ராஜித சேனாரத்னவிற்கு எதிராக பதுளையில்


(க.கிஷாந்தன்)
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக பதுளையில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் 13.05.2019 அன்று (வியாழக்கிழமைமாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் பதுளை பொதுவைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டின் சுகாதார சேவைக்கு மிகப்பாதகமான முறையில் நடந்துகொள்வதாகவும் அரசமருத்துவ அதிகாரிகள் மட்டத்தில் அதிகமான பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதன் காரணமாக அமைச்சரின் குடியியல் உரிமை பறிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.