(க.கிஷாந்தன்)
தீபாவளி பண்டிகை நாளை (18.10.2017) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு இன்று (17.10.2017) அட்டனில் வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொழும்பிலிருந்து அட்டன் மற்றும் மலையகத்தில் உள்ள பிரதான நகரங்களுக்கு விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் பொருளதார ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்ட இந்நிலையில் தீபாவளி முற்பணமாக 6500 ரூபா வழங்கப்பட்ட போதிலும், மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும் என கூறிய போதிலும் கம்பனிகள் வழங்கப்படாத நிலையில் இம்மக்கள் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத அளவிலும் இன்று அட்டன் நகரில் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment