திசாநாயக்க ஆகியோர் அடங்குவர்.

இன்று காலை தொடக்க விழா நடைபெற்றது, இதில் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன; நீதித்துறை சேவை ஆணைய உறுப்பினர்கள் நீதிபதி மஹிந்த சமயவர்தன மற்றும் நீதிபதி எஸ். துரைராஜா; இலங்கையில் கனடா உயர் ஸ்தானிகராலய பொறுப்பாளர்கள், கிரில் இயோர்டனோவ் மற்றும் இலங்கையில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் முக்கிய வள நபர்களாக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய சந்திரசூட்; சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஐடன் சூ; மற்றும் CIABOC இன் இயக்குநர் ஜெனரல் நீதிபதி ரங்கா திசாநாயக்க ஆகியோர் அடங்குவர்.


 



மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கே.எம். கிஹான் ஹிமான்ஷு குலதுங்க, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.


ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.


 



(பாறுக் ஷிஹான்)

கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத  வைத்தியசாலைகளுக்கான   வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்திற்கு மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆந் திகதி வரை   தடை உத்தரவினை  கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் பிறப்பித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன  விடயத்தை  தடுத்து நிறுத்துகின்ற வகையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் ரீட் மனு  மீதான விசாரணை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன்  முன்னிலையில் திங்கட்கிழமை  (17) மறு  விசாரணைக்காக  அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த நேர்முகப்பரீட்சை மற்றும்   நியமனத்தால் பாதிக்கப்பட்ட பிரதிவாதியான வைத்தியர்   சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் கிழக்கு மாகாண  பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர்  ஜெ. லியாகத் அலி உட்பட 14 பேர் கொண்ட   பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரிணிகளின் வாதப் பிரதிவாதங்களை அடுத்து இரு தரப்பினரின் எழுத்து மூல சமர்ப்பணத்தை செய்யுமாறும் பணிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பவர் மாதம் 8 ஆந் திகதி குறித்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் தொடர்பில் மீண்டும் நீடிக்கப்பட்ட   தடை  உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின் முதல் தர நீதவான் பதவிக்கான தகுதிகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, குறித்த பதவிக்கு நிறைவேற்றப்பட வேண்டிய 4 தகுதிகளை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கு செயற்பாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபட்டிருக்கும் சட்டத்தரணியாக இருத்தல், சட்டத்தரணியாகப் பதவிப் பிரமாணம் செய்து 3 வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலத்தைக் கொண்டுள்ள, உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது சட்ட ஆராய்ச்சி அதிகாரியாகப் பணியாற்றிய சட்டத்தரணியாக இருத்தல் ஆகியவை குறித்த தகுதிகள் ஆகும். 

அத்துடன் ஏதேனும் அமைச்சு, திணைக்களம், அரச கூட்டுத்தாபனம் அல்லது பிற அரச நிறுவனமொன்றில் 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் அக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் ஆஜரான சட்டத்தரணியாக இருத்தலும் குறித்த தகுதிகளில் அடங்கும். 

ஏதேனும் நிறுவனம், வங்கி அல்லது நிறுவனத்தில் 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் அக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் ஆஜரான சட்டத்தரணியாக இருத்தலும் நீதிச் சேவை இரண்டாம் தரத்தின் முதலாம் தர நீதவான் பதவிக்கான தகுதியாகும் என நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னர் குறித்த பதவிக்கு, சட்டத்தரணியாக 4 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சேவையாற்றி இருக்க வேண்டும் என்ற தகுதியே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சேவைக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கு இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



 


#Ismial_UvaizurRahman

மேல் நீதிமன்றின் புதிய நீதிபதிகள் 18 பேர், இன்று மாலை பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர். குறித்த நீதிபதிகளுக்கான சேவையாற்றும் நீதிமன்றங்களும்  இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.


திருகோணமலை - மட்டக்களப்பு குடியியல் மேல் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ றியாழ் அவர்களும், 


கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ ஜூட்சன் அவர்களும், 


யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கௌரவ றிஸ்வி அவர்களும், 


மட்டக்களப்பு - கல்முனை குடியியல் மேல் நீதிமன்ற  நீதிபதியாக கௌரவ கஜநிதிபாலன் அவர்களும்,


வவுனியா  மேல்நீதிமன்ற  நீதிபதியாக கௌரவ ஆனந்தராஜா (வலன்) அவர்களும்,நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

 


மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதிக்கு மூதூர் நீதிமன்றத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், பொலிஸாரினால் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


மூதூர் நீதிமன்றத்தில் சுமார் 4 அரை வருடங்களாக கடமையாற்றிய தஸ்னீம் பௌஸான் நாளை (15) முதல் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அவருக்காக இந்தப் பிரியாவிடை நிகழ்வு மூதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


www.ceylon24.com
18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.நீதிச்சேவை ஆணைக்குழுவினால், தேர்வுகளுக்கு அமைவாக,இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். 

கல்முனை கெளரவ மாவட்ட நீதிபதி A.M.M றியால், பருத்தித்துறை கெளரவ மாவட்ட நீதிபதி ஜே. கஜநிதிபாலன், யாழ்ப்பாணம் கெளரவ நீதிவான் A.A.ஆனந்தராஜா, சாவகச்சேரி கெளரவ மாவட்ட நீதிபதி A.யூட்சன் மற்றும் வாழைச்சேனை கெளரவ நீதிவான் M.I.M றிஷ்வி ஆகியோர் உட்பட 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்கள். நியமனத்தின் பின்பு ஜாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுடன் எடுத்துக் கொண்ட படம். 

 


நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் தீர்க்க வேண்டும் என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது. 


இந்த உத்தரவு அனைத்து மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள் என அனைவருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


அண்மைக் காலங்களில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவற்றின் தீர்வுகளை தாமதமின்றி வழங்குமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 


மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அகற்றுவதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. 


உள்ளூர் ரீதியான விடயங்களை ஆணைக்குழு கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ் விடயத்தில் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரிப்பதும் தீர்ப்பதும் அனைத்து நீதிமன்ற ஊழியர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு பொறுப்பாகும். மேலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறும் எந்தவொரு ஊழியருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. 

(Tamilan)

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.