சப்பாத்து பாலத்திற்கு அருகாமையில் வெள்ளம்


#Flood.
கலா ஓயா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக புத்தளம் மன்னார் வீதியில் சப்பாத்துப்பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இராயாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் 4 தற்பொழுது திறக்கப்பட்டிருப்பதால் கலா ஓயாவின் நீர் மட்டம் 8 அடியினால் அதிகரித்திருப்பதாக புத்தளம் மாவட்ட உதவிப்பணிப்பாளர் பி.எ.ரொட்ரிக்கோ தெரிவித்துள்ளார்.
தற்பொழுது கலா ஓயாவிற்கு அருகாமையில் இருந்த எழுவான்குளம் கடற்படை முகாம் மற்றும் வனஜீவராசி அலுவலகம் ஆகியவற்றை அந்த இடங்களில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.