கட்டணமின்றிய ரயில் சேவை


மிஹிந்தலைக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களுக்காக இலவச ரயில் சேவையை வழங்குவதற்குப் போக்குவரத்து அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளையிலிருந்து (14) எதிர்வரும்  18ஆம் திகதி வரையில் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கும், மிஹிந்தலையிலிருந்து அநுராதபுரத்துக்குமான ரயில் சேவை எந்த கட்டணங்களுமின்றி இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.