கல்முனையில், மு.கா புனரமைப்பு !
நூருல் ஹுதா உமர்
கிழக்குபல்கலைகழக மாணவர்களின் தற்காலிக நினைவகத்தை அழித்த பொலிஸார் – அம்பிகா சற்குணநாதன் கடும்; கண்டனம்
இதனை அடுத்து குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. எனினும், குறித்த சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதரால் அன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இருப்பினும் குறித்த நபர் கடையிலிருந்து உணவிற்காக பற்றுச்சீட்டு, குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து மோசமான இறைச்சியை வழங்கியமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய நேற்றையதினம் குறித்த உணவகத்தை சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.
அத்துடன் தூய்மையற்ற முறையிலே உணவுகளை கையாண்டமை இறைச்சியினை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன்போது தெரிய வந்தன.
அதனைத் தொடர்ந்து குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நேற்று நீதிமன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், உணவகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.எச்.எம். ஜாபீர் இன்று (17) கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.
சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த டாக்டர் எஸ்.எம். செய்யத் உமர் மௌலானா அவர்கள் கடந்த வாரம் காலமானதையடுத்து நிலவிய வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி.திஸாநாயக்க அவர்களினால் எம்.எச்.எம். ஜாபீர் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளரின் கடமைகளை நிறைவேற்றும் விதமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் 08 வருடங்கள் அளவில் உதவிக்கல்வி பணிப்பாளராகவும், பிரதிக்கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றிய அனுபவம் கொண்ட எம்.எச்.எம். ஜாபீர் அவர்கள் வலயக்கல்வி பணிப்பாளரின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், இரண்டு கல்வி வலயங்களையும் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை திட்டமிடல் சேவையைச் (1)சேர்ந்த ஏ.எஸ்.எம்.பாயிஸ் கிழக்கு மாகாண பேரவையின் செயலாளராக கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் நேற்று (15) நியமிக்கப்பட்டார்.
மூதூரைச் சேர்ந்த இவர் கிழக்கு மாகாண முதலமைச்சு மற்றும் ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில் திட்டமிடல் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
அத்துடன் கிழக்கு மாகாண சுற்றுலா அதிகாரசபை மற்றும் வீடமைப்பு அதிகாரசபை போன்றவற்றில் பொது முகாமையாளர் ஆகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று (15) கல்விப் பொதுத்ததராதர சாதாரண தரப்பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் ஏறாவூர், மீராகேணி மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை மாணவர்கள் தங்களது பாடசாலையை சிரமதானம் செய்து சுத்தப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறான முன்மாதிரி வரவேற்கப்பட வேண்டியதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதொன்றாகும். குறித்த மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சிறந்த கல்விமான்களாக மிளிர அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.
Photo credit to it's respective owner
இன்றைய தினம் குறித்த குற்றஞ்சாட்டப்பட்ட இருவர்,அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.சட்ட விரோதமாக ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மில்லி லீற்றர், கோடா கசிப்பு வைத்திருந்த குற்றவாளி ஒவ்வொருக்கும் தலா ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா வீதமும், அதனைக் காய்ச்சும் உபகரணங்களை வைத்திருந்தமைக்காக ருபா இருபத்தையாயிரமும் விதிக்கப்பட்டது. ஒரு குற்றவாளிக்கு ரூபா 150 000.00 தண்டப்பணம் விதிக்கப்ட்டது. இருவருக்கும் ரூபா மூன்று இலட்சம் தண்டப் பணமானது அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.சி.றிஸ்வான் அவர்களினால் விதிக்ககப்பட்டது.
இலங்கை இராணுவ தளபதி விககும் லியனகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சட்ட தரணி எம் கே எம் பர்ஸான் ஊடாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் தாக்கல் செய்த மனுவில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் நீதிமன்றத்தில் தோன்றி இவ்வாறான அவதூறான வீடியோக்கள் பரப்பப்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு விடயமாகும் என எடுத்துக்காட்டினார் இதன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வழக்கில் பிரதிவாதிகளாக ஆக்கப்பட்டு இருந்த சாலிய ரணவக்க அவரது இரண்டு வலைத்தளங்கள் மற்றும் YouTube தளம் போன்றவற்றிற்கு அந்த வீடியோக்களை உடனடியாக அகற்றுமாறு நிப்பந்தடையுடன் கூடிய கட்டளையை விதித்தார்.
குறித்த மரணித்தவர் 3 வயது நிரம்பிய ஹாலிக் என்பதாக தெரியவருகிறது. தனது மூத்த சகோதரனான 3 வயதுக் குழந்தையை இடுப்பில் வைத்திருந்த வேளையில், குறித்த இந்த சிறிய குழந்தை தவறி விழுந்து அக்கரைப்பற்று கல்முனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, மட்டக்களப்பு வைத்தியசாலையில், சத்திர சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தது.