கேரள மக்களுக்காக முஸ்லீம் சகோதரி அள்ளிக் கொடுத்தார்,மோடி அரசோ கிள்ளிக் கொடுக்கின்றது




#IsmailUvaizurRahman.
கேரளாவில் பெரு வெள்ளம் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 33 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


பேரழிவில் அரசியல் செய்யும் மோடி அரசு..
ஒக்கி புயலின்போது தமிழக மீனவர்களை திட்டமிட்டே கைவிட்டதுபோல் கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பேரழிவை சந்தித்து வருகிறார்கள்..
ஆனால் பட்டேல் சிலைக்கு 2 ஆயிரம் கோடியை ஒதுக்கிய மோடி அரசு கேரள அரசுக்கு கிள்ளி கொடுக்கிறது. காரணம் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் ஆள்கிறார்கள்..
ஆக இந்த தருணத்தில் நாம் கேரள மக்களுடன் துணை நிற்க வேண்டும்.. களத்திற்கு போக முடியாத சூழலில் இருக்கும் நண்பர்கள் நம்மால் முடிந்த பொருளாதார உதவியை கேரள மக்களுக்கு செய்வோம்..
இதேவேளை,கேரள மக்களுக்காக தனது தங்க கம்மலை கழற்றி கொடுத்துள்ளார், முஸ்லீம் சகோதரி.
'' கேரளாவில் வெள்ளத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனடா தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது'' என ட்வீட் செய்துள்ளார் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
''கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிரார்த்தனையை உரித்தாக்குகிறேன். நூறு பேருக்கும் மேல் பலியாகியுள்ளதும், இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பதும் கோரமான நிலை'' என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
''நேற்று மட்டும் இரண்டு லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு நன்றி. அவர்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேரை மீட்டதாக செய்திகள் வந்துள்ளன. போற்றப்படாத நாயகர்கள் - மீனவர்கள்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
கேரளா வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமருக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் ராகுல் காந்தி.