9 புதிய மாவட்ட அமைப்பாளர்கள்



ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய மாவட்ட அமைப்பாளர்கள் ஒன்பது பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பு, அம்பாறை, மாத்தறை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய, இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்துள்ளார்.