சர்வதேச பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது



6,02,262 பேருக்கு கோவிட்-19 தொற்று
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உண்டாகும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்திய நேரப்படி சனிக்கிழமை 03.00 மணி வரை உலகம் முழுவதும் 6,02,262 பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானது உறுதியாகியுள்ளது.
அவர்களில் 27,889 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,32,688 பேர் குணமடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் ஒரே இரவில் 832 பேர் மரணம்

ஸ்பெயினில் கொரோனா வைரஸால் ஒரே இரவில் 832 பேர் இறந்துள்ளனர்.
தற்போது அந்த நாடு முழுவதும் இறந்தவர்கள் எண்ணிக்கை 5,690. இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றால் இறந்தவர்கள் அதிகம் உள்ள நாடு ஸ்பெயின்.
84,498 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்ட இத்தாலியில் 9,134 பேர் இறந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தில் தரவுகள் தெரிவிக்கின்றன.