கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு


கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்ததாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. 

இன்றைய நாளுக்கான நிகழ்ச்சி நிரல் பாராளுமன்ற சபை அமர்வில் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் இன்று காலை 08.30 மணியளவில் இடம்பெற்றது. 

இந்நிலையில் இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.