வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு


காணாமல் போனதாகக் கூறப்பட்ட  வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் dதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு முதல் காணாமல் போயிருந்த நிலையில் தொண்டமனாறு பகுதியில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

- Advertisement -


இந்த சம்பவம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் தீர்மானம் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளனர்.